இவ்விழையை ஆங்கிலத்தில் தொடங்கவே முதலில் ஆசைப்பட்டேன், ஆயினும்
இவ்விழையில் பேசப்போகும் விஷயங்கள் தவறான புரிதலுடைய சில தமிழக
போக்குகளுக்கு விடையாக அமையும் என்பதால் தமிழில் எழுதத்துணிந்தேன்.
இவ்விழையில் சில துல்லிய புரிதலுக்கு அவ்வப்போது ஆங்கிலமும்
பயன்படுத்தப்படும்.
இவ்விழையின் பிரதான தரவுகள் பேராசிரியர் பிரியதர்ஷன் (Dr. Premendra
Priyadarshi) அவர்கள் ஆற்றிய உரையை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன.
நானறிந்தவரையில் மனிதத்தோற்றம் இந்தியாவில் அமைந்திருக்கும் வாய்ப்பு
குறித்த ஒரு தெளிவான உரையை நான் இதற்கு முன் கேட்டதில்லை. ஆய்வு பூர்வமான
உரையிது. அறிவியற் சங்கங்கள் அலசி வெளியிட்ட (peer reviewed) அறிக்கைகளை
ஆதாரமாகக் கொண்டு அவர் தன் கருத்தை முன்மொழிகிறார். எனவே கொஞ்சம்
காலமெடுத்து (60 நிமிடங்களுக்கு மேல்) இந்த ஆங்கில உரையை தாங்கள் கேட்க
வேண்டுமென வேண்டுகிறேன். இது முழுக்க, முழுக்க அறிவியல் உரை. எனவெ துறை
அறிவு இல்லாதோருக்கு இதைப்புரிந்து கொள்ள சிரமமிருக்கலாம். முடிந்தவரை
இங்கு விளங்கிக்கொள்ள முயலலாம். அறிவியல், குதிரையின் பாய்ச்சலில்
போய்க்கொண்டு இருக்கிறது. கால்நடையாக வருவோர்க்கு புரிதலில்
சிரமமிருக்கும்.
http://www.youtube.com/watch?v=1l7VsR-dW-c&feature=plcp
இந்த உரை தொடர்பான என் கருத்துக்களை முன் வைக்கிறேன் அடுத்த இடுகையில்.
நா.கண்ணன்
பிகு: பேராசிரியர் பிரியதர்ஷன் அவர்களின் உரைத்தொடுப்பு கொடுத்த
மின்தமிழ் அறிஞர் திரு.தேவராஜன் அவர்களுக்கு நன்றி.
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
Dr Premendra Priyadarshi, MBBS, MD, FRCP, a Fellow of the Royal College of Physicians of Edinburgh, and member of a large number of professional bodies like Indian Medical Association, Association of Physicians of India etc. He also cleared the Civil Services Examination of 1986 and served the Pondicherry Police Service for a short while. Besides science, he has thoroughly pursued history, philosophy, religions, anthropology, political science and linguistics as his personal interest. He has written many books on Indology viz. India's Contributions to the West(2004), Zero is Not the Only Story (2007), The First Civilization of the World (2011) and Vishva Sabhyata ka Udbhava aur Prasar (2012). Focus of Dr. Priyadarshi's research is on correcting the distortions in Indian historiography. |
வேத காலத்திலிருந்து இன்றுவரை நமது நினைவுகள் அறுபடாமல் உள்ளதை பாரதியின்
அழகிய கவிதை சுட்டும்:
தொன்று நிகழ்ந்த தனைத்து முனைந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள்
என்றுணராத இயல்பினளா மெங்கள் தாய்
எப்படி இவரால் இப்படி ஆணித்தரமாகச் சொல்லமுடிகிறது என்றால் அது நமது
ஆழ்மன குமுகாய நினைவின் பலத்தால் என்று உறுதியாகச் சொல்லலாம். எமது
தோற்றம் என்று நிகழ்ந்தது என்பதறியமுடியாததாய் இருக்கிறது என்று சொல்வது
நேற்றுப்பிறந்த சமுதாயங்களால் முடியுமோ? இதுவெறும் புகழுரை அல்ல என்று
எப்படித் தீர்மானிக்கலாமென்றால், பாரதி வெற்றுப் பழம் பெருமை பேசுவதை
எள்ளுபவன்.
மறைவாக நமக்குள்ளே பழம்கதைகள்
சொல்வதில் ஓர் மகிமை இல்லை
திறமான புலமை எனில் வெளிநாட்டோர்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்.
என்று செப்புகிறான். ஆயின் நாம் இதுவரை செய்யாத ஒன்று நம் புலமைத்திறத்தை
உலகம் மெச்சும்பட்டி சொல்லவில்லை (அல்லது தெரியவில்லை). எப்போதும்
மறைவாகப் பழம்பெருமை பேசித்திரிந்தோம். நம் மரபை, பழமையை போற்றினோமில்லை,
புரிந்து கொண்டோமில்லை. நமக்குள்ளே பகை வளர்த்து ஆடிக்குடைத்தை உடைத்தவன்
கதையாக நம் வாழ்வை வைத்திருந்தோம். நாம் பல்லக்குத்தூக்கிகளாய்
அடிமைப்பட்டுப் போனதால்...
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமம் அது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
எனக்கேலி செய்யும் அளவிற்கு ஆகிப்போனோம். ஆனால் இறையருளால் அவ்விருள்
மெல்லப்போய் வருகிறது.
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்து இருக்கும் குருடர் எல்லாம்
விழி பெற்றுப் பதவி கொள்வார்,
உள்ளத்தில் கொஞ்சம் ஒளி வந்திருக்கிறது. அறிவியல் கைவசப்பட்டிருக்கிறது.
அதைச்செப்பும் திறனும் வளர்ந்து வருகிறது.
மக்கள் கணக்கும் வழங்கும் மொழியும்
மிக்குள பண்பையும் விளக்குகின்ற
கற்பனைத் திறத்தைக் காணுவீர்
என்று நம் பண்பாடு குறித்த பிரக்ஞை வளர்ந்து வருகிறது. எதற்காக
விண்ணையளக்கும் அலகுகளும், கடுகைத்துளைதேழ் கடலைப் புகுத்தும் நுண்கணித
அறிவும் (அலகும்) நம்மிடம் இருக்கின்றன என்ற கேள்வி வந்திருக்கிறது. ஒரு
மாபல்லியின் கற்பதிவு (fossil) சிறிதான வால்நுணி பார்த்து
கண்டுபிடிக்கப்படுவதைப் போல், இக்கேள்விகள் நம்மை இந்தியச் சிந்தனை மரபை,
நம் பண்டைய அறிவியலை அறியத்தூண்டுகின்றன.
இந்தப் பின்புலத்தில்தான் நாம் டாக்டர் பிரியதர்ஷியின் உரையைக் கேட்டு
விழிப்புற வேண்டும். அவரது உரையில் ஓரிடத்திலும் மிகை இல்லை.
தவறைத்திருத்தும் போதும் கனிவாகவே பேசுகிறார். ஆனால், தனது கருத்தை ஆழமான
தரவுகள் மூலமே நிருவுகிறார்.
சரி, இனி மேலே செல்வோம். அவரது உரையின் highlights என்னவென்று பார்ப்போம்
நா.கண்ணன்
தரக்கட்டுப்பாடு, கணித வரைமுறைகளுக்கு ஆட்படுத்தப்படும் தரவு
(statistics), மீட்டெடுத்தல் (reproducibility), எங்கும் எவரும் நம்
கணிப்பை சரி பார்க்கும் தரம் இவையே ஒருவரது அறிவியலை ஊர்ஜிதம் செய்கிறது.
இவையில்லாமல் பேசப்படும் அனைத்தும் வெறும் ஊகங்கள்தான். அறிவியலுக்குள்
வாராது. இப்படி நாம் அறிவியல் தரவுகள் சேகரித்து, அதை வைத்து நம்
முன்மொழிவுகளை, நமது அவதானங்களை அறிவியல் கட்டுரையாக்கி சர்வதேச அறிவியல்
பார்வைக்கு வைத்து (கருத்தரங்குகளில்), பின் உயர்தர அறிவியல் சஞ்சிகையில்
வெளியிட முனைய வேண்டும். பொதுவாக நாம் செய்யும் கணிதமோ, அறிவியலோ நம்மைப்
பொறுத்தவரை நம்பத்தக்கதாய், உண்மை என்றே தோன்றும். ஆயினும் ‘கற்றது கைமண்
அளவு’. நமது பிழைகள் நம் கண்ணிற்குத் தெரியாது. அதை மற்றவர்
கண்காணிக்கும் போதே தென்படும். இப்படியானதொரு செயல்முறைதான் peer review
என்பது. இப்படி peer review செய்யப்பட்ட அறிவியல் கட்டுரைகள் நமபகத்தன்மை
பெறுகின்றன.
அறிவியல் என்றும் முற்றும் முடிவான முடிவு என்று எதையும்
முன்வைப்பதில்லை. ‘இது சாத்தியம்’ என்றே சொல்லும். காரணம், ‘கற்றது கைமண்
அளவு’ எனும் நிலையே.
சரி, நமக்கு இப்படியானதொரு துறை சார் கட்டுப்பாட்டு நிறுவனமோ, peer
review வோ இருந்ததா என்றால். ஆம் என்பதே பதில். ஆனால் அதைக் கோட்டை
விட்டு விட்டு பழம் கதைகள் பேசிக்கொண்டிருக்கிறோம். தமிழ் எனும் போதே
நாம் சங்கம் பற்றிப் பேசுகிறோம். சங்கம் என்றால் அகாதமி என்று பொருள்.
துறை சார் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் என்று பொருள். நமது
தரக்கட்டுப்பாடு எவ்வளவு இறுக்கமாக இருந்திருக்கிறது என்றால்,
‘நெற்றிக்கண் திறப்பினும், குற்றம், குற்றமே!’ என்று சொல்லும் அளவிற்கு.
'எங்குமுளன் கண்ணன்’ என்று சொன்னால் தூணைப் பிளந்து இங்குள்ளானா? காட்டு!
எனும் அளவிற்கு. ‘ஆழ்கின்றான் ஆழியான்’ என்றால், அது உண்மையா? என்று
அனல்வாதம், புனல்வாதம் வைக்கும் அளவிற்கு (நம்மாழ்வார் சரிதம்). இப்படி
இருந்த சமூகம் இன்று தானமாகக் கொடுக்கும் சேலையில் இரண்டு முழம்
உருவக்காத்திருக்கிறது. எந்தச் செயல்பாட்டிலும் ஊழல், தரமின்மை என்று
சீரழிந்து போய் இருக்கும் போது இங்கு அறிவியலில் தரத்தை எதிர்பார்க்க
முடியுமா?
அறிவியல் எனும் செயல்பாடு சுயகட்டுப்பாடு இருந்தால் மட்டுமே நடைபெறும்.
அங்கு திறனாய்வு, கடும் விமர்சனம் என்பது நாளாந்திர நடவடிக்கை.
விஞ்ஞானிகள் எப்போதும் விழிப்பாக, கிரிட்டிக்கலாக இருக்க வேண்டும். தனது
தரவையே ஆயிரம் முறை பார்த்து, பின்னும் சந்தேகம் கொள்ள வேண்டும்.
அப்படிச் செய்தால்தான் உண்மையின் ஒளி தெரியவரும். நம் மக்களுக்கு காலில்
விழுந்து, வானளவில் புகழ்ந்து, வாயார வாழ்த்தி அடிமை செய்தால் மட்டுமே
பிடிக்கும். இதுவொரு நோய். புகழ்ந்தல் ஒருவனை எளிதில் வீழ்த்திவிடும்.
விமர்சனங்களே உயிரோடு வைத்திருக்கும்.
இதை மனதில் வைத்துக்கொண்டுதான் நாம் நமது ஆய்வு அறிவியல் பாற்பட்டதா,
இல்லை வெறும் arm chair speculation ஆ என்று தீர்மானிக்க வேண்டும்.
இன்னும் வரும்..
நா.கண்ணன்
மதிப்புக்கு உரிய பாலு ஐயா.. மேற்கத்திய கல்வியின் எச்சங்களில் ஒருவருடன் புரிதல் ஏற்பட உங்கள் பொன்னான நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். அவர்களது தேவைகளான பன்னாட்டு பட்டங்களுக்கும், டாலர்களுக்கும் அவர்கள் வேலை செய்கிறார்கள். செய்து கொண்டே இருப்பார்கள்..
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இந்த கண்ணன் ஐயா நல்லவரா, கெட்டவரா ? என்பதே பிடிபட மாட்டேங்குது:))
அவரையே கேட்டுட வேண்டியதுதான் போல :))
மதிப்புக்கு உரிய பாலு ஐயா.. மேற்கத்திய கல்வியின் எச்சங்களில் ஒருவருடன் புரிதல் ஏற்பட உங்கள் பொன்னான நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். அவர்களது தேவைகளான பன்னாட்டு பட்டங்களுக்கும், டாலர்களுக்கும் அவர்கள் வேலை செய்கிறார்கள். செய்து கொண்டே இருப்பார்கள்..
இப்பத்தான் கதையே ஆரம்பிச்சுருக்கு. அதுள்ளாற முடிவு கட்டிட்டா எப்புடி? ;-)
க.>
நா.கண்ணன்
2012/12/2 Prakash Sugumaran <praka...@gmail.com>:
கொரியாவில் இது பற்றி எனது மராட்டிய நண்பர், பொறிஞர் திரு.ஹரியுடன்
பேசிக்கொண்டிருந்த போது அவர் சிறு பிள்ளையாக இருந்த போது வீட்டின்
அருகேயுள்ள வயக்காட்டின் குடிசையில் வாழும் யோகி ஒருவர் மெல்ல புவிவிசையை
வென்று சில அடிகள் மேலே நகர்ந்து அமர்திருந்ததைப் பார்த்திருக்கிறார்.
ஹரிக்கு என்னிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் சாம்சுங்
கம்பெனியின் டெபுடி டிரைக்டராக இருந்தார். அவர் பயணிக்க கம்பனி
ஹெலிகாப்டர் கொடுத்திருந்தது. எனவே என்னை இம்ப்ரஸ் செய்ய அவர்
சொல்லவில்லை என்பது திண்ணம். திரு வி.கவின் சரிதத்தில் ஒரு பறவை யோகியார்
பற்றி வருவதாக இக்குழுமத்தில் பேசி இருக்கிறோம். Anti gravity
எனப்பேசப்படும் கற்றையியல் விஷயம் என்பது உறுதி.
ஓலைச்சுவடிகள் தேடிய காலத்தில் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது இந்த
இந்திய ஞானம்தான். காஞ்சிப்பெரியவர்கள் இருவரின் அன்பினாலும்,
ஆசியினாலும் மேரு நூலகத்திலிருக்கும் சமிஸ்கிருத ஓலைச்சுவடிகளைக் காணும்
வாய்ப்புக்கிட்டியது. அதிலொரு ஓலைச்சுவடி பிரளயகலக நாமளி பற்றியது.
ஊழிப்பெருக்கைப் பற்றிய பேச்சு சங்கப்பாடல்களிலும் (பரிபாடல்), பின்னால்
திருவாய்மொழி போன்ற பனுவல்களிலும், சைவசித்தாந்த மறைகளிலும், வள்ளலாரின்
அருள்மறைகளிலும் இருப்பதை அறிந்தேன். எனவே தமிழ், சமிஸ்கிருதம் என்ற
பாகுபாடெல்லாம் இல்லாமல் இந்த கற்றையியல் இந்தியா முழுவதும் அறியப்பட்டு
இருந்தது தெரிய வந்தது.
சரஸ்வதி மஹால் நூலகத்தில் நூலகராக இருக்கும் ஒரு வைணவரைக் கண்டேன். அவர்
வைகானஸ சாஸ்திரம் பற்றிய ஒரு நூலை வெளியிட்டு இருந்தார். அப்போது இது
பற்றிப் பேசிய போது அவர் எப்படி ஆகம விதிகளின் படி கோயில் காரியங்கள்
செய்ய வேண்டும் என்று சொல்லி வரும் போது பூமி (பூமாதேவி)யின் பிரதிமை
ஒன்றை முதலில் உருவாக்க வேண்டும். அது கொஞ்சம் சாய்ந்து இருக்குமாறு
அமைக்க வேண்டுமென்று சொன்னார். அதாவது பூமி தனது அச்சில் சில பாகைகள்
சாய்ந்து சுழல்வதை நம்மவர் அறிந்தே இருந்திருக்கின்றனர். இந்த ஞானம்
நாடோடிகளாக மத்திய ஆசியாவில் ஒட்டகம் ஓட்டிய ஆரியர்கள் தந்தது என்று
வெள்ளைக் காலனிக்காரர்கள் சொல்லலாம். ஆனால் நம் சாஸ்திரத்தில் ஒரு
இடத்தில் கூட இதற்கான சாத்தியம் இல்லை. இதை டாக்டர் பிரியதர்சி தெளிவாக
விளக்குகிறார். வேளாண் குமுகத்தில்தான் நாளைய சாப்பாட்டைப்பற்றிக் கவலை
இல்லாத போதுதான் கலை, இலக்கியம், அறிவியல் பேச முடியும். நாளைய உணவிற்கு
உத்திரவாதமில்லாத (ஆரிய) நாடோடிகளால் இவ்வளவு உயர்ந்த விஞ்ஞானம் பேச
முடியாது. எனவே அறிவியல் எங்கிருந்தோ இந்த மண்ணிற்கு வந்தது என்ற
பொய்மையை நாம் இனிமேலும் நம்ப வேண்டிய அவசியமில்லை.
நாம் நம் மொழிவாரி அரசியலுக்காக இன்று ஆரியம், திராவிடமென்று பேசி
இருக்கின்ற கொஞ்ச நஞ்ச பகுத்தறிவையும் மழுங்கடித்துக்கொண்டிருக்கும் போது
சமகால ஜீனோமிக் அறிவியல், இந்தியர்கள் ஒரே மரபைச் சேர்ந்தவர்கள் என்று
தெளிவாகச் சொல்வதை டாக்டர் பிரியதர்சி வற்புறுத்துகிறார். நாம் எவ்வளவு
தூரம் காலனித்துவ அரசியல் கலந்த அறிவியலை நம்புகிறோமெனில் லண்டனில் ஒரு
ஈழத்தவர் நாங்கள் இந்திய வம்சாவளியே அல்ல, சுமேரிய வம்சாவளியினர்
என்றார். சுமேரியர்கள் என்றால் நீங்கள் ஈராக்கியரா என்றால் ‘ஆம்’
என்கிறார். அந்த அளவு ஆரிய விஷம் அவருக்கு ஏற்றப்பட்டுள்ளதை அறிந்தேன்.
இது அறிவியல் விழிப்புள்ள ஒரு சமூகம் எடுக்க வேண்டிய நிலைப்பாடல்ல.
சங்கம் தொட்டு தமிழக சிந்தனை இந்திய முழுமை பற்றியே பேசி வந்துள்ளது.
இங்குள்ள சான்றோர்களைக் கேட்டால் வேண்டிய அளவு இலக்கியத்
தரவுகளைத்தருவர். தமிழனின் பங்களிப்பு என்பது எப்போதும் இந்தியப்
பொதுமையை முன்வைத்தே எழுந்திருக்கிறது. டாக்டர் பிரியதர்சியின் பேச்சில்
ஏன் அதிகமாக தமிழக பங்களிப்பு பற்றிய பேச்சில்லை என்றால், அவர்
அறிந்திருக்கவில்லை, அது பற்றிய ஒரு இந்தியப்புரிதலை இதுவரை நாம்
உருவாக்கவில்லை என்று பொருள். இந்தியக் கடலோடிகள் பற்றி அவர் பேசுகிறார்.
பழைய இந்திய அறிவியலில் தமிழகத்தின் பங்கு என்ன என்று நாம் தான்
விளக்கிச் சொல்ல வேண்டும். இதில் நண்பர் பாலுவின் நிலைப்பாடு
வரவேற்கத்தக்கது.
மிக அருகில் இருக்கும் கேரளம். அந்த மொழியில் நம் தேவார, திருவாசகம்
மொழிபெயர்க்கப்படவில்லை, அதற்கான உரைகள் கிடைக்கவில்லை என்று ஆற்றூர்
இரவிவர்மா என்னிடம் ஒருமுறை சொன்னார் (15 வருடங்களுக்கு முன்). இது யார்
தவறு? நம்மிடம் புலமை உள்ளது என்பதை வெளிநாட்டார் போற்ற வேண்டுமெனில்
அவர்கள் மொழியில் அதை அறியச் செய்ய வேண்டியது நமது கடமை இல்லையா? இந்திய
அளவில் ஆழ்வார்களின் கீர்த்தியைப் பரப்பிய ஸ்ரீஇராமானுஜர்
சமிஸ்கிருத்தில் எழுதி இருக்கிறார் என்று பெருமைப்படாமல் நம் சிற்றறிவு
அவர் தமிழில் எழுதவில்லை என்று குறை கூறுகிறது. நமது பரந்த நோக்கு
சமகாலத்தில் மிகவும் குறுகிவிட்டது. இந்திய முழுமைக்கும் ஆசி கூறிய
கடைசிக்கவியாக பாரதி இருப்பது நமக்கு வெட்கமில்லையா?
ஒருகாலத்தில் இந்தியா முழுவதும் பல்கிப்பெருகி இருந்த ஓர் அறிவியல்
தொடர்ந்த 400, 500 வருட அரசியல் குழப்பத்தில், மாற்றாரிடம் அடிமைப்பட்ட
காலங்களில் எங்கோ காணாமல் போய்விட்டது. அடிமைப்படுத்தியவரின் அறிவியலே
சிறந்தது எனும் எண்ணப்போக்கும் வளர்ந்தது. இதை மிகத்தெளிவாக டாக்டர்
பிரியதர்சி செப்புகிறார். இன்று நிலைபெற்றுவிட்ட Out of Africa theory
அசைக்க வேண்டுமெனில், அவர்கள் செய்யும் அறிவியல் கொண்டுதான்
நிறுவமுடியும். ஒரே அறிவியல் மொழியில்தான் பேசமுடியும். அதைச் செய்யும்
காலம் வந்துவிட்டது எனும் அறைகூவலாக டாக்டர் பிரியதர்சியின் பேச்சை நான்
காண்கிறேன்.
மேலும் வரும்..
ஆபிரிக்காவில் கிடைத்ததில் மிக தொன்மையான மனித ஆதிமூதாதையின் எலும்புகூடு 7 மில்லியன் ஆண்டுக்கு முற்பட்டது. பரிணாம வளர்ச்சியின் பல்வேறு காலகட்டங்களை விளக்கும் எலும்புபடிமங்கள் அனைத்தும் ஆபிரிக்காவில் தான் கிடைக்கின்றன. மிக, மிக பிற்பட்ட்ட காலத்தில் அதாவது 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புபடிவங்கள் தான் ஆசியாவில் கிடைக்க துவங்குகின்றன. அதுவும் சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில்
ஆதிமனிதனின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் ஒரே ஒரு எலும்புபடிமம் கூட இந்தியாவில் கிடைத்தது இல்லை.
அப்படி ஒரு தொன்மையான எலும்படிமம் இந்தியாவில் கிடைத்தால் மருத்துவர் ப்ரியதர்ஷனின் தியரிக்கு வலுவான ஆதாரம் கிட்டும்.
--
செல்வன்
On Dec 2, 3:56 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> விடியோவை பார்த்தேன்.
>
> அவுட் ஆஃப் ஆபிரிக்கா தியரி உருவாக காரணம் ஆபிரிக்காவில் ஏராளமாக கிடைத்த
> தொன்மையான எலும்புகூடுகள்.
>
> http://en.wikipedia.org/wiki/List_of_human_evolution_fossils
>
> ஆபிரிக்காவில் கிடைத்ததில் மிக தொன்மையான மனித ஆதிமூதாதையின் எலும்புகூடு 7
> மில்லியன் ஆண்டுக்கு முற்பட்டது. பரிணாம வளர்ச்சியின் பல்வேறு காலகட்டங்களை
> விளக்கும் எலும்புபடிமங்கள் அனைத்தும் ஆபிரிக்காவில் தான் கிடைக்கின்றன. மிக,
> மிக பிற்பட்ட்ட காலத்தில் அதாவது 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய
> எலும்புபடிவங்கள் தான் ஆசியாவில் கிடைக்க துவங்குகின்றன. அதுவும் சீனா,
> இந்தோனேசியா போன்ற நாடுகளில்
>
> ஆதிமனிதனின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் ஒரே ஒரு எலும்புபடிமம் கூட
> இந்தியாவில் கிடைத்தது இல்லை.
>
> அப்படி ஒரு தொன்மையான எலும்படிமம் இந்தியாவில் கிடைத்தால் மருத்துவர்
> ப்ரியதர்ஷனின் தியரிக்கு வலுவான ஆதாரம் கிட்டும்.
>
நன்றி, திரு. செல்வன்,
தேவ் பரிந்துரைக்கும் மருத்துவர் ப்ரியதர்சி கொடுத்துள்ள குதிரை முத்திரை
சிந்து சம்வெளியினது அல்ல.
பிற பின்.
அன்புடன்,
நா. கணேசன்
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

On Dec 2, 3:56 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> விடியோவை பார்த்தேன்.
>
> அவுட் ஆஃப் ஆபிரிக்கா தியரி உருவாக காரணம் ஆபிரிக்காவில் ஏராளமாக கிடைத்த
> தொன்மையான எலும்புகூடுகள்.
>
> http://en.wikipedia.org/wiki/List_of_human_evolution_fossils
>
> ஆபிரிக்காவில் கிடைத்ததில் மிக தொன்மையான மனித ஆதிமூதாதையின் எலும்புகூடு 7
> மில்லியன் ஆண்டுக்கு முற்பட்டது. பரிணாம வளர்ச்சியின் பல்வேறு காலகட்டங்களை
> விளக்கும் எலும்புபடிமங்கள் அனைத்தும் ஆபிரிக்காவில் தான் கிடைக்கின்றன. மிக,
> மிக பிற்பட்ட்ட காலத்தில் அதாவது 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய
> எலும்புபடிவங்கள் தான் ஆசியாவில் கிடைக்க துவங்குகின்றன. அதுவும் சீனா,
> இந்தோனேசியா போன்ற நாடுகளில்
கண்ணன் அவர்களே இந்த தொடர் அருமையாக செல்கிறது ,தொடருங்கள்
ஏன் அதிகமாக தமிழக பங்களிப்பு பற்றிய பேச்சில்லை என்றால், அவர்
அறிந்திருக்கவில்லை,
பற்றிய ஒரு இந்தியப்புரிதலை இதுவரை நாம்
உருவாக்கவில்லை என்று பொருள்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
’முன்தோன்றிய மூத்த குடி’ எனும் கருத்தியலுக்கு
முதன்மைதந்து சண்டையிட வழியில்லாமல் செய்கிறீர்கள் :))
இந்த இழையில் முனைவர் கண்ணன் ஏதோ முக்கியமாகச்
சொல்ல நினைக்கிறார். அதற்கு இணக்கமாக நாம் இழை பிரிக்காமல்
இருப்பது நல்லது. அவர்தம் உரை முடிந்தபின் மாற்றுக்கருத்துகள்
இருக்கவே இருக்கின்றன.
இடையறாத குறுக்கீட்டால் இழைகளைத் தொடரமுடியாமல் போனது
எனது அனுபவம். நண்பர்கள் தவறாகக் கொள்ள வேண்டாம்
தேவ்
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox
கண்ணன் ஒரு துணை இழை தொடங்கினாலும்
நல்லதே; இந்த இழை அவரது பதிவுகளுக்கு
மட்டும் என்றும், துணை இழை பிறரது கருத்துகளுக்காகவும்
என அமைத்துக்கொள்ளலாம். விடை
சொல்ல வேண்டுமானாலும் அந்த இழையில்
விளக்கம் சொல்லலாம்.பிரதான இழை
அமைதியாகத் தொடரும்
தேவ்
On 3 Dec, 09:54, செல்வன் <holy...@gmail.com> wrote:
> Correct Dev sir. We will wait for Kannan ji's posts and then later on open
> this for discussion.
>
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox
மிக்க நன்றி நண்பர்களே!
அடிப்படையில் நானொரு அறிவியல் மாணவன். பல்கலைக் கழகக் காலங்களில் ஒரு
inspiring lecture கேட்டுவிட்டால் கூடிக்கூடி உட்கார்ந்து சிலாகித்துப்
பேசுவோம். அந்த உணர்வு திடீரென்று பீரிட்டுக்கொண்டு வந்துவிட்டது.
அதற்கும் ஒரு காரணம் உள்ளது. மானுடக் கூர்தலியல் முதுகலைத்தேர்வில் நான்
பல்கலைக்கழக முதல் மாணவனாக தேர்வுற்றவன். எனக்கு மானுட கூர்தல் மிகவும்
பிடிக்கும். மேலும் நான் பரதேசியாக பல நாடுகளில் சுற்றியபோது நான்
பலவாறாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளேன். ஒரு அரேபியனாக, ஆப்பிரிக்கனாக
(துனிசியா), இந்தோனீசியனாக, மலேயாக, மெக்சிகனாக, பாகிஸ்தானியாக,
ஜப்பானியனாக, சீனனாக, of course இந்தியனாக. ஆக, உலகின் அனைத்து வகை
ஜீன்களும் என்னிடம் இருப்பது தெரிந்தது. இதுவொரு உணர்வுதான். அறிவியல்
என்பது உள்ளுணர்வை கடின உழைப்பின் பாற்பாட்டு பொதுவில் நிறுவுவது.
டாக்டர் பிரியதர்சியின் பேச்சு எங்கோ நான் உள்ளுணர்வாகக் கண்டதை அறிவியல்
பூர்வமாகச் சொல்வதாகப் பட்டது. பிடித்துப் போய்விட்டது.
முக்கியமாக இது முழுக்க, முழுக்க ஒரு அறிவியல் மாணவனின் குதூகல
நிலைப்பதிவு என்று கொள்ளுங்கள். இதற்கும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கும்
தொடர்பு படுத்தாதீர்கள். இது எவ்வகை official declaration ம் அல்ல. Just
joy of seeing science working. மேலும், இதுவொரு சாத்யப்பாடு பற்றித்தான்
பேசுகிறது. முற்றும் முடிவான முடிபு அல்ல.
சரி..தொடர்கிறேன்.
நா.கண்ணன்
ஏன்? கேட்க வேண்டிய கேள்வி.
ஆப்பிரிக்கா, போர்னியோ இவ்விரு இடங்களும் இன்றளவும் கன்னித்தன்மையுடன்,
சீரழியாமல் இருக்கின்றன. எனவே தேடினால் எலும்புக்கூடுகள் கிடைக்கும்.
ஆனால் இந்தியா அப்படியல்ல. கல் தோன்றா, மண் தோன்றாக்காலத்திற்கு
முன்பிருந்து மக்கள் வசித்து வருகின்றனர். எனவே ஒரு புதைகுழி, 100
ஆண்டுகளுக்கு மேல் இன்னொரு புதைகுழி, இப்படி இருக்கின்ற இடத்தில்
காலக்கணக்கு பிறழும் படி செயற்பாடுகள் நடந்திருக்கின்றன. மேலும் பாலு
இங்கு அடிக்கடி சொல்வது போல் அதிவேக நகரமயமாதலில் இருக்கின்ற இடுகாடுகள்,
முதுமையான இடங்களெல்லாம் வேகமாக ஆக்கிரமிக்கப்படுகின்றன. மதுரை
நகரைப்பற்றிய சங்க கால வருணனைகள் அப்போதே அதுவொரு பிசியான நகரமாக
இருந்திருப்பதைச் சுட்டுகிறது. காசியை நினைத்துப்பாருங்கள். எத்தனை
ஆயிரமாண்டுகளாக மக்கள் அங்கு வசித்து வருகின்றனர்? அங்கு, எங்கு போய்
எலும்புக்கூட்டைத்தேடுவது?
சமீபத்திய சுநாமி (ஆழிப்பேரலை) வந்த போது கடற்கரையில் மூன்று அடுக்கு
நிலைகளில் கோயில் இருந்திருப்பது அறியக்கிடைத்தது. ஒரு ஊழியில் அழிந்து,
அதே இடத்தில் இன்னொரு ஊழிக்கு முன் கோயில் கட்டி, அதுவும் அழிந்து
இன்னொரு விபத்து நடக்கும்வரை இன்னொரு கோயில்கட்டி அதுவும்
அழிந்து..இப்படி. இது தொன்மையைச் சுட்டுவதுடன் அடையாள அழிவு என்பது
எப்படி எளிதாக மக்கள் வாழும் இடத்தில் நடந்துவிடுகிறது என்று தெரிகிறது.
மிகப்பாதுகாப்பான இடத்தில் கூட அடையாளங்கள் மறைந்துவிடுவதைக் காண்கிறோம்.
நல்ல உதாரணம் அன்னமாச்சார்யாவின் 45,000 கீர்த்தனைகள் செப்பேடுகளில்
திருவேங்கடமுடையான் திருக்கோயிலிலேயே காணாமல் போய் மீண்டும்
கிடைத்திருக்கிறது. சமீபத்தில் ஒரு பாதள சுரங்கம் போல் அனந்தபத்மநாதனின்
பொன்குவியல் கிடைத்தது. இதுதான் இந்தியா!
இந்த நாட்டில் geological evidences த்தேடிக்கண்டு பிடிப்பது அரிது.
மானுடத்தோற்றம் என்பது ஏறக்குறைய geological scaleல் நிற்கிறது.
இன்னொரு முக்கியமான கருத்து என்னவெனில், அறிவியல் என்பது தரவுகள் இல்லாத
போது பேசாமடந்தையாகிவிடும். தரவுகள் இருந்தால் பேசும். நல்ல உதாரணம்
ரிச்சர்ட் லீகீயின் ஆப்பிரிக்க ஆய்வுகள். அவர் கால் நடையாக போனபோது
கிடைத்த எலும்புக்கூடுகளே இன்றைய அறிவியல் புரிதலுக்குக் காரணம். அது
அப்படியே இத்தனை காலம் கிடந்திருக்கிறது. இந்தியாவில் நடக்குமா?
மேலும் சமகால அறிவியல் என்பது ஐரோப்பாவை மையம் கொண்டு எழுந்தது.
அவர்களின் சிந்தனைப்போக்கு, தத்துவ விசாரணைப்போக்கு, வாழ்வியல்
போன்றவற்றைச் சார்ந்தே அது இன்றளவும் இயங்குகிறது. ஆங்கிலேயர்கள்
காலனிகளாக ஆப்பிரிக்காவையும், இந்தியாவையும் பிடித்தனர். ஆப்பிரிக்கா
இருண்ட கண்டமாக ஏதும் வளர்ச்சியுறாத நிலையில் இருந்தது. ஆனால், இந்தியா
என்பது ஆங்கிலேயர்களுக்கு பெருத்த சவாலைக் கொடுத்தது. இந்திய தத்துவம்,
இந்திய ஆன்மீகம், இந்திய இலக்கியம், இந்தியக் கலை இவை அவர்களது
நாகரீகத்தைவிட மிக உயர்ந்து இருந்தது. தங்களது மொழியும், நாகரீகமும்
இங்கிருந்து தோன்றியிருக்கலாம் எனும் எண்ணமே காலனிக்காரர்களுக்கு
கிலியைக் கொடுத்தது. இப்படியான பின்புலத்தில் ஆங்கிலேயர்கள் இங்கு
மானுடத்தோற்றம் பற்றி ஆராய விரும்பவில்லை. மெல்ல ஆப்பிரிக்காவிற்கு
போய்விட்டார்கள். அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றால் யாரும் கேள்வி
கேட்கப்போவதில்லை. இந்தியாவில் அது முடியாது. இந்தியா மிக புத்திசாலியான
நாடாக இருந்தது. அது அவர்களுக்கு (Colonial Masters) மிகுந்த எரிச்சல்
தந்தது. இறுதியில் வேறு வழியில்லாமல் தோல்வியுற்று இந்தியாவைவிட்டு
நீங்கும் முன் இந்த மண்ணில் மீண்டும் தன்னம்பிக்கை தோன்றாத வண்ணம்
அரசியல், அறிவியல் குழப்பத்தை உண்டு பண்ணிவிட்டுப் போயினர். இந்த ஆரிய,
திராவிட இனவாதம் என்பது அதில் மிக முக்கியமான ஒன்று. இந்தியாவின்
முக்கியமான அறிவியல் தரவுகள் சமிஸ்கிருதத்தில் இருந்தால் அதை மீண்டும்
வாசித்துப்பழகினால்தானே தன் பெருமை பேச முடியும்? அதை அண்டவிடமுடியாத படி
பெரும் சூழ்ச்சி செய்துவிட்டுப் போயினர். மொழி வெறியைத் தூண்டிவிட்டனர்.
இல்லாத புதிய சித்தாந்தங்களை தந்துவிட்டுப் போயினர். நம் தன்னம்பிக்கையை
சிதைக்கும் முக்கிய கோட்பாடு இந்த ஆரிய வருகைக் கோட்பாடு. அதாவது மத்திய
ஆசியாவில் ஒட்டகம் ஓட்டிக்கொண்டிருந்த நாடோடிகள் கொடையாகத்தந்ததுதான்
நமது அடிப்படை ஆதாரமான வேதங்கள் அதன் பாற்பட்டு எழுந்த அறிவியல்,
ஆன்மீகம் இவை அனைத்துமென்றால் நமக்கு எங்கு நெஞ்சைத்தட்டும்
தைர்யம்வரும்? அன்று குனிந்த தோள்கள் இன்றுவரை எழுவில்லை. நாம் அடிமையாக
வாழப்பிறந்தவர்கள் என்று நம்பிவிட்டோம்.
ஆயினும் அன்னை பராசக்தியின் கடைக்கண் அருள் இந்திய தேசத்தின் மீது
விழாமல் இல்லை. இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது அடிப்படையில் ஒரு
தன்மானப்போராட்டம். நமது அடையாளத்தை மீட்டெடுக்கும் போராட்டம். அதற்கு
அடிகோலினார் சுவாமி விவேகாநந்தர். அந்த அருளாளர் அத்வைதம் எனும் அழகிய
தத்துவத்தைக் கண்டு மெய்சிலிர்த்தார். இந்தக் கோட்பாட்டை மீட்டுருவாக்கம்
செய்தவன் ஒரு மலையாளி என்று அவர் காணவில்லை. பண்டைய ரிஷிகளின் வழிவரும்
ஒரு “இந்திய ஆச்சார்யன்” என்று கண்டார். ஒரு வங்காலிக்கு, ஒரு
மலையாளியைத் தலையில் வைத்து ஆட வேண்டிய தேவை என்ன? இன்றைய பிரிவுபட்ட
இந்தியாவில் இப்படியெல்லாம் கேள்வி கேட்கலாம். ஆனால் விவேகாநந்தர்
இந்தியா ஒன்று என்று கண்டார். அத்வைதம் இந்திய முழுமைக்கும் பொது என்று
கண்டார். அத்தோடு நின்றாரா? மானுட முழுமைக்கும் விடிவு என்பது
அத்வைதத்தில் இருக்கிறது என்றார். இந்தியா மொழியால், நடைமுறையால்
வேறுபட்டுத்தோன்றினாலும் அது ஒரு அலகுதான் என்பதைப் பின்னால் மோகன்தாஸ்
காந்தியும் தமது “discovery of India" மூலம் கண்டு கொண்டார்.
இவர்களது வழியில் வந்த பண்டித ஜவஹர்லால் நேரு, நம் பெருமையை நாம் உணர
சுத்தமான அறிவியல் செய்ய வேண்டும் என்று சொன்னார். பல்கலைக்கழகங்களும்,
தொழிற்சாலைகளுமே இந்தியாவின் கோயில்கள் என்றார். இந்தியா, சங்க
காலத்திற்குப் பிறகு, 2000, 3000 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பரவலான
பொதுக்கல்வியைப் பெற்றது. நமது சமகால அறிவியல் என்பது இன்னும்
குழந்தைதான். 60 வருடங்கள்தான் ஆகின்றன. ஐரோப்பாவை நோக்குங்கள் 300/400
வருடப் பழைய பல்கலைக் கழகங்களெல்லாம் இன்றளவும் தொடர்ந்து
செயல்படுகின்றன.
இப்படி நலிவுற்ற நிலையில் நாம் தொடங்கினாலும் மிகக்குறுகிய காலத்தில்
இந்திய அறிவு பட்டொளிவீசிப் பிரகாசிக்கத்தொடங்கியது. நேரு காலத்திலேயே
கூட்டுச்சேரா கொள்கை நாடுகளின் தலமைப்பீடமாக இந்தியா நின்றது.
ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளுக்கு கல்வி புகட்டும் நாடாக இந்தியா 50-60
களிலேயே நின்றது. இது எப்படி சாத்தியம்? ஒன்றுமே பின்னணி இல்லாத
காட்டுமிராண்டிகள் நாட்டில் இது சாத்தியமா? நல்ல விளைநிலத்தில்தான் போட்ட
விதை தளிரும். பாலைவனத்தில் அரிதாகவே சோலைகளைக் காணமுடியும். இல்லையா?
இந்தியாவில் ஒரு அறிவியல் பாரம்பரியம் இல்லையெனில் திடீரென்று ஒரு
கணிதமேதை இராமானுஜன் தோன்றமாட்டான். அவனை எந்த மண், எப்படி விளைவித்து
இருக்கிறது? அவன் சரிதத்தை வாசித்துப்பாருங்கள். நான் டென்னிஸி
மாநிலத்தின் நாஷ்வெல்லியில் இருந்த போது ‘The Man Who Knew Infinity"
(http://en.wikipedia.org/wiki/The_Man_Who_Knew_Infinity) எனும்
புத்தகத்தை வாசித்து மிரண்டுவிட்டேன். நாமகிரித்தாயாரின் இன்னருள் பெற்ற
ஒரு இராமானுஜன் எனும் தமிழனைப் பற்றி ஒரு அமெரிக்கப் பேராசிரியர்
’அந்தமறிந்த மனிதன்’ என்று ஒரு புத்தகம் எழுதுகிறார் என்றால் என்ன மேதமை
அது? அந்த மேதமை அவருக்கு எப்படி வந்தது? காளிதாசனுக்கு அம்பாள் வந்து
தன் எச்சில் தாம்பூலத்தைத்தந்துவிட்டுப் போனது போல் இராமானுஜனுக்கு
நாமகிரித்தாயார் அருள் மழை பொழிந்திருக்கிறார். இது கட்டுக்கதை அல்ல.
இராமனுஜன் அப்படித்தான் சொல்கிறார். இது என்ன அறிவியல். இது என்ன
கற்றையியல் தொடர்பு? தெரியவில்லை. மாபல்லியின் வால்நுணி போல் ஏதோ
தென்படுகிறது. இந்த மேதமை இந்திய மேதமை. இந்த அறிவியல் இந்திய அறிவியல்.
அதனால்தான், குவாண்டம் பிசிக்ஸ் எனும் புதிய சித்தாந்தம் வீருகொண்டு
எழுந்த போது அவர்களுக்கு யூத, கிறிஸ்தவ தத்துவப்பின்னணி ஈடு
கொடுக்கவில்லை. இலத்திரன் போக்கைச் சரியாகப் பிரதிபலிக்கும், உளன் எனில்
உளன், இலன் எனில் இலன்’ எனும் வேத வாக்கே (திருவாய்மொழி) சரியாகப்
பிரதிபலித்தது. அந்தவொரு உயர்ந்த அறிவியல் இந்த மண்ணிற்குச் சொந்தம்.
ஆனால் அதை எப்படிச் சொல்லிக்கொடுப்பது எனும் பாடத்திட்டத்தை மிகச்
சாதுர்யமாக ஆங்கிலேயர்கள் அழித்துவிட்டுப்போய்விட்டனர். இந்தியர்கள்,
‘திக்குத்தெரியாத காட்டில் எதையோ தேடிக்கொண்டிருக்கின்றனர்’.
எனவே 60 ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னாவது நாம் கொஞ்சமாவது
சுயநம்பிக்கை கொண்டு நமது சுதேசி அறிவியலைக் கண்டுபிடிக்க வேண்டும்.
டாக்டர் பிரியதர்சி விவேகாநந்தர் கண்ட இந்தியா பற்றி அறிவியல் திறத்தோடு
பேசுகிறார். ஏதோ நாடோடிகளின் கொடையல்ல இந்திய நாகரீகம் என்பது, அது இந்த
மண்ணில் பிறந்து, இந்த மண்ணில் வளர்ந்து, பிற தேசங்களில் கிளைத்து
விரிவுகண்டது என்கிறார். இது சாத்தியமா?
மேலே இன்னும் பார்ப்போம்...
மிக்க நன்றி நண்பர்களே!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> தேடலின் பிடியில் அல்லவா நாம் அனைவரும்
>
நன்றி பாலு.
உங்கள் ஆய்வின் முக்கியத்துவம் பற்றி பின்னால் வருகிறேன்.
இதுவரை நான் தருவதோர் பின்னணி.
அவர் காட்டுவது என்ன? விட்டுப்போனது என்ன? இன்னும் செய்ய வேண்டியது என்ன?
என்று சொல்லுகிறேன்.
கம்பன் பாடல்களை எடுத்துக் கொண்டு குற்றாலச்சாரலில் ரசிகமணி கோஷ்டி
குதூகலப்படுமாம், கி.இராஜநாராயணன் எழுதுவார். அது போல் தான் இதுவும்.
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.
பாரதியின் ரத்ன வரிகள். பயம் கொல்லுவோம். பகை வெல்லுவோம்.
நா.கண்ணன்


| தயவுசெய்து தொடருங்கள். வாசிக்க, யோசிக்க பல தகவல்கள் தருகிறீர்கள், படிக்க காத்திருக்கிறோம் கமலம் http://www.kamalagaanam.blogspot.com --- On Mon, 3/12/12, N. Kannan <navan...@gmail.com> wrote: |
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நன்றி சுபா, கமலம்:
எனக்கு என்னவோ ஆகிவிட்டது :-)
இன்னும் சொல்ல நிறைய உள்ளது.
சொல்லுவேன். கொஞ்சம் பொறுமை காத்தால் நல்லது.
நா.கண்ணன்
> உங்கள் தொன்மையால் தான் உங்கள் மொழி பண்பாடு வளமாய் இருக்கிறது என்றார்
>
> தமிழகத்தின் தொல் பழங்கற்காலத்தை , இருபத்து ஒன்று வருடம் உழைத்து உலகறிய
> வாய்த்த அவருக்கு தெரிந்து இருக்கிறது
>
> எனக்கு புரிந்து இருக்கிறது
> உங்களுக்கு ?
>
Here is an opportunity Balu.
We have invited Dr. Priyadarshi to join our group and discuss further
his views on Indian antiquity as revealed by modern science. He will
start a new threat as soon as he joins. Here is an opportunity to
express our anguish regarding Tamil contributions to pan Indian
culture and heritage and to develop together a pan-Indian Heritage
studies.
You please set your mind for a serious dialogue in English in the
coming days. Only inter disciplinary cross talks will take us further.
Jai Hind.
N.Kannan
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அன்புள்ள நண்பர்களே:இவ்விழையை ஆங்கிலத்தில் தொடங்கவே முதலில் ஆசைப்பட்டேன், ஆயினும்
இவ்விழையில் பேசப்போகும் விஷயங்கள் தவறான புரிதலுடைய சில தமிழக
போக்குகளுக்கு விடையாக அமையும் என்பதால் தமிழில் எழுதத்துணிந்தேன்.
இவ்விழையில் சில துல்லிய புரிதலுக்கு அவ்வப்போது ஆங்கிலமும்
பயன்படுத்தப்படும்.இவ்விழையின் பிரதான தரவுகள் பேராசிரியர் பிரியதர்ஷன் (Dr. Premendra
Priyadarshi) அவர்கள் ஆற்றிய உரையை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன.
நானறிந்தவரையில் மனிதத்தோற்றம் இந்தியாவில் அமைந்திருக்கும் வாய்ப்பு
குறித்த ஒரு தெளிவான உரையை நான் இதற்கு முன் கேட்டதில்லை. ஆய்வு பூர்வமான
உரையிது. அறிவியற் சங்கங்கள் அலசி வெளியிட்ட (peer reviewed) அறிக்கைகளை
ஆதாரமாகக் கொண்டு அவர் தன் கருத்தை முன்மொழிகிறார். எனவே கொஞ்சம்
காலமெடுத்து (60 நிமிடங்களுக்கு மேல்) இந்த ஆங்கில உரையை தாங்கள் கேட்க
வேண்டுமென வேண்டுகிறேன். இது முழுக்க, முழுக்க அறிவியல் உரை. எனவெ துறை
அறிவு இல்லாதோருக்கு இதைப்புரிந்து கொள்ள சிரமமிருக்கலாம். முடிந்தவரை
இங்கு விளங்கிக்கொள்ள முயலலாம். அறிவியல், குதிரையின் பாய்ச்சலில்
போய்க்கொண்டு இருக்கிறது. கால்நடையாக வருவோர்க்கு புரிதலில்
சிரமமிருக்கும்.http://www.youtube.com/watch?v=1l7VsR-dW-c&feature=plcp
இந்த உரை தொடர்பான என் கருத்துக்களை முன் வைக்கிறேன் அடுத்த இடுகையில்.
நா.கண்ணன்
பிகு: பேராசிரியர் பிரியதர்ஷன் அவர்களின் உரைத்தொடுப்பு கொடுத்த
மின்தமிழ் அறிஞர் திரு.தேவராஜன் அவர்களுக்கு நன்றி.--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மிகவும் அருமையாக செல்கிறது
> இன்று இரண்டு மொழியும் அணைத்து இந்தியாவின் பெருமைகளுக்கு இரண்டு மொழிகளும்
> ஒரு காரணம்
>
பாலு, தமிழகத்தில்தான் இப்படியொரு அசட்டுச்செயல் நடக்கிறது. ஏன்
சமிஸ்கிருதத்தை வெறுக்கிறோம் என்று தெரியாமலே நஞ்சூட்டப்பட்டுவிட்டனர்.
தமிழகத்தின் பிற மாநிலங்களில் இல்லாத ஒரு மனநிலையிது. இதனால் நாம்
இழப்பதுதான் அதிகம்.
வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து படிப்போர் எல்லோரும் சமிஸ்கிருதம்
கற்றுக்கொள்கின்றனர். (கற்றுக்கொண்டுதான் நம்மவருக்கு சூடேற்றும்
தியரிகளை முன்வைக்கின்றனர் :-(
இப்போது தமிழ் படிப்பதும் கூடி வருகிறது. இவ்விரு செம்மொழியறிவு
இல்லையெனில் இந்தியக்கலாச்சாரத்தை முறையாக அறியவியலாது என்பது நிதர்சனம்.
உண்மையில் ஜாதீயச்சாயல் பூசப்பட்டு ஒரு மொழியறிவு புறக்கணிக்கப்படுவது
எவ்வளவுதூரம் நாம் பகுத்தறிவிற்கப்பாற்பட்டு செயல்படுகிறோம் என்பதைக்
காட்டுகிறது.
சுதந்திரமான இந்தியாவில், தமிழகத்தில் தமிழ்க் குறியீட்டின் (கிரந்தம்)
துணை கொண்டு சமிஸ்கிருதம் அழகாகப் படிக்கலாம். ஈழத்தில் அப்படித்தான்
படித்துவருகிறார்கள், இன்றளவும். இந்த மாயை சமீபத்தில் உருவாக்கப்பட்டது.
நீங்கள் சொல்வது போல், ‘இதுவும் கடக்கும்’.
> உதாரணம் ;
> பாம்பே அருகில் உள்ள கநோரி கல்வெட்டில் உள்ள தமிட வணிகா , நாகர்ஜுன டாமிட வணிய,
> காரவேலன் கல்வெட்டுகள் ,இலங்கை வாணிய கல்வெட்டுகள் மற்றும் உலகமெங்கும் உள்ள
> வணிக தொடர்புகள் ,பண்பாடு தொடர்புகள், பிற மொழிகளில் உள்ள கூறுகள்
>
இது உங்களது மிக முக்கிய பங்களிப்பு என்று படுகிறது. இந்தியாவின் பிற
மாநிலங்களில் தமிழின் கூறுகள் என்றே ஆய்வு செய்ய வேண்டிய துறையிது.
உங்களது கலிங்கத்தமிழ் நிச்சயம் பேசப்படும்.
> சாந்திபாப்பு சொல்கிறார் தென் இந்தியாவை தொடாமால் இனி உலக பழங்கற்கால நாகரிகம்
> பற்றி ஆய்வு செய்ய முடியாது என்று
>
> அவரின் ஆய்வுகள் ,எனக்கு தெரிந்தவை கூட உலகத்திற்கு தெரிய இன்னும் பல வருடங்கள்
> ஆகும் .ஆய்வின் நுணுக்கமும் அதை உலகம் ஒப்பு கொள்ளும் படியாக ஆய்வு எழுத்தில்
> கொண்டு வர ஏற்படும் நுணுக்கமும் உங்கள் அனைவருக்கும் தெரியும்
>
பேரா.பிச்சப்பன் இத்தகைய தொல்லியல், வடமொழி அறிவுடையோருடன் தொடர்பு கொள்ள
ஆசைப்படுகிறார். பல்துறை இயக்கப்பேச்சு என்பது காலத்தின் கட்டாயம்.
உயிரியல் துறை வல்லுநர்கள், மொழியறிஞர்கள், தொல்லியல் நிபுணர்கள்
போன்றோர் கூடிப்பேச ஏற்பாடு செய்ய வேண்டும். அது நிச்சயம் தமிழின்
தொன்மையைநிலை நாட்ட உதவும்.
> ஒரே காலத்தில் இபிரியன் கிரேக்க அயோனிய ,ஆப்ரிக்கா ,எகிப்து பாரசிக ,சுமேரிய
> போன்ற பல மேலை நாட்டையும் அறிந்து
> அதே சமயத்தில் சீனா ஆஸ்திரேலிய ஜப்பான் கொரியா மற்றும் ஏனைய தென்கிழக்கு
> ஆசியாவையும் முழுமையாக அறிந்த நமக்கு
>
> தென் அமெரிக்காவில் இருந்து கிழக்கு ஆப்ரிக்கா வரை முழுமையாக அறிந்து அதன்
> நடுவில் உள்ள அணைத்து தீவுகளிலும் தமது பண்பாட்டு சின்னங்களை ,மொழியை நிறம்
> மாறிய அந்த மக்களிடம் விட்டு வந்த நமது மக்களின் வரலாற்று தொன்மையை அவ்வளவு
> எளிதாக எடை போட முடியாது
>
உண்மை. வெளிநாடுகளில் கிடைக்கும் பழம் தமிழ் தொல்லியற்பொருட்கள் பற்றிய
அட்டவணையொன்றைத் தயாரிக்க வேண்டும்.
> ஏன் நாம் ஆதிச்ச நல்லூரை பற்றி அதை போன்ற சில ஆயிரம் ஈம காடுகளை பற்றி
> பேசுவதில்லை
>
> செப்பு சின்னங்களை பற்றி பேசுவதில்லை ,
>
> இரும்பு நாகரிகத்தை பற்றி முழுமையாக ஏன் பேசுவதில்லை ,
>
> (இரும்பு மற்றும் கனிம தொழிலில் தினம் இருந்தவன் நான் )
>
> தொலை தூர வணிக மேலாண்மை , மருத நில மேலாண்மை ,கடலியல் மேலாண்மையை பற்றி
> முழுமையாக ஏன் பேசுவதில்லை
>
> நீரோட்டத்தில் செல்லும் ஆமைகளின் உலக வரைபடத்தை நான் விரிவாக கொடுக்க
> ஆரம்பித்தால் அதற்கும் தமிழின் தடயங்களை ஒப்பிட்டு கொடுத்தால்
> பலரும் மயங்கி விடுவார்கள்
>
இவையெல்லாம் மறுக்கமுடியாத உண்மைகள். கவலை வேண்டாம். இந்தியா
சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டிற்குள் நாம் எவ்வளவோ சாதித்துவிட்டோம்.
தளராமல் இச்சேதிகளை தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் வெளியிடுவோம்.
யுடூப் ஒரு வலுவான பரவல் ஊடகம். தாங்கள் சரியென்றால், மின்தமிழ்
ஒளிபரப்பை நாளையே தொடங்கலாம். அரைகுறை ஆங்கிலம் கூடத் தேவலை. இல்லை
பின்னால் subtitle போட்டுக்கொள்ளலாம். நீங்கள் முக்கியமென்று கருதுவதை
நாம் யுடூப் வழியாக ஒளிபரப்புவோம். நண்பர் செம்மல் இங்கு இருக்கிறார்.
> இன்னும் எவ்வளவோ இருக்கிறது
>
> இன்னும் நிறைய உழைப்பு தேவை இருக்கிறது
>
ஆர்வமுள்ள இளைஞர் படையொன்று உருவாக வேண்டும். இங்கு உதயன் வந்து, மெல்ல,
மெல்ல பாம்பு, ஓணானிலிருந்து தமிழக தொன்ம எச்சங்களுக்குள்
இறங்கியிருக்கிறார் பாருங்கள். ‘அது!’.
> சொந்த மற்றும் இரந்து உண்டு வாழ்ந்து ஆய்வு கட்டுரைகள் கொடுப்பது அவ்வளவு
> எளிது அல்ல
>
தாங்கள் உடல்நலம் பேணி சமகால தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உளைச்சல்
இல்லாமல் செயல்படும் முறைகளைக் கண்டு பிடியுங்கள். நிச்சம் வழி இருக்கு.
தளர வேண்டாம். உங்களுக்குத்துணையாக எத்துணையோ நண்பர்கள் இங்குள்ளார்கள்.
நட்புடன்
நா.கண்ணன்
கண்ணன் ஜி,
மிக சிறப்பாக இழையை நகர்த்தி உள்ளீர்கள். பாலுவின் ஆய்வு, கொரியா சென்ற தமிழ் இளவரசி, தமிழ் நூல்கள் கூறும் தொன்மங்களின் உலகளாவிய பார்வை மற்றும் இந்திய பண்பாட்டின் உலகளாவிய பார்வை முதலிய அனைத்தையும் இணைக்கும் மிஸ்ஸீங் லிங்காக ப்ரியதர்ஷ்யின் உரையை முன்நிறுத்தி உள்ளீர்கள். இந்த கோணம் ஆய்வுலகில் ஆராயபடவேண்டும் என்பதன் அவசியத்தை உங்கள் கட்டுரைகள் நன்கு புலப்படுத்துகின்றன.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
[பேரா.பிச்சப்பன் இத்தகைய தொல்லியல், வடமொழி அறிவுடையோருடன் தொடர்பு கொள்ள
ஆசைப்படுகிறார். பல்துறை இயக்கப்பேச்சு என்பது காலத்தின் கட்டாயம். உயிரியல் துறை வல்லுநர்கள், மொழியறிஞர்கள், தொல்லியல் நிபுணர்கள் போன்றோர் கூடிப்பேச ஏற்பாடு செய்ய வேண்டும். அது நிச்சயம் தமிழின் தொன்மையைநிலை நாட்ட உதவும்.
உண்மை. வெளிநாடுகளில் கிடைக்கும் பழம் தமிழ் தொல்லியற்பொருட்கள் பற்றிய
அட்டவணையொன்றைத் தயாரிக்க வேண்டும்.
இவையெல்லாம் மறுக்கமுடியாத உண்மைகள். கவலை வேண்டாம். இந்தியா
சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டிற்குள் நாம் எவ்வளவோ சாதித்துவிட்டோம்.
தளராமல் இச்சேதிகளை தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் வெளியிடுவோம்.]
உங்கள் துணிகரமான இந்த நிலைப்பாடு எனக்குப் பிடித்திருக்கிறது.
நான் ஏன் இந்த இழையில் சமிஸ்கிருதம் படிக்க வேண்டுமென்று சொல்கிறேன்
எனில் நம்ம புராணங்களில், இதிகாசங்களில் அப்படி என்னதான் சொல்லியுள்ளது
என நாம் முதலில் அறிதல் வேண்டும். நிறுவனப்படுத்தப்பட்ட கருத்தாக்கங்கள்
அனைத்தும் சமிஸ்கிருத அறிவின்பாற் பெறப்பட்டதே. இன்றுவரை சமிஸ்கிருதம்
கற்காத இந்தியவியல் என்பது உலகிலேயே இல்லை. இதற்கு மாற்று தமிழ் கற்பது
என்றால் அதை துரிதப்படுத்த வேண்டும். வளப்படுத்த வேண்டும். இருக்கின்ற
வளங்கள் பற்றி எல்லோரும் அறியத்தர வேண்டும். தொட்டவுடன் சேதி பரவும் இந்த
யுகத்தில் இருந்தும் கூட ஒவ்வொரு தமிழனும் தன் மரபை அறிந்து கொள்ளவும்,
அது பற்றி மற்றவர் தெரிந்து கொள்ளவும் வகை செய்யவில்லையெனில் எப்படி இது
தொன்மையான மரபு என்பது நிறுவனப்படும்?
நா.கண்ணன்
2012/12/5 seshadri sridharan <ssesh...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
நா.கண்ணன்
மிக அழகாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். எனக்கு டாக்டர் பிரியதர்ஷி யார்,
அவரது பின்புலம் என்னவென்றெல்லாம் தெரியாது. ஆனால் அவர் முன் வைக்கும்
ஆய்வுக்குறிப்புகள் எனது நம்பிக்கைக்குக் வலுவூட்டுவதாக உள்ளது. ஏன்
துருக்கியில் உள்ள அந்தாலியா உலகின் அனைத்து மொழிகளின் தாயகமாக வேண்டும்?
ஏன் மத்திய ஆசியா மையமாகக் கருத்தப்படுகிறது? ஏனெனில் இதுவரை கிடைத்துள்ள
தரவுகளில் ‘எழுத்து’ என்பது அங்கு தோன்றியதாக நம்பப்படுகிறது. மிகப்பழைய
எழுத்துமுறைகளைப் புரிந்து கொள்ளும் வகையில் ரோசட்டா கல்வெட்டு போன்றவை
(இருமொழி மாற்று) அங்கு கிடைத்துள்ளன.
நான் இங்கு அழுத்திச் சொல்வது, “தரவுகள் இல்லையெனில் அறிவியல்
பேசாமடந்தையாகிவிடும்” என்பது. சிந்து சமவெளி குறியீடுகள் ”எழுத்துமுறை”
என்பதை அறிவியல் பூர்வமாக நிருவ வேண்டியது தொன் தமிழ் அறிந்த பெரியோர்
கடமை. நண்பர் நா.கணேசன் ‘சத்யமென’ நம்பும் அயலக ஆய்வாளர்களின் கட்டுரைகள்
நிறுவனப்படுத்தபட்ட நெறிமுறைகளின் வழியாகப்பேசுகிறது. நம்மவர் கையும்
ஓங்க வேண்டுமெனில் நாமும் அதே தரத்தில் கட்டுரைகள் வெளியிட வேண்டும்.
ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். அயலக ஆய்வாளர்கள் அடிப்படையில்
இந்தியர்களை நம்பித்தான் ஆய்வுகள் செய்கின்றனர். எனவே அவர்களுக்கு
convincing ஆகப் பேச நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சும்மாப் பழம்
பெருமையோ, இந்துத்துவா அடிப்படையிலோ பேசினால் எடுபடாது. நான் நொய்யலாறு
தொன்மச்சான்றுகளை அஸ்கோ பர்போலாவிற்கு அனுப்பியவுடன் அவர் கேட்ட முதல்
கேள்வி, ஐராவதம் மகாதேவன்’ என்ன சொல்கிறார்? என்பது. அவர் ஒருவரைத்தான்
அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் நம்பும்படி இவருக்கு தன் வாதத்தை
வைக்கத்தெரிகிறது. ஐராவதம் தமிழர்தானே? அவரால் முடிந்தால் ஏன்
மாற்றுக்கருத்துச் சொல்லும் மற்ற தமிழ் அறிஞர்களால் முடியவில்லை?
நமது திறமைக்கு சவால் வந்துள்ளது. நம்மவரே மயங்கிய நிலையில் உள்ளோம்.
கணேசன் போன்று அவர்களுக்குத் தரவு அளிக்கும் நம்மவர் நம் மக்கள் மீது
நம்பிக்கை வைக்க வேண்டும். நம் சான்றுகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
மாற்றம் என்பது உடனே ஏற்பட்டு விடாது. மெல்ல, மெல்லத்தான் ஏற்படும்.
நாம் நம் ஆழமான தரவுகளை (வாதங்களை) நம்பிக்கையோடு வைக்க வேண்டும்.
எறும்பூறக் கல்லும் தேயும்.
வாழிய செந்தமிழ்.
வாழ்க நற்றமிழர்.
நா.கண்ணன்
2012/12/5 செல்வன் <hol...@gmail.com>:
அன்புள்ள பாலு:
தமிழ் மரபில் என்னையீர்ந்த இன்னொரு கூறு இந்தத் திணைசார் வாழ்வு.
திணையுடன் இயைந்த வாழ்வென்றால் மண்ணை நேசிப்பவர் வாழும் பூமி என்று
பொருள். எனக்குக் கல்யாணமான புதிது. புது மனைவியோடு இராமேஸ்வரம் வரை போய்
வந்தேன். அவள் வடக்கே வாழ்ந்தவள். இந்த மண்வாசனை அதிகம் தெரியாது.
இராமநாதபுரம், என்ன வரண்ட பூமி. வானம் பாத்த பூமி என்று இளக்காரமாகச்
சொல்வர். இது மாதிரி இவள் ஏதோ சொல்லப்போய் அருகிலிருந்த ஒரு பெரியவர்
கேட்டுவிட்டு பொல, பொலவென்று சண்டைக்கு வந்துவிட்டார். இவளுக்கு ஒன்றும்
புரியவில்லை. தமிழ்மண் எவ்வளவு நிலம் (திணை) சார்ந்தது என்று தெரியாது.
அதுவொரு ஆரோக்கியமான வாழ்வியல். மண்ணை நேசிக்காத வாழ்வென்ன வாழ்வு?
ஆனால் நகரமயமாகிவரும் தமிழ் நாட்டில் இந்த வாழ்வியல் எவ்வளவு நாள்
தாக்குப்பிடிக்கும்? முன்பு சுபமங்களாவில் இது குறித்து ‘பாலைத்தெய்வம்’
என்றொரு கதை எழுதினேன்.
http://www.subaonline.net/nakannan/sstory/short.html#SS2
நா.கண்ணன்
Puranic list of Satavahana rulers.[22] This list, the most complete one with 30 kings, is based on the Matsya Purana.
Probably as vassals of Kanva dynasty (75–35 BCE):
நிறுவனப்படுத்தப்பட்ட கருத்தாக்கங்கள்
அனைத்தும் சமிஸ்கிருத அறிவின்பாற் பெறப்பட்டதே. இன்றுவரை சமிஸ்கிருதம்
கற்காத இந்தியவியல் என்பது உலகிலேயே இல்லை. இதற்கு மாற்று தமிழ் கற்பது
என்றால் அதை துரிதப்படுத்த வேண்டும். வளப்படுத்த வேண்டும்.
> நாம் சமஸ்கிருதம் படிக்க வேண்டியது இல்லை. அதை வெளிநாட்டு பேராசிரியர்கள்
> படித்து இந்திய வரலாற்றில் என்ன இருக்கிறது என்பதை நமக்கு ஆங்கிலத்தில்
> சொல்வார்கள். அதை நாம் படித்தால் போதாதா? நாமே எதற்கு படித்து தெரிந்துகொள்ல
> வேண்டும்?:-)
>
அப்படியல்ல செல்வன்.
உதாரணமாக வேதம் இருக்கிறது. அதில் எத்தனையோ சாகைகள். வழி, வழியாக
எல்லோரும் மனனம் செய்து ஒப்பித்து வந்தனர். ஆனால், அதிலுள்ள மகா
வாக்கியங்கள் எவை? அதன் சாரம் என்ன? அதில் சாரதமமான விஷயங்கள் என்ன
உள்ளன? என்று கண்டறிய வேண்டுமெனில் நாம் மெனக்கெட்டால்தான் உண்டு. அப்படி
ஆதி சங்கரர் மெனக்கெட்டதால் இந்தியாவிற்கு அத்வைதம் கிடைத்தது. அதற்குப்
பின்னால் அதுவும் மனனம் செய்யப்பட்டு பொருள் பிறழ்ந்து போனது. பிறகோர்
இராமானுஜன் வந்து அதற்கு ஊட்டமளிக்க வேண்டியிருந்தது. மூலத்தை வாசித்து
நாம் புரிந்து கொள்வதுதான் ஆய்வு. நாங்கள் எத்தனை ஆயிரம் மூல ஆய்வுகளை
வாசித்து இருப்போம். அது முக்கியம்.
ஒரு ஆங்கிலேயர் இந்திய மறையின் ஆழ் பொருள் என்றும் அறியார். அது எழுத்து,
பயிற்சி என்பதற்கும் அப்பாற்பட்டது. எப்படியோ இங்குள்ளோரிடம்
கேட்டுத்தெரிந்து கொண்டதை, அவர் புரிந்து கொண்ட வகையில் இன்னொரு மொழியில்
சொல்ல வேண்டும். மொழி ஒத்துழைக்க வேண்டும். கடைசியில் நம்ம கைக்குக்
கிடைப்பது second hand, third hand interpretations! (சமிஸ்கிருதமென்றால்
‘வேதம்’ என்றில்லை. வெறும் உதாரணத்திற்குச் சொன்னேன்)
நம் கையில் உள்ள சரக்கைப் புரிந்து கொள்ள இத்துணை தூரம் போக வேண்டுமா?
எனவேதான் நாம் நம் மொழியைக் கற்க வேண்டும். நாமே புரிந்து கொள்ள முயல
வேண்டும்.
இங்கு மொழியை அண்டவிடாமல், ஆர்வத்தைக் கொல்லும் அரசியல் உள்ளது. இப்போது
புரிகிறது ஏன் திருமால் கூர்மவதாரம் எடுத்தார் என்று :-)
நா.கண்ணன்
நம் கையில் உள்ள சரக்கைப் புரிந்து கொள்ள இத்துணை தூரம் போக வேண்டுமா?
எனவேதான் நாம் நம் மொழியைக் கற்க வேண்டும். நாமே புரிந்து கொள்ள முயல
வேண்டும்.இங்கு மொழியை அண்டவிடாமல், ஆர்வத்தைக் கொல்லும் அரசியல் உள்ளது. இப்போது
புரிகிறது ஏன் திருமால் கூர்மவதாரம் எடுத்தார் என்று :-)
| மிக ஆழமான அலசல்.தொடர வேண்டுகிறேப் க http://www.kamalagaanam.blogspot.com --- On Wed, 5/12/12, N. Kannan <navan...@gmail.com> wrote: |
இவர்கள் தமிழ் மரபினரான அசுரர் வழி வந்தோர் என்று சர்க்கார் கூறியதை நான் ஏற்கெனவே இட்டுள்ளேன்.
“There is still another clan from this Koyel river basin – the Asuras. They originated here and developed their own separate culture. Later they left and headed northwest in the direction of Europe. A few words from their language can still be found among the Gypsies of central Asia and in the Romansch language of Europe.
[அருமை சேஷாத்ரிகோயல் நதி பிராமினி ஆற்றுடன் சேரும் rourkela பகுதியில் நான் எழு வருடம் தொடர்ந்து ஆற்று நீர் இரைப்பு திட்டத்தில் உபயா என்ற அமைப்பிற்காக நான் சார்ந்த bargaarh கரும்பு தொழிற்சாலை திட்டத்திற்காக ஒரிசா பீகார் jaarkaand எல்லையில் பணி புரிந்து இருக்கிறேன்
அங்கு உள்ள பழங்குடிகள் கோலா என்ற திராவிட பழங்குடியை சேர்ந்தவர்கள் புலியை வணங்கும் தன்மையும் , அவர்கள் பேச்சில் அறுபது சதவிதம் பழந்தமிழ் இருக்கும் ]
இதில் பெரிது படுத்த ஒன்றுமில்லை.
துரியோதனனும், வீமனும் பலராமரிடம் ஆயுதப் பயிற்சி பெற்றனர்.
துரியோதனனின் மகள் லக்ஷ்மணையைக் கண்ணபிரானின்
மகன் ஸாம்பன் மணந்தான். கண்ணனின் படை துரியோதனனுக்கு
வசமானது. கண்ணபிரானிடம் விரோதம் பாராட்டிய ருக்மி
தன் தங்கை ருக்மிணியிடம் கொண்ட பாசத்தால் ப்ரத்யும்னனை
மாப்பிள்ளையாக்கிக் கொண்டான். மண உறவு அடுத்த
தலைமுறையிலும் தொடர்ந்தது. அதே ருக்மியை
பலராமர் கொன்றது அடுத்த கதை.
ராவணன் செய்த சோதிட நூல் வடபுலத்தில்
வழக்கத்தில் உள்ளது -
http://www.devshoppe.com/ravansamhita.html
ராவணன் பல்கலை வித்தகன் என்பதை வால்மீகி முனிவர்
மறைக்கவில்லை.
பரசுராமரிடம் போர் செய்த கார்த்தவீர்யார்ஜுநரின்
வழிவந்தோர் இன்றும் உள்ளனர். விஷ்ணு புராணம்
இவரது பெருமை பகர்கிறது. சேங்காலிபுரத்தில்
கார்த்தவீர்யார்ஜுந யந்திரம் பிரதிட்டையாகியுள்ளது.
ஸ்ரீராமனை தரிசித்தவாறே உயிர் துறந்த அரக்கர்களை
கோஸ்வாமி போற்றியுள்ளார்; அமரரும், அரக்கரும்
நமக்குள்ளேயே இருக்கின்றனர்
தேவ்
On 6 Dec, 10:04, "s.bala subramani B+ve" <sunkenl...@gmail.com> wrote:
> அவர்களின் பல பெயர்கள் மகாபாரத பெயர்களாக இருக்கும் துரியோதனன் ,துச்சாதனன்
> ஏகலைவன் என்று பாண்டவர்களுக்கு எதிரான பேர்களாக நிறைய இருக்கும்
>
> 2012/12/6 s.bala subramani B+ve <sunkenl...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நன்றி கமலம்.
இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் மிகுந்த வித்தியாசமுள்ளது. மனித
வளர்ச்சியின் தொடக்க நிலையிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியானதொரு
சரித்திரம் உள்ளது. அதன் மகிமையை இந்தியர்களாம் மட்டுமே உள்ளத்தளவில்
ஆழமாக உணரமுடியும். ஏனெனில் பிரபஞ்சம் தொடங்கியதிலிருந்த கதையை ‘ஹரிகதா
காலாட்சேபங்களில்’ குழந்தைப் பருவத்திலிருந்து கேட்கிறோம். உண்மையில் என்
ஆர்வத்தைத் தூண்டி விட்டர் ஸ்ரீஹரிஜி. அப்போது அவர் கல்லூரி மாணவர்.
கிருஷ்ண பக்தையான என் மாமியார் மீது அவருக்கு நிரம்ப மரியாதையுண்டு.
எங்கள் வீட்டிலேயெ பாகவத சப்தாகம் செய்தார். அதில் முதல் அத்தியாயம்
முழுவதும் பிரபஞ்சத்தோற்ற வளர்ச்சி பற்றியது. அவர் கொடுத்த விவரங்களைக்
கேட்டு ஆடிப்போய்விட்டேன். இத்தனை விஷயங்கள் நம் பண்டைய
இந்தியர்களுக்குத் தெரிந்திருந்ததா? என்று. இப்படி உலகில் வேறு எங்கும்
வானவியல் வேடிக்கையாகப் பாமரனுக்கும் புரியும் வண்ணம் கதை, கதையாய்ச்
சொல்வதில்லை. இது மிகை இல்லாத உண்மை. இதுதான் ஒரு இந்தியனை
மற்றோரிடமிருந்து பிரிக்கிறது.
அடுத்த நிலையில் லண்டன் ஸ்வாமி நாராயண் கோயிலில் பிரம்மாண்டமான ஒரு
Indian Science Exhibition உள்ளது. அதில் மிக அழகாக பல விஷயங்களைக்
கோர்த்துள்ளனர். அது போன்ற ஒரு முயற்சி தமிழ்ப் பனுவல்களை அடிப்படையாகக்
கொண்டு உருவாக்க வேண்டுமென்று இதே மன்றத்தில் நான் முன்பு எழுதியுள்ளேன்.
ஸ்வாமி நாராயண் கோயிலில் உள்ள இந்திய அறிவியல் பாடம் பலரை கண் விழிக்க
வைத்துள்ளது. இது போல் ஆப்பிரிக்காவிலோ, சீனாவிலோ இல்லை. நமக்குத்தான்
இந்தப் பாரம்பரியம் இருக்கிறது. இதையறிந்துதான் மேலை நாட்டு அறிஞர்கள்
இந்தியா வரத்தொடங்கினர். உதாரணமாக வானவியல் பற்றிய ஒரு
அமெரிக்கத்தொலைக்காட்சியில் பேசும் கார்ல் சாகன் என்ன சொல்கிறார் எனும்
விழியம் நம் சேகரத்தில் உள்ளது.
http://video-thf.blogspot.de/2008/06/blog-post_30.html
ஒரு பிரிவற்ற தொடர் கலாச்சாரம் இந்தியாவில் உள்ளது. இது கண்டு
பூரித்துப்போக வேண்டாமோ? அதை விடுத்து சில்லறைத்தனமாக நம்முள் பிரிவு
சொல்லி வீணே காலத்தைக் கழிக்கிறோம். பிரிஷதர்ஷியின் பேச்சு, இதை அறிவியல்
திறத்தோடு சொல்ல முடியும் என்று காட்டியது. எனது பாசுர மடல்களையும்,
சிறுகதைகளிலும் அறிவியல்-ஆன்மீக இணைப்புப் பற்றி தொடர்ந்து பேசியிருப்பது
தெரியும். அதைத்தான் அவரும் செய்கிறார். இந்த ஜினோமிக்ஸ் தரவுகள் நான்
அறியாதன. மெல்ல, மெல்ல முழுத்தோற்றமும் பொலிவுறும்.
இந்தியா முழுவதும் சுற்றி அலையும் பாலு, சாஸ்திர அறிஞர் தேவ்,
இலக்கியத்தேடல் ஹரிகி, வைணவ மரபு பற்றி ஆழமாக அலசும் அரங்கன், சங்க
இலக்கியத் தரவுகள் தரும் முனைவர் ராஜம் (அவரது பௌத்தம் குறித்த தரவுகள்
இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன) தமிழ் மண்ணின் வேர் காணும் சேசாத்திரி
இப்படியொரு கோஷ்டி சேர்ந்திருப்பதும் தெய்வ சங்கல்பம்தான் போலும்.
இன்னும் பலரும் அவ்வப்போது தரவுகள் அளித்தவண்ணமுள்ளனர். மிகவும் மகிழ்வாக
உள்ளது.
நா.கண்ணன்
> Therefore,
> you are absolutely right,
> everyone should seriously study Sanskrit:
> I am sorry I have not yet had to time to do it in this life :-(
>
Thank you so much Jean-Luc [ழான்]
Though I was born in India I never studied Sanskrit. It's a pity
(தமிழறிவும் போதாது என்பது வேறு விஷயம் :-) உங்களுக்கு தமிழ்
இலக்கணத்தில் உள்ள பரிட்சயம் எங்களில் பலருக்குக் கிடையாது என்பது உண்மை.
இது பற்றி சிந்திப்பதே பாக்யம் என்று இருக்கிறேன் ;-)
நா.கண்ணன்
--
| பால சுப்ரமணியம் நிங்ஙளை நேரம் கிட்டும்போதெல்லாம் விடாது வாசிப்பவள் ஞான். பயனுள்ள பல தகவல்கள் நிங்ஙளிடமிருந்து அறியக்கிட்டும்போது மகிழ்ச்சி யாக உள்ளது .அன்புடன் கமலம் http://www.kamalagaanam.blogspot.com --- On Thu, 6/12/12, s.bala subramani B+ve <sunke...@gmail.com> wrote: |
|
| நிங்ஙள் எழுதி முடியுங்கள். மிக ஆழமாகப்பேசலாம் இடையில் கேள்வி கேட்டால் சரளம் போய்விடுமோ என்றஞ்சுகிறேன். நாங்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய உரை இது. கமலம் http://www.kamalagaanam.blogspot.com |
--- On Thu, 6/12/12, N. Kannan <navan...@gmail.com> wrote: |
|
இம்முறை சுபாவுடன் கிருஷ்ணகிரியில் அலைந்த போதுதான் முதுகற்கால,
பழங்கற்கால சமுதாயம் பற்றி அறிய முடிந்தது. இன்னும் அறிஞர்களால் தெளிவு
பெறாத ஒரு விஷயம் பெருங்கற்கால வாழ்வியல் என்பது (ஓவியங்கள் தீட்டுவது,
கல்லறைகள் சமைப்பது) இங்கிலாந்து தொடங்கி, இந்தியா, கொரியாவரை ஒரே மாதிரி
இருப்பது. கிருஷ்ணகிரி குகைகளில், செட்டிநாடு திருமலையில் நான் கண்ட
ஓவியங்கள் அச்சாக எகிப்திய ஓவியங்கள் போல் இருப்பது எதைக் காட்டுகிறது?
இவர்களுக்கு கடல் பயணம் தெரிந்து இருந்தது என்பதைத்தான். இதை என்
கணையாழிக் கட்டுரையில் சொல்லியுள்ளேன். இங்குதான் கடல்சார்
மானுட/கலாச்சாரப் பரவல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய ரத்தம்
கொரியாவிற்குப் போனது நிச்சயம் கடல்வழி என்று தொன்மங்கள் சுட்டுகின்றன.
எனவே தமிழ்நாட்டில் உள்ள கற்காலச்சான்றுகளை முறையாகப் பாதுகாத்து
ஆராய்ச்சி செய்ய வேண்டும். அது இந்த சிந்து சமவெளி விவாதத்திற்கோர்
முற்றுப்புள்ளி வைக்கும்.
நா.கண்ணன்
2012/12/6 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:
> இலக்கியங்கள் வடசெலவு தென் செலவு பற்றி பேசுகின்றார்கள்
>
> ஒட்டகம் ,குதிரை உலக நிலைகளை பற்றி தெளிவாக பேசுகிறது
>
கடலர்கள் என்று அழைக்கப்பட்ட பாண்டியர்கள் உலகமெங்கும் இருந்ததற்கான தரவுகள் வந்த வண்ணம் உள்ளனமிகவும் வியப்பான செய்தி ,கடல் நீரோட்டங்களின் தன்மையும் ஆமைகளின் கடல் வழி பயணங்களும் , மீனவர்கள் புரிந்து கொண்டு சுறா மற்றும் திமிங்கல வேட்டை செலுத்தும் கடல் நீரோட்டங்களும்அவர்கள் தங்கிய கடற்கரைகளும் அதை ஒட்டிய நிலங்களும் என்று ஆய்வு செய்து வரும் போதுநமது ஈழதமிழர்கள் புகலிடம் சென்ற அணைத்து நாடுகளும் ஒன்று கொண்டு தொடர்பு உடையதாக முதல் கட்ட ஆய்வுகளில் தெரிகின்றதுமுதல் புலம் பெயர்ந்த நிகழ்வுகள் கடல் வழியாக தான் நடந்தது
மூன்று பக்கமும் கடல் சூழ்ந்து மூன்று சங்கங்களைக் கடலுக்கு இரையாக்கிய ஆழ்கடலில் தமிழன் தொன்மை பற்றிய ஆதாரங்கள் அமிழ்ந்து கிடக்கின்றன
ஆதிமனிதனின் எச்சம் நிச்சயம் ஏதாவது ஒரு கடலில் மூழ்கிக் கிடக்கும்