சரி, ஐயா. எளுந்தாச்சு. ரெண்டு அடுக்குத் தோலெ உரிச்சாச்சு.
இந்தா பாருங்கோ ... நம்ம தூத்துக்குடி வெங்காயத்தைவிடக் கருஞ்சிவப்பானவை. ஆகவே, இனிப்பும்/உறைப்பும்/காட்டமும் கூடுதலாக்கும்!:

மேக்கொண்டு உரிக்க எனக்கென்ன பயித்தியமா? இப்ப உள்ளதெ வச்சு என்ன செய்யலாமுன்னு குசினிக்குள்ள போவோணும்.
ஊடாலே யாரோ ரெண்டுபேரு ஒரு சங்க எலக்கியப் பாட்டெப்பத்திக் கேட்ருக்காங்க. பதில் தேடோணும்.
++++++++++
ஐயன்மீரே ... இலக்கியமும் வெங்காயம்தான்.
'ஜாதி' பற்றிப் புறநானூறு அப்பட்டமாகச் சொல்லியிருக்காம். அதுக்கு நீ என்ன சொல்றே-னு சில பெரியவர்கள் கேட்டிருக்கிறார்கள்.
பாரதி என்னடான்னா, கருப்பியான பாஞ்சாலியை "பொன்னிறப் பாஞ்சாலி"-னு சொல்லியிருக்கானே அதுக்கு நீ என்ன சொல்றே-னு நம்ம ஹரி கேட்டிருக்கிறார். எப்படியோ என்னோடு வம்படிக்க அவர் எழுந்து உட்காரும்படி அவருடைய முதுகுவலி விட்டுக்கொடுத்ததே, அதுபற்றி அவருடைய முதுகுக்கு நன்றி.
திரைப்படக்கவிஞர் என்று நான் கொண்டாடுபவர் என்னடான்னா ... "நீலவண்ணக் கண்ணா வாடா ... தங்கநிறம் உந்தன் அங்கம், அன்புமுகம் சந்த்ர பிம்பம் ..." என்று சொல்லி மயக்குகிறார்.
இப்ப சொல்லுங்க வெங்காயம்-னா என்னா?
++++++++++
இந்த வெங்காயத்தை வைத்து ஏதோ ஒன்றைச் சமைக்கப்போகிறேன். வூட்டுல என்னை அதட்டிக் கேக்க ஆளில்லையா, எல்லாம் இன்பமயம்!
உணவுப்பொருளை வீட்டில் பயிரிடுங்கள்.
அன்புடன்,
ராஜம்