முடிந்தது வள்ளுவர் பற்றிய விவாதம்: சுபமங்களம்

1,321 views
Skip to first unread message

செல்வன்

unread,
Nov 23, 2017, 12:44:33 AM11/23/17
to செல்வன்
இப்படி வாழும் வரலாறாக வள்ளுவ சாதியினர் இருக்க, வள்ளுவர் சமணர் என செய்யும் காமடி இத்துடன் முடிவுக்கு வருகிறது.

வள்ளுவர் இந்து

சாதி வள்ளுவசாதி

இயற்பெயர் நாயனார்

தொழில்: சோதிடம், அரசனுக்கு அறிவுரை கூறல் (ஆக பழங்காலத்தில் மந்திரியாக இருந்திருக்க வாய்ப்பு அதிகம், குற்ளில் இருக்கும் சோதிடகுறிப்புகள்- திங்களை பாம்பு கொண்டற்று- நினைவுக்கு வருகிறதா?. ரைட்டு)

சுபமங்களம்

-----


தமிழ்நாட்டில் வள்ளுவன் எனும் சாதியினர் ஜோதிடம் கணித்துச் சொல்லும் தொழிலைச் செய்து வருகின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


வார்ப்புரு:வள்ளுவன் {{வள்ளுவன் எனும் சாதி தமிழகத்தின் மிகப் பழமையான சாதிகளுள் ஒன்று. போகர் சித்தர் தனது போகர் ஏழாயிரம் என்ற நூலில் அவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் இருந்த சாதிகளின் பெயர்களை பட்டியலிட்டு உள்ளார். அச் சாதிகளில் வள்ளுவன் சாதியையும் குறிப்பிட்டிருக்கிறார்.}} {{ திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் வள்ளுவன் சாதியில் தோன்றியவர் என்பதாலும், அவரது இயற்பெயர் அறியமுடியவில்லை என்பதாலும், அவர் தமது சாதிப் பெயரான வள்ளுவன் என்ற பெயரில் குறிப்பிடப் படுகிறார் என்பது ஆய்வாளர்களின் கருத்து.}}

வார்ப்புரு:முன்னோர்களின் வாய்மொழி {{வள்ளுவன் சாதியில் சிவ கோத்திரத்தார் வகையினர் தங்களது வள்ளுவன் சாதி ஐந்து சகோதரர்களைக் கொண்டு உருவானதாக தங்களது முன்னோர்களால் வழிவழியாக சொல்லப் பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.}} அதன் படி {{சகோதரர்களில் முதலாமவர் கச்சக் குலாவன், இரண்டாமவர் காக்ய நாய்க்கன், மூன்றாமவர் ஓடிவந்த செல்வன், நான்காமவர் பாலவராயன், ஐந்தாமவர் கூவம் சம்பந்தன். இந்த ஐந்து முன்னோர்களால் உருவாக்கப்பட்ட இச்சாதியில் இவ்வைந்து பெயர்களே தலைமை கோத்திரங்களாக இருக்கின்றன. மற்றவை கிளைக் கோத்திரங்கள். மற்ற சாதியினரைப் போன்றே இவர்களும் ஒரே கோத்திரத்தில் பெண் கொடுப்பது எடுப்பது இல்லை.}} {{இவர்கள் தங்களை நாயனார் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். நாயனார் என்பது இச்சாதியினருக்கான பட்டம் என்று சொல்லப் படுகிறது. திருவள்ளுவர் நாயனார் என்று குறிப்பிடப்படுவதால் இவர்களும் தங்களை நாயனார் என்று அழைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.}} {{வள்ளுவன் சாதியில் சைவம், வைணவம் என இரு பிரிவினர் உள்ளனர். தற்போது இருபிரிவினரும் தங்களுக்குள் திருமணத்தொடர்புகள் கொண்டிருக்கிறார்கள்.}}

வார்ப்புரு:தொழில் {{தமிழகம் முழுவதும் வள்ளுவன் சாதியினர் ஒரே பெயரில் அழைக்கப்படுகிறார்கள் என்றாலும் சில இடங்களில் வேறு பெயர்களிலும் அழைக்கப் படுவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் இச்சாதியினர் தெற்கத்தியர், வடக்கத்தியர் என பிரிந்தே கிடக்கிறார்கள். தங்களை இன்னார் என்று தெரியப் படுத்திக் கொள்வதிலும் இவர்களுக்கு தயக்கம் இருப்பதாகவே தெரிகிறது.}} {{இவர்களில் பெரும்பாலோர் ஜோதிடத் தொழில் செய்து வருகிறார்கள். மேலும் விவசாயம், வேளாண்மை, நாட்டு வைத்தியமும் செய்து வருகிறார்கள்.}} {{இன்று இளைய தலைமுறையினர் போதிய கல்வி அறிவைப் பெற்றிருக்கின்றனர். காலச்சூழலுக்கு ஏற்ப அரசு மற்றும் தனியார் துறைகளில் பலர் பணியாற்றி வந்தாலும், பொருளாதாரத்தில் இவர்களில் பெருபான்மையோர் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறார்கள்.}} வார்ப்புரு:வரலாறு வள்ளுவன் இனத்தைப் பற்றிய வரலாறு முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. அங்கு இங்கு என்று கிடைத்த ஆய்வுகளின் மூலமாக கிடைத்த செய்தி}} {{தொன்மையான இச்சாதியினர் பழங்காலத்தில் அரசர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்துள்ளார்கள். அனைத்து விதமான நற்காரியங்களுக்கும் நேரம் காலத்தைக் கணித்துச் சொல்லும் அரசாங்க ஜோதிடர்களாகவும், அரசர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.}} {{கேரளாவில் உள்ள வள்ளுவநாடு இச்சாதியினர் பெற்றிருந்த பெருமைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.}}


--

செல்வன்

nkantan r

unread,
Nov 23, 2017, 4:54:38 AM11/23/17
to மின்தமிழ்
வாழ்க சாதீயம்.

சதுர்வர்ணம் மயாஸ்ருஷ்டிம் குணகர்ம விபாஜக!

rnk

Rathinam Chandramohan

unread,
Nov 26, 2017, 1:53:21 PM11/26/17
to mint...@googlegroups.com
Arivudaiyar Avathu Arivar...Only Curiosity. and Fun.....Even in 21 st Century the information about any person is incomplete without Caste Dimension. Even Poisonous compounds needed its Colour and Taste in Text books to address curiosity and to be passed on to next gen. 22 nd Century may witness research on caste and caste system itself. Min Tamil will aid them. Nice sharing and lots of Probability and logical possibility that this may be correct.

"Have a great Day.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
Inner Grace is better than handsome face

“To see a world in a grain of sand,
And a heaven in a wild flower,
To hold infinity in the palm of your hand,
And Eternity in an hour.”
-----From “Auguries of Innocence” by William Blake

Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Nov 28, 2017, 8:51:56 AM11/28/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
வள்ளுவன் என்ற சாதியைச் சார்ந்தவர் திருவள்ளுவர் என்பதற்குச் சான்றுகள் ஏதுமில்லை. நாவலர் சோமசுந்தரபாரதியார் விரிவாக எழுதினார்.
வள்ளுவன் என்ற தமிழ்ச்சொல் வள் வார் முரசு என்பன போன்ற சங்க இலக்கியத் தொடர்களில் உள்ள “வள்” வளைத்தல் என்ற சொல்லில் 
பிறக்கும். முரசின் தோலை (membrane) இறுக்கி வாரால் கட்டும் தொழில். யானை மீதிருந்து முரசு இயக்கும் வள்ளுவன் பற்றிக்
கொங்குவேளிர் செய்த பெருங்கதை போன்றவற்றில் காணலாம்.

ஸ்ரீவல்லபன் என்ற வடசொல் திருவள்ளுவன் என்று தமிழில் தற்பவம் ஆகும். ஆப்பில் என்ற பழப் பெயர் ஆப்பிள் என்று எழுதுகிறோம்.
ஆர்ய மொழிகளின் லகரம் தமிழில் ளகரம் என ஆதல் உண்டு. திருவள்ளுவரைத் தேவர் எனப் போற்றிய சமண சமயத்தார்,
அவரது திருவடிகளை அமைத்து தொழுதுவந்தனர். உ-ம்: ஸ்ரீபாதம் அமைந்திருந்த மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்.
கிறிஸ்துவ மிஷனரிகள் மும்முரமாக தமிழர்களை கிறித்துவர் ஆக்கும் முயற்சிகளில் காலனீய ஆட்சி, சர்ச் பணம், அதிகாரம்
கொண்டு இயங்கியபோது திருவள்ளுவரைச் சாதி குறிப்பிட்டுப் பரப்பலாயினர். உ-ம்: ஜி. யு. போப் பாடல். 
ஆனால், திரு.வி.க., நாவலர், ... போன்றோர் இதையெல்லாம் ஏற்றதேயில்லை. ஸ்ரீவல்லபதேவரின் (திருவள்ளுவரின்) ஜாதி
என்ன என்று தெரியாது. ஆனால், அவர் உழவுத்தொழிலைப் போற்றும் முறையைப் பார்த்தாலும்,
திருத்தக்கதேவர், தோலாமொழித்தேவர், கொங்குவேளிர், .... போன்ற வேளிர் குலம் எனக் கொள்ளலாம்.
அதையே நாவலர் போன்றோர் எழுதியுள்ளனர். இளங்கோ அடிகள் தாம் “வஞ்சி மூதூர்” என தண்ணான்பொருனை எனப்படும்
ஆற்றின் கரையில் உள்ள பழைய சேரர் தலைநகரை வர்ணிப்பவர். தெய்வம் தொழாள் என்ற குறளையும்
சிலம்பில் பயன்படுத்துகிறார் அடிகள். திருவள்ளுவர் இளங்கோ அடிகள் போல, க்ஷத்ரிய வம்சத்துப் பிறந்து
துறவு மேற்கொண்ட அடிகள் எனலாம்.

இளம்பூரண அடிகள். அடிகள் என்பது துறத்தலான். அ எழுத்தை முதலில் வைத்து, தொல்காப்பியர்
-ன் என்ற றன்னகரத்தை தமிழின் அக்கரமாலையில் கடைசியில் வைப்பதற்குக் காரணமுண்டு.
-ன் என்னும் ஈறு ஆண்பால்பெயருக்கு ஆனது. ஆண்களுக்கு வீடுபேறு என்பது சமணக் கோட்பாடு.
அதேபோல, திருவள்ளுவரும் -ன் எழுத்துக்கொண்டே திருக்குறளை முடிக்கிறார்.

னகர ஈற்று விளக்கம்: ஆண்களுக்கே வீடுபேற்று உரிமை!

தமிழ் எழுத்துகளுள் னகரம் இறுதி எழுத்தாகும். னகரத்தை இறுதியிலே வைத்ததற்குக் காரணம் காட்டுகிறார் இளம்பூரணர் என்ற உரையாசிரியர்.

னகரம் வீடுபேற்றிற் குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது
(தொல், எழுத்து 1. இளம்பூரணர் உரை)

ஆண்பிறவி எடுத்து, துறவு பூண்டு தவத்தினைச் செய்து வினைகளை வென்றால்தான் வீடுபேறு அடைய முடியும் என்பது சமணர்தம் கோட்பாடு. அதனைக் குறிக்கவே ஆண்பால் ஈற்று எழுத்தாகிய னகர மெய்யை மொழி இறுதியில் தொல்காப்பியர் வைத்தார் என்பது இளம்பூரணர் கருத்து. இளம்பூரணரும் சமணர் என்பதால் இயல்பாக இக்கருத்தை ஏற்றுக் கொண்டு விளக்கம் தருகிறார்.

தொல்காப்பிய உரைகளில் மிகச் சிறந்த உரை இளம்பூரண அடிகள் இயற்றியது. தொல்காப்பியத்தின் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களுக்கும் கிடைத்துள்ளது. தொல்காப்பியத்துக்கு எழுந்த முதல் உரை இளம்பூரணம். தமிழ்நாடு என்று முதலில் அழைத்தவர் இளம்பூரணவடிகளே: செப்பும் வினாவும் வழுவாது வருவதற்கு, ’நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்’ என்பதை உதாரணங் காட்டுகின்றார் (சொல்-13). ’கொங்கத்து உழவு, வங்கத்து வணிகம்’ என்று அத்துச் சாரியைக்கு உதாரணம் கூறுகிறார். உழவு என்றால் கொங்குநாட்டிலேயும், வணிகம் என்றால் கடல்கடந்து கப்பலால் செய்வதும் ஆகும் என்பது சிறப்பல்லவா?

அவரது எழுத்தால் அவர் சமணத் துறவி என்பர் தமிழறிஞர். ”உரையாசிரியர் துறவுபூண்ட பெரியோரென்பது அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரத்திலே “உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள்” எனக் கூறுவதாலும் “அடிகளென்றது துறத்தலான்” என அவரே அடிகள் என்ற சொற்குப் பொருள் உரைத்தமையாலும் தெளிவாகின்றது. இனி, நன்னூலியற்றிய பவணந்தி முனிவர், தம் சூத்திரங்கள் சிலவற்றை, இளம்பூரணவடிகள் உரைக்கருத்தைத் தழுவியே இயற்றிப் போந்தமையால், பவணந்தியாருக்கு முந்தியவர் உரையாசிரியர் என்று ஊகிக்க இடம் இருக்கிறது.” (அபிதான சிந்தாமணி, பக். 220).

“ஒல்காப் புலமை தொல்காப் பியத்துள் 
உளங்கூர் கேள்வி இளம்பூர ணர்எனும் 
ஏதமில் மாதவர் ஓதிய உரை”
என்று சமணராகிய மயிலைநாதர் போற்றுகிறார்.

pg. 29, Tamil love poetry and poetics, Takanobu Takahashi
"iLampuRaNar was probably a Jaina scholar, living in the 12th Century AD. He wrote his commentary, the oldest extant, on the whole text of Tol., and it has fortunately come down to us intact. His style is simple, clear and lucid."

K. Zvelebil, The Smile of Murugan on Tamil literature of South India, 1973, pg. 134 "ILampUraNar. The first, and probably the best commentary is that of iLampUraNar. He fully deserves the title of uraiyaaciriyar, i.e. "The Commentator". His commentary has fortunately reached us in full. He was probably a Jaina scholar, living in the 11th or 12th century.

Ilampuranar's commentary shows a great deal of common sense and critical acumen. He obviously distrusted the tales connecting the mythical Akattiyar (Agastya) and the author of Tolkappiyam."

SInce Tiruvalluvar is a Jain & the Jaina tradition reveres him as a Jaina monk, & following them,
F. W. Ellis, Father of the theory of Dravidian Language Family (which has deep implications for India's
history, religion, society structure (e.g., caste) ), issued gold coin of Tiruvalluvar as a Jaina monk.

The process by which the Himalayas were formed is well understood in Science.
Plate Tectonics theory has been well analyzed from various angles in several Scientific disciplines.
Like Plate Tectonics theory, let me give you two examples from Linguistics, History, Philology, Archaeology
that give lots of insight for the formation of Indian society and its evolution in the last
4500 years.

(1) Aryan ingression and change of Indian languages (e.g., Dravidian) to form Sanskrit, Hindi etc.,
during the last 3000 years, For example, the word, gaurii as denoting the Indian bison as well as 
the great Goddess of Indic religions (Hindu, Jaina, ...)
      Kavari in Tirukkuṟaḷ and Sangam Texts:  
Dravidian word for Gauṛ bison and Tibetan yak

(2) The formation of caste system in India, unique in the World's history,
and its origins not only from the Aryan varNaashrama system, but also
what is in the Sangam texts. for example, the control of Sacred Power to afflict
(tAkkaNaGku) by pulaiyan, izicinan etc., explained by Nacchinarkkiniyar,
U. V. Swaminathaiyar, the great editor of Sangam anthology, G. L. Hart, ...

நா. கணேசன்

--

தேனீ

unread,
Nov 28, 2017, 9:26:47 PM11/28/17
to மின்தமிழ்
#திருவள்ளுவர் இளங்கோ அடிகள் போல, க்ஷத்ரிய வம்சத்துப் பிறந்து துறவு மேற்கொண்ட அடிகள் எனலாம்.#

இதற்கான ஆதாரம் எங்கே உள்ளது? போகிற போக்கில் ஏதாவது எழுதி வைப்பதாகும் இத்தகு கருத்து. 

# அவர் உழவுத்தொழிலைப் போற்றும் முறையைப் பார்த்தாலும், திருத்தக்கதேவர், தோலாமொழித்தேவர், கொங்குவேளிர், .... போன்ற வேளிர் குலம் எனக் கொள்ளலாம்.

"எனலாம்'; 'எனக் கொள்ளலாம்' என்பதெல்லாம்  கனாகாண்பது போல் அல்லவா உள்ளது! உழவு தொழில் செய்வது கூட நிலத்தில் வாழும் பூச்சிப்  புளுக்களுக்குத் தீங்கிழைக்கும் என்னும் மணப்பாண்மையைக் கொண்டிருந்தவர் ஜைனர். ஆதலால் உழவு என்பதை இரண்டாம்தர தொழிலாகவே போற்றினார் ஜைனர். அப்புறம் எப்படி இப்படிப்பட்ட கருத்தை முன் வைக்கின்றீர்?

மின் தமிழில் எழுதுவதற்கு தடையில்லைதான். ஆனால் அதற்காக வாயில் வந்ததையெல்லாம் வாந்தியெடுத்தால் பார்போருக்கும் படிப்போருக்கும்  வாந்திவரும்.

#ஆண்களுக்கு வீடுபேறு என்பது சமணக் கோட்பாடு#

சமணரில் பெண் துறவியரும் இருந்துள்ளதை தேவாரம் காட்டுகின்றதே!.

பெண்களுக்கு வீடுபேறு இல்லையென்று சமணம் கூறுமேயானால் வைதிக மத நெறி போன்று சமணமும் பெண்களைப் பிற்படுத்தியது என்று கூறலாமோ? சமணத்தில் இல்லாதததைத் தாங்களே எடுத்துக்கட்டிக் கொண்டு கூறிகின்றீர்களோ என்று எண்ண வேண்டியுள்ளது. 

தமிழில் 'அ' முதல் எழுத்தாகக் கொண்டு 'ன்' இறுதியாகக் கொண்டு முடித்தார் என்று கூறினாலும் ஏற்றுக் கொள்ளலாம்.    

#SInce Tiruvalluvar is a Jain & the Jaina tradition reveres him as a Jaina monk, & following them,
F. W. Ellis, Father of the theory of Dravidian Language Family (which has deep implications for India's
history, religion, society structure (e.g., caste) ), issued gold coin of Tiruvalluvar as a Jaina monk.#

சமணர் நூற்கருத்துக்களை ஆராய்ந்து பார்த்தால் அவர் சைவ வைணவ புராணக்கதைகளில் பரம்பொருளாகக் கூறப்படும் சிவன், விஷ்ணுவுக்கு  கூறப்படும் தன்மைகளைக் கவர்ந்து அவர்தம் சமய நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு அருகருக்கு மாற்றி ஏத்தி வைத்துள்ளதைக் காண முடிகின்றது. அதுபோல சமணர் தெற்கே வந்ததும் இங்குள்ள  நூற்கருத்துக்களை எடுத்தாண்டு அதை தம்முடையதென்று பரைசாற்றிக் கொள்வது புரியாத புதிர் அல்ல.

மேற்கத்திய அறிஞர் திருக்குறளில் கூறப்படும் மறுபிறவி, ஊழ், வினை போன்ற சமய கருத்துக்களை ஜைன மத கோட்பாடுகளோடும் சைவ சித்தாந்த கோட்பாடுகளோடும் ஒப்பிட்டு ஆய்ந்தது இல்லையே. அப்புறம் திருவள்ளுவர் என்பார் சமணரென்று அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எழுதுவது ஏன்? மேற்கத்தியர் ஏதோ ஒரு பார்வையில் ஆராய்ந்து அவர்தம் கருத்தைக் கூறினால் அது உண்மையாகி விடுமா?

தாங்களே வேதம் புகழும் வானோர் கோமான் இந்திரனைச் சமணர் தூற்றினார் என்று கூறினீர். ஆனால் அவர்களோ இந்திரன் ஐம்புலன் அடக்கம் பெற்றவர் என்று போற்றுகின்றனர். இம்முரண்பாட்டைச் சுட்டிக் காட்டி விளக்கம் கூறுமாறு கேட்டும் பதிலில்லை. மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டதுபோல் திருவள்ளுவர் என்பார் 'சமணர்' என்று கூறுவது நகைப்புக்குரியது.  

தாங்கள்  இப்படிப்பட்ட முரணான கருத்துக்களைத் தொடர்ந்து மின் தமிழில் பதிவதால், திருக்குறள் சமணர் நூல் அல்ல என்னும் எமது கருத்தை திருக்குறளில் காட்டப்படும் தக்க ஆதாரத்தோடு மீண்டும் தொடர்வேன்.

மு. கமலநாதன் 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Nov 29, 2017, 1:34:48 AM11/29/17
to mintamil
                                                                                                                                                  < ஸ்ரீவல்லபதேவரின் (திருவள்ளுவரின்) ஜாதி
என்ன என்று தெரியாது. ஆனால், அவர் உழவுத்தொழிலைப் போற்றும் முறையைப் பார்த்தாலும்,
திருத்தக்கதேவர், தோலாமொழித்தேவர், கொங்குவேளிர், .... போன்ற வேளிர் குலம் எனக் கொள்ளலாம்.
அதையே நாவலர் போன்றோர் எழுதியுள்ளனர். இளங்கோ அடிகள் தாம் “வஞ்சி மூதூர்” என தண்ணான்பொருனை எனப்படும்
ஆற்றின் கரையில் உள்ள பழைய சேரர் தலைநகரை வர்ணிப்பவர். தெய்வம் தொழாள் என்ற குறளையும்
சிலம்பில் பயன்படுத்துகிறார் அடிகள். திருவள்ளுவர் இளங்கோ அடிகள் போல, க்ஷத்ரிய வம்சத்துப் பிறந்து
துறவு மேற்கொண்ட அடிகள் எனலாம்.>கணேசன் அவர்கள்நேற்று  எழுதியது 
 
அம்மாடியோவ் !
அவரவர் விரும்பும் வகையில் அவரை ................ஒரு தலைசிறந்த சமூகச் சிந்தனையாளரை எல்லோரும் தம் சொந்தம் என்று கொண்டாடுவது அவர் மேல் நமக்கிருக்கும் பற்றையும் பாசத்தையும் காட்டுகிறது.இது இயற்கை தான் .ஆஹா!!!!!!!!!திருவள்ளுவர் எவ்வளவு உயர்ந்து நிற்கிறார்.!!!!!!!!!!!
(அவர் வள்ளுவர் குலத்தைச் சேர்ந்தவர் என்று பெயரிலேயே இருந்தாலும்) நம் ஆசைப்படி அவர் தமிழர்களின் பொதுச்சொத்து ஆகிப் போனவர்.
அதனால் எல்லோரும் கொண்டாடுவோம்.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி.
அவர் துறவி அல்லர்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா என்று ஓங்கி பொட்டிலடிப்பது போல்பேசுபவர் .
உலகம் பழித்ததை ஒழித்தால் போதும் என்று சொல்லும் நடைமுறைச் சிந்தனையாளர் .(practical thinker)  
தெய்வத்தைத் தொழாது கொழுநன் தொழுது எழும் பெண்ணின் சிறப்பைப் பேசியவர்.
தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற சொற்காத்த பிறகு பெண் சோர்வடையாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த குடும்பி.
தான் வாழ்ந்த ஆணாதிக்கச் சமுதாயத்தின் இல்லற வாழ்வில் தோய்ய்ய்ய்ந்தவர்.
அவரைப் போய் துறவி என்று குறைத்து மதிப்பிடக் கூடாது என்பது என் தாழ்மையான கருத்து..
கண்மணி  

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
Nov 29, 2017, 5:23:52 AM11/29/17
to mintamil

திருக்குறளில் ஊழ்


சிவனருள் இதழ் – டிசம்பர், 2017 – சித்தாந்த செல்வர் சைவ சிகாமணி முனைவர் நாகப்பன் ஆறுமுகம், மலேசியா.

சைவ மெய்யியல் வினை குறித்து விரிவாய்ப் பேசுகின்றது. வினையே பிறப்புக்குக் காரணமாகிறது. பிறந்த பின்னர் உயிரின் செயல்களுக்கு ஊழ்வினை காரணமாகிறது. ஊழ்வினை வழியே உயிர் செயலாற்றுகிறது. இப்பிறவிக்கான ஊழ் அனைத்தும் துய்த்துக் கழிந்த வினாடியில் உயிர் உடலை விட்டு வெளியேறுகின்றது.

தமிழர் வாழ்வியலில் ஊழ் தலைவிதி, தலையெழுத்து, கர்மம் என்ற சொற்களால் குறிக்கப்படுகின்றது.


ஊழ் வருவது எப்படி

பல பிறவிகளில் உயிர்கள் ஊழ்வினை வழியே செயலாற்றுகின்றன. செயல்கள் அழிந்து போகும். ஆனால் செயலின் விளைவுகள் அழிவதில்லை. அழியாத விளைவுகள் ஆகாமியம் அல்லது ஏறுவினை என்ற பெயரோடு பழவினை அல்லது சஞ்சித வினையில் போய்ச் சேருகின்றன. பழவினை பல பிறவிகளில் உயிர் செய்த வினையின் விளைவுகளின் தொகுதி. இந்த வினைத்தொகுதியிலிருந்து ஒர் சிரு பகுதியை எடுத்து ஊழ்வினையாகப் பக்குவம் செய்து உயிருக்கு ஊட்டுவான் இறைவன். இவ்வாறு பழவினை ஊழ்வினையாகிக் கழியும் என்றாலும் ஆகாமியத்தால் பழவினை பெருகும்.


பழவினை, ஆகாமியம், ஊழ்வினை ஆகிய மூன்றில் ஊழ்வினை நம் அறிவுக்கு எட்டுவதால் தலைவிதி என்னும் பெயரால் நாம் அதனை அறிந்து கொள்கிறோம். ஊழ்வினைக்குக் காரணம் பழவினை என்பதால் பழவினையின் அழிவைப் பற்றியே திருமுறை ஆசிரியர் பேசுகின்றனர். பழவினைகள் பாறும்வண்ணம்.... என்றார் மாணிக்கவாசகர். ஆனால், திருவள்ளுவர் பழவினை பற்றிப் பேசாமல் ஊழ்வினை பற்றியே பேசுகிறார். ஊழின் வழியே வாழ்க்கை நடப்பதால் ஊழ் பேசும் பொருளானது.

வகுத்தான்

பல கோடி உயிர்கள் பல கோடி பிறவிகளில் செய்த வினைகளின் விளைவுகள் அனைத்தும் மாயையில் ஒரே தொகுப்பாய்க் கிடக்கும். பிறவியைப் பெறுகின்ற ஒவ்வோர் உயிருக்கும் அந்தந்த உயிர்கள் செய்த வினையை நியதி என்னும் தத்துவத்தைக் கொண்டு வகுத்து ஊட்டுவதால் இறைவன் வகுத்தான் என்று சொல்லப் பட்டான். வினை சடம். அறிவற்ற பொருள். எனவே அது தானே வந்து அதைச் செய்த உயிரை அடையாது. ஆகவே வினையை உயிருக்கு ஊட்டுவதே இறைவனின் திருவருள்தான்.


இறைவன் வகுத்து அளித்ததே ஊழ். ஊழில் என்னென்ன இருக்கும்? பேறு, இழப்பு, இன்பம், துன்பம், பிணி, மூப்பு, சாவு. ஓர் உயிருக்கு வாய்க்கும் தந்தை முதல் தாய் முதலிய குடும்ப உறவுகள், நட்பு, மனைவி, மக்கள், செல்வம், கல்வி, புகழ் இப்படி அனைத்தும் பேறு என்பதில் அடங்கும். வாழுங்காலத்தில் நாம் பெற்றதை இழக்கிறோம். உறவுகள், பொருள், புகழ் கூட நம்மை விட்டுச் செல்கிறது. பெறுவதால் இன்பமும், இழப்பதால் துன்பமும் ஏற்படுகின்றன. வாழும் காலத்தில் பிணி வருகிறது. மூப்பு என்பது எவ்வளவு காலம் வாழப்போகிறோம் என்ற அளவு சாவு எப்படி வரும் என்பதும் ஊழில் திட்டமிடப் பட்டுள்ளது .இவை அனைத்தையும் நம் பழ வினையிலிருந்தே வகுத்து உயிருக்கு ஊட்டுகிறான் இறைவன்.


ஊழில் உள்ளதே வாழ்க்கை

நம் முயற்சியால் நாம் விரும்பிய அனைத்தையும் பெறலாம் என்று சிலர் பேசுவர். அப்படிப் பேசுகிறவரே தாம் விரும்பிய அனைத்தையும் பெற்றதில்லை என்பதே உண்மை. இதையும் வள்ளுவரே கூறுகிறார்.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது – 377


கோடி பணம் தேடிச் சேர்த்து வைத்தாலும் எதைத் துய்க்கலாம் என்று ஊழில் இருகிறதோ  அதை மட்டுமே துய்க்க முடியும். இந்த உண்மைகளை நாம் உலக நடையில் இயல்பாகக் காண்கிறோம். எனவே நம் முயற்சியால் அனைத்தும் பெறலாம் என்பதும் விரும்பிய அனைத்தையும் துய்க்கலாம் என்பதும் வெற்று உரையே ஆகும்.

முயற்சியும் ஊழ் வினையே!


முயற்சியும் ஊழ் வினையால் வருவதே என்பது வள்ளுவர் வாக்கு.


ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி – 371


ஊழ் ஆகூழ், ஆக்கம் தருகின்ற ஊழ் என்றும் போகூழ், இழப்பை ஏற்படுத்தும் ஊழ் என்றும் இருவகையாய்ச் செயல்படும். முயற்சியே ஆக்கம் தரும் என்று நாம் செயல்படும்போது ஆக்கம் தரும் ஊழ் துணையாக வேண்டும். மாறாக இழப்பைத் தரும் ஊழ் துணையாக  வருமானால் நம் முயற்சி பயன் தராது. அதுமட்டுமன்றி போகூழ் வந்தமையால் உள்ளதையும் இழக்க வேண்டி வரும். இதற்கு மாறாக ஆக்கம் கருதி நாம் முயற்சி செய்யும்போது ஆகூழ் துணை இருந்தால் எண்ணியது எளிதில் கைகூடும். எனவே ஆவதும் போவதும் ஊழின் வழியில் அன்றி வேறு அல்ல.


ஊழின் பெருவலி

நமது அறிவு, முயற்சி அனைத்தையும் மிஞ்சிய வலிமை உடையது ஊழ். ஊழைக் காட்டிலும் வலிமையுடையது வேறு இல்லை. ஊழினும் வலியது ஒன்று இருந்தால் அதன் ஆற்றலுக்கு முன் ஊழே வந்து நிற்கும் என்றார் வள்ளுவர்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும் – 380

என்பது குறள்.

நமது முயற்சி

 

அப்படியானால் நமது முயற்சிக்கும் உழைப்புக்கும் இடமே இல்லையா என்று கேட்டு வருந்தும் மக்கள் உளர். இடம் இல்லை என்பதுதான் பதில். இருந்தால் ஒன்றை அடைய முயன்று உழைப்பவர் எல்லாரும் ஒத்த பயனை அடைய வெண்டுமே. நடைமுறையில் அப்படி இல்லையே. ஏன்? ஒன்றை அடைய மிகக் கடுமையாக முயன்று உழைத்த ஒருவர் அடைய முடியாததை மிக எளிதில் மிகக் குறைந்த உழைப்பில் ஒருவர் அடைவதைப் பார்க்க முடிகிறது. ஏன் இவ்வாறு நடக்கிறது? உலகியலில் காணப்பெறும் இது போன்ற காட்சிகளைக் கண்டு உணர்ந்தே ஊழிற் பெருவலி யாவுள என்று வள்ளுவர் கேட்டார்.


ஊழை வெல்ல முடியுமா?

உயிர்கள் செய்த வினைகளிலிருந்து எடுக்கப்பட்டதே ஊழ். தாம் செய்த செயல்களுக்கு முழுப் பொறுப்பு உயிரே. எனவே ஊழ் என்பது உயிர் ஏற்றுக் கொண்ட பொறுப்பு. பொறுப்பைத் தந்தவன் இறைவன். எனவே, உயிர் தன் பொறுப்பை நிறைவேற்றும்போது இறைவனும் அதில் தலையிட்டுத் தடுக்க மாட்டான். ஆகவே ஊழை வெல்வது உயிராலும் முடியாதது. பிறகு எதற்கு இறை வழிபாடு என்றும் சிலர் கேட்பர். ஊழ்வினையை நுகர்ந்தபடியே சிவ வழிபாடு செய்தால் உயிருக்கு இருவினை ஒப்பு என்னும் பக்குவம் ஏற்படும். இருவினை ஒப்பினால் ஊழை வெல்லலாம். பழவினையும் கழியும். பிறவி அறும். இதுவே சைவத்தின் வினைக் கொள்கை. சிவசிவ.

 


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
Nov 29, 2017, 12:01:14 PM11/29/17
to vallamai, மின்தமிழ்
2017-11-28 7:51 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
வள்ளுவன் என்ற சாதியைச் சார்ந்தவர் திருவள்ளுவர் என்பதற்குச் சான்றுகள் ஏதுமில்லை.



நீங்கள் சொல்லும் ஸ்ரீவல்லபர் கதைகளுக்கு தான் சான்றுகள் கிடையாதே ஒழிய வள்ளுவரின் அடையாளத்துக்கு வாழும் சான்றாதாரமாய் இன்னும் வள்ளுவப்பெருங்குடி மக்கள் இருக்கிறார்கள். குடிப்பெயர், தொழில்பெயர் ஆகியவை மட்டுமே அடையாளமாக கொண்ட புலவர் பலருண்டு. கணியன் பூங்குன்றனார் ஒரு உதாரணம். நாயனார் எனப்படும் வள்ளுவரும் அத்தகைய உதாரணமே. வள்ளுவரின் குறளை படித்தால் அவர் சத்திரியர் என பொருள் கொள்ள இடமே இல்லை. அமைச்சர் அல்லது அரசு அதிகாரி எனவே புரிந்துகொள்ள இயலுகிறது. அத்தனை நுணுக்கமாக அரசு நடத்தும் வழிமுறைகளை அவர் எழுதியுள்லார். ஆக அவர் ஒன்று அரசர், மந்திரி அல்லது அரசருடன் நெருங்கிய தொடர்பில் உள்லவராக இருந்திருத்தல் வேண்டும். தளபதிகளுக்கு உட்கார்ந்து நூல் எழுத எல்லாம் நேரம் கிடையாது. ஆக அரசரின் சோதிடராக இருந்திருந்தால் படை எடுப்பது முதல் பலவற்றுக்கும் நேரம் கணித்து கொடுத்து அரசவை, ஆட்சி நடக்கும் முறைகளை நேரில் பார்க்க வாய்ப்பு கிட்டியிருக்கும். அதனால் வள்ளுவர் அரசனின் அவையில் இருந்த சோதிடர் அல்லது சோதிடம் பார்க்கதெரிந்த அமைச்சர் என எளிதில் அறியலாம்.

இப்படி வாழும் பாஸிகளாக (Living fossils) வள்ளூவரின் அடையாளத்தை தாங்கி நிற்கும் வள்ளுவப்பெருன்குடி மக்களை புறக்கணித்துவிட்டு வள்ளுவரின் வரலாற்றை ஆராய முடியாது.

 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 30, 2017, 1:14:17 AM11/30/17
to mintamil
2017-11-29 22:30 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:


2017-11-28 7:51 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
வள்ளுவன் என்ற சாதியைச் சார்ந்தவர் திருவள்ளுவர் என்பதற்குச் சான்றுகள் ஏதுமில்லை.



நீங்கள் சொல்லும் ஸ்ரீவல்லபர் கதைகளுக்கு தான் சான்றுகள் கிடையாதே ஒழிய வள்ளுவரின் அடையாளத்துக்கு வாழும் சான்றாதாரமாய் இன்னும் வள்ளுவப்பெருங்குடி மக்கள் இருக்கிறார்கள். குடிப்பெயர், தொழில்பெயர் ஆகியவை மட்டுமே அடையாளமாக கொண்ட புலவர் பலருண்டு. கணியன் பூங்குன்றனார் ஒரு உதாரணம். நாயனார் எனப்படும் வள்ளுவரும் அத்தகைய உதாரணமே. வள்ளுவரின் குறளை படித்தால் அவர் சத்திரியர் என பொருள் கொள்ள இடமே இல்லை. அமைச்சர் அல்லது அரசு அதிகாரி எனவே புரிந்துகொள்ள இயலுகிறது. அத்தனை நுணுக்கமாக அரசு நடத்தும் வழிமுறைகளை அவர் எழுதியுள்லார். ஆக அவர் ஒன்று அரசர், மந்திரி அல்லது அரசருடன் நெருங்கிய தொடர்பில் உள்லவராக இருந்திருத்தல் வேண்டும். தளபதிகளுக்கு உட்கார்ந்து நூல் எழுத எல்லாம் நேரம் கிடையாது. ஆக அரசரின் சோதிடராக இருந்திருந்தால் படை எடுப்பது முதல் பலவற்றுக்கும் நேரம் கணித்து கொடுத்து அரசவை, ஆட்சி நடக்கும் முறைகளை நேரில் பார்க்க வாய்ப்பு கிட்டியிருக்கும். அதனால் வள்ளுவர் அரசனின் அவையில் இருந்த சோதிடர் அல்லது சோதிடம் பார்க்கதெரிந்த அமைச்சர் என எளிதில் அறியலாம்.

ஓ ! அப்ப வள்ளுவர் காமத்துப்பால் எழுதுனது எத வச்சுங்கோவ்?.

அரசனின் காமலீலைகளைக் கண்டு எழுதியிருப்பாரோ?. :)))
 

இப்படி வாழும் பாஸிகளாக (Living fossils) வள்ளூவரின் அடையாளத்தை தாங்கி நிற்கும் வள்ளுவப்பெருன்குடி மக்களை புறக்கணித்துவிட்டு வள்ளுவரின் வரலாற்றை ஆராய முடியாது.

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

செல்வன்

unread,
Nov 30, 2017, 7:50:23 AM11/30/17
to mint...@googlegroups.com
சரவணன் ஐயா

வள்ளுவருக்கே காதல், கல்யாணம்
எல்லாம் ஆகியிருக்கும் அல்லவா? அவர் சோதிடர் தானே ஒழிய சாமியார் அல்லவே? 😆
--

செல்வன்

N. Ganesan

unread,
Nov 30, 2017, 9:41:06 AM11/30/17
to மின்தமிழ், vallamai, Banukumar Rajendran, Dr.Krishnaswamy Nachimuthu
ஸ்ரீவல்லபன் என்ற பெயர் க்ஷத்திரியக் குடிகளிலே மிகுதி. முக்கியமாக, மதுரைப் பாண்டியர்களிலே. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்று பழைய கல்வெட்டுக்களிலே உள்ளது. தமிழில்
ஸ்ரீவல்லபன் சிரீவல்லுவன் என்று கல்வெட்டுகளிலே எழுதியுள்ளனர். அதிவீரராம பாண்டியர் 16-ஆம் நூற்றாண்டின் பாண்டிய மன்னர். புலவர்களுக்கு ஔஷதம் ஆகிய நைஷதத்தை
காப்பியமாக எழுதியவர் அவர். நைடதம் புலவர்களுக்கு ஔடதம். அவரது கடவுள் வாழ்த்து கணபதி வாழ்த்துகளில் அழகானது. அதற்கு சித்திரம் எழுதி கோவை மாநகரின்
ஓம்சக்தி தீபாவளி மலரில் அச்சிட்டுள்ளனர். அதை நீங்கள் பார்த்திருக்கலாம். நான்கு நூற்றாண்டு முன்பு தமிழின் பழைய பாண்டிய ராஜாக்கள் வமிசத்தில் பிறந்த கவிஞர்
பாடல் முதன்முறையாக ஓவியம் ஆகியுள்ளது - விக்னேசுரரின் வணக்கப்பாடலுக்கு என்பது இதன் சிறப்பு. அதிவீரராம பாண்டியர் செப்பேட்டிலே ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய
மன்னன் பெயர் உள்ளது. சிரீவல்லுவன் திருவள்ளுவர் என்றாதல் தமிழாக்கம் ஆகும். அநுஜன் என்ற வடசொல் அநுசன் > அனியன் என்று ஆகும். அதுபோல, தூய தமிழாக்கம்
ஸ்ரீவல்லபன் > சிரீவல்லுவன் >  திருவள்ளுவன்.

எல்லோரா என்று கைலாசநாதர் கோயில் உள்ள மாநிலம் மஹாராஷ்ட்ரம். அதன் பழைய பெயர்: ஏலூர் (கல்வெட்டுக்களில்). ஏலூர வேளூர் என்ற தமிழ்ப்பெயரின் திரிபு.
அதுபோல, வேளாச்சாரியர் என்பது தமிழ் வேளிர் குலத்தோன்றலைக் குறிப்பிடும். வேள்- ஏலாச்சார்யர் என்று சமணர்கள் திருவள்ளுவரை அழைக்கின்றனர்.
ஏலாச்சார்யர் < வேளாச்சாரியர். வடநாட்டுச் சமணர்கள் வேள்- என்ன என்று தெரியாமல், ஏல- என ஆக்கியுள்ளனர். விந்து > இந்து ‘drop, seed, semen, soma'; விடங்கர் > இடங்கர் ‘corcodile, Linga (of Shiva)',
... போல, ஏலாச்சார்யர் < வேள் ஆச்சார்யர்.

என் கருத்து தமிழ்க்கவிகளின் சரித்திரம் முதலில் கல்வெட்டு, செப்பேடுகள், இலக்கியம் போன்றவற்றை ஆராய்ந்து 1904-ல்
எழுதிய சென்னைப் பல்கலைப் பேரா. எம் சேஷகிரி சாஸ்திரி முதலானோர் விரிவாக திருவள்ளுவர் என்னும் பெயரை சாதிப்பெயராகக்
கொள்ள முடியாது என்னும் கருத்தே. இதனை விரிவாக விளக்கி எழுதியவர் அண்ணாமலைப் பல்கலையிலே தமிழ்ப் பேராசிரியர்
ஆக இருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள். எம். சேஷகிரி சாஸ்திரியார் பெயரை பானுகுமார்
தம் வலைக்கண்ணில் இணைக்க வேண்டும். http://banukumar_r.blogspot.com/2010/08/blog-post.html

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்
- என்று கோவில் பூஜகர்களுக்கு  அறிவுறுத்தியவர் திருவள்ளுவர்.
’எம் ஓத்து’ என்று திருக்குறளைக் கொண்டாடிய சமணர்கள் யாரும் வள்ளுவன் ஜாதியில் திருவள்ளுவர் என்ற மரபு இல்லை.

சமணத் துறவியாக ஜைநர்கள் கொண்டாடும் தேவர் வள்ளுவர்ஜாதி என பழைய குறிப்புகள் இல்லை.
பிற்காலக் கதைகளை ஒதுக்கி எம் சேஷகிரி சாஸ்திரி, நாவலர், .... எழுதியுள்ளனர். அதனைக் குறிபிட்டேன்,
ஏலாச்சார்யர் என்பது வேள்- என்ற தமிழ்ச்சொல் என்பது கரதல ஆமலகம்.

தங்களுடைய வேதம் திருக்குறள். எங்கள் வைப்பு என்று
வழிவழியாகச் சைனர்கள் சொல்லும் வாழ்த்து. 

முப்பாலும் உண்டோம் முலைப்பால் இனிநுகரோம்
எப்பாலுக் கப்பாலும் ஆயினோம் - எப்பொருளும் 
உள்ள படியுணர்ந்தோம் ஓதிக் குறைதீர்ந்தோம்
வள்ளுவனார் வைப்பெமக்கு வாய்த்து
                                                                    - ஜைநர் வாழ்த்து

SInce Tiruvalluvar is a Jain & the Jaina tradition reveres him as a Jaina monk, & following them,
F. W. Ellis, Father of the theory of Dravidian Language Family (which has deep implications for India's
history, religion, society structure (e.g., caste) ), issued gold coin of Tiruvalluvar as a Jaina monk.


நா. கணேசன்

வள்ளுவன் என்ற சாதியைச் சார்ந்தவர் திருவள்ளுவர் என்பதற்குச் சான்றுகள் ஏதுமில்லை. நாவலர் சோமசுந்தரபாரதியார் விரிவாக எழுதினார்.
வள்ளுவன் என்ற தமிழ்ச்சொல் வள் வார் முரசு என்பன போன்ற சங்க இலக்கியத் தொடர்களில் உள்ள “வள்” வளைத்தல் என்ற சொல்லில் 
பிறக்கும். முரசின் தோலை (membrane) இறுக்கி வாரால் கட்டும் தொழில். யானை மீதிருந்து முரசு இயக்கும் வள்ளுவன் பற்றிக்
கொங்குவேளிர் செய்த பெருங்கதை போன்றவற்றில் காணலாம்.

ஸ்ரீவல்லபன் என்ற வடசொல் திருவள்ளுவன் என்று தமிழில் தற்பவம் ஆகும். ஆப்பில் என்ற பழப் பெயர் ஆப்பிள் என்று எழுதுகிறோம்.
ஆர்ய மொழிகளின் லகரம் தமிழில் ளகரம் என ஆதல் உண்டு. திருவள்ளுவரைத் தேவர் எனப் போற்றிய சமண சமயத்தார்,
அவரது திருவடிகளை அமைத்து தொழுதுவந்தனர். உ-ம்: ஸ்ரீபாதம் அமைந்திருந்த மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்.
கிறிஸ்துவ மிஷனரிகள் மும்முரமாக தமிழர்களை கிறித்துவர் ஆக்கும் முயற்சிகளில் காலனீய ஆட்சி, சர்ச் பணம், அதிகாரம்
கொண்டு இயங்கியபோது திருவள்ளுவரைச் சாதி குறிப்பிட்டுப் பரப்பலாயினர். உ-ம்: ஜி. யு. போப் பாடல். 
ஆனால், திரு.வி.க., நாவலர், ... போன்றோர் இதையெல்லாம் ஏற்றதேயில்லை. ஸ்ரீவல்லபதேவரின் (திருவள்ளுவரின்) ஜாதி
என்ன என்று தெரியாது. ஆனால், அவர் உழவுத்தொழிலைப் போற்றும் முறையைப் பார்த்தாலும்,
திருத்தக்கதேவர், தோலாமொழித்தேவர், கொங்குவேளிர், .... போன்ற வேளிர் குலம் எனக் கொள்ளலாம்.
அதையே நாவலர் போன்றோர் எழுதியுள்ளனர். இளங்கோ அடிகள் தாம் “வஞ்சி மூதூர்” என தண்ணான்பொருனை எனப்படும்
ஆற்றின் கரையில் உள்ள பழைய சேரர் தலைநகரை வர்ணிப்பவர். தெய்வம் தொழாள் என்ற குறளையும்
சிலம்பில் பயன்படுத்துகிறார் அடிகள். திருவள்ளுவர் இளங்கோ அடிகள் போல, க்ஷத்ரிய வம்சத்துப் பிறந்து
துறவு மேற்கொண்ட அடிகள் எனலாம்.

 

N. Ganesan

unread,
Nov 30, 2017, 9:49:48 AM11/30/17
to மின்தமிழ், vallamai, Banukumar Rajendran, Dr.Krishnaswamy Nachimuthu

2017-11-29 9:00 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:


2017-11-28 7:51 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
வள்ளுவன் என்ற சாதியைச் சார்ந்தவர் திருவள்ளுவர் என்பதற்குச் சான்றுகள் ஏதுமில்லை.



நீங்கள் சொல்லும் ஸ்ரீவல்லபர் கதைகளுக்கு தான் சான்றுகள் கிடையாதே ஒழிய வள்ளுவரின் அடையாளத்துக்கு வாழும் சான்றாதாரமாய் இன்னும் வள்ளுவப்பெருங்குடி மக்கள் இருக்கிறார்கள். குடிப்பெயர், தொழில்பெயர் ஆகியவை மட்டுமே அடையாளமாக கொண்ட புலவர் பலருண்டு. கணியன் பூங்குன்றனார் ஒரு உதாரணம். நாயனார் எனப்படும் வள்ளுவரும் அத்தகைய உதாரணமே. வள்ளுவரின் குறளை படித்தால் அவர் சத்திரியர் என பொருள் கொள்ள இடமே இல்லை. அமைச்சர் அல்லது அரசு அதிகாரி எனவே புரிந்துகொள்ள இயலுகிறது. அத்தனை நுணுக்கமாக அரசு நடத்தும் வழிமுறைகளை அவர் எழுதியுள்லார். ஆக அவர் ஒன்று அரசர், மந்திரி அல்லது அரசருடன் நெருங்கிய தொடர்பில் உள்லவராக இருந்திருத்தல் வேண்டும். தளபதிகளுக்கு உட்கார்ந்து நூல் எழுத எல்லாம் நேரம் கிடையாது. ஆக அரசரின் சோதிடராக இருந்திருந்தால் படை எடுப்பது முதல் பலவற்றுக்கும் நேரம் கணித்து கொடுத்து அரசவை, ஆட்சி நடக்கும் முறைகளை நேரில் பார்க்க வாய்ப்பு கிட்டியிருக்கும். அதனால் வள்ளுவர் அரசனின் அவையில் இருந்த சோதிடர் அல்லது சோதிடம் பார்க்கதெரிந்த அமைச்சர் என எளிதில் அறியலாம்.

இப்படி வாழும் பாஸிகளாக (Living fossils) வள்ளூவரின் அடையாளத்தை தாங்கி நிற்கும் வள்ளுவப்பெருன்குடி மக்களை புறக்கணித்துவிட்டு வள்ளுவரின் வரலாற்றை ஆராய முடியாது.


ஸ்ரீவல்லபன் என்ற பெயர் க்ஷத்திரியக் குடிகளிலே மிகுதி. முக்கியமாக, மதுரைப் பாண்டியர்களிலே. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்று பழைய கல்வெட்டுக்களிலே உள்ளது. தமிழில்
ஸ்ரீவல்லபன் சிரீவல்லுவன் என்று கல்வெட்டுகளிலே எழுதியுள்ளனர். அதிவீரராம பாண்டியர் 16-ஆம் நூற்றாண்டின் பாண்டிய மன்னர். புலவர்களுக்கு ஔஷதம் ஆகிய நைஷதத்தை
காப்பியமாக எழுதியவர் அவர். நைடதம் புலவர்களுக்கு ஔடதம். அவரது கடவுள் வாழ்த்து கணபதி வாழ்த்துகளில் அழகானது. அதற்கு சித்திரம் எழுதி கோவை மாநகரின்
ஓம்சக்தி தீபாவளி மலரில் அச்சிட்டுள்ளனர். அதை நீங்கள் பார்த்திருக்கலாம். நான்கு நூற்றாண்டு முன்பு தமிழின் பழைய பாண்டிய ராஜாக்கள் வமிசத்தில் பிறந்த கவிஞர்
பாடல் முதன்முறையாக ஓவியம் ஆகியுள்ளது - விக்னேசுரரின் வணக்கப்பாடலுக்கு என்பது இதன் சிறப்பு. அதிவீரராம பாண்டியர் செப்பேட்டிலே ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய
மன்னன் பெயர் உள்ளது. சிரீவல்லுவன் திருவள்ளுவர் என்றாதல் தமிழாக்கம் ஆகும். அநுஜன் என்ற வடசொல் அநுசன் > அனியன் என்று ஆகும். அதுபோல, தூய தமிழாக்கம்
ஸ்ரீவல்லபன் > சிரீவல்லுவன் >  திருவள்ளுவன்.

எல்லோரா என்று கைலாசநாதர் கோயில் உள்ள மாநிலம் மஹாராஷ்ட்ரம். அதன் பழைய பெயர்: ஏலூர் (கல்வெட்டுக்களில்). ஏலூர வேளூர் என்ற தமிழ்ப்பெயரின் திரிபு.
அதுபோல, வேளாச்சாரியர் என்பது தமிழ் வேளிர் குலத்தோன்றலைக் குறிப்பிடும். வேள்- ஏலாச்சார்யர் என்று சமணர்கள் திருவள்ளுவரை அழைக்கின்றனர்.
ஏலாச்சார்யர் < வேளாச்சாரியர். வடநாட்டுச் சமணர்கள் வேள்- என்ன என்று தெரியாமல், ஏல- என ஆக்கியுள்ளனர். விந்து > இந்து ‘drop, seed, semen, soma'; விடங்கர் > இடங்கர் ‘corcodile, Linga (of Shiva)',
... போல, ஏலாச்சார்யர் < வேள் ஆச்சார்யர்.

மதுரை திருவள்ளுவரின் ஊர் என்பதற்குச் சான்று உண்டு:

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான் 
உத்தர மாமதுரைக்(கு) அச்சென்ப - இப்பக்கம்

மாதானு பங்கி மறுவில் புலச்செந்நாப்

போதார் புனற்கூடற்(கு) அச்சு

 

யாதவ குலத்து அரசன் கண்ணபிரான். அவனது ஊர் வடமதுரை (யாமை என்னும் சொல்லடியிற் பிறந்த யமுநா நதிக்கரை).
அவன் சொன்னது கீதை. அதுபோல, மதுரையில் க்ஷத்ரிய குலத்தானாகிய திருவள்ளுவர் (< ஸ்ரீவல்லபர்/சிரீவல்லுவர்)
சொன்னது குறள். வடமொழிக்கு கீதை. தென்மொழிக்கு குறள்; வடதிசைக்கு வடமதுரை, தென் திசைக்கு தென்மதுரை.
மதுரை மன்னர்களில் ஸ்ரீவல்லபதேவன் அடிக்கடி பயில்வது.

NG

செல்வன்

unread,
Nov 30, 2017, 10:06:56 AM11/30/17
to vallamai, மின்தமிழ்
யாதவ குலத்து அரசன் கண்ணபிரான். அவனது ஊர் வடமதுரை (யாமை என்னும் சொல்லடியிற் பிறந்த யமுநா நதிக்கரை).
அவன் சொன்னது கீதை. அதுபோல, மதுரையில் க்ஷத்ரிய குலத்தானாகிய திருவள்ளுவர் (< ஸ்ரீவல்லபர்/சிரீவல்லுவர்)
சொன்னது குறள். வடமொழிக்கு கீதை. தென்மொழிக்கு குறள்; வடதிசைக்கு வடமதுரை, தென் திசைக்கு தென்மதுரை.
மதுரை மன்னர்களில் ஸ்ரீவல்லபதேவன் அடிக்கடி பயில்வது.


அப்படி வாங்க வழிக்கு :-)

வடமொழியில் கீதை, தமிழில் குறள் என்ற ஒப்புவமை மூலம் வள்ளுவர் இந்துதான் என நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டீர்கள் :-)

கண்ணன் வடமதுரையின் அரசன் அல்ல. கண்ணன் படைதளபதி மட்டுமே. வடமதுரையை கண்ணன் காலத்தில் ஆண்ட மன்னர் உக்ரசேனர்...அடுத்தபடியாக இளவரசுபட்டம் சூட்டபட்டது பலராமருக்கு :-)

ipohsaivite

unread,
Nov 30, 2017, 8:27:51 PM11/30/17
to mint...@googlegroups.com, vallamai, Banukumar Rajendran, Dr.Krishnaswamy Nachimuthu
திருவள்ளுவர் ஜைனர் எணின் ஜைன மத கோட்பாடுகளுக்கு முரணான  கருத்துக்கள் திருக்குறளில் நிறம்பியிருப்பதற்கு காரணம் என்ன? 

இதற்கு பதில் சொல்லாமல் தொடர்ந்து பொய்யுரைத்துக்கு கொண்டிருப்பது சீதை இராவணுனுக்குச் சொன்ன புத்திமதி போல் சொன்னால்தான் புரியும் போலிருக்கு! 


Sent from my Samsung Galaxy smartphone.

-------- Original message --------
From: "N. Ganesan" <naa.g...@gmail.com>
Date: 30/11/2017 22:40 (GMT+08:00)
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>, vallamai <vall...@googlegroups.com>
Cc: Banukumar Rajendran <banuk...@gmail.com>, "Dr.Krishnaswamy Nachimuthu" <tamiz...@gmail.com>
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] முடிந்தது வள்ளுவர் பற்றிய விவாதம்: சுபமங்களம்

2017-11-29 9:00 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:


2017-11-28 7:51 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
வள்ளுவன் என்ற சாதியைச் சார்ந்தவர் திருவள்ளுவர் என்பதற்குச் சான்றுகள் ஏதுமில்லை.



நீங்கள் சொல்லும் ஸ்ரீவல்லபர் கதைகளுக்கு தான் சான்றுகள் கிடையாதே ஒழிய வள்ளுவரின் அடையாளத்துக்கு வாழும் சான்றாதாரமாய் இன்னும் வள்ளுவப்பெருங்குடி மக்கள் இருக்கிறார்கள். குடிப்பெயர், தொழில்பெயர் ஆகியவை மட்டுமே அடையாளமாக கொண்ட புலவர் பலருண்டு. கணியன் பூங்குன்றனார் ஒரு உதாரணம். நாயனார் எனப்படும் வள்ளுவரும் அத்தகைய உதாரணமே. வள்ளுவரின் குறளை படித்தால் அவர் சத்திரியர் என பொருள் கொள்ள இடமே இல்லை. அமைச்சர் அல்லது அரசு அதிகாரி எனவே புரிந்துகொள்ள இயலுகிறது. அத்தனை நுணுக்கமாக அரசு நடத்தும் வழிமுறைகளை அவர் எழுதியுள்லார். ஆக அவர் ஒன்று அரசர், மந்திரி அல்லது அரசருடன் நெருங்கிய தொடர்பில் உள்லவராக இருந்திருத்தல் வேண்டும். தளபதிகளுக்கு உட்கார்ந்து நூல் எழுத எல்லாம் நேரம் கிடையாது. ஆக அரசரின் சோதிடராக இருந்திருந்தால் படை எடுப்பது முதல் பலவற்றுக்கும் நேரம் கணித்து கொடுத்து அரசவை, ஆட்சி நடக்கும் முறைகளை நேரில் பார்க்க வாய்ப்பு கிட்டியிருக்கும். அதனால் வள்ளுவர் அரசனின் அவையில் இருந்த சோதிடர் அல்லது சோதிடம் பார்க்கதெரிந்த அமைச்சர் என எளிதில் அறியலாம்.

இப்படி வாழும் பாஸிகளாக (Living fossils) வள்ளூவரின் அடையாளத்தை தாங்கி நிற்கும் வள்ளுவப்பெருன்குடி மக்களை புறக்கணித்துவிட்டு வள்ளுவரின் வரலாற்றை ஆராய முடியாது.


ஸ்ரீவல்லபன் என்ற பெயர் க்ஷத்திரியக் குடிகளிலே மிகுதி. முக்கியமாக, மதுரைப் பாண்டியர்களிலே. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்று பழைய கல்வெட்டுக்களிலே உள்ளது. தமிழில்
ஸ்ரீவல்லபன் சிரீவல்லுவன் என்று கல்வெட்டுகளிலே எழுதியுள்ளனர். அதிவீரராம பாண்டியர் 16-ஆம் நூற்றாண்டின் பாண்டிய மன்னர். புலவர்களுக்கு ஔஷதம் ஆகிய நைஷதத்தை
காப்பியமாக எழுதியவர் அவர். நைடதம் புலவர்களுக்கு ஔடதம். அவரது கடவுள் வாழ்த்து கணபதி வாழ்த்துகளில் அழகானது. அதற்கு சித்திரம் எழுதி கோவை மாநகரின்
ஓம்சக்தி தீபாவளி மலரில் அச்சிட்டுள்ளனர். அதை நீங்கள் பார்த்திருக்கலாம். நான்கு நூற்றாண்டு முன்பு தமிழின் பழைய பாண்டிய ராஜாக்கள் வமிசத்தில் பிறந்த கவிஞர்
பாடல் முதன்முறையாக ஓவியம் ஆகியுள்ளது - விக்னேசுரரின் வணக்கப்பாடலுக்கு என்பது இதன் சிறப்பு. அதிவீரராம பாண்டியர் செப்பேட்டிலே ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய
மன்னன் பெயர் உள்ளது. சிரீவல்லுவன் திருவள்ளுவர் என்றாதல் தமிழாக்கம் ஆகும். அநுஜன் என்ற வடசொல் அநுசன் > அனியன் என்று ஆகும். அதுபோல, தூய தமிழாக்கம்
ஸ்ரீவல்லபன் > சிரீவல்லுவன் >  திருவள்ளுவன்.

எல்லோரா என்று கைலாசநாதர் கோயில் உள்ள மாநிலம் மஹாராஷ்ட்ரம். அதன் பழைய பெயர்: ஏலூர் (கல்வெட்டுக்களில்). ஏலூர வேளூர் என்ற தமிழ்ப்பெயரின் திரிபு.
அதுபோல, வேளாச்சாரியர் என்பது தமிழ் வேளிர் குலத்தோன்றலைக் குறிப்பிடும். வேள்- ஏலாச்சார்யர் என்று சமணர்கள் திருவள்ளுவரை அழைக்கின்றனர்.
ஏலாச்சார்யர் < வேளாச்சாரியர். வடநாட்டுச் சமணர்கள் வேள்- என்ன என்று தெரியாமல், ஏல- என ஆக்கியுள்ளனர். விந்து > இந்து ‘drop, seed, semen, soma'; விடங்கர் > இடங்கர் ‘corcodile, Linga (of Shiva)',
... போல, ஏலாச்சார்யர் < வேள் ஆச்சார்யர்.

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

ipohsaivite

unread,
Nov 30, 2017, 8:40:55 PM11/30/17
to mint...@googlegroups.com, vallamai, Banukumar Rajendran, Dr.Krishnaswamy Nachimuthu
இச்சான்று எந்த நூலிலிருந்து எடுக்கப் பட்டது என்பதையும் அந்நூல் எக்காலத்தது என்பதையும் தெரியப்படுத்தவும் ஐயா. 



Sent from my Samsung Galaxy smartphone.

-------- Original message --------
From: "N. Ganesan" <naa.g...@gmail.com>
Date: 30/11/2017 22:49 (GMT+08:00)
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>, vallamai <vall...@googlegroups.com>
Cc: Banukumar Rajendran <banuk...@gmail.com>, "Dr.Krishnaswamy Nachimuthu" <tamiz...@gmail.com>
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] முடிந்தது வள்ளுவர் பற்றிய விவாதம்: சுபமங்களம்


2017-11-29 9:00 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:


2017-11-28 7:51 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
வள்ளுவன் என்ற சாதியைச் சார்ந்தவர் திருவள்ளுவர் என்பதற்குச் சான்றுகள் ஏதுமில்லை.



நீங்கள் சொல்லும் ஸ்ரீவல்லபர் கதைகளுக்கு தான் சான்றுகள் கிடையாதே ஒழிய வள்ளுவரின் அடையாளத்துக்கு வாழும் சான்றாதாரமாய் இன்னும் வள்ளுவப்பெருங்குடி மக்கள் இருக்கிறார்கள். குடிப்பெயர், தொழில்பெயர் ஆகியவை மட்டுமே அடையாளமாக கொண்ட புலவர் பலருண்டு. கணியன் பூங்குன்றனார் ஒரு உதாரணம். நாயனார் எனப்படும் வள்ளுவரும் அத்தகைய உதாரணமே. வள்ளுவரின் குறளை படித்தால் அவர் சத்திரியர் என பொருள் கொள்ள இடமே இல்லை. அமைச்சர் அல்லது அரசு அதிகாரி எனவே புரிந்துகொள்ள இயலுகிறது. அத்தனை நுணுக்கமாக அரசு நடத்தும் வழிமுறைகளை அவர் எழுதியுள்லார். ஆக அவர் ஒன்று அரசர், மந்திரி அல்லது அரசருடன் நெருங்கிய தொடர்பில் உள்லவராக இருந்திருத்தல் வேண்டும். தளபதிகளுக்கு உட்கார்ந்து நூல் எழுத எல்லாம் நேரம் கிடையாது. ஆக அரசரின் சோதிடராக இருந்திருந்தால் படை எடுப்பது முதல் பலவற்றுக்கும் நேரம் கணித்து கொடுத்து அரசவை, ஆட்சி நடக்கும் முறைகளை நேரில் பார்க்க வாய்ப்பு கிட்டியிருக்கும். அதனால் வள்ளுவர் அரசனின் அவையில் இருந்த சோதிடர் அல்லது சோதிடம் பார்க்கதெரிந்த அமைச்சர் என எளிதில் அறியலாம்.

இப்படி வாழும் பாஸிகளாக (Living fossils) வள்ளூவரின் அடையாளத்தை தாங்கி நிற்கும் வள்ளுவப்பெருன்குடி மக்களை புறக்கணித்துவிட்டு வள்ளுவரின் வரலாற்றை ஆராய முடியாது.


ஸ்ரீவல்லபன் என்ற பெயர் க்ஷத்திரியக் குடிகளிலே மிகுதி. முக்கியமாக, மதுரைப் பாண்டியர்களிலே. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்று பழைய கல்வெட்டுக்களிலே உள்ளது. தமிழில்
ஸ்ரீவல்லபன் சிரீவல்லுவன் என்று கல்வெட்டுகளிலே எழுதியுள்ளனர். அதிவீரராம பாண்டியர் 16-ஆம் நூற்றாண்டின் பாண்டிய மன்னர். புலவர்களுக்கு ஔஷதம் ஆகிய நைஷதத்தை
காப்பியமாக எழுதியவர் அவர். நைடதம் புலவர்களுக்கு ஔடதம். அவரது கடவுள் வாழ்த்து கணபதி வாழ்த்துகளில் அழகானது. அதற்கு சித்திரம் எழுதி கோவை மாநகரின்
ஓம்சக்தி தீபாவளி மலரில் அச்சிட்டுள்ளனர். அதை நீங்கள் பார்த்திருக்கலாம். நான்கு நூற்றாண்டு முன்பு தமிழின் பழைய பாண்டிய ராஜாக்கள் வமிசத்தில் பிறந்த கவிஞர்
பாடல் முதன்முறையாக ஓவியம் ஆகியுள்ளது - விக்னேசுரரின் வணக்கப்பாடலுக்கு என்பது இதன் சிறப்பு. அதிவீரராம பாண்டியர் செப்பேட்டிலே ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய
மன்னன் பெயர் உள்ளது. சிரீவல்லுவன் திருவள்ளுவர் என்றாதல் தமிழாக்கம் ஆகும். அநுஜன் என்ற வடசொல் அநுசன் > அனியன் என்று ஆகும். அதுபோல, தூய தமிழாக்கம்
ஸ்ரீவல்லபன் > சிரீவல்லுவன் >  திருவள்ளுவன்.

எல்லோரா என்று கைலாசநாதர் கோயில் உள்ள மாநிலம் மஹாராஷ்ட்ரம். அதன் பழைய பெயர்: ஏலூர் (கல்வெட்டுக்களில்). ஏலூர வேளூர் என்ற தமிழ்ப்பெயரின் திரிபு.
அதுபோல, வேளாச்சாரியர் என்பது தமிழ் வேளிர் குலத்தோன்றலைக் குறிப்பிடும். வேள்- ஏலாச்சார்யர் என்று சமணர்கள் திருவள்ளுவரை அழைக்கின்றனர்.
ஏலாச்சார்யர் < வேளாச்சாரியர். வடநாட்டுச் சமணர்கள் வேள்- என்ன என்று தெரியாமல், ஏல- என ஆக்கியுள்ளனர். விந்து > இந்து ‘drop, seed, semen, soma'; விடங்கர் > இடங்கர் ‘corcodile, Linga (of Shiva)',
... போல, ஏலாச்சார்யர் < வேள் ஆச்சார்யர்.

மதுரை திருவள்ளுவரின் ஊர் என்பதற்குச் சான்று உண்டு:

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான் 
உத்தர மாமதுரைக்(கு) அச்சென்ப - இப்பக்கம்

மாதானு பங்கி மறுவில் புலச்செந்நாப்

போதார் புனற்கூடற்(கு) அச்சு

 

யாதவ குலத்து அரசன் கண்ணபிரான். அவனது ஊர் வடமதுரை (யாமை என்னும் சொல்லடியிற் பிறந்த யமுநா நதிக்கரை).
அவன் சொன்னது கீதை. அதுபோல, மதுரையில் க்ஷத்ரிய குலத்தானாகிய திருவள்ளுவர் (< ஸ்ரீவல்லபர்/சிரீவல்லுவர்)
சொன்னது குறள். வடமொழிக்கு கீதை. தென்மொழிக்கு குறள்; வடதிசைக்கு வடமதுரை, தென் திசைக்கு தென்மதுரை.
மதுரை மன்னர்களில் ஸ்ரீவல்லபதேவன் அடிக்கடி பயில்வது.

NG

N. Ganesan

unread,
Nov 30, 2017, 8:43:18 PM11/30/17
to மின்தமிழ், vallamai, Banukumar Rajendran, Dr.Krishnaswamy Nachimuthu
2017-11-30 17:30 GMT-08:00 ipohsaivite <ipohs...@gmail.com>:
இச்சான்று எந்த நூலிலிருந்து எடுக்கப் பட்டது என்பதையும் அந்நூல் எக்காலத்தது என்பதையும் தெரியப்படுத்தவும் ஐயா. 



பல ஆண்டுகளுக்கு முன்பு மடல்களில் கொடுத்துள்ளேன். பார்க்கவும்.

நா. கணேசன்
 
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Thenee MK

unread,
Dec 1, 2017, 2:48:26 AM12/1/17
to mintamil
மதுரை திருவள்ளுவரின் ஊர் என்பதற்குச் சான்று உண்டு:

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான் 
உத்தர மாமதுரைக்(கு) அச்சென்ப - இப்பக்கம்

மாதானு பங்கி மறுவில் புலச்செந்நாப்

போதார் புனற்கூடற்(கு) அச்சு

திருவள்ளுவமாலையிலிருந்து எடுத்த இப்பாடல் திருவள்ளுவர் மதுரையைச் சார்ந்தவர் என்பதற்கு மட்டும் சான்றாகும்.

மற்ற புனைவுகளெல்லாம் கற்பனையே.  

  














You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 1, 2017, 8:04:50 AM12/1/17
to மின்தமிழ்
2017-11-30 23:48 GMT-08:00 Thenee MK <ipohs...@gmail.com>:
மதுரை திருவள்ளுவரின் ஊர் என்பதற்குச் சான்று உண்டு:

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான் 
உத்தர மாமதுரைக்(கு) அச்சென்ப - இப்பக்கம்

மாதானு பங்கி மறுவில் புலச்செந்நாப்

போதார் புனற்கூடற்(கு) அச்சு

திருவள்ளுவமாலையிலிருந்து எடுத்த இப்பாடல் திருவள்ளுவர் மதுரையைச் சார்ந்தவர் என்பதற்கு மட்டும் சான்றாகும்.

மற்ற புனைவுகளெல்லாம் கற்பனையே.  

  

ஓ! அப்படியா? எந்தத் தமிழறிஞர் கூறினார்?

நா. கணேசன்

ipohsaivite

unread,
Dec 1, 2017, 8:08:59 AM12/1/17
to mint...@googlegroups.com
ஏன் நேமிநாதத்திலிருந்து எடுத்தது எமன்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா? 



Sent from my Samsung Galaxy smartphone.

-------- Original message --------
From: "N. Ganesan" <naa.g...@gmail.com>
Date: 01/12/2017 21:04 (GMT+08:00)
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] முடிந்தது வள்ளுவர் பற்றிய விவாதம்: சுபமங்களம்

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 1, 2017, 8:20:06 AM12/1/17
to மின்தமிழ், vallamai, Banukumar Rajendran, Dr.Krishnaswamy Nachimuthu
2017-11-30 17:27 GMT-08:00 ipohsaivite <ipohs...@gmail.com>:
திருவள்ளுவர் ஜைனர் எணின் ஜைன மத கோட்பாடுகளுக்கு முரணான  கருத்துக்கள் திருக்குறளில் நிறம்பியிருப்பதற்கு காரணம் என்ன? 

இதற்கு பதில் சொல்லாமல் தொடர்ந்து பொய்யுரைத்துக்கு கொண்டிருப்பது சீதை இராவணுனுக்குச் சொன்ன புத்திமதி போல் சொன்னால்தான் புரியும் போலிருக்கு! 


உங்கள் தமிழ் சிறப்புத் தமிழ். தமிழின் பேராசிரியர்கள் தொடர்ந்து பொய்யுரைத்து திருவள்ளுவர் ஜைநர் என்று ஆய்வேடுகளில்
எழுதிவருகின்றனர். இதனை நீங்கள் சிறப்புத் தமிழ் எழுதி நிறுவிவிட்டீர்கள்.

இந்தியாவில் வைதீகம் பற்றியும், ஶைவம் பற்றிய வரலாறு அறிந்து எழுதவும். சிவ என்ற சொல்லைத் தமிழில் முதன்முதலில்
பயன்படுத்துவது யார்? என்ன பொருள்?

நா. கணேசன்
 


You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Thenee MK

unread,
Dec 1, 2017, 9:29:03 AM12/1/17
to mintamil
திருவள்ளுவரைப் பற்றி பேச முடியாததால் மற்றொரு கதைக்குத் தாவுவது தங்கள் வழக்கம் என்பதை அறிவேன்.

சைவத்தைப் பற்றி தாங்கள் எழுத விரும்பினால் தனி இழை துவங்கவும்.

சைவ குருமார்களும் மின் தமிழில் உள்ளதால் அவர்களும் உள் வரலாம்.

இந்தியாவில் தோன்றிய பல்வேறு மதங்களின் கோட்பாடுகளுக்குத் திருக்குறள் முரண்பட்டு சித்தாந்த சைவ கோட்பாடுகளுக்கு மட்டும் முரணாக இல்லாததைப் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ந்து கூறிய நூலும் உண்டு.    

அதன் இணையச் சுட்டியை இவ்விடம் பதிவு செய்கிறேன். படித்துப் பார்க்கவும்.



'சிவ' என்ற மந்திரச் சொல்லுக்கு இரவுரவ ஆகமத்தின் ஞான பாதத்தில் அதன் பொருள் கூறப்பட்டுள்ளதைப் படித்து அறிந்து கொள்ளவும். இந்நூல் ஏற்கனவே மின் தமிழில் பி டி.எப் கோப்பு வடிவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு விளக்கம் கொடுத்தவர் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்ற டாக்டர் சபாரத்னம் சிவாச்சாரியார். தமிழ், வடமொழி இன்னும் பல மொழிகளில் புலமைப் பெற்றவர்.   

இன்று வடமொழியில் இருக்கும் கிரந்த தமிழ் எழுத்துக்கள் தோன்றிய காலத்திற்கும் முந்தையது ஆகமங்கள். அதனை அறிந்து பின்பற்றி சைவர்களாக வாழ்ந்தவரே ஆதி சைவ அந்தணர். இவர் தமிழர்களே. அதன் காரணமாகவே ஆகம வழிபாட்டிற்கு முதல் இடம் கொடுக்கப் பட்டது ஆதி சைவ அந்தணர்களுக்கே.

சைவ விளக்கம் இத்தோடு போதும்.

திருக்குறளின் அகச்சான்றைக் கொண்டு அது சித்தாந்த சைவ கோட்பாடுகளுக்கு முரணாக உள்ளதா என்று ஆராய்ந்து கூறவும். அப்படி கூற இயலவில்லையேல் அது சமணர் நூலென்று கூறுவதை நிறுத்தவும் காரணம் பல குறள்கள் சமண மத கோட்பாடுகளுக்கு முரணாக உள்ளதை இதற்கு முந்தியே எடுத்துக் கூறி விட்டேன். அதற்கு ஏதாவது மறுமொழி கூற முடிந்ததா? இல்லையே. அப்புறம் ஏன் கூறிய  பொய்யயையே மீண்டும் மீண்டும்  கிளிப்பிள்ளைப் போன்று மின் தமிழில் கூறிக் கொண்டிருக்கின்றீர்?

 

 




N. Ganesan

unread,
Dec 1, 2017, 9:35:05 AM12/1/17
to மின்தமிழ்
2017-12-01 6:28 GMT-08:00 Thenee MK <ipohs...@gmail.com>:
திருவள்ளுவரைப் பற்றி பேச முடியாததால் மற்றொரு கதைக்குத் தாவுவது தங்கள் வழக்கம் என்பதை அறிவேன்.

சைவத்தைப் பற்றி தாங்கள் எழுத விரும்பினால் தனி இழை துவங்கவும்.

சைவ குருமார்களும் மின் தமிழில் உள்ளதால் அவர்களும் உள் வரலாம்.

இந்தியாவில் தோன்றிய பல்வேறு மதங்களின் கோட்பாடுகளுக்குத் திருக்குறள் முரண்பட்டு சித்தாந்த சைவ கோட்பாடுகளுக்கு மட்டும் முரணாக இல்லாததைப் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ந்து கூறிய நூலும் உண்டு.    

அதன் இணையச் சுட்டியை இவ்விடம் பதிவு செய்கிறேன். படித்துப் பார்க்கவும்.



'சிவ' என்ற மந்திரச் சொல்லுக்கு இரவுரவ ஆகமத்தின் ஞான பாதத்தில் அதன் பொருள் கூறப்பட்டுள்ளதைப் படித்து அறிந்து கொள்ளவும். இந்நூல் ஏற்கனவே மின் தமிழில் பி டி.எப் கோப்பு வடிவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு விளக்கம் கொடுத்தவர் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்ற டாக்டர் சபாரத்னம் சிவாச்சாரியார். தமிழ், வடமொழி இன்னும் பல மொழிகளில் புலமைப் பெற்றவர்.   

இன்று வடமொழியில் இருக்கும் கிரந்த தமிழ் எழுத்துக்கள் தோன்றிய காலத்திற்கும் முந்தையது ஆகமங்கள். அதனை அறிந்து பின்பற்றி சைவர்களாக வாழ்ந்தவரே ஆதி சைவ அந்தணர். இவர் தமிழர்களே. அதன் காரணமாகவே ஆகம வழிபாட்டிற்கு முதல் இடம் கொடுக்கப் பட்டது ஆதி சைவ அந்தணர்களுக்கே.

சைவ விளக்கம் இத்தோடு போதும்.

திருக்குறளின் அகச்சான்றைக் கொண்டு அது சித்தாந்த சைவ கோட்பாடுகளுக்கு முரணாக உள்ளதா என்று ஆராய்ந்து கூறவும். அப்படி கூற இயலவில்லையேல் அது சமணர் நூலென்று கூறுவதை நிறுத்தவும் காரணம் பல குறள்கள் சமண மத கோட்பாடுகளுக்கு முரணாக உள்ளதை இதற்கு முந்தியே எடுத்துக் கூறி விட்டேன். அதற்கு ஏதாவது மறுமொழி கூற முடிந்ததா? இல்லையே. அப்புறம் ஏன் கூறிய  பொய்யயையே மீண்டும் மீண்டும்  கிளிப்பிள்ளைப் போன்று மின் தமிழில் கூறிக் கொண்டிருக்கின்றீர்?

 


சிறப்புத் தமிழில் வைதிகம் பற்றி எழுதுகிறீர். அது பொய்யில்லை என அறிவேன்.

தமிழ்ப் பேராசிரியர்கள் வள்ளுவர் ஜைநர் என எழுதியுள்ளனர். சிறப்புத்தமிழில் ஜைநம் பற்றி முரண்பாடுகளை
நீங்கள் எழுதியுள்ளதால் திருவள்ளுவர் ஜைநர் அல்லர் என முடிவு செய்துவிட்டார்கள்.

நா. கணேசன்

Thenee MK

unread,
Dec 1, 2017, 9:40:13 AM12/1/17
to mintamil
#தமிழ்ப் பேராசிரியர்கள் வள்ளுவர் ஜைநர் என எழுதியுள்ளனர்#

அவர் அவ்வாறு எழுதியதற்கான காரணத்தைக் கூறி தங்களின் கருத்தைப் பதியலாமே. திருக்குறள் அகச் சான்றைக் கொண்டே அக்கூற்றுகள் உண்மையல்ல என்பதை நிருபித்து விடலாம்.



N. Ganesan

unread,
Dec 1, 2017, 9:49:49 AM12/1/17
to மின்தமிழ்


On Friday, December 1, 2017 at 6:40:13 AM UTC-8, தேனீ wrote:
#தமிழ்ப் பேராசிரியர்கள் வள்ளுவர் ஜைநர் என எழுதியுள்ளனர்#

அவர் அவ்வாறு எழுதியதற்கான காரணத்தைக் கூறி தங்களின் கருத்தைப் பதியலாமே. திருக்குறள் அகச் சான்றைக் கொண்டே அக்கூற்றுகள் உண்மையல்ல என்பதை நிருபித்து விடலாம்.


நிறைய எழுதியுள்ளேன். இணையம் தோன்றிய நாளில் இருந்து.

உங்கள் சிறப்புத் தமிழை அறிவேன். தமிழ்ப் பேராசிரியர்கள் தமிழையும் அறிவேன்.
அத் தமிழறிஞர்கள் எழுதியவற்றை பொய்யுரைகள் என்று நீங்கள் மின்தமிழ் குழுவில்
இங்கே நிறுவுவதை சில சமயங்களில் பார்க்கிறேன். ச. வையாபுரிப்பிள்ளையும்
சேஷகிரி சாஸ்திரியும், அ. சக்கிரவர்த்தி நயினாரும், கா. ம. வேங்கடராமையாவும்,
சுவலபில்லும், ... திருவள்ளுவர் ஜைநர் என எழுதியவற்றைப் பொய்யுரைகள்
என நிரூபித்து வருவது வியப்பு அளிக்கிறது. 

ஏதாவது ஆய்வு ஜர்னல்களில் தமிழறிஞர்கள் கூற்றுகள் பொய்யுரைகள்
என ஆய்வுக் கட்டுரை வரையவும். நிச்சயம் படித்து மறுமொழி கொடுப்பேன்.

நா. கணேசன்

 


To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Thenee MK

unread,
Dec 1, 2017, 9:58:58 AM12/1/17
to mintamil
ச. வையாபுரிப்பிள்ளையும்
சேஷகிரி சாஸ்திரியும், அ. சக்கிரவர்த்தி நயினாரும், கா. ம. வேங்கடராமையாவும்,
சுவலபில்லும், ... திருவள்ளுவர் ஜைநர் என எழுதியவற்றைப் பொய்யுரைகள்
என நிரூபித்து வருவது வியப்பு அளிக்கிறது. 


இவர்கள் எதன் அடிப்படையில் திருவள்ளுவர் ஜைனர் என்று கூறுவதை தாங்கள் எடுத்துக்கூறி நிருபிக்கலாமே!. ஏன் அதைச் செய்ய மாட்டேனென்று அடம் பிடிக்கின்றீர்?











To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
Dec 1, 2017, 10:19:09 AM12/1/17
to mintamil
#ஏதாவது ஆய்வு ஜர்னல்களில் தமிழறிஞர்கள் கூற்றுகள் பொய்யுரைகள்
என ஆய்வுக் கட்டுரை வரையவும். நிச்சயம் படித்து மறுமொழி கொடுப்பேன்.#

இங்கேயே மறுமொழி இடலாமே.

எமது கருத்துக்கள் மட்டுமின்றி எத்தனையோ தமிழறிஞர்களின் கட்டுரைகளை 'அறஆழி அந்தணன்' மற்றும் 'திருக்குறள் ஆய்வு' இழையிலும் பதிவேற்றினேனே. அப்பொழுதே மறுமொழி கூறியிருக்கலாமே. ஏன் கூறவில்லை? அவர்கள் தமிழ் மொழிப் புலமையில் தங்களை விடச் சிறந்தவர் என்பதால் பயமா? அல்லது மன குறுக்கமா?

தாங்கள்தானே ஒருமுறை திருக்குறளையொட்டி சைவ கருத்துக்களைப் பதிந்த தமிழறிஞரின் பதிவுகள் இருந்தால் ஏற்றுக் கொள்வேன் என்று கூறினீர். அதனால்தானே அவ்வாறு பல கட்டுரைகளை எடுத்து மின் தமிழில் பதிந்தேன். பின்னர் அக்கட்டுரைகளுக்கு மறுமொழி கூறாமல்  மௌனமாக இருந்து விட்டு அவ்வப்போது வந்து திருவள்ளுவர் ஜைனர் என்று கூறுவது எங்ஙனம் கற்றோருக்கு அழகாகும்?

  






 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
Dec 1, 2017, 10:27:23 AM12/1/17
to mintamil
இதையும் படியுங்கள்






செல்வன்

unread,
Dec 1, 2017, 11:03:20 AM12/1/17
to mint...@googlegroups.com
கபில் சுவலபில் அஒன்னார், வையாபுரி பிள்ளை சொன்னார் என்பதால் எதுவும் உண்மை ஆகாது.

அதற்காக அவர்கள் சொன்னது பொய்யுரை எனவும் பொருள் ஆகாது. மனமறிந்து சொன்னால் தான் பொய். They did a honest mistake here. That does not make them liars, it also prices nothing

So called "Academic consensus " means nothing for truth of a claim.
--

செல்வன்

செல்வன்

unread,
Dec 1, 2017, 11:03:52 AM12/1/17
to mint...@googlegroups.com
Correction:

It also means nothing!
--

செல்வன்

செல்வன்

unread,
Dec 1, 2017, 11:07:48 AM12/1/17
to mint...@googlegroups.com
"கபில் சுவலபிலே சொல்லிவிட்டார்...அவர் பொய்யரா" என வாதத்தை கபில் சுவலபில் பேரை சொல்லி அமுக்க பார்ப்பது appeal to authority வகை logical fallacy 

12. Appeal to Authority (argumentum ad verecundiam)

This fallacy happens when we misuse an authority. This misuse of authority can occur in a number of ways. We can cite only authorities—steering conveniently away from other testable and concrete evidence as if expert opinion is alwayscorrent. Or we can cite irrelevant authorities, poor authorities, or false authorities.

Like many of the other fallacies in this list, the argumentum ad verecundiam (“argument from respect”) can be hard to spot. It’s tough to see, sometimes, because its normally a good responsible move to cite relevant authorities supporting your claim. It can’t hurt. But if all you have are authorities, and everyone just has to “take their word for it” without any other evidence to show that those authorities are correct, well then you have a problem.

--

செல்வன்

N. Ganesan

unread,
Dec 1, 2017, 11:24:58 AM12/1/17
to மின்தமிழ்
2017-12-01 8:03 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:
கபில் சுவலபில் அஒன்னார், வையாபுரி பிள்ளை சொன்னார் என்பதால் எதுவும் உண்மை ஆகாது.

அதற்காக அவர்கள் சொன்னது பொய்யுரை எனவும் பொருள் ஆகாது. மனமறிந்து சொன்னால் தான் பொய். They did a honest mistake here. That does not make them liars, it also prices nothing.

ஆய்வுத் தமிழறிஞர்கள் ஒரு இருபது பேர் முடிபு எடுத்திருப்பது: திருவள்ளுவர் ஜைநர் என்பது.

நீங்கள் இல்லை என்கிறீர்கள். நான் தமிழறிஞர்கள் முடிபை ஏற்பவன்.

கமலநாதன் சிறப்புத் தமிழைப் பார்த்தாலும் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை, ச. வையாபுரிப்பிள்ளை, ....
என்ன சொல்லியுள்ளனர் என விளங்குகிறது.


நா. கணேசன்
 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 1, 2017, 11:25:45 AM12/1/17
to மின்தமிழ்
2017-12-01 7:27 GMT-08:00 Thenee MK <ipohs...@gmail.com>:
இதையும் படியுங்கள்




உங்கள் மெயில் பாக்ஸிலா?

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Dec 1, 2017, 11:30:42 AM12/1/17
to மின்தமிழ்
2017-12-01 7:19 GMT-08:00 Thenee MK <ipohs...@gmail.com>:
#ஏதாவது ஆய்வு ஜர்னல்களில் தமிழறிஞர்கள் கூற்றுகள் பொய்யுரைகள்
என ஆய்வுக் கட்டுரை வரையவும். நிச்சயம் படித்து மறுமொழி கொடுப்பேன்.#

இங்கேயே மறுமொழி இடலாமே.

எமது கருத்துக்கள் மட்டுமின்றி எத்தனையோ தமிழறிஞர்களின் கட்டுரைகளை 'அறஆழி அந்தணன்' மற்றும் 'திருக்குறள் ஆய்வு' இழையிலும் பதிவேற்றினேனே. அப்பொழுதே மறுமொழி கூறியிருக்கலாமே. ஏன் கூறவில்லை? அவர்கள் தமிழ் மொழிப் புலமையில் தங்களை விடச் சிறந்தவர் என்பதால் பயமா? அல்லது மன குறுக்கமா?

தாங்கள்தானே ஒருமுறை திருக்குறளையொட்டி சைவ கருத்துக்களைப் பதிந்த தமிழறிஞரின் பதிவுகள் இருந்தால் ஏற்றுக் கொள்வேன் என்று கூறினீர். அதனால்தானே அவ்வாறு பல கட்டுரைகளை எடுத்து மின் தமிழில் பதிந்தேன். பின்னர் அக்கட்டுரைகளுக்கு மறுமொழி கூறாமல்  மௌனமாக இருந்து விட்டு அவ்வப்போது வந்து திருவள்ளுவர் ஜைனர் என்று கூறுவது எங்ஙனம் கற்றோருக்கு அழகாகும்?



தரம் வாய்ந்த சிறப்புத் தமிழ் மடல்களில் சிலவே படித்துள்ளேன். முழுதும் படிக்க சில காலம் (ஆண்டுகள்) ஆகும். நீங்கள் வைதீகம், இந்திய சமய வரலாறு எல்லாம் கற்றவர்.
எனவே, வேதங்கள் போன்றவற்றைக் கற்க உங்களிடம் வரவேண்டும் எனப் புரிகிறது.

காளைராசனுக்கு சிங்கநெஞ்சன் எழுதிய மடல். சர்ச் பிரசாரம் போல இருக்கும் கட்டுரைகளால்
திருவள்ளுவர் ஜைநர் என்னும் தமிழறிஞர்கள் கருத்துக்கள் பொய்யுரைகள் என இந்தக் குழுவில் நிறுவுகிறீர்கள்.
உங்கள் கட்டுரைகள் ஆய்வு ஜர்னல்ஸில் வரும் போது மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை, ச. வையாபுரியார், சுவெலெபில் போன்றோர்
பொய்யுரைகள் எழுதிவிட்டார் என தெரிந்துகொள்வேன். அதுவரை, தமிழறிஞர்கள் எழுதியுள்ள படி கொள்வேன்.

நா. கணேசன்
 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
Dec 1, 2017, 11:36:09 AM12/1/17
to mint...@googlegroups.com
கபில் சுவலபில் அஒன்னார், வையாபுரி பிள்ளை சொன்னார் என்பதால் எதுவும் உண்மை ஆகாது.

அதற்காக அவர்கள் சொன்னது பொய்யுரை எனவும் பொருள் ஆகாது. மனமறிந்து சொன்னால் தான் பொய். They did a honest mistake here. That does not make them liars, it also prices nothing.

ஆய்வுத் தமிழறிஞர்கள் ஒரு இருபது பேர் முடிபு எடுத்திருப்பது: திருவள்ளுவர் ஜைநர் என்பது.

நீங்கள் இல்லை என்கிறீர்கள். நான் தமிழறிஞர்கள் முடிபை ஏற்பவன்


----


நான் அறிவியல் விதிகளை மட்டுமே நம்புகிறவன்.

Appeal to authority ஆய்வு நெறிகளுக்கு முரணானது என்பதால் அதை ஏற்பது என் வழக்கம் இல்லை 
--

செல்வன்

N. Ganesan

unread,
Dec 1, 2017, 11:39:57 AM12/1/17
to மின்தமிழ்
என் வாழ்க்கை ஆய்வுத் துறை.
தமிழறிஞர்கள் ஆய்வுநெறிகளில் ஏற்பவன்.

அவை பொய்யுரைகள் ஆகா என்பது அறிவேன்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 1, 2017, 11:43:03 AM12/1/17
to மின்தமிழ்


2017-12-01 8:35 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:
கபில் சுவலபில் அஒன்னார், வையாபுரி பிள்ளை சொன்னார் என்பதால் எதுவும் உண்மை ஆகாது.

அதற்காக அவர்கள் சொன்னது பொய்யுரை எனவும் பொருள் ஆகாது. மனமறிந்து சொன்னால் தான் பொய். They did a honest mistake here. That does not make them liars, it also prices nothing.

ஆய்வுத் தமிழறிஞர்கள் ஒரு இருபது பேர் முடிபு எடுத்திருப்பது: திருவள்ளுவர் ஜைநர் என்பது.

நீங்கள் இல்லை என்கிறீர்கள். நான் தமிழறிஞர்கள் முடிபை ஏற்பவன்


----


நான் அறிவியல் விதிகளை மட்டுமே நம்புகிறவன்.

Appeal to authority ஆய்வு நெறிகளுக்கு முரணானது என்பதால் அதை ஏற்பது என் வழக்கம் இல்லை 

என் வாழ்க்கை ஆய்வுத் துறை.
தமிழறிஞர்கள் ஆய்வுநெறிகளில் ஏற்பவன்.

அவை பொய்யுரைகள் ஆகா என்பது அறிவேன்.


திருவள்ளுவர் ஜைநர் என எழுதியுள்ள பல தமிழறிஞர்கள்
ஆய்வியலை அறிவியல் முறையில் நடாத்தியவர்கள்.
புலமைத் துறைபோகியவர்கள். ஏராளமான ஆய்வியல்
நிபுணர்களை மாணவர்களாக இருந்த காலத்தில் இருந்து
நெறிப்படுத்தினோர்.

சர்ச் பிரசாரம் போல் உள்ள மடல்கள் அல்ல அவர்களின்
பல்கலைக்கழக ஆய்வுகளும், நூல்களும்.

ipohsaivite

unread,
Dec 1, 2017, 11:57:14 AM12/1/17
to mint...@googlegroups.com
அதை இங்கே முன் வைத்துப் பேசுங்களேன்.

பேரா. வையாபுரி திருக்குறள் ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்தது எனக் கூறினார். இதனை எந்த தமிழ் அறிஞரும் ஏற்கவில்லை. அப்புறம் அவர் திருவள்ளுவர் ஜைனர் என்று கூறுவதை எப்படி ஏற்பது?

திருவள்ளுவரின் காலத்தைத் தவறவிட்டவர் எப்படி சரியான ஆய்வைச் செய்திருக்க முடியும்? 

கால ஆய்வு தவறானால் அதன் வழி பெறப்பட்ட கருத்தும் தவறாகிவிடும் என்பதைச் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. 

Sent from my Samsung Galaxy smartphone.

-------- Original message --------
From: "N. Ganesan" <naa.g...@gmail.com>
Date: 02/12/2017 00:42 (GMT+08:00)
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] முடிந்தது வள்ளுவர் பற்றிய விவாதம்: சுபமங்களம்

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Dec 1, 2017, 12:09:37 PM12/1/17
to mintamil
2017-12-01 10:42 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


ன்.


திருவள்ளுவர் ஜைநர் என எழுதியுள்ள பல தமிழறிஞர்கள்
ஆய்வியலை அறிவியல் முறையில் நடாத்தியவர்கள்.
புலமைத் துறைபோகியவர்கள். ஏராளமான ஆய்வியல்
நிபுணர்களை மாணவர்களாக இருந்த காலத்தில் இருந்து
நெறிப்படுத்தினோர்.

சர்ச் பிரசாரம் போல் உள்ள மடல்கள் அல்ல அவர்களின்
பல்கலைக்கழக ஆய்வுகளும், நூல்களும்.



அவை சர்ச்ச் பிரசாரங்கள் அல்ல

ஆனால் நீங்கள் அவற்றை அப்படி சர்ச் பிரச்சாரமாக பயன்படுத்தி வருவது உண்மை.

அறிவியலை மதமாக்கி, அறிஞர்களை கடவுளாக்கி, நீங்கள் பூசாரியாக அமர்ந்து எல்லாரையும் அவர்கள் பெயரை சொல்லி மிரட்டி வருகிறீர்கள்.

அறிவியலை அறிவியலாக சொல்வதாக இருந்தால் அவர்கள் சொன்ன ஆதரங்களை முன்வைத்து தான் நீங்கள் பேசவேண்டுமே ஒழிய "அவர் சொன்னார்., இவர் சொன்னார்" என பெயரை வைத்து, அதாரிடிய்யை வைத்து நீங்கள் தொடர்ந்து பேசிவருவது ஆய்வுநெறிமுரைகளுக்கு முரணானது

தேமொழி

unread,
Dec 1, 2017, 6:44:00 PM12/1/17
to மின்தமிழ்
வள்ளுவன் என்பது அந்தப் புலவரின் இயற்பெயர்.

அது சாதிப்பெயர் கிடையாது.

வள்ளுவரை 
நாயனார், 
தேவர், 

என்றெல்லாம் அறிவித்து அந்தக்காலத்திலிருந்து, இக்கால செல்வன் வரை உரிமை கொண்டாடுவதே வழக்கமாகிவிட்டது.

புலவர் ஔவையார் போல  எந்த சமயத்திலும் இருந்திருக்கக் கூடிய  தமிழர்  பெயர் அது.


---

On Wednesday, November 22, 2017 at 9:44:33 PM UTC-8, செல்வன் wrote:
இப்படி வாழும் வரலாறாக வள்ளுவ சாதியினர் இருக்க, வள்ளுவர் சமணர் என செய்யும் காமடி இத்துடன் முடிவுக்கு வருகிறது.

வள்ளுவர் இந்து

சாதி வள்ளுவசாதி

இயற்பெயர் நாயனார்

தொழில்: சோதிடம், அரசனுக்கு அறிவுரை கூறல் (ஆக பழங்காலத்தில் மந்திரியாக இருந்திருக்க வாய்ப்பு அதிகம், குற்ளில் இருக்கும் சோதிடகுறிப்புகள்- திங்களை பாம்பு கொண்டற்று- நினைவுக்கு வருகிறதா?. ரைட்டு)

சுபமங்களம்

-----


தமிழ்நாட்டில் வள்ளுவன் எனும் சாதியினர் ஜோதிடம் கணித்துச் சொல்லும் தொழிலைச் செய்து வருகின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


வார்ப்புரு:வள்ளுவன் {{வள்ளுவன் எனும் சாதி தமிழகத்தின் மிகப் பழமையான சாதிகளுள் ஒன்று. போகர் சித்தர் தனது போகர் ஏழாயிரம் என்ற நூலில் அவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் இருந்த சாதிகளின் பெயர்களை பட்டியலிட்டு உள்ளார். அச் சாதிகளில் வள்ளுவன் சாதியையும் குறிப்பிட்டிருக்கிறார்.}} {{ திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் வள்ளுவன் சாதியில் தோன்றியவர் என்பதாலும், அவரது இயற்பெயர் அறியமுடியவில்லை என்பதாலும், அவர் தமது சாதிப் பெயரான வள்ளுவன் என்ற பெயரில் குறிப்பிடப் படுகிறார் என்பது ஆய்வாளர்களின் கருத்து.}}

வார்ப்புரு:முன்னோர்களின் வாய்மொழி {{வள்ளுவன் சாதியில் சிவ கோத்திரத்தார் வகையினர் தங்களது வள்ளுவன் சாதி ஐந்து சகோதரர்களைக் கொண்டு உருவானதாக தங்களது முன்னோர்களால் வழிவழியாக சொல்லப் பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.}} அதன் படி {{சகோதரர்களில் முதலாமவர் கச்சக் குலாவன், இரண்டாமவர் காக்ய நாய்க்கன், மூன்றாமவர் ஓடிவந்த செல்வன், நான்காமவர் பாலவராயன், ஐந்தாமவர் கூவம் சம்பந்தன். இந்த ஐந்து முன்னோர்களால் உருவாக்கப்பட்ட இச்சாதியில் இவ்வைந்து பெயர்களே தலைமை கோத்திரங்களாக இருக்கின்றன. மற்றவை கிளைக் கோத்திரங்கள். மற்ற சாதியினரைப் போன்றே இவர்களும் ஒரே கோத்திரத்தில் பெண் கொடுப்பது எடுப்பது இல்லை.}} {{இவர்கள் தங்களை நாயனார் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். நாயனார் என்பது இச்சாதியினருக்கான பட்டம் என்று சொல்லப் படுகிறது. திருவள்ளுவர் நாயனார் என்று குறிப்பிடப்படுவதால் இவர்களும் தங்களை நாயனார் என்று அழைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.}} {{வள்ளுவன் சாதியில் சைவம், வைணவம் என இரு பிரிவினர் உள்ளனர். தற்போது இருபிரிவினரும் தங்களுக்குள் திருமணத்தொடர்புகள் கொண்டிருக்கிறார்கள்.}}

வார்ப்புரு:தொழில் {{தமிழகம் முழுவதும் வள்ளுவன் சாதியினர் ஒரே பெயரில் அழைக்கப்படுகிறார்கள் என்றாலும் சில இடங்களில் வேறு பெயர்களிலும் அழைக்கப் படுவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் இச்சாதியினர் தெற்கத்தியர், வடக்கத்தியர் என பிரிந்தே கிடக்கிறார்கள். தங்களை இன்னார் என்று தெரியப் படுத்திக் கொள்வதிலும் இவர்களுக்கு தயக்கம் இருப்பதாகவே தெரிகிறது.}} {{இவர்களில் பெரும்பாலோர் ஜோதிடத் தொழில் செய்து வருகிறார்கள். மேலும் விவசாயம், வேளாண்மை, நாட்டு வைத்தியமும் செய்து வருகிறார்கள்.}} {{இன்று இளைய தலைமுறையினர் போதிய கல்வி அறிவைப் பெற்றிருக்கின்றனர். காலச்சூழலுக்கு ஏற்ப அரசு மற்றும் தனியார் துறைகளில் பலர் பணியாற்றி வந்தாலும், பொருளாதாரத்தில் இவர்களில் பெருபான்மையோர் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறார்கள்.}} வார்ப்புரு:வரலாறு வள்ளுவன் இனத்தைப் பற்றிய வரலாறு முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. அங்கு இங்கு என்று கிடைத்த ஆய்வுகளின் மூலமாக கிடைத்த செய்தி}} {{தொன்மையான இச்சாதியினர் பழங்காலத்தில் அரசர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்துள்ளார்கள். அனைத்து விதமான நற்காரியங்களுக்கும் நேரம் காலத்தைக் கணித்துச் சொல்லும் அரசாங்க ஜோதிடர்களாகவும், அரசர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.}} {{கேரளாவில் உள்ள வள்ளுவநாடு இச்சாதியினர் பெற்றிருந்த பெருமைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.}}


--

செல்வன்

N. Ganesan

unread,
Dec 1, 2017, 8:54:44 PM12/1/17
to மின்தமிழ், vallamai
2017-12-01 15:44 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
வள்ளுவன் என்பது அந்தப் புலவரின் இயற்பெயர்.

அது சாதிப்பெயர் கிடையாது.

வள்ளுவரை 
நாயனார், 
தேவர், 

என்றெல்லாம் அறிவித்து அந்தக்காலத்திலிருந்து, இக்கால செல்வன் வரை உரிமை கொண்டாடுவதே வழக்கமாகிவிட்டது.

புலவர் ஔவையார் போல  எந்த சமயத்திலும் இருந்திருக்கக் கூடிய  தமிழர்  பெயர் அது.



திருவள்ளுவன் என்பது திருக்குறள் இயற்றிய புலவரின் இயற்பெயரே. சாதிப் பெயரில்லை.
இது வெறும் ஊகம் இல்லை. பழைய சான்று இருக்கிறது. முக்கியமான இயற்பெயர்களைப் பட்டியல்
இடும்போது ”திருவள்ளுவன்” என்ற பெயரையும் தருகின்றனர். அதனைப் பார்ப்போம்.

சங்க இலக்கிய காலம் முடிந்தபின்னர் பரத்தமை, புலால், கள் இவற்றை நீக்கப் பாடிய
பெரும்புலவர் திருவள்ளுவர். அவரைப்போல, பிராகிருதத்தில் இருந்து சொற்களைப்
பயன்படுத்தினோர் அவருக்கு முன் யாரும் இல்லை. அதன் பின்னர் இளங்கோ அடிகள்
அதைச் செய்கிறார். இருவரது சமயப் பயிற்சியால் இது நிகழ்கிறது.

ஆதி என்பவள் புலைச்சி. பகவன் என்பவன் பிராமணன் இருவருக்கும் பிறந்தார்
வள்ளுவர். அவர் ஜாதிப் பெயர் என்பதெல்லாம் பிற்காலக் கட்டுக்கதைகள்.
புலவர் சி. இராசியண்ணன்:
வளவ. துரையன்:

 

--

nkantan r

unread,
Dec 2, 2017, 2:36:31 AM12/2/17
to மின்தமிழ்
ராசராசன் என்ன ஜாதி? இப்போ வள்ளுவன் என்ன சாதி? என்ன மதம்? அப்புறம் விஜய் க்ரித்துவன்? ஜாதி இரண்டொழிய என்று கூறிய அவ்வை என்ன சாதி?

எப்பொருள் 'யார் யார் வாய்...' என்பது மறந்து சிவ சிவ, ஹரி ஹரி, ஜைன ஜைன....? என்ன இது?

நான் முன்பே எழுதியது, கீதையிலிருந்து:சதுர்வர்ணம் மயாஸ்ருஷ்டிம் குணகர்ம விபாஜக!

இந்த மயா என்பது கண்ணன் அல்ல. இங்கு கூவும் இந்த மெத்த படித்த, மத சாதி உணர்வு கொண்ட தமிழறிஞர்களே..

rnk

Thenee MK

unread,
Dec 2, 2017, 11:29:35 AM12/2/17
to mintamil

டாக்டர் கமில் சுவலெபில் ‘The Smile of Murugan’ என்னும் நூலின் 10ஆம் அத்தியாயத்தில் ‘The Book of Lofty Wisdom’ என்ற தலைப்பின் கீழ் திருக்குறளைப் பற்றி அவர்தம் கருத்தைப் பதிந்துள்ளார். அக்கட்டுரையிலிருந்து முதல் ஐந்து பக்கங்களை இத்துடன் இணைக்கிறேன்.

 

பக்கம் 156-157-ல் ஜி.யு.போப் அவர்கள், திருவள்ளுவருக்கு கிறிஸ்துவ பாதிரிமார் தொடர்பினால் ஏற்பட்டதின் விளைவே திருக்குறளில் காணப்படும் கருத்தாகும் என்று கூற டாக்டர் கமில் சுவலெபில் அதை மறுக்கின்றார். அவ்வாறு மறுக்கும் பொழுது திருக்குறள் ஜைனரின் அறநெறி கோட்பாட்டை வெளிப்படுத்துவதாக கூறுகின்றார். அதற்கு உதாரணமாக புலால் உண்ணாமையும், கொல்லாமையும் சுட்டிக் காட்டுகின்றார்.

 

மேலும் கடவுள் அதிகாரத்தில் ஜைனர்களால் கூறப்படும் விளக்கங்களைக் கொண்டு விளக்குகின்றார் – பத்தி 3 பக். 157.

 

திருக்குறள் ஜைனர் நூல் என்பதற்கு இவ்வளவுதான் டாக்டர் கமில் சுவலெபிலின் ஆராய்ச்சி!!!.

 

அதற்கப்புறம் ‘The language of Thirukkural’ என்ற துணைத் தலைப்பின் கீழ் பேரா. வையாபுரி பிள்ளை அவர்கள் கொடுத்த மொழிக் கூறுகளை முன்நிறுத்தி தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களைக் காட்டிலும் திருக்குறளில் அதிகமான வடமொழிச் சொற்கள் உள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றார். அவ்வாறு வடமொழிச் சொற்கள் அதிகமாக கலந்திருப்பினும் அது திராவிட முன்மை நூல் (originality) என்றே குறிப்பிடுகின்றார்.

 

மின் தமிழில் முன் வைக்கப்பட்ட வினைக் கோட்பாடுகளின் அடிப்படையில் டாக்டர் சுவலெபில் ஆராயவில்லை. மின் தமிழில் முன் வைக்கப்பட்டு இன்னும் பல குறள்களுக்கு ஜைனரோ அல்லது அவர்களுக்கு ஆதரவாக எழுதுவோரோ விளக்கம் கொடுக்க முடியாமல் போனது பற்றி டாக்டர் கமில் சுவலெபில் எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யவில்லை.

 

திருக்குறளைப் பற்றி பிறர் எழுதி வைத்ததை அறிந்து கூறி விட்டுப் போனாரெணின் அதுவே திருக்குறள் ஜைனர் நூல்  என்று கூறுவதற்கு ஆதாரமாகாது  என்பதனை அவர்தம் உரையைக் கொண்டே கண்டு விட்டோம்.

 

மேலும் ஒன்றை இனி வரும் திருக்குறள் ஆய்வில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சித்தாந்த சைவத்தைக் கூறும் சிவாகமங்களும் கி.பி. 2ஆம் – 3ஆம் நூற்றாண்டு காலவாக்கில் வடமொழியில் இருந்துள்ளதை மறுக்க இயலாது. அதன் காரணமாகவே தொல்காப்பியத்தைக் காட்டிலும் திருக்குறளில் வடமொழிச் சொற்கள் அதிகம் காணப்படுகின்றன. 'ஆதிபகவன்' என்ற சொல் முதல் குறளில் வந்ததும் அவ்வாறே. 


தொல்காப்பியம் மொழி இலக்கணத்தைப் பற்றியது. திருக்குறளோ சமயக் கருத்துகளின் அடிப்படையில் எழுந்த அறத்தைப் போதிக்கும் நூலாகும். அதனால் அதிகமான வடமொழி சொற்கள் கலந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

 

மேற்கூறியதின் அடிப்படையில் டாக்டர் கமில் சுவலெபில்லின் கருத்தைக் கொண்டு திருக்குறள் ஜைனர் நூல் என்று கூறுவதற்கு எவ்வொரு ஆதாரமுமில்லை  என்பதை அறிந்து கொள்வோம். சிவசிவ.

 

மு. கமலநாதன்.



You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
THE BOOK OF LOFTY WISDOM (KAMIL ZVELEBIL).pdf

kanmani tamil

unread,
Dec 4, 2017, 7:19:35 AM12/4/17
to mintamil
<ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய
மன்னன் பெயர் உள்ளது. சிரீவல்லுவன் திருவள்ளுவர் என்றாதல் தமிழாக்கம் ஆகும். அநுஜன் என்ற வடசொல் அநுசன் > அனியன் என்று ஆகும். அதுபோல, தூய தமிழாக்கம்
ஸ்ரீவல்லபன் > சிரீவல்லுவன் >  திருவள்ளுவன்.>28.11.'17 அன்று கணேசன் அவர்கள் எழுதியது .
ஸ்ரீவல்லபன் என்னும் பாண்டிய மன்னன் பெயர் சிரீவல்லுவன் என்று மருவி வழங்குவதற்கு ஒரு கல்வெட்டுச் சான்று கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த மாற்றத்தை அரண் செய்வதற்கு அது போன்ற இன்னொரு சான்றாவது(பேச்சு வழக்கில் ) இருந்தால் தானே அக்கருத்தை ஏற்றுக் கொள்ள இயலும்.
ஏனெனில் இது கல்வெட்டில் காணப்படும் சான்று.வெட்டுப் பிழையாகவும் இருக்க வாய்ப்புண்டு.  
                                                                                               '-ல்ல ->>>>>>>-ள்ளு -'என்ற மாற்றம் எந்த வட்டாரத்திலாவது இருக்கிறதா ?என்று பார்க்க வேண்டும் .
தென்தமிழகத்தைப் பொறுத்த மட்டில் ஸ்ரீவல்லபன் என்ற பாண்டியனின் பெயர் இன்றும்  சீவலப்பேரி என்ற இடப்பெயரில் உயிர்ப்புடன் உள்ளது.
                                         ஸ்ரீவல்லபன்                                                                          பேரேரி 
                                          சீவல்லபன்                                                                             பேரி 
                                         சீவலன்      +     பேரி      -------->       சீவலப்பேரி
பேச்சுத்தமிழில் இரட்டித்த ஒற்று ஒரு ஒற்றாக மாறி வழங்கி வருவதற்கு இன்னும் சான்றுகள் உண்டு.
                                          வற்றாதஇருப்பு --->வத்தாத இருப்பு --->வத்ராப்பு     
 பேச்சுத்தமிழ் மாற்றம் இவ்வாறு இருப்பதால் கல்வெட்டுச் சான்று ஒன்று மட்டும் போதாது என்று கருதுகிறேன்,
கண்மணி 

 
                           




நரசிங்கபுரத்தான்

unread,
Dec 11, 2017, 10:09:20 PM12/11/17
to mintamil
Inline image 1


Valluvan.—The Valluvans are summed up by Mr. H. A. Stuart18 as being “the priests of the Paraiyans and Pallans. Tiruvalluvar, the famous Tamil poet, author of the Kurāl, belonged to this caste, which is usually regarded as a sub-division of Paraiyans. It appears that the Valluvans were priests to the Pallava kings before the introduction of the Brāhmans, and even for some time after it.19 In an unpublished Vatteluttu [304]inscription, believed to be of the ninth century, the following sentence occurs ‘Sri Velluvam Pūvanavan, the Uvac’chan (Ōc’chan) of this temple, will employ daily six men for doing the temple service.’ Again, the Valluvans must have formerly held a position at least equal to that of the Vellālas, if the story that Tiruvalluva Nāyanar married a Vellāla girl is true.20 He is said to have “refused to acknowledge the distinctions of caste, and succeeded in obtaining a Vellāla woman as his wife, from whom a section of the Valluvans say it has its descent. As their ancestor amused himself in the intervals between his studies by weaving, they employ themselves in mending torn linen, but chiefly live by astrology, and by acting as priests of Paraiyans, and officiating at their funerals and marriages, though some refuse to take part in the former inauspicious ceremony, and leave the duty to those whom they consider impure Valluvans called Paraiya Tādas. Another section of the Valluvans is called Ālvar Dāsari or Tāvadadhāri (those who wear the necklace of tulsi beads). Both Saivites and Vaishnavites eat together, but do not intermarry. Unlike Paraiyans, they forbid remarriage of widows and even polygamy, and all males above twelve wear the sacred thread.” According to one account, the Valluvans are the descendants of an alliance between a Brāhman sage and a Paraiyan woman, whose children complained to their father of their lowly position. He blessed them, and told them that they would become very clever astrologers, and, in consequence, much respected. At the Travancore census, 1901, the Valluvans were defined as a sub-division of the Pulayas, for whom they perform priestly functions.

சுரேஷ்குமார் 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 12, 2017, 12:27:08 AM12/12/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம்.

திருவள்ளுவனின் உண்மை வரலாறுதான் யாது?

திருவள்ளுவர் தனது மொழியையோ, நாட்டையோ, காலத்தையோ எந்த வொரு குறளிலும் குறிப்பிடாமல் மறைத்துவிட்டார்.
அவரவர் அவரவர் அறிவுக்கு எட்டியபடி அவரை அடையாளப்படுத்துகின்றனர்.  ஒருபடி மேலே போய் பிறந்தநாள் எல்லாம் குறித்துக் கொடுத்துள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் திருவள்ளுவரைப் பண்டாரம் சமுகத்தினர் தங்களது குலதெய்வமாகப் பரம்பரைபரம்பரையாக  வழிபடுகின்றனர்.
அவர்களைப் பொறுத்தமட்டில் திருவள்ளுவர் பண்டாரம் சமுகத்தைச் சேர்ந்தவர்.


குறள் கூறும் வழிநின்று வாழ்வதே நாம் அவருக்குச் செய்ய வேண்டியது.

அன்பன்
கி.காளைராசன்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Thenee MK

unread,
Dec 12, 2017, 12:43:16 AM12/12/17
to mintamil
திருக்குறளில் கூறப்படும் அகச்சான்றைக் கொண்டு திருவள்ளுவர் என்பார் யாரென்று அறிவதே சிறப்பு. அதை விடுத்து அவரவர் கொண்டுவரும் கட்டுக்கதைகளைக் கொண்டு பொருள் காண புகுமின் மயக்கமே மிஞ்சும். சிவசிவ

அன்புடன் மு. கமலநாதன்
 

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba

unread,
Dec 12, 2017, 2:55:44 AM12/12/17
to மின்தமிழ்
எட்கர் தர்ஸ்டனின் இந்த நூல், இதன் தமிழாக்கம் குலங்களும் குடிகளும் தொகுப்பை தமிழ் ஆராய்ச்சியாளர் ஒவ்வொருவருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். மிக விரிவான நேரடி கலப்பணி ஆய்வில் தொகுக்கப்பட்ட தகவல் களஞ்சியம் இது.
இந்த நூல் களப்பணி போல வேறு யாரும் தமிழகத்தில் இதுவரை நிகழ்த்தியதில்லை என்பதை அறிஞர் சமூகம் மறுக்க இயலாது.

​சுபா

தேமொழி

unread,
Dec 12, 2017, 3:46:35 AM12/12/17
to மின்தமிழ்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 12, 2017, 7:22:36 PM12/12/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம் ஐயா.

On 12 December 2017 at 11:13, Thenee MK <ipohs...@gmail.com> wrote:
திருக்குறளில் கூறப்படும் அகச்சான்றைக் கொண்டு திருவள்ளுவர் என்பார் யாரென்று அறிவதே சிறப்பு. அதை விடுத்து அவரவர் கொண்டுவரும் கட்டுக்கதைகளைக் கொண்டு பொருள் காண புகுமின் மயக்கமே மிஞ்சும். சிவசிவ

அன்புடன் மு. கமலநாதன்

திருவள்ளுர் தனது அடையாளங்களை மறைத்து விட்டார், ஆனால் அவர் வணங்கிய தெய்வங்களை அடையாளங் காட்டியுள்ளார். எனவே திருவள்ளுவரின் சாதியையோ, மொழியையோ, நாட்டையோ, காலத்தையோ கண்டறிந்ததாகக் கூறுவது பிழைபடும்.  ஆனால் திருவள்ளுர் எந்தெந்த குறள்களில் எந்தெந்த தெய்வங்களைக் குறிப்பிடுகிறார் என்பதை கண்டறிந்து அந்த தெய்வங்களை நாமும் வணங்கி உய்வதே சிறப்பு, திருக்குறளைக் கற்றதனாலாய பயன்  என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு ஐயா.

என்னுடைய முகமதிய நண்பர் சிலர் திருக்கயிலாயத்திற்கும் பொற்கோயிலுக்கும் சென்று வழிபட்டு வந்துள்ளார்.  நானறிந்த இந்துக்களில் சிலர் ஏசுவையும் முகமதுவையும் இறைத்துதர் என்றெண்ணி வணங்குகின்றனர். தெய்வம் என்றாலே அது அனைத்து மனிதருக்கும் பொதுவானது.  

Thenee MK

unread,
Dec 13, 2017, 1:26:08 AM12/13/17
to mintamil
வணக்கம் திரு. காளைராசன் அவர்களே,

திருவள்ளுவர் ஞான நெறியில் நின்று கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்னும் படிகளைக் கடந்தவர். அவ்வாறு கடந்தோருக்குச் "சமயம்" ஒரு தடையில்லை. அதனால் அவர் எந்தவொரு சமயத்தையும் குறிப்பாகக் கூறவில்லை. ஆனால் அவர்தம் குறளின் கருத்துக்கள் இல்லறத்திலிருந்தவாரே இறைவன் திருவடியை அடைய வழிகாட்டுவதால் கடுமையான துறவறத்தை அவர் போற்றவில்லை என்பது தெளிவு. மேலும் மறுபிறப்புக் கொள்கையை அவர் ஏற்றுக் கொண்டு கூறுவதால் மறுபிறப்புக் கொள்கையற்ற மதங்களை அவர் குறிக்கவில்லை என்பதையும் அறிந்து கொள்வோம். இவ்வாறு ஒரு தெளிவான நிலையைக் கொண்டு திருக்குறளைப் பின்பற்றி வாழ்ந்தோமானால் நாம் நற்கதி அடைவோம் என்று கூறி சுபமங்களம் பாடுவோம். .

திருவள்ளுவரின் மூலத்தை ஆராய்வதில் இருக்கும் ஆர்வம் அவர் காட்டிய நல்லறத்தைப் பின்பற்றுவதில் இருந்தால் வரவேற்போம். திருக்குறள் காட்டும் நல்வழியைப் பின்பற்றாது திருவள்ளுவரைப் பற்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆராய்ந்து கொண்டிருக்கலாம். அதனால் நமக்கு எந்த பயனும் கிட்டப் போவதில்லை. அதனை எவரும் ஒருமுகத்தோடு ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை. 

அன்புடன் மு. கமலநாதன் 

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 13, 2017, 2:10:44 AM12/13/17
to mintamil
வணக்கம் ஐயா.

2017-12-13 11:56 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:

திருவள்ளுவரின் மூலத்தை ஆராய்வதில் இருக்கும் ஆர்வம் அவர் காட்டிய நல்லறத்தைப் பின்பற்றுவதில் இருந்தால் வரவேற்போம். திருக்குறள் காட்டும் நல்வழியைப் பின்பற்றாது திருவள்ளுவரைப் பற்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆராய்ந்து கொண்டிருக்கலாம். அதனால் நமக்கு எந்த பயனும் கிட்டப் போவதில்லை. அதனை எவரும் ஒருமுகத்தோடு ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை. 

அன்புடன் மு. கமலநாதன் 

உண்மையான  வார்த்தைகள்.
திருக்குறள் எழுதப்பட்ட நோக்கமும் அதுதான்.
புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களைக் கற்று உணராமல்,  புத்தத்தின் பௌதிகத் தன்மைகளை ஆராய்வது போன்று திருவள்ளுவர் பற்றி ஆய்வினால் யாதொரு பயனும் யாருக்கும் ஏற்படப்போவதில்லை.  மாறாக, திருக்குறளைப் படித்து உணர்ந்து உய்வடைவதே சிறப்பு.

தங்களது நற்சொற்களுக்கு நன்றி ஐயா.

செல்வன்

unread,
Dec 13, 2017, 8:16:11 AM12/13/17
to mintamil
குறளின் பொருள் அறியாது அதை படித்து எப்படி புரிந்து கொள்ளமுடியும்?

இக்குழுவில் குறள் ஆசிரியரின் பின்புலம் சமணம் என சொல்லி "கொலையின் கொடியோரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டலொடு நேர் " எனும் குறளின் பொருளை திரித்து மரணதண்டனை கொடுப்பதற்கு வள்ளுவர் எதிரானவர் என்றெல்லாம் காமடி நடந்தது தேனி ஐயாவுக்கு தெரியாது.

அதேபோல ஒவ்வொரு குறளின் பொருளும் அவர் சமணர் என சொல்லி, சொல்லி திரித்து கூறபட்டது. ஆபயன் குன்றும் என்பதில் உள்ள "ஆ " பசுவே அல்ல "ஆகின்ற பயன் குன்றும்" என தான் வள்ளுவர் எழுதினார் என காமடி பண்ணீனார்கள்.

ஆக ஆசிரியரின் பின்புலம் வேண்டாம் என பெருந்தன்மையாக விட்டால் குறளையே அழித்து, திரித்துவிடும் அபாயம் இருப்பதாலாயே அதை தொடர்ந்து விவாதிக்கும் சூழல் உருவாகிறது

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

தேமொழி

unread,
Dec 13, 2017, 12:28:24 PM12/13/17
to மின்தமிழ்


On Wednesday, December 13, 2017 at 5:16:11 AM UTC-8, செல்வன் wrote:
குறளின் பொருள் அறியாது அதை படித்து எப்படி புரிந்து கொள்ளமுடியும்?

இக்குழுவில் குறள் ஆசிரியரின் பின்புலம் சமணம் என சொல்லி "கொலையின் கொடியோரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டலொடு நேர் " எனும் குறளின் பொருளை திரித்து மரணதண்டனை கொடுப்பதற்கு வள்ளுவர் எதிரானவர் என்றெல்லாம் காமடி நடந்தது தேனி ஐயாவுக்கு தெரியாது.

அதேபோல ஒவ்வொரு குறளின் பொருளும் அவர் சமணர் என சொல்லி, சொல்லி திரித்து கூறபட்டது. ஆபயன் குன்றும் என்பதில் உள்ள "ஆ " பசுவே அல்ல "ஆகின்ற பயன் குன்றும்" என தான் வள்ளுவர் எழுதினார் என காமடி பண்ணீனார்கள்.

ஆக ஆசிரியரின் பின்புலம் வேண்டாம் என பெருந்தன்மையாக விட்டால் குறளையே அழித்து, திரித்துவிடும் அபாயம் இருப்பதாலாயே அதை தொடர்ந்து விவாதிக்கும் சூழல் உருவாகிறது


அப்படியா?

சிலம்பின் ஆசிரியர் இளங்கோ என்று தெரிந்தும் இன்னொரு இழையில் பன்மலை அடுக்கம் . . .  குமரிக்கோடு . . . வஞ்சி  என்று இளங்கோ எதைக் குறித்தார் என்ற விவாதம் ஓடுகிறது.


கீழுள்ள பாடல் போல யார் எழுதியது, யாரைக் குறித்து எழுதியது என அறியா வகையில் சங்கப் பாடல்களும் உள்ளன. 

இது போன்ற பாடல்களின்  ஆசிரியரின் பின்புலம் வேண்டாம் எனப் பெருந்தன்மையாக விட்டதால் பாடலையே அழித்து, திரித்துவிடும் அபாயம் இருப்பதாகத் தெரியவில்லையே !!! மேற்கொண்டு  அதைத் தொடர்ந்து விவாதிக்கும் சூழல் குறித்து யாரும் அக்கறை கொண்டதாகவும் தெரியவில்லை. 

பழுமரம் உள்ளிய பறவைகளின் நிலைப்பாடு இது.


கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
அச்சுடைச் சாகாட் டாரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த வெமக்கு மருளி
வியன்மல ரகன்பொழி லீமத் தாழி
அகலி தாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே.


இப்பாட்டைப் பாடிய ஆசிரியர் பாட்டுடைத்தலைவி பெயரும் தெரிந்தில;அதனால்,  இப்  பாட்டின்கண் அமைந்த துறைநோக்கி,“தனிமகள் புலம்பியமுதுபாலை” யெனப் பெயர் கொள்ளப் பட்டது. 

..... தேமொழி 

செல்வன்

unread,
Dec 13, 2017, 1:11:47 PM12/13/17
to mintamil
2017-12-13 11:28 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Wednesday, December 13, 2017 at 5:16:11 AM UTC-8, செல்வன் wrote:
குறளின் பொருள் அறியாது அதை படித்து எப்படி புரிந்து கொள்ளமுடியும்?

இக்குழுவில் குறள் ஆசிரியரின் பின்புலம் சமணம் என சொல்லி "கொலையின் கொடியோரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டலொடு நேர் " எனும் குறளின் பொருளை திரித்து மரணதண்டனை கொடுப்பதற்கு வள்ளுவர் எதிரானவர் என்றெல்லாம் காமடி நடந்தது தேனி ஐயாவுக்கு தெரியாது.

அதேபோல ஒவ்வொரு குறளின் பொருளும் அவர் சமணர் என சொல்லி, சொல்லி திரித்து கூறபட்டது. ஆபயன் குன்றும் என்பதில் உள்ள "ஆ " பசுவே அல்ல "ஆகின்ற பயன் குன்றும்" என தான் வள்ளுவர் எழுதினார் என காமடி பண்ணீனார்கள்.

ஆக ஆசிரியரின் பின்புலம் வேண்டாம் என பெருந்தன்மையாக விட்டால் குறளையே அழித்து, திரித்துவிடும் அபாயம் இருப்பதாலாயே அதை தொடர்ந்து விவாதிக்கும் சூழல் உருவாகிறது


அப்படியா?

சிலம்பின் ஆசிரியர் இளங்கோ என்று தெரிந்தும் இன்னொரு இழையில் பன்மலை அடுக்கம் . . .  குமரிக்கோடு . . . வஞ்சி  என்று இளங்கோ எதைக் குறித்தார் என்ற விவாதம் ஓடுகிறது.



இளங்கோ சமணர் என்பதுக்கு யாரும் மறுப்பு சொல்லவில்லை என்கையில் இது பொருளற்ற வாதம். மற்றபடி நீங்கள் எந்த இழையை சொல்கிறீர்கள் என தெரியவில்லை. படிக்காமல் இன்னொரு இழையை பற்றி கருத்து சொல்ல முடியாது

 


கீழுள்ள பாடல் போல யார் எழுதியது, யாரைக் குறித்து எழுதியது என அறியா வகையில் சங்கப் பாடல்களும் உள்ளன. 

இது போன்ற பாடல்களின்  ஆசிரியரின் பின்புலம் வேண்டாம் எனப் பெருந்தன்மையாக விட்டதால் பாடலையே அழித்து, திரித்துவிடும் அபாயம் இருப்பதாகத் தெரியவில்லையே !!! மேற்கொண்டு  அதைத் தொடர்ந்து விவாதிக்கும் சூழல் குறித்து யாரும் அக்கறை கொண்டதாகவும் தெரியவில்லை. 

பழுமரம் உள்ளிய பறவைகளின் நிலைப்பாடு இது.


கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
அச்சுடைச் சாகாட் டாரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த வெமக்கு மருளி
வியன்மல ரகன்பொழி லீமத் தாழி
அகலி தாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே.


இப்பாட்டைப் பாடிய ஆசிரியர் பாட்டுடைத்தலைவி பெயரும் தெரிந்தில;அதனால்,  இப்  பாட்டின்கண் அமைந்த துறைநோக்கி,“தனிமகள் புலம்பியமுதுபாலை” யெனப் பெயர் கொள்ளப் பட்டது. 

..... தேமொழி 



போர்க்களத்தில் எதிரி நாட்டு அரசன், தளபதிகளை குறிவைத்து அழித்துவிட்டு தான் போர்வீரர்கள் பக்கம் திரும்புவர்.

அம்மாதிரி வள்ளூவர், அவ்வையாரை சமணர் என சொல்லி நிருபித்துவிட்டு அதன்பின் மற்ற புலவர்கள் பக்கம் வருவார்கள். அதுவரை பொறுமை காக்கும்படி வேண்டுகிறேன் :-)

தேமொழி

unread,
Dec 13, 2017, 1:30:44 PM12/13/17
to மின்தமிழ்


On Wednesday, December 13, 2017 at 10:11:47 AM UTC-8, செல்வன் wrote:


2017-12-13 11:28 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Wednesday, December 13, 2017 at 5:16:11 AM UTC-8, செல்வன் wrote:
குறளின் பொருள் அறியாது அதை படித்து எப்படி புரிந்து கொள்ளமுடியும்?

இக்குழுவில் குறள் ஆசிரியரின் பின்புலம் சமணம் என சொல்லி "கொலையின் கொடியோரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டலொடு நேர் " எனும் குறளின் பொருளை திரித்து மரணதண்டனை கொடுப்பதற்கு வள்ளுவர் எதிரானவர் என்றெல்லாம் காமடி நடந்தது தேனி ஐயாவுக்கு தெரியாது.

அதேபோல ஒவ்வொரு குறளின் பொருளும் அவர் சமணர் என சொல்லி, சொல்லி திரித்து கூறபட்டது. ஆபயன் குன்றும் என்பதில் உள்ள "ஆ " பசுவே அல்ல "ஆகின்ற பயன் குன்றும்" என தான் வள்ளுவர் எழுதினார் என காமடி பண்ணீனார்கள்.

ஆக ஆசிரியரின் பின்புலம் வேண்டாம் என பெருந்தன்மையாக விட்டால் குறளையே அழித்து, திரித்துவிடும் அபாயம் இருப்பதாலாயே அதை தொடர்ந்து விவாதிக்கும் சூழல் உருவாகிறது


அப்படியா?

சிலம்பின் ஆசிரியர் இளங்கோ என்று தெரிந்தும் இன்னொரு இழையில் பன்மலை அடுக்கம் . . .  குமரிக்கோடு . . . வஞ்சி  என்று இளங்கோ எதைக் குறித்தார் என்ற விவாதம் ஓடுகிறது.



இளங்கோ சமணர் என்பதுக்கு யாரும் மறுப்பு சொல்லவில்லை என்கையில் இது பொருளற்ற வாதம். 
மற்றபடி நீங்கள் எந்த இழையை சொல்கிறீர்கள் என தெரியவில்லை. படிக்காமல் இன்னொரு இழையை பற்றி கருத்து சொல்ல முடியாது

மட்டுறுத்தர் குழும இழைகளைப் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டாமோ?  என்ன மட்டுறுத்தர் நீங்கள்?

உங்களைச் சொல்லியும் குற்றமில்லை.  வஞ்சி, குமரிக்கோடு எனப்  பல இழைகளில் வந்தால் நீங்களும்தான் எந்த இழை என்று நினைவில் வைத்துக் கொள்வீர்கள் ! பாவம்.
Reply all
Reply to author
Forward
0 new messages