['மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!] ஆருத்ரா அதிசயம்

17 views
Skip to first unread message

Chandra sekaran

unread,
Jan 3, 2010, 1:28:48 PM1/3/10
to minTamil digest சந்தாதாரர்கள்

சென்ற வருடம் 6-1-2009 அன்று ஆருத்ரா தரிசனம். மறுநாள் ரீச் பவுண்டேஷன் நடத்திய உழவாரப்பணி அன்பர்களுக்கான பழங்கால கோயில்கள் பாதுகாப்பது எப்படி என்பதன் கருத்தரங்கம் நடைபெற்றது. முதல் நாள் ஆருத்ரா தரிசனம் மற்றும் களி தனக்குக் கிடைக்காமல், சிதம்பரம் வழியாக அழைத்துச் செல்லாமல் சென்றேன் என்ற புகார் என் மேல் ஒரு ரீச் உறுப்பினர் வை(த்)தார்! எனக்கு ஆருத்ரா என்ற விஷயம் தெரியாது. மாலை வரை புலம்பித் தீர்த்துவிட்டார் அன்பர்! பின்னர் மாலையில் திருப்பிறம்பியம் மற்றும் இன்னாம்பூர் கோயில்களுக்கு எல்லாரும் போவதாக முடிவு செய்து, முதலில் இன்னாம்பூர் சென்றோம். இன்னாம்பூர் கிராமம்,

சுவாமிமலை கும்பகோணம் பாதையில், திருப்பிறம்பியம் போகுமுன் வரும். அங்குள்ள எழுத்தறிவித்த நாதர் திருக்கோயில் நடராஜர் காண்பதற்கு அரிய ஒரு நடராஜர். திருவாச்சி எனும் வட்டம் எல்லா நடராஜ உற்சவ மூர்த்திகளில் இருக்கும். சிலை அமைப்பில் திருவாச்சி இன்றியமையாதது. ஆனால் இன்னாம்பூர் உற்சவ மூர்த்தியான நடராஜரின் ஜடை வரிகளே இருபக்கமும் விரிந்து இருக்க, அதில் ஒருபக்கம் கங்கையும், மறுபக்கம் நாகராஜனும் இருக்க, வசீகரனாய் இருப்பார் இந்த இன்னாம்பூர் எழுத்தறிவித்த நாதர் நடராஜர். நாங்கள் கோயிலுக்கு போன பொது, இரவு கடைசி பூஜை முடிந்து கோயில் ச்சர்த்தும் நேரம். அவசரமாக ஓடி வந்த ஊர் பெரியவர் ஒருவர், சுவாமி மற்றும் அம்மன் சிலைகளை பத்திரமாக ஸ்வாமிமலை கோயிலில் சேர்த்துவிடுவது வழக்கம்

என்றும் அன்று ஊர் மக்கள் யாரும் சிலைகளை தூக்க வரவில்லையென்றும், எங்களை கை கொடுக்கச் சொல்ல்லி, இர்ய் விக்ரஹங்களையும் தூக்கி மாட்டு வண்டியில் வைக்கச்சொன்னார்.” புகார் சொன்ன அன்பர் அப்போதுதான், ஆர்வக் கோளாறால், நடராஜரைத் தொட்டு, திட்டு வாங்கிக் கொண்டு ஓரமாய் உட்கார்ந்திருந்தார். அதிசயம் நடராஜரே ஊர்ப் பெரியவரின் மூலம் தன்னை தொட்டுத்தூக்கி வண்டியில் வைக்கச் சொல்கிறார். எனக்கும் சந்தோஷம்! காலையிலிருந்து புகார்களை சுமந்த எனக்கு நடராஜரை சுமக்க ஒரு வரம்! பத்திரமாய் 6-7 பேர்சேர்ந்து விக்ரஹங்களை வண்டியில் ஏற்றி ஸ்வாமிமலைக்கு

அனுப்பி வைத்தோம்.

இம்முறை 01-01-2010 அன்று ஆருத்ரா (திரு ஆதிரை). திருநல்லம் எனும் கோனேரிராஜபுரம்

போயே ஆகவேண்டும் என்று மனதுள் திட்டம். ஆனால் காரோட்டி அன்பர், சுமார் 20 கிலோமீட்டர் தூரம் சாலை மிகவும் மோசமாய் இருக்கும் என்று போவதைத் தவிர்க்கச் சொல்லிவிட்டார். ஸ்வாமிமலையில் வருடக் கடைசி மற்றும்

புத்தாண்டு தினங்களில் தங்குவதை கடந்த 4 ஆண்டுகளாக

எங்கள் கூட்டுக் குடும்பம் கடைபிடித்து வருகிறது. ``சரி இருக்கவே இருக்கிறார் அருகிலேயே இன்னாம்பூரார், என்று அவரைப் பார்க்க சென்றேன்.

அதே ஊர் பெரியவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு, ``வாங்க சார்

பரவாயில்லையே இந்த ஆருத்ரா தரிசனத்துக்கும் வந்துவிட்டீர்களே,” என்று கேட்டு, உடனிருந்த இளைஞர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் கோயிலில் நந்தவனம் அமைத்து எல்லா நன்னாட்களிலும் கோயிலில் விழாக்கள் செய்து வருவதாக தெரிவித்தனர். பாரம்பரியம் காக்க இளைஞர்கள் முன்வருவது கண்டு

மகிழ்ந்து, சென்ற வருடானுபவத்தை அவர்களிடம் பகிர்ந்து கொண்டு, ``என்னவோ இம்முறை காலையில் வந்துவிட்டேன். இரவானால் நடராஜரைத் தொட்டு சுமக்கும் பாக்கியம் கிடைத்திருக்கும்” என்று சொல்லி, தரிசனம் முடிந்து

ப்ரசாதங்கள் பெற்றுக் கொண்டு வைடை பெற்றேன்.

புத்தாண்டு அன்று மாலை சுமார் 7.30 மணிக்கு ஸ்வாமிமலையில் எங்கள் குடும்பத்தார் தங்கத்தேர் இழுப்பது முன்னேற்பாடு செய்த நிகழ்வு. தங்கத்தேர் இழுத்துவிட்டு சற்று அமர்ந்தேன்!

திடீரென தேரோடும் வெளிப்ரகாரத்துள் ஒரு ட்ராக்டர் வண்டி உட்பிரவேசித்தது! என்ன என்று பார்ப்பதற்குள் ஒரு

குரல்!

“சார்! வாங்க சார், என்ன இங்க இருக்கீங்க? வந்து கை கொடுங்க! இன்னாம்பூரார் உங்களை தூக்கக் கூப்பிடறார்,” என்று பரிச்சியமான அந்த இன்னாம்பூர் பெரியவரின் குரல் ட்ராக்டரிலிருந்து வந்தது!!! அந்த ஆடல்வல்லானின் திருவிளையாடல் கண்டு உள்ளம் பூரித்தது, கண்கள் பனித்தன. திருநல்லம் போனால் என்ன, இங்கேயே கடைசி நிமிட ஏற்பாடாக இன்னாம்பூர் வந்தால் என்ன? நான் ஒருவனே”, என்று சொல்லாமல் சொல்லி இன்முறுவலை தந்த அந்த இன்னாம்பூரானின் விளையாட்டில் நான் அடிமையாகி, ஆனந்தக் கண்ணீரோடு, சிலையைத் தொட்டு வணங்கி, தூக்கி வைக்கக் கை கொடுத்தேன். சென்ற முறை சிறிது சுமையாக இருந்த இன்னாம்பூரார் இன்று லேசாக மிதந்தார்! அதே இன்முறுவலோடு என்னைப் பார்த்துக் கொண்டே ஸ்வாமிமலை கருவூல

அறையிலும், என் மனதுள்ளும் ஒருசேர உட்புகுந்தார்.

முதலில் இருப்பது சென்ற ஆண்டு எடுத்த படம்.

அடுத்தது 01-01-2010வில் எடுத்த படம்!

அலகிலா விளையாட்டுடையாரவர்க்கே சரண் நாங்களே!

சந்திரா


--
Posted By ஜெய. சந்திரசேகரன் to 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்! on 1/03/2010 11:24:00 AM



--
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

Innamburan Innamburan

unread,
Jan 3, 2010, 2:33:28 PM1/3/10
to mint...@googlegroups.com
அடியேன் புலம்பித்  தீர்ப்பது  என்னவெனின், என்னை ஏன் சந்திரா உடனழைத்து  செல்லவில்லை என்பதே. ஆனால், தத்க்ஷனமே உரையாடி  மகிழ்வித்தார். இன்னம்பூர் எழுத்தரிநாதனை வணங்குகின்றேன்.
இன்னம்பூரான்
 .  .  

2010/1/3 Chandra sekaran <plastic...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
இன்னம்பூரான்

Geetha Sambasivam

unread,
Jan 3, 2010, 8:39:13 PM1/3/10
to mint...@googlegroups.com
கோனேரிராஜபுரத்துக்குப் போகும் சாலை உங்க காரோட்டி சொன்னாப்பல அவ்வளவு ஒண்ணும் மோசமா இல்லையே??? நாங்க போயிட்டு வந்தோமே?? நல்லாத் தான் இருந்தது. படப்பிடிப்புக்குழுவினர் கூட அங்கே தான் படப்பிடிப்பு நடத்தினாங்க கும்பகோணத்திலே இருந்து போய். கும்பகோணத்திலிருந்து வடமட்டம் வழியே போனால் வடகிழக்கே செல்லும் பாதை, நல்லாவே இருக்கு. நவம்பரில் கூட வடமட்டம் வரையில் போய்ப் பரவாக்கரை போனோம். பரவாக்கரையிலிருந்து இரண்டே கிலோமீட்டர் தான்!

2010/1/3 Chandra sekaran <plastic...@gmail.com>

kra narasiah

unread,
Jan 3, 2010, 11:10:51 PM1/3/10
to mint...@googlegroups.com
Great! Keep it up!
 You are doing wonderful work
Narasiah

--- On Sun, 1/3/10, Chandra sekaran <plastic...@gmail.com> wrote:

Innamburan Innamburan

unread,
Jan 4, 2010, 1:08:32 AM1/4/10
to mint...@googlegroups.com
காரோட்டி ஒன்று சொல்வார். காரோட்டியை ஒட்டி மற்றொன்று சொல்வார். இது 'லண்டன் எத்தர் வாக்கு!


 
2010/1/4 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Tirumurti Vasudevan

unread,
Jan 4, 2010, 3:15:59 AM1/4/10
to mintamil
ஆயிரம் தியரி தெரிந்தாலும் அனுபவம் போல எதுவும் நம்பிக்கை தருவது இல்லை!
:-)))))


2010/1/3 Chandra sekaran <plastic...@gmail.com>

சென்ற வருடம் 6-1-2009 அன்று ஆருத்ரா தரிசனம்......


--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Chandra sekaran

unread,
Jan 4, 2010, 3:51:08 AM1/4/10
to mint...@googlegroups.com
2010/1/4 Geetha Sambasivam <geetha...@gmail.com>

கோனேரிராஜபுரத்துக்குப் போகும் சாலை உங்க காரோட்டி சொன்னாப்பல அவ்வளவு ஒண்ணும் மோசமா இல்லையே??? நாங்க போயிட்டு வந்தோமே?? நல்லாத் தான் இருந்தது. படப்பிடிப்புக்குழுவினர் கூட அங்கே தான் படப்பிடிப்பு நடத்தினாங்க கும்பகோணத்திலே இருந்து போய். கும்பகோணத்திலிருந்து வடமட்டம் வழியே போனால் வடகிழக்கே செல்லும் பாதை, நல்லாவே இருக்கு. நவம்பரில் கூட வடமட்டம் வரையில் போய்ப் பரவாக்கரை போனோம். பரவாக்கரையிலிருந்து இரண்டே கிலோமீட்டர் தான்!

கீதாம்மா,
என்ன பண்றது, அது இன்னாம்பூர் நடராஜரின் திருவிளையாடலா, ஓட்டுநரின் தட்டிக்கழித்தலா தெரியவில்லை! ஆருத்ரா என்னமோ நினைவில் நின்றதாக அமைந்துவிட்டது.
சந்திரா

Chandra sekaran

unread,
Jan 4, 2010, 3:51:54 AM1/4/10
to mint...@googlegroups.com
2010/1/4 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

ஆயிரம் தியரி தெரிந்தாலும் அனுபவம் போல எதுவும் நம்பிக்கை தருவது இல்லை!
:-)))))

சரியாச் சொன்னீங்க!
சந்திரா
 

Geetha Sambasivam

unread,
Jan 4, 2010, 3:52:41 AM1/4/10
to mint...@googlegroups.com
இன்னாம்பூர்க்காரரின் விளையாட்டாய்த் தான் இருக்கும். இந்தத் தரம் கும்பகோணம் போறச்சே இன்னாம்பூருக்கும் போகணும்னு ஒரு ப்ளான் இருக்கு!

2010/1/4 Chandra sekaran <plastic...@gmail.com>
360.gif

Chandra sekaran

unread,
Jan 4, 2010, 3:55:28 AM1/4/10
to mint...@googlegroups.com
2010/1/4 kra narasiah <nara...@yahoo.com>

Great! Keep it up!
 You are doing wonderful work
Narasiah

Sir,
Thanks for your encouraging words.
Chandra

Chandra sekaran

unread,
Jan 4, 2010, 3:57:10 AM1/4/10
to mint...@googlegroups.com
நான் பரவக்கரை, துக்காச்சி, திருநல்லம் எனும் கோனேரிராஜபுரம், மற்றும் திருவீழிமழலை (எல்லாம் பக்கம், பக்கம் தானே?) கட்டாயம் ஒரு ரவுண்டு மீண்டும் போகலாம்னு இருக்கேன்.
சந்திரா

2010/1/4 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

Innamburan Innamburan

unread,
Jan 4, 2010, 4:07:37 AM1/4/10
to mint...@googlegroups.com
போய்ட்டு வாங்கோ. சிவன் கோயில்லே கஜபபிருஷ்டவிமானம். பெருமாள் கோயில் சின்னது. ஸ்ரீநிவாசப்பெருமாள். மொகலாயர் படையெடுப்பு போது, நாவல்பாக்கத்திதில் எழுந்திருளிருந்தார். கோயில் பிரகாரத்தில், ஒரு மகிழம்பூ மரம் பூவாக்கொட்டும்.   அது, இன்னம்பூர் சிங்கமாகிய என் தாத்தா நட்டு வைதத்தது.
இன்னமபுரான்
 
 
.
 
.  
2010/1/4 Chandra sekaran <plastic...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
360.gif

Tthamizth Tthenee

unread,
Jan 4, 2010, 4:12:43 AM1/4/10
to mint...@googlegroups.com
சந்திரா அடுத்த ரவுண்டு போகும்போது ஒரு வார்த்தை சொல்லுங்கள் நானும் வருகிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

4-1-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதியது:


> போய்ட்டு வாங்கோ. சிவன் கோயில்லே கஜபபிருஷ்டவிமானம். பெருமாள்
> கோயில் சின்னது. ஸ்ரீநிவாசப்பெருமாள். மொகலாயர் படையெடுப்பு போது,
> நாவல்பாக்கத்திதில் எழுந்திருளிருந்தார். கோயில்
> பிரகாரத்தில், ஒரு மகிழம்பூ மரம் பூவாக்கொட்டும். அது,
> இன்னம்பூர் சிங்கமாகிய என் தாத்தா நட்டு வைதத்தது.
> இன்னமபுரான்
>
>
> .
>
> .
>
> 2010/1/4 Chandra sekaran <plastic...@gmail.com>
>
> > நான் பரவக்கரை, துக்காச்சி, திருநல்லம் எனும் கோனேரிராஜபுரம், மற்றும்
> திருவீழிமழலை (எல்லாம் பக்கம், பக்கம் தானே?) கட்டாயம் ஒரு ரவுண்டு மீண்டும்
> போகலாம்னு இருக்கேன்.
> >
> > சந்திரா
> >
> >
> >
> > 2010/1/4 Geetha Sambasivam <geetha...@gmail.com>
> >

> > > இன்னாம்பூர்க்காரரின் விளையாட்டாய்த் தான் இருக்கும். இந்தத் தரம்


> கும்பகோணம் போறச்சே இன்னாம்பூருக்கும் போகணும்னு ஒரு ப்ளான் இருக்கு!
> > >
> > >
> > >
> > >
> >
> >
> >
> >
> >
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
> visit our Muthusom Blogs at:
> http://www.tamilheritage.org/how2contribute.html To post to
> this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
>
>
>
> --
> இன்னம்பூரான்
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at:
> http://www.tamilheritage.org/how2contribute.html To post to
> this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil


--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

Chandra sekaran

unread,
Jan 4, 2010, 4:20:46 AM1/4/10
to mint...@googlegroups.com
2010/1/4 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

சந்திரா அடுத்த  ரவுண்டு போகும்போது ஒரு வார்த்தை சொல்லுங்கள்  நானும் வருகிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

கட்டாயம் சொல்கிறேன்
சந்திரா

Geetha Sambasivam

unread,
Jan 4, 2010, 4:34:27 AM1/4/10
to mint...@googlegroups.com
சிவன் கோயில்லே கஜபபிருஷ்டவிமானம். //

நேத்துப்போன தேனுபுரீஸ்வரர் கோயிலிலும் கஜப்ருஷ்டவிமானம். முதலாம் பராந்த சோழன் காலத்தில் (நம்ம :D) அநிருத்தபிரம்ம ராயரால் கட்டப் பட்டதாம். படம் எடுக்க விடலை. காமிரா பறிமுதல்பண்ணி எடுத்திருந்தால் நீக்கிடறாங்க! :(((

2010/1/4 Innamburan Innamburan <innam...@googlemail.com>
360.gif
Reply all
Reply to author
Forward
0 new messages