உடற்பயிற்சி

280 views
Skip to first unread message

செல்வன்

unread,
Feb 28, 2012, 1:38:14 AM2/28/12
to mintamil, தமிழமுதம், பண்புடன், தமிழ் சிறகுகள்

உடல்பயிற்சி என்றால் சும்மா ஜாகிங், வாக்கிங் போன்ற ஏரோபிக் பயிர்சியுடன் (Aerobic) முடிந்தது என பலரும் நினைத்துவிடுகிறார்கள். ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் எனப்படும் பளு தூக்குதல்/பாடி பில்டிங் வகை பயிற்சிகளை 1) பலரும் அறிவது இல்லை அல்லது 2) தவறாக புரிந்து வைத்துள்ளனர்.

ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் ஏன் வேண்டும்?

ஆரோக்கியமான உடலின் அடிப்படை மூன்று. 1) ஆரோக்கியமான உணவு 2) ஏரோபிக் பயிற்சி 3) ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங். ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் உங்கள் உடலின் மெடபாலிசத்தை அதிகரிக்கும்.ஏரோபிக் பயிற்சிகளை செய்தால் அந்த பயிர்சிகளை செய்யும்போது மட்டும்தான் கலோரிகளை எரிப்பீர்கள்.ஆனால் ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் செய்தால் உங்கள் உடலின் மெடபாலிசம் அதிகரிக்கும்.அதன்பின் 24 மணிநேரமும் உங்கள் உடல் தானாக காலரிகளை எரிக்கும்.

ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் செய்தால் உடல் எடை அதிகரிக்க மட்டும் செய்யும் என பலரும் தவறாக கருதுகின்றனர். இது தவறு.ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் உடல் எடை குறைக்கவும் பயன்படும். சொல்லபோனால் உடல் எடையை குறைப்பதில் வெறும் ஏரோபிக் பயிற்சிகலை விட ஏரோபிக்+ ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் உள்ள ரெஜிமென் அதிக பலன் அளிக்கும்.

ஆக நீங்கள் ஆணோ, பெண்ணோ, இளவயதோ, சிறுவயதோ உங்கள் நோக்கம் எதுவானாலும் உதாரணமாக 1) எடை இழப்பு, 2) எடை அதிகரிப்பு 3) ஆரோக்கியம் பேணுதல் 4) தோற்ற அழகை அதிகரித்தல் ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் அதில் முக்கிய பங்கு வகிக்கவேண்டும்.

ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங்குக்கு அதிக நேரம் செலவாகும், அதிக சிரமபடவேண்டும் என பலரும் கருதுகின்றனர். அது தவறு. உங்கள் நோக்கம் மிஸ்டர் ஒலிம்பியாவாக ஆவதனாலும் சரி அல்லது சர்க்கரை வியாதியை குணப்படுத்துவதாக இருந்தாலும் சரி ஒரு நாளுக்கு 15 நிமிடம் விதம் வாரம் வெறும் மூன்றே நாட்கள் ஜிம்மில் செலவழித்தால் போதும்.வாரம் வெறும் 45 நிமிடம்....இது நம்ப கடினமாக இருக்கும்.காரணம் தினமும் மூன்று மணிநேரம் ஜிம்மில் எடை தூக்குபவர்கள் உண்டு.அவர்களை பார்த்து பலரும் பயந்துவிடுகிறார்கள்.ஆனால் அது தேவையில்லை, அது அவர்களுக்கு எந்த பலனையும் அளிப்பதும் இல்லை.அத்தகைய உடர்பயிற்சி அவர்களை விரைவில் பர்ன் அவுட் செய்து ஜிம்மை விட்டு துரத்திவிடும். எளிமையான ஆனால் பவர்புல்லான ஸ்கெட்யூல் ஒன்று தருகிறேன்.அதை பின்பற்றினால் போதும். நீங்கள் மிஸ்டர் இந்தியா வரை செல்ல அந்த ஸ்கெட்யூலே உதவும்.

நாள் 1:

பெஞ்ச் பிரஸ் 1 செட்

க்ளோஸ் க்ரிப் பெஞ்ச் பிரஸ் 1 செட்


நாள் 2

சின்ஸ் (Chins) எனப்படும் புல் அப்ஸ் 1 செட்

பென்ட் ஓவர் பார்பல் ரோ (Bent over barbell row) 1 செட்

க்ளோஸ் க்ரிப் சின்ஸ் (Close grip chins) அல்லது பார்பெல் கர்ல் Barbell curl 1 செட்

நாள் 3

ஸ்க்வாட் 1 செட்

ஸ்ட்ரெய்ட் லெக் டெட் லிஃப்ட் 1 செட்

கால்ஃப் ரைஸ் 1 செட்

வெறும் எட்டே செட் தானா என கேட்கவேண்டாம். ஒரே நாளில் பெஞ்ச் பிரஸ் மட்டும் 10 செட் செய்பவர்கள் உண்டு.அது முட்டாள்தனம்.மேலே சொன்ன 8 செட்களையும் ஒரு வாரத்தில் அல்லது 8, 9 நாட்களுக்குள் செய்தால் போதும்.உடனே சரி என ஜிம்முக்கு கிளம்ப வேண்டாம்:-)..எப்படி செய்ய வேண்டும், ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங்கின் அறிவியல், கினிஸியாலஜி துறை பற்றி மேலே எழுதுகிறேன்.அதன்பின் உடல்பயிற்சி ரெஜிமெனை துவக்கலாம்:-)

--
செல்வன்

"ஒன்று அணு உலை நம் ஊரில் அமையவேண்டும். அல்லது அணு உலை இருக்கும் ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க, பொருளாதார அகதிகளாக நாம் குடியேற வேண்டும்.இரண்டில் எது தேவை என நாம் முடிவு செய்யும் காலம் நெருங்கிவிட்டது" - செல்வன்




செல்வன்

unread,
Feb 28, 2012, 3:47:21 AM2/28/12
to panb...@googlegroups.com, tamizh...@googlegroups.com, mintamil


2012/2/28 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
நி​றைய விசயங்கள் அறிந்து ​கொள்ள ​வேண்டியிருக்கிறது. மறவாது ​தொடருங்கள்..


நன்றி பயணியாரே. நிச்சயம் தொடர்ந்து எழுதுகிறேன்

தமிழ்ப் பயணி

unread,
Feb 28, 2012, 2:06:17 AM2/28/12
to tamizh...@googlegroups.com, mintamil, பண்புடன்
நி​றைய விசயங்கள் அறிந்து ​கொள்ள ​வேண்டியிருக்கிறது. மறவாது ​தொடருங்கள்.. 

2012/2/28 செல்வன் <hol...@gmail.com>

உடல்பயிற்சி என்றால் சும்மா ஜாகிங், வாக்கிங் போன்ற ஏரோபிக் பயிர்சியுடன் (Aerobic) முடிந்தது என பலரும் நினைத்துவிடுகிறார்கள். ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் எனப்படும் பளு தூக்குதல்/பாடி பில்டிங் வகை பயிற்சிகளை 1) பலரும் அறிவது இல்லை அல்லது 2) தவறாக புரிந்து வைத்துள்ளனர்.


--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி


Swarna Lakshmi

unread,
Feb 28, 2012, 6:18:31 AM2/28/12
to mint...@googlegroups.com
Good One Selvan, complenting my Nutrition thread. Is this common for both sex or only for men...?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


Innamburan Innamburan

unread,
Feb 28, 2012, 7:36:58 AM2/28/12
to mint...@googlegroups.com
Selvan, Good Initiative. 


2012/2/28 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

விஜயராகவன்

unread,
Feb 28, 2012, 8:09:44 AM2/28/12
to மின்தமிழ்
இப்போ புது ஆராய்ச்சி என்ன சொல்றதுனா, ஒவ்வொரு வாரமும் 3 நிமிடங்கள்
அதிதீவிர அப்யாசம் போதுமாம். அதிதீவிர என்றால் உங்களால் எவ்வளவு வேகமாக
சைக்கிள் ஓட்ட முடியுமோ அல்லது எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ. ஒரு நாளைக்கு
3 தடவை 20 விநாடி, அதைப்போல் வாரத்திற்க்கு 3 தடவை போதுமாம். அதனால் நம்
இன்சுலின் பயன் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏரோபிக் பயனும் ஏற்படும்.

இதுவரை நான் வாரத்திற்க்கு 6 மணிகளாவது ஜிம்மில் அப்யாசம் செய்கிறேன்.
இனிமேல் 1 மணி போதும்போல இருக்கே. ஜிம்மே வேண்டாம், வேகமாக சைக்கிளில்
போனால் போதும்போல் இருக்கு.


http://www.bbc.co.uk/news/health-17177251

வகொவி

sharadha subramanian

unread,
Feb 28, 2012, 8:27:27 AM2/28/12
to mint...@googlegroups.com
தினமும்,காலையில் இரண்டு கி.மி.தூரம் நன்றாக் நடந்தாலே போதும்
60வது வயதுக்கு மேல் ஜிம் அவ்வளவுனல்லதல்ல,நடக்கும்போதே கைகளையும் சுழற்றி நன்றாக் வீசி நடக்கவேண்டும் நடக்கும்போது கூட
வருபவர்களுடன் பேசக்கூடாது,செல்ஃபோன் எடுக்கவேண்டாம்,தினமும் நடை ப்யிற்சி உடல் எடையை நன்றாகக்குறைக்கிறது சர்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கிற்து உணவில் கொள்ளூ சேர்த்துக்கொள்வது நல்லது,
1கொள்ளுப்பொடி2கொள்ளூரசம்3கொள்ளுசுண்டல்4கொள்ளூகுருமாஎன்
வகைவகையாக் வாரம் ஒரு முறைசேர்த்துகொள்வது நல்லது அரிசி
குறைவாகவும் சாப்பிடலாம் கேழ்வரகும் அப்பபோசாப்பிடலாம்

Innamburan Innamburan

unread,
Feb 28, 2012, 8:29:13 AM2/28/12
to mint...@googlegroups.com
கொள்ளு சாப்டா, குதிரை மாதிரி ஓடமுடியும்.


2012/2/28 sharadha subramanian <shara...@yahoo.co.in>

--

sharadha subramanian

unread,
Feb 28, 2012, 8:33:35 AM2/28/12
to mint...@googlegroups.com


--- On Tue, 28/2/12, Innamburan Innamburan <innam...@gmail.com> wrote:
இ சார் நான் சொன்னது இந்தியக்கொள்ளூ ஒங்க ஊர் கொள்ளு இல்ல
From: Innamburan Innamburan <innam...@gmail.com>
Subject: Re: [MinTamil] உடற்பயிற்சி
To: mint...@googlegroups.com
Date: Tuesday, 28 February, 2012, 6:59 PM

Innamburan Innamburan

unread,
Feb 28, 2012, 10:40:40 AM2/28/12
to mint...@googlegroups.com
Top class repartee
B68.gif

S.R.M.Jhayaraaman

unread,
Feb 28, 2012, 11:06:03 AM2/28/12
to mint...@googlegroups.com
dear friends:
Vanakkam.
If some one of you could inform me how to prepare messages in tamil, i
will do that..
now reg physical exercises:
1. The simplified physical exercises taught free of cost in every
manavalakalai mandram in Tamil nadu and elsewhere is a complete
package that has simple yogasana exercises that cares for every organ
in our body..it takes 45-50 minutes for the beginner but in due course
you could do it in 30 minutes..as you all know, for sure, tamil gods
called siddhars insisted on doing exercises daily..please read
thirumanthiram which highlights the improtance of exercise..this is
tamil vedham, the complete treatise on yoga and meditation techniques
which in my humble opinion shoiwcases the greatest level of
consciousness that prevailed during their rimes...I am doing it daily,
mostly, and a testimony of how much good it could bring in..

2. Today the well known cardiac surgeon told a very important
information. He said regular exercises helps to drive away blood
pressure related problems..he also said that exercises combined with
meditation is the surest way of living 100 years without heart
problems...

3. I am not sure earlier writings on meditation, the art mastered so
well by the siddhars and so should wait until someone says it could be
information..


I thought of writing on medical benefits of doing exercises but am
afraid it may take your time..

thank you for your kind patience..

Jayaraman

2012/2/28 விஜயராகவன் <vij...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
SRM..Jhayaraaman MFSc MA BL Ph.D
Professor and Head
Deparment of Fisheries Economics and Management
Fisheries College and Research Institute
Tamilnadu Veterinary and Animal Sciences University
Thoothukudi 628008
Tamilnadu, INDIA
Mobile number (0) 94891 20392

Geetha Sambasivam

unread,
Feb 28, 2012, 11:45:00 AM2/28/12
to mint...@googlegroups.com
http://thamizha.com/ekalappai-anjal 

try this one. Best Wishes.

செல்வன்

unread,
Feb 28, 2012, 3:15:09 PM2/28/12
to mint...@googlegroups.com


2012/2/28 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

Good One Selvan, complenting my Nutrition thread. Is this common for both sex or only for men...?


இரு பாலாருக்கும் பொருந்தும் ஸ்வர்ணா. ஆனால் ஸ்கெட்யூலில் ஒவ்வொருவர் உடல்நிலை, வயது ஆகியாவற்றை பொறுத்து சில மாற்றங்கள் இருக்கும். இனி அதையும் தெளிவுபடுத்தியே எழுதுகிறேன்

செல்வன்

unread,
Feb 28, 2012, 3:33:17 PM2/28/12
to mint...@googlegroups.com
Thanksஇ sir

2012/2/28 Innamburan Innamburan <innam...@gmail.com>

செல்வன்

unread,
Feb 28, 2012, 3:39:58 PM2/28/12
to mint...@googlegroups.com
2012/2/28 விஜயராகவன் <vij...@gmail.com>
இப்போ புது ஆராய்ச்சி என்ன சொல்றதுனா, ஒவ்வொரு வாரமும் 3 நிமிடங்கள்

அதிதீவிர அப்யாசம் போதுமாம். அதிதீவிர என்றால் உங்களால் எவ்வளவு வேகமாக
சைக்கிள் ஓட்ட முடியுமோ அல்லது எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ. ஒரு நாளைக்கு
3 தடவை 20 விநாடி, அதைப்போல் வாரத்திற்க்கு 3 தடவை போதுமாம். அதனால் நம்
இன்சுலின் பயன் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏரோபிக் பயனும் ஏற்படும்.



இருக்கலாம். ஆனால் நான் இதுவிஷயத்தில் சற்று கன்சர்வேடிவ். வாரம் மூன்று நாள் உடல்பயிற்சி செய்கிரேன்,1 ம்ணிநேரம் ஏரோபிக்ஸ் (4 மைல் டிரெட்மில்லில்) மற்றும் ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் 15 நிமிடத்துக்கு.
இது போன்ற கன்சர்வேடிவான ஸ்கெட்யூல்கள் டிரைட் அன்ட் டெஸ்டட். ஆனாலும் புதிய வழிமுறைகளை முயல்வதில் தவறில்லை என்பது என் கருத்து. நான் போகும் ஜிம்மில் புதிய இயந்திரங்கள், டிரெய்னிங் முறைகள் நிறைய உண்டு. ஆனால் 1993ல் கோவையில் மாதம் 35 ரூபாய் பீஸ் கட்டிய ஜிம்மில் என்ன உடல்பயிர்சிகளை செய்தேனோ அதை மட்டுமே இப்போதும் செய்கிறேன். காரணம் அவை பேஸிக் எக்சர்சைஸ்கள். எக்காலத்துக்கும் நிலைத்திருப்பவை.ஸ்மித் மெஷினில் ஸ்க்வாட் அடிப்பதுக்கும், பார்பெல்லில் அடிப்பதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

செல்வன்

unread,
Feb 28, 2012, 7:38:45 PM2/28/12
to mint...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம், தமிழ் சிறகுகள்
மஸில் (சதை) வளரும் விஞ்ஞானம் என்ன?'

கீழே இருக்கும் புகைப்படத்தை பார்க்கவும். இது போன்ற மஸில் வளர்ச்சி அமைவது ஏன்?

Inline image 1


நம் உடலில் எலும்பை இரு விதமான பொருட்கள் மூடியுள்ளன. ஒன்று கொழுப்பு (FAT), இன்னொன்று சதை (Muscle)

இதில் மஸில் வளர, வளர நம் உடல் வலிமையடையும். மேலே இருக்கும் புகைப்படம் போல மஸில் வளர்ந்து நம் எலும்புகளை மூடும். கொழுப்பு சேர சேர ஊளைசதை என சொல்லபடும் உடலமைப்பு வாய்ந்து உடல் வலு இழக்கும்.

மஸில் ஏன் வளர்கிறது?

அது தானாக வளராது. அது வளர காரணம் தேவை. நாம் ரெசிச்டென்ஸ் டிரெய்னிங் எனப்படும் எடை தூக்கும் பயிற்சிகளை செய்வதால் மஸில் வளர்வதற்கான காரணத்தை அளிக்கிறோம். சும்மா எடை தூக்கினால் போதாது. மஸிலை சேலஞ்ச் செய்யும் அளவு எடையை தூக்க வேண்டும். அதுவும் ஒரு தரம் தூக்கினால் போதாது. ஒரு தரம் தூக்கினால் ஸ்ட்ரெங்த் (பலம்) மட்டுமே வளரும்.அதுவும் ஒரு குறிப்பிட்ட எல்லைவரைதான். 

மஸிலை சேலஞ்ச் செய்ய குறைந்தது ஐந்து தடவை தூக்க கூடிய அளவு எடையை தூக்க வேண்டும். ஐந்துக்கு கீழே ரெபிடிஷன்கள் போனால் அது மஸிலை வளர்ப்பதை விட ஸ்ட்ரெங்த்தை வளர்க்கிறது. எட்டு தரத்துக்கு மேல் ஒரு எடையை தூக்கினால் அது லைட் வெயிட் ஆகி மஸிலை சேலஞ் செய்வதில்லை.

ஆக ஒரு செட்டில் குறைந்தது ஐந்து, அதிகபட்சம் எட்டு. இந்த அளவுகோலுக்குள் அடங்கும் அளவு எடையை தூக்க வேண்டும். உதாரணமாக பெஞ்ச் பிரஸ் செய்கிறீர்கள். ஐம்பது கிலோவை ஐந்து தரம் தூக்குகிறீர்கள். அந்த பயிற்சி உங்கள் பெக்டோரலிஸ் மஸிலை (pectoralis major muscle) கடுமையாக வேலை வாங்குகிறது.அதன் பின் அந்த பெக்டோரலிஸ் மஸில் விழித்தெழுகிறது.

Inline image 2

Bench Press: King of upper body exercises

Inline image 3

உடல்பயிற்சி முடிந்தபின் அன்று இரவு புரதம் நிரம்பிய உணவை உட்கொள்கிறீர்கள். ஜீரணத்தின்போது அந்த புரதம் தனக்கு வேண்டும் என பெக்டோரலிஸ் மஸில் கேட்டு வாங்குகிறது. நீங்கள் இரவு உறங்கும்போது அந்த புரதம் பெக்டோரலிஸ் மேஜரை சென்று அடைந்து எடை தூக்கியதால் உடைந்த திசுக்களை ரிப்பேர் செய்து, புதிய திசுக்களை உருவாக்குகிறது.தொடர்ந்து இரு அல்லது மூன்று இரவுகள் நல்ல உறக்கம் மற்றும் புரதசத்து நிரம்பிய உனவை உட்கொண்டால் போதும் பெக்டோரலிஸ் மேஜர் வளர்கிறது. அடுத்த வாரம் நீங்கள் ஜிம்முக்கு சென்று அதே ஐம்பது கிலோவை தூக்கினால் இப்போது உங்களால் அதை ஐந்துக்கு மேற்பட்ட தடவை தூக்க முடியும்.

ஆக ஒவ்வொருவாரமும் முந்தைய வாரம் தூக்கியதை விட அதிக முறை எடையை தூக்கியும், அல்லது அதிக எடையை தூக்கியும், புரத உணவை உண்டும், நன்கு உறங்கியும் மஸில் வளர்கிறது.

ஆக மஸில் வளர்வதற்கான அடிப்படை 1) எடை தூக்குதல் 2) புரதம் 3) ஓய்வு, நல்ல உறக்கம்.

அதனால் தான் வாரத்துக்கு ஒரே ஒரு முறை, ஒரே ஒரு செட் போதும் என்பது. ஒரெ செட்டில் மஸில் சேலஞ் ஆகும்.அதன்பின் குறைந்தது மூன்று,நான்கு நாட்களாவது அதே மஸில் க்ரூப்பை மீண்டும் வேலை வாங்க கூடாது.அதாவது பெஞ்ச் பிரஸ் செய்தால் மீண்டும் மூன்கு,நான்கு நாட்களுக்குள் மீண்டும் பெஞ்ச் பிரஸ் செய்யவே கூடாது.பெக்டோரலிஸ் மேஜர் மஸிலை வேலைவாங்கும் வேறு எந்த பயிர்சியையும் செய்ய கூடாது.

புரதத்துக்கும் மஸிலுக்கும் என்ன தொடர்பு? புரதம் நிரம்பிய உணவு எது?அதனால் விளையும் பலன்கள் என்ன என்பதை நாளை பார்ப்போம்.

sk natarajan

unread,
Feb 28, 2012, 8:35:03 PM2/28/12
to tamizhs...@googlegroups.com, mintamil, தமிழமுதம், பண்புடன்
பயனுள்ள இழை தொடருங்கள் ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

sk natarajan

unread,
Feb 28, 2012, 8:39:02 PM2/28/12
to tamizhs...@googlegroups.com, mintamil, தமிழமுதம், பண்புடன்
நிறையத் தகவல்கள் -  தொடர்ந்து வாசிக்கின்றேன்
இதை படித்த பிறகாவது எனக்கு சுறு சுறுப்பு  வர வேண்டும்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



On Tue, Feb 28, 2012 at 12:08 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:

Hari Krishnan

unread,
Feb 28, 2012, 9:19:16 PM2/28/12
to mint...@googlegroups.com


2012/2/28 sharadha subramanian <shara...@yahoo.co.in>

இ சார் நான் சொன்னது இந்தியக்கொள்ளூ ஒங்க ஊர் கொள்ளு இல்

பேசாம ஒரு லிட்டர் பெட்ரோலையோ டீசலையோ குடித்துவிட்டால் இன்னும் வேகமாக ஓட முடியும்.


--
அன்புடன்,
ஹரிகி.

rajam

unread,
Feb 28, 2012, 11:51:04 PM2/28/12
to mint...@googlegroups.com, செல்வன்
அன்பின் செல்வன்,
இது (உடற்பயிற்சி) எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு. இங்கே நான் சொல்வது என் சுய புராணத் தம்பட்டம் இல்லை. என் அனுபவம் பிறருக்கும் உதவலாம் என்ற முறையில் சில கருத்துக்களை மட்டும் இப்போது பகிர்ந்துகொள்கிறேன்.
+++++++++++++++++++++++++++++++
இந்தப் பகுதியை "நறுக்" செய்துவிடலாம்! :-)

சிறுவயதிலிருந்தே இதில் எனக்குப் பைத்தியம், ஆனால் "பொம்பளெப்பிள்ளை" என்ற காரணத்தால் சில பல கட்டுப்பாடுகள் தலையிட்டுவிட்டன. அதனால் உடல் வளர்ச்சியில் தடை. அது போகட்டும். பின்னாளில் ... நல்லவேளை, கணவரின் ஊக்கத்தால், நீச்சல், டென்னிஸ், ஆங்கில நடனம் ... கற்றுக்கொண்டேன். டென்னிஸ் சரியாக வரவில்லை, கைகளில் பலமில்லைபோல. பள்ளிப் பருவமுதல் ... பிங்-பாங் (ping-pong) விளையாட்டில் என் front-hand serve-ஐ எதிராளியால் எளிதாகச் சமாளிக்க முடியாது. இன்றும் அப்படியே; ஆனால் back-hand serve செய்ய வலுவில்லை; அதனால் டென்னிஸ் பயிற்சியிலும் முன்னேற முடியவில்லை. ஆங்கில நடனத்தைத் தொடர வழியில்லை. ஆனால் ... நீச்சல் மிகவும் உதவியது. சிறுவயது உடல் வாகு தொடர்ந்தது. பின்னாளில் ... அமெரிக்காவில் உடற்பயிற்சிக் களமும், நடையும், ஜாக்கிங்கும் ... வழக்கமாகிவிட்டன. வெயில் காலத்தில் நீச்சலுக்குப் போவேன். 40-45 வயதிலும் தினமும் 5 மைல் ஜாக்கிங் போவேன். உடற்பயிற்சிக் களத்தில் 45 பவுண்டு எடையுள்ள இரும்பு வட்டத்தைத் தூக்கிக்கொண்டுபோய் அந்தக் கால் ப்ரெஸ் கம்பில் மாட்டி கால் ப்ரெஸ் செய்வேன் (60+ வயதிலும்). அண்மையில் (2010 ஜூலைத் தொடக்கமுதல்) இதெல்லாம் நின்றுவிட்டன ... கால் வீக்கத்தால்.  மருத்துவர் சொன்னது ... பரம்பரை உடல்வாகு ... சப்பட்டைப் பாதம் ... முதுகெலும்புத் தளர்ச்சி ... போன்றவை இடையூறு என்று. அதனால் வீட்டிலேயே என் உடற்பயிற்சி இப்போது தொடருகிறது. வீட்டிலேயே கையில் தூக்கிப் பயன்படுத்த என்று weights வைத்திருக்கிறேன். தரையில் படுத்துக்கொண்டு பயிற்சி செய்தும், நாற்காலியைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுந்திருந்தும், மாடிப்படி ஏறியும், பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போட்டும் ... என்னால் முடிந்தவரை என் உடம்பை அலட்டிவருகிறேன்! :-) இதெல்லாம் பற்றித் தனியாக எழுதினால் என் வயதுக்காரர்களுக்கு உதவும். இயன்றபோது சொல்கிறேன். என் பழைய கால (61 வயது) training chart-ஐயும் ஒருநாள் ஸ்கேன் செய்து போடுகிறேன். 61~62 வயதில் 125 பவுண்ட் உடல் எடை; உடற்பயிற்சிக் களத்தில் அசந்துபோனார்கள் -- இந்தியர்கள், அதிலும் முதிய பெண்கள், உடற்பயிற்சிக் களத்துக்கு வருவதில்லை. நான் அங்கே தனியாளாகத் துருத்தி நிற்பேன்.  
+++++++++++++++++++++++++++++++++ 
அது கிடக்க ... இளைஞர்களாகிய உங்களுக்கெல்லாம் மிகவும் முக்கியமானது ... கீழே:

மஸில் (சதை) வலுவை உறுதிப்படுத்த நீங்கள் சொன்னது எனக்குத் தலைகீழ்ப்பாடம் (குறிப்பாக, இங்கே ஜிம்மில் படித்தது). என் மகனையும் உடற்பயிற்சிக் களத்திற்குப் போகத் தூண்டினேன். அவன் போனபோது ... ஒரு பயிற்சியாளரிடம் மாட்டிக்கொண்டான்! நாங்கள் சைவ உணவு சாப்பிடுவதால் எங்களுக்குப் புரதச்சத்து கிடைக்காது என்று அந்தப் பயிற்சியாளர் சொல்லி ... அவன் கன்னா பின்னா என்று டப்பாவில் கிடைக்கும் புரதப் பொடிகளை (protein powder) வாங்கி, பாலிலும் தண்ணீரிலும் கலந்து சாப்பிடத் தொடங்கினான். அதெல்லாம் அவன் வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளவேயில்லை. வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு வளர்ந்த பிள்ளை. பிறகு 2~3 ஆண்டுகள் தொல்லைப்பட்டபின் இப்போது அவன் அந்த டப்பாப் பொடி ஒன்றும் பயன்படுத்துவதில்லை.
நான் அமெரிக்காவில் பார்த்தது:

1. ச தைத் திண்மையை உறுதிப்படுத்தவேண்டும் என்பதற்காக வேண்டி, புரதச் சத்தைத் தேடி, செயற்கையாக டப்பா உணவுகளைப் பயன்படுத்தவேண்டாம்.

2. பொதுவாக, டப்பா உணவுகளில் அடைக்கப்பட்டதை (ingredients) கவனித்துப் பாருங்கள். அதில் எல்லாம் எவ்வளவு உப்புச் சத்து, எவ்வளவு இரசாயனப் பொருள், இன்ன பிற இருக்கிறது என்று புரிந்துகொள்ளுங்கள். புரதச் சத்துக்கு என்ன உணவு தேவை என்று தெரிந்துகொள்ளுங்கள்.


3. நம்ம சாதாரண பாசிப்பயறும், பிற பயறுகளூம் போதும். அவை மிக நல்ல புரதச் சத்து கொடுக்கும்.

4. அவரவர் வீட்டு உணவுப் பழக்கத்தையே ... தேவையான மாற்றங்களுடன் ... உடற்பயிற்சிக் காலத்திலும் தொடரத் தடையில்லை.
**********************************************************

இந்தியாவில் எப்போதும் நான் கொண்டாடியது:

5. வீட்டில் செய்யக் கூடிய வேலைகளை எல்லாரும், ஆணோ/பெண்ணோ தயங்காமல் செய்யவேண்டும் -- அதாவது ... குனிந்து வீடு/வாசல் பெருக்குவது, அம்மி. ஆட்டுரல் பயன்படுத்துவது, துணி துவைப்பது, ... இன்ன பிற. ஆனால் ... இதையெல்லாம் செய்ய வீட்டில் உள்ள எல்லாரும் ஒத்துழைக்கவேண்டும்.
இன்னும் சொல்ல நிறைய இருக்கு, ஆனால் இது செல்வன் தொடங்கிய இழை. மேலும் குறுக்கிட விரும்பவில்லை. தனியாகச் சொல்கிறேன் (இயன்றபோது).
பிற பின்னர்,
அன்புடன்,
ராஜம் 

Tthamizth Tthenee

unread,
Feb 29, 2012, 12:12:46 AM2/29/12
to mint...@googlegroups.com
அதை விட மின்சார இணைப்பை நிரந்தரமாக உடலில்சொருகிக்கொண்டால் எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்கலாம், வலிமையாக ஓடலாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

 


2012/2/29 Hari Krishnan <hari.har...@gmail.com>
1A5.gif

செல்வன்

unread,
Feb 29, 2012, 12:38:54 AM2/29/12
to mint...@googlegroups.com


2012/2/28 sharadha subramanian <shara...@yahoo.co.in>

தினமும்,காலையில் இரண்டு கி.மி.தூரம் நன்றாக் நடந்தாலே போதும்
60வது வயதுக்கு மேல் ஜிம் அவ்வளவுனல்லதல்ல,நடக்கும்போதே கைகளையும் சுழற்றி நன்றாக் வீசி நடக்கவேண்டும் நடக்கும்போது கூட


நாம் அறுபது வயது யங்கா, அறுபது வயது ஓல்டா என்பது தான் பளுதூக்கும் பயிற்சி எந்த வயதில் தேவையில்லை என்பதை தீர்மானிக்கிறது:-)

80 வயது வரை பளுதூக்கும் பயிர்சிகளை செய்வது பரிந்துரைக்கபடுகிறது. அஃப் கோர்ஸ் என்ன மாதிரி பயிற்சிகள், என்ன வகை இன்டென்சிடியில் என்பது எல்லாம் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். மற்றபடி சீனியர் சிடிசன்ஸ் பளுதூக்கும் பயிர்சிகளை செய்வது அவர்களுக்கு வரும் எலும்பு இழப்பு, சதை இழப்பு போன்றவற்றை குறைக்கும். அன்றாட வாழ்க்கையில் அவர்களும் காய்கறி பை போன்றவற்றை தூக்க வேண்டி இருக்கும். நாற்காலி போன்றவற்றை நகர்த்த வேண்டி இருக்கும். வயதனால் உடலில் ப்ளெக்சிபிளிடி குறையும். சர்க்கரை போன்ற வியாதிகள் வரும். பளுதூக்குதல் பயிர்சியை உள்ளடக்கிய உடல்பயிற்சி ரெஜிமென் ஏஜிங் பிராசசை அப்படியே ரிவர்ஸ் செய்து எலும்பு இழப்பு, சதை இழப்பு போன்றவற்றை ஒழிக்கும்.

Progressive Resistance Strength Training Helps Older People In Daily Life



uscle strength decreases naturally as people age. This reduction in muscle strength could affect older adults carrying out daily activities. Progressive resistance strength training is a type of strength training that uses free weights, exercise machines, or elastic bands to strengthen muscles. Key to this type of this exercise is adjusting the resistance, or weight, according to the person's progress. This exercise can be prescribed to help older adults gain the strength necessary to carry out everyday activities such as walking, climbing stairs, bathing or doing housework.

"Older adults seem to benefit from this type of exercise even at the age of 80, and even with some type of health condition. The data support the idea that muscle strength is largely improved after the training, and the impact on older adults' daily activities can be significant. Simply having enough strength to do things such as carrying groceries would make a difference for seniors" says lead researcher Chiung-ju Liu of the Department of Occupational Therapy at the Indiana University at Indianapolis in the US.

செல்வன்

unread,
Feb 29, 2012, 12:46:49 AM2/29/12
to tamizhs...@googlegroups.com, mintamil, தமிழமுதம், பண்புடன்


2012/2/28 sk natarajan <sknatar...@gmail.com>

நிறையத் தகவல்கள் -  தொடர்ந்து வாசிக்கின்றேன்
இதை படித்த பிறகாவது எனக்கு சுறு சுறுப்பு  வர வேண்டும்


நன்றி சாகி ஐயா.நீங்க எப்பவுமே சுறுசுறுப்புதானே?இதை படிச்சுதானா சுறுசுறுப்பு வரணும்?:-)

செல்வன்

unread,
Feb 29, 2012, 1:16:12 AM2/29/12
to mintamil


2012/2/28 rajam <ra...@earthlink.net>

வெயில் காலத்தில் நீச்சலுக்குப் போவேன். 40-45 வயதிலும் தினமும் 5 மைல் ஜாக்கிங் போவேன். உடற்பயிற்சிக் களத்தில் 45 பவுண்டு எடையுள்ள இரும்பு வட்டத்தைத் தூக்கிக்கொண்டுபோய் அந்தக் கால் ப்ரெஸ் கம்பில் மாட்டி கால் ப்ரெஸ் செய்வேன் (60+ வயதிலும்). அண்மையில் (2010 ஜூலைத் தொடக்கமுதல்) இதெல்லாம் நின்றுவிட்டன ... கால் வீக்கத்தால்.  மருத்துவர் சொன்னது ... பரம்பரை உடல்வாகு ... சப்பட்டைப் பாதம் ... முதுகெலும்புத் தளர்ச்சி ... போன்றவை இடையூறு என்று. அதனால் வீட்டிலேயே என் உடற்பயிற்சி இப்போது தொடருகிறது. வீட்டிலேயே கையில் தூக்கிப் பயன்படுத்த என்று weights வைத்திருக்கிறேன். தரையில் படுத்துக்கொண்டு பயிற்சி செய்தும், நாற்காலியைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுந்திருந்தும், மாடிப்படி ஏறியும், பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போட்டும் ... என்னால் முடிந்தவரை என் உடம்பை அலட்டிவருகிறேன்! :-) இதெல்லாம் பற்றித் தனியாக எழுதினால் என் வயதுக்காரர்களுக்கு உதவும். இயன்றபோது சொல்கிறேன். என் பழைய கால (61 வயது) training chart-ஐயும் ஒருநாள் ஸ்கேன் செய்து போடுகிறேன். 61~62 வயதில் 125 பவுண்ட் உடல் எடை; உடற்பயிற்சிக் களத்தில் அசந்துபோனார்கள் -- இந்தியர்கள், அதிலும் முதிய பெண்கள், உடற்பயிற்சிக் களத்துக்கு வருவதில்லை. நான் அங்கே தனியாளாகத் துருத்தி நிற்பேன்.  


மிக்க மகிழ்ச்சி அம்மா. படிக்கையிலேயே மனம் உவக்கிறது. காரணம் இந்திய பெண்கள் பொதுவாக உடல் பயிற்சியில் கவனம் செலுத்துவது இல்லை. விளைவாக இரு குழந்தைகள் பெற்றதும் பாட்டி மாதிரி ஆகிவிடுகிறார்கள். ஆண்கள் இதனால் பரவாயில்லை என பொருள் இல்லை. வீட்டு வேலையில் அவர்கள் பங்கெடுக்காததாலும், குழந்தைகளை கவனிப்பதில்லை என்பதாலும் பெண்களுக்கு இதற்கு நேரம் கிடைப்பதில்லை என்பது முக்கிய காரணம். மற்றபடி நான் இந்தியாவில் உடல்பயிர்சி செய்த ஜிம்மில் ஒரே ஒரு ரன்னிங் ரேஸ் வீராங்கனை பயிர்சி பெற வந்தார். ஜிம்மில் ஒரே பெண் அவர்தான். அவர் உள்லே வந்தால் எல்லோரும் அவரையே பார்ப்பது அவருக்கு அன் ஈசியாக இருந்திருக்கும்.கூட ஸில்வஸ்டர் ஸ்டாலன் மாதிரி அவர் அப்பா வந்ததால் யாரும் அவரை ஈவ் டீஸிங் செய்யவில்லை.இல்லையென்றால் அவர் நிலை பரிதாபம்.

ஆக இந்த நிலையில் பெண்கள் உடல்பயிற்சி செய்வதில்லை என்பது அதிக வியப்பில்லை. இதனால் பின்னாளில் அவர்களுக்கு இரும்பு சத்து குறைவு, மெனோபாஸ் பிரச்சனை போன்ற பல சிக்கல்கள் வருகின்றன.


அவன் கன்னா பின்னா என்று டப்பாவில் கிடைக்கும் புரதப் பொடிகளை (protein powder) வாங்கி, பாலிலும் தண்ணீரிலும் கலந்து சாப்பிடத் தொடங்கினான். அதெல்லாம் அவன் வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளவேயில்லை. வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு வளர்ந்த பிள்ளை. பிறகு 2~3 ஆண்டுகள் தொல்லைப்பட்டபின் இப்போது அவன் அந்த டப்பாப் பொடி ஒன்றும் பயன்படுத்துவதில்லை.
நான் அமெரிக்காவில் பார்த்தது:

1. ச தைத் திண்மையை உறுதிப்படுத்தவேண்டும் என்பதற்காக வேண்டி, புரதச் சத்தைத் தேடி, செயற்கையாக டப்பா உணவுகளைப் பயன்படுத்தவேண்டாம்.


நான் அவற்றை வாங்குவதில்லை. சைவம். 1993ல் இருந்து உடல்பயிற்சி செய்து வருகிறேன். புரதம் எனக்கு பால், சீரியல், பருப்பு, தானியம் மூலமே கிடைக்கிறது. 

Innamburan Innamburan

unread,
Feb 29, 2012, 1:27:25 AM2/29/12
to mint...@googlegroups.com
அன்பின் ராஜம்,
பள்ளிப் பருவமுதல் ... பிங்-பாங் (ping-pong) விளையாட்டில் என் front-hand serve-ஐ எதிராளியால் எளிதாகச் சமாளிக்க முடியாது. இன்றும் அப்படியே; 

~புரிகிறது. இன்றும் அப்படியே என்பது சாலத்தகும். நீங்க எழுதினா உடனே, அதான் படிக்கிறோம்லெ.
ஆனால் back-hand serve செய்ய வலுவில்லை; 
~ அதுக்கு வேறே ஆளுங்க இருக்காக.
அன்புடன்,
இன்னம்பூரான்

2012/2/29 செல்வன் <hol...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Feb 29, 2012, 1:48:38 AM2/29/12
to mint...@googlegroups.com
நான் செய்யும் உடற்பயிற்சி

 

என்னுடைய எல்லா வேலைகளையும்  நானே என் கையால் செய்வது
 
அளவான உணவு
 
அதிக நீர் குடித்தல்
 
 
அதிகமாக உண்டு வயிற்றை  கஷ்டப்படுத்தாமல் வைத்திருப்பது
 
 
காலி வயிறாக இருந்து   அதனால் வரும் வாயுத்தொல்லையால்  அவதிப்பட்டு 
அந்த வாயுவினால்  ஏற்படும் ஊளைச் சதையை வளரவிடாமல் இருக்க  தேவையான நேரத்தில் வயிற்றுக்கு  உணவிடுவது.
 
இவற்றைத் தவிற   அதிக அளவு  நடப்பதோ, உடற்பயிற்சி என்று தனியாக எதையும் செய்யாமல் இருப்பது
  . ஏனென்றால் உடற்பயிற்சி தொடங்கினால்  உடல் முறுக்கேறும் என்பது உண்மை, ஆனால் உடற்பயிற்சியை விட்டுவிட்டால்  மொத்தமும் தளர்ந்து உடல் பருமனாகிவிடும் என்பது  அனுபவ பாடம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/2/29 Innamburan Innamburan <innam...@gmail.com>
--

rajam

unread,
Feb 29, 2012, 1:54:50 AM2/29/12
to mint...@googlegroups.com, செல்வன்
ஒரு சின்ன குறுக்கீடு, செல்வன். மன்னிக்கவும். 
எனக்கு அந்தக் காலத்தில் (1965~1975) இந்தியாவில் இருந்த வசதிகள் பல பெண்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை; வாய்ப்பு இருந்த இந்திய/தமிழ்ப் பெண்களும் குடும்பச் சூழலால் நீச்சல் குளத்தையும் (அது மிக அற்புதமான, தனியார் குளமாக இருந்தபோதும்) பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஏன், நானே ... இருட்டுக்குப் பிறகுதான் நீச்சல் குளத்துக்குப் போவேன், மற்றவர்கள் என் உடலைப் பார்க்கக் கூடாது என்ற பிடிவாதம்!
நான் சொன்ன பிற training (weight lift, ஜாக்கிங், மாதிரி) எல்லாம் ... அமெரிக்காவில்தான். இங்கே முடிந்தபோது எப்போ வேண்டுமென்றாலும் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். நடக்கலாம், ஓடலாம், ஜாக்கிங் செய்யலாம், நீச்சலுக்குப் போகலாம். நீச்சல் என்பது எந்த வயதினருக்கும் பயன்படும். உடல் முட்டுக்களைத் தாக்காமல் உடல் வலுவைத் தரும் பயிற்சி நீச்சல் ஒன்றே. 
அண்மையில் ...இந்தியாவில் பல முறை கேட்டும் தேடியும் நான் வேண்டிய உடற்பயிற்சி வசதி எனக்குக் கிடைக்கவில்லை! :-) என்ன செய்ய!
இந்தியப் பெண்களுக்கு வீட்டுவேலை அதிகம் ... பிள்ளை, கணவன், உறவினர் என்று மற்றவர்களைக் கவனிக்கவேண்டிய தேவை மிகுதி. இதில் அவர்கள் தங்கள் உடலைக் கவனித்துக்கொள்வது என்ற சிந்தனையே ... மிகவும் புதிதாகவும் வினோதமாகவும் அசிங்கமாகவும் கருதப்படும். பிறருக்காக வாழும் பெண்ணே "ideal" இல்லத்தரசி என்று நினைக்கும் சமுதாயத்தில் ... ஒரு பெண் தன் உடல் நலனைப் பற்றி நினைக்க முடியுமா?

புரதம் எனக்கு பால், சீரியல், பருப்பு, தானியம் மூலமே கிடைக்கிறது. 
மிக நல்லது, செல்வன்.
அன்புடன்,
ராஜம் 


Innamburan Innamburan

unread,
Feb 29, 2012, 3:22:40 AM2/29/12
to mint...@googlegroups.com
என்னுடைய எல்லா வேலைகளையும்  நானே என் கையால் செய்வது
~ நடக்கறது கூடவா?


2012/2/29 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

செல்வன்

unread,
Feb 29, 2012, 3:33:36 AM2/29/12
to rajam, mintamil


2012/2/29 rajam <ra...@earthlink.net>

நான் சொன்ன பிற training (weight lift, ஜாக்கிங், மாதிரி) எல்லாம் ... அமெரிக்காவில்தான். இங்கே முடிந்தபோது எப்போ வேண்டுமென்றாலும் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். நடக்கலாம், ஓடலாம், ஜாக்கிங் செய்யலாம், நீச்சலுக்குப் போகலாம். நீச்சல் என்பது எந்த வயதினருக்கும் பயன்படும். உடல் முட்டுக்களைத் தாக்காமல் உடல் வலுவைத் தரும் பயிற்சி நீச்சல் ஒன்றே. 
அண்மையில் ...இந்தியாவில் பல முறை கேட்டும் தேடியும் நான் வேண்டிய உடற்பயிற்சி வசதி எனக்குக் கிடைக்கவில்லை! :-) என்ன செய்ய!


இந்தியாவில் உடல்பயிற்சிக்கு வாய்ப்புகள் மிக குறைவு அம்மா. பெருநகரங்களில் ஜிம் போன்றவை உள்ளன. ஆனால் இப்போதெல்லாம் அவை அதிக சந்தா வாங்குகின்றன. கோவை மாதிரி நகரங்களில் கூட வாக்கிங் செல்ல ரேஸ்கோர்ஸ் என்ர ஒரு இடம் மட்டுமே உள்ளது. நான் வசித்த பகுதியிலிருந்து அது எட்டு கிமி. பெட்ரோலுக்கு பயந்தே அங்கே போவதை குறைத்தேன்.எங்கள் ஊரில் நடக்கலாம் என்றால் தெருநாய் தொல்லை.

இந்தியப் பெண்களுக்கு வீட்டுவேலை அதிகம் ... பிள்ளை, கணவன், உறவினர் என்று மற்றவர்களைக் கவனிக்கவேண்டிய தேவை மிகுதி. இதில் அவர்கள் தங்கள் உடலைக் கவனித்துக்கொள்வது என்ற சிந்தனையே ... மிகவும் புதிதாகவும் வினோதமாகவும் அசிங்கமாகவும் கருதப்படும். பிறருக்காக வாழும் பெண்ணே "ideal" இல்லத்தரசி என்று நினைக்கும் சமுதாயத்தில் ... ஒரு பெண் தன் உடல் நலனைப் பற்றி நினைக்க முடியுமா?

எனக்கு என் அம்மா நினைவுதான் வருது.

பால், பழம்  என எது கிடைத்தாலும் அதை அவர் உண்ணாமல் வைத்திருந்து சாயந்திரம் பள்ளியிலிருந்து வந்ததும் எனக்கு கொடுப்பார்.நான் அப்போதெல்லாம் சாப்பிடாமல் அடம் பிடிப்பேன். தினம் மூன்று வேளை எனக்கு என்ன பிடிக்குமோ அதை தனியாக சமைத்து கொடுப்பார். அதை எல்லாம் பின்னாட்களில் எண்ணி மிக வருந்தியிருக்கிறேன்.இப்போதும் வருந்துகிறேன்.நம் பெண்களின் உழைப்பையும், உடல்நலத்தையும் நாம் மிக எளிதாக பிடுங்கி கொண்டு என்பது தெரிகிறது.

Tthamizth Tthenee

unread,
Feb 29, 2012, 3:40:27 AM2/29/12
to mint...@googlegroups.com
நடக்கையில் கூட

 

அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/2/29 Innamburan Innamburan <innam...@gmail.com>
என்னுடைய எல்லா வேலைகளையும்  நானே என் கையால் செய்வது

விஜயராகவன்

unread,
Feb 29, 2012, 5:07:42 AM2/29/12
to மின்தமிழ்

ராஜம் அவர்களே

தமிழ்நாட்டில் ஜிம்-கல்சர் , ஃபிட்னஸ்-கல்சர், ஸ்போர்ட்ஸ்-கல்சர் ரொம்ப
கம்மி. பெற்றோர்கள் ஆண் பெண் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் இருந்தே அந்த
பக்கத்திற்க்கு போவதர்கு ஊக்குவிப்பதில்லை.

பெண்கள் என்றால் இன்னும் மோசம். ஊக்கம் இல்லை என்பது மட்டும் இல்லை,
அந்தப்பக்கமே போகாதே என ஆயிரம் வழிகளில் சூக்ஷுமமாகவும், நேரடியாகவும்
உபதேசம் வரும்,


வகொவி

Geetha Sambasivam

unread,
Feb 29, 2012, 8:15:46 AM2/29/12
to mint...@googlegroups.com

5. வீட்டில் செய்யக் கூடிய வேலைகளை எல்லாரும், ஆணோ/பெண்ணோ தயங்காமல் செய்யவேண்டும் -- அதாவது ... குனிந்து வீடு/வாசல் பெருக்குவது, அம்மி. ஆட்டுரல் பயன்படுத்துவது, துணி துவைப்பது, ... இன்ன பிற. ஆனால் ... இதையெல்லாம் செய்ய வீட்டில் உள்ள எல்லாரும் ஒத்துழைக்கவேண்டும்.
இன்னும் சொல்ல நிறைய இருக்கு, ஆனால் இது செல்வன் தொடங்கிய இழை. மேலும் குறுக்கிட விரும்பவில்லை. தனியாகச் சொல்கிறேன் (இயன்றபோது).
பிற பின்னர்,
அன்புடன்,
ராஜம் //

முழுக்க முழுக்க உண்மை.  நான் பெருக்குவது, வீடு துடைப்பது போன்ற வேலைகளை இன்னமும் நான் தான் செய்து வருகிறேன்.  அம்மியில் அரைப்பதும் உண்டு. துணியும் தோய்க்கும் கல்லிலேயே துவைப்போம்.  என் துணிகளை நானும், அவர் துணிகளை அவரும் துவைத்து விடுவோம்.  கடினமான போர்வை, பெட்ஷீட் போன்றவற்றை ஊற வைத்துவிடுவேன்.  அவர் தோய்ப்பார். இருவருமாகப் பிழிந்து உலரத்துவோம்.  வாஷிங் மெஷின் இருக்கு.  அதிலே அதிகம் ஸ்பின்னர் தான் பயன்படுத்துவேன்.  முக்கியமாய்ப் போர்வை, ஒன்பது கஜம் புடைவை போன்றவை பிழிய வசதி. 


நீங்க சொல்றாப்போல் கல்யாணத்துக்கு முன்னால் எனக்கும் இந்த மாதிரி உடல் பயிற்சி போன்றவைகளைச் செய்ய சந்தர்ப்பம் கிட்டவில்லை. ஆனால் நிறைய நடப்பேன். இப்போதும் நடைப்பயிற்சி உண்டென்றாலும் வேகமாய் நடக்க முடியறதில்லை. :(

On Tue, Feb 28, 2012 at 10:51 PM, rajam <ra...@earthlink.net> wrote:
அன்பின் செல்வன்,
இது (உடற்பயிற்சி) எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு. இங்கே நான் சொல்வது என் சுய புராணத் தம்பட்டம் இல்லை. என் அனுபவம் பிறருக்கும் உதவலாம் என்ற முறையில் சில கருத்துக்களை மட்டும் இப்போது பகிர்ந்துகொள்கிறேன்.
+++++++++++++++++++++++++++++++
இந்தப் பகுதியை "நறுக்" செய்துவிடலாம்! :-)


இந்தியாவில் எப்போதும் நான் கொண்டாடியது:

5. வீட்டில் செய்யக் கூடிய வேலைகளை எல்லாரும், ஆணோ/பெண்ணோ தயங்காமல் செய்யவேண்டும் -- அதாவது ... குனிந்து வீடு/வாசல் பெருக்குவது, அம்மி. ஆட்டுரல் பயன்படுத்துவது, துணி துவைப்பது, ... இன்ன பிற. ஆனால் ... இதையெல்லாம் செய்ய வீட்டில் உள்ள எல்லாரும் ஒத்துழைக்கவேண்டும்.
இன்னும் சொல்ல நிறைய இருக்கு, ஆனால் இது செல்வன் தொடங்கிய இழை. மேலும் குறுக்கிட விரும்பவில்லை. தனியாகச் சொல்கிறேன் (இயன்றபோது).
பிற பின்னர்,
அன்புடன்,
ராஜம் 

On Feb 28, 2012, at 4:38 PM, செல்வன் wrote:


360.gif

Geetha Sambasivam

unread,
Feb 29, 2012, 8:16:32 AM2/29/12
to mint...@googlegroups.com
பத்து வருடங்களுக்கும் மேலாக யோக ஆசனப் பயிற்சியை விடாமல் செய்து வருகிறேன்.  பிரயாணங்களில் மட்டுமே செய்ய முடியாது. 
360.gif

Geetha Sambasivam

unread,
Feb 29, 2012, 8:23:29 AM2/29/12
to mint...@googlegroups.com
இந்தியப் பெண்களுக்கு வீட்டுவேலை அதிகம் ... பிள்ளை, கணவன், உறவினர் என்று மற்றவர்களைக் கவனிக்கவேண்டிய தேவை மிகுதி. இதில் அவர்கள் தங்கள் உடலைக் கவனித்துக்கொள்வது என்ற சிந்தனையே ... மிகவும் புதிதாகவும் வினோதமாகவும் அசிங்கமாகவும் கருதப்படும். பிறருக்காக வாழும் பெண்ணே "ideal" இல்லத்தரசி என்று நினைக்கும் சமுதாயத்தில் ... ஒரு பெண் தன் உடல் நலனைப் பற்றி நினைக்க முடியுமா?//

எனக்குத் தெரிந்த பல பெண்கள் ஒரு வேலையும் செய்யாமல் இரண்டு கிலோ சர்க்கரையை பாட்டிலில் போடவே கணவனோ, மற்ற ஆண்களோ உதவிக்கு வரவேண்டும் என இருப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.  முக்கியமாய் இந்தப்பெருக்கித் துடைப்பது, அம்மியில் அரைப்பது, துணிதுவைப்பது போன்ற காரியங்களை விருப்பத்துடன் செய்யும் பெண்களைக்குறைவாகவே பார்த்திருக்கிறேன்.  துணிக்கு சோப் போட்டு ஊற வைத்தாலே கை வலி வந்துவிடும், சப்பாத்தி மாவு பிசைந்தால் கைவலிக்கும் எனச் சொல்லி அதைத் தவிர்க்கும் பெண்களும் பார்க்கிறேன்.  ஆகவே எல்லாப் பெண்களுமே பிறருக்காக வாழவில்லை.  உடல்நலனைத் தேவைக்கு மேல் கவனிக்கும் பெண்களும் இருக்கின்றனர்.  எல்லாவற்றுக்குமே இரண்டு பக்கம் உண்டு. 


On Wed, Feb 29, 2012 at 2:33 AM, செல்வன் <hol...@gmail.com> wrote:




இந்தியப் பெண்களுக்கு வீட்டுவேலை அதிகம் ... பிள்ளை, கணவன், உறவினர் என்று மற்றவர்களைக் கவனிக்கவேண்டிய தேவை மிகுதி. இதில் அவர்கள் தங்கள் உடலைக் கவனித்துக்கொள்வது என்ற சிந்தனையே ... மிகவும் புதிதாகவும் வினோதமாகவும் அசிங்கமாகவும் கருதப்படும். பிறருக்காக வாழும் பெண்ணே "ideal" இல்லத்தரசி என்று நினைக்கும் சமுதாயத்தில் ... ஒரு பெண் தன் உடல் நலனைப் பற்றி நினைக்க முடியுமா?

எனக்கு என் அம்மா நினைவுதான் வருது.

பால், பழம்  என எது கிடைத்தாலும் அதை அவர் உண்ணாமல் வைத்திருந்து சாயந்திரம் பள்ளியிலிருந்து வந்ததும் எனக்கு கொடுப்பார்.நான் அப்போதெல்லாம் சாப்பிடாமல் அடம் பிடிப்பேன். தினம் மூன்று வேளை எனக்கு என்ன பிடிக்குமோ அதை தனியாக சமைத்து கொடுப்பார். அதை எல்லாம் பின்னாட்களில் எண்ணி மிக வருந்தியிருக்கிறேன்.இப்போதும் வருந்துகிறேன்.நம் பெண்களின் உழைப்பையும், உடல்நலத்தையும் நாம் மிக எளிதாக பிடுங்கி கொண்டு என்பது தெரிகிறது.

--
செல்வன்

"ஒன்று அணு உலை நம் ஊரில் அமையவேண்டும். அல்லது அணு உலை இருக்கும் ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க, பொருளாதார அகதிகளாக நாம் குடியேற வேண்டும்.இரண்டில் எது தேவை என நாம் முடிவு செய்யும் காலம் நெருங்கிவிட்டது" - செல்வன்




rajam

unread,
Feb 29, 2012, 10:49:31 AM2/29/12
to mint...@googlegroups.com
On Feb 29, 2012, at 5:23 AM, Geetha Sambasivam wrote:

இந்தியப் பெண்களுக்கு வீட்டுவேலை அதிகம் ... பிள்ளை, கணவன், உறவினர் என்று மற்றவர்களைக் கவனிக்கவேண்டிய தேவை மிகுதி. இதில் அவர்கள் தங்கள் உடலைக் கவனித்துக்கொள்வது என்ற சிந்தனையே ... மிகவும் புதிதாகவும் வினோதமாகவும் அசிங்கமாகவும் கருதப்படும். பிறருக்காக வாழும் பெண்ணே "ideal" இல்லத்தரசி என்று நினைக்கும் சமுதாயத்தில் ... ஒரு பெண் தன் உடல் நலனைப் பற்றி நினைக்க முடியுமா?//

எனக்குத் தெரிந்த பல பெண்கள் ஒரு வேலையும் செய்யாமல் இரண்டு கிலோ சர்க்கரையை பாட்டிலில் போடவே கணவனோ, மற்ற ஆண்களோ உதவிக்கு வரவேண்டும் என இருப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.  முக்கியமாய் இந்தப்பெருக்கித் துடைப்பது, அம்மியில் அரைப்பது, துணிதுவைப்பது போன்ற காரியங்களை விருப்பத்துடன் செய்யும் பெண்களைக்குறைவாகவே பார்த்திருக்கிறேன்.  துணிக்கு சோப் போட்டு ஊற வைத்தாலே கை வலி வந்துவிடும், சப்பாத்தி மாவு பிசைந்தால் கைவலிக்கும் எனச் சொல்லி அதைத் தவிர்க்கும் பெண்களும் பார்க்கிறேன்.  ஆகவே எல்லாப் பெண்களுமே பிறருக்காக வாழவில்லை.  உடல்நலனைத் தேவைக்கு மேல் கவனிக்கும் பெண்களும் இருக்கின்றனர்.  எல்லாவற்றுக்குமே இரண்டு பக்கம் உண்டு. 


உண்மை, கீதா. எல்லாவற்றுக்குமே இரண்டு பக்கம் உண்டு.
வீட்டு வேலை செய்யப் பிடிக்காமல் பிகு பண்ணும் பெண்களைத் தொலைக்காட்சி பார்க்க அனுப்பிவைத்து, அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியில் ஒரே ஒரு காட்சி மட்டும் காட்டும்படிச் செய்யவேண்டும்! அது என்ன காட்சி? இனிமேல்தான் தயாரிக்கவேண்டும் -- "பிற் காலத்தில் நோவப் போவது யாரு?" என்று உடற்பயிற்சி செய்யாத , வீட்டு வேலை பார்க்காத பெண்ணின் உடல் எப்படி வலிமையிழந்து போகும் என்று பிட்டுப் பிட்டுக் காட்டி (உதயகுமரனுக்கு மணிமேகலை சொன்னதுபோல) விளக்கினால் ... தன்னாலெ பயம் வந்தாலும் வந்து உடம்பை அலட்டி, விரலை அசக்கி வேலை பார்க்கத் தொடங்கிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்! 

சரி, இன்னிக்கி எனக்கு வீட்டுவேலை இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா செய்து முடிக்க ரொம்ப நேரம் ஆகும்!
:-) :-) :-)

Geetha Sambasivam

unread,
Feb 29, 2012, 1:55:46 PM2/29/12
to mint...@googlegroups.com
இது திருவாளர் செல்வனுக்கு நான் கொடுத்த பதில் அம்மா.   அவர் ஒண்ணு சொல்லி அதை நான் ஒத்துக்க முடியுமா????? போட்டு வாங்க வேண்டாமா?
360.gif

Geetha Sambasivam

unread,
Feb 29, 2012, 1:57:41 PM2/29/12
to mint...@googlegroups.com

//வீட்டு வேலை செய்யப் பிடிக்காமல் பிகு பண்ணும் பெண்களைத் தொலைக்காட்சி பார்க்க அனுப்பிவைத்து, //

அதானே செய்யறாங்க தமிழ்நாட்டு மகளிர் எல்லாம்.  எங்கே போங்க சீரியல்களைக் குறித்த விவாதம் தான் நடக்கும்.  பல கல்யாணங்கள், கொண்டாட்டங்கள்னு பார்த்துட்டேன். 

On Wed, Feb 29, 2012 at 9:49 AM, rajam <ra...@earthlink.net> wrote:
360.gif

செல்வன்

unread,
Mar 1, 2012, 12:13:34 AM3/1/12
to mint...@googlegroups.com


2012/2/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>

முழுக்க முழுக்க உண்மை.  நான் பெருக்குவது, வீடு துடைப்பது போன்ற வேலைகளை இன்னமும் நான் தான் செய்து வருகிறேன்.  அம்மியில் அரைப்பதும் உண்டு. துணியும் தோய்க்கும் கல்லிலேயே துவைப்போம்.  என் துணிகளை நானும், அவர் துணிகளை அவரும் துவைத்து விடுவோம்.  கடினமான போர்வை, பெட்ஷீட் போன்றவற்றை ஊற வைத்துவிடுவேன்.  அவர் தோய்ப்பார். இருவருமாகப் பிழிந்து உலரத்துவோம்.  வாஷிங் மெஷின் இருக்கு.  அதிலே அதிகம் ஸ்பின்னர் தான் பயன்படுத்துவேன்.  முக்கியமாய்ப் போர்வை, ஒன்பது கஜம் புடைவை போன்றவை பிழிய வசதி.


நானும் தான் துவைப்பேன். எல்லா துணியையும் வாஷிங் மெஷினில் போட்டு, டிடர்ஜண்டை கொட்டி ஸ்விட்சை ஆஃன் செய்தால் முடிந்தது வேலை:-)

Tthamizth Tthenee

unread,
Mar 1, 2012, 12:26:24 AM3/1/12
to mint...@googlegroups.com
அனுபவ பூர்வமாக ஆராய்ந்து பர்த்தால் 

 

சித்தி கொடுமையினாலோ,  அல்லது வறுமை காரணமாக  இளம் வயதிலேயே   உழைக்க நேரிடும்  குழந்தைகளின் உடல்வாகு  மிகவும்  நேர்த்தியாக அமைந்திருக்கும்
 
இதற்குக் காரணமே  அவர்கள்  உழைப்புதான் என்றால் மிகையாகாது
 
உட்கொள்ளும் உணவுக்கு ஏற்ற செயல்பாடுகள் இல்லையென்றால்  எப்படி உறுப்புகள்  தன்மையாய் அமையும்?
 
ஆகவே அனாவசியமான   உடற்பயிற்சிகள்  செய்யவேண்டும் என்பதை தவிர்த்து  அவசியமான  வேலைளைச்   செய்தாலே
  உடல் ஆரோக்கியம் மேம்படும்
 
அம்மிக்கல் ஆட்டுவதும், உரலில் அரைப்பதும் எவ்வளவு அருமையான உடற்பயிற்சி என்று உணராமல்  , பழங்காலக் கொடுமைகள் என்று நினைத்துக்கொண்டு
தம்முடைய பணத்தையும் கொடுத்து  அவர்கள் சொல்லும்  கைகால் அசைப்பை கஷ்டப்பட்டு செய்து
அதன் விளைவாக  நரம்புகள் முறுக்கிக்கொண்டு  வைத்தியச் செலவை செய்பவர்கள் ஏராளம்
 
முதலில் உடற் பயுற்சிக்கு  மனப்பயிற்சி தேவை
மனதை ஒருமுகப்படுத்தி    நம் வேலைகளை நாமே செய்வது  கேவலமில்லை  என்றுணர்ந்து நாம் செயல்பட்டால்  நம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்
 
குறிப்பாக  அந்தக் காலங்களில் பெண்கள்  இடுப்பை பாவாடை கட்டி இறுக்க முடிந்திருப்பார்கள். அது வயிற்றையும் இடுப்பையும் பெருக்க விடாமல் செய்யும் தந்திரம்
 
தாமாகவே  எல்லா காரியங்களையும் இழுத்துப் போட்டுக்கொண்டு  இயல்பாக செய்வர்  உடல் வடிவழகு பெற  அவர்கள் இதற்கு மேல் வேறென்ன செய்தார்கள்?  நாம் பழமையை மறந்து போலியாக வாழ்கிறோம்
 
"முன்னோரெல்லாம் மூடர்களல்ல நமக்குண்டு பண்பாடு "
 
என்னும் கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/3/1 செல்வன் <hol...@gmail.com>
--

Subashini Tremmel

unread,
Mar 1, 2012, 2:23:40 PM3/1/12
to mint...@googlegroups.com, நம்பிக்கை - Nambikkai


2012/2/28 செல்வன் <hol...@gmail.com>

உடல்பயிற்சி என்றால் சும்மா ஜாகிங், வாக்கிங் போன்ற ஏரோபிக் பயிர்சியுடன் (Aerobic) முடிந்தது என பலரும் நினைத்துவிடுகிறார்கள். ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் எனப்படும் பளு தூக்குதல்/பாடி பில்டிங் வகை பயிற்சிகளை 1) பலரும் அறிவது இல்லை அல்லது 2) தவறாக புரிந்து வைத்துள்ளனர்.

ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் ஏன் வேண்டும்?

ஆரோக்கியமான உடலின் அடிப்படை மூன்று. 1) ஆரோக்கியமான உணவு 2) ஏரோபிக் பயிற்சி 3) ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங். ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் உங்கள் உடலின் மெடபாலிசத்தை அதிகரிக்கும்.ஏரோபிக் பயிற்சிகளை செய்தால் அந்த பயிர்சிகளை செய்யும்போது மட்டும்தான் கலோரிகளை எரிப்பீர்கள்.ஆனால் ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் செய்தால் உங்கள் உடலின் மெடபாலிசம் அதிகரிக்கும்.அதன்பின் 24 மணிநேரமும் உங்கள் உடல் தானாக காலரிகளை எரிக்கும்.


பயனுள்ள பதிவு. நிறைய தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

சுபா
 
--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Subashini Tremmel

unread,
Mar 1, 2012, 2:36:39 PM3/1/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2012/2/29 rajam <ra...@earthlink.net>

ஒரு சின்ன குறுக்கீடு, செல்வன். மன்னிக்கவும். 
எனக்கு அந்தக் காலத்தில் (1965~1975) இந்தியாவில் இருந்த வசதிகள் பல பெண்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை;

 பெண்கள் நோக்கில் அருமையான பகிர்வு ..

மலேசியாவிலும் இதே நிலை தான் ராஜம் அம்மா.  எனது பள்ளிக் காலத்தில் நீச்சல் எல்லாம் நினைத்துப் பார்த்ததில்லை. பெண்களுக்கு உடற்பயிற்சி அவசியம் என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வு இல்லாத ஒரு நிலை தான் அங்கேயும். இப்போது நிறைய மாற்றம் இருக்கின்றது. ஜெர்மனிக்கு வந்த பிறகு 2 வருடப் பயிற்சி எடுத்து பின்னர் நன்கு நீச்சல் கற்றுக் கொண்டேன்.  இப்போது அதனால் உள்ள பயணையும் அனுபவிக்க முடிகின்றது.

நான் வாரத்திற்கு இரண்டு முறை ஜோகிங் போவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். 1 வருடத்திற்கு மேலாக ஜிம் பயிற்சி விடுபட்டு விட்டது. தொடர்ந்த அலுவலகப் பயணங்கள். வசந்த காலம் தொடங்கி விட்டால் தோட்ட வேலையும் சேர்ந்து விடும். எனக்குப் பிடித்த ஒரு விஷயமும் கூட.


இந்தியப் பெண்களுக்கு வீட்டுவேலை அதிகம் ... பிள்ளை, கணவன், உறவினர் என்று மற்றவர்களைக் கவனிக்கவேண்டிய தேவை மிகுதி. இதில் அவர்கள் தங்கள் உடலைக் கவனித்துக்கொள்வது என்ற சிந்தனையே ... மிகவும் புதிதாகவும் வினோதமாகவும் அசிங்கமாகவும் கருதப்படும். பிறருக்காக வாழும் பெண்ணே "ideal" இல்லத்தரசி என்று நினைக்கும் சமுதாயத்தில் ... ஒரு பெண் தன் உடல் நலனைப் பற்றி நினைக்க முடியுமா?

உண்மை.  பொதுவாகவே ஆண்கள் குறிப்பிடும்/எதிர்பார்க்கும் ஒரு எல்லைக்குள் பெண்கள் அழகு படுத்திக் கொள்ளவேண்டும் என்ற பார்வை மிகுந்த போக்கு நம் சமூகத்தில் உள்ளது. பெண்களே நினைத்தால் தான் மாறுதல்களைக் கொண்டு வர முடியும்.

சுபா

Innamburan Innamburan

unread,
Mar 1, 2012, 4:33:44 PM3/1/12
to mint...@googlegroups.com
பெண்களே நினைத்தால் தான் மாறுதல்களைக் கொண்டு வர முடியும்.



~ லக்ஷம் தடவை சொல்லுங்கள்.ஒரு திருத்தம்: '
பெண்கள் நினைத்தால் மாறுதல்களைக் கொண்டு வர முடியும் என்பது திண்ணம். எனக்கு அவ்வாறு சாதனை செய்த பெண்களை தெரியும். அது பற்றி எழுதவேண்டும். என்னுடைய சிறுகதை 'பாதாள கரண்டியின்' கதாநாயகி மாறுதல்கள் கொண்டுவருவதை பார்த்திருக்கிறேன். அவள் ஒரு நிஜம்.
இன்னம்பூரான் 
2012/3/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>

rajam

unread,
Mar 1, 2012, 11:15:37 PM3/1/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
செய் பெண்ணே, செய்! அதாவது ... முடிந்த அளவில் உடல் பயிற்சியை ... செய் பெண்ணே, செய்!  அது எந்த வடிவில் அமைந்தாலும் சரி, செய் பெண்ணே, செய்! :-) :-) :-)

நான் வாரத்திற்கு இரண்டு முறை ஜோகிங் போவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
தொடர்ந்து செய்யுங்கள், சுபா! 

1 வருடத்திற்கு மேலாக ஜிம் பயிற்சி விடுபட்டு விட்டது. தொடர்ந்த அலுவலகப் பயணங்கள்.
இதுபோல வேறு சில காரணங்களால் என்னுடைய ஜிம் பயிற்சியும் விடுபட்டது. எனக்கு மிகவும் வருத்தம். என்ன செய்ய. உங்கள் வயதிலேயே இதை விட்டுவிட வேண்டாம். முடிந்த அளவு தொடரப் பாருங்கள். (எனக்குத் தெரியும் எவ்வளவு தொல்லை இருக்கும் என்று.) 

வசந்த காலம் தொடங்கி விட்டால் தோட்ட வேலையும் சேர்ந்து விடும். எனக்குப் பிடித்த ஒரு விஷயமும் கூட.
ஆஆ! தோட்டவேலை தரும் மகிழ்ச்சியும் இன்பமும் அமைதியும் வேறு எந்த வேலையும் தாராது! தொடர்ந்து செய்யுங்கள். உடலுக்கும் மனதுக்கும் நல்லது. 
பிற பின்னர்,
அன்புடன்,
ராஜம்
பி.கு: இந்த இழையைத் தொடங்கிய நம் செல்வனுக்கு இப்படி ஒரு சில பெண்கள் பேசுவது பிடிக்குமோ இல்லையோ. ஒரு தனி இழை (பெண்களுக்காக) என்று நாம் தொடங்கணுமோ? எனக்கு விருப்பம். ஆனால் உடனுக்குடன் மறுமடல் எழுத நேரம் கிடைக்காது. அதனால் தயக்கம். புத்தக வேலை முடிந்த பிறகு வருவேன் பழைய வலிமையுடன்! :-)  :-) :-) 

செல்வன்

unread,
Mar 2, 2012, 4:15:00 AM3/2/12
to mint...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம், தமிழ் சிறகுகள்
புரதம். ப்ரோட்டீன்

புரதம் தான் திசுவை கட்டமைக்க உதவும் ரா மெடீரியல்.வீடு கட்ட சிமெண்டும், செங்கல்லும் எத்தனை அவசியமோ அதுபோல சதையை (கொழுப்பை அல்ல) வளர்க்க புரதம் அத்தியாவசியம். பளுதூக்காமல் வெறுமனே புரதத்தை உட்கொண்டால் சதை வளராது. அதை உடல் கார்போ ஹைட்ரேட்டை போல கருதி எரித்துவிடும்.

புரதம் என்பது 36 அமினோ அமிலங்களின் கலவை. ஆனால் இந்த 36 அமினோ அமிலங்களும் அனைத்து வகை புரதங்களிலும் இருக்காது. தாவர உணவுகளில் அமினோ அமிலங்கள் குறைவாக இருக்கும் (உதா: அரிசி, கோதுமை, பருப்பு, பயிறு). ஆக நூறு கிராம் அரிசியில் நான்கு கிராம் புரதம் இருந்தாலும் அதில் இருக்கும் புரதம் முழுமையானது அல்ல. விலங்கு உணவுகளில் இருக்கும் புரதமே முழுமையானது (பால், முட்டை, மாமிசம்). அதில் 36 வகை அமினோ அமிலமும் உள்ளது.

அதனால் புரதம் போதுமான அளவு உட்கொள்ள சைவர்கள் சற்று சிரமபடவேண்டும். நீங்கள் பளுதூக்கவில்லை எனினும் உங்களுக்கு புரதம் தேவை.ஆனால் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் சைவ உணவுகளில் இரண்டு வகை உணவை ஒரே நேரத்தில் உட்கொண்டால் அந்த இரண்டு புரதங்களில் உள்ள அமினோ அமிலங்களும் கலந்து முழுமையான புரதமாகி விடுகின்றன. உதாரணமாக கோதுமை சப்பாத்தியுடன் சோயாபீன்சை உட்கொண்டால் அதில் கிடைக்கும் புரதத்தின் தரம் மிக உசத்தியனாது.அதற்கு கீழான தரத்தில் தான் முட்டை, பால் , இறைச்சி ஆகியவற்றில் கிடைக்கும் புரதத்தின் தரம் உள்ளது. ஆனால் வெறும் சப்பாத்தியை உருளைகிழங்கு குருமாவுடன் உண்டால் உங்களுக்கு போதுமான சத்துள்ள புரதம் கிடைப்பதில்லை.அதனால் சைவர்கள் தானிய உணவுடன் பருப்பு, பால், பீன்ஸ் போன்ற இன்னொரு உணவையும் சேர்த்து கொண்டால் முழுமையான புரத உணவு அவர்களுக்கு கிடைத்துவிடும்.

எத்தனை கிராம் புரதம் நமக்கு தேவை?தினமும் நம் உடல் எடையில் கிலோவுக்கு ஒரு கிராம் விதம் புரதம் நமக்கு தேவை.உதாரணமாக உங்கள் உடல் எடை 75 கிலோ எனில் 75 கிராம் புரதம் தேவை. அசைவ உணவின் மூலம் இந்த புரதத்தை எளிதில் அடையலாம். உதாரணமாக நூறு கிராம் கருவாட்டில் 55 கிராம் புரதம் உள்ளது.ஆனால் அசைவ உணவுகளில் கொழுப்பு சத்தும் உள்ளதால் நாம் உட்கொள்ளும் புரதத்தின் அளவுக்கு சமமான அளவு கொழுப்பும் உடலில் சேர்கிறது. அதுபோக மாமிசத்தை ப்ரை செய்வது போன்றவற்றால் அதிக அளவில் கொழுப்பும் சேர்கிறது. தாவர உணவுகளில் புரதம் குறைவு எனினும் அவற்றில் கொழுப்பும் குறைவு அல்லது சுத்தமாக இல்லை எனலாம்.

அதனால் சைவர்கள் பாலை அதிக அளவில் உட்கொள்வது நலம். குறைந்தது ஒப்வொரு வேளை உணவுடனும் ஒரு பால் பொருளை (நெய், வெண்ணய் தவிர்த்து) உட்கொள்தல் நலம்.அது தயிர், மோர், பால் என எதாகவும் இருக்கலாம்.தினம் இரு டம்ளர் பால் (400 கிராம்) உட்கொண்டால் உங்களுக்கு 32 கிராம் உயர்தர புரதம் கிடைக்கும்.அத்துடன் 500 மில்லிகிராம் கால்ஷியமும் கிடைக்கும்.கால்ஷியம் எலும்பு வளர்ச்சிக்கு இன்றியமையாதது. பெண்களுக்கு நம் நாட்டில் அதிகமாக கால்ஷியம் குறைவு உள்ளது. இதனால் பற்கள்,எலும்புகள் பாதிப்படைகின்றன.நபருக்கு சராசரியாக 800 முதல் 1000 மில்லிகிராம் கால்ஷியம் தேவை. இதை அடைய நபர் ஒருவர் ஒரு நாளுக்கு குறைந்தது இரு டம்ளர் பால் *மற்றும்* இன்னொரு வேளை தயிர், மோர், சீஸ் என சேர்த்துகொள்ளவேண்டும். பாலை தவிர கீரை போன்ரவற்றில் சிறிதளவு கால்ஷியம் உண்டு.ஆனால் அந்த கால்ஷியம் உடலால் அதிகமாக ஜீரணிக்கபடுவதில்லை.

பால் அலர்ஜி இருப்பவர்கள் கால்ஷியம் செயற்கையாக சேர்க்கபட்ட ஆரஞ் ஜூஸ், சீரியல் போன்ரவற்றில் கால்ஷியத்தை அடையலாம்.

ஆரோக்கியமான உணவு என்பது தானியம், காய்கறி, பால் பொருட்கள், வெள்ளை மாமிசம் ஆகியவற்றை உள் அடக்கியது. சைவர்கள் மாமிசத்துக்கு பதில் பீன்ஸ், கொட்டைகள் ஆகியவற்றை சப்ஸ்டிட்யூட் செய்துகொள்ளலாம்.ஒவ்வொரு வேளை உணவிலும் ஒரு தானிய சர்விங், ஒரு காய்கறி சர்விங், ஒரு பால் சர்விங், ஒரு மாமிச சர்விங் (சைவர்களுக்கு சோயாபீன்ஸ்/பருப்பு/பாதாம்,வால்நட் கொட்டை) ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.நீங்கள் பளுதூக்குகிறிரிகளா இல்லையா என்பது கூட இங்கே முக்கியம் இல்லை.

நம் தமிழ் நாட்டு உணவு பழக்கத்தில் உள்ள குறையை குறிப்பிடவேண்டும். இங்கே கார்போஹைட்ரேட் அதிகம் உட்கொள்கிரார்கள். குறிப்பாக அரிசியை போட்டு (அதுவும் தீட்டிய அரிசி) சாம்பார், ரசம்,மோர்,அப்பளம்,ஊறுகாய்,பாயாசம், வடை என ஒரே வேளையில் என புகுந்து விளாசுகிறார்கள். இத்தனை அரிசி உடலுக்கு தேவையற்றது.இதில் மாற்றங்கள் கொண்டுவர சாம்பாரில் நிறைய பருப்பு போடலாம், காய்கறி பொறியலை அதிகம் வைக்கலாம், அப்பளத்தை எண்னெயில் பொறிப்பதற்கு பதில் மைக்ரவேவில் சுடலாம்.ரசத்தை அரிசியில் ஊற்றி உண்பதற்கு பதில் சூப் மாதிரி பருகலாம்.தயிரை அரிசியில் கலந்து உண்பதற்கு பதில் கெட்டி தயிரை அல்லது மோரை அப்படியே பருகலாம். பாயாசம், வடை போன்றவற்றை புறக்கணிக்கலாம் அல்லது அளவை குறைக்கலாம்.

மொத்தத்தில் வெரைட்டியான உணவு நல்லது. காய்கறிகளையும் சுழற்சி முறையில் பயன்படுத்துங்கள் பல வண்ண காய்கறிகள், பழங்களை உட்கொள்ளுங்கள். ஒரே வகை பழங்களையும், காய்கறிகளையும் தினமும் தொடர்ந்து உண்பதால் பலனில்லை.

தமிழ்ப் பயணி

unread,
Mar 2, 2012, 5:10:46 AM3/2/12
to tamizh...@googlegroups.com, mint...@googlegroups.com, பண்புடன்
நம் தமிழ் நாட்டு உணவு பழக்கத்தில் உள்ள குறையை குறிப்பிடவேண்டும். இங்கே கார்போஹைட்ரேட் அதிகம் உட்கொள்கிரார்கள். குறிப்பாக அரிசியை போட்டு (அதுவும் தீட்டிய அரிசி) சாம்பார், ரசம்,மோர்,அப்பளம்,ஊறுகாய்,பாயாசம், வடை என ஒரே வேளையில் என புகுந்து விளாசுகிறார்கள். இத்தனை அரிசி உடலுக்கு தேவையற்றது.இதில் மாற்றங்கள் கொண்டுவர சாம்பாரில் நிறைய பருப்பு போடலாம், காய்கறி பொறியலை அதிகம் வைக்கலாம், அப்பளத்தை எண்னெயில் பொறிப்பதற்கு பதில் மைக்ரவேவில் சுடலாம்.ரசத்தை அரிசியில் ஊற்றி உண்பதற்கு பதில் சூப் மாதிரி பருகலாம்.தயிரை அரிசியில் கலந்து உண்பதற்கு பதில் கெட்டி தயிரை அல்லது மோரை அப்படியே பருகலாம். பாயாசம், வடை போன்றவற்றை புறக்கணிக்கலாம் அல்லது அளவை குறைக்கலாம்.

​செல்லவன் நல்ல விளக்கம். தமிழக உணவு மு​றை​யை எப்படி திட்டமிட்டு உண்பதன் மூலம் உட​லை கு​றைக்க இயலும் என்று விரிவாக ஒரு கட்டு​ரையாக எழுதினால் நி​றைய ​பேருக்கு உப​யோகமா இருக்கும்.



2012/3/2 செல்வன் <hol...@gmail.com>

புரதம். ப்ரோட்டீன்



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

காதல் கவிதைகள் கிறுக்கல்களாக இருப்பதற்கு, சிலர் காதலிக்கு பதிலாக மனைவியை நினைத்து வாசிப்ப​தே காரணம்!!


Subashini Tremmel

unread,
Mar 2, 2012, 10:30:39 AM3/2/12
to rajam, mint...@googlegroups.com


2012/3/2 rajam <ra...@earthlink.net>

செய் பெண்ணே, செய்! அதாவது ... முடிந்த அளவில் உடல் பயிற்சியை ... செய் பெண்ணே, செய்!  அது எந்த வடிவில் அமைந்தாலும் சரி, செய் பெண்ணே, செய்! :-) :-) :-)

சரி. நிச்சயம் செய்கிறேன். எனக்கு பேட்மிண்டன் விளையாடுவதும் பிடிக்கும். கல்லூரி காலத்தில் பேட்மிண்டன் ட்டெய்னர் ருக்கான தேர்வில் தேறி சர்டிபிக்கெட் வாங்கினேன். இப்போது கோடை காலத்தில் மட்டும் வெயில் இருக்கும் நேரத்தில் விளையாடச் செல்வோம். மற்றபடி இதுவும் குறைந்து விட்டது. 

நான் வாரத்திற்கு இரண்டு முறை ஜோகிங் போவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
தொடர்ந்து செய்யுங்கள், சுபா! 

1 வருடத்திற்கு மேலாக ஜிம் பயிற்சி விடுபட்டு விட்டது. தொடர்ந்த அலுவலகப் பயணங்கள்.
இதுபோல வேறு சில காரணங்களால் என்னுடைய ஜிம் பயிற்சியும் விடுபட்டது. எனக்கு மிகவும் வருத்தம். என்ன செய்ய. உங்கள் வயதிலேயே இதை விட்டுவிட வேண்டாம். முடிந்த அளவு தொடரப் பாருங்கள். (எனக்குத் தெரியும் எவ்வளவு தொல்லை இருக்கும் என்று.) 
யோசித்துக் கொண்டிருக்கின்றேன். ஜூன் மாத்த்திற்குப் பிறகு கொஞ்சம் பணியில் மாற்றம் செய்து கொண்டு ஜிம் பயிற்சியைத் தொடர வேண்டும்.
 
.
அன்புடன்,
ராஜம்
பி.கு: இந்த இழையைத் தொடங்கிய நம் செல்வனுக்கு இப்படி ஒரு சில பெண்கள் பேசுவது பிடிக்குமோ இல்லையோ. ஒரு தனி இழை (பெண்களுக்காக) என்று நாம் தொடங்கணுமோ? எனக்கு விருப்பம். ஆனால் உடனுக்குடன் மறுமடல் எழுத நேரம் கிடைக்காது. அதனால் தயக்கம். புத்தக வேலை முடிந்த பிறகு வருவேன் பழைய வலிமையுடன்! :-)  :-) :-) 

செல்வன் குறை சொல்லாதவரை நாமும் இப்படி இதே இழையில் பேசிக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.  என்ன செல்வன் சரிதானே..!

சுபா

செல்வன்

unread,
Mar 2, 2012, 2:57:00 PM3/2/12
to mint...@googlegroups.com


2012/3/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>

செல்வன் குறை சொல்லாதவரை நாமும் இப்படி இதே இழையில் பேசிக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.  என்ன செல்வன் சரிதானே..!


குறை ஒன்றும் இல்லை சுபா...பல புது விஷயங்கள் இழையில் பகிரபடுவது நல்லதுதான். இழையில் யாரும் பேசாமல் இருந்தால்  தான் மோசம்:-)

செல்வன்

unread,
Mar 2, 2012, 3:37:50 PM3/2/12
to panb...@googlegroups.com, tamizh...@googlegroups.com, mint...@googlegroups.com


2012/3/2 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

​செல்லவன் நல்ல விளக்கம். தமிழக உணவு மு​றை​யை எப்படி திட்டமிட்டு உண்பதன் மூலம் உட​லை கு​றைக்க இயலும் என்று விரிவாக ஒரு கட்டு​ரையாக எழுதினால் நி​றைய ​பேருக்கு உப​யோகமா இருக்கும்.


நன்றி பயணியாரே. நிச்சயம் எழுதுகிரேன். அண்ணாச்சி மாதிரி சாப்பாட்டு ராமர்களுக்கு பயன்படட்டும்:-)

rajam

unread,
Mar 2, 2012, 4:35:18 PM3/2/12
to மின்தமிழ், செல்வன்
அன்பின் செல்வன்,
உங்களால் முடிந்த நேரம் செலவழித்து ... எனக்கு மிகவும் பிடித்த, இந்தத் தலைப்பைப் பற்றி ("உடற்பயிற்சி") இவ்வளவு விளக்கமாக எழுதுகிறீர்கள், அதற்கு என் பாராட்டும், வாழ்த்தும், நன்றியும் எப்பவும் இருக்கும்.
நீங்கள் சொல்லியிருக்கும் பல கருத்துக்களுக்கும் "ஆமா" போடுகிறேன். 
புரதம் பற்றிய ஒரு சிறு குறிப்பு, என் அனுபவத்திலிருந்து ... "சீஸ் cheese" பற்றி மட்டும்: 
1. மிருகக் கொழுப்பிலிருந்து வரும் புரதச் சத்தோ/எதுவோ ... அது எளிமையாக நம் இதயக் குழாய்களிலிருந்து வெளியேறாது. அதாவது பாலடைக்கட்டி என்று பழைய காலத்தில் அறியப்பட்ட இன்றைய "சீஸ் cheese" போன்றவை.
வெளிநாட்டவரின் பழக்கத்தைப் பார்த்தீர்களென்றால் ... அவர்கள் "சீஸ் cheese" உடன் ஏதாவது ஆல்கஹால் (alcohol:  http://en.wikipedia.org/wiki/Alcoholic_beverage) உட்கொள்ளுவார்கள். அந்த alcohol அந்த உணவுப்பொருளின் கொழுப்பு நம் இதயக் குழாய்களில் உறைந்துவிடாமல் பாதுகாக்கும் என்பது எனக்குத் தெரிந்த உண்மை.
2. எல்லா "சீஸ் cheese" -உம் வெஜிடேரியன் இல்லை! மிகப் பல "சீஸ் cheese" -இல் ரென்னெட் (rennet) என்ற பொருள் கலந்திருக்கும். அதைப் பற்றிப் பிறருக்கும் சொல்லுங்கள்! "சீஸ் cheese" சாப்பிடும் பலருக்கு அருவருப்பு ஏற்படலாம்! :-) :-) :-) 
பிற பின்னர், தேவையானால் ...
அன்புடன்,
ராஜம் 






செல்வன்

unread,
Mar 4, 2012, 11:11:42 PM3/4/12
to mint...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம், தமிழ் சிறகுகள்
பாடி பில்டிங் பற்றி பாடி பில்டர்களுக்கு இருக்கும் பொதுவான சந்தேகங்கள்

1) நான் X (நான்கு, ஐந்து, மூன்று) வருடங்களாக தொடர்ந்து ஒரே எடையை தூக்கி வருகிறேன். அதிகம் தூக்க முடியவில்லை.ஏன்?

முன்பு சொன்னதுபோல் நீங்கள் ஸிஸ்டமாடிக்காக பயிற்சி மேற்கொள்வதில்லை. அதிக செட்கள் செய்வது, உடல்பயிர்சி செய்த பின் அந்த மஸில் ரெகவர் ஆகுமுன் மீண்டும் பயிர்சி செய்வது, புரதம் குறைவாக உண்பது போன்றவை பொதுவாக பாடிபில்டர்கல் செய்யும் தவறுகள். உதாரணத்துக்கு தினமும் பெஞ்ச் பிரஸ் செய்யும் நபர்கள் உண்டு. இப்படி செய்தால் அந்த மஸில் எப்படி ரெகவர் ஆகும்?எப்படி வளரும்? ஒரு மஸில் க்ரூப்பை வேலை வாங்கினால் மீண்டும் குறைந்த பட்சம் நாலு நாட்களுக்காவது அந்த மஸில் க்ருப்பை தொட கூடாது.

வாரம் ஒரு செட்..ஐந்து முதல் எட்டு தடவை தூக்க கூடிய எடை. இந்த வாரம் செய்ததை விட அடுத்த வாரம் அதிக ரெப். உதாரணம் இந்த வாரம் ஐம்பது கிலோவில் ஏழு தரம் பெஞ்ச் பிரஸ் அடித்தீர்கள் என்றால் அடுத்த வாரம் எட்டு ரெப். எட்டுக்கு மேல் அல்லது எட்டை தொட்டால் அடுத்த வாரம் இரண்டு கிலோவை சேர்த்து அடிக்கலாம்.

இப்படி ஒவ்வொரு வாரமாக செய்துவர ஏழு அல்லது எட்டு வாரத்தில் உங்கள் பெஞ்ச் பிரஸ், ஸ்க்வாட் எடைகள் குறைந்தது ஐந்து அல்லது 10 கிலோ ஏறியிருக்கும்.ஏழு அல்லது எட்டு வாரங்களுக்கு பின் உங்களால் முன்பு தூக்கிய எடையை விட அதிகமாக தூக்க இயலாது.அதே எடையை தான் தூக்குவீர்கள்.இதை "Hitting the plateau" என அழைப்பார்கள். இது நடந்தால் உடனே குறைந்தது 10 நாட்கள் எடை தூக்காமல் ஓய்வெடுக்க வேண்டும்.இந்த ஓய்வுக்கு periodization  என பெயர். இந்த ஓய்வு காலத்தில் ஏரோபிக்ஸ் பயிர்சிகளை செய்து வரலாம்.10 முதல் 14 நாட்கள் கடந்தபின் கடைசியாக தூக்கிய எடையை விட 1 கிலோ , 2 கிலோ குறைவாக போட்டு தூக்குங்கள்.இரண்டு, மூன்று வாரங்களில் பழைய எடையை விட அதிகம் தூக்கி அதன்பின் முன்பு எப்போதும் தூக்காத அளவு அதிக எடையை தூக்குவீர்கள்.இதேபோல் மீண்டும் எட்டு, ஒன்பது வாரங்கள் நடக்கும்.அதன்பின் மீண்டும் ஓய்வு.

ஒரு வருடத்தில் சராசரியாக பெஞ்ச் பிரஸில் 10, 15 கிலோ ஏறினால், ஸ்க்வாட்டில் 30, 40 கிலோ ஏறினால் அது நல்ல விஷயம். நீங்கள் தூக்கும் எடை அதிகரிக்க அதிகரிக்க உங்கள் மஸில் சைஸும் அதிகரிக்கும்.இப்படி செய்யாமல், மஸிலுக்கு ஓய்வு அளிக்காமல் தினமும் செய்வது, தினம் 3 மணிநெரம் செய்வது போன்ற விஷயங்களால் பலரும் பல வருடங்களாக ஒரே எடையை தூக்கி வருகின்றனர்


2) எனக்கு மஸில் வேண்டும், கூடவே பார்மும் வேண்டும். அதற்கு என்ன செய்ய?

எனக்கு அடித்தளமும் வேண்டும், கூரையும் அதே சமயம் வேண்டும் என கேட்க கூடாது. மஸில் வளர்ந்தால் தான் ஃபார்மும் தானாக வரும். 

3)  சீட்டிங் (cheating  ) செய்யலாமா?இதன் மூலம் அதிக எடை தூக்க முடிகிறது அல்லவா?

ஒரே பதில். நோ.

சீட்டிங் பல வழிகளில் செய்கிறார்கள். "டச்சிங்" என சொல்லபடும் முறையில் உங்கள் பார்ட்னர் பின்னால் இருந்து எடையை தூக்க உதவுவது ஒரு முறை. இதனால் எப்பலனும் இல்லை. நீங்கள் ஐம்பது கிலோவை தூக்க, உங்கள் பார்ட்னரின் உதவியுடன் இன்னும் ஒரு ஐந்து கிலோவை சேர்த்து தூக்குவதால் யாருக்கும் எப்பலனும் இல்லை. இன்னும் சிலர் உடலை ஆட்டி, அசைத்து தவறான ஃபார்மில் அதிக எடை தூக்குவார்கள். உதாரணமாக பார்பெல் கர்லில் முன் கை ( ஃ போர் ஆர்ம்ஸ் Forearms) மட்டுமே அசையவேண்டும். முழு உடலையும் ஆட்டி அசைத்து அதிக எடை தூக்க இயலும். ஆனால் இதனால் எப்பலனும் இல்லை.சரியான ஃபார்மில் என்ன எடை தூக்க இயல்கிறதோ அதுவே பலனளிக்கும். 

(பாடிபில்டிங் பற்றி இன்னும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம். நாளை மீண்டும் புரதம், வைடமின்களுக்குள் குதிக்கலாம் என உள்ளேன்).

செல்வன்

unread,
Mar 4, 2012, 11:18:02 PM3/4/12
to rajam, mintamil
நன்றி அம்மா. இதற்கு விரிவான பதில் எழுத எண்ணி இருந்தேன். இரு நாட்களாக நேரம் கிடைக்கவில்லை

2012/3/2 rajam <ra...@earthlink.net>

புரதம் பற்றிய ஒரு சிறு குறிப்பு, என் அனுபவத்திலிருந்து ... "சீஸ் cheese" பற்றி மட்டும்: 
1. மிருகக் கொழுப்பிலிருந்து வரும் புரதச் சத்தோ/எதுவோ ... அது எளிமையாக நம் இதயக் குழாய்களிலிருந்து வெளியேறாது. அதாவது பாலடைக்கட்டி என்று பழைய காலத்தில் அறியப்பட்ட இன்றைய "சீஸ் cheese" போன்றவை.
வெளிநாட்டவரின் பழக்கத்தைப் பார்த்தீர்களென்றால் ... அவர்கள் "சீஸ் cheese" உடன் ஏதாவது ஆல்கஹால் (alcohol:  http://en.wikipedia.org/wiki/Alcoholic_beverage) உட்கொள்ளுவார்கள். அந்த alcohol அந்த உணவுப்பொருளின் கொழுப்பு நம் இதயக் குழாய்களில் உறைந்துவிடாமல் பாதுகாக்கும் என்பது எனக்குத் தெரிந்த உண்மை.


கொழுப்பில் பல வகை உண்டு. மிருககொழுப்பு என நீங்கள் சொன்ன கொலஸ்ட்ரால், சாச்சுரேட்டட் ஃபேட் எனப்படும் இன்னொரு வகை கொழுப்பு இவை இரண்டும் உடலுக்கு கெடுதல். நல்ல கொழுப்பு என அழைக்கபடும் கொழுப்புகள் உடலில் சேர சூரியகாந்தி எண்ணெய், கர்டி எண்ணெய், சோயா எண்ணை ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும்.

இது குறீத்து கொழுப்புகள், கார்போஹைடெரேர்ட்டுகளை பற்றி எழுதும் போது விரிவாக எழுதுகிறேன் அம்மா.

காமேஷ்

unread,
Mar 5, 2012, 8:43:56 PM3/5/12
to tamizhs...@googlegroups.com, mint...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம்
அப்படியே ஒரு யு-டியூப் வீடியோவும் போட்டீங்கனா..
ரொம்ப உபயோகமா இருக்கும் !


...........




2012/3/5 செல்வன் <hol...@gmail.com>

sk natarajan

unread,
Mar 5, 2012, 8:52:31 PM3/5/12
to tamizhs...@googlegroups.com, mint...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம்

அருமையான விளக்கம்
பயன் தரும் தகவல்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

sk natarajan

unread,
Mar 5, 2012, 8:54:35 PM3/5/12
to tamizhs...@googlegroups.com, mint...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம்
மிகவும் பயனுள்ளத் தகவல்
தொடர்கின்றேன்
மிக்க நன்றி ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



தமிழ்ப் பயணி

unread,
Mar 6, 2012, 10:32:59 PM3/6/12
to tamizh...@googlegroups.com, mint...@googlegroups.com, பண்புடன்
2012/3/5 செல்வன் <hol...@gmail.com>
(பாடிபில்டிங் பற்றி இன்னும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம். நாளை மீண்டும் புரதம், வைடமின்களுக்குள் குதிக்கலாம் என உள்ளேன்).

உப​யோகமா இருக்கும் என்று நம்புகி​றேன்...

Inline image 1

கி.காளைராசன்

unread,
Mar 8, 2012, 6:07:51 AM3/8/12
to mint...@googlegroups.com
ஐயா செல்வன் அவர்களுக்கு வணக்கம்.

நல்ல பயனுள்ள கருத்துகள்.
நன்றி

அன்பன்
கி.காளைராசன்

செல்வன்

unread,
Mar 9, 2012, 1:27:54 AM3/9/12
to mint...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம், தமிழ் சிறகுகள்


2012/3/6 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

உப​யோகமா இருக்கும் என்று நம்புகி​றேன்...


நன்றி பயணியாரே.இதில் தமிழர்கள் அரிசியை தவிர எதையும் உண்பது இல்லையே?;-)


உணவு பழக்கத்தை மேம்படுத்த

1. கண்ட நேரங்களில் உண்பதை தவிர்க்க வேண்டும். பெரும்தீனி தின்பதையும் தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டு உணவுகளில் அரிசி மிக அதிகமாக உட்கொள்ளபடுகிறது. இத்தனை அரிசியும் தீட்டபட்ட அரிசி என்பதால் அதில் சர்க்கரையை (கார்போஹைட்ரேட்) தவிர்த்து வேறு எந்த சத்தும் இல்லை.உணவில் அரிசியை குறையுங்கள். அதிக அளவில் பொறியல், அவியல் போன்ற காய்கறிகளை உட்கொள்ளுங்கள். காய்கறி, பால் பொருட்கள் (மோர்,தயிர், பால், சீஸ்) இல்லாமல் எந்த உணவையும் உட்கொள்ள வேண்டாம்

2. ரசம் சாதம், நீர் மாதிரி இருக்கும் சாம்பார் சாதம் போன்றவை ஜன்க் புட் வகையறாவில் தான் சேர்க்க இயலும்.இதில் எந்த சத்தும் இல்லை. அதிகம் பருப்பு, கீரை போட்டு சாம்பார் செய்யலாம்.கூட காய்கறி, மோர் ஆகியவை (மட்டும்) சேர்ந்தால் அதி அற்புத உணவாகிவிடுகிறது. (பருப்பில் புரதம், மோரில் புரதம் மற்றும் கால்ஷியம், காய்கறியில் வைடமின்). அப்பளம், ஊறுகாய் போன்றவை குப்பை உணவுகள். இவற்றை உண்ணவேண்டி இருந்தாலும் அப்பளத்தை எண்னெயில் பொறிக்காமல் மைக்ரவேவில் சுடுங்கள்.நன்றாக வரும்.

3. டீ, காப்பி ஆகியவற்றை அருந்துகையில் அதில் நிறைய பால் சேர்த்து கொள்ளுங்கள்.சர்க்கரையை முடிந்தவரை குறைக்கவேண்டும்.கொழுப்பு நீக்கிய பால் அல்லது கொழுப்பு குறைவாக இருக்கும் பாலில் காப்பி,டீ ஆகிஉஅவற்றை உண்பது நல்லது.ஆரோக்கியா 8% பால் தயவு செய்து குழந்தைகளுக்கு மட்டும் கொடுங்கள்.பெரியவர்களுக்கு வேண்டாம்.

4. நூடில்ஸ், இனிப்புவகைகள், கேக்,மிக்சர் போன்றவற்றி எப்போதாவது மட்டுமே சாப்பிடலாம்.நேரமின்மை கருதி பலர் தம் குழந்தைகளுக்கு டக் என நூடில்ஸ் செய்து கொடுக்கின்றனர்.அதில் எந்த சத்தும் இல்லை.நேரம் சற்று அதிகம் ஆனாலும் ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளுக்கு சமைத்து கொடுங்கள்.அவர்களை விட வாழ்க்கையில் முக்கியமான விஷயம் வேறு ஏது?

5. காய்கறிகளை சமைக்கையில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வண்ண காய்கறியை சமைப்பது மிக ஆரோகிகியமானது.இப்படி செய்து வந்தால் ஒரு வாரத்தில் அனைத்து வைடமின்களும் குழந்தைகளுக்கு கிடைக்கும். உதாரணம்: திங்கள் சிகப்பு (பீட்ரூட், காரட்,தக்காளி), செவ்வாய் வெள்ளை( காளி பிளவர்,டர்னிப்,உருளை) என ஒவ்வொரு நாளும் நிறத்தை கணக்கு வைத்து அந்த நிறத்தில் இருக்கும் காய்கறி பழங்களை குழ்ழ்ழ்ழ்ழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சமைக்கலாம். சிகப்பு காய்கறிகள் பழங்களை உண்பதால் ப்ரோஸ்டேட் கான்சர் வரும் அபாயம் குறையும், ரத்த அழுத்தம் குறையும். வெள்ளை காய்கறிகளால் பெண்களுக்கு பிரஸ்ட் கான்சர் வரும் அபாயம் குறையும், உடலில் ஹார்மோன் லெவல்கள் பேலன்ஸ் ஆகும்.

இப்படி சுழற்சி முரையில் சமைப்பது உடலுக்கு அனைத்து காய்கறிகளும் கிடைப்பதை உறுதி செய்யும். பழங்களுக்கும் இதே முரையை கையாண்டு தினமும் ஸ்னாக்சாக அளிக்கலாம்.


--
செல்வன்

Subashini Tremmel

unread,
Mar 10, 2012, 4:45:56 AM3/10/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
இந்திய உணவு வகைகளிலேயே எனக்கு தமிழக கேரள சாப்பாட்டு வகைகள் மிகப் பிடிக்கும். இதில் காய்கறிகள் நிறைய சேர்த்து சமைக்கும் வழக்கம் உண்டு. 

செல்வன் குறிப்பிட்டிருப்பது போல அரிசி சாப்பாடு பல முறை ஒரே வேளையில் பரிமாறப்படுவதும் அதிகமாகச் சாப்பிடுவதே விருந்து கொடுப்பவர்களை மகிழ்விக்கும் என்ற போக்கும் நமது வழக்கத்தில் உள்ளது. 

பொதுவாக எனது தமிழக பயணங்களில் நண்பர்கள் இல்லத்தில் சாப்பிடும் போது அவர்களிடம் நான் என் தேவைகளை முதலிலேயே சொல்லி விடுவேன். அதனால் எனக்குப் பிடித்த காய்கறிகளும் கீரைகளும் உணவில் நிச்சயம் இருக்கும். இப்படி முதலிலேயே சொல்லி விடுவது விருந்து தயாரிப்பவர்களுக்கும் எளிமையாகிப் போகும். அதே வேளை நானும் கடமைக்கு பிறரை மகிழ்விக்க வேண்டுமே என்ற பிரச்சனையில்லாமல் மனம் நிறைந்து சாப்பிடும் நிலையும் ஏற்படும்.

நண்பர் ஆண்டோவின் இல்லத்தில் நான் சாப்பிட்ட வரையில் எப்போதும் பற்பல காய்கறிகள் சாம்பார், கூட்டு வகைகளில் இருக்கும். வீட்டிலும் முருங்கை பொண்ணாங்கண்ணி என பல மூலிகை செடிகளும் இருக்கின்றன. டாக்டர் பத்மாவும் காய்கறிகளை தேர்ந்தெடுத்து சமைப்பவர். சாதத்தை விட காய்கறிகள் கூடுதலாக இருக்கும்.

சுபா

2012/3/9 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

கி.காளைராசன்

unread,
Mar 10, 2012, 4:53:31 AM3/10/12
to mint...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம், தமிழ் சிறகுகள்
ஐயா செல்வன் அவர்களுக்கு வணக்கம்.

2012/3/9 செல்வன் <hol...@gmail.com>
நூடில்ஸ், இனிப்புவகைகள், கேக்,மிக்சர் போன்றவற்றி எப்போதாவது மட்டுமே சாப்பிடலாம்.நேரமின்மை கருதி பலர் தம் குழந்தைகளுக்கு டக் என நூடில்ஸ் செய்து கொடுக்கின்றனர்.அதில் எந்த சத்தும் இல்லை
நன்றி ஐயா.
கடலைமிட்டாயும், பொரிஉருண்டையும், பட்டாணியும், பொட்டுக்கடலையும் மிகவும் நல்லது என்று நினைக்கிறேன்.
--
அன்பன்
கி.காளைராசன்

Innamburan Innamburan

unread,
Mar 10, 2012, 5:19:44 AM3/10/12
to mint...@googlegroups.com
ஆண்டோவுக்கு பிடித்தது என்னமோ தயிர்ச்சாதம். நான் அவரை பார்க்கப்போனபோது, எனக்கு வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்தத் தயிர்ச்சாதம் தந்தார். சுகம்.
இன்னம்பூரான்

2012/3/10 கி.காளைராசன் <kalair...@gmail.com>

செல்வன்

unread,
Mar 10, 2012, 9:01:54 PM3/10/12
to mint...@googlegroups.com


2012/3/10 கி.காளைராசன் <kalair...@gmail.com>

கடலைமிட்டாயும், பொரிஉருண்டையும், பட்டாணியும், பொட்டுக்கடலையும் மிகவும் நல்லது என்று நினைக்கிறேன்.


காளைராசன் ஐயா

சிறுதீனி என்ற வகையில் இவற்றை எப்போதாவது உட்கொள்ளலாம்.இவற்றில் சர்க்கரை, எண்ணெயில் பொறித்தல் போன்று இல்லாமல் செய்யபட்டால் இவை மிகவும் நல்ல உணவுகளாக இருக்கும்.

செல்வன்

unread,
Mar 10, 2012, 9:05:49 PM3/10/12
to mint...@googlegroups.com


2012/3/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>

நண்பர் ஆண்டோவின் இல்லத்தில் நான் சாப்பிட்ட வரையில் எப்போதும் பற்பல காய்கறிகள் சாம்பார், கூட்டு வகைகளில் இருக்கும். வீட்டிலும் முருங்கை பொண்ணாங்கண்ணி என பல மூலிகை செடிகளும் இருக்கின்றன. டாக்டர் பத்மாவும் காய்கறிகளை தேர்ந்தெடுத்து சமைப்பவர். சாதத்தை விட காய்கறிகள் கூடுதலாக இருக்கும்.


இது மிகவும் நல்ல சமையல் முறை. உணவில் அரிசியை விட அதிகம் காய்கறிகள் இருக்கவேண்டும். ஒவ்வொரு வேளை உணவிலும் ஒரு புரதம், காய்கறி, தானியம் ஆகியவை இருக்கவேண்டும். அதிக அளவில் பருப்புகள், காய்கள், கீரை ஆகியவற்றை சேர்ப்பது நல்லது. தேங்காயை அதிக அளவில் சமையலில் சேர்ப்பது, அதிகம் எண்ணெய், நெய் போன்ரவற்றை பயன்படுத்துவது ஆகியவை இந்திய சமையலில் உள்ல சில குறைகள்.

எண்னெய் வகைகளில் சேச்சுரேட்ட் ஃபாட் இருக்கும் டால்டா, தேங்காய் எண்ணெய், நல்லெண்ணய் போன்றவற்றை ஒதுக்கி பாலி அன்சாடுரேட்டட் ஃபாட் இருக்கும் சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணை, கர்டி எண்ணை ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். இந்த எண்ணைகளுக்கிடையே இருக்கும் வித்தியாசம் பற்றி அடுத்து எழுதுகிறேன்,

செல்வன்

unread,
Mar 10, 2012, 9:06:20 PM3/10/12
to mint...@googlegroups.com


2012/3/10 Innamburan Innamburan <innam...@gmail.com>

ஆண்டோவுக்கு பிடித்தது என்னமோ தயிர்ச்சாதம். நான் அவரை பார்க்கப்போனபோது, எனக்கு வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்தத் தயிர்ச்சாதம் தந்தார். சுகம்.
இன்னம்பூரான்


தயிர்சாதம் நல்ல உணவு, புரதம், கால்ஷியம் நிரம்பிய உணவு.
Reply all
Reply to author
Forward
0 new messages