அயோத்தி இளவரசியின் கொரியாவின் கயா நாட்டுக் கடல் பயணமும் பாதையும்

133 views
Skip to first unread message

அன்டார்டிகா தமிழன்

unread,
Aug 26, 2015, 10:08:52 PM8/26/15
to மின்தமிழ்

கிரேக்கர்கள் நிலவரைபட ஆதாரங்கள் கி.மு 100-ல் தமிழகத்தின் தென்கோடியில் ஆய் என்ற அரசாளுமை இருந்ததையும் வடபுலத்தில் அயோத்தியா என்ற இடமோ கயா அரசோ இல்லை என்பதையும் அதுலோன்றே கொரியாவிலும் கயா அரசு உருவாகவில்லை என்பதைச் சுட்டுகிறது. கி.மு 1 ஆம் நூற்றாண்டில் ஆய் அரசு விரி அடைவதையும் கொரியாவில் கதா அரசு உருவானதையும் சுட்டி அப்போதும் அயோத்தியாவோ கயாவோ இல்லை என்பதையும் தெளிவக்குகிறது.  கொரிய வரலாறு கி.பி 48 -ல் இந்தியாவிலிருந்து ஒரு அரசி கொரியாவில் பூசன் பகுதியில் கரையிறங்கியதாகவும் ஜூலை 27 ஆம் நாள் கி.பி 48 ல் கயா மன்னராஇத் திருமணம் செய்துகொண்டு அரையணை ஏறியதாகக் கொரிய வரலாறு குறிப்பிடுகிறது



இளவரசி தான் ஆய் நாட்டிலிருந்து வருவதாகவும் மூன்று மாதக் கடல்பயணத்துக்குப் பிறகு கொரியக்கரையை அடைந்ததாகவும் அவருடன் அவருடைய தம்பி மற்றும் 22 பேர்கள் பயணம் செய்ததாகவும் மன்னருக்கான பரிசுப்பொருட்களுட 12 நரம்புடைய இசைக்கருவியை உடன் எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  அவரின் கடல்பாதையைக் கண்டுபிடித்து அவர் மூன்று எஇங்களில் எவ்வாறு பயணித்தர் என்பதை மீளாக்கம் செய்ய உ.பி கொரிய அறிஞர்கள் 20010 ல் திட்டமிட்டும் இன்றுவரை   அதில் எவ்வித முன்னேற்றமும் காணவில்லை

இந்தியாவிலும் கிழக்காசியாவிலும் கிடைக்கும் கல்வெட்டுச் செய்திகளும் பண்பாட்டுக் கூறுகளும் மரபெச்சங்களும் பெளத்தமதப் பரவலுக்கு அசோகச் சக்ரவர்த்தி முன்னெடுத்த இட்ட்ம் தரைவையாக மட்டுமன்று கடல்வழியாகவும் செயல்பட்டதாகவும் இதற்குத் தமிழ் வணிகர்கள் உதவியிருப்பதாகவும் அனுமாமிக்க இடமுள்ளது.  கி.கி முதலாம் நூற்றாண்டில் ஹிப்பொலஸ் இந்துமாக்கடலில் உருவாகும் தென்மேற்குப்பருவக்காற்று தமிழர்களின் திரைகடலோடித் திர்வியம் ஈட்டும் கடல்வணிகத்துக்குப் பயன்பட்டதை அறிந்து வெளியிடுவதற்குப் பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தின் கிழக்கில் தெற்குமுனையில் கடல்வழிப்பயணம் சிறப்புடன் நடந்ததாக அறியமுடிகுறது.

வங்கக்கடல் வணிகப்பாதை கலிங்கத் துறைமுகமான தாமரலிப்பியியில் தொடங்கி கரையோரமாகப் பயணம் செய்து நாகபட்டினம் வந்து பின்னர் காற்றின்போக்கில் இலங்கையைன் வடகரையை அடைவதாக அசோகரின் மகள் சங்கமித்திரையின் பயணம்பற்றிய குறிப்புகள் தெரிவிக்கின்றன.  


காற்றின் போக்கு கடல் அலையின் சீற்றம் நீரோட்டம் முதலியவற்றை அறிந்து இந்துமாக்கடலில் கடல்பயணம் தொடர்ந்து நடந்துள்ளது. தமிழகத்தின் கடல்வணிகர்கல் தங்கள் கப்பலில் புத்து பிக்குகளையும் நுண்கலை கட்டட வார்ப்படக்கலைத் தொழிலாளர்களையும் உடன் அழைத்துச் சென்று அந்நாடுகளில் தமிழ்ன்மரபு பண்புக்கூறுகளை வளர்த்தனர் என்ற குறிப்புகள் கிழக்காசிய நாடுகளில் கிடைக்கின்றன.

அயோத்தி இளவரசி கயாவிலிருந்து தரவழியாக அல்லது ஆற்றின் வழியாகப் பயணம் செய்து கலிங்கத் துறைமுகமாக தமிரலிபிக்கு வந்து மரக்கலம் ஏறியிருந்தால் அவர் கடல்பயணத்துக்குந்த 10 பாகைக்குள் அமைந்த க்டல்வழியாக மட்டுமே பயணம் செய்திருக்க வாய்ப்புண்டு. வ்ங்ககடலில் பயணம் செய்ய ஒரு குறிப்பிட்ட காலமே ஏற்றத் என்றும் இளவரசி பயணம் சென்ற ஜூலை மாதத்தில் வங்கக்கடலில் பயணம்செய்ய வாய்ப்பில்லை என்பது கிடைக்கும் தரவுகள் தெளிவுபடுத்தும்




அயோத்திய இளவரசி கயா மன்னர் வழித்தொன்றல் என்று மன்னர் இந்து பிராமணர் என்றும் கிடைக்கும் தகவல் அந்தக் குலத்தில் பிறந்த அரசி நீர்வழிப்பயணம் செய்வது வைதீக மரபுக்கு ஏற்றதல்ல என்பதால் அயோத்திய இளவரசி கடல்பயணம் செய்து வங்கக்கடல் பாதையில் கயா சென்றார் என்ற அனுமானம் ஆய்வுக்கும் சோதனைக்கும் உட்படுத்தவேண்டும்.  தமிழ்நாட்டிலிருந்து தென்கிழக்காசியாவுக்கு தமிழ் வணிகர்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கடல்பயணம் மேற்கொண்டுள்ளனர்





கொரியக் கடல்பயணம் இந்துமாக்கடல்வழியாக நடந்திருக்க அதிக வாய்ப்புள்ளதால் வங்ககடல்வழியாக அயோத்தியிலிருந்து கொரியாவின் கயா  நாட்டுக் கடற்கரைக்கு மூன்று மாதத்தில் பயணம் செய்ய வாய்ப்புக் குறைவு என்பதையும் அறியலாம்

அன்டார்ட்டிகா தமிழன்

Oru Arizonan

unread,
Aug 26, 2015, 10:12:42 PM8/26/15
to mintamil
சித்தரே,

தங்கள் வரைபடத்தில், காரைக்குடியைக் குறித்த காரணமென்ன?

Megala Ramamourty

unread,
Aug 26, 2015, 10:33:10 PM8/26/15
to மின்தமிழ்
வீரமிகுந்த பாண்டிநாட்டுச் சிங்கங்கள், சிறுத்தைகள் எல்லாம் இங்கே ஏராளம் இருக்க, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு உங்கள் பாண்டிய இளவரசி , பெண்கள் கடல்தாண்டும் வழக்கமில்லாத அந்தக் காலத்தில்  மணமகன் தேடிக் கொரியாவுக்குப் போன மர்மமென்ன அன்டார்டிகா அண்ணாச்சி?  கொஞ்சம் வெளக்கிப் போடுங்க!   :-))

அன்புடன்,
மேகலா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Aug 26, 2015, 10:41:09 PM8/26/15
to மின்தமிழ்
எல்லாம் கடல்கடந்த தொப்புள்கொடி உறவுக்குத்தான்.  அரசர்கள் தங்களுடைய அரசாளுமை உறவௌ வலுப்படுத்திக்கொள்ள மேற்கொள்ளும் உத்திதானே
சங்ககாலத்தில் வலுப்பெற்று வளர்ந்த ஆய்நாட்டரசன் கிழக்காசியாவில் குறிப்பாகச் சீனாவில் வணிகத் தொடர்பில் இருந்த நிலையில் இருந்து முன்னேறி கயாநாட்டு அரசகுடும்பத்துடன் திருமண உறவை ஏற்படுத்திக்கொண்டவரலாற்றைச் சுட்டுகிறது

பாண்டியநாட்டில் சிங்கங்கள் என்றுமே இருந்ததில்லை புலிகள்தான் கொரியாவிலும் புலிகள் நிறைந்திருந்ததை ஒரு ஒப்புமையாகக் கொள்ளலாம். ஆய் அரசைப்பற்றியோ ஆய் வேளிர்கள் பற்றியோ அதிகம் அறிய சங்கச் சான்றுகளை நீங்கள் தேடலாமே

ஆய் அரசே பின்னர் களபிரர்களாக மாறினார்களா என்பதையும் நீங்கள் தெரிந்து ஆராய்ச்சிமணி அடிக்கலாமே

அ.த

bala subramani

unread,
Aug 26, 2015, 10:57:08 PM8/26/15
to mint...@googlegroups.com
தாமுழுக் என்ற தாமிரளிப்பி துறைமுகத்தில் இருந்து தேங்காய் பட்டின
தாமிரபரணி வரை உள்ள துறைமுகங்கள் அந்த துறைமுகத்தின் பருவகாலங்கள்
கடலோடுவதர்க்கு எப்படி துணையாக இருந்தது என்பதையும் கடலை ஒட்டி சென்ற
பாதைகள் அந்தமானின் வழியாக குறுக்கே சென்ற பாதைகள் ,மலாக்கா வழியாக
சுமாத்திராவின் கிழக்கு வழியாக சென்ற பாதைகள்

கம்போடிய அல்லது தைவான் வழியாக சென்ற பாதைகள என்று அதன் நீரோட்டங்கள்
காற்றோட்டங்கள் ,32 திசைகள் காற்று,நீரோட்டம் எப்படி தமிழர்கள மட்டுமே
பயன் படுத்தினார்கள் அவர்கின் படகுகளை ஓடாவி மக்கள் எப்படி
வடிவைமைதார்கள்

நமது மக்களுக்கு மட்டும் ஏன் திரைமீளர்கள் என்று நடுகடலில் செல்வதால்
வந்தது என்பதையும்

2000 வருடங்கள் முன்பு கொரிய மற்றும் நமது கடற்கரைகளின் மாற்றங்கள் என்று
ஒருங்கிணைந்த கடல் சார் ஆய்வுகளின் பன் முக தனமைகளை நாம் ஆய்வுகள்
செய்தால் அணைத்து உண்மைகளும் வந்து விடும்

முதலில் அயோதியவிர்க்கு எந்த எந்த அடிப்படையில் கொரிய மக்கள் நம்ப
தொடங்கினார்கள் அதன் கால நிலை என்ன்ன என்பதையும் நாம் புரிந்து கொள்ள
வேண்டும்

On 27/08/2015, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:
> எல்லாம் கடல்கடந்த தொப்புள்கொடி உறவுக்குத்தான். அரசர்கள் தங்களுடைய அரசாளுமை
> உறவௌ வலுப்படுத்திக்கொள்ள மேற்கொள்ளும் உத்திதானே
> சங்ககாலத்தில் வலுப்பெற்று வளர்ந்த ஆய்நாட்டரசன் கிழக்காசியாவில் குறிப்பாகச்
> சீனாவில் வணிகத் தொடர்பில் இருந்த நிலையில் இருந்து முன்னேறி கயாநாட்டு
> அரசகுடும்பத்துடன் திருமண உறவை ஏற்படுத்திக்கொண்டவரலாற்றைச் சுட்டுகிறது
>
> பாண்டியநாட்டில் சிங்கங்கள் என்றுமே இருந்ததில்லை புலிகள்தான் கொரியாவிலும்
> புலிகள் நிறைந்திருந்ததை ஒரு ஒப்புமையாகக் கொள்ளலாம். ஆய் அரசைப்பற்றியோ ஆய்
> வேளிர்கள் பற்றியோ அதிகம் அறிய சங்கச் சான்றுகளை நீங்கள் தேடலாமே
>
> ஆய் அரசே பின்னர் களபிரர்களாக மாறினார்களா என்பதையும் நீங்கள் தெரிந்து
> ஆராய்ச்சிமணி அடிக்கலாமே
>
> அ.த
>
> 2015-08-27 8:03 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
>
>> வீரமிகுந்த பாண்டிநாட்டுச் சிங்கங்கள், சிறுத்தைகள் எல்லாம் இங்கே ஏராளம்
>> இருக்க, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு உங்கள் பாண்டிய இளவரசி , பெண்கள்
>> கடல்தாண்டும் வழக்கமில்லாத அந்தக் காலத்தில் மணமகன் தேடிக் கொரியாவுக்குப்
>> போன மர்மமென்ன அன்டார்டிகா அண்ணாச்சி? கொஞ்சம் வெளக்கிப் போடுங்க! :-))
>>
>> அன்புடன்,
>> மேகலா
>>
>> On Wed, Aug 26, 2015 at 10:12 PM, Oru Arizonan <oruar...@gmail.com>
>> wrote:
>>
>>> சித்தரே,
>>>
>>> தங்கள் வரைபடத்தில், காரைக்குடியைக் குறித்த காரணமென்ன?
>>>
>>>
>>>
>>> *https://tamizhtharakai.wordpress.com/
>>> <https://tamizhtharakai.wordpress.com/> -- தாரகை *

bala subramani

unread,
Aug 26, 2015, 11:18:42 PM8/26/15
to mint...@googlegroups.com
பாண்டியர்களுக்கு கடலன் கவுரியர் என்ற பெயரும் உண்டு கடலில் நிலத்தை
இழந்து வந்ததால் ஆயி மக்களும் அவர்களுடன் இணைந்து செயல் பட்டார்கள்
உலகை கிழக்கையும் மேற்கையும் இணைத்தவர்கள

பண்டைய பைபிளில் ஆயி என்ற பெயர் தான் வருகிறது
பொதிகை சிகரத்தை திரிகூடத்தை மையமாக வைத்து தான் இயங்கி இருக்கிறார்கள்

நமது மேற்கு கிழக்கு தொடர்ச்சி மலைகளை மைய படுதமால் கடல் சார் வரலாறுகளை
பற்றி நினைக்க முடியாது


சிலம்பில் சொல்லபடும் மர்களியாரின் ஆசிவகம் பற்றி நாம்athigam ஆராய வேண்டும்

ஆயி மக்கள் மற்றும் அவர்களின் அயை வழிபாட்டை பற்றிய பதிவுகள் முழுமை
அடைய வேண்டும்

Oru Arizonan

unread,
Aug 27, 2015, 1:12:31 AM8/27/15
to mintamil
-2015-08-26 19:41 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
//ஆய் அரசே பின்னர் களபிரர்களாக மாறினார்களா என்பதையும் நீங்கள் தெரிந்து ஆராய்ச்சிமணி அடிக்கலாமே//

 கடையெழு வள்ளல்களில் ஒருவர் ஆய் [பாரி, காரி, ஓரி, அதியன், பேகன், நள்ளி, ஆய், அண்டிரன்] என்று படித்திருக்கிறேன்.  இப்பொழுது தென்பாண்டிநாட்டையே ஆய் மன்னார்கள் ஆண்டார்கள் என்று வரலாறு எழுவதைகயும், அவர்களே களப்பிரர்கள் என்று கதை சொல்லுவதையும் கண்டால் என்னசொல்வது என்று தெரியாமல் திருதிருவென்று விழிப்பதைத்தவிர வேறொன்றுமறியேன் பராபரமே!

Nagarajan Vadivel

unread,
Aug 27, 2015, 1:19:49 AM8/27/15
to மின்தமிழ்
பராபரம் பாடினால் 17ஆம் நூற்றாண்டுக்கு அப்பால் தமிழக வரலாற்றை எடுத்துச் செல்ல இயலாது

கி.பி மூன்றாம் நூற்றாண்டுவரை இருந்த மூவேந்தர்கள் நாலாம் நூற்றாண்டுக்குள் முற்றும் அடையாளம் இல்லாமல் அழிக்கப்படதற்குக் காரணம் என்ன?

நீங்கள் சொல்லுங்கள் பராபரமே

அ.த

--

Oru Arizonan

unread,
Aug 27, 2015, 2:31:04 AM8/27/15
to mintamil


2015-08-26 22:19 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
//கி.பி மூன்றாம் நூற்றாண்டுவரை இருந்த மூவேந்தர்கள் நாலாம் நூற்றாண்டுக்குள் முற்றும் அடையாளம் இல்லாமல் அழிக்கப்படதற்குக் காரணம் என்ன?//

நான்தான் திருதிருவேன்று விழிக்கிறன் என்று சொல்லிவிட்டேனே!

போ.ஆ. மூன்றாம் நூற்றாண்டுக்குமுன் இருந்தவர்கள் மூவேந்தர்கள்.  அதில், பாண்டியரின் பாதி நிலபரப்பை ஆய் அரசுக்கும், அதன்பின் ஆய் அரசர்களே களப்பிரர்களே என்றதற்கும் நீங்கள்தான் தகுந்த சான்று காட்டவேண்டும், சித்தரே!

அதுவரை நான் யதொன்றுமறியேன் பராபரமே என்றுதான் சொல்லிக்கொண்டிருப்பேன்.

bala subramani

unread,
Aug 27, 2015, 7:39:57 AM8/27/15
to mint...@googlegroups.com

bala subramani

unread,
Aug 27, 2015, 8:18:47 AM8/27/15
to mint...@googlegroups.com
prof pl correct this
http://indpaedia.com/ind/index.php/The_Karak_clan_of_Queen_Hwang-ok/_Suri_Ratna


On 27/08/2015, bala subramani <sunke...@gmail.com> wrote:

Oru Arizonan

unread,
Aug 27, 2015, 2:40:07 PM8/27/15
to mintamil
2015-08-27 5:18 GMT-07:00 bala subramani <sunke...@gmail.com>:
 prof pl correct this
http://indpaedia.com/ind/index.php/The_Karak_clan_of_Queen_Hwang-ok/_Suri_Ratna



I get a message that "The server is experiencing some difficulties."

I also read the other references you gave.  Makes "interesting" reading.

Oru Arizonan

Suba.T.

unread,
Aug 27, 2015, 3:41:48 PM8/27/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-08-27 4:33 GMT+02:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
வீரமிகுந்த பாண்டிநாட்டுச் சிங்கங்கள், சிறுத்தைகள் எல்லாம் இங்கே ஏராளம் இருக்க, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு உங்கள் பாண்டிய இளவரசி , பெண்கள் கடல்தாண்டும் வழக்கமில்லாத அந்தக் காலத்தில்  மணமகன் தேடிக் கொரியாவுக்குப் போன மர்மமென்ன அன்டார்டிகா அண்ணாச்சி?  கொஞ்சம் வெளக்கிப் போடுங்க!   :-))
அண்ணாச்சியைக் கேட்டாலும் அக்கா பதில் சொல்லலாம் இல்லையா..:-))​

​இந்த ஆய்வில் நான் ஈடுபடாததால் சீரியஸான பதில் இல்லை.. ஆயினும் பொதுவாக இரு நாடுகளுக்குள் உறவு தேவையென்றால் மன்னர் வீட்டுப் பெண்களை மணமுடித்துக் கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக இருந்திருக்கலாமோ என நினைக்கத் தூண்டுகின்றது.

அல்லது..
கனவில் தோன்றி மணாளன் அயலகத்தில் இருப்பதாக தெய்வம் குறி சொல்லி பாண்டிய இளவரசி கனவில் கண்ட தன் காதலனை தேடி கொரியா போனாளோ ... தெரியவில்லை..

சுபா

தேமொழி

unread,
Aug 28, 2015, 3:18:07 AM8/28/15
to மின்தமிழ், ksuba...@gmail.com

வரலாற்றில் நிகழ்வு கூறப்படும் காலம் கிழக்காசியாவில் புத்த மதம் பரப்புதல் என்பது மிகத்  தீவிரமாக நிகழ்ந்த காலம்.

அயுக்த இளவரசியின் பெற்றோர் கனவில் அரசன் சுரோ பற்றி குறிப்பிடப்பட்டு, அவர்களது இளவரசியை மணம் புரிய அனுப்பி வைக்கும்படி அருள்வாக்கு கிடைக்கிறது.

பெற்றோரும் அனுப்பி வைக்கின்றனர்.

அது போல சுரோ மன்னனுக்கும் அவனது மணமகள் கடல்வழி வருவாள் என்ற அருள் வாக்கு கிடைக்க அவனும் தனது ஆட்களை கடற்கரைக்கு அனுப்பி வைக்கிறான்.

இது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் (?)  

இந்தவிவரம்:

Samguk Yusa: Legends and History of the Three Kingdoms of Ancient Korea
Ilyon, Grafton Mintz, Tae-Hung Ha
Silk Pagoda, 2008
A fascinating work, dating from the late 1200s. This book (Yusa), is not just a story but a collection of histories, anecdotes and memorabilia, covering the origins of Korea's three monarchies--Silla, Paekche and Koguryo, offering an account of the latter nation that differs quite a bit from what you'll read in Chinese history books. Translated by Professor Ha Tae-Hung of Yonsei University, with special help from Grafton Mintz.


என்ற நூலில் இருக்கிறது.  இதைவிட சிறந்த ஆதாரம் கிடைப்பது அரிது.


ஏனெனில் Samguk Yusa என்பது கொரியாவின் ஆரம்பக்கால வரலாற்றை ஆவணப்படுத்திய புத்தமத நூல். அதனை மொழி பெயர்த்தவர் கொரிய நாட்டைச் சேர்ந்த, கொரிய பல்கலைக்கழக பேராசிரியர் என்பதுடன், இந்த நூல்  உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலையின் 
Korea Institute, Harvard University - Early Korea Project வழி வெளியிடப்பட்டுள்ளது. 

நாட்டின் கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை சரியான கோணத்தில் அணுகக்கூடிய அந்த நாட்டின் மொழி தெரிந்த பேராசிரியரே மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளது சிறப்பு. அதனையும் நம்பிக்கைக்குரிய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

("சம்குக் உசா" என்ற நூல் ஸ்ரீலங்காவின் "மகாவம்சம்" என்ற புத்தமத வரலாற்றுப்பதிவுடன் ஒப்பு நோக்கக் கூடியது. இரண்டிற்கும் ஒற்றுமை நாட்டின் வரலாறாக புழங்கிவந்த கதையை புத்த பிக்குகள் ஆவணப்படுத் எடுத்துக் கொண்ட முயற்சி)


 இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற நூலை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியுமா என்பது மற்றொரு ஆய்வுக் கோணம்.

வாய் வழியாக மக்கள் புழக்கத்தில் இருந்த கதைகளை 12 நூற்றாண்டுகள் கழித்து தொகுத்த நூல் இது. வழக்கம் போல பல கட்டுக்கதைகள் நிரம்பியும் உள்ளது. குறிப்பாக மன்னர் சுரோ  முட்டையில் இருந்து பிறந்தவர்!!!

இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது.

தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு கவனமாகப் படிக்க வேண்டியதுதான்.

மேலும் இந்த நூலில் இளவரசியின் சகோதரர் பற்றிய குறிப்புகள் இல்லையாம், அது வேறு ஒரு இடத்தில் இருந்து எடுத்து இணைத்து வழங்கப்பட்டு வருகிறது  என்று மற்றொரு கொரியநாட்டு இணையத்தளம் குறிக்கிறது.
Priest Jangyu's Legend is an ancient legend at Chilbul Temple in Hadong Gyeongsang-namdo <<< http://english.gimhae.go.kr/08/01_04_04.jsp
In fact, no written records mention that Priest Jangyu accompanied Queen Heo and his name does not appear in "Garakguk-gi." Priest Jangyu's Legend is described in the document A Record of Building Chuiwun-ru at Eunha Temple. In conclusion, it seems that the Legend of Priest Jangyu has many Buddhist embellishments that relate well to the Legend of Queen Heo.

உறுதியாகத் தெரிவது, சுரோ மணந்தது புத்தமதத்தை பரப்ப வந்த பெண்மணி ஒருவரை, அதற்குப் பிறகு நாட்டில் புத்தமதம் செழித்திருக்கிறது.

மதம் பரப்ப ஆட்சியில் உள்ளவரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சி வரலாற்றில் இது புதிதல்ல.

புத்தமதத்துடன் அரசி கொண்டுசென்ற calmimg stone தொடர்பு படுத்தப்படுகிறது


 மதத்திற்கும் கல்லடுக்கிற்கும் உள்ள தொடர்பு சரிவரப் புரியவில்லை.

கீழே இளவரசியைப் பற்றிய கதைச் சுருக்கம்...மற்றொரு புத்தகத்தில் இருந்து 


Myths and Legends from Korea: An Annotated Compendium of Ancient and Modern Materials

James H. Grayson
Routledge, Dec 6, 2012





.... தேமொழி

bala subramani

unread,
Aug 28, 2015, 4:31:14 AM8/28/15
to mint...@googlegroups.com
நன்றி

சுமார் 10000 கிலோமீட்டர் தள்ளி உள்ள இரு தீபகற்பம் அதில் இடையே உள்ள
இரு வெவேறு தட்பவெட்பம் உருவ அமைப்பில் மாற்றம் உடையே உள்ள இரு
அரசிற்கும் இடையே நடந்த வரலாறு என்று நினைப்பதை விட

தென் கிழக்கு ஆசிய முழுவதும் இந்திய பசிபிக் குண கடலில் ஆளுமை கொண்ட
தமிழ் சமுகம்,

உலகின் மேற்கு கடல் முழுவதும் ஆளுமை கொண்ட தமிழ் கடலோடும் சமுகம் தன
ஆளுமையை தனது கட்டுக்குள் கொண்ட வரலாறாய் இந்த தமிழ் பெண் தமிழ் கொண்ட
பல தீவுகளை கடந்து தென் கொரியாவிற்கு சென்றதை வியப்பாக பார்க்காமல்

பாம்பே அமெரிக்காவில் ஐரோப்பாவில் வாழும் தமிழ் குடும்பத்திற்கு பெண்
எடுத்த நிகழ்வாகவே இந்த நிகழ்ச்சியையும் பார்க்கலாம்

நிறைய இருக்கிறது இதை பற்றி எழுத

சிங்க நெஞ்சம் ஐயா அவர்கள் எடுத்து சென்ற கற்களை பற்றியும்

மதிற்பிற்குரிய நரசைய அவர்கள் கொரிய பண்டைய கடல் வழிகளை பற்றியும்

மற்றும் பலர் கொரிய தமிழ் தொடர்புகளை என்னிடம் பேசிய பின் பல
தலைப்புகளில் எழுதலாம்






On 28/08/2015, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
>
>
> <https://lh3.googleusercontent.com/-ken8_pRKlhM/VeAKEHPcW-I/AAAAAAAAC3g/9dom_FoirJg/s1600/korea%2Bsuro2.JPG>
>
> <https://lh3.googleusercontent.com/-sejfnLMKrAE/VeAJ-Q5NiGI/AAAAAAAAC3Y/SG0pnX9yyfA/s1600/korea%2Bsuro.JPG>
>
>
> On Thursday, August 27, 2015 at 12:41:48 PM UTC-7, Suba.T. wrote:
>>
>>
>>
>> 2015-08-27 4:33 GMT+02:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
>>
>>> வீரமிகுந்த பாண்டிநாட்டுச் சிங்கங்கள், சிறுத்தைகள் எல்லாம் இங்கே ஏராளம்
>>> இருக்க, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு உங்கள் பாண்டிய இளவரசி , பெண்கள்
>>> கடல்தாண்டும் வழக்கமில்லாத அந்தக் காலத்தில் மணமகன் தேடிக் கொரியாவுக்குப்
>>> போன மர்மமென்ன அன்டார்டிகா அண்ணாச்சி? கொஞ்சம் வெளக்கிப் போடுங்க! :-))
>>>
>> ​
>> அண்ணாச்சியைக் கேட்டாலும் அக்கா பதில் சொல்லலாம் இல்லையா..:-))​
>>
>> ​இந்த ஆய்வில் நான் ஈடுபடாததால் சீரியஸான பதில் இல்லை.. ஆயினும் பொதுவாக இரு
>> நாடுகளுக்குள் உறவு தேவையென்றால் மன்னர் வீட்டுப் பெண்களை மணமுடித்துக்
>> கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக இருந்திருக்கலாமோ என
>> நினைக்கத் தூண்டுகின்றது.
>>
>> அல்லது..
>> கனவில் தோன்றி மணாளன் அயலகத்தில் இருப்பதாக தெய்வம் குறி சொல்லி பாண்டிய
>> இளவரசி கனவில் கண்ட தன் காதலனை தேடி கொரியா போனாளோ ... தெரியவில்லை..
>>
>
> வரலாற்றில் நிகழ்வு கூறப்படும் காலம் கிழக்காசியாவில் புத்த மதம் பரப்புதல்
> என்பது மிகத் தீவிரமாக நிகழ்ந்த காலம்.
>
> அயுக்த இளவரசியின் பெற்றோர் கனவில் அரசன் சுரோ பற்றி குறிப்பிடப்பட்டு,
> அவர்களது இளவரசியை மணம் புரிய அனுப்பி வைக்கும்படி அருள்வாக்கு கிடைக்கிறது.
>
> பெற்றோரும் அனுப்பி வைக்கின்றனர்.
>
> அது போல சுரோ மன்னனுக்கும் அவனது மணமகள் கடல்வழி வருவாள் என்ற அருள் வாக்கு
> கிடைக்க அவனும் தனது ஆட்களை கடற்கரைக்கு அனுப்பி வைக்கிறான்.
>
> இது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் (?)
>
> இந்தவிவரம்:
>
> *Samguk Yusa: Legends and History of the Three Kingdoms of Ancient Korea*
> Gyeongsang-namdo <<< *http://english.gimhae.go.kr/08/01_04_04.jsp*
> In fact, no written records mention that Priest Jangyu accompanied Queen
> Heo and his name does not appear in "Garakguk-gi." Priest Jangyu's Legend
> is described in the document A Record of Building Chuiwun-ru at Eunha
> Temple. In conclusion, it seems that the Legend of Priest Jangyu has many
> Buddhist embellishments that relate well to the Legend of Queen Heo.
>
> உறுதியாகத் தெரிவது, சுரோ மணந்தது புத்தமதத்தை பரப்ப வந்த பெண்மணி ஒருவரை,
> அதற்குப் பிறகு நாட்டில் புத்தமதம் செழித்திருக்கிறது.
>
> மதம் பரப்ப ஆட்சியில் உள்ளவரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சி
> வரலாற்றில் இது புதிதல்ல.
>
> புத்தமதத்துடன் அரசி கொண்டுசென்ற calmimg stone தொடர்பு படுத்தப்படுகிறது
>
> <http://thumbs.dreamstime.com/z/calm-buddha-balancing-stones-sand-lines-curves-natural-meditation-serenity-contemplation-36986254.jpg>
>
>
> மதத்திற்கும் கல்லடுக்கிற்கும் உள்ள தொடர்பு சரிவரப் புரியவில்லை.
>
> கீழே இளவரசியைப் பற்றிய கதைச் சுருக்கம்...மற்றொரு புத்தகத்தில் இருந்து
>
> https://books.google.com/books?id=Ns23Q7rguGcC&lpg=PA115&ots=pSnEZMGNlY&dq=in%20scene%20two%20we%20have%20an%20extensive&pg=PA115#v=onepage&q=in%20scene%20two%20we%20have%20an%20extensive&f=false
>
> Myths and Legends from Korea: An Annotated Compendium of Ancient and Modern
> Materials
>
> James H. Grayson
> Routledge, Dec 6, 2012
>
> <https://books.google.com/books/content?id=Ns23Q7rguGcC&printsec=frontcover&img=1&zoom=1&edge=curl&imgtk=AFLRE70h5BNVe90E2lhtKXaHXZa-jXjpRaPzRVo1wC9oVr7y6hEe3VgXhXeL8T2YX0rvf4iGnhg6x0Ea5wVBToNiouffTGpeGlwSk-DU3TKgClwqknIs-mMdl80hhTLi4qmWLhk58oH0>
>
> <https://lh3.googleusercontent.com/-sejfnLMKrAE/VeAJ-Q5NiGI/AAAAAAAAC3Y/SG0pnX9yyfA/s1600/korea%2Bsuro.JPG>
>
> <https://lh3.googleusercontent.com/-ken8_pRKlhM/VeAKEHPcW-I/AAAAAAAAC3g/9dom_FoirJg/s1600/korea%2Bsuro2.JPG>
>
>
>
>
> .... தேமொழி
>
>
>> சுபா
>>
>>
>>> அன்புடன்,
>>> மேகலா
>>> ​
>>>
>>
>

bala subramani

unread,
Aug 28, 2015, 4:32:39 AM8/28/15
to mint...@googlegroups.com
நன்றி

சுமார் 10000 கிலோமீட்டர் தள்ளி உள்ள இரு தீபகற்பம் அதில் இடையே உள்ள
இரு வெவேறு தட்பவெட்பம் உருவ அமைப்பில் மாற்றம் உடையே உள்ள இரு
அரசிற்கும் இடையே நடந்த வரலாறு என்று நினைப்பதை விட

தென் கிழக்கு ஆசிய முழுவதும் இந்திய பசிபிக் குண கடலில் ஆளுமை கொண்ட
தமிழ் சமுகம்,

உலகின் மேற்கு கடல் முழுவதும் ஆளுமை கொண்ட தமிழ் கடலோடும் சமுகம் தன
ஆளுமையை தனது கட்டுக்குள் கொண்ட வரலாறாய் இந்த தமிழ் பெண் தமிழ் கொண்ட
பல தீவுகளை கடந்து தென் கொரியாவிற்கு சென்றதை வியப்பாக பார்க்காமல்

பாம்பே அமெரிக்காவில் ஐரோப்பாவில் வாழும் தமிழ் குடும்பத்திற்கு பெண்
எடுத்த நிகழ்வாகவே இந்த நிகழ்ச்சியையும் பார்க்கலாம்

நிறைய இருக்கிறது இதை பற்றி எழுத

சிங்க நெஞ்சம் ஐயா அவர்கள் கொரியாவிற்கு சென்ற இளவரசி எடுத்து சென்ற
அமைதி படுத்தும் கற்களை பற்றியும்

மதிற்பிற்குரிய நரசைய அவர்கள் கொரிய பண்டைய கடல் வழிகளை பற்றியும்

மற்றும் பலர் கொரிய தமிழ் தொடர்புகளை என்னிடம் பேசிய பின் பல
தலைப்புகளில் எழுதலாம்






On 28/08/2015, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
>
>
> <https://lh3.googleusercontent.com/-ken8_pRKlhM/VeAKEHPcW-I/AAAAAAAAC3g/9dom_FoirJg/s1600/korea%2Bsuro2.JPG>
>
> <https://lh3.googleusercontent.com/-sejfnLMKrAE/VeAJ-Q5NiGI/AAAAAAAAC3Y/SG0pnX9yyfA/s1600/korea%2Bsuro.JPG>
>
>
> On Thursday, August 27, 2015 at 12:41:48 PM UTC-7, Suba.T. wrote:
>>
>>
>>
>> 2015-08-27 4:33 GMT+02:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
>>
>>> வீரமிகுந்த பாண்டிநாட்டுச் சிங்கங்கள், சிறுத்தைகள் எல்லாம் இங்கே ஏராளம்
>>> இருக்க, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு உங்கள் பாண்டிய இளவரசி , பெண்கள்
>>> கடல்தாண்டும் வழக்கமில்லாத அந்தக் காலத்தில் மணமகன் தேடிக் கொரியாவுக்குப்
>>> போன மர்மமென்ன அன்டார்டிகா அண்ணாச்சி? கொஞ்சம் வெளக்கிப் போடுங்க! :-))
>>>
>> ​
>> அண்ணாச்சியைக் கேட்டாலும் அக்கா பதில் சொல்லலாம் இல்லையா..:-))​
>>
>> ​இந்த ஆய்வில் நான் ஈடுபடாததால் சீரியஸான பதில் இல்லை.. ஆயினும் பொதுவாக இரு
>> நாடுகளுக்குள் உறவு தேவையென்றால் மன்னர் வீட்டுப் பெண்களை மணமுடித்துக்
>> கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக இருந்திருக்கலாமோ என
>> நினைக்கத் தூண்டுகின்றது.
>>
>> அல்லது..
>> கனவில் தோன்றி மணாளன் அயலகத்தில் இருப்பதாக தெய்வம் குறி சொல்லி பாண்டிய
>> இளவரசி கனவில் கண்ட தன் காதலனை தேடி கொரியா போனாளோ ... தெரியவில்லை..
>>
>
> வரலாற்றில் நிகழ்வு கூறப்படும் காலம் கிழக்காசியாவில் புத்த மதம் பரப்புதல்
> என்பது மிகத் தீவிரமாக நிகழ்ந்த காலம்.
>
> அயுக்த இளவரசியின் பெற்றோர் கனவில் அரசன் சுரோ பற்றி குறிப்பிடப்பட்டு,
> அவர்களது இளவரசியை மணம் புரிய அனுப்பி வைக்கும்படி அருள்வாக்கு கிடைக்கிறது.
>
> பெற்றோரும் அனுப்பி வைக்கின்றனர்.
>
> அது போல சுரோ மன்னனுக்கும் அவனது மணமகள் கடல்வழி வருவாள் என்ற அருள் வாக்கு
> கிடைக்க அவனும் தனது ஆட்களை கடற்கரைக்கு அனுப்பி வைக்கிறான்.
>
> இது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் (?)
>
> இந்தவிவரம்:
>
> *Samguk Yusa: Legends and History of the Three Kingdoms of Ancient Korea*
> Gyeongsang-namdo <<< *http://english.gimhae.go.kr/08/01_04_04.jsp*
> In fact, no written records mention that Priest Jangyu accompanied Queen
> Heo and his name does not appear in "Garakguk-gi." Priest Jangyu's Legend
> is described in the document A Record of Building Chuiwun-ru at Eunha
> Temple. In conclusion, it seems that the Legend of Priest Jangyu has many
> Buddhist embellishments that relate well to the Legend of Queen Heo.
>
> உறுதியாகத் தெரிவது, சுரோ மணந்தது புத்தமதத்தை பரப்ப வந்த பெண்மணி ஒருவரை,
> அதற்குப் பிறகு நாட்டில் புத்தமதம் செழித்திருக்கிறது.
>
> மதம் பரப்ப ஆட்சியில் உள்ளவரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சி
> வரலாற்றில் இது புதிதல்ல.
>
> புத்தமதத்துடன் அரசி கொண்டுசென்ற calmimg stone தொடர்பு படுத்தப்படுகிறது
>
> <http://thumbs.dreamstime.com/z/calm-buddha-balancing-stones-sand-lines-curves-natural-meditation-serenity-contemplation-36986254.jpg>
>
>
> மதத்திற்கும் கல்லடுக்கிற்கும் உள்ள தொடர்பு சரிவரப் புரியவில்லை.
>
> கீழே இளவரசியைப் பற்றிய கதைச் சுருக்கம்...மற்றொரு புத்தகத்தில் இருந்து
>
> https://books.google.com/books?id=Ns23Q7rguGcC&lpg=PA115&ots=pSnEZMGNlY&dq=in%20scene%20two%20we%20have%20an%20extensive&pg=PA115#v=onepage&q=in%20scene%20two%20we%20have%20an%20extensive&f=false
>
> Myths and Legends from Korea: An Annotated Compendium of Ancient and Modern
> Materials
>
> James H. Grayson
> Routledge, Dec 6, 2012
>
> .... தேமொழி
>
>
>> சுபா
>>
>>
>>> அன்புடன்,
>>> மேகலா
>>> ​
>>>
>>
>

அன்டார்டிகா தமிழன்

unread,
Aug 28, 2015, 10:17:38 AM8/28/15
to மின்தமிழ், ksuba...@gmail.com
கொரியா ஒரு மர்ம தேசம்.  கொரியர்களுக்கே அவர்கள் வரலாறு 13 ஆம் நூற்றாண்டிதான் தெரியவந்தது.  வெளியுலகுக்கு மார்க்கோபோல்லொ மூலம் கொரியா பற்றி முதலில் தெரியவந்தது.  கொரியர்கள் ஆர்வக்கோளாறால் அயோத்தி கயா என்ற புராண மயக்கத்தில் கட்டுண்டு 2000 ஆண்டுகளுக்குமுன் அப்படி ஒரு நாடு இருந்ததாக நம்பிவிட்டார்கள்.  இப்போது தமிழகம் ஆயுக்தாவாக இருக்கக்கூடும் என்ற அனுமானத்தை மின்தமிழ் முன்னெடுத்து அது தொடர்பாக ஒரு பன்னாட்டு ஆய்வரங்கமும் கொரொய தமிழ்நாடு அரசுகளால் நடக்க இருக்கிறது
நீங்கள் குறிப்பிட்ட ஆவணங்கள் அனைவரும் அறிந்ததே.  அந்த தொன்மக்கலவையுள்ள வரலாற்றி இளரசி அரசியானதும் கூறியது
தான் நாடுவிட்டு நாடுவந்து ஆண்வழிச் சமுதாயத்தில் திருமணம் செய்துகொண்டாலும் தன் உறவு விட்டுப்போகாமலிருக்க அவரின் குடும்பப்பெயரை ஒரு குழந்தைக்காகவாவது சூட்டவேண்டும் என்று அரசரை வேண்டுகிறார்.  அரசர் இரண்டுபேருக்கு வைத்ததாகவும் குறிப்புள்ளது.  தரவுத்தளத்தில் முத்துக்குளிக்கும் வல்லம்மைகள் இந்த தரவைக்கொண்டு தமிழகத்தில் பெண்வழிச் சமுதாயம் எந்த அரச வழியில் இருக்கக்கூடும் என்று ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கலாமே.  அரசகுடும்பத்தில் பிறந்த குழந்தைகளின் பெயரை ஆய்வு செய்தும் ஒரு சில அனுமானங்களை முன்னெடுக்கலாம் அரசிக்குப்பின் இருந்த மூவரசுகளில் ஒன்றின் மன்னரின் பெயர் சொக்கலிங்கம் என்ற குறிப்பும் காணக்கிடைக்கிறது. அதன் அடிப்படையிலும் சில அனுமானங்களை முன்வைக்கலாம்

இப்போது தேவை அதிக எண்ணிக்கையில் வரும் மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரைகள் 

அன்டார்ட்டிகா தமிழன்

தேமொழி

unread,
Aug 29, 2015, 3:39:44 AM8/29/15
to மின்தமிழ், ksuba...@gmail.com


On Friday, August 28, 2015 at 7:17:38 AM UTC-7, அன்டார்டிகா தமிழன் wrote:
கொரியா ஒரு மர்ம தேசம்.  கொரியர்களுக்கே அவர்கள் வரலாறு 13 ஆம் நூற்றாண்டிதான் தெரியவந்தது.  வெளியுலகுக்கு மார்க்கோபோல்லொ மூலம் கொரியா பற்றி முதலில் தெரியவந்தது.  கொரியர்கள் ஆர்வக்கோளாறால் அயோத்தி கயா என்ற புராண மயக்கத்தில் கட்டுண்டு 2000 ஆண்டுகளுக்குமுன் அப்படி ஒரு நாடு இருந்ததாக நம்பிவிட்டார்கள்.  இப்போது தமிழகம் ஆயுக்தாவாக இருக்கக்கூடும் என்ற அனுமானத்தை மின்தமிழ் முன்னெடுத்து அது தொடர்பாக ஒரு பன்னாட்டு ஆய்வரங்கமும் கொரொய தமிழ்நாடு அரசுகளால் நடக்க இருக்கிறது
நீங்கள் குறிப்பிட்ட ஆவணங்கள் அனைவரும் அறிந்ததே.  அந்த தொன்மக்கலவையுள்ள வரலாற்றி இளரசி அரசியானதும் கூறியது
தான் நாடுவிட்டு நாடுவந்து ஆண்வழிச் சமுதாயத்தில் திருமணம் செய்துகொண்டாலும் தன் உறவு விட்டுப்போகாமலிருக்க அவரின் குடும்பப்பெயரை ஒரு குழந்தைக்காகவாவது சூட்டவேண்டும் என்று அரசரை வேண்டுகிறார்.  அரசர் இரண்டுபேருக்கு வைத்ததாகவும் குறிப்புள்ளது.  தரவுத்தளத்தில் முத்துக்குளிக்கும் வல்லம்மைகள் இந்த தரவைக்கொண்டு தமிழகத்தில் பெண்வழிச் சமுதாயம் எந்த அரச வழியில் இருக்கக்கூடும் என்று ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கலாமே.

 
இலங்கையும் தாய்வழிமரபு கொண்டது என்று படித்த ஞாபகம்.

பெண்வழிச்சமுதாயம் தொல்திராவிடமரபு என்பதால் இன்னமும் அது திராவிடப் பழங்குடி மக்களிடம் நிலைத்துள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் மேற்குத்தொடர்ச்சி மலையில் இன்றும் வாழ்கிறார்கள்.

....  என்ற கோணத்தில் வேண்டுமானால் பார்க்கலாம்.



மாற்றுக் கோணம், கடல்வழி வணிகத்தில் சிறந்து விளங்கியவர்கள், அத்துடன் தாய்வழி மரபு கொண்டகார்கள் என்றால் அது சேரர்களுக்கு சென்றுவிடும், அவர்கள் மீன்கொடிக்கு உரியவர்கள் அல்ல. 

.... தேமொழி

தேமொழி

unread,
Aug 29, 2015, 3:40:26 AM8/29/15
to மின்தமிழ், ksuba...@gmail.com
https://www.ethnologue.com/map/IN_08

படம் கிடைத்த சுட்டி https://www.ethnologue.com/map/IN_08 

..... தேமொழி 

Nagarajan Vadivel

unread,
Aug 29, 2015, 4:22:42 AM8/29/15
to மின்தமிழ்

2015-08-29 13:10 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இலங்கையும் தாய்வழிமரபு கொண்டது என்று படித்த ஞாபகம்.
​இலங்கை அப்போது தனியாக இல்லையென்றல்லவா தேரிகிறது.  பாண்டியர்களும் சேரர்களும் வேளிர்களுடன் திருமண உறவு கொண்டவர்கள் கொங்குவேளிர் குலத்தைச் சேர்ந்த ஒருவர் பாண்டிய மன்னனாகவும் ஆய்வேளிர் வழியைச் சேர்ந்தவர் சேர் மன்னனாக முடிசூட்டிக்கொண்டதாகவும் குறிப்புகள் உள்ளன

கொரிய அரசி முடிசூட்டிக்கொண்டபோது ஆட்சியில் இருந்த பண்டியமன்னன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்.  சிலப்பதிகாரக் காதை கூறும் நிகழ்வான கண்ணகி வழக்குரைத்த நிகழ்வு நடந்த காலகட்டம்.  

ஆய் எனும் கொற்றவையை வழிபடுபவர்களாக இருந்ததால் அவர்கள் கண்ணகிக்குக் கோவில் எழுப்பினார்கள்.  அதே காலகட்டத்தில் கொரிய இளவர்சி கொரியக்கரையை அடைந்து தங்கியிருந்த மலைப்பகுதியில் ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளதை அறியலாம்

இங்கே துண்டு துண்டாய் எழுதுவதற்குப்பதிலாகப் பன்னாட்டுக் கருத்தரங்குக்கு ஒரு கட்டுரை தரலாமே

Nagarajan Vadivel

unread,
Aug 29, 2015, 4:26:02 AM8/29/15
to மின்தமிழ்
கிழக்குத் தொடர்ச்சி மலையை விட்டுவிட்டீர்களே
அ.த

2015-08-29 13:10 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

--

bala subramani

unread,
Sep 6, 2015, 7:52:18 AM9/6/15
to mintamil
today this film is send to south korean embassy consulate  to understand 1950 scenorio of pearl diving in tamilnadu 

now they are keen to know about their pearl diver with our customs 

please dont miss the first song 



bala subramani

unread,
Sep 6, 2015, 9:22:04 AM9/6/15
to mintamil
1950 களில் வெளி  வந்த பொன் முடி படத்தின் முதல் பாடலை அவசியம் பாருங்கள் 

நமது முத்து குளித்தலை பார்க்கலாம் 
இந்த படம் 65 வருட மாற்றங்களை வெளிப் படுத்தும் 

bala subramani

unread,
Sep 6, 2015, 10:06:38 AM9/6/15
to mintamil
செண்பகனூர் மற்றும் வளம்புரினாதம் கிறிஸ்துவ நூலகத்தில் எனக்கு
குறிப்புகள் கிடைத்தன

ராமநாதபுரம் சர்கத்தில் நிறைய பெண்கள் ஈடுபட்டு இருந்தனர் ,
தூத்துக்குடியில் கிறிஸ்துவம் அல்லாத பெண்களும் , திருவிதாங்கூர்
முக்குவர் பெண்களும் முத்து சங்கு ஆழி மற்றும் கொம்பு கடல் பாசி
எடுப்பதில் ஈடுபட்டனர்

நிறைய குறிப்புகள் கிடைத்தன

இப்பொழுது மொத்தம் 2000 +3000= 600 குளிப்பவர்கள் உள்ளனர் , இரண்டே
இரண்டு பேர் தான் சுறா கட்டும் தொழில் ஈடுபட்டு உள்ளனர்
>>>>> <https://www.ethnologue.com/sites/default/files/styles/original/public/maps/18/IN_08_rgb.png?itok=UglDBk_h>
>>>>>
>>>>>
>>>>> மாற்றுக் கோணம், கடல்வழி வணிகத்தில் சிறந்து விளங்கியவர்கள், அத்துடன்
>>>>> தாய்வழி மரபு கொண்டகார்கள் என்றால் அது சேரர்களுக்கு சென்றுவிடும்,
>>>>> அவர்கள்
>>>>> மீன்கொடிக்கு உரியவர்கள் அல்ல.
>>>>>
>>>>> .... தேமொழி
>>>>>
>>>>>
>>>>>
>>>>>
>>>>>
>>>>>
>>>>>
>>>>>
>>>>>> அரசகுடும்பத்தில் பிறந்த குழந்தைகளின் பெயரை ஆய்வு செய்தும் ஒரு சில
>>>>>> அனுமானங்களை முன்னெடுக்கலாம் அரசிக்குப்பின் இருந்த மூவரசுகளில் ஒன்றின்
>>>>>> மன்னரின் பெயர் சொக்கலிங்கம் என்ற குறிப்பும் காணக்கிடைக்கிறது. அதன்
>>>>>> அடிப்படையிலும் சில அனுமானங்களை முன்வைக்கலாம்
>>>>>>
>>>>>> இப்போது தேவை அதிக எண்ணிக்கையில் வரும் மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரைகள்
>>>>>>
>>>>>> அன்டார்ட்டிகா தமிழன்
>>>>>>
>>>>>> On Friday, 28 August 2015 12:48:07 UTC+5:30, தேமொழி wrote:
>>>>>>>
>>>>>>>
>>>>>>> <https://lh3.googleusercontent.com/-ken8_pRKlhM/VeAKEHPcW-I/AAAAAAAAC3g/9dom_FoirJg/s1600/korea%2Bsuro2.JPG>
>>>>>>>
>>>>>>>
>>>>>>> <https://lh3.googleusercontent.com/-sejfnLMKrAE/VeAJ-Q5NiGI/AAAAAAAAC3Y/SG0pnX9yyfA/s1600/korea%2Bsuro.JPG>
>>>>>>> *Samguk Yusa: Legends and History of the Three Kingdoms of Ancient
>>>>>>> Korea*
>>>>>>> *http://english.gimhae.go.kr/08/01_04_04.jsp
>>>>>>> <http://english.gimhae.go.kr/08/01_04_04.jsp>*
>>>>>>> In fact, no written records mention that Priest Jangyu accompanied
>>>>>>> Queen Heo and his name does not appear in "Garakguk-gi." Priest
>>>>>>> Jangyu's
>>>>>>> Legend is described in the document A Record of Building Chuiwun-ru
>>>>>>> at
>>>>>>> Eunha Temple. In conclusion, it seems that the Legend of Priest
>>>>>>> Jangyu has
>>>>>>> many Buddhist embellishments that relate well to the Legend of Queen
>>>>>>> Heo.
>>>>>>>
>>>>>>> உறுதியாகத் தெரிவது, சுரோ மணந்தது புத்தமதத்தை பரப்ப வந்த பெண்மணி
>>>>>>> ஒருவரை, அதற்குப் பிறகு நாட்டில் புத்தமதம் செழித்திருக்கிறது.
>>>>>>>
>>>>>>> மதம் பரப்ப ஆட்சியில் உள்ளவரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்
>>>>>>> முயற்சி வரலாற்றில் இது புதிதல்ல.
>>>>>>>
>>>>>>> புத்தமதத்துடன் அரசி கொண்டுசென்ற calmimg stone தொடர்பு
>>>>>>> படுத்தப்படுகிறது
>>>>>>>
>>>>>>>
>>>>>>> <http://thumbs.dreamstime.com/z/calm-buddha-balancing-stones-sand-lines-curves-natural-meditation-serenity-contemplation-36986254.jpg>
>>>>>>>
>>>>>>>
>>>>>>> மதத்திற்கும் கல்லடுக்கிற்கும் உள்ள தொடர்பு சரிவரப் புரியவில்லை.
>>>>>>>
>>>>>>> கீழே இளவரசியைப் பற்றிய கதைச் சுருக்கம்...மற்றொரு புத்தகத்தில்
>>>>>>> இருந்து
>>>>>>>
>>>>>>>
>>>>>>> https://books.google.com/books?id=Ns23Q7rguGcC&lpg=PA115&ots=pSnEZMGNlY&dq=in%20scene%20two%20we%20have%20an%20extensive&pg=PA115#v=onepage&q=in%20scene%20two%20we%20have%20an%20extensive&f=false
>>>>>>>
>>>>>>> Myths and Legends from Korea: An Annotated Compendium of Ancient and
>>>>>>> Modern Materials
>>>>>>>
>>>>>>> James H. Grayson
>>>>>>> Routledge, Dec 6, 2012
>>>>>>>
>>>>>>>

Suba.T.

unread,
Sep 6, 2015, 10:12:29 AM9/6/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-09-06 16:06 GMT+02:00 bala subramani <sunke...@gmail.com>:
செண்பகனூர் மற்றும் வளம்புரினாதம்   கிறிஸ்துவ நூலகத்தில் எனக்கு
குறிப்புகள் கிடைத்தன

ராமநாதபுரம் சர்கத்தில் நிறைய பெண்கள் ஈடுபட்டு இருந்தனர் ,
தூத்துக்குடியில் கிறிஸ்துவம் அல்லாத பெண்களும் , திருவிதாங்கூர்
முக்குவர் பெண்களும் முத்து சங்கு ஆழி  மற்றும் கொம்பு கடல் பாசி
எடுப்பதில் ஈடுபட்டனர்

நிறைய  குறிப்புகள் கிடைத்தன

இப்பொழுது மொத்தம் 2000 +3000= 600  குளிப்பவர்கள்   உள்ளனர் , இரண்டே
இரண்டு பேர் தான் சுறா கட்டும் தொழில் ஈடுபட்டு உள்ளனர்

​அரிய தகவல்கள் பாலு.
தனிக்குறிப்பாக எடுத்து வைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளேன்.
டிசம்பர் என் தமிழக வருகையின் போது நேரில் நான் இங்கு சென்று த.ம.அ பதிவை செய்வோம்​.

சுபா

N. Ganesan

unread,
Sep 6, 2015, 10:30:46 AM9/6/15
to மின்தமிழ், ksuba...@gmail.com
 முக்குவர் பெண்கள் கேப்பிடலிஸம் தரும் மாற்றங்களால் ஆண்களைப் போல
கடலில் ஈடுபடுகிறார்கள். 

CHANGING LIFE STYLE OF MUKKUVAR COMMUNITY
Xavier James L.S.



Christianity in Hindu Polytheistic Structural Mould. Converts in Southern Tamilnadu Respond to an Alien Religion During the 'Vasco da Gama Epoch' / Le Christianisme à l'épreuve du polythéisme structurel de l'Hindouisme : la réponse des convertis dans le Tamil Nadu du Sud à une religion étrangère à l'époque de Vasco de Gama 


நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Sep 6, 2015, 10:39:09 AM9/6/15
to மின்தமிழ்
தமிழ் நாட்டைப் பொருத்தமட்டில் தென் தமிழ் நாட்டில் கிறித்துவத்தைப் பரப்ப முனைந்தவகள்ளில் ஒருவர் சேவியர்.  அவரே மீனவ மக்களுடன் நெருங்கிப் பழகி மதமாற்றத்துக்கு முயற்சிகள் மேற்கொண்டனர்

கொரிய நிகழ்வு கி.பி முதலாம் நூற்றாண்டில் நிகழ்ந்தது சற்றேறக்குரைய சிலப்பதிகாரக் காலம்.  மாதவி தான் பரதவர்கள் பிரிவில் திரிமீளர்கள் வழியில் வந்ததாகக் குறிப்பிடுகிறார்

கி.பி முதலாம் நூண்டிலும் அதற்கு முன்னரும் பெண்கள் கடலில் மூழிக் முத்துக் குளித்தனரா படகில் ஏறிப் ப்யணம் செய்தனரா என்பதற்கு இலக்கிய தொல்லியல் ஆற்வுகள் இருந்தால் மட்டும் தாருங்கள்

அ.த

bala subramani

unread,
Sep 6, 2015, 11:01:55 AM9/6/15
to mintamil
சற்று முன்னர் உலக தமிழ் ஆய்வு நிறுவனத்தின் நிர்வாக குழுவிடம்   பேசினேன் 

இது உலக தமிழ் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வேடு என்பதால் அதில் அய்வரிஞர்களை பற்றி மட்டும் தாம் குறிப்பிட முடியும் என்று  விட்டார்கள் 

ஆய்வு கட்டுரைகளை அவர்களே நூலாக வெளி இடுகிறார்கள் 

ஆய்வு கட்டுரையை  எழுதியவர்களே நிகழ்ச்சி அன்று படிக்க இருக்கிறார்கள் 

நாளை என் ஆய்வு கட்டுரையை கொடுக்க இருக்கிறேன் 

பேராசிரயர்  ,பவள சங்கரி ,மகாதேவன் மூவரும் தனி தனியாக ஆய்வு கட்டுரையை வழங்க  இருக்கிறார்கள் 

இந்த  சூழ் நிலையை தவிர்த்து இருக்கலாம் 

இந்த வாரத்தில் ஆய்வு சுருக்கத்தை கொடுத்து விட வேண்டும் 


செப்டெம்பரில் தமிழ் அரபு அறக்கட்டளையின் சிறு நூல் கொரிய தமிழ் உறவுகளில் இளவரசியின் கொரிய வருகையின் கால நிலையை  அதற்கான கண்ணன் அவர்களின் முயற்சியை நாம் பதிவாக வெளி இடலாம் 

கூடிய வரை இனி இந்த ஆய்வுகளை பற்றி பொது மடல்களை நாம் தவிர்க்கலாம் 

தமிழ்  அறக்கட்டளையின் பணிகளாக கொண்டு செல்லலாம் , சில நிகழ்வுகளை இங்கு வெளி இட   முடிய வில்லை 

coral shree

unread,
Sep 6, 2015, 11:06:15 AM9/6/15
to மின்தமிழ், Nagarajan Vadivel
அன்பின் பேரா. ஐயா,

சிலப்பதிகாரக் காலம் இரண்டாம் நூற்றாண்டு என்று சிலர் கூறினாலும், அவர்களை பழுதுபட்ட ஆராய்ச்சியாளர்கள் என்று குறிப்பிடும் திரு சுஜாதா அவர்கள் தம்முடைய ‘சிலப்பதிகாரம் - ஓர் எளிய அறிமுகம்’ என்ற நூலில், இது 6ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை அறுதியிட்டுக் கூறுகிறாரே..  அதற்கான ஆதாரமாக, சிலம்பில், காலத்தால் பிற்பட்ட கோவில்களின் பெயர்கள் வருவதாகவும், நான்மணிக்கடிகை போன்ற முற்பட்ட நூல்களின் வரிகள் அப்படியே வருவதையும், மற்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும், ‘பிராமணியும் கீரிப்பிள்ளையும்’ என்ற பஞ்சதந்திரக் கதை காலத்தால் பிற்பட்டது என்றும் நிறுவுகிறார்... 

அன்புடன்
பவளா
--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

bala subramani

unread,
Sep 7, 2015, 12:29:45 PM9/7/15
to mintamil
அன்புள்ள பேராசிரியர் கண்ணன் அவர்களுக்கு 

 நமது கட்டுரைகள் கொரியா தமிழ் வரலாற்று உறவுகளை தென் கிழக்கு ஆசிய உறவுகளின்  நீட்சியாக மட்டும்  பற்றித் தான் பேச வேண்டும் 

. தமிழனின் தொன்மை பற்றிப் பேசினால் போதாது இரு நாட்டிற்க்கும் உள்ள தொடர்புகளை தமிழர்களிடம் வேர் ஊன்றி  உள்ள சீனா தொடர்புகளில் இருந்து பிரித்து எடுத்து தமிழ் வைணவம்  ஆசிவகம் மற்றும்  பவுத்தத்தின் கடலோடும் தன்மையின் மூலம் காண்பிக்க வேண்டும் 

அருணா சுபாவின் கட்டுரையையும் 

நான் வழிப்படுத்தும்  முனைவர் பட்ட மாணவி சிந்திய லிங்குசாமி அவர்களை  கொரிய தமிழ் உறவுகள்  பற்றிய புது கோணத்தில் வழிப்படுத்தி அவரை ஆய்வு கட்டுரை கொடுக்கும் படி செய்து உள்ளேன் 

என் வழிப்படுத்தலில் 10 கட்டுரைகளை நாம் எதிர்பார்க்கலாம் 

இன்று எனக்கு முக நூல் நண்பர்கள வழியாக சம்யுக் யுசாவின் கொரிய மொழி  நூல் வந்து உள்ளது 

  
உங்கள் அனைவரின் பார்வைக்கு இருவரின்  கட்டுரை 

---------------------------------------------------------------------------------------------------------

தமிழர் பார்வையில் கொரிய சினிமா – மொழி மற்றும்  பண்பாற்று ஒற்றுமைகள்

-அ.அருணசுபா.

வேற்றுகிரக  வாசிகளை தேடி அலையும் நாம் ஒரே உலகில் வாழும் மனிதர்களுக்குள் 

உள்ள பண்பாடு, மொழி ஒற்றுமைகளை ஆராய தவறுகிறோம். அப்படி மலை மலையாய் 

ஒற்றுமைகளை கொண்டுள்ள கொரிய- தமிழர்  நாகரீகத்தை ஆராய்வோம். மக்களின் அன்றாட 

வாழ்க்கை முறையிலிருந்து , வாழ்க்கை நெறிகள், மொழியின் பயன்பாடு, கடவுள் வழிபாடு, 

விளையாட்டு என பல ஒற்றுமைகளை காண்போம். இவ்வாறான  ஒற்றுமைகள் யாவும் 

திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சித் தொடர்களில்  காணக் கிடைப்பவையே! 

தற்போது தமிழ் நாட்டில் கொரிய சினிமா, குறிப்பாக கொரிய தொடர்கள் மிகவும் 

பிரபலமாகி வருகின்றன.  தமிழ் மக்களுக்கு கொரிய கதையமைப்பு, பண்பாடு மற்றும் மொழி 

ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது. தங்களைப் போலவே சிந்தனையையும் , 

உடல்மொழியையும், உறவு முறைகளையும் கொண்டதால்தான் வேற்று மொழி , வேற்று 

கலாசாரம் என்று தோன்றாமல் தங்களை அடையாளப்படுத்தி ரசிக்க முடிகிறது. மேற்கு 

சினிமாக்களில் வெளி நின்று பார்க்கும் நம்மை, பல மைல் தூரம் தள்ளி இருக்கும் உருவத்தில் 

ஒப்பாத மனிதர்களை கொண்டுள்ள கொரிய சினிமா  நம் உணர்வுகளை, உணர்சிகளை ஒத்து 

அடையாளப்படுத்துவது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

உதாரணமாக  தமிழ்நாட்டின் முக்கிய விழாவான பொங்கல் அங்கேயும் மூன்று நாள் 

அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. முதாதையர் வழிபாடும் அப்படியே நம்மை ஒத்தே 

அமைந்திருக்கிறது. 500 தமிழ்ச்  சொற்களுக்கு மேல் கொரிய மொழியில் பயன்படுத்தப்படுகிறது. 

இப்படியாக ஒரு தமிழருக்கு கொரிய சினிமாவை பார்த்து தோன்றும் ஒற்றுமைகளை ஆராய்ந்து 

கொரிய-தமிழர் வேர்களை கண்டறிய வேண்டும். பல ஆராய்ச்சியாளர்களால் 

ஆராயப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர்- கொரிய ஒற்றுமைகளை ஒரு பார்வையாளனாக 

சாமானியனாக கண்டறிவதே இக்கட்டுரையின் நோக்கம்.  
----------------------------------------------------------------------------------------------------------

தமிழ் மற்றும் கொரிய மக்களின் ஆச்சரியமூட்டும் கலாச்சாரப் பண்பாட்டு ஒற்றுமைகள் ...ஓர் ஒப்பீடு.



 - பெண்ணின் பார்வையில்...

- சிந்தியா லிங்கசாமி

இந்தியா கொரியா ஆகியவை தொலைவுகளால் பிரிக்கப்பட்ட இரு ஆசிய நாடுகள்.  ஆனால் பல்வேறு தனித்துவம் வாய்ந்த பண்பாட்டுத் தன்மைகளால் இந்தியாவின் கடல் சூழ்ந்த  தென்மாநிலமான தமிழ்நாடும் கடல் கடந்து நிற்கும் கொரியாவும் என்றோ இணைக்கப்பட்ட நாடுகள் என்றே உணர்த்துகின்றன. 

மிகவும் மூத்தமொழியாகக் கருதப்படும் மொழி தமிழ், அதன் தனித்துவம் வாய்ந்த கலை, பண்பாடு, நாகரிகம், அறிவியல், கணிதம், வானியல்  ஆகியவை கொரிய நாகரிகத்தோடு, பண்பாட்டோடு, வாழ்வியலோடு ஒத்துப்போவதற்கான ஒப்புநோக்கு ஆதாரங்கள் ஏராளமாக கிடைத்துள்ளன. கொரிய பண்பாடும் தமிழ்ப்பண்பாட்டின் பல்வேறு தன்மைகளை எப்போதோ உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன.

கி.பி.முதலாம் நுற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து கொரியாவுக்கு படகுகளில் பயணம் செய்த தமிழ்நாட்டின் இளவரசி ஒருவர் கொரியாவின் இளவரசரை மணமுடித்துள்ளார் என்ற தரவுகள்  இந்த ஒப்பு நோக்கிற்கு வலு சேர்க்கின்றன. 

இளவரசி கொரிய மண்ணில் கால்வைத்த பின்னரே மொழி அமைப்பு, பேசும் விதம், உணவுப்பழக்கங்கள், அணிகலன்கள், உடை, வீடுகளின் அமைப்பு, உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம், வார்த்தைகள் என பலவிதங்களிலும் கொரிய மக்களின் மரபு , பண்பாடு, வாழ்வியல் முறைகள் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையோடு பெரிதும் ஒத்துப்போவதையும் ஆதாரங்கள் நிரூபிக்கின்றன. 

இந்த வியப்பூட்டும்   ஒப்புவமைகளை ஒரு பெண்ணின் பார்வையில் உற்று நோக்குவதே இந்தக்கட்டுரையின் நோக்கம்.  

bala subramani

unread,
Sep 7, 2015, 11:18:08 PM9/7/15
to mintamil
தமிழர்களின் சங்க கால   கடல்  சார்  வரலாற்று தொன்மையில்  கொரிய தொடர்புகளும் அதன் இன்றைய பயன் பாடுகளும் 

ஒரிசா பாலு என்கின்ற சிவ. பாலசுப்ரமணி B+ve 

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் தமிழ் மடலாடும் குழுமத்தின் கொரிய தமிழ் தொடர்புகள் பற்றிய  மடலாடும் உறுப்பினர் மற்றும்  கடல் சார் தொன்மை ஆய்வாளர் 


107300 கிலோமீட்டர் வேகத்தில் தன்னை தானே சுற்றிக்கொண்டு சூரியனை வளம் வரும் புவியில் கடலை வெளியாக கொண்ட இரண்டு வெவேறு பகுதிகளான தமிழகம் மற்றும் கொரிய நாட்டிற்கான வரலாற்று காலத்திற்கு முற்பட்ட கடல் சார் தொடர்புகளையும் athan தொடர்ச்சிகளையும்   ,  இந்திய பெருங் கடலையும்  பசிபிக் பெருங் கடலையும் ஆமைகளின்  கடல் வழிப் பாதைகளின் மூலம் இனம் கண்ட உலகின் மேற்கு கிழக்கு வடக்கு தெற்கை இணைத்த திரை  மீளர்கலான தமிழர்களின் கடல் சார் மேலாண்மை வணிகம்    மொழி ,பண்பாடு, மரபு,முறைபப்படுத்தப்பட்ட   தொழில்கள் என்று பல வேறு கோணத்தில் கொரிய   தமிழ் உறவுகளை ஆய்வு செய்து அதன் வருங்கால பயன் பாடுகள் எப்படி கொரிய தமிழ் மக்களுக்கு நட்புறவை வளர்க்கும் என்ற கோணத்தில் இந்த ஆய்வு கட்டுரை சற்று விரிவாக அமைய போகிறது 

bala subramani

unread,
Sep 7, 2015, 11:27:34 PM9/7/15
to mintamil
தமிழ் மரபு அறக் கட்டளையின் மின் தமிழ் மடலாடும் குழுமத்தை சேர்ந்த நண்பர்கள் கொடுக்கும் ஆய்வு சுருக்கத்தையும் நமது கொரிய தமிழ் மடலாடும் குழுமத்தை பற்றி சொல்லி வழிப்படுத்தி நான் தொடர்ந்து தூண்டுதல்  கொடுத்து உருவாக்கப்பட்ட கட்டுரைகள் இந்த குழுமத்தில்  சரியாக கவனிக்க படாத ஒரு ஆய்வின் வெளிப்பாடு 
இந்த ஆய்வின் கூறுகளை நமக்குள் உருவாக்கியவர் 

கொரியாவில் பல வருடங்கள் வாழ்ந்து தமிழின் கூறுகளை கொரியாவில் கண்ட  கண்ணன் அவர்கள் 

இந்த நேரத்தில் அவரையும் அவரின் சீரிய தொலைநோக்கில் உருவாக்கப்பட்ட தமிழ் மரபு அறக் கட்டளையும் அதன் மடலாடும் குழுமமான மின் தமிழுக்கும் நாம் இந்த நேரத்தில் நமது அன்பை தெரிவிக்காமல்  இருப்பதும் பின் ஒரு காலத்தில் நமது குழுமத்தை எல்லோரும் பாராட்டும் பொழுது நீங்கள் பாரட்டினால் அதை ஏற்கும் மன நிலை நிச்சயம் கொரிய தமிழ் வரலாற்று உறவுகளை பற்றி துவங்கிய கண்ணன் அவர்களுக்கும் அவரை தொடர்ந்த பேராசியர் நாகராஜன் மற்றும் எனக்கும் நிச்சயம் இருக்காது 

bala subramani

unread,
Sep 7, 2015, 11:44:17 PM9/7/15
to mintamil

கொரியதமிழ் மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சார ஒற்றுமைஆய்வுச் சுருக்கம்

பவள சங்கரி

எழுத்தாளர், சமூக ஆர்வலர்


பல்லாயிரம் மைல்களின் இடைவெளியில் இருக்கும் கொரியா மற்றும் தமிழ்நாடு என இரு நாட்டு மக்களின் மொழி வடிவம் மற்றும் கலாச்சார அடிப்படையில் ஒரு ஒற்றுமை இருப்பது போன்ற சுவையான தகவல்களை பல்வேறு அறிஞர்களின் ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது. கொரிய மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ் அறிஞருமானஜங்க் நாம்கிம், தமிழருக்கும் கொரியர்களுக்கும் இருக்கும் பழங்காலத் தொடர்புகளைப் பதிவு செய்து வருகிறார். பொதுவாக ஒரு இன மக்களின் பண்பாடு, கலாச்சாரம் குறித்து எளிமையாக அறிய வகை செய்வது அந்நாட்டு மக்களால் இயல்பாக அன்றாட பேச்சு வழக்கு மொழியில் பயன்படுத்தும் சில, பல சொல்வடைகள் மற்றும் பழமொழிகள் போன்றவைகளே என்றால் அது மிகையாகாது. அதோடு அந்தந்த காலகட்டங்களுக்கேற்றவாறு இயற்கை வளம், மனித நலம், அவர்தம் இயல்பு, சுற்றுச்சூழல் போன்ற பலவற்றையும் பிரதிபலிக்கக்கூடியது கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகள். அந்த வகையில் ஏனைய பல நாடுகளைப் போன்றே கொரியாவும், தம் மொழியை முன்னிறுத்தியே முன்னேறியிருப்பது வெள்ளிடைமலை.  16ம் நூற்றாண்டு ஆரம்பங்களில்ஹங்குல்' என்ற எழுத்து வடிவ மொழியை தாய்மொழியாக ஏற்றுக்கொண்ட   பிறகே கொரிய மக்களின், கல்வித் தகுதியும், பொருளாதார வளர்ச்சியும் பெருமளவில் உயர்ந்துள்ளது. அதற்கு முன்பு சீன மொழியை பயன்படுத்தியுள்ளனர். தென்கொரிய மக்களின்ஹங்குல்' என்ற மொழிக்கும், நம் தமிழ் மொழிக்கும் எழுத்து வடிவத் தொடர்பு உண்டு என்கின்றனர் மொழியியலாளர்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழிலிருந்து பிறந்தது தான் கொரிய மொழி என்பதை அங்குள்ள எழுத்து வடிவங்கள் தெளிவுபடுத்துவதாகவும் கூறுகின்றனர். பாரம்பரிய கொரிய இலக்கியங்களின் ஆணிவேராகத் திகழ்வது, கொரிய தீபகற்பத்தின் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற நம்பிக்கைகள் போன்றவைகளே. பொதுவாக கொரிய கவிதைகள் இசைப்பதற்காகவே இயற்றப்படுபவை. இக்கவிதைகளின் வடிவங்களும், நடைகளும் இனிமையான தோற்றங்களை பிரதிபலிக்கக்கூடியதாக உள்ளது சிறப்பு. நாம் இங்கு நாட்டுப்புற வழக்கு மொழிகள், கவிதைகள், பழமொழிகள் போன்ற சிலவற்றை தேர்ந்தெடுத்து அதன் மூலம் இரு நாடுகளுக்கும்  உள்ள ஒற்றுமையை ஆய்வு செய்வதன் மூலம் மேலும் பல சுவையான தகவல்களை வெளிக்கொணர முடிகிறது.



இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான சங்க இலக்கியங்கள் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை நூல்கள்,பத்துப்பாட்டு நூல்கள்,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் போன்றவை. கிறித்து பிறப்பதற்கு முற்பட்ட காலங்களில் எழுதப்பட்ட இந்நூல்களில் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் அன்றாட வாழ்க்கை முறைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதோடு,  பண்டைத் தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடைமுறைகளையும்  அறியத்தருகின்றன. அதாவது அகமும் புறமும் காதலும் வீரமும் இணைந்தவையே சங்கப்பாடல்கள். வீட்டையும் நாட்டையும் போற்றிய தமிழ் மக்களின் உணர்வுகளால் பின்னப்பட்ட சொல்வலைக் களஞ்சியம் என்றே சொல்லலாம். மக்கள் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே சொன்னால் சுவை பயக்காது என்பதாலேயே , அவைகளை  கற்பனையும் உண்மையும் கலந்து சுவைப்படப் புனைந்து கூறுவர். இப்படிப்பட்ட பாடல்களிலிருந்து சிலவற்றை தேர்ந்தெடுத்து கொரிய பாரம்பரிய படைப்புகளுடன் ஒப்பீடு செய்வதன் மூலம் இரு நாடுகளுக்கும் உள்ள பண்பாடு மற்றும் கலாச்சார ஒற்றுமையை பிரதிபலிப்பதை நிறுவ முடிகிறது.


Key word – பண்பாடு மற்றும் கலாச்சார ஒற்றுமை






என்னுடைய சுய குறிப்பு:


பெயர்         :  பவள சங்கரி

கணவர் பெயர்  : . திருநாவுக்கரசு

கல்வித் தகுதி   : இளங்கலை (குடும்பவியல்) , இந்தி -  பிரவீண், (Hindi Prachar Sabha) மத்திய அரசின் இந்தி டிப்ளமா படிப்பு,  (Dip.in central Hindi Directorate) இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைகழகத்தின் Creative Writing in English (Dip.course)

எனது பணி   : வல்லமை இணைய இதழ் நிர்வாக ஆசிரியர் - (WWW.vallamai.com)

என் தொடர்பு எண்கள்:

0424 - 2280089

9688008311


என்னுடைய எண்ணமும் எழுத்தும் பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் நலம் சார்ந்தது.

என் எழுத்துக்கள் வாயிலாக இளையோரை வழிநடத்தல், குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான சிந்தைகளை ஊக்குவித்தல் .

இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற பெண்கள் பற்றிய செய்திகளை வெளிக்கொணர்தல்.  நாட்டுப்பற்றும், தமிழ் பற்றும் என் உயிர் மூச்சு.

இதுவரை என்னுடைய பல சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள், தொடர் கட்டுரைகள் பல பிரபலமான பத்திரிகைகளிலும், நூலாகவும் வெளிவந்திருக்கிறது.


வெளிவந்துள்ள நூல்களின் விவரம்:


1. விடியலின் வேர்கள் - பேராண்மைமிக்க பெண்களின் வரலாறு

2. கனலில் பூத்த கவிதைகள் - சிறுகதைத் தொகுப்பு

3. கனவு தேசம் - சிறுகதைத் தொகுப்பு

4. நம்பிக்கை ஒளி, வெண்ணிலவில் ஒரு கருமுகில்  - குறுநாவல்கள்

5.யாதுமாகி நின்றாய் - சிறுகதைத் தொகுப்பு

6.வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா - தன்னம்பிக்கை கட்டுரைத் தொகுப்பு

7.கதை, கதையாம் காரணமாம் - குழந்தைகளுக்கான கதைகள்

8.அன்பெனும் சிறைக்குள் - சிறுகதைத் தொகுப்பு

9.இப்படிக்கு நான் - வாழ்க்கை வரலாறு

10. நயமிகு நங்கையர் - கட்டுரைத் தொகுப்பு

11. கெய்ஷா  - ஜப்பானிய புதினம் - மொழிபெயர்ப்பு


ஆக்கத்தில் உள்ளவை

அமெரிக்க பயணக் கட்டுரை - புலம்பெயர் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்தது


விருதுகள்:

சக்தி விருது - திருப்பூர் அரிமா சங்கம்

கவின் கலைமாமணி விருது - தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு


நன்றி


அன்புடன்

பவள சங்கரி

Email – cor...@gmail.com

Facebook - https://www.facebook.com/pavala.sankari.9



bala subramani

unread,
Sep 8, 2015, 12:10:33 AM9/8/15
to mintamil
The legend of Queen Heo Hwang-ok - the first queen of Korea.  A Review of Historizing her as the princess from India.

Prof.V.Nagarajan

Virtual freelance researcher
and
Member, research Group, Min Tamil Group on tamil-korea
Mobile: 09003271687


                                                Abstract
Though Korea has a long history of its own, until 9nth century   it remained as unknown and forbidden land eclipsed by China and Japan. 

 The first publication of its history  ‘Samguk Yusa’ or ‘The Heritage History of the Three Kingdoms’, a treasured work in Korea which was written in the 13th century enabled the Koreans to understand their longstanding history, heritage and legacy.  Based on the premise Korean scholars believed tht their first queen has come from a far of land known by the name Ayuktha. 

 When they commenced the research they first identified Ayuktha Kindom of Thailand and subsequently reached Ayodhya of India.  Prima facie they believed that sufficient materials are available to accept that their first queen was the Princess of Ayodhya.

It is a fact that the premise that their queen happened to be the Prince of Ayodhya was proposed by Korean scholars and it was finalised by the Korean scholars in an a priori manner. There were no perceivable evidence and response from the India scholars.  Though planned attempts were initiated for building an impressive memorial for the queen no further research attempt was made to establish the fact as tenable.  Even today it remains as a legend and historizing the queen as the Prince of Ayodhya remains frozen without any further research.


 The present paper is an attempt to revisit and review the historizing process of Korean queen as the Indian prince.

The aproach to historize the legend is a move by Korea based on the documentary evidences available with them. According to their sources the prince from India travelled by boat having red colour flag with twin fish. She was accompanied by her brother and a team of 22 members as an embassy to meet the King Suro of Kaya Kingdom.  She travelled for three months and reached the Koean shore and she married King Suro on 24th June CE 48.  She carried with her valuable presents such as precious stones, tea plants, seven storm preventing stones and 12 stringed musical instrument. During her lifetime it was documented that she made a request to the King to name on of their sons to represent her lineage. Based on this paradigm the Korean scholars commenced their efforts and focussed first on Ayuktha of Thailand and later focussed on the Ayodhya of North India as the probablr birt place of the first queen of Korea.

The present paper by using the desk research proposed to analyse the available documents, maps and other heritage resources to verify the legend linking Korean queen to the princess of India. Through the use of triangulation an attempt is being made to verify the historizing of Ayodhya princess as untenable.

  The materilas gathered from multiple sources revealed that during the first century CE there was no kingdom as Ayodhya and it is untenable to accept the she travelled from a land locked place by boat that too in the month of June in the  Bay of Bengal.  Further the evidences clearly points out that the princess may not be responsible to introduce Tamil Buddhism before the official spread of Buddhism in Korea during 400 CE. 

The present paper goes to prove that the historizing of the legend may lead to a tenable hypothesis that the princess be from south India particularly from Pandiya kingdom The available evidences clearly indicate that the group of sea traders, Artisans, Buddhist monks frequently travelled to China and to other far east countries. Occasionally the royal clans travelled along with them and represented the sovereignty for bilateral trade and cultural relations

The paper further points out the direction for future research initiatives by proposing the new hypothesis that the Korean queen may be the Princess from Ay country of Tamilnadu and not from Ayodhya.
--------------------------------------------------------- 

N. Kannan

unread,
Sep 8, 2015, 3:38:10 AM9/8/15
to மின்தமிழ்
2015-09-08 0:29 GMT+08:00 bala subramani <sunke...@gmail.com>:
அன்புள்ள பேராசிரியர் கண்ணன் அவர்களுக்கு 

 நமது கட்டுரைகள் கொரியா தமிழ் வரலாற்று உறவுகளை தென் கிழக்கு ஆசிய உறவுகளின்  நீட்சியாக மட்டும்  பற்றித் தான் பேச வேண்டும் 

. தமிழனின் தொன்மை பற்றிப் பேசினால் போதாது இரு நாட்டிற்க்கும் உள்ள தொடர்புகளை தமிழர்களிடம் வேர் ஊன்றி  உள்ள சீனா தொடர்புகளில் இருந்து பிரித்து எடுத்து தமிழ் வைணவம்  ஆசிவகம் மற்றும்  பவுத்தத்தின் கடலோடும் தன்மையின் மூலம் காண்பிக்க வேண்டும் 

​அதுதான் நமது நோக்கு. ஆனால் மின்தமிழ் நண்பர்களுக்குக் கொரிய வாழ்வியல் பரிட்சயமில்லாத ஒன்று. எனவே திடுதிப்பென்று கொரியா பற்றி எழுது என்றால் மிரண்டுவிடுவர். எனவே நமக்கு கடல் வாணிபத்தொன்மை உள்ளது நாம் இந்தக்கதை நிகழ்ந்த போது உலகெலாம் அளந்து கொண்டிருந்தோம் என்று காட்டுவது முக்கியம். ஒன்று primary data மற்றது secondary data . இரண்டும் வேண்டும்.

நா.கண்ணன்​
 

Seshadri Sridharan

unread,
Sep 8, 2015, 1:51:48 PM9/8/15
to mintamil, Oru Arizonan, tshrin...@gmail.com, வேந்தன் அரசு, mani muthu, balasundar...@gmail.com, Pandiyaraja Paramasivam, நா. கணேசன், ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, malarm...@gmail.com, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, doraisu...@gmail.com, rkc...@gmail.com, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, megala.r...@gmail.com, பெருமாள் தேவன், இராமகி, coral shree
பவளா அம்மையார்க்கு வாழ்த்துக்கள்  கட்டுரையை தமிழில் வழங்கியதற்காக 

ஆதன் 
Reply all
Reply to author
Forward
0 new messages