காதல் / கலப்புத் திருமணம்

408 views
Skip to first unread message

DEV RAJ

unread,
Jan 26, 2013, 4:04:38 AM1/26/13
to mint...@googlegroups.com

தமிழகத்தின் இன்றைய நிலை;
விஜய் டிவியில் நடந்த  நெடிய விவாதம் -

http://www.youtube.com/watch?v=D8ikuA3To5k



தேவ்

DEV RAJ

unread,
Feb 9, 2013, 12:24:53 PM2/9/13
to mint...@googlegroups.com
இந்தியா முழுக்க, “தேசிய குடும்ப நல மதிப்பாய்வு” ஒன்று 2005-2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
அதில் “சாதிக் கலப்புக் கலியாணங்கள்” (க.க) பற்றிய ஆய்வில் கிடைத்த செய்திகள் தொகுக்கப் பட்டிருக்கின்றன;
மாநிலவாரியாக க.க விழுக்காடு பட்டியலிடப்பட்டிருக்கிறது. அதன் வரிசை:

1) பஞ்சாபு – 19.9%
2) கேரளா – 19.65%
3) அரியானா – 18.5%
4) மாராட்டியம் – 17%
5) கருநாடகம் – 16.41%
6) குசராத்து – 15.49%
7) ஒரிசா – 11.58%
8) உ.பி – 11.34%
9) அசாம் – 11.06%
10) வங்கம் – 9.25%
11) ஆந்திரா – 8.83%
12) பீகார் – 6.14%
13) சம்மு-காசுமீர் – 4.82%
14) மத்திய பிரதேசம் – 4.39%
15) இராசத்தான் – 3.03%
16) தமிழ்நாடு – 2.96%


80% தமிழ் மக்கள் திராவிடத்திற்காக வாக்குக் காவடி தூக்கி, மண்சோறு தின்று, பாலாபிசேகம், பீராபிசேகம்
எல்லாம் பகுத்தறிவு வழியில் செய்து, நாள்தொறும் முப்போது திராவிட வாழ்த்துப் பாடி, அந்தத் திராவிடத்தை
75 ஆண்டுகளாகத் தமிழருக்குத் தொண்டைத் தவிர வேறெதும் செய்யவிடாமல் வைத்திருப்பதால் சாதிக் கலப்புக்
கலியாணங்கள், சாதி மறுப்பு வாழ்வியல் எல்லாம் 24 மணி நேரமும் தமிழ்நாட்டில் மூலைக்கு மூலைப்
போற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிவனேன்னு கிடக்கும் சங்க இலக்கியங்களையும் வம்புக்கிழுத்து
களவையும் கற்பையும் பேசிப் பேசி மகிழ்கின்ற வேளைகள் கிறங்கடிக்கும்.

http://nayanam.blogspot.in/2013/02/1.html


பழமைபேசி

unread,
Feb 9, 2013, 12:42:04 PM2/9/13
to மின்தமிழ்
wow; the statistics reveals so many things!!

N. Kannan

unread,
Feb 9, 2013, 12:53:52 PM2/9/13
to mint...@googlegroups.com
2013/2/9 பழமைபேசி <pazam...@gmail.com>:
> wow; the statistics reveals so many things!!
>

It is another convincing evidence that Jati was invented, preached and
propagated in the ancient Tamil land.

Kannan

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Feb 9, 2013, 2:21:13 PM2/9/13
to mint...@googlegroups.com


On Sat, Feb 9, 2013 at 11:23 PM, N. Kannan <navan...@gmail.com> wrote:


It is another convincing evidence that Jati was invented, preached and
propagated in the ancient Tamil land.


it simply evolved :-)

செல்வன்

unread,
Feb 9, 2013, 11:17:39 PM2/9/13
to mint...@googlegroups.com

2013/2/9 DEV RAJ <rde...@gmail.com>

இந்தியா முழுக்க, “தேசிய குடும்ப நல மதிப்பாய்வு” ஒன்று 2005-2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
அதில் “சாதிக் கலப்புக் கலியாணங்கள்” (க.க) பற்றிய ஆய்வில் கிடைத்த செய்திகள் தொகுக்கப் பட்டிருக்கின்றன;


இம்மாதிரி ஆய்வுகள் எந்த அளவுக்கு நம்பகதன்மை வாய்ந்தவை என்பது புரியவில்லை. இந்தியா முழுக்க சர்வே எடுக்கும் அளவு இவர்களிடம் மேன்பவர் இருந்ததா?

மற்றபடி கலப்புமணம் 2% ஆ அல்லது 50%ஆ என்பது பிரச்சனை இல்லை. தம்பதியினர் மகிழ்ச்சியாக இருந்தால் அது எந்தவித கல்யாணம் ஆக இருப்பினும் மகிழ்ச்சியே

--
செல்வன்
www.holyox.blogspot.com

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்



seshadri sridharan

unread,
Feb 10, 2013, 3:31:25 AM2/10/13
to mint...@googlegroups.com
திராவிடக் கட்சியினராவது கலப்பு மனத்தை செய்திருந்தால் இந்நேரம் அவற்றின் வரலாற்றுக் காலத்திலேயே  பெரும்பாலும் சாதி என்பது ஒழிந்திருக்குமே. எந்த திராவிடக் கட்சி ஆட்சியானாலும் சாதி அடிப்படையில் தான் அமைச்சக ஒதுக்கீடே நடக்கிறது என்பது அவை அக்கொள்கையில் ஊன்றி நிற்கவில்லை என்பதையே காட்டுகிறது.

சேசாத்திரி  . 



2013/2/9 DEV RAJ <rde...@gmail.com>
இந்தியா முழுக்க, “தேசிய குடும்ப நல மதிப்பாய்வு” ஒன்று 2005-2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
அதில் “சாதிக் கலப்புக் கலியாணங்கள்” (க.க) பற்றிய ஆய்வில் கிடைத்த செய்திகள் தொகுக்கப் பட்டிருக்கின்றன;


இம்மாதிரி ஆய்வுகள் எந்த அளவுக்கு நம்பகதன்மை வாய்ந்தவை என்பது புரியவில்லை. இந்தியா முழுக்க சர்வே எடுக்கும் அளவு இவர்களிடம் மேன்பவர் இருந்ததா?

மற்றபடி கலப்புமணம் 2% ஆ அல்லது 50%ஆ என்பது பிரச்சனை இல்லை. தம்பதியினர் மகிழ்ச்சியாக இருந்தால் அது எந்தவித கல்யாணம் ஆக இருப்பினும் மகிழ்ச்சியே

--
செல்வன்


-

Tthamizth Tthenee

unread,
Feb 10, 2013, 4:21:39 AM2/10/13
to mint...@googlegroups.com
கலப்பு மணத்தை ஆதரிக்கும் அரசு, சாதி ஒழிப்பை வழிமொழியும் அரசு

 

விண்ணப்பத்தில் முதல் கேள்வியாக சாதி என்னவென்றே கேட்குது
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 


2013/2/10 seshadri sridharan <ssesh...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Subashini Tremmel

unread,
Feb 10, 2013, 5:54:59 AM2/10/13
to மின்தமிழ், Subashini Tremmel



2013/2/10 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

கலப்பு மணத்தை ஆதரிக்கும் அரசு, சாதி ஒழிப்பை வழிமொழியும் அரசு

 

விண்ணப்பத்தில் முதல் கேள்வியாக சாதி என்னவென்றே கேட்குது
சரியாகச் சொன்னீர்கள். பிரச்சனையின் ஆரம்பமே இங்கு தானே!

சுபா 



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

தேமொழி

unread,
Feb 10, 2013, 2:23:18 PM2/10/13
to mint...@googlegroups.com


இதன் அடிப்படைக் கோளாறு காதல் திருமணங்களை ஆதரிப்பதில் இருக்கிறது.

காதல் திருமணங்களை ஆதரியுங்கள்....காதல் திருமணங்களை ஆதரியுங்கள்....காதல் திருமணங்களை ஆதரியுங்கள்....
(நீங்கள் குறுக்கே நின்றாலும் இந்த தலை முறையினர் மீறி நடக்கும் வழியில் உள்ளார்கள், வயதான கூட்டத்தினர் குறுக்கே நிற்காமல் இருக்கவும்)

என் அப்பா திராவிடக் கொள்கை வழி வந்தவர்தான், அவர் திருமணம் அம்முறைப்படித்தான் நடந்தது.  ஒரு கைம்பெண் முன்னின்று நடத்தினார். பெற்றோர் இருவர் வாழ்க்கையும் அம்மா இறக்கும் வரை மற்ற திருமணம் செய்தவர்களுடன் ஒப்பிடும்பொழுது வேறுபாடு இல்லாமல்தான் இருந்தது.  

அப்பாவிற்கு பரந்த மனப்பான்மை உண்டு, வீட்டிலயே ஆன்மீக அம்மாவும் அவர் வழிப்படி நடக்கத் தடை செய்ததில்லை.  பொங்கலில் ஆரம்பித்து திருவாதிரை களி வரை வழிபாட்டோடு நாங்கள் சாப்பிட்டிருக்கிறோம், அப்பாவும் சாப்பிடும்வார்.

எனக்கு திருமண வயது வரை நான் படித்துக் கொண்டே இருந்தேன், காதல் போன்ற விவகாரங்களில் நுழையவில்லை (நாம்தான் இதுபோன்ற விஷயங்களில் தத்தியாச்சே...அப்பா அம்மா பிடிச்சுக் கொடுத்தால்தானே உண்டு :D) .  அடுத்து தங்கையும் படித்து  முடிக்கும் தறுவாயில் இருக்கும் பொழுது, வேறு வழியில்லாமல் எனக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார்கள்.  இப்படி செய்யும்பொழுது வேறு இடத்தில் செய்யமுடியுமா என யோசியுங்கள். வேறு மதம், ஜாதி,  இனம் என்று வரன் பார்த்தார்களானால் முதலில் எனக்குத்தான் ஏதோ குறை, நடத்தை சரியில்லை போன்ற வதந்திகள் வரும்.  ஆகா!! என் அப்பாவிற்கு என்ன ஒரு பரந்த மனது என்றா பாராட்டுவார்கள்? பிறகு என் தங்கை திருமணத்தில் குழப்பம் வரும்.  அப்பா அம்மா காட்டியவரை நான்  மணந்து கொண்டேன்.  நான் வேறு யாரையாவது திருமணம் செய்வேன் என்று சொல்லியிருந்தால்  என் வீட்டில் குறுக்கே நின்றிருந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.  குறைந்தது என் அப்பா தடை போட்டிருக்க மாட்டார்.  இங்கு நழுவிப் போனது ஒரு கலப்பு மண வாய்ப்பு.

எனக்கு குழுமங்களில்  இருக்கும் திராவிட இயங்கங்களின் மேல் உள்ள வெறுப்பு  வேடிக்கையாக இருக்கிறது.  பிறந்ததில் இருந்து அந்த கொள்கைப் பிடிப்புள்ள ஒருவருடன் வாழ்ந்திருக்கிறேன். பார்த்த வரை என் தந்தை நேர்மையானவர்தான்.   எனக்கு விவாதத்தின் மறு பக்கமும் தெரியும்.

முதலில் காதல் திருமணத்தை ஆதரியுங்கள் தானே ஜாதி ஒழியும். காதல் என்றவுடன்  வெட்டரிவாளும் வேல் கம்பும் எடுத்துக் கொண்டு ஓடி, ஊரையே கொளுத்தாதீர்கள். முதலில் இது போன்ற மனப்பான்மைக்கு காரணம் உடன் இருக்கும் குடிமக்களை தனக்கும் தாழ்ந்தவர் என (மதம், ஜாதி, இனம் ஏதோ ஒரு உதவாகரைக் காரணம்) நினைப்பதில் தோன்றுகிறது. இளைய தலைமுறையினர் காதல் திருமணம் என்றால் கொதித்து எழாதீர்கள்.  காதலும் வீரமும் தமிழர் மரபு என்பது பாடத்தில் படித்து தேர்வு எழுத மட்டும் அல்ல.

என் ஜாதிக்கு அது வேண்டும், இந்த சலுகை வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்யக்  கூசுங்கள், ஜாதி மத அடிப்டையில் கட்சிகளைத் தோற்றுவிக்காதீர்கள், பிறகு அதன் அடிப்படையில் மேற்படி நடவடிக்கைகளை அரசியல் என்ற பெயரில் நடத்த ஆதரிக்காதீர்கள்.  திண்ணை வார இதழில் எந்த விவாகரங்களுக்கு அதிக விவாதம் நடக்கிறது என்று கவனியுங்கள்.  முதலில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.  மதம் ஜாதி இல்லை என்று சொல்லும் திராவிட இயக்கங்களைவிட, அது உண்டு என்று சொல்பர்களாளேயே உலகில் பல கொடுமை நடக்கிறது, நடத்து வருகிறது என்பதை நான் சுட்டிக் காட்டத் தேவையில்லை.

முதலில் திராவிட இயக்கத்தை குறை கூறு விரும்பினால் இந்தப் பாடலை நினைத்துப் பாருங்கள்..
சதி செயல் செய்தவன் புத்திசாலி
( புத்திசாலி=இது யார் என்பதை நீங்களே தேர்ந்தெடுங்கள்)
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
(குற்றவாளி=இது யார் என்பதை நீங்களே தேர்ந்தெடுங்கள்)
உண்மையை சொல்பவன் சதிகாரன்
(உண்மையைச் சொன்ன சதிகாரன் = பெரியாரும் அவர் வழி வந்த திராவிட இயக்கங்களும்)
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.


அடுத்தவரை  குறை சொல்லும் முன் உங்கள் குடும்பத்தில் காதல் கலப்பு மணத்திற்கு என்ன வரவேற்பிருந்தது, வரவேற்பிருக்கிறது?
(வெளி நாட்டிற்கு சென்ற பின்பு, பணக்கார வரன் போன்ற சமயங்களில் மட்டுமே விதி விளக்கு உண்டு என்பதை நான் அறிவேன்)

..... தேமொழி 

Innamburan Innamburan

unread,
Feb 10, 2013, 2:45:30 PM2/10/13
to mint...@googlegroups.com
தேமொழி சொல்வது எனக்குப் புரிகிறது. எங்கள் குடும்பத்தில் முதல் கலப்பு மணம் என் சித்தப்பா. எனக்கு முந்திய தலைமுறை. 65 வருடங்களுக்கு முன்னால். சித்தியை சுற்றம் வரவேற்றது. நான் அவரை 'சாம்னே வாலே கிட்கி மேம்' என்று கேலி செய்வேன். சுபிக்ஷமான குடும்பம். அடுத்து நடந்தது எங்கள் குடும்பத்தின் வீரவைஷ்ணவக்கிளையின் பெண். அவளுடைய அப்பனை சமாதானப்படுத்தி வழிக்குக்கொண்டு வந்தவன், நான். நல்ல குடும்பம்.போக்கு வரத்து சகஜமாக இருக்கிறது. அடுத்தது என் தங்கை மகள். சில நாட்கள் முன்னால், என் மற்றொரு சித்தப்பாவின் பேத்தி தன் பெண்ணுக்கு கலப்பு மணத்தை சிறப்புற நடத்தி வைத்தாள். சுற்றம் மனமார வாழ்த்தியது. 
இன்னம்பூரான் 

2013/2/10 தேமொழி <them...@yahoo.com>

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Feb 10, 2013, 3:48:12 PM2/10/13
to mint...@googlegroups.com


2013/2/11 தேமொழி <them...@yahoo.com>



அப்பாவிற்கு பரந்த மனப்பான்மை உண்டு, வீட்டிலயே ஆன்மீக அம்மாவும் அவர் வழிப்படி நடக்கத் தடை செய்ததில்லை.

கலைஞர் கூட மனைவியை சாய்பாபா காலில் விழ விட்டார்னா பார்த்துக்கோங்க. ;-)

 
இங்கு நழுவிப் போனது ஒரு கலப்பு மண வாய்ப்பு.


நூறு வருஷம் முன்னாடி சொந்த பந்தங்களை மீறி உட்சாதிக்குள்ள கல்யாணம் செஞ்சுக்கிட்டா பெரிய விஷயம். இப்போ இது சகஜம். அம்பது வருஷத்துக்கு முன்னாடி ஒரு சாதிக்குள்ளேயே இருக்கக்கூடிய பிரிவினருக்குள்ளே கலப்பு கல்யாணம் செய்தால் பெரிய விஷயம். இப்போ இது சகஜம். இப்போ சாதிவிட்டு சாதி கல்யாணம் செஞ்சா பெரிய விஷயம். நாளை? ;-)


--

ஆமாச்சு

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Feb 10, 2013, 3:54:24 PM2/10/13
to mint...@googlegroups.com


2013/2/11 Innamburan Innamburan <innam...@gmail.com>

தேமொழி சொல்வது எனக்குப் புரிகிறது. எங்கள் குடும்பத்தில் முதல் கலப்பு மணம் என் சித்தப்பா. எனக்கு முந்திய தலைமுறை. 65 வருடங்களுக்கு முன்னால். சித்தியை சுற்றம் வரவேற்றது. நான் அவரை 'சாம்னே வாலே கிட்கி மேம்' என்று கேலி செய்வேன். சுபிக்ஷமான குடும்பம். அடுத்து நடந்தது எங்கள் குடும்பத்தின் வீரவைஷ்ணவக்கிளையின் பெண். அவளுடைய அப்பனை சமாதானப்படுத்தி வழிக்குக்கொண்டு வந்தவன், நான். நல்ல குடும்பம்.போக்கு வரத்து சகஜமாக இருக்கிறது. அடுத்தது என் தங்கை மகள். சில நாட்கள் முன்னால், என் மற்றொரு சித்தப்பாவின் பேத்தி தன் பெண்ணுக்கு கலப்பு மணத்தை சிறப்புற நடத்தி வைத்தாள். சுற்றம் மனமார வாழ்த்தியது. 


நீங்க காதல் கல்யாணம் சொல்றீங்க! அவங்க சாதி மறுப்பு கல்யாணம் சொல்றாங்க!

சாதி மறுப்பு != காதல். காதலிச்சு கடைசில பொண்ணு ஒரே சாதில இருக்கறது கடைசி தெரியவந்தா சாதியை மறுக்க காதலை விட்டுட முடியுமா என்ன? ;-)

--

ஆமாச்சு

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Feb 10, 2013, 4:14:29 PM2/10/13
to mint...@googlegroups.com


2013/2/10 seshadri sridharan <ssesh...@gmail.com>

திராவிடக் கட்சியினராவது கலப்பு மனத்தை செய்திருந்தால்


திராவிடக் கட்சிகள் தமிழர்-கன்னடர், தமிழர்-மலையாளிகள், தமிழர்-தெலுங்கர் கலப்பு மணம் செய்து மொழி பேதங்கள் மறைந்து திராவிட இனம் ஒன்றாய் வாழ விருப்பமுடையவர்கள்.




ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Feb 10, 2013, 4:20:45 PM2/10/13
to mint...@googlegroups.com
2013/2/11 தேமொழி <them...@yahoo.com>
 மதம் ஜாதி இல்லை என்று சொல்லும் திராவிட இயக்கங்களைவிட, அது உண்டு என்று சொல்பர்களாளேயே உலகில் பல கொடுமை நடக்கிறது, நடத்து வருகிறது என்பதை நான் சுட்டிக் காட்டத் தேவையில்லை.

அதுவும் மதமாய்ப் போச்சு பாருங்க.

கோவில் சிலையை அவமதித்து தவைவருக்கு தெருவெல்லாம் சிலை வைப்பது. பட்டை போட்டா குத்தம். கருப்புச் சட்டைப் போட்டா மானம்.

குரங்கிலிருந்து மனுஷன் வந்தான். ஆனா அவன் பேசும் மொழியை மட்டும் எப்படியாவது குரங்கு காலத்தக்கே கொண்டு போயிடணும்.

இன்னும் பல..




rajam

unread,
Feb 10, 2013, 6:07:19 PM2/10/13
to mint...@googlegroups.com
On Feb 10, 2013, at 11:45 AM, Innamburan Innamburan wrote:

தேமொழி சொல்வது எனக்குப் புரிகிறது. எங்கள் குடும்பத்தில் முதல் கலப்பு மணம் என் சித்தப்பா. எனக்கு முந்திய தலைமுறை. 65 வருடங்களுக்கு முன்னால். சித்தியை சுற்றம் வரவேற்றது. நான் அவரை 'சாம்னே வாலே கிட்கி மேம்' என்று கேலி செய்வேன். சுபிக்ஷமான குடும்பம். அடுத்து நடந்தது எங்கள் குடும்பத்தின் வீரவைஷ்ணவக்கிளையின் பெண். அவளுடைய அப்பனை சமாதானப்படுத்தி வழிக்குக்கொண்டு வந்தவன், நான். நல்ல குடும்பம்.போக்கு வரத்து சகஜமாக இருக்கிறது. அடுத்தது என் தங்கை மகள். சில நாட்கள் முன்னால், என் மற்றொரு சித்தப்பாவின் பேத்தி தன் பெண்ணுக்கு கலப்பு மணத்தை சிறப்புற நடத்தி வைத்தாள். சுற்றம் மனமார வாழ்த்தியது. 
இன்னம்பூரான் 



ம்ஹூம், அதெல்லாம் பெரிசில்லெ. எங்க வூடுகள்ளெதான் உண்மையான கலப்புத் திருமணங்கள் (காதல் அடிப்படையில்) நடந்திருக்கு -- வடமா + செட்டியார்ப் பெண், வடமா + கேரளப் பெண், வடமா + இஸ்லாமியர், இன்னொரு வடமா + கேரளப் பெண், ... எல்லாம் எனக்கு இளைய தலைமுறை; வடமா + ஆங்கிலோ இந்தியப் பெண் (என் தலைமுறை). அடுத்ததுக்குக் காத்திருக்கேன், வேளை வரவேண்டும்; தை வந்தாச்சு. ;-) ;-) ;-) 

seshadri sridharan

unread,
Feb 11, 2013, 7:17:31 AM2/11/13
to mint...@googlegroups.com
2013/2/11 ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் <ama...@amachu.net

//திராவிடக் கட்சிகள் தமிழர்-கன்னடர், தமிழர்-மலையாளிகள், தமிழர்-தெலுங்கர் கலப்பு மணம் செய்து மொழி பேதங்கள் மறைந்து திராவிட இனம் ஒன்றாய் வாழ விருப்பமுடையவர்கள்.//

அப்படியாவது திருமணம் நடந்திருந்தால் இன்று தமிழகத்தில் தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழர் தொகை 97%  ஆகியிருக்கும்.  நாயிடுகளுக்கென்றெ சட்டமன்ற தொகுதிகளும்  அமைச்சகப் பொறுப்பும் இரு திராவிட கட்சிகளால் ஒதுக்கி வைக்கப்படுகின்றன என்பது தெலுங்கு மக்களை நீங்கள் சொல்லும் திராவிடத்திலும் சேர்க்கவில்லை என்று தானே காட்டுகிறது. உண்மையில் திராவிடம் என்பது தென் இந்தியாவின் திரிந்த ஆரியமேயன்றி உண்மையான தமிழ்மரபு அல்ல.

seshadri sridharan

unread,
Feb 11, 2013, 9:33:09 AM2/11/13
to mint...@googlegroups.com
2013/2/11 தேமொழி <them...@yahoo.com

//முதலில் திராவிட இயக்கத்தை குறை கூறு விரும்பினால் இந்தப் பாடலை நினைத்துப் பாருங்கள்.. சதி செயல் செய்தவன் புத்திசாலி ( புத்திசாலி=இது யார் என்பதை நீங்களே தேர்ந்தெடுங்கள்)//

இது வாலி எழுதிய பாடலா என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். இந்த புத்திசாலிகள் தெலுங்கு, கன்னட, மலையாள திராவிடர்களே என்று தமிழ் அறிஞர்கள் புரிந்துகொண்டு பல்லாண்டுகள் ஆகிவிட்டன. 

//அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி (குற்றவாளி=இது யார் என்பதை நீங்களே தேர்ந்தெடுங்கள்)//

தமிழ்க் குமுக சுரண்டலை நான்கு கொள்ளையர்களாக சேர்ந்து நடத்திவிட்டு அதை மறைக்க அந்த நால்வருள் ஒருவருவனை காட்டிக்கொடுத்து மற்றவர் சுரண்டப்பட்டவரின் மீட்பர் என காட்டிக்கொண்டனர். இது தான் திராவிட இயக்க வரலாறு. 

//உண்மையை சொல்பவன் சதிகாரன் (உண்மையைச் சொன்ன சதிகாரன் = பெரியாரும் அவர் வழி வந்த திராவிட இயக்கங்களும்)// 

இந்த உண்மையை சொல்லும் தமிழ்த் தேசியர் அரசியல் பிழைக்கும் திராவிட இயக்கத்தோரால் இன்று இப்படித்தான் அழைக்கபடுகிறார்கள்  

தமிழ்த் தேசியர் ம. செந்தமிழன் அழகிய கட்டுரைத் தொடர்  ஒன்றை முக நூலில் எழுதி வருகின்றார் அதை  இங்கு கொடுக்கிறேன் படியுங்கள்.


சேசத்திரி  




 திராவிடர் இயக்கத்தின் உண்மை முகம்சமகாலச் சான்றுகள் சில

.செந்தமிழன்


திராவிடர் இயக்கத்தின் உண்மை முகம்!
-சமகாலச் சான்றுகள் சில
ம.செந்தமிழன்

(இணைப்புப் படத்தில் இருப்பவர்: ராவ்பகதூர் எம்.சி.ராஜா)

தாழ்த்தப்பட்ட சாதிகளின் பிரதிநிதியான ராவ் பகதூர் எம்.சி.ராஜா, பிரிட்டானிய ஆட்சியாளர்களிடம் 1929 ஆம் ஆண்டு  வைத்த கோரிக்கைகளில் சில:

•	’தாழ்ந்த வகுப்பார் திறமையானவர்களென்று பல விவசாய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கல்வி கற்பித்துத் தற்காலத்திய கருவிகளைக் கொண்டு பயிரிட  அவர்களைக் கற்பிக்கச் செய்தால் அவர்கள் திறமைசாலிகளாக சிறந்த கல்விமான்களாக ஏற்படுவார்கள். மென்மேலும் அவர்கள் முன்னோர்களில் பலர் சிறந்த கல்விமான்களாகவும் ஞானிகளாகவும் இருந்தார்கள். வள்ளுவர், கபிலர், அவ்வையார் ஆகிய இவர்கள் பல அருமையான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். நந்தனாரும், திருப்பாணாழ்வாரும் சிறந்த ஞானிகளாக விளங்கினார்கள்’
•	’சமீபத்தில் என்னுடைய சென்னை மாகாணத்தில் தீண்டப்படாதார் ஒருவர் வீதியில் சென்றதற்காக அவரைச் சில இந்துக்கள் கடுமையாக அடித்துக்கொன்றார்கள்.
•	நற்குணம் வாய்ந்தவர் ஒருவர் தண்ணீர் ஊற்றுவார் என்று நினைத்து, தாழ்ந்த வகுப்பார் ஒருவர் தம்முடைய தோண்டியைக் கிணற்றுக்கருகில் வைத்துவிட்டு, ஒதுங்கியிருந்து, அதில் தண்ணீர் ஊற்றியபின் அதை அவர் எடுத்துச் செல்வதாக ஐக்கிய மாகாண அரசாங்கத்தார் எங்களுக்குத் தெரிவித்தார்கள். யூனியன், தாலுகா, ஜில்லா சபைகள் அங்கத்தினர்கள் வசித்திருக்கும் கிணறுகளிலிருந்து தண்ணீர் கொண்டு போவதற்கு தாழ்ந்த வகுப்பாரை அனுமதிக்க வேண்டும்’
•	’தாழ்ந்த வகுப்பார் எனும் பிரிவில் கள்ளர் எனும் சாதியினரையும் சேர்க்க வேண்டும். 1912 ஆம் ஆண்டு முதல் 1917 ஆம் ஆண்டு வரையிலான கல்வியைப் பற்றிய அறிக்கையில் கல்வி உத்தியோகஸ்தர் சர் என்ரி க்ஷார்ப் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கள்ளர் மற்றும் மலையில் வசிக்கும் சாதியார் சேர்க்கப்படவில்லை.’
(தாழ்ந்த வகுப்பார் கேட்கும் அனுகூலங்கள்- பதிப்பாசிரியர் வீ.ரேவதி/என்.சி.பி.எச் வெளியீடு 2009)

மேற்கண்ட  சூழலைச் சற்றே கற்பனை செய்து பாருங்கள். தொல்தமிழர்கள் கிணற்றில் நீர் எடுக்கக் கூட பிரித்தானிய அரசின் தலையீடு தேவைப்பட்ட காலம் அது. தெருவில் நடந்த மனிதரை அடித்தே கொலை செய்த காலம் அது. ஜமீன்களும் பாளையக்காரர்களும், முதலாளிகளும், செல்வந்தர்களுமே இத்தகைய சாதி வெறி சூழலைக் கட்டிக் காத்து வந்தனர். இவர்களில் ஜமீன்களும் பாளையக்காரர்களும் விஜயநகர-நாயக்க மன்னர் காலத்துத் தோன்றல்கள் என்பதைக் கடந்த பகுதிகளில் விளக்கியுள்ளேன்.

இந்தத் திராவிடர் காலத்தில்தான் அறிவார்ந்த குலங்களாக விளங்கிய பறையர், பள்ளர், வள்ளுவர், கணியர், அம்பட்டர் உள்ளிட்ட அனைத்தும், குலங்கள் எனும் தகுதியை இழந்து, தீண்டத்தகாத சாதிகளாகின. சேவைத் தொழில் புரிந்து அண்டிப் பிழைத்து வந்த பிராமணர் ஆதிக்கத்தின் உச்சத்திற்குச் சென்றனர். இந்த மாற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள்தான், தமிழர் மரபு பிற்போக்கானது எனக் கடந்த ஒரு நூற்றாண்டாகப் பரப்புரை செய்து வருகின்றனர். 

இவ்வாறான பரப்புரையை மிக வெற்றிகரமாகத் துவங்கியவர்கள் திராவிட இயக்கத்தின் மூலவர்களே ஆவர். திராவிட இயக்கத்தின் தந்தை எனப்பட்ட டி.எம் நாயர் இவர்களில் முக்கியமானவர். அக்காலத்தைய சாதிக் கொடுமைகளை வெகு தந்திரமாக மடைமாற்றியவர்களில் இவருக்கு முதன்மைப் பங்கு உண்டு. அவரது உரையைக் காணும் முன், வேறு சில செய்திகளைக் காண வேண்டும்.

பிராமணர்கள் மீது திராவிடருக்கு என்ன கோபம்?

ஆங்கிலேயர் வருகைவரை, கூடிக் குலாவிக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த பிராமணர்களுக்கும் திராவிடர்களுக்கும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் திடீரென முரண்பாடு உருவானது.
இம்முரண்பாடு, வரலாற்றில் ஏற்பட்ட ஒரு திடீர்த் திருப்பமே ஆகும். இதற்கான காரணங்களை இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆரியர்மீது, திராவிடருக்குக் கோபம் வரக் காரணம், இரு சுரண்டல் பிரிவுகளுக்கிடையே நடந்த போட்டி ஆகும். தமிழரை யார் சுரண்டுவது,
ஆரியரா? திராவிடரா? என்பது போட்டி. 
இந்தப் போட்டி திடீர் என ஏன் வெடித்தது?
 
ஆங்கிலேயர் படையெடுப்பு, தமிழகத்தில் பல்வேறு அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியது. நாயக்கர் ஆட்சிக் காலம், தென்னிந்திய பிராமணரான திராவிடருக்கும் ஆரியருக்கும் பொற்காலமாக விளங்கியதைக் கண்டோம். இந்தப் பொற்காலம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சற்றே மாற்றம் பெற்றது. 

திராவிடர்களே பேரளவு நிலவுடைமையாளராக இருந்தனர். நாயக்கர்கள் பாளையக்காரர்களாகவும் பின்னாளில் ஜமீன்களாகவும் கோலோச்சினர். கர்ணம் எனும் ஊர்த் தலைவர் அதிகாரம் வழங்கப்பட்டதால் ரெட்டிக்கள் நிலவுடைமையாளராகத் திகழ்ந்தனர். பிற பிராமணரிலும் தென்னாட்டு பிராமணர் அதிகளவில் நிலவுடைமையாளராக இருந்தனர். ஆரிய பிராமணர், நிலவுடைமையாளராக இருந்தனர் என்றாலும், அவர்களது இயல்பினால், ஆட்சியதிகாரத்தில் அதிகளவில் பங்குபெற்றனர். இதை திராவிட அரசர்களும் ஊக்குவித்தனர். 

இந்த நிலை, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்திய மாற்றங்களே, ஆரிய – திராவிடப் பகையை 20 ஆம் நூற்றாண்டில் மூட்டிவிட்டது. ஆங்கிலேய ஆட்சி, பாளையக்காரர்களை, ஜமீன்களை வரி வசூலிக்கும் இடைத் தரகர்களாக மாற்றியது. இதற்குமுன், அதாவது திராவிடர் அரசாண்டபோது, பாளையக்காரர்கள் அவரவருக்கான பகுதிகளில் சகல உரிமைகளுடனும் குட்டி அரசர்களாகவே வலம் வந்தனர். இந்த நிலையை ஆங்கிலேயர் மாற்றினர். பெருவாரித் தமிழரது உழைப்பைச் சுரண்டும் அடியாட்களாகவும் தரகர்களாகவுமே பாளையக்காரர்களை, ஜமீன்களை ஆங்கிலேயர் அணுகினர். இது, திராவிடருக்குப் பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

சில திராவிடர்களும் சில தமிழர்களும் ஜமீன்களாக நீடிக்க விரும்பாமல், ஆங்கிலேயரை எதிர்த்தனர். இரயத்துவாரி முறையை ஆங்கிலேயர் கொண்டு வந்தபோது, அதன் வரிக் கொடுமையை ஜமீன்களாலேயே சமாளிக்க முடியாமல் போனது.

’வரி தவறும் ஜமீன்தார்களின் சொந்தச் சொத்து ஏலம் விடப்படும். பல ஜமீன்களே வரி பாக்கிக்காகக் கைதும் செய்யப்பட்டனர். வரிக்கொடுமையைச் சமாளிக்க முடியாமல், இராசிபுரம் ஜமீன் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. சேலம் நைனம்மாள் நிர்வகித்த ஜமீன் அது.
ஜமீன் வசூலிக்கும் வரித் தொகையில் பத்தில் ஒன்பது பங்குகள் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு – அதாவது ஆங்கிலேயருக்கு, மீதம் உள்ள ஒரு பங்கு மட்டுமே ஜமீனுக்கு என்று விதி வகுக்கப்பட்டது.

தம் கனவுகள் பொய்யாவதைக் கண்டு ஜமீன்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜமீன்களின் வருவாய் குறைந்துகொண்டே போனது, அதனால் ஜமீன்தார்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே போனது’
(கொங்குநாடும் கிழக்கிந்தியக் கம்பெனியும்/தமிழ்நாடன்/புதுமலர் பதிப்பகம் 2009/ பக் 49, 50)

இந்தச் சூழ்நிலையில் நிலவுடைமையாளராக நீடிக்க இயலாமல், திராவிடரில் கணிசமானோர் தமது அதிகாரத்தை இழந்தனர். இதேவேளை, ஆரிய பிராமணரோ, நிலவுடைமையை மட்டுமே நம்பாமல், ஆங்கிலேய ஆட்சிக்கான அதிகாரிகளாக மாறினர். ஆங்கிலம் கற்றனர். ஆங்கிலேயருக்கு நெருக்கமானவர்களாகவும் நம்பிக்கைக்குரியவர்களாகவும் மாறினர்.

வரலாறு தனது மற்றொரு கோணத்தைக் காட்டியது என்றே கூறலாம்.

அதாவது, கிருக்ஷ்ண தேவராயர் பிராமணர்களை மட்டுமே அதிகாரிகளாக வைத்ததற்குக் கூறிய காரணங்கள் அனைத்தும் ஆங்கியேயராலும் கூறப்பட்டன. அதனால், ஆங்கிலேயர்கள் பிராமணரை (வைதீக பிராமணர்) அதிகளவில் தம்முடன் வைத்துக்கொண்டனர். கிருக்ஷ்ணதேவராயரின் வாரிசுகளான திராவிடர், இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் திகைத்து நின்றனர். தங்களால் வளர்த்துவிடப்பட்ட பிராமணர்கள், தமக்கே போட்டியாக வளர்ந்துவிட்டதை திராவிட ஆதிக்கப் பிரிவினரால் சகித்துக் கொள்ள இயலவில்லை.

ஆனால், இந்த ஆரிய – திராவிட ஆதிக்கப் போட்டிக்கும் தமிழரது வாழ்நிலைக்கும் யாதொரு தொடர்பும் இல்லாதிருந்தது. பெரும்பகுதித் தமிழர்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்ட நிலையில் உழன்றனர்.

 தமிழரிடையே சாதிப் பாகுபாடுகளைத் திணித்ததில் திராவிடருக்கே முதன்மைப் பங்கு உண்டு. ஆரிய பிராமணர்களுக்கு அதற்கு முன் இல்லாத முக்கியத்துவத்தையும் திராவிடரே பெற்றுத் தந்தனர். தீண்டாமை மிக மோசமான வடிவங்களில் நிலவியது.

20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தீண்டாமை நிலவிய வடிவங்களில் சில:

•	தாழ்த்தப்பட்டோர் பொதுக்கிணறுகளில் நீர் எடுக்கக் கூடாது
•	சாலைகளில் நடந்து செல்லக் கூடாது
•	உள்ளூர் ஆட்சி மன்றங்களில் அங்கத்தினராகக் கூடாது
•	அரசு பொதுச் சாலைகளில் தாழ்த்தப்பட்ட பெண் நடந்துபோகக் கூடாது
•	அரசு ஊழியராக தாழ்த்தப்பட்டவர் ஆக முடியாது
•	கோயிலில் தெய்வ தரிசனம் கிடையாது
•	கல்வி கற்கத் தடை (பொதுக் கல்விக் கூடங்களில்)
•	தீண்டப்படாதோருக்கு, புரோகிதர்கள் வண்ணார்கள் அம்பட்டர்கள் பணி புரியாத நிலை
(தாழ்ந்த வகுப்பார் கேட்கும் அனுகூலங்கள் – பதிப்பாசிரியர் வீ.ரேவதி/என் சி பி எச் 2009/ பக் 10)

இந்தத் தீண்டாமைக் கொடுமைகள் அனைத்தையும் புரிந்தோர் ஆரிய பிராமணர் மட்டுமல்ல; திராவிடரும்தான் என்பதைக் குறித்துகொள்ள வேண்டும். ஏனெனில், இந்தக் கொடுமைகளைத் தனித்தே புரியுமளவுக்கான செல்வாக்கும் அதிகாரமும் வைதீக பிராமணர்களுக்கு இருக்கவில்லை.அவர்களுக்கான செல்வாக்குப் பின்புலமாக திராவிட ஆதிக்கப் பிரிவினர் இருந்தனர். இருவரும் சேர்ந்துதான் அட்டூழியங்கள் புரிந்தனர்.

தமிழ்ச் சாதிகளில் பிள்ளைமார், கவுண்டர், நாட்டுக்கோட்டை செட்டியார், தேவர் (சில பகுதிகளில்) உள்ளிட்டவையும் சாதிக்கொடுமைகள் புரிந்தன. இவற்றிற்கான அதிகாரத் தளத்தை உருவாக்கித் தந்தவர்களும் திராவிடரே. திராவிடர் வருகைக்கு முன், குறிப்பாக பிற்காலச் சோழர் காலம் வரை, எந்தத் தமிழ்க் குலமும் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது, சாலையில் நடக்கக் கூடாது என்றெல்லாம் தடுக்கப்பட்டதே இல்லை. அவ்வாறான சான்றுகள் வரலாற்றில் இல்லை.

20ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்திலும் தமிழ்ச் சாதிகளிடையே இருந்த முரண்கள், இன்றுள்ள நிலையைவிடக் குறைவாகவே காணப்படுகிறது. சான்றாக, இன்று தஞ்சைப் பகுதியில் சாதி ஆதிக்கப் பிரிவினராக, நீடிக்கும் கள்ளர் சாதியினர் 1929 ஆம் ஆண்டு எம்.சி.ராஜா அறிக்கையின்படி, ’அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட வேண்டிய தாழ்ந்த வகுப்பாக’ இருந்தனர்.

இந்த நிலையில், தமது அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொண்டு ஆங்கிலேயருடன் சமரசமாகிவிட்ட பிராமணர்கள் மீது, திராவிட ஆதிக்கப் பிரிவினர் கொண்ட கோபத்தின் வெளிப்பாடுதான் திராவிட இயக்கமாக உருவெடுத்தது.

தமிழர் வரலாற்றை மாற்றத் துவங்கியது திராவிட இயக்கம்:

திராவிட இயக்கம் என்ற பெயரில்,  அதன் மூலவர்கள் தமிழர் வரலாற்றைத் திட்டமிட்டு மாற்றத் துவங்கினர். தமிழர்களின் அனைத்துப் பெருமிதங்களையும் இழிவு செய்தனர். தமிழ் மொழியை அவர்களைப் போல இழிவு செய்தோர் எவரும் இலர்.

தமிழக வரலாற்றில், தமது இனத்தினால் உருவான சாதியம், ஆணாதிக்கம், உழைப்புச் சுரண்டல், மூடநம்பிக்கைகள், பிராமண மேலாதிக்கம் உள்ளிட்ட அனைத்து இழிவுகளுக்கும் காரணம் பிராமணர்கள் மட்டுமே என்ற பரப்புரைதான் அவர்களது தந்திரங்களின் முதல் வடிவம். வெற்றிகரமான வடிவமும் கூட!

சாதியமே ஆரியரால்தான் வந்தது; ஆகவே சாதியே பார்க்கக் கூடாது என்பதல்ல அவர்களின் போராட்டம். மாறாக, ஆரியர் அனுபவிக்கும் முன்னுரிமைகளில் தமது சாதிகளுக்கும் பங்கு வேண்டும் என்பதே அவர்களது ஏக்கம். ஆனால், இதை நேரடியாக வெளிப்படுத்தாமல், அனைத்து சாதிகளுக்குமான உரிமைக் குரல்கொடுப்பது போன்ற பாவனையில் வெளிப்படுத்தினர்.

நாயரின் பேச்சுகளிலேயே இதைக் கவனிக்கலாம்.
‘சில வடநாட்டுத் தகைவர்கள், தேசியம் என்று சொல்லிக்கொண்டு இங்கு வந்து, இங்குள்ளவர்களுக்கு அறிவுரைகள் கூறத் தலைப்பட்டிருக்கின்றனர். இங்கு நிலவும் வருணாச்சிரம தருமம் காரணமாக இந்துக்களுக்குள்ளே பலப்பல வேறுபாடுகள் ஏற்பட்டு பலர் சூத்திரர் என்றும், வேசிகளின் மக்கள் என்றும், குடி தண்ணீர் நிலைகளை அண்டக் கூடாதவர்கள் என்றும், அவர்கள் எல்லோரும் ஊர்களுக்கு வெளியேதான் வாழ வேண்டும் என்றும், அவர்கள் ஓட்டைக் குடிசைகளில்தான் வாழ வேண்டும் என்றும் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களை மேலும் கொடுமைப்படுத்தி, இழிவுபடுத்தவே, இந்து தருமம் பேசிக்கொண்டு சில வட இந்தியத் தலைவர்கள் இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களின் செயல், இங்குள்ள பார்ப்பனர்களுக்கு மேலும் ஆதிக்க அதிகார வெறியை ஊட்டவே பெரிதும் பயன்படுவதாக அமையும். இவர்கள் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு இங்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை! (கூட்டத்தினர் கத்துகின்றனர் – வெட்கம்! வெட்கம்!)’ 
(’இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியப் பரதேசிகள்!’-குத்தூசி குருசாமி பதிப்பகம்-2006, தொகுப்பாசிரியர் கழஞ்சூர் சொ.செல்வராஜி)

நாயரது இந்த உரையின் சாரம்தான் திராவிட இயக்கக் கோட்பாட்டின் அனைத்துப் பாசாங்குகளுக்குமான அடிப்படை.

அன்னிபெசண்டின் ஆரிய சமாஜம் – ஹோம்ரூல் இயக்கம் ஆகியவற்றைக் கண்டித்துதான் நாயர் பேசுகிறார். ஆகவே, இவரது பேச்சு ‘ஆரிய எதிர்ப்புப் பேச்சு’தான். ஆனால், இந்தப் பேச்சில் ’திராவிடம்’மறைபொருளாக பதிவு செய்த சேதிகள்;
•	சாதியம் – தீண்டாமை ஆகியவை இந்து தர்மப்படி ஏற்படுத்தப்பட்டவை.
•	அந்த இந்து தர்மத்தை வலியுறுத்தவே வட நாட்டார் வருகின்றனர்
•	தீண்டாமை கடைப்பிடித்து, அதிகார வெறிகொண்டு திரிபவர்கள் பிராமணர்கள்
-இந்தச் சேதிகளின் வழியேதான் வரலாறு திருத்தி எழுதப்பட்டது.
அதாவது,
•	ஆரியர் மட்டுமே – ஆரிய பிராமணர் மட்டுமே சாதியத்தை வலியுறுதியவர்கள். பிறர் ’அனைவரும்’ ஆரியரால் பிரிக்கப்பட்டவர்கள்; தமக்குள் அடித்துக்கொள்ளும்படி ஆரியர் சதி செய்தனர்.
•	வட நாட்டிலிருந்துதான், ஆரியப் பார்ப்பனருக்கு அதிகார வெறி ஊட்டப்படுகிறது.
•	தீண்டாமைக் கொடுமைகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால், அது ஆரியச் சதியே தவிர, திராவிடருக்கு அதில் பங்கு இல்லை அல்லது அவர்கள் முதன்மைக் காரணகர்த்தாக்கள் அல்லர். 
இவ்வாறான பரப்புரைகளின் வழியே, திராவிடர்களின் வரலாறு முற்றும் முழுதுமாக மறைக்கப்பட்டது.  

’பிராமணர்கள் மட்டும்தான் உங்கள் எதிரிகள்! நாங்கள் உங்களை மீட்க வந்த மீட்பர்கள்!’
என்ற கருத்து மிக அற்புதமான முறையில் திராவிட இயக்க மூலவர்களால் தமிழர்களிடையே ந்லைநாட்டப்பட்டது.

நாயரும் பிற திராவிடத் தலைவர்களும் இவ்வாறு மேடைகள்தோறும் முழங்கிக் கொண்டிருந்த அதேகாலத்தில்தான், எம்.சி.ராஜா போன்ற தமிழ்த் தலைவர்கள், 
‘ஐயா எங்கள் மக்களுக்குக் குடிக்க நீராவது கொடுங்கள், சாலையில் நடக்கவாவது விடுங்கள்’ என ஆங்கிலேயரிடம் மன்றாடிக் கொண்டும், போராடிக் கொண்டும் இருந்தனர். 

பறையர்களையும் பள்ளர்களையும் தீண்டப்படாதவர்களாக வைத்து, சாணிப் பால் கரைத்து ஊற்றி, குடிநீர் மறுத்து, ஊதியம் மறுத்து, சாதியின் பேரால் கொலையே செய்து வெறியாட்டம் ஆடிக் கொண்டிருந்த ஜமீன்கள், ஆலை முதலாளிகள், சிற்றரசர்கள் , பணக்காரர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ’திராவிட இயக்கம்’ துவங்கினர். 
(தொடரும்)
(இணைப்புப் படத்தில் இருப்பவர்: ராவ்பகதூர் எம்.சி.ராஜா)

தாழ்த்தப்பட்ட சாதிகளின் பிரதிநிதியான ராவ் பகதூர் எம்.சி.ராஜா, பிரிட்டானிய ஆட்சியாளர்களிடம் 1929 ஆம் ஆண்டு வைத்த கோரிக்கைகளில் சில:

• ’
தாழ்ந்த வகுப்பார் திறமையானவர்களென்று பல விவசாய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கல்வி கற்பித்துத் தற்காலத்திய கருவிகளைக் கொண்டு பயிரிட அவர்களைக் கற்பிக்கச் செய்தால் அவர்கள் திறமைசாலிகளாக சிறந்த கல்விமான்களாக ஏற்படுவார்கள். மென்மேலும் அவர்கள் முன்னோர்களில் பலர் சிறந்த கல்விமான்களாகவும் ஞானிகளாகவும் இருந்தார்கள். வள்ளுவர், கபிலர், அவ்வையார் ஆகிய இவர்கள் பல அருமையான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். நந்தனாரும், திருப்பாணாழ்வாரும் சிறந்த ஞானிகளாக விளங்கினார்கள்
• ’
சமீபத்தில் என்னுடைய சென்னை மாகாணத்தில் தீண்டப்படாதார் ஒருவர் வீதியில் சென்றதற்காக அவரைச் சில இந்துக்கள் கடுமையாக அடித்துக்கொன்றார்கள்.
நற்குணம் வாய்ந்தவர் ஒருவர் தண்ணீர் ஊற்றுவார் என்று நினைத்து, தாழ்ந்த வகுப்பார் ஒருவர் தம்முடைய தோண்டியைக் கிணற்றுக்கருகில் வைத்துவிட்டு, ஒதுங்கியிருந்து, அதில் தண்ணீர் ஊற்றியபின் அதை அவர் எடுத்துச் செல்வதாக ஐக்கிய மாகாண அரசாங்கத்தார் எங்களுக்குத் தெரிவித்தார்கள். யூனியன், தாலுகா, ஜில்லா சபைகள் அங்கத்தினர்கள் வசித்திருக்கும் கிணறுகளிலிருந்து தண்ணீர் கொண்டு போவதற்கு தாழ்ந்த வகுப்பாரை அனுமதிக்க வேண்டும்
• ’
தாழ்ந்த வகுப்பார் எனும் பிரிவில் கள்ளர் எனும் சாதியினரையும் சேர்க்க வேண்டும். 1912 ஆம் ஆண்டு முதல் 1917 ஆம் ஆண்டு வரையிலான கல்வியைப் பற்றிய அறிக்கையில் கல்வி உத்தியோகஸ்தர் சர் என்ரி க்ஷார்ப் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கள்ளர் மற்றும் மலையில் வசிக்கும் சாதியார் சேர்க்கப்படவில்லை.’
(
தாழ்ந்த வகுப்பார் கேட்கும் அனுகூலங்கள்- பதிப்பாசிரியர் வீ.ரேவதி/என்.சி.பி.எச் வெளியீடு 2009)

மேற்கண்ட சூழலைச் சற்றே கற்பனை செய்து பாருங்கள். தொல்தமிழர்கள் கிணற்றில் நீர் எடுக்கக் கூட பிரித்தானிய அரசின் தலையீடு தேவைப்பட்ட காலம் அது. தெருவில் நடந்த மனிதரை அடித்தே கொலை செய்த காலம் அது. ஜமீன்களும் பாளையக்காரர்களும், முதலாளிகளும், செல்வந்தர்களுமே இத்தகைய சாதி வெறி சூழலைக் கட்டிக் காத்து வந்தனர். இவர்களில் ஜமீன்களும் பாளையக்காரர்களும் விஜயநகர-நாயக்க மன்னர் காலத்துத் தோன்றல்கள் என்பதைக் கடந்த பகுதிகளில் விளக்கியுள்ளேன்.

இந்தத் திராவிடர் காலத்தில்தான் அறிவார்ந்த குலங்களாக விளங்கிய பறையர், பள்ளர், வள்ளுவர், கணியர், அம்பட்டர் உள்ளிட்ட அனைத்தும், குலங்கள் எனும் தகுதியை இழந்து, தீண்டத்தகாத சாதிகளாகின. சேவைத் தொழில் புரிந்து அண்டிப் பிழைத்து வந்த பிராமணர் ஆதிக்கத்தின் உச்சத்திற்குச் சென்றனர். இந்த மாற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள்தான், தமிழர் மரபு பிற்போக்கானது எனக் கடந்த ஒரு நூற்றாண்டாகப் பரப்புரை செய்து வருகின்றனர்

இவ்வாறான பரப்புரையை மிக வெற்றிகரமாகத் துவங்கியவர்கள் திராவிட இயக்கத்தின் மூலவர்களே ஆவர். திராவிட இயக்கத்தின் தந்தை எனப்பட்ட டி.எம் நாயர் இவர்களில் முக்கியமானவர். அக்காலத்தைய சாதிக் கொடுமைகளை வெகு தந்திரமாக மடைமாற்றியவர்களில் இவருக்கு முதன்மைப் பங்கு உண்டு. அவரது உரையைக் காணும் முன், வேறு சில செய்திகளைக் காண வேண்டும்.

பிராமணர்கள் மீது திராவிடருக்கு என்ன கோபம்?

ஆங்கிலேயர் வருகைவரை, கூடிக் குலாவிக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த பிராமணர்களுக்கும் திராவிடர்களுக்கும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் திடீரென முரண்பாடு உருவானது.
இம்முரண்பாடு, வரலாற்றில் ஏற்பட்ட ஒரு திடீர்த் திருப்பமே ஆகும். இதற்கான காரணங்களை இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆரியர்மீது, திராவிடருக்குக் கோபம் வரக் காரணம், இரு சுரண்டல் பிரிவுகளுக்கிடையே நடந்த போட்டி ஆகும். தமிழரை யார் சுரண்டுவது,
ஆரியரா? திராவிடரா? என்பது போட்டி
இந்தப் போட்டி திடீர் என ஏன் வெடித்தது?

ஆங்கிலேயர் படையெடுப்பு, தமிழகத்தில் பல்வேறு அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியது. நாயக்கர் ஆட்சிக் காலம், தென்னிந்திய பிராமணரான திராவிடருக்கும் ஆரியருக்கும் பொற்காலமாக விளங்கியதைக் கண்டோம். இந்தப் பொற்காலம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சற்றே மாற்றம் பெற்றது

திராவிடர்களே பேரளவு நிலவுடைமையாளராக இருந்தனர். நாயக்கர்கள் பாளையக்காரர்களாகவும் பின்னாளில் ஜமீன்களாகவும் கோலோச்சினர். கர்ணம் எனும் ஊர்த் தலைவர் அதிகாரம் வழங்கப்பட்டதால் ரெட்டிக்கள் நிலவுடைமையாளராகத் திகழ்ந்தனர். பிற பிராமணரிலும் தென்னாட்டு பிராமணர் அதிகளவில் நிலவுடைமையாளராக இருந்தனர். ஆரிய பிராமணர், நிலவுடைமையாளராக இருந்தனர் என்றாலும், அவர்களது இயல்பினால், ஆட்சியதிகாரத்தில் அதிகளவில் பங்குபெற்றனர். இதை திராவிட அரசர்களும் ஊக்குவித்தனர்

இந்த நிலை, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்திய மாற்றங்களே, ஆரியதிராவிடப் பகையை 20 ஆம் நூற்றாண்டில் மூட்டிவிட்டது. ஆங்கிலேய ஆட்சி, பாளையக்காரர்களை, ஜமீன்களை வரி வசூலிக்கும் இடைத் தரகர்களாக மாற்றியது. இதற்குமுன், அதாவது திராவிடர் அரசாண்டபோது, பாளையக்காரர்கள் அவரவருக்கான பகுதிகளில் சகல உரிமைகளுடனும் குட்டி அரசர்களாகவே வலம் வந்தனர். இந்த நிலையை ஆங்கிலேயர் மாற்றினர். பெருவாரித் தமிழரது உழைப்பைச் சுரண்டும் அடியாட்களாகவும் தரகர்களாகவுமே பாளையக்காரர்களை, ஜமீன்களை ஆங்கிலேயர் அணுகினர். இது, திராவிடருக்குப் பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

சில திராவிடர்களும் சில தமிழர்களும் ஜமீன்களாக நீடிக்க விரும்பாமல், ஆங்கிலேயரை எதிர்த்தனர். இரயத்துவாரி முறையை ஆங்கிலேயர் கொண்டு வந்தபோது, அதன் வரிக் கொடுமையை ஜமீன்களாலேயே சமாளிக்க முடியாமல் போனது.

வரி தவறும் ஜமீன்தார்களின் சொந்தச் சொத்து ஏலம் விடப்படும். பல ஜமீன்களே வரி பாக்கிக்காகக் கைதும் செய்யப்பட்டனர். வரிக்கொடுமையைச் சமாளிக்க முடியாமல், இராசிபுரம் ஜமீன் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. சேலம் நைனம்மாள் நிர்வகித்த ஜமீன் அது.
ஜமீன் வசூலிக்கும் வரித் தொகையில் பத்தில் ஒன்பது பங்குகள் கிழக்கிந்தியக் கம்பெனிக்குஅதாவது ஆங்கிலேயருக்கு, மீதம் உள்ள ஒரு பங்கு மட்டுமே ஜமீனுக்கு என்று விதி வகுக்கப்பட்டது.

தம் கனவுகள் பொய்யாவதைக் கண்டு ஜமீன்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜமீன்களின் வருவாய் குறைந்துகொண்டே போனது, அதனால் ஜமீன்தார்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே போனது
(
கொங்குநாடும் கிழக்கிந்தியக் கம்பெனியும்/தமிழ்நாடன்/புதுமலர் பதிப்பகம் 2009/ பக் 49, 50)

இந்தச் சூழ்நிலையில் நிலவுடைமையாளராக நீடிக்க இயலாமல், திராவிடரில் கணிசமானோர் தமது அதிகாரத்தை இழந்தனர். இதேவேளை, ஆரிய பிராமணரோ, நிலவுடைமையை மட்டுமே நம்பாமல், ஆங்கிலேய ஆட்சிக்கான அதிகாரிகளாக மாறினர். ஆங்கிலம் கற்றனர். ஆங்கிலேயருக்கு நெருக்கமானவர்களாகவும் நம்பிக்கைக்குரியவர்களாகவும் மாறினர்.

வரலாறு தனது மற்றொரு கோணத்தைக் காட்டியது என்றே கூறலாம்.

அதாவது, கிருக்ஷ்ண தேவராயர் பிராமணர்களை மட்டுமே அதிகாரிகளாக வைத்ததற்குக் கூறிய காரணங்கள் அனைத்தும் ஆங்கியேயராலும் கூறப்பட்டன. அதனால், ஆங்கிலேயர்கள் பிராமணரை (வைதீக பிராமணர்) அதிகளவில் தம்முடன் வைத்துக்கொண்டனர். கிருக்ஷ்ணதேவராயரின் வாரிசுகளான திராவிடர், இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் திகைத்து நின்றனர். தங்களால் வளர்த்துவிடப்பட்ட பிராமணர்கள், தமக்கே போட்டியாக வளர்ந்துவிட்டதை திராவிட ஆதிக்கப் பிரிவினரால் சகித்துக் கொள்ள இயலவில்லை.

ஆனால், இந்த ஆரியதிராவிட ஆதிக்கப் போட்டிக்கும் தமிழரது வாழ்நிலைக்கும் யாதொரு தொடர்பும் இல்லாதிருந்தது. பெரும்பகுதித் தமிழர்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்ட நிலையில் உழன்றனர்.

தமிழரிடையே சாதிப் பாகுபாடுகளைத் திணித்ததில் திராவிடருக்கே முதன்மைப் பங்கு உண்டு. ஆரிய பிராமணர்களுக்கு அதற்கு முன் இல்லாத முக்கியத்துவத்தையும் திராவிடரே பெற்றுத் தந்தனர். தீண்டாமை மிக மோசமான வடிவங்களில் நிலவியது.

20
ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தீண்டாமை நிலவிய வடிவங்களில் சில:

தாழ்த்தப்பட்டோர் பொதுக்கிணறுகளில் நீர் எடுக்கக் கூடாது
சாலைகளில் நடந்து செல்லக் கூடாது
உள்ளூர் ஆட்சி மன்றங்களில் அங்கத்தினராகக் கூடாது
அரசு பொதுச் சாலைகளில் தாழ்த்தப்பட்ட பெண் நடந்துபோகக் கூடாது
அரசு ஊழியராக தாழ்த்தப்பட்டவர் ஆக முடியாது
கோயிலில் தெய்வ தரிசனம் கிடையாது
கல்வி கற்கத் தடை (பொதுக் கல்விக் கூடங்களில்)
தீண்டப்படாதோருக்கு, புரோகிதர்கள் வண்ணார்கள் அம்பட்டர்கள் பணி புரியாத நிலை
(
தாழ்ந்த வகுப்பார் கேட்கும் அனுகூலங்கள்பதிப்பாசிரியர் வீ.ரேவதி/என் சி பி எச் 2009/ பக் 10)

இந்தத் தீண்டாமைக் கொடுமைகள் அனைத்தையும் புரிந்தோர் ஆரிய பிராமணர் மட்டுமல்ல; திராவிடரும்தான் என்பதைக் குறித்துகொள்ள வேண்டும். ஏனெனில், இந்தக் கொடுமைகளைத் தனித்தே புரியுமளவுக்கான செல்வாக்கும் அதிகாரமும் வைதீக பிராமணர்களுக்கு இருக்கவில்லை.அவர்களுக்கான செல்வாக்குப் பின்புலமாக திராவிட ஆதிக்கப் பிரிவினர் இருந்தனர். இருவரும் சேர்ந்துதான் அட்டூழியங்கள் புரிந்தனர்.

தமிழ்ச் சாதிகளில் பிள்ளைமார், கவுண்டர், நாட்டுக்கோட்டை செட்டியார், தேவர் (சில பகுதிகளில்) உள்ளிட்டவையும் சாதிக்கொடுமைகள் புரிந்தன. இவற்றிற்கான அதிகாரத் தளத்தை உருவாக்கித் தந்தவர்களும் திராவிடரே. திராவிடர் வருகைக்கு முன், குறிப்பாக பிற்காலச் சோழர் காலம் வரை, எந்தத் தமிழ்க் குலமும் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது, சாலையில் நடக்கக் கூடாது என்றெல்லாம் தடுக்கப்பட்டதே இல்லை. அவ்வாறான சான்றுகள் வரலாற்றில் இல்லை.

20
ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்திலும் தமிழ்ச் சாதிகளிடையே இருந்த முரண்கள், இன்றுள்ள நிலையைவிடக் குறைவாகவே காணப்படுகிறது. சான்றாக, இன்று தஞ்சைப் பகுதியில் சாதி ஆதிக்கப் பிரிவினராக, நீடிக்கும் கள்ளர் சாதியினர் 1929 ஆம் ஆண்டு எம்.சி.ராஜா அறிக்கையின்படி, ’அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட வேண்டிய தாழ்ந்த வகுப்பாகஇருந்தனர்.

இந்த நிலையில், தமது அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொண்டு ஆங்கிலேயருடன் சமரசமாகிவிட்ட பிராமணர்கள் மீது, திராவிட ஆதிக்கப் பிரிவினர் கொண்ட கோபத்தின் வெளிப்பாடுதான் திராவிட இயக்கமாக உருவெடுத்தது.

தமிழர் வரலாற்றை மாற்றத் துவங்கியது திராவிட இயக்கம்:

திராவிட இயக்கம் என்ற பெயரில், அதன் மூலவர்கள் தமிழர் வரலாற்றைத் திட்டமிட்டு மாற்றத் துவங்கினர். தமிழர்களின் அனைத்துப் பெருமிதங்களையும் இழிவு செய்தனர். தமிழ் மொழியை அவர்களைப் போல இழிவு செய்தோர் எவரும் இலர்.

தமிழக வரலாற்றில், தமது இனத்தினால் உருவான சாதியம், ஆணாதிக்கம், உழைப்புச் சுரண்டல், மூடநம்பிக்கைகள், பிராமண மேலாதிக்கம் உள்ளிட்ட அனைத்து இழிவுகளுக்கும் காரணம் பிராமணர்கள் மட்டுமே என்ற பரப்புரைதான் அவர்களது தந்திரங்களின் முதல் வடிவம். வெற்றிகரமான வடிவமும் கூட!

சாதியமே ஆரியரால்தான் வந்தது; ஆகவே சாதியே பார்க்கக் கூடாது என்பதல்ல அவர்களின் போராட்டம். மாறாக, ஆரியர் அனுபவிக்கும் முன்னுரிமைகளில் தமது சாதிகளுக்கும் பங்கு வேண்டும் என்பதே அவர்களது ஏக்கம். ஆனால், இதை நேரடியாக வெளிப்படுத்தாமல், அனைத்து சாதிகளுக்குமான உரிமைக் குரல்கொடுப்பது போன்ற பாவனையில் வெளிப்படுத்தினர்.

நாயரின் பேச்சுகளிலேயே இதைக் கவனிக்கலாம்.
சில வடநாட்டுத் தகைவர்கள், தேசியம் என்று சொல்லிக்கொண்டு இங்கு வந்து, இங்குள்ளவர்களுக்கு அறிவுரைகள் கூறத் தலைப்பட்டிருக்கின்றனர். இங்கு நிலவும் வருணாச்சிரம தருமம் காரணமாக இந்துக்களுக்குள்ளே பலப்பல வேறுபாடுகள் ஏற்பட்டு பலர் சூத்திரர் என்றும், வேசிகளின் மக்கள் என்றும், குடி தண்ணீர் நிலைகளை அண்டக் கூடாதவர்கள் என்றும், அவர்கள் எல்லோரும் ஊர்களுக்கு வெளியேதான் வாழ வேண்டும் என்றும், அவர்கள் ஓட்டைக் குடிசைகளில்தான் வாழ வேண்டும் என்றும் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களை மேலும் கொடுமைப்படுத்தி, இழிவுபடுத்தவே, இந்து தருமம் பேசிக்கொண்டு சில வட இந்தியத் தலைவர்கள் இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களின் செயல், இங்குள்ள பார்ப்பனர்களுக்கு மேலும் ஆதிக்க அதிகார வெறியை ஊட்டவே பெரிதும் பயன்படுவதாக அமையும். இவர்கள் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு இங்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை! (கூட்டத்தினர் கத்துகின்றனர்வெட்கம்! வெட்கம்!)’ 
(’
இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியப் பரதேசிகள்!’-குத்தூசி குருசாமி பதிப்பகம்-2006, தொகுப்பாசிரியர் கழஞ்சூர் சொ.செல்வராஜி)

நாயரது இந்த உரையின் சாரம்தான் திராவிட இயக்கக் கோட்பாட்டின் அனைத்துப் பாசாங்குகளுக்குமான அடிப்படை.

அன்னிபெசண்டின் ஆரிய சமாஜம்ஹோம்ரூல் இயக்கம் ஆகியவற்றைக் கண்டித்துதான் நாயர் பேசுகிறார். ஆகவே, இவரது பேச்சுஆரிய எதிர்ப்புப் பேச்சுதான். ஆனால், இந்தப் பேச்சில்திராவிடம்மறைபொருளாக பதிவு செய்த சேதிகள்;
சாதியம்தீண்டாமை ஆகியவை இந்து தர்மப்படி ஏற்படுத்தப்பட்டவை.
அந்த இந்து தர்மத்தை வலியுறுத்தவே வட நாட்டார் வருகின்றனர்
தீண்டாமை கடைப்பிடித்து, அதிகார வெறிகொண்டு திரிபவர்கள் பிராமணர்கள்
-
இந்தச் சேதிகளின் வழியேதான் வரலாறு திருத்தி எழுதப்பட்டது.
அதாவது,
ஆரியர் மட்டுமேஆரிய பிராமணர் மட்டுமே சாதியத்தை வலியுறுதியவர்கள். பிறர்அனைவரும்ஆரியரால் பிரிக்கப்பட்டவர்கள்; தமக்குள் அடித்துக்கொள்ளும்படி ஆரியர் சதி செய்தனர்.
வட நாட்டிலிருந்துதான், ஆரியப் பார்ப்பனருக்கு அதிகார வெறி ஊட்டப்படுகிறது.
தீண்டாமைக் கொடுமைகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால், அது ஆரியச் சதியே தவிர, திராவிடருக்கு அதில் பங்கு இல்லை அல்லது அவர்கள் முதன்மைக் காரணகர்த்தாக்கள் அல்லர்
இவ்வாறான பரப்புரைகளின் வழியே, திராவிடர்களின் வரலாறு முற்றும் முழுதுமாக மறைக்கப்பட்டது

பிராமணர்கள் மட்டும்தான் உங்கள் எதிரிகள்! நாங்கள் உங்களை மீட்க வந்த மீட்பர்கள்!’
என்ற கருத்து மிக அற்புதமான முறையில் திராவிட இயக்க மூலவர்களால் தமிழர்களிடையே ந்லைநாட்டப்பட்டது.

நாயரும் பிற திராவிடத் தலைவர்களும் இவ்வாறு மேடைகள்தோறும் முழங்கிக் கொண்டிருந்த அதேகாலத்தில்தான், எம்.சி.ராஜா போன்ற தமிழ்த் தலைவர்கள்
ஐயா எங்கள் மக்களுக்குக் குடிக்க நீராவது கொடுங்கள், சாலையில் நடக்கவாவது விடுங்கள்என ஆங்கிலேயரிடம் மன்றாடிக் கொண்டும், போராடிக் கொண்டும் இருந்தனர்

பறையர்களையும் பள்ளர்களையும் தீண்டப்படாதவர்களாக வைத்து, சாணிப் பால் கரைத்து ஊற்றி, குடிநீர் மறுத்து, ஊதியம் மறுத்து, சாதியின் பேரால் கொலையே செய்து வெறியாட்டம் ஆடிக் கொண்டிருந்த ஜமீன்கள், ஆலை முதலாளிகள், சிற்றரசர்கள் , பணக்காரர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்துதிராவிட இயக்கம்துவங்கினர்


(தொடரும்)

செல்வன்

unread,
Feb 11, 2013, 1:10:20 PM2/11/13
to mint...@googlegroups.com
2013/2/10 தேமொழி <them...@yahoo.com>
முதலில் திராவிட இயக்கத்தை குறை கூறு விரும்பினால் இந்தப் பாடலை நினைத்துப் பாருங்கள்..
சதி செயல் செய்தவன் புத்திசாலி
( புத்திசாலி=இது யார் என்பதை நீங்களே தேர்ந்தெடுங்கள்)
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
(குற்றவாளி=இது யார் என்பதை நீங்களே தேர்ந்தெடுங்கள்)
உண்மையை சொல்பவன் சதிகாரன்
(உண்மையைச் சொன்ன சதிகாரன் = பெரியாரும் அவர் வழி வந்த திராவிட இயக்கங்களும்)
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.
 
 
அதாவது இங்கே நடப்பது தனிதிராவிட நாடு கேட்கும் அன்பர்களுக்கும் தனி தமிழ்நாடு கேட்கும் நண்பர்களுக்கும் நடக்கும் சண்டை.
 
தமிழ்நாட்டை விட்டு துரத்தபடவேண்டியவர் பிராமணரா இல்லை நாயுடு, ரெட்டி, சவுராஷ்ட்ரா, ஒக்கலிகரா என்பது தான் இந்த தரப்புகளுக்கிடயே நடக்கும் பிரச்சனை. எங்களை மாதிரி இந்தியர்கள் யாரையும் துரத்த வேண்டாம் என சொல்லிகொண்டு உள்ளோம். எங்க பேச்சை கேட்பார் யாரையும் காணோம்:-)

seshadri sridharan

unread,
Feb 12, 2013, 5:34:31 AM2/12/13
to mint...@googlegroups.com
//அதாவது இங்கே நடப்பது தனிதிராவிட நாடு கேட்கும் அன்பர்களுக்கும் தனி தமிழ்நாடு கேட்கும் நண்பர்களுக்கும் நடக்கும் சண்டை.//

இது தவறான புரிதல். திராவிட நாடு கேட்டவர்கள் ஓய்ந்துபோன ஏமாளிகள். 

தனிதமிழ்நாடு கேட்போர் இந்த திராவிடக் கருத்தியல் தான் தமிழரைத் தம் உரிமகை உணர்வதற்கு தடையாக உள்ளது என்று கருதுபவர்கள்.


// எங்க பேச்சை கேட்பார் யாரையும் காணோம்//

தமிழர் உணர்வு பெற்று எழும் வரை இது போன்ற சமரசம், அமைதி ஆகிய பேச்சுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே திராவிட கருத்தியல் எதிர்ப்பாளர் கருத்து.

சேசாத்திரி

2013/2/11 seshadri sridharan <ssesh...@gmail.com

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Feb 12, 2013, 6:40:07 AM2/12/13
to mint...@googlegroups.com
2013/2/12 seshadri sridharan <ssesh...@gmail.com>



தமிழர் உணர்வு பெற்று எழும் வரை இது போன்ற சமரசம், அமைதி ஆகிய பேச்சுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே திராவிட கருத்தியல் எதிர்ப்பாளர் கருத்து.



நாங்கள் சோழர்கள். தமிழே பேசியிருந்தாலும் எங்களுக்குகென்று தனியடையாளங்கள் உண்டு. அதை தமிழெனும் பெயர் கொண்டு யார் தடுத்தாலும் தமிழ்நாடு சிதறும் ;-)

S NEELAKANTAN

unread,
Feb 12, 2013, 7:57:49 AM2/12/13
to mint...@googlegroups.com
ஏன்  சேரன் , சோழன் பாண்டியன் இவர்கள் தமிழர்கள் இல்லையா இவர்கள் தானே தமிழ் நாட்டை ஆட்சி புரிந்தனர்
உடனே ஒருவர் சொல்வார் சேரன் மலையாளி சேரமான் பெருமாள் மலையாளி இப்படியே சொல்லி சொல்லி தமிழனை
தமிழை வைத்தே பிரித்தாகிவிட்டது இன்னும் என்ன மிஞ்சியிருக்கிறது . எனக்கு ஒரு சந்தேகம் தமிழ் நாட்டின் எல்லை எது
வடக்கு முதல் தெற்கு வரை கிழக்கு முதல் மேற்கு வரை இந்த எல்லைக்குள் தமிழர்கள் மட்டும் தான் இருந்தனரா இல்லை
தெலுங்கை தாய்மொழியாக கொண்ட தமிழரும் இருந்தனரா கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட கன்னடரும் இதில்
அடக்கமா. மராத்தியை  தாய்மொழியாகக்கொண்ட சரோபாஜி மன்னர் ஆட்சியில் வாழ்ந்த வர்கள் இதில்  அடக்கமா. மலைவாழ் நரிக்குறவர்கள் தமிழர்கள் இல்லையா. தமிழை தாய்மொழியாக கொண்ட பாலக்காட்டில் வசித்துவருபவர்கள் தமிழர்கள்
இல்லையா சுந்தர தமிழ் பேசும் சென்னை வாசி தமிழர்கள் இல்லையா ஒன்று மே புரியவில்லை யார் தமிழர்கள் ?????????
 

S.Neelakantan
நீலகண்டன் (செம்புர் நீலு)


2013/2/12 ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் <ama...@amachu.net>
2013/2/12 seshadri sridharan <ssesh...@gmail.com>


தமிழர் உணர்வு பெற்று எழும் வரை இது போன்ற சமரசம், அமைதி ஆகிய பேச்சுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே திராவிட கருத்தியல் எதிர்ப்பாளர் கருத்து.



நாங்கள் சோழர்கள். தமிழே பேசியிருந்தாலும் எங்களுக்குகென்று தனியடையாளங்கள் உண்டு. அதை தமிழெனும் பெயர் கொண்டு யார் தடுத்தாலும் தமிழ்நாடு சிதறும் ;-)

--

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Feb 12, 2013, 9:32:43 AM2/12/13
to mint...@googlegroups.com
2013/2/12 S NEELAKANTAN <sneelak...@gmail.com>

ஏன்  சேரன் , சோழன் பாண்டியன் இவர்கள் தமிழர்கள் இல்லையா இவர்கள் தானே தமிழ் நாட்டை ஆட்சி புரிந்தனர்


அவர்கள் முறையே சேர, சோழ பாண்டிய நாடுகளை ஆட்சி செய்தனர். அந்நாடுகளில் தமிழ் பேசப்பட்டது.

--

ஆமாச்சு

செல்வன்

unread,
Feb 12, 2013, 9:35:35 AM2/12/13
to mint...@googlegroups.com

2013/2/12 seshadri sridharan <ssesh...@gmail.com>

இது தவறான புரிதல். திராவிட நாடு கேட்டவர்கள் ஓய்ந்துபோன ஏமாளிகள். 


அவர்களா ஏமாளிகள்? தனிதிராவிடம் கேட்டு ஆட்சியை பிடித்துவிட்டார்கள். அடுத்து தனிதமிழ்நாடு கேட்டு நீங்க ஆட்சியை பிடிப்பீர்கள். அடுத்து யாராச்சும் தனி சேரநாடு கேட்டு ஆட்சியை பிடிப்பார்கள்:-)


தமிழர் உணர்வு பெற்று எழும் வரை இது போன்ற சமரசம், அமைதி ஆகிய பேச்சுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே திராவிட கருத்தியல் எதிர்ப்பாளர் கருத்து.

நாங்களும் ஒரு பக்கம் பேசிட்டு போறோம். நீங்க இன்னொருபக்கம் பேசுங்க. பேசுவதால் யாருக்கும் உனற்ச்சி வருவதோ, வராமல் போவதோ நிற்காது இல்லையா?:-)

seshadri sridharan

unread,
Feb 12, 2013, 10:06:19 AM2/12/13
to mint...@googlegroups.com
தமிழ் நாட்டில் உள்ளவர்  எல்லாம் தமிழர் என்று நம்பி தான் தமிழர் திராவிடக் கருத்தியலை ஏற்று ஏமாந்தனர். இதன் விளைவு தமிழர் நில இழப்பு. அரு.கோபாலன் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரே தமிழர் மற்றவர் தமிழ்நாட்டவர் எனப்படுவதே சாலவும் பொருத்தம், நன்று என்கிறார்.

சேசாத்திரி  

2013/2/12 S NEELAKANTAN <sneelak...@gmail.com>

பழமைபேசி

unread,
Feb 12, 2013, 10:06:45 AM2/12/13
to மின்தமிழ்
தமிழை நுகர்ந்து தமிழ் கொண்டு வாழ்பவர்கள் தமிழ்நாடு, கர்நாடக
எல்லையோரம், ஆந்திர எல்லையோரம், ஈழம், பர்மா, மலேசியா, இந்தோனேயத்
தீவுகளில் சில பகுதிகளில் வாழும் பாமர, அடித்தட்டு மக்கள் மட்டுமே.
அவர்கள் எந்தக் கருத்தியலுக்கும் அரசியல் உள்நோக்கங்களுக்கும்
ஆட்படாதவர்கள். அவர்கள் எல்லாம் நாம் திராவிடர் என்றும் சொல்லிக்
கொள்வதுமில்லை. நாம் தமிழர் என்றும் சொல்லிக் கொள்வதுமில்லை.

எம்மைப் போன்றவர்கள் பகுதிநேரத் தமிழ் நுகர்வோர் மட்டுமே. இது போன்ற
தமிழ் நுகர்வோர்தான், தத்தம் நோக்கங்களுக்கு ஏதுவாக ஒவ்வொன்றைச் சொல்லிக்
கொள்கிறோம். ஆனாலும், நாமனைவரும் தமிழர் என்றே சொல்லிக் கொள்கிறோம்.

மற்றவர்கள் எல்லாம் திராவிடர்; நாமெல்லாம் தமிழர் எனும் அணியில் சேர்வோம்
என்பது உடன் இருப்போனைத் தவிர்க்கும் செயலேயன்றி வேறெதுவும் இல்லை.
மேலும் அப்படியெல்லாம் வெட்டிவிடவும் முடியாது. ஆகவே, நாமெல்லோரும்
தமிழர். வாழ்வு சிறப்புற, நமக்கும் நம்மோடு இருப்பவருக்கும் இனிமை
பயக்கக்கூடியன செய்து மகிழ்ந்திருப்போம்.

(இதாரு அங்க? நெம்பப் பேசிப் போட்டனாட்ட இருக்கு. நாஞ்சொன்னன்னு சொல்லி
மந்தராசலங்கடையில் சூடா ஒரு லோட்டா டீயோ, காப்பியா வாங்கியா போ! அட,
சிவகாமி! உன்னீத்தேன் சொல்றேன்!!)

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Feb 12, 2013, 10:52:58 AM2/12/13
to mint...@googlegroups.com


2013/2/12 செல்வன் <hol...@gmail.com>



அவர்களா ஏமாளிகள்? தனிதிராவிடம் கேட்டு ஆட்சியை பிடித்துவிட்டார்கள். அடுத்து தனிதமிழ்நாடு கேட்டு நீங்க ஆட்சியை பிடிப்பீர்கள். அடுத்து யாராச்சும் தனி சேரநாடு கேட்டு ஆட்சியை பிடிப்பார்கள்:-)


பாருங்க எப்படி இருந்த தஞ்சைத் தரணி எப்படி ஆயிடுச்சுன்னு? சென்னைக்கு கட்டுப்பட்டா அப்படித்தான். சோழன் எனும் உணர்வு இல்லாம போனது தான் காரணம்.

--

ஆமாச்சு

தேமொழி

unread,
Feb 12, 2013, 11:15:33 AM2/12/13
to mint...@googlegroups.com


On Tuesday, February 12, 2013 7:52:58 AM UTC-8, amachu wrote:


பாருங்க எப்படி இருந்த தஞ்சைத் தரணி எப்படி ஆயிடுச்சுன்னு? சென்னைக்கு கட்டுப்பட்டா அப்படித்தான். சோழன் எனும் உணர்வு இல்லாம போனது தான் காரணம்.
ஆமாச்சு


சரி....ஜாதி, மதம், இனம் என்ற பிரிவு வேண்டாம் கலப்பு மணம் செய்யுங்கள், அதற்கு காதல் திருமணத்தை ஆதரியுங்கள் என்றால் மீண்டும் இனம் என்றே விவாதமா?

ஆயிரம் ஆண்டு முன்னரே கலப்பு மணம் தவறாகத் தெரியவில்லை, அதன் வழி பிறந்து வந்த தலைமுறையினர் தமிழ்நாட்டில் வேற்றாட்களாகக் கருதப் படவில்லை, தமிழகத்தையும் ஆட்சி புரிந்தனர்.  வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால்  போதுமே. 

ராஜ ராஜ சோழனின் மகள் குந்தவை மணந்த சாளுக்கிய மன்னன் விமலாதித்தன், ராஜேந்திரனின் மகள் அம்மங்கா தேவி இப்படி அவர்கள் வழிதோன்றல்களாக  வந்த சோழ மன்னர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்யவில்லையா? 

ஆமாச்சு சொல்வது போல சோழன் என்ற உணர்வுடனாவது இருங்கள் :D

அவர்கள் எந்தக் காரணங்களுக்காக கலப்பு மணம் செய்தார்கள் என்பதை ஆராய்வதைவிட்டு, இது போன்ற கலப்பு மணங்கள் தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கிறது என்பதை மட்டும் பார்ப்போம்.  நாம் புதுமையோ புரட்சியோ எதுவும் செய்யவில்லை.  பிரிவினை வாதம் செய்து கொண்டே இருப்பதால்  பிறகு வெளிநாட்டுக்காரன் வந்து நம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சி செய்தான்  என்று பழி போட இன்னொருவரைக் சுட்டிக் காட்டத் தேவையில்லாமல் போய்விடும். 

உடல் உறுப்புகளை மற்றவருக்குதானம் செய்து வாழ்வளிக்க, குருதிதானம் செய்து அடுத்தவர் உயிர் பிழைக்க அறிவியலும் முன்னேறிவிட்டது. மூதாதையரும் நல்ல உதாரணமாகத்தான் இருந்திருக்கிறார்கள்.  இடையில் இந்த இன வேறுபாடு பேசும் வழக்கம் யாருக்கு உதவப் போகிறது என்பது புரியவில்லை?

...... தேமொழி 


 

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Feb 12, 2013, 12:14:47 PM2/12/13
to mint...@googlegroups.com


2013/2/12 தேமொழி <them...@yahoo.com>


ராஜ ராஜ சோழனின் மகள் குந்தவை மணந்த சாளுக்கிய மன்னன் விமலாதித்தன், ராஜேந்திரனின் மகள் அம்மங்கா தேவி இப்படி அவர்கள் வழிதோன்றல்களாக  வந்த சோழ மன்னர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்யவில்லையா? 



அவங்களும் அரசர் - அவங்களும் அரசர். நாடு மாறினாலும் ஒரே சாதி. ;-)

அதனாலதான் ராச ராச சோழன் --> ராஜ ராஜ சோழன் ஆகி, ராசேந்திரச் சோழன் ராஜேந்திரச் சோழனாகி, தமிழரும் கெட்டு தமிழும் கெட்ட அக்கப்போர் தெரியாம பேசறீங்க. ;-)

--

ஆமாச்சு

தேமொழி

unread,
Feb 12, 2013, 12:28:46 PM2/12/13
to mint...@googlegroups.com

அரசர் என்பது ஜாதியா? :D 
இது நம் மக்களுத் தெரியாமல் போச்சே!!!!

கலப்பு மணம் செய்தவர் எல்லாம் தங்கள் ஜாதி என்று குறிப்பிட வேண்டிய இடங்களில் எதைப் போடுவது என்று குழப்ப மடையாமல் அரசர் எனக்  குறிப்பிட்டு இந்நேரம் அனைவரும் அரச பரம்பரை ஆகியிருக்கலாமே. 

எல்லோரும் இந்நாட்டு மன்னராகும் வாய்ப்பு ....போச்சே... போச்சே....போச்சே....ஐயோ  ...போச்சே.... மனசு ஆரலியே  :-(


..... தேமொழி

செல்வன்

unread,
Feb 12, 2013, 12:38:39 PM2/12/13
to mint...@googlegroups.com
காதல் மணம் செய்யலாம். அது கலப்பு மணமாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அஜெண்டாவோடு சாதி மறுப்பு திருமணம் செய்ய சொல்லி திருமணத்தை அரசியல் ஆக்குவது உடன்பாடு இல்லை. திருமணம் நம் மனமகிழ்ச்சிக்கு செய்வது. அதை கொள்கைக்காக செய்து வாழ்க்கையை தொலைக்க கூடாது. யாரை காதலித்தாலும் ஜாதி பற்றி கவலைபடாமல் கல்யாணம் செய்துகொள்வதை நாம் வரவேற்போம்.

2013/2/12 தேமொழி <them...@yahoo.com>

அரசர் என்பது ஜாதியா? :D 
இது நம் மக்களுத் தெரியாமல் போச்சே!!!!

கலப்பு மணம் செய்தவர் எல்லாம் தங்கள் ஜாதி என்று குறிப்பிட வேண்டிய இடங்களில் எதைப் போடுவது என்று குழப்ப மடையாமல் அரசர் எனக்  குறிப்பிட்டு இந்நேரம் அனைவரும் அரச பரம்பரை ஆகியிருக்கலாமே. 

எல்லோரும் இந்நாட்டு மன்னராகும் வாய்ப்பு ....போச்சே... போச்சே....போச்சே....ஐயோ  ...போச்சே.... மனசு ஆரலியே  :-(


..... தேமொழி




On Tuesday, February 12, 2013 9:14:47 AM UTC-8, amachu wrote:


2013/2/12 தேமொழி <them...@yahoo.com>


ராஜ ராஜ சோழனின் மகள் குந்தவை மணந்த சாளுக்கிய மன்னன் விமலாதித்தன், ராஜேந்திரனின் மகள் அம்மங்கா தேவி இப்படி அவர்கள் வழிதோன்றல்களாக  வந்த சோழ மன்னர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்யவில்லையா? 



அவங்களும் அரசர் - அவங்களும் அரசர். நாடு மாறினாலும் ஒரே சாதி. ;-)

அதனாலதான் ராச ராச சோழன் --> ராஜ ராஜ சோழன் ஆகி, ராசேந்திரச் சோழன் ராஜேந்திரச் சோழனாகி, தமிழரும் கெட்டு தமிழும் கெட்ட அக்கப்போர் தெரியாம பேசறீங்க. ;-)

--

ஆமாச்சு

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Innamburan Innamburan

unread,
Feb 12, 2013, 12:40:29 PM2/12/13
to mint...@googlegroups.com
பாயிண்ட் மேட், செல்வன்.


2013/2/12 செல்வன் <hol...@gmail.com>
காதல் மணம் செய்யலாம். அது கலப்பு மணமாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அஜெண்டாவோடு சாதி மறுப்பு திருமணம் செய்ய சொல்லி திருமணத்தை அரசியல் ஆக்குவது உடன்பாடு இல்லை. திருமணம் நம் மனமகிழ்ச்சிக்கு செய்வது. அதை கொள்கைக்காக செய்து வாழ்க்கையை தொலைக்க கூடாது. யாரை காதலித்தாலும் ஜாதி பற்றி கவலைபடாமல் கல்யாணம் செய்துகொள்வதை நாம் வரவேற்போம்.

செல்வன்

unread,
Feb 12, 2013, 12:57:24 PM2/12/13
to mint...@googlegroups.com

2013/2/12 Innamburan Innamburan <innam...@gmail.com>

பாயிண்ட் மேட், செல்வன்


Thanks sir

தேமொழி

unread,
Feb 12, 2013, 1:07:35 PM2/12/13
to mint...@googlegroups.com



அடடா?....  விவாதம் மீண்டும் ஆரம்பதிற்கே போய்விட்டதே செல்வன்.
சுபா பிரச்சனை எங்கு ஆரம்பிக்கிறது என்று குறிப்பிடுகிறார்கள்?

இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் காதல் மணம் செய்து கொள்ளுங்கள் (ஏற்கனவே திருமணம் ஆனவர்களைத் தவிர்த்து எனப் பொருள் கொள்க), கலப்புத் திருமணம் என்றால் மிகவும் நல்லது.

பொறுப்பற்ற அரசாங்கம் வந்து நீங்கள் என்ன சாதி எனக் கேட்டால் தயக்கமில்லாமல் அரச குலம் என்று குறிப்பிடுங்கள்.  நாடென்ன செய்தது/அரசாங்கம் என்ன செய்தது? என்று கேள்வி கேட்காமல், பிறரைக் குறை கூறாமல் நாம் யாரென்று  நாமே முடிவெடுக்கலாம்.

..... தேமொழி 



கீழே பார்க்கவும்...
     |
     |
     |
    V

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Feb 12, 2013, 1:14:13 PM2/12/13
to mint...@googlegroups.com
2013/2/12 தேமொழி <them...@yahoo.com>
அரசர் என்பது ஜாதியா? :D 


ஆதிக்க சாதிகள் ;-)








Innamburan Innamburan

unread,
Feb 12, 2013, 1:47:51 PM2/12/13
to mint...@googlegroups.com
பாயிண்ட் வெல் மேட், தேமொழி.


2013/2/12 தேமொழி <them...@yahoo.com>

தேமொழி

unread,
Feb 12, 2013, 1:54:26 PM2/12/13
to mint...@googlegroups.com

நன்றி ஐயா *&lt:-P party

..... தேமொழி

பழமைபேசி

unread,
Feb 12, 2013, 4:56:12 PM2/12/13
to மின்தமிழ்
//நம் மனமகிழ்ச்சிக்கு செய்வது.//

என் கொள்கைப்படி நான் எண்ணியது எனக்கு அமைந்தால் எனக்கு மகிழ்ச்சி. ஆனால்
நான் எனக்காக ஒரு எதிர்பார்ப்பையே கொள்ளக் கூடாது என்றால் எப்படி? இதுல
எதோ இடிக்குது!!

On Feb 12, 12:38 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> காதல் மணம் செய்யலாம். அது கலப்பு மணமாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.
> ஆனால் அஜெண்டாவோடு சாதி மறுப்பு திருமணம் செய்ய சொல்லி திருமணத்தை அரசியல்
> ஆக்குவது உடன்பாடு இல்லை. திருமணம் நம் மனமகிழ்ச்சிக்கு செய்வது. அதை
> கொள்கைக்காக செய்து வாழ்க்கையை தொலைக்க கூடாது. யாரை காதலித்தாலும் ஜாதி பற்றி
> கவலைபடாமல் கல்யாணம் செய்துகொள்வதை நாம் வரவேற்போம்.
>

> 2013/2/12 தேமொழி <themo...@yahoo.com>


>
>
>
>
>
>
>
>
>
>
>
> > அரசர் என்பது ஜாதியா? :D
> > இது நம் மக்களுத் தெரியாமல் போச்சே!!!!
>
> > கலப்பு மணம் செய்தவர் எல்லாம் தங்கள் ஜாதி என்று குறிப்பிட வேண்டிய இடங்களில்
> > எதைப் போடுவது என்று குழப்ப மடையாமல் அரசர் எனக்  குறிப்பிட்டு இந்நேரம்
> > அனைவரும் அரச பரம்பரை ஆகியிருக்கலாமே.
>
> > எல்லோரும் இந்நாட்டு மன்னராகும் வாய்ப்பு ....போச்சே...
> > போச்சே....போச்சே....ஐயோ  ...போச்சே.... மனசு ஆரலியே  :-(
>
> > ..... தேமொழி
>
> > On Tuesday, February 12, 2013 9:14:47 AM UTC-8, amachu wrote:
>
> >> 2013/2/12 தேமொழி <them...@yahoo.com>
>
> >>> ராஜ ராஜ சோழனின் மகள் குந்தவை மணந்த சாளுக்கிய மன்னன் விமலாதித்தன்,
> >>> ராஜேந்திரனின் மகள் அம்மங்கா தேவி இப்படி அவர்கள் வழிதோன்றல்களாக  வந்த சோழ
> >>> மன்னர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்யவில்லையா?
>
> >> அவங்களும் அரசர் - அவங்களும் அரசர். நாடு மாறினாலும் ஒரே சாதி. ;-)
>
> >> அதனாலதான் ராச ராச சோழன் --> ராஜ ராஜ சோழன் ஆகி, ராசேந்திரச் சோழன்
> >> ராஜேந்திரச் சோழனாகி, தமிழரும் கெட்டு தமிழும் கெட்ட அக்கப்போர் தெரியாம
> >> பேசறீங்க. ;-)
>
> >> --
>
> >> ஆமாச்சு
>
> >>  --
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
> > ---
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "மின்தமிழ்" group.
> > To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> > email to mintamil+u...@googlegroups.com.

> > For more options, visithttps://groups.google.com/groups/opt_out.

செல்வன்

unread,
Feb 12, 2013, 6:57:24 PM2/12/13
to mint...@googlegroups.com
2013/2/12 தேமொழி <them...@yahoo.com>
இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் காதல் மணம் செய்து கொள்ளுங்கள் (ஏற்கனவே திருமணம் ஆனவர்களைத் தவிர்த்து எனப் பொருள் கொள்க), கலப்புத் திருமணம் என்றால் மிகவும் நல்லது.



இங்கே தான் இடிக்குதுங்க தேமொழி. நான் சொன்னதும் இதைதான்.

காதல் திருமணம் கலப்பு திருமணம், சுயசாதி திருமணம் என எப்படி இருந்தாலும் ஓக்கே என தானே சொல்லவேண்டும். அதில் ஏன் கலப்பு திருமணம் மட்டும் உயர்ந்தது? அப்போது மற்ற திருமணங்கள் நல்லதில்லையா?


--
செல்வன்
www.holyox.blogspot.com

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்



செல்வன்

unread,
Feb 12, 2013, 6:58:52 PM2/12/13
to mint...@googlegroups.com

2013/2/12 பழமைபேசி <pazam...@gmail.com>

என் கொள்கைப்படி நான் எண்ணியது எனக்கு அமைந்தால் எனக்கு மகிழ்ச்சி. ஆனால்
நான் எனக்காக ஒரு எதிர்பார்ப்பையே கொள்ளக் கூடாது என்றால் எப்படி? இதுல
எதோ இடிக்குது!!



உன்னை என் கொள்கைக்காக தான் கட்டிகிட்டேன் என வாழ்க்கைதுணையிடம் சொல்வது கொடுமை.

உன்னை விரும்பி கட்டிகொண்டேன் என சொல்லுவது தான் காதலுக்கு மரியாதை

--
செல்வன்
www.holyox.blogspot.com

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்



பழமைபேசி

unread,
Feb 12, 2013, 7:24:48 PM2/12/13
to மின்தமிழ்
விருப்பம் என்பது தொபுக்கடீர் என வந்து விடாது. ஏதாவது உள்ளீடு அதற்கு
இருக்கும். அழகு, அறிவு, தன்மை, பண்பு என ஏதாகிலும் ஒன்றின் மீதான
தாக்கம்தான் விருப்பத்திற்கு அடிப்படை. என்னுடைய பள்ளித்தோழன் சூலூர்
தங்கராஜ், தன்னுடைய திருமணம் தன் கொள்கை சார்ந்ததாக இருக்க வேண்டும் என
விரும்பினான். அதன்படியே எதேச்சையாகத் தான் வேலை பார்க்கும்
நிறுவனத்திலேயே பணிபுரிந்த ஒரு கைம்பெண்ணின் மீது காதல் கொண்டான்.
பின்னர் மணந்து கொண்டான். அவன் சொகிறானோ, இல்லையோ, நானும் என் வகுப்பு
நண்பர்களும் நினைவுபடுத்திக் கொள்கிறோம். அட, பள்ளிக்கூடத்துல அடிக்கடி
சொல்லிகிட்டு இருப்பான். அது போலவே செய்து காமிச்சிட்டானே எனப் பெருமிதம்
கொள்கிறோம். இது இயல்பாக நடக்கும் ஒன்று.

பெரியோர் நிச்சயத்துச் செய்யும் திருமணங்களைப் போல, ஒரு தரகனிடம் போய்,
எந்த விருப்பு வெறுப்புமில்லாமல் ஒரு துணையைத் தேர்ந்தெடுத்து மணம்
புரிந்து, பின்னர் என் கொள்கைக்காக உன்னை மணம் புரிந்தேன் எனச் சொன்னால்
அது அவனது கொள்கைக்கான மணமே அல்ல.

விருப்புக்கான வித்துதான் எதோ ஒரு கூறு. அது அழகாக இருக்கலாம். பண்பாக
இருக்கலாம். பணமாக இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். விருப்பு என்பது
சுயம்பு அல்ல.

பணிவுடன்,
பழமைபேசி.

On Feb 12, 6:58 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2013/2/12 பழமைபேசி <pazamaip...@gmail.com>

செல்வன்

unread,
Feb 12, 2013, 7:29:45 PM2/12/13
to mint...@googlegroups.com
2013/2/12 பழமைபேசி <pazam...@gmail.com>
விருப்புக்கான வித்துதான் எதோ ஒரு கூறு. அது அழகாக இருக்கலாம். பண்பாக

இருக்கலாம். பணமாக இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். விருப்பு என்பது
சுயம்பு அல்ல.


விருப்புக்கான வித்தாக தான் மணந்து கொள்ளும் பெண் கைம்பெண்ணாக தான் இருக்கவேண்டும் என்பது இருக்க கூடாது. அது பெருமைபட்டுகொள்ள கூடிய விஷயமும் அல்ல. காதலில் வென்றேன் என்பதில் பெருமிதம் இருக்கலாம். மனைவி முன்னாள் கைபெண் என்பதில் தனியாக ஏதும் பெருமிதம் இருந்தால் அப்புறம் ஏதும் சொல்வதுக்கு இல்லை


--
செல்வன்
www.holyox.blogspot.com

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்



தேமொழி

unread,
Feb 12, 2013, 7:52:37 PM2/12/13
to mint...@googlegroups.com


யாரும் யாரையும் கல்யாணம் செய்து கொள்ளலாம் ....தடையேதுமில்லை ....

காதலுக்கு கண்ணில்லை, யாருக்கும் யார் வேண்டுமானாலும் காதல் வரும் என்று சொல்லக் கேள்வி...வயது வேறுபாடு, இன, மொழி, நாடு, மதம், அந்தஸ்து .... (இன்னமும் என்னென்ன வேறுபாடு இருக்கிறது? இப்பொழுது ஆண் பெண் வேறுபாடும்  இல்லை என்றாகிவிட்டது என்று தெரிகிறது :-)

தற்கால வாழ்க்கை முறையில் சொந்தத்திலேயே, மாமா, அத்தை வீட்டுப் பிள்ளைகளை, அல்லது தன்னைச் சார்ந்த சமூகத்திலேயே  காதல் வரும் என்பது மிகவும் குறைவு என நம்புகிறேன்.
பெரும்பாலும் எதிர்ப்பை எதிர்பார்த்து இந்தப் பிரச்சனையே வேண்டாம் என்று இருப்பவர்களை ஊக்கப்படுத்த கலப்புத் திருமணத்தை ஆதரிக்கிறோம் எனக் குரல் கொடுத்தால் இந்தத் தடை விலகும். 

முதலில் சிலர் தயங்கலாம், முன்னுதாரணம் இருந்தால் பலருக்கு அது பழகிப் போய்விடும்.  பிறகு முன்னேர் சென்ற வழி பின்நேரும் செல்லும்.

சமுதாயத்தில் புதுமை செய்பவர்களுக்குத்தான் ஆதரவு அதிகம் தேவை. பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், விவாகரத்து, ஒடுக்கப் பட்டவர்களுக்கு   கல்வி மறுப்பு, வழிபட கோயில் மறுப்பு, நடக்கும் சாலை, குடிக்கும் நீர் என  எல்லாம் மறுக்கப் பட்டு இருந்த நாடுதானே இந்தியா.  இப்பொழுது இளைய தலைமுறையினர் இதைக் கேட்டாலே சிரிப்பார்கள் இல்லையா?  அவர்களுக்குப் புரியவும் புரியாது. 

இந்த சமத்துவ நிலை வந்து பிரிவினைகள் ஒழிய வேண்டும்.  அதற்கு காதல் மணம் உதவும் எனத் தெரிகிறது. அதனால் அதை  ஆதரிக்க வேண்டும்.  அதிலும் அது கலப்பாக இருந்தால் வேறுபாடில்லாத நிலை விரைவில் ஏற்படும்.   வீர சாகசம் செய்தவர்கள் என சுதந்திர தினம் போன்ற நாட்களில் சிறப்பிக்கப் படுவது போல, துணிந்து கலப்பு மணம் செய்பவர்களை உற்சாகப் படுத்தவே அதற்கு அந்த சிறப்புக் கவனிப்பு கொடுக்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்காவில் வந்து குடியேறியவர்களை நீங்கள் எந்த நாடு எனக் கேட்டால் தங்கள் மூதாதையர் நாடு எனக் குறிப்பிடும்பொழுது வெட்கப் படவோ வேதனைப் படவோ இல்லாமல் அனைத்தும் சமம் என்பது போல பதில் சொல்வார்கள்.  அது போலவே நம் மக்களைக் கேட்டாலும் அவர்கள் மூதாதையரின் வழித்தோன்றலைச்  சொல்லும்பொழுது தயக்கம் இல்லாத நிலை வரவேண்டும். 

ஒரு சிலர் இப்பொழுது முன் வந்து தனது  ஜாதிப் பெயரை தங்கள் பெயருக்குப் பின் போடுகிறார்கள்.  அவர்கள் காலம் காலமாக சமுதாயத்தில் மதிக்கப் பட்டவர்கள்.  பிறர் அவ்வாறு செய்யத் தயங்கும் நிலைக்கு என்ன காரணம்? அடுத்தவர்கள் பார்வையில் மதிப்பு குறையும் என்பதுதானே.

இது போன்ற உயர்ந்த தாழ்ந்த மனப்பான்மை வருங்கால  தலைமுறையினரிடம் இருக்கக் கூடாது.  எல்லோரும் சமம் என்ற எண்ணம் வர வேண்டும். அதற்காக கலப்பு மணம் செய்பவர்களை முதுகில் தட்டிக் கொடுக்கிறேன்.  அவ்வளவுதான்.

செல்வனுக்கு ஒரு ரஜினி பாட்டு: http://www.youtube.com/watch?v=UM9K-kL6DMc

பழமைபேசிக்கு ஒரு கிராமத்து பாட்டு: http://www.youtube.com/watch?v=hZENOD2DjXI

பழமைபேசி

unread,
Feb 12, 2013, 7:55:34 PM2/12/13
to மின்தமிழ்
நான் தெளிவாகச் சொல்லி ஆயிற்று. அவன் நினைக்கிறானா என்பது தெரியாது.
ஆனால் எனக்கு, அவன் சொன்னபடி செய்திருக்கிறான் என்கிற எண்ணம் வருகிறது.
அதற்கு நான் என்ன செய்ய முடியும்??

பழமைபேசி

unread,
Feb 12, 2013, 7:58:09 PM2/12/13
to மின்தமிழ்
மிகவும் பிடித்த பாட்டு!! நன்றி!!

> > 2013/2/12 தேமொழி <them...@yahoo.com <javascript:>>

செல்வன்

unread,
Feb 12, 2013, 8:02:06 PM2/12/13
to mint...@googlegroups.com
2013/2/12 பழமைபேசி <pazam...@gmail.com>
நான் தெளிவாகச் சொல்லி ஆயிற்று. அவன் நினைக்கிறானா என்பது தெரியாது.

ஆனால் எனக்கு, அவன் சொன்னபடி செய்திருக்கிறான் என்கிற எண்ணம் வருகிறது.
அதற்கு நான் என்ன செய்ய முடியும்??


மற்றவர் நினைப்பதற்கு தம்பதியினர் எப்படி பொறுப்பு ஆவார்கள்?:-) அதனால் அது ஒரு பொருட்டு இல்லை. 

மற்றபடி காதலுக்கு அழகு அல்லது குணம் என்ற இரு தகுதிகள் மாத்திரமே இருக்க முடியும். ஒருவர் தன் வாழ்க்கைதுணையிடம் உன்னை அழகுக்காக மணந்தேன் என்றால் கோபிக்க போவது இல்லை. மகிழ்வார். குணத்துக்காக மணந்தேன் என்றாலும் மகிழ்வார். வேறு எந்த காரணத்தையும் காதலுக்காக சொல்லுதல் அவருக்கு ஏற்புடையதாக இருக்கும் என தோன்றவில்லை.

செல்வன்

unread,
Feb 12, 2013, 8:04:59 PM2/12/13
to mint...@googlegroups.com
2013/2/12 தேமொழி <them...@yahoo.com>
இந்த சமத்துவ நிலை வந்து பிரிவினைகள் ஒழிய வேண்டும்.  அதற்கு காதல் மணம் உதவும் எனத் தெரிகிறது. அதனால் அதை  ஆதரிக்க வேண்டும்.

:-)))))

காதல் மணத்தை நான் காதல் ஒன்றுக்காக தான் ஆதரிப்பேன். மற்ரது எல்லாம் பொருட்டே இல்லை. சரி, அதை விடுங்க:-) எனக்கு மிகவும் பிடித்த ரஜினி பாடல். நன்றி

 

பழமைபேசி

unread,
Feb 12, 2013, 8:15:44 PM2/12/13
to மின்தமிழ்
//விருப்புக்கான வித்தாக தான் மணந்து கொள்ளும் பெண் கைம்பெண்ணாக தான்
இருக்கவேண்டும் என்பது இருக்க கூடாது.//

விருப்பை எப்படி வலிந்து உற்பத்தி செய்யக்கூடாதோ, அதே போல தோன்றும்
விருப்பை மேற்கூறியபடி தடுத்தணைப்பதும் இருக்கக் கூடாது.

எடுத்துக்காட்டு: எனக்குத் தெரிந்த அமெரிக்கக் குடிமகன் ஒருவர், எனக்கு
ஆதரவற்ற தமிழ்ப் பெண்ணை மணந்து கொள்ள ஆசை என்கிறார். அதே போல, ஊருக்குப்
போய் சில பல பெண்களைப் பார்த்து, பேச உதவி செய்கிறோம். அங்குள்ள ஒரு
பெண்ணுடன் கலந்தாலோசித்து, அந்த ஆதரவற்றோர் புகலிடத்தில் உரிய அனுமதி
பெற்று மணம் புரிந்து கொள்கிறார். விரும்பித்தான். இருவரும்
ஒருவரையொருவர் விரும்பி மணம் புரிந்து கொள்கிறார்கள். அந்தப் பெண் இங்கு
வந்த பின்னர் முறைப்படி படித்து, பட்டம் வாங்கி, நல்லபடியாக
இருக்கிறார்கள். அவரிடத்தில் நானோ, நண்பர்களோ போய், நீ
கொள்கைக்காகவெல்லாம் மணம் புரியக்கூடாது எனச் சொல்ல முடியுமா என்ன?
அவருக்கு அப்படியொரு ஆசை. இருந்திட்டுப் போகட்டுமே!!

கண்மூடித்தனமாக ஒன்றைச் செய்வதற்கும், ஆசை கொண்டு செய்வதற்கும்
வேறுபாடுகள் உண்டல்லோ? மற்றபடி சொல்லிக் காண்பித்துச் சிறுமைபடுத்துவது
நன்றன்று. அது சுய அறிவு சார்ந்த ஒன்று. அதற்காக, அப்படியான ஆசை/
விருப்பம் ஒருவருக்கு வரக்கூடாது என்பது.... இஃகிஃகி... அவரவர் ஆசை,
அவரவருக்குச் சொந்தம். நாம விலகிக்கலாமே? அடம் பிடிக்காதீங்க அண்ணாச்சி.
உங்களுக்கும் முடிஞ்சி போச்சி. எனக்கும் முடிஞ்சி போச்சி. ஆகப்பட்டவங்க,
நல்லபடியா அவங்க விருப்பப்படி செய்துகிடட்டும்!!

பழமைபேசி

unread,
Feb 12, 2013, 8:21:29 PM2/12/13
to மின்தமிழ்
எதிர்மறையைக் காட்டி விவாதம் செய்வதில் எல்லாவற்றும் இடம் உண்டு. நான்
உன் பண்புக்காக மணந்தேன். ஆனால் நீ இப்படி இருப்பாய் எனத்
தெரிந்திருந்தால் மணந்திருக்க மாட்டேன் எனச் சொன்னால் என்ன செய்வதாம்??
”அழகா இருந்தே? இப்பப் பாரு, எவ்வளவு குண்டுன்னு??”, இப்படியும்
நோகடிப்போர் உண்டு.

ஆகவே, நல்லதே நினைத்துச் செய்வோர் செய்து கொள்ளட்டும். எதிர்மறையாக,
கொள்கைக்காக மணந்தேன் எனச் சொல்லி சிறுமைப்படுத்தமாட்டார் எனவும்
நம்புவோம். குறிப்பாக, உள்ளார்ந்த கொள்கைப்பற்று உடையோர் அவ்வித
சிறுமைகளுக்கு இடங்கொடார்!!

On Feb 12, 8:02 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2013/2/12 பழமைபேசி <pazamaip...@gmail.com>
>

Nagarajan Vadivel

unread,
Feb 12, 2013, 8:51:38 PM2/12/13
to மின்தமிழ்
காதல் திருமணம், கலப்புத் திருமணம் பெற்றோர் செய்துவைக்கும் திருமணம் எல்லாவற்றுக்கும் பொதுப் பண்புகளும் தனிப்பண்புகளும் உண்டு

பெற்றோர் செய்துவைக்கும் திருமணம் இரண்டு குடும்பக்களுக்கு இடையே ஏற்படும் உறவு
மணமக்கள் தலையாட்டும் பொம்மைகள்

கலப்புத் திருமணம் என்பது சாதி அடிப்படையில் நிகழ்வது

முந்தைய பழங்குடிகள் மரபுப்படி தங்கள் பிரிவுக்குள்ளே திருமணம் செய்வது மரபுக்கு எதிரானது என்ற நிலை மாறி தங்கள் பிரிவுக்குள் உறவுக்குள் மணம் செய்தும் முறையைத் தாண்டி வேறொரு சாதிப்பெண்ணைப் பெற்றோர்கள் விருப்பத்துடனோ விருப்பத்துக்கு எதிராக மணந்துகொள்வது.  சில அரசியல் கட்ட்சிகள் இந்தமுறை தங்களின் பண்டைய மரபைச் சேர்ந்தது என்றும் சாதிகள் இல்லாத சமுதாயம் உருவாக வழி வகுக்கும் என்று கருதி கலப்புத் திருமணத்தை வலியுறுத்தினர்

காதல் திருமணம் என்பது காதல் வயப்பட்ட ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருபக்கத்திலும் பெற்றோர்களின் முன் அணுமதியுடன் திருமணன் செய்துகொள்ள முயன்று எதிர்ப்பு இருந்தால் அதை முறியடித்துத் திருமணம் செய்துகொள்வது

திருமணத்தில் பொருளாதார உயர்வு தாழ்வு சாதியில் உயர்வு தாழ்வு குடும்பத்துக்குள் புதிய வரவான பெண் குடும்பச்சூழலுக்குத் தன்னை சரியாக அமைத்துக்கொள்வது அல்லது கணவனைக் குடும்பத்தில் இருந்து தனிப்படுத்துவது என்று குழப்பம் செய்வது என்ற அரசியல் காரணங்கள் கலப்பு மணம் காதல் மணத்தில் அடிப்படைச் சிக்கலை உருவாக்குவதால் அதற்கு அதிகம் ஆதரவில்லை

நாகராசன்


2013/2/13 பழமைபேசி <pazam...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

L.Karthik

unread,
Feb 12, 2013, 9:58:35 PM2/12/13
to mint...@googlegroups.com
எல்லாம் சரி. காதல் திருமணத்தால் பாதிக்கப்படுவோரின் நிலை ????


http://bhageerathi.in/index.php/2012-12-11-14-36-57/12-2012-12-11-14-34-03/12-love



என்றும் அன்புடன்
எல்கே
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



-----
No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 2013.0.2897 / Virus Database: 2639/6099 - Release Date: 02/12/13

செல்வன்

unread,
Feb 12, 2013, 10:17:01 PM2/12/13
to mint...@googlegroups.com
2013/2/12 பழமைபேசி <pazam...@gmail.com>
எனக்குத் தெரிந்த அமெரிக்கக் குடிமகன் ஒருவர், எனக்கு

ஆதரவற்ற தமிழ்ப் பெண்ணை மணந்து கொள்ள ஆசை என்கிறார். அதே போல, ஊருக்குப்
போய் சில பல பெண்களைப் பார்த்து, பேச உதவி செய்கிறோம். அங்குள்ள ஒரு
பெண்ணுடன் கலந்தாலோசித்து, அந்த ஆதரவற்றோர் புகலிடத்தில் உரிய அனுமதி
பெற்று மணம் புரிந்து கொள்கிறார். விரும்பித்தான். இருவரும்
ஒருவரையொருவர் விரும்பி மணம் புரிந்து கொள்கிறார்கள். அந்தப் பெண் இங்கு
வந்த பின்னர் முறைப்படி படித்து, பட்டம் வாங்கி, நல்லபடியாக
இருக்கிறார்கள். அவரிடத்தில் நானோ, நண்பர்களோ போய், நீ
கொள்கைக்காகவெல்லாம் மணம் புரியக்கூடாது எனச் சொல்ல முடியுமா என்ன?
அவருக்கு அப்படியொரு ஆசை. இருந்திட்டுப் போகட்டுமே!!

 
ஆதரவற்ற பெண்ணுக்கு "வாழ்க்கை கொடுக்க" ஒருவர் விரும்பினால் ஒரு வேலை வாங்கி கொடுக்கலாம். அல்லது படிக்க வைக்கலாம். ஆதரவற்ற பெண் தான் வேண்டும் என தேடி கல்யாணம் செய்து கொள்வது பற்றி நோ கமென்ட்ஸ்.
 
--
செல்வன்
www.holyox.blogspot.com

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்



செல்வன்

unread,
Feb 12, 2013, 10:19:12 PM2/12/13
to mint...@googlegroups.com
2013/2/12 பழமைபேசி <pazam...@gmail.com>
அழகா இருந்தே? இப்பப் பாரு, எவ்வளவு குண்டுன்னு??”, இப்படியும்

நோகடிப்போர் உண்டு.

அப்படி சொல்லியாவது ஜிம்முக்கு போய் உடல்பயிற்சி செய்ய வைப்பதில் எந்த தவறும் இல்லை.


--
செல்வன்
www.holyox.blogspot.com

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்



பழமைபேசி

unread,
Feb 12, 2013, 10:46:36 PM2/12/13
to மின்தமிழ்
Confession??

On Feb 12, 10:19 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2013/2/12 பழமைபேசி <pazamaip...@gmail.com>
>

பழமைபேசி

unread,
Feb 12, 2013, 10:51:25 PM2/12/13
to மின்தமிழ்

He did everything... another lady married physically challenged person
and she is also social activist. Com on Annachi, lets encourage them!!

On Feb 12, 10:17 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2013/2/12 பழமைபேசி <pazamaip...@gmail.com>
>

செல்வன்

unread,
Feb 12, 2013, 11:08:11 PM2/12/13
to mint...@googlegroups.com
2013/2/12 பழமைபேசி <pazam...@gmail.com>
Confession??

 
:-)
 
Sort of:-)

--
செல்வன்
www.holyox.blogspot.com

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்



செல்வன்

unread,
Feb 12, 2013, 11:10:03 PM2/12/13
to mint...@googlegroups.com
2013/2/12 பழமைபேசி <pazam...@gmail.com>
He did everything... another lady married physically challenged person

and she is also social activist. Com on Annachi, lets encourage them!!


Annachi, In USA if any girl or boy tells a physically challenged person "I want to marry you because of your physical situation" they will be shown the door. No self-respecting American boy or girl would stand that. They would consider it as an insult.

--
செல்வன்
www.holyox.blogspot.com

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்



செல்வன்

unread,
Feb 12, 2013, 11:34:41 PM2/12/13
to mint...@googlegroups.com

2013/2/12 L.Karthik <karth...@gmail.com>

எல்லாம் சரி. காதல் திருமணத்தால் பாதிக்கப்படுவோரின் நிலை ????


படித்தேன் தலைவா...சரியான வாதமாக தெரியவில்லை.

மனமொத்து இருவர் செய்யும் திருமணம் பிறரை ஏன் பாதிக்கவேண்டும்? அக்கா காதல் மணம் செய்ததால் தங்கையை சின்ன வயதிலேயே கட்டி வைத்தால் அது அக்காவின் குற்றமா அல்லது பெற்றோரின் குற்றமா?

ருக்மிணியை தாய்,தந்தையர் சம்மதம் இன்றி தேரில் ஏற்றி கடத்தி வந்து களவுமணம் புரிந்த கண்ணபரமாத்மாவை தொழும் இந்துக்கள் யாரும் காதலர்களை பிரிப்பதில் எந்த பொருளும் இல்லை. இந்தியாவின் முதல் பதிவு செய்யப்பட்ட காதல் கடிதத்தை எழுதியது  அன்னை ருக்மிணி

அன்னை எழுதிய காதல் கடிதத்தை பதிகிறேன். 

‘புவன சுந்தரனே  உன் மீது காதல் கொண்டு விட்டேன். உன் மேலான குணங்களையும் வசீகரத் தோற்றத்தையும் காது வழி கேட்டே காதலிக்கத் தொடங்கிவிட்டேன். செவி வழியே வந்து இதயத்தில் இறங்கிவிட்டாய். உன் மதிவதனத்தைப் பார்த்தாலே கண்கள் மோட்சம் பெறுமாமே... லஜ்ஷையை விட்டுக்கூறுகிறேன் கண்ணா, உன்னையே கணவனாக அடைய விரும்புகிறேன்.

ஒரு பெண் தனக்கு கணவனாகப் போகும் ஆணிடம் ஏழு குணங்களை எதிர்பார்ப்பாள்... முகுந்தா! குலம், குணம், ஞானம், இளமை, செல்வாக்கு, தனம், வசீகரம்... போன்றவையே அவை.ஆண் சிங்கமே! இவை யாவற்றிலுமே உனக்கு சமதையாக வேறு யாருமிலர்.அறிவுடைய, திருமண வயதுக்குரிய, கௌரவ குலத்தைச் சேர்ந்த எந்தப் பெண்ணுமே உன்னையே மணமுடிக்க விரும்புவாள்.ஆதலால் கமலக்கண்ணா... உன்னிடம் சரணடைந்தேன்.ஓடோடி வந்து என் கைத்தலம் பற்றவும்.

உனக்காக நூறு ஷன்மம் வரை காத்திருப்பேன். உண்ணா நோன்பிருப்பேன். என்றேனும் ஒரு நாள் உன் பாதக் கமலம் எனக்குக் கிட்டும்தானே?’’



--
செல்வன்
www.holyox.blogspot.com

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்



DEV RAJ

unread,
Feb 12, 2013, 11:40:04 PM2/12/13
to mint...@googlegroups.com
காதலுக்கான வயது 21 ; அதற்குமேல் காதல் மணம் அங்கீகரிக்கப்படும் - பா ம க
[ஆதாரம் ; சுவரொட்டி]

செல்வன்

unread,
Feb 12, 2013, 11:46:00 PM2/12/13
to mint...@googlegroups.com

On Tue, Feb 12, 2013 at 10:40 PM, DEV RAJ <rde...@gmail.com> wrote:
காதலுக்கான வயது 21 ; அதற்குமேல் காதல் மணம் அங்கீகரிக்கப்படும் - பா ம க
[ஆதாரம் ; சுவரொட்டி]


காதலுக்கு 18. கல்யாணத்துக்கு 21.

பெற்றோர் காதலை தடுக்கலை எனில் லேட்டாக கூட கல்யாணம் செய்துகொள்வார்கள். அந்த மாதிரி கைடன்சை பெற்றோர் பிள்லைகளுக்கு கொடுக்கணும். 

DEV RAJ

unread,
Feb 12, 2013, 11:51:13 PM2/12/13
to mint...@googlegroups.com

மகளிரை வாலிபர் வலிதே கவர்ந்துவந்து மணம் செய்துகொள்வது
பழைய வழக்கம். இன்றைய சட்டம் மகளிரைக் கவர்ந்துவர
அனுமதிக்காது. இன்று பலதார மணமும் சட்டத்துக்குப் புறம்பானது.

அரச குல மகளிர் தமது இனத்தில் மணத்தேர்வு செய்துகொள்வதும்,
கணவன் மரித்தால் உடன்கட்டை ஏறுவதும்  குறைந்தது
ராணி ஸம்யுக்தை காலம்வரை சமுதாய ஒப்புதலுடன்
நிலவிய வழக்கம்; சில விதிவிலக்குகளும் உண்டு.

மிகப் பழைய விழுமியங்கள் இழையைத் திசை திருப்ப
வாய்ப்பளிக்கலாம் என்று தாழ்மையுடன் சுட்டப்படுகிறது.


தேவ்

Nagarajan Vadivel

unread,
Feb 12, 2013, 11:53:44 PM2/12/13
to மின்தமிழ்
ஐயா
எல்லாம் களம்கண்ட கவிஞர்கள் மட்டுதான்போல் தோன்றுகிறதே

எதிர்ப்பை மீறிக் காதல் செய்துகொண்டவர்கள் இருந்தால் அவர்களின் உண்மை அனுபவத்தை அறியலாமே

நாகராசன்


2013/2/13 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Feb 12, 2013, 11:57:13 PM2/12/13
to mint...@googlegroups.com

2013/2/12 DEV RAJ <rde...@gmail.com>

மிகப் பழைய விழுமியங்கள் இழையைத் திசை திருப்ப
வாய்ப்பளிக்கலாம் என்று தாழ்மையுடன் சுட்டப்படுகிறது.


நம் மரபும், பண்பாடும் என்ன என்பதை மக்கள் உணர வேண்டாமா என்ன?

Tthamizth Tthenee

unread,
Feb 13, 2013, 12:03:31 AM2/13/13
to mint...@googlegroups.com
கலப்பு மணத்தை எல்லா சாதியினரும் ஆதரிக்கிறார்களா

 

இப்போதெல்லாம் கலப்பு மணம் என்பது  பணம் நிறைய இருப்போர்  அதை மட்டுமே தகுதியாக , சாதியாக மனதில் கொண்டு  
 
பணத்துக்கும் பணத்துக்குமே  கலப்பு மணம் செய்கின்றனர்
 
அதை மீறி  பணம் இருப்போர்   , பணமே இல்லாதவர்களிடம்  அவர் சாதியாயினும்  ஒதுக்குகிறார்கள்  என்பதே  உண்மை
 
 
 
சாதி ,மதம் ,இனம், மொழி  போன்ற எதுவுமே  பணத்துக்கு முன்னால் அடிபட்டு போகிறது
 
பணம் இருந்தால் கலப்பு மணம்
 
இல்லையென்றால் கைகலப்பு மணம் என்பதே உண்மையான நிலமை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/2/13 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Swarna Lakshmi

unread,
Feb 13, 2013, 2:56:00 AM2/13/13
to mint...@googlegroups.com
இதெல்லாம் இன்னும் ஒரு பிரச்சனையாக இருக்கிறதா என்ன!! எங்கள் குடும்பத்திலேயே பிற நாட்டு மனிதர்களை மணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள்!! ஓரளவுக்கு அடிப்படை பழக்க வழக்கங்கள் ஒத்துப்போனால் போதும் - மற்றவை எல்லாம் காலத்தோடு பழகி விடும். என்னைக்கேட்டால், திருமணத்திற்கு பிறகு(ம்) காதல் வாழ்கிறதா, போதும் என்பேன்...


From: தேமொழி <them...@yahoo.com>
To: mint...@googlegroups.com
Sent: Wednesday, 13 February 2013 6:22 AM
Subject: Re: [MinTamil] Re: காதல் / கலப்புத் திருமணம்

Geetha Sambasivam

unread,
Feb 13, 2013, 4:06:15 AM2/13/13
to mint...@googlegroups.com
பதில் கொடுத்தேன் போகவில்லை.  இதெல்லாம் நாம் விவாதித்துத் தீர்மானிக்கும் விஷயம் இல்லை.  அந்த அந்த நேரம், சூழ்நிலை, திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண், பிள்ளை ஆகியவர்களின் மன உறுதி ஆகியவற்றைப் பொறுத்ததே. மன உறுதியுடன் இருந்தால் திருமணம் நீடிக்கும்.  சில காதல் கல்யாணங்கள் தோல்வியில் முடிந்திருக்கிறதையும் பார்த்திருக்கிறேன்.  கலப்பு மணம் செய்துவிட்டுப் பின்னர் வருந்தியவர்களையும் பார்த்திருக்கிறேன்.  சந்தோஷமாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.  இது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை முறையைப் பொறுத்தே வெற்றி, தோல்வி அமையும்.

2013/2/13 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>
இதெல்லாம் இன்னும் ஒரு பிரச்சனையாக இருக்கிறதா என்ன!! எங்கள் குடும்பத்திலேயே பிற நாட்டு மனிதர்களை மணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள்!! ஓரளவுக்கு அடிப்படை பழக்க வழக்கங்கள் ஒத்துப்போனால் போதும் - மற்றவை எல்லாம் காலத்தோடு பழகி விடும். என்னைக்கேட்டால், திருமணத்திற்கு பிறகு(ம்) காதல் வாழ்கிறதா, போதும் என்பேன்...


360.gif

Geetha Sambasivam

unread,
Feb 13, 2013, 4:10:57 AM2/13/13
to mint...@googlegroups.com
உண்மைதான், இருவரின் காதலால் இரு குடும்பங்கள் பாதிப்படைகின்றன என்பது சரியே.  அவர்கள் இன்னும் சில காலம் பொறுத்திருந்திருக்கலாம்.  காலம் சென்றாலே அவர்கள் காதலில் உள்ள உண்மைத்தன்மையும், உறுதியும் அவர்களுக்கே தெரிய வரும். இந்தக் காலத்தில் திரைப்படங்களைப் பார்த்துவிட்டே பெரும்பாலான இளைஞர்கள் முடிவெடுக்கின்றனர். :(

2013/2/13 L.Karthik <karth...@gmail.com>
எல்லாம் சரி. காதல் திருமணத்தால் பாதிக்கப்படுவோரின் நிலை ????


http://bhageerathi.in/index.php/2012-12-11-14-36-57/12-2012-12-11-14-34-03/12-love



என்றும் அன்புடன்
எல்கே

Geetha Sambasivam

unread,
Feb 13, 2013, 4:14:36 AM2/13/13
to mint...@googlegroups.com
ஹிஹிஹி, எல்லாம் சரிதான்.  ஆனால் ருக்மிணி ஒரே பெண்.  அதிலும் இளவரசி.  அவளுக்கு ஒரு தங்கை இல்லையே!  அதானே எல்கே சொல்றார்! அதோடு இந்தத் திருமணத்தால் தானே அரசியல் ரீதியாக சிசுபாலனோடு பகைமையும், ருக்மியோடு போரும் அதனால் ஏற்பட்ட பகையும் இருக்கே!.  அப்போ பாதிப்பு இருக்கு தானே!  ஹிஹி, விடமாட்டோமுல்ல!

2013/2/13 செல்வன் <hol...@gmail.com>
ருக்மிணியை தாய்,தந்தையர் சம்மதம் இன்றி தேரில் ஏற்றி கடத்தி வந்து களவுமணம் புரிந்த கண்ணபரமாத்மாவை தொழும் இந்துக்கள் யாரும் காதலர்களை பிரிப்பதில் எந்த பொருளும் இல்லை. இந்தியாவின் முதல் பதிவு செய்யப்பட்ட காதல் கடிதத்தை எழுதியது  அன்னை ருக்மிணி

அன்னை எழுதிய காதல் கடிதத்தை பதிகிறேன். 

‘புவன சுந்தரனே  உன் மீது காதல் கொண்டு விட்டேன். உன் மேலான குணங்களையும் வசீகரத் தோற்றத்தையும் காது வழி கேட்டே காதலிக்கத் தொடங்கிவிட்டேன். செவி வழியே வந்து இதயத்தில் இறங்கிவிட்டாய். உன் மதிவதனத்தைப் பார்த்தாலே கண்கள் மோட்சம் பெறுமாமே... லஜ்ஷையை விட்டுக்கூறுகிறேன் கண்ணா, உன்னையே கணவனாக அடைய விரும்புகிறேன்.

ஒரு பெண் தனக்கு கணவனாகப் போகும் ஆணிடம் ஏழு குணங்களை எதிர்பார்ப்பாள்... முகுந்தா! குலம், குணம், ஞானம், இளமை, செல்வாக்கு, தனம், வசீகரம்... போன்றவையே அவை.ஆண் சிங்கமே! இவை யாவற்றிலுமே உனக்கு சமதையாக வேறு யாருமிலர்.அறிவுடைய, திருமண வயதுக்குரிய, கௌரவ குலத்தைச் சேர்ந்த எந்தப் பெண்ணுமே உன்னையே மணமுடிக்க விரும்புவாள்.ஆதலால் கமலக்கண்ணா... உன்னிடம் சரணடைந்தேன்.ஓடோடி வந்து என் கைத்தலம் பற்றவும்.

உனக்காக நூறு ஷன்மம் வரை காத்திருப்பேன். உண்ணா நோன்பிருப்பேன். என்றேனும் ஒரு நாள் உன் பாதக் கமலம் எனக்குக் கிட்டும்தானே?’’



--
செல்வன்
www.holyox.blogspot.com

360.gif

Geetha Sambasivam

unread,
Feb 13, 2013, 4:15:54 AM2/13/13
to mint...@googlegroups.com
ஸ்வர்ணா சொல்றாப்போல் திருமணத்திற்குப் பின்னரும் காதல் நிலைத்திருக்க வேண்டும்.  வெறும் ரொமான்ஸ் காதல் இல்லை என்ற புரிதலும் வேண்டும்.

2013/2/13 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

பழமைபேசி

unread,
Feb 13, 2013, 8:26:27 AM2/13/13
to மின்தமிழ்
Why are we making an assumption? Do we know for the fact that he/she
is telling so?? As any other couple, they respect each other and go
on. It is just that we are concerned.

On Feb 12, 11:10 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2013/2/12 பழமைபேசி <pazamaip...@gmail.com>
>

செல்வன்

unread,
Feb 13, 2013, 9:20:35 AM2/13/13
to mint...@googlegroups.com

2013/2/13 Geetha Sambasivam <geetha...@gmail.com>

ஹிஹிஹி, எல்லாம் சரிதான்.  ஆனால் ருக்மிணி ஒரே பெண்.  அதிலும் இளவரசி.  அவளுக்கு ஒரு தங்கை இல்லையே!  அதானே எல்கே சொல்றார்! அதோடு இந்தத் திருமணத்தால் தானே அரசியல் ரீதியாக சிசுபாலனோடு பகைமையும், ருக்மியோடு போரும் அதனால் ஏற்பட்ட பகையும் இருக்கே!.  அப்போ பாதிப்பு இருக்கு தானே!  ஹிஹி, விடமாட்டோமுல்ல!


அப்ப ருக்மிணிக்கு தங்கை இருந்திருந்தால் கிருஷ்ணர் அவரை மணந்துகொன்டிருக்க மாட்டாரா?

தங்கையை காட்டி அக்காவை பிளாக்மெயில் செய்வது, சன்டை வரும் என மிரட்டுவது இதெல்லாம் பெற்றோர் குற்றம். காதலர் குற்றம் அல்ல. 

--
செல்வன்
www.holyox.blogspot.com

360.gif

Geetha Sambasivam

unread,
Feb 15, 2013, 3:18:59 AM2/15/13
to mint...@googlegroups.com
அப்படி யாரு சொன்னாங்க?  காதல் திருமணத்தினால் இரு குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது என்பதற்கு உதாரணத்தைச் சுட்டினேன்.  ருக்மிணிக்குத் தங்கை இல்லை என்றது சும்மா ஜோக்குக்கு! பொதுவாகக் காதல் கல்யாணங்களால் இரு குடும்ப உறவுகள் பாதிக்கப்படுவது உண்மையே.  அது சரியாகப் பல ஆண்டுகள் பிடிக்கின்றன.  பெற்றோர் சம்மதத்தின் நடக்கும் கல்யாணங்களைத் தவிர! 

2013/2/13 செல்வன் <hol...@gmail.com>
அப்ப ருக்மிணிக்கு தங்கை இருந்திருந்தால் கிருஷ்ணர் அவரை மணந்துகொன்டிருக்க மாட்டாரா?

தங்கையை காட்டி அக்காவை பிளாக்மெயில் செய்வது, சன்டை வரும் என மிரட்டுவது இதெல்லாம் பெற்றோர் குற்றம். காதலர் குற்றம் அல்ல. 

--
செல்வன்
www.holyox.blogspot.com


செல்வன்

unread,
Feb 15, 2013, 3:30:14 AM2/15/13
to mint...@googlegroups.com

2013/2/15 Geetha Sambasivam <geetha...@gmail.com>

பொதுவாகக் காதல் கல்யாணங்களால் இரு குடும்ப உறவுகள் பாதிக்கப்படுவது உண்மையே.  அது சரியாகப் பல ஆண்டுகள் பிடிக்கின்றன.  பெற்றோர் சம்மதத்தின் நடக்கும் கல்யாணங்களைத் தவிர! 


இந்த குடும்பங்கள் பிள்ளைகள் விருப்பத்தை மதித்தால் சண்டை வராது. ஒற்றுமையாக இருக்கலாம். திருந்த வேண்டியது குடும்பங்கள் தான். அவர்களை திருத்த இந்த வாலன்டைன்ஸ் நாளன்று ருக்மிணி தேவியை வேண்டிக்கொள்வோம்.


--
செல்வன்
www.holyox.blogspot.com

Nagarajan Vadivel

unread,
Feb 15, 2013, 4:17:02 AM2/15/13
to மின்தமிழ்
இந்தியத் திருமணம் பற்றிய ஒரு தகவல் இணைப்பில்
நாகராசன்


2013/2/15 செல்வன் <hol...@gmail.com>
--
--
Indian Wedding Traditions.pdf

nswami...@socal.rr.com

unread,
Feb 15, 2013, 10:44:05 AM2/15/13
to mint...@googlegroups.com, செல்வன்
இந்த இழையை ஆர்வத்துடன் படித்து வருகிறேன். பல குழுமங்களில்
இது முன்பே பேசப்பட்டு விட்டாலும் வசைமொழிகள் தவிர ஒரு முடிவு இல்லை. சாதியை யார் பார்க்கிறார்கள், சாதிகள் ஒழிய வேண்டும் என்பது உதட்டளவு வாதம். politically correct thing to say.....

இதைக் கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமல் படித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

சாதி என்பது என்ன? சமூகத்தில் ஒரு குழுவின் மொழி,பேச்சு, ஆச்சார அனுஷ்டானங்கள், தெய்வ நம்பிக்கை, உணவு, கலை உணர்வுகள் எல்லாவற்றின்
கலவையே சாதி. தங்கள் பெண்ணோ, பிள்ளையோ தங்கள் சாதியில் கல்யாணம்
செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறல்ல. அவர்களுக்கு ஒரு
பழகிய கலாச்சார சூழ்நிலை இருக்க வேண்டும் என்று பெற்றோர் நினைப்பதில் தவறில்லை. “மார்கழி நோன்பு, ரமதான் நோன்பு, Lent நோன்பு ... என ஒவ்வொரு வகை நோன்பின் பின்னணியும் கடைப்பிடிக்கும் முறையும் பொருள் பொதிந்தவை”
என்றார் ஒரு பேராசிரியை (:-). சில கிராமங்களில் சாதி சரியாக இருந்தும் தண்ணியில்லாத ஊர் என்றால் பெண் குடுக்கத் தயங்குவார்கள். தங்கள் பெண் அங்கே போய் தண்ணிக்குடம் தூக்கியே சோர்வாள் என்ற அச்சமே காரணம்.

காதல்/ கலப்பு திருமணத்தால் சாதிகள் ஒழியும் என்பது தவறு.
விருப்பம், வசதிக் கேற்றவாறு இரண்டில் ஒரு சாதி அடையாளத்தை
வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பள்ளியில் போன உடனேயே
சாதி என்ன என்று சொல்ல வேண்டும். சாதிச் சான்றிதழ் காட்ட வேண்டும். மனித சாதி, இட்டோர், இடாதோர் என்றெல்லாம் பேத்தினால் எடுபடாது.

சாதி அடையாளத்தை மறைக்க சாதிப்பெயரைப் போடாமல், நெடுஞ்சேரலாதன்,
கரிகாலன் என்றெல்லாம் போட்டுக் கொண்டாலும் திருமணம் என்று வரும்போது
“நாங்க இந்த சாதியை சேர்ந்தவய்ங்க” என்றே சொல்லி சம்பந்தம் செய்கிறார்கள்.
சாதியைச் சொல்லாவிட்டாலும் அவர்கள் பேச்சு நடவடிக்கையில் அவர்கள் இன்னார்
அல்லது இன்னாரல்லர் என்பது தெரிந்து விடும்.

தமிழ்நாட்டில் கோலோச்சும் இரு திராவிடக் கட்சிகளும், பிராமணர் அல்லாத இரு பெரும் சாதிப்பிரிவுகளிடையே நடக்கும் போட்டியாகும். முன்னேற்றமடைந்து விட்ட
சாதியினர் (எ-டு முதலியார்; செட்டியார்;நாயுடு; பிள்ளை என்பார்) திமுகவில
அதிகமாகவும், முக்குலத்தோர், படையாச்சிகள், தேவர் சாதியினர் அதிமுகவில்
அதிகமாக இருப்பதும் கண்கூடு. வன்னியர், நாயக்கர்,தலித், இஸ்லாமியர்,
கம்யூனிஸ்ட்கள் வசதிக்கேற்ப ஒரு கட்சிக்கு ஆதரவு தருகிறார்கள்.

தங்கள் சாதிச் சார்புகளை மறந்து தங்களூக்கு நன்மை செய்யும் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பக்குவம் தமிழ்நாட்டில் இல்லை. மற்ற மானிலங்களிலும் இதுதான் கதை, ஆனால் சாதிகள் பெயர் வேறாக இருக்கும்.

சாதி இல்லை என்று சொல்லிக் கொண்டாலும், தகப்பனார் சாதியே மக்களின்
சாதி என்பதே நடைமுறையில் உள்ளது. பிராமணர் ஒருவர் பிராமணரல்லாத
பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாலும், ஒதுக்கீடு சலுகை என்று வரும் போது அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் பிராமணர்களாகவே கருதப்படுகிறார்கள்.
அவர்களுக்கு ஒதுக்கீடு சலுகைகள் கிடையா.

ஒதுக்கீடையும் பொருளாதார அடிப்படையில் இருக்க விடமாட்டார்கள்.

கலப்பு திருமணங்கள் செய்தவர்க்கும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் ஒரு சமூக அங்கீகாரம் கிடைப்பதில்லை. வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் இவர்கள் குடும்ப நிகழ்வுகளிலிருந்து ஓரம் கட்டப்படுகிறார்கள். இதைப்பற்றி விவரமாய் பின்னொரு சமயம் சொல்வேன்.

கலப்புத் திருமணம் செய்வதிலும் சாதி ஏணியில் தங்களைவிட மேல்படியில்
இருப்பவர்களையே மணக்க விரும்புகிறார்கள். இதனால் தங்களுக்கு ஒரு social upgrading வருகிறது என்று நினைக்கிறார்கள். தங்கள் சாதிக்கும் கீழான சாதியினரை
திருமணம் செய்வதில் தயக்கம் காட்டுகிறார்கள்.

திருமண விளம்பரங்களை உற்றுப் பார்த்தால் சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பது
புலப்படும். இந்த சாதியில் உட்பிரிவுகள் சம்மதம் என்று கொஞ்சம் கீழிறங்கி
வருகிறார்கள். சாதி பற்றிக் கவலையில்லை என்போர் பத்து விழுக்காடுக்கும் கீழே.
தமிழ் மாட்ரிமொனி தளத்தில் போய் பாருங்கள், எத்தனை சாதிப்பிரிவுகள் உள்ளன என்று.

சாதி நம்மை இரு வழிகளில் தாக்குகிறது. (1) கல்வியில் ஒதுக்கீடு மறுப்பு (2) மனஅழுத்தம்

கல்வியில் ஒதுக்கீடு, வேலையில் முன்னுரிமை முதலிய பலன்களைப் பெற தங்கள் சாதியைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

நாங்கள் உயர்ந்தோர், நீங்கள் தாழ்ந்தோர் என்று யாரும் சொல்லாவிட்டாலும்,
தான் இருக்கும் சாதி தாழ்ந்தது, என்ற தாழ்வு மனப்பான்மையால் மன அழுத்தத்தால் இந்த அடையாளத்தை அழிக்க கலப்புத் திருமணம் வேண்டும் என்போர் சிலர்.

நாலே வருணமாயிருந்த சாதிகள் இன்றைக்கு முன்னூத்தி சொச்சமானது
எதனால்? சலுகையில் ருசி கண்டவன் அதை விடுவானா? அடியார்தம்
அடியார்க்கும் அடியேன் என்று புது சாதியில் புகுந்து கொள்கிறார்கள்.
மதம் மாறினாலும் மறக்காமல் தங்கள் பழைய சாதி அடையாளத்தை விடுவதில்லை. (நாயுடு கிறித்தவர், தலித் கிறித்தவர்; பின்னவர் முன்னவர் சர்ச்சுக்கு போக முடியாது).

அரசியலுக்கு சாதி மிக அவசியம். நான் ஊழலின்றி நல்லாட்சி தருவேன் என்று சொல்லி ஓட்டு வாங்குவதிலும், நாம் வன்னியர்கள், நாய்க்கர்கள், இனமானம் காப்போர், தாழ்த்தப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள், தடுக்கப்பட்டவர்கள், தடுக்கி விழுந்தவர்கள், மறுக்கப்பட்டவர்கள் என்று வசனம் பேசி கூட்டம் சேர்ப்பது சுலபம். இந்த லிஸ்டில் வாராதவரை, “நாங்கள் உங்க வீட்டுப்
பிள்ளைகள் அல்லவா?” என்று கெஞ்சுவதும் உண்டு.

ஆகவே கலப்பு திருமணம் செய்வோர், தங்கள் மகிழ்ச்சிக்காக செய்து
கொள்ளலாமே தவிர, சமூகப் புரட்சி எதுவும் செய்து விட முடியாது.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

Innamburan Innamburan

unread,
Feb 15, 2013, 10:55:13 AM2/15/13
to mint...@googlegroups.com
ஒரு உடனடி பதில்.

'...கலப்பு திருமணம் செய்வோர், தங்கள் மகிழ்ச்சிக்காக செய்து
கொள்ளலாமே தவிர, சமூகப் புரட்சி எதுவும் செய்து விட முடியாது.'
~ அது போதும். சமூகப்புரட்சி செய்தாலும் பயனில்லை. ஆனால் காதல் கலப்புமணங்மள் காலாகாலத்தில் சமூக முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். அது போதும்.
பிற பின்னர்.
இன்னம்பூரான்

செல்வன்

unread,
Feb 15, 2013, 1:30:18 PM2/15/13
to nswami...@socal.rr.com, mint...@googlegroups.com


ஆகவே கலப்பு திருமணம் செய்வோர், தங்கள் மகிழ்ச்சிக்காக செய்து
கொள்ளலாமே தவிர, சமூகப் புரட்சி எதுவும் செய்து விட முடியாது.


அப்படி புரட்சி செய்யும் நோக்கில் நூற்றுக்கு 99.99% பேர் காதலிப்பது இல்லை. இயல்பாக தம் கூட படிப்பவர்கள், கூட வேலை செய்பவர்கள், எதிர்வீட்டு பெண்/ஆண் என காதலிக்கிறார்கள். இட ஒதுகீடு, சமூக புரட்சி, அதிமுக, திமுக எல்லாம் அவர்களில் பெரும்பகுதியினருக்கு அந்த சூழலில் தெரியுமா என்பது சந்தேகம்தான். ஜாதி பார்த்து கூட காதலிப்பது இல்லை. அழகாக இருந்தால் காதலிக்கிறார்கள். 

காதலிப்பவர்கள் வாழ்க்கையை சமூகமாக சேர்ந்தால் நம்மால் நரகமாக்க முடியும் என்பதை நான் மனபூர்வமாக ஒத்துகொள்கிறேன். முந்தி அப்படிதான் விதவைகள் வாழ்க்கையை அழித்தோம். வாழாவெட்டிகள் வாழ்க்கையை அழித்தோம். தங்க வீடு கொடுக்க மாட்டேன், வேலை கொடுக்க மாட்டேன், சமூக விலக்கம் செய்வேன் என்கிற மாதிரி மிரட்டி காதலிப்பவர்களை கடும் துன்பத்தில் ஆழ்த்தும் சக்தி சமூகத்திடம் உள்ளது. அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் அவர்களை சமமான மனிதர்களாக நடத்தி நாமும் மனித நிலைக்கு உயரும் சக்தியும் நம்மிடம் உள்ளது.

choice is ours

--
செல்வன்
www.holyox.blogspot.com

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்



பழமைபேசி

unread,
Feb 15, 2013, 1:45:32 PM2/15/13
to மின்தமிழ்
//.கலப்பு திருமணம் செய்வோர், தங்கள் மகிழ்ச்சிக்காக செய்து
கொள்ளலாமே தவிர, சமூகப் புரட்சி எதுவும் செய்து விட முடியாது.//

தங்கள் மகிழ்ச்சிக்காக செய்வோரைக் கட்டுப்படுத்தாமல்/வேறு சாதியெனக்
கண்டிக்காமல் உரிய உதவிகள் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மேம்பாடு
வருமல்லவா??

Innamburan Innamburan

unread,
Feb 15, 2013, 1:54:15 PM2/15/13
to mint...@googlegroups.com
Yes. the Choice is ours. எனக்கு முக்கியமாகப் படுவதை சொல்கிறேன். காதலனாலும் சரி, பக்தியானாலும் சரி, நாட்டுப்பற்றானாலும் சரி. சம்பந்தம் இல்லாத அரசியல்/சமுதாய கோணங்களை முன்னிறுத்தினால், இதுவும் பாழ். அதுவும் பாழ். 
இன்னம்பூரான்

2013/2/15 செல்வன் <hol...@gmail.com>

பழமைபேசி

unread,
Feb 15, 2013, 2:37:28 PM2/15/13
to மின்தமிழ்
//காதலனாலும் சரி,//

ஆண்கள் மட்டும்தான் பாழ்படுவதற்குக் காரணமா? :-))

On Feb 15, 12:54 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:


> Yes. the Choice is ours. எனக்கு முக்கியமாகப் படுவதை சொல்கிறேன். காதலனாலும்
> சரி, பக்தியானாலும் சரி, நாட்டுப்பற்றானாலும் சரி. சம்பந்தம் இல்லாத
> அரசியல்/சமுதாய கோணங்களை முன்னிறுத்தினால், இதுவும் பாழ். அதுவும் பாழ்.
> இன்னம்பூரான்
>

> 2013/2/15 செல்வன் <holy...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > 2013/2/15 <nswaminat...@socal.rr.com>


>
> > ஆகவே கலப்பு திருமணம் செய்வோர், தங்கள் மகிழ்ச்சிக்காக செய்து
> >> கொள்ளலாமே தவிர, சமூகப் புரட்சி எதுவும் செய்து விட முடியாது.
>
> > அப்படி புரட்சி செய்யும் நோக்கில் நூற்றுக்கு 99.99% பேர் காதலிப்பது இல்லை.
> > இயல்பாக தம் கூட படிப்பவர்கள், கூட வேலை செய்பவர்கள், எதிர்வீட்டு பெண்/ஆண் என
> > காதலிக்கிறார்கள். இட ஒதுகீடு, சமூக புரட்சி, அதிமுக, திமுக எல்லாம் அவர்களில்
> > பெரும்பகுதியினருக்கு அந்த சூழலில் தெரியுமா என்பது சந்தேகம்தான். ஜாதி
> > பார்த்து கூட காதலிப்பது இல்லை. அழகாக இருந்தால் காதலிக்கிறார்கள்.
>
> > காதலிப்பவர்கள் வாழ்க்கையை சமூகமாக சேர்ந்தால் நம்மால் நரகமாக்க முடியும்
> > என்பதை நான் மனபூர்வமாக ஒத்துகொள்கிறேன். முந்தி அப்படிதான் விதவைகள்
> > வாழ்க்கையை அழித்தோம். வாழாவெட்டிகள் வாழ்க்கையை அழித்தோம். தங்க வீடு கொடுக்க
> > மாட்டேன், வேலை கொடுக்க மாட்டேன், சமூக விலக்கம் செய்வேன் என்கிற மாதிரி
> > மிரட்டி காதலிப்பவர்களை கடும் துன்பத்தில் ஆழ்த்தும் சக்தி சமூகத்திடம்
> > உள்ளது. அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் அவர்களை சமமான மனிதர்களாக நடத்தி நாமும்
> > மனித நிலைக்கு உயரும் சக்தியும் நம்மிடம் உள்ளது.
>
> > choice is ours
>
> > --
> > செல்வன்
> >www.holyox.blogspot.com
>
> > பொறந்த ஊருக்கு புகழை தேடு
> > வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
> > நாலு பேருக்கு நன்மை செய்தால்
> > கொண்டாடுவார் பண்பாடுவார்
>

> >  --
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Innamburan Innamburan

unread,
Feb 15, 2013, 5:14:29 PM2/15/13
to mint...@googlegroups.com


2013/2/15 பழமைபேசி <pazam...@gmail.com>

//காதலனாலும் சரி,//

ஆண்கள் மட்டும்தான் பாழ்படுவதற்குக் காரணமா? :-))
~ நான் அப்படிச்சொல்லவில்லையே. 
இ 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

பழமைபேசி

unread,
Feb 15, 2013, 5:30:46 PM2/15/13
to மின்தமிழ்
சும்மாங்க ஐயா. நீங்க அப்படிச் சொல்லலைதான்... ஆனா எழுத்து அப்படித்தான்
இருக்கு. ஒரு கால் ஒடைஞ்சிருக்கு. :-)

On Feb 15, 4:14 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
> 2013/2/15 பழமைபேசி <pazamaip...@gmail.com>

> > > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,

Innamburan Innamburan

unread,
Feb 16, 2013, 12:08:23 AM2/16/13
to mint...@googlegroups.com
காதலனாலும்
~காதல் ஆனாலும்
~~ காதலன் ஆனாலும்


2013/2/15 பழமைபேசி <pazam...@gmail.com>
சும்மாங்க ஐயா. நீங்க அப்படிச் சொல்லலைதான்... ஆனா எழுத்து அப்படித்தான்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Geetha Sambasivam

unread,
Feb 16, 2013, 1:10:41 AM2/16/13
to mint...@googlegroups.com
நாலே வருணமாயிருந்த சாதிகள் இன்றைக்கு முன்னூத்தி சொச்சமானது//

வர்ணத்துக்கும் ஜாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஐயா.  வர்ணாசிரமம் வேறு.  ஜாதி வேறு. 


//ஆகவே கலப்பு திருமணம் செய்வோர், தங்கள் மகிழ்ச்சிக்காக செய்து
கொள்ளலாமே தவிர, சமூகப் புரட்சி எதுவும் செய்து விட முடியாது.//

இது முற்றிலும் சரியே.  அவரவர் சொந்த விருப்பத்தின் பேரிலேயே கலப்பு மணங்கள் நடக்கின்றனவே தவிர, சமூகப் புரட்சிக்காக இல்லை என்பது உறுதியாகச் சொல்லலாம்.



நாலே வருணமாயிருந்த சாதிகள் இன்றைக்கு முன்னூத்தி சொச்சமானது
எதனால்? சலுகையில் ருசி கண்டவன் அதை விடுவானா? அடியார்தம்
அடியார்க்கும் அடியேன் என்று புது சாதியில் புகுந்து கொள்கிறார்கள்.
மதம் மாறினாலும் மறக்காமல் தங்கள் பழைய சாதி   அடையாளத்தை விடுவதில்லை. (நாயுடு கிறித்தவர், தலித் கிறித்தவர்; பின்னவர் முன்னவர் சர்ச்சுக்கு போக முடியாது).



ஆகவே கலப்பு திருமணம் செய்வோர், தங்கள் மகிழ்ச்சிக்காக செய்து
கொள்ளலாமே தவிர, சமூகப் புரட்சி எதுவும் செய்து விட முடியாது.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

தேமொழி

unread,
Feb 16, 2013, 6:41:35 PM2/16/13
to mint...@googlegroups.com


வல்லமையில் நல்லையா தயாபரன் அவர்கள் எழுதிய கருத்துரை 
http://www.vallamai.com/literature/poems/32094/#comment-6112
சிந்திக்க வைக்கும்படி இருக்கிறது, இவ்விழையின் விவாதக் கருத்துக்களுடன் ஒத்து வருவதால் இங்கே குறிப்பிடுகிறேன்.
நன்றி.
..... தேமொழி 

தேமொழி

unread,
Feb 17, 2013, 12:45:40 PM2/17/13
to mint...@googlegroups.com


நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தீர்வை நீங்கள் ஆராய்ந்து சொன்னது நன்றாக இருக்கிறது.
பம்பாய் படத்தில் முடிவுக் காட்சி தொண்டை அடைக்க, கண்கள் கலங்க பார்ப்பது போல இருக்கும்.
அனால் wishful thinking  என்று படம் முடிந்த பிறகு பெருமூச்சும் வரும்.

///  ஜாதிக்கு எதிரான அரசியல் மன நிலை தான் ஜாதியை ஒழிக்கும். ஒரு வேளை ஜாதிக்கட்சிகளை சீண்ட ஆளில்லாமல் போய்விட்டால், எந்தத்தொகுதியிலும் ஜாதியை பார்க்காமல் கலப்பு மனம் செய்தவர்களைத்தான் நிறுத்துவேன் என திமுகவும் அதிமுகவும் அறிக்கை வெளியிட்டால், ஒரே கணம் கனாக்கண்டு பாருங்கள். ஜாதியை விட்டுவிட்டு இவர்கள் எல்லாரும் ஓடி வந்துவிட மாட்டார்கள்? ஆம், சாதிக்கு எதிரான அரசியலே அதை ஒழிக்க வல்லது.///

இது நல்ல கேள்வி , அரசியல்வாதிகள் எதுவும் செய்வார்கள்.

///தனி நபராக, அரசியல் கலப்பில்லாதவராக உங்கள் கடமை என்ன? மன்சாட்சி சொல்வதை கேளுங்கள். ஜாதீயம் பேசிக்கொண்டு உங்களோடு எவனவாது திரிந்தால், கத்தரித்து விடுங்கள். உங்கள் குழந்தைகளை ஜாதியத்தின் மலம் தோய்ந்த கரங்கள் தீண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவசியமில்லை என்று பட்ட அடுத்த நொடி, உங்கள் ஜாதி அடையாளத்தை துறந்து விடுங்கள். நட்புகளை உறவுகள் ஆக்கிக்கொள்ளுங்கள். மனிதராய் வாழுங்கள்.///

மிக நல்ல அறிவுரை மனிதராக வாழ விரும்புபவர்களுக்கு.
நன்றி கூத்தாடி அவர்களே.

..... தேமொழி





On Sunday, February 17, 2013 2:39:00 AM UTC-8, கூத்தாடி wrote:
நல்லையா தயாபரனின் கருத்து மிகச்சரி. காதலை எந்த ஒரு முன்னேறிய சமூகமும் சாதரணமாக அணுகும்.

//ஆகவே கலப்பு திருமணம் செய்வோர், தங்கள் மகிழ்ச்சிக்காக செய்து
 கொள்ளலாமே தவிர, சமூகப் புரட்சி எதுவும் செய்து விட முடியாது.///

பாருங்கள். மகிழ்ச்சியாய் ஒருவன் வாழ்வதே இங்கு புரட்சி எனப்படுகிறது எனில் இச்சமூகம் எவ்வளவு சீர்குலைந்து போய் இருக்கிறது. நீங்கள் சொன்னது போல காதல் சாதியை ஒழிக்காது, சாதிக்கு எதிரான அரசியல் நிலைப்பாடே அதை ஒழிக்கும். ஆனால், தனி மனித சுதந்திரம் என வருகையில் தாய்/தந்தையரே ஆயினும் துணை தேர்ந்தெடுக்கும் விசயத்தில் ஆண்./பெண்ணின் விருப்பமே முக்கியம்.

அவர்களுக்கு தேர்ந்தெடுக்க தெரியாது/தவறாக தேர்ந்தெடுபபார்கள் என்று நீங்கள் சொன்னால் "அதை கற்றுக்கொடுப்பது தானே உங்கள் கடமை. படிக்க, வாழ, பல் துலக்க, அதை இதை செய்ய, கற்றுக்கொடுப்பது போல காதலிக்க கற்றுக்கொடுங்கள்"

இது சம்மந்தமான என் பழைய கட்டுரை - http://www.koothaadi.in/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88
Reply all
Reply to author
Forward
0 new messages