மறுஜென்மம் இல்லை என்பதை உறுதியாக சொன்ன புத்தரின்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Nov 12, 9:59 am, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> கடவுள், அவதாரங்கள் பற்றிய புத்தரின் கருத்து என்ன ?
>
கடவுள் உண்டா? என்ற கேள்வியை
சிஷ்யகோடிகள் கேட்டபோது,
புத்தர் மௌனம் சாதித்தருளினார்.
வினோத்ராஜன் மேலும் விளக்க முடியும்.
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
புத்தரின் வார்த்தைகள் எதுவோ அதை மட்டும் வெளியிடவும். அவரின் சார்பாக பிறர் ( தேவைக்கு ஏற்ப } சொல்பவைகளை இங்கே வெளியிட வேண்டாம்.
On Nov 12, 10:20 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/11/12 Prakash Sugumaran <prakash...@gmail.com>
>
> > புத்தரின் வார்த்தைகள் எதுவோ அதை மட்டும் வெளியிடவும். அவரின் சார்பாக பிறர்
> > ( தேவைக்கு ஏற்ப } சொல்பவைகளை இங்கே வெளியிட வேண்டாம்.
>
> புத்தர் சொன்னபடிதான் பவுத்தம் இருக்கிறதா? எல்லா பவுத்தர்களும் அப்படிதான்
> நடந்தார்களா?:-)
>
அப்படித்தான் வள்ளுவத்தின் உரைகளும்.
பக்தி அனிமேஷனால் எதையும் மாற்ற
உரைகாரர்கள் - அன்றும் இன்றும் - முயன்றுள்ளனர்.
வாழ்க நலமுடன்,
நா. கணேசன்
> புத்தர் கடவுளை பற்றி பேசவில்லை.பிற்கால புத்தர்கள் அவரையே கடவுளாக்கினார்கள்.
> இதில் போதிதருமரின் கருத்து என்ன என யாருக்கு தெரியும்?அவரே மகாயான பவுத்தாரக
> இருந்து புத்தரை வழிபட்டு இருக்கலாம்.
>
> --
> செல்வன்
>
> "அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி - அதன்
> அருகினில் ஓலை குடிசை கட்டி
> பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் - இந்த
> பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்"
>
1) Dukkha: There is suffering. Suffering is an intrinsic part of
life prior to awakening, also experienced as dissatisfaction,
discontent, unhappiness, impermanence.
2) SamudAya: There is a cause of suffering, which is attachment or
desire .
3) Nirodha: There is a way out of suffering, which is to
eliminate attachment and desire.
4) MArga: The path that leads out of suffering is called the
Noble Eightfold Path.
http://en.wikipedia.org/wiki/Prat%C4%ABtyasamutp%C4%81da
dev
நம் சேகரங்களிலுள்ள கீழ்கண்ட கட்டுரைகளை வாசிக்கவும்:
http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=474&Itemid=615
ஏன் பேரா.காம்பே போதிதர்மர் தமிழராக இருக்கலாம் என்பதற்கு சீன ஆவணங்கள்
மூலம் பதில் தருகிறார். அவர் எப்படி களப்பிரத் தமிழராக இருக்கலாம் என்று
அமெரிக்க-இந்தியப் பத்திரிக்கையாளர் ‘ஜோ’ இங்கு விளக்குகிறார்.
காம்பே தோக்கியோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வு
பெற்றவர். அவருக்கு ஆய்வின் நுணுக்களை நாம் கற்றுக்கொடுக்க
வேண்டியதில்லை. ‘ஜோ’ ஷாவோலின் போய் போதிதர்மர் பற்றி முழுக்க ஆவணம்
செய்தவர்.
யார் இந்த ஏ.ஆர்.முருகதாஸ்?
போதிதருமர் பல்லவ அரசன், பிராமணன் என்றுதான் வலைப்பக்கங்கள்
சொல்லுகின்றன. (e.g: Wikipedia:
http://en.wikipedia.org/wiki/Bodhidharma). உசாத்துணையை மேலும்
ஆராயலாம்!
//தட்சசீலம், வைசாலி பகுதிகளில் தோன்றிய பல மகான்களின் வரிசையில் வந்த
போதி தர்மன், புத்தரின் கோட்பாடுகளை பல தேசங்களுக்கும் பரவச் செய்தவர்.//
இது உங்கள் அபிப்பிராயமா? எதிர்ப்புவாதமா? இல்லை ஆய்வுகளின் அடிப்படையில்
எடுத்த முடிவா? ஆதாரம் காட்டமுடியுமா?
அன்புடன்
நா.கண்ணன்
பிகு: வெகுஜன அபிப்பிராயம் என்பது எப்போதும் பொய்யாக இருக்கும் என்று
நம்பவேண்டியதில்லை!
Its just so annoying, when people don't do their basic reading and just claim (or to be precise "proclaim" ) whatever they wish !
V--
1. பிழையாகக் கற்றது மனதிலிருந்து போக நாளாகும் (பசுமரத்து ஆணி)
2. ஒழுங்காகக் கற்றதும் கொஞ்ச நாளில் மறந்து போகும் :-)
வினோத் போன்ற மகாத்மாக்கள் இரக்கம் கொண்டு உலகு உய்ய பகவான் புத்தர்
சொன்னதைத் திரும்பத்திரும்ப சொல்ல வேண்டியதுதான். அதுவும் தொண்டே!
நா.கண்ணன்
2011/11/13 Raja sankar <errajasa...@gmail.com>:
> ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
> In fact, there is only one place, I repeat, one place, in the whole Tipitaka
> where the Buddha declined to answer a question or questions put to him. On
> another occasion the same Vacchagotta asked the Buddha, “Is there a self?”
> The Buddha was silent. Vacchagotta continued, “Then is there no self?” and
> again the Buddha was silent. Perhaps a bit peeved or disappointment
> Vacchagotta got up and left. Then Ananda asked the Buddha why he met these
> questions with silence and he replied, “If when asked if there is a self I
> had answered ‘yes’ I would have been siding with those teachers who are
> eternalists. And if I had answered ‘no’ I would have been siding with those
> teachers who are annihilationists. If I had answered ‘yes’ would this have
> been consistent with the knowledge that everything is without self?” “No
> Lord” replied Ananda. “And if I had answered ‘no’ there is no self’ an
> already bewildered Vacchagotta would have been even more so and would have
> thought, ‘Before I had a self and now I don’t’” (SIV,400).
> http://sdhammika.blogspot.com/2011/04/silence-of-buddha.html
> ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்
உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்
உளனென விலனென விவைகுண முடைமையில்
உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே.
என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே :-))
நா.கண்ணன்
> ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
I got the following response from Mr. Joseph Aranha on Bodhidharma
"Bodhidharma landed in Guangzhou during the period of the Liang
dynasty and after three years in Guangzhou wemt to Nanjing (the
ancient capital at that time) where he met the Emperor Wu Di but had a
falling out with him. From there he went on to the Shaolin Temple, now
located in Deng Feng Countee in Henan Province. Here again he was not
welcomed by the Abbot of the Temple and so went up the Songshan
Mountain behind the Temple and meditated there hoping for 'sudden
enlightment'.
While it is said and taken literally that he meditated there for nine
years it is my opinion that he also taught the monks of the Temple (a)
Mahayana Buddhism, which later became Chan Buddhism, and (b) taught
them the martial arts based on the predessor of present day
Kalaripayat, and other Indian traditional systems for healthy living.
While there are records in China of his existence and what he did
there and also records of his re-incarnation in Japan, there is
absolutely no historical record of his existence in India, which is
his birth place.
There are many incorrect deductions and theories but nothing that can
be based on historical fact. So as a researcher/historian I can't say
he was from Kanchipuram.
I also tend to dis-agree with the theory that he was of Pallava
origin. I tend to lean more towards him being a Kallabhara as the
dates match his period of existence before he left for China. Another
theory (mine) as to why no historical records exist about him may be
the destruction of all records about the Kallabharas, by the Pallavas
when they conquered the Kallabharas.
As I have said before further dedicated research needs to be done
about his anti-cedents in India."
His article is available in THF at
http://www.tamilheritage.org/kidangku/bodhidharma/joe.pdf
N.Kannan
2011/11/13 N. Kannan <navan...@gmail.com>:
> நம் சேகரங்களிலுள்ள கீழ்கண்ட கட்டுரைகளை வாசிக்கவும்:
>
> http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=474&Itemid=615
>
> ஏன் பேரா.காம்பே போதிதர்மர் தமிழராக இருக்கலாம் என்பதற்கு சீன ஆவணங்கள்
> மூலம் பதில் தருகிறார். அவர் எப்படி களப்பிரத் தமிழராக இருக்கலாம் என்று
> அமெரிக்க-இந்தியப் பத்திரிக்கையாளர் ‘ஜோ’ இங்கு விளக்குகிறார்.
>
> காம்பே தோக்கியோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வு
> பெற்றவர். அவருக்கு ஆய்வின் நுணுக்களை நாம் கற்றுக்கொடுக்க
> வேண்டியதில்லை. ‘ஜோ’ ஷாவோலின் போய் போதிதர்மர் பற்றி முழுக்க ஆவணம்
> செய்தவர்.
>
> யார் இந்த ஏ.ஆர்.முருகதாஸ்?
>
> போதிதருமர் பல்லவ அரசன், பிராமணன் என்றுதான் வலைப்பக்கங்கள்
> சொல்லுகின்றன. (e.g: Wikipedia:
> http://en.wikipedia.org/wiki/Bodhidharma). உசாத்துணையை மேலும்
> ஆராயலாம்!
>
> //தட்சசீலம், வைசாலி பகுதிகளில் தோன்றிய பல மகான்களின் வரிசையில் வந்த
> போதி தர்மன், புத்தரின் கோட்பாடுகளை பல தேசங்களுக்கும் பரவச் செய்தவர்.//
>
> இது உங்கள் அபிப்பிராயமா? எதிர்ப்புவாதமா? இல்லை ஆய்வுகளின் அடிப்படையில்
> எடுத்த முடிவா? ஆதாரம் காட்டமுடியுமா?
>
> அன்புடன்
> நா.கண்ணன்
>
> பிகு: வெகுஜன அபிப்பிராயம் என்பது எப்போதும் பொய்யாக இருக்கும் என்று
> நம்பவேண்டியதில்லை!
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
On Nov 29, 4:44 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> Friends:
>
> I got the following response from Mr. Joseph Aranha on Bodhidharma
>
Important info. Thanks for this.
Does Aranha know Tamil also?
NG
> His article is available in THF athttp://www.tamilheritage.org/kidangku/bodhidharma/joe.pdf
>
> N.Kannan
>
> 2011/11/13 N. Kannan <navannak...@gmail.com>:
>
>
>
> > நம் சேகரங்களிலுள்ள கீழ்கண்ட கட்டுரைகளை வாசிக்கவும்:
>
> >http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view...
On Nov 12, 6:21 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/11/13 Vinodh Rajan <vinodh.vin...@gmail.com>:
yes. only problem is that the Tamil author comes 15 centuries after
Buddha.
NG
> நா.கண்ணன்
>
> > ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போதி தர்மர் குறித்து இந்தியாவில் எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. ஆனால்
சில விஷயங்களை நாம் இணைத்துப் பார்க்கும்போது சில மறைமுக விஷயங்கள்
புலப்படலாம்.
போதி தர்மரின் ஆண்டு கி.பி நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டு என வைத்துப்
பார்க்கும்போது, நாம் காஞ்சிபுரத்தின் இருப்பை சற்றுப் பார்க்கவேண்டும்.
தொண்டை மண்டலத்தில்தான் காஞ்சி இருந்தாலும் தமிழ் அங்கே சிறப்புறவில்லை
என்பதும், வடமொழிப் புலமைதான் சிறந்தோங்கியது என்பதும் தெள்ளிடை மலை.
நகரேஷு காஞ்சி - நகரங்களில் சிறந்தது காஞ்சி என பெயர் வரக் காரணமும்
காஞ்சிக் கடிகையே.
ஆனால் இரண்டாம் நூற்றாண்டு காஞ்சியின் வீதிகளையும், அப்போதைய
செல்வத்தையும் வர்ணித்த கண்ணனார், இளந்திரையன் ஆட்சி செய்த காஞ்சி
அப்போதைய மிகப் பெரிய கல்வி நகராக பெயர் பெற்றிருந்ததாகவும், காஞ்சியில்
பல்வேறுபட்ட இனத்தார்களும், மதங்களும் இருந்ததாக மிகப் பெரிய குறிப்பு
ஒன்றினை ‘பெரும்பாணாற்றுப் படை’ மூலமாக நமக்குத் தருகிறார்.
இளந்திரையன் ஆட்சிக்குப் பிறகு காஞ்சியில் பல்லவர் காலம் வந்தது.
முற்காலப் பல்லவர்களும் காஞ்சியை ஒரு மிகப் பெரிய கல்வித்தலமாக
வைத்திருந்தனர். பல்வேறுபட்ட மன்னர்கள் இந்தக் கடிகையில் கல்வி
கற்றதாகவும், அப்படிக் கற்றுக் கொள்ளும்போது மதங்களின், வர்ணங்களின்
பேதங்கள் வாதாடப்படுவதும் முக்கியமான கல்வி நிலை என்றும் தெரிய வருகிறது.
தெலுங்கு நாட்டைச் சேர்ந்த ஒரு அரசன் தனகேதுவாக வந்த ஒரு
சந்தர்ப்பத்தினால் கர்நாடகத்தில் தென்பகுதியை அரசள்கிறான். அவன் பெயர்
கடம்ப சர்மா. ஆனால் சர்மாக்கள் - பிராம்மணர்கள் அரசாளும் உரிமை இல்லாதவர்
என்பதற்காக, காஞ்சிக் கடிகையில் மிகப் பெரிய வாதம் நடைபெற்றது.
காஞ்சியில் உள்ள பிராம்மண பண்டிட்டுகளும், மற்ற சத்திரியர்களும் கடம்ப
சர்மாவின் ஆளுமையை ஒத்துக் கொள்ளவில்லை. அவனுக்கு காஞ்சிக் கடிகையில்
உரிமை மறுக்கப்படுகிறது. அவன் காஞ்சியில் வந்திறங்கியவுடன், தான்
குலத்தால் ஒரு படி இறங்க ஒப்புக் கொள்வதாகவும், இனித் தன் பெயர் கடம்ப
சர்மா இல்லை, கடம்ப வர்மா எனவும் ய்க்ஞ வேள்வியின் முன்பு தாரை வார்த்து
மாறுகிறான். - இதைப் பற்றிய குறிப்புகள் கடம்பர் வரலாறிலும் தெலுங்கு
சரித்திரப் புலமையாளர் எழுதிய புத்தகங்களிலும் உள்ளன.
காஞ்சியில் போதி தர்மர் இருந்தாரா என்றதற்கு ஆதாரம்
தேடிக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்து இதுவரை கிடைக்கவில்லை. ஆனால்
க்டம்ப சர்மா, கடம்ப வர்மா ஆனதைப் போல, மேற்கண்ட நிகழ்ச்சிகள் எத்தனையோ
காஞ்சி நகரில் நடந்திருக்க வாய்ப்புண்டு. அப்படி ஒரு நிகழு போதி தர்மர்
பற்றியதாக இருக்கலாம்.
போதி தர்மர் தமிழரா என்றால் இருக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
(விவரம் கிடைக்கவில்லை). களப்பிரரா என்றால் இருக்கலாம் என்றும் எண்ணத்
தோன்றுகிறது (பிறகு களப்பிரார் யார் எனக் கேள்வி வரும்). களப்பிரர் ஒரு
முக்கியப் பிரிவினர் புத்த தர்மத்தை மிக அதிகமான அளவில் பரப்பி
இருந்ததாகவும், அச்சுத களப்ப ராயன் என்போன் காலத்தில் அவன் தமிழகத்தை
ஆண்டபோது புத்த மதச் செழிப்பைப் பற்றி பாலி மொழியில் ஒரு காவியம்
படைக்கப்பட்டுள்ளது, இந்தக் காவியத்தில் உறையூர் நகரச் சிறப்பைப் பற்றிக்
கூட பாடல்கள் உண்டு. இப்படிப் பட்ட சமயத்தில் ஏதேனும் இளவரசர், அல்லது
அரச குரு போன்றோர் கீழை நாடுகளுக்கு சென்றிருக்க வாய்ப்புகள் உண்டு.
அன்புடன்
திவாகர்
2011/11/30 N. Kannan <navan...@gmail.com>:
> Friends:
>
> I got the following response from
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
His article is available in THF at
http://www.tamilheritage.org/kidangku/bodhidharma/joe.pdf
தமிழரா அந்தணரா இளவரசரா என்று அறியத் துடிப்பது நம் முன்னோரில் ஒருவர் புகழ் மிக்கவராக வாழ்ந்தார் என்ற பழம் பெருமைபேச உதவலாம். அவர் முன்வைத்த ஜென் தத்துவம் தென்புலச் சிந்தனைகள் எந்த அளவுக்கு பெளத்த தத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை அறிய உதவவேண்டும். நாகர்ஜுன அமராவதி சமஸ்கிரிதச் சாயல்போல் தமிழகச் சிந்தனைச் சாயல் ஏதாவது ஜென் தத்துவத்தில் இருக்க வாய்ப்புள்ளதா என்று அறிய முனையலாம்
நாகராசன்
~~~
பேராசிரியரே,
இதை தான் 11 11 11/12 11 11 தேதிகளில் சொன்னேன். எடுபடவில்லை.
இன்னம்பூரான்
30 11 11
***
‘...சமயங்களிலிருந்து பிரிந்து வந்த ஜென் நெறி, ஸுஃபி, கபீர் பந்ததி, சீக்கிய மதம், யூனிடேரியன் கிருத்துவப்பிரிவு போன்றவை கிளைகளா,விழுதுகளா, வாழைக்கன்றுகளா, தென்னம்பிள்ளைகளா என்று இனம் காணுவது கடினம். ஆன்மீக தேட்டலின் சிந்தனைக்களங்கள், அவை. அவற்றை புரிந்து கொள்ள, தன்னடக்கமும், ஆத்ம தாகமும், தனித்தும், கூடியும் வாழும் கலையும், நசிகேதஸ் மாதிரி வினவும் திறனும் வேண்டும். பந்தங்களை களையவேண்டும். ‘போதி தர்மர் தமிழர்; எனவே எங்களவர்’ போன்ற பற்றுக்களை தளர்த்தவேண்டும்.
இனி, கேள்விக்கு பதில். ‘தியானம்’ என்ற சொல்லின் திரிபு ‘ஜென்’ என்று கருதப்படுகிறது. மன சந்துஷ்டி நாடுவது எனலாம். ‘நகரேஷு காஞ்சி’ என்று புகழப்படும் நகரிலிருந்து கி.பி. ஆறாவது நூற்றாண்டில் போதி தர்மர் சீனா சென்று, அங்கு அவர் போதித்த நுண்கலை,உபதேசம், வாழ்நெறி, உன்னத ஆன்மீகம் தான் இந்த மனசந்துஷ்டிக் கலையும், அதனுடைய அதிசய பரிமாணங்களும். கி.பி. 12ம் நூற்றாண்டில், இந்த நெறி ஜப்பானில் செழிக்கத் தொடங்கியது ~‘சொல்லுக்கும், எழுத்துக்கும் அப்பாற்பட்டதும், வேதமும் சுவிசேஷமும் அற்றதும், மனதின் உள்ளே புகுந்து ஞானோதயம் அளிப்பதும், இந்த ‘ஜென்’ என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.
ஜப்பானில் தலைமுறை தலைமுறையாக ‘ஜென்’ குருநாதர்கள் வாழ்நெறி ஆச்சாரியர்களாக இயங்கி வந்தனர். இந்தியாவில் ‘ஜென்’ என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு அறியாமை. வழக்கம் போல், இத்தகைய நன்னெறிகள் எல்லாம் மேற்கத்திய நாடுகள் சென்று, அங்கிருந்து, நமக்கு வரலாம். அவற்றை தான் நாம் மூலமாக வைத்து படிக்க வேண்டியிருக்கிறது. அதில் தவறு ஒன்றுமில்லை. டி.டி. ஸுசுகி என்ற ஜப்பானிய ஜென் ஞானி தான் இந்த அரிய நெறியை மேற்கத்திய உலகுக்கு, கிருஸ்துமஸ் ஹம்ஃபிரிஸ், தாமஸ் மெர்டன் போன்ற சான்றோர்களின் துணையுடன், அறிமுகப்படுத்தினார்....’
இன்னம்பூரான்
11 11 11
*
நண்பர் காளை ராஜன் புரிந்து கொண்டார். அது வரை, இழை குழைந்து விட்டதே என்று களைத்துப்போய் விட்டேன். மறுபடியும், '...‘போதி தர்மர் தமிழர்; எனவே எங்களவர்’ போன்ற பற்றுக்களை தளர்த்தவேண்டும்.'
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
வணக்கம் ஐயா.மறுபடியும், '...‘போதி தர்மர் தமிழர்; எனவே எங்களவர்’ போன்ற பற்றுக்களை தளர்த்தவேண்டும்.'
நன்றி, வணக்கம்,
மறுஜென்மம் இல்லை என்பதை உறுதியாக சொன்ன புத்தரின் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்பிய போதி தர்மனுக்கே நவீன விஞ்ஞானம், மரபு ஆராய்ச்சி என்ற பெயரில் மறுஜென்மம் கொடுத்து, பல்லவ குல தோன்றலாக கதை விட்ட ஏ. ஆர். முருகதாசுக்கும், போதி தர்மரை பற்றி ஆராய்ச்சி செய்கிறேன், கட்டுரை வெளியிடுகிறேன் என்பவர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. எல்லாம் ஹாட் கேக் வியாபாரம்.
தட்சசீலம், வைசாலி பகுதிகளில் தோன்றிய பல மகான்களின் வரிசையில் வந்த போதி தர்மன், புத்தரின் கோட்பாடுகளை பல தேசங்களுக்கும் பரவச் செய்தவர். அப்படி தமிழகம் வந்தவர் பட்டுப் பாதையில் பயணித்து, கப்பல் வியாபாரிகளுக்கு தொல்லை கொடுத்த சீனர்களுக்கு தனது தியான முறைகளையும், நன் நெறிகளையும் போதித்து ஒழுக்கங்களை போதித்தவர்.
--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran
visit my blog
http://thamizharkoodu.blogspot.com/
see me at THF Hub
http://image-thf.blogspot.com/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆயினும் மடலாடலுக்குரிய அந்தஸ்தைத் தரத் தாங்கள் கூடத்தயங்குவது ஏன்?
மின்தமிழ் குழும மடலாடலில் திரு.திவாகர் சொன்னார் என்பதே சரியான
ஆதாரக்குறிப்பாக இருக்கும்!
குழும மடலாடல் என்பது வெறும் வம்புப்பேச்சு, அரட்டை எனும் நிலை தாண்டி
வந்து நீண்ட ஆட்கள் ஆகிவிட்டன. ஆய்வின் தொடக்க நிலைக் குறிப்புகள்
பகிர்ந்து கொள்ளப்படும் இடமாக இதைக் காண வேண்டும்.
அதே போல் இறுதிச் சுட்டியைக் கொடுக்கும் முன், தமிழ்மரபு அறக்கட்டளையின்
சேகரம் என்ற குறிப்பு வந்திருக்க வேண்டும்.
நாம் பிறரை வாழ்த்த வெட்கப்படுகிறோமா? இல்லை உலகின் அனைத்துத் தகவல்களும்
சுயமாக வாசிக்கும் தளத்திலிருந்து பீரிட்டு வருகிறது என்பது போன்ற இமேஜை
உருவாக்க முயல்கிறோமா?
இயலியல் எனும் துறை உள்ளதா? ஒரு கட்டுரை எப்படி எழுதப்பட வேண்டும்
என்றெல்லாம் சொல்லித்தருகிறார்களா? இல்லை தமிழகப் பத்திரிக்கை தர்மம்,
ஸ்டைல் என்பது இன்னும் குமுதம், விகடன் இவைகளிலிருந்துதான் கற்றுக்கொள்ள
வேண்டுமா? (அங்கு எந்த ஆதாரமும் இல்லாமல் எழுதுவதுதான் தர்மம்!).
ஆண்டோ! நீர் நம்மவர். எனவே இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் :-)
நா.கண்ணன்
2011/11/30 www.softview.in - Antopeter <softvi...@gmail.com>:
> Does Aranha know Tamil also?
>
>
ஓ! நன்றாகப் பேசுவார். கொங்கணத்தைச் சேர்ந்தவர். சென்னையில் வாழ்ந்ததால்
தமிழ்ப் பேசுவார்.
நா.கண்ணன்
2011/11/30 Dhivakar <venkdh...@gmail.com>:

போதிதர்மர் தமிழரா இல்லையா என்பதே ஒரு கசப்பான, வளர்க்கப்படாத கேள்வி
போல் இருக்கு.
தமிழர் என்றால் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர் , அல்லது தமிழகத்தில்
பல வருடங்களாக இருந்து தமிழிலேயே வாழ்க்கையை நடத்தியவர் - ஈவேரா போல.
முதலில் யார் தமிழர் என்று சொல்ல வேன்டும். பிறகு போதி தர்மரைப் பற்றிய
"தெரிந்த விஷயங்களை" முன் வைக்க வேன்டும்.
இதுவரை திவாகர் இரண்டும் செய்யவில்லை.
போதி தர்மரைப் பற்றி "தெரிந்த விஷயம்" கையில் ஒன்றும் இல்லை. எல்லாம்
ஸ்பெகுலேஷன். வெறும் கையை முழம் போடுகிறோம்.
அவர் களபிரராக இருக்கலாம், களபிரர்கள் தமிழர்கள் இல்லை, அதனால் அவர்
தமிழர் இல்லை. இந்த லாஜிக்கில் ஒரு நியாமமும் இல்லை. களபிரர்கள் யார்
என்று தெரியாது களபிஅரர்கள் தமிழ்நாட்டில் இருந்ததால் பல களபிரர்கள்
தமிழ் மொழியர்களாக இருக்க எல்லா வாய்ப்பும் உன்டு.
மேலும் "தொண்டை மண்டலத்தில்தான் காஞ்சி இருந்தாலும் தமிழ் அங்கே
சிறப்புறவில்லை" போன்ர ஸ்டேட்மென்டுகளை கண்டிக்கிறேன். முதலில் நாம்
போதிதர்மர் பற்றிதான் பேசுகிறோமே தவிர , கான்க்சி நகரின் "தமிழ்
சிறப்புகலை"ப் பற்றி அல்ல. திவாகர் ஆழம் தெரியாமல் காலை விட்டு,
செய்கிறார்.
திவாகருக்கு 5ம் ந்த்தான்டு கான்க்சியில் தமிழ் மொழி பேசுபவர்கள்
சதவிகிதம் எவ்வலவு என தோராயமாக சொல்ல முடியுமா? அப்படி இருந்தாலும் அது
போதி தர்மரை எப்படி அந்த சதவிகிதத்திலிருந்து கனக்கிடுவது.
உதாரனமாக இப்போது விசாகபட்டினத்தில் 99% தெலுங்கு பேசுபவர்கள். அதனால்
திவாகர் என்பவர் தமிழ் மொழியாக இருக்க முடியாது என சொல்லலாமா? நம் கண்
எஹிரிலேயெ இருக்கும் ஸ்டாடிஸ்ட்டுகலை வைத்து நாம் ஒருவரைப் பற்றி சொல்ல
முடியாது. அப்படி இருக்கும்போது, எப்படி ஒரு விவரம் இல்லாமல் போதி தரமர்
தமிழராக இருக்க முடியாது என பேசலாம்.
இப்படி ஒரு விஷயமும், விவரமும் கிடைக்காவிட்டால், போதி தர்மர் தமிழர்தான்
என்பது சொல்வதில் தவறே இல்லை - அதாவது அவர் காஞ்சியில் இருந்துதான்
வெளிநாடு சென்றார் என நிருவப்பட்டால்.
விஜயராகவன்
> 2011/11/30 N. Kannan <navannak...@gmail.com>:
> > 2011/11/13 N. Kannan <navannak...@gmail.com>:
>
> >> நம் சேகரங்களிலுள்ள கீழ்கண்ட கட்டுரைகளை வாசிக்கவும்:
>
> >>http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view...
>
> >> ஏன் பேரா.காம்பே போதிதர்மர்
>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
> இப்படி ஒரு விஷயமும், விவரமும் கிடைக்காவிட்டால், போதி தர்மர் தமிழர்தான்
> என்பது சொல்வதில் தவறே இல்லை - அதாவது அவர் காஞ்சியில் இருந்துதான்
> வெளிநாடு சென்றார் என நிருவப்பட்டால்.
>
பேரா.காம்பேயின் கட்டுரையை மீண்டும் வாசிக்கவும்:
http://www.tamilheritage.org/kidangku/bodhidharma/kambe.pdf
சீனா, கொரியா, ஜப்பான் ஆவணங்கள் சுட்டுவது இந்தியாவை. எனவே அவரது பௌத்த
பள்ளி (his school of thought) எதுவென்று கண்டுவிட்டால் இந்தியாவில்
எங்கு என்று ஒருவாறு யூகிக்கலாம்.
க.>
க.>
போதி தர்மர் காலம் களப்பிரரர் காலமா என்பது ஒரு கேள்வி; அதிலிருந்து போதி
தர்மர் தமிழர் இல்லை - அதாவது அவர் தாய் மொழி தமிழ் இல்லை என்பது
நியாயமில்லாத யூகம்
> காஞ்சி மாநகரம் பழந்தமிழ் மன்னர்களான மூவேந்தர்கள் ஆளுகை எல்லைக்கு அப்பால்
> இருந்ததால் அதைத் தமிழகம் என்று குறிப்பிடுவதில் முரண்படுவதற்கு இடம் உண்டு
பேராசிரியரே, எது தமிழகம் என்பதிலிலே உங்களுக்கு குழப்பம் உள்ளது.
தொல்காப்பியர் காலத்து, தமிழ் கூரும் வட எல்லை வேங்கடம் என்பது
தொல்காபியர் காலத்திலும் செல்லும், பல்லவர் காலத்திலும் செல்லும்,
ஆங்கிலேயர் காலத்திலும் செல்லும் இன்றும் செல்லும். நீங்கள் காஞ்சி
வேங்கடத்திற்க்கு தெற்கே உள்ளது என ஒத்துக் கொண்டால் , குழப்பம் ஏதும்
இல்லை. தமிழகம் என்பது தமிழ் பேசும் மக்கள் உள்ள இடம், சோழ சேர
பாண்டியர் இருந்த இடம் இல்லை
> மாமல்லபுரத்தின் வரலாறு வாதாபி ஆவணங்களில் இருந்து எழுதப்பட்டதுபோல் போதி
> தருமரின் வரலாறும் கிழக்காசிய நாடுகளின் ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்படலாம்
> போதிதருமர் பெள்த்தரானவுடன் சீனத்திற்குக் கிளம்பிச் செல்லவில்லை.
> இருபதாண்டுகளுக்குமேல் காஞ்சியில் வாழ்ந்து அதன் பின்னரே சீனம் சென்றர்ர். ஒரு
> கால் நூற்றாண்டு வரலாறு காணவில்லை என்று சொல்லுவதும் களப்பிரர்களும்
> சைவர்களும் திட்டமிட்டு அழித்துவிட்டனர் என்று சொல்லுவதும் காதுல பூ எனப்து
> போலத்தான்
போதி தர்மர் தென் இந்தியாவிலிருந்து கிழக்கே சென்றார் என்பத்தைத் தவிர,
எல்லாம் ஸ்பெகுலேஷன்கள்தாம் (காதில் பூ என்பதில் தவறில்லை). அதுவும், அது
தமிழ் ஆவணங்களில் இருந்து இல்லை, எல்லாம் கணேசர் வெறுக்கும் வெளிநாட்டவர்
ஆவணங்களில் இருந்து.
விஜயராகவன்
நம்மை விட சரித்திரக்குறிப்பில் சீனர்கள் கெட்டி.
கொரியாவில் ராஜ சபையில் நடப்பதை எழுதுபவனை அரசனால் கூட ஒன்றும் செய்ய
முடியாது என்பது அங்கு சட்டம். எனவே நான் காம்பேயின் யூகங்களை
நம்புகிறேன். கொரியாவின் ஆகச் சிறந்த சரித்திரவியலர் இந்தியத்தொடர்பில்
ஆழமான நம்பிக்கை வைத்துள்ளனர். ராஜு பொன்னுதுரையின் ஆய்வுகள் போதி
தருமருக்குப் பின் பல தமிழக பௌத்த துறவிகள் கொரியா வந்து போனதைச்
சுட்டுகிறது (in the book Tamil as a classical language - Inst. Asian
Studies).
ஆந்திராவில் பௌத்தம் சிறப்பான நிலையை அடைந்திருக்கிறது. அங்கு தேடலாம்.
முதலில் ஜென் பௌத்தம் இந்தியாவின் எப்பள்ளி தொடர்புடையது என்று காண
வேண்டும்.
போதிதர்மரின் சிந்தனைத் தொடர்ச்சி சைவர்களால் மாற்றுருவில்
மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருக்கலாம். தத்துவார்த்தமாக ஆராய வேண்டும்.
அதே சமயம், பாலு போன்றோரின் மீனவ சமூக நாட்டார் தொன்மங்கள் சில தடயங்களை
அளிக்கலாம்.
ஒன்றுமே ஆய்வு செய்யாமல் நம்மாளுக முதலில் ஒரு சினிமாப்படத்தை எடுத்து
சீனர்களை வில்லனாக்கிவிட்டனர்.
நம் ஆய்வின் நிலையை அது சுட்டுகிறது.
தமிழ் மண்ணில் சரித்திரங்கள் அழியலாம் ஆனால் தொன்மங்கள் அழிவதில்லை.
எதாவது ஐயனார், கருப்பணசாமின்னு போதிதருமர் உட்கார்ந்து இருக்கப்போறார்
:-)
நீங்கள் அன்றிலிருந்து சுட்டுவது போல் (நான் அப்போது
எற்றுக்கொள்ளாவிடினும்) வர்மக்கலை ஒரு முக்கிய சான்று. அது தமிழ்க்கலையா?
அதன் தொடர்ச்சி இன்றும் உள்ளதா இங்கு?
நா.கண்ணன்
2011/11/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
நீங்கள் அன்றிலிருந்து சுட்டுவது போல் (நான் அப்போது
எற்றுக்கொள்ளாவிடினும்) வர்மக்கலை ஒரு முக்கிய சான்று. அது தமிழ்க்கலையா?
அதன் தொடர்ச்சி இன்றும் உள்ளதா இங்கு?
நா.கண்ணன்
எதாவது ஐயனார், கருப்பணசாமின்னு போதிதருமர் உட்கார்ந்து இருக்கப்போறார்
:-)
இதை எழுதிவிட்டு பின் யோசித்த போது இதே முடிவிற்குத்தான் நானும் வந்தேன்.
போதிதருமர் சூர்யா போன்று இளமைக்காலத்தில் சீனா போகவில்லை.
முதியவராகித்தான் போகிறார். எனவே சீனா போய் திரும்பியிருக்க
வாய்ப்பில்லை!
இங்கு பத்தோடு பதினொன்று என்று ஒரு புத்த சந்நியாசி வெளிநாடு போனதைப்
பதிவு செய்து வைத்திருப்பார்களா? என்பது சந்தேகமே!
சீனக்குறிப்புகள் அவர் ராஜவம்சமென்றும், குடும்பத்தின் பேச்சை மீறி சீனா
சென்றார் என்றும் கூறுகிறது. அது இங்கு ஏதாவது மெய்கீர்த்தியில்
பதிவாகியுள்ளதா? எனக்காணலாம்.
அவரைத்தமிழர் என்று சொல்வதற்கு இரண்டு தடயங்கள் உள்ளன. 1) களப்பரி முதலிய
தற்காப்பு கலை, 2) அவரது தத்துவம். இதைக் கூர்மையாக நோக்கினால் பலனுண்டு.
நா.கண்ணன்
2011/12/1 கி.காளைராசன் <kalair...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
> போதி தர்மர் தென் இந்தியாவிலிருந்து கிழக்கே சென்றார் என்பத்தைத் தவிர,
> எல்லாம் ஸ்பெகுலேஷன்கள்தாம் (காதில் பூ என்பதில் தவறில்லை). அதுவும், அது
> தமிழ் ஆவணங்களில் இருந்து இல்லை, எல்லாம் கணேசர் வெறுக்கும் வெளிநாட்டவர்
> ஆவணங்களில் இருந்து.
>
These Chinese sources lend themselves to make inferences about
Bodhidharma's origins. "The third son of a Brahmin king" has been
speculated to mean "the third son of a Pallavine king"[35]. Based on a
specific pronounciation of the Chinese characters 香至 as Kang-zhi,
"meaning fragrance extreme"[35], Tstuomu Kambe identifies 香至 to be
Kanchipuram, an old capital town in the state Tamil-Nadu. According to
Tstuomu Kambe:
"Kanchi means 'a radiant jewel' or 'a luxury belt with jewels', and
puram means a town or a state in the sense of earlier times. Thus, it
is understood that the '香至-Kingdom' corresponds to the old capital
'Kanchipuram'."[35]
http://en.wikipedia.org/wiki/Bodhidharma
நம்மவர் சீனம் கற்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இல்லையெனில் பிரச்சனைதான்!
நா.கண்ணன்
Bodhi Dharma and Oceanic Silk Road
Tstuomu Kambe
2011/12/1 N. Kannan <navan...@gmail.com>:
திரு விஜயராகவன்!
என்னுடைய மேற்கண்ட குறிப்பைப் பார்த்து விட்டு ஆழம் தெரியாமல் காலை
விடுவதாக தாங்கள் குற்றம் சாட்டி உள்ளீர்கள்! நன்று! அன்றைய காலத்தில்
இருந்த நிலைமைய சரித்திர குறிப்புகள் என்ன சொல்கிறதோ அதைத்தான் நான்
குறிப்பிட்டுள்ளேன். இதோ ஒரு சான்று: இது சிஙகப்பூர் லைப்ரரி டாடா பேஸ்).
என்னிடம் வேறு சில புத்தகங்கள் உள்ளன. ஆனால் மிகப் பெரிய குறிப்புகள்
அவை.. என்னால் இங்கே டைப் செய்ய முடியாது!
:Before Medieval History:
The script in which the earliest Southeast Asian inscriptions were
written, however, suggests that these religious ideas and texts were
transmitted to Southeast Asians via the southeast coast of India,
where religious use of Sanskrit and Pali also sat alongside the more
mundane use of very different indigenous local languages. The fact
that southern Indian languages didn't travel eastwards along with the
script further suggests that the main carriers of ideas from the
southeast coast of India to the east - and the main users in Southeast
Asia of religious texts written in Sanskrit and Pali - were Southeast
Asians themselves. The spread of these north Indian sacred languages
thus provides no specific evidence for any movements of South Asian
individuals or groups to Southeast Asia.
தமிழ் ஆட்சி மொழியாக சங்க கால கட்டத்தில் இன்றைய தமிழகத்தின் சேர சோழ
பாண்டியர் பகுதியில் இருந்தாலும் பல்லவர்கள் ஆட்சியின் போது நிச்சயம் அது
ஆட்சி மொழி அல்ல. இதற்கு பெரிய புலமை தேவை இல்லை. சங்கப்பாடல்களே வேங்கட
மலையை வெகு தூரமாகவும், காதலன் அந்தப் பக்கம் அத்தனை தூரம் சென்றதால்
தலைவிக்கு ஏற்பட்ட சோகத்தை வர்ணித்த அகப் பாடல்கள் சான்றை என்னால்
தரமுடியும். ஆகையினால் தொண்டை மண்டலத்தில் தமிழ்தான் ஆட்சி மொழி என்பதை
இன்னமும் சரித்திரம் நிரூபிக்கவில்லை. முற்கால பல்லவ மன்னர்கள் எப்போதுமே
வடநாட்டு அரசர்களாக இருந்த குப்த வம்சத்தோடு சம்பந்தமோ சண்டையோ செய்ய
விரும்பினார்கள். மகேந்திரன் ( இவனுக்கும் பிற்காலத்தில் புகழ்பெற்ற
பல்லவ மகேந்திரனுக்கும் சம்பந்தம் இல்லை) எனும் பெயருடைய ஒரு முற்கால
பல்லவன், குப்தர்கள் அரசரான குமார குப்தர் மகள் ஐஸ்வர்யாவை மணக்க
விரும்பி கப்பல் மூலம் கங்கை வழியாக பாடலிபுரம் செல்லும்போது
பிராம்மணர்கள் தடுத்தார்களாம் - ஐம்பது வயது கிழ ராஜன் பதின்மூன்றே வயது
நிரம்பிய அரசிளஙுமரியை மணக்கப் பிராயச்சித்தத் தண்டம் கேட்டார்களாம்.
கங்கை நதியில் பிராம்மணர்களுக்கு ‘தண்டம்’ செலுத்திய பிறகு அதன் பின்னர்
அந்தப் பெண்ணை மணந்து மறுபடியும் காஞ்சியை நோக்கி வருகையில் வழியில் கடல்
கொள்ளையர்களுடன் போரிட்டு வென்றதாக சரித்திர குறிப்பு இருக்கிறது.
குமாரகுப்தன் நான்கு-ஐந்தாம் நூற்றாண்டிச் சேர்ந்தவன். இதையெல்லாம்
எழுதுவது இந்த முற்கால பல்லவர்கள் எந்தப் பக்கம் சார்ந்திருந்தார்கள்
என்பதைக் காட்டத்தான்.
அரசர்கள் மத்தியிலோ, ஆன்றோர் மத்தியிலோ தமிழ் காஞ்சியில் ஆளவில்லை
என்பதற்கு ஏழாம் நூற்றாண்டு வரை குறிப்புகள் உள்ளன. சில சமுஸ்கிருத
காவியங்கள் இங்கே அரங்கேற்றப்பட்டுள்ளன. கிராதாஜூர்னியம் என்கிற காவியம்
மகாகவி பாரவியால் ஆறாம் நூற்றாண்டில் இங்கு அரங்கேற்றப்பட்டது. அவர்
அங்கு அந்தக் காவியத்தில் எழுதியதுதான் ‘நகரேஷு காஞ்சி, புருஷேஷு விஷ்ணு,
நாரீஷு ரம்பா இன்ன பிற) இன்னொரு வடமொழி மகாகவி தண்டின் காஞ்சியில் ஏழாம்
நூற்றாண்டின் கடைப் பகுதியில் மிகவும் பிரபலமானவர். ஆறு-ஏழாம்
நூற்றாண்டினைச் சேர்ந்த அரசன் மகேந்திரனே தமது மத்தவிலாஸம் நாடகங்களை
வடமொழியில்தான் இயற்றினான்.மகேந்திரனுக்குப் பிறகு வந்த பல்லவ அரசர்கள்
யாவரும் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்பதில் எந்தவித சந்தேகமும்
இல்லைதான். இது வட திசையில் புகழரசர்கள் வீழ்ச்சியாலும் தென் திசையில்
பாண்டியர் எழுச்சியாலும் அப்பர், சம்பந்தர், ஆழ்வார்கள் போன்ற ஞானிகளால்
தமிழுக்கு ஏற்பட்ட மாற்றத்திலுமாகவும் இருக்கலாம்.
ஆகையினால் ஐந்தாம் நூற்றாண்டில் தமிழின் நிலைமை காஞ்சியில் உள்ளதைப்
பற்றிய மேற்கண்ட கருத்து என்னால் தெரிவிக்கப்பட்டது. பல்லவரத்தில்
இன்றைக்கும் ஒரு மசூதியில் மகேந்திர காலத்து குகைக் கொவிலும் கல்வெட்டும்
உள்ளது. அதில் பல்லவ கிரந்தத்தில் தமிழ் தெலுங்கு, சமுஸ்கிருதம் ஆகிய
மும்மொழிகளில் தனது விதம் விதமான பெயர்களை மகேந்திரன்
பொறித்திருக்கிறான். ஏறக்குறைய தமிழ் மொழியில் அரசர்களால் சொல்லப்பட்ட
முதல் கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று. மகேந்திர பல்லவனின் அரசாட்சி காலம்
ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பம். அதாவது பல்லாவரத்தில் அந்த கால கட்டத்தில்
தெலுங்கு மொழி பேசுவோரும் இருக்கவேண்டும் என்பதையே இந்தக் கல்வெட்டு
செய்தியாக சொல்கிறது. இப்படி இருக்கையில் கல்வெட்டு சான்றுகள் ஒன்றுமே
இல்லாத ஐந்தாம் நூற்றாண்டில் காஞ்சியில் உள்ள தமிழன், தமிழர் பற்றிய
ஸ்டாட்ஸ் பற்றியெல்லாம் என்னிடம் நீங்கள் கேட்பது வேடிக்கையாகவும்
விநோதமாகவும் படுகின்றது.
களப்பிரர் யாவர் என்பதைப் பற்றி ஆராய்ச்சிகள் இன்னமும் முடிவான நிலைக்கு
வரவில்லை. அப்படி அவர்கள் தமிழர்கள் என்பதை சரித்திரம் நிரூபிக்கும் வரை
என்னைப் போன்ற சரித்திர ஆர்வலர்கள் களப்பிரரை கன்னடர் அல்லது பாலி மொழி
பேசும் கிழக்காசியப் பகுதியைச் சார்ந்தவர் அல்லது மத்திய இந்தியக்
காடுகளைச் சார்ந்தவர் என்று சரித்திர அறிஞர்களால் இப்போது வரைச் சொல்லப்
படுகின்ற நிலையைத் தான் பின்பற்றமுடியும்.. களப்பிரர் தமிழ் தேசத்தைச்
சார்ந்தவர் என்பதை சரித்திர ஆதார பூர்வமாக இல்லாத பட்சத்தில் எப்படி எழுத
முடியும்.
போதி தர்மரைப் பற்றி முதலிலேயே குறிப்பிட்டுவிட்டேனே - சரித்திர பூர்வமாக
நம்மிடம் எந்தவித ஆதாரமும் இல்லையென்று. நான் நீங்கள் சொல்லிய
ஸ்பெகுலேஷன் என்கிற என் கருத்து திரு ஜோசப் ஆரன்ஹா வின் கருத்தை ஒற்றி
எழுதியதுதானே.. ஸ்பெகுலேஷன் செய்வதற்கு யாருக்கு வேண்டுமானாலும் உரிமை
இருக்கிறது. உங்களுக்கும் இருக்கிறது. அதே சமயத்தில் மற்றவர்
ஸ்பெகுலேஷன்களை உங்களால் தடுக்கவும் முடியாது. திரு ஜோசப் எழுதியவையே
ஸ்பெகுலேஷன் ஆதாரங்களின் மூலம்தானே! கருத்தைதான் இங்கு காணவேண்டும்.
ஒப்புக் கொள்ளும்படியாக இருந்தால் ஒப்புக்கொள்வது நல்லது. ஏற்றுக்
கொள்ளவில்லையென்றால் ஏன் எற்கமுடியாது என்று சொல்லவேண்டும், அவ்வளவே.
சேப்டர் க்ளோஸ்.
அதற்காக ஆழம் தெரியாமல் கால் விடுவது, போன்ற கடினமான வார்த்தைகளை என்
மீது ஏன் வீசினீர்கள் என்று தெரியவில்லை. என் பதிவுகளைப் பற்றியும் அதன்
பின்னணி பற்றியும் இங்கு நிறைய பேர் அறிவர். (நீங்களும் அறிவீர்கள்
என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் நீங்கள் படிப்பதில்லை
போலும்! அதனாலென்ன?)
பை தெ பை, போதி தர்மர் தமிழன் என்று சொல்லாமல் திராவிடன் என்று
சொல்லியிருந்தால் இன்னும் நிறைய ’ஸ்பெகுலேஷன்களை’ என்னால் தரமுடியும் -
தெலுங்கு நாட்டிலிருந்து. உங்களிடமிருந்து இன்னும் நிறைய வாங்கிக்
கட்டிக் கொண்டிருப்பேன். இந்தப் பதிவின் தலைப்பை எழுதியவர் ஒருவேளை
ரிகன்ஸிடர் செய்யலாம்.. விஜயராகவனிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொள்ள
இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்ன?
இருந்தும் குறை ஒன்றுமில்லை கோவிந்தா! அல்லது ராகவா, மாதவா!! நிறைய
விஷயம் தெரிந்து கொள்ளக் கிடைத்தது. மகிழ்ச்சியே!
திவாகர்
2011/11/30 விஜயராகவன் <vij...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
Right Thiru.Divakar
The above excerpt has no bearing on BD's mother tongue
> தமிழ் ஆட்சி மொழியாக சங்க கால கட்டத்தில் இன்றைய தமிழகத்தின் சேர சோழ
> பாண்டியர் பகுதியில் இருந்தாலும் பல்லவர்கள் ஆட்சியின் போது நிச்சயம் அது
> ஆட்சி மொழி அல்ல. இதற்கு பெரிய புலமை தேவை இல்லை. சங்கப்பாடல்களே வேங்கட
> மலையை வெகு தூரமாகவும், காதலன் அந்தப் பக்கம் அத்தனை தூரம் சென்றதால்
> தலைவிக்கு ஏற்பட்ட சோகத்தை வர்ணித்த அகப் பாடல்கள் சான்றை என்னால்
> தரமுடியும். ஆகையினால் தொண்டை மண்டலத்தில் தமிழ்தான் ஆட்சி மொழி என்பதை
> இன்னமும் சரித்திரம் நிரூபிக்கவில்லை.
ஆட்சி மொழி ஒன்று, மக்கள் மொழி , அரசர் குடும்ப மொழி ஒன்று. 1947 முன்
ஆட்சி மொழி ஆங்கிலம் , ஆனால் 100% ஆட்சியாளர்கள் ( சில ஆங்கிலேயர்களை
தவிர) தமிழ் , தெலுங்கு, முதலிய மொழிகளை தாய் மொழியாக கொண்டு இருந்தனர்.
இப்போதும்கூட தமிழகத்தில் டிஃபேக்டோ ஆட்சி மொழி, வணிக, தொழில்நுட்ப மொழி
ஆங்கிலம்தான்
சரித்திரம் தொண்டை மண்டலத்தில் சமஸ்கிருதமோ, பிராகிருதமோ ஆட்சி மொழி
எனவும் நிரூபிக்கவில்லை.
முற்கால பல்லவ மன்னர்கள் எப்போதுமே
> வடநாட்டு அரசர்களாக இருந்த குப்த வம்சத்தோடு சம்பந்தமோ சண்டையோ செய்ய
> விரும்பினார்கள். மகேந்திரன் ( இவனுக்கும் பிற்காலத்தில் புகழ்பெற்ற
> பல்லவ மகேந்திரனுக்கும் சம்பந்தம் இல்லை) எனும் பெயருடைய ஒரு முற்கால
> பல்லவன், குப்தர்கள் அரசரான குமார குப்தர் மகள் ஐஸ்வர்யாவை மணக்க
> விரும்பி கப்பல் மூலம் கங்கை வழியாக பாடலிபுரம் செல்லும்போது
> பிராம்மணர்கள் தடுத்தார்களாம் - ஐம்பது வயது கிழ ராஜன் பதின்மூன்றே வயது
> நிரம்பிய அரசிளஙுமரியை மணக்கப் பிராயச்சித்தத் தண்டம் கேட்டார்களாம்.
> கங்கை நதியில் பிராம்மணர்களுக்கு ‘தண்டம்’ செலுத்திய பிறகு அதன் பின்னர்
> அந்தப் பெண்ணை மணந்து மறுபடியும் காஞ்சியை நோக்கி வருகையில் வழியில் கடல்
> கொள்ளையர்களுடன் போரிட்டு வென்றதாக சரித்திர குறிப்பு இருக்கிறது.
> குமாரகுப்தன் நான்கு-ஐந்தாம் நூற்றாண்டிச் சேர்ந்தவன். இதையெல்லாம்
> எழுதுவது இந்த முற்கால பல்லவர்கள் எந்தப் பக்கம் சார்ந்திருந்தார்கள்
> என்பதைக் காட்டத்தான்.
ஆனால் அது அரசர்களின் அல்லது மக்களின் தாய் மொழியைப் பற்றி ஒண்ணும்
சொல்லவில்லை.
> அரசர்கள் மத்தியிலோ, ஆன்றோர் மத்தியிலோ தமிழ் காஞ்சியில் ஆளவில்லை
> என்பதற்கு ஏழாம் நூற்றாண்டு வரை குறிப்புகள் உள்ளன.
மேலே பார்க்க "ஆளும் மொழி" மக்கள் மொழியில் இருந்து பல முறை வேறாக உள்ளது
- இப்பொழுதும்தான்.
சரி ஏழாம் நூற்றாண்டுக்கு முன் காஞ்சிபுரம், தொண்டை மண்டலத்தில் கிடைத்த
கல்வெட்டுகளில் தமிழ் கல்வெட்டுகளின் சதவிகிதம் என்ன, மற்ற மொழிகளின்
சதவிகிதம் என்ன ? அது "ஓரளவு" ஆட்சி மொழி என்ன என்பதை நிருவும்.
சில சமுஸ்கிருத
> காவியங்கள் இங்கே அரங்கேற்றப்பட்டுள்ளன. கிராதாஜூர்னியம் என்கிற காவியம்
> மகாகவி பாரவியால் ஆறாம் நூற்றாண்டில் இங்கு அரங்கேற்றப்பட்டது. அவர்
> அங்கு அந்தக் காவியத்தில் எழுதியதுதான் ‘நகரேஷு காஞ்சி, புருஷேஷு விஷ்ணு,
> நாரீஷு ரம்பா இன்ன பிற) இன்னொரு வடமொழி மகாகவி தண்டின் காஞ்சியில் ஏழாம்
> நூற்றாண்டின் கடைப் பகுதியில் மிகவும் பிரபலமானவர். ஆறு-ஏழாம்
> நூற்றாண்டினைச் சேர்ந்த அரசன் மகேந்திரனே தமது மத்தவிலாஸம் நாடகங்களை
> வடமொழியில்தான் இயற்றினான்.மகேந்திரனுக்குப் பிறகு வந்த பல்லவ அரசர்கள்
> யாவரும் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்பதில் எந்தவித சந்தேகமும்
> இல்லைதான். இது வட திசையில் புகழரசர்கள் வீழ்ச்சியாலும் தென் திசையில்
> பாண்டியர் எழுச்சியாலும் அப்பர், சம்பந்தர், ஆழ்வார்கள் போன்ற ஞானிகளால்
> தமிழுக்கு ஏற்பட்ட மாற்றத்திலுமாகவும் இருக்கலாம்.
All that has no bearing at all on the identity , and the presumed
mother tongue of Bodhi Dharma, who is the object of discussion here.
காக்கா உட்கார பனங்காய் விழுந்தது என்பது விஞ்ஞான முடிவுகளுக்கு அளவுகோல்
அல்ல.
> ஆகையினால் ஐந்தாம் நூற்றாண்டில் தமிழின் நிலைமை காஞ்சியில் உள்ளதைப்
> பற்றிய மேற்கண்ட கருத்து என்னால் தெரிவிக்கப்பட்டது. பல்லவரத்தில்
> இன்றைக்கும் ஒரு மசூதியில் மகேந்திர காலத்து குகைக் கொவிலும் கல்வெட்டும்
> உள்ளது. அதில் பல்லவ கிரந்தத்தில் தமிழ் தெலுங்கு, சமுஸ்கிருதம் ஆகிய
> மும்மொழிகளில் தனது விதம் விதமான பெயர்களை மகேந்திரன்
> பொறித்திருக்கிறான். ஏறக்குறைய தமிழ் மொழியில் அரசர்களால் சொல்லப்பட்ட
> முதல் கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று. மகேந்திர பல்லவனின் அரசாட்சி காலம்
> ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பம். அதாவது பல்லாவரத்தில் அந்த கால கட்டத்தில்
> தெலுங்கு மொழி பேசுவோரும் இருக்கவேண்டும் என்பதையே இந்தக் கல்வெட்டு
> செய்தியாக சொல்கிறது. இப்படி இருக்கையில் கல்வெட்டு சான்றுகள் ஒன்றுமே
> இல்லாத ஐந்தாம் நூற்றாண்டில் காஞ்சியில் உள்ள தமிழன், தமிழர் பற்றிய
> ஸ்டாட்ஸ் பற்றியெல்லாம் என்னிடம் நீங்கள் கேட்பது வேடிக்கையாகவும்
> விநோதமாகவும் படுகின்றது.
"கல்வெட்டு சான்றுகள் ஒன்றுமே இல்லாத ஐந்தாம் நூற்றாண்டில்
காஞ்சியில்...... " என நீங்களே எழுதும்போது , எப்படி மற்ற முடிவுகளுக்கு
வர முடியும் ??? அந்த விநோதத்தை எடுத்துக் காட்டதான் கௌண்டர்-விநோதத்தை
எழுதினேன் .
>
> களப்பிரர் யாவர் என்பதைப் பற்றி ஆராய்ச்சிகள் இன்னமும் முடிவான நிலைக்கு
> வரவில்லை. அப்படி அவர்கள் தமிழர்கள் என்பதை சரித்திரம் நிரூபிக்கும் வரை
> என்னைப் போன்ற சரித்திர ஆர்வலர்கள் களப்பிரரை கன்னடர் அல்லது பாலி மொழி
> பேசும் கிழக்காசியப் பகுதியைச் சார்ந்தவர் அல்லது மத்திய இந்தியக்
> காடுகளைச் சார்ந்தவர் என்று சரித்திர அறிஞர்களால் இப்போது வரைச் சொல்லப்
> படுகின்ற நிலையைத் தான் பின்பற்றமுடியும்.. களப்பிரர் தமிழ் தேசத்தைச்
> சார்ந்தவர் என்பதை சரித்திர ஆதார பூர்வமாக இல்லாத பட்சத்தில் எப்படி எழுத
> முடியும்.
Some remarks:
1. Whatever may be the identity of Kalabhras, it says nothing about
Bodhi Dhrma.
2. About the kalbhras from the wiki "The identification of the
Kalabhras is difficult. The chieftains of this tribe mentioned in
Sangam literature are Tiraiyan of Pavattiri and Pulli of Vengadam or
Tirupati. The Kalavar must have been dislodged from their habitat near
Tirupati by political events of the third century, viz. the fall of
the Satavahanas and the rise of Pallavas, resulting in political
confusion in Tondaimandalam.[1] P.T Srinivasa Iyengar identifies them
with the Tamil Kalappalar clan. Supposedly they migrated from the
Karnataka."
3. Even if Kalabhras were non-Tamils, their percentage in population
would have been small. You know many people in many countries that
Tamils are from Srilanka , and are surprised to learn that there are
Tamils in India. I tell them there are 50 times as many tamils in
India. Due to the fact that Srilankan Tamils have hogged the headlines
in TV and newspapers, the popular mind in the west asociates Tamil
with Srilanka.
The same case in 3rd, 4th centuries. Kalabhras have hoggeed the
headlines of those days and we tend to give them more prominence
demographically and politically. It is even possible that 99% of
Kalabhra army would have composed of Tamil speakers who were led by a
charismatic non-Tamils. In the Carnatic wars (and in in the British
Conquest of India generally) 99% of the soldiers involved were Tamils
or Indians. Yet it was the British who won.
Just from a period called 'Kalabhra interrugnum" we cannot draw too
many conclusions about the demographic make up of Tamilnadu, when
there is scant documentary evidence.
Anyhow, all this has no bearing on the கதா நாயகன் - போதிதர்மர்
> போதி தர்மரைப் பற்றி முதலிலேயே குறிப்பிட்டுவிட்டேனே - சரித்திர பூர்வமாக
> நம்மிடம் எந்தவித ஆதாரமும் இல்லையென்று. நான் நீங்கள் சொல்லிய
> ஸ்பெகுலேஷன் என்கிற என் கருத்து திரு ஜோசப் ஆரன்ஹா வின் கருத்தை ஒற்றி
> எழுதியதுதானே.. ஸ்பெகுலேஷன் செய்வதற்கு யாருக்கு வேண்டுமானாலும் உரிமை
> இருக்கிறது. உங்களுக்கும் இருக்கிறது. அதே சமயத்தில் மற்றவர்
> ஸ்பெகுலேஷன்களை உங்களால் தடுக்கவும் முடியாது. திரு ஜோசப் எழுதியவையே
> ஸ்பெகுலேஷன் ஆதாரங்களின் மூலம்தானே! கருத்தைதான் இங்கு காணவேண்டும்.
> ஒப்புக் கொள்ளும்படியாக இருந்தால் ஒப்புக்கொள்வது நல்லது. ஏற்றுக்
> கொள்ளவில்லையென்றால் ஏன் எற்கமுடியாது என்று சொல்லவேண்டும், அவ்வளவே.
> சேப்டர் க்ளோஸ்.
நான் அதைத்தானே செய்தேன்.
நான் யார் ஸ்பெகுலேஷங்களையும் தடுக்கவில்லை, தடுக்கவும் பிரயத்னப்
படவில்லை. ஆனால் எது ஸ்பெகுலேஷன் என அடையாளம் காட்டினேன், அவ்வளவுதான்
> அதற்காக ஆழம் தெரியாமல் கால் விடுவது, போன்ற கடினமான வார்த்தைகளை என்
> மீது ஏன் வீசினீர்கள் என்று தெரியவில்லை.
Jumping into conclusions and sweeping statement ஐ ஆழம்தெரியாமல்
காலைவிடுவது என்றேன். அது கடினமாக இருந்தால் Jumping into conclusions
அல்லது அதைவிட மிருதுவான விமர்சனம் என எடுத்துக் கொள்ளூங்கள்
என் பதிவுகளைப் பற்றியும் அதன்
> பின்னணி பற்றியும் இங்கு நிறைய பேர் அறிவர். (நீங்களும் அறிவீர்கள்
> என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் நீங்கள் படிப்பதில்லை
> போலும்! அதனாலென்ன?).
நான் முன்னணியைதான் பார்த்து விமர்சம் செய்தேனே ஒழிய, பின்னணியை அல்ல.
நீங்கள் நிறைய தரவுகள் சேகரித்து வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.
> பை தெ பை, போதி தர்மர் தமிழன் என்று சொல்லாமல் திராவிடன் என்று
> சொல்லியிருந்தால் இன்னும் நிறைய ’ஸ்பெகுலேஷன்களை’ என்னால் தரமுடியும் -
> தெலுங்கு நாட்டிலிருந்து. உங்களிடமிருந்து இன்னும் நிறைய வாங்கிக்
> கட்டிக் கொண்டிருப்பேன்.
நான் அப்படி சொல்லவே மாட்டேன். திராவிடன், தெலுங்கு நாட்டவன் எதுவானாலும்
எனக்கு ஒன்றுமில்லை.
நான் ஓக்கம்ஸ் ரேஃஜர் என்ற அடிப்படியில் எழுதினேன்:
ஓக்கம்ஸ் ரேஃஜர் என்பது : Entities need not be multiplied beyond
necessity. எந்த விஞ்ஞான முடிவிலும் , கிடைத்த தரவுகளை மிகக் குறைந்த
அனுமானங்களுடன் விளக்க வேண்டும். எனக்கு தெரிந்து போதி தர்மர் பற்றி நாம்
அறியும் ஒரே நிச்சய தரவு அவர் காஞ்சியில் இருந்து கிழக்கே சென்றார்.
காஞ்சியில் மக்களின் மொழி தமிழ், அதனால் அவர் தமிழ் என்றேன்.
வகொவி
போதிதருமரின் கடல்வழிச் செலவு பற்றிய நேர்காணல்.
வருகின்ற திங்கள், செவ்வாய் இரு தினங்களிலும் இந்திய நேரப்படி இரவு 10
மணிக்கு ஒளிபரப்பு ஆகுமாம்.
இந்தத்தொலைகாட்சிக்கு இணைய ஒளிபரப்பு உண்டா என்று தெரியவில்லை. எனவே
என்னால் பார்க்க முடியாது. தமிழகத்தில் வாழ்பவர்கள் காணலாம். கண்டு
ரசித்து, முடிந்தால் ஒளிப்பதிவு செய்து நான் சென்னை வரும் போது
தாருங்கள். பின்னால் நான் அதை டிஜிடைஸ் செய்து நம் வலைப்பதிவில்
போடுகிறேன்.
ஸ்கைப் வழியாகத்தான் பதிவு. பின்னாடி திரை கட்டச் சொன்னார்கள். நான்
எங்கு போவேன்? :-) எனவே சுமாராகத்தான் வந்திருக்கும். பொறுத்தருள்க!
பாலு அவர்களுக்கு நன்றி.
நா.கண்ணன்
அந்த கால கட்டத்தில் கல்வெட்டுகளில் தமிழ் மிகவும் கடைசிபட்சம்தான்
விஜயராகவன்! என்னுடைய பதிலிலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.. பல்லாவரம்
கல்வெட்டுகளில் தமிழ் காணப்பட்டதைப் பற்றி.. இவையெல்லாம் ஏழாம்
நூற்றாண்டில்தான் ஆரம்பமே.. ஏழாம் நூற்றாண்டுக்கு பின்னும்
சமஸ்கிருதம்தான் அடுத்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு கொடி கட்டிப்
பறந்தது (அதே சமயம் தமிழும் விரைவாக சேர்ந்து கொண்டதும் அறியவேண்டும்).
இலக்கியத்தில் 7 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் தமிழ் மிகச் சிறப்பாக
விளங்கத் தொடங்கியது. இதற்கெல்லாம் ஆதி காரணங்கள் ஆழ்வார்களும், தேவார
மூவர்களும்தான்.
இந்த மக்கள் மொழி அரச மொழி எல்லாம் குழம்பிக்கொள்ளத் தேவையில்லை.
ஆதியிலிருந்து அரசகுலத்தினர் மக்களிடம் பேசுவது பிராகிருத மொழியிலும்
அந்தந்த மண் வாசனைக்கேற்ப இருந்த மொழியிலும்தான். பண்டிதர்களின் மொழியாக
சமஸ்கிக்ருதம் மட்டுமே சிறந்து விளங்கியது. அதனால்தான் புலவர்களைப்
பற்றிச் சொன்னேன், அவர்கள் எழுதிய காவியத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன்,
அரசர்கள் எழுதிய நாடகங்கள் கூட வடமொழிதான் என்றேன். கல்வெட்டுகள்
முக்கால்வாசி வடமொழி என்றேன். அப்படியும் ஆட்சி மொழி என்ன என்று கேட்பது
ஆச்சரியமாக இருக்கிறது. இதைவிட காரணங்கள் தேவைதானா?
போதி தர்மரைப் பற்றி இந்தியாவிலிருந்தோ தமிழகத்திலிருந்தோ சுத்தமாக
ஆவணங்கள் ஏதும் கிடைக்காதவரை அவரைப் பற்றி என்ன் சொல்லமுடியும் என்று
எதிர்பார்க்கிறீர்கள். இருக்கும் இன்ன பிற ஊகங்களைத்தான் திரும்பத்
திரும்ப சொல்லமுடியுமே தவிர வேறு ஏதும் பயனில்லை.
>>எனக்கு தெரிந்து போதி தர்மர் பற்றி நாம்
அறியும் ஒரே நிச்சய தரவு அவர் காஞ்சியில் இருந்து கிழக்கே சென்றார்.
காஞ்சியில் மக்களின் மொழி தமிழ், அதனால் அவர் தமிழ் என்றேன்.<<
தரவு எங்கே, அதுவும் அந்த நிச்சய் தரவு எது என்றும் விளக்கம் கொடுங்கள்.
நீங்கள் அந்தத் தரவை ஏற்கனவே கொடுத்திருந்தால் நான் இந்தப் பதிவில்
நுழைந்திருக்கவே மாட்டேன். இன்னொன்று அப்படி தரவு தரும் பட்சத்தில் அவர்
சாதாரண மக்களில் ஒருவனா அல்லது அரச குலத்தவரா என்று பார்க்கவும்!! மொழி
மாறுபட வாய்ப்புள்ளது.
>>Jumping into conclusions and sweeping statement ஐ ஆழம்தெரியாமல்
காலைவிடுவது என்றேன். அது கடினமாக இருந்தால் Jumping into conclusions
அல்லது அதைவிட மிருதுவான விமர்சனம் என எடுத்துக் கொள்ளூங்கள்<<
ஐயா! தயவு செய்து மறுமுறை என் பதிவைப் படிக்கவும் எதையுமே கன்க்லூஷனாக
நான் சொல்லவில்லை. கன்க்ளுஷனாக சொல்வதற்கு நிச்சயம் தரவுகள் தேவை.
ஆகையினால் நான் அப்படி செய்யவில்லை. இல்லாத ஒன்றுக்காக இப்படி
‘க்டுமையான்’ - இல்லை - ‘மிக மிக மிருதுவான’ விமர்சனம் தேவையா?
>>Right Thiru.Divakar>
> The above excerpt has no bearing on BD's mother tongue<<
என்ன சார்,மதரே தெரியவில்லை, மதர் டங் எப்படி தெரியும்? நான் அதைக்
கொடுத்தது, தமிழுக்கும் வடமொழிக்கும் உள்ள வித்தியாஸங்கள் அந்தக் கால
கட்டத்தில் எப்படி இருந்தது என்பதற்காக!!
உங்களின் அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லியுள்ளேன். முற்கால
மகேந்திரன் கதை கூட பல்லவர்கள் சார்பு நிலை பற்றி விளக்கத்தான். நாம்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முற்கால பல்லவர்கள் வடமொழியாளர்
ப்க்கமே விரும்பி சாய்ந்திருந்தனர். எனக்குத் தெரிந்து ஐமப்துக்கு
மேற்பட்ட வடமொழிச் செப்பேடுகள் ஆந்திராவில் பல்லவர்களால்
வழங்கப்பட்டுள்ளன. தமிழ் ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் மட்டுமே
வலுப்பெற்றது.
எனக்கும் போதி தர்மர் தமிழர் என்று சொல்லிக் கொள்வதில் ஆசைதான்
விஜயராகவன். இங்கு தமிழ்சங்கத்தைப் புதுப்பித்து நிர்வாகித்து வருபவன்.
தமிழர்கள் என் கதையில் கதாநாயகராக பீடு நடை போடுபவர்கள். ஆனால் கதை வேறு
சரித்திரம் வேறு. சரித்திரத்தில் ஆதாரம் கிடைக்காதவரை நம்மால் உறுதியாகச்
சொல்லமுடியாது.
உங்களுக்கு விளக்கும் வகையில் பதிவுசெய்துள்ளேன் என நினைக்கிறேன். இதற்கு
மேல் என்னிடம் பதில் இல்லை என்பதையும் இந்தச் சமயத்தில் அன்பு கூர்ந்து
தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
பி.கு: களப்பிரர் பற்றிய உங்கள் குறிப்புகள் படித்தேன். பி.டி.எஸ்
புத்தகம் எனக்கு ஒரு கைடு போல. ஆனால், முக்கியமான ஆனால், பிடி.எஸ்
எழுதியது 1928-29 இல். அதற்கு பிறகு ஏராளமான அளவில் கல்வெட்டுகள் வந்து
அவரின் பல செய்திகளை மாறுபடச் செய்துள்ளது. அதே சமயத்தில் அவர் இலக்கிய
ஆதாரத்துடன் எழுதிய பகுதிகள் அனைத்தும் ரத்தினங்கள். ஆனால் கால கட்டத்தை
குறிப்பிடுவதில் மூன்று நான்கு நூற்றாண்டுகள் பின்னே தள்ளி விட்டார்.
அவர் சொல்படி பார்க்கையில் நாம் இப்போது 25 ஆம் நூற்றாண்டில்
இருக்கிறோம். களப்பிரர் குறிப்பில் நான் இந்தப் பதிவில் முதலில்
குறிப்பிட்ட பாலி மொழிக் காவியம் கூட பி.டி.எஸ். குறிப்பிட்டதுதான்.
களப்பிரர் பற்றிய சில குறிப்புகள் என்னுடைய ‘மாணிக்கவாசகர்; பகுதியில்
பி.டி.எஸ் குறிப்போடு கொடுத்திருக்கிறேன். முடிந்தால் பார்க்கவும்.
நன்றி!
வணக்கம், வந்தனம்!!!
திவாகர்
>
2011/12/1 விஜயராகவன் <vij...@gmail.com>:
Actually I agree with you. Even the analysis ascribing Kanchi to BD is
not foolproof.
>>
> எனக்கும் போதி தர்மர் தமிழர் என்று சொல்லிக் கொள்வதில் ஆசைதான்
> விஜயராகவன்.
I don't care whether BD was a Tamil or not, If I gave an impression
that I strongly believe BD was a Tamil, then it is a misimpression. I
am prepared to live with any reasonable conclusion - The most
reasonable one is that we don't know.
Whoever BD was, all I want to have is fraction of his creativity.
Vijayaraghavan

வகொவி
On Dec 2, 1:01 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> நன்றி தலைவா!
>
> நான் பெய்ஜிங்க் போயிருந்த போது தாமோ போதித்த ஷாவோலின் கோயில் புத்த
> பிட்சுக்கள் அருமையானதொரு தற்காப்பின் கலையைக் காண்பித்தனர். அங்கு வன்முறை
> இல்லாத ஒரு தன்னம்பிக்கை தெரிந்தது.
>
> [image: kungkfu.jpg]
>
> அந்த நிகழ்ச்சியில் சர்வ சாதாரணமாக இரும்பு வாளை தலையில் போட்டு உடைத்தனர்.
> கூர்வாளை நெஞ்சில் நிறுத்தி துளைக்காமல் செய்தனர். ஏறக்குறைய அவர்கள்
> கற்றுக்கொண்டது ஒரு சித்துவிளையாட்டு என்பதைக் காண்பித்தனர்.
>
> [image: kungfu7.JPG]
>
> அவ்வளவு அற்புதமும் செய்து விட்டு கன்றுக்குட்டி கழுத்தைக் காட்டுவது போல்
> வெளியே வந்து சகஜமாகப் பழகினர். என்னையும் போதிதர்மர் கோஷ்டியில்
> சேர்த்துவிட்டனர்.
>
> போதிதர்மர் என்ன செய்திருப்பார் என்று யூகிக்க முடிந்தது!
>
> நா.கண்ணன்
>
> 2011/12/2 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>:
> kungkfu.jpg
> 116KViewDownload
>
> kungfu7.JPG
> 114KViewDownload- Hide quoted text -
நெத்தியில் திருமண், நாமங்கூட போட்டுண்டு இருக்காங்களே, அது உங்களுக்கு
மட்டுமா அல்லது வழக்கமாக அப்படியா?
வகொவி
வகொவி
On Dec 2, 1:18 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/12/2 விஜயராகவன் <viji...@gmail.com>
--
நெத்தியடி !!
தும்பை விட்டு வாலைப் பிடிக்காமல் சரியாக யுடூப் விழியம் போட்டு
மிகச்சரியாக விளக்கிவிட்டீர்கள்.
குங்பூ பிரிமியர் ஷோ அது. அற்புதமான அனுபவம்.
நம் கலைகளை நாம் மறந்துவிட்டோம். தாமோவை பூஜித்து அவர்கள் வளர்த்தெடுத்து
இருக்கிறார்கள். இவர்களை நம்மால் வில்லனாகத்தான் காட்டமுடிகிறது
திரைப்படத்தில் :-(
நா.கண்ணன்
//அந்த நிகழ்ச்சியில் சர்வ சாதாரணமாக இரும்பு வாளை தலையில் போட்டு உடைத்தனர். கூர்வாளை நெஞ்சில் நிறுத்தி துளைக்காமல் செய்தனர். ஏறக்குறைய அவர்கள் கற்றுக்கொண்டது ஒரு சித்துவிளையாட்டு என்பதைக் காண்பித்தனர்//
http://www.youtube.com/watch?v=7qHL2PSpecI
நாகராசன்
Osho on Zen Master Bodhidharma
http://www.messagefrommasters.com/Life_of_Masters/Bodhidharma.htm
௧-௧௨-௧௧ அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதியது:
--
ஒரு பிரச்சனையை பிரச்சனையாக ஏற்றுக் கொள்ளாத வரை அதற்கு தீர்வு காண முடியாது.
*Regards,*
*Thevan, *
*Mumbai.
*
ap_the...@yahoo.co.in,
ap_th...@rediffmail.com,
apth...@gmail.com
கண்ணனுன் சுபாவும் கன்னியாகுமரி மாவட்டம் போகும் பொழுது அங்கஉ இருக்கும் ஓர் தனியார் கல்லூரியஇல் வர்மக்கலை வைத்தியம் பாடமாக வைத்திருப்பதைக் கண்டு வரலாம். அத்துடன் இன்னும் சிலர் அங்கு இருக்கின்றார்கள். முயன்றால் பார்க்கலாம்சீதாம்மா2011/11/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>
(நான் அப்போதுஅதன் தொடர்ச்சி இன்றும் உள்ளதா இங்கு?//
எற்றுக்கொள்ளாவிடினும்) வர்மக்கலை ஒரு முக்கிய சான்று. அது தமிழ்க்கலையா?
கலாதர்னு ஒருத்தர் மதுரைக்காரர் இருந்தார். வர்மக்கலையின் ஆசானாக இருந்து வந்தார். அதை ஒட்டிய பல கதைகள் கூட எழுதி இருக்கார். இப்போ இருக்காரா என்னனு தெரியலை. ஒருமுறைப் பொதிகைத் தொலைக்காட்சியில் பேட்டியும் வந்த நினைவு இருக்கு.
2011/11/30 N. Kannan <navan...@gmail.com>ஆம் ஐயா!
நீங்கள் அன்றிலிருந்து சுட்டுவது போல் (நான் அப்போது
எற்றுக்கொள்ளாவிடினும்) வர்மக்கலை ஒரு முக்கிய சான்று. அது தமிழ்க்கலையா?
அதன் தொடர்ச்சி இன்றும் உள்ளதா இங்கு?
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
உலகில் காரணமில்லாமல் காரியமில்லை. எல்லாவற்றிற்கும் பின்னால் அறிவு
இருப்பதால்தான் இறைவனை சுத்த அறிவு என்கிறோம்.
ஷாவோலின் மாஸ்டர்ஸ் செய்வதை விளக்கிவிடுவதால் என்ன பெரிதாக சாதித்துவிட்டோம்? :-)
நா.கண்ணன்
2011/12/3 Raja sankar <errajasa...@gmail.com>:
> இதைப்போய் போதிதருமர் சீனாவில் சொல்லிக்கொடுத்தார் என்பது புத்தருக்கும்
> தியானத்திற்கும் பெரிய அவமானம்.
>
ஏன் இவ்வளவு அவசரம் என்று புரியவில்லை! :-)
வர்மம் என்பது உடலியல் சார்ந்த கலை. போதிதருமர் தற்காப்பு பயிற்சி
கொடுக்கும் ஓவியங்கள் ஷவோலின் கோயிலில் உள்ளன. நம் தொகுப்பிலுள்ள
கட்டுரையை வாசியுங்கள். அங்கு இந்த ஓவியம் உள்ளது.
அவர் மனத்தைக் கட்டுப்படுத்தும் மார்க்கமாக சில உத்திகளைக்
கற்றுக்கொடுத்து, தற்காப்புப் பயிற்சியாக வளர்ந்திருக்கலாம்.
ஏனோ எல்லோரும் சொன்னால் எதிர்க்க வேண்டுமென்ற மன உந்தல் :-))
அடுத்து நீங்களே ஏதாவதொரு தருணத்தில் சித்தர் சார்பாக பேச ஆரம்பித்து
விடுவீர்கள். நம்முள் உள்ள முரணைக் காணுதலும் சுவாரசியமானதே :-))
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> விளம்பரத்திற்காக செய்யப்படும் வித்தைகளை பார்த்துவிட்டு அவை இங்கே
> இருக்கவேண்டும் எனத்தேடினால் கிடைக்காது. ஆனால் அவைகளின் வேரை தேடி அந்த
> பயிற்சிகள் இங்கு உண்டா? அவைகள் நம்முடைய நூலில் உண்டா எனத்தேடினால் கண்டிப்பாக
> கிடைக்கும்.
>
இங்கே இவ்வளவு பேச்சும், ‘ஏழாம் அறிவு’ எனும் கழைக்கூத்து (சினிமா) வந்த
பின்புதான் என்பது சுவாரசியமான உண்மை :-))
க.>
பிகு: உங்கள் பேச்சு புரிகிறது. கோபித்துக் கொள்ள வேண்டாம்! :-)
'...Whoever BD was, all I want to have is fraction of his creativity.
Vijayaraghavan