சலம் உணர்த்தும் பொருள் என்ன?

173 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 16, 2016, 11:56:41 PM12/16/16
to mintamil
சலம் என்பது கானல் நீரைக் குறிக்கும் என்று முன்னர் கண்டோம்.

இதிலிருந்து சலம் என்பது கானல் நீரின் தன்மையான வஞ்சித்தல் என்ற பொருளையும் கொள்ளும்.

இப்படி சலத்தால் அதாவது பிறரை வஞ்சித்து ஏமாற்றிச் சேர்த்த பொருள் என்னாகும்?. நிற்காது.
அதுவும் வஞ்சிக்கப்பட்டு பறிபோய்விடும் என்கிறார் வள்ளுவர். எப்படி?

சுடப்படாத மண்கலத்தில் யாருமே தெரிந்து நீர் பெய்துவைக்க மாட்டார்கள்.
வெளித்தோற்றத்தைக் கண்டு சுட்ட கலம் என்று நம்பி பெய்திருப்பார்கள்.
கலம் உடைந்து நீர் வீணாகிய பின்னரே அவர்கள் ஏமாந்த கதை புரியும்.

அதைப்போல, வஞ்சனையால் சேர்த்த பணமும் நில்லாமல் அவரை வஞ்சித்து ஓடிவிடும் என்கிறார்.


2016-12-17 9:43 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
ஆயினும் அக்குறளில் பயிலும் சலம் எனும் சொல்லுக்கு வஞ்சனை என்றல்லவா பொருள் கொள்கின்றனர்.

என் கருத்து யாதெனில்,

சலம் என்பது ஆதியில் சாதாரண நீரைக் குறிக்காமல் கானல் நீரினையே குறித்திருக்கவேண்டும்.

இந்தக் கானல் நீரானது அலைவடிவில் தோன்றும். உண்மையான நீரைப் போலக் காட்டிக் காண்போரை வஞ்சிக்கும் இயல்புடையது.

நீர், வஞ்சனை, நடுக்கம், அசைவு போன்ற பிற பொருட்களையும் இச் சொல் குறிக்க இதுவே காரணமாகியது.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளா !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in


Reply all
Reply to author
Forward
0 new messages