சைவ சித்தாந்த சாத்திரங்கள் முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் உரை

229 views
Skip to first unread message

palaniappan m

unread,
Dec 2, 2009, 8:08:19 PM12/2/09
to minT...@googlegroups.com

நூல் அறிமுகம்
சைவ சித்தாந்த சாத்திரங்கள்  முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் உரை.
முனைவர் மு. பழனியப்பன்

தமிழர்களின் தத்துவக் கொடைகளுள் குறிக்கத்தக்கது  சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகும். பதினான்கு சாத்திரங்கள் என்ற நிலையில் பதினான்கு நூல்களை உள்ளடக்கியதாக இத்தொகுப்பு விளங்குகின்றது.இப்பதினான்கு நூல்களிலும் இறைவனின் தன்மைகள், ஆன்மாவின் நிலைகள், இறைவனை ஆன்மா அடைய முடியாததற்கான தடைகள் முதலியன பற்றிய செய்திகள் எடுத்துக் காட்டப் பெறுகின்றன.

 மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் என்பது சைவ தத்துவங்களில் தலைமேல் வைத்துப் போற்றக் கூடிய அடிப்படை நூல் ஆகும். இது தவிர திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சு விடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் போன்ற நூல்கள் இத்தொகுப்பில் அடங்குகின்றன.

 தத்துவச் செய்திகள் மிகுந்து காணப்படும் இத்தொகுப்பிற்கு அனைவரும் புரிந்துக் கொள்ளத் தக்கநிலையில் தற்போது எளிய உரைநூல் ஒன்று வந்துள்ளது. முனைவர் பழ. முத்தப்பன் அவர்கள் இந்நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஒரே தொகுப்பாக வந்துள்ள இந்நூல் ஏறக்குறைய  ஆயிரத்து இருநூறு பக்கங்களாக விரிந்துள்ளது. கெட்டி அட்டையுடன் நல்ல தாளில் சென்னை உமா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். நூலின் விலை ருபாய் ஐநூறு.

 இத்தொகுப்பினுள் ஒவ்வொரு நூலைப்பற்றிய அறிமுகம், ஆசிரியர் அறிமுகம் நூலின் பாடல்கள், அதற்கான பொருள், அப்பாடலின் கடினமான சொற்களுக்குப் பொருள் என்பன அடங்கியுள்ளன. குறிப்பாக பாடல்கள் ஒருவகையான எழுத்துருவிலும், அதற்கான எளிய உரை தடித்த எழுத்துருவிலும், சொற்பொருள் விளக்கம் ஒரு வடிவத்திலும்  நூல் முழுவதும் இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளது. இது படிப்பவர்க்கு மிக்க துணை செய்கிறது.

 இந்நூலில் மிக ரசமான பகுதி என்றால் ஒவ்வொரு நூலைப் பற்றிய அறிமுகமும், அந்நூலாசிரியர் பற்றிய செய்தியுமே ஆகும். எடுத்துக்காட்டிற்குப் பின்வரும் பகுதியைச் சுட்டலாம்.


 `இவர் ( கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியார்) ஒரு நாள் கூத்தப் பெருமானுக்கு வழிபாடு முடித்துத் தம் வீட்டிற்கு வழக்கமாக தனக்கு அமைந்த விருதுகளோடு சிவகைமேல் சென்றார்.  அவ்வாறு செல்லும்பொழுது வீதியில் ஒரு திண்ணையில் வீற்றிருந்த மறைஞான சம்பந்தர் உமாபதியார் செல்லும் காட்சியைக் கண்டார். கண்டவுடன்
" பட்ட கட்டையில் பகற்குருடு ஏகுதல் பாரீர்'' என்றார். அச்சொற்களைக் கேட்ட உமாபதி சிவம் சிவகையில் இருந்து இறங்கி மறைஞான சம்பந்தர் திருவடிகளைத் தொழுதார். மறைஞானசம்பந்தர் சொன்ன தொடருக்குப் பொருள் கேட்டுடத் தெளிந்து அவர்க்கு மாணவர் ஆனார்.  பட்ட கட்டை என்பது சிவிகையைக் குறிக்க விருது ஆகிய விளக்கைப் பகல் நேரத்திலும் கொண்டு சென்றதால் அதனைப் பகற்குருடு என்பது குறிக்க அமைந்த ஞானாசிரியன் திருவாக்கு உமாபதி சிவத்திற்கு ஞானத்தைத் தந்தது. '' (ப. 791)


 இதுபோன்ற பல சுவையான செய்திகள் இதனுள் உள்ளன. உமாபதி சிவம் என்பவர் இப்பதினான்கில் செம்பாதிக்குமேல் எழுதியவர் ஆவார். இவர் ஞானம் பெற்ற வரலாற்றை மேற்பகுதி சுட்டுகிறது.

இந்நூலுள் செய்யுள்களுக்கான உரையினைச் சொல்லும்போதும் எளிமை நடை பின்பற்றப் பெற்றுள்ளமை போற்றத்தக்கது. அதற்கு ஒரு காட்டு பின்வருமாறு.

 பல்ஆருயிர் உணரும் பான்மை எனமேலொருவன்
 இல்லாதான் எங்கள் இறை

என்பது திருவருட்பயன் பகுதியில் வரும் ஒரு குறட்செய்யுள் ஆகும். இதற்குப் பின்வரும் நிலையில் எளிய நடையில் உரை அமைகின்றது.

 `அளவில்லாதவனாய் எங்கும் நிறைந்திருக்கும் ஆன்மாக்கள் அறிவிக்க அறியும் தன்மைபோல தனக்கு மேலாய் நின்று உணர்த்துகின்ற ஒருவரை இல்லாதவன் எங்கள் இறை ''


இவ்வாறு ஒவ்வொரு தத்துவப் பாடலிற்கும் எளிமையோடு உரை தந்துள்ள இந்நூல் தமிழர்தம் நூலகத்துள்ளும், அகத்துள்ளும் இருக்க வேண்டிய நன்னூல்.

சைவ சித்தாந்த சாத்திரங்கள், முனைவர் பழ. முத்தப்பன் ( உரை ஆசிரியர்) உமாபதிப்பகம், 18/171 பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை1 விலை ருபாய் 500



--
M.Palaniappan
manidal.blogspot.com
puduvayalpalaniappan.blogspot.com

plmbook.JPG

V, Dhivakar

unread,
Dec 3, 2009, 2:15:22 AM12/3/09
to mint...@googlegroups.com
சைவ சமய சாத்திரங்களுக்கு எளிய உரையில் புதிய புதிய புத்தகங்கள் வெளி வருவது மிகவும் வரவேற்கத்தக்கது.
 
தத்துவங்கள், சித்தாந்தங்கள் பொதுவாக மனிதநிலையின் மேம்படுத்தப்பட்ட நிலைக்காக வெளிப்படுத்தப்பட்டது. அனைவரும் படித்துப் பயன்பெறும் வகையில் எளிய உரைகள் இந்தக் கால கட்டத்துக்கு மிக அவசியத் தேவையாகிவிட்டது. சென்ற நூற்றாண்டு வரை, சித்தாந்தங்களும் அதன் விரிவாக்கங்களும் செவி வழியாக ஏற்றப்பட்டதால், அவைகளின் பலன் நல்ல முறையில் நிறைவேறிக் கொண்டிருந்தது என்றே சொல்லலாம். ஆனால் காலம் மிக வேகமாக மாறிவிட்ட சூழ்நிலையில் பாமர அறிவுடையவனுக்கும் புரிந்துகொள்ளவேண்டிய அளவில் பெரியவர்களால் எளிய வகையில் உரைகள் மேலும் மேலும் எழுதப்படவேண்டும்.
 
நன்றி, திரு பழனியப்பன்!
 
பி.கு. உமாபதி சிவாச்சாரியார் குறித்து பல தகவல்கள் இந்த குழுமத்தில் பறிமாறிக்கொள்ளப்பட்டன. அவரின் செந்தமிழ்ச் சேவையும், சைவத் திருப்பணியும் நிகரில்லாதது. மின் தமிழின் பழைய சேகரங்களில் உமாபதி சிவாச்சாரியரின் தகவல்கள் பெறலாம். சமீபத்தில் கீதா சாம்பசிவம் அவர்கள் கூட தமிழ் வளர்த்த பெரியார்கள் கட்டுரைத் தொடரில் சமீபத்தில் (மின் தமிழில்) எழுதியுள்ளார்.
 
இன்று இருக்கும் சைவ மடங்களுக்கு ஆதிமூலம் அவர்தான் என்றால் அது மிகை இல்லை.
 
திவாகர்

 

N. Kannan

unread,
Dec 3, 2009, 6:33:31 AM12/3/09
to mint...@googlegroups.com
சைவ சித்தாந்தம் குறித்த ஒரு மிகப்பெரிய தொகுப்பு நம் மின்தமிழுக்கு
வரவிருக்கிறது. அதன் அடிப்படைத் தரவுகளை சுபாஷினி செய்துவிட்டார்கள்.
முனைவர்.கி.லோகநாதன் பினாங் மாநகரில் செய்த தொடர் விரிவுரைகள்
ஒலிப்பதிவாக எங்களுக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. சுபா சென்னை சென்று
மீண்டபின் இப்பணிகள் தொடரும். ஒரு சைவ வளாகமொன்று உருவாக்கத்திட்டம்.
இறைவன் திருவருள் கூட வேண்டும்.

நா.கண்ணன்

2009/12/3 V, Dhivakar <venkdh...@gmail.com>:>

விஜயராகவன்

unread,
Dec 3, 2009, 8:26:00 AM12/3/09
to மின்தமிழ்
On 3 Dec, 01:08, palaniappan m <muppalam2...@gmail.com> wrote:
> நூல் அறிமுகம்
> சைவ சித்தாந்த சாத்திரங்கள்  முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் உரை.
> முனைவர் மு. பழனியப்பன்
>
> தமிழர்களின் தத்துவக் கொடைகளுள் குறிக்கத்தக்கது  சைவ சித்தாந்த சாத்திரங்கள்
> ஆகும். பதினான்கு சாத்திரங்கள் என்ற நிலையில் பதினான்கு நூல்களை உள்ளடக்கியதாக
> இத்தொகுப்பு விளங்குகின்றது.

Hello

I am writing from a place where I don't have Tamil fonts and hence in
English.

Whenever Saiva Siddhantam is presented in Tamil , it is always
presented as though it is sole creation and 'true genius' of Tamils.

If you look into English writings on Saiva Siddhantam, for example
Wikipedia article, Kashmiri Saivism is given as the origin of Saiva
Siddhnata. Take any writing in English on the subject, lots of
references to Sanskrit works is given. It looks like after 10th
century, Kashmiri saivism lost it's vitality in it's land of origin
and generally North India. After 10th C, Tamil nadu became the focus
of Saiva Siddhanta. However, the roots of Saiva Siddhanta and it's
theorratical underpinnings and rituals lie in sankrit texts.

For example from a an indological writing

Helene Brunner
Saivagamas and the School of saiva Siddhanta

It is well-known to any student of Indology that Southern saivism is
based on a corpus of Sansrit texts that were pr0bably writtem before
8th century and go by the name of Agamas or more precisely as
Saivagamas.............Even though the priests of Siva temples (called
Gurukkals in Tamil) do not draw the instructions directly from these
works , but take them instead from Sansrit or Tamil manual, which are
easier to use, yet it is a fact that these manuals transmit the
formulas, the acts, the meditations, and the theortaical explications
that were first given in the Agamas.


Why in general Tamil writing on Saiva Siddhantma , there is a blind
eye to the Kashmiri and sanskrit contributions?


Regards

Vanbakkam Vijayaraghavan

N. Kannan

unread,
Dec 3, 2009, 9:31:16 PM12/3/09
to mint...@googlegroups.com
2009/12/3 விஜயராகவன் <vij...@gmail.com>:

> Whenever Saiva Siddhantam is presented in Tamil , it is always
> presented as though it is sole creation and 'true genius' of Tamils.
>


அப்படித்தான் ஒரு கருத்து நிலவுகிறது. தமிழ் என்றால் சைவம்.
மணிப்பிரவாளம்/ வடமொழி என்றால் வைணவமென்று. லண்டன் வானொலி நேர்காணலில்
என்னைக் கேட்டார்கள், 'விஷ்ணு' என்ற சொல்லிலிருந்தே தெரியவில்லையா அது
வடமொழித் தோற்றமென்று என்று. விளக்குவதற்குல் பெரும்பாடு பட்டேன்.

தென்னாடுடைய சிவன் இருக்கும் இடம் வடநாடு (இமயம்)
சைவ சித்தாந்த குரு திருமூலர் வந்தது வடக்கிருந்து (அதுதான்
காஷ்மீரத்தின் குறியீடு என்று எண்ணுகிறேன்).
இன்றுவரை சைவ ஆதீனங்களே சமிஸ்கிருத பூஜையை ஆதரித்து வருகின்றன.

எங்கோ பிழை இருக்கிறது;-)

க.>

V, Dhivakar

unread,
Dec 3, 2009, 11:34:06 PM12/3/09
to mint...@googlegroups.com
எங்கோ பிழை இருக்கிறது;-)

மிக மிக தவறான கருத்தைக் கொண்டுள்ளீர்களோ என்று கவலையுறுகிறேன் கண்ணன்..
 
பிழை என்றால் தவறு, குற்றம் என்ற வகையில் பொருள் உள்ளது.
 
பொதுவாகவே மதங்களையோ (சனாதன வகையில்), தெய்வங்களையோ பார்க்கும் வகையில் அவைகளை பரந்த நோக்கோடு பாரதப் பார்வையோடு பார்ப்பதுதான் பெரியவர்கள் வழக்கம். இதின் ஏன் மொழியோ அல்லது மதப் பிரிவினைகளோ பங்கு பெறவேண்டும்?
 
பாரத சமுதாயம் நில வகையில் பிரிந்தே கிடந்தாலும் ஆன்மீகவகையில் மிகவும் ஒற்றுமையானதே. இதுவும் மிகவும் பலப்படுத்தவேண்டியது. இந்த ஆன்மீகவழி ஒன்றே பாரதத்தை ஒட்டி இன்னும் 'பத்திரமாக' வைத்திருக்கிறது.
 
சைவ வகைகளில் காஷ்மீர சைவ வகை என்பது என்ன? அல்லது தமிழக சைவம் என்பது என்ன? எல்லாம் ஒன்றே மூலம்.
 
வைணவத்தைப் பற்றி வேறு இதழில் பேசலாம்.
 
அகோரசிவாச்சாரியார் எனும் வங்காளர் 11ஆம் நூற்றாண்டில் தென்னகம் வந்தார். இவர் பன்னிரண்டு சைவ மடங்களை நாடெங்கும் ஸ்தாபித்ததாக சைவத் தமிழ் வரலாறுகள் கூறுகின்றன. இதன் நீட்சிகளே சைவத் திருமடங்களாக இன்று விளங்கும் ஆதீனங்கள். ஊரன் அடிகள் மிக விரிவாக புத்தகம் எழுதியிருக்கிறார்.
 
சைவத்துக்கோ வைணவத்துக்கோ இந்தியாவில் எல்லையே இல்லை. எல்லையே எல்லையே இல்லை.
 
திவாகர்

N. Kannan

unread,
Dec 3, 2009, 11:40:07 PM12/3/09
to mint...@googlegroups.com
2009/12/4 V, Dhivakar <venkdh...@gmail.com>:

>
> சைவத்துக்கோ வைணவத்துக்கோ இந்தியாவில் எல்லையே இல்லை. எல்லையே எல்லையே இல்லை.
>

அதைத்தானே நானும் சொல்கிறேன் ;-)

க.>

Geetha Sambasivam

unread,
Dec 4, 2009, 2:36:42 AM12/4/09
to mint...@googlegroups.com
//சைவ வகைகளில் காஷ்மீர சைவ வகை என்பது என்ன? அல்லது தமிழக சைவம் என்பது என்ன? எல்லாம் ஒன்றே மூலம்.//

வேறே என்றே நினைக்கிறேன். இப்போ இந்தக் கலந்துரையாடலில் பங்கு பெற முடியாமல் வேலை அதிகம். பின்னர் வருகிறேன். அதுக்குள்ளே விளக்கங்களும் பெற்று விட முயற்சிக்கிறேன். சில புத்தகங்கள் படிக்கவேண்டும். மாதங்கள் கூட ஆகலாம்.

2009/12/4 V, Dhivakar <venkdh...@gmail.com>

Satheesh kumar R

unread,
Dec 4, 2009, 4:27:17 AM12/4/09
to mint...@googlegroups.com
சைவத்துக்கும் வைணவத்துக்கும் இந்தியாவில் எல்லை இல்லை என்று நீங்கள் சொல்லுகிறீர்கள், ஆனால் இப்பொழுது நான் இருக்கும் குவைத் ஒரு காலத்தில் குவையம்பதியாக இருந்ததென்றும், மக்கனீச்சுவரம், மதீனீச்சுவரம் இங்கு அரேபியாவில் இருந்ததென்றும் இங்கிருக்கும் நம்மவர் கூறுகின்றனர். இதனை ஆய்வு செய்த மேநாட்டவரின் அறிக்கையை கொடுப்பதாகச் சொல்லியிருக்கின்றனர், கிடைத்தவுடன் அது பற்றி எழுதுகிறேன்.

ஈசன் திருவிளையாடல் நடத்தியது தமிழ் பாண்டி நாட்டில் தான், பிள்ளைக்கறி கேட்டது தென்னாட்டில் தான், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் என்று பட்டம் கொடுத்தது தென்னாட்டில் தான். தென்னாடு வடநாடு எல்லாம் இப்பொழுது மனிதனால் வரையறுக்கப் பட்டதுதானே, இறைவனுக்கு எல்லையேது!

சதீஷ்

4 டிசம்பர், 2009 7:34 am அன்று, V, Dhivakar <venkdh...@gmail.com> எழுதியது:

Satheesh kumar R

unread,
Dec 4, 2009, 4:32:22 AM12/4/09
to mint...@googlegroups.com
உலகிலேயே உயர்ந்த மலை இமயமலை அதில் கொண்டுபோய் கைலாயத்தை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர் என்றால்,தியோடலைட் எடுத்துக் கொண்டுபோய் ஒவ்வொரு மலையையும் அளந்து பார்த்தா வைத்தனர்?

சில விஷயங்கள் நம் அறிவிற்கு அப்பாற்பட்டது, அற்ப மானிட அறிவாலோ, கண்களாலோ அதை கண்டுவிட முடியாது...

சதீஷ்

devoo

unread,
Dec 4, 2009, 4:59:43 AM12/4/09
to மின்தமிழ்
Dec 4, 2:32 pm, Satheesh kumar R

>> தென்னாடு வடநாடு எல்லாம் இப்பொழுது மனிதனால் வரையறுக்கப்
பட்டதுதானே, இறைவனுக்கு எல்லையேது!<<

'முந்தீ விளக்கிற்றுஞ்சம் பொற்கோட்டிமயமும்,பொதியமும் போன்றே’
‘ஆஸேது ஹிமாசலம்’
செப்பு மொழி பதினெட்டானாலும் சிந்தனை ஒன்றே !

எல்லைகளை ஆண்டவனும் வரையறுக்கவில்லை; ஆன்றோரும் வரையறுக்கவில்லை.

தேவ்

விஜயராகவன்

unread,
Dec 4, 2009, 5:05:45 AM12/4/09
to மின்தமிழ்
On 4 Dec, 02:31, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/12/3 விஜயராகவன் <viji...@gmail.com>:
>
> > Whenever Saiva Siddhantam is presented in Tamil , it is always
> > presented as though it is sole creation and 'true genius' of Tamils.
>
>
> எங்கோ பிழை இருக்கிறது;-)
>
> க.>

I think this myth was started by G.U.Pope who translated Tiruvasagam
and saiva Siddhanta works from Tamil. But he had no idea of the
background.

On the other hand among Srilankan Tamils , Saivism is the default ,
their the equation of Tamils (i.e. Sl Tamils) = Saivaites is stronger,
which has some justification.

Vijayaraghavan
Reply all
Reply to author
Forward
0 new messages