Re: [MinTamil] இலக்கிய கர்வம்

416 views
Skip to first unread message

Innamburan Innamburan

unread,
Jan 21, 2011, 12:10:57 PM1/21/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
"கர்வாத் கர்வம் உபஜாயதே."
இன்னம்பூரான்

2011/1/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இலக்கியத் துணிச்சல் இழையில் நான் எழுதுவதால் சிலர் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவஸ்தைப் படலாம். எதற்கு நம்மால் சிரமம்? எனவே எனக்கென்று இருக்கும் ’இலக்கிய கர்வம்’ இருக்கவே இருக்கிறது. இனி ஏதாவது எழுதினால் இதில் எழுதலாம் என்று உத்தேசம். 

கூடு பாய்தல் 
******************** 

காக்கைகள் மரத்தில் 
கணக்கிலவாய் சப்திக்கின்றன; 
ஏனென்று தெரியாத ஓர் ஏக்கம் 
அவற்றின் குரல்களில் 
எனக்கு மட்டும் கேட்கிறது; 
காகமாய் இருந்து நான் 
ஆறுதல் சொல்லக் 
கற்றேனில்லை கூடுபாயும் வித்தை; 
ஒரு வேளை காகங்களின் கேலிக் குரலோ? 
என் உளத்தின் எதிரொலியில் 
ஏக்கச் சாயம் பூசியதோ? 
போக்கற்ற வழிப்போக்கன் முனகுவதாய்ச் 
சிலசமயம் காக்கைகள் கழறும்; 
கலி முற்றிப் போயிற்றென்று 
அடித்துக்கொண்டு அங்கலாய்க்கும் ஒன்று; 
காதலித்த பெண்ணாள் 
கைவிட்ட காமுகனாய்க் கரையும் ஒன்று; 
கடவுள் சந்நிதாநத்தில் 
கள்ளம் உருகக் 
கீதம் இசைப்பதுவாய் ஒரு காகம்; 
ககன வெளியெங்கும் பறந்து 
காணாத ரகசியத்தைக் கண்டு 
விண்டு ஒலிப்பதுவாய் ஒரு வித்தகம்; 
காலித்தனத்தை ஓடஓட விரட்டுவதாய் 
ஒரு பெண் சீற்றம்; 
போலித் தனத்தைக் கிழிப்பதுபோல் 
ஒரு செத்த எலி உடலின் பாடம்; 
மரக்கிளையில், மதகுகளில், 
மாடிகளில், மாலை நேரம் 
கூடடையும் கோதுகலத்தில், 
ரயில் வண்டி நிலையங்களில், 
ஆற்றோரம், வீதிகளில் 
அகலக் கைபரப்பி விரிந்த டவர்களில், 
கோபுரத்தில், கொலுவீற்ற மண்டபத்தில், 
கருவாட்டுக் கூடைகளின் 
ஆலவட்ட அண்மைகளில், 
சேலோடும் விழிகளில் 
சிவந்தோடும் நாணப்புன் நகையாரொப்ப 
கடைக்கண் வீசி எக்களிக்கும் இறுமாப்பில், 
இருட்பால் திரிந்தெங்கும் இறகு விரித்ததெனக் 
கருப்பால் மிளிரும் கூரலகுக் கானவளம் 
மறுக்கின்ற காதுகளின் ஓரங்களில், 
தம்மினத்தின் இறப்பொன்றில் 
தாம் கூடி ஓலமிடும் துயர்க் குழுவில், 
எங்கெங்கோ திரிந்து 
இதுவரையில் காத்திட்ட தன்னுயிரை 
இயலாமல் விட்டதுவோ, 
மின் சுட்டு விழுந்ததுவோ, 
புன்மைக் கவட்டைக் கல் 
புட்டத்தில் பட்டதனால் 
பட்டுப் போய்விட்டதுவோ, 
ஏனென்று தெரியாமல் 
ஏதும் பொருள் புரியாமல் 
ஏக்கப் பார்வையொன்றை 
இறக்குங்கால் வாக்குமூலம் 
ஆக்கிவிட்டு ஆதிமூலம் 
நோக்கிடவே நடுரோட்டில் 
போக்கறியா காக்கையொன்றின் 
பொன்னுடலம் என்விழிநீரில்; 
சமன் செய்த செங்கோலாய்ச் 
சென்றுவிட்ட டயர் ஒன்றின் 
அச்சைச் சுமந்தபடி 
அய்யோவெனக் கிடக்கும் அக்காக்கை; 
குறையோ முறையோவெனக் 
கூடியினம் அரற்றியபின் 
கரையா விதிகிழிக்கவொண்ணாக் 
கூரலகின் வண்ணவுடல்; 
விதியின் வழித்தடத்தில் 
விரையும் வினைவண்டி 
அரைத்துப் பொடியாக்கியதில் 
அங்காந்து கிடக்கின்ற சீவன் நானொருவன்; 
வெங்காந்த அருளுக்கு 
வேகாத வேதாந்த 
வாயாடிப் போய் வீழ்ந்த 
வீணன் எனை விடவும் 
வித்தகக் காக்கை மேலென்று 
விட்டுவந்தேன் இருசொட்டு. 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*** 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

karuannam annam

unread,
Jan 21, 2011, 12:48:01 PM1/21/11
to mint...@googlegroups.com
காக்கைகளி்ன் ஒலியையும், இருப்பையும், இறப்பையும் பாடிவைத்து அதில் தன்தேடலையும் தொடர்கிற நண்பருக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


2011/1/21 Innamburan Innamburan <innam...@googlemail.com>

sk natarajan

unread,
Jan 21, 2011, 12:48:11 PM1/21/11
to mint...@googlegroups.com
ஐயா அருமை , அருவி போன்ற நடை , சித்தர் போன்ற சிந்தனை , உம் அருகே நான் அமர எனக்கு கிடைத்ததே பாக்கியம்
ஒரு விண்ணப்பம்
ஒரு முழு திரைக்கதையும் மூச்சு வாங்காமல் சொல்லியது போல அமைந்துள்ளது
என் போன்ற ஒன்றும் தெரியாதவர்க்கு பகுதி ,பகுதியாக வழங்கினால் உங்களது ஓடையில் நாங்களும் பயணிக்க ஏதுவாக இருக்கும்
தவறாக என்ன வேண்டாம்
குற்றம் இருப்பின் மன்னிக்கவும்


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/

seethaalakshmi subramanian

unread,
Jan 21, 2011, 10:19:53 PM1/21/11
to mint...@googlegroups.com
correct assesment
noboy knows
seethaammaa

2011/1/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நன்றி ஆசீர்வதித்த பெரியவர்கள் இன்னம்பூரர், திரு வினைதீர்த்தான், திரு நடராஜன் ஆகியோருக்கு. 

திரு நடராஜன் சார், ஏதோமயக்கத்துல இருக்கீங்க. என்னோட பழகினாத்தான் என் பவிசு என்னன்னு தெரியவரும். எழுத்தைக் கண்டு ஏமாறாதீர்கள். 

வேறு குழுமத்தில் இப்படித்தான் என்னை நானே யார் என்று யோசித்துப் பார்க்கும் நிலையில் --- 

என்னை நானே எப்படி வகைப்படுத்திக்கொள்வது என்று யோசித்தேன். 

அறிஞன் -- ஒத்துவராது; 

ஆன்மிகவாதி -- எனக்கே சிரிப்பு வருகிறது; 

புனிதன் -- காத தூரம்; 

நல்லவன் -- உலகில் நான் மட்டுமே இருந்தால்; 

அருள் நெஞ்சம் கொண்டவன் -- கடவுளுக்கே அடுக்காது; 

ஒரு நல்ல மனிதன் -- போதும், போதும்; 

சரி என்னதான் நான்? நானும் தலையைப் பிய்த்துக்கொள்கிறேன். 

கவிஞன் -- சரி. ஓரளவுக்குப் பொருந்தும் 

அந்த அலுப்புதான் இப்படி வெளிப்படுகிறது. 
‘என் உள்பட யாருக்கும் நான் நல்லன் இல்லை; ஏன் பிறந்தேன் வீணில் இவ்வுலகில்?’ என்ற அலுப்பு. 
***

2011/1/21 sk natarajan <sknatar...@gmail.com>

venkatachalam Dotthathri

unread,
Jan 21, 2011, 10:40:32 PM1/21/11
to mint...@googlegroups.com
ஓம்
அன்புடை ரங்கன் அவர்களே!
எழுத்தோவியம் .அற்புதம்.
கூடடையும் கோதுகலத்தில்- எனக்குப் பொருள் புரியவில்லை.குதுகலமா...

பாட்டையில் வந்த வண்டிச் சக்கரப் பட்டையில் ஆண் தவளையின்  பாதி உடல் இன்றி மிஞ்சிய பாதியை மட்டும் கண்டது பாடும் பெண் தவளை.

கிங்கும்  கிங்கும் பர்த்தாவே சாமி
கிங்கும்  கிங்கும் பர்த்தாவே சாமி
அங்கும் இங்கும் பார்த்தேனே சாமி
இங்கும் அங்கும் பார்த்தேனே சாமி
சிற்றெறும்பு மொய்க்க மொய்க
சிவனார் குடை பிடிக்க
சிவலோகம் சென்றீரோ பர்த்தாவே சாமி.
அங்கம் குறைந்து பங்கம் அடைந்து
அங்கதனே, சென்றதெங்கே பர்த்தாவே சாமி
கிங்கும்  கிங்கும் பர்த்தாவே சாமி
கிங்கும்  கிங்கும் பர்த்தாவே சாமி
 அன்புடன் வெ.சுப்பிரமணியன்
ஓம்.

2011/1/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நன்றி ஆசீர்வதித்த பெரியவர்கள் இன்னம்பூரர், திரு வினைதீர்த்தான், திரு நடராஜன் ஆகியோருக்கு. 

திரு நடராஜன் சார், ஏதோமயக்கத்துல இருக்கீங்க. என்னோட பழகினாத்தான் என் பவிசு என்னன்னு தெரியவரும். எழுத்தைக் கண்டு ஏமாறாதீர்கள். 

வேறு குழுமத்தில் இப்படித்தான் என்னை நானே யார் என்று யோசித்துப் பார்க்கும் நிலையில் --- 

என்னை நானே எப்படி வகைப்படுத்திக்கொள்வது என்று யோசித்தேன். 

அறிஞன் -- ஒத்துவராது; 

ஆன்மிகவாதி -- எனக்கே சிரிப்பு வருகிறது; 

புனிதன் -- காத தூரம்; 

நல்லவன் -- உலகில் நான் மட்டுமே இருந்தால்; 

அருள் நெஞ்சம் கொண்டவன் -- கடவுளுக்கே அடுக்காது; 

ஒரு நல்ல மனிதன் -- போதும், போதும்; 

சரி என்னதான் நான்? நானும் தலையைப் பிய்த்துக்கொள்கிறேன். 

கவிஞன் -- சரி. ஓரளவுக்குப் பொருந்தும் 

அந்த அலுப்புதான் இப்படி வெளிப்படுகிறது. 
‘என் உள்பட யாருக்கும் நான் நல்லன் இல்லை; ஏன் பிறந்தேன் வீணில் இவ்வுலகில்?’ என்ற அலுப்பு. 
***

2011/1/21 sk natarajan <sknatar...@gmail.com>

devoo

unread,
Jan 21, 2011, 11:04:38 PM1/21/11
to மின்தமிழ்
>>என்னை நானே எப்படி வகைப்படுத்திக்கொள்வது என்று யோசித்தேன்<<

தேவரீரை அடியேன் வகைப்படுத்தலாமா ? கோவப்பட மாட்டீரே

நீவிர் துணிச்சலில் பிரகலாதாழ்வான்; செருக்கில் இரணியன்
(அதனால்தான் இலக்கியத் துணிச்சலையும், இலக்கியச் செருக்கையும்
ஒருசேரக்காண முடிகிறது)

”ஜ்ஞாநே ப்ரயாஸமுபதாஸ்ய நமந்த ஏவ
ஜீவந்தி ஸந்முகரிதாம் பவதீய வார்த்தாம்”
என்னுமொரு பாகவத ச்லோகம் நினைவுக்கு வருகிறது.

ஸ்மாரயே த்வாம் ந சிக்ஷயே


தேவ்

On Jan 21, 8:56 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:


> நன்றி ஆசீர்வதித்த பெரியவர்கள் இன்னம்பூரர், திரு வினைதீர்த்தான், திரு நடராஜன்
> ஆகியோருக்கு.
>
> திரு நடராஜன் சார், ஏதோமயக்கத்துல இருக்கீங்க. என்னோட பழகினாத்தான் என் பவிசு
> என்னன்னு தெரியவரும். எழுத்தைக் கண்டு ஏமாறாதீர்கள்.
>
> வேறு குழுமத்தில் இப்படித்தான் என்னை நானே யார் என்று யோசித்துப் பார்க்கும்
> நிலையில் ---
>
> என்னை நானே எப்படி வகைப்படுத்திக்கொள்வது என்று யோசித்தேன்.
>
> அறிஞன் -- ஒத்துவராது;
>
> ஆன்மிகவாதி -- எனக்கே சிரிப்பு வருகிறது;
>
> புனிதன் -- காத தூரம்;
>
> நல்லவன் -- உலகில் நான் மட்டுமே இருந்தால்;
>
> அருள் நெஞ்சம் கொண்டவன் -- கடவுளுக்கே அடுக்காது;
>
> ஒரு நல்ல மனிதன் -- போதும், போதும்;
>
> சரி என்னதான் நான்? நானும் தலையைப் பிய்த்துக்கொள்கிறேன்.
>
> கவிஞன் -- சரி. ஓரளவுக்குப் பொருந்தும்
>
> அந்த அலுப்புதான் இப்படி வெளிப்படுகிறது.
> ‘என் உள்பட யாருக்கும் நான் நல்லன் இல்லை; ஏன் பிறந்தேன் வீணில் இவ்வுலகில்?’
> என்ற அலுப்பு.
> ***
>

> 2011/1/21 sk natarajan <sknatarajan...@gmail.com>


>
> > ஐயா அருமை , அருவி போன்ற நடை , சித்தர் போன்ற சிந்தனை , உம் அருகே நான் அமர
> > எனக்கு கிடைத்ததே பாக்கியம்
> > ஒரு விண்ணப்பம்
> > ஒரு முழு திரைக்கதையும் மூச்சு வாங்காமல் சொல்லியது போல அமைந்துள்ளது
> > என் போன்ற ஒன்றும் தெரியாதவர்க்கு பகுதி ,பகுதியாக வழங்கினால் உங்களது ஓடையில்
> > நாங்களும் பயணிக்க ஏதுவாக இருக்கும்
> > தவறாக என்ன வேண்டாம்
> > குற்றம் இருப்பின் மன்னிக்கவும்
>
> > என்றும் அன்புடன்
> > சா.கி.நடராஜன்.
> >http://tamizhswasam.blogspot.com/
>

> > 2011/1/21 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>


>
> >> இலக்கியத் துணிச்சல் இழையில் நான் எழுதுவதால் சிலர் சொல்லவும் முடியாமல்
> >> மெல்லவும் முடியாமல் அவஸ்தைப் படலாம். எதற்கு நம்மால் சிரமம்? எனவே எனக்கென்று
> >> இருக்கும் ’இலக்கிய கர்வம்’ இருக்கவே இருக்கிறது. இனி ஏதாவது எழுதினால் இதில்
> >> எழுதலாம் என்று உத்தேசம்.
>

> >> *கூடு பாய்தல் *
> >> ********************* *
> >> *
> >> *
> >> *

> >> *


>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
>

> ...
>
> read more »

Hari Krishnan

unread,
Jan 21, 2011, 11:13:30 PM1/21/11
to mint...@googlegroups.com


2011/1/22 venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>

கூடடையும் கோதுகலத்தில்- எனக்குப் பொருள் புரியவில்லை.குதுகலமா

திருப்பாவை பிரயோகம்.  கோதுகலம்=குதூகலம்.

ரங்கன் சொன்னது:

என்னை நானே எப்படி வகைப்படுத்திக்கொள்வது என்று யோசித்தேன். 


ரங்க சித்தர்; ரங்க சித்தனார்; அரங்க சித்த/சித்தனார்.....அரங்கப் புரளிவயலார்.....இரங்க உருளிப்புயலார்..... இதுல ஏதானும் ஒண்ணு... (ரெண்டு மூணுகூட எடுத்துக்கலாம்).  அந்தக் காலத்துப் புனைபெயரெல்லாம் கேட்டால் கொஞ்சம் பயமா இருக்கும்.  சுழல்துப்பாக்கின்னு ஒருத்தர்; இளம்பள்ளி நலங்கிள்ளின்னு ஒருத்தர்; தெசிணின்னு ஒருத்தர் (தெய்வசிகாமணியின் சுருக்கம்),,,,,,,, புனைபெயர்களை வைத்துக்கொண்டே, ஒருத்தர் தன்னைப் பற்றி என்ன மனச்திரத்தில் இருக்கிறார் என்பதைச் சொல்லிவிடலாம்.  சித்தர் யோசித்தர்.  வார்த்தைச் சித்தர் ஒருத்தர் இருந்தாச்சு; இலக்கியச் சித்தர் இருக்கிறார்.  புனைபெயர் வைத்துக்கொள்வதில் ஒரு ரகசியம் உண்டு.  மனித பிரம்மா என்பதைப் போல பயமுறுத்துவதான சுய டாம்டாமாக இருக்கவேண்டும்; அல்லது கிரந்தம் அவசியம் கலந்ததாக மனுஷ்யபுத்திரன் (பாக்கிபேரெல்லாம் யார் புத்திரன்னு தெரியல....).....இல்லாட்டா, புரியவே கூடாது.  கிளவிச்சொல் வார்த்தையார் நல்லாருக்கா?  உங்க பர்சனாலிடிக்குத் தோதுப்படுமா? :))

--
அன்புடன்,
ஹரிகி.

venkatachalam Dotthathri

unread,
Jan 22, 2011, 12:02:59 AM1/22/11
to mint...@googlegroups.com
ஓம்
அன்புடை ரங்கன் அவர்களே!
எழுத்தோவியம் .அற்புதம்.
கூடடையும் கோதுகலத்தில்- எனக்குப் பொருள் புரியவில்லை.குதுகலமா...

பாட்டையில் வந்த வண்டிச் சக்கரப் பட்டையில் ஆண் தவளையின்  பாதி உடல் இன்றி மிஞ்சிய பாதியை மட்டும் கண்டது பாடும் பெண் தவளை.

கிங்கும்  கிங்கும் பர்த்தாவே சாமி
கிங்கும்  கிங்கும் பர்த்தாவே சாமி
அங்கும் இங்கும் பார்த்தேனே சாமி
இங்கும் அங்கும் பார்த்தேனே சாமி
சிற்றெறும்பு மொய்க்க மொய்க
சிவனார் குடை பிடிக்க
சிவலோகம் சென்றீரோ பர்த்தாவே சாமி.
அங்கம் குறைந்து பங்கம் அடைந்து
அங்கதனே, சென்றதெங்கே பர்த்தாவே சாமி
கிங்கும்  கிங்கும் பர்த்தாவே சாமி
கிங்கும்  கிங்கும் பர்த்தாவே சாமி.

-=-=-=-=



 அன்புடன் வெ.சுப்பிரமணியன்
ஓம்.

2011/1/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நன்றி ஆசீர்வதித்த பெரியவர்கள் இன்னம்பூரர், திரு வினைதீர்த்தான், திரு நடராஜன் ஆகியோருக்கு. 

திரு நடராஜன் சார், ஏதோமயக்கத்துல இருக்கீங்க. என்னோட பழகினாத்தான் என் பவிசு என்னன்னு தெரியவரும். எழுத்தைக் கண்டு ஏமாறாதீர்கள். 

வேறு குழுமத்தில் இப்படித்தான் என்னை நானே யார் என்று யோசித்துப் பார்க்கும் நிலையில் --- 

என்னை நானே எப்படி வகைப்படுத்திக்கொள்வது என்று யோசித்தேன். 

அறிஞன் -- ஒத்துவராது; 

ஆன்மிகவாதி -- எனக்கே சிரிப்பு வருகிறது; 

புனிதன் -- காத தூரம்; 

நல்லவன் -- உலகில் நான் மட்டுமே இருந்தால்; 

அருள் நெஞ்சம் கொண்டவன் -- கடவுளுக்கே அடுக்காது; 

ஒரு நல்ல மனிதன் -- போதும், போதும்; 

சரி என்னதான் நான்? நானும் தலையைப் பிய்த்துக்கொள்கிறேன். 

கவிஞன் -- சரி. ஓரளவுக்குப் பொருந்தும் 

அந்த அலுப்புதான் இப்படி வெளிப்படுகிறது. 
‘என் உள்பட யாருக்கும் நான் நல்லன் இல்லை; ஏன் பிறந்தேன் வீணில் இவ்வுலகில்?’ என்ற அலுப்பு. 
***

2011/1/21 sk natarajan <sknatar...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jan 22, 2011, 1:57:17 AM1/22/11
to mint...@googlegroups.com

”சரி என்னதான் நான்? நானும் தலையைப் பிய்த்துக்கொள்கிறேன்.

கவிஞன் -- சரி. ஓரளவுக்குப் பொருந்தும் ’
 
 
 
அப்படியானால்  முழுவதுமாகக் பொருந்துவது  எதற்கு?
 
இப்படிச் சொல்லலாமா   ” குழந்தை” 

 
அந்த அலுப்புதான் இப்படி வெளிப்படுகிறது.
‘என் உள்பட யாருக்கும் நான் நல்லன் இல்லை; ஏன் பிறந்தேன் வீணில் இவ்வுலகில்?’ என்ற அலுப்பு. 
***
 
இந்த  அலுப்பு வராத !  மனிதன்  யோசிப்பதே இல்லை  என்று பொருள்! 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
2011/1/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
சரி என்னதான் நான்? நானும் தலையைப் பிய்த்துக்கொள்கிறேன். 
330.gif

செல்வன்

unread,
Jan 22, 2011, 2:08:05 AM1/22/11
to mint...@googlegroups.com
2011/1/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
என்னை நானே எப்படி வகைப்படுத்திக்கொள்வது என்று யோசித்தேன். 


உங்களை நீங்களே வகைபடுத்தி கொள்வது முறையல்ல.

நான் வகைபடுத்துகிறேன்.

"பண்டிதர்"

--
செல்வன்

வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் வந்தாகணும் அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் - நாட்டுக்கு
படிப்பினை தந்தாகணும்.


www.holyox.blogspot.com


Nagarajan Vadivel

unread,
Jan 22, 2011, 2:14:26 AM1/22/11
to mint...@googlegroups.com
இலக்கியவாதியின் ஆளுமையை  உற்றுநோக்கி அவர் படைக்கும் இலக்கியத்துக்கு மற்றொரு கவிஞரின் தாக்கம் (திருச்சிற்றம்பலக் கவிராயர்) இருப்பதை ஒட்டி இவர் திருவரங்கக் கவிராயர் அல்லது திருவரங்கக் கவியரசு என்று அழைக்கலாம்
நாகராசன்

2011/1/22 செல்வன் <hol...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jan 22, 2011, 2:18:50 AM1/22/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அருவி நீர் போல அழகழகான சொற்கள்-  தனித்தனியாக வாசித்தால் புரிகின்றது ஆனால் முழுதுமாகப் பொருள் புரியவில்லை. மறைமுகமாக ஒரு விஷயத்தை வைத்து எழுதயிருக்கின்றீகள் என்பது புரிகின்றது. அது என்ன என்பது புரியவில்லை. சரி - கவிதைகள் எனறாலே இப்படித்தான் மறைமுகமாக இருக்குமோ..   ?
 
கவிதையைக் கொடுத்த மாதிரியே.. வியாக்கியானத்தையும் கொடுத்து விடலாமே..எங்களுக்கும்  தலை சுற்றாமல் கொஞ்சம் புரியுமே..
(என்ன சோம்பேறிகளே .. இதையும் நான் தான் செய்ய வேண்டுமா என்று யாரோ திட்டுவது கேட்கின்றது..:-)
 
-சுபா 

2011/1/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இலக்கியத் துணிச்சல் இழையில் நான் எழுதுவதால் சிலர் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவஸ்தைப் படலாம். எதற்கு நம்மால் சிரமம்? எனவே எனக்கென்று இருக்கும் ’இலக்கிய கர்வம்’ இருக்கவே இருக்கிறது. இனி ஏதாவது எழுதினால் இதில் எழுதலாம் என்று உத்தேசம். 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Tthamizth Tthenee

unread,
Jan 22, 2011, 2:41:34 AM1/22/11
to mint...@googlegroups.com
இதையும் நான் தான் செய்ய வேண்டுமா என்று யாரோ திட்டுவது கேட்கின்றது..:-)
 
 
வேறு வழியில்லை  அவரேதான்  விளக்கம்  சொல்ல வேண்டும்
 
அதில்தான்  சுவாரஸ்யமே  அடங்கி இருக்கிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/1/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

N. Ganesan

unread,
Jan 22, 2011, 8:31:58 AM1/22/11
to மின்தமிழ்
கவிஞர் மோகனரங்கன் அவர்களுக்கு,

திருலோக சீதாராமனின் கவிதைகளைத் தொகுத்துக்
காலவரிசைப்படி அளிக்கலாம்.

புத்தகங்கள் அச்சிடப் பல பதிப்பகங்களும் இருக்கின்றன.
அடுத்த தலைமுறை அவர் கவிதைகள் வாசிக்க
வாய்ப்பாகும்.

அன்புடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 22, 2011, 9:15:20 AM1/22/11
to மின்தமிழ்

On Jan 22, 1:14 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> இலக்கியவாதியின் ஆளுமையை  உற்றுநோக்கி அவர் படைக்கும் இலக்கியத்துக்கு மற்றொரு
> கவிஞரின் தாக்கம் (திருச்சிற்றம்பலக் கவிராயர்) இருப்பதை ஒட்டி இவர்
> திருவரங்கக் கவிராயர் அல்லது திருவரங்கக் கவியரசு என்று அழைக்கலாம்
> நாகராசன்
>

திருச்சிற்றம்பலக் கவிராயர் தனித்தமிழா?

நா. கணேசன்

> 2011/1/22 செல்வன் <holy...@gmail.com>


>
>
>
>
>
> > 2011/1/21 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>

> >> என்னை நானே எப்படி வகைப்படுத்திக்கொள்வது என்று யோசித்தேன்.
>
> > உங்களை நீங்களே வகைபடுத்தி கொள்வது முறையல்ல.
>
> > நான் வகைபடுத்துகிறேன்.
>
> > "பண்டிதர்"
>
> > --
> > செல்வன்
>
> > வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
> > பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
> > நல்ல சமத்துவம் வந்தாகணும் அதிலே மகத்துவம் உண்டாகணும்
> > நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் - நாட்டுக்கு
> > படிப்பினை தந்தாகணும்.
>

> >  www.holyox.blogspot.com
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

sk natarajan

unread,
Jan 22, 2011, 12:23:01 PM1/22/11
to mint...@googlegroups.com
நீங்கள்  யாராக  இருந்தாலும்
உங்களின் மொழி , நடை , தாக்கம் அசாதாரணமானது ஐயா
உங்களை நேசிக்கின்றேன்
உங்களின் எழுத்துகளை கண்டு அகமகிழ்கின்றேன்
தொடருங்கள் ....
படிக்க காத்திருக்கின்றேன்



என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/


2011/1/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நன்றி ஆசீர்வதித்த பெரியவர்கள் இன்னம்பூரர், திரு வினைதீர்த்தான், திரு நடராஜன் ஆகியோருக்கு. 

N. Ganesan

unread,
Jan 23, 2011, 1:24:14 PM1/23/11
to மின்தமிழ்

On Jan 23, 9:27 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> நுவல்வதிலே திருலோகன் அஞ்சா நெஞ்சன்
> தக்க நூற்கள் ஆய்ந்தோன்’
>

நூற்கள் என்பதில் சந்தி சரியா?
ஆராதி, நீங்கள், ராஜம், ஹரிகி, ... கருத்துரைக்க
வேண்டுகிறேன்.

நா. கணேசன்

> --- என்று.
>
> (தொ...)
> *
> *

Hari Krishnan

unread,
Jan 23, 2011, 9:34:16 PM1/23/11
to mint...@googlegroups.com


2011/1/23 N. Ganesan <naa.g...@gmail.com>

நூற்கள் என்பதில் சந்தி சரியா?
ஆராதி, நீங்கள், ராஜம், ஹரிகி, ... கருத்துரைக்க
வேண்டுகிறேன்.

நா. கணேசன்

பொதுவாக நூல்கள், கால்கள், வேல்கள், சால்கள், பால்கள் (ஆண்பால், பெண்பால்) என்றுதான் வரும். -கள் விகுதியில் பொதுவாக வலி மிகாது.  வாழ்த்துகள், போத்துகள் என்றுதான் வரும்.  வாழ்த்துக்கள், போத்துக்கள் என்று வருவதி்ல்லை.

அது இருக்கட்டும்.  உங்களுக்குதான் இந்த இலக்கணத்தில் எதுவுமே பொருந்தாதே!  நீங்கதான் பீற்றர் உடற ஆளாச்சே!   பீற்றர் சரி என்றால் நூற்கள் சரி.  நூற்கள் சரியில்லை என்றால்..... வேணாப்பா....அன்ட்ரமீடா (ஓகோகோ மடந்து விற்றேன்..... அன்றமீறா) வாருங்கள்.  நுற்பமாக நூல் விற்றுக்கொள்ளலாம். :)

N. Ganesan

unread,
Jan 23, 2011, 9:49:41 PM1/23/11
to மின்தமிழ்

On Jan 23, 8:34 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/1/23 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > நூற்கள் என்பதில் சந்தி சரியா?
> > ஆராதி, நீங்கள், ராஜம், ஹரிகி, ... கருத்துரைக்க
> > வேண்டுகிறேன்.
>
> > நா. கணேசன்
>
> பொதுவாக நூல்கள், கால்கள், வேல்கள், சால்கள், பால்கள் (ஆண்பால், பெண்பால்)
> என்றுதான் வரும். -கள் விகுதியில் பொதுவாக வலி மிகாது.  வாழ்த்துகள், போத்துகள்
> என்றுதான் வரும்.  வாழ்த்துக்கள், போத்துக்கள் என்று வருவதி்ல்லை.
>

ஆம். அப்படித்தான் நானும் நினைக்கிறேன்

> அது இருக்கட்டும்.  உங்களுக்குதான் இந்த இலக்கணத்தில் எதுவுமே பொருந்தாதே!
>  நீங்கதான் பீற்றர் உடற ஆளாச்சே!   பீற்றர் சரி என்றால் நூற்கள் சரி.  நூற்கள்
> சரியில்லை என்றால்..... வேணாப்பா....அன்ட்ரமீடா (ஓகோகோ மடந்து விற்றேன்.....
> அன்றமீறா) வாருங்கள்.  நுற்பமாக நூல் விற்றுக்கொள்ளலாம். :)
>

ஆங்கில t எப்படி எழுதுவது என்பதில் வேறுபாடுகள் உள்ளன.

மலையாளத்தில் t என்பது கிரந்த ட் வைத்து எழுதலாம்
என்றும் குறிப்புள்ளது.

அன்புடன்,
நா. கணேசன்

Hari Krishnan

unread,
Jan 23, 2011, 9:54:50 PM1/23/11
to mint...@googlegroups.com


2011/1/24 N. Ganesan <naa.g...@gmail.com>

ஆங்கில t எப்படி எழுதுவது என்பதில் வேறுபாடுகள் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்னால் பெங்களூரில் வரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் இப்படி ஒரு கார்ட்டூன் போட்டிருந்தார்கள்.  அழகிரியும் அஸாருதீனும் பேசிக்கொள்கிறார்கள்.

அழகிரி சொல்கிறார்: No, no.  It is Azhagiri...not Alagiri.
அஸாரூதீன் சொலகிறார்: No. no.  It is Azharudheen not Alarudheen.....

zh என்பது ழகரத்தைக் குறி்க்குமானால் அஸாருதீனை அலாருதீன் என்று எழுதுவதுதான் பொருத்தம்.  :D

N. Ganesan

unread,
Jan 23, 2011, 9:57:46 PM1/23/11
to மின்தமிழ்

On Jan 23, 8:54 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/1/24 N. Ganesan <naa.gane...@gmail.com>

j (jean) - ழ என்று குறிக்கலாமா? :)

Hari Krishnan

unread,
Jan 23, 2011, 10:01:12 PM1/23/11
to mint...@googlegroups.com


2011/1/24 N. Ganesan <naa.g...@gmail.com>


j (jean) - ழ என்று குறிக்கலாமா? :)


Loch என்பது லாக் என்று உச்சரிக்கப்படுமானால், which என்பதை விக் என்றுதானே உச்சரிக்க வேன்றும்?

Raja sankar

unread,
Jan 23, 2011, 10:19:52 PM1/23/11
to mint...@googlegroups.com
ஹரிகி,

ஆங்கிலத்தில் பல இடங்களில் சி கே ஆவது உங்களுக்கு தெரியுமே. அதுனால் அது லோக் க்கும் விச்சும் சரிதானே

ராஜசங்கர்



2011/1/24 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Hari Krishnan

unread,
Jan 23, 2011, 10:22:27 PM1/23/11
to mint...@googlegroups.com


2011/1/24 Raja sankar <errajasa...@gmail.com>

ஹரிகி,

ஆங்கிலத்தில் பல இடங்களில் சி கே ஆவது உங்களுக்கு தெரியுமே. அதுனால் அது லோக் க்கும் விச்சும் சரிதானே

கணேசனாரும் நானும் fencing பண்ணிக்கொண்டிருக்கோமே....கவனிக்கவில்லையா....:))

Geetha Sambasivam

unread,
Jan 25, 2011, 1:44:12 AM1/25/11
to mint...@googlegroups.com


2011/1/24 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

“எங்கு சென்றதோ அச்சோதி 
என்னுள்ளே மறைந்தது” 

என்று முடித்திருந்தேன். உற்றுக் குவிந்த முகத்தில் ஏதோ ஒரு பெரும் புதையலையே கண்டுவிட்டது போல் ஆர்வம் ததும்ப, 

Subashini Tremmel

unread,
Jan 25, 2011, 12:05:18 PM1/25/11
to mint...@googlegroups.com
அருமையான தொடருக்கு நன்றி.
-சுபா

2011/1/24 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
மாகவிஞன் திருலோகம் 1....  

இத்தகைய கவிப்பெருமிதம் அவரிடம் சூழலிட்டுக் கொண்டிருந்ததற்கு இக்கட்டுரையாளனும் அத்தாட்சி. கவிதையை மட்டும் பார்த்த அவருடைய செவிகள், கண்ணில் தெரியும் மேல் தோற்றத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்பதற்குச் சான்றாக என் நினைவில் குமிழிடும் சம்பவம் ஒன்று. நான் அப்பொழுது சிறுவன். மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தவன். வீட்டிற்கு வந்திருந்த கவிஞரிடம் தந்தையார், ‘இவன் ஏதோ கவிதையென்று சிலவற்றை எழுதிக்கொண்டிருக்கிறான். நீங்கள்தாம் அதைக் கேட்டு அவனைச் சரியான வழியில் செலுத்த வேண்டும்’ என்று கூறினார். மகிழ்ச்சியும், பயமும் கலந்த மனநிலையில், குறிப்பேட்டின் கடைசிப் பக்கத்தில் எழுதி வைத்திருந்த கவிதை ஒன்றைப் படித்துக் காண்பித்தேன். 

வானிலிருந்து ஜோதி ஒன்று வந்ததாகவும், அது கடவுள் என்று தோற்ற, அதனிடமே, கடவுளை இல்லையென்பாரும், உளது என்பாருமாய்க் கூறுவோர் பலராக இருக்கும் அதிசயத்தைக் கேட்பதுபோல் ஆரம்பிக்கும் அந்தக் கவிதை. அந்த ஒளியும் அதற்குப் பதிலாகத் தானே அனைவருள்ளும் இருந்து, அனைத்துவிதமாகவும் உரைப்பதாகவும் கூறியது மேலும் அதிசயமாக இருக்க, விழித்த என் முன்னிருந்து, 

“எங்கு சென்றதோ அச்சோதி 
என்னுள்ளே மறைந்தது” 

என்று முடித்திருந்தேன். உற்றுக் குவிந்த முகத்தில் ஏதோ ஒரு பெரும் புதையலையே கண்டுவிட்டது போல் ஆர்வம் ததும்ப, 

“அங்குதான், அந்தக் கடைசி வரியில்தான் இருக்கிறது கவிதை” என்று கவிஞர் ஆர்ப்பரித்தது என் நினைவில் பதிந்து, கவிதையை இனங்காணும் பயிற்சியை எனக்குத் தந்திருக்கிறது. அவர் சொன்ன பின்னர்தான் என்னுடைய கவிதையே எனக்கே புதிய ஒளியில் அன்று, எழுதும் கணத்தில் இருந்த சுய ஒளியில் தெரியத் தொடங்கியது. நான் அவரிடம் எதிர்பார்த்த எதிர்வினை, ‘பேஷ்! நன்றாக எழுதுகிறாயே! மேற்கொண்டு நிறைய எழுது. நன்கு படியும்’ என்பது போன்ற உபதேசத்தைத்தான். ஆனால் அவரோ கவிதையை மட்டும்தான் பார்த்தார். 

அப்படி அவர் இயற்றிய கவிதைத் தவம்தான் என்ன? எந்த நோன்பிருந்து அத்தகைய சித்தி கைவரப் பெற்றவர் ஆனார்? கவிதைகளை மனப்பாடம் செய்யும் பயிற்சியா? அல்லது வாக்சாலமாக உரையாற்றும் திறமையா? இவைகளை வைத்துக்கொண்டு அவரை அடையாளம் காட்டுவோரும் உண்டு என்றாலும், கவிதை என்னும் கட்டெழில் களிபொங்கித் ததும்ப, அவர் கைக்கொண்ட குளிகை என்ன என்று நாம் அவர் எழுத்துக்களிடையே, அவர் பேசிய பேச்சுக்களிடையே, அவர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிடையே தேடித்துருவிப் பார்த்தால் சில தடயங்கள், தகவல்கள் கிடைக்கின்றன. 

உதாரணமாகக் கவிஞர் எழுதுகிறார், தமது ‘இலக்கியச் சுவை’ என்ற கட்டுரை ஒன்றில். 

“தமிழ்க் கவிதைகளை அவற்றின் தொனிப் பொருளும், கற்பனை வண்ணமும் பொலிய இசைத்துக் காட்டும் இயல்பு எனக்குண்டு...கவிதைகளை இசைப்பதில் நான் கையாளும் முறையை மகிழ்ந்தவர் பலராயினும், அம்முறையை விளக்கிக் காட்டுமாறு என்னை அணுகுவோர் வெகு சிலரே. இன்னும் சிலராவது இதைக் கொள்ள வேண்டும் என்பது என் ஆசை.” 

இவ்வாறு கவிதை இசைப்பதில் உள்ள சூட்சுமம் என்ன? எவ்வாறு இசைத்தால் தமிழ்க்கவிதை தன் ஆழ்பொருள் சுரந்து நிற்கும்? என்பதற்கு ஒரு சம்பவம், எங்கள் வீட்டில் நடந்தது, நினைவிற்கு வருகிறது. 

(தொ..)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

coral shree

unread,
Jan 25, 2011, 12:09:26 PM1/25/11
to mint...@googlegroups.com
நல்ல ரசிக்கும்படியான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

2011/1/25 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
மாகவிஞன் திருலோகம் 1....  

திருவரங்கத்தில் ஒரு நாள் மாலை அப்பொழுதுதான் தந்தை அலுவலகத்திலிருந்து வந்திருந்தார். வாசலில் கவிஞர் கூப்பிடும் குரல் கேட்க, வந்த அலுப்பெல்லாம் எங்கோ மறைந்துவிட, எங்கள் அனைவருக்கும் பொழுதே பொன்னாக மாறத்தொடங்கியது. கவிஞர் வந்திருக்கிறார் என்றதும், எதிர்சாரியில் இருந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர் (பெயர் வேண்டாம் என்று நினைக்கிறேன்) கவிஞரைப் பார்த்துப் பேசிவிட்டுப் போவதற்காக வந்தார். வந்தவர் பாரதியைப் பற்றி உணர்ச்சி பொங்கப் பேச ஆரம்பித்து, ‘பாரதி கவிதைகளைச் சொன்னாலே உணர்ச்சி நமக்கும் வந்துவிடும் அளவிற்கு அமைந்து இருக்கின்றன. உதாரணமாக ‘வீரத்திருவிழிப் பார்வையும் வெற்றிவேலும் மயிலும் உடன் நின்றே’ என்ற பாடலின் ஆரம்ப வரிகளைச் சாதாரணமாக இசைகூட்டி ராகத்திற்கேற்பப் பாடுவதுபோல் பாடத்தொடங்கினார். பாடகர்கள் சாதாரணமாக இப்படித்தான் பாடுகிறார்கள் என்பதால் எங்களுக்கு ஒன்றும் வித்யாசமாகத் தெரியவில்லை. ஆனால் கவிஞரால் பொறுக்க முடியவில்லை. பாய்ந்தார். 

“நிறுத்துங்கள். தமிழ்க் கவிதையில் அதற்குள்ளேயே இசை அமைந்து இருக்கிறது. நெடிலை நீட்டி, குறிலைக் குறுக்கிச் சொன்னால் அந்த இயல்பான இசை தன்னைப் போல் வெளிப்படும்.. அதை விட்டுவிட்டு நீங்கள் யார் புதிதாக ஓர் இசையை அதன்மேல் ஒட்டவைப்பதற்கு? நெடிலையும், குறிலையும் குற்றுயிராக அடித்துவிட்டு? நெடிலை நீட்டினால் போதும், குறிலைக் குறுக்கினால் போதும்; இந்தச் சூட்சுமம் ஒரு தமிழ் படித்த முண்டத்துக்கும் தெரிய மாட்டேன் என்கிறது” என்று பொழிந்து தள்ளிவிட்டார். 

எங்களுக்கு ஒரு பக்கம் பேராசிரியரைக் கண்டு ‘ஐயோ பாவம்’ என்ற அநுதாபம்தான் என்றாலும் அன்று நாங்கள் கற்றுக் கொண்ட பாடம்தான் எத்தனை மதிப்புடையது! (அதை அந்தப் பேராசிரியரும் உடனே உணர்ந்துகொண்டார் என்பதையும் சொல்ல வேண்டும்) அந்தப் பாடத்திற்குப் பின் தமிழ்க் கவிதை எங்களோடு எவ்வளவு நேசம் கொள்ளத் தொடங்கியது என்பது அனுபவத்தில் கண்ட பலன். 

ஆனால் கவிஞரின் இந்த ஒளிவு மறைவற்ற உண்மையான எதிரியக்கத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள், ‘அவரா? வல்வாயர், கர்வி’ என்று தங்கள் காயங்களைத்தாம் தடவி விட்டுக்கொண்டு போனார்கள். 

இவ்வாறு இயங்கும் போது கவிஞர் எந்த உண்மையில் உணர்வுக்கால் ஊன்றி நிற்கிறாரோ அதே உண்மையில் ஊன்றி நின்றுதான் ஒரு சிறுவன் எழுதிய கவிதை வரிகளையும் கவனித்திருக்கிறார். கவிதையைக் கண்டதும் மகிழ்ச்சியும், செவிகாணும் கவிதையைச் சொல்பவர் மறைக்க முயல்வதைக் கண்டு சீற்றமும் எனக்கு என்னவோ ஒன்றாகத்தான் தெரிகிறது. உணர்ச்சிகள் என்ற வடிகாலின் பிரிவுகளைக் கணக்கில் எடுக்காமல், ஊற்றுக்கண் ஒன்றே என்று பார்த்தால் இது புரியும். 

(தொ..)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

மின் செய்தி மாலை படியுங்கள்!

Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

MANICKAM POOPATHI

unread,
Jan 27, 2011, 8:45:38 PM1/27/11
to mint...@googlegroups.com
வணக்கம் நண்பர்களே:  _/\_

தாள்கள்/தோள்கள் => தாட்கள்/தோட்கள்..  வராது
ஆள்கள்/நாள்கள் => ஆட்கள் /நாட்கள்..  வரலாம்

ஈற்றில் உகரம்/ஊகாரம் வந்தால் வல்லின ஒற்று மிகும்..?
(முழுப் பொறுப்பு / பூப் பறிக்க....)

எழுத்து + கள் = எழுத்துக்கள் என்றாகும் (இக்கன்னா)
(இங்கே -கள் என்பது ஒரு தனிச் சொல் அல்ல...)
எழுத்துக்கள் என்றால்.. எழுதும் எழுத்துக்கள் (letters)
எழுத்துகள் (writings)  என்பது.. அது வேறு இல்லீங்களா..?

(transitive verb vs.  plural noun  <OR>
compound noun verses collective noun....)
there is an underlying  difference between
fear of dying and fear of death...? Right..?

இப்ப இல்லாத  இக்கட்டேல்லாம்..
பேச்சுவழக்கில்.. காலம் சார்ந்த சொற்கள் 
திங்கள்/நாள்/கிழமை/ஆண்டு போன்றவற்றினை
குறிப்பிட பன்மை தேவைப் படுவதில்லை என்பதுதானே..?

மிகவும் நன்றிகள்...!

அன்புடன்.../பூபதி
__________________
பிகு:
இன்னுமொன்று..  (forgive my  preemptive response)
பேச்சு வழக்கில்.. அவர்கள் என்பது அவங்க என்றாவதைப் போல
நன்றிகள் =  நன்றிங்க/வணக்கங்கள் = வணக்கங்க என்றெல்லாம்
இங்கிதப் படுவது..  தமிழர்தம் தனி' மரபு ஆகும்.   சரீங்களா..?
________________________________________



venkatachalam Dotthathri

unread,
Jan 30, 2011, 5:44:58 AM1/30/11
to mint...@googlegroups.com
ஓம்
அன்பர் திரு மோகனரங்கன் அவர்களின் “திரிலோக சீத்தாராமன்” அவர்களின் கவித்துவ மரபுத் தொடர் மிகவும் அருமை. அஞ்சாநெஞ்சம் கொண்ட தமிழ்ப் பற்றாளர் அவர்களின் உடன் பழகும் வாய்ப்பு கிட்டியது பேருவகை.
என்னுடய நண்பரும் முதியவருமான திரு மகேந்திரன் அவர்கள் திரு திரிலோக சீத்தாராமன் அவர்களின் அணிமையில் இருந்தவர், மதுரை சோழவந்தான் காரர். அவர் தன்னுடைய அனுபவங்களையும் புலவரின் பெருமையையும் கூறி மகிழ்ந்து என்னையும் மகிழ்விப்பார்.
அவ்வாறு அவர் கூறிய ஒரு சம்பவத்தை வைத்து அதன் கருத்தைத் தழுவி ’கைத்தடி’ என்ற சிறுகதையினை நான் குழுமத்தில் மடலிட்டேன்..
நன்றியுடன்

வெ.சுப்பிரமணியன்
ஓம்

2011/1/28 MANICKAM POOPATHI <poop...@gmail.com>

Dhivakar

unread,
Jan 31, 2011, 12:41:37 AM1/31/11
to mint...@googlegroups.com
இந்த மாகவிஞன் தன் காலத்தில் அந்தப் பகுதியில் - குறிப்பாக தஞ்சை, திருச்சியில்- உள்ள அத்தனை அறிஞர்களையும் தன் பால் தன் கவிதையால் ஈர்த்தவர் என்பது நம் ரங்கனாரின் பதிவின் மூலம் மட்டுமல்லாமல் திரு டி.என்.ராமச்சந்திரன் (சேக்கிழார் அடிப்பொடி) மூலமும் ஏற்கனவே தெரிந்து ஆச்சரியப்பட்டவன். இங்கு 10 வருடங்களுக்கு முன்னால் நடந்த கண்ணதாசன் விழாவில் கண்ணதாசனை துளியூண்டு சொல்லி விட்டு திருலோகம் பற்றி ஆரம்பித்து விட்டார் சேக்கிழார் அடிப்பொடி. பின்னால் காரணம் கேட்டோம். கவிதை என ஆரம்பித்தவுடன் இந்த மாகவிஞன் என் நாவில் வந்து விட்டார்.. என்ன செய்வது என்றார்..

’கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்
காசிருந்தால் வாங்கலாம்’ என்ற கண்ணதாசனின் கவிதையை சொல்லிவிட்டு

சந்தையில் கவிதை வரிகளையும் அவர் சொல்லியது என் நினைவுக்கு வருகிறது..

தொடருங்கள் ரங்கனாரே!

2011/1/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
மாகவிஞன் திருலோகம் 1.... 

நாமக்கல்லில் பாரதி பேச்சின் சந்தர்ப்பத்தில் சற்றே நேரம் கடந்துவந்த கவிஞரைக் காசிராஜன், திரு சத்தியசீலன், திரு அறிவொளி, திரு புத்தனாம்பட்டி ராஜகோபாலன் ஆகியோர் அவருடைய கவிதை ஒன்றை அவர் வாயால் கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டனர். அப்பொழுது தாம் பாடிய ‘சந்தையில் கவிதை’ என்ற கவிதையை இசைத்துக் காட்டினார். 

“மச்சு வீடுதான், 
மாடியில்.....கூரை இல்லை. 
என்னினும்..இருள்வான் உண்டே ! 

உச்சியில் கொடுங்கை 
உளுத்துக் கொட்டும் 
உள்ளத் தினவின் 
ஒளித்துகள், 

அதனை ஒத்தி எடுத்து 
ஒன்றாய்த் திரட்டி 
ஒற்றைத் தெருவின் மூலையில் 
நின்று கத்தினால் --- 
தணியாக் காமமும் 
கள்ளும் 
கள்ள விலைக்குக் கவிதைக் கொசுரும் 
வாங்கிடும் புண்ணியவான்கள் 
யாரும் வரலாமன்றோ! 

வாசலில் சேவல் 
கூவிடு முன்னம் 
கோட்டை மணியும் குழைந்தது; 
கனவு குலைந்தது. 

போ, போ 
பைத்தியம் 
உலகப் பக்குவம் இன்னும் பெற்றிலை, 
கவிதையோர் பிழைப்பா? 
உலர்ந்தவாய் வெற்றிலைக்கு 
வக்கிலை என்று 
அசை போட்டு 
வெறும் வாய் வெளுத்தனை பொழுதாய் ! 

உச்சிப் பிள்ளையார் 
ஊமையாய்ச் செவிடாய் 
உறங்கிப் போன மலைமணி 
வைகறைப் 
பச்சைப் பிள்ளை 
பாலுக்கழுவதைப் 
பாரோர் கேட்கப் பறையறைகின்றது; 

அவரவர் எழுந்து அவதிகள் எண்ணித் 
தலைப் பொறியாகத் தவிப்பார். 
சந்தை இரைச்சலில் 
கவிதை யாருக்கு வேணும்? 
கற்பனை விட்டுக் கணக்கிதைப் போடு; 
நேற்று மாலையில் நீட்டி முழக்கிக் 
கோற்றேன் கவிதை கொப்பளித் திருந்த 
கவிஞன் பெற்றியைக் கற்பனை விந்தையைக் 
கதைத்தாய் ! 
விமரிசனக் கடையும் விரித்தாய். 
கூட்டம் கொஞ்சமா? 
கொண்டவர் யாரும் உண்டா? 
அந்த உருப்படி 
அச்சில் வார்த்தால் 
யாரும் வாங்கிட வருவரா? 

பிரதிகள் 

அன்பளிப்பாக 

ஆளுக்கொன்றாய் 

அளித்தால் “நன்றே ஆ ! ஆ!’ என்பர். 
வெட்டிப் பிழைப்பு 
விடிந்தால் நாளை 
எட்டையா புரத்தில் எழிலார் சென்னையில் 
இன்னும் பற்பல இனைய பல்லூரில் 
எந்தமிழ்த் தந்தை 
இணையிலாக் கவிஞன் 
இறந்த நாளை 
எத்துணை மகிழ்வாய்க் 
கூடித் திருநாள் கொண்டா டுவர், பார் ! 

மந்திரி மாரும் மகரா சர்களும் 
போனவன் பெருமை புகழ்வார்ப் 
புகழ 
வீணன் உனக்கும் வேலையுண் டாங்கே 

பாரதி உறங்கும் பளிக்குக் கல்லறை 
பக்கத் தின்னும் பற்பல ! 
ஒன்றில் முடங்கலாம் நீயும்; 
மூன்றா நாளில் எழுந்தும் வரலாம். 
இணையிலாக் கவி நீ ! 
இல்லையென் றாரே இயம்பினார்? 
இன்று 
பிழைக்கும் வழியைப் போய்ப்பார் 
உடனே 
புறப்படென் றொருகுரல் கேட்கப் 
போர்வையை விலக்கிப் புறப்பட் டேனே. 

(தொடரும்)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

S.Krishnamoorthy

unread,
Jan 31, 2011, 1:18:31 AM1/31/11
to mint...@googlegroups.com
அன்புமிக்க மோஹனரங்கன்!
எனக்கும் திருலோக சீதாராமன் அவர்களைத் தெரியும் என்று சொல்லிக்கொள்ளுவதில் மிகவும் பெருமைதான்.  அவரை முதன்முதலில் தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டு விழாவில் சந்திக்கும் பாக்கியம் கிட்டியது.  பாஞ்சாலி சபதம் முழுவதையும் அவர் இசைக்க, கேட்டவர் அனைவரும் மகுடிநாதத்தால் மயங்கியவர்போல் ஆயினர்.
பின்னர் எனது திருச்சி வாசத்த்தில் அவரைப் பலமுறை “சிவாஜி” அலுவலகத்தில் (கோட்டை ரயில் நிலையம் செல்லும் வழியில்) சந்தித்து உரையாடி இருக்கிறேன்.  நான் அந்தக் காலத்தில் (எனக்கு வயது 79) எழுதிய சில கட்டுரைகளை சிவாஜியில் வெளியிட்டு இருக்கிறார்.
அவர் எழுதி வெளிவந்திருக்கும் “இலக்கியப் படகு” ஒரு மிகச் சிறந்த சிந்தனை விருந்து. என்னைவிட்டு அகலாத புத்தகம்.  நான் தினமும் வாசிக்கும் புத்தகம்.  மின் தமிழ் அன்பர்கள் அந்தப் புத்தகத்தைக் கட்டாயம் வாங்கி வாசிக்கவேண்டும் என்பது என் அவா.
பாரதிக்குப் பிறகு மிகச் சிறந்த சிந்தனாவதியான ஒரு கலைஞன் திருலோக சீதாராம் அவர்கள் என்பதை இன்றையத் தமிழர்கள் அறிந்திருந்தாது தமிழ்நாட்டைப் பீடித்துள்ள அவலநிலைகளில் ஒன்று.
மோஹனரங்கன்! திருலோக சீதாராமை வெளிப்படுத்துங்கள்.  தமிழ்நேசர்கள் உங்களை வாழ்த்துவார்கள்.!
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

2011/1/31 Dhivakar <venkdh...@gmail.com>



--
S. Krishnamoorthy

shylaja

unread,
Jan 31, 2011, 1:41:22 AM1/31/11
to mint...@googlegroups.com
இலக்கியப்படகு! தமது  நூலிற்கு வைத்த இந்த தலைப்பின் பெயரிலேயே நம்மை  யோசிக்கவைக்கிறார்  அந்த மாபெரும் கவிஞர்!
’எளிமையும் கம்பீரமும்,  இதயத்தைத்திறந்து பேசும் பிள்ளைமையும், மண்ணும்  விண்ணும்  இரண்டையும் இணைக்கும்  முரண்பாட்டு ஏணிகளும், உலகியலறிவும் , சமய உணர்வும்,  கவியும் ,அழகும், தெளிவும் மயக்கமும்,  தோழமையும்  பரிவும்  --இப்படியாக பல அரிய சரக்குகள் தாங்கி நிற்கிறது  ‘இலக்கியப்படகு’ என்று  நூலிற்கு முன்னுரை எழுதிய திருஎஸ்.மகராஜன் கூறியதைப்போல  உணர்வுடையோர்  இப்படகில் ஏறி  மேலும் உணர்வு பெறுவார்களாக! சிவாஜி என்ற அவரது பத்திரிகையில்  தொடராக வந்த கட்டுரைகளை கலைஞர்பதிப்பகம்  புத்தகமாக வெளியிட்டுள்ளது 2000ம் ஆண்டில் இரண்டாம் பதிப்புவந்தபோது வாங்கி வாசித்துவிட்டேன் என்று கூற முடியாது  வாசித்துக்கொண்டே இருக்கச்சொல்லும்  அற்புதப்புத்தகம்.

2011/1/31 S.Krishnamoorthy <sundara.kri...@gmail.com>

Kamala Devi

unread,
Jan 31, 2011, 5:18:53 AM1/31/11
to mint...@googlegroups.com
இந்த நூல் படிக்க ஞானும்  மிகவும் ஆவலாயுள்ளேன்
 
http://www.kamalagaanam.blogspot.com



From: S.Krishnamoorthy <sundara.kri...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Monday, 31 January 2011 14:18:31
Subject: Re: [MinTamil] Re: இலக்கிய கர்வம்

Geetha Sambasivam

unread,
Jan 31, 2011, 5:52:27 AM1/31/11
to mint...@googlegroups.com
கவிதையைக் கண்டதும் மகிழ்ச்சியும், செவிகாணும் கவிதையைச் சொல்பவர் மறைக்க முயல்வதைக் கண்டு சீற்றமும் எனக்கு என்னவோ ஒன்றாகத்தான் தெரிகிறது. உணர்ச்சிகள் என்ற வடிகாலின் பிரிவுகளைக் கணக்கில் எடுக்காமல், ஊற்றுக்கண் ஒன்றே என்று பார்த்தால் இது புரியும். //

புதிய கோணம். திரிலோக் சீதாராம் அவர்கள் பற்றிய இந்தத் தொகுப்பு மிகவும் அரிய விஷயங்களை உள்ளடக்கி இருக்கிறது. 

2011/1/25 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
மாகவிஞன் திருலோகம் 1....  


இவ்வாறு இயங்கும் போது கவிஞர் எந்த உண்மையில் உணர்வுக்கால் ஊன்றி நிற்கிறாரோ அதே உண்மையில் ஊன்றி நின்றுதான் ஒரு சிறுவன் எழுதிய கவிதை வரிகளையும் கவனித்திருக்கிறார். கவிதையைக் கண்டதும் மகிழ்ச்சியும், செவிகாணும் கவிதையைச் சொல்பவர் மறைக்க முயல்வதைக் கண்டு சீற்றமும் எனக்கு என்னவோ ஒன்றாகத்தான் தெரிகிறது. உணர்ச்சிகள் என்ற வடிகாலின் பிரிவுகளைக் கணக்கில் எடுக்காமல், ஊற்றுக்கண் ஒன்றே என்று பார்த்தால் இது புரியும். 

(தொ..)

--

Geetha Sambasivam

unread,
Jan 31, 2011, 5:55:11 AM1/31/11
to mint...@googlegroups.com
தந்தையாரோ, ‘அதெல்லாம் உங்களைப் போன்ற சில மேதைகளுக்குச் சரிப்பட்டு வரும்.//

உண்மைதான், உங்களையும் சேர்த்து! எத்தகையதொரு இலக்கியவாதிகளோடு வாழ்கிறீர்கள்? கொடுத்து வைச்சிருக்கீங்க! பொறாமையாய் இருக்கிறது.

2011/1/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
மாகவிஞன் திருலோகம் 1.... 


தந்தையாரோ, ‘அதெல்லாம் உங்களைப் போன்ற சில மேதைகளுக்குச் சரிப்பட்டு வரும்.
*** 

(தொ...)

--

Geetha Sambasivam

unread,
Jan 31, 2011, 5:57:39 AM1/31/11
to mint...@googlegroups.com
நல்ல யோசனை,  இப்போ என்றால், திருப்பி அனுப்பிட்டாரா? ரொம்ப நல்லதாப் போச்சுனு நினைச்சாலும் நினைக்கலாம்! :))))))

2011/1/27 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
மாகவிஞன் திருலோகம் 1....  



, இதற்கெல்லாம் விடிவாகத் தாம் அந்தச் சீட்டையே பேசாமல் பதிப்பகத்தாருக்கே திருப்பி அனுப்பிவிடுவதாகவும், இதனால் பணம் வரவில்லையானாலும் குறைந்தது தம்மிடம் உள்ள நல்ல பண்புகள் குறையாமலாவது இருக்கும் என்று தாம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டு கடிதத்தோடு அந்தச் சீட்டைப் பதிப்பகத்தாருக்கே திருப்பி அனுப்பச் சொல்லிவிட்டார் கவிஞர். 

நண்பருக்குக் குழப்பமாக இருந்தாலும், கவிஞரிடம் உள்ள பெரும் விச்வாசத்தினால் ஒரே மனத்துடன் அவ்வாறு செய்துவிட்டார். ஒரு லாபம் அவருக்குக் கைமேல் பலனாய்க் கிடைத்தது. பிரச்சனை ஒழிந்தது என்று நிம்மதி லாபமாகியது. அப்புறம் அதைப் பற்றிச் சிறிதும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் ஆச்சரியம் சிறிது நாள்களில் பதிப்பகத்தாரிடமிருந்து மன்னிப்புக் கடிதத்துடன் அவருக்கு உரிய பணமும் வந்து சேர்ந்தது.
(தொ...)

--

Geetha Sambasivam

unread,
Jan 31, 2011, 6:01:01 AM1/31/11
to mint...@googlegroups.com

எந்தமிழ்த் தந்தை 
இணையிலாக் கவிஞன் 
இறந்த நாளை 
எத்துணை மகிழ்வாய்க் 
கூடித் திருநாள் கொண்டா டுவர், பார் ! //

முற்றிலும் உண்மைதானே!  இப்படித் தான் நடக்கிறது! :(

2011/1/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
மாகவிஞன் திருலோகம் 1.... 

இன்னும் பற்பல இனைய பல்லூரில் 
எந்தமிழ்த் தந்தை 
இணையிலாக் கவிஞன் 
இறந்த நாளை 
எத்துணை மகிழ்வாய்க் 
கூடித் திருநாள் கொண்டா டுவர், பார் ! 



(தொடரும்)

Geetha Sambasivam

unread,
Jan 31, 2011, 6:02:41 AM1/31/11
to mint...@googlegroups.com
சிவாஜி என்ற அவரது பத்திரிகையில்//

புதிய செய்தி.

2011/1/31 shylaja <shyl...@gmail.com>

N. Ganesan

unread,
Jan 31, 2011, 6:15:40 AM1/31/11
to மின்தமிழ்

On Jan 30, 9:48 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> *மாகவிஞன் திருலோகம் 1.... *
> *
> *


> நாமக்கல்லில் பாரதி பேச்சின் சந்தர்ப்பத்தில் சற்றே நேரம் கடந்துவந்த கவிஞரைக்
> காசிராஜன், திரு சத்தியசீலன், திரு அறிவொளி, திரு புத்தனாம்பட்டி ராஜகோபாலன்
> ஆகியோர் அவருடைய கவிதை ஒன்றை அவர் வாயால் கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டனர்.
> அப்பொழுது தாம் பாடிய ‘சந்தையில் கவிதை’ என்ற கவிதையை இசைத்துக் காட்டினார்.
>

இந்தக் கவிதை அச்சில் இருக்கிறதா?
(அ) முதல்முறை எழுத்து வடிவம் பெறுகிறதா?

திருலோகத்தின் கவிதைகள் முழுதும் சில தொகுதிகள்
ஆகவேண்டும். உங்களைப் போன்ற அன்பர்கள்
சேர்ந்தால் அந்த முயற்சி நிறைவேறும். நீங்கள்
தலைமையேற்று அந்த அரிய பணியை
நடத்த வேண்டுகோள் விடுக்க்றேன்.

அன்புடன்,
நா. கணேசன்

shylaja

unread,
Jan 31, 2011, 7:50:32 AM1/31/11
to mint...@googlegroups.com
சிவாஜி என்ற பத்திரிகையை திருலோகசீதாராம் அவர்கள்  பலவருடங்கள் மிகத்திறமையாக நடத்தினார், இதைப்பற்றி மோகனரங்கன்  விவரமாகக்கூறுவார் என நினைக்கிறேன்.

2011/1/31 Geetha Sambasivam <geetha...@gmail.com>

shylaja

unread,
Jan 31, 2011, 7:52:38 AM1/31/11
to mint...@googlegroups.com
டிஎன் ஆர் எனும் டி என் ராமசந்திரன், திருலோக சீதாராம் அவர்களைச் சந்திக்க திருச்சி வருவார்  இவர் செல்லாவிட்டால் திருலோகம் இவரை சந்திக்க தஞ்சை வந்துவிடுவார் இருவரிடையே மிக உயர்ந்த நட்பு நிலவியது.. திருலோகத்தின் பல கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சிவாஜிக்கு அனுப்பிவைத்தார் டி என் ஆர்.
கவிஞர் திருலோக சீதாராமிடம் நட்பு பூணூவது என்பது எளிதன்று டி என் ஆரிடம் அவர் கண்ட அறிவின் வீச்சு அவரை நட்பு கொள்ளச்செய்துவிட்டது.
தஞ்சையில் டி என் ராமச்சந்ந்திரன் அவர்களைத்தெரியாதவர்களே இருக்கமுடியாது. திருவையாற்றில் பி வி அப்துல கபூர் என்ற புலவர் டி என் ஆரைப்  பாட்டுடைத்தலைவராகக்கொண்டு 36 சித்திர கவிகளை இயற்றினார். சித்திரக்கவி புனைபவர்களுக்கு இந்த நூல் ஒரு கருவூலமாகும். 11-1-70 அன்று திருவையாற்றில் இந்த நூல் வெளியிடப்பட்டபோது கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் டி என் ஆர் மீது பத்துப்பாடல்கள் கொண்ட பாமாலை  ஒன்றை இயர்றி வெளியிட்டார் இருவரிடையே மிளிர்ந்த நட்புக்கும் அன்புக்கும் ஒரு வெளிப்பாடாக இந்தப்பாமாலை அமைந்தது. டி என்ஆர் மீது அம்ருத கவசம்  ஒன்றை இயற்றி அதனையும் அளித்தார்/சித்திரக்கவி மாலை பாடிய  புலவர் அப்துல கபூருக்கு டி என் ஆர் ஒரு வீட்டையே பரிசளித்தார் சங்ககாலத்தில் மட்டுமா புலவரும் புரவலரும் இருந்தனர் இப்போதும் இருந்துகொண்டுதான் உள்ள்னர் என்பதற்கு டி என் ஆர்  ஒரு எடுத்துக்காட்டு.
 (தகவல்  என் தந்தை திரு ஏஎஸ்ராகவன்  கூறியதும்   சேக்கிழார் அடிப்பொடி  எனும் புத்தகத்தில் படித்ததும்)
2011/1/31 Dhivakar <venkdh...@gmail.com>
இந்த மாகவிஞன் தன் காலத்தில் அந்தப் பகுதியில் - குறிப்பாக தஞ்சை, திருச்சியில்- உள்ள அத்தனை அறிஞர்களையும் தன் பால் தன் கவிதையால் ஈர்த்தவர் என்பது நம் ரங்கனாரின் பதிவின் மூலம் மட்டுமல்லாமல் திரு டி.என்.ராமச்சந்திரன் (சேக்கிழார் அடிப்பொடி) மூலமும் ஏற்கனவே தெரிந்து ஆச்சரியப்பட்டவன். இங்கு 10 வருடங்களுக்கு முன்னால் நடந்த கண்ணதாசன் விழாவில் கண்ணதாசனை துளியூண்டு சொல்லி விட்டு திருலோகம் பற்றி ஆரம்பித்து விட்டார் சேக்கிழார் அடிப்பொடி. பின்னால் காரணம் கேட்டோம். கவிதை என ஆரம்பித்தவுடன் இந்த மாகவிஞன் என் நாவில் வந்து விட்டார்.. என்ன செய்வது என்றார்..

’கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்
காசிருந்தால் வாங்கலாம்’ என்ற கண்ணதாசனின் கவிதையை சொல்லிவிட்டு

சந்தையில் கவிதை வரிகளையும் அவர் சொல்லியது என் நினைவுக்கு வருகிறது..

தொடருங்கள் ரங்கனாரே!
யாரும் வாங்கிட வருவரா? 

பிரதிகள் 

Subashini Tremmel

unread,
Jan 31, 2011, 9:19:20 AM1/31/11
to mint...@googlegroups.com
இந்த இழை சிறப்பாக இருக்கின்றது. பல புதிய செய்திகளைத் தருகின்றது.
 
-சுபா

2011/1/31 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஒரு கிருஷ்ணமூர்த்தி இந்தத் தொடரை எழுதச் சொல்லிக் கட்டாயப் படுத்தியவர். திருலோகத்தின் குடும்பத்தினரோடு தொடர்பு உடையவர். 

நீங்களோ சுந்தர கிருஷ்ணமூர்த்தி. கவிஞரோடு பழகி, சிவாஜியில் எழுதி, இங்கே என்னை ஆசிர்வதிக்கவும் வந்துள்ளவர். 

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. 

“இருவராய் வந்தார்; என்முன்னே நின்றார்” 


2011/1/31 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

அப்படியா திரு கிருஷ்ணமூர்த்தி! 

என்ன பெயரில் எழுதினீர்கள் சிவாஜியில்? உங்கள் சொந்தப் பெயரிலேயேவா?

2011/1/31 S.Krishnamoorthy <sundara.kri...@gmail.com>



--

S.Krishnamoorthy

unread,
Jan 31, 2011, 6:34:08 PM1/31/11
to mint...@googlegroups.com
நன்றி ஸ்ரீ மோஹனரங்கன்!
முகில்வண்ணன் என்ற பெயரில் எழுதினேன்.  மூன்று அல்லது நான்கு கட்டுரைகள் பிரசுரமாயின.  பத்திரமாக வைத்திருந்தேன். ஆனால் என் அரசுப் பதவியில் பல இடங்களுக்கு மாறவேண்டிய அவசியம் ஏற்பட்டது. கடைசியில் தில்லிக்குச் சென்று எட்டு ஆண்டுகள் வசித்துப் பின் சென்னைக்குத் திரும்பினேன்.  எங்கோ தவறிவிட்டது.

அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

2011/1/31 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அப்படியா திரு கிருஷ்ணமூர்த்தி! 

என்ன பெயரில் எழுதினீர்கள் சிவாஜியில்? உங்கள் சொந்தப் பெயரிலேயேவா?

2011/1/31 S.Krishnamoorthy <sundara.kri...@gmail.com>
அன்புமிக்க மோஹனரங்கன்!



--
S. Krishnamoorthy

Kamala Devi

unread,
Feb 2, 2011, 12:50:14 PM2/2/11
to mint...@googlegroups.com
மோஹன்
அற்புதம். மிகவும் மிகவும், ரசித்து படித்தேன்
மோஹன்
வில் வளைத்து நாணேற்றி--திரும்பத் திரும்ப படித்துப்பார்த்தேன்.
நிங்ஙள் இபடிப்பட்ட இடுகைகளை  தொடர்ந்திட வேண்டுகிறேன்
நன்றியுடன்,
க.
 
http://www.kamalagaanam.blogspot.com



From: Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thursday, 3 February 2011 00:39:56

Subject: Re: [MinTamil] Re: இலக்கிய கர்வம்

கட்டுரையைத் தொடர்வதற்கு முன் ஒரு சின்ன பிரேக். அதாவது திருலோக சீதாராம் பற்றி ஏற்கனவே ஓர் இழையில் முன்னம் நான் குறிப்பிட்ட சம்பவம்:-----  

 
 fled Him, down the nights and down the days;

 
I fled Him, down the arches of the years;
I fled Him, down the labyrinthine ways
Of my own mind; and in the midst of tears
I hid from Him, and under running laughter.
Up vistaed hopes I sped;
And shot, precipitated,

 
Adown Titanic glooms of chasmed fears,
From those strong Feet that followed, followed after.

 
But with unhurrying chase,
And unperturbed pace,

 
Deliberate speed, majestic instancy,

 
They beat - and a Voice beat
More instant than the Feet -

 
'All things betray thee, who betrayest Me'.

 
முழுக் கவிதையும் இங்க இருக்கு: 

 

 
ப்ரான்ஸிஸ்   தாம்ஸனின்  கவிதை மிக  அருமையான  ஒன்று  உலக  கவிதைகளிலேயே.    அதற்கு   திருலோக   சீதாராம்  அவர்களின்    தமிழாக்கம்   ஒன்று   1940 1941  ல்  வந்தது.     மிகப்   பொலிவான    தமிழாக்கம்.   அதன்    சிறப்பு   என்னவென்றால்     நேஷனல்  காலேஜ்   திருச்சியில்     பிரின்ஸிபாலாக    கல்லூரியையே   வளர்த்தெடுத்த     கல்வி  முனிவன்    திரு   சாரநாதன்   அவர்களிடம்    போய்    இந்தக்  கவிதையின்     தமிழாக்கத்தைக்  காட்டியிருக்கிறார்     நம்    கவிஞர்    பெருமான்     திருலோகம்.    (இத்தனைக்கும்    எட்டாவது    தாண்டவில்லை    இந்த    சரஸ்வதியின் செல்ல  மகன்)     நீலகண்ட  சாஸ்திரி    முதலானோரின்    பாட்ச்சில்     ஒன்றாகப்  படித்துத்  தேறி     ஆங்கிலத்தில்   பிரிட்டிஷாரே   கண்டு  வியக்கும்  புலமை    பெற்ற   சாரநாதனிடம்      எட்டாங்கிளாஸ்  படித்துவிட்டு    கிராம  ஊழியனில்   வேலை  பார்த்துக்கொண்டு   இருக்கும்   ஓர்   இளைஞர்     மிகக் கடினமான   ஆங்கிலக்  கவிதையைத்  தமிழ்க்கவிதையாக்கிக்   கொண்டுபோய்க்   காட்டுவது  என்றால்     என்ன   துணிச்சல்?     'பார்க்கிறேன்'   என்று  சொல்லிவிட்டார்     பிரின்ஸிபால்.     சில  நாள்  கழித்து     அபிப்ராயம்  அறியச்  சென்றிருக்கிறார்     சீதாராம்.     அலுவலகத்தில்    போய்க்  கேட்டால்     வகுப்பறைக்குப்  பாடம் எடுக்கப்  போயிருக்கிறார்    என்று  தெரிந்தது.      'சரி    வகுப்பறையின்   மருங்கே  எங்கானும்    போய்  நிற்போம்.   நம் காதிலும் கல்லூரிப்  பாடம்  விழட்டுமே'  என்று  போனால்      மிகுந்த   ஆச்சரியமும்     நெகிழ்வும் காத்திருந்தது  கவிஞருக்கு !!      வகுப்பில்   ப்ரான்ஸிஸ்   தாம்ஸந்தான்     பாடம்.     விரட்டிவரும்  விண்ணின் வேட்டை  நாய்   கவிதைதான்    பாடம்.    சாரநாதன்     தன்னுடைய   உச்சத்தில்    மிதந்தபடி   பொழிகிறார்.      ஆங்கிலத்தில் அன்று!.   கவிஞரின்    தமிழாக்கத்தை.   கண்ணி  கண்ணியாக    சுவைத்துச்  சுவைத்து ,   ஓர்  ஆங்கிலப்  பேராசிரியர்,    ஆங்கில  மேதை   என்று     அயல்நாட்டார்,     இந்திய   அறிஞர்கள்  அனைவருமே   கொண்டாடிய   ஒரு    கல்லூரி  பிரின்ஸிபால் (அந்தக் காலத்து  பிரின்ஸிபால்  என்க )     ஆங்கில  வகுப்பில்    ஆங்கிலக்  கவிதையைத்     தமிழாக்கத்தை  வைத்துக்கொண்டு   பாடம் நடத்துகிறார்!!!    எப்படி  இருந்திருக்கிறது  கதை.     இந்த   அகடித  கடனா  ஸாமர்த்தியம்  எல்லாம்    எங்கள்  திருச்சிக்கே    உண்டான     ஸ்வபாவம். :--)))    கேட்ட  கவிஞர்    அப்படியே   சிலையாகி  நின்றுவிட்டார்.     அந்த  மூடிலேயே     கவிஞர்   லாங்பெலோவின் Arrow and the Song என்பதை  மொழிபெயர்த்தார்.  அதுதான்  'வில்  வளைத்து   நாணேற்றி    விட்ட  சரமொன்று'   என்று  ஆரம்பிக்கும். 

”வில் வளைத்து நாணேற்றி 
விட்டசரம் ஒன்று 
விண்வழியே சென்றெங்கோ 
வீழ்ந்துமறைந் திடவும் 
நில்லென்று தடுத்தெதிரே 
நின்றகுறி எதுவோ 
நிலையறியாக் கட்புலனோ 
நினைக்க வசம் ஆகும்? 

அன்றொருநாள் நெஞ்சத்தில் 
ஆர்த்தெழுந்த கவிதை 
ஆகாய வீதியிலே 
அலைபரவும்ங் காலை 
நின்றெதிரே தேக்கியதோர் 
நெஞ்செதுவென் றறியேன் 
நிலைகாணச் செலுமதனை 
நிறுத்தியுடன் செலவோ? 

பன்னெடுநாள் சென்றதன்பின் 
பச்சைமரம் ஒன்றில் 
பாய்ந்திருந்த என் சரத்தைப் 
பார்த்து வியந்திட்டேன் 
தன்னுளத்தில் என் கவிதை 
தேக்கியவன் முழுதும் 
தனியிருந்து பாடிடவும் 
தலையசைத்து நின்றேன்.”


I shot an arrow into the air,
It fell to earth, I knew not where;
For, so swiftly it flew, the sight
Could not follow it in its flight.

I breathed a song into the air,
It fell to earth, I knew not where;
For who has sight so keen and strong,
That it can follow the flight of song?

Long, long afterward, in an oak
I found the arrow, still unbroke;
And the song, from beginning to end,
I found again in the heart of a friend. ]
   
பிறகு ஃப்ரான்ஸிஸ் தாம்ஸனின் Hound of Heaven என்ற அந்த   வேட்டைநாய்  கவிதையின் தமிழ்க்கவியாக்கத்தை அமுதசுரபி  விக்கிரமன் கேட்டு  வாங்கிப்   போட்டார் பிற்காலத்தில். பழைய  அமுதசுரபி    பிரதிகளில் தேடவேண்டும். இல்லையேல்    கணேசனார் போன்றவ்ர்கள் கிருபை செய்ய  வேண்டும். 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன். 

***    
 

2011/2/1 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
2003 ஏப்ரல் என்று நினைவு. இலக்கியச் சிந்தனை அமைப்பில் ‘திருலோக சீதாராம்’ பற்றி ஓர் உரையாற்றினென். 

யார் நினைவில் கொண்டார்களோ இல்லையோ அருமை நண்பர் திரு சைதை முரளி அதை அப்படியே குறிப்பெடுத்துத் தம் ப்ளாக்கில் 2007ல் ஏற்றி வைத்திருக்கிறார். 

அது மட்டுமன்று. மின் தமிழில் வந்த என்னுடைய போட்டோவையும் பின்னர் போட்டு தம் ப்ளாக்கில் மகிழ்ந்திருக்கிறார். இது எதேச்சையாக ப்ரௌஸ் செய்யும் போது என் கண்ணில் தட்டுப் பட்டது. என்னிடம் ஒரு வார்த்தை இதைப் பற்றி மூச்சு விடவில்லை மனிதர். 

புரியவில்லை. நாம் செய்யும் செயலின் விளைவுகள் நம் கையில் இல்லை என்பது உண்மைதான் 



நன்றி என்று சொல்ல எனக்கு அதிகாரம் உண்டா தெரியவில்லை.

2011/1/31 Subashini Tremmel <ksuba...@gmail.com>

S.Krishnamoorthy

unread,
Feb 11, 2011, 6:21:15 PM2/11/11
to mint...@googlegroups.com
இந்திய தத்துவச் சிந்தனையின் மரபுத் தொடர்ச்சிதான் - இந்த மோஹனக்குரல்!

2011/2/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அத்வைத நிலையிலும்....? 
----------------------------------------------------- 

ஒரு காலும் தாண்டிவிட முடியாத 
சுவர்களின் பின்னே நின்றபடிதான் 
ஒருவரை ஒருவர் சந்திக்கின்றோம் 
கண்ணுக்குத் தெரியாத தடுப்புச் சுவர்கள் 
அல்லது கண்களைத் தடை செய்யாது 
வெட்ட வெளியாய் மறைந்து நிற்கும் தடைச்சுவர். 

மிகமிக நேரிடையான சுருக்கு வழியும் 
சுற்றிவளைத்த சுழல்வழி என 
சார்புநிலைப் பொது விஞ்ஞானம் பகரினும்  
இடித்துத் தள்ள மூர்க்கம் எழுந்தாலும் 
இணையும் கைகளுக்கு நடுவிலும் 
அந்த மறைந்து வெளியான தடுப்புச் சுவர். 
சுவர் சமயத்தில் பல உடுப்புகளும் 
வேஷங்களும் போட்டு ஏமாற்றுவதும் உண்டு. 
ஆண் பெண் கிழவர் குழந்தை 
அந்நியள், நம்மவள், எவனோ, இவளோ 
இவரோ, அதுவோ, 
அவர்களோ, இவர்களோ, உவர்களோ 
எனப்பல எனப்பல எனப்பல  
நினைப்பினில், நடப்பினில், 
நனவினில் நடைமுறை நிஜத்தினில் 
கனவுகள் ஓய்ந்த நிதர்சனப் பொழுதினில் 
தடைச்சுவர் கண் மறைக்காமல் 
எண் மறைக்காமல் 
எங்கோ எப்படியோ எவ்விதமோ 
தட்டுப்படும் தடைச்சுவர் 
தோன்றாமல் தோன்றி. 

நீயும் நானும் வேறிலாது நிற்க 
நயந்தாலும் நளினமான விலகல் 
பயமற்ற நெருக்கமாய்ப் பயின்ற தொலைவு 
அயலாகிப் போகும் அணுக்க ப்ரதேசம் 
கடக்க முனைந்த கால் 
தூரப்பட்டுப் பின்னடையும் மாயம் 
இத்தனைக்கும் நீயும் நானும் 
பக்கத்தில் பக்கத்திலேயே அமர்ந்துள்ளோம். 
இன்னும் சொல்லப் போனால் 
என்னுள் நீயும் உன்னுள் நானும் 
உயிர்த்த கணங்களும் உண்டுதானே! 

ஆயினும் தொலைவு இடையிட்ட 
பாடுடைப் போலிகளோ நாம்? 
போயினும் வருவோம் 
என்ற நம்பிக்கையில் 
விலகிச் சேயிடைப்படா நிற்கும் 
ஓருயிரின் பல பிம்பங்களாய் 
ஒரு பிம்பத்தின் பல்லுயிர்களாய்த் 
தனித்தனி உயிர்களின் 
பிம்பங்களே மெய்மைகளாய் 
அம்புவியில் வளைய வரும் 
நெருக்க விழைவின் முறிவுகளாய் 
உருவு சுமந்த அந்நியங்களாய் 
உருக்கரந்த அந்நியோந்நியமாய் 
வெருவரத் திரிதரும் 
உயிர்க்குலக் கரவறப் 
பயிலொளி அன்பென நின்றதும் 
எதுவென அறியா முனைப்பினில் 
கதுவிடும் மோனம் முகிழ்த்திடும் 
சதுரது சத்தியம் என்றிடும் 
குதுகுலம் உளத்தினில் குமிழ்வதும் 
யதுகுல முரளியின் பண்களோ? 

ஆயினும் 
உன்னில் உள்ள ஏதோ ஒன்று என்னுடன் 
என்னில் உள்ள ஏதோ ஒன்று உன்னுடன் 
நம்முள் உள்ள ஏதோ ஒன்று நம்முடன் 
நாமாய் நின்ற ஏதோ ஒன்று அவர்தம்முடன் 
நம்மிலும் அவர்தம்மிலும் உள்ளதாம் ஒன்று 
மற்றவர்தம்முளும் நின்ற ஏதோ ஒன்றுடன் 
சுற்றமாய்க் கலந்து கலக்க 
உற்றதும் உறுவதுமாய் 
நிலவிடும் ஒரு பெரும் விழைவு 
அகண்ட சத்சங்கமாய் விழைந்திடும் ஏகம் 
அதுதானோ நீ நான் நாம் அவர் அனைத்துலகும்? 
அத்வைத நிலையிலும் தீருமோ 
இந்த அணுகலால் விலகும் மாயமும் 
விலகிட அணுகிடும் விழைவும்? 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*** 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S. Krishnamoorthy

rajam

unread,
Feb 12, 2011, 3:42:53 PM2/12/11
to மின்தமிழ், Mohanarangan V Srirangam

ஒரு சிறுகதை


நீ..... 
நான் "சிறு கதை ரசிகை" இல்லை! "பெரிய கதை / நாவல் ரசிகையும்" இல்லை. "கதை" "பட்டி மன்றம்" "கவிதை அரங்கம்" எல்லாவற்றையும் "தள்ளிவைத்து"ப் பல மாமாங்கம் கழிந்தாயிற்று. இலக்கணம் ஒன்றையே உயிர்ச் சத்தாக மேற்கொண்டும் பல "யுகங்கள்" கழிந்துவிட்டன!
அப்படி இருப்பதனால் கதை/கவிதைகளைப் படிப்பதில்லை; இசையைக் கேட்பதில்லை. எப்போதாவது தொடங்குவேன்; இரண்டு மூன்று நொடிகளுக்குமேல் கண்ணையும் கருத்தையும் தன்மேல் வைத்துக்கொள்ளும் கதை/கவிதைகள் மிகச் சிலவே. இது வாழ்வின் போக்கு, என் குறைபாடு -- படைப்போரின் குறைபாடு அன்று, புரிந்துகொள்க!
அந்த என் குறைபட்ட கண்ணையும் கருத்தையும் தன்பால் ஈர்த்து, இறுதிவரை படிக்கவைத்தது மோகனின் இந்தக் கதை! :-)
கதையின் எல்லா வரிகளும் கருத்துக்களும் எனக்கு (100% என்று) ஒத்துப்போகாவிட்டாலும் ... இந்தக் கடைசி வரிகள் என் கருத்துக்களோடு ஒத்துப்போவதால் என்னை மயக்கிவிட்டன:
ஆனால் பாவம், இந்த ஆண்பிள்ளைகள் அச்சுப் பிச்சுக்கள் பாவம். நமக்காவது காதல் என்பதற்குக் காதலன் தெய்வம் இருக்கிறது. இதுகளுக்குக் காதலி தெய்வம் எங்கிருக்கிறது? எல்லாம் அம்மா அம்மா என்று சொல்லிக் காதலியைத் தெய்வமாக்குவதில் கோட்டை விட்டுவிட்டதுகள். ஏதோ பாரதியே கஷ்டப்பட்டுக் கண்ணம்மா என்றெல்லாம் சொன்னாலும் மரபில் வரவில்லையே! ஒரு வேளை காதலி தெய்வம் ஏற்படாத காரணம்தானோ இதுகள் எல்லாம் கல்யாணத்திற்குப் பிறகு மண்ணாந்தைகளாய் ஆகிவிடுகின்றன. ச ... ரொம்ப பாவம்... 

இந்தக் காலத்திலும் இப்படி நினைக்கும் ஒருவர் இருக்கிறாரா என்று எண்ணி வியந்தேன்! மகிழ்ந்தேன்!

இந்தச் சந்தடி சாக்கில் ஒரு பழைய காலத்தில் நான் எழுதிய ஒன்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:
+++++++++++++++++++++++++++

முதல் இரவு
--------------
கங்கைக்கரைத் தனிஓரம்
முதற்காதலர் அருந்தனிமை
உள்ளும் புறமும் 
வெள்ளப் பெருக்கம்
எங்கும் எதிலும் 
புதுமைத் தேட்டம்
அலையிட்ட பரப்பில் 
புலர்ந்திட்ட மலைப்பில்
தூங்கிவிட்டான் பாவம் 
விழிக்கவில்லை இன்னும் !
+++++++++++++++++++++++++ 

அன்புடன்,
ராஜம்


On Feb 11, 2011, at 6:31 PM, Mohanarangan V Srirangam wrote:

ஒரு சிறுகதை


நீ..... 



அன்று காலையிலிருந்தே தான் ஆகிய ஜெனி ஏதோ எங்கோ மறந்து வைத்துவிட்டவளைப் போல்தான் பொருந்தாமல் இருக்கிறாள். 

கைவிரல் நகங்கள் கச்சிதமாகக் கடிக்கப்பட்டுவிட்டன. முன்னத்தி மயிர்ச்சுருள் இறுக்கி, நெகிழ்த்தி, இறுக்கிப் பல ஆவ்ருத்தி ஆகிவிட்டது. 

பிரபாகரன் அவளுக்குக் காலையில் காப்பிப் போட்டுக்கொண்டு வந்து கொடுத்தவனைப் பார்த்து, “நீ...” என்றவள்தான் பிறகு ஒன்றும் பேசவில்லை. பிரபாகரன் நயமறியும் ஜீவன். ஏதோ எண்ண ஓட்டம் என்று எடுத்துக்கொண்டு அவள் செய்யும் வழக்கமான வேலையை எல்லாம் தானே முடித்துவிட்டான். தெரியும் அவனுக்கு. அவளை இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் வேலை செய்யத் தொணப்பினால் பல குளறுபடிகள் நடக்கும். 

அவன் சுறு சுறுவென்று வேலை செய்வதை நெட்டுக்குத்தினால் போல் பார்த்துக்கொண்டிருந்தாள் என்றும் சொல்லலாம். ஏதும் அவள் அறியாள் என்பதும் உண்மை. ஆனால் அவன் தடுமாடும் போது தன்னிச்சையாக அவள் வாயும் பழக்கமும் சில உதவிக் குறிப்புகள் கொடுப்பதை வைத்து அவள் மனத்தில் பதிந்திருக்கும் இதெல்லாம் என்பது சொல்ல முடியாது. 

பிரபாகரனுக்குப் புதிதில்லை. ஆயினும் அவனுக்கு இது புரிபடவில்லை. 

பெரிய அக்கா ஒரு சமயம் அலுத்துக்கொண்ட போதும் அவனிடமிருந்து எந்த உடன்பாட்டுப் பதிலும் இல்லை --- ‘இதுக்குத்தான் வீட்டுல பெரியவா பார்த்துப் பண்ணி வைக்கணும்ங்கறது’ 

அந்தச் சொல் ஜெனியின் மனத்தில் எப்படி தைத்தது என்று அவனுக்குப் புரியவில்லை. பின்னொரு சமயம் அவள் கேட்டாள் அவனை -- பெரியவா பார்த்து ஒரு பெண்ணை நீ பண்ணிக்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் இல்லையா? 

பெரிய அக்கா கிடக்கிறா விடு! 

ஏன் பெரிய அக்காவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? 

அவள் சொன்னதைத்தானே நீ கேட்கிறாய்? 

இல்லை. எனக்குத் தெரியாது அவள் சொன்னாளா என்று. ஏதோ எனக்குத் தோன்றியது. 

அவள் சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்வது சரி என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் பிரபாகரன். 

‘ஏன்? இவ்வளவு மாவு இருக்கிறதே. எதற்கு இப்பொழுது மீண்டும் ஊறப்போட்டாய்?’ 

இல்லை. மிகவும் புளித்துப் போய்விட்டது. அது வேண்டாம். 

இவனோடு ஏற்பட்ட முதல் சந்திப்பு. பால் பூத்திலா? இல்லை எதாவது நிச்சயம் ஏதோ கடையில்தான். என்னமோ ஒரு துள்ளல். இவனே வேறு மாதிரிதான் தெரிந்தான். அதுதான் இவனா? அல்லது இவன் தான் அதுவா? இது ஒன்றும் புரிந்து கொள்ள சுளுவாய்த் தெரியவில்லை. அக்கறை அன்பு கடமை பொறுப்பு இதில் எல்லாம் ஒன்றும் குறைவு இல்லை. இலட்சியக் கணவனா என்பது அநாவசியக் கேள்வி. நம்முடைய வாழ்க்கையை வேறு எங்கோ மாட்டிவைத்து ஒப்பிடுவது. ஆனால் அன்று நம் கண்ணுக்குப் பட்ட அந்தக் காதலன்...என்ன ஆனான்? அல்லது நாமும்தான் அவன் கண்ணுக்கு அப்படித்தானோ? 

ரொம்பப் பண்ணாத! தலைமுடி உதிரும் பார்த்து. 

சரி காதல் என்பதுதான் என்ன? உடல் இச்சைக்கு உள்ளம் பூசும் சாயமா? அப்படி என்றால் உடலோடு போய்த் தொலையாமல் உள்ளத்தை இந்தப் பாடு படுத்துவானேன். அன்று தேவ குமாரனாய்க் காட்சி தந்தவன் இன்று ஏன் மடைப்பள்ளி பரிசாரகன் போன்று ஆகிவிட்டான்? அவனுக்குத் தான் செய்யும் எந்தப் பணிவிடையிலும் அவன் தனக்குச் செய்ய என்றும் சளைத்தவனில்லை என்றாலும் அந்தக் காதல் மனிதன் மறைந்தவன் தான். காணவில்லை. இத்தனைக்கும் அன்று, காதல் காலத்தில் பேசிய பேச்சு எல்லாம் பிதற்றல். இன்றோ உளறாமல், தடுமாறாமல் எந்தச் சூழலையும் சமாளிக்கும் நேர்த்தி மிக்கவன். ஆனாலும் அந்தப் பிதற்றலில் திகழ்ந்த வாழ்வின் ஆழம் அடிமண் இட்டுப்போய் வாழ்வே கணுக்கால் அளவு ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. 

சாப்பிட்டுவிடு. ஆறுகிறது பார். மறுபடியும் கொஞ்சம் சூடு பண்ணிவிடவா? 

இல்லை. இப்படியே இருக்கட்டும். 

எல்லாப் பெண்களின் வாழ்விலும் இப்படித்தானோ? காதலன் ஒரு தோற்ற மயக்கம் தானோ? கண்ணுக்கு மையிட்டுக் காணும் மயல் காட்சியோ? முன்னொரு முறை இதைப் பற்றி வினவியபொழுது வாழ்க்கை வேறு, கற்பனை வேறு என்று சொல்லிப் போய்விட்டான். ஆனால் அந்தக் காதலனை விரும்பித்தானே நான் இவனை மணந்தேன். அவன் மறைந்து போன இவனின் மிச்ச வடிவத்தை வைத்து வாழ்வு ஓடுவதை எப்படிச் சீரணித்துக்கொள்வது? எல்லாப் பெண்களுமே இப்படிக் காதலனை இழந்து இப்படிக் கொடுப்பினை இருந்தால் பரிசாரகனுடனோ அல்லது துரதிருஷ்டம் என்றால் பாதகனுடனோ தான் காலம் தள்ளுவர் போலும். ஆதியிலிருந்தே அப்படித்தானோ? அதனால்தான் வாழ்வின் முடை நாற்றங்களில் சிக்காத நிதய கற்பனையாக, கற்பனைக்கும் எட்டாத நிதய காதலனாக கிருஷ்ணனை வைத்தார்களோ? ஆஅம் அவன் ஒருவன் தான் காதலனாக இருக்க முடியும். மனிதர்கள் எப்படிக் காதலர்களாக இருத்தல் கூடும்? இங்குதான் நடைமுறை என்னும் தரைமட்டப் பிசாசு அனைத்துக் காதல்களையும் துடைத்துவிடுகிறதே. ராதையும் உலகத்தைச் சேர்ந்தவள் இல்லை. கிருஷ்ணனும் உலகத்தைச் சேர்ந்தவன் இல்லை. காதல் என்பதே உலக சமாச்சாரம் இல்லை. 

கையை அலம்பிண்ட்ரேன், காயறது பாரு.....ஹலோ....ஜெயபத்மாசினி... 

ஹாங்.... 

அப்ப காதல் என்பதை யார் தமக்குள் நிரந்தரமாகக் குடிகொள்ள வைத்துவிடுகிறார்களோ அவர்களிடத்தில் கிருஷ்ண பிரஸன்னம் என்று கொள்ளலாமா? ராதையின் லீலை என்று சொல்லலாமா? ஆனால் பாவம், இந்த ஆண்பிள்ளைகள் அச்சுப் பிச்சுக்கள் பாவம். நமக்காவது காதல் என்பதற்குக் காதலன் தெய்வம் இருக்கிறது. இதுகளுக்குக் காதலி தெய்வம் எங்கிருக்கிறது? எல்லாம் அம்மா அம்மா என்று சொல்லிக் காதலியைத் தெய்வமாக்குவதில் கோட்டை விட்டுவிட்டதுகள். ஏதோ பாரதியே கஷ்டப்பட்டுக் கண்ணம்மா என்றெல்லாம் சொன்னாலும் மரபில் வரவில்லையே! ஒரு வேளை காதலி தெய்வம் ஏற்படாத காரணம்தானோ இதுகள் எல்லாம் கல்யாணத்திற்குப் பிறகு மண்ணாந்தைகளாய் ஆகிவிடுகின்றன. ச ... ரொம்ப பாவம்... 

என்ன ஒரே யோசனை? இப்படியேவா உட்கார்ந்துண்ட்ருக்கப் போற? 

ம் இல்லல்ல........... நீ....
சாப்பிட்டாயா? 

சரிதான். இவ்வளவு நேரம் நீதானே பரிமாறினே..... 
சரி வா தூங்கு. ராத்திரி கண் முழிக்காத. 
*

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

***


coral shree

unread,
Feb 12, 2011, 9:39:39 PM2/12/11
to mint...@googlegroups.com
அம்மா, நல்ல கவிதையம்மா.........பழைய கவிதைகளை சிறிது தோண்டி எடுத்துக் கொடுங்களேன் அம்மா......நன்றி.

2011/2/13 rajam <ra...@earthlink.net>

Chandrasekaran

unread,
Feb 12, 2011, 10:15:45 PM2/12/11
to mint...@googlegroups.com
Rengan,
Cement machine kadhai, pachchunu nenjula cement aayiruchu !

Chandra

Geetha Sambasivam

unread,
Feb 14, 2011, 10:06:18 PM2/14/11
to mint...@googlegroups.com
லா.ச.ரா. உள்ளே புகுந்துட்டார் போல!

2011/2/12 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஒரு சிறுகதை




ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

***


Geetha Sambasivam

unread,
Feb 14, 2011, 10:10:51 PM2/14/11
to mint...@googlegroups.com

//-என்ன இது? ஒரே சத்தம் ! தெருவில் அடுக்ககம் கட்டுகின்ற வேலை. கலவை மிஷின் ஓடுகிறது. வேலையாட்கள், பெண்கள், கிழவிகள், கைக்குழந்தைகள், தாய்மார்கள் எல்லாம் எங்கிருந்து இறக்குமதி...கையில் பின்னிய கூடை...கூடையில் எவர்சில்வர் தூக்கு..அழுக்குத் துணி.

அப்பொழுதுதான் ஒரு குருவி தூளியின் மேல் முடிச்சில் உட்கார்ந்து பார்த்து வாகாக இல்லை என்றதும், விசித்துக் கிளைமேல் உட்காருகிறது. 



என்னது...வராம என்ன பண்றது? மனுஷா போயி வர முடியலைன்னா...ஓரமா போட்டுக்கக் கூடாதாப்பா...’ //

எங்க வீட்டுக்கு வந்து நேரிலே பார்த்தாப்போல் இருக்கே????  தினம் தினம் இந்தத் திருநாள் தான் இங்கே!  குருவி மட்டும் இல்லை~ பார்த்தே பல வருஷங்கள்!



2011/2/13 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஒரு சிறுகதை


ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

***

Geetha Sambasivam

unread,
Feb 14, 2011, 10:17:16 PM2/14/11
to mint...@googlegroups.com
அந்தக் கலவை யந்திரத்தைச் சுற்றி அத்தனை மனித வாழ்வின் மதிப்பீடுகள் அனைத்தும் கவனத்தைவிட்டுப் புறந்தள்ளப் படுகின்றன.


இந்தப் பெருங்கூச்சலான நாகரிகம் கொஞ்சம் நின்றால் நன்றாக இருக்கும் என்ற மனத்தின் ஏக்கம்தான் நிழல் திட்டுக்களாய் அரைபட்ட பல நுண் வாழ்வியல் மதிப்புகளை மௌனத்தில் கவனப் படுத்துகிறது. //


அட?? நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்னு சொல்ல இருந்தேன்.  என் வாயிலிருந்து வார்த்தைகளைப் பிடுங்கினாப்போல் இருக்கு. ஆனால் இத்தனை அழகாய்ச் சொல்லி இருக்கமாட்டேன்.  இதெல்லாம் ஓயாதா என்றிருக்கிறது என்றே சொல்ல வந்தேன்!  அலுத்துப்போய்விட்டது, மக்களின் இந்த ஓட்டத்தைப் பார்த்துக் களைத்துச் சலித்துப் போய்விட்டேன். :(((((((((((  அதுவும் சொந்த வீட்டுக்காரங்க எல்லாம் உயிரோடு இருக்கும் மரங்களை வெட்டிச் சாய்த்து அடுக்கு மாடிக்குடியிருப்புகள் கொஞ்சம் கூட இடம் விடாமல் கட்டிக் குருவிகளைக் கொன்று, அணில்களைப் பட்டினி போட்டு,

வேண்டாம், நீண்டு விடும்.



2011/2/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
320.gif

coral shree

unread,
Feb 15, 2011, 1:33:54 AM2/15/11
to mint...@googlegroups.com
அதெல்லாம் சரிதான் கீதா மேடம், அங்கோர் இழையில், அறிவும், நம்பிக்கையும் பற்றி விவாதிக்கிறார்களாமே, வாங்களேன் நாமும் போய் சிறிது கலக்கிப் பார்ப்போம், குட்டையைக் குழப்பினால் ஏதாவது மீன் சிக்காமலா போகும்..............

2011/2/15 Geetha Sambasivam <geetha...@gmail.com>
320.gif

Geetha Sambasivam

unread,
Feb 15, 2011, 2:41:57 AM2/15/11
to mint...@googlegroups.com
அப்படியா?? மோகனரங்கனின் புத்தகம் பற்றியா?? ஆமெனில் அந்தப் புத்தகத்தை நான் பார்த்தது கூட இல்லை பவளசங்கரி, அப்புறம் எப்படிப் பேசமுடியும்?? தெரியாத ஒன்றைப்பற்றிப் பேச முடியாதே? படித்ததும் கூறுகிறேன்.  மேலும் அந்த இழை பின்னால் போயிருக்கு போல, பழைய மெயிலில் தேடணும், நான் இன்பாக்ஸில் இருந்தே மடல்கள் பார்ப்பேன், இரண்டு, மூன்று குழுமங்களின் மடல்கள் இருப்பதால் எனக்கு இது வசதி!  :)))))))))

2011/2/15 coral shree <cor...@gmail.com>
320.gif

coral shree

unread,
Feb 15, 2011, 3:17:31 AM2/15/11
to mint...@googlegroups.com
பொதுவான வாதங்களில் கலந்து கொள்ளலாம் கீதா..........வாருங்கள்.

2011/2/15 Geetha Sambasivam <geetha...@gmail.com>
320.gif

Tthamizth Tthenee

unread,
Feb 17, 2011, 11:22:12 AM2/17/11
to mint...@googlegroups.com, Mohanarangan V Srirangam
”கண்ணால் வாங்கிக் கொண்டும் கையால் வேண்டாம் என்று சொல்லியபடியும் வாயை இறுக்க மூடியபடி நட்ந்தது சுசி.”


இது இலக்கிய கர்வம்தான் சந்தேகமே இல்லை 

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/2/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கண்ணால் வாங்கிக் கொண்டும் கையால் வேண்டாம் என்று சொல்லியபடியும் வாயை இறுக்க மூடியபடி நட்ந்தது சுசி.

N. Kannan

unread,
Feb 20, 2011, 7:45:16 AM2/20/11
to mint...@googlegroups.com
அன்பின் ரங்கன்:

வேலையின் பளுவில் இவ்விழைக்குள் நுழைய அவகாசமே இல்லை. என் காட்டில்
மட்டும் மழை இல்லை. உலகம் பூரா கொட்டி இருக்கிறது! எப்போ நான் இவ்விழையை
முழுசாப்படிக்க!

http://thiruvarangan.blogspot.com/2011/01/1.html

சிறுகதை பற்றிய அட்டகாசமான அலசல். இது போல் நிறைவாக இத்துறை பற்றிப்
பேசியவர் எழுத்தாளர் சுஜாதா.

என்னைப் பொறுத்தவரை தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பல்வேறு சோதனைகள்
செய்தவர். சிறுகதை குறித்த பட்டறைகள் நடத்தியவர். சிறுகதை குறித்து
கேள்வி-பதில் தொடர் நிகழ்த்தியவர். எல்லா வயதினருக்கும் பொருந்தும்
வண்ணம் கதை எழுதியவர்!

சிறுகதை என்பது வெண்பா இல்லாக்கவிதை என்பதில் எனக்கு உடன்பாடே!

ஆனால் சிறுகதை எப்படி இருக்க வேண்டுமென்று பல உதாரணங்கள் அளித்தாலன்றி
உங்களது புரிதலை மற்றவர் உணர்தலரிது. ஏனோ கானல்நீர் கண்டு தாகம் தீர்க்க
ஓடிய மானின் கதையாகிப்போகும்!

நம்மிடம் சிறுகதை கிடையாது என்று சொல்லிவிட்டு, அதுவும் நம் பௌராணிக
கதையாடலை கிண்டல் செய்துவிட்டு மீண்டும் தாங்கள் வியாசரிடமும்,
வால்மீகியிடமும் தஞ்சம் புகுவது அக்கதையாடல் மரபிலிருந்து தாங்கள்
இன்னும் முழுமையாய் வெளியேறும் முன் திறனாய்வு செய்யப்புகுந்தீரோ என்றொரு
சம்சயத்தை வாசகர் மனதில் எழுப்புகிறது..

சிறுகதை இதுதான், இதோ இதுதான் என்று விண்ணை நோக்கிக்காட்டும் பம்மாத்தாக
நம் எழுத்து அமையாமல், என் ரசனையில் இது, இதுதான் ரசிக்கிறது. இது, இது
கதையே அல்ல என்று உதாரணங்கள் காட்டினால் இன்னும் தெளிவு வரும்! (அதில்
நம் ரே.கா சம்ர்த்தர்)

உரைக்கட்டு என்று ஆண்டாள் பேசுவது எவ்வகை இலக்கியம் என்று தெரியத்தான்
இல்லை. சிறுகதைப் பரிணாமம் தமிழ் மொழியில் எப்படி என்று விரிவாக அலச
வேண்டிய கருதுகோள். சிறுகதை என்பது கதை சொல்லுதலின் ஒரு அம்சம் என்றுதானே
நீங்கள் காண்கிறீர்கள். நமக்கு நீண்டநெடிய கதை சொல்லும் மரபு உள்ளது.
கேட்டலே போஜனம் என்று சொல்லும் மரபு இது. இம்மரபு உருவாக்கும் சிறுகதை
ஆங்கில மரபு காட்டும் சிறுகதை போல் இருக்குமா? இருக்கத்தான் வேண்டுமா?
என்றும் கேட்டுக்கொள்ளலாம்.

ஒரு கதை என்பது சொல்பவனையும், கேட்பவனையும் பாதிக்க வேண்டும்.
அதற்காகத்தான் இந்த வழக்கமே முதலில் வருகிறது. காட்டில் வேட்டையாடிவிட்டு
வரும் மனிதன் மற்றோருக்கு கதை சொல்கிறான். அவன் அனுபவம் பூரணமாக
உள்வாங்கப்படும் போது அது கேட்பவனின் உயிரைக் காக்கும் அரிய
பொருளாகிப்போகிறது. கலாச்சார பரிணாமத்தில் கதை சொல்லுதலின் பங்கு மிக
அதிகம் கல்வி என்பதே கதை சொல்லலின் நீட்சிதான். கதை சொல்லுதல்தான் நம்மை
இவ்வளவு நெடிய பரிணாம வளர்ச்சியை குறுகிய காலத்தில் அளித்திருக்கிறது.
எனவே எழுத்து என்பது மனிதனை மாற்ற வேண்டும். மாறவிரும்பாதவன் படிக்கவே
வரக்கூடாது. சங்கப்பாடல் சொல்வது போல் ஒரு தாய் பெற்ற நால்வருள் கல்வி
கற்றோன் வேறுபட்டு, உயர்ந்த இடத்திற்குப் போய்விடுகிறான். கதையின்
வரைவிலக்கணத்தில் இதற்கும் இடமுண்டு.

இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ளும் முன் தகவல்தொழில் நுட்பம் வேறொரு
தாவலில் இலக்கியத்தை வேறொரு இடத்திற்கு நகர்த்திவிட்டது.

ஆறாம்திணையின் பரிமாணங்களைப் புரிந்து கதை எழுதுமுன், நகர்நுட்பம்
(mobile devices, application) கதைகளை கையக்கத்திரைக்கு நகர்த்திவிட்டது.
சிறுகதையே அச்சின்னத்திரையில் பெரும் காவியமாகத் தோன்றும்.
அத்தொழில்நுட்பம் காட்டும் formatting க்குள் அடங்கும் இலக்கியம்
எத்தகையது? அது என்ன ஜ்ழானர்?

சின்னச் சின்ன வரிகள். அடர்த்தியான வரிகள். அதே நேரத்தில் தாங்கள்
சொல்லும் இலக்கணங்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். பெரிய சவால்தான்.
அன்று நானும் முத்தெழிலனும் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். புதிய
முயற்சியிது. முயல வேண்டும்.

சிந்தனையின் வெளிப்பாடுதான் இப்பிரஞ்ச வியாபாரமே என்கிறது வேதம்! நம்
சிந்தனை செழிக்க உங்கள் திறனாய்வு இன்னுமொரு டானிக்.

வாழ்த்துக்கள்.

நா.கண்ணன்

Kamala Devi

unread,
Feb 20, 2011, 9:48:13 AM2/20/11
to mint...@googlegroups.com
மோஹன்
இன்றுதான், மிந்தமிழுக்கு வரமுடிந்தது. அதனால்,
நிங்ஙளின் எல்லா இடுகைகளும் இன்னும் படிக்கவில்லை. ஆனால் ஒன்று சொல்வேன்.
சத்யமாயிட்டும் நிங்ஙளின் தமிழ் வாசிக்க சுகமான லயம். முழுதும் படித்துவிட்டு வருகிறேன்
க.
 
http://www.kamalagaanam.blogspot.com



From: Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Sunday, 20 February 2011 14:39:46
Subject: Re: [MinTamil] Re: இலக்கிய கர்வம்

ஒரு சிறுகதை 
-------------------------

ஸப்த வசுக்கள் 
*********************** 

மொத மொதல்ல ஒரு தலைச்சன் பொறந்துது. எண்ணி ஏழே நாள்தான் இருந்துது. ...ப்ச்...அப்பறம்...பாவம்... 

இந்த வார்த்தையில் பழகித்தான் வாழ்க்கையின் ஆரம்ப நாட்கள் போயிருக்கின்றன அவனுக்கு. 

தங்களுக்கெல்லாம் முந்தி வந்து மூவிரு நாள் இருந்து சென்று விட்ட அந்த ஜீவன் இன்று எங்கு இருக்கும்? 

ஒரு வேளை தங்களிலேயே யாராகவேனும் கூடப் பிறந்திருக்குமோ? ஒரு தடவை எல்லாரையும் கூர்ந்து கவனித்தான். தன்னையும் எதேச்சையாகக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டான். ஏதோ அப்படி இருந்தாலும் ‘இதோ’ என்று தெரிந்துவிட சாத்தியம் ஏதோ அங்கு இருக்கும் பாவனை. 

இருப்பாரைக் கவனி. இல்லாதாரைப் பற்றி என்ன யோசனை? 

அவன் குடும்பத்திலேயே பலமுறை அவனுக்கு சொல்லப் பட்டதுண்டு. ஆனாலும் அந்த தலைச்சன்? 

சிறு வயதில் பாச்சுவாத்தில் அவனுக்குத் தங்கை பிறந்திருக்கிறது என்று செய்தி. பாச்சு ஏதோ முக்கியத் தகவல் இவனுக்கு மட்டும் முதல் தகவல் கொடுக்கும் வேகத்தில் வந்து சொல்லிய பின் மூன்று நாள் கழித்து அவர்கள் வீட்டில் ஏதோ தூளி போல் கட்டிப் புறப்பட்டார்கள். 

இவனும் பாச்சுவோடு சேர்ந்து துக்கம் காத்திருக்கிறான். 

ஒரு தடவை, இரண்டு தடவை பொறுத்துப் பார்த்தாள் அம்மா. 

என்னடா இது சும்மா அதைப் பத்தியே பேசிண்டு? வேலையைக் கவனி. அவாளெல்லாம் பெருமாள்ட சௌக்கியமா போய்ச் சேர்ந்திருப்பா. 

இருக்கறவாதான் ஐயோ பாவம். போனவா புண்ணியம் செஞ்சவா. அதுவும் பொறந்து கண்ணு முழிக்காம போயிட்றது எல்லாம் கொடுத்துவச்சதுகள். என்னமோ அதையே பெனாத்திண்ட்ருக்க? படிக்கற வேலையைப் பாரு. 

அவன் பேசுவதைக் கேட்க அப்பாவுக்குப் பிடிக்கும். சந்திர கதி சூர்ய கதி என்று ஒருவாறு அதன் பயணகதியை ஃபிக்ஸ் பண்ண முயல்வார். 

அதற்குள் அம்மா, ‘போய் கறிகா இல்லை. வாங்கிண்டு வாங்கோ’ என்று துரத்திவிடுவாள். 

ஆனாலும் அந்தத் தலைச்சன் அங்கு எங்கோதான் சுற்றிக் கொண்டு இருக்கும். 

மாலை நேரம். வெளியில் விளையாடி விட்டு வந்து கைகால் அலம்பிக்கொண்டு வீட்டுப் பாடம் படிக்க உட்காரும் வேளையில் அம்மாவுக்குக் கொஞ்சம் ஓய்வு. பழைய நினைவுகள் ஏதேனும் எழுந்துகொள்ளும். அந்த நினைவுகளைக் கொஞ்சம் எடுத்துத் தூசி தட்டி வைக்கும் போது அங்கு எங்கோ இடுக்கில் இந்தத் தலைச்சன் உட்கார்ந்திருக்கும். கொஞ்ச நேரம் அதை லாலனை பண்ணுவாள். 

அவன் பாடத்தை நிறுத்திவிட்டு உற்றுக் கேட்கிறான் என்றதும் பேச்சை மாற்றி விடுவாள். 

எதிர்த்த வீடு கரைவழிச் சோழியர்கள் வீடு. அவர்களாத்து டேச்சு கதை கதையாய்ச் சொல்வான். எந்த மரித்த ஜீவன் தங்காத்தில் பின் எந்த ஜீவனாக வந்து பிறந்தது என்று துல்லியமான விவரம் காட்ட அவனால் முடியும். தயவு அவன் கிராமத்துத் தாத்தா ஒருவர். 

ஏன் ஒரு ஜன்மத்தில் எங்கோ பொறையில் ஒளித்து வைத்துப் போன காதுக் கம்மலை அடுத்த பேத்தியாகப் பிறந்து நினைவாக இங்க இருக்குன்னு எடுத்துத் தந்ததாக டேச்சு சொல்வதைக் கேட்டால்தான் நம்பமுடியும். 

இருந்தாலும் அவர்கள் மீட்டில் மூன்றாவது குழந்தை, நாலு வயசு, அழகான பெண் குழந்தை, அதன் சிரிப்பு என்பது சர்வ ஆகர்ஷணம். காரணம் என்ன என்று தெரியவில்லை. இப்படித்தான் கேள்விக்குறியாகிப் போனது. நேர்த்திக்கடன் பாக்கி. அதுக்குத்தான் வசூல் என்று அப்பொழுதும் டேச்சு ஃபைலைக் க்ளோஸ் பண்ணிவிட்டான். 

ஒரு நாள் டேச்சு, இவன், கண்ணாமணி, விச்சு எல்லாரும் சேர்ந்து இரவு 8 மணி வரையில் துளசிங்கத்தாத்துத் திண்ணையில் இருட்டுப் புறை ஒட்டுத் திண்ணையில் சீரியஸான டிஸ்கஷன். ஆவி இருக்கா இல்லையா? 

வழக்கம் போல் டேச்சுதான் ஆவிக்குக் குலம் கோத்திரம், சயனம் சஞ்சாரம் எல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டான். 
ஒரு நாள் காலை 2 மணிக்குத் தெரு வழியாகவே ஓர் ஆவி போனதையும், அது இவன் முழித்திருக்கிறான் என்று உணர்ந்து இவாத்துக் குறட்டை உற்றுப் பார்த்து முழித்ததாகவும், உடனே டேச்சு சம்யோசிதமாகக் குறட்டை விடும் சப்தத்தை அபிநயிக்கவே அது சரிதான் என்று சாந்தமாகி டேச்சுவாத்து லைட் கம்பம் வழியாகப் பிடித்துக் கொள்ளாமலேயே ஏறி மாடிப் பக்கம் எங்கோ போய் விட்டதாகவும் கூறினான். 

‘இவன் வுட்டா ரீலு உடுவாண்டா இவன்’ என்று கண்ணாமணி கடுப்பாகிக் கத்தியதற்கு டேச்சு முனீஸ்வரன் மேலயே சத்யம் செய்துவிட்டான். அதற்கப்புறம்தான் ஆவி என்பது மறுக்க முடியாத உண்மையாகிவிட்டது இவனுக்கு. 

விச்சுவுக்கு ஏன் திடீரென்று தோன்றியதோ, கட்டைக் குரலில், ‘ஏய்! நாம சுடுகாட்டில சத்தம் போடாம ஒரு மந்திரம் சொல்றேன் அதைச் சொல்லிண்டே போய் நின்னா நிச்சயம் இதெல்லாம் அங்கதாண்டா வரும். அப்ப பார்த்துடலாம். ஆனா இந்த டேச்சுவைக் கூட்டிக்கிட்டுப் போகக் கூடாதுடா. சமயம் பார்த்து டமார்க் குசுவை விட்டான்னா அவ்வளவுதான் அதெல்லாம் கடுப்பாயிடும். துரத்த ஆரம்பிச்சுடும் அப்பறம்.’ 

டேச்சு உத்தரவாதம் தந்ததன் பேரில் உளவுப்படை மறுநாளே புறப்பட்டுப் போய்ப் பதுங்கிப் பதுங்கிச் சுடுகாட்டை அடைந்தது. 

கொஞ்சம் முன்னாடியே வந்து விட்டதாக அலுத்துக்கொண்டான் டேச்சு. இரவு 11.45 மணி இருக்கும். 

இவனுக்கு அந்தத் தலைச்சன் அங்குதான் எங்காவது தென்படும் என்ற நிச்சயம் அதிகப்பட்டது. 

டேச்சுவுக்கு முழிகள் முகத்தைவிட்டுத் தனியே வந்துவிட்டன என்பது போலத்தான். 

உளவுத்துறைக்கு வெளிப்படையாகவே உதறல். எல்லாம் டேச்சுவால் என்று பொதுப் பழி. 

‘நான் என்னடா பண்ணட்டும். விச்சுதாண்டா சொன்னான்’ என்று தொண்டையோடு தொண்டையாக ரகசியமாக அரைத்தான். ஆவிகளின் காதில் விழுந்திருக்காது. 

1.30, 2 மணி இருக்கும் மண்டபத்தை ஒட்டிய இருட்டுத் திட்டு திடீரென எழுந்துகொண்டது. எவ்வளவு கைகள் என்று நிச்சயமாகத் தெரியவில்லை. அப்படியும் இப்படியும் நகர்வு. 

ஐய்யயோ இந்தக் கூட்டம் இருப்பது பார்த்துவிட்டதா? இந்தப் பக்கம் நோக்கியே வருகிறது. 

கண்ணாமணிக்கு அடக்க முடியவில்லை. வாய் தந்தி. முதலில் வாங்கடா என்று ஓட ஆரம்பித்தவன். கூட்டமே அவன் பின்னால் மந்திரித்து விட்டால் போல். 

‘ஏய் இங்க என்னடா இம்மா நேரத்துல பண்றீகளூ?’ என்று அது கேட்கிறது. இவனுக்கு அந்தக் குரல் ஆரடிக் குரல் போல் இருக்கிறது. ‘ஆரடி?’ ஆரடி?’ என்று ஒரு பைத்தியம். பாவம் வாழ்ந்து பின் கெட்டு, துரத்தப்பட்டு, ஜீவனம் பிடுங்கப்பட்டு, நிம்மதியாகத் தூங்க சுடுகாடு புகலிடம். 

ஒரு வேளை இதனிடமே கேட்கலாமோ அந்தத் தலைச்சன் பற்றி. ஏய் சீக்கிரம் வாடா..... 

மற்ற எல்லாரும் பக்குவமாகப் போய் செட்டில் ஆகிவிட்டார்கள். இவன் தான் கொஞ்சம் கவனப் பிசகில் சத்தம் வர, ஏய் யாரது? என்பதைத் தொடர்ந்து லைட்டுகள் போடப்பட்டு, இவன் என்னமோ நிதானமாக விளக்குபவன் போல் ‘நான் தான் கதவைத் திறந்துண்டு வந்தேன்’ என்று சொல்ல, பிறகு பெரிய இன்வெஸ்டிகேஷன், எதிர்வீட்டு மாமா, வீட்டில் உள்ளவர்கள், வாசலில் ஒண்ணுக்குப் பெய்ய வந்த கிழவர் -- ஐம்பேர் ஆயம், எண்மர் குழுவாக ஆகி, தெருச் சட்ட சபை ஆக இருந்தது. நல்ல வேளை. யாருடைய குரலோ ‘எல்லாம் நாளை காலையில் பார்த்துக் கொள்ளலாம்’ என்ற தீர்ப்பில் கலைந்து போனது. 

மறுநாள் இவனின் தகப்பனாரும், தாயும் துயரக் காட்சியாய் அழாக் குறையாகக் கேட்டார்கள். டேச்சு, கண்ணாமணி இன்னும் மற்றவர்களின் வீட்டுப் பெரியவர்களும் இவன் வீடு தேடி வந்துவிட்டனர். ‘இந்தப் பசங்க போக்கே ஒன்னும் சரியில்லை’ 

என்ன சார்! ராத்திரி எழுந்து சுடுகாட்டுக்குப் போயிருக்கானுக. 

என்னடா என்ன குறை வைச்சோம் உங்களுக்கு 

வந்து பொறந்துருக்கு பார் போன ஜன்ம கர்மம். 

ஏண்டா நீயாவது இவாளுக்குச் சொல்லக் கூடாதோ? நீயும் சேர்ந்து போனியா? 

என்ன அம்மக்கள்ளனாட்டம் உம்முனு இருக்காத. சொல்லு. 

இல்ல அந்தத் தலைச்சன் அங்க இருக்குமான்னு பார்க்கப் போனேன். 

அதான் அதான் இவனுக்கு அதே பல்லவிதான். என்ன கர்மாந்திரமோ.....பெத்தவ நானே மறந்துட்டு ஒக்காந்திருக்கேன். உனக்கு என்னடா வழுச நாயி...தலைச்சன்.....மண்ணாங்கட்டின்னு. எங்க பாவத்தைக் கொட்டிக்கறதுக்குன்னே வந்து தொலைச்சிருக்கியா? 

அது பாருங்கோ....சுடுகாட்டுக்குப் போயிட்டு வந்துருக்கா,,,பசங்க...ஏதாவது சாங்கியம் பண்ணிட்ங்கோ...ஏன் சொல்றேன்னா..... 

ஓய் சும்மா இதான் சாக்குன்னு ஏதாவது கதை பண்ணாதீர் சாங்கியம் அது இதுன்னு...வேலையைப் பாரும்.... நீர் ராத்திரி ஆச்சுன்னா அப்பப்ப அங்க சுடுகாட்டுப் பக்கம் தானே ரகசியமாப் போயிட்டு வரீர். உமக்கு என்ன சாங்கியம் பண்ரது?..... 

சு ...சு சூ ....பேசாம....எதாவது கிண்டியாய நமன்னு சொல்லிவுட்றீரே..... 

எந்தச் சம்பவமும் போன்றே சுடுகாட்டுச் சம்பவமும் சூடு தணிந்து அன்றைய பொழுது மாறி மாறிப் போய்க் கொண்டிருந்தது. 

மாலையில் தெருமுக்கில் கதாகாலட்சேபம் ஆரம்பம். இவனையும் கூட்டிக் கொண்டு இவன் தந்தை அங்கு போகும் சமயத்தில் சந்தனு கங்கை கெட்டம். அஷ்ட வசுக்கள். சாபத்தால் பிறந்து, உடனே அவளால் கொல்லப் பட்டு, எட்டாவது மிஞ்சியது. 

மிஞ்சின வசு பீஷ்மர்......... 

இவனுக்கு மீண்டும் தலைச்சன் பிரச்சனை. 

ஆம் அந்தத் தலைச்சன்கள் ஏழு பேர் என்ன ஆனார்கள்? அந்த எட்டாவது பீஷ்மனுக்கு இந்தக் கேள்வி எழுந்திருந்திருக்குமா? 

இப்படி அங்கங்கே பிறந்து உடனே பதிவு இல்லாமலேயே இறந்து மறையும் இந்த மாதிரியான ஸப்த வசுக்கள் என்ன ஆகின்றார்கள்? 

தலைச்சனும் ஸப்த வசுக்களாய் ஆகியிருக்குமோ? 

கதையிலிருந்து திரும்பி வரும் போது ஆரடிப் பைத்தியம் கத்திக்கொண்டு இருந்தது கந்தன் கடையின் பக்கம்.... 

‘அந்தக் கெட்ட பசங்களோட சேராத.....’ 

*** 


ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 


கிருஷ்ணமூர்த்தி

unread,
Feb 20, 2011, 11:37:35 AM2/20/11
to மின்தமிழ்
சப்த வசுக்கள், சாபம்நீங்கிப் பழைய நிலைக்குப் போனார்கள். ஒருத்தன்
மட்டும் தான் கர்மாவைக் கழிக்க பூமியில் அதிக நாள் இருக்கவேண்டிவன்தது
என்பது பாரதக் கதையாக மனதில் தங்கிப் போன விஷயம். இங்கே கதை,
கதைக்கப்பட்டதைத் தாண்டி அந்த ஏழுவசுக்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்வி
யாருக்கு, எங்கிருந்து வருகிறது?

வாசித்துப்பார்த்தேன்....ஒன்றுமே புரியவில்லை! ஆனாலும் அந்தக் கேள்வி
உள்ளே புகுந்துகொண்டு, மூச்சு முட்டுகிறது.

----------------------------
கதையா காரணமா
புரியாமல்

கிருஷ்ணமூர்த்தி

On Feb 20, 8:26 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:

> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil

rajam

unread,
Feb 20, 2011, 12:19:41 PM2/20/11
to mint...@googlegroups.com, Mohanarangan V Srirangam
மீண்டும் ... முதல் வரியிலிருந்து கடைசி வரி முடியப் படித்த கதை இது! இன்னும் சொல்ல நினைக்கிறேன். இன்றைக்கு நேரமில்லை -- மடெச்சி வேலை செய்யணும். பிறகு ஒரு நாள் சொல்லப் பார்க்கிறேன்.
நன்றி!
--அக்கா

shylaja

unread,
Feb 21, 2011, 10:12:13 PM2/21/11
to mint...@googlegroups.com
அஷ்ட வசுக்களும் சாபத்தின் காரணாமாக பூமியில் பிறக்க நேரிட்டது. அப்போது கங்கையும் பூமியில் தோன்றியிருந்ததால், தாங்கள் கங்கைக்கும் சந்தனுவிற்கும் புதல்வர்களாய் பிறக்க போவதாகக் கூறி, பிறந்தவுடன் தங்களை கொன்றுவிடும் படி அவர்கள் கங்கைக்கு வேண்டுகோள் விடுத்தனர். அஷ்ட வசுக்களில் ஒருவருக்கு நீண்ட நாள் பூமியில் இருக்கும்படி சாபம். அவர் தான் பீஷ்மர். அதனாலேயே அவர் தன் கர்மாவை/சாபத்தை பிறவி முழுவதுமாய்
வாழ்ந்து தீர்த்துக்கொண்டார்.

அப்படி என்ன தான் சாபம்? யார் கொடுத்தது? ஏன் கொடுக்கபட்டது? -
 
ஒரு முறை அஷ்ட வசுக்கள் தம் மனைவியருடன் வசிஷ்டரின் ஆசிரமத்தின் அருகில் அளவளாவிக்கொண்டிருந்தனர். ப்ரபாசன் என்பவனின் மனைவி வசிஷ்டரின் ஆசிரமத்தில் வளைய வரும் நந்தினியின் பால் ஆசை மேலிட, அதனை கொண்டு வருமாறு தன் கணவனை பணித்தாள். ப்ரபாசன் முதலில் மறுத்தான், பின் மனைவியின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, நந்தினியை தன்னுடன் இட்டுச் சென்றான். இதனை ஞானக்கண் கொண்டு அறிந்த வசிஷ்டர் கோபம் மேலிட அஷ்ட வசுக்கள் பூமியில் பிறக்கக் கடவது என சபித்தார்.
 

வசுக்கள் சென்றே கங்கையை வேண்டினர்
பூமியில் பிறந்தே நற் கணவனை அடைந்து
எங்களை பெற்று உடனே நீரில் வீசி
எங்களுக்கு விடுதலை அளிப்பாய் என்றே

வசுக்கள் மீது கொண்ட இரக்கம் பூமியில் நானும் வந்தேன்
வசுக்கள் சாபம் தீர்க்க கொண்டேன் உன்னை மணாளனாக
வசுக்கள் சாப விமோசனம் பெறவே வீசினேன் அவர்களை கங்கையில்
எட்டாம் வசுவே இவன் பூமியில் புகழ்பட வாழ்வான்
அவனை வளர்த்தே உன் கையில் நானும் கொடுப்பேன்
என்றே கூறி கங்கையும் சென்றாள் குழந்தையுடன்
 
இப்படிக்கதை கேட்ட நினைவு இருக்கிறது//இதேபோல கம்சனைக்கொல்ல ஏழு குழந்தைகளும் கொல்லப்பட்டு எட்டாவதாகவே கண்ணன் அவதாரம் நிகழ்ந்தது.
 
ஏழின் குறியீடு இங்கு யோசிக்கவைக்கிறது. ஆமாம்   சாபம் நீங்க வேண்டுமானால் இறப்புதான் அதற்கான விமோசனமா?பித்ருக்களின் உலகம் என்பதாலா
 
 
்மோகனரங்கனின் சிறுகதையும்  யோசிக்க வைக்கிறது.



2011/2/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அஷ்ட வசுக்கள்தாம் உண்டு. அதில் ஒரு வசு பீஷ்மர்
இங்கு கதையில் பிறந்து உடனே இறந்து படும் குற்றுயிர்களைக் குறிக்க 8 --1 =7 என்பது ஒரு குறியீடு

 தலைச்சன் மட்டும் இல்லை இறந்த முன்னோர்கள் எல்லாம் பித்ருக்கள் உலகத்திற்குப் போகிறார்கள் என்பது போல இந்த மாதிரி பிறக்க மட்டுமே வருகின்ற ஜீவன்கள் போகும் உலகம் தான் ஸப்த வசுக்களோ என்றபடி

புராணத்தை அப்படியே பொருத்திப் பார்த்தால் இந்தக் கேள்விகள் எழும். அல்பாயுசு என்ற இயற்கையின் மர்மத்திற்கு ஒரு விளக்கெரிப்பு என்பதுபோல் கொண்டால் இந்த லைசென்ஸ் பொருந்திவரும்

:-) 

2011/2/20 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

// When you live in the hearts of those you love, remember, then you never die."

-- Rabindranath Tagore ///


Innamburan Innamburan

unread,
Feb 22, 2011, 3:43:38 AM2/22/11
to mint...@googlegroups.com
பிறகு எழுதுகிறேன்.


2011/2/22 shylaja <shyl...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Feb 22, 2011, 4:42:49 AM2/22/11
to mint...@googlegroups.com
ஏழு முக்கியமான எண் என்பார்கள்.  ஏழேழு பிறவி.  ஏழு உலகங்கள் என்று எல்லாமும் ஏழாகவே வருமே. வாரத்தில் ஏழு நாட்கள். அவங்க கர்மா பிறப்பு எடுக்கணும் என்பதோடு முடிஞ்ச்சுடும், அப்படிப்பட்ட ஜீவன்களே பிறந்த உடனேயே அல்லது வயிற்றில் இருக்கும்போதோ இறக்கும் என்பார்கள்.  இப்படி ஒரு பிறவிச் சங்கிலியைக் கழிக்கவேண்டி என்பார்கள்.  மோகனரங்கன் விளக்கம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

2011/2/22 shylaja <shyl...@gmail.com>

 
இப்படிக்கதை கேட்ட நினைவு இருக்கிறது//இதேபோல கம்சனைக்கொல்ல ஏழு குழந்தைகளும் கொல்லப்பட்டு எட்டாவதாகவே கண்ணன் அவதாரம் நிகழ்ந்தது.
 
ஏழின் குறியீடு இங்கு யோசிக்கவைக்கிறது. ஆமாம்   சாபம் நீங்க வேண்டுமானால் இறப்புதான் அதற்கான விமோசனமா?பித்ருக்களின் உலகம் என்பதாலா
 
 
்மோகனரங்கனின் சிறுகதையும்  யோசிக்க வைக்கிறது.


கிருஷ்ணமூர்த்தி

unread,
Feb 22, 2011, 10:04:20 AM2/22/11
to மின்தமிழ்
//ஏழின் குறியீடு இங்கு யோசிக்கவைக்கிறது. ஆமாம் சாபம் நீங்க

வேண்டுமானால் இறப்புதான் அதற்கான விமோசனமா?பித்ருக்களின் உலகம்
என்பதாலா//

சாபம் நீங்க வேண்டுமானால், இறப்புத்தான் அதற்கு விமோசனம் என்று
சொல்லும்போது "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று தெரு முனைகளில் கோஷிக்கிற
ஒரு கூட்டத்தை நினைவு படுத்துகிறது. கொஞ்சம் யோசித்துப்பார்த்தால்,
சாபமோ, வரமோ இந்தக் கர்ம பூமியில் பிறந்த அத்தனையும் ஒரு நாளில்
மரணத்தைச்சந்தித்துத் தானாக வேண்டியிருக்கிறது இல்லையா?

இங்கே பிறந்தது ஒரு கர்மச்சங்கிலியில் சிக்குண்டதால்! எட்டு வசுக்களில்
எழுவருடைய தவறு சிறியது என்பதால், சாபம், அவர்கள் பிறந்தவுடனேயே
இறந்து,கர்மவினையில் இருந்து விடுபடுவது என்றாகிறது. எட்டாவது வசு,
காமதேனுவை அபகரித்த குற்றத்திற்காக பூமியில் மனிதப்பிறப்பெடுத்து நீண்ட
நாள் வாசம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதைக் கதையே சொல்கிறது.

பூமியில் மனிதப் பிறப்பெடுத்தவர்கள் மரணமடையும்போது போவது தான் பித்ரு
லோகம். அஷ்டவசுக்கள் அதையும் தாண்டி இருப்பவர்கள். அவர்களுக்குப்
பித்ருலோகம் என்பதே பொருந்தாத ஒன்றாக இருக்கிறது.

ஆக, இந்தக் கதையில் ஏழு என்பதை ஒரு குறியீடாக, அல்லது வேறு விதமாக
எடுத்துக் கொள்ள முடியுமா?

//இறந்த முன்னோர்கள் எல்லாம் பித்ருக்கள் உலகத்திற்குப் போகிறார்கள்


என்பது போல இந்த மாதிரி பிறக்க மட்டுமே வருகின்ற ஜீவன்கள் போகும்

உலகம் தான் ஸப்த வசுக்களோ என்றபடி புராணத்தை அப்படியே பொருத்திப்


பார்த்தால் இந்தக் கேள்விகள் எழும். அல்பாயுசு என்ற இயற்கையின்
மர்மத்திற்கு ஒரு விளக்கெரிப்பு என்பதுபோல் கொண்டால் இந்த லைசென்ஸ்

பொருந்திவரும்//

என்கிறார் அரங்கர்! எட்டு மைனஸ் ஒன்று = ஏழு இப்படி ஒரு சமன்பாட்டை
வைத்து இதை முழுமையடையாத ஒன்றாக, விடையைத் தேடி அலையும் ஒரு ஜீவனின்
கேள்வியாக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாமே தவிர, ஏழு என்பதை வைத்து
விசேஷமான குறியீடு, வியாக்கியானம் செய்ய முடியாது என்று தான் எனக்குப்
படுகிறது.

----------------------
ஆஹா!நானும் கோனார் நோட்ஸ் எழுதக்
கற்றுக் கொண்டுவிட்டேன்!!

coral shree

unread,
Feb 22, 2011, 10:29:59 AM2/22/11
to mint...@googlegroups.com
அப்பாடி, நன்றி சார். உங்க கோனார் நோட்ஸ் இந்த தற்குறிக்கும் கொஞ்சம் புரிய வைக்கிறது....

2011/2/22 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>
--

shylaja

unread,
Feb 22, 2011, 10:41:50 AM2/22/11
to mint...@googlegroups.com

2011/2/22 coral shree <cor...@gmail.com>
விளக்கம் அபாரம். சிந்திக்கவைக்கிறது மிகவும்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

tirumalainumbakkam

unread,
Feb 23, 2011, 9:25:19 AM2/23/11
to மின்தமிழ்
:
- உலகின் ஏழு விந்தைகள்
- ஏழு கடல்கள்
- ஏழு கண்டங்கள்
- வாரத்தின் ஏழு நாட்கள்
..
இசையில் ஏழு:
- சப்த ஸ்வரங்கள் என அழைக்கப்படும் ஏழு ஸ்வரங்கள்
- ஊத்துக்காடு வெங்கடகவி எனும் மேதை, "சப்த ரத்ன கிருத்தி" என ஏழு
பாடல்களை அருளியுள்ளார்
- முத்து ஸ்வாமி தீக்ஷிதர் "வார கிருத்தி" எனும் பெயரில், வாரத்தின்
நாள்
ஒன்றுக்காக ஏழு பாடல்களை அருளியுள்ளார்
நாட்டியத்தில் ஏழு:
- இந்திய நாட்டியங்களின் ஏழு முறைகள்: பரத நாட்டியம், கதகளி, மோகினி
ஆட்டம், குச்சுபிடி, மணிபுரி, ஒடிஸ்ஸி மற்றும் கதக் என ஏழு வகையான
நாட்டிய முறைகள் பழக்கத்தில் உள்ளன
- பரத நாட்டியத்தில் ஏழுபடி எனப்படும் ஏழு நிலைகள் உள்ளன
புராணங்களில் ஏழு:
- ஏழு மலை: ஏழையும் தெய்வத்தையும் இணைத்து
ஏழுமலை கொண்ட திருப்பதி.
- ஏழு ரிஷிகள்: புராணங்களில் கூறப்படும் ப்ரிகு, ஆத்ரி, ஆங்கிரஸர்,
வசிஷ்டர், புலஸ்த்யர், புலலாகர் மற்றும் க்ரதர் என்ற ரிஷிகளும் ஏழு
தான்.
- ஏழு உலகங்கள்: பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம், மகரலோகம், ஜனலோகம்,
தபோலோகம் மற்றும் பிரம்ம லோகம் என்பன.
- ஏழு ஆறுகள்: வேதங்களில் கூறப்பட்ட சிந்து, அஷிக்னி, பருஷ்னி, ஸரஸ்வதி,
யமுனா, கங்கை மற்றும் சரயூ எனப்பட்ட புண்ணிய நதிகள்
- ஏழு தேவிகள்: ஸப்த மத்ரிகாஸ் என அழைக்கப்படும் ப்ரமி, மகேஸ்வரி,
கருமாரி, வைஷ்ணவி, வைராளி, இந்திராணி மற்றும் சமுண்டா என்ற ஏழு தேவிகளை
சிவ பெருமான் அந்தகாஸுரா எனும் அரக்கனை அழிப்பதற்காக படைத்தாதாக
கூறப்படுகிறது.
- ஸப்த-விதா ஆனுபபட்டி: ராமானுஜர் அருளியது
- ஏழு பிறவிகள்: மனிதன் ஏழு பிறவிகள் பிறப்பதாக கூறப்படுகிறது
- இந்திய ஜோதிடத்தில் ஏழு கிரகங்கள்: சூரியன், சந்திரன், புதன், வெள்ளி,
செவ்வாய், குரு மற்றும் சனி எனப்படும் ஏழு கிரகங்கள்
இந்திய முறை மருத்துவத்தில் ஏழு:
- ஸப்த சக்கரம் எனப்படும் சிசுவின் ஏழு நிலைகள்: தாயின் கருவில்
இருக்கும் சிசுவின் வளர்சியை சிசுவின் அசைவின் படி, மூலதாரம் (3 வாரம்
வரை), ஸ்வதிஷ்டனம் (3 முதல் 6 வாரம் வரை), மணிபுரம் (6 முதல் 12 வாரம்
வரை), அனாஅதம் (12 முதல் 24 வாரம் வரை), விஷுத்தம் (24 முதல் 30 வாரம்
வரை), அஜ்னம் (30 முதல் 38 வாரம் வரை) மற்றும் ஸ-அஸ்ரம் (39
வாரங்களுக்கு
மேல்) என ஏழு நிலைகளாக பிரித்துள்ளனர்
- ஸப்த தாது: ஆயுர்வேத முறைப்படி நோய் வரக்காரணமாய் இருப்பது வாதம்,
பித்தம் மற்றும் கபம் எனப்படும் மூன்று தோஷங்களே ஆனாலும், கிருமிகள்
உடலில் புகுந்து நோயை வரவழிக்க உடலின் இந்த ஏழு பாகங்களான ரசம் (Fluid),
ரத்தம்(Blood), மாம்ஸம்(Muscle), மெதாஸ்(Fat), அஸ்தி(Bone),
மஜ்ஜா(Marrow) மற்றும் சுக்கிரன்(Semen)
மேலும் சில...
- ஆங்கில மாதமான செப்டம்பர் முதலில் ஏழாவது மாதமாகவே இருந்தது.
செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர் என்பன சமிஸ்கிரத சொற்களான சப்த
(7), அஷ்டா (8), நவ (9), தச (10) என்ற சொற்களிலிருந்து திரிந்து
வந்தவையே. பின் நாளில், ஜூலியஸ் சீசர் மற்றும் அகஸ்தஸ் சீசர் இருவரும்,
தத்தம் பெயரில் இரு மாதங்களை இணைத்தனர்.
- தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்கள் மொத்தம் ஏழு (அ, இ, உ, எ, ஐ, ஒ,
ஒள). மற்ற ஐந்தும் இவற்றில் ஐந்தின் நெடில் வடிவங்களே ஆகும்.
- நிறங்கள் ஏழு (VIBGYOR)
மேலும் படிக்க... http://movingmoon.com/home/node
மனிதன் தன் அறிவு நிலையை வெளிப்படுத்துவது ஏழாகிய 'சப்தத்தால்'
தான்.
> அதாவது சிந்திப்பது பேசுவது என்கிற அவ்வளவுமே சப்தமாகிய ஏழால் தான்.
> இந்த ஏழாகிய பேச்சால் மற்றும் சிந்தனையால் அவன் எட்டுவதே ஒன்பதாகிய இறைநிலை.
> எப்போதும் இறைநிலையை எட்டுவதற்கு அல்லது இறையருளை எட்டுவதற்கு ஏழுதான் துணை
> புரிவதாக உள்ளது.
ஏழு எனும் சப்தம் ஏழுஸ்வரங்களுக்குஆதாரமாகிறது.
> ஜோதிடசாஸ்திரத்தில் ஏழாம் கட்டத்தைத்தான் உன்னிப்பாக கவனிப்பார்கள்.
> அதில்தான் நமது இல்லறம் எப்படிப்பட்டது போன்ற ரகசியங்கள்
> திருவரங்கம்!
ரங்கவிமானம்
> காவிரிக்கரையில் நிலைபெற்றது
> ஏழு சுற்றுக்கள் ஏழு பிராகாரங்கள் நடுவிலேதான் கோயில் அமைந்துள்ளது.
> மாடங்கள் சூழ்ந்த முதல் சுற்று பூலோகம்
> திரிவிக்கிரமன் உலாவந்த சுற்று புவர்லோகம்
> கிளீச்சோழன் பேரால் அமைந்த சுற்று ஸீவர்லோகம்
> திருமங்கைமன்னன் பேரால் அமைந்த சுற்று மஹர்லோகம்
> குலசேகரன் சுற்று ஜநோ லோகம்
> ராஜமகேந்திரன் சுற்று தபோலோகம்
> தர்மவர்மன் சோழன் சுற்று கர்ப்க்ரஹம் உடைய சத்யலோகம் என உணரப்படுகிறது
> இந்த ஏழு சுற்றுக்களையும் ஏழுதினங்களும் வலம்வந்து அதாவது 49முறைவலம் வந்து
> அரங்கனை வணங்குபவர்களுக்கு அவர்களது ஏழாம்கட்ட கர்மங்கள் கெட்டதாக இருந்தால்
> நீங்கிவிடும் நல்லதாக இருந்தால் நன்மை பெருகிவிடும்
ஏழாகிய
> இசைவசப்படும்.. ஏழாகியமந்திரம் வசப்படும். ஏழாகிய சப்தம் இனிமையானதாகும்/
> ஏழாகியவண்ணங்கள் வாழ்வில் சேர்ந்து வாழ்க்கை வண்ணமயமாகும்!
> இந்த ஏழாகிய சப்தம் அடங்குமிடம் அமைதி, தானாக வந்துவிடும். ஏழைக்கடந்து
> எட்டும் அமைதியாக அந்த அரங்கன் இருக்கிறான்.
> tamizh piravakam; chander subramanian)

On Feb 22, 2:42 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> ஏழு முக்கியமான எண் என்பார்கள்.  ஏழேழு பிறவி.  ஏழு உலகங்கள் என்று எல்லாமும்
> ஏழாகவே வருமே. வாரத்தில் ஏழு நாட்கள். அவங்க கர்மா பிறப்பு எடுக்கணும் என்பதோடு
> முடிஞ்ச்சுடும், அப்படிப்பட்ட ஜீவன்களே பிறந்த உடனேயே அல்லது வயிற்றில்
> இருக்கும்போதோ இறக்கும் என்பார்கள்.  இப்படி ஒரு பிறவிச் சங்கிலியைக்
> கழிக்கவேண்டி என்பார்கள்.  மோகனரங்கன் விளக்கம் என்ன என்பதைப் பார்க்கலாம்.
>

> 2011/2/22 shylaja <shylaj...@gmail.com>

கிருஷ்ணமூர்த்தி

unread,
Feb 23, 2011, 9:41:51 AM2/23/11
to மின்தமிழ்
திரு.திருமலை!

சப்த வசுக்கள் என்ற அரங்கனாரின் சிறுகதைக்கும், நீங்கள் இங்கே ஏழேழாக
அளந்துவிட்டிருப்பதற்கும் என்ன சம்பந்தம்?

ஏழு என்ற எண்ணிக்கை விசேஷமாக இருக்கலாம், இருந்துவிட்டுப் போகட்டும்!
இலக்கிய கர்வம் என்ற இந்த இழைக்குக் கொஞ்சம் பொருத்தமானதாக ஏதேனும்
சொல்லுங்களேன்!

----------------------------
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகைதானறியேன்

கிருஷ்ணமூர்த்தி

On Feb 23, 7:25 pm, tirumalainumbakkam <tnkesa...@gmail.com> wrote:

devoo

unread,
Feb 23, 2011, 10:50:40 AM2/23/11
to மின்தமிழ்
ஐயா அவர்கள் ஆங்கில மூலம் பார்த்துத் தமிழ்ப்படுத்தியுள்ளார்கள் என்று
தெரிகிறது -
புலலாகர், க்ரதர் ,ஸப்த-விதா ஆனுபபட்டி, ஸ்வதிஷ்டனம், அஜ்னம் , மெதாஸ்,
சுக்கிரன்

கிருஷ்ண மூர்த்தி ஐயாவைக் கோவப்பட வைத்தாலும் பொறுமையாகச் செய்த நல்ல
முயற்சிதான்; பாராட்டு(க்)கள்


தேவ்

> மேலும் படிக்க...http://movingmoon.com/home/node


>  மனிதன்   தன் அறிவு நிலையை வெளிப்படுத்துவது ஏழாகிய  'சப்தத்தால்'
> தான்.> அதாவது சிந்திப்பது பேசுவது என்கிற அவ்வளவுமே சப்தமாகிய ஏழால் தான்.
> > இந்த ஏழாகிய  பேச்சால் மற்றும் சிந்தனையால்  அவன் எட்டுவதே  ஒன்பதாகிய இறைநிலை.
> > எப்போதும் இறைநிலையை எட்டுவதற்கு அல்லது இறையருளை எட்டுவதற்கு ஏழுதான்  துணை
> > புரிவதாக உள்ளது.
>
> ஏழு எனும் சப்தம் ஏழுஸ்வரங்களுக்குஆதாரமாகிறது.>  ஜோதிடசாஸ்திரத்தில்   ஏழாம்  கட்டத்தைத்தான்  உன்னிப்பாக கவனிப்பார்கள்.
> > அதில்தான் நமது  இல்லறம் எப்படிப்பட்டது போன்ற ரகசியங்கள்
> > திருவரங்கம்!
>
>  ரங்கவிமானம்
>
> > காவிரிக்கரையில்  நிலைபெற்றது
> > ஏழு சுற்றுக்கள் ஏழு பிராகாரங்கள் நடுவிலேதான்  கோயில் அமைந்துள்ளது.
> > மாடங்கள்  சூழ்ந்த  முதல் சுற்று பூலோகம்
> > திரிவிக்கிரமன் உலாவந்த சுற்று புவர்லோகம்
> > கிளீச்சோழன் பேரால் அமைந்த சுற்று ஸீவர்லோகம்
> >  திருமங்கைமன்னன் பேரால் அமைந்த சுற்று  மஹர்லோகம்
> > குலசேகரன்  சுற்று  ஜநோ லோகம்
> > ராஜமகேந்திரன் சுற்று தபோலோகம்
> > தர்மவர்மன் சோழன் சுற்று கர்ப்க்ரஹம் உடைய சத்யலோகம்  என உணரப்படுகிறது
> >   இந்த ஏழு சுற்றுக்களையும் ஏழுதினங்களும் வலம்வந்து அதாவது 49முறைவலம் வந்து
> > அரங்கனை வணங்குபவர்களுக்கு அவர்களது ஏழாம்கட்ட கர்மங்கள்  கெட்டதாக இருந்தால்
> > நீங்கிவிடும்  நல்லதாக இருந்தால் நன்மை பெருகிவிடும்
>  ஏழாகிய
> > இசைவசப்படும்.. ஏழாகியமந்திரம் வசப்படும். ஏழாகிய சப்தம்
>

> ...
>
> read more »

Hari Krishnan

unread,
Feb 23, 2011, 8:46:22 PM2/23/11
to mint...@googlegroups.com


2011/2/23 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

சப்த வசுக்கள் என்ற அரங்கனாரின் சிறுகதைக்கும், நீங்கள் இங்கே ஏழேழாக
அளந்துவிட்டிருப்பதற்கும் என்ன சம்பந்தம்?

வசுக்கள் (முதலிலேயே நீங்களோ அல்லது இன்னொருவரோ) குறிப்பிட்டது போல் எட்டுப் பேர். அஷ்ட வசுக்கள்.  இவர்களில் த்யோ என்ற வசு, தன் மனைவிக்காக தேனுவைப் பற்றப்போய்தான் சாபம் பெற்று, பீஷ்மராகப் பிறந்தார்.  மற்ற ஏழு வசுக்களைப் பிறந்ததும் கங்கை, கங்கையில் போட்டு, பிறவியிலிருந்து விடுவித்துவிட்டாள்.

ஸப்த வசுக்கள் என்று ரங்கனார் எழுதியிருக்கிறார் என்றால் அதில் என்னவோ சூட்சுமம் இருக்கிறது.  (சிலம்பாட்ட வாத்தியார் தடுக்கி விழுந்தால் அதிலும் ஓர் அடி இருக்குமாம்.  ரங்கனும் சிலம்பாட்ட வாத்தியார்தான்.:)  )


--
அன்புடன்,
ஹரிகி.

கிருஷ்ணமூர்த்தி

unread,
Feb 24, 2011, 1:30:29 AM2/24/11
to மின்தமிழ்
திரு ஹரிகி! தெளிவுபடுத்த முன்வந்ததற்கு நன்றி!

ரங்கன் சிலம்பு மட்டுமா ஆடுகிறார்?

அரங்கனாருடன் இந்த சூக்குமத்தை ஏற்கெனெவே தனிப்பட விவாதித்தாயிற்று.
இங்கே அந்த சிறுவனின் கேள்வி தான் முக்கியம், தலைச்சன் என்னவாக எங்கே
போயிருக்கும் என்பது கதையைக் கேட்கப்போகும்போது எழும் கேள்வி,
நண்பர்களுடன் சேர்ந்து சுடுகாட்டுக்கெல்லாம் போய்...அந்தத்
தனயனைத்தகப்பன் ஒருவன் தான் புரிந்துகொள்கிறான்.இதை ஏற்கெனெவே என்னுடைய
முந்தைய பதிலுளும் ஒரு கோடி காட்டி விட்டுப் போயிருந்தேன்.

இதை சிறுகதை வல்லுனர்கள், அபிமானிகள் தாங்களாகவே
கண்டுபிடித்துச்சொல்கிறார்களா என்று பொறுமையாகக் காத்திருந்தேன். ஆனால்
நம்முடைய திருமலை நும்பாக்கம் சிறுகதைக்கு சம்பந்தமே இல்லாமல் என்னென்னவோ
சொல்ல ஆரம்பித்து நுங்கு எடுக்க ஆரம்பித்தார் பாருங்கள், அதற்காகச்
சொன்னது அது!

------------------------------
இதற்காகத்தான் நான் சிறுகதையே எழுதுவதில்லை
அடுத்தவரை அவஸ்தைப்பட விடுவதில்லை

:-))))

கிருஷ்ணமூர்த்தி

On Feb 24, 6:46 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:

devoo

unread,
Feb 24, 2011, 10:40:26 PM2/24/11
to மின்தமிழ்
>>சமுதாயத்தில் பைத்தியமாகிப் போனதாகப் புழங்கும் ஓர் உயிரால் அக்கறைக் குரலைப் பெறுகின்றன. அந்தக் குரல் யாராலும் சற்றும் கவனிக்கப் படாமல் சந்தை இரைச்சலாக ஆனாலும் அந்தக் குரலின் ஒலிப்பில் மௌனத்தை அடைகிறது சிறுகதை. <<


கோவப்படாமெ இதுக்கு மட்டும் இன்னொரு தரக்க நோட்சு போட்டு புரியுதாப்புல
சொல்லுங்க ஐயா


தேவ்

On Feb 24, 1:06 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> சிறுகதைக்கு ஏன் கோனார் நோட்ஸ் போடுகிறாய் என்று கண்டனங்கள் எழுந்தாலும்,
> விளக்காமல் சிறுகதையைப் புரிந்துகொள்ளும் முயற்சி பலிதம் ஆகும் அளவிற்கு
> இன்னும் இலக்கிய ப்ரக்ஞை மக்களிடையே எழவில்லை போலும். எனவே தண்டனையை, எழுதியவன்
> அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.
>
> ஓர் இளம் உள்ளத்தின் விசாரத்தனமான முனைப்பின் முளை -- இதைக் கவனப்
> படுத்துவதுதான் இந்தச் சிறுகதையான ‘ஸப்த வசுக்கள்’.
>
> புராணக் கதை எதனோடும் சம்பந்தம் உடையதன்று.
> However much the readers choose to carry themselves away by the chance
> references of some Puranic names used as articles in the story.!
>
> பிறந்து உடனே மரிக்கும் உயிர்களின் நிகழ்வு ஏற்படுத்தும் ஒரு சலனம்,
> சமிக்ஞையாகவும், சங்கடமாகவும் ஓர் சிறு பாலகனின் உள்ளத்திற்குச் சென்று பதியும்
> போது ஏற்படும் சமுதாய கவனம் -- இதுதான் ‘ஸப்த வசுக்களின்’ சூழல் விஸ்தாரம்.
>
> வசுக்கள் என்னவோ அஷ்ட வசுக்கள்தாம். ஆயினும் பிறந்து உடனே மரிக்கும் சிசுக்கள்
> என்ற எண்ணத்துடன் கதையைக் கேட்கும் அந்தச் சிறுவனின் உள்ளத்தில், தங்கிப்போன
> வசுவைத் தவிர, பிறந்து உடனே மரித்த மிச்சம் ஸப்த வசுக்கள் தன்னுடைய உள்ளத்தின்
> சங்கடத்திற்கு ஒரு குறியீடாய் ஆகிவிடுகிறது அந்தச் சிறுவனுக்கு.
>
> தெளிவானவர்களால் சிறிதும் கவனிக்கப் படாமல் போகும் சிறுவர்களின் விசாரங்கள்,
> சமுதாயத்தில் பைத்தியமாகிப் போனதாகப் புழங்கும் ஓர் உயிரால் அக்கறைக் குரலைப்
> பெறுகின்றன. அந்தக் குரல் யாராலும் சற்றும் கவனிக்கப் படாமல் சந்தை இரைச்சலாக
> ஆனாலும் அந்தக் குரலின் ஒலிப்பில் மௌனத்தை அடைகிறது சிறுகதை.


>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>

> ***

rajam

unread,
Feb 24, 2011, 10:50:36 PM2/24/11
to mint...@googlegroups.com
குறுக்கிடுகிறேன்!
மோகனுக்குக் கோபம் வராது,
எனக்குத் தெரியும்!
:-)

கதையின் முடிவில் அந்த
"ஆரடிப் பைத்தியத்தின்"
குரலே இதற்கு விளக்கம்!

அன்புடன்,
ராஜம்


> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

Hari Krishnan

unread,
Feb 24, 2011, 11:22:22 PM2/24/11
to mint...@googlegroups.com


2011/2/25 devoo <rde...@gmail.com>

>>சமுதாயத்தில் பைத்தியமாகிப் போனதாகப் புழங்கும் ஓர் உயிரால் அக்கறைக் குரலைப் பெறுகின்றன. அந்தக் குரல் யாராலும் சற்றும் கவனிக்கப் படாமல் சந்தை இரைச்சலாக ஆனாலும் அந்தக் குரலின் ஒலிப்பில் மௌனத்தை அடைகிறது சிறுகதை. <<


கோவப்படாமெ இதுக்கு மட்டும் இன்னொரு தரக்க நோட்சு போட்டு புரியுதாப்புல
சொல்லுங்க ஐயா

ரங்கனுக்காக கவிதையில் என் கோனார் நோட்ஸை தரவா?  இவையெல்லாம் நகரம் நானூறுக்காக எழுதப்பட்ட நகரச் சித்திரங்கள்.  உணர்ச்சியைத் தூண்டாமல், புகைப்படத்தைப்போல் காட்சியை மட்டும் கொடுத்துவிட்டு நகர்ந்துவிடும்படி எழுதப்பட்டவை.  இந்தக் காட்சிகள், ரங்கனுடைய உள்ளத்தை வெளிப்படுத்துகின்றன என்று நினைக்கிறேன். (இவையெல்லாம் நகரத்தில் திரியும் சிறுவர்கள், சிறுமிகளைப் பற்றியவை.)

கண்ணில்லா அப்பனுடன் கையேந்தும் கண்மணிக்குக் 
கண்பறிக்கும் பொம்மையின்மேல் கண். 

காலை இளங்காற்று; கண்செருகத் தூங்குகிறான் 
சாலையிலே ஈமொய்க்கச் சற்று.

சட்டைத் துணியால் தரைபெருக்கிக் கால்தொட்டும் 
எட்டிப்போ என்பதுவே ஏச்சு. 

பெண்கல்வி பேசும் பலகையின்கீழ் குட்டப்பன் 
கண்சிவக்கக் காற்றடிக்கி றான்.

பிய்ந்த செருப்பு பெருகும் மழைநீரால்
நைந்த செருப்பு நடைபழகித் - தொய்ந்தசெருப்
பால்வாழ்க்கை தேடுகின்ற பாலீஷ் சிறுவனுக்கோ
கால்களின் மீதுதான் கண்.

குப்பை பொறுக்கும்கை கோணி சுமக்கும்கை
கப்பு கழுவும்கை கைவலிக்க - உப்பிட்ட
வேர்க்கடலை சுண்டல் மிளகுவடை விற்கின்ற
கார்துடைக்கும் பிஞ்சுகளின் கை.

கிட்டத்தட்டவாவது நீங்கள் நினைத்தது வெளிப்படுகிறதா ரங்கன்?  இல்லாவிட்டால் இங்கே இவற்றை இட்டதற்கு மன்னிக்கவும்.  (பழசெல்லாம் போடப்படாது. எங்கியானும் ப்லாக் வச்சுக்கோ என்று கண்ணன் என்னிக்கோ சொல்லிட்டார்.  அவருடை தடையுத்தரவை மீறியதற்கும் என்னை மன்னிக்கணும்.)

N. Kannan

unread,
Mar 19, 2011, 7:02:28 PM3/19/11
to mint...@googlegroups.com
2011/3/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

> எனக்கேட்டு மெனக்கெட்டு
> மனக்கட்டில் முனைப்பெட்டும்
> நிர்மூடம் அதுவும் யாரோ?

தாளக்கட்டு நிற்கிறது :-))

> தனிமைக்கே தலைப் பிள்ளையாகத்
> தவிட்டிற்கே விற்ற தாயாய்த்
> தலைப்பு நுனி மூடிச் சிரிக்கும்
> கலை வல்ல காளி!

அருமையான நிலை விளக்கம்!
அந்த தவிட்டிற்கு விற்ற பிள்ளை யார் கவிஞனா? காளியா?


> அன்றேனும் முலைகடுக்கும் உன்னருளின்
> நிலம் பாய்ச்சுகின்ற நிபாதம்
> நீக்குக என் உயிரின் தாகம்.
> *

அது என்ன முலைகடுக்கும் உன்னருள்?

முலை மழலைக்கு கடுக்குமா என்ன?

நா.கண்ணன்

Tthamizth Tthenee

unread,
Mar 19, 2011, 8:19:03 PM3/19/11
to mint...@googlegroups.com
மழலையின் உறிஞ்சலில் தாய்க்கு முலை கடுக்கும்

அதுவுமன்றி மழலை குடிக்காத முலையும் கடுக்கும்

அன்புடன்
தமிழ்த்தேனீ



2011/3/20 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

N. Kannan

unread,
Mar 19, 2011, 9:36:32 PM3/19/11
to mint...@googlegroups.com
ஓ! புரிகிறது!
இவன் முலையுண்ண வரவில்லையே என்று அவள் முலை கடித்து வேதனைப்படுகிறாள்
என்று சொல்கிறார் கவிஞர்
தாயே! யசோதா!
சபாஷ்!

க.>

2011/3/20 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

selva kumaran

unread,
Mar 20, 2011, 5:26:12 AM3/20/11
to mint...@googlegroups.com
முலைப்பால் அருந்தாவிடில் சவலைக் குழந்தையாகி விடும். தாய்ப்பால்தான் அதற்கு ஆதாரம்! அதுவே பிடிக்காமல் வாடும் சவலை குழந்தைக்கு, அருளமுதம் பாய செய்து உயிரின் தாகத்தை நீக்குவாய் என்கிறார் ஸ்ரீமோகனரங்கன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அவரது முதல் நான்கு வரியை நான் புரிந்துக் கொள்ளவே ஒரு வாரம் வேண்டும்.

முமுக்ஷுவின் உன்மத்தத்தால் சித்த வழி பாயும் மொழி ஆறு ஒரு கணத்தில் எவ்வளவோ காதம் பாய்ந்து விடும். அதில் ஒரு திவலையை புரிந்துக் கொள்ளவும் என்னைப் போன்றவர்க்கு நேரம் பிடிக்கும்.

அவர் யாருக்கு எழுதினாரோ, அவருக்குப் புரியும் அவர் உணர்வு! எனக்குப் ஒரு வரி புரிவதற்குள் இவரிடம் இருந்து இன்னும் இதைப் போல் பல காட்டாறுகள் பாய்ந்து விட்டிருக்கும்.



2011/3/20 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

கிருஷ்ணமூர்த்தி

unread,
Mar 20, 2011, 10:18:52 AM3/20/11
to மின்தமிழ்

உண்மைதான் திரு செல்வகுமரன்!

வெறும் புத்தக வாசிப்பில் மட்டும் வருவதில்லை இது. தன்னுடைய அனுபவத்தைக்
குழைத்து வார்த்ததைகளில் பேசும்போது, அப்படி ஒரு அனுபவம் இருக்கிறது
என்பதே தெரியாத என்னைப் போன்ற பலருக்கு, அந்த வார்த்தைகளின் தாக்கத்தைப்
புரிந்து கொள்ளப் பல மாதங்கள் கூட ஆகலாம்! (நாலுநாட்களில் புரிந்து
கொள்கிற உம்மைப்பார்த்து, நிறையவே பொறாமை!எவ்வளவு புகைகிறது பாருங்கள்!)

கண்ணன் எழுப்பிய சந்தேகம் தான் என்னைக் கொஞ்சம் ஆச்சரியப்படுத்தியது. மடி
கனத்துப் போன பசு, க்ன்றுக்காகக் குரல் கொடுப்பதுபோல, சமீப கால
வரலாற்றில், 'என்னுடைய அற்ப ஆயுளில் இன்னொரு நாள் முடிந்து போனதே!
இன்னும் என் குழந்தைகள் தேடிவரக் காணோமே!" என்று காளியிடம் கதறிய ஸ்ரீ
ராம கிருஷ்ண பரமஹம்சர் கதையும் மறந்து போனதோ!

அதுவே இங்கே தலைகீழாக,

தனிமைக்கே தலைப் பிள்ளையாகத்
தவிட்டிற்கே விற்ற தாயாய்த்
தலைப்பு நுனி மூடிச் சிரிக்கும்
கலை வல்ல காளி!

அலைகின்ற வாழ்வில் ஒருநாள்
அன்றேல் வாழ்வின்
அலை ஓய்ந்த பின்னர் ஒருநாள்
அன்றேல் உன் சிரிப்பின்
கலைவேய்ந்த கணத்தில் ஒருநாள்
நிலைகுத்தி நிற்கும் உன் பார்வை


அன்றேனும் முலைகடுக்கும் உன்னருளின்
நிலம் பாய்ச்சுகின்ற நிபாதம்
நீக்குக என் உயிரின் தாகம்.

தவிட்டிற்கு விற்றாயோ என்று தாயிடத்தில் சண்டை போடுகிற பிள்ளையாய், என்
உயிரின் தாகம் தீர்ப்பாய் என்ற வேண்டுகோளைக் கொஞ்சம் உரிமையோடு
மிரட்டலாகவே வெளிப்படுகிறது, அரங்கனின் சொந்த அனுபவம்!

-----------------------------


கிருஷ்ணமூர்த்தி

N. Kannan

unread,
Mar 20, 2011, 7:43:50 PM3/20/11
to mint...@googlegroups.com
2011/3/20 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>:

> கண்ணன் எழுப்பிய சந்தேகம் தான் என்னைக் கொஞ்சம் ஆச்சரியப்படுத்தியது. மடி
> கனத்துப் போன பசு, க்ன்றுக்காகக் குரல் கொடுப்பதுபோல, சமீப கால
> வரலாற்றில், 'என்னுடைய அற்ப ஆயுளில் இன்னொரு  நாள் முடிந்து  போனதே!
> இன்னும் என் குழந்தைகள் தேடிவரக் காணோமே!" என்று காளியிடம் கதறிய ஸ்ரீ
> ராம கிருஷ்ண பரமஹம்சர் கதையும் மறந்து போனதோ!
>


எல்லாம் ஒரு கவன ஈர்ப்புத்தான் தோழரே! :-))

இருப்பினும், `முலைகடுக்கும் உன்னருளின்` எனும் சொல்லாட்சி கொஞ்சம்
வித்தியாசமாக இருந்தது.
அதன் பின்னுள்ள பொருள் அவள் காருண்யத்தைக் காட்டினும், `கடுக்கும்
உன்னருள்` என்ற சொற்கள் அருகருகே நின்றது என்னை ஆச்சர்யப்படுத்தியது :-))

நா.கண்ணன்

rajam

unread,
Mar 21, 2011, 12:15:13 AM3/21/11
to mint...@googlegroups.com, Narayanan Kannan, Mohanarangan V Srirangam
ஆமா, அது சரி ... "தம்பி"மார்கள் மட்டுமே இந்த "மார்" வியாக்கியானம் செய்ற மாதிரி இருக்கே?! அவுங்களுக்கு உண்மையிலேயே அந்த உணர்வு, அதுதான் ... "முலைக் கடுப்பு" ("ஸ்பேஸ்" போட்டாலும் போடாட்டாலும்) ... அது-னா என்ன-னு தெரிய வாய்ப்பு இருக்கா? ?
ரெண்டு நாளுக்கு அப்புறம் இப்பதான் கொஞ்சம் இணையத் தொடர்பு கெடச்சது. இதெப் பாத்த ஒடனெ கை "கடு"த்தது! :)
இனி மறுபடி எப்போ "நறுக்"கில்லாத இணையத் தொடர்போ? நெறயப் பலபேருக்குப் பதில் எழுதணும். முடியலெ, மன்னிக்கணும்.
அன்புடன்,
ராஜம்


On Mar 21, 2011, at 6:50 AM, Mohanarangan V Srirangam wrote:



2011/3/21 N. Kannan <navan...@gmail.com>

--

கடுக்கும் என்பதற்குப் பின் நானே நிறைய ஸ்பேஸஸ் விடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நிறைய இடைவெளிகள் விட்டால் அதையெல்லாம் சதுரம் சதுரமாக ஜன்னல் போல் காட்டுமே என்பதால் செய்யவில்லை. 
:-)) 
 

Narayanan Kannan

unread,
Mar 21, 2011, 12:32:47 AM3/21/11
to rajam, mint...@googlegroups.com, Mohanarangan V Srirangam
அப்படி வாங்க அக்கா!
 
மற்றவர்க்கு எப்படியோ! எனக்கு அதன் வலி தெரியும். 5 சகோதரிகள். மூத்த அக்காவின் குழந்தைகள் என் உடன் பிறப்புக்கள் போல். பல நேரங்களில் அவர்களின் வேதனையை உணர்ந்திருக்கிறேன். கட்டிப்போன முலையை தொட்டு உணர்ந்திருக்கிறேன். கல்லு போல ஆகிவிடும், சில சமயம். ஈசனுக்கு காமதேனு பால் கறந்தது என்ற தொன்மமெல்லாம் இச்செயலால் வருவதே! பால் நிரம்பிவிட்டால் கொடுத்தே ஆக வேண்டும் என்பது பொதுவிதி. கிராமப்புறத்தில் பால் வடியும் தாய்மார்கள் பிற பிள்ளைகளுக்கு முலைப்பால் தானம் செய்வது வழக்கு. கோகுலத்தில் அது நிச்சயம் நடந்திருக்கும்.
 
க.>

2011/3/21 rajam <ra...@earthlink.net>



--
"Be the change you wish to see in the world." -Gandhi

Tthamizth Tthenee

unread,
Mar 21, 2011, 1:41:30 AM3/21/11
to mint...@googlegroups.com
நானும் அப்படியே என் சகோதரிகள் , இன்னும் பல உறவினர்களில் உள்ள திருமணமாகி பிள்ளை பெற்ற பெண்கள் எல்லோருக்கும் உதவி செய்ய என் தாயாரை அழைப்பார்கள்

என் தாயாருக்கு துணையாய் வாண்டு நானும் கூடச்செல்வேன்

என்னையும் குழந்தையாய் நினைத்து அவர்கள் பேசிக்கொள்வார்கள்

நான் விளையாடிக்கொண்டிருந்தாலும் என்னையும் அறியாமல்

என் மனதில் அவர்கள் பட்ட வலிகளும் அதற்கு என் தாய் செய்த வைத்தியமும் மனதில்  பதிந்திருக்கிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/3/21 Narayanan Kannan <nka...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Mar 21, 2011, 2:49:54 AM3/21/11
to mint...@googlegroups.com
தனிமைக்கே தலைப் பிள்ளையாகத் 
தவிட்டிற்கே விற்ற தாயாய்த் 
தலைப்பு நுனி மூடிச் சிரிக்கும் 
கலை வல்ல காளி! 

உன்னைத் தவிட்டுக்குதான் வாங்கினேன் என்று குறும்பாய்ச் சிரிக்கும் தாயின் முகம் கண்ணில் தெரிகிறது
நன்றி பழைய இனிய நினைவுகளைக் கிளறி விட்டதற்கு

”நிறைய இடைவெளிகள் விட்டால் அதையெல்லாம் சதுரம் சதுரமாக ஜன்னல் போல் காட்டுமே என்பதால் செய்யவில்லை. 
:-)) ”


குறும்பு அதிகம் உமக்கு 

அன்புடன்
தமிழ்த்தேனீ



அன்புடன்
தமிழ்த்தேனீ



2011/3/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
330.gif

Tthamizth Tthenee

unread,
Mar 21, 2011, 2:55:07 AM3/21/11
to mint...@googlegroups.com
கிராமப்புறத்தில் பால் வடியும் தாய்மார்கள் பிற பிள்ளைகளுக்கு முலைப்பால் தானம் செய்வது வழக்கு. கோகுலத்தில் அது நிச்சயம் நடந்திருக்கும்.
 
 
ஆஹா கிராமப்புறத்தில் எத்தனை யசோதைகள்

பெற்றது தேவகி அவளுக்கு கனகமுலை சுரக்கும்

 யசோதைக்கு பால் சுரந்திருக்குமா 

நிறைய வா ய்ப்பு கோகுலத்தில் கண்ணனுக்கு 


கோபிகா ஸ்த்ரீகள் தேவகிகளே 




அன்புடன்
தமிழ்த்தேனீ



2011/3/21 Narayanan Kannan <nka...@gmail.com>
கிராமப்புறத்தில் பால் வடியும் தாய்மார்கள் பிற பிள்ளைகளுக்கு முலைப்பால் தானம் செய்வது வழக்கு. கோகுலத்தில் அது நிச்சயம் நடந்திருக்கும்.
 
க.>

330.gif

N. Kannan

unread,
Mar 21, 2011, 7:33:32 AM3/21/11
to mint...@googlegroups.com
அவர்கள் மட்டுமா!
 
பூதணை எதற்கு வந்தாள் என்கிறீர்கள்?
 
முலைப்பால் கொடுக்கத்தான்!! இது எல்லார் பாலும் சாப்பிட்டுவிட்டு கொழுத்ததுதான் :-))
 
க.>

2011/3/21 Tthamizth Tthenee rkc...@gmail.com

Tthamizth Tthenee

unread,
Mar 21, 2011, 7:55:58 AM3/21/11
to mint...@googlegroups.com
பூதணை கொடுத்தது உயிர்ப்பால்

ஆனால் கண்ணன் உண்டது முலைப்பால்

அன்புடன்
தமிழ்த்தேனீ





2011/3/21 N. Kannan <navan...@gmail.com>
--

selva kumaran

unread,
Mar 21, 2011, 8:01:44 AM3/21/11
to mint...@googlegroups.com

"பூதணை கொடுத்தது உயிர்ப்பால்

ஆனால் கண்ணன் உண்டது முலைப்பால்"


என்ன என் அறிவு வளர்ச்சி ரிவர்ஸில் போகிறதா? முன்பெல்லாம்  பெரிய பெரியத் தத்துவங்கள்தான் புரியாது. இப்போது திரு. தமிழ்தேனீ  எளிமையாக எழுதியதே புரியவில்லையே!


2011/3/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

N. Kannan

unread,
Mar 21, 2011, 8:03:43 AM3/21/11
to mint...@googlegroups.com
அடடா! இன்று என்ன நடக்கிறது இங்கு!!

தாங்கள் பாவத்தில் ஆழ்வாரை விஞ்சி நிற்கிறீர்கள்!

பூதணை தந்தது உயிர்ப்பால் என்று இதுவரை நான் கேட்டதில்லை. என்ன கவித்துவம்!

கண்ணன்

2011/3/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

--

selva kumaran

unread,
Mar 21, 2011, 8:07:51 AM3/21/11
to mint...@googlegroups.com
"பூதணை தந்தது உயிர்ப்பால் என்று இதுவரை நான் கேட்டதில்லை. என்ன கவித்துவம்!"

உண்மையில் பூதனை தந்தது முலைப்பால்; அவனெடுத்துக் கொண்டதல்லவா உயிர்ப்பால்! மாற்றிச் சொல்கிறீர்களே?!

2011/3/21 N. Kannan <navan...@gmail.com>

selva kumaran

unread,
Mar 21, 2011, 9:03:11 AM3/21/11
to mint...@googlegroups.com

"கொஞ்சம் இந்த சிரமத்தையெல்லாம் கவிதையின் உள்ளே போவதற்கு எடுத்துக் கொள்ளக் கூடாதா? 
:-)"

:)))))))





2011/3/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கொஞ்சம் இந்த சிரமத்தையெல்லாம் கவிதையின் உள்ளே போவதற்கு எடுத்துக் கொள்ளக் கூடாதா? 
:-)

(சரி கவிதையில் உள்ளே புக ஆர்வம் இல்லையென்றால் 
வேறு வேலை பார்ப்போம்.) 


2011/3/21 N. Kannan <navan...@gmail.com>

கிருஷ்ணமூர்த்தி

unread,
Mar 21, 2011, 9:12:46 AM3/21/11
to மின்தமிழ்
கவிதை புரியாதபோதும், தத்துவம் பேசிக் கொஞ்சம் பயமுறுத்தும்போதும்
கவியரங்கம் வெறும் அரட்டை அரங்கமாகத் திரும்பிவிடும்!ஏனெனின் அது எளிது!
:-))))
---------------------------
இப்பல்லாம் கவிதை எழுதறப்பவே கூடவே
கோனார் நோட்சும் போட்டுடறது நல்லது!

கிருஷ்ணமூர்த்தி


On Mar 21, 6:03 pm, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> *"கொஞ்சம் இந்த சிரமத்தையெல்லாம் கவிதையின் உள்ளே போவதற்கு எடுத்துக் கொள்ளக்
> கூடாதா? *
> *:-)"
>
> **:)))))))**
>
> *
> 2011/3/21 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>

selva kumaran

unread,
Mar 21, 2011, 9:59:21 AM3/21/11
to mint...@googlegroups.com
திரட்டுப் பாலுக்கு காத்திருக்க வேண்டும்!  காத்திருந்தோம்!  கிடைத்து விட்டது!

2011/3/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


2011/3/21 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

கவிதை புரியாதபோதும், தத்துவம் பேசிக் கொஞ்சம் பயமுறுத்தும்போதும்
கவியரங்கம் வெறும் அரட்டை அரங்கமாகத் திரும்பிவிடும்!ஏனெனின் அது எளிது!
:-))))
---------------------------
இப்பல்லாம் கவிதை எழுதறப்பவே கூடவே
கோனார் நோட்சும் போட்டுடறது நல்லது!

கிருஷ்ணமூர்த்தி




ஓ அதுதான் பிரச்சனையா! சரி சரி! நமது செல்வக் குமரன் இருக்கிற சபையில் விரிவான நோட்ஸ் தேவையிருக்காது என்று நினைத்து விட்டுவிட்டேன். மன்னிக்கவும். விளக்கம் தந்துவிடுகிறேன். 

விண்ணின் விழி என்பது பரம்பொருள். 

தானே தன்னைக் காட்டுவதாகவும், தானே தன்னைக் காண்பதாகவும், தன்னைக் காணத் தானே விழியாக நிற்பதாகவும் இருக்கும் அந்த பரம்பொருள் விண்ணின் விழி. 

ஜகத் ஏக சக்ஷுஷே! என்கிறது சாத்திரம். 

இதை மனத்தில் கொண்டுதான் 

“கண்ணும் ஆருயிரும் என நின்றாள் 
காளித்தாயிங்கு எனக்கருள் செய்தாள்” 

என்று பாடுகிறார் பாரதி. 

அந்த விழியில் இழிந்த கண்ணீர் என்பதுதான் உயிரூக்கம். 

என்ன உயிரூக்கம்? 

தன்னை விட்டுப் பிரிந்த இந்த உயிர் மீண்டும் தன்னை நோக்கி என்று வருமோ என்று பரம்பொருளின் ஏக்கம், தயை, இரக்கம், கருணை. 

இது ஆத்மாவிற்குள் புகுந்து இயக்கவிலையேல் பின் இந்த ஜீவன் என்றுதான் பரம்பொருளை நோக்கித் திரும்பும்? 

இந்த பகவத் கிருபை, பரம்பொருளின் ஸ்வாபாவிக தயை இந்த தயை, அருள் ஒரு ஜீவனிடம் பயன் விளைக்கத் தொடங்கியது என்றால் அங்கு வெறுமை கவ்வும். 

அந்த நிலையைத் தாங்குவது கடினம். 

இந்த புதிரான அருளியக்கம் எப்படி வாழ்வில் இயங்குகிறது என்பது நம் கையடக்கத்தில் இல்லை. 

பூசும் வெறுமையெல்லாம் அருளின் சங்கேதம் என்று பொருளுமன்று. 

This suspended suspense is inexplicable; patience is the only guide. 

ஆனால் பைம்புனல் என்று கூறப்பட்டிருக்கிறதே? எனில் அது பின்னர் அருள் சாதனையானபின், பாலை வறட்சியைக் கடந்தபின் பின்னோக்கில் காணுங்கால் தோன்றும் யதார்த்தக் காட்சி. 

ஆனால் இந்த அகங்காரம் சும்மா விடுமா? 
அந்த அருட்புனலில் தன்னால் உறிஞ்சியது மட்டும் சாகசம் என்று அது ஆடும் வித்தகம் இருக்கிறதே -- அதன் விளைவு -- அனைத்தும் பகற்கனா! 

இந்த இரட்டை ஆட்சியால் விளைவது அயிர்ப்பும் மாறி உயிர்ப்பும். 

இதில் கைகண்ட பலன் அயர்வு. 

(தொடர்வேன்)

   


 

On Mar 21, 6:03 pm, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> *"கொஞ்சம் இந்த சிரமத்தையெல்லாம் கவிதையின் உள்ளே போவதற்கு எடுத்துக் கொள்ளக்
> கூடாதா? *
> *:-)"
>
> **:)))))))**
>
> *
> 2011/3/21 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
> > கொஞ்சம் இந்த சிரமத்தையெல்லாம் கவிதையின் உள்ளே போவதற்கு எடுத்துக் கொள்ளக்
> > கூடாதா?
> > :-)
>
> > (சரி கவிதையில் உள்ளே புக ஆர்வம் இல்லையென்றால்
> > வேறு வேலை பார்ப்போம்.)

--
"

Tthamizth Tthenee

unread,
Mar 21, 2011, 10:08:50 AM3/21/11
to mint...@googlegroups.com

நன்றாக காயக் காத்திருந்தால்தான் திரட்டுப் பால் கிடைக்கும் 

கிடைத்தது


அன்புடன்
தமிழ்த்தேனீ

rajam

unread,
Mar 21, 2011, 10:52:20 AM3/21/11
to mint...@googlegroups.com, N. Kannan, Mohanarangan V Srirangam
எனக்கு இங்கே ஒரு சொல்லாட்சி நெருடல் -- "முலைக் கடுப்பு"
சாதாரணமாக ... "கடுப்பு" என்ற சொல் negative பொருள் தருவது. ஒப்புமை காண்க: "நீர்க் கடுப்பு" "வயிற்றுக் கடுப்பு"
மனிதர்களுக்கும் "கடுப்பு" உண்டாகும்.
எதனால் கடுப்பு உணர்ச்சி உண்டாகிறதோ அது வெளியே தள்ளப்படும்போது கடுப்பு நீங்குகிறது. வெளியேறிய பொருள், அதாவது கடுப்பிற்குக் காரணமானது, நல்ல பொருள் இல்லை. அது வெளியே தள்ளப்படவேண்டியது. துன்பம் தருவது. பிறருக்குப் பயன்படாதது.
"முலைக் கடுப்பாலே தரையிற் பீச்சுவாரைப் போலே" என்று ஈடு (1, 1, 1,) சொல்கிறது. அங்கேயும் ... முலைக் கடுப்பினால் பீச்சப்படும் சரக்கு ("பால்") தரையில் போகும் என்ற பொருளே கிடைக்கிறது; 'அருந்துவதற்கு' என்று தெரியவில்லை.
அப்படி இருக்கும்போது ... இந்தக் கவிதையில் ... அருளையும் முலைக்கடுப்பையும் தொடர்பு படுத்துவது எனக்கு ஒத்துவரவில்லை. அவ்வளவே.
இங்கே என் தனி அனுபவம் சொல்லத் தேவையில்லை. ஆனாலும் என் தோழியிடமும் கேட்டு உறுதி செய்துகொண்டேன். நாங்கள் "முலைக் கடுப்பு" என்ற வழக்கைப் பயன்படுத்தியதே இல்லை. தாய்க்குப் பால் கட்டிய நேரத்திலும், கட்டிய பாலை வெளியேற்றும்போது அதைக் குழந்தைக்குக் கொடுப்பதில்லை.
இத்துடன் இந்த இழையில் என் பங்கு முடிகிறது. பிற பெண்கள் யாரும் எழுதாததால் குறுக்கிட்டேன். கவிதைப் போக்கிற்கு இனி என் குறுக்கீடு இருக்காது! :-) :-) :-)
அன்புடன்,
ராஜம்

On Mar 21, 2011, at 5:59 PM, Mohanarangan V Srirangam wrote:

கொஞ்சம் இந்த சிரமத்தையெல்லாம் கவிதையின் உள்ளே போவதற்கு எடுத்துக் கொள்ளக் கூடாதா? 
:-)

(சரி கவிதையில் உள்ளே புக ஆர்வம் இல்லையென்றால் 
வேறு வேலை பார்ப்போம்.) 


2011/3/21 N. Kannan <navan...@gmail.com>

rajam

unread,
Mar 21, 2011, 12:22:22 PM3/21/11
to mint...@googlegroups.com, N. Kannan, Mohanarangan V Srirangam
"ணங்" -- ஒரு குட்டு! ஒரு திருக்கு! எதற்கா?

இப்படிக் கோபித்துக் கொண்டு போனால் யாருக்கு லாபம்? 

இப்படிச் சொன்னதுக்கு! எனக்கென்ன கோபம்? எதற்கு? ஒரு கோபமும் இல்லை!

நான் எங்கேயும் போகவில்லை; இங்கேயே இருக்கிறேன். இணைய வசதிக் குறைவால் முடிந்தபோது எழுதுகிறேன். ஆனால் மோகனின் எல்லாப் படைப்புக்களையும் படிப்பேன்.
அன்புடன்,
ராஜம்

On Mar 21, 2011, at 8:35 PM, Mohanarangan V Srirangam wrote:



2011/3/21 rajam <ra...@earthlink.net>

எனக்கு இங்கே ஒரு சொல்லாட்சி நெருடல் -- "முலைக் கடுப்பு"
சாதாரணமாக ... "கடுப்பு" என்ற சொல் negative பொருள் தருவது. ஒப்புமை காண்க: "நீர்க் கடுப்பு" "வயிற்றுக் கடுப்பு"
மனிதர்களுக்கும் "கடுப்பு" உண்டாகும்.
எதனால் கடுப்பு உணர்ச்சி உண்டாகிறதோ அது வெளியே தள்ளப்படும்போது கடுப்பு நீங்குகிறது. வெளியேறிய பொருள், அதாவது கடுப்பிற்குக் காரணமானது, நல்ல பொருள் இல்லை. அது வெளியே தள்ளப்படவேண்டியது. துன்பம் தருவது. பிறருக்குப் பயன்படாதது.
"முலைக் கடுப்பாலே தரையிற் பீச்சுவாரைப் போலே" என்று ஈடு (1, 1, 1,) சொல்கிறது. அங்கேயும் ... முலைக் கடுப்பினால் பீச்சப்படும் சரக்கு ("பால்") தரையில் போகும் என்ற பொருளே கிடைக்கிறது; 'அருந்துவதற்கு' என்று தெரியவில்லை.
அப்படி இருக்கும்போது ... இந்தக் கவிதையில் ... அருளையும் முலைக்கடுப்பையும் தொடர்பு படுத்துவது எனக்கு ஒத்துவரவில்லை. அவ்வளவே.
இங்கே என் தனி அனுபவம் சொல்லத் தேவையில்லை. ஆனாலும் என் தோழியிடமும் கேட்டு உறுதி செய்துகொண்டேன். நாங்கள் "முலைக் கடுப்பு" என்ற வழக்கைப் பயன்படுத்தியதே இல்லை. தாய்க்குப் பால் கட்டிய நேரத்திலும், கட்டிய பாலை வெளியேற்றும்போது அதைக் குழந்தைக்குக் கொடுப்பதில்லை.
இத்துடன் இந்த இழையில் என் பங்கு முடிகிறது. பிற பெண்கள் யாரும் எழுதாததால் குறுக்கிட்டேன். கவிதைப் போக்கிற்கு இனி என் குறுக்கீடு இருக்காது! :-) :-) :-)
அன்புடன்,
ராஜம்



அக்கா! தாங்கள் காட்டியிருக்கும் ஈடு பகுதியே என் மனத்தில் இருப்பது. 

மேலும் தாங்கள் கவனப் படுத்தியிருக்கும் இந்த அம்சமே கவிதையின் தொனிப் பொருளாய்ப் பின்னர் வரும். 

சற்றே அவகாசம் தரக் கூடாதா? இப்படிக் கோபித்துக் கொண்டு போனால் யாருக்கு லாபம்? 

ஆனால் நஷ்டம் எனக்கல்லவோ! 

பொதுவாகச் சொன்னதைத் தங்களுக்கு என்று கொள்ளலாமா ? 

அப்புறம் காதைத் திருகும் அக்கா உரிமையெல்லாம் வெறும் போலியா? 

கொஞ்சம் பொறுத்தருள்க. 

N. Ganesan

unread,
Mar 21, 2011, 5:35:34 PM3/21/11
to மின்தமிழ்

On Mar 21, 7:03 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> அடடா! இன்று என்ன நடக்கிறது இங்கு!!
>
> தாங்கள் பாவத்தில் ஆழ்வாரை விஞ்சி நிற்கிறீர்கள்!
>
> பூதணை தந்தது உயிர்ப்பால் என்று இதுவரை நான் கேட்டதில்லை. என்ன கவித்துவம்!
>
> கண்ணன்
>

ஏன் பலர் பூதணை என்று எழுதுகிறீர்கள்?

”பூதனை” தான் சரி.

கணேசன்


> 2011/3/21 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>:


>
>
>
>
>
> > பூதணை கொடுத்தது உயிர்ப்பால்
> > ஆனால் கண்ணன் உண்டது முலைப்பால்
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ
>

> > 2011/3/21 N. Kannan <navannak...@gmail.com>


>
> >> அவர்கள் மட்டுமா!
>
> >> பூதணை எதற்கு வந்தாள் என்கிறீர்கள்?
>
> >> முலைப்பால் கொடுக்கத்தான்!! இது எல்லார் பாலும் சாப்பிட்டுவிட்டு
> >> கொழுத்ததுதான் :-))
>
> >> க.>
>

> >> 2011/3/21 Tthamizth Tthenee rkc1...@gmail.com


>
> >>> கோபிகா ஸ்த்ரீகள் தேவகிகளே
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to
> >> visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send


> >> email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our

> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post


> > to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>

> Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Mar 21, 2011, 6:03:32 PM3/21/11
to மின்தமிழ்

On Mar 20, 6:43 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/3/20 கிருஷ்ணமூர்த்தி <krishn...@gmail.com>:

இந்த இழை நியூ யார்க் மெட் ம்யூஸியத்தில் உள்ள
யசோதை பால்புகட்டும் க்ருஷ்ண விக்கிரகத்தை
நினைவுக்குக் கொணர்கிறது. சோழர்களின் ஒரு மாஸ்டர்பீஸ்!

http://www.flickr.com/photos/lao_ren100/4010290834/

http://www.metmuseum.org/toah/works-of-art/1982.220.8

இடதுபுறம் இருக்கும் 3 சிற்றோவங்களை (ஐக்கான்ஸ்) சொடுக்கவும்.

-------------

நாரை விடுதூது -

அஞ்சிறைய மடநாராய்! அளியத்தாய்! நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆஆஎன்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்ந்தார்க்குஎன் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டால் என்செயுமோ

ஈட்டின் விளக்கவுரையைப் பார்க்கலாம்: அஞ்சிறை -
'அம் சிறைய- குழந்தை தாயின் உறுப்புகள் எல்லாம்கிடக்க, மார்பிலே வாய்
வைக்குமாறு போன்று, பறப்பதற்குச் சாதனமான சிறகிலே முற்படக் கண்
வைக்கிறாள்..நீர் பாய்ந்த பயிர் போன்று, ஒன்றற்கு ஒன்று கலவியால் பிறந்த
மகிழ்ச்சி வடிவிலே தொடை
கொளலாம்படி( அறியலாம்படி) இருக்கின்றதாதலின், 'அம் சிறை ' என்றார்.

குழவிக்கு தாயின் பாற்கொங்கை! அதுபோல் நாரைக்கு சிறப்புறுப்பு அஞ்சிறை!

நா. கணேசன்

N. Kannan

unread,
Mar 21, 2011, 6:49:55 PM3/21/11
to mint...@googlegroups.com
2011/3/22 N. Ganesan <naa.g...@gmail.com>:
> http://www.flickr.com/photos/lao_ren100/4010290834/
>

இதற்கு ஒரு பெரியாழ்வார் திருமொழி இருக்கிறது ;-)

க.>

N. Ganesan

unread,
Mar 21, 2011, 7:26:16 PM3/21/11
to மின்தமிழ்

On Mar 21, 5:49 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/3/22 N. Ganesan <naa.gane...@gmail.com>:


>
> >http://www.flickr.com/photos/lao_ren100/4010290834/
>
> இதற்கு ஒரு பெரியாழ்வார் திருமொழி இருக்கிறது ;-)
>
> க.>

இருமலைபோல் எதிர்ந்தமல்லர் இருவரங்கம் எரிசெய்தாய்!* உன்
திருமலிந்து திகழ்மார்வு தேக்கவந்து என்னல்குலேறி*
ஒருமுலையை வாய்மடுத்து ஒருமுலையை நெருடிக்கொண்டு*
இருமுலையும் முறைமுறையா ஏஙகிஏங்கி இருந்துணாயே. (8)

http://ta.wikibooks.org/wiki/2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_-_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D

Geetha Sambasivam

unread,
Mar 21, 2011, 10:20:37 PM3/21/11
to mint...@googlegroups.com
நன்றி கணேசன், நாரை விடு தூதின் இந்தப்பாடல் அருமை.  சிற்பமும் உயிர்த்துடிப்புடன் காண முடிகிறது.   சிற்ப அதிசயங்கள் புரிந்த சோழர்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்.

2011/3/22 N. Ganesan <naa.g...@gmail.com>
It is loading more messages.
0 new messages