1. எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா? – திருத்துறைக் கிழார் +++ 2 வெருளி நோய்கள் 341 – 345 : இலக்குவனார் திருவள்ளுவன் +++3. வெருளி நோய்கள் 346 – 350 : இலக்குவனார் திருவள்ளுவன்

7 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Sep 6, 2025, 2:22:05 AM (3 days ago) Sep 6
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா? – திருத்துறைக் கிழார்

 


ஃஃஃ   இலக்குவனார் திருவள்ளுவன்      05 September 2025      கரமுதல


(௬. புலமையார்: அன்றும் இன்றும் – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி)

திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
புலவர் வி.பொ.பழனிவேலனார்

ஆ.தமிழர்

எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா?

இன்று தமிழரிடையே நிலவும் பண்பாடு, கலவைப் பண்பாடே; தூய தமிழ்ப்பண்பாடன்று! பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவும் அழிந்தோ – அழிக்கப்பட்டோ விட்டன. இன்றைய இலக்கியங்களில் முழுக்க முழுக்க ஆரியப் பண்பாடு அல்லது அயல் பண்பாடு இழையோடியுள்ளது! தமிழ்ப்பண்பாட்டின் சாயை ஆங்காங்கு காணப்படுகின்றது. அதனை நுணுகி ஆராய்ந்து – கண்டு வெளிப்படுத்துவதே அறிவு சான்ற தமிழ்ப் பேரறிஞர்தம் தலையாய கடனாம். அதுவே அவர், தமிழுக்கும் – தமிழ்க் குமுகாயத்திற்கும் செய்யும் நன்றிக் கடனுமாகும்.
கணியம்
தமிழ்க்கணிய முறையில் எண்ணலளவை – எடுத்தலளவை – முகத்தலளவை – நீட்டலளவை – முதலியன மாற்றப்பட்டு வேற்று நாட்டளவைகள் புகுத்தப்பட்டன. பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் வழக்காறாயினும், தமிழ் மரபு சிதைய உதவுபவையாகும்.
மணிப்பவள நடை
தமிழ் மொழியில் சமற்கிருத மொழிச் சொற்களைச் சரிக்குச் சரி கலந்து எழுதினர். பிறமொழிச் சொற்களையும் கலந்தனர். இதனால், மணியும் பவளமும் கோத்தாற் போன்று தமிழ்நடையும் மாற்றமுற்று, ‘மணிப்பவளம்’ என புதிய நடை உண்டாயிற்று.

நாகரிகம்
ஆரிய நகரியத்தையே வலியுறுத்தும் சமற்கிருத நூல்களையும், புராணங்களையும் தமிழில் பெயர்த்து வெளியிட்டனர். வேடிக்கையான கதைகளான அவற்றைத் தமிழர் விரும்பிப் படித்தனர். அன்றியும், இராமாயணம்-பாரதம் போன்ற நூல்களை உடுக்கடிப் பாட்டாகவும், கதை நிகழ்ச்சியாகவும், சொற்பொழிவாகவும் மக்களிடையே பரவச் செய்தனர். இன்று, இராமாயணம் – பாரதம் இல்லாத தமிழ் படித்தார் இல்லமே இல்லையென்னும்படி பரவிவிட்டன.
அவற்றைப் படித்து – கேட்டு வந்த தமிழ் மக்கள், அவற்றில் சொல்லப்பட்ட சடங்குமுறைகளைத் தமதாக்கிக் கொண்டனர். இங்ஙனம் வடமொழி நூல்களையே விரும்பிப் படித்தும் – பாராட்டியும் வந்தமையால், தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் பழக்கத்தைச் சிறுகச் சிறுகக் கைவிட்டனர்.
மேலும், இராமாயணம் – பாரதம் படித்தாலும், பிறர் படிக்கக் காதால் கேட்டாலும் – ‘புண்ணியம்’ என்றும், ‘பாவம்’ பறந்து போகுமென்றும், வீடுபேறு (மோட்சம்) எளிதில் கிட்டுமென்றும் அந்நூல்களை எழுதியவர் கூறியுள்ளவற்றை அப்படியே ஆராயாது ஏற்றுக் கொண்டனர். அவ்வாறு ஆய்வு செய்வது குற்றமாகும்; அவர்கட்கு நரகந்தான் கிடைக்குமாம். இவற்றை நம்பிய தமிழர், தமிழ் நாகரிகத்தை மறந்து, இறுதியில் கைவிட்டனர்.

தமிழ் நூல்கள்
ஆண்டுக்கொருமுறை, ‘ஆடி மாதம் பதினெட்டாம் நாள் பதினெட்டாம் பெருக்கு’ என்று ஒரு விழாவையுண்டாக்கி, அன்று வேண்டாத தமிழ்ச்சுவடி (நூல்)களை ஆற்றில் விட்டனர்.
இதனால் இன்று தமிழர் நாகரிகம் – பண்பாடு கூறும் நூல்கள் இல்லாமற் போயின.
தமிழர்தம் பெயர்களையும், ஊர்ப்பெயர்களையும் வடமொழியில் வைத்தனர். பேச்சிலும், எழுத்திலும் சமற்கிருதத்தைப் பயன்படுத்துவதே பெருமையென்று கருதினர். இன்று ஆங்கிலத்தில் பேசுவதும் – எழுதுவதுந்தாம் பெருமைக்குரியதென்று நினைப்பது போன்றதே.
“ஒரு நாட்டு நாகரிகம் – பண்பாட்டைக் குலைக்க வேண்டுமாயின், அந்நாட்டு மொழியை மாற்றல் வேண்டும்” என்கிறார் ஓரறிஞர். இதனைத் தமிழர் இன்னும் உணர்ந்தாரிலர்.
தமிழ் மொழியில் பிறமொழிகள் கலந்தமையால், தமிழின் தூய்மை கெட்டது; கொச்சை மொழி உருவாகியது. ஒரு தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத் துணைக்கண்காணகர் கூட, ‘தமிழ் கொச்சை மொழியானால்தான், அயல் மொழிக்காரர் பலரும் படிக்க எளிதாகும்’ என்கிறார். மொழி இயல்பு பற்றி அவர் அறிந்தது அத்துணையே!

தேவர்கள்
வடமொழிப் புராணங்களில் புனையப்பட்ட கடவுள்களையும், தெய்வங்களையும் தமக்குரியனவென்று பிழைபடக் கருதிவிட்டனர், தமிழர். ஆரியச் சடங்கு முறைகளைப் பின்பற்றியே திருமணம் முதலியவற்றை நடத்தினர். தேவகங்களில் நடைபெறும் வழிபாட்டிலும் வாழ்க்கைச் சடங்குகளிலும் சமற்கிருத மந்திரங்களை அறிந்த சமயக் குரவர்களையே அமர்த்தி;க் கொண்டனர்.
ஐவர்க்கும் தேவி, அழியாத பத்தினி ‘பாஞ்சாலி’ என்று பாராட்டி – அவட்குக் கோவில் கட்டி வழிபாடு செய்து- விழாக் கொண்டாடினர். இன்றும் நடைபெறுகின்றமை நாமறிவோம். தமிழர் அயல்மொழியைப் படிப்பதுடன் நின்று விடுவதில்லை. அம்மொழிக்காரர் (நாகரிகத்தையும்), நடை-உடை-பழக்க வழக்கங்களையும் மேற்கொள்ளும் இயல்பினர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. அதனாற்றான் தமிழ்ப்பண்பாடு பெருமளவு சீர்கெட்டது – சீலம் அழிந்தது.
தமிழர் கடமை
இற்றைத் தமிழர்கட்குத் தம் பண்பாடு – நாகரிகம் மறந்து போயினதன்றி, மறைந்தும் போயின. எனவே, தமிழ் நாகரிகம்- பண்பாடு மறுமலர்ச்சியடையச் செய்வதென்பது மிகவரிது. இன்று நம்மிடையே நிலவும் பழக்க வழக்கங்கள் நமக்குரியனவல்ல. ‘இறக்குமதிச் சரக்கு’ என்று சொன்னால், நம்மையே வெறுக்கின்றனர் – நம்மிடம் காழ்ப்புக் கொள்கின்றனர்- அறியாத் தமிழர்.

இன்று தமிழ் இலக்கியங்களைத் துருவித் துருவி ஆய்ந்து நூல் வெளியிட்டு, (பண்டாரகர்) முனைவர் பட்டம் பெறுபவர்களும், தமிழ்ப் பண்பாட்டைத் தம் ஆய்வுக்குக் கருவாகக் கொள்வதில்லை. அங்ஙனம் ஆயின், ‘பட்டம் (Ph.d.) வழங்கமாட்டார்’ என்ற அச்சம் போலும். சிலர் தம் கோட்பாட்டை இட்டுக்கட்டி இயைத்து எழுதி விடுகின்றனர்.
தமிழ்ப் பண்பாட்டை உள்ளபடியே ஆராய வேண்டுமாயின், எஞ்சியுள்ள சில பண்டைத் தமிழ் இலக்கியங்களைக் காய்தல் – உவத்தல் அகற்றி, ஆழ்ந்து படித்து- நடுநின்று ஆய்தல் வேண்டும். உரையாசிரியர்கள் எழுதியுள்ள உரைகளை வைத்துக் கொண்டு படிக்கக் கூடாது. தாமே படித்துப் பொருள் காணல் வேண்டும். ஐயம் எழுமிடங்களில் மட்டில், உரையாசிரியர் துணையை நாடவேண்டும். ஆராயுங்கால், இப்பொழுது நடைமுறையிலுள்ள பழக்க வழக்கங்களை உளங்கொள்ளாது ஆராய்பவர், தாம் ஆராய எடுத்துக்கொள்ளும் நூல் தோன்றிய காலம் – அதன் ஆசிரியர் வாழ்ந்த காலம் – மக்கள் வாழ்க்கை முறை முதலிய சூழ்நிலைகளை உளங்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தமிழர் பண்பாட்டை உள்ளபடியே உணரமுடியும்.
இடைக்கால – பிற்கால இலக்கியங்களையும், பிற மொழியினின்றும் பெயர்க்கப்பட்ட நூல்களையும் படித்துப் பண்டைத் தமிழர் பண்பாட்டை அறியவொல்லாது.
இன்று தமிழரிடை நிலவும் பண்பாடு, கலவைப் பண்பாடே-தூய தமிழ்ப் பண்பாடன்று. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவும் அழிந்தோ – அழிக்கப்பட்டோ விட்டன. இன்றைய இலக்கியங்களில் முழுக்க முழுக்க ஆரியப்பண்பாடு அல்லது அயல்பண்பாடு இழையோடியுள்ளது. தமிழ்ப் பண்பாட்டின்
சாயை ஆங்காங்கு காணப்படுகின்றது. அதனை நுணுகி ஆய்ந்து – கண்டு வெளிப்படுத்துவதே அறிவு சான்ற தமிழ்ப் பேரறிஞர்தம் தலையாய கடனாம். அதுவே அவர், தமிழுக்கும் – தமிழ்க் குமுகாயத்திற்கும் செய்யும் நன்றிக் கடனுமாகும்.
மலர்க – உண்மைத் தமிழ்ப் பண்பாடு!
“தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு!”
-நாமக்கல் கவிஞர்.

               (நன்றி : கழகக் குரல், 28.03.76)

(தொடரும்)

திருத்துறைக்கிழார் கட்டுரைகள்

தொகுப்பு  முனைவர் வி.பொ..தமிழ்ப்பாவை

++

வெருளி நோய்கள் 341 – 345 : இலக்குவனார் திருவள்ளுவன்

 


ஃஃஃ   இலக்குவனார் திருவள்ளுவன்      31 August 2025      னரமுதல


(வெருளி நோய்கள் 336 – 340 : தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 341 – 345

341. இருப்பு இயக்க வெருளி – Fysikophobia

இருப்பு இயக்கம்(physical plane of existence) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இருப்பு இயக்க வெருளி.

00

342. இருப்புப்பாதை கடப்பு வெருளி – Bahnubophobia

இருப்புப்பாதை கடப்பு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் இருப்புப்பாதை கடப்பு வெருளி.

கடப்புவெருளி(Agyrophobia/ Dromophobia/ Banmaxianphobia) உள்ளவர்களுக்கும் தொடரி வெருளி(Siderodromophobia) உள்ளவர்களுக்கும் இவ்வெருளி வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

இருப்புப்பாதையைக் கடப்பது சடடப்படியும் தவறு. நமக்குக் கேடு விளைவிக்கும் வாய்ப்பும் உள்ளது. எனினும் அவசரம், சோம்பல் போன்ற காரணங்களால் துணிந்த இருப்புப்பாதையக் கடக்கின்றனர். என்றாலும் இருப்புப் பாதையைக் கடக்கும் பொழுது கால் இடறி விழுந்து  காயம் அல்லது பெருந்தீங்கு அல்லது உயிரிழப்பு நேருமோ என்றும் கடக்கும் பொழுது தொடரி வந்து விட்டால் அடிபட்டோ தூக்கி எறியப்பட்டோ உடலுக்கோ உயிருக்கோ இழப்பு நேரும் என்றும் ஒருவகை அச்சமும் கொண்டிருப்பர்.  இதனால் ஏற்படும் பேரச்சத்தால் வருவதே இருப்புப் பாதைக் கடப்பு வெருளி.  

00

343. இருமல் வெருளி – Tussaphobia

இருமல்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் இருமல் வெருளி.

பிறர் இருமும் பொழுது, தனக்கு இருமல் வராமலே மருந்து உட்கொள்வர். இருமுவோரைக் கண்டு அஞ்சி ஒடுவர். இருமல் பற்றிய அச்சம் பேரச்சமாக வளர்ந்து இருமல் வெருளியாக மாறுகிறது.

 tussis என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இருமல்.

per என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் முழுமையான

00

344. இரும்பன் வெருளி – Ironmanphobia

புனைவுரு இரும்பன்(Ironman) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இரும்பன் வெருளி.

இரும்பன் என்பது மார்வெல் வரைநூல்(Marvel Comics)நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஓர் அமெரிக்க வரைகதை நூலில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன்(Super hero)கதைப்பாத்திரம் ஆகும்.  முதலில் கதை மட்டுமே பட வடிவில் வந்ததால் படக்கதை எனப்பட்டது. ஆனால், கதை மட்டுமல்லாமல்,அறிவியல், வரலாறு முதலியனவும் படங்கள் மூலம் விளக்கப்பட்டு இப்போது வருகின்றன. எனவே, பொதுவாக வரை நூல் எனக் குறித்துள்ளேன். பட நூல் என்றால் வேறு படங்கள் பற்றிய நூல் எனக் கருதலாம். எனவேதான் வேறுபடுத்த வரை நூல் எனப்பட்டது.

 இரும்பு மனிதன் என்னும் இரட்டைச்சொல்லுக்கு மாற்றாக பயன்பாட்டு எளிமை கருதி இரும்பன் எனச் சுருக்கி யுள்ளேன். கரும்பு உடைய காமன் கரும்பன் என்னும் வழக்குபோன்றதகாகக் கருதலாம். முன்னரே இயந்திர மனிதன் என்பதை இயந்திரன் எனச் சுருக்கித் தந்ததை மக்கள் ஏற்றுக் கொண்டனர். வேறு பல சுருக்கப் பெயர்களும் இந்நூலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

00

345. இரும்பு வெருளி-Ferrumphobia

இரும்பு, இரும்புப் பொருள்கள் மீதான வரம்பு கடந்த பேரச்சம் இரும்பு வெருளி.

இரும்புப்பொருள் மேலே விழுந்து அடிபட்டதால் அல்லது பிறருக்கு அடிபட்டதைப்பார்த்ததால இரும்பு மீது  ஏற்பட்ட அச்சம் நாளடைவில் வளர்ந்திருக்கலாம்.

இரும்புப்பொருள்கள் விற்பனையகம் அல்லது இரும்பபுப் பொருள்கள் உள்ள பகுதிகளில் வேலை பார்க்கவும் இத்தகையோர் அஞ்சுவர்.

Ferrum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இரும்பு.

00

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,

வெருளி அறிவியல் தொகுதி 1/5

+++

வெருளி நோய்கள் 346 – 350 : இலக்குவனார் திருவள்ளுவன்

 


ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      01 September 2025      அகரமுதல


(வெருளி நோய்கள் 341 – 345 தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 346 – 350

346 இருள் வெருளி-Achluophobia/Lygophobia/Nyctophobia/Scotophobia

இரவு, இரவுப்பொழுதில் வரும் இருட்டு முதலியன குறித்த வரம்பு கடந்த பேரச்சம் இரவு வெருளி/ இருண்மை வெருளி/ இருள் வெருளி/ இரா வெருளி என அழைக்கப்பெறுகின்றது. எப்படி அழைத்தாலும் பொருள் ஒன்றுதான். எனவே நாம் இருள் வெருளி என்றே அழைப்போம்.
இரவில் வெளியே செல்லுதல், இரவில் தனியாகப் படுத்தல், இரவுப்பொழுதில் யாரேனும் வருதல் அல்லது யாரையாவது பார்த்தல், இருட்டுச் சூழல் என இவர்கள் பேரச்சம் கொள்வர்.
Nyctohylo என்றால் இருண்ட மர(க்காட்டு)ப் பகுதி எனப் பொருள். எனினும் அதுவும இருட்டைத்தான் குறிக்கிறது. எனவே, இவ்வெருளியைத் தனியாகக் குறிக்க வேண்டா.
Achluo, Lygo ஆகிய கிரேக்கச் சொற்களுக்கு இருட்டு /இருண்மை எனப் பொருள்கள்.
Scotophobia – சுகாத்தியர் வெருளி என்பது சுகாத்து நாட்டினர் தொடர்பான வரம்புகடந்த பேரச்சத்தையும் குறிக்கும் .
nocti என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இரவு.
00

  1. இரைச்சல் வெருளி Acousticophobia / Ligyrophobia

இரைச்சல் ஒலி மீதான அளவுகடந்த பேரச்சம் இரைச்சல் வெருளி.
திடீர் உரத்த ஒலி, தீ யணைப்பு ஒலி, வெடிகளின் ஒலி முதலான திடீர் ஒலிகளால் அச்சம் உறுவர்.
பொருளற்ற ஒலி அல்லது பல்வேறு ஒலிகளின் கூட்டு இரைச்சலாகிறது. ஒலி மூலம் பொருளையோ இசையையோ உணர முடியும். இரைச்சல் பொருளோ இனிமையோ தராது. இதனால் இரைச்சல் கண்டு வெறுப்பும் அச்சமும் கொள்வோர் உள்ளனர். சிலருக்கு இனிமையான மென்மையான ஒலி கூட அச்சம் தரும்.
மனநோயர்கள் சிலருக்குக் காதில் இரைச்சல் கேட்டுக்கொண்டே இருக்கும். இத்தகையோர் இரைச்சல் மீது பெரும் வெறுப்பிலும் பேரச்சத்திலும் இருப்பர்.
.
00

  1. இலசாடா வெருளி – Lazadaphobia

இலசாடா(Lazada) நிறுவனம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இலசாடா வெருளி.

இலசாடா குழுமம் பன்னாட்டு இணைய வணிக நிறுவனம்.அலிபாபா குழுமத்திற்கு (Alibaba Group) உரிமையானது. இதன் வளர்ச்சியால் தம்முடைய வணிகம் பாதிப்புறும் என அஞ்சுவோருக்கு இவ்வச்சம் அளவுகடந்து போகும்போது இலசாடா வெருளி வருகிறது.
00

  1. இலம்பாடு வெருளி-Peniaphobia

வறுமை தொடர்பான தேவையற்ற மிகையான பேரச்சம் இலம்பாடு வெருளி.
வறுமை வரும் என்ற அச்சத்தில், வறியவராவோம் என்ற அச்சத்தில், வறுமையைப் போக்குவது குறித்து எண்ணித் திட்டமிடாமல் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை” (தொல்காப்பியம் 2-8-63) என்கிறார் தொல்காப்பியர்.
இல்லை > இல > இலம் > இலம்பாடு என்பது வறுமையைக் குறிக்கலாயிற்று.
இலம்பாடு நாணுத் தருமெனக்கு” என வறுமை நாணத்தைத் தருவதாகக் கோவலன் கூறுவதாக இளங்கோஅடிகள் சிலப்பதிகாரத்தில் (9.71) தெரிவிக்கிறார். வறுமை அடைந்தது குறித்து நாணம் கொண்டு சோர்ந்து விடவில்லை; இழந்த செல்வத்தைப் பெற மீண்டும் வணிகத்தில் ஈடுபடக் கோவலன் முனைந்தான். இவ்வாறு இல்லாமல் அஞ்சி வாழ்வதில் பயன் என்ன? (கோவலன் மறைந்ததன் காரணம் வேறு.)
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
என்கிறார் ஒளவையார். கொடிய வறுமை மீது யாருக்குத்தான் அச்சம் வராமல் இருக்கும்?
“இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்” (அகநானூறு 123 /4-5 ) என்னும் பாடலடி மூலம் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் தலைவன் தன் நெஞ்சிற்கு “மலை கடந்து சென்று பொருள் திரட்டாமல் இருக்கிறாயே” எனச் சொல்வதாகத் தெரிவித்து்ளளார். இதன் மூலம் வறுமை வந்தவழி அஞ்சாது பொருள் திரட்டச் செல்லும் துணிவும் நம்பிக்கையுமே தேவை எனப் புரியலாகும். ஆனால், வறுமைக்கு அஞ்சித் தனித்தும் குடும்பத்தினருடனம் தற்கொலை புரிவார் உள்ளனர்.
சிலர் வறியவர்களைக் கண்டால் அஞ்சுவர். இதுவும் தவறாகும். உயர்வு மனப்பான்மையில் வரும் இலம்பாடு வெருளி இது. (தொடரில் கையாளும் பொழுது இலம்பாட்டு வெருளிக்குரிய அறிகுறிகள் என்பதுபோல் குறிக்க வேண்டும்.)
Penia என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் வறுமை. இதே பொருள் கொண்ட இலத்தீன் சொல்லான penuria என்பதுடன் ஒப்பு நோக்கத்தக்கது.
00

  1. இலியனார்டோ வெருளி – Leonardophobia

புனைவுரு இலியனார்டோ(Leonardo) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இலியனார்டோ வெருளி.
கதைப்படி, இலியானாருடோ வின்செந்து வின் இரட்டையருள் ஒருவர்.சைமன் என்பவரின் உடன் பிறப்பு.
இலியொனாருடோ தா வின்சி (Leonardo da Vinci) அல்லது இலியனார்தோ தா வின்சி (15.04.1452 – 2.05. 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். அந்தப் பெயரை இப்பாத்திரத்திற்குச் சூட்டியதாகக் கருதலாமே தவிர, அவருக்கும் இப்பாத்திரத்திற்கும் தொடர்பு இல்லை.
00

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,

வெருளி அறிவியல் தொகுதி 1/5

+++




--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages