அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முஸ்தபா நினைவேந்தல் நிகழ்ச்சி அழைப்பிதழ்

69 views
Skip to first unread message

Scientific Tamil University

unread,
Feb 16, 2017, 7:58:27 PM2/16/17
to மின்தமிழ்

அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முஸ்தபா நினைவேந்தல் நிகழ்ச்சி அழைப்பிதழ்

 

நாள்: 18 . 02. 2017  சனிக்கிழமை 

நேரம்: மாலை 5.30 - 7.30 வரை 

இடம்: இந்திய அலுவலர் சங்கக்  கட்டிடம் 

69, திரு.வி.க. நெடுஞ்சாலை 

இராயப்பேட்டை சென்னை - 600014

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :டாக்டர்.திருமதி. மணிமேகலை கண்ணன் 

தொடர்பு எண்கள் : 9841036222 , 8939462185 


http://storyofsemmal.blogspot.in/2017/02/blog-post.html

தேமொழி

unread,
Feb 17, 2017, 3:55:37 AM2/17/17
to மின்தமிழ்
தந்தையாரின் பணியை தொய்வின்றி  முன்னெடுத்துச் செல்லவும் டாக்டர் செம்மல், அதுவே அவர் விருப்பமாகவும் இருந்திருக்கும். 

..... தேமொழி

நாளைய தமிழ்

unread,
Feb 17, 2017, 9:18:03 AM2/17/17
to mintamil
மனிதர்கள் இறப்பது இயற்கையானது. 
அவர்களின் மொழிக்கும் அவ்வியல்பு தொற்றாமல் காப்பது அவரவர்களின் கடமையாகும். 
மணவையாரின் தமிழ்ப் பணிகளை தொடர்வதே எனது வாழ்க்கைப் பணியாக இனி அமையும். 
.
நானே செம்மல். நானே மணவையார்.

தேமொழி

unread,
Feb 20, 2017, 5:18:54 PM2/20/17
to மின்தமிழ்
நன்றி சிறகு: http://siragu.com/?p=25890

என்றும் வாழும் தலைமகனார்! (கவிதை)
இல. பிரகாசம்

தமிழறிஞர் மணவை முஸ்தப்பா



அகரமுதல் னகரம்வரை தமிழில்

அறிவியல் சிந்தையை தேடியவர்

மாசறத் தாம்கற்றுத் தெளிந்த

மாத்தமிழ் நுட்பம் யாவையும்

அறிவியல் சிந்தைக்கு உட்படுத்தியவர்

அண்ணார் அறிந்த அருந்தமிழ்

அறிவுக் களஞ்சிய மணைத்தும்

அறிவியல் இலக்கியச் சமுதாயத்தை

விளைத்திடவே; அல்லும் பகலும்

அயராது அண்ணைத் தமிழுக்கு

அருந்தவத் தொண்டினை ஆற்றினார்

 

செந்தமிழ் மொழியெங்கள் தமிழ்மொழி

முன்னைப் பழமைக்கும் பழமை

மாறிவரும் புதுமைக்கும் புதுமையென

தமிழ்மொழி சிறப்பினை எழுத்தால்

தனித்த வாதத்தால் வென்றார்

தமிழுலகம் சீர்பெற்று வாழ்ந்திட

அறிவியல் பார்வை கொண்டு

ஆய்வுக் கட்டுரைகள் எழுதியெழுதி

தமிழின் மாண்பை நாட்டினார்

தம்அறிவு நுட்பத்தை தண்டமிழ்

இலக்கிய நூலுள் ஆண்டார்

 

உலகரங்கில் தமிழின் தொண்மை

இனிமைவளமை தாய்மை தனித்தன்மை

பொதுமை பண்பாடு நடுவுநிலை

கலைப்பட்டறிவு வெளிப்பாடு இலக்கிய

வளமை பிறமொழித்தாக்க மின்மையென

திறனாய்வு செய்து தமிழ்மொழி

மேன்மையினை பறைசாற்றிய அறிஞர்

மணவை முஸ்தப்பா தமிழ்மொழி

தலைமகனார் அவர்புகழ் இத்தமிழ்

மண்ணுலகம் வாழுங்காலம் யாவும்

அண்ணவர் ஆற்றியஅருந் தவத்தொண்டினை

இத்தமிழுலகம் நாளும்போற்றி வாழ்க!



---------------------------------------------------------------------------------------------




On Thursday, February 16, 2017 at 4:58:27 PM UTC-8, Scientific Tamil University wrote:

நாளைய தமிழ்

unread,
Feb 20, 2017, 10:20:52 PM2/20/17
to mintamil
கவிதையை எழுதிய இல. பிரகாசம் அவர்களுக்கு  நன்றி
Reply all
Reply to author
Forward
0 new messages