Re: [MEYKANDAR] 1938‍க்கும் 1965க்கும் என்ன வேறுபாடு?

561 views
Skip to first unread message

K. Loganathan

unread,
Nov 15, 2014, 11:33:46 PM11/15/14
to MEYK...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com
 முனைவர் வீரபாண்டியன் அவர்களே

 மீண்டும் சிந்தனையைத் தூண்டும் நலல்வோர் கட்டுரை. இன்றும் நம்மிடையே அதிகம் வளராது போய்விட்ட  Political Science  எனும் துறையை மீட்டெப்பதாக அமைகின்றது. அன்பர்கட்கு அனுப்பி வைக்கின்றேன்

உலகன்

2014-11-16 12:12 GMT+08:00 veera pandian pann...@yahoo.co.in [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com>:
 

1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடு,  

                  இன்று  எப்படி இருக்கிறது?                           


                                    இந்தி எதிர்ப்புப் போராட்டம்:
                           1938‍க்கும்  1965க்கும்   என்ன வேறுபாடு?

ஓரு போராட்டம் எந்த அளவுக்கு சமூகப் பொறுப்புடனும், திட்டமிடலுடனும் மக்கள் பங்கேற்புடனும் பொதுச் சொத்துக்களுக்கு சேத‌மின்றியும், வன்முறைகளுக்கு பெருமளவில் இடமின்றியும் நடந்து, தனது கோரிக்கையையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு, பெரியார் தலைமையில் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் சான்றாக இருக்கிறது. அந்த காலக் கட்டத்தில் இந்தியாவில் இது போன்ற போராட்டம் வேறு எங்கும் நடந்ததாகத் தெரியவில்லை. 'சத்தியாகிரகம்' என்று சொல்லி, போராட்டத்தைத் தொடங்கி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, வன்முறைகளுக்கு இடம் அளித்து, பள்ளிகளில் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களையும் 'வேலை நிறுத்தம்' என்ற 'சமூக நோய்க்கு' உள்ளாக்கியவர் காந்தி என்று 1944க்கு முன்னேயே 'குடி அரசு' கட்டுரைகளில் பெரியார் சுட்டிக் காட்டியிருக்கிறார். காந்தி சத்தியாககிரகம் தொடங்கும் முன், தாகூரும், இது போன்ற விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறார். மக்கள் பங்கேற்புடன் ஒரு போராட்டம் 'காலித்தனங்கள்' இன்றி நடத்த முடியும் என்பதை பெரியார் நிரூபித்தது தாகூரின் பார்வைக்குப் போனதாகத் தெரியவில்லை. இந்தியாவிலும் சமூக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகத் தெரியவில்லை.

1944க்கு முன்  பெரியார் தலைமையில் மக்கள் பங்கேற்புடன் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965‍இல் அண்ணாதுரையும், ராஜாஜியும் தூண்டி விட்டு, பின் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த, உரிய தலைமையின்றி மாணவர்கள் முன்னெடுத்த‌ இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிடுவது, நிகழ்கால தமிழ்நாட்டின் மோசமானப் போக்குகள் எப்போது ‘பலம்’ பெற்றன? என்ற கேள்விக்கான விடையைத் தரும்.

1944 -இல் திராவிடர் கழகம் உருவானதற்கு முன், பெரியாரின் சமூக வாழ்வில் , அவர் சந்தித்த கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் அறிவுபூர்வ தளத்தில் நடைபெற்றதையும்,  திராவிடர் கழகம் உருவான பின் அவருக்கும் அண்ணாதுரைக்கும் இடையில் உருவான கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் உணர்வுபூர்வ தளத்தில் நடைபெற்றதையும், அதன் தொடர்ச்சியாகவே,பிற்காலத்தில் பாரதிதாசனுக்கும் அண்ணாதுரைக்கும், பாரதிதாசனுக்கும் ஜீவானந்தத்திற்கும் இடையே ‘மிகவும் மோசமான’ உணர்வுபூர்வ விவாதங்கள் நடைபெற்றதையும், ‘ஆக சமூகத்தில் 'உச்சத்தில்' இருக்கும் நல்லவைகளும், கெட்டவைகளும் அந்த சமூக வரலாற்றில் ‘விதை கொண்டு, உரமூட்டப்பட்டு’ வளராமல், 'திடீரென' வந்து விடாது’ என்பதையும் முந்தையப் பதிவுகளில் பார்த்தோம்.

1949 முதல் 1967 வரை பெரியார் தி.மு.க தலைவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையிலும் இழிவாகப் பொதுக்கூட்டங்களில் பேசிய ஒலிநாடாக்களும், இதழ்களில் வந்த எழுத்துக்களும், அதே போல் தி.மு.க தலைவர் 'கலைஞர்' கருணாநிதி பெரியாரைப் பற்றியும், காமராசரைப் பற்றியும் தனிப்பட்ட முறையிலும் இழிவாகப் பொதுக்கூட்டங்களில் பேசிய ஒலிநாடாக்களும்,இதழ்களில் வந்த எழுத்துக்களும், சாட்சிகளாக இருக்கின்றன. இப்படி பேசிக் கொண்டவர்கள் 1967‍க்குப் பின் 'சமரசமாகி' ஒருவரையொருவர் புகழ்ந்து பொதுக்கூட்டங்களில் பேசிய ஒலிநாடாக்களும், இதழ்களில் வந்த எழுத்துக்களும்,சாட்சிகளாக இருக்கின்றன. மேற்குறிப்பிட்ட கால இடைவெளிகளில், அந்த உணர்வு பூர்வ பேச்சுக்களினாலும், எழுத்துக்களினாலும், அந்தந்த கட்சிகளின் அடிமட்ட தொண்டர்கள் ஒருவரையொருவர் (ஒரே குடும்பத்திலும் கூட) எதிரிகளாக பாவித்து, சில சமயங்களில் அவை வன்முறைகளாகவும் வெடிக்கும் அளவுக்கு உணர்வுபூர்வ வெறுப்பு/எதிர்ப்பு நோயில் தமிழ்நாட்டில் கணிசமானவர்கள் சிக்கியதும், அதில் 'தீவிரமான' குப்பன்களும், சுப்பன்களும் தமது வாழ்வையும்,தமது குடும்பங்களின் வாழ்வையும் தொலைத்த சோகங்கள் பற்றியும் முறையான ஆய்வுகளும், வரலாற்றுப் பதிவுகளும் இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை.

1944‍க்கு முன் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிராமணர்கள் உள்ளிட்ட உயர்சாதிகளின் ஆதிக்கம் பற்றி சமூகப் பொறுப்புடன் கவலை கொண்டு, பின் தங்கிய மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற அக்கறையில், நன்கு படித்து, சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர்கள், பிராமணர்கள் உட்பட, ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள். எனவே 'பிராமணரல்லாதார் கட்சி' என்று இன்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள நீதிக் கட்சியிலும் பிராமணர்கள் இருந்தார்கள். எந்த சாதி, மீதும், மதத்தின் மீதும் வெறுப்பு, கோபம் போன்ற உணர்வுமயப் போக்குகளுக்கு இடமின்றி, ஆக்கபூர்வ வளர்ச்சிப் போக்கில் தமிழ்நாடு பயணித்தது.  1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது,  கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்தவர்களில் சத்தியமூர்த்தி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (பின்னாள் குடியரசு தலைவர்) உள்ளிட்ட‌ பிராமணர்களும் இருந்தார்கள்.( http://en.wikipedia.org/wiki/Anti-Hindi_agitation_of_1937%E2%80%9340 )

படிக்கின்ற மாணவர்கள் ஒரு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்குவது என்பது, அந்த சமூகத்தில் உள்ள கட்சிகளும், இயக்கங்களும் சமூக பொறுப்புணர்வற்ற நபர்களிடம் சிக்கியிருக்கிறதா? போராட்டங்களில் படிப்பைத் தொலைத்த மாணவர்கள் அதன் காரணமாக தமது வாழ்வில் என்னென்ன பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்? படித்த பொறுப்பான பெற்றோர்களின்/தமிழ்த் தலைவர்களின் பிள்ளைகள் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்களா? அல்லது முதல் தலைமுறையாகப் படித்த குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகள் போராட்டங்களில் ஈடுபடுகிறார்களா? போன்ற கேள்விகளுக்கு இடமில்லாத வகையில் நடந்தது 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்.

மாணவர்களைத் தூண்டாமல், கிராமங்கள் வரை, பிரச்சாரம் செய்து, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாளர்களையும், பெண்கள் உள்ளிட்டு பங்கேற்பவர்களையும் திரட்டி, தமிழ்நாட்டின் பல மூலைகளிலிருந்து போராட்டப்படை வழிநடைப் பயணம் மேற்கொண்டு, திட்டமிட்டபடி ஒரு இடத்தில் சேர்ந்து, கட்டாய இந்தியை ஒழித்து வெற்றி பெற்றது 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம். கட்டாயமின்றி விருப்பமிருந்தால், இந்தி படிக்க வாய்ப்பிருந்தது அந்த வெற்றியில்.

அந்த 'விருப்ப இந்தி' அரசுப் பள்ளிகளில் இருந்ததை ஒழித்தது தான் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம், (http://en.wikipedia.org/wiki/Anti-Hindi_agitations_of_Tamil_Nadu)  - 1967‍இல் தி.மு.க ஆட்சிக்கு வந்து, நிறைவேற்றிய சட்டசபைத் தீர்மானம் மூலம். இன்று தமிழ்/திராவிடக் கட்சித் தலைவர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் வீட்டுப் பிள்ளைகளெல்லாம் பள்ளிகளில் ஆங்கில வழியில் இந்தியும் கூடுதலாகப் படிக்க, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குடும்பப் பிள்ளைகள் விருப்பமிருந்தால்  இந்தி படிக்கும் வாய்ப்பைக் கெடுத்தது 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம். 1965 முதல் இன்று வரை நடந்து வரும் மாணவர் போராட்டங்களில் பெரும்பாலும் அரசு நடத்தும் கல்லூரிகளில் படிக்கும் சாதாரணத் தமிழர்களின் பிள்ளைகள் பங்கேற்று தமது படிப்பைக் கெடுத்து வந்துள்ளார்கள். ஆனால் வசதியானத் தமிழர்கள்,திராவிட/தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் தனியார் கல்லூரிகள் பெரும்பாலும் இத்தகைய போராட்டங்களிலிருந்து 'புத்திசாலித்தனமாக' ஒதுங்கி, அங்கு படிக்கும் மாணவர்கள் மட்டும் தமது படிப்பைக் கெடுத்துக் கொள்ளாமல் உருப்பட்டு வருகிறர்கள்.

அரசுக் கல்லூரிகளில் அரசியல் கட்சிகளின் சுயநலன்களுக்காக இப்படிப்பட்ட போராட்டங்களைத் தூண்டி, தலைமை ஏற்கும் மாணவர்களின் படிப்புகள் கெட்டாலும், அவர்களில் 'குறுக்கு புத்தி'சாலிகளே பின்னர் அந்தந்த கட்சிகளின் எம்.எல்.ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் சமூகத்தில் 'செல்வாக்கு' பெற்றார்கள். ஒழுங்காகப் படிக்காமலேயே குறுக்கு வழிகளில் பட்டங்கள் பெறும் போக்கும் திராவிடக் கட்சி ஆட்சிகளில் தான் அரங்கேறியது. இப்படிப்பட்ட போக்குகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது தான் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் சாதனை ஆகும்.

1965இல் திருச்சி தேவர் மன்றத்தில் அண்ணதுரையும், ராஜாஜியும் சேர்ந்து கூட்டம் போட்டு, 'உணர்வுபூர்வ போக்குகளைத் தூண்டியதன் விளைவாகவே, 1938 போராட்டத்தில் இருந்த‌, பொறுப்பான தலைமையும், வழிகாட்டுதலும் 1965இல் இன்றி, மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல்,வன்முறை, தீக்குளித்தல் போன்றவை திராவிட இயக்க வரலாற்றில் அறிமுகமாகின. அந்த போராட்டத்தை ஆதரிக்காத 'குற்றத்திற்காக' பெரியாரையும் அவமானப்படுத்திய சம்பவங்களும் நடந்தன. அதாவது 1944இல் அறிவுபூர்வ வாதங்களைப் பலகீனமாக்கி, உணர்வுபூர்வ வாதங்கள் தலை தூக்கிய போக்கு வளர்ந்து, 1965இல் பெரியாரை ஓரங்கட்டி, அவமானப்படுத்தும் விளைவை 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் ஏற்படுத்தியது. இது ஆழ்ந்த சமூக வரலாற்று ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய ஒரு வரலாற்று 'சிக்னல்' (historical signal) என்பது பற்றி அடுத்து பார்ப்போம்.

1944 க்கு முன் அறிவுபூர்வ போக்கில், சமூகத்தில் உள்ள குறைகளை நீக்க உருவான சமூக ஆற்றலின் பண்பானது, அக்குறைகள் தொடர்பான போராட்டங்களை முன்னெடுத்த தலைவர்களின் சமூகப் பொறுப்புடன் கூடிய தியாகங்களையும், போராட்டங்களில் ஆர்வத்துடனும், சுயலாப நட்ட நோக்கின்றியும் பங்கேற்ற மக்களின் தியாகங்களையும் பிரதிபலித்த‌து. போராட்ட வடிவங்களிலும், விளைவுகளிலும் அது எதிரொலித்ததற்கு, 1938 இந்தி  எதிர்ப்புப் போராட்டம் வரலாற்று சான்றாக உள்ளது. 1944‍இல் அண்ணதுரையின் செல்வாக்கில் 'திராவிடர் கழகம்' தோன்றி, உணர்வுபூர்வ போக்குகள் தலை தூக்கி, அதன் போக்கில் பெரியாரின் 'சமூக பலத்தையும்' வலிவழக்கச் செய்து வளர்ந்த பின் நடந்த, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வெளிப்பட்ட சமூக ஆற்றலின் பண்பும், தூண்டிய தலைவர்களின் பண்பும், மக்களைப் பின் தள்ளி மாணவர்கள் முன்னெடுத்த பண்பும்,போராட்ட வடிவங்களும், விளைவுகளும் மேற்சொன்னவைக்கு 'நேர் எதிர்' ஆக இருந்ததற்கு 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரலாற்று சான்றாக உள்ளது. இயற்பியல்(Physics)  நோக்கில், இது வரலாற்றுப் போக்கு சுழற்சியில் 'எதிர்க்கட்டம்' (opposite phase) என்று, உணர்வு பூர்வ‌ வளர்ச்சிப் போக்கு உச்சமடைந்து (Maximum point), வீழ்ச்சித் தொடங்கிய  அடையாளம் ஆகும். அதன்பின் தொடங்கிய வீழ்ச்சிக் கட்டத்தில், தமிழ்நாட்டில் தலைவர்களிடமிருந்த லாப நட்டக் கணக்கு பண்பு கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் வரை வேகமாகப் பரவியது. ( Refer post Dt. September 17, 2014-‘ தமிழ்நாடு 'கள்வர் நாடு' என்ற திசையில் பயணிக்கிறதா?’ ) இன்று கட்சிகளுக்குச் சம்பந்தமில்லாமல், தினமும் ஆங்காங்கே மக்கள், குறிப்பாக பெண்கள், மாணவர்களை, தங்கள் பிள்ளைகளை அனுமதிக்காமல், தாங்களே போராடி வருகிறார்கள். அது அந்த 'உணர்வு பூர்வ' கட்சிகள் மரணத்தை நெருங்கி விட்டதன் அறிகுறியாகும். தமிழ்நாட்டில் ' குறைந்த அரசியல் காற்றழுத்தத் தாழ்வு மண்டிலம்' உருவாகத் தொடங்கியுள்ளதும் அதன் அறிகுறியாகும். இந்த மாற்ற காலக் கட்டத்தில் லாப நட்டக் கணக்கு பண்பில்லாதவர்கள் உணர்வு பூர்வ போக்கிற்கு எதிராக எவ்வளவு வலிமையாக செயல்படுகிறார்களோ, அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வீச இருக்கும் 'அரசியல் புயல்' குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்தி, சமுக வளர்ச்சிக்கான 'சமூக ஆற்றல்' எனும் 'மழை' மொழிந்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காப்பாற்ற வாய்ப்பிருக்கிறது.

1944‍க்கு முன் கல்வியில், அரசுப் பணிகளிலிருந்த பிராமண ஆதிக்கத்தை எதிர்த்த நீதிக் கட்சியில் பிராமணர்களும் இருந்தார்கள். 'பார்ப்பான்' என்று பேச்சுகளில், எழுத்துகளில் பிராமணர்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் போக்கு அப்போது இல்லை. அதற்குப் பின் தான் 'பார்ப்பான்''துலுக்கன்' என்று சாதி ரீதியிலும், மத ரீதியிலும் அவரவருக்கு பிடிக்காத சாதி, மதத்தினரை இழிவு படுத்தும் போக்கு பொது அரங்கில் அறிமுகமானது. அந்த போக்கில் அடிமட்டத் தொண்டர்கள் சாதி/மத அடிப்படைகளில் தமக்குள் பிரிவினைக்குள்ளாகி, ஒருவரையொருவர் வெறுப்பதும், சில சமயம் அவை வன்முறையாக வெடிப்பதும் அறிமுகமானது. தாம் எதிர்க்கும் சாதியில்/மதத்தில் இருந்த உண்மையானவர்களும், நேர்மையானவர்களும் அந்த உணர்வு போதையில் சிக்கியவர்களின் கண்களுக்கு இன்று வரை தெரியாமல் போய்க் கொண்டிருப்பது ஒரு சமூகக் கொடுமையாகும். பா.ஜ.க அப்துல் கலாமை குடியரசு தலைவராக ஆக்கிய பின்னும், தவறு புரிந்த மூஸ்லீம் பயங்கரவாதிகளைத் தனிமைப்படுத்தி கண்டிக்காமல், உணர்வுபூர்வமாக 'துலுக்கன்கள் ' என்று இந்துத்வா ஆதரவாளர்களில் ‘சிலர்’ இன்றும் பேசுவது, எழுதுவது உண்மையா? பொய்யா?

ஒருவரையொருவர் உணர்வுபூர்வமாக இழிவுபடுத்தி எதிர்த்துக் கொண்டிருந்த பெரியாரும் தி.மு.க தலைவர்களும் 1967 ஆட்சிமாற்றத்திற்குப் பின் சமரசமானார்கள். அந்த சமரசத்தில் பெரியாரும், அண்ணாதுரையும் தத்தம் சுயநலனுக்காகச் சமரசம் செய்து கொண்டார்கள் என்று அவர்களின் அரசியல் எதிரிகள் கூட குற்றம் சாட்ட மாட்டார்கள். ஆனால் அந்த 'சமரசத்தின்' தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடந்து வரும் சமரசங்கள் அந்த வகையைச் சாருமா? உதாரணமாக, கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன், ம.தி.மு.க தலைவர் வைகோவும், தி.மு.க தலைவர்களில் ஒருவரான மு.க அழகிரியும் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற சமரசமானார்கள். அதே போல் பி.ஜே.பி தலைவர் எச். ராஜாவும் மு.க அழகிரியும் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற சமரசமானார்கள்.

பட்டுக்கோட்டை அழகிரியின் நினைவாகவே தி.மு.க தலைவர் தனது மூத்த மகனுக்கு அழகிரி என்று பெயரிட்டதாகவும், அது தொடர்பாக அவர் வெளிப்படுத்தும் செய்திகள் உண்மையா என்பது பற்றியும், தா.கிருட்டிணன், மதுரை 'தினகரன்' பணியாளர்கள் கொலை தொடர்பாக அழகிரியைக் கண்டித்து,  'உணர்வு பொங்க' மதுரையில் பிரமாண்டமான கூட்டத்தில் வை.கோ நிகழ்த்திய 'எழுச்சி' உரையையும் கீழவரும் காணோளியில் பார்க்கலாம் என்ற தகவல் இணையத்தில் 'முகப்புத்தகத்தில்' வெளிப்பட்டுள்ளது. http://www.youtube.com/watch?v=wdqbVYKpIHs)
பா.ஜ.க தலைவர் எச்.ராஜா , பெரியார் படத்தை செருப்பால் அடிப்பேன் என்று சொல்லி. தமிழ்நாடு முழுவதும் 'புகழ்' பெற்றவர். அவ்வாறு சொல்லியதற்கு வருத்தம் தெரிவிக்காமலேயே, வை.கோவோடு 'கூட்டணி' சேர்ந்து,  அவருடன்  போட்டி போடும் அளவுக்கு, அவர் மதுரையில் அழகிரியைச் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார். நேரில் அழகிரியிடம் - பெரியார் பற்றிய கருத்துக்கு ராஜாவும், அழகிரி பற்றிய கருத்துக்கு வை.கோவும்  - வருத்தம் தெரிவித்தார்களா இல்லையா, என்பது அவர்கள் இருவரின் மனசாட்சிகளுக்கு தான் வெளிச்சம். வைகோவும், எச்.ராஜாவும் பாராளுமன்ற தேர்தலில் தேர்தலில் வெற்றி பெறாததால், அழகிரியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டிய தேவையில்லாமல் போய்விட்டது.

பெரியார்,ராஜாஜி, காமராஜர் வாழ்ந்த காலங்களில், எச்.ராஜாவைப் போல் எந்த கட்சியிலும் அடிமட்ட தொண்டன் கூட அப்படி பேசியிருக்க முடியாது. பேசவும் தலைவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். பிள்ளையார் சிலையை உடைக்கும் போராட்டம் அறிவித்தபோதும், கோவிலில் உள்ள சிலைகளுக்கு ஏதும் சேதம் விளைவிக்கக் கூடாது என்றும், அவரவர் தமது சொந்த காசில் கடையில் பிள்ளையார் 'பொம்மை' களை வாங்கி, பொது மக்களுக்கு 'இடைஞ்சல்' இன்றி உடைக்க வேண்டும் என்றும், அதுவும் அந்நிலைப்பாடு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்த பின் செய்ய வேண்டும் என்றார் பெரியார். 'காந்தி படங்களை எரித்தல்' தொடர்பாகவும் அவ்வாறே செயல்பட்டார், காமராஜரை ஆதரித்து கொண்டே. அதே போல் பா.ஜ.க பெரியார் படத்தை ஏன் எரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து, எதிர்க் கேள்விகளை பெரியாரைப் போலவே சந்தித்து செயல்பட்டார்களா? மாறாக போட்டியாக 'உணர்வுபூர்வமாக' சங்கராச்சாரியரின் படங்களை எரிக்க வேண்டும் என்ற, பெரியார் காலத்தில் வெளிப்படாத உணர்வு , பெரியார் தொண்டர்களிடையே இன்று வெளிப்பட , பா.ஜ.க தலைவர் எச்.ராஜா போன்றோரின் பேச்சுக்கள் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.. அந்த 'பெரியார் தொண்டர்களுக்கு' நெருக்கமான வை.கோவுடன் எச்.ராஜா கூட்டணி சேர்ந்தார்.வை.கோவும் சேர்ந்தார். இருவருமே பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக, அழகிரியுடன் சமரசமானார்கள். அதற்காக வை.கோ மீதும் அவருக்கு நெருக்கமான பெரியார் தொண்டர்கள் கோபப்பட்டதாகத் தெரியவில்லை. எச் ராஜா மீதும் இந்துத்வா தொண்டர்கள் கோபப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லாம் தேர்தலில் 'எப்படியாவது' வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வுபூர்வ போக்கு தான் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 1944க்கு முன் இது போன்ற உணர்வுபூர்வ போக்குகள் இருந்ததாகத் தெரியவில்லை.

1944க்கு முன் இருந்த தமிழ்நாடு எப்படி இருந்தது? இன்று தமிழ்நாடு எப்படி இருக்கிறது? முகப்புத்தகங்களில அவரவருக்கு பிடிக்காத தலைவர்கள் பற்றி எவ்வளவு இழிவாக எழுத்துக்கள் மூலமாகவும், படங்கள் மூலமாகவும் இழிவுபடுத்துகிறார்கள். அவ்வாறு தமக்குப் பிடிக்காத தலைவர்களை இழிவுபடுத்துவதில்  மட்டும் இந்துத்வா ஆதரவாளர்கள்/எதிர்ப்பாளர்கள், பெரியார் ஆதரவாளர்கள்/ எதிர்ப்பாளர்கள் என்று உணர்வுபூர்வ போதையாளர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட உணர்வுபூர்வ இழிவு போக்குகள் முடிவுக்கு வர வேண்டாமா?

பெரியார் பிராமணர்கள் அமைப்பிலேயே உரையாற்றியிருக்கிறார். அது போல் இந்துத்வா ஆதரவாளர்கள் மத்தியில் பெரியார் கொள்கையாளர்களும், முஸ்லீம் தலைவர்களும் அறிவுபூர்வமாக உரையாற்ற வேண்டும். பெரியார் ஆதரவாளர்கள் மத்தியிலும், முஸ்லீம் ஆதரவாளர்கள் மத்தியிலும் இந்துத்வா தலைவர்கள் அறிவுபூர்வமாக  உரையாற்ற வேண்டும். பிறர் பார்வையில் உணர்தல் (empathy) என்ற போக்கைக் கடைபிடித்து, அறிவுபூர்வ அணுகுமுறையை  ஊக்குவிப்பவர்களுக்கு இது சாத்தியமே.

வட மாநிலங்களில் உணர்வுபூர்வமாக முஸ்லீம்களை இழிவு படுத்தும் போக்கிலிருந்து விலகி, நாட்டுப்பற்றுடைய முஸ்லீம்கள் உள்ளிட்டு அனைவரையும் ஊழலற்ற, பாரபட்சமற்ற வளர்ச்சி நோக்கிய ஆட்சி என்று ஒன்றுபடுத்தும் நோக்கில் மோடி உள்ளிட்ட வடமாநில முதல்வர்கள் ஆட்சி செய்ததன் விளைவாகவே, எம்.ஜே.அக்பர் போன்ற இந்துத்வா எதிர்ப்பு எழுத்தாளர்களும் மோடி  ஆதரவாளர்களாக மாற (http://www.youtube.com/watch?v=8KD8dSioiKU),  பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 30 வருட பொது வாழ்வில் ஊழல், வேண்டியவர்களுக்கு சலுகை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு கூட உள்ளாகாதவர் பிரதமர்  மோடி என்று இந்துத்வா எதிர்ப்பாளராகிய    'OUTLOOK' ஆசிரியர் வினோத் மேத்தா கருத்து தெரிவித்துள்ளார். (“He is dynamic, clean, keen to introduce change and in three decades he has been in public life, corruption or nepotism has not touched him. I could go on singing his praises and risk being expelled by the secular fraternity.”- Vinod Mehta on “Which Way Will He Turn?” http://www.outlookindia.com/) இந்துவாவிற்கு எதிரான புத்தகங்களைத் தடை செய்ய வேண்டும் என்ற போக்கை ஆதரிக்காமல்,அமெரிக்ககாவில் வாழும் ராஜிவ் மல்கோத்ரா (http://rajivmalhotra.com/)மலேசியாவில் வாழும் உலகன்(https://sites.google.com/site/ulagansessays/) போன்றவர்கள் அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள இந்துத்வா, பெரியார், முஸ்லிம் இயக்க ஆதரவாளர்களும் இனி அந்த அறிவுபபூர்வ விவாதப் போக்கில் இடம் பெறுவது தான் தமிழ்நாட்டிற்கும் நல்லதாகும்.

From: http://tamilsdirection.blogspot.in/

__._,_.___

Posted by: veera pandian <pann...@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................

.

__,_._,___

seshadri sridharan

unread,
Nov 16, 2014, 12:10:18 AM11/16/14
to mintamil
எந்தப் போராடமனாலும் அயலவர் ஆட்சியில் அடக்கமாகத்தான் நடக்கும். நம்முடைய ஆட்சி என்ற எண்ணம் காடத்தனத்திற்கு வழிகோளும். இதுவே 1938 ம் 1965 ம் உள்ள வேறுபாடு.

சேசாத்திரி   

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

seshadri sridharan

unread,
Nov 16, 2014, 12:11:25 AM11/16/14
to mintamil
காடைத்தனம் > rowdeism 

K. Loganathan

unread,
Nov 16, 2014, 9:02:15 PM11/16/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
அன்பர்களே

பேரசிரியர் நாகராசன் ந்லவொரு கேள்வியைக் கேட்டிருக்கின்றார். அவரது அனுபவம் ஆழமானது விரிவானது, ஆனால் டாக்டர் வீரபாண்டியனை உட்கருத்து அதுவா என்று தெரியவில்லை,'' 

1938களில் நடந்த குமுகாய போராட்டங்க்டகும் 1968லும் இன்றும் நடக்கும் போராட்டங்கட்கும் வேறுபாடுகள் யாதும் இல்லையா?

சத்தியாகிரகம் உண்ணாவிரதம் கடையடைப்பு சாலைமறியல்  போன்றவை மிகப் பரவலாக நடப்பதைக் காண்கின்றோம்.  தமிழ் நாட்டில் எதற்கெடுத்தாலும் இவை நடைபெறுவதாகத் தெரிகின்றது.

ஆக வெளியிலிருந்து பார்க்கும் போது தமிழ் நாட்டில் விடாது பல போராட்டங்கள் நடந்துகொண்டிருப்பதாகத் தெரிகின்றது.

காந்தி அடிகள் காலத்தில் பெரியார் காலத்தில் இருந்ததுபோ இவை இன்று இல்லை என்றும் படுகின்றது.

எதற்காக இவை எனும் போது, பெரும்பாலும் சுயநலக் காரணங்க்ட்காவே என்றும் படுகின்றது, ஒரு சில போராட்டங்க்ள் தமிழ் மொழி பண்பாடு சாதிவெறி கண்டிப்பு போன்ற நற்காரிய்ங்கட்காக இருக்கலாம்

ஆனாலும் பெரும்பாலும் சம்பள உயர்வு குடிநீர் பிரச்ச்னை பொருட்களின் விலை குறைப்பு அரசியல் தலவர்கட்கு தொண்டர்கள் செய்யும் மறியல் பஸ் எரிப்பு தீக்குளிப்பு என்றவாறுதான் இருக்கின்றது.

நின்னா ஜெலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்[பாகிட 126 பேர் தற்கொலை செய்துகொண்ட மாண்டுவிட்டதாகச் செய்தி. ஆளுக்கு 3 இலடசம் பணமுடிப்பு என்றும் தகவல்

இவை எல்லாம் ஆயுதமின்றிய போர்களாகப் படுகின்றன

அடிப்படை தேவைகட்ககே பெரும்பெரும் போராட்டங்கள நடத்த வேண்டிய சூழ்நிலையில் ஓர் நாடு இருந்தால் அங்கு நல்ல் அரசியல் இல்லை நல்ல நிர்வாகம் இல்லை என்றுதானே பொருள் படும்?

அரசியல் நிர்வாக சீர்குலைவுதான் முக்கியக் காரணம் என்றால் அகிம்சைப் போராட்டங்கள் உயர்ந்த நோக்கங்கள் யாதையும் கொண்டிருக்கவில்லை, அடிப்படை தேவகட்கே இவ்வாறான போராட்டங்கள் என்று தெரிகின்றது.

உல்கன். 

2014-11-16 13:46 GMT+08:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2014-11-16 10:03 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:
1944க்கு முன்  பெரியார் தலைமையில் மக்கள் பங்கேற்புடன் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965‍இல் அண்ணாதுரையும், ராஜாஜியும் தூண்டி விட்டு, பின் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த, உரிய தலைமையின்றி மாணவர்கள் முன்னெடுத்த‌ இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிடுவது, நிகழ்கால தமிழ்நாட்டின் மோசமானப் போக்குகள் எப்போது ‘பலம்’ பெற்றன? என்ற கேள்விக்கான விடையைத் தரும்.

​196​5 ஆம் ஆண்டு இந்தி எதிப்புப் போராட்டம் மாணவர்களால் தொடங்கப்பட்டது. திருச்சி கி.ஆ.பெ அவர்களும் மதுரை பேராசிரியர் இலக்குவனா அவர்களும் மாணவர் போராட்டத்துக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்

ஒருநாள் அடையாளப் போராட்டம் மதுரையில் ஒரு கட்சியினர் மாணவர்கள்மீது தொடுத்த தாக்குதல் காரணமாகப் பெரிய போராட்டமாக மாறியது

1965-ல் மாணவர்கள் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டாம் என்று அறிக்கை விட்ட அண்ணாவா தூண்டிவிட்டார்?

பாசி

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

K. Loganathan

unread,
Nov 17, 2014, 3:35:39 AM11/17/14
to MEYK...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com
அன்பர்களே

தமைழக் அரசியலைல் அனுபவம் மிக்க அன்பர்க்ள் விளக்கம் தர்லாமே?

உலகன்

2014-11-17 15:30 GMT+08:00 veera pandian pann...@yahoo.co.in [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com>:
 


அன்பர்களே,

வெள்ளைக்கரர்களின் காலனி ஆட்சியில் இந்தியாவைச் சுரண்டியக் காலக்கட்டத்தில், முல்லை பெரியாறு அணையைத் தனது சொந்த பணத்தைச் செலவு செய்து கட்டிய John Pennycuick, போன்ற பல வெள்ளையர்கள், பிரமிப்பூட்டும் பல  நற்கரியங்களை செய்திருக்கிறார்கள். அது போல, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எந்த உள் நோக்கமோ, லாபநட்ட கணக்கோ இன்றி உண்மையான தமிழ்ப்பற்றுடன் ஈடுபட்ட தம்ழறிஞர்களில் எனக்கு தெரிந்த வரையில், இலக்குவனார் அளவுக்கு, பேராசிரியர் பணி இழப்பு உள்ளிட்ட துயரங்களை வேறு எந்த தமிழறிஞரும் அனுபவிக்கவில்லை. அதே போல், 1967இல் முதல்வராகி இறந்தது வரை, அண்ணாதுரையின் வாழ்வு பிரமிப்பூட்டும் வகையில், 1944 ‍- 1967 கால வாழ்விலிருந்து பண்பு ரீதியில்,  மிகவும் வேறுபட்டதாக இருந்தது.
 
1965 இந்தி எதிர்ப்பு மாணவர்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன், அண்ணாதுரை,ராஜாஜி, கி.ஆ.பெ.விஸ்வநாதன், இலக்குவனார் போன்ற இன்னும் பல தலைவர்கள் என்னென்ன அறிக்கைகள் விட்டார்கள்? எங்கெங்கு கூட்டங்களில் என்னென்ன உரைகள் நிகழ்த்தினார்கள்? அன்றைய தமிழ்நாட்டில் அவர்களில் யார் யாருக்கு எந்த அளவு மாணவர்களிடம் செல்வாக்கு இருந்தது?
 
1965 மாணவர்கள் போராட்ட காலத்தில், தி.மு.க தலைவர்கள் என்னென்ன நெருக்கடிகளுக்காளானார்கள்? அதன் காரணமாக யார் யார் என்னென்ன அறிக்கைகள் விட்டார்கள்? அதன்பின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் தலைவர்கள் யார் யாருக்கு என்னென்ன அடிப்படைகளில், 1967 தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட, காமராசர் உள்ளிட்டு யார் யாரை எதிர்த்துப் போட்டியிட, வாய்ப்புகள் வழங்கினார்கள்? போட்டியிட வாய்ப்பு கிட்டாத மற்ற மாணவர் தலைவர்களுக்கு, 1967இல் ஆட்சிக்கு வந்தபின் என்னென்ன முறையில்  Reward - பிரதிபலன்-  வழங்கினார்கள்? அந்த மாணவர் தலைவர்கள் அதன்பின் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் உண்மையாகப் பங்காற்றினார்களா? அல்லது பொது வாழ்வுக் கள்ளர்களாக 'வெற்றிகரமான வாழ்வியல் நிபுணர்களாக' வெளிப்பட்டார்கள்? யார் யார் குடிப்பழக்கம் உள்ளிட்டு புலனின்பங்களுக்கு அடிமையாகி வீணாகப் போனார்கள்? இந்த கேள்விகளுக்கான விடைகளுக்கும், 1944இல் முளைவிட்டு வளர்ந்து 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உச்சமான உணர்வுபூர்வ போதைகளுக்கும் தொடர்பு உண்டா? 1965 போரட்டத்தில் உண்மையில் தீக்குளித்தவர்கள் யார்? யார்?  தமது ஊருக்கு 'புகழ்' வேண்டும் என்ற கணக்கில், 'புத்திசாலி' உள்ளூர் தி.மு.க கரர்கள், தமது ஊரில் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டவர்களை 'இந்தி எதிர்ப்பு தீக்குளித்தவர் பட்டியலில்' இடம் பெறச் செய்த காரியங்களும் நடந்ததா? போன்ற கேள்விகளுக்கான விடைகளை, சான்றுகளின் அடிபடையில், பாரபட்சமற்ற, திறந்த மனதுடன் ஆய்வுக்கு உட்படுத்தினால், 1938க்கும், 1965க்கும் இடையிலான‌ பண்பு ரீதியிலான வேறுபாடுகள் தெளிவாகும்.

செ. அ. வீரபாண்டியன்


From: "'K. Loganathan' k.ula...@gmail.com [MEYKANDAR]" <MEYK...@yahoogroups.com>
To: vall...@googlegroups.com; "mint...@googlegroups.com" <mint...@googlegroups.com>; "meyk...@yahoogroups.com" <meyk...@yahoogroups.com>; Tolkaa...@yahoogroups.com
Sent: Monday, 17 November 2014 7:32 AM
Subject: Re: [வல்லமை] Re: [MEYKANDAR] 1938‍க்கும் 1965க்கும் என்ன வேறுபாடு?
__._,_.___

Posted by: veera pandian <pann...@yahoo.co.in>
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................

.

__,_._,___

N. Ganesan

unread,
Nov 17, 2014, 6:17:37 PM11/17/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com

2014-11-16 13:46 GMT+08:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2014-11-16 10:03 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:
1944க்கு முன்  பெரியார் தலைமையில் மக்கள் பங்கேற்புடன் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965‍இல் அண்ணாதுரையும், ராஜாஜியும் தூண்டி விட்டு, பின் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த, உரிய தலைமையின்றி மாணவர்கள் முன்னெடுத்த‌ இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிடுவது, நிகழ்கால தமிழ்நாட்டின் மோசமானப் போக்குகள் எப்போது ‘பலம்’ பெற்றன? என்ற கேள்விக்கான விடையைத் தரும்.

​196​5 ஆம் ஆண்டு இந்தி எதிப்புப் போராட்டம் மாணவர்களால் தொடங்கப்பட்டது. திருச்சி கி.ஆ.பெ அவர்களும் மதுரை பேராசிரியர் இலக்குவனா அவர்களும் மாணவர் போராட்டத்துக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்

ஒருநாள் அடையாளப் போராட்டம் மதுரையில் ஒரு கட்சியினர் மாணவர்கள்மீது தொடுத்த தாக்குதல் காரணமாகப் பெரிய போராட்டமாக மாறியது

1965-ல் மாணவர்கள் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டாம் என்று அறிக்கை விட்ட அண்ணாவா தூண்டிவிட்டார்?

பல ஊர்களில் இந்திப் போராட்டம் நிகழ்ந்திருக்கிறது. திருநெல்வேலியில் மாணவர்கள் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள். தமிழ்ப் பேரா. கு.அருணாசலகவுண்டர் மாணவர்களை அமைதியாக வழிநடத்திச் செல்லச்
சென்றிருக்கிறார். அப்போது போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். போலீஸ் நிலையத்தில் மாணவர்களும், பேராசிரியரும்.
பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். பேரா. அருணாசலனார் மாணவர்கள் அவர் போலீசாரால் இந்திப் போரில்
கைது செய்யப்பட்ட முதல் பேராசிரியர் என்று சொல்லக் கேட்டுள்ளேன். நெல்லை நிகழ்ச்சி எப்போது நடந்தது? - என்று தேதியை அறிய ஆவல். அந்நாளைய பத்திரிகைகளைப் பார்த்தால் தெரியும்.

நா. கணேசன்

 

பாசி


Oru Arizonan

unread,
Nov 17, 2014, 6:57:45 PM11/17/14
to mint...@googlegroups.com
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடத்திய துப்பாக்கிச் சூடே , இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் எரிமலையாக  சிதற வழிவகுத்தது.

முதல்நாள் காவல்துறை டி.எஸ்.பியின் வேண்டுகோளுக்கு இணங்க போராட்டம் மாணவர்களால் கைவிடப்பட்டது.  பிறகு, மதுரையில் மாணவர் மீது நடந்த அரிவாள் தாக்குதலால், ஊரடங்கு உத்திரவையையும் மீறி மாணவர் ஊர்வலம் துவங்கப்பட்டது.  சிதம்பரம் இருப்புப்பாதையைக் கடக்குமுன்னரே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Innamburan S.Soundararajan

unread,
Nov 18, 2014, 9:25:02 AM11/18/14
to mintamil
1965-ல் மாணவர்கள் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டாம் என்று அறிக்கை
விட்ட அண்ணாவா தூண்டிவிட்டார்?
~ இதற்கு பதில் இல்லையா? மற்றதை எல்லாம் எழுதுகிறீர்களே.









இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Oru Arizonan

unread,
Nov 18, 2014, 11:58:23 AM11/18/14
to mint...@googlegroups.com
//1965-ல் மாணவர்கள் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டாம் என்று அறிக்கை
விட்ட அண்ணாவா தூண்டிவிட்டார்?//

சோ எடுத்த 'முகமது பின் துக்ளக்' என்ற படத்தில் ஒரு காட்சி வருகிறது.  அதில் பொய் வேடம் பூண்ட  முகமது பின் துக்ளக் பொதுமக்களிடம் வேண்டுகிறார்,  "மக்களே, என்னை அவதூறு செய்யும் மகாதேவனை (துக்ளக் வேடதாரியின் பழைய நண்பர்.  பெயர் மகாதேவன் அன்று நினைவு) அடித்துக் கொன்று விடாதீர்கள்.  அவர் தெரியாமல் பேசுகிறார்.  அவரை ஒன்றும் செய்துவிடாதீர்கள்!"

மக்கள் மகாதேவனை அடித்துக் கொன்றுவிடுகிறார்கள்.

ஒரு அரிசோனன் 

Nagarajan Vadivel

unread,
Nov 18, 2014, 12:30:01 PM11/18/14
to மின்தமிழ்
நேரடியாக ஆவணம் மூலம் நான் சொல்வது தவறு அண்ணா தூண்டிவிட்டார் என்று சொல்வதைவிட்டு சோவின் நாடகத்திலிருந்து மேற்கோள் காட்டுவது சரியில்லை.

1938-ல் இந்தி எதிர்ப்பு என்பதைவிட சமஸ்கிரிதம் அறிந்த பார்ப்பனர் ஒருவத் தமிழ்நாட்டின் பிரதமராக இருக்கக் கூடாது என்ற உள்நோக்கம் கொண்ட போராட்டம் அது.  பெரியார் மட்டுமல்ல அண்ணாவும் சிறை சென்றார்


1965-ல் அது ஆங்கிலம் தமிழ்நாட்டைவிட்டுப் போகக்கூடாது என்று நடத்தப்பட்ட போராட்டம். ராஜாஜியின் பேச்சில் அந்தச் சாயலைக் காணலாம்


1965 இந்தி எதிர்ப்பை நேரடியாகப் பார்த்தவன்.  தி.மு.க மாணவர்கள் இந்த இந்தி எதிர்ப்பில் கலந்துகொள்ளவில்லை.  
இரண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் எவரும் தமிழைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்பதே உண்மை

பாசி

பாசி

Oru Arizonan

unread,
Nov 18, 2014, 2:07:11 PM11/18/14
to mint...@googlegroups.com
//1965 இந்தி எதிர்ப்பை நேரடியாகப் பார்த்தவன்.  தி.மு.க மாணவர்கள் இந்த இந்தி எதிர்ப்பில் கலந்துகொள்ளவில்லை.//

ஐயா!  நான் 1965ல் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதலாண்டு மாணவன்.  அங்கு நடந்த மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்டவன் (கலந்துகொள்ள வைக்கப்பட்டவன்).  துப்பாக்கிச் சூட்டை நேரில் கண்டவன்.  தி.மு.க மாணவர்கள் இந்தி எதிர்ப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதை ஒப்புக்கொள்ள முடியாது.  அவர்கள்தான் முன்னணி வைத்து, அனைவரையும் ஊர்வலத்தில் கலந்துகொள்ளவைத்தார்கள்.  ஏனெனில், மாணவர் தலைவர்கள் யார், அவர்கள் எந்தக் காட்சி அனுதாபிகள் என்பதை நன்றாகவே அறிவேன்.  

அந்த நிகழ்ச்சி  இன்னும் என் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்து இருக்கிறது ஐயா!  Ground zeroவில் இருந்தவன்.

என்னுடைய "தமிழ் இனி மெல்ல..." புதினத்தின் முற்சேர்க்கை இந்தப் போராட்டத்தின் விவரிப்புடன் தொடங்கி, என் மனநிலையையும் முன்வைக்கிறது.

மின்தமிழ் உடன்பிறப்புகள், தங்கள் நேரத்தில் ஐந்து மணித்துளிகளை செலவு செய்து அந்தப் போராட்டத்தை என் கண்கள் மூலம் நேரில் கண்டு அறிந்துகொள்வீர்களாக!

ஒரு அரிசோனன் 
*************************************************

முற்சேர்க்கை
விசுவாவசு, தை 14 – ஜனவரி 27, 1965
ராணி சீதை ஆச்சி விடுதி, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்
(குறிப்பு: இம் முற்சேர்க்கை கதாசிரியர் நேரில் கலந்து கொண்ட உண்மை நிகழ்ச்சி)

“அன்பார்ந்த மாணவ நண்பர்களே! நானும் உங்கள் மாதிரி மாணவனாக இருந்துதான் போலீஸ் அதிகாரி ஆகி இருக்கிறேன். ஆகவே உங்களை உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியும். தயவு செய்து ஊரடங்குச் சட்டத்தை மீறவேண்டாம். நீங்கள் படிப்பில் கவனத்தைச் செலுத்துங்கள். வீணான கலகம் வேண்டாம். அமைதியாகத் திரும்பிச் செல்லுங்கள்.” என்று உருகும் குரலில் வேண்டிக் கொள்கிறார் அந்த டி.எஸ்.பி.

ஆஜானுபாகுவான அவர் தோற்றம், அடர்த்தியான மீசை, பெரிய விழிகள், தொப்பியைக் கழட்டிக் கையில் வைத்துக்கொண்டு கையைக் கூப்பிக்கொண்டு அவர் வேண்டிய விதம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்களிடம் ஒரு அமைதியைத் தோற்றுவிக்கிறது.

அப்பொழுது நான் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவன். போராட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. ஆயினும் மற்ற மாணவர்களுக்கு எதிராகச் செல்ல முடியுமா? நான்கு மொழிகளைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று என் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சொன்னதைக் கேட்டு, தாய்மொழி தமிழுடன், ஆங்கிலம், ஸம்ஸ்கிருதம் இவற்றுடன் இந்தியப் பொது மொழியான இந்தியில் விசாரத் வரை படித்துத் தேறியவனான நான், இந்திக்கு எதிராக ஏன் போராட்டம் நடத்த வேண்டும் என்று புரியாமல் விழித்த நேரம் அது. கல்லூரியில் ஆங்கிலத்தில் படிக்கிறோமே, அதே போல இந்தியைக் கற்றுக் கொண்டால் என்ன என்று கூட என் நண்பர்களிடம் பேசிய சமயம் அது.

ஆகவே டி.எஸ்.பி அவ்வாறு பேசியது எனக்கு ஒருவிதத்தில் ஆறுதலளித்தது என்றே சொல்லலாம். மாணவர்கள் அரை மனதுடன் கலைந்து போகச் சம்மதிக்கின்றனர். எனக்கு நிம்மதியான பெருமூச்சு. விடுதி மெஸ்ஸிலிருந்து வெங்காய சாம்பார் மணம் என் மூக்கைத் துளைக்கிறது. போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்ற மகிழ்ச்சியுடன் சாப்பாட்டுக்கு இடம் பிடிக்க ஓடுகிறேன்.

அந்த நிம்மதி ஒருநாள்தான் நீடிக்கிறது. 1965 ஜனவரி 27ம் நாள் காலை மாணவர் தலைவர்கள் எங்களை இந்தி எதிர்ப்புப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ளத் தயாராகுமாறு விரட்டுகிறார்கள். ஏனென்றால் 25ம் தேதி மதுரையில் இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக நடந்த அமைதியான மாணவர் ஊர்வலத்தில் சிலர் அரிவாள் தாக்குதல் நடத்தினார்களாம். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாம் ஊரடங்குச் சட்டத்தை மீறி இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொள்ளவேண்டுமாம். ஊரடங்குச் சட்டத்தை மீறவேண்டுமா – அரிவாள் தாக்குதல் நடந்தது என்பதைத் தெரிந்து கொண்ட பிறகும்? எனக்குப் பயமாக இருக்கிறது. என்னுடன் படிக்கும் சில மாணவர்கள் கண்ணில் நீர் கோர்க்கிறது. என்னைவிட மூன்று அங்குலமாவது உயரம் குறைந்த, ஒல்லியான, ஒடிசலான, சத்தம் போட்டால் நடுங்கும் புத்தகப் புழுதான் அவர்கள். தைரியத்திற்காக ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்கிறோம்.

கலைக் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அணிவகுத்து முன் செல்கிறது. எவ்வளவு கடைசியாகச் செல்ல முடியுமோ, அவ்வளவு கடைசியாக நானும் என் நண்பர்களும் செல்கிறோம். என் வலது கையைப் பிடித்தபடி வரும் நண்பனின் கரங்கள் நடுங்குவது எனக்குத் தெரிகிறது. அவனுக்கு முன்பு என்னை ஒரு கோழையாகக் காட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை. எனவே, ஆறுதலாக அவன் கையை மெதுவாகப் பிடித்து அழுத்துகிறேன். என் வாய் அனைவருடனும் சேர்ந்து, “இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!! இந்தியைத் திணிக்கும் அரசாங்கம் ஒழிக!!!” என்று ஒலி எழுப்புகிறது. எங்கள் சத்தம் குறைவாக இருக்கிறது என்று மாணவர் தலைவர்களில் ஒருவர் எங்களை அதட்டுகிறார்.

எங்கள் அணி அண்ணாமலை நகரிலிருந்து சிதம்பரத்திற்குச் செல்லும் வடக்குச் சாலை வழியாக ”லெவல் கிராஸிங்”கை அடைகிறது. அங்கு வழியை அடைத்துக்கொண்டு நிறைய போலீஸ் ஜீப்கள், பஸ்கள் நிற்கின்றன. நிறைய போலீஸ்காரர்கள் கையில் தடியுடன் நிற்கிறார்கள். சிலர் கையில் துப்பாக்கிகளும் இருக்கின்றன. போலீஸ் துப்பாக்கிகளுக்கு முன்னால் வெறுங்கையுடன், கோஷத்தை மட்டுமே நம்பி நிற்கப் பயமாக இருக்கிறது.
என் வலது கைப் பிடித்துக் கொண்டிருக்கும் மாணவன் மெதுவாக அழும் குரலில் கேட்கிறான். “எக்கச் சக்கமான போலீஸ் துப்பாக்கியுடன் நிக்குதே! நம்மைச் சுட்டுடுவாங்களா? மெதுவாத் திரும்பிப் போயிடலாமா?” பின்னால் திரும்பிப் பார்த்தால் நிறைய மாணவர்கள் அணிவகுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். திரும்பவாவது, போவதாவது?

ஊர்வலம் நின்று விடுகிறது. டி.எஸ்.பி ஏதோ பேசுவது கேட்கிறது. நாங்கள் கிட்டத்தட்ட முன்னூறு மீட்டர் தள்ளி இருப்பதால் அவர் உருவம்தான் தெரிகிறதே தவிர என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை. இருந்தாலும் ஊர்வலம் போகக்கூடாது என்று தடுக்கிறார் என்று புரிகிறது. ஒரு நப்பாசை, ஊர்வலம் திரும்பி விடாதா என்று.
ஆனால் ஏதோ கைகலப்பு நடக்கிறமாதிரி தெரிகிறது. போலீஸ்காரர்கள் முன்னணியில் இருக்கும் மாணவர்கள்மீது தடியடி நடத்துவது எங்களுக்கு பீதியைக் கிளப்புகிறது. அடிபடும் மாணவர்களுக்குப் பின்னாலிருந்து கற்கள் பறக்கின்றன.

திடுமென்று வேட்டுச் சத்தம் கேட்கிறது. ஒரே கூக்குரல். எங்களுக்கு முன்னால் இருக்கும் மாணவர் அணி திரும்பி ஓடிவர ஆரம்பிக்கிறது. நாங்களும் திரும்பி ஓட ஆரம்பிக்கிறோம். மேலும் மேலும் வேட்டுச் சத்தம் தொடர்ந்து கேட்கிறது. நாங்கள் தலை தெறிக்க ஓடி, ராணி சீதை ஆச்சி விடுதிக்குத் திரும்ப வந்து சேருகிறோம்.
இராஜேந்திரன் என்னும் ஒரு மாணவர் துப்பாக்கிச் சூட்டினால் இறந்து விட்டதாகவும், இன்னொரு மாணவர் குற்றுயிரும் குலையிருமாக குண்டடிபட்டுக் கிடப்பதாகவும், சில நிமிஷங்களில் சேதி வருகிறது.

நான் அதிர்ந்து போகிறேன்.

ஏன் இந்த வன்முறை?

எதற்காக இந்த உயிர்ச் சேதம்?

நாங்கள் மாணவர்கள்தானே! ஊர்வலம்தானே சென்றோம்? இந்தியா ஒரு சுதந்திர நாடுதானே? தங்கள் குறைகளைச் சொல்லி ஊர்வலம் செல்ல மக்களுக்கு உரிமை இல்லையா?

“நானும் உங்களைப் போல மாணவனாக இருந்தவன்தான்!” என்று சொல்லி எங்களுடன் நண்பர் மாதிரி பேசிய டி.எஸ்.பியே இப்படி ஒரு கொலைச் செயலுக்கு அனுமதி எப்படிக் கொடுக்க முடியும்?

அப்பொழுது என் மனதில் ஒரு விரிசல் தோன்ற ஆரம்பிக்கிறது.  முன்பு ஆங்கிலேயர்கள் அடக்கி ஆண்டார்கள்.  இப்பொழுது.. ?  இந்தியாவின் தேசிய மொழி என்று நான் நம்பியது அடக்கி ஆளவந்த ஒரு மொழியா?  இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியர்களே விடுதலைப் போராளிகள் மீது அடக்குமுறை நடத்தினார்கள்.  இப்போது இந்தி திணப்பு எதிர்ப்புப் போராட்டத்தில், தமிழர்களே குற்றமற்ற ஒரு தமிழ் மாணவன்மீது துப்பாக்கி சூடு செய்வதை என்ன சொல்லி அழைப்பது?

என் மனத்தின் அன்று பட்ட காயம் இன்றுவரை ஆறாத ஒரு குழிப் புண்ணாகவே இருந்து வருகிறது.

தேமொழி

unread,
Nov 18, 2014, 2:36:45 PM11/18/14
to mint...@googlegroups.com
1938_ல் ராஜாஜியின் மொழிக்கொள்கை 

ஆட்சி நடத்துவதில் நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருந்த ராஜாஜி, 1937_ல் பள்ளிகளில் கட்டாய இந்தியைக் கொண்டு வந்தார். அதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
 
எதிர்ப்பின் வேகத்தை உணராத ராஜாஜி, பள்ளிக்கூடங்களில் முதல் கட்டமாக 1_ம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை கட்டாயமாக இந்தியை போதிக்கவேண்டும் என்று 21_4_1938_ல் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து போராடுவதென்று எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.

__________________________________________________________________________________________________________________________

1965_ல் ராஜாஜியின் மொழிக்கொள்கை 

ஜனவரி 19-ந்தேதி, திருச்சியில் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்றை 'முத்தமிழ்க்காவலர்' கி.ஆ.பெ. விசுவநாதம் நடத்தினார். மாநாட்டுக்கு பி.டி.ராஜன் தலைமை தாங்கினார். மதுரை மில் அதிபரும், 'தமிழ்நாடு' பத்திரிகை ஆசிரியருமான கருமுத்து தியாகராஜ செட்டியார் தமிழ்க்கொடி ஏற்றி வைத்தார். அனைவரையும் வரவேற்று கோவை விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பேசினார்.
 
இந்த மாநாட்டில் ராஜாஜி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
 
இந்தி ஆட்சி மொழி ஆகிற ஜனவரி 26-ந்தேதி தி.மு.கழகத்துக்கு எப்படி துக்க நாளோ, அதுபோல் எனக்கும் துக்க நாள். சொல்லப்போனால், தி.மு.கழகத்தினரை விட எனக்கு 2 மடங்கு துக்கம் இருக்கிறது. இந்தி திணிக்கப்படுகிற 26-ந்தேதியை மட்டும் தி.மு.கழகம் துக்க நாளாகக் கொண்டாடுகிறது. என்னைக் கேட்டால், இந்த ஆண்டு முழுவதும் துக்க நாள்தான். கறுப்புக்கொடி தேவையே இல்லை. ஜனவரி 26-ந்தேதி காங்கிரஸ்காரர்கள் ஏற்றி வைக்கும் மூவர்ணக் கொடியே துக்கக் கொடி தான்.
 
இந்திய அரசியல் சட்டத்தின் 17-வது பிரிவு, இந்தியை ஆட்சி மொழி ஆக்கும்படி கூறுகிறது. அந்தச் சட்டத்தை தீயிட்டு கொளுத்துவதால், வெறும் காகிதம்தான் எரியும். எனவே அதை கடலில் எறியவேண்டும். இந்த நல்ல காரியத்தை செய்ய அரசாங்கம் முன் வராது. எனவே, அந்த சட்டத்தை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்கவேண்டும். விருப்பப்படி எல்லாம் சட்டத்தைத் திருத்துகிறார்கள். அப்படியிருக்க, இந்தித் திணிப்பு சட்டத்தை ஏன் நிறுத்தி வைக்கக்கூடாது? காங்கிரஸ்காரர்களுக்கு, நாட்டை ஆளத்தகுதி இல்லை. எனவே, அவர்களை ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும்.
 
ஆங்கிலத்தை விரட்டி விட்டு இந்தியைத் திணிக்க நினைக்கிறார்கள். எல்லா மொழிக்காரர்களுக்கும் பொதுவான இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருந்து வருகிறது. ஆங்கிலத்தை நீக்கினால் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து
 
இவ்வாறு ராஜாஜி கூறினார்.


ராஜாஜியின் இந்த மாறுபட்ட மொழிக் கொள்கைகளுக்கு என்ன அரசியல் பின்னணி?  
ஆங்கிலத்தைக் கைவிடக்கூடாது என்பதைத் தவிர்த்து  வேறு காரணங்கள் உள்ளனவா?

அக்கால அரசியல் சூழ்நிலை தெரிந்தவர்கள் விளக்கினால் புரிந்து கொள்வேன் 

ஆங்கிலத்தை மட்டும் கைவிட்டிருந்தால் இன்று தமிழர்கள் இந்த அளவு இங்கிலாந்து, ஆஸ்திரலியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்வது நிகழ்ந்திருக்கவும்,  அறிவியல் தொழில் நுட்பத்துறையில் பங்காற்றும் வாய்ப்புகளும்   குறைவாகவே இருந்திருக்கும்.





..... தேமொழி

தேமொழி

unread,
Nov 18, 2014, 2:50:54 PM11/18/14
to mint...@googlegroups.com


On Tuesday, November 18, 2014 11:07:11 AM UTC-8, oruarizonan wrote:
//1965 இந்தி எதிர்ப்பை நேரடியாகப் பார்த்தவன்.  தி.மு.க மாணவர்கள் இந்த இந்தி எதிர்ப்பில் கலந்துகொள்ளவில்லை.//

ஐயா!  நான் 1965ல் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதலாண்டு மாணவன்.  அங்கு நடந்த மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்டவன் (கலந்துகொள்ள வைக்கப்பட்டவன்).  துப்பாக்கிச் சூட்டை நேரில் கண்டவன்.  தி.மு.க மாணவர்கள் இந்தி எதிர்ப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதை ஒப்புக்கொள்ள முடியாது.  அவர்கள்தான் முன்னணி வைத்து, அனைவரையும் ஊர்வலத்தில் கலந்துகொள்ளவைத்தார்கள்.  ஏனெனில், மாணவர் தலைவர்கள் யார், அவர்கள் எந்தக் காட்சி அனுதாபிகள் என்பதை நன்றாகவே அறிவேன்.  

அந்த நிகழ்ச்சி  இன்னும் என் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்து இருக்கிறது ஐயா!  Ground zeroவில் இருந்தவன்.

என்னுடைய "தமிழ் இனி மெல்ல..." புதினத்தின் முற்சேர்க்கை இந்தப் போராட்டத்தின் விவரிப்புடன் தொடங்கி, என் மனநிலையையும் முன்வைக்கிறது.

மின்தமிழ் உடன்பிறப்புகள், தங்கள் நேரத்தில் ஐந்து மணித்துளிகளை செலவு செய்து அந்தப் போராட்டத்தை என் கண்கள் மூலம் நேரில் கண்டு அறிந்துகொள்வீர்களாக!

ஒரு அரிசோனன் 
*************************************************

முற்சேர்க்கை
விசுவாவசு, தை 14 – ஜனவரி 27, 1965
ராணி சீதை ஆச்சி விடுதி, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்
(குறிப்பு: இம் முற்சேர்க்கை கதாசிரியர் நேரில் கலந்து கொண்ட உண்மை நிகழ்ச்சி)

“அன்பார்ந்த மாணவ நண்பர்களே! நானும் உங்கள் மாதிரி மாணவனாக இருந்துதான் போலீஸ் அதிகாரி ஆகி இருக்கிறேன். ஆகவே உங்களை உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியும். தயவு செய்து ஊரடங்குச் சட்டத்தை மீறவேண்டாம். நீங்கள் படிப்பில் கவனத்தைச் செலுத்துங்கள். வீணான கலகம் வேண்டாம். அமைதியாகத் திரும்பிச் செல்லுங்கள்.” என்று உருகும் குரலில் வேண்டிக் கொள்கிறார் அந்த டி.எஸ்.பி.

ஆஜானுபாகுவான அவர் தோற்றம், அடர்த்தியான மீசை, பெரிய விழிகள், தொப்பியைக் கழட்டிக் கையில் வைத்துக்கொண்டு கையைக் கூப்பிக்கொண்டு அவர் வேண்டிய விதம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்களிடம் ஒரு அமைதியைத் தோற்றுவிக்கிறது.

அப்பொழுது நான் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவன். போராட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. ஆயினும் மற்ற மாணவர்களுக்கு எதிராகச் செல்ல முடியுமா? நான்கு மொழிகளைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று என் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சொன்னதைக் கேட்டு, தாய்மொழி தமிழுடன், ஆங்கிலம், ஸம்ஸ்கிருதம் இவற்றுடன் இந்தியப் பொது மொழியான இந்தியில் விசாரத் வரை படித்துத் தேறியவனான நான், இந்திக்கு எதிராக ஏன் போராட்டம் நடத்த வேண்டும் என்று புரியாமல் விழித்த நேரம் அது. கல்லூரியில் ஆங்கிலத்தில் படிக்கிறோமே, அதே போல இந்தியைக் கற்றுக் கொண்டால் என்ன என்று கூட என் நண்பர்களிடம் பேசிய சமயம் அது.

ஆகவே டி.எஸ்.பி அவ்வாறு பேசியது எனக்கு ஒருவிதத்தில் ஆறுதலளித்தது என்றே சொல்லலாம். மாணவர்கள் அரை மனதுடன் கலைந்து போகச் சம்மதிக்கின்றனர். எனக்கு நிம்மதியான பெருமூச்சு. விடுதி மெஸ்ஸிலிருந்து வெங்காய சாம்பார் மணம் என் மூக்கைத் துளைக்கிறது. போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்ற மகிழ்ச்சியுடன் சாப்பாட்டுக்கு இடம் பிடிக்க ஓடுகிறேன்.

அந்த நிம்மதி ஒருநாள்தான் நீடிக்கிறது. 1965 ஜனவரி 27ம் நாள் காலை மாணவர் தலைவர்கள் எங்களை இந்தி எதிர்ப்புப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ளத் தயாராகுமாறு விரட்டுகிறார்கள். ஏனென்றால் 25ம் தேதி மதுரையில் இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக நடந்த அமைதியான மாணவர் ஊர்வலத்தில் சிலர் அரிவாள் தாக்குதல் நடத்தினார்களாம். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாம் ஊரடங்குச் சட்டத்தை மீறி இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொள்ளவேண்டுமாம். ஊரடங்குச் சட்டத்தை மீறவேண்டுமா – அரிவாள் தாக்குதல் நடந்தது என்பதைத் தெரிந்து கொண்ட பிறகும்? எனக்குப் பயமாக இருக்கிறது. என்னுடன் படிக்கும் சில மாணவர்கள் கண்ணில் நீர் கோர்க்கிறது. என்னைவிட மூன்று அங்குலமாவது உயரம் குறைந்த, ஒல்லியான, ஒடிசலான, சத்தம் போட்டால் நடுங்கும் புத்தகப் புழுதான் அவர்கள். தைரியத்திற்காக ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்கிறோம்.

கலைக் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அணிவகுத்து முன் செல்கிறது. எவ்வளவு கடைசியாகச் செல்ல முடியுமோ, அவ்வளவு கடைசியாக நானும் என் நண்பர்களும் செல்கிறோம். என் வலது கையைப் பிடித்தபடி வரும் நண்பனின் கரங்கள் நடுங்குவது எனக்குத் தெரிகிறது. அவனுக்கு முன்பு என்னை ஒரு கோழையாகக் காட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை. எனவே, ஆறுதலாக அவன் கையை மெதுவாகப் பிடித்து அழுத்துகிறேன். என் வாய் அனைவருடனும் சேர்ந்து, “இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!! இந்தியைத் திணிக்கும் அரசாங்கம் ஒழிக!!!” என்று ஒலி எழுப்புகிறது. எங்கள் சத்தம் குறைவாக இருக்கிறது என்று மாணவர் தலைவர்களில் ஒருவர் எங்களை அதட்டுகிறார்.

எங்கள் அணி அண்ணாமலை நகரிலிருந்து சிதம்பரத்திற்குச் செல்லும் வடக்குச் சாலை வழியாக ”லெவல் கிராஸிங்”கை அடைகிறது. அங்கு வழியை அடைத்துக்கொண்டு நிறைய போலீஸ் ஜீப்கள், பஸ்கள் நிற்கின்றன. நிறைய போலீஸ்காரர்கள் கையில் தடியுடன் நிற்கிறார்கள். சிலர் கையில் துப்பாக்கிகளும் இருக்கின்றன. போலீஸ் துப்பாக்கிகளுக்கு முன்னால் வெறுங்கையுடன், கோஷத்தை மட்டுமே நம்பி நிற்கப் பயமாக இருக்கிறது.
என் வலது கைப் பிடித்துக் கொண்டிருக்கும் மாணவன் மெதுவாக அழும் குரலில் கேட்கிறான். “எக்கச் சக்கமான போலீஸ் துப்பாக்கியுடன் நிக்குதே! நம்மைச் சுட்டுடுவாங்களா? மெதுவாத் திரும்பிப் போயிடலாமா?” பின்னால் திரும்பிப் பார்த்தால் நிறைய மாணவர்கள் அணிவகுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். திரும்பவாவது, போவதாவது?

ஊர்வலம் நின்று விடுகிறது. டி.எஸ்.பி ஏதோ பேசுவது கேட்கிறது. நாங்கள் கிட்டத்தட்ட முன்னூறு மீட்டர் தள்ளி இருப்பதால் அவர் உருவம்தான் தெரிகிறதே தவிர என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை. இருந்தாலும் ஊர்வலம் போகக்கூடாது என்று தடுக்கிறார் என்று புரிகிறது. ஒரு நப்பாசை, ஊர்வலம் திரும்பி விடாதா என்று.
ஆனால் ஏதோ கைகலப்பு நடக்கிறமாதிரி தெரிகிறது. போலீஸ்காரர்கள் முன்னணியில் இருக்கும் மாணவர்கள்மீது தடியடி நடத்துவது எங்களுக்கு பீதியைக் கிளப்புகிறது. அடிபடும் மாணவர்களுக்குப் பின்னாலிருந்து கற்கள் பறக்கின்றன.

திடுமென்று வேட்டுச் சத்தம் கேட்கிறது. ஒரே கூக்குரல். எங்களுக்கு முன்னால் இருக்கும் மாணவர் அணி திரும்பி ஓடிவர ஆரம்பிக்கிறது. நாங்களும் திரும்பி ஓட ஆரம்பிக்கிறோம். மேலும் மேலும் வேட்டுச் சத்தம் தொடர்ந்து கேட்கிறது. நாங்கள் தலை தெறிக்க ஓடி, ராணி சீதை ஆச்சி விடுதிக்குத் திரும்ப வந்து சேருகிறோம்.
இராஜேந்திரன் என்னும் ஒரு மாணவர் துப்பாக்கிச் சூட்டினால் இறந்து விட்டதாகவும், இன்னொரு மாணவர் குற்றுயிரும் குலையிருமாக குண்டடிபட்டுக் கிடப்பதாகவும், சில நிமிஷங்களில் சேதி வருகிறது.

 

ராஜேந்திரன் சிலை அண்ணாமலை பல்கலை


 

>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
>
>
> --
> பணிவன்புடன்,
> ஒரு அரிசோனன்
>
> https://tamizhtharakai.wordpress.com/ -- தாரகை
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to

> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an

>
> For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Nov 18, 2014, 8:07:11 PM11/18/14
to மின்தமிழ்
நீங்கள் குறிப்பிடும் முற்சேர்க்கை ஜனவரி 27 ஆம் தேதியைக் காட்டுகிறது.  இந்தி எதிர்ப்பு தினம் கறுப்புக்கொடி காட்டிச் சிறைக்குச் செல்லும் போராட்டம் என்று தி.மு.க அறிவித்து யார் யார் போராட்டத்தில் பங்கு கொள்வது என்று திட்டமிட்டு அறிக்கை நடத்தி நடத்தப்பட்ட போராட்டம்.  இதைத் தவிர மாணவர்கள் திருச்சியில் கி.ஆ.பெ.  மதுரையில் பேர. இலக்குவனார் வழிகாட்டுதலில்  மாணவர்கள் ஒரு இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தைத் திட்டமிட்டு நடத்தினர்.  இவை இரண்டும் இரு வேறு தனிப் போராட்டங்கள் என்பதை முதலில் தெளிவுபடுத்துகிறேன்

26 ஆம் தேதி மதுரை மாணவர்கள் ஊர்வலத்தில் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களை அரிவாளால் வெட்டினர்.  அதுவே போராட்டம் தீவிரமாக அடிப்படையானது.  தி.மு.க வில் உள்கட்சியில் என்ன நடந்தது?  யார் தி.மு.க ஆதரவு மாணவர்களைப் போராட்டத்தில் கலந்துகொள்ளத் தூண்டினார் என்பது ஒன்றும் சிதம்பர (உங்க ஊர்) ரகசியமல்ல

1965 இந்தி எதிர்ப்பு பற்றிய முனைவர் ஆய்வு நடந்துள்ளது அமெரிக்கா சென்று அமெரிக்கப் பல்கலைக் கழக நூலகங்களில் இருந்த தமிழ் நாளிதழ்களை (தமிழ்நாட்டு நூலகங்களில் இல்லை) படித்துக் குறிப்பெடுத்தி எழுதிய ஆய்வுக்கட்டுரையும் சில ஆய்வு அடிப்படையில் வெளியான நடுநிலைச் செய்திகளையும் பார்க்க வேண்டியது அவசியம்

காலத்தின் கோலம் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புக்கு மூலகாரணமாக இருந்தவர் என்ற வரலாற்று உண்மை பேராசிரியர்.இலக்குவனார் என்பதும் காலப்போக்கில் மறைக்கப்பட்டு அதற்கு தி.மு.க சொந்தம் கொண்டாடும்போது அண்ணா உயிருடன் இல்லை

பாசி

Innamburan S.Soundararajan

unread,
Nov 18, 2014, 11:11:29 PM11/18/14
to mintamil
நான் 'பாசி' சொல்வதில் இருக்கும் உண்மை நிலவரத்தை அறிவேன்.  1965ல் இந்தி எதிர்ப்பை மையமாக வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசாங்க பொறுப்பில் இருந்தவன்.  நேரடியாகப் பார்த்தவன்.  தி.மு.க மாணவர்கள் இந்த இந்தி எதிர்ப்பில் கலந்துகொள்ளவில்லை.  இரண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் எவரும் தமிழைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்பதே உண்மை. இதை நான் என் அனுபவத்தை மட்டும் வைத்து சொல்லவில்லை. அக்காலத்து வரத்துப்போக்க்குகளை அறிந்தி கொள்ள வேண்டியிருந்ததால் சொல்கிறேன்.

Oru Arizonan

unread,
Nov 19, 2014, 12:46:56 AM11/19/14
to mint...@googlegroups.com
//தி.மு.க மாணவர்கள் இந்த இந்தி எதிர்ப்பில் கலந்துகொள்ளவில்லை. //

அண்ணாமலை பல்கலைக்கழகத்தப் பொருத்தவரை, தி.மு.க மாணவர்கள் பெருவாரியாக எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.  அவர்கள்தான், அனைவரையும் கலந்துகொள்ளச்சொல்லி வற்புறுத்தினார்கள்.  

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, பலகலைக்கழகம் காலவரையின்றி இழுத்து மூடப்பட்டது.  நாங்கள் ரயிலேறி ஊர் திரும்பினோம். 

நான் மாணவனாக இருந்தபோது கலந்துகொண்ட -- துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட -- பல்கலைக்கழகப் போராட்டம் மாணவர்கள் போராட்டமே! அதில் தி.மு.க. மாணவர்கள் இருந்தார்கள்.  இதை நான் உறுதியாக, அறுதியிட்டுச் சொல்லுவேன். 

அதற்குப்பிறகு அப்போராட்டம் மாணவர்களிடமிருந்து பெரியவர்களிடம் சென்றுவிட்டது.

எனவே, தாங்கள் எந்தப் போராட்டத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்று நான் அறியேன் ஐயா!  

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Nov 19, 2014, 4:54:25 AM11/19/14
to mint...@googlegroups.com, vallamai

V. Nagarajan wrote:>1965 இந்தி எதிர்ப்பை நேரடியாகப் பார்த்தவன்.  தி.மு.க மாணவர்கள் இந்த இந்தி எதிர்ப்பில் >கலந்துகொள்ளவில்லை.  


அண்ணாமலை பல்கலைக்கழகத்தப் பொருத்தவரை, தி.மு.க மாணவர்கள் பெருவாரியாக எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.  அவர்கள்தான், அனைவரையும் கலந்துகொள்ளச்சொல்லி வற்புறுத்தினார்கள்.  

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, பலகலைக்கழகம் காலவரையின்றி இழுத்து மூடப்பட்டது.  நாங்கள் ரயிலேறி ஊர் திரும்பினோம். 

நான் மாணவனாக இருந்தபோது கலந்துகொண்ட -- துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட -- பல்கலைக்கழகப் போராட்டம் மாணவர்கள் போராட்டமே! அதில் தி.மு.க. மாணவர்கள் இருந்தார்கள்.  இதை நான் உறுதியாக, அறுதியிட்டுச் சொல்லுவேன். 

அதற்குப்பிறகு அப்போராட்டம் மாணவர்களிடமிருந்து பெரியவர்களிடம் சென்றுவிட்டது.

எனவே, தாங்கள் எந்தப் போராட்டத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்று நான் அறியேன் ஐயா!  

ஒரு அரிசோனன் 

திமுக நன்கு மாணவர் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டது என விளக்கிய அரிசோனன் அவர்களுக்கு நன்றி.
1965 போராட்டம் பற்றி தமிழில் புத்தகங்கள் வெளிவந்துளவா? ஏதாவது பல்கலை தீஸிஸ்??

திமுகவின் தீவிர பங்கு பற்றி எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் விளக்குகிறார்.
(இவரை கவிஞர் சிற்பி அவர்கள் வீட்டில் சந்தித்திருக்கிறேன்)

”இந்தச் சமூகப் பொறுப்பு எப்படி, எங்க இருந்து உருவாகுது? அது ஒரு மரபுலயிருந்து உருவாகுற விஷயமா?

இல்லயில்ல. குடும்பப் பின்னணி ஒரு காரணமாயிருந்தாலுங்கூட யோசிச்சுப் பார்க்கும்போது இந்தச் சமூகத்திற்கு ஏதாவது செய்யணும்ங்கிற எண்ணம்தான் அடிப்படைன்னு நினைக்கிறேன். எழுத்துக்கும்கூட அதுதான் அடிப்படை.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் சமூக அரசியல் பின்னணி பற்றிய புரிதலோடுதான் அதுல ஈடுபட்டீங்களா?

இந்தி ஆதிக்கம் வருவதன் மூலம் தமிழினம் அடிமையாக்கப்படும் அப்படிங்கிற புரிதல் இருந்தது. தமிழ் மொழியின் எல்லாப் பயன்பாடுகளும் குறுக்கப்பட்டுவிடும் என உறுதியாக நம்பினேன். வாழ்வின் மீதான பிடிப்புகளை உதறிவிட்டு ஒரு அர்ப்பணிப்போடு அதில் ஈடுபட்டேன். ஆனா அப்படி அர்ப்பணிப்போடு செயல்பட்ட பல மாணவர்கள் பிறகு அதன் வாயிலாகக் கிடைத்த புகழை சுயநலத்துக்காகப் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க.

தமிழ்நாட்டுல மாணவர்கள் முழுமையாப் பங்கெடுத்துக்கிட்ட, தலைமை தாங்கி நடத்திய முக்கியமான போராட்டம்ன்னு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைச் சொல்லலாம் இல்லையா? அது மாணவர்களை அந்த அளவு ஈர்த்ததற்கான காரணம் என்ன?

இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கான உணர்வுகளைத் தூண்டியதுல இரண்டு சக்திகளுக்கு முக்கியப் பங்கு இருக்கு. ஒன்று திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் அரசியல் தலைமையும். இரண்டாவது தமிழாசிரியர்கள். அப்போது பெரும்பாலான தமிழ் ஆசிரியர்கள் சமஸ்கிருத எதிர்ப்பாளர்களா இருந்தாங்க. எப்படி வடமொழியின் ஆதிக்கம் தமிழைச் சிதைத்ததோ அதுபோல இந்தியும் தமிழை மட்டுமல்ல தமிழர்களின் வாழ்வையே சிதைக்கும்ங்கிற கருத்துத் தமிழாசிரியர்களுக்கும் இருந்தது. பல தமிழாசிரியர்கள் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்களா இருந்தாங்க. மாணவர்களுக்குத் தமிழுணர்வ ஊட்டியதுல, இந்தி ஆதிக்கம் பற்றிய எச்சரிக்கைகளை உருவாக்கியதுல அப்போதைய தமிழாசிரியர்களுக்குப் பெரிய பங்கு இருந்தது. தமிழை அழிக்கறதோட தமிழருடைய வாழ்வையும் இந்தி சிதைச்சுரும்னு எச்சரிச்சாங்க.

ஒரு மொழியோட தாக்கம் இன்னொரு மொழியை, மொழி பேசற சமூகத்தைப் பாதிக்கும்னா ஆங்கிலமும் பாதிக்கிறதாத்தானே இருக்க முடியும்? அப்படி இருக்கும்போது இந்தி தமிழருடைய வாழ்வை அழிச்சிரும்ங்கிற அந்த உணர்வு, புரிதல் எப்படி ஏற்பட்டது?

அப்போதைய நடுவண் அரசுக்குத் தொடர்பு மொழியா இந்திதான் இருந்தது. இந்தி படிச்சாத்தான் வேலைங்கிற நிலைமை இருந்தது. எல்லாத் தேசிய இன மக்களுக்கும் அது கட்டாயம்ங்கிற மாதிரி ஒரு சூழல் உருவாக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பிராமணர்கள்தான் அதிக அளவில் இந்தி கற்பவர்களா இருந்தாங்க. நான் பள்ளியில் இந்தி படிச்சதுக்கு அது பிராமணர் பள்ளியா இருந்தது ஒரு முக்கியமான காரணம். பிராமணர்களுடைய நிர்வாகத்துல இருந்த பள்ளிகளில் இந்தித் தேர்வுகள் ரொம்பப் பரவலா நடக்கும். இதன் விளைவா நிறையப் பேர் இந்தி படிச்சிட்டு வேலைக்குப் போறதுங்கிற நிலை இருந்தது. தமிழ் படிச்சா வேலை இல்லைங்கிற உணர்வு வந்தது. இந்தி மூலம் வேலைவாய்ப்பு என்பது தமிழரின் வாழ்வியலைச் சிதைக்கும்ங்கிற கருத்தாக்கத்திற்கு மாணவர்கள் இயல்பா வந்தாங்க.

உங்க கல்லூரியில் போராட்டத்தோட தாக்கம், போக்கு எப்படி இருந்தது?

மொழிப் போரின் முதல் கட்டமா 1962இல் திமுக சட்ட எரிப்பு, மறியல் போராட்டங்களை அறிவிச்சுது. இந்தப் போராட்டங்கள் கல்லூரிகளுக்கு வெளியே நடந்தவை. அப்ப நாங்க திமுக ஆதரவாளர்களா இருந்தோம். இந்தப் போராட்டங்கள் தொடங்கப்பட்டபோது வெளியான செய்திகளைக் கல்லூரிகளுக்குள்ள இருந்தபடி நாங்க வாசிக்கிறோம். மதுரையில் நடந்த சட்ட எரிப்புப் போராட்டத்துக்குத் தலைமைவகித்தவர்கள் 5 பேர். மதுரை முத்து, அக்னி ராசு, காவேரி மணியன், பி. எஸ். மணியன் அப்புறம் இன்னொருத்தர். (இவங்கள்ல இரண்டு மூன்று பேர் பின்னாலே சட்டமன்ற உறுப்பினர்களா ஆனாங்க.) அவங்கள வழியனுப்பி வெக்கறதுக்காகப் பெரிய கூட்டம் திரண்டது. அதுல எங்க கல்லூரியில இருந்து நிறையப் பேர் கலந்துகிட்டோம். ஆனா ஒரு கட்டத்துல திடலுக்குப் போகவிடாம அதைத் தடுத்து நிறுத் திட்டாங்க. அப்பக் கலைஞர் திடீர்னு அங்க வந்து அவங்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்துச் சொல்றாரு. இதைப் போன்ற அனுபவங்கள்தான் எங்களத் தயார்படுத்துச்சு. உண்மையில் இந்தி எதிர்ப்புங்கற வெடி மருந்தத் தயாரிச்சவங்க திமுகவும் தமிழறிஞர்களும். அதன் திரியைக் கொளுத்திப்போட்டவர்கள் மாணவர்கள். நான் மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படிச்சிட்டிருந்தேன் .

மாணவர்களிடையே திமுகவுக்கு அமைப்புரீதியான செல்வாக்கு இருந்ததா?

மாணவர் திமுகன்னு ஒரு அணியை உருவாக்கியிருந்தாங்க. அதில் நான் உறுப்பினர் இல்லை. ஆனா 1965இல் மாணவர் அணி மதுரையில் உருவானபோது அந்தக் கூட்டத்துல நான் கலந்துகிட்டேன். பேராசிரியர் அன்பழகன்தான் அதைத் தொடங்கிவைத்தார்னு நினைக்கிறேன். கல்லூரிக்கு வெளியேதான் அந்தக் கூட்டம் நடந்தது. 65இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது. எங்க கல்லூரி மாணவர்களான கா. காளிமுத்து, நா. காமராசன் ரெண்டு பேரும் சட்டத்தை எரிக்கிறதா முடிவாயிருந்தது. மதுரைக்கு மத்தியில் உள்ள ராஜாஜி திடல் அதற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கு முன்னால் கைதாயிறக் கூடாதுங்கறதுக்காக அவங்க ரெண்டு பேரும் தலைமறைவாயிட்டாங்க. தலைமறைவான இடம் கீழக்கரை. இன்குலாப்புடைய ஊர். அப்ப மாணவரா இருந்த ஹசன்முகமது என்பவர் அவங்களைத் தலைமறைவா வச்சிருந்தாரு. அவர்கள் சட்டத்தை எரிக்கப்போறாங் கங்கிறது எங்களுக்குத் தெரியும். அதன் முன்னர் நடந்த கலந்தாலோசனையின்போது நான் என்னையும் சட்ட எரிப்புப் போராட்டத்துல சேர்த்திருக்கலாமேன்னு சொன்னேன். இல்லை இல்லை அது வேண்டாம், நீங்கள்லாம் வெளிய இருந்து போராட்டத்தை நடத்தணும், உங்க குடும்பமெல்லாம் அடக்குமுறையைத் தாங்காதுன்னு சொல்லி மறுத்துட்டாங்க. சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெறும் நாளில் அனைத்துக் கல்லூரி, பள்ளி மாணவர்களும் ஊர்வலமாக வந்து ராஜாஜி திடலில் கூடுவது என ஏற்பாடு. ஊர்வலமும் போராட்டமும் திட்டமிட்டபடி நடந்து அவங்க கைதானாங்க. ஊர்வலமாப் போனபோது மதுரை வடக்கு மாசி வீதியில் காங்கிரஸ் அலுவலகத்திலிருந்த குண்டர்கள் மாணவர்களைத் தாக்கினாங்க. அங்க இருந்த வீரைய்யா என்பவர் மாணவர்களை அரிவாளால் வெட்டினார்னு சொன்னாங்க.

1965 ஜனவரி 25இல் இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தின்போது நடந்த சம்பவங்கள் இவை. பிறகு மதுரையில் மாணவர்கள் எல்லா இடங்களுக்கும் போய்க் காங்கிரஸ் கொடிகளை எல்லாம் வெட்டுனாங்க. அங்கங்க போலீஸ் தடியடி. மாணவர்கள் எல்லாம் அங்கங்க சிதறிப்போயிட்டோம். நானும் மதுரைக் கல்லூரி மாணவரான அ. ராமசாமியும்-அவர் "என்று முடியும் இந்த மொழிப்போர்"னு ஒரு புத்தகம் எழுதியவர். பின்னர் அவரே அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். காரைக்குடிப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரா இருந்தவர், இப்போ உயர் கல்வி மன்றத்தின் தலைவராக இருக்காரு - ஒரு இடத்தில் சந்திச்சோம். தீர்மானங்களையாவது நாம நிறைவேற்றிரலாமேன்னு கொஞ்சப் பேரைச் சேர்த்துட்டுத் திலகர் திடலுக்குப் போய் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவான தீர்மானங்களைப் படித்து நிறைவேற்றினோம். மாணவர் தலைவர்கள் சிறைக்குப் போயிட்டதால வெளியிலிருந்து போராட்டங்களை நடத்துற பொறுப்பை நாங்க எடுத்துக்கிட்டோம்.

யாரெல்லாம் அந்தப் பொறுப்பை எடுத்துக்கிட்டீங்க?

நான், இன்குலாப், சேடப்பட்டி முத்தையா, ஐ. செயராமன், அமெரிக்கன் கல்லூரியைச் சார்ந்த சதாசிவம், பரமசிவம், செந்தமிழ்க் கல்லூரி ஆறுமுகம், மறவர்கோ எனச் சிலர்.

பெ. சீனிவாசன் போன்றவர்கள் அந்தப் போராட்டத்தில் தீவிரமாப் பங்கெடுத்துக்கிட்டாங்க இல்லையா?

பெ. சீனிவாசன் சென்னையில் சட்டக் கல்லூரியில் இருந்தார். மதுரையில சட்ட எரிப்புப் போராட்டம் நடந்த அதே நாளில் சிதம்பரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. சென்னையிலும் போராட்டம் நடந்தது. அங்கே வெங்கடேஸ்வரா மாணவர் விடுதியில் பயங்கரமான தாக்குதல் நடந்தது. மாணவர்கள் உள்ளேயிருந்து விறகுக்கட்டைகளால் போலீசாரைத் தாக்கத் தொடங்கினார்கள். மதுரையில் மாணவர்களை வெட்டினதுதான் இந்தக் கலவரத்துக்கு அடிப்படை. வெட்டிட்டாங்க வெட்டிட்டாங்கன்னு எல்லா இடத்துலயும் தகவல் பரவியது. சென்னைச் சட்டக் கல்லூரி மாணவர் சீனிவாசன், ரவிச்சந்திரன், தியாகராய கல்லூரி மாணவர் நாவளவன், மாநிலக் கல்லூரி மாணவர் ராமன், பச்சையப்பன் கல்லூரி மாணவர் துரைசாமி என ஆங்காங்கே முனைப்பான பலர் தலைமையில தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டம் வெடிச்சுது. மதுரையில் நான், இன்குலாப், சதாசிவம், அப்புறம் பின்னாளில் அமைச்சர்களாயிருந்த பரமசிவம், சேடப்பட்டி முத்தையா போன்றவர்கள் முன்னின்று போராட்டத்தைத் தொடர்ந்தோம்.

போராட்டத்தின் இந்தக் கட்டம் எதுவரை நீடிச்சுது? நீங்க கைது செய்யப்பட்டீங்க, இல்லையா?

போராட்டம் ஒன்றரை ரெண்டு மாதம்வரை நடந்துது. எல்லாப் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தன. அதுக்குமேல போராட்டத்தை எடுத்துச்செல்வது சாத்தியமில்லைன்னு மாணவர்கள் குழு கூடித் தீர்மானம் போட்டோம். மதுரையிலும் சென்னையிலும் ஒரே சமயத்தில் அந்தக் குழு கூடியது. இதற்குப் பின்னணியில் இருந்த திமுக தலைமை இதுக்கு மேல இந்தப் போராட்டம் நீடிச்சா அது சரியில்லைன்னும் தன் கட்டுப்பாட்டிலிருந்து மாணவர்கள் தாண்டிப்போய்விட்டார்கள் என்று கருதியது. போராட்டத்தை நிறுத்திக்கொள்ளலாம்ங்கிற முடிவுக்கு அது வந்தது. அடுத்துவந்த தேர்தலுக்கு அது தயாராக வேண்டியிருந்தது.

சரியில்லைன்னா எந்த ரீதியில்? போராட்டம் தன் கையை மீறிப் போய்விட்டதாகக் கட்சி கருதியதா?

மாணவர்கள் ஆயுதம் ஏந்துகிற அளவுக்குக்கூட வந்துட்டாங்க. அப்ப திமுக தலைமை திமுகவைச் சார்ந்த மாணவர் தலைவர்களிடம் குறிப்பாகப் பெ. சீனிவாசன், எல். கணேசன் போன்றவர்களிடம் போராட்டத்தைக் கைவிடும்படி வற்புறுத்தியது. அப்போது சட்டம் படித்து முடித்துவிட்டிருந்தார் எல். கணேசன். ஆனா அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு மூலமா இருந்து தமிழகம் முழுவதும் மாணவர்களை ஒருங்கிணைத்தது அவர்தான். முன்னாள் மாணவர்ங்கிறதால அவர் தன்னை முன்னிறுத்தாமல் மற்ற மாணவர் தலைவர்களை முன்னிறுத்தி எல்லா வேலைகளையும் செய்தார். திமுக தலைமையோட கருத்தை நாங்களும் ஏத்துகிட்டோம். மதுரையிலும் சென்னையிலும் ஒரே நேரத்தில் கூடிய மாணவர்கள் போராட்டக் குழு, போராட்டத்தைக் கைவிடவும் கல்லூரிக்குச் செல்லவும் மீண்டும் கல்லூரி தொடங்கும்போது இந்தப் போராட்டத்தைத் தொடரவும் முடிவெடுத்தது. பின்பு அங்கங்கே மாணவர் கூட்டம் நடந்துது. அங்கே நாங்க பேசுறோம். விடுமுறை முடிந்தபின் மீண்டும் இந்தப் போராட்டம் தொடரும்னு வலியுறுத்தறோம். சென்னைக் கடற்கரைக் கூட்டத்திலும் அப்படிப் பேசினோம். இதனால நாங்க மீண்டும் போராட்டத்தைத் தொடங்கப்போறோம்னு உளவுத் துறை கொடுத்த அறிக்கையை வச்சுக்கிட்டுத் தமிழகம் முழுவதும் பத்து மாணவர் தலைவர்களைக் கைதுசெஞ்சாங்க. கோவையில் ஒருவர், தஞ்சவூரில் ஒருவர், சென்னையில் நாலு பேர், மதுரையில் நாங்க மூணுபேர் இப்படி 10 மாணவர் தலைவர்களை இந்திய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது பண்ணினாங்க. அப்ப அதே பாளையங்கோட்டைச் சிறையில் கலைஞரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது பண்ணி வச்சிருந்தாங்க. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கைவிட்ட உடனே அவரை விட்டுட்டாங்க. கலைஞரைத் தனிமைச் சிறையில் வச்சிருந்தாங்கன்னு சொல்வாங்க இல்லையா? அவர் இருந்த அதே அறையில்தான் காளிமுத்து இருந்தாரு. பக்கத்து அறையில் நாங்க இருந்தோம். அதுதான் அதனுடைய பின்னணி. யார் இந்தப் போராட்டத்திற்கு மூலமா இருந்தார்களோ அவர்களே இந்தப் போராட்டத்தை நடத்தக் கூடாதுன்னு முடிவெடுத்தாங்க. அஸ்ஸாம் மாதிரி மாணவர் தலைமைகளே சுயமாகப் போராடியிருந்திருந்தால் அது தேசிய இன எழுச்சிக்கு வழி வகுத்திருக்கும். அப்படி ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் மாறிவிடக் கூடாது என்பதற்காக அவங்க போராட்டத்தைக் கைவிட்டாங்க. அதற்கு முன்பே திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டிருந்தது திமுக தலைமை.”


தெரிவு:
நா. கணேசன்

Oru Arizonan

unread,
Nov 19, 2014, 1:06:51 PM11/19/14
to mint...@googlegroups.com
//அன்றைய காலகட்டத்தில் பிராமணர்கள்தான் அதிக அளவில் இந்தி கற்பவர்களா இருந்தாங்க. நான் பள்ளியில் இந்தி படிச்சதுக்கு அது பிராமணர் பள்ளியா இருந்தது ஒரு முக்கியமான காரணம். //

1.  இந்தக் கருத்தை நான் ஒப்புக்கொள்ள இயலாது.  This is nothing but pure Brahmin baiting. 

2.  ஏற்கனவே பிராமண எதிர்ப்பு தமிழ்நாட்டில் நன்கு தலை தூக்கி இருந்ததால், அச் சமூகம் மற்ற மாநிலங்களில் பிழைப்பைத் தேடி ஓடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்பது மறுக்கமுடியாத ஒன்று.  அதற்கு ஒரு கருவியாகவே இந்தியைக் கற்பதுவும் அமைந்தது.  இதைக் காரணம் காட்டாமல், ''அன்றைய காலகட்டத்தில் பிராமணர்கள்தான் அதிக அளவில் இந்தி கற்பவர்களா இருந்தாங்க.'' அரை உண்மைதான். 

3.  எல்லாக் கல்விக் கூடங்களிலும் ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதிவரை இந்தி கற்பிக்கப்பட்டது.  பள்ளி இறுதித் தேர்வில் இந்தி பரீட்சை எழுதிதான் ஆக வேண்டும்.  பெயரை மட்டும் எழுதினால் போதும்.  பூஜ்யம் வாங்கினால்கூட அது தேர்வு முடிவைப் பாதிக்காது.  இந்தியின் மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களுடன் சேர்த்துக்கொள்ளப்படுவது இல்லை.  

3a.   தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தபின்னரே இந்திப் பாடம் நீக்கப்பட்டது.

4.  எனவே // நான் பள்ளியில் இந்தி படிச்சதுக்கு அது பிராமணர் பள்ளியா இருந்தது ஒரு முக்கியமான காரணம்// என்பது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்வதற்கு ஒப்பாகும். இதுதான் ஒரு அரை உணமையைச் சொல்லை, உண்மை மட்டுமே சொல்வதுபோன்ற பிரமையை ஏற்படுத்தி, பின்னர் ஒரு முழுப்பொய்யைச சொல்வது.

4a.  வேண்டுமென்றால் அரசுத் தேர்வில் நான் வாங்கிய எனது பள்ளி இறுதி ஆண்டு மதிப்பெண்களை (இந்தி மதிப்பெண் உள்பட) ஸ்கான் செய்து இங்கு வலையேற்ற இயலும்.

5.  ஒரு பொய்யையே நூற்றுக்கணக்கான முறை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் சித்தாந்தமே மேலே நான் சுட்டிய வரிகள்.  இதுவும் "தி.மு.க, மாணவர்களை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளத் தூண்டவில்லை" என்பது போலத்தான்.  போராட்டம் துவங்குமுன்னர்தான் அனைத்து தி.மு.க தலைவர்களும் சிறையில் பத்திரமாக பக்தவத்சலம் அரசினால் வைக்கப்பட்டிருந்தார்களே!  அவர்களால் எப்படிப் போராட்டத்தில் கலந்துகொள்ள இயலும்?

//மதுரையில் மாணவர்களை வெட்டினதுதான் இந்தக் கலவரத்துக்கு அடிப்படை. //

6.  போராட்டம் பெரிதாக வெடித்ததற்கு இதுவே காரணம்.  What if... என்று எழுதப்படும் ஆராய்ச்சி செய்தால், மதுரை அரிவாள் வெட்டு சம்பவமே பக்தவட்சலம் ஆட்சி, காங்கிரஸ் தமிழநாட்டி விட்டு திராவிடக் கட்சிகள் கையில் போய்ச்சேரக் காரணமாக அமைத்தது.

7.  சிதம்பரத்திலும், மற்ற கல்லூரிகளிலும் நடந்த போராட்ட ஊர்வலங்களை அமைதியான முறையில் நடக்க விட்டிருந்தால்,  கோஷம் போட்டுவிட்டு மாணவர்கள் ஓய்ந்திருப்பார்கள்.  

8.  சிதம்பரம் துப்பாக்கிச் சூடுதான் மாணவர் எதிர்ப்பை மக்களிடம் கொண்டு சேர்த்தது.

9.  தி .மு.க அதன் நற்பயனை அறுவடை செய்தது.

10.  காங்கிரசின் நிலை கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, அதுவும் தேய்ந்து சித்தெரும்பாகி, அதுவும் மறைந்த நிலைக்குப் போய்விட்டது.

ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Nov 19, 2014, 6:00:57 PM11/19/14
to mint...@googlegroups.com

///
ஏற்கனவே பிராமண எதிர்ப்பு தமிழ்நாட்டில் நன்கு தலை தூக்கி இருந்ததால், அச் சமூகம் மற்ற மாநிலங்களில் பிழைப்பைத் தேடி ஓடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது
///

இதை நம்ப முடியவில்லை. இது மிகைப்படுத்துதல்.  இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு சீக்கியர்களுக்கு கிறிஸ்துவர்களுக்கு என்று அந்தந்த வகை இந்தியர்களுக்கும்  ஒவ்வொரு காலத்திலும் ஏதோ ஒருவகையில் சோதனை வந்திருக்கிறது...அதனால் அவர்கள் அனைவரும் இந்தியாவை விட்டே ஓடி விட்டார்களா?  

ஒரு எதிர்ப்பு எழுந்தால் அதன் காரணமென்ன? ஒரு புரட்சி எழுந்தால் அதன் காரணமென்ன?  சும்மா பொழுது போக்காக வேலை வெட்டி ஏதுமின்றி பொழுதைக் கழிக்கும் நோக்கிலா போராட்டங்கள் துவங்குகின்றன?  

மேலும்...முதலில் எனக்குத் தெரிந்து எதிர்ப்புதான் தெரிவித்தார்கள்   ...அதுவும் பிராமண எதிர்ப்பு  என்பது அந்தப் பிரிவு மக்களின் மீதான எதிர்ப்பல்ல அவர்கள் ஆதரித்த வழிமுறைகளால் சமூகத்திற்கு விளைத்த ஊறுகளினால் பிராமணத்தை எதிர்த்தார்கள் என்றும் படித்திருக்கிறேன்.





..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Nov 19, 2014, 6:45:38 PM11/19/14
to மின்தமிழ்

2014-11-19 23:36 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
 தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தபின்னரே இந்திப் பாடம் நீக்கப்பட்டது.

​இந்திய தேசிய காங்கிரஸ் கொள்கை முடிவின்படி ராஜாஜி தலைமையில் இயங்கிய அமைச்சரவை பதவி விலகியதும் இந்தி பள்ளிக் கல்வித்திட்டத்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது

பாசி

Nagarajan Vadivel

unread,
Nov 19, 2014, 6:52:40 PM11/19/14
to மின்தமிழ்
இந்த தலைப்புக்கான கட்டுரையில் இந்த வரிகள் இருப்பதைக் காண்க.

//1944க்கு முன்  பெரியார் தலைமையில் மக்கள் பங்கேற்புடன் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965‍இல் அண்ணாதுரையும், ராஜாஜியும் தூண்டி விட்டு, பின் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த, உரிய தலைமையின்றி மாணவர்கள் முன்னெடுத்த‌ இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிடுவது, நிகழ்கால தமிழ்நாட்டின் மோசமானப் போக்குகள் எப்போது ‘பலம்’ பெற்றன? என்ற கேள்விக்கான விடையைத் தரும்.//

எனது நோக்கம் இந்த வரிகள் குறிப்பாக அண்ணாவும் ராஜாஜியும் தூண்டிவிட்டுப் பின் ஒதுங்கிக் கொண்டாகள் என்பது அவரின் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து என்பதை வலியுறுத்துவதே என் நோக்கம்.  இது குறித்தும் இங்கு ந்டைபெற்ற விவாதத்துக்கும் கட்டுரையாள் தன் கருத்தைச் சொன்னால் நல்லது

பாசி



Oru Arizonan

unread,
Nov 19, 2014, 7:38:38 PM11/19/14
to mint...@googlegroups.com
//இந்திய தேசிய காங்கிரஸ் கொள்கை முடிவின்படி ராஜாஜி தலைமையில் இயங்கிய அமைச்சரவை பதவி விலகியதும் இந்தி பள்ளிக் கல்வித்திட்டத்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது//

தாங்கள் எத்தனை முறை திரும்பத் திரும்ப எழுதினாலும் அதை நான் மறுபேன் ஐயா! 

நான் பள்ளியில் படிக்கும்போது இராஜாஜியின் அமைச்சரவை இல்லை.  காமராஜரின் அமைச்சரவைதான் இருந்தது.  

அப்பொழுது  இந்தி எல்லாப்பள்ளிகளிலும் கற்பிக்கப்பட்டது.  என்னுடைய உயர்நிலைப்பள்ளிச் சான்றிதழை ஸ்கான் செய்து நான் சொல்லுவதை உறுதிப்படுத்தினால்தான் நம்புவீர்களா?

ஒரு (காரைக்குடிப் பாண்டிய நக்கீரச் சைவ) அரிசோனன் 


Geetha Sambasivam

unread,
Nov 19, 2014, 8:12:18 PM11/19/14
to மின்தமிழ்
பக்தவத்சலம் அமைச்சரவையின் போது நான் பள்ளி மாணவி. அப்போதும் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் ஹிந்தி இருந்தது.  நான் எட்டாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மூன்றும் படித்திருக்கிறேன்.   என் அண்ணா 1963 ஆம் வருடம் எஸ் எஸ் எல் சி  தேர்வு எழுதினார். அப்போது அது பதினோராம் வகுப்பு அல்லது ஆறாம் ஃபார்மாக இருந்தது.  அவருக்கு முந்தின வருடத்தில் இருந்து பதினோராம் வகுப்புத் தேர்வுக்கு ஹிந்தி கட்டாயம் அல்ல என நீக்கப்பட்டது.  ஆனாலும் ஒரு பயிற்று மொழியாக எட்டாம் வகுப்பு வரை இருந்தே வந்தது.  எனக்குப் பின்னர் படித்தவர்கள் ஹிந்தி படிக்கவில்லை.   அவர்கள் ஸ்டான்டர்ட் எனப்படும் வகுப்புகளிலும் படிக்க ஆரம்பித்தனர்.   ஃபார்ம் என அழைக்கப்பட்ட படிப்பு முறைக்கு  எங்கள் தொகுப்பு (செட்)  தான் கடைசி.  அதே போல் சென்னைப் பல்கலைக் கழகத்துக்கும் நாங்களே கடைசித் தொகுப்பு.  அதன் பின்னர் மதுரைப் பல்கலைக் கழகம் அறிமுகப் படுத்தப்பட்டது. 

Nagarajan Vadivel

unread,
Nov 19, 2014, 8:16:15 PM11/19/14
to மின்தமிழ்
நான்  கட்டிரையாளரின் தனிக்கருத்தைப்பற்றிக் குறிப்பிட்டேன்.  பெரியார்கால இந்தி எதிர்ப்பு பற்றிய தகவல்


இந்தச் சமயத்தில், "பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒத்துழைப்பதில்லை" என்ற தீர்மானத்தைக் காங்கிரஸ் மேலிடம் நிறைவேற்றியது. அதைத்தொடர்ந்து, மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் மந்திரிசபைகள் பதவியை விட்டு விலகின.
 
ராஜாஜி மந்திரிசபையும் 28_10_1939 அன்று ராஜினாமா செய்தது. 21_2_1940 அன்று கட்டாய இந்தி உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்றவர்கள் மொத்தம் 1,269 பேர். இவர்களில் பெண்கள் 73 பேர்.

அவர் அண்ணாவும் ராஜாஜியும் தூண்டிவிட்டுப் பின் ஒதுங்கிக் கொண்டார்கள் என்று கூறும் கருத்தைத் தக்க ஆவணங்கள் வழியாக மறுத்தீர்கள் என்றால் இந்த வாதத்துக்கு ஒரு முடிவு தெரியும்

மாணவர்கள் போராட்டம் மற்றும் தி.மு.கவின் போராட்டம் 1965 ஜனவரி 26 ஆம் நாள் ஆங்கிலம் விலக்கப்பட்டு இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஆட்சிக்குவரும் என்ற சட்டத்தை விலக்கிக்கொள்ள வலியுறுத்திய போராட்டம்.  இதில் தமிழ்நாடு தவிர மற்ற இந்தி பேசாத மாநிலங்களும் தங்கள் எதிர்ப்பைக் காட்டின.  அந்த எதிர்ப்பு மாரணமாகவே இந்தி பேசாத மாநிலங்களின் சட்ட மன்றங்கள் இந்தியை ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றாத வரையில் இந்தி ஆட்சிமொழியாகாது என்ற உறுதிமொழியை அளித்தார்

1965 -ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் கலந்துகொண்டவர்களில் கி.ஆ.பெ மற்றும் இலக்குவனார் தவிர மற்றவர்கள் ஆங்கிலம் போனால் தங்கள் கதி என்னாவது என்று கவலைப் பட்டவர்கள்.  காலையில் இந்தி எதிர்ப்பு.  பகலில் இந்தித் திரைப்படம் மாலையில் விவித பாரதி என்று போராட்டம் நடந்த நாளில்கூட இந்தி தமிழ் நாட்டில் உலவியதே

பாசி

தேமொழி

unread,
Nov 19, 2014, 8:16:55 PM11/19/14
to mint...@googlegroups.com

இங்கு கொஞ்சம் குழப்பிக் கொள்வதாகத் தெரிகிறது...

1952 – 1954 - Rajagopalachari
1954 – 1963  - Kamaraj
1963 – 1967 - Bhaktavatsalam
1967 –1969 - Annadurai

1954 இல் காமராஜர் ஆட்சிக்கு வந்த பின்னர்  நல்ல பல கல்வி சீர்திருந்தங்கள் தமிழகத்தில் வந்தன. 
இவையாவும் கல்வி பலரையும் சென்றடைய எடுக்கப்பட்ட முயற்சிகள் 

  1. ராஜாஜியின் ...குலக்கல்விமுறை ஒழிக்கப்பட்டது
  2. ராஜாஜி அறிமுகப்படுத்திய ஹிந்தி "கட்டாயப்பாடம்" என்ற நிலையில் இருந்து "விருப்பப்பாடம்" நிலைக்கு மாற்றப்பட்டது
  3. பள்ளிகளில் கல்விக்கட்டணம் நீக்கப்பட்டது
  4. கல்வி அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டது 
  5. வறுமைச் சூழலில் இருந்த மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
  6. மாணவர்களுக்கிடையே பேதம் வெளிப்படாதிருக்க சீருடை வழக்கம் வந்தது 
  7. பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது, (3 மைல்களுக்குள் ஒரு பள்ளி, பள்ளி இல்லாத பஞ்சாயத்து இல்லை என்ற நிலை உருவானது)
  8. கற்றோர் எண்ணிக்கை 7% >>> 37% ஆனது 

(காமராஜர் வாழ்க )

1965 இல் நடந்த மத்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கையும்  அதைத் தடுக்க நடந்த தமிழகத்தின்  இந்தி எதிர்ப்பு நடவடிக்கையும்....

தமிழர்களிடையே காங்கிரசின் மீது வெறுப்பை அதிகரிக்க வைத்து, தமிழக அரசியலை மாற்றி காங்கிரசை வெளியேற்றி  தி. மு. க வை பதவியில் வைத்தது.

காங்கிரசிற்கு தமிழகத்தில் சங்கூதப்பட்டது.

இந்தி எதிர்ப்பு நடவடிக்கையின் விளைவாக கழக ஆட்சியில்  பள்ளிகளில் இருந்த விருப்பப்பாட நிலையையும் இந்தி இழக்கும் நிலை ஏற்பட்டது. 

இது மொழியைத் திணிக்க எண்ணியதன் எதிர்வினை.

..... தேமொழி


பி.கு.
திரு. அரிசோனன் விருப்பப் பாடமாகப் படித்திருக்கிறார்.  விருப்பப் பாட நிலைக்கு ஹிந்தி சென்றவுடன் என் பெற்றோர்கள் ஹிந்தியை உதறிவிட்டு வேறு விருப்பப் பாடத்திற்குச் சென்றுவிட்டார்கள்.   ஆனால் B செக் ஷனில் படித்த மாணவர்கள் (இவர்கள் பெரும்பாலும் ஐயர் வீட்டுப் பிள்ளைகள் என்பது பெற்றோர் தந்த தகவல்) யாருமே ஹிந்தியைக் கைவிடவில்லை.  தொடர்ந்து படித்ததாக தகவல் ..இதுவும் செவிவழிச் செய்தியே.  
அதனால் 
//அன்றைய காலகட்டத்தில் பிராமணர்கள்தான் அதிக அளவில் இந்தி கற்பவர்களா இருந்தாங்க. //

இந்தக் கூற்றில் பொய் இருப்பதாகத் தெரியவில்லை. 

Geetha Sambasivam

unread,
Nov 19, 2014, 8:24:03 PM11/19/14
to மின்தமிழ்
//பி.கு.
திரு. அரிசோனன் விருப்பப் பாடமாகப் படித்திருக்கிறார்.  விருப்பப் பாட நிலைக்கு ஹிந்தி சென்றவுடன் என் பெற்றோர்கள் ஹிந்தியை உதறிவிட்டு வேறு விருப்பப் பாடத்திற்குச் சென்றுவிட்டார்கள்//



நான் படித்தது கான்வென்டில்.  பலதரப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவிகளும் அந்தப் பள்ளியில் உண்டு.  அனைவருமே ஹிந்தி படித்தார்கள்.  ஹிந்தி எட்டாம் வகுப்பு வரை கட்டாயமாகவே இருந்ததாய்த் தெரிகிறது.  ஒன்பதாம் வகுப்புக்குப் பின்னரே இரண்டு மொழிகள்.  அதிலும் பத்தாம் வகுப்பில் இருந்து நான் செக்ரடேரியல் கோர்ஸ் எடுத்ததால் தமிழில் இலக்கணப் பாடமும், துணை நூல்ப்பாடமும் கிடையாது.  கணக்கில் அல்ஜிப்ரா, ஜியோமிதி போன்றவை இல்லை.  இவை தாம் விருப்பப் பாடங்கள்.  ஒன்பதாம் வகுப்பிற்குப் பின்னரே விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.  எட்டாம் வகுப்பு வரை அப்படி இருந்ததாய்த் தெரியவில்லை.  ஆனால் எனக்குப் பின்னர் வந்த மாணவ, மாணவியருக்கு ஹிந்தி இல்லை. இது நிச்சயமாய்த் தெரியும் எனக்கு.  என்னுடைய பள்ளிச் சான்றிதழைத் தேடினால் தான் கிடைக்கும்.  வீடு மாறுதலில் எல்லாவற்றையும் எடுத்துக் கட்டி வைத்தாயிற்று.  எங்கே இருக்குனு தெரியாது.  இல்லைனால் ஸ்கான் செய்து எடுத்துப் போடலாம். :))))))

 

Nagarajan Vadivel

unread,
Nov 19, 2014, 8:41:52 PM11/19/14
to மின்தமிழ்
கட்டுரையாளர் 1938-ல் பெரியாரால் முன்னெடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்புக்கும் 1965-ல் அண்ணாவும் ராஜாஞ்யும் தூண்டிவிட்ட இந்தி எதிர்ப்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்குகிறார்

என் கேள்வி 1965-ல் தொடங்கிய இந்தி எதிர்ப்பில் மாணவர்கள் மட்டும் (தி.மு.க வின் இந்தி எதிர்ப்பில் கலந்துகொள்ளாமல்) கி.ஆ.பெ இலக்குவனார் தலைமையில் நடத்திய போராட்டத்தில் ராஜாஜியும் அண்ணாவும் தூண்டினார்கள் என்பதற்கான ஆதாரம் கேட்டால் கிடைக்கமாட்டேன் என்கிறதே

மாணவர்கள் போராட்டம் வெடித்த 1965-ல் தமிழ்நாட்டில் இந்தி கட்டாயப் பாடம் இல்லை.  அவர்கள் போராட்டம் ஆங்கிலம் ஆட்சி மொழியாகத் தொடரும் என்ற சரத்து ரத்து செய்வதை எதிர்த்து நடத்திய போராட்டம் என்பதை மறுப்பவர்கள் மறுக்கட்டும்

பாசி 

Oru Arizonan

unread,
Nov 19, 2014, 8:55:33 PM11/19/14
to mint...@googlegroups.com
//பி.கு.
திரு. அரிசோனன் விருப்பப் பாடமாகப் படித்திருக்கிறார். விருப்பப் பாட நிலைக்கு ஹிந்தி சென்றவுடன் என் பெற்றோர்கள் ஹிந்தியை உதறிவிட்டு வேறு விருப்பப் பாடத்திற்குச் சென்றுவிட்டார்கள்.   ஆனால் B செக் ஷனில் படித்த மாணவர்கள் (இவர்கள் பெரும்பாலும் ஐயர் வீட்டுப் பிள்ளைகள் என்பது பெற்றோர் தந்த தகவல்) யாருமே ஹிந்தியைக் கைவிடவில்லை.  தொடர்ந்து படித்ததாக தகவல் ..இதுவும் செவிவழிச் செய்தியே.  
அதனால் 
//அன்றைய காலகட்டத்தில் பிராமணர்கள்தான் அதிக அளவில் இந்தி கற்பவர்களா இருந்தாங்க. //

இந்தக் கூற்றில் பொய் இருப்பதாகத் தெரியவில்லை.  //

தேமொழி,

மதிப்பிற்குரிய பாசி அவர்களுக்கு எழுதியதையே மறுபடியும் உங்களுக்கும் நான் எழுதுகிறேன். 

 இந்தி விருப்பப்பாடம் அல்ல. கட்டாயப் பாடம்.  ஆனால் பூஜ்யம் வாங்கினாலும் பாஸ்.  நாளை என் S.S.L.C. சான்றிதழை ஸ்கான் செய்து வலையேற்றுகிறேன்.  அது உங்களது தேவையற்ற கூற்றுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என் நம்புகிறேன்.

திரும்பத் திரும்ப செவிவழிச் செய்தி, ஐயர்வீ ட்டுப் பிள்ளைகள்  மட்டும் இந்தி பயின்றார்கள் என்று தவறான தகவலை இந்த மின்னஞ்சலில் தராதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.  செவிவழிச் செய்தியை வைத்துக்கொண்டு //அன்றைய காலகட்டத்தில் பிராமணர்கள்தான் அதிக அளவில் இந்தி கற்பவர்களா இருந்தாங்க. //இந்தக் கூற்றில் பொய் இருப்பதாகத் தெரியவில்லை//. என்று  எழுதுவதை எதில் சேர்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை. 

உங்கள் பெற்றோர்கள் எந்த வருடங்களில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்கள் என்று தெரிந்துகொண்டு, சான்றுடன் எழுதுங்கள்.  பெருமதிப்பிற்கு உரிய பாம்பாட்டிச் சித்தருக்கே பலமுறை நான் மறுப்புத் தெரிவித்தால் நான் எவ்வளவு உறுதியாக ஒரு செய்தியைச் சொல்லுகிறேன் என்றும் நினைவில் கொள்ளுங்கள். தேவை இன்றிச் ஒரு குறிப்பிட்ட சாதியை நீங்கள் இழுப்பதையும் அறவோடு விட்டுவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். 

நாங்கள் அனைவரும் தமிழில்தான் பயின்றோம், பொதுத் தமிழ் அனைவரும் பயிலவேண்டும்.இதுபோக ஆங்கிலமும், இந்தியும் உண்டு.  விதிவிலக்கு கிடையாது.  

 ஐயர் வீட்டுப்  பிள்ளைகளில் சிலரும், மற்றவர் சிலரும் படித்த விருப்பப் பாடம் வடமொழி என்னும் சமஸ்கிருதம் (சிறப்புப் தமிழுக்குப் பதிலாக).  வடமொழி சிரமம் என்பதால் பலரும் அதை எடுப்பதில்லை.  நான் வடமொழி வகுப்புக்குச் செல்லும்போது அறுவரே இருந்தனர்.  அதில் இருவர் ஐயர் வீட்டுப் பிள்ளைகள் அல்லர்.  

நான் 2004ல் சிருவருக்குத் தமிழ்ப் புத்தகம் வாங்க ஹிக்கின்பாதம்ஸ், மற்றும் ஸ்பென்செர் மாலுக்குச் சென்றபோது இந்திப் புத்தகங்களே நிறைந்து கிடந்தன.  ஸ்பென்செர் மாலில் சிறுவர் புத்தப் பகுதியில் இருந்த பெண்ணுக்கு இந்தி மட்டுமே தெரிந்திருந்தது.  ஹிக்கின்பாதம்சுக்கும், ஸ்பென்சர் மாலுக்கும் ஐயர் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே செல்கிறார்களா ?  ஏன் அங்கு தமிழ்ப் புத்தகங்களைவிட ஆங்கில, மற்றும் இந்திப் புத்தகங்கள் நிறைந்திருந்தன?  தமிழே அறியாத பெண்மணி விற்பனைக்கு நியமிக்கப்பட்டிருந்தார்?  ஐயரல்லாத தமிழர்கள்(ஆண்க்களும் பெண்களும்) பலர்  அப்பெண்மணியுடன் இந்தியில் உரையாடினார்களே, அது எப்படி?  அருள்கூர்ந்து, 1965லிருந்து 2014க்கு வாருங்கள்.  

நாம் இங்கு தி.மு.க மாணர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார்களா என்பதை மட்டுமே விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆகவே காமராஜரின் நற்செயல்களை விவரித்துவிட்டு தேவை இல்லாத பின்குறிப்பைத் தவிர்த்திருக்கலாம் என்பதே என் துணிபு.

ஒரு(காரைக்குடிப் பாண்டிய நக்கீரச சைவ) அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Nov 19, 2014, 9:06:45 PM11/19/14
to மின்தமிழ்
பள்ளிகளில் பாடமாக இந்தி இருந்ததற்கு அடிப்படை கல்வித்திட்டத்தில் தாய்மொழியைத் தவிர வேற்றுமொழிகளைக் கற்கவேண்டும் என்று அரசு டாக்டர்.ராதாகிருஷ்ணன், கோத்தாரி, டாக்டர் ஏ.எல். முதலியார் கமிட்டி அறிக்கைகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்திய திட்டத்தின் விளைவு

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் பிரதமர் நேரு அவர்கள் கனடாவின் டாக்டர். பென்ஃபீல்ட் அறிவுரையின் பெயரில் குழந்தையின் மொழிகள் கற்கும் திறன் உட்டமடையும் வயதில் இரு மொழிகளோ அல்லது மூன்று மொழிகளை அறிமுகப்படுத்தலாம என்ற வல்லுநர் கருத்தின் அடிப்படையில் இருமொழிக்கொள்கை அடிப்படையில் 12 வ்யதுக்குமுன் ஆங்கிலத்தையும் பின்னர் 15 வயது அடையும் வரையில் தாய்மொழியைத் தவிர ஆங்கிலம் இந்தி மொழியைக் கற்க வலியுறுத்தப்பட்டது

கல்வி மைய அரசு, மாநில அரசு மற்றும் இரண்டுக்கும் உட்பட்ட பட்டியலில் மாறி மாறி வந்ததால் மொழிக்கொள்கையில் குழப்பமான சூழல் ஏற்பட்டதையும் கருத்தில் கொள்க

பாசி

N. Ganesan

unread,
Nov 19, 2014, 9:18:45 PM11/19/14
to mint...@googlegroups.com, vallamai

இந்தி எதிர்ப்புப் போராட்டம்


இந்தி எதிர்ப்புப் போராட்டம்:

நா. கணேசன்

Oru Arizonan

unread,
Nov 19, 2014, 10:33:22 PM11/19/14
to mint...@googlegroups.com
Inline image 2
எனது SSLC இறுதி ஆண்டு சான்றிதழைக் கொடுத்துள்ளேன்.  Privacyக்காகவும், மற்ற security காரணங்களுக்காகவும் பெயரை மறைத்துள்ளேன்.அதில் S.No 7ல் Third Language -- Hindi (Optional) கொடுத்திருக்கிறது.  அதன் மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்ணில் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பதைக் காணலாம்.  இந்தி வகுப்பிற்கு அனைவரும் சென்றுதான் ஆகவேண்டும்.  பரீட்சையும் எழுதித்தான் ஆகவேண்டும்.  பெயரை  மட்டும் (Reg. No) எழுதிக்கொடுத்துவிட்டு வந்துவிடலாம்.  0 வாங்கினாலும் பரவாயில்லை.

இன்னும் ஒன்று.  அப்பொழுதே, நான் எனது சாதியைக் குறிப்பிடவேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.  இது என் பெட்றோர். பாட்டனார் .அனுமதியுடன் செய்ததாகும்.  முதல் பக்கத்தையும் இத்துடன் இணைத்திருக்கிறேன்.  ஆக, சாதி ஒழிக என்று சொல்லிக்கொண்டு சாதிச் சலுகை கொடுத்த அரசின் கொள்கை பிடிக்காமையால், சாதிப் பெயரைக் குறிப்பிட அன்றே மறுத்தவன் நான்

இனி, மீண்டும், மீண்டும் இந்தி கற்பிக்கப்படவில்லை என்று எழுதுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  

தேமொழி குறிப்பிட்ட விஷயம் First language -- 2 Sanskrit என்பதாகும்.  சிறப்புத் தமிழுக்குப் பதிலாக வடமொழியைக் கற்றேன்.  இருப்பினும் சிறப்புத்தமிழ் புத்தகத்தை வாங்கி அதையும் வீட்டில் படித்துகே கற்றுக்கொண்டேன்.  நான் படித்தபோது மொழித் தேர்வுகளில் 60க்கு மேல் வாங்குவது மிகவும் பெரிய விஷயமாகும்.

மும்மொழிதிட்டத்தின் கீழ் மூன்றாம் மொழியாக இந்தி கற்பிக்கப்பட்டது என்று சான்றும் கொடுத்துவிட்டேன்.  இதைப் பொய் என்று சான்று காட்டுபவர்கள் முன்வருகிறீர்களா?

ஒரு(காரைக்குடிப் பாண்டிய நக்கீரச் சைவ) அரிசோனன் Inline image 3



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Geetha Sambasivam

unread,
Nov 19, 2014, 10:53:31 PM11/19/14
to மின்தமிழ்
என் தந்தையார் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக இருந்தவரே. 1962 ஆம் வருடம் வரைக்கும் பள்ளி இறுதித் தேர்வு எழுதும் மாணவ மணிகளின் ஹிந்தித் தேர்வுத் தாள்கள் திருத்துவதற்காக அப்பாவுக்கு வீட்டுக்கே வரும்.  வந்திருக்கின்றன.  ஆகையால் 1962 ஆம் வருடம் வரைக்கும் பள்ளி இறுதித் தேர்விலும் ஹிந்தி என்ற ஒரு மொழித் தேர்வு இருந்தது.  திரு அரிசோனன் அவர்கள் 61 ஆம் வருடம் பள்ளி இறுதித் தேர்வு எழுதி இருக்கிறார் என எண்ணுகிறேன்.  ஆகையால் அவரும் கட்டாயமாய் ஹிந்தி கற்றிருப்பார்.  என் அப்பாவிடம் ஹிந்தி கற்ற மாணவர்களில் பெரும்பாலோர் பிராமணர் அல்லாதவர்களே.  அவர்களில் பலரும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது எங்களுக்குக் காவலாய் இருந்திருக்கின்றனர். 

ஹிந்திப் போராட்டங்கள் நடந்த போது ராஜாஜி தூண்டியதாக எனக்கு நினைவில் இல்லை.  அப்போது நான் பள்ளி மாணவி தான்.  எங்கள் பள்ளியிலும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடக்கத் தான் செய்தது. ராஜாஜி ஹிந்தி மொழியை ஆதரித்ததாகத் தான் நினைவில் இருக்கிறது. 



//என் கேள்வி 1965-ல் தொடங்கிய இந்தி எதிர்ப்பில் மாணவர்கள் மட்டும் (தி.மு.க வின் இந்தி எதிர்ப்பில் கலந்துகொள்ளாமல்) கி.ஆ.பெ இலக்குவனார் தலைமையில் நடத்திய போராட்டத்தில் ராஜாஜியும் அண்ணாவும் தூண்டினார்கள் என்பதற்கான ஆதாரம் கேட்டால் கிடைக்கமாட்டேன் என்கிறதே.//

பேராசிரியர் சொல்லும் இந்தத் தகவல் முற்றிலும் புதியது.  ராஜாஜி கி.ஆ.பெ. இலக்குவனாரைத் தூண்டியதாகத் தெரியவில்லை.  மாணவர்கள் பெருவாரியாக ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  நாங்கள் குடி இருந்த மேலாவணி மூல வீதி, மதுரை வீட்டில் கற்கள் நிறைய விழுந்திருக்கின்றன.  என் தகப்பனார் பள்ளிக்குச் செல்கையில் துணைக்குப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியரும், தச்சு வேலை கற்பிக்கும் ஆசிரியரும் கூடவே செல்வார்கள்.  மிரட்டல் கடிதங்கள் தினம் தினம் பத்தாவது வரும்.  நான் பள்ளிக்குச் செல்வதே பெரும்பாடாக இருக்கும். மாணவ மணிகள் வழி மறித்து நாங்கள் தான் மத்திய அரசிடம் சொல்லி ஹிந்தியைக் கற்கச் சொன்னோம் என்பது போல் பேசுவார்கள்.  இப்போது நினைத்தால் சிரிப்பாக வந்தாலும் அந்த இரண்டுங்கெட்டான் வயதில் பயம் இருந்தது என்பது என்னமோ உண்மை. :))))))


பேராசிரியர் கேட்ட கேள்வியில் பெரியார் தூண்டி விட்டாரா என்பது குறித்து நான் அறியேன்.  ஆனால் ராஜாஜி தூண்டி விட்டிருக்க முடியாது என்பது மட்டும் தெரியும். கோர்கா ரெஜிமென்ட்டின் ராணுவ வீரர்கள் வந்தே  ஹிந்தி எதிர்ப்புப்  போராட்டத்தை அடக்க நேர்ந்தது. 




 

Oru Arizonan

unread,
Nov 19, 2014, 11:17:15 PM11/19/14
to mint...@googlegroups.com
உயர்திரு கீதா அம்மா அவர்களே,

காரைக்குடியில் மிகவும் பிரபலமான, தனியாக இந்தி வகுப்புகள் நடத்திய கல்யாணசுந்தரம் என்னும் எனது இந்தி ஆசிரியர் ஒரு பிராமணர் அல்லர்.  அவர் ஒரு சைவர்.  அவரிடம் இந்தி பயின்றவர்களில் முக்கால் வாசிக்கு மேற்பட்டவர்கள் பிராமணர்கள் அல்லர்.  

நான் இந்தி படிக்க முத்துப்பட்டினம் செல்லும் பொது என்னுடன் ஒரு அக்கா வருவார்கள்.  

சாண்  பிள்ளையானாலும் நான் ஆண் பிள்ளை அல்லவா.  ஆகவே, தனியாக வெளியில் தங்கள் பெண்ணை அனுப்ப விரும்பாத அந்த அக்காவின் பெற்றோர்கள் என்னுடன் இந்தி பயில அனுப்பி வைப்பார்கள்.  அந்த அக்காவும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் அல்லர். 

 இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரும்வரை யாரும் இந்தியைப் பற்றி கவலை எடுத்துக்கொள்ளவில்லை என்றே கூறலாம்.  இந்தி ஆசிரியையான என் அத்தை மகளை, அவளது தங்கைகள் இந்தி அரக்கி என்று (தினத்தந்தி சிரிப்புப் படத்தைப் பார்த்ததனால்) அழைத்துக் கிண்டல்  செய்வார்கள். நான் தனியாக இந்தி படித்ததனால் என்னைச்  "சின்ன இந்தி அரக்கன்" என்றும் கேலி செய்வார்கள்.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Nov 19, 2014, 11:25:22 PM11/19/14
to mint...@googlegroups.com
கீதா  என் அம்மா படித்ததும் கான்வென்ட் பள்ளிதான்...மன்னையில்  செயின்ட் ஜோசப் கான்வெண்ட்.

B செக் ஷன் பற்றிய தகவல் அம்மா கவனித்துச் சொன்னதுதான்.  அவர்களும் ஃபார்ம் முறையில் வகுப்புகள் அழைக்கப் பட்ட காலத்தில் படித்தவர்கள்.  அவர்கள் பள்ளி இறுதி வகுப்பு படித்தது  1959 ஆண்டாக இருக்கலாம் (1960 இல் திருமணம் செய்து வைக்கபட்டார்கள்)   ... அவர்கள் பேச்சு வாக்கில் தந்த பல தகவல்களில் சிலவே  என் நினைவில் உள்ளன.  அவர்களைக் கேட்டு தகவல்களை சரிபார்க்க இயலாத நிலை, அவர்கள் மறைந்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிறது.  இன்று (நவம்பர் 19) அவர்கள் மறைந்த தினம். 

[ கல்வி குறித்து அவர்கள் மேலும் சொன்ன தகவில்: அவர்கள் அப்பொழுது பள்ளிக் கட்டணம் ஒரு ரூபாய்தான் அதுகூட கட்ட இயலாத குடும்பங்கள் இருந்தன என்று வியந்து சொல்வார்கள்.  பிறகுதான் எனக்குப் புரிய வந்தது என் அம்மா எவ்வளவு  நிலைமை தெரியாமல் வளர்க்கப்பட்டவர்கள் என்று.  ஒரு ரூபாய்க்கு அக்காலத்தில் ஒரு மூட்டை அரிசியே வாங்கலாமாம்.  அக்காலத்தில்  வீட்டில் உள்ள அத்தனை பிள்ளைகளுக்கும் இப்படி பணம் கட்டிப் பள்ளியில்  படிக்க வைக்க எத்தனை பேருக்கு வசதி இருந்திருக்கும்.  பணத்தின் மதிப்பு புரியாமல், மக்கள் நிலைமை புரியாமல் இப்படி அப்பாவியாக வளர்க்கப்பட்டிருக்கிறார்களே இந்தஅம்மா என்று நினைத்துக் கொள்வேன்.]





..... தேமொழி

Geetha Sambasivam

unread,
Nov 19, 2014, 11:29:12 PM11/19/14
to மின்தமிழ்
உங்கள் தாயின் நினைவுக்கு என் அஞ்சலிகள் தேமொழி.  அவர்கள் சொல்லும் காலத்தில் நான் ஆரம்பப் பள்ளி மாணவி.  ஆகையால் அவ்வளவெல்லாம் தெரியலை.  ஒருவேளை மன்னையில் அவர்கள் படித்த தனியார் பள்ளியில் அப்படி இருந்திருக்கலாம்.  பொதுவாக 1962 ஆம் ஆண்டு வரை ஹிந்தியும் ஒரு பாடமாக இருந்தது என்பதே உண்மை.  இதை எவராலும் மறுக்க முடியாது. 

நானெல்லாம் பணம் கட்டிப்படிக்காததால் இந்தச் சம்பளம் பத்தித் தெரியாது.  எங்கள் குழந்தைகளும் கேந்திரிய வித்யாலயாவிலும் பின்னர் அரசுக்கல்லூரிகளிலும் படித்ததால் படிப்புக்கு அதிகம் செலவு பண்ணும்படி இறைவன் வைக்கவில்லை. 

S NEELAKANTAN

unread,
Nov 19, 2014, 11:33:59 PM11/19/14
to mintamil
நான் 1950 முதல் 1969 வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்திருக்கிறேன் .  அந்த காலகட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள எல்லா பள்ளிகளும் ஹிதி வகுப்பு இருந்தது . 9ம் வகுப்பு வரை தமிழ் ஆங்கிலம் சிறப்பு த்தமிழ் என்று முன்று கட்டாயமாக இருந்தது.சிறப்பு தமிழுக்கு பதில் ஹிந்தி இல்லை சமிச்க்ரிதம் எடுத்து படிக்கலாம் . 1965அம ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் ஹிதி எதிர்ப்பை ஒரு பகடைக்காயாக உபயோகித்து காங்கிரஸ் ஆட்ச்சியை கைப்பற்றவேண்டும் என்ற முழுமூச்சுடன் செயல் பட்டது . அதானால் தான் காமராஜர் கூட தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை . தக்ஷின பாரத் ஹிந்தி பிரச்சார் சபா அதன் பணியை நன் றாக செய்தது. நானும் மத்யமா வரை படித்தவன் அதனால் மும்பையில் புலம் பெயர்ந்த பின் அன்று படித்த ஹிந்தி எனக்கு உதவியது   

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--



 

Oru Arizonan

unread,
Nov 19, 2014, 11:36:35 PM11/19/14
to mint...@googlegroups.com
//அவர்கள் மறைந்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிறது.  இன்று (நவம்பர் 19) அவர்கள் மறைந்த தினம். //

அன்பின் தேமொழி,

உங்கள் அன்னையின் ஆன்மா அமைதியில் நிலைபெற வேண்டுகிறேன்.

உங்களுக்குப் புனிதமான இந்த நாளில் அவர்களது நினைவில் -- அவர்கள் உங்களை அன்புடன் வளர்த்த இனிய நினைவுகளில் -- அவர்கள் உங்களைப் படிப்படியாக அன்பூட்டி, அறிவூட்டி இவ்வுலகில் நிலைநிறுத்திய சம்பவங்களை எண்ணிப பார்த்து இன்புறுதல் வேண்டும்.  

இந்த இழைகள், மற்றும் எந்தவிதமான விவாதங்களிலும் கலந்துகொள்ளாது, உங்கள் அன்னையின் அன்பு வெள்ளத்து நினைவலைகளில் ஆறுதலும், அமைதியும் பெறவேண்டுமென்று வேண்டுகிறேன்.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Geetha Sambasivam

unread,
Nov 19, 2014, 11:37:32 PM11/19/14
to மின்தமிழ்
என் தந்தை தக்ஷிண் பாரத் ஹிந்தி ப்ரசார் சபாவின் ப்ரவீன் ப்ரசாரக் முடித்து பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் பட்டமேற்படிப்பை முடித்திருந்தார். 

2014-11-20 10:03 GMT+05:30 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:
 

தேமொழி

unread,
Nov 19, 2014, 11:37:53 PM11/19/14
to mint...@googlegroups.com
///
 தேவை இன்றிச் ஒரு குறிப்பிட்ட சாதியை நீங்கள் இழுப்பதையும் அறவோடு விட்டுவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். 
///

///
ஆகவே காமராஜரின் நற்செயல்களை விவரித்துவிட்டு தேவை இல்லாத பின்குறிப்பைத் தவிர்த்திருக்கலாம் என்பதே என் துணிபு.
////



திரு. அரிசோனன்,

உங்களிடம் ஒரு வேண்டுகோள்.   வரலாற்றுக் குறிப்பாக கொடுக்கப்படும் தகவல்களை அந்தக் கோணத்திலேயே பார்க்கவும்.

நாம் விரும்பத் தகாத வகையில் வராற்றில் உண்மைத் தகவலும் இருக்கும்/இருக்கலாம்.  அதற்காக சொல்லுபரை குற்றம் சாட்டுவது kill the messenger போன்ற செயல்.

ஜாதியை எதிர்ப்பவர்கள், மதத்தை எதிர்ப்பவர்கள் அந்தக்குழுவின்  ஆதிக்கப் பிரிவு பிறரை  அடக்கி வந்ததை/வருவதை எதிர்ப்பவர்கள்.  அவர்கள்  எந்தப் பிரிவினராக இருந்தாலும்  சரி.  எனக்குத் தெரிந்த தகவலை நான் பகிர்ந்து கொள்கிறேன்.  இதில் எனக்கு பொய்யுரைத்து என்ன ஆகப்போகிறது.

நான் வளரும் வயதில் என் பெற்றோர்கள் அவர்கள் வளர்ந்த காலத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டதை, என்  நினைவில் இருந்தவரை நானும் அது தொடர்பான உரையாடல் வரும்பொழுது பகிர்ந்து கொள்கிறேன்.  என் பெற்றோர் சொன்னதை நான் நம்புகிறேன். 


..... தேமொழி


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Nov 19, 2014, 11:39:59 PM11/19/14
to mint...@googlegroups.com
நான் படித்தபோது பள்ளியில் பணம் கிடையாது.  எங்கள் பள்ளி முனிசிபல்/அரசினர் பள்ளியாக இல்லாது போனாலும், அரசினரின் உதவி பெற்றது என்ற காரணத்தால் பணம் வாங்கவில்லை.  ஸ்பெஷல் ஃபீஸ் என்று ஆண்டுக்கு இரண்டு முறை இரண்டரை  ரூபாய்கள் வாங்கியதாக நினைவு.

ஒரு அரிசோனன் 

Geetha Sambasivam

unread,
Nov 19, 2014, 11:52:38 PM11/19/14
to மின்தமிழ்
//நான் வளரும் வயதில் என் பெற்றோர்கள் அவர்கள் வளர்ந்த காலத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டதை, என்  நினைவில் இருந்தவரை நானும் அது தொடர்பான உரையாடல் வரும்பொழுது பகிர்ந்து கொள்கிறேன்.  என் பெற்றோர் சொன்னதை நான் நம்புகிறேன். //

கட்டாயமாய் உங்கள் பெற்றோர் சொல்வதை நீங்கள் நம்பவேண்டும் தான்.  ஆனால் உண்மை வேறாகவும் இருக்கலாமே!  ஏனெனில் உங்கள் பெற்றோர் பார்த்தது அவர்கள் கோணத்தில்.  எல்லோருக்கும் அதே கோணத்தில் பார்க்க முடியாது அல்லவா?  அதோடு உண்மையும் வேறு தான். :)))))


  ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப்பெயர் போன மதுரையிலேயே  அந்தக் கால கட்டத்திலேயே ஹிந்தி கற்ற பலர் இருந்திருக்கின்றனர்.  இன்னும் சொல்லப் போனால் என் தந்தை வேலை பார்த்த சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் என் தந்தையையும் சேர்த்து இரண்டு ஹிந்தி ஆசிரியர்கள்.  என் தந்தை பெரிய வகுப்புகளுக்குப் பாடம் எடுப்பார்.  அவருக்குக் கீழ் மற்றொரு ஆசிரியர். இரண்டு பேர் இருந்தனர். நான் படித்த பள்ளியிலும் அப்படியே இரண்டு ஹிந்தி ஆசிரியர்கள்.  மதுரையின் தங்கம் தியேட்டர், சென்ட்ரல் தியேட்டர் அதிபர் கண்ணாயிரம் என்பவரைத் தெரியாத மதுரைக்காரர்களே இருக்க முடியாது.  அவருக்கு என் தந்தை தான் ஹிந்தி கற்றுக் கொடுத்தார்.  இன்னொரு கிறித்துவத் தொழில் அதிபரும் என் தந்தையிடமே ஹிந்தி கற்றார்.  இப்படிப் பலர் என் தந்தையின் மாணவர்கள் மதுரையில் இருந்திருக்கின்றனர்.

Geetha Sambasivam

unread,
Nov 19, 2014, 11:53:14 PM11/19/14
to மின்தமிழ்
இணைய இணைப்புச் சரியாக இல்லை! :(

2014-11-20 10:22 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
 

தேமொழி

unread,
Nov 20, 2014, 12:00:26 AM11/20/14
to mint...@googlegroups.com
திரு நீலகண்டன் சொல்லும் தகவல்

///நான் 1950 முதல் 1969 வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்திருக்கிறேன் .  அந்த காலகட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள எல்லா பள்ளிகளும் ஹிதி வகுப்பு இருந்தது . 9ம் வகுப்பு வரை தமிழ் ஆங்கிலம் சிறப்பு த்தமிழ் என்று முன்று கட்டாயமாக இருந்தது.சிறப்பு தமிழுக்கு பதில் ஹிந்தி இல்லை சமிச்க்ரிதம் எடுத்து படிக்கலாம் . ///

திரு. அரிசோனன் காட்டும் படத்தில் மூன்றாவது மொழி என்பது விருப்பப்பாடத்தில் சென்றுவிட்டதும் (ஹிந்தி கட்டாயமாக்கப் படவில்லை) என்பதும் பொருந்தி வருகிறது. ஆனால் பள்ளியில் ஹிந்தி இருந்திருகிறது ...விரும்பியவர்கள் படித்திருக்கிறார்கள். 

என் பெற்றோர் படித்தது சிறப்புத்தமிழ்ப் பாடமே.   தேர்வில் மதிப்பெண்ணே போடமாட்டார்களாம்.  தவறுக்கு மதிப்பெண் போடாமல் விட்டாலும் பரவாயில்லை, ஆனால் தவறுக்குத் தண்டனையாக மதிப்பெண்ணும் குறைத்து விடுவார்களாம்.  

..... தேமொழி

Oru Arizonan

unread,
Nov 20, 2014, 12:00:49 AM11/20/14
to mint...@googlegroups.com
தேமொழி,

//உங்களிடம் ஒரு வேண்டுகோள்.   வரலாற்றுக் குறிப்பாக கொடுக்கப்படும் தகவல்களை அந்தக் கோணத்திலேயே பார்க்கவும்.//

வரலாற்றை நான் என்றும் வரலாறாகத்தான் பார்ப்பேன்.  செத்த பாம்பை திரும்பத்திரும்ப அடிப்பதும், குறிப்பிட்ட குமுகத்தைத் தேவை இன்றி பழிப்பதும் (அதற்குப் பெயர் எதுவாக இருந்தாலும்) நான் விலக்கவே எண்ணுகிறேன். எனவே அக்கருத்தைப்  பதிவும் செய்வேன்.  உங்கள் கோணத்தில் என்னைப் பார்க்கச் சொல்லும் தாங்கள் என் கோணத்திலும் .பார்க்க சிறிது முயற்சி செய்ய வேண்டும்.

//நாம் விரும்பத் தகாத வகையில் வராற்றில் உண்மைத் தகவலும் இருக்கும்/இருக்கலாம்.  அதற்காக சொல்லுபரை குற்றம் சாட்டுவது kill the messenger போன்ற செயல்.//

ஒரு மொழியைப் பல குமுகங்கள் கற்கும் வாய்ப்பு இருக்கிறது.  அதில் ஒரு குமுகத்தைப்பற்றி மட்டுமே எழுதுவது விரும்பத்தகாததே.  

 தேவை இன்றி ஒரு குமுகத்தைப பற்றி எழுதுவதைத் தவிர்க்கும்படிதான்  பரிந்துரைத்தேன். அவ்வளவே.  If you take it as "kill the messenger", you are very sensitve, and, you need to avaid such discussions.  I never take any of your alleged historic statements in that sense.

//ஜாதியை எதிர்ப்பவர்கள், மதத்தை எதிர்ப்பவர்கள் அந்தக்குழுவின்  ஆதிக்கப் பிரிவு பிறரை  அடக்கி வந்ததை/வருவதை எதிர்ப்பவர்கள்.  அவர்கள்  எந்தப் பிரிவினராக இருந்தாலும்  சரி.  எனக்குத் தெரிந்த தகவலை நான் பகிர்ந்து கொள்கிறேன்.  இதில் எனக்கு பொய்யுரைத்து என்ன ஆகப்போகிறது.// 

 எத்தனையோ சமயங்கள், சாதிகள் ஆதிக்கம் செலுத்தியது வரலாறாக இருக்கும்போது ஒரு சமயத்தையும், ஒரு சாதியையும், ஒரு மொழியையும் மட்டும் குறை கூறுவதை தவிர்க்க வென்றும் என்றுதான் நான் எழுதுகிறேன். மற்ற சாதிக்காரர்களும் இந்தி கற்றிருக்கிறார்கள், இந்தி பயிற்றுவித்திருக்கிறார்கள். ஐயர்கள் மட்டுமே இந்தி பயின்றார்கள் என்பது பொய்யே!  இதை எத்தனை தடவை வேண்டுமாலும் சொல்வேன்.  தாங்கள்தான் தக்க சான்று இல்லாமல் ஒரு தகவலை ஏன் முன்வைக்கிறீர்கள் என்று உரைக்கவேண்டும்.

//நான் வளரும் வயதில் என் பெற்றோர்கள் அவர்கள் வளர்ந்த காலத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டதை, என்  நினைவில் இருந்தவரை நானும் அது தொடர்பான உரையாடல் வரும்பொழுது பகிர்ந்து கொள்கிறேன்.  என் பெற்றோர் சொன்னதை நான் நம்புகிறேன். //

உங்கள் பெற்றோர்கள் சொன்ன கருத்துக்களை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும், எத்தனை தடவை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.   அதை நீங்கள் நம்புங்கள். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.  எப்பொழுது அதை நீங்கள் இந்த இழையில் வைத்தீர்களோ, அப்போது  அதற்கு மறுமொழிகளும், எதிர்மொழிகளும் வரகூடும் என்ற உண்மையையும் தாங்கள் உணரவேண்டும் என்பதைத் தாழ்மையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒரு அரிசோனன் 


To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Nov 20, 2014, 12:35:15 AM11/20/14
to mint...@googlegroups.com
//திரு. அரிசோனன் காட்டும் படத்தில் மூன்றாவது மொழி என்பது விருப்பப்பாடத்தில் சென்றுவிட்டதும் (ஹிந்தி கட்டாயமாக்கப் படவில்லை) என்பதும் பொருந்தி வருகிறது. ஆனால் பள்ளியில் ஹிந்தி இருந்திருகிறது ...விரும்பியவர்கள் படித்திருக்கிறார்கள்.//

நான் படித்தபோது இந்தி விருப்பப் பாடம் அல்ல, தேமொழி!  கட்டாயப் பாடம்! It was called third language!  ஒவ்வொரு மாணவனும்/மாணவியும் இந்தி வகுப்புக்குச் சென்றே ஆக வேண்டும். விரும்பியவர்கள் படித்திருக்கிறார்கள் என்பது சரியல்ல. தேர்வு எழுதியே ஆக வேண்டும்.  குறித்த பட்ச மதிப்பெண் பூஜ்யம்.

 எப்படி அதை நீங்கள் கட்டாயப் பாடம் இல்லை என்கிறீர்கள்?  That subject was more or less equivalent to auditing -- more than auditing since one had to take an exam thoush the pass mark was zero!  இந்தித் தேர்வு எழுதாவிட்டால் பெயில்தான். 

ஏன் நீங்கள் இந்தக் குழப்பமில்லாத உண்மையைப் பார்க்க மறுக்கிறீர்கள், தாங்கள் விரும்பியதை மட்டுமே பார்க்கிறீர்கள் என்ற உங்கள் கோணத்தையாவது  தெளிவுபடுத்தலாமே!

மீண்டும், கடைசியாக விளக்குகிறேன்.   Pulic Examination என்பதால் தமிழ் மீடியம் பள்ளிகளில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது.  ஆங்கில மீடியப் பள்ளிகள் ஒரு சிலவே.  அதைப்பற்றி நான் இங்கு சொல்லவில்லை.

1.  முதல் மொழி ஒன்று:  தமிழ். இதைப் பொதுத் தமிழ் என்பார்கள். அனைவரும் படிக்க வேண்டும்.  தேர்வில் குறைந்தது 40 மதிப்பெண்கள் வாங்க வேண்டும்.  
2.  முதல் மொழி இரண்டு:  சிறப்புத் தமிழ் அல்லது வடமொழி (சில பள்ளிகளில் இந்தி இருந்திருக்கலாம், எனக்குத் தெரியாது)  இதுதான் நீங்கள் குறிப்பிட்ட விருப்பப் பாடம்.  அனைவரும் ஏதாவது ஒன்றைப் படிக்கவேண்டும்.  40 மதிப்பெண்கள் வாங்கவேண்டும்.
3.  இரண்டாம் மொழி: ஆங்கிலம்.  அனைவரும் படிக்க வேண்டும்.  தேர்வில் குறைந்தது 40 மதிப்பெண்கள் வாங்க வேண்டும். 
4.  மூன்றாம் மொழி:  இந்தி:  அனைவரும் படிக்க வேண்டும்.  தேர்வு எழுதத்தான் வேண்டும்.  எழுதாவிட்டால் பெயில்.  தேர்வில் 0 மதிப்பெண் வாங்கினாலும் சரி.  பெயில் இல்லை.  இதன் மதிப்பெண் மொத்த மதிப்பெண்களுடன் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.

இது காமராஜர் காலத்தில், நான் உயர்நிலைப்பள்ளியில் படித்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பாடத்திட்டம். 

இதற்குமேல் விளக்க எனக்குத் திராணி இல்லை.  இதைப்  புரிந்துகொள்ளாமல் மாறாக எழுதினால், நீங்கள் தமிழில் பெயில்.  அவ்வளவுதான், தேமொழி!

ஒரு அரிசோனன் 



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

S NEELAKANTAN

unread,
Nov 20, 2014, 12:49:20 AM11/20/14
to mintamil
அரிசோனன் சொன்னதை நான் வழிமொழிகிறேன் . ஹிந்தி பள்ளிகளில் கட்டாய பாடமாக இருந்தது இருந்தது . ஆனால்  பாஸ்  மார்க்    வாங்க  வேண்டும் என்ற  கட்டாயம் இல்லை . 0 மார்க் வாங்கினாலும் பாஸ் செய்துவிடுவார்கள் . SSLC சர்டிபிகேட்டில் 0 வாங்கினாலும் கணக்கில்  எடுத்துக்கொ ள்பதில்லை. பெரும்பாலான மணவர்கள் தங்களுடைய சர்டிபிகேட்டில் 0 மார்க்  வருவதை விரும்ப மாட்டார்கள்  40 மார்க் வந்தால் போதும்   என்று கொஞ்சம்  படித்து தேர்வு எழ்துவார்கள் . 



S NEELAKANTAN

unread,
Nov 20, 2014, 1:09:43 AM11/20/14
to mintamil
 நான் கல்லூரியில் படித்தகாலத்தில்  முதல் மொழி ஆங்கிலம் இரண்டாவது மொழி தமிழ / ஹிந்தி /ஸமிச்க்ரிதம் எதாவது ஒன்று  
கட்டாயம் 40 மதிப்பெண் எடுத்தால்  தான் பாஸ் .

நான் படித்த ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பிரபல மலையாள நடிகர் மது (மதுசூதனன் நாயர்) ஹிந்தி லக்ச்சரராக இருந்தார் . ஹிந்தி எடுத்து படித்தவர்கள் குறைந்தது 20 மாணவர்கள் இருந்தனர்.

   திருச்செம்பூரான்
--



 

தேமொழி

unread,
Nov 20, 2014, 1:10:09 AM11/20/14
to mint...@googlegroups.com
திரு. அரிசோனன்,

இழையை முதலில் இருந்து படிக்கவும். இங்கு sensitive நான் இல்லை என்பது தெரியும்..

எனக்குத் தெரிந்த தகவலை, செவிவழிச் செய்தி என்றுதான் நானும் பகிர்ந்து கொண்டேன் ...

மடலாடலில்  வந்த ஒருவரின் கருத்தில் கண்ட கருத்தைப் போலவே நானும் கேள்விப்பட்டுள்ளேன் என்று கூறியதில் என்ன தவறு.

அத்துடன் எனக்கு  தமிழில் fail போட்டதற்கும் நன்றி.  

தான் வரலாற்றில் கண்ட குறிப்பு என ஒருவர் தெரிவித்தால், அந்தக் கருத்து உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் சொன்னவர் மீது கரி பூசுவது என்பது சிறுபிள்ளைத்தனம், வயதிற்கு ஏற்ற முதிர்ச்சியற்ற மனப்பான்மை.

..... தேமொழி





On Wednesday, November 19, 2014 9:35:15 PM UTC-8, oruarizonan wrote:
//திரு. அரிசோனன் காட்டும் படத்தில் மூன்றாவது மொழி என்பது விருப்பப்பாடத்தில் சென்றுவிட்டதும் (ஹிந்தி கட்டாயமாக்கப் படவில்லை) என்பதும் பொருந்தி வருகிறது. ஆனால் பள்ளியில் ஹிந்தி இருந்திருகிறது ...விரும்பியவர்கள் படித்திருக்கிறார்கள்.//

நான் படித்தபோது இந்தி விருப்பப் பாடம் அல்ல, தேமொழி!  கட்டாயப் பாடம்! It was called third language!  ஒவ்வொரு மாணவனும்/மாணவியும் இந்தி வகுப்புக்குச் சென்றே ஆக வேண்டும். விரும்பியவர்கள் படித்திருக்கிறார்கள் என்பது சரியல்ல. தேர்வு எழுதியே ஆக வேண்டும்.  குறித்த பட்ச மதிப்பெண் பூஜ்யம்.

 எப்படி அதை நீங்கள் கட்டாயப் பாடம் இல்லை என்கிறீர்கள்?  That subject was more or less equivalent to auditing -- more than auditing since one had to take an exam thoush the pass mark was zero!  இந்தித் தேர்வு எழுதாவிட்டால் பெயில்தான். 

ஏன் நீங்கள் இந்தக் குழப்பமில்லாத உண்மையைப் பார்க்க மறுக்கிறீர்கள், தாங்கள் விரும்பியதை மட்டுமே பார்க்கிறீர்கள் என்ற உங்கள் கோணத்தையாவது  தெளிவுபடுத்தலாமே!

மீண்டும், கடைசியாக விளக்குகிறேன்.   Pulic Examination என்பதால் தமிழ் மீடியம் பள்ளிகளில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது.  ஆங்கில மீடியப் பள்ளிகள் ஒரு சிலவே.  அதைப்பற்றி நான் இங்கு சொல்லவில்லை.

1.  முதல் மொழி ஒன்று:  தமிழ். இதைப் பொதுத் தமிழ் என்பார்கள். அனைவரும் படிக்க வேண்டும்.  தேர்வில் குறைந்தது 40 மதிப்பெண்கள் வாங்க வேண்டும்.  
2.  முதல் மொழி இரண்டு:  சிறப்புத் தமிழ் அல்லது வடமொழி (சில பள்ளிகளில் இந்தி இருந்திருக்கலாம், எனக்குத் தெரியாது)  இதுதான் நீங்கள் குறிப்பிட்ட விருப்பப் பாடம்.  அனைவரும் ஏதாவது ஒன்றைப் படிக்கவேண்டும்.  40 மதிப்பெண்கள் வாங்கவேண்டும்.
3.  இரண்டாம் மொழி: ஆங்கிலம்.  அனைவரும் படிக்க வேண்டும்.  தேர்வில் குறைந்தது 40 மதிப்பெண்கள் வாங்க வேண்டும். 
4.  மூன்றாம் மொழி:  இந்தி:  அனைவரும் படிக்க வேண்டும்.  தேர்வு எழுதத்தான் வேண்டும்.  எழுதாவிட்டால் பெயில்.  தேர்வில் 0 மதிப்பெண் வாங்கினாலும் சரி.  பெயில் இல்லை.  இதன் மதிப்பெண் மொத்த மதிப்பெண்களுடன் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.

இது காமராஜர் காலத்தில், நான் உயர்நிலைப்பள்ளியில் படித்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பாடத்திட்டம். 

இதற்குமேல் விளக்க எனக்குத் திராணி இல்லை.  இதைப்  புரிந்துகொள்ளாமல் மாறாக எழுதினால், நீங்கள் தமிழில் பெயில்.  அவ்வளவுதான், தேமொழி!

ஒரு அரிசோனன் 


2014-11-19 22:00 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
திரு நீலகண்டன் சொல்லும் தகவல்

///நான் 1950 முதல் 1969 வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்திருக்கிறேன் .  அந்த காலகட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள எல்லா பள்ளிகளும் ஹிதி வகுப்பு இருந்தது . 9ம் வகுப்பு வரை தமிழ் ஆங்கிலம் சிறப்பு த்தமிழ் என்று முன்று கட்டாயமாக இருந்தது.சிறப்பு தமிழுக்கு பதில் ஹிந்தி இல்லை சமிச்க்ரிதம் எடுத்து படிக்கலாம் . ///

திரு. அரிசோனன் காட்டும் படத்தில் மூன்றாவது மொழி என்பது விருப்பப்பாடத்தில் சென்றுவிட்டதும் (ஹிந்தி கட்டாயமாக்கப் படவில்லை) என்பதும் பொருந்தி வருகிறது. ஆனால் பள்ளியில் ஹிந்தி இருந்திருகிறது ...விரும்பியவர்கள் படித்திருக்கிறார்கள். 

என் பெற்றோர் படித்தது சிறப்புத்தமிழ்ப் பாடமே.   தேர்வில் மதிப்பெண்ணே போடமாட்டார்களாம்.  தவறுக்கு மதிப்பெண் போடாமல் விட்டாலும் பரவாயில்லை, ஆனால் தவறுக்குத் தண்டனையாக மதிப்பெண்ணும் குறைத்து விடுவார்களாம்.  

..... தேமொழி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Nov 20, 2014, 1:53:03 AM11/20/14
to மின்தமிழ்
இழையில் ஒளி பவவுதற்குப் பதிலாக நெருப்புப் பற்றி எரிகிறதே.
தேமொழி அவர்கள் இழையில் கண்ட கருதுக்கான வரலாற்றுத் தகவலை வரிசைப்படுத்தினார். திரு.வீரபாண்டியன் அவர்களின் கருத்து ஆவண மற்ற சான்றுகள் அடிப்படையில் எழுப்பப்பட்டதல்ல.  அவர் ஒப்புமை செய்ய எடுத்துக்கொண்ட பெதியாரின் இந்தி எதிர்ப்பும் 1965-ல் நடந்த மாணவர் இந்தி எதிப்பும் ஒன்றல்ல

பெரியார் ராஜாஜியின் குலக் கல்வித்திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்திய பள்ளிப்பாடத் திட்டத்தில் இந்தியையும் எதிர்த்தார்.  ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அரசாளுமையில் இருந்த ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கலைந்தவுடன் குலக்கல்வித்திட்டம் அகன்றது.  அத்தோடு இந்தி எதிப்பும் முடிவுக்கு வந்தது.  அந்தக் காலகட்டத்தில் அரசியல் சாசனம் என்ற ஒன்று இல்லாத நிலையில் இந்தி தன்னைத் தற்காத்துக்கொள்ள வடபுலத்தில் தீவிரமாகப் போரிட்டுக்கொண்டிருந்தது

1965-ல் அரசியல் சாசனத்தில் தலைவரின் ஒரு ஓட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சரத்து 1965 ஜனவர் 26 க்குப்பின் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தி தேசிய மொழியாகவும் ஆட்சிமொழியாகவும் ஆகும் என்ற இந்தி திணிப்பையே தி.மு.க வும் மாணவர்களும் எதிர்த்தனர்.

நான் குறிப்பிட்டதுபோல இந்த அட்சிமொழி அச்சம் தவிர தமிழ்நாட்டில் இந்தி லள்ளிகள் கல்லூரிகள் திரப்பட அரங்குகள் வானொலி என்று எல்லா வழிகளிலும் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தது

ஒரு அரிசோனன் ஐயா, அண்ணாமைப் பல்கலைக்கழகத்தில் தி.மு.க ஆதரவு மாணவர்களை அண்ணா தூண்டிவிடவில்லை.  

அவர்களை யார் தூண்டிவிட்டார் என்பது அவருக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது

நாம் வீரபாண்டியன் அவர்களிடம் அவர் கருத்தைக் கேட்டு அதன்பின் வாதத்தைத் தொடர்வது சூட்டைத் தணிக்கும் என்பது என் காத்துட்டுக் கருத்து

பாசி

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

K. Loganathan

unread,
Nov 20, 2014, 2:03:30 AM11/20/14
to mint...@googlegroups.com
  முனைவர் வீரபாண்டியன் பாரவைக்கு இதனை அனுப்பி வைக்கின்றேன்

உலகன்

Oru Arizonan

unread,
Nov 20, 2014, 2:13:01 AM11/20/14
to mint...@googlegroups.com
//தான் வரலாற்றில் கண்ட குறிப்பு என ஒருவர் தெரிவித்தால், அந்தக் கருத்து உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் சொன்னவர் மீது கரி பூசுவது என்பது சிறுபிள்ளைத்தனம், வயதிற்கு ஏற்ற முதிர்ச்சியற்ற மனப்பான்மை.//

Great! fantastic!  Now I rest my case!  
Oru Arizonan

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Nov 20, 2014, 2:20:59 AM11/20/14
to mint...@googlegroups.com
//ஒரு அரிசோனன் ஐயா, அண்ணாமைப் பல்கலைக்கழகத்தில் தி.மு.க ஆதரவு மாணவர்களை அண்ணா தூண்டிவிடவில்லை.//

மதிப்பிற்கு உரிய பாசி அவர்களே!

அண்ணா தூண்டினாரா இல்லையா என்பதை நான் அறியேன்.   அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் தலைவர்களை யார் தூண்டினார்கள் என்பதையும் நான் அறியேன்.  ஆனால், இந்திப் எதிர்ப்புப் போராட்டத்திற்கு எங்களைத் தூண்டிய அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர் தலைவர்கள் தி.மு.க. என்பதை அறிவேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Nov 20, 2014, 2:32:55 AM11/20/14
to mint...@googlegroups.com
மதிப்பிற்கு உரிய பாசி அவர்களே!

//அவர்களை யார் தூண்டிவிட்டார் என்பது அவருக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது//

நான் பலகலைக் கழகத்திற்குச் சென்றது பொறியியல் கல்விக்காக.  போராட்டம் நடத்த அல்ல.  எனவே, மாணவர்களை யார் போராட்டத்திற்கு இழுத்தார்கள், அவர்களின் அரசியல் சார்பு என்ன என்பதை மட்டுமே அறிவேன்.  மற்றபடி, நான் போராட்டத்தில் விருப்பமின்றி கலந்து கொண்ட பிணைக்கைதிதான். (hostage).  துப்பாக்கிச் சூடு என் மனதில் இந்தி திணிப்[பாளர்கள் மீதும், அடக்குமுறை செய்தக் காரணமாக இருந்த  அரசு மீதும் ஒரு எரிச்சலை உண்டு பண்ணியது, என் நெஞ்சில் ஆறாத குழிப்புண்ணை உண்டாக்கியது.

மற்றபடி  இந்திய அரசியலில் நான் ஈடுபாடு கொண்டதில்லை.  நானுண்டு, என் கல்வி உண்டு, என் வேலை உண்டு என்றுதான் இருந்தேன்.  ஆகவே நீங்கள் ஆச்சரியப்படுவது எனக்கு ஆச்சரியத்தை உண்டுபண்ணுகிறது.

இன்று, இளம்தலைமுறையினர் தமிழை அலட்சியம் செய்வது அந்த குழிப்புண்ணை  மீண்டும் கிளறுவதாக அமைகிறது.  

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Geetha Sambasivam

unread,
Nov 20, 2014, 2:35:39 AM11/20/14
to மின்தமிழ்
//தான் வரலாற்றில் கண்ட குறிப்பு என ஒருவர் தெரிவித்தால், அந்தக் கருத்து உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் சொன்னவர் மீது கரி பூசுவது என்பது சிறுபிள்ளைத்தனம், வயதிற்கு ஏற்ற முதிர்ச்சியற்ற மனப்பான்மை.//

வரலாற்றில்  அனைத்துத் தவறுகளுக்கும்  பிராமணர்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கின்றனர்  என்பதை இன்றே அறிந்தேன் தேமொழி!   திரும்பத் திரும்ப இதை வரலாறு என்று கூறுவதன் மூலம் வரலாறு ஆக்க முடியாது. உங்களுக்கு வேண்டுமானால் இது  வரலாறாக இருக்கலாம்.   இந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் எத்தனையோ பிராமண மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டதை நீங்கள் அறிவீர்களா? அவர்களில் பலரும் தமிழ்ப் பாடத்தோடு  ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர்.  என்  பிராமணச் சிநேகிதிகளில் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களே!   இதில் மாணவர்களின் விருப்பம் தான் முக்கியமே தவிர ஜாதி அல்ல. நீங்கள் திரும்பத் திரும்ப ஜாதியைக் கொண்டு வந்துவிட்டு அதை வரலாறு என்னும் பெயரில் சொல்லிக் கொண்டு போகிறீர்கள். 

எத்தனை பிராமணத் தமிழாசிரியர்கள் பெயர் வேண்டும் உங்களுக்கு? அவர்களில் பலரும் வடமொழியை நன்கு கற்றறிந்திருந்தாலும் தமிழுக்காகத் தொண்டு ஆற்றியவர்கள்.  இதை எந்த வரலாற்றாலு மறைக்கவோ மறுக்கவோ முடியாது.  என் தந்தையோடு இன்னொரு ஹிந்தி ஆசிரியரும் வேலை பார்த்தார் எனச் சொல்லி இருந்தேனே.  அவர் பிராமணரல்லாதவர் தான்.  இதை முன்னரே குறிப்பிட மறந்திருக்கிறேன். :))))) ஆக இது ஒருவரின் விருப்பமே தவிர ஜாதிக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். :)))))

Geetha Sambasivam

unread,
Nov 20, 2014, 2:38:10 AM11/20/14
to மின்தமிழ்
அதோடு நீங்கள் ஒரு பக்க வரலாற்றை மட்டுமே படித்திருக்கிறீர்கள். வரலாற்றின் இரண்டு பக்கங்களையும் படிக்க வேண்டும். 


இப்போது ஒரு தொழிலாளி எங்க வீட்டில் கட்டுமான வேலை செய்ய வந்திருக்கிறார்.  வட இந்தியர்.  ஆனால் தூய தமிழ் பேசுகிறார். படித்ததும் தமிழ் தான்.  ஹிந்தி வீட்டில் மட்டுமே பேசுவாராம். இப்படியும் உண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். 

தேமொழி

unread,
Nov 20, 2014, 2:48:46 AM11/20/14
to mint...@googlegroups.com

பேராசிரியரே,

என்னிடம் தினதந்தியின் 'வரலாற்றுச் சுவடு' என்ற நூல் இருக்கிறது.  நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது.

இந்த இழையின் விவாதம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள அதைப் படித்தேன்.  சுவையாக இருக்கவும் அனைவருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று அதை வருடி PDF  கோப்பாக்கினேன். 35 பக்கம், மிகப் பெரிய கோப்பு வலையேற்ற இயலவில்லை.  மீண்டும் கைபேசியில் படம் பிடித்தேன், ஒவ்வொரு பக்கமாக மெதுவாக தனி இழையில் பகிர்வேன். 

நான் படித்தவரை பெரும்பான்மையான தகவல் நீங்கள் குறிப்பிட்டதுடன் ஒத்துப் போனாலும் சில மாறுபடுகிறது.

நான் படித்தவரை சுருக்கமாக...

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழுக்கு ஆதரவாக முன் வைக்கப் படவேயில்லை.

நேரு கொடுத்த வாக்குறுதி....பிற மொழி மக்களும் ஹிந்தியை ஏற்றுக் கொள்ளும் வரை ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் ... இதைப் புறக்கணித்து இந்தியைக் கட்டயமாக்கி ஆங்கிலத்தை வெளியேற்றும் நோக்கில் சாஸ்திரி அரசு முடிவெடுத்தது.

1965 ஆண்டு குடியரசு தினத்தில் இதை நடைமுறைக்கு கொண்டுவருவதாக அறிவிக்கப் பட்டது.

இதனை எதிர்த்த தமிழக மக்கள், குறிப்பாக கழகக் கட்சியினர் அதை துக்க நாளாக அறிவிப்பதாகவும், அன்று குடியரசு தினத்தை எதிர்த்துப் போராட்டம், கறுப்புக் கொடி, சட்ட மசோதா எரிப்பு போன்றவற்றை திட்டமிட்டு அதை அறிவித்தனர்.

அதை அன்றைய காங்கிரஸ் முதல்வர் தடுத்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார், ஆனால் என்ன நடவடிக்கை என்று கூறவில்லை.

குடியரசு தினத்திற்கு முதல் நாள் திருச்சியில் நடந்த மாநாட்டில் கி. ஆ. பெ. வி யும் ராஜாஜியும், மற்றும் பல பெரிய தலைவர்களும் போராட்டத்தை ஆதரித்தனர்.  குறிப்பாக ராஜாஜி ஆங்கிலம் நீக்க்கப்படும் என்பதை மிக வன்மையாகக் கண்டித்தார்.

குடியரசு தினத்திற்கு முதல்நாள் இரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து கழகத் தலைவர்களும் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்கள். தலைவர்கள் இன்றி போராட்டம் வலுவிழக்கும் என்ற அரசின் திட்டம் தோல்வியடைந்தது.

மாணவர்கள் போராட்டத்தைக் கையிலெடுத்து தொடர்ந்தார்கள். அவர்களை வழிபடுத்த ஒரு தலைவருமே இல்லை.

தொடர்ந்து பதினெட்டு நாட்கள் நடந்தது வன்முறையான போராட்டம்.பல உயிரிழப்புகள், பொது சொத்து அழிப்புகள், தீக்குளித்தல் என தமிழகம் வரலாறு காணாத வன்முறையில் இறங்கியது.

மாணவர்கள் போராடுதல், போலீஸ் மிரட்டினால் கல்லெறிதல், பின்வாங்கி மீண்டும் திரும்பி போராடுதல், துப்பாக்கி சூடு என்றால் களைந்து ஓடிவிடுதல் என்று தொடர்ந்தார்கள்.

மதுரை போராட்டத்தில் காங்கிரசார் ஒருவர் கத்தி வெட்டி போராட்டக்காரர் ஒருவரைத்  தாக்கவும் மாணவர்கள் ஆத்திரமடைந்தார்கள்.

பொது சொத்துகள் அழிக்கப்பட்டன.  மாணவர்களின் குறி மத்திய அரசு அலுவங்களை, அஞ்சல் நிலையங்களை, தொடர்வண்டி நிலையங்களைத் தாக்குதல், போலீசிடம் கோபம் கொண்டால் அவர்களையும் காவல் நிலையங்களையும் தாக்குதல்.

எங்கெங்கு ஹிந்தி எழுத்தில் அறிவிப்புப் பலகைகள் இருக்கிறதோ அவற்றை அழித்தல்.  மாணவர் தலைவர்களை சிறை செய்தால் போராடி  அவர்களை மீட்டல் என்ற குறிக்கோளில் நகர்ந்திருக்கிறது.

இரயில் பஸ் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் அவற்றை நாசம் செய்தனர்.

இராணுவம் அழைக்கப் பட்ட பின்னர் அதிக ஆத்திரம் அடைந்து போலீஸ்காரர்களையும் கொல்லும்  வன்முறைக்குச் சென்றார்கள்.

இடையில் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து எதிர்ப்பைக் காண்பித்தார்கள். பிரதமர் சாஸ்திரியோ, முதல்வர் பக்தவச்சலமோ அசைந்து கொடுக்கவில்லை.

மீண்டும் நேருவின் உறுதி மொழி நடைமுறைக்கு வரும் என்ற சாஸ்திரியின் வாக்குறுதியில் போராட்டம் கைவிடப்பட்டது.  ஆனால் ஆங்கிலம் பொதுமொழியாகத் தொடரும் என்ற அறிவிப்பு சட்டமாக்கப் படவில்லை.

இந்தியாவில் இருக்கும் பிற மொழி பேசுபவர்களும் தமிழகத்திற்கு இதற்காக  நன்றிக் கடன் பட்டுள்ளார்கள். அவர்கள் போராட்டத்தினால்தான் ஆங்கிலம் இந்தியாவில் நிலைத்தது, அதனால் இன்று உலக அரங்கில் போட்டி போட முடிகிறது.

இந்தி ஆர்வலர்கள் இந்தத் தகவலை முன்வைத்து இதுவரை நான் அறிந்ததில்லை.

சில இடங்களில் இந்தி திரைப்படம் நடந்த தியட்டர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.

...... தேமொழி

தேமொழி

unread,
Nov 20, 2014, 2:59:42 AM11/20/14
to mint...@googlegroups.com
நல்லது கீதா...

https://groups.google.com/d/msg/mintamil/dkJgBxJJEks/6kKRXRrCgCUJ  <<< இழையைப் படிக்கவும்.  நான் முதலில் துவக்கவில்லை  என்பது தெரியும்.

எழுத்தாளர் பா. செயப்பிரகாசம்

அவர்களின் நேர்காணலில் நான்காவது கேள்விக்கு அவர் அளித்த பதிலைப் படிக்கவும்

அதற்கு அரிசோனன் எதிர்ப்பு சொன்னார் >>> https://groups.google.com/d/msg/mintamil/dkJgBxJJEks/ivBSfcaKpMIJ

நான் இல்லை நானும் அதைக் கேள்விப்பட்டிருகிறேன் என்றேன் .  இவ்வாறு சொன்னதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

..... தேமொழி

Oru Arizonan

unread,
Nov 20, 2014, 3:27:59 AM11/20/14
to mint...@googlegroups.com
உயர்திரு கீதா அம்மா அவர்களே,

//இவ்வாறு சொன்னதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. //

தூங்குபவர்களை எழுப்பலாம் அம்மா.  கண்ணை மூடிக்கொண்டு இருப்பவர்களை எழுப்ப இயலாது. விட்டுவிடுங்கள்.

சிங்கங்கள், புலிகள், கரடிகள், பசுக்கள் தண்ணீரைப் பருகுகின்றன.  பசுக்கள் தண்ணீர் பருகுகின்றன என்றால் அது உண்மை..

 பசுக்கள் மட்டுமே தண்ணீர் பருகுகின்றன என்றால் அது உண்மை ஆகுமா? 

 பார், பசு தண்ணீர் பருகுகிறது, நீ பொய் என்கிறாயே என்றால், அது என்ன வாதம் ?  "மட்டுமே" என்ற சொல்தானே அதைப் பொய் ஆக்குகிறது என்றுதான் நாம் சொல்ல இயலும்.
 
 யார் கடைசிச் சொல்லைச் சொல்லவேண்டும் என்ற நிலையில்தான் இங்கு வாதம் நடந்து நீண்டு கொண்டிருக்கிறது.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Nov 20, 2014, 8:18:04 AM11/20/14
to mint...@googlegroups.com


On Wednesday, November 19, 2014 11:38:10 PM UTC-8, myself wrote:

இப்போது ஒரு தொழிலாளி எங்க வீட்டில் கட்டுமான வேலை செய்ய வந்திருக்கிறார்.  வட இந்தியர்.  ஆனால் தூய தமிழ் பேசுகிறார். படித்ததும் தமிழ் தான்.  ஹிந்தி வீட்டில் மட்டுமே பேசுவாராம். இப்படியும் உண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். 


கோவையில் பிறந்து வளர்ந்த பஞ்சாப் சிங்குகள், ராஜஸ்தானி மார்வாடிகள், ... பலர் எங்களோடு பேசும்போது அழகாக
கொங்குத்தமிழில் பேசுவார்கள். புஷ்பவனம் குப்புசாமி மனைவி அனிதா அப்படிக் கோவையில் வளர்ந்தவர்தான்.
டிஎன்ஃஎப்  மீட்டிங்குக்கு ஹூஸ்டனுக்கு 2 ஆண்டு முன்னர் அழைத்தோம். அப்போது எங்களைப் போலவே
பேசினார். தங்கள் காதல்பற்றியும் சொன்னார். அருட்செல்வர் நா. ம.  பல ஆண்டுகள் ஆதரித்த கிரிதாரிபிரசாத்
தமிழில் பல ஆயிரம் பாடல்களை மனப்பாடமாக அறிந்தவர். அவை மச்சினன் ஜவஹர் கார் பட்டறை வைத்திருந்தார்.
வெளியே சொன்னால்தான் தெரியும் அவர்கள் வட நாட்டவர் என்று.

நா. கணேசன்

Innamburan S.Soundararajan

unread,
Nov 20, 2014, 9:49:26 AM11/20/14
to mintamil
முத்துப்பட்டினம் செல்லும் பொது

~ ஒ1 நம்ம பேட்டை.









இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com



2014-11-20 9:47 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
> உயர்திரு கீதா அம்மா அவர்களே,
>
> காரைக்குடியில் மிகவும் பிரபலமான, தனியாக இந்தி வகுப்புகள் நடத்திய
> கல்யாணசுந்தரம் என்னும் எனது இந்தி ஆசிரியர் ஒரு பிராமணர் அல்லர். அவர் ஒரு
> சைவர். அவரிடம் இந்தி பயின்றவர்களில் முக்கால் வாசிக்கு மேற்பட்டவர்கள்
> பிராமணர்கள் அல்லர்.
>
> நான் இந்தி படிக்க முத்துப்பட்டினம் செல்லும் பொது என்னுடன் ஒரு அக்கா
> வருவார்கள்.
>
> சாண் பிள்ளையானாலும் நான் ஆண் பிள்ளை அல்லவா. ஆகவே, தனியாக வெளியில் தங்கள்
> பெண்ணை அனுப்ப விரும்பாத அந்த அக்காவின் பெற்றோர்கள் என்னுடன் இந்தி பயில
> அனுப்பி வைப்பார்கள். அந்த அக்காவும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் அல்லர்.
>
> இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரும்வரை யாரும் இந்தியைப் பற்றி கவலை
> எடுத்துக்கொள்ளவில்லை என்றே கூறலாம். இந்தி ஆசிரியையான என் அத்தை மகளை, அவளது
> தங்கைகள் இந்தி அரக்கி என்று (தினத்தந்தி சிரிப்புப் படத்தைப் பார்த்ததனால்)
> அழைத்துக் கிண்டல் செய்வார்கள். நான் தனியாக இந்தி படித்ததனால் என்னைச்
> "சின்ன இந்தி அரக்கன்" என்றும் கேலி செய்வார்கள்.
>
> ஒரு அரிசோனன்
>
> 2014-11-19 20:53 GMT-07:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
>
>> என் தந்தையார் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக
>> இருந்தவரே. 1962 ஆம் வருடம் வரைக்கும் பள்ளி இறுதித் தேர்வு எழுதும் மாணவ
>> மணிகளின் ஹிந்தித் தேர்வுத் தாள்கள் திருத்துவதற்காக அப்பாவுக்கு வீட்டுக்கே
>> வரும். வந்திருக்கின்றன. ஆகையால் 1962 ஆம் வருடம் வரைக்கும் பள்ளி இறுதித்
>> தேர்விலும் ஹிந்தி என்ற ஒரு மொழித் தேர்வு இருந்தது. திரு அரிசோனன் அவர்கள் 61
>> ஆம் வருடம் பள்ளி இறுதித் தேர்வு எழுதி இருக்கிறார் என எண்ணுகிறேன். ஆகையால்
>> அவரும் கட்டாயமாய் ஹிந்தி கற்றிருப்பார். என் அப்பாவிடம் ஹிந்தி கற்ற
>> மாணவர்களில் பெரும்பாலோர் பிராமணர் அல்லாதவர்களே. அவர்களில் பலரும் ஹிந்தி
>> எதிர்ப்புப் போராட்டத்தின் போது எங்களுக்குக் காவலாய் இருந்திருக்கின்றனர்.
>>
>> ஹிந்திப் போராட்டங்கள் நடந்த போது ராஜாஜி தூண்டியதாக எனக்கு நினைவில் இல்லை.
>> அப்போது நான் பள்ளி மாணவி தான். எங்கள் பள்ளியிலும் ஹிந்தி எதிர்ப்புப்
>> போராட்டம் நடக்கத் தான் செய்தது. ராஜாஜி ஹிந்தி மொழியை ஆதரித்ததாகத் தான்
>> நினைவில் இருக்கிறது.
>>
>>
>>
>> //என் கேள்வி 1965-ல் தொடங்கிய இந்தி எதிர்ப்பில் மாணவர்கள் மட்டும் (தி.மு.க
>> வின் இந்தி எதிர்ப்பில் கலந்துகொள்ளாமல்) கி.ஆ.பெ இலக்குவனார் தலைமையில்
>> நடத்திய போராட்டத்தில் ராஜாஜியும் அண்ணாவும் தூண்டினார்கள் என்பதற்கான ஆதாரம்
>> கேட்டால் கிடைக்கமாட்டேன் என்கிறதே.//
>>
>> பேராசிரியர் சொல்லும் இந்தத் தகவல் முற்றிலும் புதியது. ராஜாஜி கி.ஆ.பெ.
>> இலக்குவனாரைத் தூண்டியதாகத் தெரியவில்லை. மாணவர்கள் பெருவாரியாக ஹிந்தி
>> எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். நாங்கள் குடி இருந்த மேலாவணி மூல
>> வீதி, மதுரை வீட்டில் கற்கள் நிறைய விழுந்திருக்கின்றன. என் தகப்பனார்
>> பள்ளிக்குச் செல்கையில் துணைக்குப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியரும், தச்சு
>> வேலை கற்பிக்கும் ஆசிரியரும் கூடவே செல்வார்கள். மிரட்டல் கடிதங்கள் தினம்
>> தினம் பத்தாவது வரும். நான் பள்ளிக்குச் செல்வதே பெரும்பாடாக இருக்கும். மாணவ
>> மணிகள் வழி மறித்து நாங்கள் தான் மத்திய அரசிடம் சொல்லி ஹிந்தியைக் கற்கச்
>> சொன்னோம் என்பது போல் பேசுவார்கள். இப்போது நினைத்தால் சிரிப்பாக வந்தாலும்
>> அந்த இரண்டுங்கெட்டான் வயதில் பயம் இருந்தது என்பது என்னமோ உண்மை. :))))))
>>
>>
>> பேராசிரியர் கேட்ட கேள்வியில் பெரியார் தூண்டி விட்டாரா என்பது குறித்து நான்
>> அறியேன். ஆனால் ராஜாஜி தூண்டி விட்டிருக்க முடியாது என்பது மட்டும் தெரியும்.
>> கோர்கா ரெஜிமென்ட்டின் ராணுவ வீரர்கள் வந்தே ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை
>> அடக்க நேர்ந்தது.

Oru Arizonan

unread,
Nov 20, 2014, 3:26:44 PM11/20/14
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய இன்னபூரான் அவர்களே,

தாங்கள் முத்துப்பட்டினத்தில் குடி இருந்தீர்களா? அறிய விரும்புகிறேன்.

எனது தாய்வழிக் கொள்ளுப் பாட்டனார் அங்கு வசித்தாராம்.  எனது தாயின் மூத்த அம்மான் முத்துப்பட்டினத்தில்தான் வசித்துவந்தார்.  இன்னொரு அம்மான் முத்துப்பட்டின ஊருணியில் மூழ்கி இறந்தாராம்.

உங்களுக்கும் காரைக்குடி முத்துப்பட்டினத்திற்கும் உள்ள தொடர்பை அறிய விருபுகிறேன், ஒரு காரைக்குடிக்காரன் என்ற முறையில்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

K. Loganathan

unread,
Nov 20, 2014, 7:46:20 PM11/20/14
to MEYK...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com
முனைவர் வீரபாண்டிய அவர்களே

தங்களது இந்தக் கட்டுரை வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக வளர்ந்து வருகின்றது. இந்தி எதிர்ப்பு போராட்டாத்தில் பங்கேற்றவர்கள் இன்னும்  அதிலும் நம் மிந்தமிழ் போன்ற குழுமங்களில் இருக்கின்றார்கள், தங்கள் சுய அனுபவங்களையும் விரிக்கின்றார்கள். இதுவோர் சுயச்சிந்தனை பயிற்சியாகவே வளர்ந்து வருகின்றது. இங்கும் பிராமணர் பிராமணர் அல்லாதார் வேறுபாடுகளும் வந்துவிட்டன.

தமிழ் நாட்டில் எந்த பிரச்சினையை அலசினாலும் அது எப்படியாவது  பிராமணர்-அல்லாதார் போராட்டமாகவே கீழிறங்கி விடுகின்றது.

எனினும் அன்பர்கள் இந்தக் கட்டுரையை படித்து இன்னும் ஆழ சிந்திக்க ஏனைய குழுமங்கட்கும் அனுப்பி வைக்கின்றேன்

உலகன்

2014-11-16 12:12 GMT+08:00 veera pandian pann...@yahoo.co.in [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com>:
 

1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடு,  

                  இன்று  எப்படி இருக்கிறது?                           


                                    இந்தி எதிர்ப்புப் போராட்டம்:
                           1938‍க்கும்  1965க்கும்   என்ன வேறுபாடு?

ஓரு போராட்டம் எந்த அளவுக்கு சமூகப் பொறுப்புடனும், திட்டமிடலுடனும் மக்கள் பங்கேற்புடனும் பொதுச் சொத்துக்களுக்கு சேத‌மின்றியும், வன்முறைகளுக்கு பெருமளவில் இடமின்றியும் நடந்து, தனது கோரிக்கையையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு, பெரியார் தலைமையில் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் சான்றாக இருக்கிறது. அந்த காலக் கட்டத்தில் இந்தியாவில் இது போன்ற போராட்டம் வேறு எங்கும் நடந்ததாகத் தெரியவில்லை. 'சத்தியாகிரகம்' என்று சொல்லி, போராட்டத்தைத் தொடங்கி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, வன்முறைகளுக்கு இடம் அளித்து, பள்ளிகளில் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களையும் 'வேலை நிறுத்தம்' என்ற 'சமூக நோய்க்கு' உள்ளாக்கியவர் காந்தி என்று 1944க்கு முன்னேயே 'குடி அரசு' கட்டுரைகளில் பெரியார் சுட்டிக் காட்டியிருக்கிறார். காந்தி சத்தியாககிரகம் தொடங்கும் முன், தாகூரும், இது போன்ற விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறார். மக்கள் பங்கேற்புடன் ஒரு போராட்டம் 'காலித்தனங்கள்' இன்றி நடத்த முடியும் என்பதை பெரியார் நிரூபித்தது தாகூரின் பார்வைக்குப் போனதாகத் தெரியவில்லை. இந்தியாவிலும் சமூக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகத் தெரியவில்லை.

1944க்கு முன்  பெரியார் தலைமையில் மக்கள் பங்கேற்புடன் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965‍இல் அண்ணாதுரையும், ராஜாஜியும் தூண்டி விட்டு, பின் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த, உரிய தலைமையின்றி மாணவர்கள் முன்னெடுத்த‌ இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிடுவது, நிகழ்கால தமிழ்நாட்டின் மோசமானப் போக்குகள் எப்போது ‘பலம்’ பெற்றன? என்ற கேள்விக்கான விடையைத் தரும்.

1944 -இல் திராவிடர் கழகம் உருவானதற்கு முன், பெரியாரின் சமூக வாழ்வில் , அவர் சந்தித்த கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் அறிவுபூர்வ தளத்தில் நடைபெற்றதையும்,  திராவிடர் கழகம் உருவான பின் அவருக்கும் அண்ணாதுரைக்கும் இடையில் உருவான கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் உணர்வுபூர்வ தளத்தில் நடைபெற்றதையும், அதன் தொடர்ச்சியாகவே,பிற்காலத்தில் பாரதிதாசனுக்கும் அண்ணாதுரைக்கும், பாரதிதாசனுக்கும் ஜீவானந்தத்திற்கும் இடையே ‘மிகவும் மோசமான’ உணர்வுபூர்வ விவாதங்கள் நடைபெற்றதையும், ‘ஆக சமூகத்தில் 'உச்சத்தில்' இருக்கும் நல்லவைகளும், கெட்டவைகளும் அந்த சமூக வரலாற்றில் ‘விதை கொண்டு, உரமூட்டப்பட்டு’ வளராமல், 'திடீரென' வந்து விடாது’ என்பதையும் முந்தையப் பதிவுகளில் பார்த்தோம்.

1949 முதல் 1967 வரை பெரியார் தி.மு.க தலைவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையிலும் இழிவாகப் பொதுக்கூட்டங்களில் பேசிய ஒலிநாடாக்களும், இதழ்களில் வந்த எழுத்துக்களும், அதே போல் தி.மு.க தலைவர் 'கலைஞர்' கருணாநிதி பெரியாரைப் பற்றியும், காமராசரைப் பற்றியும் தனிப்பட்ட முறையிலும் இழிவாகப் பொதுக்கூட்டங்களில் பேசிய ஒலிநாடாக்களும்,இதழ்களில் வந்த எழுத்துக்களும், சாட்சிகளாக இருக்கின்றன. இப்படி பேசிக் கொண்டவர்கள் 1967‍க்குப் பின் 'சமரசமாகி' ஒருவரையொருவர் புகழ்ந்து பொதுக்கூட்டங்களில் பேசிய ஒலிநாடாக்களும், இதழ்களில் வந்த எழுத்துக்களும்,சாட்சிகளாக இருக்கின்றன. மேற்குறிப்பிட்ட கால இடைவெளிகளில், அந்த உணர்வு பூர்வ பேச்சுக்களினாலும், எழுத்துக்களினாலும், அந்தந்த கட்சிகளின் அடிமட்ட தொண்டர்கள் ஒருவரையொருவர் (ஒரே குடும்பத்திலும் கூட) எதிரிகளாக பாவித்து, சில சமயங்களில் அவை வன்முறைகளாகவும் வெடிக்கும் அளவுக்கு உணர்வுபூர்வ வெறுப்பு/எதிர்ப்பு நோயில் தமிழ்நாட்டில் கணிசமானவர்கள் சிக்கியதும், அதில் 'தீவிரமான' குப்பன்களும், சுப்பன்களும் தமது வாழ்வையும்,தமது குடும்பங்களின் வாழ்வையும் தொலைத்த சோகங்கள் பற்றியும் முறையான ஆய்வுகளும், வரலாற்றுப் பதிவுகளும் இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை.

1944‍க்கு முன் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிராமணர்கள் உள்ளிட்ட உயர்சாதிகளின் ஆதிக்கம் பற்றி சமூகப் பொறுப்புடன் கவலை கொண்டு, பின் தங்கிய மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற அக்கறையில், நன்கு படித்து, சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர்கள், பிராமணர்கள் உட்பட, ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள். எனவே 'பிராமணரல்லாதார் கட்சி' என்று இன்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள நீதிக் கட்சியிலும் பிராமணர்கள் இருந்தார்கள். எந்த சாதி, மீதும், மதத்தின் மீதும் வெறுப்பு, கோபம் போன்ற உணர்வுமயப் போக்குகளுக்கு இடமின்றி, ஆக்கபூர்வ வளர்ச்சிப் போக்கில் தமிழ்நாடு பயணித்தது.  1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது,  கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்தவர்களில் சத்தியமூர்த்தி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (பின்னாள் குடியரசு தலைவர்) உள்ளிட்ட‌ பிராமணர்களும் இருந்தார்கள்.( http://en.wikipedia.org/wiki/Anti-Hindi_agitation_of_1937%E2%80%9340 )

படிக்கின்ற மாணவர்கள் ஒரு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்குவது என்பது, அந்த சமூகத்தில் உள்ள கட்சிகளும், இயக்கங்களும் சமூக பொறுப்புணர்வற்ற நபர்களிடம் சிக்கியிருக்கிறதா? போராட்டங்களில் படிப்பைத் தொலைத்த மாணவர்கள் அதன் காரணமாக தமது வாழ்வில் என்னென்ன பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்? படித்த பொறுப்பான பெற்றோர்களின்/தமிழ்த் தலைவர்களின் பிள்ளைகள் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்களா? அல்லது முதல் தலைமுறையாகப் படித்த குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகள் போராட்டங்களில் ஈடுபடுகிறார்களா? போன்ற கேள்விகளுக்கு இடமில்லாத வகையில் நடந்தது 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்.

மாணவர்களைத் தூண்டாமல், கிராமங்கள் வரை, பிரச்சாரம் செய்து, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாளர்களையும், பெண்கள் உள்ளிட்டு பங்கேற்பவர்களையும் திரட்டி, தமிழ்நாட்டின் பல மூலைகளிலிருந்து போராட்டப்படை வழிநடைப் பயணம் மேற்கொண்டு, திட்டமிட்டபடி ஒரு இடத்தில் சேர்ந்து, கட்டாய இந்தியை ஒழித்து வெற்றி பெற்றது 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம். கட்டாயமின்றி விருப்பமிருந்தால், இந்தி படிக்க வாய்ப்பிருந்தது அந்த வெற்றியில்.

அந்த 'விருப்ப இந்தி' அரசுப் பள்ளிகளில் இருந்ததை ஒழித்தது தான் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம், (http://en.wikipedia.org/wiki/Anti-Hindi_agitations_of_Tamil_Nadu)  - 1967‍இல் தி.மு.க ஆட்சிக்கு வந்து, நிறைவேற்றிய சட்டசபைத் தீர்மானம் மூலம். இன்று தமிழ்/திராவிடக் கட்சித் தலைவர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் வீட்டுப் பிள்ளைகளெல்லாம் பள்ளிகளில் ஆங்கில வழியில் இந்தியும் கூடுதலாகப் படிக்க, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குடும்பப் பிள்ளைகள் விருப்பமிருந்தால்  இந்தி படிக்கும் வாய்ப்பைக் கெடுத்தது 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம். 1965 முதல் இன்று வரை நடந்து வரும் மாணவர் போராட்டங்களில் பெரும்பாலும் அரசு நடத்தும் கல்லூரிகளில் படிக்கும் சாதாரணத் தமிழர்களின் பிள்ளைகள் பங்கேற்று தமது படிப்பைக் கெடுத்து வந்துள்ளார்கள். ஆனால் வசதியானத் தமிழர்கள்,திராவிட/தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் தனியார் கல்லூரிகள் பெரும்பாலும் இத்தகைய போராட்டங்களிலிருந்து 'புத்திசாலித்தனமாக' ஒதுங்கி, அங்கு படிக்கும் மாணவர்கள் மட்டும் தமது படிப்பைக் கெடுத்துக் கொள்ளாமல் உருப்பட்டு வருகிறர்கள்.

அரசுக் கல்லூரிகளில் அரசியல் கட்சிகளின் சுயநலன்களுக்காக இப்படிப்பட்ட போராட்டங்களைத் தூண்டி, தலைமை ஏற்கும் மாணவர்களின் படிப்புகள் கெட்டாலும், அவர்களில் 'குறுக்கு புத்தி'சாலிகளே பின்னர் அந்தந்த கட்சிகளின் எம்.எல்.ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் சமூகத்தில் 'செல்வாக்கு' பெற்றார்கள். ஒழுங்காகப் படிக்காமலேயே குறுக்கு வழிகளில் பட்டங்கள் பெறும் போக்கும் திராவிடக் கட்சி ஆட்சிகளில் தான் அரங்கேறியது. இப்படிப்பட்ட போக்குகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது தான் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் சாதனை ஆகும்.

1965இல் திருச்சி தேவர் மன்றத்தில் அண்ணதுரையும், ராஜாஜியும் சேர்ந்து கூட்டம் போட்டு, 'உணர்வுபூர்வ போக்குகளைத் தூண்டியதன் விளைவாகவே, 1938 போராட்டத்தில் இருந்த‌, பொறுப்பான தலைமையும், வழிகாட்டுதலும் 1965இல் இன்றி, மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல்,வன்முறை, தீக்குளித்தல் போன்றவை திராவிட இயக்க வரலாற்றில் அறிமுகமாகின. அந்த போராட்டத்தை ஆதரிக்காத 'குற்றத்திற்காக' பெரியாரையும் அவமானப்படுத்திய சம்பவங்களும் நடந்தன. அதாவது 1944இல் அறிவுபூர்வ வாதங்களைப் பலகீனமாக்கி, உணர்வுபூர்வ வாதங்கள் தலை தூக்கிய போக்கு வளர்ந்து, 1965இல் பெரியாரை ஓரங்கட்டி, அவமானப்படுத்தும் விளைவை 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் ஏற்படுத்தியது. இது ஆழ்ந்த சமூக வரலாற்று ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய ஒரு வரலாற்று 'சிக்னல்' (historical signal) என்பது பற்றி அடுத்து பார்ப்போம்.

1944 க்கு முன் அறிவுபூர்வ போக்கில், சமூகத்தில் உள்ள குறைகளை நீக்க உருவான சமூக ஆற்றலின் பண்பானது, அக்குறைகள் தொடர்பான போராட்டங்களை முன்னெடுத்த தலைவர்களின் சமூகப் பொறுப்புடன் கூடிய தியாகங்களையும், போராட்டங்களில் ஆர்வத்துடனும், சுயலாப நட்ட நோக்கின்றியும் பங்கேற்ற மக்களின் தியாகங்களையும் பிரதிபலித்த‌து. போராட்ட வடிவங்களிலும், விளைவுகளிலும் அது எதிரொலித்ததற்கு, 1938 இந்தி  எதிர்ப்புப் போராட்டம் வரலாற்று சான்றாக உள்ளது. 1944‍இல் அண்ணதுரையின் செல்வாக்கில் 'திராவிடர் கழகம்' தோன்றி, உணர்வுபூர்வ போக்குகள் தலை தூக்கி, அதன் போக்கில் பெரியாரின் 'சமூக பலத்தையும்' வலிவழக்கச் செய்து வளர்ந்த பின் நடந்த, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வெளிப்பட்ட சமூக ஆற்றலின் பண்பும், தூண்டிய தலைவர்களின் பண்பும், மக்களைப் பின் தள்ளி மாணவர்கள் முன்னெடுத்த பண்பும்,போராட்ட வடிவங்களும், விளைவுகளும் மேற்சொன்னவைக்கு 'நேர் எதிர்' ஆக இருந்ததற்கு 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரலாற்று சான்றாக உள்ளது. இயற்பியல்(Physics)  நோக்கில், இது வரலாற்றுப் போக்கு சுழற்சியில் 'எதிர்க்கட்டம்' (opposite phase) என்று, உணர்வு பூர்வ‌ வளர்ச்சிப் போக்கு உச்சமடைந்து (Maximum point), வீழ்ச்சித் தொடங்கிய  அடையாளம் ஆகும். அதன்பின் தொடங்கிய வீழ்ச்சிக் கட்டத்தில், தமிழ்நாட்டில் தலைவர்களிடமிருந்த லாப நட்டக் கணக்கு பண்பு கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் வரை வேகமாகப் பரவியது. ( Refer post Dt. September 17, 2014-‘ தமிழ்நாடு 'கள்வர் நாடு' என்ற திசையில் பயணிக்கிறதா?’ ) இன்று கட்சிகளுக்குச் சம்பந்தமில்லாமல், தினமும் ஆங்காங்கே மக்கள், குறிப்பாக பெண்கள், மாணவர்களை, தங்கள் பிள்ளைகளை அனுமதிக்காமல், தாங்களே போராடி வருகிறார்கள். அது அந்த 'உணர்வு பூர்வ' கட்சிகள் மரணத்தை நெருங்கி விட்டதன் அறிகுறியாகும். தமிழ்நாட்டில் ' குறைந்த அரசியல் காற்றழுத்தத் தாழ்வு மண்டிலம்' உருவாகத் தொடங்கியுள்ளதும் அதன் அறிகுறியாகும். இந்த மாற்ற காலக் கட்டத்தில் லாப நட்டக் கணக்கு பண்பில்லாதவர்கள் உணர்வு பூர்வ போக்கிற்கு எதிராக எவ்வளவு வலிமையாக செயல்படுகிறார்களோ, அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வீச இருக்கும் 'அரசியல் புயல்' குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்தி, சமுக வளர்ச்சிக்கான 'சமூக ஆற்றல்' எனும் 'மழை' மொழிந்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காப்பாற்ற வாய்ப்பிருக்கிறது.

1944‍க்கு முன் கல்வியில், அரசுப் பணிகளிலிருந்த பிராமண ஆதிக்கத்தை எதிர்த்த நீதிக் கட்சியில் பிராமணர்களும் இருந்தார்கள். 'பார்ப்பான்' என்று பேச்சுகளில், எழுத்துகளில் பிராமணர்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் போக்கு அப்போது இல்லை. அதற்குப் பின் தான் 'பார்ப்பான்''துலுக்கன்' என்று சாதி ரீதியிலும், மத ரீதியிலும் அவரவருக்கு பிடிக்காத சாதி, மதத்தினரை இழிவு படுத்தும் போக்கு பொது அரங்கில் அறிமுகமானது. அந்த போக்கில் அடிமட்டத் தொண்டர்கள் சாதி/மத அடிப்படைகளில் தமக்குள் பிரிவினைக்குள்ளாகி, ஒருவரையொருவர் வெறுப்பதும், சில சமயம் அவை வன்முறையாக வெடிப்பதும் அறிமுகமானது. தாம் எதிர்க்கும் சாதியில்/மதத்தில் இருந்த உண்மையானவர்களும், நேர்மையானவர்களும் அந்த உணர்வு போதையில் சிக்கியவர்களின் கண்களுக்கு இன்று வரை தெரியாமல் போய்க் கொண்டிருப்பது ஒரு சமூகக் கொடுமையாகும். பா.ஜ.க அப்துல் கலாமை குடியரசு தலைவராக ஆக்கிய பின்னும், தவறு புரிந்த மூஸ்லீம் பயங்கரவாதிகளைத் தனிமைப்படுத்தி கண்டிக்காமல், உணர்வுபூர்வமாக 'துலுக்கன்கள் ' என்று இந்துத்வா ஆதரவாளர்களில் ‘சிலர்’ இன்றும் பேசுவது, எழுதுவது உண்மையா? பொய்யா?

ஒருவரையொருவர் உணர்வுபூர்வமாக இழிவுபடுத்தி எதிர்த்துக் கொண்டிருந்த பெரியாரும் தி.மு.க தலைவர்களும் 1967 ஆட்சிமாற்றத்திற்குப் பின் சமரசமானார்கள். அந்த சமரசத்தில் பெரியாரும், அண்ணாதுரையும் தத்தம் சுயநலனுக்காகச் சமரசம் செய்து கொண்டார்கள் என்று அவர்களின் அரசியல் எதிரிகள் கூட குற்றம் சாட்ட மாட்டார்கள். ஆனால் அந்த 'சமரசத்தின்' தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடந்து வரும் சமரசங்கள் அந்த வகையைச் சாருமா? உதாரணமாக, கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன், ம.தி.மு.க தலைவர் வைகோவும், தி.மு.க தலைவர்களில் ஒருவரான மு.க அழகிரியும் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற சமரசமானார்கள். அதே போல் பி.ஜே.பி தலைவர் எச். ராஜாவும் மு.க அழகிரியும் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற சமரசமானார்கள்.

பட்டுக்கோட்டை அழகிரியின் நினைவாகவே தி.மு.க தலைவர் தனது மூத்த மகனுக்கு அழகிரி என்று பெயரிட்டதாகவும், அது தொடர்பாக அவர் வெளிப்படுத்தும் செய்திகள் உண்மையா என்பது பற்றியும், தா.கிருட்டிணன், மதுரை 'தினகரன்' பணியாளர்கள் கொலை தொடர்பாக அழகிரியைக் கண்டித்து,  'உணர்வு பொங்க' மதுரையில் பிரமாண்டமான கூட்டத்தில் வை.கோ நிகழ்த்திய 'எழுச்சி' உரையையும் கீழவரும் காணோளியில் பார்க்கலாம் என்ற தகவல் இணையத்தில் 'முகப்புத்தகத்தில்' வெளிப்பட்டுள்ளது. http://www.youtube.com/watch?v=wdqbVYKpIHs)
பா.ஜ.க தலைவர் எச்.ராஜா , பெரியார் படத்தை செருப்பால் அடிப்பேன் என்று சொல்லி. தமிழ்நாடு முழுவதும் 'புகழ்' பெற்றவர். அவ்வாறு சொல்லியதற்கு வருத்தம் தெரிவிக்காமலேயே, வை.கோவோடு 'கூட்டணி' சேர்ந்து,  அவருடன்  போட்டி போடும் அளவுக்கு, அவர் மதுரையில் அழகிரியைச் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார். நேரில் அழகிரியிடம் - பெரியார் பற்றிய கருத்துக்கு ராஜாவும், அழகிரி பற்றிய கருத்துக்கு வை.கோவும்  - வருத்தம் தெரிவித்தார்களா இல்லையா, என்பது அவர்கள் இருவரின் மனசாட்சிகளுக்கு தான் வெளிச்சம். வைகோவும், எச்.ராஜாவும் பாராளுமன்ற தேர்தலில் தேர்தலில் வெற்றி பெறாததால், அழகிரியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டிய தேவையில்லாமல் போய்விட்டது.

பெரியார்,ராஜாஜி, காமராஜர் வாழ்ந்த காலங்களில், எச்.ராஜாவைப் போல் எந்த கட்சியிலும் அடிமட்ட தொண்டன் கூட அப்படி பேசியிருக்க முடியாது. பேசவும் தலைவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். பிள்ளையார் சிலையை உடைக்கும் போராட்டம் அறிவித்தபோதும், கோவிலில் உள்ள சிலைகளுக்கு ஏதும் சேதம் விளைவிக்கக் கூடாது என்றும், அவரவர் தமது சொந்த காசில் கடையில் பிள்ளையார் 'பொம்மை' களை வாங்கி, பொது மக்களுக்கு 'இடைஞ்சல்' இன்றி உடைக்க வேண்டும் என்றும், அதுவும் அந்நிலைப்பாடு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்த பின் செய்ய வேண்டும் என்றார் பெரியார். 'காந்தி படங்களை எரித்தல்' தொடர்பாகவும் அவ்வாறே செயல்பட்டார், காமராஜரை ஆதரித்து கொண்டே. அதே போல் பா.ஜ.க பெரியார் படத்தை ஏன் எரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து, எதிர்க் கேள்விகளை பெரியாரைப் போலவே சந்தித்து செயல்பட்டார்களா? மாறாக போட்டியாக 'உணர்வுபூர்வமாக' சங்கராச்சாரியரின் படங்களை எரிக்க வேண்டும் என்ற, பெரியார் காலத்தில் வெளிப்படாத உணர்வு , பெரியார் தொண்டர்களிடையே இன்று வெளிப்பட , பா.ஜ.க தலைவர் எச்.ராஜா போன்றோரின் பேச்சுக்கள் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.. அந்த 'பெரியார் தொண்டர்களுக்கு' நெருக்கமான வை.கோவுடன் எச்.ராஜா கூட்டணி சேர்ந்தார்.வை.கோவும் சேர்ந்தார். இருவருமே பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக, அழகிரியுடன் சமரசமானார்கள். அதற்காக வை.கோ மீதும் அவருக்கு நெருக்கமான பெரியார் தொண்டர்கள் கோபப்பட்டதாகத் தெரியவில்லை. எச் ராஜா மீதும் இந்துத்வா தொண்டர்கள் கோபப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லாம் தேர்தலில் 'எப்படியாவது' வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வுபூர்வ போக்கு தான் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 1944க்கு முன் இது போன்ற உணர்வுபூர்வ போக்குகள் இருந்ததாகத் தெரியவில்லை.

1944க்கு முன் இருந்த தமிழ்நாடு எப்படி இருந்தது? இன்று தமிழ்நாடு எப்படி இருக்கிறது? முகப்புத்தகங்களில அவரவருக்கு பிடிக்காத தலைவர்கள் பற்றி எவ்வளவு இழிவாக எழுத்துக்கள் மூலமாகவும், படங்கள் மூலமாகவும் இழிவுபடுத்துகிறார்கள். அவ்வாறு தமக்குப் பிடிக்காத தலைவர்களை இழிவுபடுத்துவதில்  மட்டும் இந்துத்வா ஆதரவாளர்கள்/எதிர்ப்பாளர்கள், பெரியார் ஆதரவாளர்கள்/ எதிர்ப்பாளர்கள் என்று உணர்வுபூர்வ போதையாளர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட உணர்வுபூர்வ இழிவு போக்குகள் முடிவுக்கு வர வேண்டாமா?

பெரியார் பிராமணர்கள் அமைப்பிலேயே உரையாற்றியிருக்கிறார். அது போல் இந்துத்வா ஆதரவாளர்கள் மத்தியில் பெரியார் கொள்கையாளர்களும், முஸ்லீம் தலைவர்களும் அறிவுபூர்வமாக உரையாற்ற வேண்டும். பெரியார் ஆதரவாளர்கள் மத்தியிலும், முஸ்லீம் ஆதரவாளர்கள் மத்தியிலும் இந்துத்வா தலைவர்கள் அறிவுபூர்வமாக  உரையாற்ற வேண்டும். பிறர் பார்வையில் உணர்தல் (empathy) என்ற போக்கைக் கடைபிடித்து, அறிவுபூர்வ அணுகுமுறையை  ஊக்குவிப்பவர்களுக்கு இது சாத்தியமே.

வட மாநிலங்களில் உணர்வுபூர்வமாக முஸ்லீம்களை இழிவு படுத்தும் போக்கிலிருந்து விலகி, நாட்டுப்பற்றுடைய முஸ்லீம்கள் உள்ளிட்டு அனைவரையும் ஊழலற்ற, பாரபட்சமற்ற வளர்ச்சி நோக்கிய ஆட்சி என்று ஒன்றுபடுத்தும் நோக்கில் மோடி உள்ளிட்ட வடமாநில முதல்வர்கள் ஆட்சி செய்ததன் விளைவாகவே, எம்.ஜே.அக்பர் போன்ற இந்துத்வா எதிர்ப்பு எழுத்தாளர்களும் மோடி  ஆதரவாளர்களாக மாற (http://www.youtube.com/watch?v=8KD8dSioiKU),  பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 30 வருட பொது வாழ்வில் ஊழல், வேண்டியவர்களுக்கு சலுகை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு கூட உள்ளாகாதவர் பிரதமர்  மோடி என்று இந்துத்வா எதிர்ப்பாளராகிய    'OUTLOOK' ஆசிரியர் வினோத் மேத்தா கருத்து தெரிவித்துள்ளார். (“He is dynamic, clean, keen to introduce change and in three decades he has been in public life, corruption or nepotism has not touched him. I could go on singing his praises and risk being expelled by the secular fraternity.”- Vinod Mehta on “Which Way Will He Turn?” http://www.outlookindia.com/) இந்துவாவிற்கு எதிரான புத்தகங்களைத் தடை செய்ய வேண்டும் என்ற போக்கை ஆதரிக்காமல்,அமெரிக்ககாவில் வாழும் ராஜிவ் மல்கோத்ரா (http://rajivmalhotra.com/)மலேசியாவில் வாழும் உலகன்(https://sites.google.com/site/ulagansessays/) போன்றவர்கள் அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள இந்துத்வா, பெரியார், முஸ்லிம் இயக்க ஆதரவாளர்களும் இனி அந்த அறிவுபபூர்வ விவாதப் போக்கில் இடம் பெறுவது தான் தமிழ்நாட்டிற்கும் நல்லதாகும்.

From: http://tamilsdirection.blogspot.in/

__._,_.___

Posted by: veera pandian <pann...@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................

.

__,_._,___

Oru Arizonan

unread,
Nov 20, 2014, 10:11:51 PM11/20/14
to mint...@googlegroups.com
//இங்கும் பிராமணர் பிராமணர் அல்லாதார் வேறுபாடுகளும் வந்துவிட்டன.//

அது தானாக வரவில்லை மதிப்பிற்குரிய சித்தரே!  சில தேவை இல்லாத குறிப்புகளால் வரவழைக்கப்பட்டது.

எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்களின் ////அன்றைய காலகட்டத்தில் பிராமணர்கள்தான் அதிக அளவில் இந்தி கற்பவர்களா இருந்தாங்க. நான் பள்ளியில் இந்தி படிச்சதுக்கு அது பிராமணர் பள்ளியா இருந்தது ஒரு முக்கியமான காரணம். // என்ற வரிகளைப் பதிந்தது மூல கார்ணரம்.  ஆதற்கு எதிர்மொழி அளித்தபோது, மீண்டும் மீண்டும் பிராமணர்கள்தான் இந்தி படித்தார்கள் என்று எழுதியதும் காரணம்.  அதையும் அருள்கூர்ந்து முனைவர் வீரபாண்டியன் அவர்களுக்குத் தெரிவியுங்கள், பேராசிரியர் சித்தரே!

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Nov 20, 2014, 10:36:42 PM11/20/14
to மின்தமிழ்

2014-11-21 8:41 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
அது தானாக வரவில்லை மதிப்பிற்குரிய சித்தரே!

​இது என்ன மதுரைக்கு வந்த சோதனை.  போட்டது கணேசர்.  போகுற போக்கில் அவர் எங்கிருந்தாவது எதையாவது எடுத்து வெங்காய வெடி மாதிரி வீசுவார்

நான் மறுப்புத் தெரிவித்தது ஐயா வீரபாண்டியன் அண்ணா மீதும் ராஜாஜி மீதும் சுமத்திய குற்றச் சாட்டுபற்றி

நீங்கள் தீர்மானமாக இதுக்கிறீர்கள் நான் அண்ணாவைப்பற்றி மட்டுமே சொன்னால் நீங்கள் தி.மு.க வில் யாரோ ஒருவர் தூண்டிவிட்டதை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டீர்கள்​

பாப்பம் வீர பாண்டியார் என்ன சொல்கிறார் என்று

பாசி

Oru Arizonan

unread,
Nov 20, 2014, 11:33:45 PM11/20/14
to mint...@googlegroups.com
பெருமதிப்புக்கு உரிய சித்தரே,
//​இது என்ன மதுரைக்கு வந்த சோதனை?//  நானும் பாண்டிய நாட்டான் தான் சித்தரே!  மதுரைக்கு என்னால் எந்த சோதனையும் வராது. தங்கள் முனைவர் வீரபாண்டியன் அவர்களுக்கு எழுதிய //இங்கும் பிராமணர் பிராமணர் அல்லாதார் வேறுபாடுகளும் வந்துவிட்டன.// என்ற சொற்தொடருக்கு மட்டுமே தெளிவான மறுமொழியை இட்டேன்.

//போட்டது கணேசர்.  போகுற போக்கில் அவர் எங்கிருந்தாவது எதையாவது எடுத்து வெங்காய வெடி மாதிரி வீசுவார்//
அதையும் நான் மறுக்கவில்லை, சித்தரே(எனக்கு இந்த அன்பான, mysteriousஆன உங்கள் புனைப்பெயர் மிகவும் பிடித்திருக்கிறது.  மேலும் சித்தர் கருவூர் தேவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனாலேயே அப்படிச் சுட்டுகிறேன். அன்புத் தம்பியாக உள்ளுவீராக!)  அவர் வீசிய வெங்காய வெடியின் நெடி என் மூக்கை மிகவும் துளைத்தது சித்தரே.  அதுதான், வெடியின் நெடி தாங்கவில்லை என்று  இதமாகவும்,பதமாகவும், கோபமாகவும் எதிர்மொழி சொல்ல நேர்ந்தது -- அந்த நெடி நல்ல நெடி, வரலாற்று நெடி என்று திரும்பத்திரும்ப மறுமொழிகள் வந்ததனால்.  உங்கள்மீது நான் ஒரு குற்றச்சாட்டையுமே வைக்கவில்லை, சித்தரே!

//நான் மறுப்புத் தெரிவித்தது ஐயா வீரபாண்டியன் அண்ணா மீதும் ராஜாஜி மீதும் சுமத்திய குற்றச் சாட்டுபற்றி//

சித்தரே, அது பற்றித்தான் நாம் விவாதம் செய்தோமே!  1965ல் போராட்டத்தில் கலந்துகொள்ள வைக்கப்பட்டவன் என்ற முறையில் நானும், மற்றவர்களும் முறையாகவே நமது கருத்துகளை முன்வைத்தோம்.  இடையில் தேவையற்ற சாதி-தூற்றும் செய்திகள் வந்ததும் அதற்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.  அதை வரலாறு என்று நியாயப்படுத்தி திரும்பத் திரும்பப்  பதில்கள் வந்தன.  தாங்கள் அந்த பதில்களை நிறுத்த ஒரு முயற்சியும் ஏன் எடுக்கவில்லை, சித்தரே?  

வீட்டுக் கூரையில் தீப்பொறி விழும்போதே தடுக்காமல் -- பற்றி எரிந்தபிறகு -- ஏன் எரிந்தது என்று ஆய்வு செய்வதைப் போன்று மதிப்பிற்கு உரிய முனைவர் வீரபாண்டியனுக்கு இந்த இழையை அனுப்பி உள்ளீர்கள், சித்தரே!

உங்கள் தம்பியாகக்  கேட்கிறேன்.  நாம் அனைவரும் தமிழன்னையின் மக்கள்.  நமக்குள் தேவையற்ற மனக்கசப்புகள் நிகழவிடாமல் காப்பது தங்களைப்போன்ற மேதறிஞர்களின் பொறுப்பு.  பழிய காலத்தில் பல கசப்பான நிகழ்சிகள் நடந்திருக்கலாம்.  அவற்றை வரலாற்றாக அறிவது மீண்டும் அக்கசப்பு வராமல் இருக்க உதவும்.  

ஆனால், மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டும் விதத்தில் வாதங்கள் தொடருமானால --, உறுதியாக, ஒன்றாக நிற்கும் தமிழ் மரத்தில் ஆப்பு அடித்து அதைப் பிளப்பதற்கு ஒப்பாகும்.  அது வேண்டாமே என்றுதான் நான் இடையறாது கூறி வருகிறேன்.  ஓரிருவரைத் தவிர மற்றவர்களிடமிருந்து எந்தவிதமான எதிர்மொழிகளோ, கண்டனங்களோ வருவதில்லை.  

தாங்களும் விளைவைப் பற்றிமட்டுமே முனிவருக்கு எழுதி உள்ளீர்கள், விளைவுக்குக் காரணத்தை எழுதாமல்.

எனவே, முனைவர் பார்க்கவேண்டும் என்று இந்த நீண்ட மறுமொழியை இட்டிருக்கிறேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Nov 21, 2014, 12:12:39 AM11/21/14
to mint...@googlegroups.com
திரு. அரிசோனன் 

இதை ஜாதிப் பிரச்னை என்ற கோணத்தில் அணுகாமல் (முதலில் ஏன் அப்படி செய்கிறீர்கள்?)  கட்டுரையில் வைக்கப்பட்ட கருத்துகள் என்று பாருங்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் மாணவரால் துவக்கப்பட்டது என்ற கருத்து வந்த பொழுது அதை நீங்கள் எப்படி அணுகினீர்கள்?

இல்லை.... நான் நேரடியாகப் பார்த்தேன், அது திமுக  தூண்டிவிட்டது என்று சொன்னீர்கள் (மகாதேவனைக் கொல்ல வேண்டாம்...எடுத்துக்காட்டு)

அந்தக் கட்சி தலைவர்கள் சிறையில் இருந்தார்கள்,  மாணவர்களே கட்டுப்பாடு வழி நடத்துதல் இன்றி செய்தார்கள் என்ற கோணமும் இருக்கும் பொழுது நீங்கள் நேரடியாகப் பார்த்ததுதான் உண்மை என்பது உங்கள் கோணம்....



அது போல  அந்த எழுத்தாளரின் அனுபவத்தை அவர் சொல்லியிருக்கிறார்.  அது முழுப்பொய் அரைப்பொய் என்றெல்லாம்   நீங்கள் ஏன் சொல்ல வேண்டும், அவர் கோணத்தில் அவர் பார்த்ததை அவர் சொன்னார்.  அது அவர் அனுபவம்.  அது போலவே நான் கேள்விப் பட்டதையும் நான் சொன்னேன்.  

ஹிந்தியை மாணவர்கள் விருப்பப் பாடமாக படித்தார்கள் என்றுதான் முனைவர் வீரபாண்டியன்  அவர்களின் கட்டுரையிலும் இருக்கிறதே. 

///
மாணவர்களைத் தூண்டாமல், கிராமங்கள் வரை, பிரச்சாரம் செய்து, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாளர்களையும், பெண்கள் உள்ளிட்டு பங்கேற்பவர்களையும் திரட்டி, தமிழ்நாட்டின் பல மூலைகளிலிருந்து போராட்டப்படை வழிநடைப் பயணம் மேற்கொண்டு, திட்டமிட்டபடி ஒரு இடத்தில் சேர்ந்து, கட்டாய இந்தியை ஒழித்து வெற்றி பெற்றது 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம். கட்டாயமின்றி விருப்பமிருந்தால், இந்தி படிக்க வாய்ப்பிருந்தது அந்த வெற்றியில்.

அந்த 'விருப்ப இந்தி' அரசுப் பள்ளிகளில் இருந்ததை ஒழித்தது தான் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம்
///


அது போன்ற வாய்ப்பு வந்ததும் ஹிந்தியைக் கைவிட்டவர்கள், விடாதவர்கள் பற்றிய அக்கால மாணவர் மற்றொருவர் பார்வையையும்தான் நான் சொன்னேன்..நீங்கள்  உண்மை  என்று உங்கள் அனுபவத்தில் நம்புவதைப் போலவே மற்றவரும் அவர்கள் எதிர்கொண்டதை நம்புவார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக....
பிராமணர் தொடர்பாக தமிழகத்தில் நடந்தது  பற்றியே பேசாதே என்றால் தமிழக வரலாற்றையே படிக்க முடியாதே...
முதலில் இதில் யாரும் பிராமணர்களைக் குற்றமும் சொல்லவில்லையே.  அது அவர்கள் விருப்பப்பாடமாக இருந்தது என்பதுதானே சொல்லப்பட்டது.  

இவ்வளவு தீவிரமாக சொன்னதை எதிர்க்க, குற்றம் சாட்ட, நியாயம் கேட்டு முறையிட என்ன நடந்துவிட்டது?

.... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Nov 21, 2014, 12:19:38 AM11/21/14
to mint...@googlegroups.com
///அவர் வீசிய வெங்காய வெடியின் நெடி என் மூக்கை மிகவும் துளைத்தது சித்தரே.  அதுதான், வெடியின் நெடி தாங்கவில்லை என்று  இதமாகவும்,பதமாகவும், கோபமாகவும் எதிர்மொழி சொல்ல நேர்ந்தது ///

/// இடையில் தேவையற்ற சாதி-தூற்றும் செய்திகள் வந்ததும் அதற்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.  ///

இங்கு தூற்றப்பட்ட செய்திகள் எது?


///மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டும் விதத்தில் வாதங்கள் தொடருமானால --, உறுதியாக, ஒன்றாக நிற்கும் தமிழ் மரத்தில் ஆப்பு அடித்து அதைப் பிளப்பதற்கு ஒப்பாகும். ///


என்ன குற்றம் சாட்டப்பட்டது?

தூற்றும் மொழி எது என்பதையும் , குற்றசாட்டுகள் என்ன என்பதும் தெளிவாக விளக்கினால் உதவும்.



..... தேமொழி 

Nagarajan Vadivel

unread,
Nov 21, 2014, 12:20:12 AM11/21/14
to மின்தமிழ்

2014-11-21 10:03 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
தங்கள் முனைவர் வீரபாண்டியன் அவர்களுக்கு எழுதிய //இங்கும் பிராமணர் பிராமணர் அல்லாதார் வேறுபாடுகளும் வந்துவிட்டன.// என்ற சொற்தொடருக்கு மட்டுமே தெளிவான மறுமொழியை இட்டேன்

​நானா எழுதினேன்.  கொஞ்சம் நல்லப்பாருங்கய்யா.  எங்க வீட்டில் அடிக்கடி சொல்லுறாய்ங்க கொஞ்சம் லேசுபாசா நினைவு இழந்துகொண்டுவருவதாக

மற்றவர்கள் பேசலாம் ஆனால் நான் பேசமுடியாது.  மருமகன் மருமகள் என்று ஐயர் ஐயங்கார் கூட்டம் குடிபுகுந்தவீடு.  அவர்கள் கோபமடைந்தால் ​என்கதை என்னவாகும்

பாசி

Oru Arizonan

unread,
Nov 21, 2014, 12:51:19 AM11/21/14
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய தேமொழி அவர்களே,

நீங்களும் நானும் stalemate கட்டத்தை அடைந்துவிட்டோம்.  எப்பொழுது நீங்கள் தொடர்ந்து நான் சொல்வதைச் சிறிதும் செவிமடுக்காமல் ஒருதலை வாதம் செய்கிறீர்களோ, அப்பொழுது என்னால்  இடுகைகளைத் தொடர்ந்து செய்ய  இயலாது.  இதுவே இந்த இழையில் நான் உங்களுக்கு இடும் கடைசி மறுமொழி.

1.  இந்தி அலுவலக மொழியாவதை ஒரு துக்க நாளாக அனுஷ்டிக்கவேண்டும் என்று சொன்னவர் யார்?

2.  பொதுக்கூட்டங்கள் நடத்தத திட்டமிட்டவர் யார்?

3.  எந்தக் கட்சி அதை துக்க தினமாக அனுஷ்டிக்கத திட்டமிட்டது?

4.  கலகம் வெடிக்கவிருந்ததும் முன்நெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டவர் எவர்?

5.  தலையை வெட்டினாலும் உடல் துடிப்பது இயற்கைதானே?

6.  பெருந்தலைவர்கள் சிறைக்குள் சென்றாலும், இளந்தலைவர்கள் (மாணவர் தலைவர்கள்) இளங்கன்று பயமறியாது என்றபடி செயல்பட்டார்கள்.  அந்த மாணவர் தலைவர்கள் எக்கட்சியைச் சேர்ந்தவர்கள்?

7.  நேரில் காண்பதற்கும், செவிவழிக் கேட்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

8.  முதல்மொழி 2ஆக இந்தியைப் படித்தால் அது விருப்பப் பாடம்;  மூன்றால் மொழியாகப் படித்தே ஆகவேண்டும் என்று நான் பலதடவை சொல்லியும், சான்றாக எனது பள்ளி இறுதிச் சான்றிதழை வலையேற்றியும், தங்கள்  நிலையிலிருந்து மாறமறுப்பது எவர்?

9.  1958லேயே, சாதிப் பெயரை என் பள்ளிச் சான்றிதழில் இடவிடமாட்டேன் என்று சான்று கொடுத்தும், திரும்பத் திரும்ப குறிப்பிட்ட சாதியைக் குறைகூறும்வண்ணம் (ஐயர்கள் தான் இந்தி கற்பார்கள்) என்று எழுதியது யார்?

9a .  இங்கு விவாதிக்கப்படுவது பலர் உயிரிழ்ந்த, தமிழ்நாட்டையே போர்க்களமாக ஆக்கிய வரலாற்றையே மாற்றி எழுதிய ஒரு போராட்டம்.  அங்கு ஒரு குமுகத்தாரை, ஐந்தாம்படைபோல சித்தரித்தால்  // பிராமணர்கள்தான் அதிக அளவில் இந்தி கற்பவர்களா இருந்தாங்க. நான் பள்ளியில் இந்தி படிச்சதுக்கு அது பிராமணர் பள்ளியா இருந்தது ஒரு முக்கியமான காரணம்// -- அது வரலாறு என்றும், அவர்களை நாங்கள் குறைகூற வில்லை என்றும் எழுதினால் அது எந்த விதத்தில் நியாயப் படுத்தப்படுகிறது?  பிராமண மாணவர்கள் எத்தனை, அதில் எத்தனை விழுக்காடு இந்தியை விருப்பப் பாடமாக எடுத்தார்கள் என்று கொடுத்திருக்கிறதா?  இல்லையே! 

9b .   பிராமணர் பள்ளியாக இருந்ததால் இந்தி கற்பிக்கப்பட்டது என்பதுபோல எழுதப்பட்டு இருக்கிறதே, அது மிகையில்லையா?  நான் படித்த பள்ளி பிராமணர் பள்ளி அல்ல, நகரத்தார் மானேஜ்மென்ட் பள்ளி.  அதில் இந்தி கற்பிக்கப்பட வில்லையா?  அக்காலத்தில் எல்லாப் பள்ளிகளிலும் மூன்றாம் மொழியாகத் தமிழ்நாட்டில் இந்தி கற்பிக்கப்பட்டது.

10.  அது தவறு, பல சாதிக்காரர்களும் இந்தி கற்கிறார்கள், கற்பிக்கிறார்கள் என்று பலரும் எழுதியும், தான் எழுதியதே வரலாறு என்று சாதிப்பது யார்?

11.  பிராமணர்களின் விருப்பப்பாடமாக இந்தி இருந்ததற்கு எந்தவிதமான புள்ளி விவரமும் தராமல் --பிராமணர்கள் = X %, முதலியார்கள் = Y %, செட்டியார்கள் = Z %, வேளாளர்கள் = X - a %, மற்றவர்கள் = 0.X %;  X >Y >Z  என்று கொடுத்து உங்கள் வரலாற்றை நிலை நாட்டினீர்களா?

நீங்கள் எதை வேண்டுமானால் இனிமேல் எழுதிக்கொள்ளுங்கள்.  சாதி பற்றி நீங்கள் இடும் -- அது எந்த சாதி பற்றி இருந்தாலும் சரி -- அதற்கு என்னிடமிருந்து இனி எந்த மறுமொழியும்  வராது.  அதுபோல, நான் மற்றவர்களுக்கு இடும் சாதி பற்றிய இடுகைகளுக்கு நீங்களும் ஒரு மறுமொழியோ/எதிர்மொழியோ இடாமல் இருக்குமாறு தாழ்மையுடன் தங்கள் அடிபணிந்து வேண்டிக் கொள்கிறேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 



To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Nov 21, 2014, 12:58:39 AM11/21/14
to mint...@googlegroups.com
//நானா எழுதினேன்.  கொஞ்சம் நல்லப்பாருங்கய்யா. //

தவறுக்கு வருந்துகிறேன், சித்தரே!  

இங்கு நான்தான் குற்றவாளி.   நீங்கள் எழுதிய "இழையில் ஒளி பவவுதற்குப் பதிலாக நெருப்புப் பற்றி எரிகிறதே." இடுகையையும், உலகனார் எழுதிய "முனைவர் வீரபாண்டியன் பாரவைக்கு இதனை அனுப்பி வைக்கின்றேன்"  என்ற இடுகையையும், மதியிழந்து, ஒருசேரக் குழப்பிக்கொண்டு விட்டேனையா, சித்தரே. 

நேற்றிரவு ஒருமணிக்கு எழுதியதால் ஏற்பட்ட அயர்ச்சி என்று தப்பித்துகொண்டுவிட மாட்டேன்.  நான் சென்னை வரும்போது உங்களுக்கு ஒரு ஜிகிர்தண்டா கையூட்டு வாங்கிக்கொடுத்து பரிகாரம் செய்து கொள்கிறேன்.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Nov 21, 2014, 1:15:04 AM11/21/14
to mint...@googlegroups.com
இங்கு தூற்றப்பட்ட செய்திகள் எது?
என்ன குற்றம் சாட்டப்பட்டது?
தூற்றும் மொழி எது என்பதையும் , குற்றசாட்டுகள் என்ன என்பதும் தெளிவாக விளக்கினால் உதவும்.

என்ற கேள்விக்கு ....

திரும்பத் திரும்ப குறிப்பிட்ட சாதியைக் குறைகூறும்வண்ணம் (ஐயர்கள் தான் இந்தி கற்பார்கள்) என்று எழுதியது யார்?

இப்படி சொல்வது "குறை கூறுவது" என்ற வகையில் எப்படி அடங்குகிறது என்பது இன்னமும் தெளிவாகவில்லை. 

தேவையின்றி அடுத்தவர் மீது குற்றம் சாட்டினார்கள் தூற்றினார்கள் என்று பழி போடுவதைத் தவிர்க்கவும்.

இந்த முறை அவ்வாறு  குற்றம் சாட்டியதோ பழி போட்டதோ நானல்ல. 

...... தேமொழி

N. Ganesan

unread,
Nov 21, 2014, 2:20:22 AM11/21/14
to mint...@googlegroups.com
On Thursday, November 20, 2014 9:51:19 PM UTC-8, oruarizonan wrote:

9a .  இங்கு விவாதிக்கப்படுவது பலர் உயிரிழ்ந்த, தமிழ்நாட்டையே போர்க்களமாக ஆக்கிய வரலாற்றையே மாற்றி எழுதிய ஒரு போராட்டம்.  அங்கு ஒரு குமுகத்தாரை, ஐந்தாம்படைபோல சித்தரித்தால்  // பிராமணர்கள்தான் அதிக அளவில் இந்தி கற்பவர்களா இருந்தாங்க. நான் பள்ளியில் இந்தி படிச்சதுக்கு அது பிராமணர் பள்ளியா இருந்தது ஒரு முக்கியமான காரணம்// -- அது வரலாறு என்றும், அவர்களை நாங்கள் குறைகூற வில்லை என்றும் எழுதினால் அது எந்த விதத்தில் நியாயப் படுத்தப்படுகிறது?  பிராமண மாணவர்கள் எத்தனை, அதில் எத்தனை விழுக்காடு இந்தியை விருப்பப் பாடமாக எடுத்தார்கள் என்று கொடுத்திருக்கிறதா?  இல்லையே! 

 அன்பின் அரிசோனன்,

இந்தி ஆசிரியர்கள் பலரும் பிராமணர்களாக இருந்தனர் என்கிற புள்ளிவிவரத்தை செயப்பிரகாசம் பதிவு செய்திருக்கிறார்.
சுதந்திரத்துக்கு முன்பு கற்றோர்களில் பலர் இருந்த சமுதாயம் ஆனதாலும், சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டோர்
பலர் இருந்ததாலும் நிகழந்த வரலாறு இது. காலச்சுவடு பிராமணர் நடத்தும் பத்திரிகைதான். பா. செயப்பிரகாசம் சொல்வதில்
தவறு என்றால் சுந்தரராமசாமி மகன் கண்ணனிடம் சொல்லி திருத்தலாம்.

தமிழ்நாடு, தமிழர் சமுதாயம் பாரதம் என்னும் பெரும் நீரோட்டத்தில் கலக்க இந்தி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டதன்
ஆரம்பகால வரலாறு இது. செயப்பிரகாசம் மட்டுமில்லை, பல வரலாற்றாசிரியர்கள் ஆங்கிலம், தமிழ் நூல்களில்
எழுதியுள்ளனர். எனது நண்பன் ஒருவர் டல்லஸ் நகரில் ஐ.டி. கம்பெனி வைத்துள்ளார். அப்பா தமிழ்ப் புலவர்.
சேலத்தில் 40 ஆண்டுகள் பள்ளிஆசிரியர். திராவிட கட்சிகள் வரலாற்றை அவரிடம் பேசுவேன். டல்லஸ் நண்பனின்
மனைவி பிராமணர் குலம். அவர் அப்பா பொள்ளாச்சி அருகுள்ள மாசாணியம்மன் கோவிலுக்கு வருவோர். எனவே
நன்கு தெரியும். அப் பெண்மணி தன் அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் நடக்கும் சண்டை பற்றிச் சொல்லியுள்ளார்கள்.
தாத்தா இந்தி டீச்சர். ‘டேய் இந்தி படிடா. வேலை கிடைக்கும்.’ என்பாராம் தாத்தா. ‘ஊரே வேண்டாம் என்கிறபோது
எதற்கு இந்தி?” இது மகன். அவர் இந்தி போராட்டத்தில் கலந்துகொண்டவர். எனவே, நீங்கள் சொல்வதுபோல்
ஒரு complicated situation-ஐ இந்தி இக் குடும்பங்களில் உருவாக்கியது.

இந்தி - உர்து இலிபிகளுக்கு இடையே யுத்தம் வடக்கே நடந்துகொண்டிருந்த காலம் அது. காந்தி தேவநாகரிக்கு
ஆதரவு அளித்தார். எனவே பள்ளிகளில் பரப்பலாயிற்று. அதற்கு தென்னாடு பயன்பட்டது. 

-------------

தங்கம் பட்டர், முத்தையா ஸ்தபதி வரும்போது கேட்கிறேன். ’61 பள்ளீயிறுதி எனில் 68 வயதா?
எஸ் எம் எஸ் வித்யாசாலா என்றுள்ளது. ஆங்கில பேர்ப்பலகைதான் இருந்ததா? தமிழிலும்
பேர்ப்பலகை உங்கள் பள்ளியில் உண்டா?

அன்புடன்
நா. கணேசன்.

Oru Arizonan

unread,
Nov 21, 2014, 10:09:45 PM11/21/14
to mint...@googlegroups.com

Esteemed Ganesan,

 

I decided to respond in English since it would let me write in a neutral tone.

 

The main subject of discussion was:

//1944க்கு முன்  பெரியார் தலைமையில் மக்கள் பங்கேற்புடன் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965‍இல் அண்ணாதுரையும், ராஜாஜியும் தூண்டி விட்டு, பின் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த, உரிய தலைமையின்றி மாணவர்கள் முன்னெடுத்த‌ இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிடுவது, நிகழ்கால தமிழ்நாட்டின் மோசமானப் போக்குகள் எப்போது பலம்பெற்றன? என்ற கேள்விக்கான விடையைத் தரும்.//

 

In addition, esteemed Nagarajan Vadivel (NV)has finally put a question:

//1965-ல் மாணவர்கள் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டாம் என்று அறிக்கை விட்ட அண்ணாவா தூண்டிவிட்டார்?//

 

Since I was forced to participate in the  anti-Hindi opposition procession on 1965 January, I responded to NV. that since Anna started anti-Hindi fervor, he cannot escape from taking the responsibility for the processions and agitations that followed, though he was imprisoned even before any incidents. 

 

Since esteemed Innampooraan (IP) also joined hands with NV refusing the participation of DMK students,  I  gave the prologue of my to be published novel, which describes Annamalai University procession and the shooting thereof as an eyewitness.  I countered vehemently any and all responses that said that DMK was not the root-cause of the agitation.

 

Ms. Themozhi was kind enough to provide the picture of the martyred student Rajendran's statue. She also uploaded the pages from Daily thanthi about the agitation.  That book was very objective, dealt with the history very objectively.  It never mentioned about Brahmins, or anything irrelevant.

 

You  thanked me for my explanation and clarifications, and put forth an interview of Esteemed writer Paa. Jayaprakasam that supported the theory that DMK was the reason for the start of the agitation and the inspiration for all students.

 

I was in agreement with everything written by Paa. Ja except his comments about Brahmins.

 

Paa. Ja's interview was only about the agitation, how it sparked a fire of Tamil nationalism in Tamilnadu, and even without political leadership, student leaders carried it to a crescendo, and the mighty central government of India bowed down, and declared that English will continue as long as desired by the states -- a gesture of waving a white flag.

 

In that glorious recount of history, uttering words about a group of people, which in no way adds to that recount was totally irrelevant.  It does not matter how many people learnt Hindi, which caste they were, or why Pa. Ja learnt Hindi.

 

Ms. Themozhi was kind enough to provide the picture of the martyred student Rajendran's statue. She also uploaded the pages from Daily thanthi about the agitation.  That book was very objective, dealt with the history very objectively.  It never mentioned about Brahmins, or anything irrelevant.

 

Hence I recorded my objection to that paragraph.  I also provided details that there was no exception to teaching Hindi in High Schools as a third language.  I also volunteered to provide evidence by scanning the results of my school final exam.

 

I got a response from one person continuously that the mention of a group of people was history, and, my objection was unfounded.  That person also seconded Pa. Ja's paragraph.

 

To prove my point, I uploaded the final year exam results.  It proved to be a fruitless and wasted effort.  Still, that person kept on repeating that Hindi was only an optional subject.  My repeated responses, and other people's responses about other group of people also learnt Hindi did not bear any fruit.

 

Hence, I had to inform that person that we reached a condition of stalemate, and there was no use in continuing any meaningful discussion.

 

Esteemed Ganesan, we can all discuss about history.  It is better to avoid unnecessary and irrelevant data, which does not add to a healthy discussion.  I am sad to say that many a time, I have observed members of MinTamil repeatedly and relentlessly badmouthing one group of people, and one religion.

 

I hope you will join me in making all discussions meaningful, and avoiding irrelevant items.  I understand humor, and started indulging myself once in a while with some people who have come to know me.

 

//தங்கம் பட்டர், முத்தையா ஸ்தபதி வரும்போது கேட்கிறேன்//  Will you please explain about this statement?

 

If you want to know about me further, it is private.  Please give me your contact phone number privately to my email address.  Let us talk about ourselves at a personal level.

 

with best regards,

ஒரு அரிசோனன் 

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Nov 21, 2014, 10:37:13 PM11/21/14
to mint...@googlegroups.com
Dear Arizonan,

I largely agree with what you say in this mail. I have not read all the mails in this thread that carefully - word by word, who said what -
As you can see in my mails, my interests are not 1960s politics, rather ancient Indian art history and old texts. I believe Pa. Ce. is
correct in stating about DMK's role.

----------

My mention of Thangam Bhattar (whom I know for a quarter century and his thambi,  late Rajarathna Bhattar) and Muthiah Sthapathy
came to my mind since I was writing to you. It has nothing to do with this thread. will send you my home & cell numbers.
Also, will have to locate and send you your school tecaher, Irama. Periya Karuppan's address. If I recall, he lives
in Sadasiva Nagar, Madurai. People from Madurai, e.g., Prof. Pandiaraja, may have his number also.

Anbudan
N. Ganesan

Oru Arizonan

unread,
Nov 21, 2014, 11:55:29 PM11/21/14
to mint...@googlegroups.com
Dear Mr. Ganesan,

I spoke with Thamizhannal, my Tamil teacher at S.M.S. HIgh School a few days back.  He was very happy to speak with his old student.

best regards,
Oru Arizonan

Nagarajan Vadivel

unread,
Nov 22, 2014, 12:15:55 AM11/22/14
to மின்தமிழ்

2014-11-22 8:39 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:

Since I was forced to participate in the  anti-Hindi opposition procession on 1965 January, I responded to NV. that since Anna started anti-Hindi fervor, he cannot escape from taking the responsibility for the processions and agitations that followed, though he was imprisoned even before any incidents. 

 


​Who forced you to participate?  In fact psychologically you are not interested in participating in the Hindi-agitation.  Again and again I mentioned that the students'  agitation was organized and spearheaded by K.A.P.Visvanatam and Prof.C. Ilakkuvanar.  Till the violence erupted at Madurai procession the agitation had no link with the agitation organized by D.M.K.  As you have pointed out Anna was in prison when the agitation took an ugly turn, then how can you squarely blame Anna for the individually planned and organised students agitation and subsequent violence.

Nagarajan

Innamburan S.Soundararajan

unread,
Nov 22, 2014, 3:54:54 AM11/22/14
to mintamil
அல்லாரும் போடு போடுன்னு டோபுராங்கோ! தட்டாமாலை சுத் ராங்கோ! நானோ அல்லாத்தையும் பாத்தவன். அது போகட்டும்.

ஜிகிர்தண்டா வாங்கறேன்னு வாக்கு குடுக்காதே ஓ.அ. அது மாசியின் கோட்டையிலே. நாலாபக்கமும் எயில்.

'மதிப்பிற்குரிய இன்னபூரான் அவர்களே,


தாங்கள் முத்துப்பட்டினத்தில் குடி இருந்தீர்களா? அறிய விரும்புகிறேன்.

எனது தாய்வழிக் கொள்ளுப் பாட்டனார் அங்கு வசித்தாராம்.  எனது தாயின் மூத்த அம்மான் முத்துப்பட்டினத்தில்தான் வசித்துவந்தார்.  இன்னொரு அம்மான் முத்துப்பட்டின ஊருணியில் மூழ்கி இறந்தாராம்.

உங்களுக்கும் காரைக்குடி முத்துப்பட்டினத்திற்கும் உள்ள தொடர்பை அறிய விருபுகிறேன், ஒரு காரைக்குடிக்காரன் என்ற முறையில்.

***

அடுத்த தடவை அமெரிக்கா வரச்சே நாம் மீட்டிக்கணம், ஒரரிசேனரே. நம்ம காசிஶ்ரீ கிட்டா எல்லா சமாச்சாரமும் இருக்கு. முத்துப்பட்டணத்திலே
(செக்காலைலேஇருந்து வரும் சந்திலெ இடது கை பக்கம் திரும்பி பஜனை மடம் தாண்டி அஞ்சாவது அல்லது ஆறாவது மாஜி வீட்லெ ஜென்ம எடுத்து, முத்தூரணியை கலக்கி, அல்லி பறித்து, பால்யத்திலெ ஜமா சேத்துக்கிணு பெரிசு, சிறிசுகளை மிரட்டி....



Reply all
Reply to author
Forward
0 new messages