முறுவல் என்றால் என்ன?

191 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 29, 2016, 8:46:01 AM7/29/16
to mintamil
முறுவல் என்றால் என்ன?


முறுவல் பற்றிய புதிய ஆய்வுக் கட்டுரை கீழே இணைப்பில்.


http://thiruththam.blogspot.in/2016/07/blog-post_29.html

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

Singanenjam Sambandam

unread,
Jul 29, 2016, 11:14:56 AM7/29/16
to mint...@googlegroups.com
படித்து மகிழ்ந்தேன் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 29, 2016, 11:21:36 AM7/29/16
to mintamil

2016-07-29 20:44 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
படித்து மகிழ்ந்தேன் 

நன்றி ஐயா. :))

தேமொழி

unread,
Jul 29, 2016, 10:43:30 PM7/29/16
to மின்தமிழ், minT...@googlegroups.com
 சிந்தாமணியில் இருந்து ஒரு பாடலைக் காணலாம். 

தத்தும் நீர் பவளத்து உறை நித்திலம்
வைத்த போல் முறுவல் துவர் வாயினீர் - சிந்தா - 895



என்ற வரிகளுக்கு என்னால் இவ்வாறுதான் பொருள் கொள்ள முடிகிறது  சரவணன் :))



 உருண்டு திரண்ட கண் விழிகள் நல்ல வெண்ணிறத்தில் ஒளிவீசி அழகுடன் காணப்படும். இப்படி மகிழ்ச்சியுடன் இருக்கும் பெண்களின் அழகிய கண்விழிகளைத்தான் புலவர்கள் முத்துடன் உவமைப்படுத்திக் கூறியிருக்கின்றனர். 


உருண்டு திரண்ட கண்களை கோழிமுட்டை யுடனும், ஆந்தையின் கண்களுடனும் கூட ஒப்பிடுவார்களே


..... தேமொழி

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 29, 2016, 11:55:59 PM7/29/16
to mintamil
லிப்ஸ்டிக் பூசிய உதடுகள்
செயற்கை பிளாஸ்டிக் மணிகள்

இதெல்லாம் அந்த காலத்திலேயே இருந்திருக்கிறது என்றால் எனக்கும் மகிழ்ச்சிதான் தேமொழி அக்கா. :))

கோழிமுட்டை, ஆந்தக்கண்ணு - இது நம்ம ஸ்டைல். :)))

அன்புடன்,

தி.பொ.ச.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ponmudivadivel Ponmudi

unread,
Jul 30, 2016, 3:55:59 AM7/30/16
to mint...@googlegroups.com
ஐயா,

//வீரர் வீரனும் முறுவலும் வெகுளியும் வீங்க //

என்னுமிடத்தில் 'முறுவலும் வெகுளியும்' என்றிருக்கிறதே, இதற்கு பொருள்கூறும்போது, "முறுவல் ஆகிய கண்விழிகளில் சினம் தோன்றிப் பெருகுவதையே கூறுகின்றன" எனக்கூறுகிறீர்கள்.

'முறுவலும் வெகுளியும்' என்பதில் 'முறுவல்' என்பது உம்மையேற்றிருப்பதாலும் அது தங்கள்கூற்றின்படி கண்ணென்னும்பொருளைக்கொண்டதென்பதாலும் இதற்கு "கண்ணும் வெகுளியும்" என்றுதான்கொள்ளவேண்டுமேயன்றி 'கண்ணில் சினம்" என ஏழாம்வேற்றுமைப்பொருளை கொள்ளமுடியாது!

உம்மையிருக்குமிடத்தில் ஏழாம்வேற்றுமைப்பொருள் எப்படிவரும்?

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 30, 2016, 4:06:58 AM7/30/16
to mintamil

2016-07-30 13:25 GMT+05:30 ponmudivadivel Ponmudi <dr.pon...@gmail.com>:
'முறுவலும் வெகுளியும்' என்பதில் 'முறுவல்' என்பது உம்மையேற்றிருப்பதாலும் அது தங்கள்கூற்றின்படி கண்ணென்னும்பொருளைக்கொண்டதென்பதாலும் இதற்கு "கண்ணும் வெகுளியும்" என்றுதான்கொள்ளவேண்டுமேயன்றி 'கண்ணில் சினம்" என ஏழாம்வேற்றுமைப்பொருளை கொள்ளமுடியாது!

நீங்கள் கூறுவதுபோல கண்ணும் வெகுளியும் என்று சொல்லலாம்.

ஆனால், வெகுளியானது கண்ணில் தெரிவதால் அவ்வாறு எழுதினேன்.

ponmudivadivel Ponmudi

unread,
Jul 30, 2016, 4:19:08 AM7/30/16
to mint...@googlegroups.com
இதுவும் கம்பராமாயணந்தான். இதில் "முளையெயி றிலங்கிட முறுவல் வந்தது" என்றிருப்பதைப்பாருங்கள்.

எயிறிலங்குமுறுவல்' என்பது, பல்லானது விளங்கித்தெரியக்கூடிய சிரிப்பென்னும்பொருளையன்றி வேறென்னபொருளைத்தரும்?

// 1075.வளை பயில் முன் கை
    ஒர் மயில் அனாள், தனக்கு
இளையவள் பெயரினைக்
    கொழுநன் ஈதலும்,
முளை எயிறு இலங்கிட
    முறுவல் வந்தது;
களகள உதிர்ந்தது
    கயல் கண் ஆலியே. //

2016-07-30 13:25 GMT+05:30 ponmudivadivel Ponmudi <dr.pon...@gmail.com>:

ponmudivadivel Ponmudi

unread,
Jul 30, 2016, 4:22:31 AM7/30/16
to mint...@googlegroups.com
ககண்ணையும் வெகுளியையும் சேர்த்துச்சொல்லவேண்டிய தேவை எதுவும் இல்லை. 

--

ponmudivadivel Ponmudi

unread,
Jul 30, 2016, 4:27:28 AM7/30/16
to mint...@googlegroups.com
இந்தப்பாடலைப்பாருங்கள். 

இதில்.  "முறுவலெய்தி' என்றிருக்கிறதே, முறுவலென்பதற்கு கண்ணென்னும்பொருளைக்கொண்டால் எப்படி 'எய்தி' என்பது அதற்கு பொருந்துவதாயிருக்கும்?

1383.

    இராமனும் முறுவல் எய்தி,
நன்று ஒளிர் முகத்தன் ஆகி,
    ‘நாரணன் வலியின் ஆண்ட
வென்றி வில் தருக ‘என்னக்
    கொடுத்தனன், வீரன் கொண்டான்!
துன்று இரும் சடையோன் அஞ்சத்
    தோள் உற வாங்கிச் சொல்லும்.


ponmudivadivel Ponmudi

unread,
Jul 30, 2016, 4:31:51 AM7/30/16
to mint...@googlegroups.com
இந்தப்பாடலில் 'முறுவல்செய்தான்' என்பதும் 'முறுவற்பூத்தாள்' என்பதும் கண்ணென்னும்பொருளிலாவந்தன? அப்படியென்றால் முறுவல்செய்தான்' என்பதென்ன "கண்செய்தான்" ('கண்ணைச்செய்தான்') என்றபொருளையாதரும்?

2833.
ஓதிமம் ஒதுங்கக் கண்ட
    உத்தமன் உழையள் ஆகும்
சீதைதன் நடையை நோக்கிச்
    சிறியது ஓர் முறுவல் செய்தான்;
மாது அவள்தானும், ஆண்டு
    வந்து நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப்
    புதியது ஓர் முறுவல் பூத்தாள்.

ponmudivadivel Ponmudi

unread,
Jul 30, 2016, 4:54:12 AM7/30/16
to mint...@googlegroups.com
கண்ணும் முறுவலும் ஒருங்கேயமைந்திருக்கும் இந்தப்பாடலையும்பாருங்கள்:

4979.வள்ளிநுண் மருங்குல் என்ன,
    வானவர் மருளின் உள்ளம்
தள்ளுறப் பாணி தள்ளா
    நடம் புரி தடம் கண் மாதர்,
வெள்ளிய முறுவல் தோன்றும்
    நகையர் தாம், வெள்குகின்றார்,
கள் இசை அரக்கர் மாதர்
    களித்திடும் குரவை காண்பார்!


இதில், 'நடம்புரிதடங்கண்மாதர்' என கண்ணைப்பற்றி சொல்லி முடித்துவிட்டு, 
'வெள்ளிய முறுவற்றோன்றும் நகையர்' என முறுவலை தனித்துச்சொல்வதைப்பாருங்கள்.

5598.புல்லிய முறுவல் தோன்றப்
    பொறாமையும் சிறிது பொங்க,
எல்லை இல் ஆற்றல் மாக்கள்
    எண் இறந்தாரை ஏவி,
“வல்லையின் அகலா வண்ணம்,
    வானையும் வழியை மாற்றிக்,
கொல்லலிர், குரங்கை நொய்தில்
    பற்றுதிர், கொணர்திர்! ‘‘ என்றான்.

இதில் 'புல்லியமுறுவல்' என்பது 'பொறாமையும்' என்பதோடு பொருத்தித்தரப்பட்டுள்ளது. 
இதற்கு பொருள்கொள்ளும்போது,  'சிறிய கண் தோன்ற' என்றாகொள்வது?

கண்ணென்பதென்ன தோன்றாமலிருந்து வேண்டும்போதுதோன்றுவதா?

'முறுவல்' இடம்பெறும் பிறவிடங்களை இந்த இணைப்பில் காண்க:

http://www.tamilvu.org/library/l3700/html/l3700ind.htm

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 30, 2016, 5:02:52 AM7/30/16
to mintamil

2016-07-30 13:57 GMT+05:30 ponmudivadivel Ponmudi <dr.pon...@gmail.com>:
இதில்.  "முறுவலெய்தி' என்றிருக்கிறதே, முறுவலென்பதற்கு கண்ணென்னும்பொருளைக்கொண்டால் எப்படி 'எய்தி' என்பது அதற்கு பொருந்துவதாயிருக்கும்?

ஐயா

எனது கட்டுரையை மீண்டும் பாருங்கள்.

முறுவல் என்பதற்கு முறுவல் என்ற பொருளும் உண்டு என்றுதான் கூறியிருக்கிறேன்.

மேலும் முறுவல் என்பது பெரும்பாலும் பெண்களின் கண்விழிக்கே பொருந்தும் என்றும் கூறியிருக்கிறேன்.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 30, 2016, 5:04:53 AM7/30/16
to mintamil

2016-07-30 14:32 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
முறுவல் என்பதற்கு முறுவல் என்ற பொருளும் உண்டு என்றுதான் கூறியிருக்கிறேன்.

மன்னிக்கவும். கண்விழி என்ற பொருளும் உண்டென்று படிக்கவும்.

( சாப்பிடப் போறேன் அதான். :)))
Reply all
Reply to author
Forward
0 new messages