கலைமகள் நாமகள் சரசுவதி சிந்தாதேவி

581 views
Skip to first unread message

venkatram dhivakar

unread,
Oct 13, 2008, 6:38:56 AM10/13/08
to minT...@googlegroups.com
கலைமகள், நாமகள், சரசுவதி, சிந்தாதேவி வித்யாதேவி இப்படி எத்தனையோ பெயர் கொண்டவள்தான் சரசுவதி.

ஆனால் தமிழில் எண்ணனை என்பது இலக்குமி தேவியான அலைமகளையும், கொற்றவை என்பது துர்க்கையான மலைமகளையும் குறிப்ப்துபோல
ஒரே வார்த்தையில் கலைமகளை செந்தமிழில் குறிக்க வார்த்தை உண்டாயின் ஆன்றோர்கள் உதவி அருளவும்

திவாகர்

Tthamizth Tthenee

unread,
Oct 13, 2008, 6:44:43 AM10/13/08
to minT...@googlegroups.com
வாணி
வரபுத்தகபாணி
வேணி
நான்முகன் தேவீ
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008 அக்டோபர் 13 16:08 அன்று, venkatram dhivakar <venkdh...@gmail.com> எழுதியது:

venkatram dhivakar

unread,
Oct 13, 2008, 7:25:42 AM10/13/08
to minT...@googlegroups.com
மன்னிக்கவும்

வாணியும் வேணியும் சுருக்க வார்த்தைகள். அதாவது கலைவாணி கிருஷ்ணவேணி..

ஒரே வார்த்தையில் முயற்சி செய்யுங்களேன்

தி

2008/10/13 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Oct 13, 2008, 7:35:24 AM10/13/08
to minT...@googlegroups.com
கலாவல்லி
 
அன்புடன்
தமிழ்த்தேனி

2008 அக்டோபர் 13 16:55 அன்று, venkatram dhivakar <venkdh...@gmail.com> எழுதியது:

venkatram dhivakar

unread,
Oct 13, 2008, 7:59:28 AM10/13/08
to minT...@googlegroups.com
தேனியாரே!

ஒரே வார்த்தைதான் தேவை சார்! பிரித்துப் பதம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கவேண்டும்.

எண்ணனை என்பது இலக்குமி - கொற்றவை என்பது பார்வதி / இவை இரண்டும் தமிழில் உள்ளன. ஆகையினால் கலைவாணிக்கும் ஒரே வார்த்தை இருக்கவேண்டும் - தமிழில் இல்லாததா என்றுதான் கேட்கிறேன். மேலும் சரசுவதி சமயபேதமில்லாமல் எல்லோர் வாயாலும் புகழப்படுபவள். மாணிக்கவாசகர் தில்லையில் பௌத்தர்களுடன் வாதம் செய்யும் போது சரசுவதி இருவர்க்கத்தினருக்கும் பொதுவாக இருந்தவள் என்பதும், ஆதிசங்கரர் அமரகோசருடன் வாதம் செய்யும்போது அமரர் வாதத்தில் அவர் நாத்திகனாக இருந்தும் அமரரால் துதிக்கப்பட்டவள் என்பதும் அறிந்ததுதான்.

மணிமேகலையில் சரசுவதி 'சிந்தாதேவி' எனப் பாடப்படுகிறாள்.

எங்கேயாவது தமிழன் அவளை ஒரே வார்த்தையில் அழைத்திருக்கவேண்டும். அந்த ஒரு வார்த்தை என்ன.. என்றுதான் கேட்கிறேன். அப்படி இல்லையென்றால் மின் தமிழ் கொடுக்கலாமே..

இந்த சந்தேகம் என் நண்பர் திரு சம்பத் (ஹிந்து நாளிதழ்) அவர்களுக்கு உண்டானது.. இப்போது எனக்கும் தொற்றிக்கொண்டது.

தி

Tthamizth Tthenee

unread,
Oct 13, 2008, 9:18:36 AM10/13/08
to minT...@googlegroups.com
தேடுவோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008 அக்டோபர் 13 17:29 அன்று, venkatram dhivakar <venkdh...@gmail.com> எழுதியது:

Kumaran Malli

unread,
Oct 13, 2008, 10:21:42 AM10/13/08
to minT...@googlegroups.com

ஐயா,

இலக்குமிக்கு எண்ணனை என்ற பெயர் உண்டென்பதை இன்று தான் அறிந்தேன். எந்த இலக்கியத்தில் அந்தப் பெயருடன் இலக்குமி அழைக்கப்படுகிறாள் என்று சொல்கிறீர்களா?

அன்பன்,
குமரன்.

venkatram dhivakar

unread,
Oct 13, 2008, 10:32:11 AM10/13/08
to minT...@googlegroups.com
"எண்ணணைக்கு இலங்கி மார்பம் ஈந்த பிரானை
வண்ணனை திகிரிசங்கம் வலமிடம் உறக் கொண்டானை" -
 
குசேலோபாக்கியானம்
எழுதியவர் பெயர் என் குறிப்பில் இல்லை.
 
தி


 
2008/10/13 Kumaran Malli <kumara...@gmail.com>

Kumaran Malli

unread,
Oct 13, 2008, 11:05:17 AM10/13/08
to minT...@googlegroups.com

நன்றி ஐயா.

குசேலோபாக்கியானம் என்று இணையத்தில் தேடினால் கிடைக்கும் சுட்டிகள் இதனை இயற்றியவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் என்று சொல்கின்றன.

2008/10/13 venkatram dhivakar <venkdh...@gmail.com>

devoo

unread,
Oct 13, 2008, 11:48:35 AM10/13/08
to மின்தமிழ்


On Oct 13, 8:05 pm, "Kumaran Malli" <kumaran.ma...@gmail.com> wrote:

// குசேலோபாக்கியானம் என்று இணையத்தில் தேடினால் கிடைக்கும் சுட்டிகள்
இதனை
இயற்றியவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் என்று சொல்கின்றன.//


குசேலோபாக்கியானத்தை நிறைவு செயதது பிள்ளையவர்கள்; அது பங்களூர் தேவராஜ
முதலியார் என்ற அவர்தம் சீடரின் பெயரால் வெளியானது. ஒரு பகுதி
முதலியாரும் பின்னர் மறு பகுதி பிள்ளையவர்களும் எழுதியதாகத் தெரிகிறது.

தேவ்

Satheesh kumar R

unread,
Oct 13, 2008, 10:02:46 AM10/13/08
to minT...@googlegroups.com
ஐயா,

பாரதி என்றும் கலைமகளை அழைப்பார்கள்...

மேலும் கா - என்றாலும் சரசுசவதி என்கிறது  அகராதி.

சதீஷ் குமார்

2008 அக்டோபர் 13 16:08 அன்று, venkatram dhivakar <venkdh...@gmail.com> எழுதியது:
கலைமகள், நாமகள், சரசுவதி, சிந்தாதேவி வித்யாதேவி இப்படி எத்தனையோ பெயர் கொண்டவள்தான் சரசுவதி.

Kumaran Malli

unread,
Oct 13, 2008, 9:18:57 PM10/13/08
to minT...@googlegroups.com

க என்றால் வடமொழியில் பிரம்மனைக் குறிக்கும். கா என்றால் தமிழில் சரஸ்வதியின் பெயரா? சரி தான். :-)

சிவ என்றால் சிவன்; சிவா என்றால் சக்தி என்று வடமொழி கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.

அதே போல் க்ருஷ்ண என்றால் கண்ணன்; க்ருஷ்ணா என்றால் த்ரௌபதி.

venkatram dhivakar

unread,
Oct 14, 2008, 12:36:46 AM10/14/08
to minT...@googlegroups.com
பாரதி வடமொழிப் பெயர்.

கிருஷ்ண அல்லது கிருஷ்ணா என்றால் மேகத்துக் கருமையைக் குறிக்கும். இருவருமே (கண்ணன் மற்றும் பாஞ்சாலி கருமை அழகு பெற்று சிறந்தவர்கள். (Ref. 'Krishna' series K.M.Munshi) இருவருக்குமே கிருஷ்ண என எழுதினால் மாபாரதத்தில் பெயர்க் குழப்பம் வரலாம் என்று சற்று வேற்றுமை காட்டினார்களோ என்னவோ..

அது சரி.. சரசுவதிக்கு ஒரு அழகான தமிழ்ப்பெயர் நாம்தான் சூட்டுவோமே..

தி

2008/10/14 Kumaran Malli <kumara...@gmail.com>

Shylaja N

unread,
Oct 14, 2008, 12:47:24 AM10/14/08
to minT...@googlegroups.com
On 14/10/2008, venkatram dhivakar <venkdh...@gmail.com> wrote:
பாரதி வடமொழிப் பெயர்.

கிருஷ்ண அல்லது கிருஷ்ணா என்றால் மேகத்துக் கருமையைக் குறிக்கும். இருவருமே (கண்ணன் மற்றும் பாஞ்சாலி கருமை அழகு பெற்று சிறந்தவர்கள். (Ref. 'Krishna' series K.M.Munshi) இருவருக்குமே கிருஷ்ண என எழுதினால் மாபாரதத்தில் பெயர்க் குழப்பம் வரலாம் என்று சற்று வேற்றுமை காட்டினார்களோ என்னவோ..

அது சரி.. சரசுவதிக்கு ஒரு அழகான தமிழ்ப்பெயர் நாம்தான் சூட்டுவோமே..

தி>>
 
 
வாணி

annamalai sugumaran

unread,
Oct 14, 2008, 12:59:03 AM10/14/08
to minT...@googlegroups.com
நாக்கரசி,     நாவுக்கரசி ,      அறிவுக்கரசி ,அறிவுடை நாயகி , நாயகி , சரிவருமா ?
என்றும் அன்புடன் ,
ஏ.சுகுமாரன்

Narayanan Kannan

unread,
Oct 14, 2008, 12:59:36 AM10/14/08
to minT...@googlegroups.com
என்ன குழப்பம்?

நாமகள் என்று வேறு யாருக்காவது பேருண்டா? என்ன?

கண்ணன்

2008/10/13 venkatram dhivakar <venkdh...@gmail.com>:

venkatram dhivakar

unread,
Oct 14, 2008, 1:02:01 AM10/14/08
to minT...@googlegroups.com
மறுபடியும் கேட்கிறேன். ஒரே வார்த்தையில் பெயர் வேண்டும்.
தி

2008/10/14 Narayanan Kannan <nka...@gmail.com>

kalyana gurukkal

unread,
Oct 14, 2008, 4:43:26 AM10/14/08
to minT...@googlegroups.com
பேச்சாயி

2008/10/13 venkatram dhivakar <venkdh...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 14, 2008, 4:47:17 AM10/14/08
to minT...@googlegroups.com
பேச்சி என்றே சொல்லுவோம், எங்க பக்கத்திலே!

2008/10/14 kalyana gurukkal <guru...@gmail.com>

Narayanan Kannan

unread,
Oct 14, 2008, 4:58:20 AM10/14/08
to minT...@googlegroups.com
2008/10/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

> பேச்சி என்றே சொல்லுவோம், எங்க பக்கத்திலே!
>

ஓ! இது சாமி பெயரென்று தெரியும். எந்தச் சாமி என்று இப்போதுதான் தெரிந்தது!

ஆனால் இது "பேய்ச்சி" க்கு நெருங்கி வருகிறது. "நல்லதோர் வீணை செய்து...!"

க.>

Geetha Sambasivam

unread,
Oct 14, 2008, 5:02:22 AM10/14/08
to minT...@googlegroups.com
பேய்ச்சி என்று சொல்லுவதில்லை. பேச்சி அம்மன் என்றே சொல்லிப் பார்த்திருக்கேன். பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சி அம்மன் கோயிலுக்கு நேர்ந்து கொள்ளும் வழக்கமும் உண்டு.

2008/10/14 Narayanan Kannan <nka...@gmail.com>

Narayanan Kannan

unread,
Oct 14, 2008, 5:11:40 AM10/14/08
to minT...@googlegroups.com
உண்மைதான்.

பேச்சி அம்மன் என்றுதான் நானும் கேள்விப்பட்டுள்ளேன்.

அது சரஸ்வதி என்று தெரியாது. ஏனெனில், பிரம்மா, சரஸ்வதி வழிபாடு அவ்வளவு
பிரபலமில்லை. என் இஷ்ட தெய்வம் எப்போதும் ஒரு பிரகார தேவதையாக சிவன்
கோயிலில், சின்ன விளக்கொளியில் அமர்ந்திருக்கும்.

பேச்சி அம்மன் என்பது கிராம தேவதை. ஆனால் அது சரஸ்வதி என்றால், இது புதிய
ஆய்விற்கு இட்டுச்செல்லும்.

ஏனெனில் ஐயனார் எனும் காவல் தெய்வம் சமணக்கடவுள். சமண வழிபாட்டில்
கல்விக்கு தேவதையுண்டு. அப்படியெனில் பேச்சி அம்மனும் சமண தெய்வமாக வந்து
இந்து தெய்வமாக மாறியிருக்க வேண்டும்!

நான் "பேய்ச்சி" என்று சொன்னது பூதணையை (பேய்ச்சி முலையுண்ட...என்று பாசுரம்)

கண்ணன்

2008/10/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Oct 14, 2008, 5:17:14 AM10/14/08
to minT...@googlegroups.com
//நான் "பேய்ச்சி" என்று சொன்னது பூதணையை (பேய்ச்சி முலையுண்ட...என்று பாசுரம்//
 
புரிந்து கொண்டே, பேச்சு வராத குழந்தைகளுக்கு நேர்ந்து கொள்ளுவதைக் குறிப்பிட்டேன். :))))))))

2008/10/14 Narayanan Kannan <nka...@gmail.com>

vj kumar

unread,
Oct 14, 2008, 5:29:47 AM10/14/08
to minT...@googlegroups.com
dear sir

There is another line of thought on sapta matrikas - Brahmani,
Maheshvari, Kaumari, Vaishnavi, Varahi, Indrani, Chamundi and their
later linkages with the main hindu gods to become their consorts. ( if
i am not wrong)

rgds
vj

2008/10/14 Narayanan Kannan <nka...@gmail.com>:

vj kumar

unread,
Oct 14, 2008, 5:31:28 AM10/14/08
to minT...@googlegroups.com
The only temple in South India dedicated to Goddess Saraswati at
Koothanur, it is situated enroute from Thiruvarur to Mayiladuthurai,
1/2 km from Poonthottam bus stand. Originally it was known as
Ambalpuri. It was also known as 'Hari Nageswaram'. During the reign of
Raja Raja Chola II this village was gifted to the court poet
'Ottakuthar'. So it came to be known by its present name 'Koothanur'.
A stone edict at the temple attributes the construction of this temple
to Poet Ottakuthar.

devoo

unread,
Oct 14, 2008, 5:55:15 AM10/14/08
to மின்தமிழ்


On Oct 13, 3:44 pm, "Tthamizth Tthenee" <rkc1...@gmail.com> wrote:

// வேணி//

’வேணி’ என்பது பின்னலைக் குறிக்கும் வடசொல். இரட்டைப் பின்னலை ’ரெட்டை
ஜடை’ என்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பர். அது கலைமகளுக்கான
பெயர் அன்று.
ஸரஸ்வதி தேவிக்கான தொன்மையான தமிழ்ப்பெயர் இருக்க வேண்டும் என்று திவாகர்
ஐயா ஊகிக்கிறார். அவர் கூறுவதைச் சற்றுப் புரிந்து கொள்ளுங்கள்
அன்பர்களே!

தேவ்

Hari Krishnan

unread,
Oct 14, 2008, 6:07:55 AM10/14/08
to minT...@googlegroups.com
2008/10/13 venkatram dhivakar <venkdh...@gmail.com>
கலைமகள், நாமகள், சரசுவதி, சிந்தாதேவி வித்யாதேவி இப்படி எத்தனையோ பெயர் கொண்டவள்தான் சரசுவதி.

ஆனால் தமிழில் எண்ணனை என்பது இலக்குமி தேவியான அலைமகளையும், கொற்றவை என்பது துர்க்கையான மலைமகளையும் குறிப்ப்துபோல
 
எண்ணனை என்ற சொல் எனக்குத் தமிழ்ப் பேரகராதியில் கிட்டவில்லை.  இத்தனை ஆண்டு தமிழ் இலக்கியப் பயிற்சியில் இதுவரையில் கேள்விப்படாத பெயராக இருக்கிறது.
 
இந்தச் சொல்லுக்கு இலக்கிய ஆட்சி இருந்தால் குறிப்புகளைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
வாணி என்பது தமிழ்ப் பெயரோ என்று தோன்றச் செய்கிறது.  தமிழ்வாணி என்றே பாரதி வாணியை அழைத்திருக்கிறான்.  சந்தவசந்தக் குழுவில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  அங்கே நான் எழுதியது இது:
 
=====================
"ஒளிவளரும் தமிழ்வாணி அடியனற் கிவையனைத்தும் உதவுவாயே" (தெளிவுறவே அறிந்திடுதல்)
 
"தெள்ளுகலைத் தமிழ் வாணிநினக்கொரு விண்ணப்பம் செய்திடுவேன்" (நெஞ்சுக்கு நீதியும்)
 
ஆனாலும், வாணி முழுக்க முழுக்கத் தமிழ்ப் பெயர் இல்லை.  வாணீசன் என்று பிரமனுக்குப் பெயர் உண்டு.  ஆகவே வின்ஸ்லோ பார்த்தேன்:
 
*வாணி, (p. 929) [ *vāṇi, ] s. [also பாணி.] Word, langu age, சொல். 2. Speech, சொல்லுகை. 3. Sarasvati, the goddess of learning, சரஸ்வதி. W. p. 749. VAN'EE. 4. A play, a dance, கூத்து. 5. (சது.) Water, as பாணி.
 
s என்ற எழுத்து ஸமஸ்கிருதச் சொல் என்பதைக் குறிக்கிறது.
=====================
 
அங்கே எழுதியபின், இதோ இதை எழுதிக்கொண்டிருக்கும்போதுதான் தமிழ்ப் பெயர் நினைவுக்கு வருகிறது.  நாமகள். வாகீஸ்வரி என்பதற்கு இணையான தமிழ்ப் பெயர். 
 
காட்டுக்குச் செல்லும் ராமன், முதலில் பரத்வாஜர் ஆசிரமத்துக்கு வருகிறான்.  'இங்கேயே தங்கிவிடு, வேறெங்கும் போக வேண்டாம்' என்று பரத்வாஜர் வேண்டுகோள் வைக்கிறார்.  அப்போது அவர் சொல்வது:
 
'கங்கையாளொடு கரியவள், நாமகள், கலந்த
சங்கம் ஆதலின், பிரியலென்; தாமரைச் செங்கண்
அம் கண் நாயக! அயனுக்கும், அரும் பெறல் தீர்த்தம்;
எங்கள் போலியர் தரத்தது அன்று; இருத்திர் ஈண்டு' என்றான்.
 
'இந்த இடம் கங்கை, யமுனை, ஸரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடம்.  ஆகவே இந்த இடத்திலேயே தங்கியிருப்பாயாக'.  கங்கையாள் என்பது கங்கயையும், கரியவள் என்பது யமுனையையும் நாமகள் என்பது ஸரஸ்வதி (நதியையும்) குறிக்கின்றன.  நினைவுக்கு எட்டிய வரையில் இந்தப் பாடல் மட்டும்தான் கம்பராமாயணம் முழுமையிலும் நாமகள் என்ற சொல் பயிலும் ஒரே பாடல்.  (கம்பனுடைய சரஸ்வதி அந்தாதியில் தேடினால் வேறு தமிழ்ப் பெயர்கள் கிட்டலாம்.)
 
சீவக சிந்தாமணியின் தொடக்கமே நாமகள் இலம்பகம் என்றுதான் தொடங்குகிறது.  ஆக, சமணர்களும் நாமகளை மறுக்கவில்லை.:-)


--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Oct 14, 2008, 6:13:10 AM10/14/08
to minT...@googlegroups.com


2008/10/14 Hari Krishnan <hari.har...@gmail.com>



2008/10/13 venkatram dhivakar <venkdh...@gmail.com>
கலைமகள், நாமகள், சரசுவதி, சிந்தாதேவி வித்யாதேவி இப்படி எத்தனையோ பெயர் கொண்டவள்தான் சரசுவதி.
 
சீவக சிந்தாமணியின் தொடக்கமே நாமகள் இலம்பகம் என்றுதான் தொடங்குகிறது.  ஆக, சமணர்களும் நாமகளை மறுக்கவில்லை.:-)


--
அன்புடன்,
ஹரிகி.
 
இந்தக் கேள்வியை எழுப்பிய அன்பருக்கு 'நாமகள்' என்பது இரண்டு சொற்களைக் கொண்ட தொடரோ என்ற ஐயம் இருக்கும் போலிருக்கிறது.  இல்லை.  அது ஒருசொல்தான்.  கண்ணை உடையவன் கண்ணன்; நாவுக்கு உரியவள் நாமகள். 

Hari Krishnan

unread,
Oct 14, 2008, 6:16:08 AM10/14/08
to minT...@googlegroups.com


2008/10/14 Narayanan Kannan <nka...@gmail.com>
விபரீதமாகப் போகிறதே!  பேய்ச்சி முலையுண்ட வாயரே!  நீர் உண்ட மார்பை மறக்கவும் செய்தீரோ?  அம்மம் தாரேன் என்று பெரியாழ்வார் அஞ்சியது ஏன் என்பதும் மறந்ததோ!

Narayanan Kannan

unread,
Oct 14, 2008, 6:17:08 AM10/14/08
to minT...@googlegroups.com
> இந்தக் கேள்வியை எழுப்பிய அன்பருக்கு 'நாமகள்' என்பது இரண்டு சொற்களைக் கொண்ட
> தொடரோ என்ற ஐயம் இருக்கும் போலிருக்கிறது. இல்லை. அது ஒருசொல்தான். கண்ணை
> உடையவன் கண்ணன்; நாவுக்கு உரியவள் நாமகள்.


பிரச்சனை தீர்ந்தது!

க.>

Hari Krishnan

unread,
Oct 14, 2008, 6:17:50 AM10/14/08
to minT...@googlegroups.com


2008/10/14 devoo <rde...@gmail.com>



On Oct 13, 3:44 pm, "Tthamizth Tthenee" <rkc1...@gmail.com> wrote:

// வேணி//

'வேணி' என்பது பின்னலைக் குறிக்கும் வடசொல். இரட்டைப் பின்னலை 'ரெட்டை
ஜடை' என்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பர். அது  கலைமகளுக்கான
பெயர் அன்று.
 
ஆமாம்.  வேணி என்பதற்கு உள்ள பல பொருளில், சடாமுடி என்பதும் ஒன்று.  வின்ஸ்லோ தரும் பொருள் இது:
 
*வேணி, (p. 964) [ *vēṇi, ] s. A river, நதி. [See திரிவேணி.] 2. Air, ether, ஆகாயம். 3. A street of herdsmen, இடையர்வீதி. 4. Matted hair, மயிர்ச்சடை. (சது.) 5. A root of a tree, மரவேர்.

devoo

unread,
Oct 14, 2008, 6:26:55 AM10/14/08
to மின்தமிழ்
// கரியவள், *நாமகள்*, ஹரிகி.//

ஹரி ஐயா சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ஆனாலும் சங்க இலக்கியங்களில்
ஆழ்ந்த புலமையுடையோர் சற்று ஆராந்து பார்த்தால் வேறு சொற்கள் கிட்டலாம்.

‘யமுனை’ நதியைக் குறிக்கும் பைந்தமிழ்ச் சொல் ‘தொழுநை’.
தாம்ரபர்ணிக்கான சொல் ‘பொருநை’.
பவானி நகருக்கான சொல் ‘திரு நணா’.

இவை காலப்போக்கில் வழக்கொழிந்து விட்டன.

தேவ்

Narayanan Kannan

unread,
Oct 14, 2008, 6:43:43 AM10/14/08
to minT...@googlegroups.com
2008/10/14 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> விபரீதமாகப் போகிறதே! பேய்ச்சி முலையுண்ட வாயரே! நீர் உண்ட மார்பை மறக்கவும்
> செய்தீரோ? அம்மம் தாரேன் என்று பெரியாழ்வார் அஞ்சியது ஏன் என்பதும் மறந்ததோ!


அது சரி!

இந்த ஹரி, இந்த கிருஷ்ணன் என்ன செய்தது தெரியுமா?

"பொல்லாவடிவுடைப்பேய்ச்சி" என்றும்,
"முனிவஞ்சப் பேய்ச்சி" என்றும்

எல்லோரும் நடு, நடுங்க...இது சும்மாக்காச்சும் பால் குடித்து 'இந்தப்
பூனையும் பால் குடிக்குமா?' எனும் பாவனையில் உறங்குகிறதாம்.

ஏண்டா? அரக்கிட்ட போய் பால் குடிச்சே? நாங்களெல்லாம் இங்க இருக்கிறது
தெரியலை? யசோதை, பிற ஆச்சியர் இருக்க பூதணை முலை உண்ணுவானேன்?

ஏனா? அவ அம்மா போல வந்தா! அதுதான் அம்மாவென்று நினைத்து பால் குடித்தேன்.

பாத்தா தெரியலை? பிசாசு, பேய்!!

கிருஷ்ணனுக்கு எப்படி பயம் வரும் அவன் இரணியன் நெஞ்சையே பிளந்தவன். இது
வெறும் பூதணைதானே!

பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே!
குவிமுலையீர். வந்துகாணீரே!!

இவ்வளவு கொஞ்சல்! எங்கள் கண்ணனுக்கு! (பெரியாழ்வார்)

இதுவோ, ஆய்ச்சி பாலை உண்கிறது, கோகுலத்து மண்ணை உண்கிறது, பின் அது
ஜெரிக்க வெண்ணை உண்கிறது, போதாதற்கு பேய்ச்சி பாலை வேறு குடிக்கிறது!!

ஆய்ச்சிபாலை யுண்டுமண்ணை
யுண்டுவெண்ணெ யுண்டு,பின்
பேய்ச்சிபாலை யுண்டுபண்டொ
ரேனமாய வாமனா. (ஆண்டாள்)

இது என்னதான் செய்தாலும் கோகுலத்து தாய்மார்கள் இதற்கு பால் கொடுக்க,
கால் கடுக்கக் காத்து நிற்பதே உண்மை!!

பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம்
ஆய்ச்சியரெல்லாம்கூடி அழைக்கவும்நான்முலைதந்தேன்
காய்ச்சினநீரொடுநெல்லி கடாரத்தில்பூரித்துவைத்தேன்
வாய்த்தபுகழ்மணிவண்ணா. மஞ்சனமாடநீவாராய்.

(காய்ச்சின நீரோடு நெல்லியைப் போட்டுக் குழந்தைக்குக் குளிப்பாட்டினால்
நல்லது போலும். பாட்டி வைத்தியம் சொல்கிறார் பெரியாழ்வார்)

கண்ணன்

devoo

unread,
Oct 14, 2008, 8:02:01 AM10/14/08
to மின்தமிழ்


On Oct 14, 3:17 pm, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:
.
// வேணி என்பதற்கு உள்ள பல பொருளில், சடாமுடி என்பதும் ஒன்று.  //

’கூனலிளம் பிறை முடித்த வேணியலங்காரர்’
என்று பிறை மவுலிப் பெருமானைப் போற்றுகிறது குற்றாலக் குறவஞ்சி.

தேவ்

Hari Krishnan

unread,
Oct 14, 2008, 8:48:40 AM10/14/08
to minT...@googlegroups.com


2008/10/14 devoo <rde...@gmail.com>
நிலவுலாவிய நீர்மலி வேணியன் -- பெரிய புராணம்
 

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்

கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,

மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்

துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.
 
அபிராமி அந்தாதி. 
 
நிறைய சொல்லலாம்.  தேவாரத்திலேயே ஏராளமாக அகப்படும். 

devoo

unread,
Oct 14, 2008, 9:02:51 AM10/14/08
to மின்தமிழ்


On Oct 13, 3:38 pm, "venkatram dhivakar" <venkdhiva...@gmail.com>
wrote:
//நாமகள் //

’நாமகள்’ எனும் பதத்தையே சம்பந்தர் தேவாரத்திலிருந்து
எடுத்துக்காட்டுகிறார் அன்பர் திரு.சுப்ரமண்யம் (குழுமம்-சந்த
வசந்தம்).

தேவ்

venkatram dhivakar

unread,
Oct 14, 2008, 10:39:26 AM10/14/08
to minT...@googlegroups.com
ஹரிகி அவர்களே,
 
>>கண்ணை உடையவன் கண்ணன்; நாவுக்கு உரியவள் நாமகள்<<
 
கண்ணன் என்பது போல நாவி என்று வந்தால் சரியாக இருக்கும் போலும். ஆனால் மகள் என்பது இன்னொரு வார்த்தைதானே.
 
நீங்கள் முயன்றால் முடியும் என்றே தோன்றுகிறது.
 
'எண்ணணை' பற்றி ஏற்கனவே விளக்கம் இதே பதிவில் குறிப்பிட்டுள்ளேனே.
 
கண்ணன்!
பேச்சுக்கு அரசி என்பதால் பேச்சி என்பதும் ஒப்புக்கொள்ளவேண்டிய வார்த்தைதானே.. ஏன் வார்த்தையின் நடுவில் ஒரு 'ய்' சேர்க்கவேண்டும்? இப்படி நாம் பார்த்தால் எத்தனையோ சொற்களில் 'ஒரு சொல் சேர்த்து' பிழை கண்டுபிடிக்கமுடியும் அல்லவா?
 
தி
2008/10/14 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Oct 14, 2008, 11:13:52 AM10/14/08
to minT...@googlegroups.com


2008/10/14 venkatram dhivakar <venkdh...@gmail.com>

ஹரிகி அவர்களே,
 
>>கண்ணை உடையவன் கண்ணன்; நாவுக்கு உரியவள் நாமகள்<<
 
கண்ணன் என்பது போல நாவி என்று வந்தால் சரியாக இருக்கும் போலும். ஆனால் மகள் என்பது இன்னொரு வார்த்தைதானே.
 
சென்னைப் பல்கலைக் கழக லெக்சிகன் இருந்தால் எடுத்துப் பாருங்கள்.  நாமகள், கலைமகள் எல்லாம் ஒருசொல்லாகத்தான் இட்டிருக்கிறார்கள்.  நா மகள் என்று இடைவெளிவிட்டு எழுதும் வழக்கமே இல்லை.
 
கலைமகள், கலைமான், கலைஞானி என்று நாம் இரண்டு சொற்களாக நினைத்துக் கொண்டிருப்பதை எல்லாம் பல்கலைக் கழக லெக்சிகன் ஒரு சொல்லாகத் தந்திருக்கிறது.  (ஒற்றைச் சொல்லாக இருந்தால் மட்டுமே லெக்சிகன் பொருள் தரும்.  சொற்றொடருக்குப் பொருள் தராது என்பது கவனிக்க வேண்டியது.)  குறிப்பிட்ட பக்த்தின் புகைப்படத்தை இணைத்திருக்கிறேன்.  நாமகளும் இவ்வாறே ஒருசொல் என்றுதான் இலக்கணப்படி சொல்லப்படுகிறது.  (நான் சொல்வது இருக்கட்டும்.  லெக்சிகனை விடவும் பெரிய அதாரிடி தேவைப்படாது அல்லவா.)
 
 
 
நீங்கள் முயன்றால் முடியும் என்றே தோன்றுகிறது.
 
யோசிக்கிறேன்.  வேறு ஏதேனும் பெயர் அகப்பட்டால் சொல்கிறேன். 
 
'எண்ணணை' பற்றி ஏற்கனவே விளக்கம் இதே பதிவில் குறிப்பிட்டுள்ளேனே.
 
எண்ணனை, அல்லது எண்ணணை எது சரி?  இரண்டு வடிவங்களுமே பல்கலைக் கழகப் பேரகராதியில் இல்லை.  இந்த லெக்சிகன் உவசா போன்ற பெரியவர்களால் (ஒரு பெரிய புலவர் குழு) தொகுக்கப்பட்டது.  ஆகவே, இப்படிப்பட்ட சொற்கள் இடம் பெறாமல் போக வாய்ப்பே இல்லை.  பழந்தமிழ்ச் செய்யுள் எதிலானும் இந்தச் சொல் பயின்றிருந்தால் குறிப்பிட்டு உதவவும்.  (தங்களுடைய விளக்கம் எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை.) 
Lexicon.jpg

Kannan Natarajan

unread,
Oct 14, 2008, 12:49:07 PM10/14/08
to minT...@googlegroups.com
> 'எண்ணணை' பற்றி ஏற்கனவே விளக்கம் இதே பதிவில் குறிப்பிட்டுள்ளேனே.

>எண்ணனை, அல்லது எண்ணணை எது சரி?  இரண்டு வடிவங்களுமே பல்கலைக் கழகப் பேரகராதியில் இல்லை.  >இந்த லெக்சிகன் உவசா போன்ற பெரியவர்களால் (ஒரு பெரிய புலவர் குழு) தொகுக்கப்பட்டது.  ஆகவே, இப்படிப்பட்ட >சொற்கள் இடம் பெறாமல் போக வாய்ப்பே இல்லை.  பழந்தமிழ்ச் செய்யுள் எதிலானும் இந்தச் சொல் >பயின்றிருந்தால் குறிப்பிட்டு உதவவும்.

ஹரிகி அவர்களின் எண்ணனை, அல்லது எண்ணணைப் பற்றிய வண்ணனை ஓர் தெளிந்த நீரோடை. அவர் சொன்னது போல் பழந்தமிழ்ச் செய்யுளிலும் அப்படியான சொல் பயன்பாடு இருக்குமா என்று நுண்ணாய்வு செய்தாலும், கிட்டுமா என்பது சந்தேகமாக உள்ளது!

சொல்லின் கிழத்தியைப் பற்றிய புலமை வாய்ந்த கலந்துரையாடல் பாராட்டத்தக்கது.

சொல்லின் கிழத்தி மெல்லியல் இணையடி
சிந்தை வைத்து இயம்புவல் செய்யுட் கணியே
. - தண்டியலங்காரம்.

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

2008/10/15 Hari Krishnan <hari.har...@gmail.com>

devoo

unread,
Oct 14, 2008, 10:34:17 PM10/14/08
to மின்தமிழ்


On Oct 14, 8:13 pm, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2008/10/14 venkatram dhivakar <venkdhiva...@gmail.com>

// கலைமகள், கலைமான், கலைஞானி என்று நாம் இரண்டு சொற்களாக நினைத்துக்
கொண்டிருப்பதை எல்லாம் பல்கலைக் கழக லெக்சிகன் ஒரு சொல்லாகத்
தந்திருக்கிறது.//

‘கலைமகள்’ ’நாமகள்’ எனும் சொற்களை ‘புனைபெயர்’, ‘ஊறுகாய்’ போன்ற தொகைச்
சொற்களாகவே கொள்ளவேண்டும் என எண்ணுகிறேன். ஆயினும் திவா ஐயா கருதுவதுபோல்
இரு சொற்களின் தொகுப்பு என்றுதான் ஆகும்.
தேவ்


venkatram dhivakar

unread,
Oct 15, 2008, 1:25:16 AM10/15/08
to minT...@googlegroups.com
"எண்ணணைக்கு இலங்கி மார்பம் ஈந்த பிரானை
வண்ணனை திகிரிசங்கம் வலமிடம் உறக் கொண்டானை" -
 
குசேலோபாக்கியானம்




2008/10/14 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Oct 15, 2008, 1:58:51 AM10/15/08
to minT...@googlegroups.com


2008/10/15 devoo rde...@gmail.com



'கலைமகள்' 'நாமகள்' எனும் சொற்களை 'புனைபெயர்', 'ஊறுகாய்' போன்ற தொகைச்

சொற்களாகவே கொள்ளவேண்டும் என எண்ணுகிறேன். ஆயினும் திவா ஐயா கருதுவதுபோல்
இரு சொற்களின் தொகுப்பு என்றுதான் ஆகும்.
தேவ்

சின்ன ஐயம்.   இரண்டு பெயர்களால் ஒன்றாகக் கூடி, ஒரு பொருளின் பெயராக அமைந்தால் அந்தப் பெயர் ஒரு சொல்லா அல்லது ஒரு சொற்றொடரா?  walking-stick, cutting-pliers, screwdriver எல்லாம் ஒரு சொல்லா அல்லது சொற்றொடரா?  Are these words or phrases?
 
 

Hari Krishnan

unread,
Oct 15, 2008, 2:00:38 AM10/15/08
to minT...@googlegroups.com


2008/10/15 devoo rde...@gmail.com


'கலைமகள்' 'நாமகள்' எனும் சொற்களை 'புனைபெயர்', 'ஊறுகாய்' போன்ற தொகைச்

சொற்களாகவே கொள்ளவேண்டும் என எண்ணுகிறேன். ஆயினும் திவா ஐயா கருதுவதுபோல்
இரு சொற்களின் தொகுப்பு என்றுதான் ஆகும்.
தேவ்

 
புனைபெயர், ஊறுகாய் எல்லாம் வினைத்தொகை. நாமகள் வினைத்தொகையா?

Hari Krishnan

unread,
Oct 15, 2008, 2:04:34 AM10/15/08
to minT...@googlegroups.com


2008/10/15 venkatram dhivakar <venkdh...@gmail.com>

"எண்ணணைக்கு இலங்கி மார்பம் ஈந்த பிரானை
வண்ணனை திகிரிசங்கம் வலமிடம் உறக் கொண்டானை" -
 
குசேலோபாக்கியானம்
 
 
நன்றி.  இந்த இடத்தை கான்டெக்ஸ்டோடு பார்க்கவேண்டும் என்றால், இந்த அடிகள் பயிலும் இடமும் (காண்டம், சருக்கம் முதலான மற்ற) விவரமும் தேவைப்படும் அல்லவா?
 
முடிந்தால் சொல்லவும்.  திரும்பத் திரும்ப சிரமப்படுத்துவதாக எண்ணவேண்டாம்.  இலக்கிய ஆட்சியில் உள்ள ஒரு சொல் Madras University Lexiconல் விடுபட்டிருக்கிறது என்றால் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

Narayanan Kannan

unread,
Oct 15, 2008, 3:40:55 AM10/15/08
to minT...@googlegroups.com
முழுப்பாடலும் கிடைக்குமா?
இப்போதுதான், 'அங்கப்பறை' பற்றி விளக்கமறிந்தோம்!

க.<

2008/10/15 Hari Krishnan <hari.har...@gmail.com>:

Narayanan Kannan

unread,
Oct 15, 2008, 3:57:34 AM10/15/08
to minT...@googlegroups.com
2008/10/15 Hari Krishnan <hari.har...@gmail.com>:

>>
> சின்ன ஐயம். இரண்டு பெயர்களால் ஒன்றாகக் கூடி, ஒரு பொருளின் பெயராக அமைந்தால்
> அந்தப் பெயர் ஒரு சொல்லா அல்லது ஒரு சொற்றொடரா? walking-stick,
> cutting-pliers, screwdriver எல்லாம் ஒரு சொல்லா அல்லது சொற்றொடரா? Are these
> words or phrases?
>

நம்ம கவிஞர் தொடர்வதால் இன்னும் தோண்டச் சொல்கிறது. இதை முதலிலிருந்து
சொல்ல நினைத்தேன். ஓர் சொல் போல் படும் பெயரும் கூட ஆழங்காட்படும் போது
இன்னும் விரிவடைகிறது. உம்.

நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு
நாராயணாவென்னும் நாமம் (பெரிய திருமொழி)

நாராயணன் எனும் பெயர் நம் வினைக்கு நஞ்சு எனும் போது நாராயணா என்றால்
என்னெவென்று விளங்கிக்கொள்ள வேண்டிவரும். ஓர் சொல் போல் படும் இதையும்
பிரிக்கமுடியும். அப்படிப் பிரித்துதான் இதன் முழுப்பொருளையும்
ஆச்சார்யர்கள் அறிந்துள்ளனர். அட்சரம், அட்சரமாகப் பிரிக்கின்றனர்.
கேட்கக் கேட்க பிரம்மிப்பாக இருக்கும்.

இவ்வளவு ஏன் போக வேண்டும்? "ஓம்" எனும் ஓர் ஓசை மூன்று அட்சரங்களால்
ஆனது. அதில் வரும் 'அ' என்றாலே விஷ்ணு என்று பொருள். அதையும்
பிரித்தாலும் அதனுள் அவன் இருப்பான். (பூவினுள் நாற்றம் போல்) இதைத்தான்
திருமழிசையார்...

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதிநீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினாய்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே

என்கிறார். அவனை நாம் உணர வேறெங்கும் போக வேண்டாம். சொல்லின்
தொடர்ச்சியாக "ஓம்" எனும் ஓங்காரத்திலிருந்து அனைத்திலும் நீக்கமற
நிறைந்துள்ளான்.

இவ்வளவிற்கும் அதிபதியான "நாமகள்" ஒன்றா? இரண்டா?

க.;-)

devoo

unread,
Oct 15, 2008, 10:13:44 AM10/15/08
to மின்தமிழ்


On Oct 15, 12:57 pm, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> 2008/10/15 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>:
//சின்ன ஐயம்.   இரண்டு பெயர்களால் ஒன்றாகக் கூடி, ஒரு பொருளின் பெயராக
அமைந்தால்
அந்தப் பெயர் ஒரு சொல்லா அல்லது ஒரு சொற்றொடரா?  walking-stick,
cutting-pliers, screwdriver எல்லாம் ஒரு சொல்லா அல்லது சொற்றொடரா?  Are
these
words or phrases?//

//ஓர் சொல் போல் படும் இதையும் பிரிக்கமுடியும். //

’நாராயண:’ (நராணாம் அயநம்) என்பது ஸமஸ்த பதம்.தமிழில் தொகை என்பர்.
வடமொழியில் ஸமஸ்த பதங்களை ஒரே சொல்லாகவே கொள்வர்.
காதம்பரி நாடகத்தில் நெடிய ஸமஸ்த பதங்கள் காணப்படுவதாகச் சொல்வர். இதுவரை
வாசிக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை.

தேவ்



devoo

unread,
Oct 15, 2008, 10:45:42 AM10/15/08
to மின்தமிழ்


On Oct 15, 12:57 pm, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:

// இவ்வளவிற்கும் அதிபதியான "நாமகள்" ஒன்றா? இரண்டா? //


’நாமகள்’

இது தொகைச் சொல் ; பகு பதம் ; ஆயினும் ஒரே சொல்லாகவே கணக்கிட வேண்டும்.
நாமகள் வழிபாட்டிற்குச் சங்க இலக்கியத்தில் ஆதாரம் தேட இயலாது.

இவை பேராசிரியர். ராஜகோபாலன் (சென்னை) தெரிவித்த கருத்துகள்.

தேவ்

annamalai sugumaran

unread,
Oct 15, 2008, 12:21:38 PM10/15/08
to minT...@googlegroups.com
   astronaut
  ஒரு சொல்லா ? விண்வெளி பயணம்  ஆரம்பித்ததும் வந்தசொல்
 astro  மற்றும் naut  இரண்டும் ஒட்டு .
ஐம்பது வருடம் முன்  இந்த சொல் ஆங்கிலத்தில் இல்லை .
தமிழிலும் புதிய சொல் இணைத்து உருவாவதில்  தவறு இல்லை என நினைக்கிறேன் .
அன்புடன்,
ஏ.சுகுமாரன்

annamalai sugumaran

unread,
Oct 15, 2008, 12:43:46 PM10/15/08
to minT...@googlegroups.com
In the United States and many other English-speaking nations, a professional space traveler is called an astronaut. The term derives from the Greek words ástron (άστρον), meaning "star", and nautes (ναύτης), meaning "sailor". The first known use of the term "astronaut" in the modern sense was by Neil R. Jones in his short story The Death's Head Meteor in 1930. The word itself had been known earlier
 
--
A.Sugumaran Amirtham Intl PONDICHERRY INDIA MOBILE 09345419948
www.puduvaisugumaran.blogspot.com www.puduvaitamilsonline.com



--
A.Sugumaran Amirtham Intl PONDICHERRY INDIA MOBILE 09345419948
www.puduvaisugumaran.blogspot.com www.puduvaitamilsonline.com

Hari Krishnan

unread,
Oct 16, 2008, 4:04:46 AM10/16/08
to minT...@googlegroups.com


2008/10/15 devoo <rde...@gmail.com>


'நாமகள்'


இது தொகைச் சொல் ; பகு பதம் ; ஆயினும் ஒரே சொல்லாகவே கணக்கிட வேண்டும்.
நாமகள் வழிபாட்டிற்குச் சங்க இலக்கியத்தில் ஆதாரம் தேட இயலாது.

இவை பேராசிரியர். ராஜகோபாலன் (சென்னை) தெரிவித்த கருத்துகள்.

தேவ்
 
 
ம்ம்ம்ம். அது. அத்த்த்து..... :-) 
 
இன்னும் கொஞ்சம் இழுக்கலாம் என்று பார்த்தேன்.  பேராசிரியர் விளக்கிவிட்டார். 
 
 
சிவந்த கண் என்றால் ஸ்பேஸ்விட்டு எழுதவேண்டும்.  செங்கண் என்றால் ஸ்பேஸ் இல்லாமல்.  ஏனெனில் பின்னது பண்புத் தொகை.
 
கரிய மேகம் என்றால் ஸ்பேஸ்விட்டு எழுதவேண்டும்.  கார்மேகம் என்றால் ஸ்பேஸ் இல்லாமல்.  ஏனெனில் பின்னது பண்புத் தொகை.
 
நல்ல மணம் ஸ்பேஸ்விட்டு எழுதவேண்டும். நறுமணம் என்றால் ஸ்பேஸ் இல்லாமல்.  ஏனெனில் பின்னது பண்புத் தொகை.
 
எருமைமாடு. ஸ்பேஸ் கிடையாது. இருபெயரொட்டுப் பண்புத்தொகை. 
 
 
சாரைப்பாம்பு, பாலகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், முரளிகிருஷ்ணன், பாலசந்திரன் (தகவலுக்கு அது Phalachandrand என்ற உச்சரிப்பை உடையது; Balachandran என்ற உச்சரிப்பில் ஒரு பெயரும் கிடையாது.  தவறான உச்சரிப்பால் இளநிலவர்கள் உண்டாகிவிட்டார்கள்.  Phalachandran என்பது விநாயகருடைய பெயர்).  வேணுகோபால், நந்தவனம் என்று எல்லாமே இரண்டு சொற்களால் இணைந்து உருவானதைப் போல் தோற்றமளித்தாலும், உண்மையில் இவை ஒரு சொல்லாகவே கணக்கிடப்படும்.  (ஆனால் என் பெயருக்கு ஹரி ஸ்பேஸ் கிருஷ்ணன் உண்டு.  பால, வேணு எல்லாம் கிருஷ்ணனுக்கு அட்ஜெக்டிவ்.  ஹரி, கிருஷ்ணனுக்கு அட்ஜெக்டிவ் இல்லை என்பது என் விளக்கம்.  உண்மையைச் சொல்லவேண்டுமானால் ஏன் அப்படி ஸ்பேஸ் விடப்பட்டது என்பது எங்கப்பருக்கே வெளிச்சம்....)
 
ஆகவே, நாமகள், கலைமகள், பூமகள், புவிமகள், மலைமகள், அலைமகள், இன்ன பிறவும் இவ்வாறே ஒரே சொல்லாகவே கணக்கில் கொள்ளப்படும். 
 
இந்த இனத்துக்கு ஆங்கிலத்தில் compound word, அல்லது composite noun என்று பெயர்.  இதற்குமேல் இந்த ஆங்கில இலக்கண விளக்கம் வேண்டுமானால் Fowler's Modern English Usage புத்தகத்தில் hyphen என்ற நுழைவுக்குக் கீழ் காணவும்.  ஒருவேளை யாருக்காவது விளக்கம் தேவைப்பட்டு, புத்தகம் கிடைக்கவில்லை என்றால் புகைப்படமாக அனுப்புகிறேன்.  புகைப்படம்=இன்னொரு இருபெயர் கொண்ட ஒருசொல். 

Hari Krishnan

unread,
Oct 16, 2008, 4:42:54 AM10/16/08
to minT...@googlegroups.com


2008/10/15 Narayanan Kannan nka...@gmail.com
 

>

நம்ம கவிஞர் தொடர்வதால் இன்னும் தோண்டச் சொல்கிறது. இதை முதலிலிருந்து
சொல்ல நினைத்தேன். ஓர் சொல் போல் படும் பெயரும் கூட ஆழங்காட்படும் போது
.
ஆழங்கால் படுதல்?
 
 
நீச்சு, நிலை என்று சொல்வார்கள்.  நீச்சல் அடித்துச் செல்லவேண்டிய ஆழம் நீச்சு.  நடந்தே சென்றடையக்கூடிய ஆழம், நிலை.  'நீச்சன்றி நிலையறியாது' என்பது ஒரு பழைய வழக்கு.  இந்த நூலின் ஆழம் எவ்வளவு அதிகமென்றால், இதில் இறங்குபவன் நீச்சல்தான் அடிக்கவேண்டும்; நிலைகொள்ளும் அளவுக்கான கொஞ்சம்போற ஆழம் இதில் இல்லை என்று பொருள்.
 
ஆழத்தில் கால் படுதல். ஆழங்கால் படுதல் (ஆழங்காற்படல்.)
 
தட்டுப்பிழையாக இருந்தால் பொருட்படுத்த வேண்டாம். 
 

நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு
நாராயணாவென்னும் நாமம் (பெரிய திருமொழி)
 
அடுத்த ரவுண்டுக்கு வேணும்னு வச்சிருந்தேன்.  என் வீட்டில் ஃப்ராட்பேண்ட் (fraudbandதான்) படுத்துகிறது.  பத்து நிமிடம் வந்துவந்து போகிறது.  கண்ணர் அடித்துப் பட்டை கிளப்பிவிட்டார்.  நாராயண நாராயண!
 
திருமகளுக்குப் பகாப்பதம் வேண்டுமென்றால் திண்டாடத்தான் வேண்டும். கண்ணனே பகுபதம்தான்.  சினைப்பெயர்ப் பகுபதம் என்பது மிகச் சரியான இலக்கணக் குறிப்பு.
 
பகாப்பதத்தில் அதிகபட்சமாக இரண்டு எழுத்துகள் (நில், நட, போ, வா, இரு, என்பன போல--ஒற்றெழுத்தைக் கணக்கில் கொள்ளாமல்) மட்டும்தான் இருக்க முடியும்.  திரு என்ற சொல் திருமகளை மட்டுமே குறிக்காது.  'பேரறிவாளன் திரு' என்று வள்ளுவர் சொல்வது திருமகளையன்று.  'திரு நிறைந்தனை, தீது தீர்ந்தனை' என்று பாரதி பாடிய வந்தே மாதரத்தில் காணப்படும் திருவும் திருமகளை மட்டுமே குறிப்பதன்று.  'மகள்' என்ற ஒட்டு சேர்ந்தால் மட்டுமே அது இலக்குமிக்கே உரிய தனிப் பெயராக மாறும். 
 
ஆகவே, what we can at best seek is a combined word form. 

Hari Krishnan

unread,
Oct 16, 2008, 4:44:54 AM10/16/08
to minT...@googlegroups.com


2008/10/16 Hari Krishnan <hari.har...@gmail.com>


'மகள்' என்ற ஒட்டு சேர்ந்தால் மட்டுமே அது இலக்குமிக்கே உரிய தனிப் பெயராக மாறும். 
 
இது நாமகளுக்கும் பொருந்தும் என்று சேர்த்துக் கொள்ளவும்.

Hari Krishnan

unread,
Oct 16, 2008, 8:32:11 AM10/16/08
to minT...@googlegroups.com


2008/10/15 Narayanan Kannan <nka...@gmail.com>

முழுப்பாடலும் கிடைக்குமா?
இப்போதுதான், 'அங்கப்பறை' பற்றி விளக்கமறிந்தோம்!

க.<
 
வளிமுளிகிறேண்.

karth...@gmail.com

unread,
Oct 16, 2008, 9:17:38 AM10/16/08
to மின்தமிழ்
ஹரி,

வணக்கம். உங்களை இங்கு மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

1) இந்த சொற்களுக்கிடையில் இடம் விட்டு எழுதுவதற்கு
இலக்கணம் ஏதும் உண்டா? இப்போதைய அச்சுப் பிரதிகளில்
பெரும் குழப்பம் இருக்கும் போலத் தெரிகிறதே!

2) "ஒவ்வொரு பூக்களுமே" என்ற பாடலின் இலக்கண வழு பற்றிப்
பெரிதும் பேசப் பட்டிருக்கிறதல்லவா? இது ஆங்கில இலக்கணத்தைச்
சார்ந்த every = singular என்னும் விதிதானே? தமிழில் இப்படி
விதி இருக்கிறதா?
("பூக்களுமே, சொல்கிறதே" என்பதில் உள்ள பிழை தெளிவாக
இருக்கிறது. அதை விடுங்கள்.)

"ஒவ்வொரு" என்பதில் "ஒன்றுக்கு மேற்பட்ட" என்ற பொருள்
வருவது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது.

அன்புடன்
ரெ.கா.

On Oct 16, 4:04 pm, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:

Hari Krishnan

unread,
Oct 16, 2008, 11:42:07 AM10/16/08
to minT...@googlegroups.com

ஹரி,

வணக்கம். உங்களை இங்கு மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி

.
 
வணக்கம் ரெகா.  அடுத்த் ஆட்டத்தில் கார்த்திகை ஈசன் என்று உங்களை வம்புக்கிழுப்பதாகத்தான் இருந்தேன்.  இளங்கோவன் என்பதும் இரண்டு பெயர்கள் கூடி ஒன்றான ஒருசொல்தானே!
 

 

1) இந்த சொற்களுக்கிடையில் இடம் விட்டு எழுதுவதற்கு
இலக்கணம் ஏதும் உண்டா? இப்போதைய அச்சுப் பிரதிகளில்
பெரும் குழப்பம் இருக்கும்  போலத் தெரிகிறதே!
 

 
எது முழுச் சொல், எது தொகையால் உருவான சொல் என்பது பற்றிய தெளிவு தற்போதைய தமிழ்ப் பத்திரிகையாளர் யாருக்குமே இல்லை என்பது வருத்தத்துக்கு உரிய ஒன்று.  இதை ஏதோ போகிற போக்கில் சகட்டுமேனிக்கு அடித்துவிடவில்லை.  தமிழில் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா வெளிவந்த போது அதன் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவன்; விகடன் அலுவலகத்தில் உள்ள பலநிலை ஆசிரியர்களுடன் ஒன்றரையாண்டுகள் பழகியவன் என்ற விதத்தில் இதைச் சொல்கிறேன். 
 
ஆங்கிலத்தின் தாக்கத்தால் தமிழைப் போட்டுத் துவைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  உதாரணத்துக்கு இந்த 'மற்றும்'.  ஆங்கிலத்தில் எங்கெல்லாம் and வருகிறதோ அங்கெல்லாம் மற்றும் போட்டுவிடுகிறார்கள்.  A list ends with and என்பது ஆங்கிலத்துக்கு மட்டுமே பொருந்தும் விதி.  தமிழில் அப்படி ஒரு வழக்கம் இல்லை.  எனவே, குறைந்தபட்சம் இந்தத் தமிழ் என்சைக்ளோபீடியாவிலாவது 'மற்றும்' இல்லாமல் எழுதுங்கள் என்று முதல்நாள் அறிமுக உரையின்போது குறிப்பிட்டேன்.  உடனே ஆட்சேபணைக் குரல்கள்.  'அது எப்படி சார் வரும்?  ஒரு மற்றும் கூடவா இல்லாம எழுத முடியும்' என்றெல்லாம்  (வன்ட்டானுவ பாரு.. .இவனயெல்லாம் தூக்கி இந்த எடத்துல வச்சா இப்படித்தான்.. தொனியில்..) எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.
 
நிதானமாக சஷ்டி கவசத்தைச் சொல்லத் தொடங்கினேன்.  'ஆறுமுகமும் அணிமுடியாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும், பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும், நன்னெறி நெற்றியில் நவமணிசுட்டியும்' என்று அது ஒரு மிகப் பெரிய லிஸ்ட்.  சொல்லி முடிக்கும் தறுவாயில் (அந்தப் பட்டியலை முடிக்கும் தறுவாயில்) 'ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூஷணமும் மற்றும் பதக்கமும் தரித்து' என்றா எழுதியிருக்கிறது என்று கேட்டேன்.
 
பிறகு இது எண்ணும்மை பயிலும் இடம்.  உம்மைத் தொகை (ம் ம் என்று முடியாமல், தொக்கி நிற்பது) லிஸ்ட் ஒன்று உண்டு என்று பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியை சபைக்கு அழைத்துவரச் சொன்னது பற்றி ஜகத்தில் ஏற்பட்ட அதர்மக் குழப்பம் என்று பாரதி எழுதியிருக்கும் நீண்ட லி்ஸ்ட். 'தருமம் அழிவெய்த, சத்தியமும் பொய்யாக, பெருமைத் தவங்கள் பெயர்கெட்டு மண்ணாக' என்று தொடங்கி மிக நீளமான பட்டியல் அது.  தருமம் அழிவெய்தவும், சத்தியம் பொய் ஆகவும் என்று வந்திருக்க வேண்டியது.  உம் கெட்ட காரணத்தால் உம்மைத் தொகை.  'குறைந்த பட்சம் இங்கேயாவது, 'ஆக்கம் தானாவாள், அழிவு நிலையாவாள், மற்றும் போக்கு வரவெய்தும் புதுமையெல்லாம் தானாவாள்' என்று இருக்கிறதா' எனக்கேட்டேன்.  பிறகு சிலப்பதிகார மேற்கோள்.  உறைந்துபோய் அமர்ந்துவிட்டார்கள்.  'சார் நீங்க மொதல்லியே எங்க டீமுக்கு வந்திருக்கணும்' என்று அவர்களுடைய அட்டிட்யூட் மொத்தமும் மாறிப் போனது.
 
எதற்குச் சொன்னேன் என்றால், தமிழ்ப் பயிற்சி சற்றும் இல்லாதவர்கள் மொழிபெயர்ப்புக்கு (அதுவும் என்சைக்ளோ மாதிரியான என்ட்ரிக்கு என்ட்ரி சப்ஜெக்ட் மாறக்கூடிய தலைப்புகளுக்கு) மொழிபெயர்க்கிறேன் என்று வந்துவிடுகிறார்கள். பத்திரிகைகாரர்களுக்கும் அவ்வளவு தரம்தான் கிடைக்கிறது.
 
இது ஒரு பக்கம்.  இன்னொரு பக்கத்தில் 'எது முழுச்சொல், ஸ்பேஸ் விடவேண்டும், எது தனித்தனியாக அல்லது எது சேர்த்து எழுதப்படவேண்டும்' என்பது பற்றியான தெளிவு இல்லை.  இந்தப் பத்தியில் நான் எழுதியிருப்பதையே பாருங்கள்.  எழுதவேண்டும், விடவேண்டும் என்பன சேர்த்து.  எனக்கு வேண்டும் என்று வந்தால் பிரித்து.  எழுதவேண்டும், விடவேண்டும் என்பனவற்றில் வேண்டும் is associated with its verb and therfore gives the sense 'need to or have to'.  இரண்டாவது இடத்தில் (எனக்கு வேண்டும்) want என்ற பொருள் தருவது.  பிரித்து எழுதவேண்டும்.  'அப்படிச் செய்தால்தான் கெட்டுப் போகமலிருக்கலாம்' என்ற தொடரில், 'செய்தால்தான்' என்பதைச் சேர்த்து எழுதினால், 'தான்' என்ற emphasis remains bound to its verb.  இதையே 'அப்படிச் செய்தால் தான் கெட்டுப்போகாமலிருக்கலாம்' என்று பிரித்தால், 'அதுபோல் செய்தால் 'தான்' (that is the first person noun) கெட்டுப் போகமலிருக்கலாம்' என்ற பொருள் வரும்.  ஆகவே ஸ்பேஸ் விடுவதைப் பற்றிய அடிப்படை உணர்வு மிக அவசியமானது.

நாம் ஒரு நூறு நூற்றைம்பது வருடங்களுக்கு முன்புவரை கவிதையாகவே எழுதிக் கொண்டிருந்தோம்.  இரண்டு விரற்கடை அளவு அகலமுள்ள ஓலைச்சுவடியில் அதிகமான விஷயத்தைத் திணிக்கக் கவிதையால் முடிந்தது.  கவிதையில் சீர் பிரிப்பது யாப்பிலக்கணத்தின் கட்டுக்கு உட்பட்டது.  ஆகவே we really were never conscious about where to split a word while writing.  பிறகு உரைநடை வந்தது.  (கல்வெட்டு உரைநடையெல்லாம் இந்தக் கணக்குக்கு உதவாது.  செதுக்கிய சிற்பி தப்புத் தப்பாக ஸ்பெல்லிங் போட்டுவிடுவான்.  அதுவும் மாற்றம் பெறாமல் அப்படியே இடம்பெற்றுவிடும்.  கம்பராமாயணத்தில் தசரதன் உடலை எரியூட்டிய படலத்துக்கு பள்ளிபடைப் படலம் என்று பெயர்.  கல்வெட்டில் பள்ளிப்படை என்று இருக்கிறது.  இலக்கணப்படி பள்ளிபடை என்று இருக்க வேண்டும்.  வைமுகோ இரண்டு வடிவங்களையும் ஏற்றுக் கொள்ளகிறார்.  இதில் என்ன வேடிக்கை ஆகிவிட்டது என்றால், ப்ப என்ற இரண்டு எழுத்துகளையும் சேர்த்து கூட்டெழுத்தாக எழுதுவார்கள்.  கிட்டத்தட்ட ய மாதிரி இருக்கும்.  ஓலைச்சுவடியில் புள்ளி வைக்க மாட்டார்கள் (பொத்துக் கொள்ளும் என்பதனால்).  பள்ளிப்படை படலம் பள்ளியடைப் படலமாகி விட்டது.

இது பழைய கதை.  தவறுகள் நடந்த விதம்.  இப்போதைய அச்சு வாகனத்தின் டிமான்ட் வேறு விதமாக இருக்கிறது.  நாம் சொற்களைச் சேர்த்தெழுதினால் (இதே சொல்லை பாரதியின் manuscriptல் பார்த்தால் 'சேர்த் தெழுதினால்' என்று எழுதியிருப்பான்) சொல் நீளமாகப் போய்விடுகிறது.  Word wrap இருப்பதனால் column அகலத்துக்குள் அவ்வளவு நீளமான சொல்லை அமுக்க முடிவதி்ல்லை.  ஆகவே தோன்றிய இடங்களிலெல்லாம் தோன்றிய படி பிரிக்கிறார்கள்.  'இவ்வாறிருந்திருக்கலாம்' என்றோ 'இவ்வா றிருந்திருக்கலாம்' என்றோ எழுத நம் இலக்கணம் இடம் தருகிறது.  இப்படி எழுதினால் மக்களுக்குப் புரியாது என்று ஒரு தியரி வைத்திருக்கிறார்கள்.  'இவ்வாறு இருந்து இருக்கலாம்' என்று பிரித்துப் பிரித்து எழுதுகிறார்கள்.  ('இருந்து' என்றால் மலம் கழித்து என்றுவேறு பொருளிருக்கிறது.  'இருந்து இருந்தால்' என்ன அர்த்தம் வரும்!)

ஆகவே, அச்சு சௌகரியத்துக்காக அவர்கள் கண்டபடி பிரிக்கிறார்கள்.  அதற்கும் மேல், அடிப்படை இலக்கண அறிவு இல்லாதவர்கள் எழுதுகிறார்கள்.  அந்த+அளவு அந்த அளவுதான்  அந்தளவு, இந்தளவு என்று புணராது; அந்த+ஆண்டு அந்த ஆண்டுதான்.  அந்தாண்டு, இந்தாண்டு என்று புணராது.  ஜூனியர் விகடனைப் பாருங்கள்.  இப்படித்தான் எழுதுகிறார்கள்.

இன்னொரு வகை இருக்கிறது.  நான் அங்கே பணியாற்றிய ஒன்றரை வருடங்களும் தலைதலையாய் அடித்துக் கொண்டு இன்னமும் திருத்த முடியாத விஷயம்.  எங்கெல்லாம் பெண் வருகிறதோ அங்கெல்லாம் 'பெண்' என்று சொல்லியே ஆகவேண்டும்.  பெண் கவிஞர், கவிதாயினி என்றெல்லாம் சொதப்புகிறார்கள்.  கவிஞர், அமைச்சர் எல்லாம் genderless nouns என்ற அடிப்படை இலக்கணம் தெரிந்தால்தானே!  கவிஞருக்குப் பெண்பால் கவிதாயினி என்றால், அமைச்சருக்குப் பெண்பால் என்ன?  ஏன் ஜெயலலிதாவை முதமைச்சாயினி என்று சொல்லிவில்லை!  பத்திரிகையாளர்கள் யோசிக்கவில்லை.  யோசிக்கச் சொல்பவன் 'பண்டிதன்.  அவனுக்கு இலக்கண சொறி பிடித்திருக்கிறது.'

அதைவிடவும் பெரிய ஜோக் என்னவன்றால் ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிகைகளைப் பாருங்கள்.  'பெண் ரசிகைகள்', 'பெண் சிநேகிதிகள்' என்று எழுதுகிறார்கள்.  ரசிகையும் சிநேகிதியும் பெண்ணாக இல்லாமல் பின்ன ஆணாகவா இருக்க முடியும்!  இதையும் சொல்லிப் பார்த்துவிட்டடேன்.  பயன்தான் இல்லை. 

இதெல்லாம் பிரச்சினையின் மிகச் சிறிய பகுதிதான் ரெகா. இன்னும் நிறைய இருக்கின்றன. பேசலாம். 


 

2) "ஒவ்வொரு பூக்களுமே" என்ற பாடலின் இலக்கண வழு பற்றிப்
பெரிதும் பேசப் பட்டிருக்கிறதல்லவா? இது ஆங்கில இலக்கணத்தைச்
சார்ந்த every = singular என்னும் விதிதானே? தமிழில் இப்படி
விதி இருக்கிறதா?
("பூக்களுமே, சொல்கிறதே" என்பதில் உள்ள பிழை தெளிவாக
இருக்கிறது. அதை விடுங்கள்.)

ஒவ்வொரு என்பது ஆங்கிலத்தில் every, அல்லது each and every என்ற ஒருமையைத்தான் குறிக்கிறது.  ஒவ்வொரு பூவுமே சொல்கிறதே என்பதுதான் இலக்கணப்படி சரி.  எளிய, அன்றாட இலக்கணத்தைச் சொல்கிறேன்.  யாருக்குமே புரியாது என்று கற்பனை செய்யப்படுகிறதே அதை இல்லை.

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியானது.  இப்படிப் பிழைபட எழுதினால், I are always correct, you is not correct.  They speaks good English என்று ஆங்கிலத்தில் எழுதிவிடலாம்.  சொல்லப்போனால், They பன்மை, speaks என்ற பன்மைதானே அதைத் தொடரவேண்டும்! :-)))

devoo

unread,
Oct 16, 2008, 12:20:28 PM10/16/08
to மின்தமிழ்


On Oct 16, 8:42 pm, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:

// ஆங்கிலத்தின் தாக்கத்தால் தமிழைப் போட்டுத் துவைத்து எடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.//

ஆங்கிலத்தின் தாக்கம் -

’மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்’ என்பதற்கு ‘அனுமதிக்கப்பட்டார்’
எனும் பிரயோகம்.
Admission க்கான தமிழாக்கம் போலும்!

‘முயற்சிக்கிறான்’ என்றுதான் துக்ளக் உட்பட எல்லா இதழ்களிலுமே
எழுதுகிறார்கள்.

தினத்தந்தியில் ஒற்றெழுத்துக்களை அறவே ஒழித்துவிட்டார்கள்.

பயனுள்ள அறிவுரைகள். அனைவரும் பின்பற்ற வேண்டும்

தேவ்

venkatram dhivakar

unread,
Oct 17, 2008, 1:29:27 AM10/17/08
to minT...@googlegroups.com
எண்ணணைப் பற்றிதானே.. என்னிடம் இருந்த குறிப்பைக் கொடுத்தேன். நானும் முழுப் பாடலைத் தேடுகிறேன். கேட்டும் இருக்கிறேன். வந்ததும் உடனே இடுகிறேன்.

இந்தப் பாடல் குசேலர் கண்ணனைக் காணச் செல்லும்போது வழியில் பாடுவதாக வரும்.

தி

2008/10/16 Hari Krishnan <hari.har...@gmail.com>

Narayanan Kannan

unread,
Oct 17, 2008, 2:01:43 AM10/17/08
to minT...@googlegroups.com
2008/10/17 venkatram dhivakar <venkdh...@gmail.com>

எண்ணணைப் பற்றிதானே.. என்னிடம் இருந்த குறிப்பைக் கொடுத்தேன். நானும் முழுப் பாடலைத் தேடுகிறேன். கேட்டும் இருக்கிறேன். வந்ததும் உடனே இடுகிறேன்.

இந்தப் பாடல் குசேலர் கண்ணனைக் காணச் செல்லும்போது வழியில் பாடுவதாக வரும்.

தி
 
 
இச்சொல்லின் வேர் என்னவாக இருக்கும்?
 
என் + அன்னை ....ஹி..ஹி..அது இல்லை!
 
கருநிற மாலுக்கு ஓர் ஜொலிப்பு கொடுப்பதால், வண்ணம் கொடுப்பதால் இவள் எண்ணணையோ?
 
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று.
 
எனும் போது கருப்பனுக்கு எப்படிப் பொன்மேனி வந்தது ;-) ?
 
ஆனாலும் இந்த கடைசி 'ண'கரம் உதைக்கிறது...ம்ம்ம்ம்..
 
ஹரியே! சரணம்!!
 
க.>

Tthamizth Tthenee

unread,
Oct 17, 2008, 4:55:28 AM10/17/08
to minT...@googlegroups.com
"எண்ணணை "என்பது ஒருவேளை "என்னணை" யாக இருக்குமோ
"என்னணை" என்று கொண்டால் திருமால் தன் இருக்கையில் லக்குமியை மார்போடணைத்துக் கொண்டிருக்கிறாரே அதுபோல் திருமாலே சொன்னது போல...
 
"என்னணை "  என் +அணை  =
 
என்னுடைய பத்னி, நான் அணைத்துக்கொண்டிருப்பவள்
அல்லது என்னை (திருமாலை) அணைத்துக் கொண்டிருப்பவள் என்று பொருள் படும்படி வருமே ஒரு வேளை என்னணையோ....?
ஒரு சந்தேகந்தான்...
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 

2008 அக்டோபர் 17 11:31 அன்று, Narayanan Kannan <nka...@gmail.com> எழுதியது:

Hari Krishnan

unread,
Oct 17, 2008, 5:31:49 AM10/17/08
to minT...@googlegroups.com


2008/10/17 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

"எண்ணணை "என்பது ஒருவேளை "என்னணை" யாக இருக்குமோ
"என்னணை" என்று கொண்டால் திருமால் தன் இருக்கையில் லக்குமியை மார்போடணைத்துக் கொண்டிருக்கிறாரே அதுபோல் திருமாலே சொன்னது போல...
 
"என்னணை "  என் +அணை  =
 
என்னுடைய பத்னி, நான் அணைத்துக்கொண்டிருப்பவள்
அல்லது என்னை (திருமாலை) அணைத்துக் கொண்டிருப்பவள் என்று பொருள் படும்படி வருமே ஒரு வேளை என்னணையோ....?
ஒரு சந்தேகந்தான்...
 
இரண்டாமடி முதல்சீராக அமைந்துள்ள 'வண்ணனை' என்ற எதுகையே, முதலடியில் இருப்பது 'எண்ணனை' என்று மூன்றுசுழி டண்ணகரம்தான் என்பதை உறுதி செய்கிறது.  ஆகவே, இவையெல்லாம் இல்லை.  சொல்லைப் பிரிப்பதில் வேறு எங்கோ தவறு இருக்கிறது.  ஐ என்றால் கடவுள், அரசன், ஆசான் என்றெல்லாம் பொருள் உண்டு.  இந்த ஐ-யோடு இன்னொரு ஐ-யைக்கூட்டினால் (suffix) ஐயை என்று ஆகி, அது இறைவியைக் குறிக்கும். 
 

செய்ய தான செழுங்கம லாசனத்

தையல் காமுறத் தக்கன வீதிகள்

பைய நீங்கிப் பராபரை யாகிய

ஐயை கோயில் அணித்தென நண்ணினான்.
 
என்பது கந்தபுராணம், உற்பத்திக் காண்டம், திருக்கல்யாணப் படலத்தில் வரும் செய்யுள்.  (மேற்கோள் காட்டும்போது, விரும்புகின்ற எல்லோருக்கும் பயன்படுவதுபோல் முழுவிவரமும் தருவது நல்லது.)
 
இங்கேயோ ஐயை இல்லை.  எண்ணனை என்று இருக்கிறது.  இது பகுபதம்தான்.  பகாப்பதம் இல்லை.  அதுமட்டும் உறுதி.  ஆகவே, முழுப்பாடலையும் பார்த்தால்தான் இது என்ன என்பது புலனாகும்.  இலக்கிய ஆட்சியில் இருக்கும் சொல்லென்றால் இந்த ஒரேயொரு இலக்கியத்தில் மட்டும்தானா இடம்பெற்றிருக்க முடியும்?  சிந்தனைக்கு உரியதல்லவா!  அப்படிப் பரவலான ஆட்சியில் இருக்குமானால் University Lexiconல் இடம்பெறாமல் போக வாய்ப்பே இல்லை.  (இதற்கு ஒரு விலக்கும் இருக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறேன்.  கதலி என்றொரு அரிய ஆட்சி, வடமொழிச் சொல், மான் என்ற பொருள்படுவது, பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் இடம்பெறுகிறது.  ஆனால் இந்தப் பொருளை லெக்சிகன் சொல்லவில்லை.  நாநார்த்த தீபிகையில் மட்டுமே இந்தப் பொருள் கிடைக்கிறது. பாரதி, குறிப்புரையில் இந்தப் பொருளை எழுதியிருக்காவிட்டால், 'தர்மபுத்திரன் செய்த வேள்வியில் எதுக்கு வாழைப்பழத் தோலைக் கொண்டுபோய் வைத்தார்கள் என்றுதான் நாம் குழம்பவேண்டியிருந்திருக்கும்!) எனவே, இலக்கிய ஆட்சியில் உள்ள சொல் இப்படித் தவறவிடப்பட்டிருக்காது. 
 
குசேலோபாக்கியானம் பொதுவாக 6-8 வகுப்புகளுக்குப் பாடப்பகுதியாக வைக்கப்படுவது.  அந்தப் பருவத்தில், பள்ளியில் வேறு ஏதோ ஒரு பகுதியை நானும் கற்றதுண்டு.  இப்போது எதுவும் நினைவில்லை.  தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் இந்தப் பகுதி கிட்டுகிறதா என்று விசாரிக்கலாம்.

Kumaran Malli

unread,
Oct 17, 2008, 9:31:34 PM10/17/08
to minT...@googlegroups.com

ஆகா. நான்கைந்து முறைகள் படித்து மனத்தில் நிறுத்திக் கொள்ளவேண்டும் போலிருக்கிறதே?! மிக்க நன்றி ஹரியண்ணா.

சரியான இடத்தில் சொற்களைப் பிரித்திருக்கிறேனா? இல்லையென்றால் திருத்துங்கள்.

Kumaran Malli

unread,
Oct 17, 2008, 9:34:36 PM10/17/08
to minT...@googlegroups.com

ஹரியண்ணா. நீங்கள் அனுமதி அளித்தால் நீங்கள் ரெகாவுக்குச் சொன்ன விடைப்பகுதியை என் வலைப்பதிவில் சேமித்து வைத்துக் கொள்ள விரும்புகிறேன். அனுமதி தருகிறீர்களா?

அன்பன்,
குமரன்.

http://koodal1.blogspot.com/

On 10/16/08, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:

devoo

unread,
Dec 13, 2008, 6:33:22 AM12/13/08
to மின்தமிழ்
// Oct 17, 2:31 pm, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:

இரண்டாமடி முதல்சீராக அமைந்துள்ள 'வண்ணனை' என்ற எதுகையே, முதலடியில்


இருப்பது> 'எண்ணனை' என்று மூன்றுசுழி டண்ணகரம்தான் என்பதை உறுதி
செய்கிறது.

இங்கேயோ ஐயை இல்லை.  எண்ணனை என்று இருக்கிறது.  இது பகுபதம்தான்.  

குசேலோபாக்கியானம் பொதுவாக 6-8 வகுப்புகளுக்குப் பாடப்பகுதியாக
வைக்கப்படுவது.

ஹரிகி.//

**************************************************************************************************************************

குசேலோபாக்கியானம்

குசேலர் நகர்ப்புறம் அடைந்த அத்தியாயம்

(குசேல முனி கண்ணனைக் கண்ணாறக் காணுதல்)

அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

எண்ணனைக் கிலங்கு மார்ப மீத்தருள் பிரானை நீல
வண்ணனைத் திகிரி சங்கம் வலமிட முறக் கொண்டானை
மண்ணனைத் தும்பு ரக்கும் வாசுதே வனைம ணக்குங்
கண்ணனைத் துளவத் தாமக் கண்ணனைக் கண்ணிற் கண்டான்.


எண் அனைக்கு இலங்கு மார்பம் ஈத்து அருள் பிரானை,
நீல வண்ணனை, திகிரி சங்கம் வலம் இடம் உறக்கொண்டானை,
மண் அனைத்தும் புரக்கும் வாசுதேவனை, மணக்கும் கள் நனை
துளவத் தாமக் கண்ணனைக் கண்ணில் கண்டான் - உ0ரு(205)

எண் அனை – யாவரும் நினைக்கும் அன்னையான இலக்குமி
(வினைத் தொகை)
அனை – அன்னை என்பதன் இடைக்குறை.

முதனூல் – ஆரியப்ப புலவரின் பாகவதம் (தமிழ்)
வரகவியின் குசேலோபாக்யானம் (தெலுகு)
அரும்பதவுரை ஆசிரியர் – திரு.வி.உலகநாத முதலியார்

தேவ்


V, Dhivakar

unread,
Dec 14, 2008, 12:01:30 AM12/14/08
to minT...@googlegroups.com
நன்றி தேவ்!!

திவாகர்

2008/12/13 devoo <rde...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages