பரமேஸ்வரம் ரமேஸ்வரம் மேஸ்வரம் ஈஸ்வரம் - திருவிந்தளூர் பரிமளரங்கன்

39 views
Skip to first unread message

Kumaran Malli

unread,
Apr 8, 2009, 11:12:12 PM4/8/09
to minT...@googlegroups.com
“குமுதவல்லி. நண்பகல் பொழுது ஆகிவிட்டது. விரைந்து செல்லவேண்டும். திருவாராதனமும் பெற்று திருவமுதைக் கண்டருளி பரிமளரங்கன் திருக்கண் வளரத் தொடங்குவதற்கு முன் அவன் திருமுன் நிற்க வேண்டும். திருத்தலத்தார் நண்பகல் திருவாராதனத்திற்குப் பின் திருக்கோவிலுக்குத் திருக்காப்பிடுவார்களோ இல்லையோ தெரியவில்லை. நம்மைக் கட்டாயம் கண் குளிர நோக்கி வாரியணைத்து நலம் வினவி அத்தாணிச்சேவகத்தில் ஏவுவான் பரிமளரங்கன். ஆனாலும் அவனை நெடுநேரம் காக்க வைக்காமல் விரைந்து செல்லவேண்டும்”

வாள்வலியால் மாயோனிடமிருந்தே நேரடியாக நாராயண மந்திரத்தைக் கொண்ட கலியன் பரகாலன் கலிகன்றி திருமங்கை மன்னனும், அரட்டமுக்கியை அறவழியில் திருப்பிய குமுதவல்லி நாச்சியாரும் மருவினிய மைந்தன் பரிமளரங்கனைக் காணும் பேராவலோடு விரைந்து திருவிந்தளூர் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.


***

"என் அடியவர்கள் இருவர் என்னைக் காண இங்கே வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் நான் இருக்கும் ஊருக்கெல்லாம் சென்று என்னை இனிய தமிழால் பாடுபவன். அவனிடம் கொஞ்சம் விளையாட நினைக்கிறேன். பரகால நாயகியாய் உருமாறி என் பிரிவைத் தாங்காமல் அவன் நீர்ப்பாண்டமாய் உருகியதுண்டு. ஆனால் இப்போது தன் மனைவியுடன் இங்கே வருகிறான். அப்போது அவனால் என் நாயகியாய் உருமாற இயலாது. அவன் தானாக - தன் ஆண் உருவுடனேயே நின்று என் பிரிவைத் தாங்காமல் உருகி இனிய தமிழால் என்னைப் பாடிக் கேட்கும் ஆவல் கொண்டுள்ளேன். அதனால் பட்டரே, திருவாராதனத்தை விரைவில் நடத்தி திருக்காப்பிட்டுவிட்டு வாசலில் நில்லுங்கள்".

நண்பகல் பூசை செய்ய பூசைத் திரவியங்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்த அருச்சகர் அசரீரியாய் ஒலித்த அக்குரல் எம்பெருமானின் திருக்கட்டளையே என்று உணர்ந்து அதற்கேற்ப பூசையை விரைவில் முடித்துக் கொண்டு திருக்கோவில் கதவைத் தாளிட்டுவிட்டு அங்கேயே நின்று கொண்டார்.

***

"அடடா. இதென்ன கொடுமை. திருக்காப்பிட்டு விட்டார்களே. பரிமளரங்கன் நம்மை புறந்தள்ளான் என்றல்லவோ நினைத்தோம் குமுதா. நம்மை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு இவன் கண்வளர்ந்துவிட்டானே.

திருத்தலத்தாரே. திருவாராதனத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறதே. இவ்வளவு விரைவில் திருக்காப்பிட்ட காரணம் என்ன? தேவரீர் அருள் கூர்ந்து திருக்காப்பினை நீக்கிப் பரிமளரங்கனைக் காட்டியருள வேண்டும்"

"ஆழ்வாரே. எம்பெருமானின் திருக்கட்டளையின் படியே திருக்காப்பு இடப்பட்டிருக்கிறது. எங்களால் ஆவதொன்றில்லை. மன்னிக்க வேண்டும்"

"என்ன எம்பெருமான் திருக்கட்டளையா?

திருவிந்தளூர்த் திருமாலே. இது உமக்கே அழகாக இருக்கிறதா?

உம்மையே தொழுது உமது அடிமைத் தொழிலே உயிருக்கு ஆதாரமாய் உடைய உமது அடியார்கள் நாங்கள். பேரின்பம் பெற வானுலகம் செல்ல வேண்டும் என்ற நிலையின்றி எல்லா இன்பங்களையும் இங்கேயே உமக்கடிமைத் தொழில் செய்து பெற்றோம் என்று எண்ணியிருந்தோம். அப்படிப்பட்ட எங்களின் இரங்கத்தக்க நிலை கண்டு ஆ ஆ என்று இரங்கி உமது திருமுகத்தை ஒரு முறையேனும் காட்டி விரைவாக உமது திருப்பணியில் நியமித்து அருளினால் ஆகாதா? நாங்கள் உய்ந்து போவோமே.

நும்மைத் தொழுதோம் நும் தம் பணி செய்திருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி ஆவா என்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே.


உமது இரக்கத்தால் அன்றி எங்கள் முயற்சியால் உமது திருமுகம் காணக் கிடைக்குமோ? கடலிலே நீர் வற்றுவதுண்டோ? உமது திருவுள்ளத்திலும் இரக்கம் மாறுவதுண்டோ? எங்களை ஏன் இப்படி நோக வைக்கிறீர்?

திருவிற்கும் திருவான செல்வனே. உம்முடைய காரணமில்லாத கருணையினால் நீரே வந்து எங்கள் சிந்தையில் நீங்காது அமர்ந்து கொண்டீரே. எங்கள் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பது போல் எங்கள் சிந்தைக்கும் தெரியாமல் இருந்தால் இந்த நோவு எங்களுக்குக் கிடையாதே. எப்படி எங்கள் சிந்தையில் புகுந்தீரோ அப்படியே உமது திருவடிவையும் காட்டித் தர வேண்டும்.

உம்மை நினைக்கும் தோறும் இனியவனாக இருக்கிறீரே. காணும் போது இன்னும் இனிமையாக இருப்பீரே என்றும் இளைய மருவினிய மைந்தா. அழகிய குளிர்ந்த திருவாலி நகர்த் திருமாலே. திருமாலிருஞ்சோலையில் வாழ் யானைக்கன்றே. என்றும் அணையாத விளக்கின் சுடரே. திருநறையூரில் நின்ற அழகிய நம்பி. திருவிந்தளூர் எந்தாய். அடியோங்கள் எங்களுக்கு சிறிதும் இரங்க மாட்டேன் என்கிறீரே.

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே! மருவினிய
மைந்தா! அம் தண் ஆலி மாலே! சோலை மழகளிறே!
நந்தா விளக்கின் சுடரே! நறையூர் நின்ற நம்பீ! என்
எந்தாய்! இந்தளூராய்! அடியேற்கு இறையும் இரங்காயே.


நீர் உமது குணத்திற்கு எதிராக இப்படி சிறிதும் எங்கள் மேல் இரக்கமின்றி இருக்கலாமா? உமது இயற்கைக் குணமான இரக்கம் இப்போது என்ன ஆயிற்று? போனால் போகட்டும். நாங்கள் உம்மை உமது அருளால் சேவிக்க இயன்றால் சேவிக்கிறோம்; இல்லாமல் போய் இழந்தாலும் இழக்கிறோம். அது பெரிதில்லை. ஆனால் குணம் கெட்டவன் நீர் என்று மற்றவர் பேசுகிறார்களே.

அண்டகுலத்திற்கெல்லாம் அதிபதியாக நீர் இருக்கச் செய்தேயும் உமது அடியவர் பெருமை துலங்க வேண்டும் என்பதற்காக குறளுருவாகி ஈரடியால் வையமெல்லாம் அளந்து கொண்டீரே. அதுவன்றோ உம்முடைய திருக்குணம். அப்படி பெருமை பெற்ற உம் திருக்குணம் இன்று ஏசப்படும் படி நீர் வைத்துக் கொள்ளலாமா?

வேண்டியவர் வேண்டாதவர் என்று பாராமல் வையம் அளந்த போது அனைவரது தலையிலும் தன் திருவடியை வைத்து அருளினானாமே இவன்; இன்று வாசலில் நின்று இவர்கள் இப்படி ஏங்கி உயிர்தரிக்க முடியாதிருக்க தாளிட்டுக் கொண்டு உள்ளே நின்றானே. இவனா எல்லோரையும் காப்பவன் என்ற பெயருடையவன் - என்று அயலார் ஏசுகின்றார்கள். இந்த ஏச்சு உமக்குக் கிடைக்கக் கூடாது என்றே நாங்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம்.

இந்தளூரீரே. வண்டுகள் மொய்க்கும் மாலையை அணிந்த திருமுடியையுடையவரே. உம்மைக் காண வேண்டும் என்ற ஆசைக்கடலில் வீழ்ந்து தத்தளிக்கின்றோம். உம்மைக் காட்டியருள வேண்டும்.

பேசுகின்றது இதுவே வையம் மூவடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மைக் காணும்
ஆசையென்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே.


ஒருவரை மற்றொருவர் அலட்சியம் செய்தால் அவர்களிடையே ஆன அன்பு குறைவதை உலகத்தில் கண்டிருக்கிறோம். இப்போது நீர் எங்களை அலட்சியம் செய்கிறீர். ஆனால் உம்மிடம் எங்களுக்குள்ள அன்பு குறையவில்லை. ஆசையும் குறையவில்லை. அப்படி ஆசை குறையாமல் உம்மைப் போற்றித் துதிக்கும் எங்களைக் கண்டு 'தலைவனை அடிமைகள் போற்றுவது இயல்பே' என்று எண்ணாமல் 'கதறி அழும் இவர்களுக்குக் காட்சி தராத இவனுக்கெல்லாம் அனைத்துலகுக்கும் கதி என்ற பெயர் அழகாகத் தான் இருக்கிறது' என்று உம்மையும் 'பல்லைக் காட்டி பலவாறு வேண்டிய பிறகும் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் என்றாற் போல் இருக்கின்றவனை இன்னும் போற்றுகின்றாரே இவர்கள்' என்று எங்களையும் ஏளனமாகப் பேசுகிறார்கள் அயலார்கள். உம் மேல் மாறாத எங்கள் ஆசை இப்படி உமக்கும் எமக்கும் இழுக்காக வந்து நின்றது.

இப்படி ஊரறிய உலகறிய உமக்கே ஆளாகித் திரிகின்ற அடியோமுக்கு 'சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது' என்றாற் போல் இருக்கும் ஒளி மிகுந்த உம் திருவடிவைக் காட்ட மாட்டேன் என்கிறீரே. எம்பெருமானே. பரமபதத்தில் இருப்பார்க்கு அன்றி ஈனரான இவருக்கா என் திருவடிவைக் காட்டுவேன் என்று உயர்வு தாழ்வு பார்க்கிறீரே. இந்தளூரீர். உம் திருவடிவை நீரே பார்த்துக் கொண்டும் தொட்டுக் கொண்டும் மோந்து கொண்டும் கட்டிக் கொண்டும் நீரே வாழ்ந்து போம்.

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து; அடியோர்க்குத்
தேசமறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு
காசின் ஒளியின் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்!
வாசி வல்லீர்! இந்தளூரீர்! வாழ்ந்தே போம் நீரே!


'ஐம்பூதங்களின் வடிவாய் அகிலமெங்கும் நான் நிற்கின்றேனே; அங்கெல்லாம் என்னைக் காணக்கூடாதா' என்று எண்ணிக் கொண்டு உமது திருவடிவைக் காட்டாமல் நிற்கின்றீர் போலும். 'நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனானாய்' என்றாற் போல் நீர் நிற்பதை நாங்கள் அறிவோம். தீயாய் நிற்பதும் எம்பெருமான், நீராய் நிற்பதும் எம்பெருமான், திசையும் பரந்த இவ்வுலகமுமாய் நிற்பதும் எம்பெருமான் என்பதை அறியும் அறிவு அருளியிருக்கிறீர். பரவாசுதேவனாக இருப்பது நித்யர்களும் முக்தர்களும் தொழுது அனுபவிப்பதற்காக. பிரமன் முதலான தேவர்களின் கூக்குரல் கேட்டு இரங்குவதற்காக இருப்பது திருப்பாற்கடலில். இராமனாகவும் கண்ணனாகவும் வந்த அவதாரங்கள் அந்த அந்தக் காலத்தில் இருந்தவர்கள் பணிவதற்காக. நீர், நிலன், காற்று, தீ, வான் இவற்றின் அந்தரியாமியாய் நிற்பது பெருகலாதன் (ப்ரஹ்லாதன்) போன்றோருக்குப் பயனளிக்கும். இங்கே அருச்சாவதாரமாக நிற்பது ஒன்று தானே அடியோங்களுக்கு உயிராக இருப்பது. ஆதலால் நீர், தீ முதலிய வடிவில் நீரே நிற்கிறீர் என்ற அறிவு இருந்தாலும் ஐயோ நாங்கள் உம்மை அங்கே எல்லாம் காண இயலாதவர்களாக இருக்கிறோமே. தாயாகவும் தந்தையாகவும் தந்தைக்கும் தந்தையாகவும் எங்களை ஆளும் தலைவனாகவும் இங்கே சிலை வடிவில் நிற்கும் நீரே அல்லவோ இருக்கிறீர்? உம்மைக் காட்டி அருளக் கூடாதா?

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இருநிலனும்
ஆய் எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோம் ஆல்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்
கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே.


'நீர் அடிமை; நான் உடையவன். அப்படியிருக்க என் வடிவை உனக்குக் காட்டவேண்டும் என்று என்னை வற்புறுத்துவது தகுமா? என் எண்ணப்படி நான் நடந்து கொள்ளும் வலிமை கொண்டவன் நான் என்பதை அறிந்து எனது மற்ற அடியவர்கள் எல்லாம் நான் இட்டபடி இருக்க நீர் மட்டும் என்னை வற்புறுத்துவது ஏன்?' என்று தேவரீர் திருவுள்ளம் பற்றி இருக்கிறீர் போலும் இந்தளூரீரே. அப்படியென்றால் எல்லாம் அறிந்த சர்வஜ்ஞனான உமக்கு அடியேனின் நிலை தெரியவில்லை என்றே சொல்லவேண்டும். அதனைப் பற்றிப் பேசாமல் விடலாம் என்றால் என்னால் இயலவில்லை. நான் அறிந்தவற்றைச் சொல்லுகிறேன் கேட்பீர். 'அவன் உடையவன்; நாம் உடைமை' என்று நீர் இட்ட வழக்காக இருக்கும் உம் அடியார்கள் அனைவரோடும் ஒக்க அடியேனையும் என்ணியிருந்தீர். உம்மை விட்டுப் பிரிந்தால் உயிர்தரிக்க இயலாத நல்லவர்களையும் நீர் அறிவீர். உம்மை விட்டுப் பிரிந்தாலும் உயிர் தரிக்க இயலும் தீயார்களையும் நீர் அறிவீர். அவ்வளவு ஏன் - இவ்வுலகில் நீர் எல்லாம் அறிவீர். ஆனால் ஒன்றை மட்டும் நீர் அறியவில்லை. 'ஒரு மாதம் வரையில் உயிர் தரித்திருப்பேன்' என்று சொன்ன அசோகவனத்தில் இருந்த பிராட்டியைப் போன்ற வலிமை அடியோமுக்கு இல்லை. ஒரு நொடிப்பொழுதும் உம் பிரிவைப் பொறுக்க ஒண்ணாதவர் நாங்கள் என்பதை மட்டும் அறியாதவாக இருக்கிறீர்.

சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணியிருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ்வுலகத்தில்
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே


நீர் எல்லா வலிமையும் மிக்கவர் தானே. ஆனால் எம்மிடம் பணி கொள்ளும் திறன் இல்லாமல் போய்விட்டதா? ஏழை ஏதலன் கீழ்மகன் இவன்; இவனிடம் பணி கொள்ளலாகாது என்று நினைத்து பணி கொள்ளாமல் விட்டீர்கள் போலும். நிறை ஒன்றுமில்லாத நீசன் ஆனாலும் திருப்பணிக்கு ஆளாகும் படி எம்மைத் திருத்திப் பணி கொள்ள உம்மால் இயலவில்லையா? பின் எப்படி சர்வசக்தன்; எல்லா வலிமையும் உள்ளவன் என்ற திருநாமத்தை உகந்திருக்கிறீர்?

மொத்தமாக அறிவே இல்லாத மண்ணாங்கட்டியாக எம்மை படைத்திருந்தாலாவது இத்துன்பங்கள் எல்லாம் கிடையாது. ஆனால் அன்பும் அறிவும் உடைய பிறவியாக்கி உனக்காளாக இருப்பதே எம் இயல்பு என்ற அறிவையும் தந்தீர். இந்த அறிவையும் தந்துவிட்டு இப்போது முகம் காட்டாமல் தள்ளி வைத்திருக்கிறீர். பணி கொள்ளாவிடிலும் திருவடிகளையாவது தரலாமே. பிறர்களுக்கே அமுதம் ஆன திருவடிகளையும் 'ஆலிலை மேல் ஒரு பாலகனாய்' சுவைத்துக் கொள்ள நீரே வைத்துக் கொள்ள நினைத்தீர் போலும். நாடு நகரமும் நன்கறிய நமோ நாராயணா என்று உம் தொண்டரான நாங்கள் உம்முடைய திருவடிகளைத் தந்தால் உய்ந்து போக மாட்டோமா?

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மைப் பணி அறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே!
காட்டீர் ஆனீர் நும் தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே.


முதன்முதலில் நீர் பாலின் வண்ணம் காட்டினீராம். உமக்கே இயற்கையான நிறம் மாயோன் என்ற திருப்பெயருக்கு ஏற்ற கருமுகில் வண்ணத்தைப் பிற்காலத்தில் வெளிப்படுத்தினீராம். இது போக வேறு வண்ணங்களும் உமக்கு உண்டோ என்று எண்ணிப் பார்த்தால் நடுவில் சில நாட்கள் பொன்னின் வண்ணத்தையும் நீலமணியின் வண்ணத்தையும் காட்டினீராம். இப்படி ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வண்ணம் காட்டும் உமது அழகு மிக்கத் திருமேனி இந்த ஊரில் என்ன வண்ணம் காட்டுகிறது நாங்கள் அறிந்து இன்புறும் வண்ணம் உம் திருவுருவத்தைக் காட்டுவீர் திருவிந்தளூர் திருமாலே.

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே


எளிவந்த தன்மை கொண்டவன் என்று உம்மை எல்லோரும் போற்றுகின்றோம். ஆனால் நீரோ 'எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழி வழி ஆட்செய்கின்றோம்' என்றாற் போலே ஏழேழு தலைமுறையாக வந்து அடிமை செய்யும் குடியிலே பிறந்த அடியோமுக்கு அருள் செய்யவே உயர்வு தாழ்வு பார்க்கிறீர். இந்தத் தகுதியும் இல்லாமல் இந்தத் தலைமுறையில் உமக்கு அடிமை செய்யும் எண்ணம் கொண்டவருக்கு நீர் எளிவந்த தன்மையுடனும் நீர்மையுடனும் இருப்பது எங்ஙனம்?

எங்கள் சிந்தை தன்னில் முந்தி வந்து நிற்கிறீர். நீரே அப்படி சிந்தையில் வந்து நிற்பது போல் உமது திருமேனியின் வண்ணம் இதென்று சிறிதளவும் காட்டாமல் இருக்கிறீரே இந்தளூரீரே.

எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் ஏழ் அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரேல்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே”


இப்படி மாறி மாறிப் பல முறை வேண்டி அயர்ந்து மூர்ச்சையுற்றார்கள் திருமங்கையாழ்வாரும் குமுதவல்லி நாச்சியாரும். இனிமேலும் சோதிக்க வேண்டாம் என்ற எண்ணம் கொண்ட பரிமளரங்கன் அருச்சகர் மூலமாக திருக்கதவம் திறப்பித்து தன் திருமேனி அழகைக் காண்பித்தான். வீர சயனத்தில் பரந்து கிடந்த மரகதத் திருமேனி அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்றாற் போல் பரகாலனும் நாச்சியாரும் வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றனர்.

***

அழகிய சோலைகளாலே சூழப்பட்ட திருவிந்தளூரில் எழுந்தருளியிருக்கின்ற எந்தை எம்பெருமானை மேகங்கள் வந்து அணவும் சோலைகளை உடைய திருமங்கை நகருக்கு வேந்தனான கலியன் திருமங்கையாழ்வார் அருளிச் செய்த சிறப்பும் இனிமையுமான இந்த சொல்மாலையை ஓதித் திரிபவர்கள் இவ்வுலகத்தில் யாராக எத்தன்மையுடையவராக இருந்தாலும் அவர்கள் எக்காலத்திலும் அமரர்கள் தொழுதேத்தும் அமரர்களாக இருப்பார்கள்.

ஏரார் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த
சீரார் இன்சொல்மாலை கற்றுத் திரிவார் உலகத்தில்
ஆர் ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே


***

இப்போது எதற்கு திடீரென்று திருவிந்தளூர் எம்பெருமானைப் பற்றிய கலியன் பனுவல்களைப் பாடிப் பரவுகிறேன் என்று தெரிய வேண்டுமென்றால் இங்கே பாருங்கள். இத்திருக்கோவில் புனிதநீர்தெளிப்பினை முன்னிட்டு நம் நண்பர் இரவிசங்கர் கண்ணபிரான் நியமித்தபடி காரி மாறனையே இதுவரை அறிந்திருந்த அடியேன் கலியன் பரகாலன் பைந்தமிழையும் பருகித் திளைத்தேன். அடியார் நியமனம் அரங்கன் நியமனமே.

devoo

unread,
Apr 8, 2009, 11:27:39 PM4/8/09
to மின்தமிழ்
*சீரார் இன்சொல்மாலை கற்றுத் திரிவார்*

சீரார் இன்சொல்மாலைகள் !
நீங்கள் கற்பிக்கும் விதம் மேலும் இனிமை சேர்க்கிறது.


*வாசி வல்லீர்! இந்தளூரீர்! வாழ்ந்தே போம் நீரே!*

எம்பெருமானுக்கு இவர் கூறும் வன்சொற்களே உகப்பைத் தருகின்றன போலும்!

தேவ்

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 9, 2009, 3:32:01 AM4/9/09
to minT...@googlegroups.com
குமரன் சார்.
 
அற்புத உரை மற்றும் கருத்துக்கள்.
 
1. உமது இரக்கத்தால் அன்றி எங்கள் முயற்சியால் உமது திருமுகம் காணக் கிடைக்குமோ?
 
ஆறும் பேறும் அவனே என்ற சரணாகதி தத்துவத்தின் அருமையான சுருக்கம்.
 
 
2.  உம்முடைய காரணமில்லாத கருணையினால் நீரே வந்து எங்கள் சிந்தையில் நீங்காது அமர்ந்து கொண்டீரே.
 
நம்மாழ்வார் இதை "வெறிதே அருள் செய்வர்" என்கிறார். அவனுடைய பரத்துவத்தை நிலைநாட்டும் குணங்களில் மிக முக்கியமான குணம் இது
 
3. நாங்கள் உம்மை உமது அருளால் சேவிக்க இயன்றால் சேவிக்கிறோம்; இல்லாமல் போய் இழந்தாலும் இழக்கிறோம். அது பெரிதில்லை.
 
இதைத்தான் "இட்ட வழக்காய் இருத்தல்" என்பர் பெரியோர். வடமொழியில் "பரதந்திரம்" என்பர். "சுதந்திரம்" என்பது நம்மை நாமே நட்த்திக்கொண்டுப் போருவது. "பரதந்திரம்" என்பது, தன்னுடைய முதலாளிக்குக் (அவனைவிடச் சிறந்தவன் வேறொருவன் இல்லாமையால்) கீழ்ப்படிந்து, அவன் சொன்னதைச் செய்துகொண்டிருப்பது. இதுதான் ராமாயணத்தில் பரதனின் நிலை. இராமனுக்குச் சேவகம் (அடிமை) செய்ய மிகுந்த ஆசை இருந்தபோதிலும், தன் முதலாளியான இராமன் சொன்னான் என்பதற்காக, தனக்கு இதமாக இருக்கக்கூடிய "இராமனுடன் சேர்ந்திருக்கையை"யும் துறந்து, இராமன் சொன்னது போல், அவனைப் பிரிந்து வாழ்ந்தான்.
 
இதைத்தான் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும் (அடியேன் குறிப்பிட்டிருந்தேன்) "துரிசற்றுச் சாதகம் போல், நாதன் தனதருளே பார்த்திருத்தல் கோதில் அடியார் குணம்" என்கிறார். ஆக "இட்ட வழக்காயிருத்தலே" குற்றமற்ற அடியார் குணம் என்று நிறுவுகிறார்.
 
4. வேண்டியவர் வேண்டாதவர் என்று பாராமல் வையம் அளந்த போது அனைவரது தலையிலும் தன் திருவடியை வைத்து
அருளினானாமே இவன்;
 
மீண்டும் பரத்துவம் நிலைநாட்டப் பெறுகிறது. பரத்துவத்திற்கு அழகு கருணையன்றோ. குற்றம் செய்தவர் பக்கலிலும் பொறையுடைமைதானே பரமனின் குணமாக இருக்க முடியும்.  "குன்றனைய குற்றம் செய்யினும், குணம் கொள்ளும்" என்பதன்றோ பொய்கையாரின் திருவாக்கு. இதையே ப்ரளயகாலத்திலும் அவன் செய்கிறான் என்பதையும் இதே கலியன் காட்டுகிறார் " அன்று எல்லாரும் அறியாரோ, எம்பெருமான் உண்டுமிழ்ந்த எச்சில் தேவரல்லாதார் தாம் உளரே?" என்று. "உளரே?" என்றது "உளரோ?" என்று கேள்வியாக.


'நீர் அடிமை; நான் உடையவன். அப்படியிருக்க என் வடிவை உனக்குக் காட்டவேண்டும் என்று என்னை வற்புறுத்துவது தகுமா? என் எண்ணப்படி நான் நடந்து கொள்ளும் வலிமை கொண்டவன் நான் என்பதை அறிந்து எனது மற்ற அடியவர்கள் எல்லாம் நான் இட்டபடி இருக்க நீர் மட்டும் என்னை வற்புறுத்துவது ஏன்?' என்று தேவரீர் திருவுள்ளம் பற்றி இருக்கிறீர் போலும் இந்தளூரீரே. அப்படியென்றால் எல்லாம் அறிந்த சர்வஜ்ஞனான உமக்கு அடியேனின் நிலை தெரியவில்லை என்றே சொல்லவேண்டும். அதனைப் பற்றிப் பேசாமல் விடலாம் என்றால் என்னால் இயலவில்லை. நான் அறிந்தவற்றைச் சொல்லுகிறேன் கேட்பீர். 'அவன் உடையவன்; நாம் உடைமை' என்று நீர் இட்ட வழக்காக இருக்கும் உம் அடியார்கள் அனைவரோடும் ஒக்க அடியேனையும் என்ணியிருந்தீர். உம்மை விட்டுப் பிரிந்தால் உயிர்தரிக்க இயலாத நல்லவர்களையும் நீர் அறிவீர். உம்மை விட்டுப் பிரிந்தாலும் உயிர் தரிக்க இயலும் தீயார்களையும் நீர் அறிவீர். அவ்வளவு ஏன் - இவ்வுலகில் நீர் எல்லாம் அறிவீர். ஆனால் ஒன்றை மட்டும் நீர் அறியவில்லை. 'ஒரு மாதம் வரையில் உயிர் தரித்திருப்பேன்' என்று சொன்ன அசோகவனத்தில் இருந்த பிராட்டியைப் போன்ற வலிமை அடியோமுக்கு இல்லை. ஒரு நொடிப்பொழுதும் உம் பிரிவைப் பொறுக்க ஒண்ணாதவர் நாங்கள் என்பதை மட்டும் அறியாதவாக இருக்கிறீர்.
 
இதைப் பரதந்திரம் என்று சொன்னாலும் ஒன்றுதான். காதல் என்று சொன்னாலும் ஒன்றுதான். காதலன் இன்றிக் காதலி ஒருபொழுதும் தரித்திருக்க மாட்டாள் என்ற இலக்கியங்கள் காட்டும் தமிழ் மரபு மிக அழகாக வெளிப்படுகிறது.
 
ஆழ்வார்களின் கருத்துக்களை அப்படியே வெளிப்ப்டுத்தியிருக்கிறீர்கள். "சேர்ந்தனுபவிக்கும் நிலை" அடியேனின் பாக்கியம்.
 
அடியேன்
வேங்கடேஷ்


Check out the all-new Messenger 9.0! Click here.

நா.கண்ணன்

unread,
Apr 9, 2009, 6:44:38 AM4/9/09
to மின்தமிழ்
On Apr 9, 11:12 am, Kumaran Malli <kumaran.ma...@gmail.com> wrote:
>கண்ணபிரான் நியமித்தபடி காரி மாறனையே இதுவரை அறிந்திருந்த அடியேன்
> கலியன் பரகாலன் பைந்தமிழையும் பருகித் திளைத்தேன். அடியார் நியமனம் அரங்கன்
> நியமனமே.

என்ன குமரன்? இப்படித் திடீரென்று?

~காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்~ என்றார்படி..

கொட்டித்தீர்த்துவிட்டீர்!

எத்தனை அமுதமுதான பாசுரங்கள். ஒவ்வொன்றாய், கற்கண்டை வாயிற் போட்டு
மெல்லுவது போல் சுவைக்க வேண்டாமோ? இப்போது கூட பதிலெழுத வேண்டுமேயென்று
வாசித்து முடித்தேன்.

என்ன நடை! என்ன பாவம்!

பரகாலநாயகி X பாராங்குச நாயகி என்பதே ஒரு பெரும் தலைப்பாச்சே!

பரகாலநாயகிக்கு துடுப்பு அதிகம். நன்றாக கேட்கத்தெரியும். எல்லாம்
`மடியைப்பிடி` கேள்விகள். இவர்களிடம் மாட்டிக்கொண்டு மாலன் :-)

அற்புதம்..அற்புதம்...

வாழ்த்துக்கள். ஜமாய்ச்சுட்டீர்!!

கண்ணன்

நா.கண்ணன்

unread,
Apr 9, 2009, 6:49:31 AM4/9/09
to மின்தமிழ்
குமரன்:

இவ்வளவு அழகான தலைப்புக் கொடுத்து இருக்கிறீர்களே! அதையும் கொஞ்சம்
விளக்கிச் சொல்லுங்கள்.

ஆமாம் என்ன திவாகர் ஒன்றும் சொல்லவில்லை? கலியன் உறவாச்சே அவர்? :-)

க.>

Kumaran Malli

unread,
Apr 9, 2009, 6:55:45 AM4/9/09
to minT...@googlegroups.com

நன்றி தேவ் ஐயா. அனைத்துமே முன்னோர் உரைகள். சிறிதே புதுமை சேர்த்தேன். தன் துணைவியாருடன் சேர்ந்தே காட்சி தரும் ஆழ்வார் இவர் மட்டும் தானே; அதனால் 'எம்மை', 'எங்களை' போன்ற பன்மைச் சொற்றொடர்களைப் பாசுரத்தில் பார்த்ததும் இவர்கள் இணைந்தே காட்சி தருவது நினைவிற்கு வந்து பரமபாகவதையான நாச்சியாரும் இணைந்தே இப்பாசுரங்களைப் பாடுவது போல் பொருள் உரைத்தேன். இதில் இருக்கும் அனைத்துமே முன்னோர் சொன்னது. பிழைகள் இருப்பின் அடியேன் புரிதல் பிழைகளே. எழுத்துப்பிழை, சொற்பிழை, கருத்துப்பிழை இருந்தால் சொல்லி அருள வேண்டும்.

அன்பன்,
குமரன்.

2009/4/8 devoo <rde...@gmail.com>

V, Dhivakar

unread,
Apr 9, 2009, 7:02:00 AM4/9/09
to minT...@googlegroups.com
நானும் மெல்ல மெல்லத்தான்..

ஒவ்வொன்றும் ரசிக்க வேண்டாமோ

தேனை அப்படியே முழுங்க முடியுமோ..

ரசித்துக் கொண்டிருக்கிறேன்

தி

2009/4/9 நா.கண்ணன் <nka...@gmail.com>

Kumaran Malli

unread,
Apr 9, 2009, 7:03:03 AM4/9/09
to minT...@googlegroups.com
நன்றி வேங்கடேஷ். முதலில் இரவிசங்கர் கண்ணபிரானுக்குத் தான் நன்றி சொல்லவேண்டும். பெரிய திருமொழியில் முதல் நான்கு பதிகங்களை மட்டுமே இதுவரை படித்திருக்கிறேன். இரவிசங்கர் கட்டளையினால் திருவிந்தளூர் பாசுரங்கள் படித்து இன்புறும் வாய்ப்புகள் கிடைத்தன. அதிலும் உரையுடன் படிக்கும் பேறு இணையத்தில் பெரியோர் உரைகளை ஏற்றி வைத்துள்ள அன்பர்களின் தயவால் கிடைத்தது. உரைகளின் பெரும்பான்மையானவை இந்த வலைப்பக்கத்தில் கிடைக்கின்றன. http://www.maransdog.com/document/ உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.
ஒத்த கருத்துகளை மீண்டும் எடுத்துக் கூறியதற்கு நன்றி. கூடியிருந்து குளிரத் தொடர்ந்து எம்பெருமான் அருளட்டும்.
 
அன்பன்,
குமரன்.
2009/4/9 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>

Kumaran Malli

unread,
Apr 9, 2009, 7:11:01 AM4/9/09
to minT...@googlegroups.com

உண்மை தான் கண்ணன் ஐயா. ஒவ்வொறு பாசுரமாய் ஆழ்ந்து அனுபவிப்பதே முறை. இந்த முறை இரவிசங்கர் கட்டளையால் திருவிந்தளூர் பாசுரங்கள் அனைத்தும் ஒரே இடுகையில் எழுதிவிட்டேன். திகட்டாத அமுதம் எனினும் இடுகை கொஞ்சம் நீளமாகத் தான் அமைந்துவிட்டது.

வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.

தலைப்பில் தந்த வரி முத்துஸ்வாமி தீட்சிதர் இத்தலத்துப் பெருமாள் மேல் பாடிய கீர்த்தனையில் வரும் வரி. பரமேஸ்வரம் = அண்டக்குலத்திற்கு அதிபதி; அனைத்துலகிற்கும் தலைவன். ரமேஸ்வரம் = ரமா + ஈஸ்வரம் = திருவிற்குத் திருவானவன்; திருவின் தலைவன்; திருமகள் கேள்வன். மேஸ்வரம் = மே + ஈஸ்வரம் = என் தலைவன். ஈஸ்வரம் = தலைவன். இப்படி ஒவ்வொரு எழுத்தாக எடுத்த பின்னரும் அருமையான பொருள் தரும் இந்த வரியைப் படித்ததில் வியந்து அதனைத் தலைப்பாய் இட்டேன்.

devoo

unread,
Apr 9, 2009, 7:24:36 AM4/9/09
to மின்தமிழ்
Apr 9, 3:55 pm, Kumaran Malli

//தன் துணைவியாருடன் சேர்ந்தே காட்சி தரும் ஆழ்வார் இவர் மட்டும் தானே;


அதனால்
'எம்மை', 'எங்களை' போன்ற பன்மைச் சொற்றொடர்களைப் பாசுரத்தில் பார்த்ததும்
இவர்கள் இணைந்தே காட்சி தருவது நினைவிற்கு வந்து பரமபாகவதையான
நாச்சியாரும்

இணைந்தே இப்பாசுரங்களைப் பாடுவது போல் பொருள் உரைத்தேன்//

நல்ல ரஸிகத்தன்மை !

எழுத்துப்பிழை, சொற்பிழை, கருத்துப்பிழை இருந்தால்..//

இது கூடியிருந்து குளிர்ந்து அனுபவிக்கும் குழாம்;
தவறான பாடங்கள் பரவிவிடக் கூடாது என்னும் நோக்கில்
ஒன்றிரண்டு கூர நேரலாம்.
மஹா யோகீசுவரர்களான பல ஆழ்வார்களும்
அந்தர்யாமியான அச்சுதனையும் ஒதுக்கிவிட்டு அர்ச்சையில்
மண்டிக்கிடந்தனரே !
எத்தகுதியுமற்ற நாம் அவனை இழந்துவிடக் கூடாது என்னும் பெருங்கருணை
மட்டும்தானே காரணம். அருளிச்செயல்கள் இல்லையென்றால்
இப்பேறு நமக்கு வாய்க்குமா ?

தேவ்

V, Dhivakar

unread,
Apr 9, 2009, 7:53:57 AM4/9/09
to minT...@googlegroups.com
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே


குமரன்,
மேற்கண்ட பாசுரத்தையும் அதில் உள்ள தமிழ்ழகையும் கேட்பதற்காகவே மாயோன் மாயம் செய்தானோ என்னவோ. இந்த பாசுரத்திலேயே என் மனம் முழுதும் சென்றுவிட்டது.

ஒருவகையில் கம்பன் கூட இந்த செந்தமிழைப் பயன்படுத்துகிறான். இராமன் தாடகையை தன் 'கை வண்ணத் திறன்' கொண்டு வதை செய்ததையும் பின் 'அகலிகையை' தன் 'கால் வண்ணத்தால்' உயிர்ப்பித்ததையும் விசுவாமித்ரமுனி வர்ணிப்பதாக வரும்.

கலியன் புகழ் பாடிய நீவிர் பல்லாண்டு வாழ்க!

திவாகர்

2009/4/9 devoo <rde...@gmail.com>

V, Dhivakar

unread,
Apr 9, 2009, 8:09:29 AM4/9/09
to minT...@googlegroups.com
குமரன்!

இன்னொன்று. ஆழ்வார்களும் நாயன்மார்களும் இறைத் தூதர்கள். சுவாமி நம்மாழ்வார் பாடல்களுக்கும் மாணிக்கவாசகர் பாடல்களுக்கும் எத்தனையோ பொருத்தங்கள் உள்ளன. இவைகளைப் பற்றி ஒரு புத்தகமே எழுதிப் போடலாம்.

அதைப் போலவே மங்கைமன்னனின் இந்தளூர் பாடல்களுக்கும் சுந்தரரின் திருவையாறு பதிகங்களுக்கும் ஒற்றுமை மிக அதிகம். கண்ணன் சொல்லியபடி 'மடியைப் பிடித்து' கேட்டு 'வாங்கி'விடுவதில் மிக வல்லவர்கள்.

விஜய் 'கல்லிலே கலைவண்ணத்தில்' இந்தத் திருவையாறு வைபவமும் ஒருமுறை பாருங்களேன்..

http://www.poetryinstone.in/lang/ta/2009/02/24/sundarar-parts-kaveri-at-tiruvaiyaaru.html

திவாகர்




2009/4/9 V, Dhivakar <venkdh...@gmail.com>

நா.கண்ணன்

unread,
Apr 9, 2009, 8:53:37 AM4/9/09
to மின்தமிழ்
On Apr 9, 7:53 pm, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> *முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற

> பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
> பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
> இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே*
>

உண்மை திவாகர். இப்பாடல் என்னையும் ஆட்கொண்டது!

கம்பனைக் கவர்ந்திருக்க வாய்ப்புண்டு. சூரிச்சில் நடந்த கம்பன் விழாவில்
ஆழ்வார்களும், கம்பனும் என்று பேசினேன். கம்பன் நம்மாழ்வார் வரிகள்
கொண்டு தொடங்கி (அலகிலா விளையாட்டுடையான்), குலசேகரரின் பாவனைகளை
உள்வாங்கிக் கொண்டு, கலியனின் கவித்துவத்தை ரசிக்கிறான் என்று சொல்லலாம்.
ஆழ்வார்களுக்குள்ளேயே எவ்வளவு எடுத்தாளுமைகள்! குமரன் சுட்டியபடி,
பெரியாழ்வார் திருமொழிக்கும், பெரிய திருமொழிக்கும் உள்ள குடுக்கல்
வாங்கல். இதை தொண்டரடிப்பொடி ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறார், |
பேசிற்றே பேசலல்லால்| என்று. அதுதான்!! ஆழ்வார்களுக்குள் புகுந்தால்
அவர்கள் பாசுரங்களே reference point வேறெங்கும் போக வேண்டிய அவசியமே
இல்லை.

வாழ்க!

கண்ணன்

நா.கண்ணன்

unread,
Apr 9, 2009, 9:03:30 AM4/9/09
to மின்தமிழ்
On Apr 9, 7:24 pm, devoo <rde...@gmail.com> wrote:
>
> இது கூடியிருந்து குளிர்ந்து அனுபவிக்கும் குழாம்;
> தவறான பாடங்கள் பரவிவிடக் கூடாது என்னும் நோக்கில்
> ஒன்றிரண்டு கூர நேரலாம்.
> மஹா யோகீசுவரர்களான பல ஆழ்வார்களும்
> அந்தர்யாமியான அச்சுதனையும் ஒதுக்கிவிட்டு அர்ச்சையில்
> மண்டிக்கிடந்தனரே !
> எத்தகுதியுமற்ற நாம் அவனை இழந்துவிடக் கூடாது என்னும் பெருங்கருணை
> மட்டும்தானே காரணம். அருளிச்செயல்கள் இல்லையென்றால்
> இப்பேறு நமக்கு வாய்க்குமா ?


இதை அப்படியே வழிமொழிகிறேன். சில நேரங்களில் நான் கூட கடுமையாக
எழுதிவிடுவதுண்டு. காரணம் அருளிச்செயல்களும், அதற்கு ஆச்சர்யர்கள்
ஆழங்காட்பட்டு கண்டு சொன்ன பொருள்களும் பிறழ்ந்துவிடக்கூடாது என்ற
அக்கறையால்தான்.
அதே நேரத்தில் நான் தவறாக எழுதும் போது திருத்துவதை ஏற்றுக்கொள்கிறேன்.
இதே காரணத்தால்.

நான் பாசுரமடல்களை எழுதிவிட்டு, உ.வே.வேங்கடகிருஷ்ணன் சுவாமிகளிடம்
கொடுத்தேன். அவர் கேட்டார், `நீர் ஆழ்வார்களை ஏற்றுக்கொள்கிறீர்களோ?;
“ஆம்”, ஆச்சர்யர்களை ஏற்றுக் கொள்கிறீர்களோ, “ஆம்” அப்படியெனில் கவலை
இல்லை. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் உம் எழுத்தை” என்று. அது எவ்வளவு
உண்மை. நடை பயிலும் குழந்தை போல் நாம் ஆழ்வார்களிடம் நடை பயின்றாலும்,
ஆச்சார்யர்கள் அல்லவோ அம்மொழிக்கு பாதுகாவலர்கள். அவர்கள் `இதத்தாயாக`
இருந்து காலப்போக்கில் நெறிப்படுத்திவிடுவர் என்பவைக் கண்கூடாகக் கண்டு


வருகிறேன்.

ஆழ்வார்கள் வாழி, அருளிச்செயல் வாழி
தாழ்வாது மில்குரவர் தாம் வாழி - ஏழ்பாரும்
உய்ய, அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து.

இதுவே நமது குழாமின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். இது பொருள்
பொதிந்தது.

கண்ணன்

meena muthu

unread,
Apr 9, 2009, 10:23:36 AM4/9/09
to minT...@googlegroups.com


2009/4/9 V, Dhivakar <venkdh...@gmail.com>

meena muthu

unread,
Apr 9, 2009, 10:26:28 AM4/9/09
to minT...@googlegroups.com
அடடா! பாருங்கள் இந்த பாடலை பாடிப்பார்த்துக் கொண்டிருக்கும்போதே

அதிவேகத்தில் மனம் பதில் பொத்தானை அமுக்கச்செய்துவிட்டது!எல்லாம் பாடலின் மஹிமை!! :))))))

2009/4/9 meena muthu <ranga...@gmail.com>

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 9, 2009, 12:03:47 PM4/9/09
to minT...@googlegroups.com
குமரன் சார்,
 
அடியேனுடைய ஆச்சாரியரிடம் இது பற்றியும், தங்கள் விளக்கத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன்.
 தாங்கள் கூறியவைகளை ஆமோதித்து, மேலும் சில விளக்கங்கள் கொடுத்தார்.
 
1. ஆழ்வார், உண்மையில் அவன் கதவைச் சாற்றி விட்டானே என்று வருந்தவில்லையாம். முதல் பாசுரத்தில், "நும்மடியேம் இம்மைக்கு இன்பம் பெற்றோம்" என்று சொல்வதிலிருந்து ஆழ்வாருக்கு அவன் மேல் வருத்தமோ கோவமோ இல்லை என்று திண்ணம்.  நாங்கள் எங்களுடைய அடிமை நிலையை நன்கு வெளிப்படுத்தி உனக்குத் தொண்டுகள் செய்து கொண்டிருக்கிறோம். நீயும் உன் இயல்வுக்குத் தகுந்தவாறு, எங்கள் மேல் இரக்கம் காட்டிக் காத்தருளலாகாதோ என்கிறார். அவ்வாறு காத்தருளினால் நாங்கள் உய்ந்து போவோம் என்றபடி. "காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்" என்பது நம்மாழ்வார் திருவாக்கு.
 
2. மூன்றாம் பாசுரத்தில், "உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம்" என்றவிடத்தில், இது ஏதோ தன்னுடைய முயற்சியாகத் தோற்றுகின்றதாகையாலே "அயர்வு" மட்டுமே மிச்சமாயிற்று என்கிறார். அதாவது, தாங்கள் சொன்னது போல், ஆண்டானான அவன் நினைத்தால் மட்டுமே நடக்கும் என்றும், அடிமையான தங்கள் முயற்சியால் ஏதும் பயனில்லை என்றபடி.
 
3. நான்காம் பாசுரத்திற்கு, தங்களிடமிருந்து சிறிது மாறுபடுகிறார். "வாசி வல்லீர்" என்ற பதத்தில் "வாசி" என்றது விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் உள்ள வாசியன்று. ஆண்டானான அவனுக்கும் அடிமையான நமக்கும் உள்ள வாசி. அஃதாவது, நான் என்னதான் வேண்டினாலும், நான் அடிமைதானே என்று நீ நன்றாக அறிந்திருப்பதால், உன் விருப்பப்படிதான் உன்னைக் காட்டுவாய். நான் என்ன புலம்பினாலும் நீ உன் விருப்பப்படிதான் நடப்பாய் என்று அறிவேன். ஆகவே "வாழ்ந்தே போம் நீரே" என்கிறார். "வாழ்ந்தே போம் நீரே" என்றது "நீ செய்ய நினைத்ததைத்தான் செய்வாய். ஏதோ செய்துவிட்டுப் போ" என்றபடி. இப்பாசுரத்திற்கு உரை செய்த தி.வே. கோபாலய்யரும் "வாசி வல்லீர்" என்ற பதத்திற்கு " உம்முடைய வடிவில் உள்ள வேறொன்றற்கு இல்லாத அழகும், ஆசைப்பட்ட எங்கள் சிறுமையும் ஒருசேர வைத்துக் கணக்கிட்டுப் பார்க்க ஆற்றலுடையீர் ஆனீர்" என்று குறிப்பிடுகிறார்.
 
தங்கள் விளக்கமும், அடியேனுடைய ஆச்சார்யருடைய மேல் விளக்கமும் கேட்டபின்.....
 
"பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம், நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றுமில்லை, கலியும் கெடும்" என்று தேறுகிறது.
 
அடியேன்
வேங்கடேஷ்


Add more friends to your messenger and enjoy! Invite them now.

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Apr 9, 2009, 12:07:04 PM4/9/09
to மின்தமிழ்
அன்பர்கள் அனைவரும் கலியும் கெடும் கலியன் தமிழில்,
கூடி இருந்து குளிர்வதைப் பார்க்கும் போதே, இஇஇஇஇஇஇஇஇஇஇனிக்கிறது! :)

குமரனுக்குச் சின்னப் பையன் நான் நியமனம் பண்ண முடியுமா? அடியேன்
பொடியேன்! :)
பாசுரத்தை ரசித்தாரும் புசித்தாரும்.....இன்னுமொரு நூற்றாண்டு இரும்!


On Apr 9, 10:26 am, meena muthu <rangame...@gmail.com> wrote:
> அடடா! பாருங்கள் இந்த பாடலை பாடிப்பார்த்துக் கொண்டிருக்கும்போதே
>
> அதிவேகத்தில் மனம் பதில் பொத்தானை அமுக்கச்செய்துவிட்டது!எல்லாம் பாடலின்
> மஹிமை!! :))))))
>

> 2009/4/9 meena muthu <rangame...@gmail.com>
>
>
>
>
>
> > 2009/4/9 V, Dhivakar <venkdhiva...@gmail.com>
>
> >> *முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற


>
> >> பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
> >> பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
> >> இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே

> >> *

> >>> தேவ்- Hide quoted text -
>
> - Show quoted text -

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Apr 9, 2009, 12:07:22 PM4/9/09
to மின்தமிழ்
//காரி மாறனையே இதுவரை அறிந்திருந்த அடியேன் கலியன் பரகாலன்
பைந்தமிழையும் பருகித் திளைத்தேன்//

இராமானுசர் மாறன் பாசுரங்களை வாசித்த பின் யானை போல கம்பீரமா அமைதியா
நடப்பாராம்! ஆனால் திருமங்கை கலியன் பாசுரங்களை வாசித்த பின் சிங்கம் போல
கொஞ்சம் மூரி நிமிர்ந்து முழங்கியே புறப்படுவாராம்!

பண்டு அரு மாறன் பசுந்தமிழ், ஆனந்தப் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்!

"கலி"மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலிமிக்க பாடலை உண்டு, தன் உள்ளம் தடித்து, அதனால்
வலிமிக்க சீயம் இராமானுசன்!

அது போல இப்ப உங்க நிலைமை குமரன்! :)


On Apr 9, 12:07 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"

> > - Show quoted text -- Hide quoted text -

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Apr 9, 2009, 12:11:15 PM4/9/09
to மின்தமிழ்
ஆர் ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே
ஆர் ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே

எப்படியெல்லாம் சொல்லைக் கோக்குறாரு பாருங்க!

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான்
திசையும் இருநிலனும் ஆய் எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோம் ஆல்....
தாய் எம்பெருமான், தாய் எம்பெருமான்
தாய் எம்பெருமான், தாய் எம்பெருமான்

சான்ஸே இல்லை!
எங்கள் ராபின்ஹூட் ஆழ்வாரில் ஆழ்வார் ஆழ்வாரே!

devoo

unread,
Apr 9, 2009, 2:34:48 PM4/9/09
to மின்தமிழ்
Apr 9, 6:03 pm, நா.கண்ணன்

இதை அப்படியே வழிமொழிகிறேன். சில நேரங்களில் நான் கூட கடுமையாக
எழுதிவிடுவதுண்டு. காரணம் அருளிச்செயல்களும், அதற்கு ஆச்சர்யர்கள்
ஆழங்காட்பட்டு கண்டு சொன்ன பொருள்களும் பிறழ்ந்துவிடக்கூடாது என்ற

அக்கறையால்தான். //

'சம்பறுத்தார்க்கைக்குப் போகவேணுமோ' என்னும் ஓர் உவமை
'சம்பறுத்தார் கைக்குப் போகவேணுமோ' என்று பலகாலும் பயிலப்பட்டுப் பொருள்
தெரியாமலேயே
போய்விட்டது; 'க்' எனும் ஓர் எழுத்து மறைந்ததன் விளைவு.
பின்னர்ப் புத்தூர்ப் பெரியவரின் முயற்சியால் சீர் பெற்றது.
நாம் அந்த அளவு பேரறிவாளிகள் இல்லையெனினும் தெரிந்த பிழைகளைக் களைவதையும்
ஒரு கைங்கர்யமாகவே செய்ய வேண்டும்; பிறர் கூறுவனவற்றையும் ஏற்க வேண்டும்.

'த்ராவிட வேத ஸாகரம்' என்பது ஓர் அலங்காரமான அடைமொழியன்று.

தேவ்

Kavalkazhani Venkatakrishnan

unread,
Apr 9, 2009, 7:09:34 AM4/9/09
to minT...@googlegroups.com
the coincidence is that Thiru Indhalur samprokashanam was conducted yday..8.4.09...


From: Kumaran Malli <kumara...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Thursday, April 9, 2009 4:33:03 PM
Subject: [MinTamil] Re: பரமேஸ்வரம் ரமேஸ்வரம் மேஸ்வரம் ஈஸ்வரம் - திருவிந்தளூர் பரிமளரங்கன்

நா.கண்ணன்

unread,
Apr 9, 2009, 8:51:06 PM4/9/09
to மின்தமிழ்
On Apr 9, 8:09 pm, Kavalkazhani Venkatakrishnan <vinchi...@yahoo.com>
wrote:

> the coincidence is that Thiru Indhalur samprokashanam was conducted yday..8.4.09...
>

"coincidence" இல்லை :-)
இந்தக் கண்ணபிரான் இருக்காரே, இவர் நியூயார்க்கில் இருந்து கொண்டு
திருவாலியில் திருவாராதனம் ஒழுங்காய் நடக்கிறதா? என்று கவனிப்பவர்.
இவரும், குமரனும் சேர்ந்துவிட்டால் ஒரே கலக்கல்தான்.
இப்ப பாருங்க கலியனை 'ராபின்ஹூடு' என்கிறார். இதுவும் பாந்தமாகத்தான்
உள்ளது ;-)

க.>

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 10, 2009, 1:34:34 AM4/10/09
to minT...@googlegroups.com
கண்ணன் சார் / தேவ் சார்,
 
இவ்வாறு திருத்துவதற்கு ஒருவர் வேண்டும். உண்மையில் அடியேன் கடைசியாக முறையாகத் தமிழ் பயின்றது அடியேன் பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் போது. அதன் பிறகு புத்தகங்கள் படிக்கிறேனே தவிர முறையான பயிற்சி மேற்கொள்ளவில்லை. ஆகையால், தமிழை முறையாக அறிந்த  தங்களைப் போல்வார்கள் திருத்தினால்தான் அடியேனுடைய பிழைகளைத் திருத்திக்கொள்ள முடியும்.
 
அடியோங்களுடைய மனன் மலர் மிசை எழுதர கருணை புரிய வேண்டும்.
 
அடியேன்
வேங்கடேஷ்


From: devoo <rde...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Sent: Friday, 10 April, 2009 12:04:48 AM
Subject: [MinTamil] Re: பரமேஸ்வரம் ரமேஸ்வரம் மேஸ்வரம் ஈஸ்வரம் - திருவிந்தளூர் பரிமளரங்கன்

நா.கண்ணன்

unread,
Apr 10, 2009, 2:13:33 AM4/10/09
to மின்தமிழ்
வேங்கடேஷ்:

வேண்டுவதெல்லாம் அவனது கல்யாணகுணங்களில் ஈடுபட வேண்டும். அவனை இனிமையாக,
கூட்டாக அனுபவிக்க வேண்டும் என்ற உந்தல். மற்றதை அவன் கவனித்துக்
கொள்வான்.
நம்மையொரு பொருளாக்கி, மண்ணை மதியாக்கி மாநிலத்தில் உலவவிடும் அவன்
விந்தை! இதைக் 'கைதவம்' என்கின்றார் நம்மாழ்வார். ஆச்சர்யமான பிரயோகம்.
மாயை என்றும் சொல்லலாம்.
கூட்டாக குள்ளக்குளிர அனுபவிக்கும் போது இப்படியான ஆச்சர்யமான
விளக்கங்கள் வந்துவிழும் (ஸ்புரிக்கும் என்பார் பரனூர் பெரியவர்). அது
உன்னது/என்னது என்றில்லை. அவனது என்பதே உண்மை.
ஒரு பெரிய காரியத்தில் ஈடுபடுத்தியுள்ளான் உங்களை, நம்மை. அவன் அருளால்
அவன் தாள் வணங்குவோம்.

க.>

On Apr 10, 2:34 pm, Thirumalai Vinjamoor Venkatesh

Kumaran Malli

unread,
Apr 10, 2009, 10:40:12 AM4/10/09
to minT...@googlegroups.com
வாழ்த்துகளுக்கு நன்றி திவாகர் ஐயா.

2009/4/9 V, Dhivakar <venkdh...@gmail.com>

Kumaran Malli

unread,
Apr 10, 2009, 10:42:49 AM4/10/09
to minT...@googlegroups.com
தங்களுக்கும் தங்கள் ஆசாரியருக்கும் மிக்க நன்றிகள் வேங்கடேஷ்.

2009/4/9 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>

Innamburan Innamburan

unread,
Apr 11, 2009, 1:33:57 AM4/11/09
to minT...@googlegroups.com
வெங்கடேஷ்,
எனது முறையான தமிழ் படிப்பு நின்றது ஆறாம் வகுப்பில்.
இன்னம்பூரான்

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 11, 2009, 2:26:25 AM4/11/09
to minT...@googlegroups.com
மிந்தமிழ் குழும அன்பர்களுக்கு,
 
இன்னம்பூரான் அவர்கள் சொன்னது..

<வெங்கடேஷ்,
எனது முறையான தமிழ் படிப்பு நின்றது ஆறாம் வகுப்பில்.
இன்னம்பூரான்
>
இப்பொழுது சொல்லுங்கள். இவர் எழுத்துக்களை நாம் படித்து ரசித்துக்கொண்டிருக்கிறோம். இது இறைவன் செயலன்றி வேறு என்னவாக இருக்க முடியும்!
 
இன்னபூரான் சார், அடியேனின் தாழ்மையான வணக்கங்கள்.
 
அடியேன்
வேங்கடேஷ்
 

On 4/10/09, Kumaran Malli <kumara...@gmail.com> wrote:
> தங்களுக்கும் தங்கள் ஆசாரியருக்கும் மிக்க நன்றிகள் வேங்கடேஷ்.
>
> 2009/4/9 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>
>
>>
>> "பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம், நலியும் நரகமும் நைந்த
>> நமனுக்கு இங்கு யாதொன்றுமில்லை, கலியும் கெடும்" என்று தேறுகிறது.
>>
>> அடியேன்
>> வேங்கடேஷ்
>>
>>
>
> >
>


Bollywood news, movie reviews, film trailers and more! Click here.
Reply all
Reply to author
Forward
0 new messages