சோழர் சரித்திரத் தேடல் ...

1,621 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 17, 2017, 6:39:23 PM8/17/17
to மின்தமிழ்
சோழர் சரித்திரத் தேடல் ...
~ மா.  மாரிராஜன் ~

முன்னோட்டம்:

வழக்கம் போல் நாமும் வடவேங்கடம் முதல் தென் குமரி என்றே தொடங்குகிறோம்...

 மனுநீதீச்சோழன்
இவரது காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு..

கி.பி மூன்றாம் நூற்றாண்டின் இறுதி..
தமிழகம் முழுவதும் ஒரு பரபரப்பு தொற்றியது..
யார் இவர்கள்.?  எங்கிருந்து வந்தார்கள்.? எப்படி வந்தார்கள்..? யாருக்கும் தெரியாது..?
இவர்கள்தான் களப்பிரர்கள்

பாண்டியத்தின் தொன்மை பற்றி இதுவரை யாராலும்
கணக்கீடு செய்ய இயலவில்லை.. கடல் கோளாலால்
குமரிக்கண்டம் அழிந்த பிறகு, கபாடபுரம்,  மதுரை இவர்களது தலை நகரம் ஆயிற்று..

மேலும் பெரும்பாணாற்று படையில், காஞ்சியை ஆண்ட பல்லவன் தொண்டைமான் இளந்திரையன்
என்பவர் பற்றி தகவல்.. இவர் மேற்கண்ட நால்வரில்
ஒருவராய் இருக்கலாம்.

அப்போ களப்பிரர்கள்..? 
இடைக்கால பல்லவர்களில் முதல்வனும், மாவீரனுமான சிம்ம விஷ்ணு, அவர்களை எதிர்க்க
தயாராகிவிட்டார்..

நமக்கு கிடைத்திருக்கும் சிறிது இடைவெளியில்..
ஆரம்ப கால சேரர்களை பற்றி சுருக்கமாக பார்த்து விட்டு விரைவாக திரும்பி விடுவோம்..

 வரகுண மகாராஜன் ( கி.பி 792 - 830)
மிகச்சிறந்த பாண்டிய அரசர்களுள் ஒருவர்...
இவரது ஆரம்ப படையெடுப்பே சோழத்தின் மீதுதான்..
சோழம் முழுவதையும் வென்றார் என உறுதியாகிறது..
இவரது கல்வெட்டுகள் சோழமெங்கும் காணப்படுகின்றன..

 திருவிசலூர் ( Ins 17 of 1907 ), 
 ஆடுதுறை ( Ins 364 Of 1907 )

 மூன்றாம் நந்திவர்மன்
பல்லவர்கள் மீண்டும் ஆதிக்கம் பெற்றனர்..

எங்கப்பா எங்க சோழர்கள்..?

பதினாரடி வேங்கையாம் தந்தைப்புலி..
                விஜயாலயச்சோழர்

வேங்கையை மிஞ்சும் குட்டிப்புலியாம்
              ஆதித்தச் சோழர்.

தெள்ளாறெரிந்த நந்திவர்மனின் கல்வெட்டு,
திருச்சி சென்னி வாய்க்காலில் உள்ளது.  இவரை நந்தி
போத்தரையர் என்கிறது . ( S. I . I vol 12 no 56 )

மீண்டும் பாண்டியர் ஆதிக்கம் பெற்றனர்.

வரகுண பாண்டியரின் ஐவர் மலை கல்வெட்டு ..
சகம் 792 யை குறிக்கிறது. ஆக இந்நிகழ்வுகளின்
காலம் கி.பி 870 என்பது உறுதி..

தென்னாற்காடு கல்வெட்டு ( S. I. I. Vol 13 no 71 )
வரகுண பாண்டியனையும், நிருதுபங்க வர்மனையும்
நண்பர்கள் என்கிறது..

மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திருப்புறம்பியம்
போர் கி.பி 880 ல் நடந்தது.. கங்க மன்னன் பிருத்வியின்
கடைசி ஆட்சியாண்டும் இதுவே ( கி.பி 879)

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு..
விஜயாலய சதுர்வேதிமங்கலம் பற்றி கூறுகிறது.

அபராஜிதரின் மறைவிற்கு பிறகு,  பல்லவபேரரசு முடிவுக்கு வந்தது.. ஆதித்தரின் சோழ விஸ்தரிப்பு
ஆரம்பம்..

இராஷ்டிரகூட மன்னர் இரண்டாம் கிருஷ்ணனின்
மகளும், ஆதித்தனுடைய மனைவியுமான இளங்கோ
பிச்சியின் மகனே கன்னரத்தேவன்.
 ( s.i.i Vol 5 no 595 ) ( ep. ind p. 233 & 234 )

உத்தமச்சோழனின் திருமால்புரம் கல்வெட்டு, இவரை
 தொண்டமானூற்றூர்ந் துஞ்சின உடையார் என 
குறிப்பிடுவதால், ஆதித்தர் தொண்டமானூற்றில்
இறந்தது உறுதி செய்யப்படுகிறது..
 ( s.i.i vol 3 no 142)

தேமொழி

unread,
Aug 17, 2017, 7:09:59 PM8/17/17
to மின்தமிழ்
சோழர் சரித்திரத் தேடல் ...
~ மா.  மாரிராஜன் ~

நண்பர்களுக்கு வணக்கம்...

நான் ஒரு சிறு .. எளிய .. வரலாற்று ஆர்வலன்..!

வரலாற்றை,  சோழ வரலாற்றை,  குறிப்பாக பிற்காலச் சோழவரலாற்றை,  அறிந்து கொள்ளவேண்டும் என ஆர்வமுடன் இருக்கும் ஆரம்ப வரலாற்று ஆர்வலர்க்கு பயன்படலாம் என்னும் நோக்கத்துடன் உருவானதே

 சோழர் சரித்திரத் தேடல் என்னும் தொடர் பதிவுகள்...

இது ஒரு முழுமையான வரலாற்றுத் தொகுப்போ.. அல்லது ஒரு ஆய்வுக்கட்டுரையோ அல்ல..

துவக்கநிலை ஆர்வலர்களுக்கான ஒரு கையேடு...
எளிமையாய்.. சுருக்கமாய்.. சில விபரங்கள்.!

விஜயாலர் காலம் முதல் மூன்றாம் இராஜேந்திரன் வரை.. கி.பி 850 - 1279. இவ்விபரங்களை முடிந்த அளவு சான்றுகளோடு பதிவிடும் ஒரு பதிவு..

 தொடரில் தவறுகள் இருந்தால் சான்றோர்கள் சரிப்படுத்தலாம்...

நன்றி 🙏🙏🙏🙏

தேமொழி

unread,
Aug 17, 2017, 7:22:23 PM8/17/17
to மின்தமிழ்
சோழர் சரித்திரத் தேடல் ...
~ மா.  மாரிராஜன் ~

வழக்கமாய் ஒரு முன்னுரை ...

இதுவும் ஒரு காலம்..வரலாற்று விழிப்புணர்வு காலம்
என்று கூடச் சொல்லலாம்..

கோவிலுக்குச் செல்லும் வழக்கமே மாறிவிட்டது..
முன்பெல்லாம் கோவிலுக்குச் சென்றால்., பிரகாரத்தை
வலம் வந்து, சுவாமி தரிசனம் செய்து, சற்று நேரம்
தரையில் அமர்ந்திருந்து, இல்லம் திரும்பி விடுவோம்..

ஆனால் இன்று.. கோவிலின் பக்கம் பக்கமாகச் சுற்றுகிறாகள் இளைஞர்கள்.. கோவில் கட்டியது யார் காலம் என்பதில் அவர்கள் ஆய்வு துவங்கியது..

கல்லில் வெட்டப்பட்ட செய்திகளை தேடி தேடி வாசிக்கிறார்கள்.. பொருள் அறிந்து கொள்ள துடிக்கிறார்கள்.. உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் என்னும் வார்த்தையை அடையாளம் கண்டால் உற்சாக மிகுதியில் துள்ளி குதிக்கிறார்கள்..கல்வெட்டு இல்லாத கோவில்கள் இவர்களின் பட்டியலில் இல்லை

 சிற்பங்களை அங்குல அங்குலமாக பகுத்தாய்கின்றனர்.
யார் காலம் என்பதில் தொடங்கி, அவற்றில் இருக்கும்
உருவம் யார் என அடையாளம் கண்டால்தான்,
முழு திருப்தி அவர்களுக்கு...

இதன் விளைவாக பல முகநூல் பக்கங்களும்,
பல வாட்ஸ் அப் வரலாற்று குழுக்களும் நாள்தோறும் ஒன்று தோன்றத்தான் செய்கிறது..

சில உளறல்கள், பல காப்பி பேஸ்ட் பதிவுகள் இருந்தாலும் .. சில வியப்பான  விடயங்கள் வரத்தான்
செய்கின்றன.. வீரியமான விவாதங்கள் தொடர்கின்றன..

இனி யாரும் இவர்களை ஏமாற்ற இயலாது..
மனுநீதிச் சோழன் கதையைச் சொன்னால், இதெல்லாம்
நம்புறமாதிரியாங்க இருக்கு என்று கேள்வி கேட்கிறார்கள்..

அனைத்திற்கும் சான்று வேண்டும் இவர்களுக்கு..

கல்லணையை யார் கட்டியது..?

கரிகால்சோழன்..

என்ன ஆதாரம்..?

சோழர் செப்பேடுகள் தரும் விபரம்.?

எந்த செப்பேடு.? எத்தனாம் செய்யுள்.? என்ன விபரம்.?

இந்த செப்பேடு.. இந்த செய்யுள்.. இதுதான் விபரம்..

கலிகாலன் என்றுதானே வருகிறது. கரிகாலன் என்று இல்லையே..

விவாதங்கள் தொடர்ந்தாலும், கல்லணை திறப்பு விழா
கல்வெட்டு இருந்தால்தான் ஏற்றுக்கொள்வார்களோ..?

வரலாற்று புத்தகங்கள் சற்று அபரிதமாகத்தான் விற்பனையாயின.. வாசிப்பதும் விமர்சிப்பதும்
வாடிக்கையானது..

பண்டாரத்தார் இந்த இடத்தில் தவறிவிட்டாரே..
இதை எப்படி சாஸ்திரி யூகித்தார்.? சாஸ்திரியும்,
பண்டாரத்தாரும் இவர்களின் தேடலுக்கான மூலங்கள்..

சர்ச்சைகளை விரும்பி ஏற்கிறார்கள்.. 
இராஜராஜன் தஞ்சை பெரியகோவிலில் தற்கொலை
செய்து கொண்டாராமே..? 

அதிராஜேந்திரனுக்கு த்ரோட் கேன்ஸ்ராமே..?
மருத்துவச் சான்றிதழை கேட்காமல், இம்மாதிரியான
விடயங்களை விரும்புகிறார்கள்..

மகாபாரத போர் தாமிரபரணி ஆற்றங்கரையில் நடந்தது.. இராஜராஜன் தன் மனைவி நீராடுவதற்காக
குஜராத்தில் கட்டிய கிணறு.. இது போன்ற பதிவுகள்
வெகு பிரபலம்..

சில அவசிய கேள்விகளும் எழும்ப்புகிறார்கள்..?

திருப்புறம்பியம் போரில் விஜயாலயர் கலந்து கொண்டார் என்பதற்கு என்ன ஆதாரம்..?

நண்பரான அபராஜிதரை,  ஆதித்தர் ஏன் கொன்றார்.?

முதலாம் குலோத்துங்கன் பட்டத்திற்கு வந்த மர்மம் என்ன..?

இரண்டாம் இராஜராஜனின் மகன்தான் மூன்றாம்
குலோத்துங்கனா..?

இது போன்ற வினாக்கள், தேடலை தூண்டுகின்றன..

அதெல்லாம் இருக்கட்டுமய்யா...
நீர் என்னதான் சொல்ல வருகிறீர்..?
ஆரம்பத்திலிருந்து ஒரே பில்ட் அப்பா இருக்கு..

என்ற உங்கள் நிலைப்பாடு புரிகிறது..

வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுடைய, ஆரம்ப நிலை ஆர்வலர்களுக்கு,
பயன் தரும் பதிவுகளே இத்தொடர்..

அவசியமான வரலாற்று நிகழ்வுகளை ...
சான்றுகளுடன் தேடும் ஒன்றுதான்...

தேமொழி

unread,
Aug 18, 2017, 10:40:49 PM8/18/17
to மின்தமிழ்


சோழர் சரித்திரத் தேடல் ...
~ மா.  மாரிராஜன் ~

(1)

   வழக்கம் போல் நாமும்
 வடவேங்கடம் முதல் தென்குமரிவரை என்றே 
    தொடங்குகிறோம்..

வடவேங்கடம் என்பது இன்றைய திருப்பதி முதல்
தென்குமரி என்பது இன்றைய குமரி வரை உள்ள பரந்த
நிலப்பரப்பே தமிழகம்என்று வரையறுக்கப்பட்டது..

இந்நிலப்பரப்பை,  மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர் ஆண்டு வந்தனர்.. 

இவர்களின் தொடக்கம் எங்கிருந்து ...?
தொன்மை  எவ்வளவு..? இன்றளவும் ஆய்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன..

பிற்காலச் சோழர் சரித்திரத்தை தேடுவதுதான் நமது
பயணத்தின் இலக்கு என்றாலும்...

முற்கால சேர சோழ பாண்டிய மற்றும் பல்லவர்களைப்
பற்றி சற்றுச் சுருக்கமாக பார்த்து விடுவோம்.. இவர்களைப் பற்றிய சில அவசியத் தகவல்கள்
நமக்குத் தேவையாகிறது..

முதலில் நமது பிரியத்திற்குரிய சோழர்களின் தொன்மையை சற்று சுருக்கமாக நோக்குகிறோம்..

 சோழம்.. 
காவிரி பாயும் நாட்டினர் எனவும் பொன்னி சூழ் வளநாடு
எனவும் இலக்கியங்களில் சோழ நாடு அறிமுகம் ஆகிறது.. இவர்கள் சூரியகுலத்தினர் எனவும், இவர்களது இலட்சினை புலியுருவம் எனவும், ஆத்திமாலை சூடியவர்கள் எனவும், பல இலக்கிய நூல்கள் பறை சாற்றுகின்றன.. 

 சோழவளநாடு சோறுடைத்துஎன்னும் சொற்றொடர்
மூலம் .. இவர்களின் வளமான வாழ்வு உறுதியாகிறது.. 

இராமாயண, மகாபாரத காலங்களில் சோழர்கள் பற்றிய
செய்திகள் காணப்படுகின்றன.. கி.மு.  மூன்றாம் நூற்றாண்டில், அசோகரது கல்வெட்டுகளில் சோழர்களை பற்றிய செய்திகள் உள்ளனவாம்..

இன்னும் சற்று முன்னால் வருவோம்...

ஆரம்பகால சோழ மன்னர்களில், அவசியமான ஒரு சிலரை பற்றி விரைவாக பார்த்து விடுவோம்..

 சிபி.. 
இவரது காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு
முற்பட்டது.. பருந்து  துரத்திய புறாவை காக்கும் பொருட்டு, புறாவுக்கு ஈடான தன் சதையை பருந்திற்கு கொடுத்தவர்..

        புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல் சினங்கெழு
         தானைசெம்பியன் மருக.. புறநானூறு..

இதன் பிறகு ...

 முசுகுந்தன்,  காந்தன், தூங்கெயில் எறிந்த செம்பியன்
    இவர்களும் கி. மு.  மூன்றாம் நூற்றாண்டிற்கு     முற்பட்ட சோழர் மன்னர்கள்.

 செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி..
இவரது காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டாகும்..
இவர்தான்,  வடக்கே இருந்து தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த மோரியர்களை தடுத்தவர்..

 மனுநீதிச் சோழன். 
இவரது காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு..
நியாயம் கேட்ட பசுவிற்காக தன் மகன் வீதிவிடங்கனை தேர்க்காலிட்டு கொன்றவர்.. 
 அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் 
என்கிறது சிலப்பதிகாரம்.. இவரது வரலாற்றை
எடுத்துரைக்கும் ஒரு கல்வெட்டு திருவாரூர்
கோவிலில்  உள்ளது.. இவரை பற்றிய ஓவியங்கள்
வெகு பிரபலம்.. சில கோவில்களில் இவரது வரலாறு
சிற்பமாகவும் உள்ளது..
இவருக்கும் இலங்கைக்கும் உண்டான தொடர்பு..
அது ஒரு தனிக்கதையாகும்.. ( கதை..?) 

 கரிகாலன்
திருமாவளவன்,  கரிகாற் பெருவளத்தான் என அழைக்கப்பட்டவர்.. இவரை பற்றிய சரியான செய்திகளை தேடி இன்றளவும் ஆய்வுகள் தொடர்ந்து
கொண்டுதான் இருக்கின்றன.. கரிகாலன் என்பவர்
ஒருவரா ..? இருவரா..? சர்ச்சை நீடித்தாலும்..
ஒருவரே என்பதாக மையம் கொண்டுள்ளது..
காவிரியின் கரைகளை உயர்த்தி கட்டிய,  அதாவது கல்லணையை கட்டிய கரிகாலனின் காலம்...
கி.மு முதலாம் நூற்றாண்டிற்கும், கி.பி இரண்டாம்
நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் எனலாம்..
சோழர் பட்டயங்கள் இவரை கலிகாலன் எனவும்,
காவிரியின் கரைகளை பலப்படுத்தியவர் எனவும்
சான்றுரைக்கிறது..  

அதே சமயம்,  கங்கர் செப்பேடுகள் ..
கல்லணையை கட்டியது கரிகாலன்தான் என நேரடிச்
சான்று தருகிறது.( விபரம்.. பெட்டிச்செய்தியில்.)

இமயத்தில் புலிக் கொடியை நட்டவர்..
 காஞ்சி ஏகாம்பரஸ்வரர்  கோவிலில்
இவரது கற்படிமம் ஒன்றுள்ளது..

இதன் பிறகு .. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன்,  பெருநற்கிள்ளி, கோப்பெருஞ்சோழன்,
நெடுமுடிக்கிள்ளி, இளங்கிள்ளி,  என்று தொடர்ந்து...
கோச்செங்கணான் என்று முடிகிறது..

 கோச்செங்கணான்.
இவரைபற்றிய செவிவழிச் செய்திகள் அதிகம் உலாவருகின்றன.. சிலந்தியின் மறுபிறப்பு என்று அக்கதை தொடரும்.. இவரைபற்றிய தகவல்களும்
இலக்கியங்கள் வாயிலாக,  குறிப்பாய் களவழி நாற்பது
என்னும் நூலின் வழியாக கிடைக்கிறது.. இவர் பல சிவலாயங்கள்,  மாடக்கோவில்கள் எழுப்பிய தகவலும்
உண்டு.. இவரது காலம் குறித்தும் பல சர்ச்சைகள் உண்டு.. கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம்
நூற்றாண்டு  வரை .. என்பதாக கூறுகிறார்கள்..
தாராசுரத்தில் கோச்செங்கணாரின் புடைப்புச் சிற்பம்
ஒன்றுள்ளது.. 

எது எப்படியோ,  சங்க காலச் சோழர்களில் அதாவது
முற்காலச்சோழர்களில் இவரே கடைசி அரசன் என்பது
மட்டும் தெளிவு.. இவருக்கு பிறகு புகழ்ச்சோழர்
என்பவர் இருந்ததாக ஒரு தகவல் .. (பெரியபுராணம்) 

அன்பில் செப்பேடு,  நல்லடிக்கோன் என்பவரை 
கோச்செங்கணாரின் மகன் என்கிறது..
லெய்டன் செப்பேடு,  கோச்செங்கணாருக்கு பிறகு,
 கோக்கிள்ளி என்னும் அரசனை குறிப்பிடுகிறது.

திருவலங்காடு செப்பேடுகள்,  சில ஆரம்ப சோழ மன்னர்களின் பட்டியல் தருகிறது..கோச்செங்கணாரே
ஆரம்ப கால சோழர்களில் இறுதி என்கிறது..
( பட்டியல் விபரம் - தனிச் செய்தியில் காண்க) 

மேற்கண்ட சோழமன்னர்களின் பட்டியல் மற்றும்
விபரங்களை  இலக்கிய நூல்கள் மூலமாக பெறுகிறோம்..  மேலும் பல ஆரம்ப கால சோழர் பட்டியலை சோழர் செப்பேடுகள் கூறுகின்றன.. அதைப்
பற்றிய விபரங்களை பிறகு பார்க்க இருக்கிறோம்..

கி.பி மூன்றாம் நூற்றாண்டின் இறுதி..
தமிழகம் முழுவதும் ஒரு பெரும் பரபரப்பு தொற்றியது..
யார் இவர்கள்..? எங்கிருந்து வந்தார்கள்.? எப்படி வந்தார்கள்.? ஏன் வந்தார்கள்..? யாருக்கும் தெரியவில்லை..  அவர்கள்தான் களப்பிரார்கள்.. 

கூட்டமாய்,  மூர்க்கமாய் வந்தார்கள்.. ஆவேச தாக்குதல்.. ஒரு ஜாலமே நடத்தினார்கள்...
ஒட்டுமொத்த தமிழகமும் வீழ்ந்தது.. சோழர் மற்றும்
பாண்டியர்களின்  தடம்  மறைந்தது..

இது இப்படியே இருக்கட்டும்.. நமது பெரு மதிப்பிற்குரிய பாண்டியர்களை பற்றி  சுருக்கமாய் பார்த்துவிட்டு,  மீண்டும் களப்பிரர்களிடம் வருவோம்..

பாண்டியம்..

பாண்டியத்தின் தொன்மை பற்றி இதுவரை யாராலும்
கணக்கீடு செய்ய இயலவில்லை.. கடல் கோளால் குமரிக்கண்டம் மூழ்கியபிறகு, கபாடபுரம்,  மதுரை இவர்களது தலைநகரம் ஆயிற்று.. சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்...மதுரை மீனாட்சியே பாண்டிய குலத் தோன்றல் என்பது இவர்களது மிகப்பெரும்
பழமைக்குச் சான்று..

வால்மீகி இராமாயனத்திலேயே மதுரை பற்றி தகவல்
வருகிறது..வியாசமுனிவரின் பாரதத்தில், பாண்டிய குலப் பெண் ஒருத்தி அர்ஜுனனின் மனைவி என்கிறது.
பாண்டிய மன்னன் ஒருவன், தேவர் தலைவன் இந்திரனையே போரில் வென்று அவனது இரத்தினஹாரத்தை பரிசாக பெற்று வந்த வரலாறும் உண்டு..மௌரியச் சக்ரவர்த்தி அசோகரது கல்வெட்டுகளிலும் பாண்டியர் பற்றிய தகவல் உண்டு.
காலத்தால் கணிக்க இயலாத பழமையும், பெருமையும்
ஒருங்கே கொண்டவர்கள் பாண்டியர்கள்..

இவர்கள் சந்திரவம்சம் என்றும்,  வேப்பம்பூ மாலையை
சூடுபவர்கள் என்றும்,  கயல் மீன் உருவத்தை இலட்சனையாக கொண்டவர்கள் என்பதும் தெளிவு..

கடைச்சங்க கால பாண்டிய அரசர்களை பற்றிய விபரங்கள், இலக்கிய நூல்களில் வழியாக கிடைக்கின்றன..

கடைச்சங்க காலம் என்பது, கி.பி மூன்றாம் நூற்றாண்டிற்கு முந்தைய காலம் என்பது அனைத்து 
ஆய்வாளர்களின் முடிவு..

மதுரை அருகே, மாங்குளம் என்னும் ஊரில் உள்ள குகை ஒன்றில், ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.. இதன் காலம்
கி.மு மூன்றாம் நூன்றாண்டு என்கின்றனர்.. 

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் வேலையாள்
கடலன் வழுதி என்பவர், சமண முனிவர் ஒருவருக்கு
கல் படுக்கை அமைத்து கொடுத்ததாக இக் கல்வெட்டு
செய்தி பகிர்கின்றது..

இதில் குறிப்பிடப்படும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் யார்.? என்பது பற்றி தகவல் இல்லை..

முற்கால பாண்டியர்கள் கால நாணயங்களும்,
அவர்களைப் பற்றி அறிய உதவுகிறது..

எது எப்படியோ காலத்தால் மிகப் பழமையானது
பாண்டியர் சமூகம் என்பது தெளிவு..

 வடிம்பலம்ப நின்ற பாண்டியன் , முதுகுடிமி பெருவழுதி என்பவர்கள் கடைச்சங்க காலத்திற்கு முற்பட்ட பாண்டிய அரசர்கள்..

இனி கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த, அதாவது கி.பி 3 ம்
நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த சில அவசிய பாண்டிய
அரசர்களின் பட்டியலை பார்ப்போம்.

முடத்திருமாறன், பொற்கைபாண்டியன், இளம்பெருவழுதி, அறிவுடைநம்பி, பூதப்பாண்டியன்,
என்னும் வரிசையில்...

 ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.
கடைச்சங்க பாண்டியர்களில் குறிப்பிடத்தக்கவர்..
சிலப்பதிகாரம்.. கண்ணகி நியாயம் கேட்டது இவரது
அரச சபையில்தான்..துஷ்டன் கொல்லன் ஒருவனின்
கூற்றை நம்பி, கோவலனை தண்டித்தான்.. தவறை உணர்ந்த அரசன், தன் சிம்மாசனத்திலே உயிர் நீத்தான்.

    பொன்செய் கொல்லன் தன் சொற் கேட்ட 
    யானோ அரசன்..? யானே கள்வன் 
   மன்பதை காக்கும் தென்புலங் காவல் 
   என் முதற் பிழைத்தது ..கெடுக என் ஆயுள் 
என்று கூறியவாறு உயிர் நீத்தார்.. பாண்டியர்களின்
நீதி தவறா ஆட்சி முறைக்கு இந்நிகழ்வு ஒரு சான்று..

 தலையாங்கானத்துச் செருவென்ற 
 பாண்டிய நெடுஞ்செழியன்.
சிறுவனாக இருக்கும்போதே அரசு கட்டில் ஏறியவர்..
பாண்டியன் சிறுவன் என எள்ளி நகையாடியவாறு,
சோழன் பெருநற்கிள்ளி, சேரன் இரும்பொறை,  மற்றும்
ஐந்து வேளிர்கள் ஒன்று சேர்ந்து, மதுரை நோக்கி படையெடுத்தனர்.. இவர்கள் அனைவரையும் போரில்
வென்றான் நம் பாண்டியன்.. இவர்களை துரத்திச்சென்று, தலையாலங்கனத்து மறித்து வாகை சூடினான்.. 

 உக்ரப்பெருவழிதி
கடைச்சங்க பாண்டியர்களுள் இவரே கடைசி அரசன்.
ஏறக்குறைய கி.பி 2 - கி.பி 3 ம் நூற்றாண்டாய் இருக்கலாம்.. இவரும் பெரு வீரன்..மதுரையை சேர்ந்த
உருத்திரசன்மரை கொண்டு அகநானூரை தொகுத்தார்
எனத் தெரிகிறது..

இவருக்கு பின்னும் சில பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்திருக்கலாம்..

ஆரம்ப கால பாண்டியர்களைப் பற்றிய சில தகவல்கள்,
மதுரை அருகே உள்ள சமணர் மலை,  குடவரைக் கோவில்களில் காணப்படுகின்றன.. முற்கால பாண்டியர் காலத்திய நாணயங்களும் கிடைத்துள்ளன..

கி.பி 3ம் நூற்றாண்டின் இறுதிக்காலம்..
பாண்டிய தேசம் முழுவதும் ஒரு பரபரப்பு தொற்றியது..

யார் இவர்கள்..?  எங்கிருந்து வந்தார்கள்..? யாருக்கும் தெரியவில்லை..  பாண்டியதேசம் முழுவதையும்
கைப்பற்றினார்கள்..
 இவர்களே களப்பிரர்கள் என அடையாளம் காணப்பட்டது..

ஒட்டுமொத்த தமிழகத்தையும் களப்பிரர்கள கைப்பற்றினார்கள்..

பிறகு ....?

அதற்கு முன்பாக..
நமது  பங்காளிகளான பல்லவர்களைப்பற்றி சுருக்கமாய் பார்த்துவிட்டு சடுதியில் திரும்பி விடுவோம்...

[தொடரும்]


தேமொழி

unread,
Aug 28, 2017, 6:29:29 PM8/28/17
to மின்தமிழ்


சோழர் சரித்திரத் தேடல் ...
~ மா.  மாரிராஜன் ~

(2)

பிற்காலச் சோழ சரித்திரத்தை தேடும் முன்...
நமக்கு அவசியமான பல்லவர்களை பற்றி சுருக்கமாக பார்த்து விடுவோம்.. சுருக்கமாகத்தான் பார்க்க முடியும்.
ஏனெனில் ஆரம்பகால பல்லவர்களை பற்றி நமக்கு கிடைக்கும் தரவுகள் மிக குறைவு...

பல்லவர்கள் ...
பல்லவர்கள் யார்..? என்னும் ஆய்வு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.. முடிவுதான் தெரியவில்லை.. இவர்களது தோற்றம் என்ன..?
யாரும் அறுதியிட்டுக் கூறவில்லை..

பல்லவர்கள் பாரசீக வம்சம்.. பஹ்லவர்என அழைக்கப்பட்டவர்கள்.. அது இது என பலவாறு தகவல்கள் சுற்றி வந்தாலும்... 

சாதவாகனப்பேரரசின் கீழ் குறுநில மன்னர்களாய் இருந்தவர்கள் பல்லவர்கள்.. கிருஷ்ணா நதிக்கரையின் தெற்கு பகுதியை கைப்பற்றி,  தொண்டை மண்டலத்தை ஆக்ரமித்தார்கள்.. இது அனைவராலும்
ஏற்றுக்கொண்ட ஒரு முடிவாகும்.

 தமிழகத்தின் கலை,  இலக்கியத்தில் இவர்களது பங்கு அளப்பரியது.. குடவரைக்கோவில்கள், கற்றளிகள், சிற்பங்கள் என்று அனைத்திற்கும் முன்னோடி நம் பல்லவர்களே..

மாமல்லபுரம், காஞ்சி கைலாசநாதர் கோவில், மண்டகப்பட்டு குடவரை, சித்தன்னவாசல் குகைக்கோவில்.. என்று பல்லவர்கள் நமக்களித்த கலைப் பொக்கிசங்கள் பல..

ஆந்திரவின் ஒரு பகுதியை இணைத்து, வடபெண்ணை ஆற்றுக்கும் , பாலாற்றுக்கும் இடைப்பட்ட பகுதியை தொண்டை மண்டலம் என பெயரிட்டு,  கச்சி என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டவர்கள் பல்லவர்கள்..

சேர சோழ பாண்டிய அரசர்களின் ஆரம்பகாலம் பற்றி சங்க இலக்கியங்களில் தகவல் கிடைக்கிறது.. ஆனால் ஆரம்பகால பல்லவர்கள் பற்றி சங்க இலக்கியங்களில் தகவல் குறைவு..

ஆரம்பகால பல்லவர்களை பற்றிய சில தகவல்கள் பல்லவர் செப்பேடுகளில் சில பெயர்கள் காணப்படுகின்றன.. 

பிராகிருத மொழியில் வெளியிடப்பட்ட அச்செப்பேடுகளிலிருந்து, கீழ்கண்டவர்கள் ஆரம்பகால பல்லவ அரசர்களாய் இருக்கலாம் எனத் தீர்மானிக்கப் படுகிறது..

 பப்பமகாராசன் எனப்படும் பப்பதேவன். 
 சிவஸ்கந்த வர்மன். 
 விஜயஸ்கந்த வர்மன். 
 புத்தவர்மன்.

மேலும் .. பெரும்பாணாற்று படையில் காஞ்சியை ஆண்டதாக தொண்டைமான் இளந்திரையன் என்பவரை குறிப்பிடுகிறது.. இவர் மேற்கண்ட நால்வரில் ஒருவராக இருக்கலாம் என்பது ஒரு யூகம்.

நமக்கு கிடைக்கும் சான்றுகளைக் கொண்டு கீழ்கண்ட பல்லவமன்னர்களின் காலத்தை அவதானிக்கலாம்.

விஷ்ணுகோபன் ( கி.பி 350)
குப்த அரசன் சமுத்திர குப்தரின் அலகாபாத் கல்வெட்டு ஒரு செய்தியை பகிர்கின்றது.. இவர் தனது தென்னாட்டு படையெடுப்பின் போது,  காஞ்சி அரசன் விஷ்ணுகோபனை வென்றார்.. சமுத்திரகுப்தரின் காலத்தை வைத்து,  விஷ்ணு கோபனின் காலத்தை கி.பி 350 ஆக வரையறுக்கின்றனர்..

சிம்மவர்மன்  ( கி.பி 436)
லோக விபாகம் என்னும் ஒரு திகம்பர சமண நூல். தொண்டைமண்டலத்தில் இருந்த ..பாடலி ( திரிப்பாதிரிபுலியூர்)  என்னும் சிற்றூரை சேர்ந்த சர்வநந்தி என்பவர் இந்நூலை திருத்தி அமைக்கிறார். இதன் காலம், சிம்மவர்மனின் 22 ம் ஆட்சியாண்டு, சாக ஆண்டு 380..அதாவது கி.பி 458. இது அவர் பட்டமேற்பட்ட 22ம் ஆண்டு.. எனவே அவர் பட்டத்திற்கு வந்தது 458 - 22 -- 436 என்பது தெளிவு.
 

கங்க தேச பட்டயம் ஒன்றில், பல்வஅரசர்கள், தந்தையும் மகனுமான சிம்மவர்மன் மற்றும் கந்தவர்மனைபற்றி குறிப்பிடுகிறது.. இதன் காலம் கி.பி 475 என்று ஆய்வியல் அறிஞர் பிளீட் கூறுகிறார்..
ஆக,  436 முதல் 475 வரை சிம்மவர்மனும் அவனது மகன் கந்தவர்மனும் காஞ்சியை ஆண்டனர்.

மேலும்,  இன்னும் சில பல்லவமன்னர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.. அவர்களுள இரண்டாம் குமாரவிஷ்ணு,  கந்தவர்மன், புத்தவர்மன், முதலாம் நந்திவர்மன் என்பதாக தெரிகிறது..

இந்த இரண்டாம் குமாரவிஷ்ணு என்பவர்தான், போதிதர்மர் என்னும் பெயர் கொண்டு,  ( ஏழாம் அறிவு) சீனாவிற்கு புத்தமதத்தை பரப்ப சென்றாராராம்.. புத்தவர்மன்தான் போதி தர்மர் என்போரும் உண்டு.

இதை பற்றிய போதிய சான்றுகள் இல்லை என்பதாலும்... நமது நேர சேமிப்பை கருத்தில் கொண்டும்,  அடுத்த நிகழ்வை எதிர் கொள்ள இருப்பதாலும்... 

அது என்ன அடுத்த நிகழ்வு...?

பாண்டிய மண்டலத்தையும்,  சோழத்தையும், கைப்பற்றிய களப்பிரர்கள் இதோ தொண்டை மண்டலத்தையும் நெருங்கினர்.. ஏறக்குறைய காஞ்சியை கைப்பற்ற முனைகின்றனர்...

இருக்கட்டும்.. நாம் இப்போது ஆரம்ப கால சேர மன்னர்களை பற்றி பார்க்கப் போகிறோம்...

அப்போ களப்பிரர்கள்..?

இடைக்கால பல்லவர்களில் முதல்வனும், மாவீரனுமான சிம்ம விஷ்ணு, களப்பிரர்களை எதிர்க்க தயாராகி விட்டார்...

நமக்கு கிடைத்திருக்கும் சிறிது நேரத்தில் .. சேரர்களை பற்றி விரைவாக பார்த்துவிட்டு, சடுதியில் திரும்பி விடுவோம்..

சேரம்..
சோழதேசத்தின் மேற்கே.. அரபிக்கடல் கூடும் குமரியின் மையப்பகுதி..கொங்கு நாட்டின் ஒருபகுதியை தன்னகத்தே கொண்ட மலைசூழ் நாடு சேர நாடு ஆகும்..  வில் அம்பு இலட்சினையும்,  பனம்பூவைச் சூடியும் இருந்தனர்.

இவர்களின்  ஆரம்ப தலைநகரம் வஞ்சி ( கரூர்) . தொண்டியும், முசிறியும் துறைமுகங்கள்..

இவர்களின் தொன்மை குறித்தும், ஆரம்பகால சேரமன்னர்கள் குறித்தும், வழக்கம் போல் இலக்கியங்கள் வாயிலாகவே நாம் பெறுகிறோம்..

சேரர்களின் நேரடி கல்வெட்டுச் செய்தியோ.. செம்பு பட்டயத் தகவலோ மிகவும் குறைவு..

கருர் மாவட்டம், புகழூருக்கருகே, வேலாயுதம்பாளையம் என்னும் சிற்றூர். ஒரு மலையின் மீது ஒரு முருகன் கோவில் உள்ளது. மலையின் இரண்டுபக்கமும் குகைககள் உள்ளன. குகையில் உள்ள சமணர் படுக்கையில் ஒரு தமிழ் பிராமி கல்வெட்டு இருக்கிறது.. 

இதை புகழூர்கல்வெட்டு என்கின்றனர்..சேர மன்னன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளம் கடுங்கோ என்பவர், சமணத்துறவி ஒருவருக்கு குகையை தானமாக கொடுக்கிறார்.. ஏற்க்குறைய இதன் காலம் கி.பி முதலாம் நூற்றாண்டு என்கிறார்கள்.

இக்கல்வெட்டில் கூறப்படும் மூன்று சேரமன்னர்களின் சரியான விபரங்கள் கிடைக்கவில்லை..

முற்கால சேரர்களின் காலவரையறையை கணக்கீடு செய்வது மிகுந்த கடிணமாக உள்ளது..

ஒரு சில அவசிய சேரமன்னர்களை பற்றிய சுருக்க விபரங்களை சடுதியில் பார்த்து விடுவோம்..

சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன். 
இவரது காலம் சரியாக கணிக்கப்படவில்லை என்றாலும்,  கி.பி முதலாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பதாக ஆய்வாளர்கள் முடிவு செய்கின்றனர்.

இதன்பிறகு, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானை செங்குட்டுவன்,  என்ற வரிசையில்

சேரன் செங்குட்டுவன்
சேர மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவர்.. வடக்கே படையெடுத்து,  கனக விஜயன் என்பவரை வென்று, இமயத்தில் கல்லெடுத்து  கண்ணகிக்கு கோவில் எடுத்தவர்..  என்பது சிலப்பதிகாரம் தரும் தகவல். கண்ணகிக்கு சிலை எடுத்த விழாவில், இலங்கை மன்னன் முதலாம் கயவாகு அவ்விழாவில் கலந்து கொண்டதாக இலங்கையின் மகாவம்சம்கூறுகிறது. கயவாகுவின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு
என்பதால்,  செங்குட்டுவனின் காலமும் கி.பி இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இதை மறுப்போரும் உண்டு.

சேரமான் கணைக்கால் இரும்பொறை
ஏறக்குரைய முற்காலச் சேர மன்னர்களில் இவரே கடைசி அரசராய் இருக்கலாம். சோழ மன்னன் கோச்செங்கணின் காலத்தில் வாழ்ந்தவர்.. சோழனுடன் நடந்த போரில் தோற்று,  சோழனால் சிறைபிடிக்கப்பட்டவர்.. சிறையில் இருந்த போது, குடிக்க தண்ணீர் கேட்டு, அது கிடைக்கத் தாமதமானதால், தன்னைத்தானே மாய்த்துக் கொண்டவர்..புறநானூறு ( 74)  தரும் தகவல்.. இதை மறுப்போரும் உண்டு.. களவழி நாற்பது என்னும் பாடலின் மூலம் விடுவிக்கப்பட்டான் என ஒரு தகவலும் உண்டு. எது எப்படியோ சேரமான் கனைக்கால் இரும்பொறைதான் முற்காலச் சேரர்களின் கடைசி மன்னன் என்கிறது ஆய்வுகள்..

இன்னும் சில சேரமன்னர்களின் பற்றிய தகவலும் உண்டு.. அவர்களை பற்றி அவ்வப்போது பிறகு பார்ப்போம்...

அதே போல் வேளிர்கள் மற்றும் பல குறு நில அரசர்களும் இருந்தனர்.. கங்கர்கள், சாளுக்கியர்கள் போன்றோர் தமிழக எல்லையில் இருந்தனர்..

இவர்களைப் பற்றி சுருக்கமாக பார்க்க கூட நமக்கு நேரம் இல்லை என்பதாலும், பிறகு ஒரு தருணத்தில் இவர்களை பற்றி விரிவாக பார்க்க இருப்பதாலும், 

களப்பிரர்களை முறியடிக்க பல்லவன் ஒருவரும், பாண்டியன் ஒருவரும் தயாராகி விட்டதாலும், அந்நிகழ்வுகளை காண விரைகிறோம்...

[தொடரும்]

தேமொழி

unread,
Aug 29, 2017, 5:24:05 PM8/29/17
to மின்தமிழ்


சோழர் சரித்திரத் தேடல் ...
~ மா.  மாரிராஜன் ~

(3)

ஏறக்குறைய கி.பி மூன்றாம் நூற்றாண்டின் துவக்கம் அல்லது மையம் அல்லது இறுதிக்காலம் (எது என்று அறுதியிட்டு கூற இயலவில்லை) ...

எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இக்காலத் தமிழகத்தை,  மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்களும், ஆங்காங்கே ஒரு சில குறு நில மன்னர்களும், ஆண்டு கொண்டிருந்தனர்.

வழக்கம்போல் தங்கள் அதிகாரப் போட்டியை நிலைநிறுத்த, ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டுதான் இருந்தார்கள். போர் என்பது இவர்களது வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றானது. எல்லாம் சுமூகமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

ஆனால், இதே காலத்தில் தமிழகம் முழுவதும் ஒரு பரபரப்பு தொற்றியது. மூர்க்கமாய் ஒரு கூட்டம் தமிழகம் முழுவதையும் ஆக்ரமித்தது. யார் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள்? எத்தனை பேர் வந்தார்கள்? எப்படி வந்தார்கள்? இன்றளவும் பதில் தெரியவில்லை.

ஒரு ஜாலவித்தை நடந்தது போல் தமிழகம் இவர்களிடம் வீழ்ந்தது. மூவேந்தர்களும் சிதறித்தான் போனார்கள். அடுத்த 300 ஆண்டுகாலம்  இவர்களது ஆதிக்கம் நீடித்தது. இவர்களை களப்பிரர்கள்என ஆய்வாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர். யார்தான் இவர்கள்? என்னதான் நடந்திருக்கும்? இன்றளவும் விடை தெரியாத விடுகதைதான் இது.

களப்பிரார்கள்...
இவர்களை பற்றிய சரியான விபரம் இதுவரை கிடைக்கவில்லை. இவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? இவர்கள் காலத்தை இருண்ட காலம் என்கிறார்களே ஏன்?  விடை தெரியாத விவாதம்
இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதையொட்டிய ஆய்வில் நமது தேடல் தொடரப்போவது இல்லை.

தமிழக வரலாற்றில், ஒரு ஆதிக்க சக்தியாக விளங்கிய களப்பிரர்களை பற்றி அவசிய சில விபரங்களை பற்றி மிகச்சுருக்கமாய் பார்த்து விடுவோம்.

கி.பி மூன்றாம் நூற்றாண்டுகளில், தமிழகத்தில் உள்ளே நுழைந்தார்கள். இவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்களாய் இருக்கலாம் என்பது மயிலை. சீனி.வேங்கடசாமி அவர்களின் ஆய்வு.

பாண்டிய நாட்டில் மூர்த்திநாயனார் காலத்தில், மதுரையை ஆண்ட மன்னன்  கண்ணட அரசன் என சேக்கிழார் கூறுகிறார்.
கானக்குடி சூழ் வடுக கருநாடர் வேந்தன் என்னும் பாடல் மூலம் தெளிவாகிறது( திருத்தொண்டர் புராணம், மூர்த்தி நாயனார் புராணம்  11,  25 ) 

ஆக கர்நாடகாவிலிருந்து இவர்கள் வந்திருக்க வேண்டும்.

ஆரம்பகால சேரர்களின் தலைநகரமான வஞ்சி ( கரூர்) இதன் வழியாக வந்தார்கள்.

முதலில் பாண்டியர்களை தாக்கி, பாண்டியத்தை முழுவதுமாக கைப்பற்றினர். பின்பு சோழ தேசமும் வீழ்ந்தது. பல்லவர்களின் தொண்டைப் பகுதி மட்டும் இவர்கள் ஆதிக்கத்தில் விழவில்லை.

களப்பிரர்களின் படை பலம் பற்றி யாப்பருங்கலம்  என்னும் இலக்கண நூல் இவ்வாறு கூறுகிறது...

படுபருந்தும் சூர்பேயும் பல்லிலலங்கும் நாயும்
கொடியும் கழுகுமிவை கூடி - வடிவுடைய
கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு
கோமாறு கோமாறு போம்.

அதாவது , களப்பிர மன்னர் தன் யானைப் படையுடன் போருக்கு போகும் போது அந்த படைகளுடன் பேய்கள், நாய்கள்,  நரிகள்,  பருந்து, ஓநாய்,  கழுகு இவை போன்ற பிணந்தின்னி பிராணிகளும் கூடவே
செல்லுமாம். களப்பிரர்களால் தோற்கடிக்கப்படும் எதிரிகளின் பிணத்தை உண்பதற்காக  அவைகளும்  சென்றன என்பது பொருள் (களப்பிரர் ஆட்சியில் தமிழகம்,  மயிலை. சீனி. வேங்கடசாமி).

மேலும், அச்சுத விக்ராந்த என்னும் களப்ர மன்னன்  மூவேந்தர்களான சேரசோழபாண்டியர்களை  சிறை வைத்ததாக தெரிகிறது.

ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த புலவர் புத்ததத்தர்.  இவர் பாளி மொழியில் எழுதிய செய்யுள் ஒன்றில், 
மூவேந்திரர்களின் இலட்சினைகளை களப்பிரமன்னன் சூடியிருந்தான் என்கிறார். மூவேந்தர்களையும் களப்பிரர்கள் வென்றது உறுதியாகிறது.




ஆக,  முந்நூறு ஆண்டுகள் தமிழகத்தை களப்பிரர்கள் ஆண்டனர் என்பது தெளிவு.


களப்பிரர்களை பற்றிய நேரடி சான்றுகளோ, கல்வெட்டு பதிவுவோ,  எதுவும் கிடைக்கவில்லை.  மிகவும் சொற்பமான இலக்கியச் சான்றுகள், பல்லவர் மற்றும் பாண்டியர் காலச் செப்பேடுகள், இவற்றை கொண்டே களப்பிரர்களை பற்றிய தகவல் கிடைக்கிறது.

ஆங்காங்கே,  அகழாய்வில் கிடைக்கப் பெற்ற நாணயங்கள் களப்பிரர்களுடையது. இதை ஏற்போரும் .. மறுப்போரும் உள்ளனர்.

களப்பிரர்கள் வெளியிட்ட நாணயம் பற்றிய ஆய்வாளர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்...




சமீபத்தில்,  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகே, பூலங்குறிச்சியில் ஒரு தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு கண்டறியப்பட்டது. இதன் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டு என்கிறார்கள்.
இது களப்பிரர் கல்வெட்டு என்கின்றனர்.

கோச்சேந்தன் கூற்றன் என்னும் களப்பிரமன்னரின் கல்வெட்டாக உறுதிபடுத்தப்படுகிறது..இக் கல்வெட்டுகள் குறித்து தொடர் ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன..
( select inscriptions in Tamilnadu... s.no 1: 4  T . S Sridar. IAzs)





களப்பிரர்களிடம் வீழ்ந்த சோழ,  பாண்டிய அரசர்கள் யார் என்பது குறித்த தகவல் ஏதுமில்லை. களப்பிரார்களின் வழி வந்தவர்கள்தான் தஞ்சை முத்தரையர்கள்என்னும் ஒரு கருத்தும் உண்டு. 

களப்பிரர்கள் காலத்தில் தமிழகத்தில் பல மாற்றங்கள் நடைபெற்றன. சமணமதம் வேரூன்றியது பிரமம்மதேய இறையிலி முறை ஒழிக்கப்பட்டது. வைதீக நெறிமுறைகள் தடை செய்யப்பட்டன. தமிழ் வட்டெழுத்து முறை அறிமுகம் ஆனது. தமிழ் இலக்கிய நூல்கள் எழுதப்பட்டன.

மேலும் இக்காலத்தில் நடந்த பல நிகழ்வுகள் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அடுத்து என்ன நடந்தது?

சேர சோழ பாண்டியர்களை முற்றிலும் நிலை குலையச் செய்தனர் களப்பிரர்கள். சேரர்களை பற்றி எந்த தகவலும் இல்லை. பெயர் தெரியாத சோழ மற்றும் பாண்டிய அரசர்கள்,  களப்பிரர்களின் கீழ் சிற்றரசாய் இருந்துள்ளனர். முந்நூறு ஆண்டுகாலம் தமிழகத்தை ஆக்ரமித்த களப்பிரர்களின் ஆட்சிக்கும் முடிவு வந்தது. சோழ தேசத்தை ஆக்ரமித்த களப்பிரர்களின் பார்வை தொண்டை மண்டலம் காஞ்சியை நோக்கி திரும்பியது.

காஞ்சியின் மேல் படையெடுத்தனர், கி. பி 575 ( இதுவும் தோராய கணக்கீடுதான்) காஞ்சியை நோக்கி நகர்ந்த களப்பிரர்களை எதிர்கொண்டார் பல்லவ அரசர் சிம்ம விஷ்ணு. நடைபெற்ற மிக கடுமையான ஒரு போரில் களப்பிரர்களை அடித்து தும்சம் செய்தனர் பல்லவர்கள்.

களப்பிரர்களை துரத்தி,  அவர்களின் ஆக்ரமிப்பில் இருந்த சோழதேசம் முழுவதையும் கைபற்றினார்  பல்லவப் பேரரசர் சிம்மவிஷ்ணு. சோழதேசத்தை இழந்த களப்பிரர்களுக்கு, பாண்டியத்திலும் பேரிடி காத்திருந்தது. அதே கி. பி 575 ஆம் ஆண்டு கடைச்சங்க பாண்டியர் வழியில் வந்த அரசன் பாண்டியன் கடுங்கோன் என்பவர் களப்பிரர்களைத் தாக்கினார்.. நடந்ததொரு பிரம்மாண்ட யுத்தத்தில்,
களப்பிரர்களை முற்றிலும் ஒழித்து மதுரையைக் கைப்பற்றினார். பாண்டிய அரசனாக முடிசூட்டுகிறார்.

களப்பிரர்கள் சடுதியில் மறைந்தார்கள் முந்நூறு ஆண்டுகால களப்பிரர்கள் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

இனி... பல்லவர்களுக்கும், பாண்டியர்களுக்கும்  ஆதிக்கப் போட்டி ஆரம்பமானது... சோழர்களின் நிலைதான் என்ன..?

பல்லவர்களின் கீழ் சிற்றரசாய் இருந்த சோழர்கள், பல்லவ பாண்டிய ஆதிக்கப் போட்டியில் தங்கள் பங்களிப்பை வழங்கி, தங்களுக்கான காலத்தை எதிர் நோக்கி காத்திருந்தனர்..

அந்த காலமும் சீக்கிரம் வந்தபாடில்லை. ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டுமே. சற்றும் மனம் தளராமல் காத்திருந்தனர் சோழர்கள். எதிர்காலம் சோழர்களுடையதே என்னும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்...

[தொடரும்]

தேமொழி

unread,
Aug 30, 2017, 5:11:20 PM8/30/17
to மின்தமிழ்


சோழர் சரித்திரத் தேடல் ...
~ மா.  மாரிராஜன் ~

(4)

சிம்மவிஷ்ணு - ( கி.பி 575 - 615) 

ஏறக்குறைய கி.பி 575 ம் ஆண்டு. தொண்டைமண்டலத்தை நோக்கி நகர்ந்தனர் களப்பிரர்கள். அவர்களை தடுத்து நிறுத்தியவர், இடைக்கால பல்லவர்களில் முதல்வரும், மாவீரருமான பல்லவன் சிம்மவிஷ்ணு.  நடைபெற்றதொரு கடும் போரில், களப்பிரர்களை அடித்து தும்சம் செய்து ஓட ஓட விரட்டினார்.  காவிரிக்கரை வரை களப்பிரர்களின் ஓட்டம் தொடர்ந்திருக்க வேண்டும்.   களப்பிரர்களை துரத்தி, அவர்கள் வசமிருந்த சோழதேசம் முழுவதையும்  கைப்பற்றினான் சிம்மவிஷ்ணு.  

சிம்மவிஷ்ணுவின் மைந்தர் முதலாம்மகேந்திரவர்மன். திருச்சி மலைக்கோட்டையில் மகேந்திரனது கல்வெட்டுகள் மிகுதியாக காணப்படுகிறது. சோழதேசம் முழுவதையும் களப்பிரர்களிடமிருந்து
பல்லவர்கள் கைப்பற்றினார்கள் எனலாம்.  

வேலூர்பாளையச் செப்பேடுகள், சிம்மவிஷ்ணுவைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றன...   
 
"இவ்வுலகில் சிம்மம் போல் சிம்மவிஷ்ணு தோன்றினார். பகைவரை அழிப்பதில் முனைப்புக் காட்டினார். களப்பிரர், சோழர்,  மழவர், ஆகியோரை வெற்றி கொண்டார்."  

பல்லவபேரரசை சோழதேசத்தின் காவிரியாறு வரை விரிவடையச் செய்தவர் சிம்மவிஷ்ணுவே என்பது தெளிவு  
 ( S . I . I. Vol 2 page 510).



கும்பகோணத்தை அடுத்து, 'சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம்' என்னும் ஒரு ஊர் இருந்ததாக பல்லவர் செப்பேடுகள் கூறுகின்றன.   திருவொற்றியூரை அடுத்துள்ள மணலி என்னும் ஊரே சிம்மவிஷ்ணு 
சதுர்வேதிமங்கலம் என்பதும் ஆய்வாளர்கள் முடிவு. ஆக, களப்பிரர்களின் ஆதிக்கத்தை சோழ நாட்டிலிருந்து அகற்றியவர் சிம்மவிஷ்ணு என்பது தெளிவு. 

மாமல்லபுரம் ஆதிவராக குடவரைக் கோவிலில்  கற்படிமம் ஒன்றுள்ளது.  ஒரு ஆண் உருவம் அமர்ந்த நிலையில் உள்ளது. மார்பில் அணிகலன்கள். இரு புறமும் இரு பெண்கள் நின்ற நிலையில்.   இச்சிற்பத்தின் மேலே    'ஸ்ரீசிம்மவிஷ்ணு போதாதிராஜன்' என பல்லவ கிரந்த எழுத்துகளால் பொறிக்கப் பட்டுள்ளது.    



எனவே இச்சிற்பத்தில் இருப்பவர் சிம்மவிஷ்ணுதான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்  ( Archaeological Report 1922 - 23 p. 94 ).



இச்சிற்பத்திற்கு நேர் எதிரே ஒரு சிற்பம் உள்ளது.   இச்சிற்பத்தின் மேலே. 'ஸ்ரீமகேந்திரபோதாதிராஜன்'  என பொறிக்கப்பட்டுள்ளது.    இவர் சிம்மவிஷ்ணுவின்  மைந்தர் முதலாம் மகேந்திரவர்மன்.    தன் பட்டத்தரசிகள் இருவருடன் இருக்கிறார்.  இச்செய்தியை வரலாற்று ஆய்வறிஞர்  திரு கிருஷ்ண சாஸ்திரிகள் அவர்கள் உறுதிபடுத்துகிறார்.  


ஆக,  சிம்மவிஷ்ணு தனது புலிப்பாய்ச்சல் மூலம் களப்பிரர்களை வென்று,  சோழதேசம் முழுவதையும் கைப்பற்றினான்.  இது வரை களப்பிரர் ஆதிக்கத்தின் கீழ் இருந்த சோழர்கள்,  இதன் பிறகு பல்லவர்கள் ஆதிக்கத்தின் கீழ் தங்கள் நிலைப் பாட்டை தக்கவைத்தனர். 


பல்வர்களிடம் தோற்று, சோழதேசத்தை இழந்த களப்பிரர்கள் தெற்கே பாண்டியம் நோக்கி திரும்பினர்.

தெற்கேயும் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.  ஏறக்குறைய அதே கி.பி 575 ஆம் ஆண்டு.  பல்வர்களிடம் தோற்று திரும்பிய களப்பிரர்களை, கத்தி முனையில் வரவேற்றான் பாண்டியன் கடுங்கோன் என்னும் பாண்டிய மன்னன்.  மீண்டும் ஒரு கடும் யுத்தம்.    முந்நூறு ஆண்டுகாலம் தங்கள் தேசத்தை இழந்ததன் தாக்கம், பாண்டியர்களை வீருகொண்டு எழச் செய்தது.  ஏற்கனவே பல்லவர்களிடம்,  தோற்று துவண்டிருந்த  களப்பிரர்களால், பாண்டியர்களின் ஆவேச தாக்குதலை எதிர்கொள்ள இயலவில்லை. சதுராட்டமாடினார்கள் பாண்டியர்கள்.    வெகு விரைவிலே களப்பிரர்கள் வீழ்ந்தனர். முற்றிலும் முடங்கினார்கள்.  பாண்டியம் மீட்கப்பட்டது.    பாண்டியன் கடுங்கோன் மதுரையில் பாண்டிய அரசனாக முடிசூட்டுகிறார்.  

இந்நிகழ்விற்கு பிறகு, வரலாற்றிலிருந்து களப்பிரர்கள் காணாமல் போனார்கள்.    முந்நூறு ஆண்டுகால தமிழகத்தின் மீதான அவர்களது ஆதிக்கம் ஒரு முடிவுக்கு வந்தது. திருத்தொண்டர் புராணமும் இந்நிகழ்வை உறுதிசெய்கிறது.    கருநாட அரசன் ஒருவன் பாண்டியத்தை ஆக்ரமித்தான். சைவ நெறி தாழ்ந்து, சமண நெறி உயர்ந்தது.    தமிழ் மன்னன் தன் வீரம் கொண்டு அவனை வீழ்த்தி மதுராபுரியை மீட்டான்.

"கானக் கடிசூழ் வடுக கருநாடர் காவன் மானப் படை  மன்னன்வலிந்து நிலங்கொள்வானாய் யானைக்  குதிரைக் கருவிப்படைவீரர் திண்டேர் சேனைகடலுங் கொடுத்தென் திசைநோக்கி வந்தான் வந்துற்ற பெரும்படை மண்புதை யப்பரப்பிச் சந்தப்பொதியில்  தமிழ்நாடுடைய மன்னன் வீரம் சிந்திச் செருவெண்று  தன்னானை செலுத்தும் ஆற்றால் கந்தை பொழில்சூழ் மதுராபுரி காவல் கொண்டான்."     

ஆக,  களப்பிரர்களிடமிருந்து மதுரை மீட்கப்பட்டது.  


பாண்டியன் கடுங்கோன் - கி.பி 575 - 600

களப்பிரர்களின் ஆதிக்கத்திலிருந்து பாண்டியத்தை மீட்டவர். இந்நிகழ்வை  வேள்விக்குடி செப்பேடுகள்
உறுதி செய்கின்றன.   
 "களப்ரனேனன்றுங் கலியரசன் கைக்கொண்டதனை 
 யிறக்கியபின் படுகடன் முளைத்த பருதிபோற் 
 பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதி ரவிரொளி 
 விலகவீற்றிருந்து வேலைசூழ்ந்த வியலிடத்து"


தளவாய் புரச் செப்பேடுகளும் இந்நிகழ்வை உறுதி செய்கின்றன.   

"கடிநாறு கவினலங்கற் களப்பாளர் குலங்களைத்தும்...கற்றறிந்தோர் திறல் பரவக் களப்பாளரை களைகட்ட மற்றிறடோன் மாக் கடுங்கோன்." 

ஆக, பாண்டியன் கடுங்கோன் என்பவரால், களப்பிரர் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.  மீண்டும் பாண்டியர்கள் தெற்கே வலுவாக ஆதிக்கம்  பெற்றனர். வடக்கே பல்லவர்களின் ஆதிக்கம். இருவருக்கும் இடையே சோழர்கள். வழக்கம் போல் தங்களுக்கான காலத்தை எதிர்நோக்கி  காத்திருக்கத் தொடங்கினர்.  

பல்லவர்களுக்கோ, சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தான்.  பல்லவர்களிடமிருந்து சோழத்தை கைப்பற்ற வேண்டும் என்பது பாண்டியர்களின் நோக்கம்.  சரியான தருணம் கிடைத்தால்   பல்லவனையும் , பாண்டியனையும், ஒரு கை பார்த்து விடவேண்டும் என்பது சோழர்களின் வியூகம்.   ஒரு ஆடு புலி ஆட்டம் ஆரம்பம் ஆனது.   

ஆட்டத்தில் நிஜ மனிதர்களே காய்களாக பங்கேற்றனர். வாய்ப்பேச்சு அல்ல,  வாள்வீச்சே ஆட்டத்தின் போக்கை தீர்மானித்தது.   வெட்டுண்டு விழும் மனித உறுப்புகளும், கிழிந்து தொங்கும் சதை பிண்டங்களும், பெருக்கெடுத்து ஓடும் குருதி ஆறும், வழக்கமான நிகழ்வுகளாயின.  


[தொடரும்]

தேமொழி

unread,
Aug 31, 2017, 8:40:57 PM8/31/17
to மின்தமிழ்


சோழர் சரித்திரத் தேடல் ...
~ மா.  மாரிராஜன் ~

(5)

களப்பிரர்களின் ஆதிக்கம் முற்றிலும் தமிழகத்திலிருந்து துடைத்தெறியப்பட்டது.   பிறகு; சோழ தேசத்தின் வடக்கே பல்லவர்களும், தெற்கே பாண்டியர்களும் ஆதிக்கம் செலுத்தினர்.  

நாம் மீண்டும் இடைக்கால பல்லவர் மற்றும் பாண்டியர் வரிசையைக் காண இருக்கிறோம். இக்காலத்தில் நடந்த நிகழ்வுகளை நாம் அறிந்தால்தான்  பிறகு நாம் காண இருக்கும் சோழவரலாற்றில் சரியாக பயணம் கொள்ள முடியும்.  

ஆகவே; பல்லவர் மற்றும் பாண்டியர் பற்றி மீண்டும் ஒரு சுருக் பார்வை.  

முதலாம் மகேந்திரவர்மன் ( கி. பி 610 - 630):-
சிம்மவிஷ்ணுக்கு பிறகு, அவர் மைந்தன் மகேந்திரவர்மன் பல்லவ அரசனாகிறார்.  இவர் காலத்தில் சோழதேசம் மற்றும் வேங்கி  பல்லவர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. வேங்கி என்பது இன்றைய கிருஷ்ணா, கோதாவரி பகுதி மற்றும் நெல்லூர் அடங்கிய ஒரு பகுதி.  

சாளுக்கிய பேரரசன் இரண்டாம் புலிகேசி. பல்லவராஜ்யத்தின் மீது படையெடுத்தான். இவருடன் கங்க அரசனான துர்வீநீதனும் இணைந்து கொண்டான். சேர, சோழ, பாண்டியர்களும் புலிகேசிக்கு உதவியிருக்க கூடும் எனத்தெரிகிறது. காஞ்சிபுரம் அருகே உள்ள புள்ளலூர் என்னும் இடத்தில் பல்லவ சாளுக்கியப் படைகள் மோதின. கடும் யுத்தம். பல்லவப் படைகள் தோற்று பின்வாங்கியிருக்க வேண்டும். புலிகேசியே வெற்றி பெற்றுள்ளார்.

புலிகேசியின்  அய்கொளே கல்வெட்டு இவ்வெற்றியை உறுதி செய்கிறது.
( EP Of india vol 6 page. 11 ) 






கல்வெட்டு கூறும் செய்தி இது:  

 தூய்மையான வெண் சாமரங்களையும் 
 நூற்றுக்கணக்கான கொடிகளையும் குடைகளையும் 
 கொண்ட சாளுக்கிய சைன்யம் எழுப்பிய தூசியானது 
 பல்லவ மன்னனின் ஒளியை மங்கச்செய்தது. 
 காஞ்சி மன்னன் காஞ்சி கோட்டைக்குள் புகுந்து 
 மறைந்து கொண்டான்.   



மேலும், புலிகேசியின் வெற்றியானது,  சேர சோழ பாண்டியர்களுக்கு மகிழ்ச்சியை தந்ததாக இக்கல்வெட்டு கூறுகிறது.  ஆனால், கோட்டையிலிருந்து வெளியேறிய மகேந்திரன் மீண்டும் கடும் போர் செய்து எதிரிகளை துரத்தினான் என்பது, பல்லவர்களின் காசாக்குடி என்பது செப்பேடுகள் தரும் தகவல்.  ( S.i.i. vol 2 pa.356 ) 


ஆக, புள்ளலூர் போர் என்பது இருவருக்குமே வெற்றி தோல்வியை தந்தது என்பதாக அறியப்படுகிறது.   இப்போர் கி.பி 615 ஆம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால்,  இதுவரை பல்லவர்கள் வசமிருந்த வேங்கியை சாளூக்கியர்கள் கைப்பற்றினார். இரண்டாம் புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்தன் வேங்கியின் அரசனாக முடிசூட்டப்பட்டார். இது வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும். இந்த விஷ்ணுவர்த்தனின் வழியே கீழைச்சாளுக்கியம் உருவானது. பிற்காலச் சோழர்கள் இந்த கீழைச்சாளுக்கியர்களை பயன்படுத்தியே தங்கள் எல்லைகளை பலப்படுத்தினார்கள்.  

மகேந்திரவர்மனின் காலம், தமிழக கலை இலக்கிய  வரலாற்றில் ஒரு பொற்காலமாகும். கற்றளி முறையை அறிமுகபடுத்தியவர் இவரே.பாறைகளை குடைந்து குகைக்கோவிலை உருவாக்கினார். மகேந்திரவாடி,  சீயமங்கலம், திருவல்லம், திருச்சி, மேலும் பல இடங்களில் இவர் குடவரையை அமைத்தார். இவர் அமைத்த மாமல்லபுரம் குடவரை தமிழர்களின் கலைப் பொக்கிஷங்களில் ஒன்று.

இன்று நாம் கோவில்களில் காணும் பல சிற்பங்களின் முன்னோடி பல்லவர்கள் காலமே. குறிப்பாக, சீயமங்கலம் குகைக் கோவிலில் உள்ளநடராஜர் சிற்பமே,  தமிழகத்தின் முதல் நடராஜர் சிற்பம்.




சமணமும் சைவமும் செழித்தோங்கின.  புடைப்பு எழுத்துக்களுடன் கூடிய நாணயங்களை வெளியிட்டார். குணபரன், அவனிபாஜன், லலிதாங்குரன், விசித்திர சித்தன், மத்தவிலாசன், சத்ருமல்லன், சித்திரகாரப்புலி, பிணபிணக்கு, மகேந்திர போதாதிராஜன்,  என்று பல பட்டப்பெயர்கள் மகேந்திரவர்மனுக்கு உண்டு.  

வல்லம் குகைகக் கோவிலில் இவரது விருது பெயர்களைக் கொண்டு தமிழ் கல்வெட்டு உண்டு. 




மகேந்திரவர்மரை பற்றி கூறுவதற்கு பல விடயங்கள் இருந்தாலும், நமது நேர சேமிப்பை கருத்தில் கொண்டு, இவரது மைந்தரான நரசிம்மபல்லவர் கால நிகழ்வை காண இருக்கிறோம்.



முதலாம் நரசிம்மவர்மன்  ( கி.பி.630 - 668) :-

மகேந்திரருக்கு பிறகு பல்லவ அரசனானவர். பல்லவர்களில் மிகவும் பிரபலமான அரசர்.  புள்ளலூர் போரில் தன் தந்தைக்கு ஏற்பட்ட இழுக்கை துடைத்தெறிய வேண்டிய நிர்பந்தம் இவருக்கு. சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியை வீழ்த்த வேண்டும் என்பதே இவரின் முதல் நோக்கமாக இருந்தது.  அதற்காக தன் படை பலத்தை பெருக்கினார். தருணம் நோக்கி காத்திருந்தார்.  பொறுமையாக காத்திருந்தார். வலையை விரித்து தன் இரைக்காககாத்திருந்தார்.   

சாளுக்கிய அரசர் புலிகேசிக்கு அந்த பொறுமை இல்லை. நரசிம்மனை துச்சமாக மதித்த அவர், காஞ்சியின் மீது படையெடுத்தார். நரசிம்மன் விரித்த வலையில் சரியாக சிக்கினார்.  கி.பி 642 ஆம் ஆண்டு. காஞ்சியை நோக்கி கிளம்பியது சளுக்கர் சைன்யம். காஞ்சிக்கு அருகே உள்ள மணிமங்கலம்என்னும் ஊரில்  புலிகேசியை எதிர்த்தார் நரசிம்மர். கடும் யுத்தம். சதுராட்டமாடினார்கள் பல்லவர்கள்.   சளுக்கர் சைன்யம் சிக்கி சிதறியது. பின் வாங்கினார் புலிகேசி. துரத்தினார்கள் பல்லவர்கள்.  பரியமங்கலம், சூரமாரம் என்னும் இடங்களில் சாளுக்கியர்களை வென்ற பல்லவர்கள்,  வாதபி வரை துரத்தினார்கள்.

நரசிம்மரின் இந்த வெற்றியை கூரம் செப்பேடுகள் இவ்வாறு கூறுகின்றன.   (S.i.i vol 1 pa 152)



 
நரசிங்க பெருமாளே அவதரித்தது போலும்,
 சேர சோழ பாண்டிய களப்பிரரை வென்றவனும்
 நூற்றுக்கணக்கான போரில் பங்கேற்றவனும்
 பரியங்கலம், மணிமங்கலம், சூரமாரம், போர்களில்
 புலிகேசி தோற்று ஓடியபோது, வெற்றி என்னும்
 கூற்றை புலிகேசியின் முதுகாகிய பட்டயத்தில் எழுதிய நரசிம்மவர்மன்.

ஆக, இப்போர் மூன்று இடங்களில் நடந்ததாக தெரிகிறது.   தோற்று ஓடிய சாளுக்கியர்களை துரத்திச் சென்ற பல்லவர்கள், சாளுக்கிய தலைநகர் வாதாபி சென்றடைந்தனர். அங்கும் கடும் போர். பல்லவர்கள் வாதாபியை சூறையாடினார்கள். வாதபி கொண்டான் என்னும் பட்டத்தை நரசிம்மர் சூடுகிறார்.  வெற்றித்தூண் ஒன்றை நிறுவினார். நரசிம்ம பல்லவரின் மகத்தான நோக்கம் நிறைவேறியது. விஷ்ணுக்கு நிகரான நரசிம்மன்,  பகைவர்களை அழித்து வாதாபி நடுவில் ஜெயஸ்தம்பம் நட்டான் என வேலூர் பாளையச் செப்பேடுகள் கூறுகின்றன ( S.i.i vol 2 pa. 508 ) .



நரசிம்மர், இலங்கை மற்றும் வாதபியை வென்றதை காசாக்குடி செப்பேடுகள் உறுதி செய்கின்றன.
 (செய்யுள் 21 & 22)




இப்போர் பல்லவத் தளபதியான பரஞ்சோதி என்பவர் தலைமையில் நடைபெற்றது. இவரே பெரியபுராணம் கூறும் சிறுத்தொண்டநாயனார்ஆவார். வாதாபியிலிருந்து இவர் எடுத்துவந்த கணபதி சிலை வெகு பிரபலம். இதை இவர் தனது சொந்த ஊரான திருச்செங்கட்டாங்குடியில் பிரதிஷ்டை செய்தார். இல்லை.   திருவாரூர் கோவிலில் இருப்பதுதான் வாதாபி கணபதி என்பது ஒரு  சில ஆய்வாளர்களின் முடிவு.  



நரசிம்மவர்மரும், தன் தந்தையை போலவே கலை இலக்கியப் பிரியர்.  மகேந்திரவர்மர் ஆரம்பித்த மாமல்லபுரம் கோவில்  பணிகள் நரசிம்மர் காலத்தில் நிறைவுற்றன. மாமல்லபுரத்தில் இவர் அமைத்த ஐந்து தெய்வங்களுக்கான கல் தளிகள் (ஐந்து ரதம்?) உலகப் பிரசித்தம்.  



நரசிம்மர் என்னும் பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்களும் இவர் வெளியிட்டார்.  



இவரது காலத்தில்தான் சீனாவிலிருந்து. யுவான்சுவாங் என்னும் பெளத்தத் துறவி தமிழகம் வந்தார்.  ஏறக்குறைய கி.பி 942 ல்.   முதலில் காஞ்சி  பிறகு பாண்டிய நாடு சென்று, தன் அனுபவங்களை பயணக்கட்டுரையாக எழுதினார்.  



ஆகா,  என்ன இது? இரண்டு பல்லவ அரசர்களைப் பற்றி சுருக்கமாய் பார்ப்பதற்கே இவ்வளவு நேரமாகிவிட்டதே. தமிழக வரலாற்றில், பல மாறுதல்களை ஏற்படுத்திய அரும்பெறும் அரசர்களல்லவா இவர்கள்.  

இருக்கட்டும்....இதே காலத்தில் மதுரையில் நடந்த பாண்டிய நிகழ்வுகளையும் சற்று சுருக்கமாய் பார்த்து விடுவோமே!

[தொடரும்]

dorai sundaram

unread,
Sep 1, 2017, 1:07:41 PM9/1/17
to mintamil
கட்டுரையில், வல்லம்-மகேந்திரவர்மனின் த்மிழ்க்கல்வெட்டின் 
படம் தரப்பட்டு அதன் பாடம் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

பகாப்பிடுகு லலிதாங்குபரன் சத்ரு மல்லன் 
குணபரன் மயேந்திர போத்தரசன் அடியான்
வயந்த பிரிஅரசர் மகன் கந்தசேனன்
செய்வித்த தேவ குலம்

இதில் பிழைகள் உள்ளன.

சரியான பாடம்:

1 சத்துரும் மல்லன் குணபரன் 
2 மயேந்திரப் போத்தரெசரு அடியான்
3 வயந்தப் பிரி அரெசரு மகன் கந்தசேன
4 ன் செயிவித்த தேவகுலம்

கல்வெட்டில்,  பகாப்பிடுகு என்னும் பெயர் வரவில்லை.
அதுபோலவே, லலிதாங்குபரன் என்னும் பெயரும் இல்லை.
அரசர் என்பது பிழை. அரெசரு என்பதே சரியானது.
செய்வித்த என்பது பிழை. செயிவித்த என்பதே சரியானது. 

முடிந்தவரையில், கல்வெட்டின் பாடம் பிழையாக
எழுதப்படக்கூடாது என்னும் கருத்தால் இந்தச் சுட்டிக்காட்டல்.
பல்லவர் பாணியில் அமைந்த தமிழ் எழுத்துகள்.
சுந்தரம். 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Sep 1, 2017, 2:12:27 PM9/1/17
to மின்தமிழ்
நன்றி திரு சுந்தரம்,   இதை நான் எழுத்தாளர் மா.  மாரிராஜன் அவர்களுக்குத்  தெரிவித்துவிடுகிறேன்.

அவரது மின்னஞ்சல் முகவரியையும் பெற்று இந்த மடல் சுற்றில் இணைக்க முயல்கிறேன்.

நேரடி தொடார்புக்கு உதவலாம்.

..... தேமொழி

தேமொழி

unread,
Sep 2, 2017, 12:42:20 AM9/2/17
to மின்தமிழ், marir...@gmail.com


சோழர் சரித்திரத் தேடல் ...
~ மா.  மாரிராஜன் ~

(6)


நமது தேடலின் தொடர்ச்சியாக, இடைக்காலப் பாண்டியர்கள் பற்றி ஒரு சுருக் பார்வை.  

ஏறக்குறைய அதே காலகட்டம். கி.பி 6ம் நூற்றாண்டின் துவக்கம். களப்பிரர்களை முறியடித்த பாண்டிய அரசனான கடுங்கோன், அதன் பிறகு அவது வாரிசு மாறவர்மன் அவனி சூளாமனி  என்பவர் பாண்டிய அரசனாகிறார் (வேள்விக்குடி செப்பேடு தரும் தகவல்). இவ்வரசனுக்குப் பிறகே பாண்டிய மன்னர்கள் ஒவ்வொருவரும் மாறவர்மன், சடையவர்மன் என்னும் பட்டத்தை மாறி மாறி சூட்டத்தொடங்கினர் (சோழர்களின் பரகேசரி, இராச கேசரி போல்).



சடையவர்மன் சேந்தன் செழியன் (கி.பி 620 - 640):
அவனி சூளாமனியின் புதல்வன்.  இவரது காலத்து கல்வெட்டுகள் மதுரை மலையடிக்குறிச்சி குகைக்கோவிலில் காணப்படுகின்றன (Indian Archaeology a review 1961 - 1962 p.82).



நின்ற சீர் நெடுமாறன் (கி.பி 640 - 670):
மாறவர்வன் அரிகேசரி எனவும், கூன்பாண்டியன் எனவும் அழைக்கப்பட்டார். இடைக்காலப் பாண்டியர்களில் மிகவும் பிரபலமானவர்.  சோழ தேசத்தின் மீது படையெடுத்து ஒரே பகலில் உறையூரை கைப்பற்றினார் என வேள்விக்குடி செப்பேடுகள் தகவல் தருகிறது.  

பழயாறையை சோழர்குலப் பெண்மணி: 
மங்கையர்க்கரசி என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். மங்கையர்க்கரசி என்பவர் மணிமுடிச்சோழன் என்பவரின் மகள் என்பது ஞானசம்பந்தரின் பதிகம் மூலம் தெரியவருகிறது.  
மங்கையர்க்கரசியின் கற்படிமம் ஒன்று பழயாறை சோமநாதர் ஆலயத்தில் இருக்கிறது. இவர் ஆரம்பத்தில் சமண மதப்பற்றுடையவராய் இருந்தார். அரசி மங்கையர்க்கரசி மற்றும் அமைச்சர் குலச்சிறையார் இவர்கள் இருவரும் சைவமதம். இவர்கள் இருவரும், திருஞான சம்பந்தரை வரவழைத்து, அரசனுக்கு ஏற்ப்பட்ட சூலை நோயை போக்க,  அரசனனும் சமணத்தை தவிர்த்து சைவத்திற்கு மாறினார்.  


சம்பந்தர்களுக்கும், சமணர்களுக்கும் ஏற்பட்ட அனல் வாதம், புனல்வாதம் என்னும் வாதப்போட்டியில் சம்பந்தரே வெற்றி பெற்றார். தோல்வியடைந்த சமணர்கள் எட்டாயிரம் பேர் கழுவேற்றப்பட்டனர். சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டார்களா? நேரடி சான்றுள்ளதா? பெரியபுராணம் குறிப்பிடுகிறதே. வென்பெருங்குன்றத்து தெண்ணாயிரவர் மட்டும் என்கிறதே? தெண்ணாயிரம் என்பதன் பொருள் எட்டாயிரம் அல்ல. எண்ணாயிரம் என்னும் ஊரில் உள்ள ஒரு சிலர். சம்மந்தர் ஒரு இனஅழிப்பு போராளி. இல்லை. சைவத்தை மீட்டெடுத்த சமயக்குரவர். கழுவேற்றம் பற்றிய ஓவியம் மற்றும் சிற்பங்கள் உள்ளதே.   அவைகள் பாண்டியர் காலம் அல்ல. ஓவியத்தில் இருப்பவர்கள் தாடி வைத்துள்ளனர். இவர்கள் சமணமுனிகள் அல்ல. எந்த சமணர் தாடியுடன் இருந்தார். இவர்கள் கொடுங்குற்றவாளிகள். என இன்றளவும், இவ்வாறாக வாதங்கள் தொடர்கிறது. இதை மேலும் ஆராய்வது நமது நோக்கம் இல்லை என்பதால், அடுத்த நிகழ்வை அவதானிப்போம்.  

இனிவரும் நிகழ்வுகளில் சற்று விழிப்புடன் பயணம் கொள்ள இருக்கிறோம். ஒற்றை இராஜ்யத்தை மையமாக கொண்டு, எத்தனை விதமான படையெடுப்புகள்.   பகை, வெறுப்பு, அதிகாரமமதை, போட்டி,   பொறாமை, காழ்ப்புணர்வு, வஞ்சம் என்று சூறாவளியாய் சுழன்றடித்ததில்  சிதறித்தான் போனது தமிழ் கூறும் நல்லுழகம்.

அடுத்து வரும் சில நூற்றாண்டுகள்,தேசத்தின் பொழுது  போர்க்களங்களில்தான் விடிந்தது. வாட்கள் மோதும் ஓசை கேட்டே மக்கள் விழித்தார்கள். விளை நிலங்களில் ஓடிய குருதி ஆறு. விதைக்கப்பட்ட
மனித சடலங்கள். விளைச்சல் என்னவோ வல்லூறுகளுக்கும் ஓநாய்களுக்கும்தான். சாளுக்கிய  பல்லவ மோதல். சமயம் பார்த்துது பாண்டியரின் பாய்ச்சல். சேரர்களின் பங்களிப்பு. சோழர்களின் தந்திரம். கங்கர்களின் கூட்டணி. இனி ஒரு பரபரப்பான பயணத்திற்கு நாம் தயாராகவேண்டும். சற்று விழிப்புடன் நிகழ்வுகளை அவதானிக்க வேண்டும்.   பல்லவர்களையும் பாண்டியர்களையும்.  
இருவர் காலத்து நிகழ்வுகளையும் கடந்து சோழர்களை அடைய இருக்கிறோம்.  


பரமேஷ்வரன் (கி.பி 670 - 685):
முதலாம் நரசிம்மவர்மனுக்கு பிறகு பல்லவ அரசன். இதே காலத்தில் சாளுக்கிய அரசன் விக்கிரமாதித்தன். இவர் இரண்டாம் புலிகேசியின் மகன். பல்லவர்களால் தன் தேசம் பட்ட இழிவை துடைத்தெறிய வேண்டிய நிர்பந்தம் இவருக்கு. நெஞ்சமெல்லாம் வஞ்சகத் தீபற்றி எறிய, பெரும்படை திரட்டி காஞ்சியை நோக்கி  பாய்ந்தார்.   பரமேஷ்வரன் தலைமையிலான பல்லவ படைகளும், விக்கிரமாதித்தன் தலைமையிலான சாளுக்கிய படைகளும் நேருக்கு நேர் மோதின. மீண்டுமொருமுறை காஞ்சி குருதி மழையில் நனைந்தது.   கடும் யுத்தம்.விக்ரமாதித்தன் வென்று பரமேஷ்வரன் பின் வாங்கி, காஞ்சி கோட்டையில் அடைக்கலமானார். வெற்றி வீரனாய் காஞ்சியை கைப்பற்றினார் விக்ரமாதித்தன்.

கத்வல் செப்பேடுகள் இவ்வாறு கூறுகிறது.  

 “ஸ்ரீவல்லபனாகிய விக்ரமாதித்தன்,  நரசிம்மன் மற்றும் மகேந்திரனது பெருமையை அழித்தான். 
 ஈஸ்வர போத்தரசனை (பரமேஷ்வரனை) வென்று தென்னகத்தின் ஒட்டியானமாக திகழும் காஞ்சியை 
 கைப்பற்றினான்.”

இந்த கத்வல் செப்பேடுகளை விக்ரமாதித்தனே வெளியிட்டார்.   வெளியிட்ட காலம் - 25.4. 674 என்பது வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு.   இந்த செப்பேடுகளை, சோழதேசத்திலுள்ள உரகபுரத்திலிருந்து (உறையூர்)  வெளியிடுகிறார்.  இது எவ்வாறு சாத்தியம்?

காஞ்சியை முழுவதுமாக கைப்பற்றிய விக்ரமாதித்தன், தோற்று பின்வாங்கிய பல்லவன் பரமேஷ்வரனை மறந்தார்.   வந்ததுதான் வந்தோம், தெற்கேயும் ஒரு சுற்று வருவோமே என்று நினைத்தாரோ என்னவோ? காஞ்சியிலிருந்து, சோழதேசம் உறையூரை அடைந்தார். வருகை தந்த சாளுக்கியர்களை, வாள் முனையில் வரவேற்றான் பாண்டியன் கோச்சடையன் ரணதீரன்.

கோச்சடையன் ரணதீரன் ( கி.பி. 670 - 710):
நின்ற சீர் நெடுமானுக்குப்பிறகு பாண்டிய அரசன். தன் எல்லையில் சாளுக்கியர் வந்த செய்தி கிடைத்தவுடன், படைதிரட்டி புறப்பட்டார். இவரது படையில் சேரர்களும், சோழர்களும் இணைந்தனர். மூவேந்தர்களும் ஒன்று கூடி சாளுக்கியன் விக்ரமாதித்தனை எதிர்த்தனர்.

திருச்சி அருகே உள்ள மங்கலபுரம் என்னும் இடத்தில் நடந்தது கடும் யுத்தம். வெற்றி பாண்டியனுக்கே.   தோற்ற சாளுக்கியர்கள் பின்வாங்கினார்கள். பாண்டியனது வேள்விக்குடி செப்பேடுகள். மங்களாபுரமெனும் மாநகருள் மாரதரை எறிந்தழித்து என்று பாண்டியனுடைய வெற்றியை உறுதி செய்கிறது.

மேலும், விக்ரமாதித்தனை தமிழரசர்கள் அனைவரும் சேர்ந்து எதிர்த்தனர் என கேந்தூர் கல்வெட்டு கூறுகிறது.  ரணரசிகன் என்னும் பெயர்கொண்ட விக்ரமாதித்தனை கோச்சடையான் வென்றதால் ரணதீரன் என்னும்  பட்டத்தைச் சூடுகிறார். பாண்டியனிடம் தோற்று பின்வாங்கினார் சாளுக்கிய அரசன் விக்ரமாதித்தன்.   தன் படைகளுடன் காஞ்சி நோக்கி திரும்பினார்.   ஆனால் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது அவருக்கு. சாளுக்கியரிடம் தோற்று பின்வாங்கியிருந்த பல்லவ அரசன் பரமேஷ்வரன், பெரும்படையுடன் விக்ரமாதித்ததனை எதிர்த்தார். பெருவளநல்லூர் என்னும் இடத்தில் களம் கண்டனர். மீண்டும் பல்லவ - சளுக்கிய யுத்தம். கடும் போராட்டம். இம்முறை வெற்றி  பல்லவர் பக்கம். பல்லவர்களின் அதிரடித் தாக்குதல். தோற்று பின்வாங்கினார் விக்ரமாதித்தன்.  

பரமேஷ்வரனின் வெற்றியை, கூரம் செப்பேடு இவ்வாறு கூறுகிறது.  

 “பல இலட்சம் வீரர்களை கொண்ட விக்ரமாதித்தன் கந்தையை சுற்றிக்கொண்டு ஓடினான்” 
    ( s.i.i vol 1 pa.154 )

இப்போர் நிகழ்வை கூரம் செப்பேடுகள் மிக விரிவாக உணர்வாக விவரிக்கிறது.  1300 ஆண்டுகளுக்கு முன் நடந்த போர் நிகழ்வை நேரடியாக வர்ணிக்கிறது  கூரம்செப்பேட்டுச் செய்திகள். 





ஆக, சாளுக்கிய அரசர் விக்ரமாதித்தர் பல்லவர்களிடம் தோற்று வாதாபிக்கு திரும்பினார் என்பது உறுதியாகிறது.  சிறந்த சிவபக்தனான பரமேஷ்வரன் காஞ்சி அருகே உள்ள கூரம் என்னும் சிற்றூரில், சிவன் கோவில் ஒன்றை எழுப்பினார்.  வித்யாவீநீத பல்லவ பரமேஷ்வர க்ரஹம்என்னும் பெயர் பெற்ற இக்கோவிலே தமிழகத்தின் முதல் கற்றளியாகும். கஜப்ருஷ்ட முறையில் கட்டப்பட்ட
கோவிலின் சில பகுதிகளே இன்று மீதம் உள்ளன.  



பெருவள நல்லூர் போருக்கு பிறகு.   பல்லவர் - சாளுக்கியர் பகை மேலும் உக்ரமானது. இதுவரை பல்லவர்களின் கீழ் இருந்த சோழம் பாண்டியர் வசமானது. பல்லவ, பாண்டிய மோதலும் ஆரம்பம் ஆனது. எப்பாடு பட்டாவது, தன்னை நிலைநிறுத்த போராடினார்கள் சோழர்கள்.  

நமக்கு இன்னும் சில களங்கள் காத்திருக்கின்றன.  



[தொடரும்]

தொடார்பு: மா.  மாரிராஜன் - marir...@gmail.com
குறிப்பு: இம்மடலில் கட்டுரை ஆசிரியரும் இணைக்கப்பட்டுள்ளார் 

Suba

unread,
Sep 2, 2017, 4:23:11 AM9/2/17
to மின்தமிழ், marir...@gmail.com, Subashini Kanagasundaram
இக்கட்டுரையை நமக்காக வழங்கி வரும் தோழர் மாரிராஜன் அவர்களுக்கும் மின் தமிழில் பதிந்து வைக்கும் தேமொழிக்கும் என் நன்றி.

சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

dorai sundaram

unread,
Sep 2, 2017, 4:32:49 AM9/2/17
to mintamil
திரு. மாரிராஜன் அவர்களின் அருமையான ஒரு வரலாற்றுத்தேடலைப் 
பகிர்ந்துவரும் தேமொழி அவர்களுக்கு நன்றி.
மாரிராஜன் அவர்கள் சோழர் வரலாற்று மையம் ஒன்றின் முதன்மையாளராய் இருப்பவர். 
அந்த மையத்தினர் இந்த ஆண்டின் தமிழ்ப்புத்தாண்டு நாளைத் தாராசுரத்திலும், 
பஞ்சவன்மாதேவிப் பள்ளிப்படைக்கோயிலிலும் கொண்டாடிவிட்டுத் தஞ்சைப் பெரிய
கோயிலில் முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டுகளை மட்டும் (குறிப்பெடுத்துவந்தவாறு)
படித்து மகிழ்ந்தனர். நானும் உடனிருந்து சில கல்வெட்டுகளைப் படித்துக் காட்டினேன்.
மாரிராஜன் அவர்களின் அறிமுகம் மட்டுமே அப்போது ஏற்பட்டது. நிறைய வரலாற்றுத் 
தகவல்களை குழுவினர்க்கு எடுத்துச் சொன்னார். அவரது இந்தத் தொடர் மிக்க பயனுள்ளது.
சுந்தரம்.

--

Suba

unread,
Sep 2, 2017, 4:39:41 AM9/2/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-09-02 10:32 GMT+02:00 dorai sundaram <doraisu...@gmail.com>:
திரு. மாரிராஜன் அவர்களின் அருமையான ஒரு வரலாற்றுத்தேடலைப் 
பகிர்ந்துவரும் தேமொழி அவர்களுக்கு நன்றி.
மாரிராஜன் அவர்கள் சோழர் வரலாற்று மையம் ஒன்றின் முதன்மையாளராய் இருப்பவர். 
அந்த மையத்தினர் இந்த ஆண்டின் தமிழ்ப்புத்தாண்டு நாளைத் தாராசுரத்திலும், 
பஞ்சவன்மாதேவிப் பள்ளிப்படைக்கோயிலிலும் கொண்டாடிவிட்டுத் தஞ்சைப் பெரிய
கோயிலில் முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டுகளை மட்டும் (குறிப்பெடுத்துவந்தவாறு)
படித்து மகிழ்ந்தனர். நானும் உடனிருந்து சில கல்வெட்டுகளைப் படித்துக் காட்டினேன்.
மாரிராஜன் அவர்களின் அறிமுகம் மட்டுமே அப்போது ஏற்பட்டது. நிறைய வரலாற்றுத் 
தகவல்களை குழுவினர்க்கு எடுத்துச் சொன்னார். அவரது இந்தத் தொடர் மிக்க பயனுள்ளது.
சுந்தரம்.

​மகிழ்ச்சி.
நம் சகோதரர் பார்த்தியின் அரீமுகத்தால்  தோழர் மாரிராஜனின் அறிமுகம் எனக்குக் கிட்டியது. வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரம் தமிழ் மரபு அறக்கட்டளை குமாரபாளை த்தில் நடத்த உள்ள 3 நாள் மாபெரும் கருத்தரங்கினைச் சிறப்பிக்கும் முகமாக 100 நாட்கள் சோழர் வரலாற்றை பதிவாக எழுதுவதாகக் குறிப்பிட்டு இந்த முயற்சியை அவர் தொடங்கினார்.  இது நமது த.ம.அ வாட்சப் குழுமத்தில் அவரால் நேரடியாகப் பகிரப்படுகின்றது என்ற செய்தியைஉம் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

குறிப்பு - மார்ச் மாதம் நடைபெற உள்ள நமது குமாரபாளையம் கருத்தரங்கில் நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் திரு.துரை.சுந்தரம் அவர்களே.

சுபா

N D Logasundaram

unread,
Sep 3, 2017, 12:10:55 PM9/3/17
to mintamil
அன்பின் தேமொழி இந்த இழை மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது மகிழ்ச்சி 

நூ த லோ சு
மயிலை
ஊ 

dorai sundaram

unread,
Sep 3, 2017, 12:25:19 PM9/3/17
to mintamil
சுபா அவர்களுக்கு.
குமாரபாளையம் கருத்தரங்கில் கலந்துகொள்வேன்.
நன்றி.
சுந்தரம்.

N D Logasundaram

unread,
Sep 3, 2017, 5:06:14 PM9/3/17
to mintamil
சுப அவர்களுக்கு இதன் விவரம் அறிய விரும்புகின்றேன் 

நூ த லோ சு
மயிலை
ஊ 

தேமொழி

unread,
Sep 3, 2017, 8:39:39 PM9/3/17
to மின்தமிழ், marir...@gmail.com


சோழர் சரித்திரத் தேடல் ...
~ மா.  மாரிராஜன் ~

(7)

இராச சிம்மன் ( கி.பி 690- 729 ): 
பரமேஷ்வரனின் மகன் இரண்டாம் நரசிம்மன் என அழைக்ப்பட்டார். இவர் காலம் எந்த பரபரப்பும் இல்லாமல் சற்று அமைதியாகவே கழிந்தது எனலாம். அடிக்கடி யுத்தம் நடந்ததால் இவர் காலத்தில் காஞ்சியில் மிக கடுமையான பஞ்சம் ஏற்பட்டதாக, இவரது அவைப் புலவர் தண்டிஎன்பவர் தான் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். பிறகு ஒருவாறு நிலமை சீரானது.  இவன் காலத்து சாளுக்கிய அரசன் விசாயாதித்தன்.  கங்கர்களுக்கும், சாளுக்கியர்களுக்கும் அடிக்கடி மோதல் நடந்ததால்.  பல்லவர்களின் காலம் சற்று அமைதியாக கழிந்திருக்கலாம்.  

இவரது காலமும் கலை இலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலமே. காஞ்சியில் இவர் எழுப்பிய  கைலாசநாதர் ஆலயம் (இராசசிம்மபல்லவேச்சுரம்) உலகப் பிரபலம். கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள மணற்பாங்கான சிற்பங்கள், இன்றளவும் நமது கண்களையும் கருத்தையும் கவரக்கூடியன. 



தஞ்சை பெரியகோவிலின் முன் மாதிரியாக இதை கொள்ளலாம். முதலாம் இராஜராஜசோழனே,  இக்கோவிலைப் பார்த்து வியந்து,  

“கச்சப்பேட்டு பெரிய கற்றளி இராசசிம்மேஷ்வரம்” என கூறிய செய்தி கல்வெட்டாக உள்ளது.  



மாமல்லபுரம் கடற்கரை கோவிலும்  இவர் காலமே. இன்னும் பல கோவில்கள். இவை ஒவ்வொன்றும் ஒரு அற்புதம்.

இரண்டாம் பரமேஷ்வரன் ( கி.பி 728 - 731 ):
இராசசிம்மனின் மகன். இவரது காலத்தில் அதிமுக்கிய நிகழ்வுகள் எதுவுமில்லை. காஞ்சியில் உள்ள வைகுந்த பெருமாள் கோவில் என்னும் பரமேஷ்வரவிண்ணகரம்ஆலயத்தை எடுத்தவர். இந்த இரண்டாம் பரமேஷ்வரனுடன், இடைக்கால பல்லவத்தை ஸ்தாபித்த சிம்மவிஷ்ணுவின் மரபு முடிகிறது.  



இரண்டாம் பரமேஷ்வரனுக்கு சித்திரமாயன் என்னும் மைந்தன் இருந்தாலும் அவர் பட்டத்திற்கு வரவில்லை.   பரமேஷ்வரனின் சித்தப்பா மகனான இரண்டாம் நந்திவர்மன் பல்லவ அரசனாகிறார். சித்திரமாயனுக்கு ஏன் பட்டம் மறுக்கப்பட்டது என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. ஆனால், ... பல்லவ ராஜ்யத்தில் ஒரு தாயாதி சண்டை ஆரம்பம் ஆனது என்பது மட்டும் தெளிவு.  

இரண்டாம் நந்திவர்மன்  ( கி.பி.731 - 796):
ஏறக்குறைய 65 ஆண்டுகளாய் பல்லவ அரசன். இவரது 65 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு மாமல்லபுரத்தில்
கிடைக்கிறது.   மிக இளம் வயதிலே இவர் பட்டத்திற்கு வந்திருக்க வேண்டும். மாமல்லபுரம் வராகக் குகை கோவிலில் இவரின் 65 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு கிடைக்கிறது. ( ins no 666 of 1922 ) 



இதே காலத்தில் சாளுக்கிய அரசன்.  இரண்டாம் விக்ரமாதித்தன். வழக்கம்போல் தன் முன்னோர்களின் வழியையொட்டி காஞ்சிமீது படையெடுத்தான்.நடந்த கடும் யுத்தத்தில் சாளுக்கியர்களே வெற்றி பெற்றனர்.  நந்தி வர்மன் தோற்று பின்வாங்கினான். போரில் தோற்ற நந்திவர்மன் தன் படைகளுடன் பின்வாங்கி, சோழதேசம் தப்பினான். கும்பகோணம் அருகே உள்ள நந்திபுரக் கோட்டையில் வந்து தங்கினான்.   

வெற்றிவீரனாய் காஞ்சியை கைப்பற்றினான் விக்ரமாதித்தன். இவ்வெற்றியை கேந்தூர் பட்டயங்கள்  இவ்வாறு கூறுகின்றன.  
“சாளுக்கியர்களின் பெருமையை குலைத்த பல்லவர்களை பழிவாங்க, பெரும்படையுடன்  காஞ்சி மீது படையெடுத்தான் விக்ரமாதித்தன். பல்லவன் தோற்று காஞ்சியை விட்டு தப்பினான்.


காஞ்சி நகரம் சாளுக்கியர் வசமாயிற்று. வரலாற்றில் ஒரு அதிசிய நிகழ்வு ஒன்று நடந்தது.  சாளுக்கிய அரசர் விக்ரமாதித்தர், காஞ்சிக்கோ, அதன் மக்களுக்கோ எந்த இடையூறும் செய்யவில்லை. தான தருமங்களை அள்ளி வழங்கினார். காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை கண்டு வியந்த அவர், கோவில் செல்வங்களை எல்லாம் கைலாசநாதருக்கே நிவந்தமாக வழங்கினார்.  இச்செய்தியை  கல்வெட்டாகவும் வெட்டினார்.

கைலாசநாதர் கோவில் கல்வெட்டு.  

 Ep of india vol 3 pag.360. 


 Ep of india vol 9 pa. 205 &206

இம்மன்னது உயர்ந்த செயலை, இன்றளவும் வரலாறு வியப்புடன் உற்றுநோக்குகிறது.  

ஒரு சிறப்பான நிகழ்வை நிகழ்த்திய திருப்தியுடன் அமைதியாக வாதாபி திரும்பினார் சாளுக்கிய அரசர். இவ்வெற்றியை,  பட்டடக்கல்லில் தான் எழுப்பிய விருபாட்சர் கோவில் தூணில் கல்வெட்டுச் செய்திகளாக பதிவு  செய்தார்.



சாளுக்கியர்களிடம் தோற்று, நந்திபுரம் கோட்டையில் பதுங்கியிருந்த பல்லவன் நந்திவர்மனுக்கு மேலும்ஒ ரு சோதனை.   நந்திபுரகோட்டையை முற்றுகை இட்டார் பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன்.

அரிகேசரி பராங்குச மாறவர்மன் ( கி.பி 710 - 765 ): 
கோச்சடையானுக்கு பிறகு பாண்டிய அரசன்.  இவரே முதலாம் இராசசிம்மன் என ஆய்வாளர்களால் குறிக்கப்படுகிறார்.

பட்டம் மறுக்கப்பட்ட பல்லவன் சித்ரமாயன்,  பாண்டியனை தஞ்சமடைகிறார். இதே நேரத்தில் சாளுக்கியர் விக்ரமாதித்தனிடம் தோல்வியுற்ற பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மன் நந்திபுரகோட்டையில் தங்குகிறார். பெரும்படையுடன் பாண்டியன் சென்று நந்திபுரக் கோட்டையை முற்றுகை இடுகிறார். ஏறக்குறைய பாண்டியன் வென்று,  பல்லவன் நந்திவர்மன் சிறைப்பட்ட சூழல்.   அதே நேரம்,பல்லவத் தளபதி உதயச்சந்திரன் தலைமையில் காஞ்சியிலிருந்து ஒரு பெரும்படை வந்தது.   பாண்டியர்களுக்கும், பல்லவர்களுக்கும் இடையே நடந்த கடும்போரில், பாண்டியர்களை வென்ற தளபதி உதயச்சந்திரன், தன் அரசன் நந்திவர்மனை மீட்கிறார். சித்திரமாயன் இப்போரில் இறக்கிறார்.  

பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும், இப்போர் பல இடங்களில் நடந்தது. பாண்டியர்களை வென்றதாக பல்லவர்களும், பல்லவர்களை துரத்தியதாக பாண்டியர்களும் தத்தம் பட்டயங்களில் குறித்தனர்.  

வீருகொண்டு எழுந்த உதயச்சந்திரன் அல்லிமலர் இதழ்போல் ஒளிர்ந்த தன் வாளால், சித்ரமாயனை கொன்றான். நிம்பவனம், சங்ககிராமம், சூரவழுந்தூர் மண்ணைக்குறிச்சி முதலிய இடங்களில் பாண்டியர்களை வென்றான் (பல்லவர் செப்பேடு).

நெடுவயல், குறுமடை, மன்னிக்குறிச்சி, பூவலூர்,  கொடும்பாளூர், பெரியாளூர், என்னும் இடங்களில் பாண்டியன் வென்றான்.குழும்பூரில் நடந்த போரில் பல்லவனுடைய ஆனைகளையும், குதிரைகளையும்  பாண்டியன் கைக்கொண்டான்(பாண்டியச்செப்பேடு).

இவ்வாறாக தாங்கள் பெற்ற வெற்றியை மட்டும் பதிவு செய்கின்றனர்.  

இதே காலத்தில் மேலும் ஒரு அதிமுக்கிய நிகழ்வு ஒன்று நடைபெறுகிறது.  சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்ரமாதித்தனுக்கு பிறகு, அவனது மைந்தன் இரண்டாம் கீர்த்திவர்மன் சாளுக்கிய அரசனாகிறார். சாளுக்கியரின் கீழ் சிற்றரசாக இருந்த இராஷ்டிரகூட வழி வந்த மன்னன் தந்திதுர்க்கன்.இவர், பல்லவமன்னன் நந்திவர்மனின் உதவியை பெற்று, சாளுக்கியர் மீது படையெடுத்தார். நடைபெற்ற போரில் சாளுக்கியர் தோற்று,  கீர்த்திவர்மன் வீரசுவர்க்கம் எய்தினார்.

இவருடன் சாளுக்கிய வம்சம் தற்காலிக முடிவுக்கு வந்தது.   தொடர் சாளுக்கிய அச்சத்திலிருந்து பல்லவர்கள் மீண்டனர். அடுத்த இருநூறு வருடங்கள் இராஷ்டிரக்கூடர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.  தந்திதுர்க்கனுக்கு பிறகு முதலாம் கிருஷ்ணன் ( கி.பி 758 - 772) என்பவர் இராஷ்டிரகூட அரசன் ஆனார். இவர் தன்னை கன்னரத்தேவன் என அழைத்க்கொண்டார். 

 பல்லவ - பாண்டிய - இராஷ்டிரகூட அதிகார மோதல் ஆரம்பம் ஆனது. வழக்கம்போல் காத்திருப்பில் சோழர்கள். சோழர்களுக்கான நேரமும் கைக்கெட்டும் தூரத்தில்தான்.  ஏறக்குறைய கி.பி.830 ம் ஆண்டு.   பழயாறையில் இருந்த சோழவம்சத்தில்.  ஒரு ஆண்மகவு அவதரித்திருக்கலாம்.  

அந்தக் குழந்தைக்கு விஜயாலயன்   எனப் பெயர் சூட்டியிருக்கலாம்.  

[தொடரும்]

Suba

unread,
Sep 4, 2017, 6:02:02 AM9/4/17
to மின்தமிழ்
2017-09-03 23:06 GMT+02:00 N D Logasundaram <selvi...@gmail.com>:
சுப அவர்களுக்கு இதன் விவரம் அறிய விரும்புகின்றேன் 

​அடுத்த மார்ச் மாதம் முதல் வாரம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் நமது 3 நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிகழ ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஏற்பாடுகள் முழுமையானதும் தகவல் நிச்சயம் பகிர்ந்து கொள்வேன்​. தாங்கள் வந்து கலந்து கொண்டு கட்டுரை வாசிக்க முடிந்தால் பெரிதும் மகிழ்வேன். 

சுபா
 

N D Logasundaram

unread,
Sep 4, 2017, 1:05:23 PM9/4/17
to mintamil
​கருத்தரங்கம் பொருள் / தலைப்பு / தேர்வு நிலைகள் 
எவை ??​

நூ த லோ சு
மயிலை
ஊ 

--

Suba

unread,
Sep 4, 2017, 1:10:38 PM9/4/17
to மின்தமிழ்
2017-09-04 19:05 GMT+02:00 N D Logasundaram <selvi...@gmail.com>:
​கருத்தரங்கம் பொருள் / தலைப்பு / தேர்வு நிலைகள் 
எவை ??​

​ஓரிரு வாரங்களுக்குப் பின்னர் சொல்கிறேன்​

தேமொழி

unread,
Sep 5, 2017, 11:28:33 PM9/5/17
to மின்தமிழ், marir...@gmail.com


சோழர் சரித்திரத் தேடல் ...
~ மா.  மாரிராஜன் ~

(8)


மேலும் சில பரபரப்பான நிகழ்வுகளை காண இருக்கிறோம்.  

தந்திவர்மன்(கி.பி. 796 - 846):
இரண்டாம் நந்திவர்மனின் மகன். நந்திவர்மனுக்குப் பிறகு பல்லவ அரசன். இதே நேரத்தில்,  ஒரு சில தாயாதி சண்டைகள் மூலமாக, துருவன்என்பவர் இராஷ்டிரக்கூட அரசன் ஆகிறார்.   காஞ்சியின் மீது படையெடுக்கிறார்.   நடைபெற்ற கடும்போரில்,  பல்லவன் நந்திவர்மன் தோல்வியுற்று பின்வாங்கினார். இராஷ்டிரகூட அரசர் துருவன் வெற்றி பெற்று காஞ்சியை கைப்பற்றுகிறார்.

பல்லவன் தனது பெரும் யானைப்படையை கோவிந்தனுக்கு  பரிசாக அளித்து சமாதானம் கொண்டான் என இராஷ்டிரகூட பட்டயங்கள் கூறுகின்றன. சில வருடங்கள். இராஷ்டிரகூட அரசனாக மூன்றாம் கோவிந்தன் பதவியேற்றார். வழக்கம் போல் காஞ்சி மீது படையெடுத்தான். மீண்டும் அடி விழுந்தது பல்லவன் தந்திவர்மனுக்கு. கோவிந்தனுக்கு கப்பம் கட்டி ஒரு வழியாக சமாளித்தான் தந்திவர்மன். மூன்றாம் முறையாகவும் இராஷ்டிரகூடர் காஞ்சியை தாக்கினர்.  

இடைவிடாத கூடர்களின் தாக்குதலால், முற்றிலும் நிலைகுலைந்தார் பல்லவ அரசர் தந்திவர்மன். மேலும் ஒரு அடியாக, தெற்கே இருந்தும் அச்சுறுத்தல் வந்தது. அச்சுறுத்தியவர் பாண்டிய அரசன். வரகுண பாண்டியன்.

மீண்டும் பாண்டியர்கள் வரிசை . . . 
நெடுஞ்சடையான் பராந்தகனுக்குப்பிறகு, அவர் மகன் இரண்டாம் இராசசிம்மன் பாண்டிய அரசனாகிறார். இவருக்குப்பின் இவரது மைந்தன் வரகுணபாண்டியன் அரசனாகிறார்.  

 
வரகுண பாண்டியன்(கி.பி 792 – 835):
இரண்டாம் இராச சிம்மனின் மைந்தன், சடையவர்மன் என்னும் பட்டத்துடன் ஆட்சிக்கு வந்தவர்.  மாறன்சடையன்என்னும் சிறப்பு பெயரும் உண்டு. வரகுணமகராசன் எனவும் அழைக்கப்பட்டார். இடைக்கால பாண்டிய அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர். சோழதேசம் முழுவதையும் கைப்பற்ற வேண்டும் என்பதே இவரது நிலைப்பாடு. தான் பதவியேற்ற நான்காம் ஆண்டே, பெரும்படையுடன் சோழதேசத்தை நோக்கிப் புறப்பட்டார். புதுக்கோட்டை, கொடும்பாளூர், திருச்சி, உறையூர், தஞ்சை, பழயாறை, குடந்தை என்று சோழதேசம் முழுமையும் கைப்பற்றிய பாண்டியர் படை தொண்டை நாட்டு எல்லையான பெண்ணாங்கற்றையில் வந்து நின்றது.  

கொடும்பாளூர் வேளிர்கள், தஞ்சை முத்தரையர்கள், பழயாறை சோழர்கள் என அனைவரையும் வென்றார் வரகுண பாண்டியர்.   இதை மெய்பிக்கும் விதமாக சோழதேசம் முழுவதும் இவரது கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

திருவிசலூர் ( Ins 17 of 1907), ஆடுதுறை ( Ins 364 of 1907) 




கும்பகோணம் ( Ins 13 of 1908)


இன்னும் பல சோழதேசப்பகுதிகளில் வரகுணபாண்டியரின் கல்வெட்டுக்கள் காணப்படுகிறது.  

திருச்சி மலைக்கோட்டையில்  உள்ள இவரது   கல்வெட்டு ( S . I. I vol 14 no 10 )


வேம்பில் மதிலையழித்து நியமத்தில் தங்கியிருந்த போது, சிராப்பள்ளி இறைவருக்கு 125 கழஞ்சு பொன்  வழங்கியதாக கல்வெட்டுச் செய்தி.   அதாவது கும்பகோணம் அருகே உள்ள வேம்பில் என்னும் வேப்பத்தூர் என்னும் ஊரை வென்றார் என்பதன்மூலம் இவரது சோழபடையெடுப்பு உறுதி செய்யப்படுகிது.  

“காடவனைக் கருவூரில் கால்கலங்க களிறுகைத்த கூடலர்கோண் ஸ்ரீவரகுணன்” என்னும் செப்பேட்டுச்செய்தியின் மூலம் பல்லவன் ஒருவனை வரகுணபாண்டியர் வெற்றிக்கொள்கிறார்.  
இப்பல்லவன் இவர் காலத்தைச் சேர்ந்த தந்திவவர்மன் ஆவார்.  

வரகுணபாண்டியரின் 11ம் ஆட்சியாண்டு கல்வெட்டு( Ins 105 of 1905) அம்பாசமுத்திரம்.  


தொண்டைமண்டலத்தில் பெண்ணையாற்றங்கரை அரசூரில் தங்கியிருந்தபோது, அம்பசமுத்திரம் கோவிலுக்கு பொற்காசுகள் நிவந்தம் அளிக்கிறார்.   ஆக தொண்டைமண்டலத்தையும் வரகுணபாண்டியன்
ஆக்ரமித்தார்.

திருச்சி - திருவாணைக்கா ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வரகுணபாண்டியரின் கல்வெட்டு( Ins 84 of 1910) இக்கல்வெட்டு ஒரு முக்கிய விடயத்தை பறை சாற்றுகிறது. 

 

வரகுணபாண்டியரின் 13 ம் ஆட்சியாண்டு ( 9 + 4 ) திருவணைக்கா கோவிலுக்கு நிவந்தம் அளிக்கிறார். விருச்சிக ஞாயிறு,  திங்கட்கிழமை என்று ஒரு கணக்கீடு வருகிறது.   இதை நன்கு ஆய்வு செய்த அறிஞர்கள் இக்கல்வெட்டின் காலம் கி.பி 824 என வரையறுக்கின்றனர். ஆக,  சோழநாடு மற்றும் தொண்டைமண்டலத்தின் பெரும்பகுதியை வரகுண பாண்டியன் ஆக்ரமித்தார்எ ன்பது தெளிவு.  



மேலும் வரகுணரின் 11ம் ஆட்சியாண்டு கல்வெட்டு ( Indian Archaeology 1960 - 61 review p. 45 ) 


 
விடேல் விடுகு முத்தரையர்மகளார் சாத்தன் களியார் என்பவர் ஆயிரத்தளி கோவிலுக்கு நிவந்தம் வழங்குகிறார். ஆக,  தஞ்சையை ஆண்டவர் முத்தரையர்கள் என்பதும்,  அவர்கள் பாண்டியர்களின்
கீழ் சிற்றரசர்கள் என்பதும் தெளிவாகிறது.  

மேலும், வரகுண பாண்டியரின் 10 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு,  தஞ்சை செந்தலை கோவிலில் உள்ளது.   இவரது ஆட்சிகாலத்தில், விடேல்விடுகு முத்தரையரின் அடியான் கோவிலுக்கு நிவந்தம் அளிக்கிறார். ஆக, இக்காலத்தில் தஞ்சையை ஆண்டவர்கள் முத்தரையர்கள் என்பது உறுதியாகிறது. வரகுண பாண்டியரின் 10 ம் ஆட்சியாண்டு ( Ins 10 of 1899) . தஞ்சை பிடாரி கோவிலுக்கு  விடேல்விடுகு முத்தரையர் என்பவர்,  நிவந்தம் வழங்குகிறார்.   ஆக இக்கால கட்டத்தில் தஞசை ஆண்டது முத்தரையர் எனத் தெரியவருகிறது.  
( s.s.i vol 6 No 446).




கழுகுமலையில் இவரது 42 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டும்,  ( Ins 863 of 1917 ); ஏர்வாடியில் இவரது 43 ம் ஆட்சியாண்டு கல்வெட்டும் ( Ina 105 of 1915 ) கிடைப்பதால் இவர் 43 ஆண்டுகள் ஆட்சி செய்தார்
என்பது தெரிகிறது.

கோவில்பட்டி அருகே உள்ள மலையை குடைந்து கட்டப்பட்ட வெட்டுவான் கோவில், வரகுணபாண்டியரின் காலம் ஆகும்.  இதன் அருகே உள்ள சமணர் பள்ளி, ஐயனார் கோவிலில் இவரின் 42 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு உள்ளன.   கழுகுமழை வெட்டுவான் கோவில், எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவிலை போன்ற அமைப்பில், குடையப்பெற்றது.  






மாறஞ்சடையன் வரகுணபாண்டியரின் 43 ஆண்டுகால ஆட்சி,  பாண்டியர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.  இனி, பல்லவர் நிலை என்ன என்பது பற்றிய ஒரு பார்வை.  




மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 846 – 869): 
தந்திவர்மனுக்குப்பிறகு அவரது மைந்தன் மூன்றாம் நந்திவர்மன் பல்லவ அரசனாகிறார். தந்திவர்மன் காலத்தில்,  இராஷ்டிர கூடர்களாலும், பாண்டியர்களாலும்,  அடிமேல் அடிவாங்கிய பல்லவர்கள் மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் வீறு கொண்டு எழுந்தனர்.   மீண்டும் ஆதிக்கம் பெற்றனர். வடக்கே கூடர்களையும்,  தெற்கே பாண்டியர்களையும்ஒரு சேர சமாளித்தார் மூன்றாம் நந்திவர்மன்.

நமது சோழர்கள் என்னதான் ஆனார்கள்? 

இருக்கிறார்கள்.   பழயாறை என்னும் சிறு கூண்டில் இருக்கிறார்கள்.   தங்களுக்கான காலத்தை எதிர்நோக்கி இருந்தார்கள்.   இரைக்காக குறி வைத்து காத்திருக்கும் புலிகளைப்போல். பதினாறடி வேங்கையாம் தந்தைப்புலி. விஜயாலயச்சோழர். வேங்கையின் பாய்ச்சலை மிஞ்சும் குட்டிப்புலியாம் ஆதித்தச் சோழர்


[தொடரும்]

தேமொழி

unread,
Sep 6, 2017, 11:04:10 PM9/6/17
to மின்தமிழ்


சோழர் சரித்திரத் தேடல் ...
~ மா.  மாரிராஜன் ~

(9)

மேலும் பரபரப்பான சில நிகழ்வுகளின் வழியே நமது முதல் இலக்கான திருப்புரம்பியம் நோக்கி பயணிக்கிறோம். பல்லவப் பேரரசர் தந்திவர்மன் ஆட்சிக்காலம் முழுவதும் ஒரே போராட்டச் சூழல்.  ஒரு புறம் இராஷ்டிர கூடர்களாலும், மறுபுறம் பாண்டியன் வரகுணபாண்டியனாலும் இடை நில்லா தாக்குதல்.  பல்லவர்கள் வசமிருந்த சோழநாட்டை பாண்டியர்கள் கைப்பற்றி இருந்தனர். 

கடும் நெருக்கடியான சூழலில் தந்திவர்மனின் மைந்தன் மூன்றாம் நந்திவர்மன் பல்லவ அரசனாக பட்டத்திற்கு வருகிறார்.  பல்லவர் ஆதிக்கம் மீண்டும் நிலை நின்றது. 


மூன்றாம் நந்திவர்மன்:

தந்திவர்மனின் மகன்.  மிகவும் பிரபலமான அரசர். நந்திகலம்பகம் இவர்மேல்தான் பாடப்பட்டது. பெரியபுராணத்தில் வரும்  சுழற்சிங்க நாயனார் இவரே. இராஷ்டிரகூடர்களாலும்,  பாண்டியர்களாலும், தன் தந்தைக்கு ஏற்பட்ட களங்கத்திற்கு பழிவாங்கும் உத்வேகத்தோடு பல்லவ அரசன் ஆனார்.  மாபெரும் பல்லவ சைன்யம் இராஷ்டிரகூடர்களை நோக்கி புறப்பட்டது. 

பல்லவர்களை பாடாய் படுத்திய இராஷ்டிரகூட அரசர் மூன்றாம் கோவிந்தனின் மறைவுக்கு பிறகு, அவரது மகன் முதலாம் அமோகவர்ஷன் இராஷ்டிரக்கூடர் அரசனாக இருந்தார். நந்திவர்மன் தலைமையில் பல்லவ சைன்யம், இராஷ்டிரர் கூடர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியது. வெற்றி பல்லவர் பக்கமே.  இவ்வெற்றியை நந்திகலம்பகமும், வேலூர் செப்பேடுகளும் எடுத்தியம்புகின்றன.

 படைகள் நடத்துவதில் பண்பட்ட நந்திவர்மன் 
 பல்லவபெருநாட்டின் செழிப்பை பெறுவதற்காக 
 தன் பகைவனை போர்க்களத்தில் வென்றான். 
 அவனால் வெட்டி வீழ்த்தப்பட்ட யானைகள் 
 அணிந்திருந்த முத்துமாலைகள் களமெங்கும் சிதறி 
 கிடந்த காட்சி, கள மங்கை தன் பற்களை காட்டி 
 நகைப்பது போல் இருந்தது. 

முற்றிலும் சரணடைந்த இராஷ்டிரகூட அமோகவர்ஷன், பல்லவருக்கு அடங்கி திரைசெலுத்துவதாய் ஒப்புக்கொண்டார்.  மேலும் தனது மகள்.  சங்கா என்பவரை  நந்திவர்மனுக்கு திருமணமும் செய்து கொடுத்தார்.  நந்திவர்மனுக்கும்,  இராஷ்டிரகூட இளவரசி சங்காவிற்கும் பிறந்தவர்தான் நிருதுபங்கவர்மன்.  இச்செய்தியை பாகூர்ச் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன.  இவர்,  இலக்குமியை போன்று  பேரழகு வாய்ந்தவர்,  சிறந்த மதிநுட்பம் உடையவர், பெற்றத் தாயைப்போல் தன் குடிமக்களை நேசித்தார் என பர்கூர் செப்பேடுகள் பதிவு செய்கின்றன. 
(Ep. Of. Ind. Vol 18 pa.13) 


நந்திவர்மனின் பார்வை தெற்கே பாண்டியர் பக்கம்  திரும்பியது.  வரகுணபாண்டியர் காலத்தில் சோழம் முழுவதையும் பாண்டியர் கைப்பற்றி இருந்தனர் என்பது ஏற்கனவே நாம் அறிந்த ஒன்று. தொண்டைமண்டல எல்லை வரை பாண்டியர்கள் முன்னேறி இருந்தனர்.  இராஷ்டிரகூடர் மற்றும் கங்கர்களை சேர்த்துக்கொண்ட மூன்றாம் நந்திவர்மன்  பெரும்படையுடன் பாண்டியர்களை எதிர்க்கப் புறப்பட்டார். 

பாண்டியர் சைன்யமும் பல்வர்களை ஒரு கை பார்க்கப்  புறப்பட்டது.  பாண்டியமன்னர் சீவமாறன் சீவல்லபன் தலைமை தாங்கினார். 


சீவமாறன் (ஸ்ரீமாறன்) சீவல்லபன் (கி.பி.830 – 862): 

முதலாம் வரகுணபாண்டியர்க்கு பிறகு பாண்டிய அரசன் ஆனார். ஏகவீரன், அவனிபசேகரன் என்னும் சிறப்பு பெயர்களும் இவருக்குண்டு.  சித்தன்னவாசலில் உள்ள குகைக்கோவில் கல்வெட்டு இவரை,
 பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுதல் - ஆர்கெழு
 வைவேல் அவனிபசேகரன் - சீர்கெழுசெங்கோல்
 சீவல்லபன்.  என்கிறது ( ins 368 of 1904).




பல்லவன் நந்திவர்மன் தலைமையில், பாண்டியத்தை நோக்கி பெரும்படை வரும் செய்தி பாண்டியனை எட்டியது. பல்லவர்களை எதிர்க்க பாண்டியர்களும் தயாரானர்கள். பாண்டியத்தின் கீழ் சிற்றரசாய் இருந்த சோழர்களும் சேரர்களும், பாண்டியர் பக்கம் இருந்தனர்.  பாண்டியரும் பல்லவரும்  நேருக்கு நேர் சந்தித்த களம்தான் தெள்ளாறு. இங்கு நாம் ஒரு முக்கிய விடயத்தை அவதானிக்க வேண்டும். நடைபெற்ற தெள்ளாற்றுப் போரில், பழயாறை சிற்றரசான சோழர்கள், பாண்டியர் பக்கம் நின்று பல்லவர்களை எதிர்த்தனர்.


தெள்ளாற்றுப் போர்: 

இன்றைய தென்னாற்காடு மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள தெள்ளாறு என்னும் இடத்தில்.  பாண்டிய பல்லவப் படைகள் நேருக்குநேர் மோதின. மிக கடும் யுத்தம்.  பல்லவர்களுக்கே வெற்றி. போரில் தோற்ற பாண்டியர்கள் பின்வாங்கினர்.  பல்லவன் மூன்றாம் நந்திவர்மன் வெற்றி பெறுகிறான். தெள்ளாறெரிந்த நந்திவர்மன்என்னும் பட்டம் பெறுகிறான்.  பல்லவரது வெற்றியை நந்திகலம்பகம் பலவாறு புகழ்கிறது. 

பாண்டியர்களை சோழநாட்டின் எல்லைவரை துரத்தியது பல்லவர்படை. சோழநாட்டின் பெரும்பகுதி பல்லவர் வசம் ஆனது.  திருச்சி சென்னிவாய்க்கால் கல்வெட்டு தெள்ளாறெரிநது ராஜ்யம் கொண்ட நந்தி போத்தரையர் என்கிறது ( S.I.I . VOI 12 NO 56). 



சோழம் மீண்டும் பல்லவர் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.  தஞ்சையை பல்லவர்களுக்கு கீழ் முத்தரையரும்,  குடந்தையை சோழர்களும் ஆண்டனர். தெள்ளாற்றுப்போர் கி.பி 854 ஆம் ஆண்டு நடந்திருக்கலாம். 


குடமூக்குப்போர்: 

பல்லவர்களிடம் கடும்தோல்வியுற்ற பாண்டிய அரசன் சீவமாறன்,  மீண்டும் பெரும்படை திரட்டி பல்லவர்களை எதிர்க்க புறப்பட்டார்.  கங்கர் மற்றும் சோழப்படைகளுடன் பல்லவர்களும் தயாரானர்கள். இம்முறை சோழர்கள் பல்லவர் பக்கம் நின்று *பாண்டியர்களை எதிர்த்தனர்.*

குடமூக்கு (கும்பகோணம்) என்னும் இடத்தில் பல்லவ பாண்டியர்கள் மீண்டும் நேருக்கு நேர் மோதினார்கள்.  இம்முறை பல்லவர்கள் சிதறி ஓட, பாண்டியர்கள் வெற்றிபெற்றனர். குடமூக்குப்போரில் பாண்டியன் வெற்றிபெற்றதை சின்னமனூர் செப்பேடுகள் இவ்வாறு கூறுகிறது.
கொங்கலரும் பொழில் குடமூக்கில் போர்குறித்து
வந்தெதிர்த்த கங்க பல்லவ சோழ காளிங்க 
மாகதாதிகள் குருதிப் பெரும்புணல் குளிப்பக்
கூர்வெங்கணைத் தொடை நெகிழ்த்து. 

ஆக குடமூக்குப்போரில் பாண்டியர்களே வெற்றிபெற்றனர்.

இந்தப் போர் பல்லவ இளவரசன் நந்திவர்மனின் மகன் நிருதுபங்கன் தலைமையில் நடைபெற்றதாய் தெரிகிறது.  பல்லவர்களுக்கு ஏற்பட்ட பின்டவை, நிருதுபங்கன் வெளியிட்ட பாகூர் பட்டயங்களும்
உறுதி செய்கின்றன. 

இவ்வாறாக பாண்டியரும், பல்லவரும் பலமுறை களம் கண்டனர். தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர். இருவரது ஆதிக்கத்திற்கும் முடிவு ஒன்று நெருங்கி விட்டதை இருவருமே அறிந்திருக்கவில்லை. இனி நாம் தொடரப்போகும் வரலாறு சற்று குழப்பமானது.  

மூன்றாம் நந்திவர்மனுக்கு பிறகும்,  பாண்டியன் சீவபல்லபனுக்கு பிறகும் வாரிசுரிமை போட்டியில் இரு பெரு அரசுகளும் சிக்கித் சிதறி இருக்க வேண்டும். கிடைத்திருக்கும் சொற்ப சான்றுகளைக் கொண்டு ஒரு வாறு தெளிவாக யூகிக்கலாம். வரும் காலங்களில் மேலும் சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில்
இந்த யூகங்கள் மாறலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். . . 
பல்லவ  பாண்டிய பேரரசுகளுக்கு இடையில் ஏற்பட்ட இந்த சிதறலின் முடிவுதான் பிற்காலச் சோழத்தின் ஆரம்பம் ஆனது. 
பல்லவ வாரிசுகள் நிருதுபங்கன் மற்றும் அபராஜிதன் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்; 
பாண்டிய வாரிசுகள் இரண்டாம் வரகுணபாண்டியன் மற்றும் மாயா பாண்டியன் இவர்களுக்கு இடையே
ஏற்பட்ட மோதல்;
ஒட்டுமொத்த மோதல்களுக்கும் தீர்வு கண்ட இடம்தான்
திருப்புறம்பியம்  . . .   

ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகாலம், இருட்டில் இருந்த சோழர்களின் பொழுது விடியத்தொடங்கியது.


[தொடரும்]

தேமொழி

unread,
Sep 10, 2017, 12:22:03 AM9/10/17
to மின்தமிழ்


சோழர் சரித்திரத் தேடல் ...
~ மா.  மாரிராஜன் ~

(10)


ஏறக்குறைய கி.பி மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர்களிடம் வீழ்ந்த சோழர்கள், ஆறாம் நூற்றாண்டுமுதல்  பல்லவர்களின் ஆதிக்கத்திலும், பாண்டியர்களின் ஆதிக்கத்திலும் தங்களை இருப்பை தக்கவைத்தனர். 

எத்தனை போர்கள்,  போராட்டங்கள்,  பலவித இன்னல்களுக்கிடையேயும் சோழத்தை நிலை நிறுத்தி பாதுகாத்து வந்தனர். தங்களுக்கான காலம் வராதா? என்று ஒவ்வொறு நாளும் ஏங்கித் தவித்தனர்.  

சோழர்களுக்கான அந்த நாளும் வந்தது. 

அதற்கு முன்பாக பல்லவ பாண்டிய பேரரசுகளுக்கிடையே ஏற்பட்ட சிதறல்களை நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது. 

பல்லவச் சிதறல்: 
மூன்றாம் நந்திவர்மனுக்கு  இரண்டு வாரிசுகள்.  நிருதுபங்கன்.  மற்றும் கம்பவர்மன். இவர்கள் இருவரும் பல்லவ ராஜ்யத்தை ஆண்டார்களா  என்பது ஒரு புதிர்.  இவர்கள் இருவரின் கல்வெட்டுகளும், ஒரே நேரத்தில் பல்லவத்தின் இரு பகுதிகளிலும் கிடைக்கிறது.  அப்படியானால் பல்லவதேசத்தை இருவரும் பங்கிட்டு ஆட்சி செய்திருக்கலாம் என்னும் யூகம் நிலைநிற்கிறது. கம்பவர்மனுக்கும், கங்க இளவரசி ஒருவருக்கும் பிறந்தவரே அபராஜிதன் என்பது சமீபத்தில் கண்டறியப்பட்ட திருவிந்தளூர் செப்பேடு மூலம் தெரியவருகிறது.  தற்காலிகமாக கம்பவர்மனையும், அபராஜிதனையும் தவிர்த்துவிட்டு, நிருதுபங்கன் பல்லவ அரசன் என்பதாக நினைவில் நிறுத்துவோம். 

பாண்டியச் சிதறல்:
பல்லவர்களுக்கு கடும் சவாலாய் இருந்த பாண்டியன் சீவமாறன்  சீவல்லபன் பற்றி கடந்த பதிவில் நாம் அறிந்திருந்தோம். இப்பாண்டியன் தனது ஆட்சி காலத்தில் இலங்கையின் மீது படையெடுத்தார். அப்போதைய இலங்கை அரசர் முதல் சேனன் ( கி.பி.831 - 851).  இவரது காலத்தில் பாண்டியப்படை ஈழத்தை தாக்கியது. இலங்கையை சூறையாடி செல்வங்கள் அனைத்தையும் பாண்டியர்கள் கவர்ந்து சென்றனர் என இலங்கையின் மகாவம்சம் கூறுகிறது.  பாண்டியனது இலங்கை வெற்றியை சின்னமனூர் செப்பேடுகளும், குரை கடலீலங் கொண்டும் என்னும் செய்தியின் மூலம் உறுதி செய்கிறது.

சில ஆண்டுகளுக்கு பின் சீவல்லபனின் தயாதி ஒருவரான மாயபாண்டியன் என்பவர் பாண்டிய வாரிசுரிமை பிரச்சனை எழுப்பினார்.  இப்போது இலங்கை அரசர் இரண்டாம் சேனன்.  இவரிடம் உதவிகோரினார் மாயபாண்டியன்.  ஏற்கனவே பாண்டியர்களின் மேல் கடும்கோபத்தில் இருந்த இலங்கை அரசன் பெரும்படை ஒன்றை  மாயபாண்டியனுக்கு ஆதரவாக அனுப்பினார். 

நடைபெற்ற கடும்போரில், பாண்டியன் சீவல்லபன் இறந்திருக்க வேண்டும்.  இதை பாண்டியச் செப்பேடுகள், "பேராற்றல் காட்டி போர்புரிந்து போர்க்களத்தில்  உயிர்துறந்தான்"  என்கிறது. இந்நிகழ்வு கி.பி.860 ல் நடைபெற்று இருக்கவேண்டும். இதை மகாவம்ச குறிப்புகளும், ஐவர்மலைக் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன. 

ஆக,  இலங்கை அரசன் உதவியுடன் மாயபாண்டியன் பாண்டிய அரசனாகும் சூழல் ஏற்பட்டது.  சீவல்லபனுடைய முதல் மகன் இரண்டாம் வரகுண பாண்டியன்.  தனது உரிமையான பாண்டியதேசத்தை மீட்டுத்தருமாறு பல்லவன் நிருதுபங்கவர்மனுக்கு செய்தி அனுப்புகிறார்.  நிருதுபங்கனும் பாண்டியனின் கோரிக்கையை ஏற்று, பல்லவப் படையை பாண்டியனுக்கு ஆதரவாக அனுப்புகிறார்.  பல்லவப் படைகளும் பாண்டியனுக்கு ஆதரவாகப் போரிட்டு, மாயபாண்டியனை வீழ்த்தி, இரண்டாம் வரகுணபாண்டியனின்  பாண்டிய அரசுரிமையை மீட்டுத்தந்தது.  சடையவர்மன் என்னும் பட்டத்துடன் இரண்டாம் வரகுணபாண்டியன் பாண்டிய அரசனாகிறார்.  

பழனி அருகே உள்ள ஐவர் மலை எனப்படும் சமணர் கோவிலில், வரகுணபாண்டியரின் எட்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு, சகம் 792 என்கிறது.  அதாவது,  கி.பி.870.  ( சகம் +78-- பொதுயுகம்)  (Ins 705 of 1905).




ஆக,  இரண்டாம்  வரகுணபாண்டியன் பதவிக்கு வந்த ஆண்டு ( 870 - 8)  கி.பி 862 என்பது உறுதியாகிறது. 

வரும்வழியில், கும்பகோணம் அரிசிலாற்றங்கரையில் பல்லவர்களை சோழர்கள் எதிர்த்தனர்.  கடும் போர். பல்லவர்களே வென்றனர்.  தோற்ற சோழர்கள் பின்வாங்கினார்கள்.  இந்த சோழமன்னனின் பெயர்தான் பிற்கால சோழத்தை ஸ்தாபித்த விஜயாலயன்.  மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளையும், நிருதுபங்கன் வெளியிட்ட பாகூர் செப்பேடுகள் உறுதிசெய்கிறது. 

எவருடைய அருளால் பாண்டியர் சேனை  வெற்றிபெற்றதோ அந்த அரசன் உருவாக்கிய நெருப்பு அரிசில் ஆற்றின் மறுகரையில்  எதிரிகளின் கூட்டத்தை எரித்தது. ஆக, பாண்டியனுக்கு பல்லவன் உதவியிருக்க வேண்டும். இதை மெய்பிக்க மேலும் ஒரு சான்றுள்ளது. 

கடலூர் வீரட்டாணேஷ்வரர் கோவில் கல்வெட்டு.  நிருதுபங்கனது 18 வது  ஆட்சியாண்டில், கோவிலுக்கு வரகுணபாண்டியன் 570 கழஞ்சு  பொன் நிவந்தம் அளிக்கிறார்.  ஒரே கல்வெட்டில் இரண்டு அரசர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன  ( Ar. No 360 of 1921) .




பல்லவன் நிருதுபங்கனின் ஆட்சியாண்டில், வரகுணபாண்டியன் நிவந்தம் அளிக்கிறார்.  ஆக, பல்லவன் நிருதுபங்கனும், பாண்டியன் வரகுணரும் ஒத்த நண்பர்களாயிருந்தனர் என்பது தெளிவாகிறது. அதே சமயம் பல்லவன் நிருதுபங்கன் மீது சோழன் விஜயாலயர் கடும் கோபத்தில் இருந்தார் என்பதையும் நாம் யூகிக்கவேண்டும். 

சில ஆண்டுகளே கழிந்தன. 

பல்லவப் பேரரசிலும் ஒரு தயாதிப் பிரச்சனை உருவானது.  நிருதுபங்கவர்மனுக்கும்,  கம்பவர்மனின் மகனான அபராஜிதவர்மனுக்கும் வாரிசுரிமை போட்டி எழும்பியது.  மோதல் வெடித்தது.   மோதலுக்குத் தீர்வு காண வழக்கம்போல் களம் காண தீர்மானித்தார்கள். நிருதுபங்கவர்மனுக்கு ஆதரவாக அவனோடு நல்லுறவில் இருந்த பாண்டிய அரசன் வரகுணபாண்டியன் தயாரானார்.  தஞ்சையை ஆண்ட சிற்றரசான முத்தரையர்களும், நிருதுபங்கனை ஆதரித்தனர்.  நிருதுபங்கவர்மன் மற்றும் வரகுணபாண்டியன் தலைமையில் ஒரு பெரும் படை தயாரானது. அபராஜிதவர்மனை, கங்க மன்னர் முதலாம் பிருத்வி ஆதரித்தார்.  தனக்கு ஆதரவு தருமாறு சோழர்களுக்கு செய்தி அனுப்பினார் அபராஜிதன்.  பெருமிதத்துடன் அந்த செய்தியை எதிர்கொண்டனர், சோழ அரசர்களான, விஜயாலரும் அவர் மைந்தன் ஆதித்தரும்.

ஆனால், விஜயாலயர் ஒரு நிபந்தனை ஒன்றை முன்வைத்தார்.  போரில் வெற்றி பெற்றால், சோழத்தை சுதந்திர தேசமாக அறிவிக்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனை.  அபராஜிதரும் விஜயாலரின் நிபந்தனையை ஏற்றார் .   சோழர்கள் அபராஜிதன் பக்கம் நின்று களம் காண தயாரானார்கள். 
நிருதுபங்கனும்,  வரகுணபாண்டியரும் ஒரு பக்கம்,
அபராஜிதன், கங்கமன்னர் பிருத்வீ, விஜயாலர் மற்றும்  ஆதித்தர் ஒரு பக்கம். 

களம் காண தீர்மானிக்கப்பட்ட இடம்தான்...  திருப்புறம்பியம்...

தமிழகத்தின் இனி வரும் வரலாற்று நிகழ்வுகளை முடிவு செய்ய, இரு பெரும் படைகளும் அங்கேதான் அணிவகுத்தனர். முடிவு எப்படி இருப்பினும் எங்களுக்கு ஆனந்த  கொண்டாட்டமே என நினைத்தாவாறு, வானில் வட்டமடித்தன பிணம் தின்னி கழுகுகள்.  

அகன்று, விரிந்து, பரந்த அந்த வறண்டநிலம், இனிவரும் நாட்களில் உதிரம் படிந்த தோப்பு என அழைக்கப்படும். 

வெட்டுண்டு விழும் வீரர்களின் நினைவாக எழுப்பபடும் நடுகற்கள்   இனி அப்பகுதி முழுவதும் பரந்து நிறைந்து இருக்கும். 

சில வருடங்களுக்காவது இந்த நிலப்பகுதி முழுவதும் குருதிக்கறைபடிந்ததாகவே இருக்கும். 

பல வருடங்களுக்குப் பிறகும் நிலத்தில் புதைந்த  எலும்புத்துண்டுகள் அவ்வப்போது வெளிவரும். 

இதோ.  பொழுதும் விடிகிறது.  ஆதவனும் வெளிப்பட, சங்கொலியும் எழும்ப ... ஆரம்பம் ஆனது.  

பூமி பிளந்து ஒரு பிரளயம் வந்தது போல் நிலம் அதிர்ந்தது.  புரவி மற்றும் யானைகளின் நகர்வால் எழும்பிய புழுதி மண்டலம், வானத்தை நோக்கி நகர்ந்தது. வாட்கள் மோத அந்த புழுதியின் ஊடே ஒரு மின்னல் கீற்று.  வில்லில் நானேற்றும் ஓசை  இடியாய் இடித்தது. குருதி மழை கொட்டத் தொடங்கியது. அந்தரத்தில் பறந்தன வெட்டுண்ட உறுப்புகள்.  மனித மற்றும் மிருகங்களின் ஓலக்குரல். சடுதியில் சபிக்கப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறின. 

இதுவரை ஆதிஸ்வரர் என அழைக்கப்பட்ட திருப்புறம்பியத்து இறைவன், இனி வரும் நாட்களில்ந டந்த நிகழ்வுகளுக்கு சாட்சியாய் ...சாட்சிநாதர் என அழைக்கப்பட இருக்கிறார். 

[தொடரும்]

மா.  மாரிராஜன்- marir...@gmail.com

தேமொழி

unread,
Sep 10, 2017, 11:09:13 PM9/10/17
to மின்தமிழ்


சோழர் சரித்திரத் தேடல் ...
~ மா.  மாரிராஜன் ~

(11)


திருப்புறம்பியம். . . 
பிற்காலத் தமிழக வரலாற்றில், குறிப்பாக சோழவரலாற்றில்,  தவிர்க்கவே முடியாத ஒரு பெயர்தான்,  திருப்புறம்பியம். 

எத்தனையோ இடங்கள்.  எண்ணிலடங்காப் போர்கள். இருந்தாலும், திருப்புறம்பியம் போர் ஒரு தனித்துவமான அடையாளத்தைப் பெறுகிறது. ஏறக்குறைய இனிவரும் நானூறு ஆண்டு காலம், தெற்காசியா வரை தங்கள் ஆதிக்கத்தை செலுத்திய சோழர்கள்,  தங்களை ஸ்தாபித்த இடம்தான், பிற்கால சோழத்தின் அஸ்திவாரம்தான் திருப்புறம்பியம். 

கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் ஒரு அழகான அமைதியான கிராமம்தான் திரும்புறம்பியம்.  இந்த கிராமத்தில் இன்று உதிரத்தோப்பு என்று அழைக்கப்படும் இடத்தில்தான்  அந்த இரு பெரும் படைகளும் அணிவகுத்திருந்தன. நாம் இப்போது திரும்புறம்பியம் ஊர் பற்றிய ஒரு சிறு ஸ்தல வரலாறுஒன்றைக் காண இருக்கிறோம். 

என்னது? ஸ்தல வரலாறா? சம்பந்தமே இல்லாமல் அது எதற்கு இப்போ? 
சம்பந்தம் இருக்கிறது.  இயற்கையாய் அமைந்த ஒரு தொடர்பு. 

ஒரு முறை ஊழிக்காலம் தோன்றி, எங்கும் பிரளய பெருவெள்ளம்.  இந்த ஊரை மட்டும் அணுகாமல் வெளியே நின்றுவிட்டதாம்.  பிரளயத்திற்கு புறம்பாய் இருந்ததால், திருப்புறம்பியம் என்னும் பெயர் பெற்றது. ஆனால், இப்போது இரு பெரும் படைகள் ஒன்றோடொன்று பொருதுவதால் ஏற்பட இருக்கும் பிரளயத்தின்  மையமே இவ்வூர்தான்.  இவ்வூரின் மையத்தில் அமைந்த சாட்சிநாதர் ஆலயம். ஆலயத்தினுள் உள்ளே  இருக்கும் விநாயகர் பெயர்தான் பிரளயம் காத்த விநாயகர். பிரளயம் ஏற்பட்டபோது பொங்கி வந்த கடல் நீரை இத்தளத்தில் உள்ள கிணற்றில் அடங்கி விடும்படி  விநாயகர் செய்தாராம்.  அதனால் தான் இத்தல விநாயகருக்கு பிரளயம் காத்த விநாயகர் எனப் பெயர் வந்ததாம். 



ஆனால்,  இதோ இங்கே, மனிதர்கள் மற்றும் மிருகங்களின் செங்குருதி வெள்ளம் பெருக்கெடுத்து ஓட இருக்கிறது. இரத்தினவல்லி என்னும் வணிகர் குலப் பெண் ஒருவர் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட ஒருவருடன் இத்த இறைவனை தரிசிக்க வந்தார் திருமணத்திற்கு முன்பே  வந்த இடத்தில் பாம்பு தீண்டி இறந்து விடுகிறார் அவரது மாப்பிள்ளை.  கதறியழுதாள் அந்தப்கன்னிப் பெண்.  அதே சமயம் அவ்வூருக்கு வருகை தந்திருந்த திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றை பாடி, இறந்தவரை உயிர்த்தெழச் செய்தார்.  இறைவனை சாட்சியாக கொண்டு, அப்போதே அங்கேயே அவர்களின் திருமணம் நடைபெற்றது.  அன்று முதல் இறைவன் சாட்சிநாதர் என அழைக்கப்பட்டார். 

ஆனால், இதோ,  துண்டிக்கப்பட்ட உடல்கள் குன்றுகளாய் குவிகின்றன. இதற்கும் சாட்சிநாதர் சாட்சியாகத்தான் இருக்கிறார். போர் மிக உக்ரமாக நடைபெற்று இருக்கிறது. திரும்புறம்பியம் போர் பற்றி பல வரலாற்று ஆசிரியர்களும் மிக பிரம்மாண்டாமாய் சிலாகித்து எழுதுகின்றனர். 

பல நாட்கள் நடந்தது.  வெட்டு விழுந்த உயிரற்ற உடல்கள் குன்றுகளாய் குவிந்திருந்தன.  மீதம் உள்ளவர்கள் அந்த குன்றின் மீது ஏறி நின்று போர் புரிந்தார்கள்.  மரக்கிளைகளை ஒடித்தும், பெரும் கற்கள் கொண்டும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.  துண்டிக்கப்பட்டு கிடந்த யானையின் தந்தம், குதிரையின் கால்கள் இவற்றை பொறுக்கி கையிலெடுத்து ஆயுதங்களாக பயன் படுத்தினார்கள். இவர்கள் மேல் படிந்த குருதி வாசனை காத தூரத்திற்கு அப்பால் உள்ளவர்களாலும் நுகர முடிந்தது.  இன்னும்  இன்னும், பலவாறு இப்போரை பற்றி  வர்ணிக்கின்றனர் பல வரலாற்று ஆசிரியர்கள். ஒரு வழியாக அந்த கோர நிகழ்வு முடிவுக்கு வந்தது. கடும் போராட்டத்திற்குப் பிறகு சோழ, பல்லவ கூட்டணி வெற்றி பெற்றது. 

தோற்ற பாண்டிய மன்னனர்  வரகுணபாண்டியர் பின் வாங்கினார்.  ஆறாம் நூற்றாண்டு முதல் தங்களது ஆதிக்கத்தை தக்கவைத்த பாண்டியர்கள், இப்போருக்கு பின்னால் முற்றிலும் முடங்கினார்கள். ஆதித்தச் சோழர் மற்றும் அபராஜிதர் பக்கம் இருந்த கங்கமன்னன் பிருத்வீ,  அரும் பெரும் வீரச்செயல்கள் புரிந்து, வீர மரணம் அடைகிறார். 

நிருது பங்கனை பற்றிய சரியானத் தகவல் இல்லை. அபராஜித வர்மன் பல்லவ மன்னன் ஆகிறார்.  ஒப்புக்கொண்டவாறு சோழத்தை சுதந்திர தேசமாக அறிவிக்கிறார்.  விஜயாலர் மற்றும் ஆதித்தர் தலைமையில் பிற்கால சோழம் ஸ்தாபிக்கப்பட்டது. திருப்புயம் போரில், அபராஜிதனை வெற்றி பெறச் செய்த கங்கமன்னன் பிருத்வீ, போரில் இறக்கிறார். இதை உதயேந்திரம் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. 
 ( s.i i vol 2 no 76)


உதேயந்திரம் செப்பேடு  செய்யுள் 18.

ஸ்ரீபுறம்பிய மஹாஹவ மூர்தினி தீர பாண்ட்யேஸ்வரம் வரகுணம் ஸஹஸா விஜித்ய 
க்ருத்வா அர்த்த யுக்தம் அபராஜித ஸப்தம் 
ஆத்ம ப்ராண வ்யயேனே ஸீக்ருத  
த்ரித வம் ஜகாமா.


பெரும் வீரனான பிருத்வீ,  திருப்புறம்பியம் போரில், பாண்டியர் வரகுணரை வென்றான். அபாராஜிதரின் வெற்றியை உறுதி செய்து, வீர மரணம் அடைந்தான். போரில் இறந்த கங்கமன்னன் பிருத்வீயின் பள்ளிப்படை ஒன்று இன்றும் திரும்புறம்பியத்தில் இருப்பதாக நம்பப் படுகிறது. 



போர் நடந்த இடத்தை உதிரத்தோப்பு என்று இவ்வூர் மக்கள் அழைக்கின்றனர்.  இப்போர் நிகழ்வுகள் பற்றி இவ்வூர் மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.  திருப்புறம்பியத்திலுள்ள நடுகற்கோவில் ஒன்றை கச்சியாண்டவர் கோவில் ( காஞ்சியை ஆண்டவர்) என அழைக்கின்றனர். இது ஒரு சமாதி எனவும்,   இருட்டிய பிறகு நாங்கள் அங்கே செல்வதில்லை எனவும் இவ்வூர் மக்கள் கூறுவதாக, செய்தி சேகரிக்கச் சென்ற நம் நண்பர் திரு. பார்த்தி கூறுகிறார். 



இவ்வூரில் காணும் இடமெல்லாம் நடுகற்கள்.  இப்பகுதி முழுவதும் ஒரு அமானுஷ்ய அமைதி நிலவுகிறது.  உதிரத்தோப்பு பகுதியில் நாம் நுழைந்ததும் நம் கண் முன் போர்க்கள காட்சிகள் நிழலாடுகின்றன. ஆதிஸ்வரர் என அழைக்கப்பட் சாட்சிநாதர் கோவிலை,  அரும்பெரும் சிற்பங்களுடன் அழகிய கற்றளியாக்கி  அதற்கு  ஆதித்தேச்சுரம்என்னும் பெயரை ஏற்படுத்தினார் முதலாம் ஆதித்தர். 



வரலாற்று சிறப்புமிக்க இப்போர் கி.பி 880 ஆண்டு நடைபெற்று இருக்க வேண்டும்.  கி.பி 879 வரை கங்க மன்னன் பிருத்வியின் கல்வெட்டு கிடைக்கிறது. ஆகவே இப்போர் 879 - 880 என்ற கால அளவு பொருத்தமாகிறது. மேலும் ஒரு சான்றாக. . . 

இராஜகேசரி முதலாம் ஆதித்தரின் 24ம் ஆட்சியாண்டு கல்வெட்டு தக்கோலத்தில் உள்ளது.  இக்கல்வெட்டில் ஒரு சூரியகிரகணம் பற்றிய ஒரு தகவல் உள்ளது.  இந்த வானியல் குறிப்புகளை நன்கு ஆய்வு செய்த ஆய்வாளர்கள், இக்கல்வெட்டின்  காலம் கி.பி. 894 - 895 என்பதாக முடிவு செய்கிறார்கள். இக்காலம் ஆதித்தரின் 24 ம் ஆட்சியாண்டு என்பதால், அவரது ஆரம்ப ஆட்சியாண்டு கி.பி 870 - 871 என்பது உறுதியாகிறது. 

ஆதித்தரின் 10 ம் ஆட்சியாண்டு முதல் தஞ்சையில் அவரது கல்வெட்டுக்கள் கிடைப்பதால். கி.பி 881ல் சோழர்கள் சோழர்கள் தஞ்சையை கைப்பற்றி இருக்க வேண்டும்.  அதற்கு முந்தைய ஆண்டான கி.பி 880 ல் திருப்புறம்பியம் போர் நடைபெற்றிருக்க வேண்டும். இப்போரில் விஜயாலயர் பங்கேற்றாரா? என்பது குறித்து நேரடிச்சான்று இல்லை.  ஆனால் சோழத்தின் ஜீவிதப் போரில் அவர் பங்கெடுத்திருப்பார் என யூகிக்கலாம்.  தொன்னூற்றாரு போர்க்காயங்களை தன் உடம்பில் கொண்டவர் என கலிங்கத்துப்பரணி கூறுவது கவனிக்கத்தக்கது. 

திருப்புறம்பியம் போர் பற்றிய மேலும் பல விபரங்கள், அவசியமான சில ஐயங்கள், யார் யாருடன் கூட்டணி அமைத்து போரிட்டார்கள்,  சோழனும் பாண்டியனும் ஒன்று சேர்ந்தே பல்லவனை எதிர்த்தார்கள் என்று சர்ச்சையை கிளப்பும் திருத்தணி மற்றும் வேலஞ்சேரி செப்பேடுகள், விஜயாலயர் தஞ்சையை யாரிடமிருந்து கைப்பற்றினார்,  இது போன்ற விபரங்களை அடுத்த பகுதியில் விரிவாக பார்ப்போம். 

எது எப்படியோ. . .  திருப்புறம்பியத்தில்தான்  பிற்கால சோழ ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது என்பது சர்வ நிச்சயம். வித்திட்டவர் விஜயாலயர்,  நிலை நிறுத்தியவர் ஆதித்தர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 


[தொடரும்]

இன்றைய பதிவில் உதவி: புகைப்படங்கள் -  திரு. திருச்சி பார்த்தி.
மா.  மாரிராஜன்- marirajan93@gmail.com

தேமொழி

unread,
Sep 18, 2017, 10:34:43 PM9/18/17
to mintamil, marir...@gmail.com


சோழர் சரித்திரத் தேடல் ...
~ மா.  மாரிராஜன் ~

(12)


திருப்புறம்பியம் போர் . . .



விஜயாலர், ஆதித்தர், பல்லவ அபராஜிதர் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.  பல்லவ நிருதுபங்கன், வரகுணபாண்டியன் கூட்டணி தோல்வியுற்றது. வரகுணபாண்டியர் பின்வாங்கினார். நடைபெற்ற இப்போர் பாண்டியர்களுக்குப் பெருத்த இழப்பை தந்திருக்க வேண்டும்.  ஆறாம் நூற்றாண்டு முதல் ஆதிக்கம் செலுத்திய பாண்டியர்கள், இதன் பிறகு தங்கள் இருப்பை தக்கவைக்க இயலவில்லை. நிருதுபங்கவர்மனை பற்றிய தகவல் ஏதுமில்லை. போரில் வெற்றிபெற்ற அபராஜிதன் சோழத்தை சுதந்திர தேசமாக அறிவித்தார்.  சோழம் ஸ்தாபிக்கப்பட்டது. குடந்தை பகுதியில் ஆதித்தர் கல்வெட்டுகளும், தொண்டை மண்டலத்தில் அபராஜிதனது கல்வெட்டுகளும் கிடைப்பதால், இச்செய்தி உறுதியாகிறது. 

திருப்புறம்பியம் போர் பற்றிய சில ஐயங்கள் . . . சில சர்ச்சைகள் . . . 
திருத்தணியை அடுத்துள்ள ஒரு ஊர் வேளஞ்சேரி.  இவ்வூரில் உள்ள ஒரு பள்ளியில்  6.10.1977 அன்று இரண்டு செப்பேட்டுத்தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. வேளஞ்சேரி செப்பேடு பராந்தகர் காலம்.  திருத்தணி செப்பேடு பல்லவன் அபராஜிதன் வெளியிட்டதாக ஆய்வார்கள் உறுதி செய்தனர். அபராஜிதனின் திருத்தணி செப்பேடுதான் சில சர்ச்சைகளை கிளப்பியது.

மூன்றாம் நந்திவர்மனின் மகன் கம்பவர்மன். கம்பவர்மனுக்கும், கங்க இளவரசி விஜயா என்பவருக்கும் பிறந்தவரே அபராஜிதவர்மன்.  இவர்கள், நிருபதுங்கனிடமிருந்து பல்லவ ராஜ்யத்தைவென்று, பல்லவ அரசனாக அபராஜிதன் இருந்தான் என அச்செப்பேடு கூறுகிறது.  திருப்புயம் போரில் அபராஜிதன் சோழ பாண்டியர்களை வென்றதாக அச்செப்பேடு தகவல் தருவதாக சில ஆய்வாளர்கள் பதிவுசெய்கின்றனர். 

அதாவது . . .  பாண்டியனும் சோழனும் ஒன்று சேர்ந்தே பல்லவன் அபராஜிதனை எதிர்த்தார்கள். இவ்வாறாக ஒரு சிலர் கருத்திட்டார்கள் (இச்செப்பேட்டுக் குறிப்பை இணைப்பில் உள்ள சிறு கோப்பில்  காண்க). இதை ஒரு சில ஆய்வாளர்கள்;  மேற்கூறியவாறு இருப்பதற்கு சாத்தியங்கள் குறைவு. தெள்ளாற்றுப் போரில் மூன்றாம் நந்திவர்மனை, சோழனும் பாண்டியனும் ஒன்று சேர்ந்து எதிர்த்தார்கள். இதையே அச்செப்பேடு கூறுகிறது என்பார்கள். 

திருப்புறம்பியம் போரில் சோழனும், பாண்டியனும் எதிரெதிர் அணியில் இருந்தார்கள் என்பது உறுதி. இது சில ஆய்வாளர்களின் முடிவு. ஆய்வுகள் தொடர்கின்றன.  அதிகபட்ச சான்றுகள் கிடைத்தால் சில முடிவுகள் மாறவும்கூடும். 

எது எப்படியோ.  யார் யாருடன் அணி சேர்ந்தார்களோ.  திருப்புறம்பியம் போர் சோழவரலாற்றில் ஒரு திருப்புமுனை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அபராஜிதனிடமிருந்து குடந்தை மற்றும் பழயாறையை தன்வயப்படுத்திய விஜயாலரும், ஆதித்தரும் சற்றும் ஓய்வெடுக்கவில்லை.  தஞ்சையைக் குறிவைத்தனர். தஞ்சையை ஆண்டுகொண்டிருந்த முத்தரையர்களை வீழ்த்தி, தஞ்சையைக் கைப்பற்றினர்.

முத்தரையர்கள்:
கி.பி ஆறாம் நூற்றாண்டுமுதல் சோழத்சத்தின் ஆற்றங்கரை பகுதியை ஆதிக்கம் செலுத்தியவர்கள் முத்தரையர்கள்.  இவர்கள் பல்லவர்களின் பட்டப் பெயர்களான பெரும்பிடுகு, விடேல் விடுகு என்னும் பட்டங்களை கொண்டிருந்தனர்.  பெரும்பிடுகு, விடேல் விடுகு என்னும் பட்டங்களுடன் தங்களை அழைத்துக்கொண்டதை செந்தலை கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. 



புதுக்கோட்டை நார்த்தாமலை, தற்போது விஜயாலய சோழீஸ்வரம் என்னும் அழைக்கப்படும் கற்றளி மலையை, இளங்கோவதி முத்தரையர் எடுத்ததாக  அங்குள்ள கல்வெட்டு உறுதி செய்கிறது.  சூழலுக்குத் தகுந்தாற் போல் பல்லவர் மற்றும்  பாண்டியர்களை மாறி மாறி ஆதரித்தனர். 




தந்திவர்மன் கீழ் முத்தரையர்கள் நிவந்தம் No 88 of 1910

பாண்டியன் மாறஞ்சடையன் கீழ் முத்தரையர்கள் No 380 of 1930 - 31 

நார்த்தாமலை கல்வெட்டு No 365 of 1904




நிருதுபங்கவர்மனின் 7ம் ஆட்சியாண்டில் முத்தரையர்கள் நிவந்தம். இக்கல்வெட்டின் காலம் ( 862 + 7 ) 869.

செந்தலை கல்வெட்டுகள் இவர்களை, தஞ்சை கோ ( தஞ்சை அரசன்)  என அழைப்பதால், இவர்கள் தஞ்சையை ஆண்டது தெளிவாகிறது.  Ep.of. ind. Pa. 142, 143, 144.

திருப்புறம்பியம் போரில் வெற்றிப் பெற்ற விஜயாலர்  தஞ்சையை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றினார் என்பதும் உறுதியாகிறது.

இதன்பிறகும் முத்தரையர்கள், சோழர்களின் கீழ் சிற்றரசாகவே தொடர்ந்தனர்.  Ins 314 of 1904.

குடுமியான்மலைக் கல்வெட்டு.
முதலாம் ஆதித்தரின் ஆட்சியில் முத்தரையர்கள் நிவந்தம் அளிக்கின்றனர். 

ஆக, திருப்புறம்பியம் போருக்கு முன்பும், பிறகும் தஞ்சையை முத்தரையர்களே ஆண்டுவந்தனர்.  ஆக, தஞ்சையை முத்தரையர்களிடமிருந்துதான்
சோழர்கள் கைப்பற்றினார்கள். 

சமீபத்தில் ( 2010) ல் நாகைமாவட்டம் கழுக்கானிமுட்டம், அதாவது திருவிந்தளூர் என்னும் இடத்தில்,  ஒரு செப்பேட்டுத் தொகுதி கண்டெடுக்கப்பட்டது. இது ஒரு சர்ச்சை செய்தியை தருகிறது.   கம்பவர்மனிடமிருந்து சோழர்கள் தஞ்சையை கைப்பற்றினார்கள் என்கிறது.  இதற்கு நேரடிச்சான்றுகள் ஏதுமில்லாததால், இத்தகவல் குறித்து மேலும் ஆய்வுகள் நடைபெறுகிறது. 




தஞ்சையை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றிய விஜயாலர், தங்கள் குல தெய்வமாம் நிசும்ப சூதனிக்கு ஆலயம் எடுத்தார் என்பது திருவலங்காடு செப்பேடு தரும் தகவலாகும். 




நிசும்பசூதனி ஆலயம் எது?  தஞ்சை கீழவாசல், பூமால் ராவுத்தர் தெருவில் உள்ள வடபத்திர காளியா? குயவர் தெருவில் உக்ரகாளியா? இன்றும் இது குறித்து சர்ச்சை. வடபத்திரகாளியே, நிசும்பசூதனி என்பதாக முடிவு எடுக்கப் பட்டுள்ளது. 




கன்னியாகுமரியில் உள்ள வீரராஜேந்திரரின் கல்வெட்டு, விஜயாலரின் பெயரை குறிப்பிட்டு, அவர் தஞ்சையை கைப்பற்றியதை பதிவு செய்கிறது.




அன்பில் செப்பேடு,  நரகாசுரனை அழித்த திருமால் போல் விஜயாலர் இருந்தார். அவருக்கு இராசகேசரியான ஆதித்தன் மகனாக பிறந்தார். 




ஆக பரகேசரியான விஜயாலரே, பிற்காலச் சோழர்களின் முதல் அரசன் ஆகிறார். 

விஜயாலரைப் பற்றிய செப்பேட்டுத் தகவல்கள்:
உதயந்திரம் செப்பேடு இவரை அரசர்களால் வணங்கப்பட்டவர் என்கிறது.  
வேளஞ்சேரி செப்பேடு இவரை ஒற்றியூரன் என்பவரின் மகன் என்கிறது. 
அன்பில் செப்பேடு இவரை, விஜயத்திற்கு (வெற்றி) ஆலயம் ( இருப்பிடம்)  என்பதால் விஜயாலர் எனப் பெயர் பெற்றார் என்கிறது.
திருவலங்காடு செப்பேடு  இவர் தஞ்சையை கைப்பற்றி நிசும்ப சூதனிக்கு ஆலயம் எடுத்ததை கூறுகிறது.
பெரிய லெய்டன் செப்பேடு இவரை அரசர்களால் வணங்கப்படும் முடியினைக் கொண்டவர் என்கிறது.
கரந்தை செப்பேடு  குன்றாத வலிமையுடையவர் என்கிறது.
எசாலசெப்பேடு  அளவிடமுடியாத புகழையுடையவர் என்கிறது.
சாரலச்செப்பேடு  தஞ்சையை கைப்பற்றியதை கூறுகிறது.

ஆக,  சோழத்தை ஸ்தாபித்த பிதாமகர் விஜயாலயர் கி.பி 881 ல் இறைவனடி சேர்ந்திருக்கலாம். 

நம்மிடையே ஒரு இயல்பான ஐயம் தோன்றுகிறதோ? விஜயாலயருக்கு ஏன் இவ்வளவு சிறப்பு? அவர் ஒரு போரில் கூட கலந்துகொண்டதற்கு நேரடிச் சான்று 
இல்லையே!?

நேரடிச்சான்று இல்லைதான்.  ஆனால் அவர் தன் வாழ்நாள்  முழுவதும் போர்க்களத்தில்தான் கழித்திருக்கிறார்.  வரலாறு அந்நிகழ்வுகளை பதிவு செய்யவில்லை? எப்படி பதிவுசெய்வது?  யார் பதிவு செய்வது.? சோழர்களுக்குத்தான் அந்த அதிகாரம் இல்லையே.  பதிவுசெய்யும் அந்த அதிகாரத்தை பெற்றார் விஜயாலயச்சோழர்.

மனுநீதிச்சோழன், சிபிசக்கரவர்த்தி, கரிகாலன், என்று ஆர்பாட்டமாக ஆரம்பித்த சோழவம்சம், மூன்றாம் நூற்றாண்டில் முற்றிலும் முடங்கியது.  ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகாலம், வரலாற்றிலிருந்து மறைந்தது. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை உள்ள எந்த சோழ அரசனின் பெயரையாவது 
நாம் அறிந்துள்ளோமா? பதிவு செய்யப்பட்டுள்ளதா? இல்லை என்பதுதான் நிதர்சனம். 

நாங்கள் அழிந்துவிடவில்லை. சூரியனின் வம்சம் நாங்கள்.  இதோ நாங்கள் மீண்டும் வந்து விட்டோம். என் பெயர் விஜயாலயர் என்று தன் பெயரை அதன் மூலம் சோழத்தை வரலாற்றில் அழுத்தமாக பதிவு செய்தவர்தான் விஜயாலயச்சோழர்.  அதனால்தான் வித்திட்ட விஜயாலயர் என அழைக்கப்படுகிறார். விஜயாலரின் மறைவுக்குப்பிறகு அவரது மைந்தன் ஆதித்தச் சோழரின் புலிப் பாய்ச்சல் தொடங்கியது.

இனி வரும் நானூறு ஆண்டுகாலம் . . .வரலாறு சோழர்கள் வசமாகியது. . .

எத்தனை நிகழ்வுகள்.  எண்ணிலடங்கா போர்கள்  மகத்தான சாதனைகள்.  நெஞ்சதிரும் இறப்புகள்  எழில் மிகு கற்றளிகள்.கற்பனைக்கெட்டா மர்மங்கள்  விண்முட்டும் கோபுரங்கள். வியப்பூட்டும் விரிசல்கள் அத்தனையும் பார்க்க இருக்கிறோம். . .



[தொடரும்]

இன்றைய பதிவில் உதவி: 
திருத்தணி செப்பேடுகள் தரும் விபரம்-PDF - திரு.முத்துக்குமார்.

மா.  மாரிராஜன்- marirajan93@gmail.com

______________________________________________________




திருப்புறம்பியம் போர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது, பொன்னியின் செல்வன்...

கல்கி அவர்களின் அந்த சிலிர்ப்பூட்டும் வர்ணனை ..

 யானை ஒன்று தாருங்கள்...

 யானைகள் அனைத்தும் மடிந்துவிட்டன..

 புரவி ஒன்றாவது தாருங்கள்..

 அனைத்தும் இறந்துவிட்டன..

 சுத்த சோழ மரக்குல வீரர்கள் மீதம் உள்ளீரா..

நூறுபேர் முன்னால் வந்தார்கள்..

என்னை தோளில் ஏற்றுங்கள்.. என்னை சுமப்பவர்
வீழ்ந்தால், பின்வருபவர் என்னை தோளில் ஏற்றுங்கள்..

கற்பனைதான் என்றாலும்,  இந்நிகழ்வை மறக்க இயலுமா..?
திருத்தனி செப்பேடுகள் தரும் விபரம்-சரித்திரத் தேடல்.pdf

தேமொழி

unread,
Sep 22, 2017, 12:20:58 AM9/22/17
to mintamil, Marirajan Rajan


சோழர் சரித்திரத் தேடல் ...
~ மா.  மாரிராஜன் ~

(13)

இராசகேசரி ஆதித்தன் ( 871 - 907)

திருப்புறம்பியம் போரில் வெற்றி பெற்று, தஞ்சையை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றிய, விஜயாலரும் அவர் மைந்தன் ஆதித்தரும், சோழத்தின் தலை நகராக தஞ்சையை உருவாக்கினர்.  விஜயாலரின் மறைவுக்குப் பிறகு, இராசகேசரி என்னும் பட்டத்துடன் ஆதித்தன் சோழ அரசனாகிறார்.  

கி.பி 871 ல் விஜயாலரால் இளவரசு பட்டம் பெற்ற ஆதித்தர்,  தனது 10 ஆம் ஆட்சியாண்டு தொடக்கத்தில் தஞ்சையை தலைநகராக்கினார்.  ஆதித்தரது 10 ம் ஆட்டிசியாண்டு முதல் தஞ்சையில் இவரது கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதாவது கி.பி 881 க்கு மேல்.  தொண்டைநாட்டில் பல்லவன் அபராஜிதனது கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 

சோழம் ஆதித்தரது தலமையிலும், பல்லவம் அபராஜிதனது தலமையிலும், நிலைக்கொண்டிருந்தது. ஒரு பத்தாண்டு காலம் அமைதியாக கழிந்தது.  ஒரு உறையில்  இரு கத்திகள் இருக்க முடியாது என்பது உண்மைதான்.  மீண்டும் ஆரம்பம் ஆனது ஒரு அதிகாரப் போட்டி! சோழப் பரப்பை விஸ்தரிக்க வேண்டும் என்று ஆதித்தர் நினைத்தாரோ,.  தன் முன்னோர்கள் காலம் போலவே, சோழம் தனக்கு கப்பம் கட்ட வேண்டும் என்று பல்லவ மன்னர் அபராஜிதர் நினைத்தாரோ. என்ன நடந்தது என்று யாரும் அறிவதற்கில்லை. 

பல்லவ  மன்னர் அபராஜிதருக்கும், சோழ மன்னர் ஆதித்தருக்கும்,  கருத்து பங்கம் ஏற்பட்டது.   வழக்கம் போல் இது மோதலில் முடிந்தது. ஆதித்தர் தலைமையில் சோழப் படைகளும், அபராஜிதர் தலமையில் பல்லவப் படைகளும், நேருக்கு நேர் களம் கண்டனர்.  இவ்வுத்தம் தொண்டைநாட்டில் நடைபெற்று இருக்க வேண்டும். மிக கடுமையானதாய் நடந்தது.  பல நாட்கள் நடைபெற்றது.  அப்படி ஒரு நாளில். .

ஆதித்தர் அமர்ந்திருந்த யானையும்,  அபராஜிதர் அமர்ந்திருந்த யானையும் நேருக்கு நேர் சந்தித்தன.  என்ன நடக்கப்போகிறது என்று ஒட்டுமொத்த களமும் உற்று நோக்கிய அந்த கணப்பொழுதில் தான் ஆதித்தர்,  அபராஜிதரை நெருங்கினார். நீண்டதொரு வாளை கரத்தில் ஏந்தியாவாறு ஆதித்தர்.  ஆதித்தரை சமாளிக்கும் முனைப்புடன் அபராஜிதர். இருபக்க களவீரர்களும் திக்  திக்  பரபரப்பில்.  நகரும் தன் யானையின் மேல், கரத்தில் வாளுடன் எழுந்து நின்றார் ஆதித்தர். ஆதித்தரின் நகர்வை யூகிக்கும் அவகாசம் அபராஜிதருக்கு கிடைக்கவில்லை.  மின்னலை விஞ்சும் வேகத்துடன் அபராஜிதரை நோக்கி ஆதித்தர் பாய்ந்தார். அதே வேகத்தில் அவரது வாளும் சுழன்றது.  என்ன நடந்தது என்பதை உணரும் முன்பே அபராஜிதரின் உடல் இரு துண்டானது.  ஆதித்தச் சோழரின் இந்த ஒற்றை வாள்வீச்சு சோழத்தின் வீரத்தை வரலாற்றில் அழுத்தமாக.ப் பதிவு செய்தது. 

கி.பி ஆறாம் நூற்றாண்டில் சிம்மவிஷ்ணுவால் உயிரூட்டப்பட்டு,  மகேந்திரவர்மானால் நிலைகொண்டு, நரசிம்மவர்மனால் வீறு கொண்ட பல்லவ ராஜ்யம், ஆதித்தரின் அந்த ஒற்றை வாள் வீச்சில் சரிந்தது.  நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட பல்ல சாம்ராஜ்யம் அபராஜிதனின் மறைவோடு முடிவுற்றது. இந்நிகழ்விற்குப் பிறகு பல்லவர்கள் எழுந்திருக்க  இயலவில்லை. தொண்டை நாட்டை முழுமையாக கைப்பற்றினார் ஆதித்தர்.  கன்னியாகுமரியில் உள்ள வீரராஜேந்திரரின் கல்வெட்டு இந்நிகழ்வை இவ்வாறே பதிவு செய்கிறது.

இராசகேசரியான ஆதித்தன், கோதண்டராமன் என்னும் பெயர் கொண்டான். யானைமேல் அமர்ந்து போர்புரிந்த அபராஜிதன் மீது பாய்ந்து அவனைக் கொன்றான். (Travancore archaeological series vol 3, no 34, vs 55)




ஆக,  ஆதித்தருக்கு கோதண்டராமன் என்னும் பெயர் இருந்தது தெரியவருகிறது.  இதே செய்தியை சாரளச் செப்பேடும் உறுதி செய்கிறது.
"சாரளச்செப்பேடு 55ம் செய்யுள். "ஆதித்திய வர்மா அபவத் அஸ்ய புத்ர. கோதண்டராமபி தயா ப்ரஸித்த உத்ப்லுத்ய மத்தத் விரதேந்த்ர ஸம்ஸ்தம் ஜகானய.   பல்லவ ராஜம் ஆஜௌ." 
கோதண்டராமன் என்னும் பெயரை உடைய ஆதித்தவர்மன்,  யானையின் மீது பாய்ந்து, பல்லவ அரசனை கொன்றான்.

திருவலங்காடு செப்பேடு.   பல்லவனை வென்று, தொண்டை நாட்டை சோழர்கள் கைப்பற்றியதை  பதிவு செய்கிறது.
திருவலங்காடு 49வது செய்யுள்.  "அபராஜிதம் அப்யஸௌ ரணே ஜிதவான் பல்லவம் உல்லஸத்பலம் தயிதாமபி தஸ்ய மேதினீம் ஸ்வவஸ்க்ருதாய் ததாப்யபூத் க்ருதீ. "
பலம் பொருந்திய பல்லவ மன்னன் அபராஜிதனை,  ஆதித்தன்  போரில் வென்றார்.  அடுத்தவர் நிலத்தை கைப்பற்றினாலும்,  அவர் தர்ம வழியிலே நடந்தார். 


ஆக, பல்வன் அபராஜிதனை கொன்று தொண்டை நாட்டை சோழர்கள் கைப்பற்றினார்கள்.  ஆதித்தனுக்கும்,  பல்லவர்க்குமான இப்போர், ஆதித்தரின் இருபத்தொன்றாம் ஆட்சியாண்டில்  நடைபெற்று இருக்க வேண்டும்.  கி.பி 891ல்.  தொண்டை மண்டலம் முழுவதையும் ஆதித்தர் கைப்பற்றுகிறார்.  

தொண்டைமண்டலம் திருமால்புரம் உத்தமச்சோழனின் கல்வெட்டு. ( S. I. I vol 3 no 142) 




ஆதித்தர் தனது 21 ம் ஆட்சியாண்டில் திருமால்புர இறைவனுக்கு தேவதானமாக நிலம் அளித்தார்.  இதை இவரது மகன் பராந்தகன் இறையிலியாக்கினார். ஆக,  ஆதித்தர் தனது 21 ம் ஆட்சியாண்டில்,  தொண்டை மண்டலம் முழுதும் அவர் கைப்பற்றினார் என்பது தெளிவாகிறது. 

தஞ்சை அருகே உள்ள.  தில்லைஸ்தான கல்வெட்டு ( S.I.I vol 3 no 89)








ஆதித்தரை, தொண்டை நாடு பரவின சோழன்என்கிறது.  ஆக, தொண்டை மண்டலத்தை ஆதித்தர் கைப்பற்றினார் என்பது மேலும் உறுதியாகிறது. மேலும் இக்கல்வெட்டு, "பல்யானை கோக்கண்டனான ஆதித்தன்" என்கிறது.

தக்கோலம் என்னும் திருவூறல் கல்வெட்டு .  ( S . S . I vol 5 no 1368)  




ஆதித்தரின் 24 ம் ஆட்சியாண்டு.  கங்க மன்னன் இரண்டாம் பிருத்வீ (திருப்புறம்பியம் போரில் இறந்த முதலாம் பிருத்வீயின் பேரன்)  திருவூறல் பெருமானுக்கு வெள்ளிக் கெண்டி ஒன்றை நிவந்தம் தருகிறார்.  கங்கமன்னனும்,  சோழனும் நண்பர்களாகவே தொடர்ந்தனர் எனத்தெரிகிறது. 

திருமழபாடி வைத்தியநாதர் ஆலயக் கல்வெட்டு. ( Ar.no 14 of 1920) மூன்று முக்கிய விடயங்களைத் தருகிறது.   



ஆதித்தரின் 27 ம் ஆட்சியாண்டு  ஆதித்தரின் அதிகபட்ச ஆட்சியாண்டு. அவரது கடைசி ஆட்சியாண்டு  ( 871 - 907) 

இத்தல இறைவனுக்கு ஆதித்தரின் முதல் மனைவி இளங்கோ பிச்சி என்பவர்  நிவந்தம் தருகிறார்.  இக்கல்வெட்டில் காணப்படும் வானியல் குறிப்புகளை நன்கு ஆராய்ந்த அறிஞர்கள் இக்கல்வெட்டின் காலம்  கி.பி 897 என்பதாக உறுதி செய்தனர். ஆக, ஆதித்தரின் ஆரம்ப ஆட்சியாண்டு ( 897 - 27) கி.பி 870 - 871 என்பதும் தெளிவாகிறது.

இன்றைய விபரங்களை நன்கு அவதானித்தவர்களுக்கு ஒரு ஐயம் ஏற்படும். ஆதித்தரின் ஆட்சிக்காலம் 871 - 907 என்கிறீர்கள். அப்படியானால் அவர் 36 ஆண்டுகாலம் ஆட்சிசெய்தார் என உறுதியாகிறது.  ஆனால்., ஆதித்தரது 27 ம் ஆட்சியாண்டே கடைசி ஆண்டு என்பது எவ்வகையில் பொருத்தம். இதற்கு ஒரு எளிய தீர்வு. 

ஆதித்தரின் 27 ம் ஆட்சியாண்டு வரை கல்வெட்டுகள் கிடைப்பதால், அவர் 27 ஆண்டுகளே ஆட்சி செய்தார் என்பதுதான் உண்மை.  நாம் மேலே பார்த்த திருமழபாடியின் கல்வெட்டில் சில வானியல் குறிப்புகளின் படி,  கல்வெட்டின் காலம் கி.பி 897 உறுதி செய்கின்றனர்.  இது ஆதித்தரின் 27 ம் ஆட்சியாண்டு.  ஆக,  அவரது ஆரம்ப ஆட்சியாண்டு( 897 - 27)  அதாவது 870 - 871.  அதாவது,  விஜயாலர் காலத்திலே, திருப்புறம்பியம் போர் நடைபெறுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, கி. பி 870 - 871 ல் ஆதித்தருக்கு இளவரசு பட்டம் கட்டப்பட்டிருக்க வேண்டும். 

கி.பி. 880 ல் திருப்புறம்பியம் போர் வெற்றி. கி.பி 881 ல் தஞ்சையை கைப்பற்றுதல். ஆகவேதான் ஆதித்தரது 10 ம் ஆட்சியாண்டு முதல் அதாவது கி.பி 881 ல் ஆதித்தரது கல்வெட்டுகள் சோழநாட்டில் காணப்படுகின்றன.  கி.பி 871 ல் இளவரசு பட்டம் பெற்றாலும், கி.பி 881 முதலே சோழ நாட்டில் அவரது கல்வெட்டுகள் காணப்படுகின்றன.  ஆக, ஆதித்தர் 27 ஆண்டுகளே ஆட்சி புரிந்தார் என்பது தெளிவாகிறது. 

நல்லது.  இப்பொழுது புரிந்திருக்கும்.  ஆனால் இப்போது மேலும் ஒரு ஐயம் ஏற்படுமே!

கல்வெட்டில் காணப்படும் வானியல் குறிப்புகளைக் கொண்டு,  கல்வெட்டு காலத்தை எவ்வாறு தீர்மானிக்கிறார்கள்? இதை நாம் கணிப்பதற்கு இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். ! (ஒரு சில கல்வெட்டுகளில் காணப்படும் வானியல்  குறிப்புகளக் கொண்டு மாதத்தை எவ்வாறு அறிவது என்பதை தனி இணைப்பாக கீழே  காண்க.)


​   
ஆதித்தரைப் பற்றிய மேலும் தகவல்கள் .....

[தொடரும்]



இன்றைய பதிவில் உதவி: 
திரு.பார்த்தி மற்றும் பேராசிரியர் திரு. இராமநாதன்.🙏
மா.  மாரிராஜன்- marir...@gmail.com

தேமொழி

unread,
Sep 27, 2017, 1:56:35 AM9/27/17
to mintamil, Marirajan Rajan


சோழர் சரித்திரத் தேடல் ...
~ மா.  மாரிராஜன் ~

(14)




பிற்கால சோழத்தை ஸ்தாபிதம் செய்வதற்கு வித்திட்டவர் விஜயாலர் என்றால்,  அதை விஸ்தரித்தவர் ஆதித்தர் ஆகிறார்.  பல்லவ மன்னர் அபராஜிதரை வென்று, தொண்டை நாட்டைக் கைப்பற்றி, சோழப்  பரப்பை இராஷ்டிரகூட எல்லை வரை கொண்டு சென்றார். கொங்கு நாட்டையும் இவர் கைப்பற்றியதாக கொங்குதேச ராஜாக்கள் என்னும் நூல் கூறுகிறது. 

எழில் மிகு சிவாலயங்கள் எழுப்புவதிலும், ஆதித்தர் தன் முத்திரையை பதித்தார். காவிரிக்கரையின் இருமருங்கிலும் பல கோவில்களை 
ஆதித்தர் எடுத்ததாக, அன்பில் செப்பேடுகள் கூறுகிறது.

அன்பில் செப்பேடு 18 வது செய்யுள்: 
  ஆஸம்ஸஹ்யாத் ரேரஜஸ்ர ஸ்ருதமத ஸலிந்த 
  கண்டத்விபேந்த்ரா தா வாராமாகராத ப்யுருதர 
  பங்க ரங்கந் ம்ருகாங்த் காவேரீ தீர யுக்மே
  புரமதன மஹாத மாலா ஸிலாபி ஸ்துங்கா
  பங்காக்பிஞ்சா நிஜ விஜய பதாகேவ யேக் வ்யதாயி

காவேரியின் இரு கரைகளிலும் திரிபுரமெரித்த சிவனுக்கு,  பல கற்கோவில்கள் எழுப்பினான். அவை மிக உறுதியானவை. பழுதுறாதவை. கும்பகோணம் நாகேஸ்வரர் ஆலயம்,  திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் போன்றவை ஆதித்தர் காலக் கற்றளிகளாகும். தஞ்சை அருகே உள்ள அய்யம்பேட்டை என்னும் ஊர் இவ்வரசன் பெயரால் இராசகேசரி சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பட்டது. திருக்கழுக்குன்றம்  வேதபுரீஸ்வரர் ஆலயக் கல்வெட்டு ஆதித்தரின் 27 ம் ஆட்சியாண்டு  ஒரு அற்புதமான செய்தியை தருகிறது. 

வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவர் காலத்தில், திருக்கழுக்குன்றம் பெருமானுக்கு, ஸ்கந்த சிஷ்யன் இறையிலியாக கொடுத்த நில சாசசனம்.  இந்த சாச​னத்தை உறுதி செய்த ஆதித்தர்,  இச் சாசசனத்தை பாதுகாப்போரின் பாதங்கள் என் தலை மேலே என்றார் ( Ep of in. Vol 3 page 279).





சோழமன்னர்கள் அனைவராலும் காக்கப்பட்டது இந்த சாசனம். அந்த நிலத்தின் இன்றை நிலை. யார் அறிவார்?

திருவையாறு, ஐயாரப்பர் ஆலயத்தில் உள்ள ஆதித்தரின் 10 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு.  அதாவது கி.பி 881 ல் வெட்டப்பட்ட இக்கல்வெட்டில் வரலாற்று நாயகர் ஒருவர் அறிமுகம் ஆகிறார் (Ar no 224 of 1894).




ஆம்.  இவர்தான் பிற்காலச் சோழவரலாற்றில் பெரும் பங்காற்றிய பழுவேட்டரையர் குமரன் கண்டன். நிலங்களின் எல்லைகளை குறிக்கும் பொழுது, பழுவேட்டரையரின் நிலத்திற்கு வடக்கு பக்கம் இருப்பதாக (வடபாற்கெல்லை) குறிக்கப்பட்டுள்ளது.  கல்வெட்டின் வரி எண் 14 மற்றும் 15.  இந்த கல்வெட்டே பழுவேட்டரையர்களை வரலாற்று வெளிச்சத்திற்கு கொண்டு வந்த முதல் கல்வெட்டு. 

ஆதித்தருக்கு இரு மனைவியர் இருந்ததாக உறுதிபடுத்தப் படுகிறது. ஆதித்தரின் 27 ம் ஆட்சியாண்டு.திருமழபாடி கல்வெட்டு.  (Ar no 14 of 1920



ஆதித்தரின் முதல் மனைவி இளங்கோ பிச்சி என்பவர் கோவிலுக்கு நிவந்தம் அளிக்கிறார்.  இந்த இளங்கோ பிச்சி என்பவர், கி.பி 878 முதல் 913 வரை அரசாண்ட இராஷ்டிரகூடர் மன்னர் இரண்டாம் கிருஷ்ணனின் மகள் என்பதை  பல அறிஞர்களும் உறுதி செய்துள்ளனர். ( Ep.of ind vol 26 pa.233 & 234





ஆதித்தனுக்கும்,  இராஷ்டிரகூட இளவரசி இளங்கோ பிச்சிக்கும் பிறந்தவரே கன்னரத்தேவன் ( Ar.no 38 of 1895).  




சோழப் பெருமானாடிகள் மனார் கன்னாரத்தேவன் நிவந்தமளிக்கிறார். ஆதித்தருக்கு இன்னுமொரு மனைவி இருந்ததாக தெரிகிறது.  திருச்சேற்றுத்துரை கல்வெட்டு ( Ar. no 180 of 1931).



தேவியார் திருபுவன மாதேவி வயிரியக்கன் என்பவர் ஆதித்தரின் மற்றொரு மனைவி ஆவார். இவர் காடுபட்டிகள் என்னும் பட்டம் கொண்டதால் இவர் ஒரு பல்லவ குலமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. ஆதித்தருக்குப் பிறகு பட்டம் பெற்ற பராந்தகச்சோழரின் தாய்  இவராக இருக்கலாம்.  இதற்கு நேரடிச்சான்று இல்லை. 

இன்றளவும் ஒரு சர்ச்சை இருக்கிறது.  கன்னரத்தேவனுக்கு பட்டம் இல்லாமல்  பராந்தகன் பட்டத்திற்கு வந்தது எப்படி? இதற்கு பொருத்தமான காரணங்களுக்கு நேரடிச்சான்று இல்லை என்றாலும்,  பராந்தகன் மூத்தவராய் இருக்கலாம். அல்லது கன்னரத்தேவன்,  ஆதித்தரின் காலத்திலேயே இறந்திருக்கலாம். அப்படி எல்லாம் இல்லை.  கன்னரத்தேவனுக்கு அநியாயம் நடந்து விட்டது.  திட்டமிட்டு கன்னரத்தேவனை துரத்திவிட்டார்கள்.  அதனால்தான் இராஷ்டிரக்கூடர்களின் பகை ஏற்பட்டது.  பராந்தகன் காலத்தில், வல்லம் என்னுமிடத்தில் கடும் யுத்தம் நடந்தது.   இவ்வாறாக ஒரு சிலர் கருதுகின்றனர். ஆனால் இக்கருத்து மிகவும் தவறு என்பது சில சான்றுகள் மூலம் உறுதி செய்யலாம். பராந்தகரின் 15 ம் ஆட்சியாண்டில், கன்னாரத்தேவனின் மனைவி, கொடும்பாளூர் வம்சத்தைச் சேர்ந்த, பூதிமாதேவடிகள், திருவாலந்துறை இறைவனுக்கு  நிவந்தம் அளிக்கிறார் (Ar no 356 of 1903). 




அதாவது, பராந்தகன் ஆட்சிகாலத்திலும் கன்னரத்தேவரின் மனைவி சோழநாட்டில் இருந்துள்ளார்.  தனது கனவனுக்கு அநியாயம் நடந்திருந்தால்,  அவர் இராஷ்டிரகூடத்தில் அல்லவா இருந்திருப்பார். மேலும் ஒரு சான்று.  இளங்கோ பிச்சியின் தந்தையான இரண்டாம் கிருஷ்ணனின் பேரனான கோவிந்தன் என்ற இராஷ்டிரகூட இளவரசனுக்கு, பராந்தகன் தனது மகளான வீரமாதேவியை திருமணம் செய்விக்கிறார்.  ஆக,  இக்காலம் வரை சோழ - இராஷ்டிரகூட உறவு சுமுகமாத்தான் இருக்கிறது. 

கன்னாரத்தேவனை தவிர்த்து, பராந்தகன் சோழ அரசன் ஆனதில் எந்த மர்மும் இல்லை.  எந்த விதி மீறலும் இல்லை.  யாருக்கும் அநியாயம் நடக்கவில்லை. பிறகு,  அந்த இராஷ்டிரகூடர்களுக்கும், சோழர்களுக்குமான போர் ஏன் நடைபெற்றது? அது இராஷ்டிரகூடர்களின் தயாதி பிரச்சனை.  மருமகன் கோவிந்தனுக்ககாக மாமனார் பராந்தகச்சோழர் களமிறங்க வேண்டிய நிர்பந்தம்.  இப்போர் பற்றிய தெளிவான விபரத்தை பராந்தகரது பகுதியில் பார்ப்போம். 

இனி . . . 


[தொடரும்]



இன்றைய பதிவில் உதவி: 
திரு. பார்முகிலன், திரு. சக்திஸ்ரீ.🙏

தேமொழி

unread,
Sep 27, 2017, 10:19:06 PM9/27/17
to mintamil, Marirajan Rajan


சோழர் சரித்திரத் தேடல் ...
~ மா.  மாரிராஜன் ~

(15)

ஆதித்தரை,  இராசகேசரி என்றுதான் இவரது கல்வெட்டுகள் பெரும்பாலும் குறிக்கின்றன. இவரது மகன் பராந்தகரது கல்வெட்டொன்று இவரை ஆதித்தர் என்றே குறிப்பிடுகிறது. வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது சோளிங்கர் என்னும் ஊர்.  இவ்வூரில் உள்ள ஒரு குன்றின் பாறை ஒன்றில் பராந்தகனது ஒன்பதாம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்றுள்ளது. சோழ வம்சத்தைக் குறிப்பிடும் படியாக சமஸ்கிருத மொழியில் உள்ளது. 

ஆதித்யான்வயஸே. குல பர்த்துந்ரா கோலகம்
கம்பாபயநிராகுலம் ப்ரபுரபூபபதித்யநாம ந்ரும

இப்பூமியை ஆபத்திலிருந்து காப்பதற்காக சூரியகுலம் தோன்றியுள்ளது.  அக்குலத்தில் ஆதித்தன் என்பவன் அரசன் ஆனான் (சோழர் செப்பேடுகள் - க. சங்கரநாரயணன்).



இதன்பிறகு வெளிவந்த சோழர் செப்பேடுகளில் ஆதித்தரின் சிறப்பான நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டன. 
உதயேந்திரம் செப்பேடு, ஆதித்தரை சூரியனுக்கு இணையாக உருவகம் செய்கிறது.  



வேளஞ்சேரி செப்பேடு இவரை குபேரனுக்கு இணையானவர் என்கிறது. 
அன்பில் செப்பேடு இவரை இராசகேசரி என்கிறது. மேலும் இவர் திருமாலின் வடிவம் எனவும்,
காவிக்கரையில் பல சிவாலயங்களை எழுப்பினார் என்கிறது. 



திருவலங்காடு செப்பேடு, பல்லவர்களிடமிருந்து தொண்டைநாட்டை கைப்பற்றினார் என்கிறது.
கரந்தைச் செப்பேடு இவரை அளவிடமுடியாத ஒளியுடையவர் என்கிறது. 
சாரளச்செப்பேடு, இவருக்கு கோதண்டராமர் என்னும் பெயர் இருந்ததையும்,  ஆனைமேல் பாய்ந்து பல்லவனை கொன்றார் என்கிறது.





செங்கற்கலால் ஆன கோவில் வழக்கத்தை தவிர்த்து கற்றளிகளால் கோவில் எழுப்பும் வழக்கத்தை துவக்கியவர் ஆதித்தர் ஆகிறார். இவர் பல கற்றளிகளை எழுப்பியபோதும் அவைகள் கால மாற்றத்தில் சிதைந்தும், பின் வந்த அரசர்களின் புனரமைப்பாலும் ஆதித்தரது அடையாளத்தை இழந்தன. இருந்தும் கோவிலின் அமைப்பைக் கொண்டு அது ஆதித்தர் காலம் என்பதாக சில கோவில்களை அடையாளம் காணலாம். 

ஆதித்தர் எழுப்பிய கற்றளிகள், ஒரு தளம் முதல் நான்கு தளம் அமைந்த விமானம், கீரீவம், தூபி, ஆகியவை கொண்டு, எண்பட்டையாகவோ, சதுரமாகவோ இருக்கும்.  தேவகோஷ்டங்கள் 3 முதல் 5 வரை இருக்கும்.  தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடக்கே பிரமனும், மேற்கே அதாவது கருவறைச் சுவற்றின் நேர் பின்புறம் திருமால் இடம்பெறுவது வழக்கம். ஆனால் ஆதித்தன் எழுப்பிய கற்றளியில், கருவறைச்சுவற்றின் பின்புறம் அர்த்தநாரியை இடம்பெறச் செய்தார்.  இவரது மைந்தன் பராந்தகர். கருவறைச்சுவற்றின்  பின்புறம் லிங்கோத்பவரை இடம்பெறச்செய்தார்.  இதன் பின் வந்த மற்ற அரசர்கள் இம்முறையையே பின்பற்றினார். கும்பகோணம் நாகேஸ்வரர் ஆலயம், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம், தில்லைஸ்தானம், இவைகள் ஆதித்தர் காலம் என்பதாக உறுதி செய்யலாம். 



விஜயாலரால் ஸ்தாபிக்கப்பட்ட சோழத்தை வலுவாக வேரூன்ற செய்த பெருமை ஆதித்தரையே சாரும்.  இவரது காலத்தில் சோழத்தின் பரப்பு இராஷ்டிரக்கூட எல்லைவரை பரவியது. சிற்றரசு என்னும் நிலையிலிருந்து விடுபட்ட சோழம் பேரரசாக துளிர்விடத்தொடங்கியது. 

மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை, சுமார் அருநூறு ஆண்டுகாலம், வரலாற்றுப் பக்கங்களில் முழுவதும் புறக்கணிக்கப் பட்டிருந்த சோழத்தை,  மீண்டும் வரலாற்றில் இடம்பெற செய்த ஆதித்தர், கி.பி 907 ஆம் ஆண்டு,  இன்றைய ஆந்திரா காளஹஸ்தி அருகே, தொண்டமான் பேராற்றூர் என்னுமிடத்தில் இறைவனடி சேர்ந்தார்.  இந்த இடம் இன்றும் ஆதித்தரது பெயரால் “கோதண்டராமேஷ்வரம்” என்று அழைக்கப்படுகிறது. 



இச்செய்தியை உத்தமச்சோழனின் திருமால்புரம்  கல்வெட்டு,” தொண்டமானூற்றூர் துஞ்சியத் தேவர்” என உறுதி செய்கிறது (S.i.i. vol 3 no 152).
 



ஆதித்தர் இறந்த இடத்தில் அவரது மகன் பராந்தகர் ஒரு நினைவாலயம் (பள்ளிப்படை)  எழுப்புகிறார் (S.i.i.vol 8 no 529). 



ஆதிசேசுரம் என்னும் இப்பள்ளிப்படையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கேட்டை நட்சத்திரம் முதல் ஆதித்தர் பிறந்த நட்சத்திரமான புரட்டாசி சதையம் வரை ஏழு நாட்களும் திருவிழா நடந்துள்ளது. இந்நாட்களில் அன்னதானமும் நடந்துள்ளதாக இவ்வாலய கல்வெட்டுகள் செய்தி தருகின்றன. 

கி.பி 907 ஆம் ஆண்டு ஆதித்தரின் மைந்தன் பராந்தகச் சோழர் சோழப் பேரரசராக பட்டத்திற்கு வருகிறார். 

சோழத்தின் தெற்கே, பாண்டியத்தை மையமாகக் கொண்டு போர்மேகம் சூழ்ந்தது. 




[தொடரும்]


மா.  மாரிராஜன்- marirajan93@gmail.com
Reply all
Reply to author
Forward
0 new messages