1. தொல்காப்பியமும் பாணினியமும் – 12 : பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரும் மோசடி– இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. வெருளி நோய்கள் 771-775: இலக்குவனார் திருவள்ளுவன்

1 view
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Dec 4, 2025, 5:24:04 PM (7 hours ago) Dec 4
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore

வெருளி நோய்கள் 771-775: இலக்குவனார் திருவள்ளுவன்


ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன் 
     05 December 2025      கரமுதல


(வெருளி நோய்கள் 766-770:  தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 771-775

  1. காளான் வெருளி – Mycophobia / Mykitaphobia

காளான்பற்றிய அளவுகடந்த பேரச்சம் காளான் வெருளி.
காளாம்பி என்றும் காளானைக் குறிப்பர். எனவே, முதலில் காளாம்பி வெருளி என்றும் குறித்திருந்தேன். எனினும் இரு வகை வேண்டா என்பதால் இப்பொழுது காளான் வெருளி என்று மட்டும் குறித்துள்ளேன்.
myco என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காளான்.
00

  1. காற்சட்டை வெருளி – Panteloniphobia
    காற்சட்டைகள் பற்றிய அளவுகடந்த பேரச்சம் காற்சட்டை வெருளி.
    காற்சட்டைத் தொள தொள என்று இருந்தால் அல்லது இறுக்கமாக இருந்தால், குட்டையாக இருந்தால் அல்லது நீளமாக இருந்தால், அழுக்காக இருந்தால் அல்லது கிழிசலாக இருந்தால் பிறரது கேலிக்க ஆளாக நேரிடும் என்று அஞ்சுவர். குறைகளைக் களைய வேண்டுமே தவிர வீணே கவலைப்படக் கூடாது. எடுத்துக்காட்டாக அழுக்குக் காற்சட்டை மூலம் அரிப்பு, படைமுதலான நோய்கள் வரும் என அஞ்சவதைவிட அதைத் துவைத்து அணியலாம் அல்லவா?கிழிசல் ஆடையையும் ஒட்டுத் துணி ஆடையையும் அணிவதை நாகரிகமாகக் கருதுவோருக்கு ஒழுங்கான ஆடையை அணிவதுதான் கவலையை ஏற்படுத்தும்.
    Pantaloni என்னும் உரோமானியச் சொல்லிற்குக் காற்சட்டை எனப் பொருள். pantophobia என்பதை இதனுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. அஃது அனைத்து வெருளியைக் குறிக்கும்.
    ஆடை வெருளி(vestiphobia) உள்ளவர்களுக்குக் காற்சட்டை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
    00
  2. காற்பந்தாட்ட வெருளி – Footballphobia

காற்பந்தாட்டம் குறித்த வரம்பற்ற பேரச்சம் காற்பந்தாட்ட வெருளி.

அமெரிக்கா, கனடா, ஆத்தரேலிய நாடுகளில் காற்பந்தை(foot ball) உதைபந்து(soccer ball) என்பதால் உதைபந்தாட்ட வெருளி என்றும் சொல்லப் பெறும்.
காற்பந்தாட்டத்தினால் உடலுக்கோ உயிருக்கோ சேதமோ இழப்போ நேரிடலாம் என்று அஞ்சி காற்பந்தாட்ட வெருளிக்கு ஆளாவர். காற்பந்தாட்டம் ஆடுபவர்களுக்கு மட்டுமல்லாமல் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் காற்பந்தாட்ட வெருளி வருவதுண்டு.
00

  1. காற்புள்ளிக் குறி வெருளி -Virguphobia

காற்புள்ளிக் குறி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காற்புள்ளிக் குறி வெருளி.
ஒரு செய்தி அல்லது விவரம் முற்றாகும் எனக்கருதும்பொழுது அது தொடர்வதன் அடையாளமாகக் காற்புள்ளி வருவதால் தேவையற்ற கவலையும் அச்சமும் கொண்டு வெருளிக்கு ஆளாகின்றனர்.
முற்றுப்புள்ளி, வினாக்குறி, இடைக்கோடு முதலான நிறுத்தக் குறியீடுகள் வெருளி உள்ளவர்களுக்குக் காற்புள்ளி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
.00

  1. காற்று ஒலி்ப்பான் வெருளி – G4gophobia

காற்று ஒலி்ப்பான்(air horn) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காற்று ஒலி்ப்பான் வெருளி.
காற்று ஒலிப்பான்களின் உரத்த ஒலியும் அச்சந் தரும் இரைச்சலும் உண்டாக்கும் காற்று மாசுபாடும் அச்சத்தையும் கவலையையும் உண்டாக்கி காற்று ஒலிப்பான் வெருளியை ஏற்படுத்துகிறது.
காற்று ஒலிப்பானைப் பயன்படுத்த மத்திய இயந்திர வாகன விதிகளின்(CMV Rules) கீழ்த் தடை விதிக்கப்பட்டுள்ளது.
00

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன் 

வெருளி அறிவியல் 2/5

++

தொல்காப்பியமும் பாணினியமும் – 12 : பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரும் மோசடி– இலக்குவனார் திருவள்ளுவன்


ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன் 
     05 December 2025      கரமுதல


(தொல்காப்பியமும் பாணினியமும் – 11 : முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்– தொடர்ச்சி)

தொல்காப்பியமும் பாணினியமும்

12

பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி

தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த நடுநிலையான பொருளுரையைப் பேரா.ப.மருதநாயகம் அளித்துள்ளார். பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி, ஏமாற்றுவேலை. ‘ஆதிபாஃசா’ நூலில் சட்டம்பி அடிகளார், தமிழிலிருந்து பிராகிருதமும் பிராகிருதத்திலிருந்து சமற்கிருதமும் தோன்றியது என்னும் வரலாற்று உண்மையை மெய்ப்பிக்கிறார். பேரா.சி.இலக்குவனார் அவர்களும் அவர் வழியில் அறிஞர்கள் பலரும் தொல்காப்பியத்தில் இடம் பெற்ற இடைச்செருகல்களை நீக்கினால் தொல்காப்பியம் முரண்பாடு இன்றிச் செம்மையாக இருக்கும் என நிறுவியுள்ளனர். இவை போன்ற அறிஞர்களின் கருத்துகளை எடுத்துக் கூறித் தொல்காப்பியம் சமற்கிருதத் தழுவலன்று எனத் தெரிவிக்கிறார்.(இலக்குவனார் திருவள்ளுவன், தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்)

ஒலியன்கள்

தமிழில் ஒலியன்கள் சரியாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் எழுத்துகளை உருவாக்கியவர்கள் ஒலியன்கள்பற்றி நன்கு அறிந்திருக்கின்றனர். அறிவியல் கருவிகள் இல்லாத காலத்திலேயே தமிழ்ப் பேச்சொலிகளைத் துல்லியமாக அடையாளம் காட்டியிருப்பது வியப்புக்குரியது என ஒலியனியல் வல்லுநர் தானியல் இயோன்சு(Daniel Jones) வியந்து பாராட்டுகிறார். சமற்கிருத இலக்கணம்-மொழியியல் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர்பணினி. இவர் அம்மொழியின் ஒலியனியல், உருபனியல் என்பவை தொடர்பில் அறிவிய் அடிப்படையிலான பகுப்பாய்வுகளைச் செய்துள்ளா் என்று விக்கிபீடியா கூறுகிறது.மேலும் சில தளங்களிலும் இக்கருத்துகளைக் காணலாம். இதற்கெல்லாம் காரணம் தொல்காப்பியம் இன்றைய ஒலியனியல் கருத்துகளை அன்றே அறிவியல் அடிப்படையில் கூறியுள்ளார் என அறிஞர்கள் கூறுவதால் பாணினியத்திலும் இருப்பதாகப் பொய்யுரைப்பதே ஆகும்.

அரித்தாட்டில் காலத்திற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே நடைமுறையில் இருந்த தமிழ்நெறி

மிக்குசிகன் மொழியியல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஏ.எல்.பெக்கர்(A.L.Becker), கீத்து தெயிலர்  (Keith Tailor) ஆகிய இருவரும் தொல்காப்பியர் அறிவுலகிற்குச் செய்த பணி பிளேட்டோவும் அரிட்டாட்டிலும் மேலை அறிவுலகிற்குச் செய்த பணியை ஒத்தது எனப் பாராட்டுகின்றனர். இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியர் பேரா.முனைவர் சி.இலக்குவனார், “… ஆதலின், கிரேக்க நாட்டு அரிட்டாட்டில் காலத்திற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே தமிழகத்தில் இலக்கிய நெறி முறைகள் வகுக்கப்படுப் பயிலப்பட்டுப் பாடப்பட்டு வந்தன என அறியலாம்.” (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 149-150) என்கிறார்.

மொழியியலின் மீவுயர் பேராசன்

புலப்பாட்டுநெறி, யாப்பிலக்கணம், கவிதையியல் ஆகியவைபற்றிய முழு இலக்கணம் தந்தவரென்றும் மொழியின் அடித்தளப் பேச்சு வழக்கிலிருந்து கவிதை மொழி வரையிலான மொழியின் எல்லாக் கூறுகளையும் மொழியியல் ஆய்விற்கு உரிய பொருளாக எடுத்துக் கொண்டவரென்றும் மொழியியலின் மீவுயர் பேராசன் என்று அழைக்கப்பட வேண்டியவரென்றும் தொல்காப்பியரின் உயர்வை ஏ.கே.இராமானுசன் சிறப்பிக்கிறார்.(முனைவர் மருதநாயகம், வடமொழி ஒரு செம்மொழியா?, பக்கம் 606)

இடைச்செருகல்கள்

தமிழ் நூல்களிலான இடைச்செருகல்கள் அதன் அழகையும் மதிப்பையும் குறைக்கவும் ஆரியததைத் திணிக்கவும் உண்டாக்கப்பட்டவை. என்று ஆய்வறிஞர்கள் நிலை நாட்டியுள்ளனர். சமற்கிருத நூல்களில் உள்ள இடைச்செருகல்கள் அவற்றுக்கு இல்லாச் சிறப்புகளை இருப்பதுபோல் காட்டுவதற்காகத் திணிக்கப்பட்டவைஏ.சி.பருனல்(The Ainthira school of sanskrit grammarians , பக்.102)

முனைவர் சி இலக்குவனார் தம் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொல்காப்பிய நூலில், மரபியல் பகுதியில் 24 நூற்பாக்களை உடுக்குறி(*)யால் இடைச்செருகல் எனப் பாகுபடுத்தியுள்ளார்.

மக்களில் பிறப்பால் வரும் நான்கு வருண உடைமைகளைக் கூறும் நூற்பாக்கள் 15 (71-85); செய்யுளியலில் கூறாமல் மரபியலின் இறுதியில் தொடர்பில்லாமல் சேர்க்கப்பட்டிருக்கும் 9 நூற்பாக்கள்; ஆக  24 நூற்பாக்கள். மேலும், அகத்திணையியலில் பிரிவைப் பற்றிச் சொல்லும்போது, 13 நூற்பாக்களில் (24 முதல் 36) குலப் பிரிவு சேர்க்கப்பட்டுக் குழப்பம் செய்யப்பட்டுள்ளது. இவையும் இடைச்செருகல்கள் என்பது தெளிவு.

இவை இடைச்செருகல்களே என்பதை உரையாசிரியர்களின் மேற்கோள்களால் அறியலாம். சங்கநூல் பாடல்களில் இவற்றிற்கான மேற்கோள் பாடல்கள் இல்லாமல் பண்டைய உரையாசிரியர்களே புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கல விருத்தி முதலான பிற்கால நூல் தரும் பாடல்களைத் தருகின்றனர்

இடைச்செருகல்கள் குறித்து அப்போது நிதியமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன், சென்னை புத்தகக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில்(2.01.2010) நடைபெற்ற நிகழ்ச்சியில், “தொல்காப்பியர் காலத்தில் இல்லாத மரபுகள், கலாசாரங்கள், மேல்சாதி – கீழ்சாதி முறைகள், 4 வகை சாதி அமைப்புகள், மனு வருணாசிரம முறைகள் குறித்த கருத்துகள் உரைகளில் இடைச்செருகல்களாகப் புகுந்துள்ளன.

இந்த இடைச்செருகல்கள் களையப்பட்ட உரையைத் தொல்காப்பியத்துக்கு எழுத ச.வே.சுப்பிரமணியன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் முன்வர வேண்டும்”. எனப் பேசியுள்ளார்.

இவ்வுரையை ஒருவர் மின்மடலாடல் குழு ஒன்றில் பகிர்ந்துள்ளார். தமிழே தெரியாமல் ஆனால்  தங்களைத் தமிழறிஞர்களாகக் காட்டிக்கொண்டு தமிழுக்கு எதிராக எழுதியும் பேசியும்  வரும் கும்பல் எப்பொழுதும் இயங்கிக் கொண்டுள்ளது. அத்தகைய கும்பல் அறிஞர்கள் எவற்றை ஏன் இடைச்செருகல்களாகக் குறிப்பிடுகிறார்கள் என்றெல்லாம் ஆராயாமல், அவற்றிற்கு எதிரான மறு கருத்து இருப்பின் அவற்றைத் தெரிவிக்காமல் பொதுவாக மறுத்து எழுதியுள்ளனர். “நமக்குப் பிடிக்கவில்லை என்றால் இடைச்செருகல் என்பதா? ஏன், பிற இடைச்செருகல்களாக இருக்கக் கூடாது? தொல்காப்பியர் காலத்திலேயே சாதிப்பாகுபாடு இருந்தது. தொல்காப்பியம் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தது” என்பனபோன்று  எழுதியுள்ளனர். இவை போன்ற கருத்துகளைத் தம் கட்டுரைகளிலும் நூல்களிலும் தமிழ்ப்பகைவர்கள் உண்மைக்கு மாறாக எழுதியுள்ளனர்; எழுதி வருகின்றனர். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் தொல்காப்பிய இடைச்செருகல்கள் குறித்த கருத்துகளே வலிமை வாய்ந்தனவாக உள்ளன (தமிழ்த்துளி வலைத்தளம்). 

(தொடரும்)

தொல்காப்பியமும் பாணினியமும்

இலக்குவனார் திருவள்ளுவன்

++



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages