தினம் ஒரு பாடல்

24 views
Skip to first unread message

AKR

unread,
Oct 31, 2009, 1:59:06 PM10/31/09
to minT...@googlegroups.com
திருமணமாகும் வரை ஒரு பெண் தன் பெற்றோரின் கட்டுப்பாட்டில் வளர்வதால், தன் மனம் விரும்பும் இடங்களுக்குச் செல்வது, நண்பர்களுடன் கலந்து பழகுவது போன்ற செயல்களுக்கான முழு சுதந்திரம் அவளுக்குக் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் நமது நாட்டின் சமுதாய அமைப்பு பெண்ணைப் போற்றிப் பாதுகாக்கும் விதமாக அமைந்ததுவே ஆகும். அப்பெண் திருமணமாகித் தன் கணவனுடன் குடும்பம் நடத்துகையில் தன் பெற்றோர்களுடன் வாழ்ந்த காலத்தை விடவும் அதிக சுதந்திரத்தை எதிர்பார்ப்பதும், கணவன் காலையில் பணிக்குச் சென்றால் மாலையில் சற்று நேரம் முன்னதாகவே வீட்டுக்குத் திரும்பி வர வேண்டும், அவனுடன் வெளி உலகைச் சுற்றிப் பார்க்கப் பல இடங்களுக்குச் செல்ல வேண்டும் என விரும்புவதும் இயல்பு.
 
இத்தகைய எதிர்பார்ப்புகளை ஓரளவேனும் பூர்த்தி செய்வது அவளது கணவனின் கடமையாகும். மாலை கணவன் நேரத்தோடு வீடு திரும்புவான், அவனுடன் அளவளாவி மகிழலாம், இல்லற சுகம் காணலாம் என எதிர்பார்த்து வீட்டு வாசலில் மாலை நேரங்களில் வந்து காத்திருப்பது நமது நாட்டில் மணமான பெண்கள் மேற்கொள்ளும் வழக்கமாக உள்ளது. வாழ்க்கையே ஓர் எதிர்பார்ப்பல்லவா?
 
அவ்வாறு வாசலில் வெகுநேரம் நின்று பார்த்துத் தன் கணவன் திரும்பிவரக் காணாது துயருற்ற ஒரு பெண் தன் மன ஆதங்கத்தை ஒரு சிட்டுக்குருவியிடம் வெளியிடுகிறாள்.
 
 
படம்: டவுன் பஸ்
இயற்றியவர்: கா.மு. ஷெரிஃப்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
ஆண்டு: 1955
 
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
 
பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது - பசும்
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது
பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது - பசும்
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது
 
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?
 
தலைய வாரிப் பூ முடிச்சேன் வாடி வதங்குது
தலைய வாரிப் பூ முடிச்சேன் வாடி வதங்குது - சதா
தெருவில் வந்து நின்று நின்று காலும் கடுக்குது - சதா
தெருவில் வந்து நின்று நின்று காலும் கடுக்குது
வாழிய வழியப் பாத்துப் பாத்துக் கண்ணும் நோகுது
வாழிய வழியப் பாத்துப் பாத்துக் கண்ணும் நோகுது - அவர்
வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது - அவர்
வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது
 
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 1, 2009, 4:45:06 AM11/1/09
to minT...@googlegroups.com
"கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்" என்று சொன்னார்கள் நமது முன்னோர்கள். இதன் பொருளை விளக்கிக் கூறவில்லை யாரும். "ஆயுட்காலப் பயிர்" என்று சொல்வது பொருத்தமானதென நான் கருதுகிறேன், காரணம் மனிதர்க்கு வாழ்க்கை திருமணத்தின் மூலமே அமைகிறது. திருமணம் செய்யாதவர் வாழ்க்கை வெறுமையாகவே காணப்படுகிறது. எனினும் திருமணம் செய்வதென்பது காலப்போக்கில் பொருளாதார ரீதியில் மிகவும் கடினமான விஷயமாகி வருகிறது, காரணம் விலைவாசி ஏற்றம். உணவுப் பொருட்கள் நாளுக்கு நாள் விலை உயர்ந்து சாமான்ய மக்கள் அவற்றை வெளிச் சந்தையில் எல்லோரையும் போல் விலை கொடுத்து வாங்க இயலாத சூழ்நிலை ஏற்கெனவே உருவானதாலேயே ரேஷன் கடைகளை நம்பி வாழ்க்கை நடத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.
 
தமது குடும்பத்திலுள்ளோர் உண்பதற்கே மலிவு விலைக் கடைகளை நம்பியிருக்கும் நிலையில் உறவினர்களை எல்லாம் அழைதது அவர்களுக்கு விருந்து படைப்பதென்பது சாமான்ய மக்களுக்குப் பெரும் செலவை ஏற்படுத்துகிறது. ஒருவர் தன் ஆயுட்காலம் முழுதும் உழைத்துச் சேர்த்த பொருள் அனைத்தையும் செலவழித்தாலும் தன் ஒரு மகளுக்குக் கூட உரிய முறையில் திருமணம் செய்வதென்பது அரிதாகிவிட்டது.
 
இந்நிலை நீடித்தால் மாப்பிள்ளை, பெண் மற்றும் அவர்களின் பெற்றோரும் அவர்களது திருமணத்திற்குச் செல்லப் பேருந்துக் கட்டணத்துக்கும் வழியின்றி  மாட்டு வண்டிகளில் செல்வது ஒன்றே வழி எனும் நிலை நேர்ந்தாலும் நேரலாம்.
 
 
படம்: காவேரியின் கணவன்
இயற்றியவர்:
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, எல்.ஆர். ஈஸ்வரி
ஆண்டு: 1959
 
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
 
புள்ளையப் பெத்த அம்மா வந்தா மொட்ட வண்டியிலே
புள்ளையப் பெத்த அம்மா வந்தா மொட்ட வண்டியிலே
பொண்ணைப் பெத்த அப்பா வந்தான் ஓட்ட வண்டியிலே
பொண்ணைப் பெத்த அப்பா வந்தான் ஓட்ட வண்டியிலே
 
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
 
காக்காக் கடி கடிச்சுக் கொடுத்த கம்மருகட்டு முட்டாயி
சோக்கா வாங்கித் தின்னுப்புட்டு விட்டானையா கொட்டாவி
காக்காக் கடி கடிச்சுக் கொடுத்த கம்மருகட்டு முட்டாயி
சோக்கா வாங்கித் தின்னுப்புட்டு விட்டானையா கொட்டாவி
ஓட்டாஞ்சல்லிய எடுத்துக் கிட்டு ஓடுனாங்க மாருக்கட்டு
ஓட்டாஞ்சல்லிய எடுத்துக் கிட்டு ஓடுனாங்க மாருக்கட்டு
ஓராழாக்கு அரிசி வாங்கி ஒலையில தான் போட்டுக்கிட்டு
 
கூட்டாஞ்சோறு ஆக்கிககிட்டு கும்மாளந்தான் போட்டுக்கிட்டு
கூட்டாஞ்சோறு ஆக்கிககிட்டு கும்மாளந்தான் போட்டுக்கிட்டு
கொழவிக் கல்லு புள்ளய ஒண்ணு குஷியாகப் பெத்துகிட்டு
கொழவிக் கல்லு புள்ளய ஒண்ணு குஷியாகப் பெத்துகிட்டு
 
ஆராரோ நீ ஆரோ அருமையான கொழந்தை யாரோ?
ஆராரோ நீ ஆரோ அருமையான கொழந்தை யாரோ?
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/
Reply all
Reply to author
Forward
0 new messages