On Tuesday, 30 July 2013 09:27:38 UTC-7, Gowri Vimalendran wrote:
சனாதன சமயம் (தர்மம்) தான் இந்து என்ற பெயரில் புகுந்தது என்பது சரியா.. இதிகாசக் காலங்களில் இந்து மதம் ஒன்றுதான் இருந்ததா? இந்து ஆரியர்களால் இந்து மதம் உருவானதா..இந்து சமவெளி சிந்து சமவெளியாக மாறியதா..அறிய வேண்டும்போல் இருக்கிறது.
உங்கள் ஐயப்பாடு நியாயமானதே.
சனாதனம் எனும் சொல் பலருக்கும் ஒவ்வாமை தருவது;
பாரதம் முழுவதும் ஒரே cultural zone என்பதால்
ஒரு தொல் பண்பாட்டின் குறியீடாக அச்சொல்லை
ஏற்பதில் தவறில்லை. பல நம்பிக்கைகள், வழிபாட்டு
முறைகளுக்கு அதில் இடமுள்ளது. தொல்தமிழரின்
நடுகல் வழிபாட்டைப் பண்பாடு சார்ந்ததாகவும்
எடுத்துக் கொள்ளலாம். சமயக் கண்ணோட்டத்திற்கும்
அதில் இடமுள்ளது.
’சைவம்’ ஒரு முழுமைக்குள் அடங்கிய தனியான துறை
என்றே மரபுசார் சைவமும் பேசுகிறது -
“வேதநெறி தழைத்தோங்க, மிகுசைவத் துறை விளங்க...”
அன்புடன்
தேவ்