வைணவம்

108 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jul 21, 2010, 4:22:20 AM7/21/10
to mintamil

324.வைணவத்தில் விளிம்பு நிலை மாந்தர்

வைணவத்தில் ஜாதி மதம்,ஆண் பெண் என்று எந்த பேதமுமின்றி அடியார், அமலனாதிபிரான் என்ற ஒரே உறவுமுறை தான் நிலவுகிறது. வைணவ பக்தி இலக்கியத்தில் ஆண் உண்டு, பெண் உண்டு, அரவாணிகள் உண்டு, பிராமணர் உண்டு,அரசன் உண்டு,விவசாயி உண்டு, குயவர் உண்டு, நாவிதர் உண்டு, தலித் உண்டு, இந்து முஸ்லிம் சீக்கியர் கிறிஸ்தவர் என்று பல மதத்தவர் உண்டு. தேவர் உண்டு,கந்தர்வர் உண்டு, அசுரரும் யாக்காதரும் உண்டு. ஏன்? யானை, பாம்பு, குரங்கு, கழுகு போன்ற மிருகங்கள் கூட உண்டு.

எந்த பேதமுமின்றி உலகம் முழுவதற்கும் ஆண், பெண், மரம், மட்டை, செடி, கொடி என பிரித்து பார்க்காமல் ஒளி வழங்கும் சூரியனை போல் பேதமற்றவன் எம்பெருமான். அப்படிப்பட்ட வைணவ தருமத்தின் தூண்களாக விளங்கும் விளிம்பு நிலை மாந்தர்களின் வரலாற்றை தொகுக்கும் முயற்சியே இது.

சேனா நாவிதர்

உத்திரபிரதேசத்தில் அவந்தி நகரில் சேனா எனும் நாவிதர் ஒருவர் வசித்து வந்தார்.தொழிலை மிகவும் நேர்த்தியாக செய்கிறவர் என்று பெயர் பெற்றதால் அவரை அரண்மனை நாவிதராக அரசன் நியமித்தான்.சேனா, நாராயணன் மேல் மிகுந்த அன்பு பூண்டவர்.அவனை நினைத்து தியானத்தில் இறங்கினால் நேரம் கால போவதே தெரியாது.

ஒரு நாள் அரசன் அவசர அலுவல் காரணமாக நேரத்தோடு புறப்பட வேண்டியதானது."போய் சீக்கிரம் சேனாவை அழைத்து வா.சவரம் செய்து கொண்டு வெளியே புறப்பட வேண்டும்" என ஆள் அனுப்பினான் அரசன்.ஆட்கள் சேனாவின் வீட்டுக்கு போனபோது, அங்கே அவர் நாராயணனை நினைத்து பாடல்கள் பாடியபடி இருந்தார்.

"சீக்கிரம் கிளம்புங்கள்..மன்னர் அழைக்கிறார்" என்றனர் காவலர்கள்.

சேனாவுக்கு அதெல்லாம் காதில் ஏறவே இல்லை.

"கங்குல் பகலற்ற திருக்காட்சியர் கண்கண்டவழி

எங்கும் ஒரு வழியே!எந்தாய் பராபரமே"

என்ற தாயுமானஸ்வாமிகள் பாடலுக்கேற்ப திருக்காட்சியை கண்டுகளித்து கொண்டிருந்த சேனாவின் செவிகளில் காவலர் அழைத்ததோ, அவர் நின்றதோ ஏறவே இல்லை.

காவலர் திரும்பி சென்று 'நாங்கள் அழைத்தோம்,சேனா வரவே இல்லை" என அரசனிடம் தெரிவித்தனர்.

அரசனுக்கு கோபம் தலைக்கேறியது."அவனை துண்டு துண்டாக வெட்டி கடலில் போடுங்கள்" என ஆணையிட்டான்.

பக்தனுக்கு துன்பம் வந்தால் இறைவன் தாங்குவானா? அதே நிமிடம் எங்கும் நிரம்பிய பரம்பொருள் சேனாவாக உருவெடுத்து அடப்பமும் சவரக்கத்தியும் தாங்கி அரசன் முன் வந்து நின்றது.அந்த திரு உருவை கண்டதும் அரசன் மனதில் எல்லையற்ற அமைதி நிரம்பியது.

"தாமதத்துக்கு மன்னியுங்கள் அரசே.உங்கள் நலனுக்காக ஆண்டவனை வேண்டிக்கொண்டிருந்தேன்.அதை பாதியில் நிறுத்த மனம் வரவில்லை" என்று இனிய சொற்களால் பேசிக்கொண்டே அரசன் தலையில் தைலத்தை தேய்த்தார் எம்பெருமான்.

எதிரே இருந்த நீர் நிரம்பிய கிண்ணத்தில் போலி சேனாவின் திரு உருவம் தெரிந்தது.அந்த அற்புத காட்சியை கண்ட அரசனுக்கு மெய் மறந்து விட்டது.சவரம் செய்தது கூட அவனுக்கு தெரியவில்லை.

சேனாவுக்கு இரண்டு காசுகுகளை கொடுத்து அனுப்பினார் கணக்கர்.'அரசே குளித்து விட்டு கிளம்ப நேரமாகிறது" என அழைத்தனர் பணிமக்கள்.

****

பூஜை முடித்து புறப்பட்ட சேனாவை அண்டை அயலார் அழைத்து காவலர் வந்து சென்ற செய்தியை தெரிவித்தனர்.பயந்து நடுங்கியபடி அரண்மனைக்கு ஓடினார் சேனா.

****

குளித்து விட்டு பூஜை செய்ய சென்ற அரசனுக்கு ஏனோ சேனாவின் திரு உருவமே மனதில் தோன்றியது.தெய்வத்தின் உருவில் கூட கிட்டாத அமைதி சேனாவின் தரிசனத்தில் கிட்டியதாக தோன்றியது.

வெளியே வந்தான் அரசன்.பயந்து நடுங்கியபடி அவன் முன் நின்றார் சேனா.

"பிரபுவே..காலையில் கண்ட திருக்காட்சியை மீண்டும் காட்ட வேண்டும்" என அடியற்ற மரம் போல் அவர் காலில் வீழ்ந்தான் அரசன்.

"இது என்ன கூத்து?" என புரியாமல் மந்திரிகளும், சேனாவும், தளபதிகளும் அதிர்ந்து நின்றனர்.

தான் கலையில் அங்கே வரவே இல்லை என விளக்கினார் சேனா.வந்தது யார் என குழம்பினார் அரசர்.

கோயில் அர்ச்சகர் ஓடி வந்தார்.பாண்டு ரங்கன் விக்கிரகம் முன்பு அடைப்பமும், சில பொற்காசுகளும் சவரக்கத்தியும் இருப்பதாகவும் பூட்டியிருந்த கோயிலில் அது வந்தது எப்படி என்பது தெரியவில்லை என்றும் சொன்னார்.

"பாண்டுரங்கா..பக்தனுக்காக சவரமும் செய்தாயோ?" என அடியற்ற மரம் போல் வீழ்ந்தார் சேனா.

சேனாவின் பாதத்தில் வீழ்ந்தான் மன்னன்.அவரை தனது குருவாக ஏற்று அரசவையில் அமர வைத்தான்.அவந்தியில் அதன்பின் நாராயணாம்ருதம் கரைபுரண்டு ஓடலாயிற்று.



--
செல்வன்

www.holyox.blogspot.com

"The United States did not invent slavery. It invented freedom.Someone name me another country on earth that fought a civil war to make men equal"- Rush Limbaugh

devoo

unread,
Jul 21, 2010, 6:43:34 AM7/21/10
to மின்தமிழ்
சிறந்த பதிவு,
சேனா நாயீ வாழ்ந்தது பண்டரிபுரத்தில்

தேவ்


On Jul 21, 3:22 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
>  324.வைணவத்தில் விளிம்பு நிலை

> மாந்தர்<http://holyox.blogspot.com/2007/08/324_23.html>
>  <http://www.vittaldas.com/Images/BhakthaVijayam/BV-Vittal.gif>


>
> வைணவத்தில் ஜாதி மதம்,ஆண் பெண் என்று எந்த பேதமுமின்றி அடியார், அமலனாதிபிரான்
> என்ற ஒரே உறவுமுறை தான் நிலவுகிறது. வைணவ பக்தி இலக்கியத்தில் ஆண் உண்டு, பெண்
> உண்டு, அரவாணிகள் உண்டு, பிராமணர் உண்டு,அரசன் உண்டு,விவசாயி உண்டு, குயவர்
> உண்டு, நாவிதர் உண்டு, தலித் உண்டு, இந்து முஸ்லிம் சீக்கியர் கிறிஸ்தவர் என்று
> பல மதத்தவர் உண்டு. தேவர் உண்டு,கந்தர்வர் உண்டு, அசுரரும் யாக்காதரும் உண்டு.
> ஏன்? யானை, பாம்பு, குரங்கு, கழுகு போன்ற மிருகங்கள் கூட உண்டு.
>
> எந்த பேதமுமின்றி உலகம் முழுவதற்கும் ஆண், பெண், மரம், மட்டை, செடி, கொடி என
> பிரித்து பார்க்காமல் ஒளி வழங்கும் சூரியனை போல் பேதமற்றவன் எம்பெருமான்.
> அப்படிப்பட்ட வைணவ தருமத்தின் தூண்களாக விளங்கும் விளிம்பு நிலை மாந்தர்களின்
> வரலாற்றை தொகுக்கும் முயற்சியே இது.
>

> *சேனா நாவிதர் *
> **

srirangammohanarangan v

unread,
Jul 21, 2010, 9:24:40 AM7/21/10
to mint...@googlegroups.com
செல்வன் சார்,
 
இதைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். உங்களுடைய எழுத்து வன்மையாலும், திறந்த மனத்தின் கேள்வியாலும் நீங்கள் வந்தடைய வேண்டும் என்று நான் விரும்பியது மலர்வதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Jul 21, 2010, 9:32:14 AM7/21/10
to mint...@googlegroups.com
பேதங்களைக்  களையக் கூடிய  மிக ஆரோக்கியமான    சிந்தனை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
21-7-10 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

செல்வன்

unread,
Jul 22, 2010, 1:48:12 AM7/22/10
to mint...@googlegroups.com
தேவ் ஐயா, ஸ்ரி ரங்கம் மோகரங்கன் ஐயா, தேனி ஐயா

உங்கள் வாழ்த்துக்கு நன்றி

மோகனரங்கன் ஐயா

எனக்கு எப்பவுமே மாயகண்ணன் மேல் மிகுந்த அன்பு உண்டு. என் உள்ளம் திருடிய கள்வன் அவன்



--
செல்வன்

www.holyox.blogspot.com

I love my freedom.  I love my America.  ~Jessi Lane Adams

செல்வன்

unread,
Jul 22, 2010, 1:52:11 AM7/22/10
to mint...@googlegroups.com

'இராமன்' என்னும் செம்மை சேர் நாமம்

பஞ்சம் பிழைக்க ஒரு கணவனும் மனைவியும் வெளியூருக்கு புறப்பட்டார்கள்.காட்டு வழியே போனார்கள்.கள்வர் பயம் நிரம்பிய காடு."நம்மிடம் காசா இருக்கு?" என தைரியப்படுத்திக் கொண்டு போனார்கள்.கள்வர் கூட்டம் குறுக்கிட்டது.கணவனை அடித்து போட்டுவிட்டு மனைவியை தூக்கிக்கொண்டு போய் விட்டது.

அடிபட்ட கணவன் எழுந்தான்.அழுதான்.காடெங்கும் மனைவியை தேடி பைத்தியகாரன் மாதிரி அலைந்தான்.புலியின் வாயில் சிக்கிய புள்ளிமான் மீண்டா வரும்?அவள் கிடைக்கவில்லை.பித்தனை போல் அழுதுகொண்டு இவன் வீடு திரும்பினான். அவன் தாய் தந்தையர் அவனை தேற்றினர்.இன்னொரு மணம் செய்துகொள் என்றனர்.முடியாது என்று சொல்லிவிட்டான்.நடைபிணமாக வாழ்ந்தான்.

சில மாதங்கள் ஓடின. நடுஇரவில் அவன் வீட்டு கதவு தட்டப்பட்டது.கதவை திறந்தால் நிற்பது கள்வரிடமிருந்து தப்பி வந்த அவன் மனைவி.புகை படிந்த ஓவியமாய் எதிரே அவன் மனைவி.அவன் முகத்தில் விழிக்கவே அவளுக்கு தைரியமில்லை.உயிரை விட்டுவிடத்தான் நினைத்தாளாம்.கடைசியாய் அவன் முகத்தை பார்த்து விட்டு சாக விரும்பினாளாம்.

"இங்கே ஏன் வந்தாய்?" என உறுமினர் கணவன் வீட்டார்.

"மானமிழந்தவளே போய் கிணற்றில் குதித்திருக்க வேண்டியது தானே" என்றர் மாமனார்.

"அடுத்தவன் தொட்ட வினாடியே கற்புக்கரசிக்கு உயிர் போயிருக்க வேண்டாமா?" என்றார் மாமியார்.

"இப்போதும் ஒன்றும் கெடவில்லை.சிதை மூட்டுகிறேன்.தீக்குளித்து செத்துத்தொலை" என்றான் கொழுந்தன்.

"உயிரே போனாலும் இவளை விடேன்" என பிடிவாதமாய் நின்றான் கணவன்.

அக்கம்பக்கத்தார் எல்லாரும் கூடினர்.என்ன செய்வது என யாருக்கும் தெரியவில்லை. "மகான் கபீர்தாசரிடம் போகலாம்.அவர் என்ன சொல்கிறாரோ அதை ஏற்கலாம்" என ஒருமித்த முடிவானது.நேராக கபீர் தாசரின் வீட்டுக்கு போனார்கள்.கபீர் தாசர் அங்கில்லை.அவரின் சீடரான கமலதாசர் தான் இருந்தார்.அவரிடம் விஷயத்தை சொல்லி என்ன செய்வது என கேட்டார்கள்.

"அடடே" என்றார் கமலதாசர்."எங்கே அந்தப்பெண்" என்று கேட்டார்.அவர் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

"நான் சொல்லுவது போல் செய்.உன் பாவம் தீர்ந்துவிடும்.நீ சுத்தமானவளாகிவிடுவாய்" என்றார். "ராமா,ராமா,ராமா என 3 தடவை சொல்" என்றார்.அந்த பெண் அப்படியே சொன்னாள்.பர்ணசாலையிலிருந்து கங்கை நீரை எடுத்து வரச்சொன்னார் கமலதாசர்.அவள் தலையில் ஊற்றினார்."உன் பாவம் தொலைந்தது.சென்று உன் கணவனுடன் வாழ்க" என்றார்.மகிழ்ச்சியோடு அக்கூட்டத்தினர் வீடு திரும்பினர்.

கபீர்தாசர் வந்ததும் தாம் செய்த நல்ல காரியத்தை பெருமையோடு எடுத்துரைத்தார் கமலதாசர்.கபீர்தாசருக்கு சந்தோஷம் வரும் என நினைத்தார்.ஆனால் கபீரின் முக வாடியது.

"கமலதாசா" என்றார் கபீர்."ஒரு முறை பக்தியோடு "ராமா" என்று சொன்னாலே போதுமே?அப்படி சொன்னவனின் 7 ஜென்ம வினைகளையும் அகற்றி,இம்மை,எழுமை ஆகிய நோய்க்கும் அருமருந்தாகி, பிறப்பினை அறுத்து முக்தியையும், முக்தியை விட இன்பமயமான சச்சிதானந்தத்தையும் அருளவல்லது ராமநாமம்.அதை நீ 3 தரம் சொல்ல சொல்லியிருக்கிறாய்.அதுவும் போக கங்கை நீரை வேறு ஊற்றியிருக்கிறாய்.ராமநாமம் போக்காத பாவத்தையா கங்கை நீர் போக்கும்?ராமநாமம் மீது நீ கொண்ட நம்பிக்கை இவ்வளவுதானா?" என்றார் கபீர் தாசர்.

விக்கித்து நின்றார் கமலதாசர்.

*********
 ".....மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை,
முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை,
 தானேஇம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை,
 'இராமன்' என்னும் செம்மை சேர் நாமம் தன்னை,
கண்களின் தெரியக் கண்டான்....."
************

devoo

unread,
Jul 22, 2010, 4:52:50 AM7/22/10
to மின்தமிழ்
திரு செல்வன், அடியார் வாழ்க்கையைப் பதிவிடத் தொடங்கி இருப்பதும்
பண்டரீநாதன் உகந்த ஆடி ஏகாதசி நன்னாளில்; ஸ்ரீ மஹா பக்தவிஜயமும் நம்
மரபுக்கேற்ப நாள் பார்த்துத்தான் விஜயம் செய்துள்ளது

ஜய பாண்டுரங்க விட்டல !

தேவ்


On Jul 21, 3:22 am, செல்வன் <holy...@gmail.com> wrote:

>  324.வைணவத்தில் விளிம்பு நிலை

> மாந்தர்<http://holyox.blogspot.com/2007/08/324_23.html>
>  <http://www.vittaldas.com/Images/BhakthaVijayam/BV-Vittal.gif>


>
> வைணவத்தில் ஜாதி மதம்,ஆண் பெண் என்று எந்த பேதமுமின்றி அடியார், அமலனாதிபிரான்
> என்ற ஒரே உறவுமுறை தான் நிலவுகிறது. வைணவ பக்தி இலக்கியத்தில் ஆண் உண்டு, பெண்
> உண்டு, அரவாணிகள் உண்டு, பிராமணர் உண்டு,அரசன் உண்டு,விவசாயி உண்டு, குயவர்
> உண்டு, நாவிதர் உண்டு, தலித் உண்டு, இந்து முஸ்லிம் சீக்கியர் கிறிஸ்தவர் என்று
> பல மதத்தவர் உண்டு. தேவர் உண்டு,கந்தர்வர் உண்டு, அசுரரும் யாக்காதரும் உண்டு.
> ஏன்? யானை, பாம்பு, குரங்கு, கழுகு போன்ற மிருகங்கள் கூட உண்டு.
>
> எந்த பேதமுமின்றி உலகம் முழுவதற்கும் ஆண், பெண், மரம், மட்டை, செடி, கொடி என
> பிரித்து பார்க்காமல் ஒளி வழங்கும் சூரியனை போல் பேதமற்றவன் எம்பெருமான்.
> அப்படிப்பட்ட வைணவ தருமத்தின் தூண்களாக விளங்கும் விளிம்பு நிலை மாந்தர்களின்
> வரலாற்றை தொகுக்கும் முயற்சியே இது.
>

> *சேனா நாவிதர் *
> **
>

> me another country ...
>
> read more »

srirangammohanarangan v

unread,
Jul 22, 2010, 2:28:50 PM7/22/10
to mint...@googlegroups.com
மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமந்திரத்தைச் சொன்னீர் ஐயா!
செல்வரே! உமக்கு என் வணக்கம்.
 
அப்படியே இந்தச் சுட்டியையும் ஒரு முறை நோக்குக
 

செல்வன்

unread,
Jul 22, 2010, 3:20:51 PM7/22/10
to mint...@googlegroups.com

கண்டதும் காதல்

செல்வன்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605056&format=html

ராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு மையலில் வீழ்வது வெகு பிரசித்தியானது.ஆனால் கம்ப ராமாயணம் முழுக்க அவர்கள் இருவரையும் முதல் முதல் கண்டவர்கள் காதலில் வீழ்ந்த கதைகளை கம்பன் சுவாரசியமாக சொல்லுகிறான்.

மிதிலையில் ராமன் உலா வருகிறான்.அவனை கண்ட மகளிர் அந்த விநாடியே மையலில் வீழ்ந்தனராம்.

பஞ்சு அணி விரலினார் தம் படை நெடுங் கண்கள் எல்லாம்,

செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையைச் சேர்ந்தவோ தாம்?

மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம், மாதரார் தம்

அஞ்சன நோக்கம் போர்க்க, இருண்டதோ? அறிகிலேமால்

அத்தனை கருவிழிகள் காகுத்தன் மேனி சேர்ந்து தான் அவன் மேனி கருத்ததோ என வியக்கிறான் கம்பன்.

ராமனின் முழு உருவையும் பார்த்து மையலில் யாரும் வீழவில்லையாம்.அவன் தோளை கண்டவர் தோளை மட்டுமே பார்த்தனராம்.தோளைகண்டவருக்கு கண்னை அதிலிருந்து எடுக்கவே மனதில்லையாம்.தாளை கண்டார் தாளையே பார்த்தனராம்.அவன் முழு வடிவையும் எந்த வாள் விழியும் காணவில்லையாம்.(அடிமுடி காண முடியாத பரப்பிரம்மத்தின் முழு உருவையும் மானிடரால் காண முடியாதன்றோ?)

தோள் கண்டார், தோளே கண்டார்; தொடு கழல் கமலம் அன்ன

தாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும், அஃதே;

வாள் கொண்ட கண்ணார் யாரே, வடிவினை முடியக் கண்டார்? -

அம்புகளை எறிந்து எறிந்து பொன் சிலை போலும் அழகு படைத்த காமனுக்கு அம்புறாத்தூணியே தீர்ந்து போய்விட்டதாம்.இத்தனை பெண்கள் ஒரே நேரத்தில் மையலில் வீழ்ந்தால் அம்புகளுக்கு அவன் எங்கு போவான்?அர்ச்சுனன் போல் அம்புகள் தீரா தூணியையா வைத்திருக்கிறான் காமன்?அம்புகள் தீர்ந்ததால் உடைவாளை எடுக்க வேண்டிவந்ததாம் காமனுக்கு.

வையம் பற்றிய மங்கையர் எண்ணிலர்,

ஐயன் பொற்புக்கு அளவு இலை ஆதலால்,

எய்யும் பொன் சிலை மாரனும், என் செய்வான்?

கை அம்பு அற்று, உடைவாளினும் கை வைத்தான்

காதலை மறைக்க எண்ணினாளாம் ஒரு பெண்.மனதை மறைக்கலாம்.முகத்தை கூடவா மறைக்க முடியும்?முகத்தில் தோன்றும் காதல் உணர்ச்சியை அவளால் மறைக்கவே முடியவில்லையாம்

புனம் கொள் கார் மயில் போலும் ஓர் பொற்கொடி,

மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள்;

அனங்கவேள், அது அறிந்தனன்; - அற்றம் தான்,

மனங்கள் போல, முகமும் மறைக்குமே?

இந்த பெண்களாவது பரவாயில்லை.சீதையை கண்ட ராவனன் நிலை மிகவும் மோசமாகிவிடுகிறது.அதுவும் கண்டதும் காதல் தான்.10 தலை,20 கண்கள் படைத்த ராவனன் சீதையை கண்டதும் தான் தன் 20 கண்களின் சிறுமையை உணர்கிறானாம்.காணக்கண்கோடி வேண்டும் சீதையின் அழகை காண வெறும் 20 கண்கள் தானா என்று அவனுக்கு தோன்றுகிறது.ஆயிரம் கண்களாவது வேண்டாமா இவள் அழகை காண?வெறும் 20 கண்கள் எதற்கு போதும் என வருந்துகிறானாம்.

'சேயிதழ் தாமரைச் சேக்கை தீர்ந்து இவண்

மேயவன் மணி நிறம் மேனி காணுதற்கு

ஏயுமே இருபது? இங்கு இமைப்பு இல் நாட்டங்கள்

ஆயிரம் இல்லை!' என்று, அல்லல் எய்தினான்

கஷ்டப்பட்டு பிடித்த மூவுலகங்களையும் இவள் காலடியில் ஒப்புவித்துவிட்டு,தன் தேவிமாரையும்,தான் பிடித்த இந்திரன் முதலான தேவ்ர்களையும் இவளுக்கு அடிமையாய் தந்துவிட்டு மூவுலகையும் இவள் ஆள இவளுக்கு நானும் அடிமையாய் இருந்து இனி ஏவல் செய்வேன் என மூவுலகும் ஆளும் லங்காபதி எண்ணுகிறானாம்.

'தேவரும், அவுணரும், தேவிமாரொடும்,

கூவல்செய் தொழிலினர், குடிமை செய்திட,

மூஉலகமும் இவர் முறையின் ஆள, யான்

ஏவல் செய்து உய்குவென், இனி' என்று உன்னினான்

தன் தங்கை சூர்ப்பனகை மீது அவனுக்கு திடீர் பாசம் வந்துவிடுகிறது.அவள் அன்றோ இப்படி ஒரு புவன மோகினியை தனக்கு காட்டினாள்?அவளுக்கு என்ன பரிசு கொடுத்தால் தகும்?தன் ராஜ்ஜியம் முழுவதையும் பரிசாக தந்தாலும் தகுமே என எண்ணுகிறானாம் இராவனன்.

தளை அவிழ் குழல் இவட் கண்டு தந்த என்

இளையவட்கு அளிப்பென், என் அரசு' என்று எண்ணினான்

இதே போல் சூர்ப்பனகை,அனுமன்,வாலி முதலியானோர் இவர்களை கண்டதும் காதலில் வீழ்ந்த காட்சிகளை கம்பன் அழகாக வர்ணிக்கிறான்.வாலி காதலில் வீழ்ந்த காட்சி மிகவும் ரசமானது.ராமன் அம்பு பட்டு வீழ்ந்த வாலி முதலில் தரிசிப்பது ராமனை அல்ல. ராம நாமத்தையே.ராம பாணத்தில் பொறிக்கப்பட்ட ராமநாமத்தை கண்டு காதலில் வீழும் வாலி அதன் பின் ராமனை காண்கிறான்.

வால்மிகியின் வாலி வதைப்படலத்தில் வாலி ராமனை வசை பாடுகிறான்.ஆனால் பரம பாகவதனான கம்பன் அதற்கு இடம் தரவில்லை.கம்ப ராமாயணத்தில் வாலி வசை பாடுவதில்லை.ஸ்தோத்திரம் பாடுகிறான்.

தன் மேல் அம்பு எய்து கொன்றவனை வசைபாட வாலியால் முடியவில்லை.அவனை போற்றி துதிக்கிறான்.அவன் மேனி அழகை,குணநலன்களை புகழ்ந்து பாடுகிறான்.அதை படித்தாலே வாலி ராமன் மேல் கொண்ட காதல் தான் தெரியும்.அல்ல..அல்ல.. கம்பன் ராமன் மேல் கொண்ட காதல் தான் தெரியும்.

வாலி மீது ராமன் அம்பு எய்ததும் மண்ணில் வீழ்ந்த வாலி அந்த அம்பை பறிக்கிறான்.யார் அந்த அம்பை எய்தது என உற்று நோக்குகிறான்.அந்த அம்பில் அவன் எதை கண்டான்?

கம்பனின் கன்னல் தமிழில் கேளுங்கள்

மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே

இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, 'இராமன்' என்னும்

செம்மை சேர் நாமம் தன்னை, கண்களின் தெரியக் கண்டான்

ராம நாமம் மீது கம்பன் கொண்ட காதல் ராமன் மேல் கொண்ட காதலை விட மேலானதாக தோன்றுகிறது.அந்நாமத்தை வாலி கண்டதும் சாலப்பொருத்தம் தான்.மரணத்தருவாயில் இருப்போனுக்கு ராமநாமத்தை விட சிறந்த துணை எது?

வாலி ராமனை இகழ்ந்துரைக்கிறான்....எப்படி திட்டுகிறான்?கம்பனின் வாயால் கேளுங்கள்.

'வாய்மையும், மரபும், காத்து, மன் உயிர் துறந்த வள்ளல்

தூயவன், மைந்தனே! நீ, பரதன்முன் தோன்றினாயே!

தீமைதான், பிறரைக் காத்து, தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ?

தாய்மையும் அன்றி, நட்பும், தருமமும், தழுவி நின்றாய்

திட்டும் வார்த்தைகளாம் இவை.நல்ல அழகு தான் போங்கள்.தாய்மையும்,நட்பும் தருமமும் தழுவி நின்றாய் என திட்டு கிடைக்கிறது.

திட்டு மேலும் தொடர்கிறது.

'குலம் இது; கல்வி ஈது; கொற்றம் ஈது; உற்று நின்ற

நலம் இது; புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ?

ராமனின் புவன மோகனம் வாலியின் நெஞ்சை கொள்ளை கொண்டுவிட்டதாம்.தடுமாறுகிறான்.

'கோ இயல் தருமம், உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் -

ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! - உடைமை அன்றோ?

ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த

தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை

தன் மீது அம்பெய்தவனை,தன் உயிரை போக்கியவனை எப்படி வர்ணிக்கிறான் என பாருங்கள்.

ஓவியத்து எழுத ஒண்ணா உருவமாம் காகுத்தனுக்கு.கொடுமையே உருவானவனே என சொல்ல வேண்டியவன் புகழ் மாலை போட்டுக் கொண்டுருக்கிறான்.சானகியை எப்படிக்கவி பாடுகிறான் என பாருங்கள்.சனகன் பெற்ற அன்னமாம்.அமுதாய் வந்த தேவியாம்.

"அமுதாய் வந்த தேவியை பிரிந்த திகைப்பால் செய்தாயா என் தகப்பனே?" என கனிவோடும் காதலோடும் கேட்கிறான் வாலி.

இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால் எப் பிழை கண்டாய்? அப்பா!

பரக்கழி இது நீ பூண்டால், புகழை யார் பரிக்கற்பாலார்?

'ஒலி கடல் உலகம் தன்னில் ஊர் தரு குரங்கின் மாடே,

கலியது காலம் வந்து கலந்ததோ? - கருணை வள்ளால்!-

தன் மீது அம்பெய்திவனை தகப்பனே என்கிறான்.கருணை வள்ளலே என்கிறான்.

ராமனை இந்த லட்சணத்தில் திட்டி விட்டு லட்சுமணனை பார்த்து என்ன சொல்கிறான்?அவனைப்பார்த்தாவது கோபம் வருகிறதா?இல்லையே எப்படி வரும்?

'தாய் என உயிர்க்கு நல்கி, தருமமும், தகவும், சால்பும்,

நீ என நின்ற நம்பி! நெறியினின் நோக்கும் நேர்மை

நாய் என நின்ற எம்பால், நவை அற உணரலாமே?

தீயன பொறுத்தி' என்றான் - சிறியன சிந்தியாதான்

"தருமமாய் நின்ற தம்பியாம்."

"தாயாய் நின்று அருள் செய்தானாம்"

மரணப்படுக்கையிலும் கண்டவனை காதல் கொள்ள வைத்த வடிவழகாம் கம்பனின் ராமனுக்கு.

செல்வன்

unread,
Jul 22, 2010, 3:19:28 PM7/22/10
to mint...@googlegroups.com
நன்றி ஐயா...ராம்போலோ இழையை படித்து கொண்டிருக்கிறேன்.மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.

2010/7/22 srirangammohanarangan v <ranga...@gmail.com>

மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமந்திரத்தைச் சொன்னீர் ஐயா!
செல்வரே! உமக்கு என் வணக்கம்.
 
அப்படியே இந்தச் சுட்டியையும் ஒரு முறை நோக்குக
 

N. Kannan

unread,
Jul 22, 2010, 7:58:10 PM7/22/10
to mint...@googlegroups.com
2010/7/23 செல்வன் <hol...@gmail.com>:

> மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
> தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
> இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, 'இராமன்' என்னும்
> செம்மை சேர் நாமம் தன்னை, கண்களின் தெரியக் கண்டான்
>

கம்பன் காட்டும் இந்தப் பண்பு வளர வேண்டும் மின்தமிழில் என்றுதான் நான்
கூப்பாடு போடுகிறேன். எல்லா நாடகங்களிலும் கதாநாயகன் இருப்பான் வில்லன்
இருப்பான். ஒருவரையொருவர் வெறுப்பர். புண்மொழி பேசுவர். ஆனால் தமிழ்ப்
பண்பு காட்டும் காவியத்தில் இந்தக் கருப்பு - வெள்ளை ஃபார்முலா கிடையாது.
கெட்டவன் என்பதே கிடையாது. எல்லோரும் இறைவன் மேல் காதல் கொண்ட
பாகவதர்களே! அளவு கோல் வேறுபடுகிறது. சிலர் எல்லாம், `தான்` என்று
பார்க்கின்றனர், சிலர் எல்லாம் `அவன்` என்று பார்க்கின்றனர். அது இராமனே
ஆனாலும் நம் தவறுகள் emotional decision எடுக்கும் போது வருவன என்று
கம்பன் சொல்கிறான் பாருங்கள்:

ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும்

ஆகா! மின்தமிழில் இப்படியான மயக்கம், திகைப்பு வரும் போது ஒருவரையொருவர்
சாடி விடுகிறோம். உண்மையில் யார் எதிரி, யார் நண்பன்?

”மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை!” மனதில் நினைத்திருக்கும்
போது யார் எதிரி? யார் பகைவன். பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே!
பகைவனுக்கு அருள்வாய்!!

அருமையாக போகிறது செல்வன். வாழ்த்துக்கள்.

க.>

Tthamizth Tthenee

unread,
Jul 23, 2010, 4:01:03 AM7/23/10
to mint...@googlegroups.com
நம் உள்ளே  உறையும்  இறைவனே  எல்லோர் உள்ளத்திலும் உறைகிறான்  என்பதை முழுமையாக  உணர்ந்தால்  எப்படி அடுத்த  உயிரை  வெறுக்க முடியும்?
 
அப்படி  நாம் யாரையேனும் வெறுத்தால்  நம்மை நாமே  வெறுப்பதற்கு சமமல்லவோ?
 
நமக்குளிருக்கும் இறைவன்  வாதம் செய்கிறான் என்று எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டோமோ?
 
“நக்கீரனுடன்  வாதம்   செய்த   இறைவன் 
 
நக்கீரன் உள்ளிருந்தும் வாதம் செய்தான்  இறைவனுடன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
23-7-10 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Jul 23, 2010, 4:09:55 AM7/23/10
to mint...@googlegroups.com


2010/7/22 N. Kannan <navan...@gmail.com>

ஆகா! மின்தமிழில் இப்படியான மயக்கம், திகைப்பு வரும் போது ஒருவரையொருவர்
சாடி விடுகிறோம். உண்மையில் யார் எதிரி, யார் நண்பன்?

”மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை!” மனதில் நினைத்திருக்கும்
போது யார் எதிரி? யார் பகைவன். பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே!
பகைவனுக்கு அருள்வாய்!!

அருமையாக போகிறது செல்வன். வாழ்த்துக்கள்.

நன்றி ஐயா

முகம் தெரியாத இணையத்தில் சண்டைகள் வர காரணம் என்ன?அடுத்தவர் தன் கருத்தால் நமக்கு அறிமுகமாகிறார்.கருத்துடன் சண்டையிடுவதாக நினைத்துகொண்டு ஆளுடன் சண்டை இடுகிறோம்.இந்த நிழல் சண்டைகளில் யாரும் எதிரியுமல்ல,நண்பருமல்ல.

Innamburan Innamburan

unread,
Jul 23, 2010, 4:12:46 AM7/23/10
to mint...@googlegroups.com
இந்த நிழல் சண்டைகளில் யாரும் எதிரியுமல்ல,நண்பர்களே. நட்பு வளர்கிறது.
இன்னம்பூரான்

2010/7/23 செல்வன் <hol...@gmail.com>


2010/7/22 N. Kannan <navan...@gmail.com>


செல்வன்

unread,
Jul 23, 2010, 4:19:37 AM7/23/10
to mint...@googlegroups.com


2010/7/23 Innamburan Innamburan <innam...@googlemail.com>

இந்த நிழல் சண்டைகளில் யாரும் எதிரியுமல்ல,நண்பர்களே. நட்பு வளர்கிறது.
இன்னம்பூரான்


உண்மைதான் ஐயா.என்னுடன் நிறைய சண்டை பிடித்த பலர் எனக்கு நண்பர்களாக இருக்கின்றனர்.நான் எழுதுவதை சகிச்சுக்க பழகிகிட்டாங்க போல:-)

செல்வன்

unread,
Jul 24, 2010, 12:05:39 AM7/24/10
to mint...@googlegroups.com

336.ஏழ்மையை அழிக்கும் ஏழுமலை

தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருகை தரும் அளவுக்கு பெருமை வாய்ந்த ஸ்தலம் திருப்பதி. தொல்காப்பியம் முதலான தமிழ்நூல்களில் வணங்கப்படும் திருமலை கோயில், தமிழக வைணவ பக்தி வரலாற்றில் திருவரங்கத்துக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த தலமாக கருதப்படுகிறது.இதன் வருட வருமானம் மூச்சை பிடித்து கொள்ளுங்கள்...சுமார் 800 கோடி.தினசரி உண்டியல் வசூல் மட்டும் 1 கோடி.ஒரே கட்டில் ஐம்பது லட்சம்,1 கோடி என காணிக்கை செலுத்தும் பக்தர்களும் உண்டு.

திருப்பதியில் வரும் இத்தகைய அளப்பரிய வருமானம் அரசுக்கு சென்று சேர்கிறது.மீதமுள்ள வருமானத்தில் மக்களுக்கு பல நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது திருப்பதி தேவ்ஸ்தானம்.

திருமலை தேவ்ஸ்தானத்தில் சுமார் 14,000 பேர் நேரடி வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.அதுபோக திருப்பதி நகரின் பொருளாதாரமே திருமலை கோயிலை நம்பித்தான் இருக்கிறது என்றால் மிகையல்ல.திருமலை தேவ்ஸ்தானத்தின் தலைவர் கருனாகர ரெட்டி விளிம்பு நிலை மக்களுக்கு பயனுள்ள பல திட்டங்களை திருக்கோயில் மூலம் செயல்படுத்தி வருகிறார்."தலித கோவிந்தம்" என்ற திட்டத்தின் கீழ் உற்சவர் சிலையை தலித் மக்கள் பகுதிகளுக்கு கொண்டு சென்று பெருமாள் - தாயார் சிலைகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடத்தப்படுகிறது. ஜாதி கொடுமை தலைவிரித்தாடும் கிராமங்களில் அக்கொடுமை குறைய இது ஒரு வழிகாட்டியாக அமையும் என்கிறார் ரெட்டி.

பெருமாள் தாயாருக்கு மட்டும் திருமணம் நடந்தால் போதுமா?வருடா வருடம் ஏழைகளுக்கு 2 பவுன் செலவில் தங்கம் அணிவித்து, திருமண உடைகளையும் தந்து திருகோவில் சார்பில் திருமணம் நடைபெறுகிறது.இதுவரை சுமார் 15,000 ஏழை தம்பதியினர் இதனால் பயனடைந்துள்ளனர்

ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களிலும், மமவட்டத்துக்கு 20 கோடி செலவில் திருமலை திருகோயில் சார்பில் பள்ளிகள் துவக்கப்பட்டு இலவச கல்வி அளிக்கப்படுகிறது.இந்திய கலாசாரம், பண்பாடு ஆகியவையும் இப்பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.

திருப்பதி தேவ்ஸ்தானம் சார்பில் தொழுநோயாளிகள் மருத்துவமனை நடத்தப்படுகிறது.நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை போக உணவு மற்றும் உறைவிடம் முற்றிலும் இலவசமாக சிகிச்சை காலம் முழுக்க வழங்கப்படுகிறது.(6 முதல் 18 மாதங்கள்).

பாலா மந்திர் என்ற பெயரில் அனாதை ஆசிரமம் நடந்து வருகிறது.சுமார் 500 குழந்தைகள் இதில் ஒரே சமயத்தில் சேர முடியும்.இவர்களுக்கு உணவு,உறைவிடம் மற்றும் கல்வி போக டெய்லரிங், போன்ற வேலைவாய்ப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

வேங்கடேஸ்வரா மெடிகல் சயின்ஸ் ஆஸ்பத்திரி மூலம் ராயலசீமா மாவட்டத்தின் ஏழைகளுக்கு மிக குறைந்த செலவில் வைத்தியம் செய்யப்படுகிறது.

காது கேட்காத 350 குழந்தைகளுக்கு இலவச பள்ளியும் நடத்தப்படுகிறது.10 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் சிறப்பான கவனிப்பு இந்த குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.இந்த பள்ளி மாணவ்ர்கள் நார்மலாக இருக்கும் பள்ளி மாணவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு விளையாட்டு போட்டிகளில் பரிசுகளை வெல்லும் அளவுக்கு தயார் படுத்தப்படுகிறார்கள்.படிப்பு முடிந்தபின் மாணவர்கள் பலர் திருப்பதி கோயிலிலேயே வேலை வாய்ப்பும் பெறுகிறார்கள்.விரைவில் இந்த பள்ளியை கல்லூரியாக மாற்றும் திட்டமும் உள்ளதாம்.

அதுபோக இயற்கை வளங்களை காப்பதில் திருப்பதி பெருமாள் ஒரு நல்ல முன் உதாரணமாக திகழ்கிறார்.ஆம்..80 கி.மிக்கு குழி வெட்டி சுமார் 3884 சிறு.குறு அணைகட்டுகளை கட்டி சேஷாதிரி மலையில் மழைநீர் சேகரிக்கப்படுகிறது.இதன்மூலம் வருடத்துக்கு 1 டி.எம்.சி மழை நீர் மக்களுக்கு சேமிக்கப்படுகிறது.இதுபோக சுமார் 65 லட்சம் மரங்கள் தேவஸ்தானத்தால் நடப்பட்டு அதுபோக சுமார் 40 டன் அளவுக்கு விதைகளும் நடப்பட்டுள்ளன.

திருப்பதி நகருக்கும் கோயிலுக்கும் ஏராளமான மின்சாரம் தேவைப்படுமே?அதை காற்று மூலம் உற்பத்தி செய்தால் தேசத்துக்கு எத்தனை நல்லது?45 கோடி செலவில் நிறுவப்பட்ட காற்ராலைகள் மூலம் சுமார் 45 மெகாவாட் மின்சாரத்தை வருடத்துக்கு உற்பத்தி செய்கிரது திருமலை.இதன்மூலம் வருடம் சுமார் 5.73 கோடி ரூபாய் அளவுக்கு மின்சாரம் சேமிக்கப்படுகிறது.

தினமும் அதிக அளவில் அன்னதானம் நடைபெறும் திருப்பதியில்(25,000 பேர்), சுமார் 15,000 பேருக்கு சூரிய ஒளியை பயன்படுத்தி உணவு தயாரிக்கப்படுகிறது.மொட்டை அடித்த பிறகு பக்தர்கள் சுடுநீரில் குளிக்க வேண்டுமே?அதற்கும் சூரியனே கைகொடுக்கிறார்.ஆம்..தினமும் 1.63 லட்சம் லிட்டர் சுடுநீர் சூரிய வெப்பத்தில் காய்ச்சப்பட்டு சுமார் 22.5 லட்சம் யூனிடுகள் மின்சாரம் சேமிக்கப்படுகிறது

மக்களுக்கு ஒரு திருக்கோயில் எப்படி உதவ முடியும் என்பதில் வழிகாட்டியாக இருக்கும் திருமலையை மனதார வாழ்த்தி வணங்குவோம். திருமலை பாலாஜி போல் நாமும் தேசத்துக்கு சேவை செய்வோம்.

நன்றி:

Frontline magazine

திருமலை திருப்பதி தேவஸ்தானம்

kalairajan krishnan

unread,
Jul 27, 2010, 3:44:11 AM7/27/10
to mint...@googlegroups.com
வணக்கம்
திருப்பதி திருமலை ​தேவஸ்தானம் ​தொடர்பான ​செய்தியை ​வெளியிட்டதற்குத் திரு ​செல்வன் அவர்களுக்கு எனது நன்றியைத் ​தெரிவித்துக் ​கொள்கிறேன்,
 
திருப்பதி திருமலை ​தேவஸ்தானம் திருக்​கோயில் பற்றிய நூல்களை அச்சிட்டு ​வெளியிட நிதியுதவியும் ​செய்து வருகிறது
 
எனது
திருப்பூவணக் காசி என்ற நூலை ​வெளியிட ரூபாய் 19,000-00
மற்றும்
திருப்பூவணப் புராணம் என்ற நூலை ​வெளியிட ரூபாய் 30,000-00
வழங்கியது,
இந்த உதவி கிடைக்கா விட்டால் என்னால் திருப்பூவணம் ​தொடர்பான அரிய நூலான திருப்பூவணப் புராணத்தை பதிப்பித்து ​வெளியிட்டிருக்க முடியாது - முடியவே முடியாது
 
இதற்காகச் சைவ அன்பர்கள் அனைவரும்
குறிப்பாகத் திருப்பூவணத்து அன்பர்கள் அனைவரும் ஏழுமலையானுக்கு என்றென்றும் நன்றி ​​போற்ற ​வேண்டும்,
 
திருக்கோயில்கள் ​தொடர்பான நூல்களை ​வெளியிட விரும்புவோர்  திருப்பதி ​தேவஸ்தான நிதியுதவிக்கு விண்ணப்பித்து ​பெற்றுக் ​கொள்ள ​​வேண்டுகிறேன்,
 
அன்புடன்
கி, காளைராசன்
 
 
 
 


 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
முனைவர் கி, காளைராசன்
உதவிப் பதிவாளர்
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி - 630 003
தமிழ்நாடு, India.
Dr. K. Kalairajan (Cell: 94435 01912)
Assistant Registrar
Alagappa University
KARAIKUDI -630 003

N. Kannan

unread,
Jul 27, 2010, 4:56:07 AM7/27/10
to mint...@googlegroups.com
நன்றி நண்பரே!
 
மின்தமிழ் அன்பர் மாறன்புலவு சச்சிதானந்தம் ஐயாவும் வேங்கடவன் துணையுடன் சைவ சமய நூல்களை மொழி பெயர்த்து வருகிறார்கள்.
 
காசியை விடப் புண்ணியம் மிக்க நம் திருப்பூவணம் பெருமை என்றும் நிலைக்கும் வண்ணம் தாங்கள் மேற்கொண்ட பதிப்புகளுக்கும் வேங்கடவன் துணை இருந்தான் என்பதறிந்து மனம் மகிழ்கிறேன்.
 
வேங்கடரமண கோவிந்தன் சங்கடஹரன் என்பதை தாங்கள் வலியுறுத்திச் சொல்லியிருப்பது நன்று.
 
மின்தமிழ் பதிப்புகளில் சிலவற்றை இம்மாதிரிக் கொண்டு வரலாம் என்று தோன்றுகிறது. தேவ் சார் தலைமையில் ஒரு குழு இது பற்றி யோசிக்க விண்ணப்பிக்கிறேன்.
 
அன்புடன்
நா.கண்ணன்

2010/7/27 kalairajan krishnan kalair...@gmail.com

kalairajan krishnan

unread,
Jul 27, 2010, 5:44:24 AM7/27/10
to mint...@googlegroups.com
On 7/27/10, N. Kannan <navan...@gmail.com> wrote:
நன்றி நண்பரே!
 
மின்தமிழ் அன்பர் மாறன்புலவு சச்சிதானந்தம் ஐயாவும் வேங்கடவன் துணையுடன் சைவ சமய நூல்களை மொழி பெயர்த்து வருகிறார்கள்.
 
காசியை விடப் புண்ணியம் மிக்க நம் திருப்பூவணம் பெருமை என்றும் நிலைக்கும் வண்ணம் தாங்கள் மேற்கொண்ட பதிப்புகளுக்கும் வேங்கடவன் துணை இருந்தான் என்பதறிந்து மனம் மகிழ்கிறேன்.
 
வேங்கடரமண கோவிந்தன் சங்கடஹரன் என்பதை தாங்கள் வலியுறுத்திச் சொல்லியிருப்பது நன்று.
 
ஐயா கண்ணன் அவர்களே
தங்கள் கடிதம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்
 
உண்மையை உங்களிடம் கூரியே ஆக ​வேண்டும்
நான் திருப்பணிகள் ​மேற்கொள்வதெல்லாம் திருப்பூவணநாதருக்கே!
ஆனால் எனக்குத் திருவருள் வழங்குவது எல்லாம் அந்தத் திருவேங்கடவனே  ஆகும்!!
 
ஒன்றல்ல இரண்டல்ல எடுத்துச் ​சொல்வதற்கு
நான் ​சென்று வணங்கும் ஒவ்வொரு முறையும் நான் ​கேட்டதைக் ​கொடுத்தருளும் மகாபிரபு அந்தத் திருவேங்கடவன்
எழுபிறப்பிலும் கிடைக்காத பாக்கியங்களை அந்தப் பிரபு எனக்குத் தந்தருளியுள்ளான்,
 
நான் தான் திருப்பூவணத்தைச் சுற்றுவதிலேயே ​நேரத்தைக் கழித்துக் ​கொண்டிருக்கிறேன்
அன்புடன்
கி. காளைராசன்
 
 
​நேற்று முன்தினம் (ஞாயிறு) திருப்பூவணம் ​சென்று வழிபட்டு வந்​தேன்
திருப்பூவணத்தில் ஸ்ரீ ​பொன்னனையாள் அன்னதான அறக்கட்டளை நடத்தி வருகிறோம்,  அறக்கட்ளைக்கு அலுவலகம் அ​மைத்துக் ​கொள்ள திருக்​கோயில் நிருவாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது,
 
திருக்​கோயிலின் உள்ளே மதுரை அருள் மிகு ​சொக்கநாதர் சித்தரான சிலாவுருவம் உள்ள இடத்திற்கும் ​கோபுரத்தின் வலப்புரத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் அலுவலகம் கட்டலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது,
 
அறக்கட்டளையில் தாங்களும் ​சேர​வேண்டும் என விரும்புகிறோம்
 
 

 
மின்தமிழ் பதிப்புகளில் சிலவற்றை இம்மாதிரிக் கொண்டு வரலாம் என்று தோன்றுகிறது. தேவ் சார் தலைமையில் ஒரு குழு இது பற்றி யோசிக்க விண்ணப்பிக்கிறேன்.
 
அன்புடன்
நா.கண்ணன்

 
2010/7/27 kalairajan krishnan kalair...@gmail.com
இதற்காகச் சைவ அன்பர்கள் அனைவரும்
குறிப்பாகத் திருப்பூவணத்து அன்பர்கள் அனைவரும் ஏழுமலையானுக்கு என்றென்றும் நன்றி ​​போற்ற ​வேண்டும்,
 
திருக்கோயில்கள் ​தொடர்பான நூல்களை ​வெளியிட விரும்புவோர்  திருப்பதி ​தேவஸ்தான நிதியுதவிக்கு விண்ணப்பித்து ​பெற்றுக் ​கொள்ள ​​வேண்டுகிறேன்,
 
அன்புடன்
கி, காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Jul 27, 2010, 9:36:52 AM7/27/10
to mint...@googlegroups.com
அன்பின் முனைவர் காளைராஜன்:
 
ஆண்டவன் புகழ், அடியார் புகழ் கேட்கும் போதெல்லாம் மேனி சிலிர்கிறது. வடவேங்கடவன் பேசும் தெய்வம் என்றுதானே அத்தனை சான்றோரும் புகழ்கின்றனர். அவனும் பூவணநாதனும் வேறு, வேறா? இல்லவே இல்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா? தமிழ் மரபு அறக்கட்டளையின் முதல் நாள் கூட்டம் சென்னையில் (ஜூன் 20). அங்கொரு சித்தர் வருகிறார். கண்ணிலே ஒளி. நெஞ்சிலே அன்பு. நம் சுகுமாரன் அறிமுகப்படுத்தி வைக்கிறார். எங்கள் பேச்செல்லாம் முடிந்த பின் அவர் பேச முற்படுகிறார். அவருக்கு நா தழு தழுக்கிறது. காரணம் அவரது குருநாதர் திருப்பூவணம்!! அவர் சொன்னார் என் குருநாதன் என்னை இங்கு அனுப்பி இப்படியொரு சத்சங்கத்தைக் காண்பித்துக் கொடுத்தானே என்று. நான் அல்லவோ கண்ணீர் மல்க வேண்டும். அந்தப் பூவணநாதனையும், மதுரை சொக்கனையும் என் பெற்றோர் போல் சிறு வயதில் அண்டி வாழ்ந்த பாசத்தில் ஒரு சித்தரை சென்னைக்கு அனுப்புகிறானே அம்பலநாதன்! அவன் அருள் அல்லவோ அருள்? (இதில் இன்னும் சில சூட்சும முடிச்சுக்கள் உண்டு. அது சுகுமாரனுக்குத்தான் தெரியும் ;-)
 
நம் அன்னை சௌந்தர்யநாயகி இங்கு எத்தனை பேருக்கு அருள் பாலித்து இருக்கிறாள் தெரியுமா?
 
பொன்னனையாள் அறக்கட்டளையா? ஆகா! இது எனக்கு அவன் தரும் நற்பேறு இல்லையா? எப்போது திருக்கோயில் சென்றாலும் அந்தப் பொன்னனையாள் ஆச்சி கொஞ்சிக் குலாவிய வடு பெருமான் முகத்தில் இருக்கிறதா என்று பார்த்து வருவேன். அன்பர்கள் கொஞ்சலுக்கு ஆட்படும் அவன்தானே நம் தெய்வமாக இருக்க முடியும்?
 
திருவேங்கடவனுக்கு வில்வபூஜை உண்டு என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
 
என்னைவிட நம் திவாகர் இன்னும் அழகாகச் சொல்லுவார். அவர் வேங்கடவனுக்கு நெருங்கிய சொந்தம் ;-)
 
கண்ணன்

2010/7/27 kalairajan krishnan <kalair...@gmail.com>


செல்வன்

unread,
Jul 28, 2010, 1:28:31 AM7/28/10
to mintamil

271. பெருமாள் என்ன செய்தார் நாட்டுக்கு?

கர்னாடகாவில் கடாக் மாவட்டத்தில் புகழ்பெற்ற வீரநாராயணர் கோயில் உள்ளது. வியாசர் மகாபாரதத்தை எழுதியது இங்கேதான் என்று சொல்லப்படும் அளவுக்கு பழமையான திருக்கோயில் இது. காலம் காலமாக மக்களுக்கு ஆன்மிக வழிகாட்டி வந்த இந்த பெருமாள் இப்போது நீர்வள மேம்பாட்டுக்கும் வழிகாட்டுகிறார்.

சிலவருடங்களுக்கு முன்பு இந்த திருக்கோயிலில் இருந்த கிணற்றுநீர் வற்றிப்போனதுடன் உப்பாகவும் மாறியது.காப்பர் பாத்திரங்களை இந்த கிணற்றுநீரில் போட்டாலே கறுக்கும் அளவு கிணற்று நீர் கெட்டது.அதனால் கோயிலில் போர்வெல் வெட்டி நீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர். ஊரு முழுக்க இந்த நிலைமைதான்.கடாக் மாவட்டத்தில் வருடத்துக்கு 750 மிமி மட்டுமே மழை பெய்யுமாம். அந்த சின்ன ஊரில் கோயிலை சுற்றி மட்டும் 12 போர்வெல்கள்.அந்த அளவுக்கு வரட்சி.

சில வருடங்களுக்கு முன் பெருமாள் இந்த நிலைமாற வழிகாட்டினார். ஆம்..வேலைக்கு உனவு திட்டத்தின் கீழ் கிணற்றின் அருகே 12 X 8 X 6 அளவில் ஒரு குழி வெட்டப்பட்டது. திருக்கோயிலின் ஏரியா 9000 சதுர மீட்டர்.அந்த 9000 மீட்டரில் முழுக்க கல்லை போட்டு மழைநீர் வழிந்தோட ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த நீர் முழுக்க இந்த குழியில் வந்து விழும்படி செய்தனர்.ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் இப்போது குழிக்குள் வந்துவிழுந்தது.

2005ம் ஆண்டு மழைக்காலத்தில் குழி ரெடியாகிவிட்டது.பெய்த மழைமுழுக்க கிணற்றில் நிரம்பியது. மழைக்காலம் முடிந்தபின் பார்த்தால் அதிசயத்திலும் அதிசயமாக கிணறு நிரம்பி ஆறுஅடி வரை தண்ணீர் மீதமிருந்தது.இன்னும் அதிசயம் என்னவென்றால் கிணற்று நீரின் உப்புத்தன்மையும் நீங்கிவிட்டது. குடிக்க சுத்தமான தண்ணீர் தயார். இப்போது வருடம் முழுக்க கிணற்றில் நல்ல தண்ணீர் பொங்குகிறது. நீரின் வரத்து அதிகரித்தது மட்டுமின்றி, நீரின் சுவையும் அதிகரித்திருக்கிறதாம்.

திருக்கோயில் அருகே உள்ள நரசிம்ம ஏரியிலும் இதே நிலைமைதான். வியாசர் குளித்ததாக சொல்லப்படும் இந்த ஏரியும் முன்பு வரண்டு கிடந்தது. இப்போது மழைநீர் சேகரிப்பு துவங்கியவுடன் இதில் 10 அடிக்கு தண்ணிர் தேங்கி நிற்கிறதாம்.

கடாக் மாவட்டம் முழுக்க திருக்கோயில்கள் பலவற்றிலும் நீர்சேகரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு மழைநீரின்றி வரண்டுகிடக்கும் மாவட்டத்தில் நீர் சேகரிப்பு செய்வது எப்படி என வழிகாட்டுவதில் திருக்கோயில்கள் முண்ணணியில் நிற்கின்றனவாம்.

பெருமாளே வழிகாட்டிவிட்டார்.இனி நாமும் நீரை சேகரிக்க தடை என்ன?

உற்சாகமாக களமிறங்குவோம் வாருங்கள்.

நன்றி: India together

செல்வன்

unread,
Jul 28, 2010, 1:30:28 AM7/28/10
to மின்தமிழ்
காளைராஜன் ஐயா

திருப்பதி பற்றிய உங்கள் செய்திக்கு நன்றி ஐயா.மேன்மேலும் தங்கள்
எழுத்துபணி தொடர பரமனும், பரந்தாமனும் அருள் புரிவார்களாக


On Jul 27, 2:44 am, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:


> வணக்கம்
> திருப்பதி திருமலை ​தேவஸ்தானம் ​தொடர்பான ​செய்தியை ​வெளியிட்டதற்குத் திரு
> ​செல்வன் அவர்களுக்கு எனது நன்றியைத் ​தெரிவித்துக் ​கொள்கிறேன்,
>

> *திருப்பதி திருமலை ​தேவஸ்தானம் திருக்​கோயில் பற்றிய நூல்களை அச்சிட்டு
> ​வெளியிட நிதியுதவியும் ​செய்து வருகிறது*
> **


> எனது
> திருப்பூவணக் காசி என்ற நூலை ​வெளியிட ரூபாய் 19,000-00
> மற்றும்
> திருப்பூவணப் புராணம் என்ற நூலை ​வெளியிட ரூபாய் 30,000-00
> வழங்கியது,
> இந்த உதவி கிடைக்கா விட்டால் என்னால் திருப்பூவணம் ​தொடர்பான அரிய நூலான
> திருப்பூவணப் புராணத்தை பதிப்பித்து ​வெளியிட்டிருக்க முடியாது - முடியவே
> முடியாது
>
> இதற்காகச் சைவ அன்பர்கள் அனைவரும்
> குறிப்பாகத் திருப்பூவணத்து அன்பர்கள் அனைவரும் ஏழுமலையானுக்கு என்றென்றும்
> நன்றி ​​போற்ற ​வேண்டும்,
>
> திருக்கோயில்கள் ​தொடர்பான நூல்களை ​வெளியிட விரும்புவோர்  திருப்பதி
> ​தேவஸ்தான நிதியுதவிக்கு விண்ணப்பித்து ​பெற்றுக் ​கொள்ள ​​வேண்டுகிறேன்,
>
> அன்புடன்
> கி, காளைராசன்
>

> On 7/23/10, செல்வன் <holy...@gmail.com> wrote:
>
>
>
> > 336.ஏழ்மையை அழிக்கும் ஏழுமலை <http://holyox.blogspot.com/2007/09/336.html>
>
> > <http://bp1.blogger.com/_9Ywhy9KsZyk/Ru6qBiavPcI/AAAAAAAAAHs/r1KQuP4LV...>


>
> > தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருகை தரும் அளவுக்கு பெருமை வாய்ந்த ஸ்தலம்
> > திருப்பதி. தொல்காப்பியம் முதலான தமிழ்நூல்களில் வணங்கப்படும் திருமலை கோயில்,
> > தமிழக வைணவ பக்தி வரலாற்றில் திருவரங்கத்துக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த தலமாக
> > கருதப்படுகிறது.இதன் வருட வருமானம் மூச்சை பிடித்து கொள்ளுங்கள்...சுமார் 800
> > கோடி.தினசரி உண்டியல் வசூல் மட்டும் 1 கோடி.ஒரே கட்டில் ஐம்பது லட்சம்,1 கோடி
> > என காணிக்கை செலுத்தும் பக்தர்களும் உண்டு.
>
> > திருப்பதியில் வரும் இத்தகைய அளப்பரிய வருமானம் அரசுக்கு சென்று
> > சேர்கிறது.மீதமுள்ள வருமானத்தில் மக்களுக்கு பல நலதிட்டங்களை செயல்படுத்தி
> > வருகிறது திருப்பதி தேவ்ஸ்தானம்.
>
> > திருமலை தேவ்ஸ்தானத்தில் சுமார் 14,000 பேர் நேரடி வேலைவாய்ப்பு
> > பெறுகின்றனர்.அதுபோக திருப்பதி நகரின் பொருளாதாரமே திருமலை கோயிலை நம்பித்தான்
> > இருக்கிறது என்றால் மிகையல்ல.திருமலை தேவ்ஸ்தானத்தின் தலைவர் கருனாகர ரெட்டி
> > விளிம்பு நிலை மக்களுக்கு பயனுள்ள பல திட்டங்களை திருக்கோயில் மூலம்
> > செயல்படுத்தி வருகிறார்."தலித கோவிந்தம்" என்ற திட்டத்தின் கீழ் உற்சவர் சிலையை
> > தலித் மக்கள் பகுதிகளுக்கு கொண்டு சென்று பெருமாள் - தாயார் சிலைகளுக்கு
> > திருக்கல்யாண வைபவம் நடத்தப்படுகிறது. ஜாதி கொடுமை தலைவிரித்தாடும்
> > கிராமங்களில் அக்கொடுமை குறைய இது ஒரு வழிகாட்டியாக அமையும் என்கிறார் ரெட்டி.
>
> > பெருமாள் தாயாருக்கு மட்டும் திருமணம் நடந்தால் போதுமா?வருடா வருடம்
> > ஏழைகளுக்கு 2 பவுன் செலவில் தங்கம் அணிவித்து, திருமண உடைகளையும் தந்து
> > திருகோவில் சார்பில் திருமணம் நடைபெறுகிறது.இதுவரை சுமார் 15,000 ஏழை
> > தம்பதியினர் இதனால் பயனடைந்துள்ளனர்

> > <http://www.aptourism.in/main-destinations-tirupati.jpg>


>
> > ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களிலும், மமவட்டத்துக்கு 20 கோடி செலவில் திருமலை
> > திருகோயில் சார்பில் பள்ளிகள் துவக்கப்பட்டு இலவச கல்வி
> > அளிக்கப்படுகிறது.இந்திய கலாசாரம், பண்பாடு ஆகியவையும் இப்பள்ளிகளில்
> > கற்பிக்கப்படுகிறது.
>
> > திருப்பதி தேவ்ஸ்தானம் சார்பில் தொழுநோயாளிகள் மருத்துவமனை
> > நடத்தப்படுகிறது.நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை போக உணவு மற்றும் உறைவிடம்
> > முற்றிலும் இலவசமாக சிகிச்சை காலம் முழுக்க வழங்கப்படுகிறது.(6 முதல் 18
> > மாதங்கள்).
>
> > பாலா மந்திர் என்ற பெயரில் அனாதை ஆசிரமம் நடந்து வருகிறது.சுமார் 500
> > குழந்தைகள் இதில் ஒரே சமயத்தில் சேர முடியும்.இவர்களுக்கு உணவு,உறைவிடம்
> > மற்றும் கல்வி போக டெய்லரிங், போன்ற வேலைவாய்ப்பு பயிற்சிகளும்
> > அளிக்கப்படுகிறது.
>
> > வேங்கடேஸ்வரா மெடிகல் சயின்ஸ் ஆஸ்பத்திரி மூலம் ராயலசீமா மாவட்டத்தின்
> > ஏழைகளுக்கு மிக குறைந்த செலவில் வைத்தியம் செய்யப்படுகிறது.
>
> > காது கேட்காத 350 குழந்தைகளுக்கு இலவச பள்ளியும் நடத்தப்படுகிறது.10
> > குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் சிறப்பான கவனிப்பு இந்த
> > குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.இந்த பள்ளி மாணவ்ர்கள் நார்மலாக இருக்கும்
> > பள்ளி மாணவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு விளையாட்டு போட்டிகளில் பரிசுகளை
> > வெல்லும் அளவுக்கு தயார் படுத்தப்படுகிறார்கள்.படிப்பு முடிந்தபின் மாணவர்கள்
> > பலர் திருப்பதி கோயிலிலேயே வேலை வாய்ப்பும் பெறுகிறார்கள்.விரைவில் இந்த
> > பள்ளியை கல்லூரியாக மாற்றும் திட்டமும் உள்ளதாம்.
>
> > அதுபோக இயற்கை வளங்களை
>

> ...
>
> read more »

Madhurabharathi

unread,
Jul 28, 2010, 1:35:10 AM7/28/10
to mint...@googlegroups.com
நன்றி செல்வன்.
 
பயனுள்ள கட்டுரை, தகவல். நன்கு மொழிபெயர்த்திருக்கிறீர்கள்.
 
Gadag என்பது கதக் என்று உச்சரிக்கப்படும்.
 
வரண்டு -> வறண்டு.
 
மீண்டும் நன்றி. தொடர்ந்து செய்யுங்கள்.
 
அன்புடன்
மதுரபாரதி

2010/7/28 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Jul 28, 2010, 1:39:07 AM7/28/10
to mint...@googlegroups.com

நன்றி மதுரபாரதி ஐயா

kalairajan krishnan

unread,
Jul 28, 2010, 8:34:47 AM7/28/10
to mint...@googlegroups.com
திருப்பூவணநாதரின் விமானத்தில் ஸ்ரீ ​பொன்னனையாள் தன் ​தோழியருடன் இருப்பதைக் காட்டும் படம்,
அன்புடன்
DSC_0375.JPG

kalairajan krishnan

unread,
Jul 28, 2010, 8:39:22 AM7/28/10
to mint...@googlegroups.com
On 7/27/10, N. Kannan <navan...@gmail.com> wrote:
அன்பின் முனைவர் காளைராஜன்:
 
ஆண்டவன் புகழ், அடியார் புகழ் கேட்கும் போதெல்லாம் மேனி சிலிர்கிறது. வடவேங்கடவன் பேசும் தெய்வம் என்றுதானே அத்தனை சான்றோரும் புகழ்கின்றனர். அவனும் பூவணநாதனும் வேறு, வேறா? இல்லவே இல்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா? தமிழ் மரபு அறக்கட்டளையின் முதல் நாள் கூட்டம் சென்னையில் (ஜூன் 20). அங்கொரு சித்தர் வருகிறார். கண்ணிலே ஒளி. நெஞ்சிலே அன்பு. நம் சுகுமாரன் அறிமுகப்படுத்தி வைக்கிறார். எங்கள் பேச்செல்லாம் முடிந்த பின் அவர் பேச முற்படுகிறார். அவருக்கு நா தழு தழுக்கிறது. காரணம் அவரது குருநாதர் திருப்பூவணம்!! அவர் சொன்னார் என் குருநாதன் என்னை இங்கு அனுப்பி இப்படியொரு சத்சங்கத்தைக் காண்பித்துக் கொடுத்தானே என்று. நான் அல்லவோ கண்ணீர் மல்க வேண்டும். அந்தப் பூவணநாதனையும், மதுரை சொக்கனையும் என் பெற்றோர் போல் சிறு வயதில் அண்டி வாழ்ந்த பாசத்தில் ஒரு சித்தரை சென்னைக்கு அனுப்புகிறானே அம்பலநாதன்! அவன் அருள் அல்லவோ அருள்? (இதில் இன்னும் சில சூட்சும முடிச்சுக்கள் உண்டு. அது சுகுமாரனுக்குத்தான் தெரியும் ;-)
 
நம் அன்னை சௌந்தர்யநாயகி இங்கு எத்தனை பேருக்கு அருள் பாலித்து இருக்கிறாள் தெரியுமா?
 
பொன்னனையாள் அறக்கட்டளையா? ஆகா! இது எனக்கு அவன் தரும் நற்பேறு இல்லையா? எப்போது திருக்கோயில் சென்றாலும் அந்தப் பொன்னனையாள் ஆச்சி கொஞ்சிக் குலாவிய வடு பெருமான் முகத்தில் இருக்கிறதா என்று பார்த்து வருவேன். அன்பர்கள் கொஞ்சலுக்கு ஆட்படும் அவன்தானே நம் தெய்வமாக இருக்க முடியும்?
 
திருவேங்கடவனுக்கு வில்வபூஜை உண்டு என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
 
என்னைவிட நம் திவாகர் இன்னும் அழகாகச் சொல்லுவார். அவர் வேங்கடவனுக்கு நெருங்கிய சொந்தம் ;-)
 
கண்ணன்
 
ஐயா திவாகர் அவர்கள் அருள்மிகு திருவேங்கடவன் பற்றிய ​செய்திகளை எனக்கு அறியத் தருமாறு அன்புடன் ​கேட்டுக்​கொள்கிறேன்
அன்புடன்
கி.  காளைராசன்
 
 

2010/7/27 kalairajan krishnan <kalair...@gmail.com>


உண்மையை உங்களிடம் கூரியே ஆக ​வேண்டும்
நான் திருப்பணிகள் ​மேற்கொள்வதெல்லாம் திருப்பூவணநாதருக்கே!
ஆனால் எனக்குத் திருவருள் வழங்குவது எல்லாம் அந்தத் திருவேங்கடவனே  ஆகும்!!
 
ஒன்றல்ல இரண்டல்ல எடுத்துச் ​சொல்வதற்கு
நான் ​சென்று வணங்கும் ஒவ்வொரு முறையும் நான் ​கேட்டதைக் ​கொடுத்தருளும் மகாபிரபு அந்தத் திருவேங்கடவன்
எழுபிறப்பிலும் கிடைக்காத பாக்கியங்களை அந்தப் பிரபு எனக்குத் தந்தருளியுள்ளான்,
 
நான் தான் திருப்பூவணத்தைச் சுற்றுவதிலேயே ​நேரத்தைக் கழித்துக் ​கொண்டிருக்கிறேன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

kalairajan krishnan

unread,
Jul 28, 2010, 8:33:03 AM7/28/10
to mint...@googlegroups.com
 
 
​ஐயா கண்ணன் அவர்களுக்கு
 
வணக்கம்
தங்களது கடிதம் படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்
​பெரியோர் எல்லாம் ​பெருமாளே!
 
திருப்பூவணநாதரின் தலைக்கு ​மேலே உள்ள விமானத்தின் ​வெளிப் பகுதியில் ​மேற்குத் திசையில் ஸ்ரீ பொன்னனையாள் தன் ​தோழியர் இருவருடன் ​கையில் கரண்டியுடன் உள்ளாள்,  இப்​பேறு யாருக்குக் கிடைக்கும்.  ணைப்பில் உள்ள படத்தை அன்புடன் பார்க்க ​வேண்டுகி​றேன்.
 
ஸ்ரீ ​பொன்னனையாள் அன்னதான அறக்கட்டளையுடன் தங்களை இணைத்துக் ​கொண்டதற்காகத் தங்களுக்கு என் நன்றியைத் ​தெரிவித்துக் கொள்கிறேன்
​பொன்ன​னையாள் அன்னதான அறக்கட்டளையின் சார்பாக
தினமும் ​ஸ்ரீ ​பொன்னனையாள் சிற்பத்திற்கு அருகே ரூபாய் 2000 திட்டத்தில் தொன்னையில் ​வைத்து அன்னம் வழங்கி வருகிறோம்.
வருடம் ஒருமுறை சித்திரை மாதம் வளர்பிறை பிரதோச நாளில் ஐந்துவகைக் காய்கறி வடை பாயாசத்துடன் சிறப்பு அன்னதானம் நடத்தி வருகிறோம்.
மூன்று வருடங்கள் உருண்டோடி விட்டன.
 
இருப்பினும் கீழ்க்கண்ட பணிகள் நடை​பெற ​வேண்டியுள்ளது
1) திருமலை நாயக்கர் கட்டத் துவங்கிய ​மொட்டைக் ​கோபுரத்தைக் கட்டி முடிப்பது
2) மணிகன்னிகைத் தீர்த்தத்தைச் சீர் செய்வது
3) நித்திய அன்னதானம்
4) அறக்கட்டளையின் சார்பாக சுவாமி அம்பாளுக்கு  நிவேதனம்
5) பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்
இவைகளைச் ​செய்ய ​வேண்டியுள்ளது,
 
அனைவரும் இணைந்து ​செயலாற்றுவோம்
 
அன்புடன்
கி, கா​ளைராசன்

திருவேங்கடவனுக்கு வில்வபூஜை உண்டு என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
 
என்னைவிட நம் திவாகர் இன்னும் அழகாகச் சொல்லுவார். அவர் வேங்கடவனுக்கு நெருங்கிய சொந்தம் ;-)
 
கண்ணன்

 
2010/7/27 kalairajan krishnan <kalair...@gmail.com>


உண்மையை உங்களிடம் கூரியே ஆக ​வேண்டும்
நான் திருப்பணிகள் ​மேற்கொள்வதெல்லாம் திருப்பூவணநாதருக்கே!
ஆனால் எனக்குத் திருவருள் வழங்குவது எல்லாம் அந்தத் திருவேங்கடவனே  ஆகும்!!
 
ஒன்றல்ல இரண்டல்ல எடுத்துச் ​சொல்வதற்கு
நான் ​சென்று வணங்கும் ஒவ்வொரு முறையும் நான் ​கேட்டதைக் ​கொடுத்தருளும் மகாபிரபு அந்தத் திருவேங்கடவன்
எழுபிறப்பிலும் கிடைக்காத பாக்கியங்களை அந்தப் பிரபு எனக்குத் தந்தருளியுள்ளான்,
 
நான் தான் திருப்பூவணத்தைச் சுற்றுவதிலேயே ​நேரத்தைக் கழித்துக் ​கொண்டிருக்கிறேன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
முனைவர் கி, காளைராசன்
உதவிப் பதிவாளர்
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி - 630 003
தமிழ்நாடு, India.
Dr. K. Kalairajan (Cell: 94435 01912)
Assistant Registrar
Alagappa University
KARAIKUDI -630 003

kalairajan krishnan

unread,
Jul 28, 2010, 8:35:37 AM7/28/10
to mint...@googlegroups.com
DSC_0376.JPG

Chandrasekaran

unread,
Jul 28, 2010, 10:35:44 AM7/28/10
to mint...@googlegroups.com, kalairajan krishnan, Narayanan Kannan
அன்புள்ள காளைராஜன்
நானும் மதுரைக்காரன். உங்கள் கோயிலில் உள்ள கோயில் கட்டுமானப் பணிகளில், குறைந்த செலவில், நிறைந்த  வேலையை செய்ய எங்கள் ரீச் பவுண்டேஷனை ஈடுபடுத்த முயல்கிறேன். ஆடி முடியட்டும் (மாதம்!), ஆவணியில் சந்திப்போம், அப்போது செலவுகள் எவ்வளவு ஆகுமென்று கணக்கு செய்து, கட்டாயம் நிறைவாக செய்து முடிப்போம். கண்ணன் சாருக்கு ரீச் பர்றி தெரியும், ஏதோ என்னால் முடிந்தது.

நீங்கள் அனுப்பிய படத்தில், விமானத்தினூடே மரங்கள் தெரிகின்றன. அவற்றை நீக்கி, மரங்கொல்லி போட்டாகவேண்டும். இல்லையே, விமானத்துக்கு கூடிய சீக்கிரம் செலவுகள் வரும் :(

சந்திரசேகரன்

annamalai sugumaran

unread,
Jul 28, 2010, 12:43:59 PM7/28/10
to mint...@googlegroups.com
இரண்டு நாட்களுக்கு முன் கடலூர் அருகில் இருக்கும் திருவந்திபுரம்  போயிருந்தேன்     பெருமாள் தேவநாதன் ஹயக்ரீவர்க்குக் கூட இங்கு மலை மேல் தனி சன்னதி உண்டு .
108 திருப்பதிகளில் ஒன்று . வைணவர்களால், திருப்பதிக்கு அடுத்த தலமாக இக்கோயில் கருதப்படுகிறது. 

அங்கு ஸ்தலவிருஷம் எனன தெரியுமா 
வில்வம் தான் !

..
PICT2713.JPG
PICT2715.JPG
PICT2715.JPG
புராதனமான பாறை ! 
PICT2717.JPG

PICT2718.JPG
தெலுங்கு கல்வெட்டு ! திவாகர் தான் துணை செய்யணும் !


PICT2719.JPG



PICT2721.JPG
ஹயக்ரீவர்க்கு போகும் பாதை 







PICT2723.JPG
புராதன மலையைக் குடைந்து தேவஸ்தான கடைகள் 



2010/7/27 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
 It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !
PICT2721.JPG
PICT2715.JPG
PICT2718.JPG
PICT2719.JPG
PICT2723.JPG
PICT2717.JPG
PICT2713.JPG

venkatachalam Dotthathri

unread,
Jul 28, 2010, 1:39:30 PM7/28/10
to mint...@googlegroups.com
ஓம்
பக்தனுக்காக தெய்வம் துணைநின்ற காட்சி காணொளியாய் தோன்றி நிலைத்தது.
வாழ்துகள்.
வெ.சுப்பிரமணியன் ஓம்.

2010/7/21 செல்வன் <hol...@gmail.com>
தேவ் ஐயா, ஸ்ரி ரங்கம் மோகரங்கன் ஐயா, தேனி ஐயா

உங்கள் வாழ்த்துக்கு நன்றி

மோகனரங்கன் ஐயா

எனக்கு எப்பவுமே மாயகண்ணன் மேல் மிகுந்த அன்பு உண்டு. என் உள்ளம் திருடிய கள்வன் அவன்


--

ananda rasa thiruma

unread,
Jul 28, 2010, 7:53:07 PM7/28/10
to mintamil
திரு சந்திரசேகரன்
திருப்பூவணநாதர் விமானத்தில் தெரிந்த மரங்களைக் கண்டுபிடித்தீர்கள். நல்ல எக்ஸ்ரே கண் உங்களுக்கு. மரங்களை நீக்க மரங்கொல்லி போட வேண்டுமா? அல்லது மரங்களை நீக்கி மரங்கொல்லி போடவேண்டுமா? மரங்கொல்லி என மருத்துவர் கடையில் கிடைக்கிறதா?
அன்புடன்
ஆராதி

Innamburan Innamburan

unread,
Jul 28, 2010, 10:32:07 PM7/28/10
to mint...@googlegroups.com
மெனக்கடணும், சாணக்கியர் போல.


2010/7/29 ananda rasa thiruma <aara...@gmail.com>

N. Kannan

unread,
Jul 28, 2010, 10:45:16 PM7/28/10
to mint...@googlegroups.com
அன்பின் காளைராஜன்:
 
பெருமாளுக்கும், பூவணநாதருக்குமுள்ள தொடர்பு நீங்களிட்ட படத்திலும் தெரிகிறது. கோபுர சிலைகளில் நடுநாயமாக நரசிம்ம மூர்த்தி உள்ளார். இது குறித்து அப்பர் சுவாமிகளின் ஒரு பதிகம் செப்புகிறது. இதை நான் முன்பு எழுதிய தொடரில் சுட்டியுள்ளேன்.
 
பூவணத்து எம் புனிதனார் தொடர் வாசிக்க: http://groups.google.com/group/mintamil/msg/5c9ec629eb7ab9db
 
கண்ணன்

2010/7/28 kalairajan krishnan <kalair...@gmail.com>

N. Kannan

unread,
Jul 28, 2010, 11:01:52 PM7/28/10
to mint...@googlegroups.com
அன்பின் காளைராஜன்:
 
நமது திருப்பூவண திருப்பணியில் ரீச் அறக்கட்டளையை இணைத்துக் கொள்வது சிறந்தது. அவர்களுக்கு பாரம்பரிய கோயில் அமைப்பு, கட்டுமானம் இவை தெரிந்திருப்பதால் மூலவடிவை சிதைக்காமல் அதே நிலைக்கு குறைந்த செலவில் கொண்டுவரும் ஆற்றலுண்டு. மேலும் சந்திரா போன்ற தன்னலமற்ற பக்தர்கள் அவ்வமைப்பில் இருப்பதால் ஆத்மசுத்தியோடு காரியங்கள் நடக்கும்.
 
முதலில் சிறுபணிகளிலிருந்து ஆரம்பிப்போம் (கோபுரத்தில் செடி பிடுங்குவது, மரக்கொல்லி வைப்பது போன்ற வேலைகள்). மொட்டை கோபுர நிர்மாணம் என்பது பெரிய செயல். அவன்தான் பொன்னனையாளுக்கு செய்தது போல் ஏதாவது சித்து செய்ய வேண்டும்!
 
க.>

2010/7/28 Chandrasekaran <plastic...@gmail.com>

செல்வன்

unread,
Jul 28, 2010, 11:04:26 PM7/28/10
to mint...@googlegroups.com

தோல் வியாபாரிகளும் கசாப்பு கடைக்காரர்களும்

ஜனக மகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு.கனவில் அவர் படாத துன்பம் பட்டார்.அப்போது அது கனவு போலவே அவருக்கு தெரியவில்லை.நிஜம் போலவே இருந்தது.திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார்.கண்விழித்தார். கண்விழித்து பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது.சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார். இது தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது.

அவர் தினசரி இரவு தூங்கும்போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.பகலில் எழுந்தால் மன்னனாக சகல சம்போகங்களுடன் இருப்பார். ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது."நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?" என சந்தேகம் வந்துவிட்டது.மந்திரி,ராஜகுரு என பலரிடம் கேட்டுப் பார்த்தார்.யாருக்கும் பதில் தெரியவில்லை.

அந்த சந்தேகம் அவர் மனதை அரித்துக்கொண்டே இருந்தது."நான் பிச்சைக்காரனா,மன்னனா" என்று அவர் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார். பிறகு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.தமது சந்தேகத்தை தீர்த்து வைப்பவர்களுக்கு பெரும்பரிசை அளிப்பதாக சொன்னார்.நாட்டிலிருந்த வித்வான்கள் எல்லாரும் வந்தனர்.தூரதேசத்திலிருந்து பண்டிதர்கள்,முனிவர்கள்,வேத விற்பன்னர்கள் எல்லாரும் வந்தனர்.யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

 வெளியூரிலிருந்து விதேக நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தார்.அவர் பெயர் அஷ்டாவக்கிர மகரிஷி.அவர் உடல் 8 கோணலாக வளைந்திருக்கும்.அது ஏனென்றால் அவர் தம் அன்னையின் வயிற்றிலிருந்தபோது கத்துக்குட்டியான அவர் தகப்பனார் வேதத்தை தப்பு தப்பாக படிப்பாராம்.அப்போது வயிற்றிலிருந்த மகா ஞானியான குழந்தை அதை கேட்க சகிக்காமல் உடம்பை திருப்புமாம்.அப்படி 8 தடவை திருப்பி உடல் அஷ்ட கோணலாக வளைந்து அஷ்டா வக்கிரன் என்ற பெயரும் ஏற்பட்டது.

ஜனகரின் கேள்வியை அறிந்த அஷ்டாவக்கிர மகரிஷி ஜனகரின் அவைக்கு சென்றார்.பண்டிதர்களின் பெருங்கூட்டம் அவையில் இருந்தது.யாருக்கும் பதில் தெரியவில்லை." என் கேள்விக்கு பதில் சொல்ல ஆளே இல்லையா?" என ஜனகர் வேதனையுடன் கேட்டார். "நான் சொல்கிறேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.

அரசவை முழுக்க அவரை திரும்பிப் பார்த்தது.அவரை பார்த்த மறுவினாடியே பண்டிதர்கள் சிரிக்க துவங்கி விட்டனர்.குள்ளமாக,கறுப்பாக,எண் கோணலாக வளைந்த உடலை வைத்துக்கொண்டு ஒருவர் சபைக்கு வந்தால் எப்படி இருக்கும்?அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

சிரிப்பொலி அடங்கும் வரை அஷ்டாவக்கிரர் மவுனமாக நின்றார்.

"என் கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்" என்று ஜனகர் ஆவலுடன் கேட்டார்.

"சொல்கிறேன்.அதற்கு முன் சபையில் இருக்கும் தோல் வியாபாரிகளையும்,கசாப்பு கடைகாரர்களையும் வெளியே அனுப்புங்கள்" என்றார் அஷ்டா வக்கிரர்.

 "என்ன சொல்கிறீர்கள்?இது பண்டிதர்களின் சபை.இங்கு எந்த கசாப்பு கடைக்காரனும் தோல் வியாபாரியும் இல்லை" என்றார் ஜனகர்.

"இங்கு பண்டிதன் என யாரும் இல்லை.இங்கிருப்போர் அனைவரும் கசாப்பு கடைக்காரர்களும் தோல் வியபாரிகளும் தான்" என்றார் அஷ்டாவக்கிரர்.

சபை முழுக்க கொதித்தெழுந்தது.

"என்ன திமிர் இந்த குரங்கனுக்கு?" என்று சப்தமிட்டார் ராஜகுரு.

"வேதம் கற்ற பண்டிதர்களை இழிவுபடுத்திய இவனை கழுவிலேற்றுங்கள்" என்று அனைவரும் கூச்சலிட்டனர்.

"ஏன் அப்படி சொன்னிர்கள்?" என்று பரிவுடன் கேட்டார் ஜனகர்."கற்றறிந்த பண்டிதர்களை கசாப்பு கடைக்காரன் என்று சொல்லலாமா?" என்று கேட்டார்.

உரத்த குரலில் அஷ்டாவக்கிரர் பதில் சொன்னார். "ஓ மன்னா! உன் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன் என்று சொன்னேன்.சபை முழுக்க என்னை பார்த்து சிரித்தது.ஏன் சிரித்தார்கள்?என் குறைவான ஞானத்தை கண்டு சிரித்தார்களா?நான் தவறாக சொன்ன விளக்கத்தை கண்டு சிரித்தார்களா?இல்லை.இது எதை கண்டும் அவர்கள் சிரிக்கவில்லை.என் உருவத்தை பார்த்து சிரித்தார்கள்.என் தோலின் நிறத்தை வைத்து,என் உடலின் உருவத்தை வைத்து இவர்கள் என்னை, என் அறிவை மதிப்பிட்டார்கள். என் தோலை வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள் தோல் வியாபாரிகள் தானே?தோல் வியாபாரிதான் தோலின் நிறத்தை வைத்து ஆட்டு தோலுக்கு விலை போடுவான்.கசாப்பு கடைக்காரன் தான் ஆட்டின் உருவத்தை வைத்து ஆட்டுக்கு மதிப்பு போடுவான். இவர்களும் என்னை அப்படித்தான் மதிப்பிட்டார்கள்.அதனால் தான் இவர்களை தோல் வியாபாரி என்றேன்.பண்டிதர்கள் இருக்க வேண்டிய சபையில் தோல் வியாபாரிகளுக்கு என்ன வேலை?அதனால் தான் இவர்களை வெளியே போக சொன்னேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.

 அவமானமடைந்த பண்டிதர்கள் தலை குனிந்து சபையை விட்டு வெளியேறினார்கள்.வந்தவர் மகா ஞானி என ஜனகரும் அறிந்தார்.மகா பணிவுடன் அவர் காலடியில் அமர்ந்து தன் சந்தேகத்துக்கு விடை கேட்டு தெரிந்துகொண்டார். ஜனகருக்கு அஷ்டாவக்கிரர் சொன்ன அந்த உபதேசம் அஷ்டாவக்கிர கீதை என்ற பெயருடன் விளங்குகிறது.அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல் மகா ஞானியாகி விட்டார்.

sound rajan

unread,
Jul 28, 2010, 10:49:59 PM7/28/10
to mint...@googlegroups.com



From: செல்வன் <hol...@gmail.com>
To: mintamil <minT...@googlegroups.com>
Sent: Wed, 28 July, 2010 10:58:31 AM
Subject: [MinTamil] வைணவம்

Geetha Sambasivam

unread,
Jul 29, 2010, 3:29:07 AM7/29/10
to mint...@googlegroups.com
ஆடுதுறை விவசாயப் பண்ணையில் கோபுரங்கள், விமானங்கள் இவற்றில் முளைக்கும் மரங்களை வேரோடு அறுத்தெடுக்கும் இயற்கை மருந்துக்கலவை கிடைப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன். அங்கே விசாரித்தால் தெரியலாம். சந்திராவுக்கு இன்னும் விபரமாய்த் தெரியும்.

2010/7/29 ananda rasa thiruma <aara...@gmail.com>
திரு சந்திரசேகரன்

devoo

unread,
Jul 29, 2010, 4:04:20 AM7/29/10
to மின்தமிழ்
கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் கிடைக்கும்; வெளிச் சந்தையில்
கிடைக்காது.
வேரில் ஊற்றும்போது தோலில் படாமல் கவனமாக இருக்க வேண்டும்

தேவ்

On Jul 29, 2:29 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> ஆடுதுறை விவசாயப் பண்ணையில் கோபுரங்கள், விமானங்கள் இவற்றில் முளைக்கும்
> மரங்களை வேரோடு அறுத்தெடுக்கும் இயற்கை மருந்துக்கலவை கிடைப்பதாய்க் கேள்விப்
> பட்டிருக்கேன். அங்கே விசாரித்தால் தெரியலாம். சந்திராவுக்கு இன்னும்
> விபரமாய்த் தெரியும்.
>

> 2010/7/29 ananda rasa thiruma <aaraa...@gmail.com>


>
> > திரு சந்திரசேகரன்
> > திருப்பூவணநாதர் விமானத்தில் தெரிந்த மரங்களைக் கண்டுபிடித்தீர்கள். நல்ல

> > எக்ஸ்ரே கண் உங்களுக்கு. மரங்களை *நீக்க மரங்கொல்லி* போட வேண்டுமா? அல்லது
> > மரங்களை *நீக்கி மரங்கொல்லி* போடவேண்டுமா? மரங்கொல்லி என மருத்துவர் கடையில்


> > கிடைக்கிறதா?
> > அன்புடன்
> > ஆராதி
>

> > On Wed, Jul 28, 2010 at 8:05 PM, Chandrasekaran <plasticschan...@gmail.com


> > > wrote:
>
> >> அன்புள்ள காளைராஜன்
> >> நானும் மதுரைக்காரன். உங்கள் கோயிலில் உள்ள கோயில் கட்டுமானப் பணிகளில்,
> >> குறைந்த செலவில், நிறைந்த  வேலையை செய்ய எங்கள் ரீச் பவுண்டேஷனை ஈடுபடுத்த
> >> முயல்கிறேன். ஆடி முடியட்டும் (மாதம்!), ஆவணியில் சந்திப்போம், அப்போது
> >> செலவுகள் எவ்வளவு ஆகுமென்று கணக்கு செய்து, கட்டாயம் நிறைவாக செய்து
> >> முடிப்போம். கண்ணன் சாருக்கு ரீச் பர்றி தெரியும், ஏதோ என்னால் முடிந்தது.
>
> >> நீங்கள் அனுப்பிய படத்தில், விமானத்தினூடே மரங்கள் தெரிகின்றன. அவற்றை
> >> நீக்கி, மரங்கொல்லி போட்டாகவேண்டும். இல்லையே, விமானத்துக்கு கூடிய சீக்கிரம்
> >> செலவுகள் வரும் :(
>
> >> சந்திரசேகரன்
>
> >>  --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

ananda rasa thiruma

unread,
Jul 29, 2010, 7:52:22 AM7/29/10
to mintamil
திரு செல்வன்
ஜனகரின் சந்தேகத்திற்கு விடை என்ன?
எனக்கும் ஒரு சந்தேகம். திடீர் என இந்த இழையில் இந்தக் கதையைப் பதிவுசெய்ய வேண்டிய தேவை என்ன?


அன்புடன்
 ஆராதி
2010/7/29 செல்வன் <hol...@gmail.com>
--

Nakinam sivam

unread,
Jul 29, 2010, 8:34:44 AM7/29/10
to mint...@googlegroups.com
ஜனகரின் சந்தேகத்திற்கு விடை என்ன? 


இரண்டுமே உறக்க நிலைதான்

இரண்டுமே கனவு நிலைதான் 

விழிப்பு நிலை என்பது வேறு.

அந்த விழிப்பு நிலை என்பது

ஆன்மா தன்னை அறிந்த நிலையே.

அன்புடன்
சிவம்


2010/7/29 ananda rasa thiruma <aara...@gmail.com>
திரு செல்வன்



--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

செல்வன்

unread,
Jul 29, 2010, 9:47:18 AM7/29/10
to mint...@googlegroups.com
2010/7/29 ananda rasa thiruma <aara...@gmail.com>
திரு செல்வன்
ஜனகரின் சந்தேகத்திற்கு விடை என்ன?
எனக்கும் ஒரு சந்தேகம். திடீர் என இந்த இழையில் இந்தக் கதையைப் பதிவுசெய்ய வேண்டிய தேவை என்ன



ஆராதி ஐயா.

இது வைணவம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என தான் நினைத்து இட்டேன்

kalairajan krishnan

unread,
Jul 30, 2010, 8:07:46 AM7/30/10
to mint...@googlegroups.com
On 7/28/10, N. Kannan <navan...@gmail.com> wrote:
அன்பின் காளைராஜன்:
 
பெருமாளுக்கும், பூவணநாதருக்குமுள்ள தொடர்பு நீங்களிட்ட படத்திலும் தெரிகிறது. கோபுர சிலைகளில் நடுநாயமாக நரசிம்ம மூர்த்தி உள்ளார். இது குறித்து அப்பர் சுவாமிகளின் ஒரு பதிகம் செப்புகிறது. இதை நான் முன்பு எழுதிய தொடரில் சுட்டியுள்ளேன்.
 
ஐயா வணக்கம்
பூவணநாதருக்கும் ​பெருமாளுக்கும் திருப்பூவணத்திலே ஒரு ​பெரிய ​தொடர்பு உண்டு
அதைத் தங்களுடன் பகிர்ந்து ​கொள்வதில் ஆனந்தம் அடைகிறேன்
 
அதைத் திருப்பூவணத்தில் திருமால் ​கோயில் என்ற தலைப்பில் தனியாக ​வெளியிட்டுள்ளேன்
 
ஐயா கண்ணன் அவர்களும் மற்றும் அன்பர்கள் அனைவரும் அவசியம் அக் கடிதத்தைப் படித்துப் பார்க்க ​வேண்டுகிறேன்
 
அன்பன்
கி. காளைராசன்
 
 
 
பூவணத்து எம் புனிதனார் தொடர் வாசிக்க: http://groups.google.com/group/mintamil/msg/5c9ec629eb7ab9db
 
கண்ணன்

 
2010/7/28 kalairajan krishnan <kalair...@gmail.com>
திருப்பூவணநாதரின் விமானத்தில் ஸ்ரீ ​பொன்னனையாள் தன் ​தோழியருடன் இருப்பதைக் காட்டும் படம்,
அன்புடன்
கி. காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Chandrasekaran

unread,
Jul 30, 2010, 1:13:42 PM7/30/10
to mint...@googlegroups.com, aar...@gmail.com
அன்புள்ள ஆரதி ஐயா,
மரங்கொல்லி (tree killer) ஆடுதுறை அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் கிடைக்கிறது.லிட்டர் 600 ரூபாய்.
மரத்தி நன்கு வெட்டியபின், எஞ்சிய இடத்தில் அடிமரத்தை சுற்றியுள்ள பட்டையை உரித்துவிட்டு, வெண்மையாய் தெரியும் பகுதியில் இந்த எஅசாயனத்தி ஒரு ப்ரஷ்ஷால் பூசிவிட்டு, மேலும் ஒரு துணியில் ஊற்றி அதைச்சுற்றி கட்டிவிடவேண்டும். முன்னர், பின்னர் இரு நாட்களுக்கு தண்ணீர் (மழை) இந்த ரசாயனக் கட்டிற்கு மேல் படாமல் பார்த்துக் கொள்ளவும்.
மரம் அவுட்! கல்லை ப்ரிக்காமல், கடிடத்தி உடைக்காமல், மரத்தி கருக வைக்க ஒரே வழி இது.

சந்திரா

2010/7/29 ananda rasa thiruma <aara...@gmail.com>
திரு சந்திரசேகரன்

திருப்பூவணநாதர் விமானத்தில் தெரிந்த மரங்களைக் கண்டுபிடித்தீர்கள். நல்ல எக்ஸ்ரே கண் உங்களுக்கு. மரங்களை நீக்க மரங்கொல்லி போட வேண்டுமா? அல்லது மரங்களை நீக்கி மரங்கொல்லி போடவேண்டுமா? மரங்கொல்லி என மருத்துவர் கடையில் கிடைக்கிறதா?
அன்புடன்
ஆராதி

On Wed, Jul 28, 2010 at 8:05 PM, Chandrasekaran <plastic...@gmail.com> wrote:
அன்புள்ள காளைராஜன்
நானும் மதுரைக்காரன். உங்கள் கோயிலில் உள்ள கோயில் கட்டுமானப் பணிகளில், குறைந்த செலவில், நிறைந்த  வேலையை செய்ய எங்கள் ரீச் பவுண்டேஷனை ஈடுபடுத்த முயல்கிறேன். ஆடி முடியட்டும் (மாதம்!), ஆவணியில் சந்திப்போம், அப்போது செலவுகள் எவ்வளவு ஆகுமென்று கணக்கு செய்து, கட்டாயம் நிறைவாக செய்து முடிப்போம். கண்ணன் சாருக்கு ரீச் பர்றி தெரியும், ஏதோ என்னால் முடிந்தது.

நீங்கள் அனுப்பிய படத்தில், விமானத்தினூடே மரங்கள் தெரிகின்றன. அவற்றை நீக்கி, மரங்கொல்லி போட்டாகவேண்டும். இல்லையே, விமானத்துக்கு கூடிய சீக்கிரம் செலவுகள் வரும் :(

சந்திரசேகரன்

-- 

kalairajan krishnan

unread,
Jul 31, 2010, 3:14:20 AM7/31/10
to mint...@googlegroups.com
On 7/30/10, Chandrasekaran <plastic...@gmail.com> wrote:
அன்புள்ள ஆரதி ஐயா,
மரங்கொல்லி (tree killer) ஆடுதுறை அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் கிடைக்கிறது.லிட்டர் 600 ரூபாய்.
மரத்தி நன்கு வெட்டியபின், எஞ்சிய இடத்தில் அடிமரத்தை சுற்றியுள்ள பட்டையை உரித்துவிட்டு, வெண்மையாய் தெரியும் பகுதியில் இந்த எஅசாயனத்தி ஒரு ப்ரஷ்ஷால் பூசிவிட்டு, மேலும் ஒரு துணியில் ஊற்றி அதைச்சுற்றி கட்டிவிடவேண்டும். முன்னர், பின்னர் இரு நாட்களுக்கு தண்ணீர் (மழை) இந்த ரசாயனக் கட்டிற்கு மேல் படாமல் பார்த்துக் கொள்ளவும்.
மரம் அவுட்! கல்லை ப்ரிக்காமல், கடிடத்தி உடைக்காமல், மரத்தி கருக வைக்க ஒரே வழி இது.

 
சந்திரா
 
ஐயா வணக்கம்
இந்த வழி ​ஏற்கனவே எனக்குத் தெரியாமல் ​போனதே!
திருப்பூவணத்தில் ஆடித்தபசு மண்டபத்​தைக் காத்திருப்​பேனே!
இன்று அதைப் புனர்நிர்மாணம் ​செய்ய 2.5 இலட்சம் ​செலவாகி விட்டதே
(இணைப்பில் ஆடித்தபசு மண்டபம் அன்றும் இன்றும்)
 
இனிமேல் விடுவேனா இதை
இதைக் ​கொண்டு திருப்பூவணநாதர் திருக்கோயில் விமானத்தைச் சீர் ​செய்ய ​வேண்டிய நடவடிக்கைகளை ​மேற்கொள்கிறேன்
 
அன்பன்
கி. காளைராசன்
 

2010/7/29 ananda rasa thiruma <aara...@gmail.com>
திரு சந்திரசேகரன்
திருப்பூவணநாதர் விமானத்தில் தெரிந்த மரங்களைக் கண்டுபிடித்தீர்கள். நல்ல எக்ஸ்ரே கண் உங்களுக்கு. மரங்களை நீக்க மரங்கொல்லி போட வேண்டுமா? அல்லது மரங்களை நீக்கி மரங்கொல்லி போடவேண்டுமா? மரங்கொல்லி என மருத்துவர் கடையில் கிடைக்கிறதா?
அன்புடன்
ஆராதி

On Wed, Jul 28, 2010 at 8:05 PM, Chandrasekaran <plastic...@gmail.com> wrote:
 
அன்புள்ள காளைராஜன்
நானும் மதுரைக்காரன். உங்கள் கோயிலில் உள்ள கோயில் கட்டுமானப் பணிகளில், குறைந்த செலவில், நிறைந்த  வேலையை செய்ய எங்கள் ரீச் பவுண்டேஷனை ஈடுபடுத்த முயல்கிறேன். ஆடி முடியட்டும் (மாதம்!), ஆவணியில் சந்திப்போம், அப்போது செலவுகள் எவ்வளவு ஆகுமென்று கணக்கு செய்து, கட்டாயம் நிறைவாக செய்து முடிப்போம். கண்ணன் சாருக்கு ரீச் பர்றி தெரியும், ஏதோ என்னால் முடிந்தது.

 
நீங்கள் அனுப்பிய படத்தில், விமானத்தினூடே மரங்கள் தெரிகின்றன. அவற்றை நீக்கி, மரங்கொல்லி போட்டாகவேண்டும். இல்லையே, விமானத்துக்கு கூடிய சீக்கிரம் செலவுகள் வரும் :(

 
சந்திரசேகரன்

 

-- 
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Adi11 14 jun.jpg

N. Kannan

unread,
Jul 31, 2010, 3:57:41 AM7/31/10
to mint...@googlegroups.com
அன்பின் காளைராஜன்:

நம்ம சந்திராவை கோயில் திருப்பணியில் இணைத்துக் கொள்ளவும். ரீச்
பவுண்டேஷனுக்கு புனர் நிர்மாணத்தில் நல்ல அனுபவமுண்டு. ஒருமுறை அவரை
வரவழைத்து பூவணநாதனின் அருளுக்கு ஆளாக்குங்கள். புஷ்பவனம் பட்டர் (துரை
பட்டர் அவர் தம்பி) என் கிளாஸ்மேட்தான்.

கண்ணன்

2010/7/31 kalairajan krishnan <kalair...@gmail.com>:

kalairajan krishnan

unread,
Jul 31, 2010, 4:04:39 AM7/31/10
to mint...@googlegroups.com
On 7/31/10, N. Kannan <navan...@gmail.com> wrote:
அன்பின் காளைராஜன்:

நம்ம சந்திராவை கோயில் திருப்பணியில் இணைத்துக் கொள்ளவும். ரீச்
பவுண்டேஷனுக்கு புனர் நிர்மாணத்தில் நல்ல அனுபவமுண்டு. ஒருமுறை அவரை
வரவழைத்து பூவணநாதனின் அருளுக்கு ஆளாக்குங்கள். புஷ்பவனம் பட்டர் (துரை
பட்டர் அவர் தம்பி) என் கிளாஸ்மேட்தான்.

கண்ணன்
 
ஐயா வணக்கம்
அவசியம் ​செய்கிறேன் ஐயா,
 
ஐயா சந்திரா அவர்களை அவசியம் அழைத்துச் ​சென்று பூவணத்துப் புனிதனின் திருவருளுக்கு வழி வகுக்கிறேன்,  இது எனது கடமை,
உங்களது கிளாஸ் மெட் திரு, மோகன் அவர்கள் தானே - நன்றாகத் ​தெரியும்
அன்பன்
கி. காளைராசன்
 
 
 

2010/7/31 kalairajan krishnan <kalair...@gmail.com>:
> இனிமேல் விடுவேனா இதை
> இதைக் கொண்டு திருப்பூவணநாதர் திருக்கோயில் விமானத்தைச் சீர் செய்ய வேண்டிய
> நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன்
>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

ananda rasa thiruma

unread,
Jul 31, 2010, 7:45:18 PM7/31/10
to mintamil
திரு சந்திரா
உங்கள் தகவலுக்கு நன்றி. எங்கள் பகுதியில் உள்ள கோயில் உள்ளிட்ட பல கட்டங்களுக்கும் இது பயன் உள்ள தகவல்.
அன்புடன்
ஆராதி


Chandrasekaran

unread,
Aug 2, 2010, 12:34:13 AM8/2/10
to mint...@googlegroups.com, aar...@gmail.com
நீங்கள் புதுவையிலுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். அ.சுகுமாரன் சாரும் அங்கு உங்களுக்குத் துணை.

இடத்தைச் சொல்லுங்கள், திட்டமிட்டு, ஒவ்வொரு கோயில்களாக ஆவணப்படுத்துவதோடு, உழவாரப்பணி குழு அமைத்து கோயில் மீதான மரங்களை எடுப்போம்.

சந்திரா

Aa raa thi

unread,
Aug 2, 2010, 1:13:46 AM8/2/10
to mint...@googlegroups.com
திரு சந்திரா
திரு சுகுமாரனிடம் இன்று காலையில் பேசிக்கொண்டிருந்தேன். இதுவரை வெளியில் தெரியாத பல கோயில்களைப் பற்றிய தகவல்களை அவர் ஆவணப்படுத்தியுள்ளதைத் தெரிவித்தார். அதனை நூலாக வெளிக் கொணரக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
பேரா.முனைவர் சிவ.மாதவன் என்னும் என் நண்பர் உழவராப் பணியை வராம் தோறும் அருகில் உள்ள ஊர்களில் நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கும் இத்தகவல் தெரிவிக்கிறேன். உங்கள் ஆர்வத்திற்கு என் நன்றி.
 
அன்புடன்
ஆராதி


 
2010/8/2 Chandrasekaran <plastic...@gmail.com>
நீங்கள் புதுவையிலுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். அ.சுகுமாரன் சாரும் அங்கு உங்களுக்குத் துணை.

இடத்தைச் சொல்லுங்கள், திட்டமிட்டு, ஒவ்வொரு கோயில்களாக ஆவணப்படுத்துவதோடு, உழவாரப்பணி குழு அமைத்து கோயில் மீதான மரங்களை எடுப்போம்.

சந்திரா

--
Reply all
Reply to author
Forward
0 new messages