பாரதி சினிமாவில் - நிற்பதுவே நடப்பதுவே

462 views
Skip to first unread message

Nagarethinam

unread,
Feb 25, 2011, 12:49:45 AM2/25/11
to மின்தமிழ்
பாரதியார் சினிமாவில் வெளிவந்த பாடல் பாரதியார் பாடிய பாடல்தானா? இதுவரை
பத்து புத்த்கம் வாங்கி அதில் தேடியும் கிடைக்கவில்லை.

பாரதி ஆனிகத்திற்கு திரும்பிய தருணமாக இருக்க வேண்டும்.

முதன் முதலில் சாதாரண மனிதன் "தேடுவோராக"
seeker மாறும்போது என்ழும் கேள்விகள், எத்தனை எளிமையான ஒரு வெளிப்பாடு.

அந்த பாடல் முழுவதும் தெரிந்தவர் / கிடைக்குமிடம் தெரிந்தவர் உதவலாமே!


Hari Krishnan

unread,
Feb 25, 2011, 12:57:18 AM2/25/11
to mint...@googlegroups.com


2011/2/25 Nagarethinam <nataraj...@gmail.com>

பாரதி ஆனிகத்திற்கு திரும்பிய தருணமாக இருக்க வேண்டும்.

ஆன்மீகத்துக்குத் திரும்பிய தருணம்?

பாரதி எப்ப ஆன்மீகத்தை விட்டு விலகியிருந்தார்?  அதையும் கொஞ்சம் விளக்கிட்டீங்கன்னா கத்துக்கலாம்.  விலகினாத்தானே திரும்ப முடியும்?

இந்தப் பாடலைக் குறித்து மலேசியப் பத்திரிகையில் வந்திருந்த (பாரதியின் அத்வைத மறுப்பு) கட்டுரை குறித்து ரெகா என்னிடம் விளக்கம் கேட்டு, நான் அவருக்கென்று தனியாக அனுப்பி வைக்கப் போக, அந்த நல்ல மனுசன் அந்தக் கட்டுரையையும் அதே மலேசியப் பத்திரிகையில் வெளிவரும்படி பண்ணிட்டார்.

ஆக, பாரதி ஆன்மீகத்துக்குத் திரும்பிய தருணம் என்பது ஒன்று சரியாக பாரதியை விளங்கிக் கொள்ளாமல் சொல்லப்பட்டதாக இருக்க வேண்டும்; அல்லது, திரும்புதல் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் சொல்லப்பட்டதாக இருக்கவேண்டும்.

ஆன்மீக விஷயம் என்றில்லாமல் எந்த விஷயமானாலும்விலகினால்தானே திரும்ப?  விட்டால்தானே மீண்டும் வர?  வீட்டைவிட்டு வெளியேறினால்தானே மீண்டும் வர?  மனம்திரும்பிய மைந்தனாக பாரதி எப்போதுமே இருந்ததில்லையே!

இந்தக் கவிதையை நீங்கள் ரசித்திருப்பது புரிகிறது.  ஆனால், சரியாகப் புரிந்துகொள்ளவேண்டுமே என்ற கவலையால் சொல்லிவிட்டேன்.  (பாரதி எனக்கு மட்டுமா சொந்தம்? யாரும் எப்படியும் புரிந்துகொள்ள உரிமையுண்டு என்றால், மன்னித்துவிடவும்.  நான் இந்த ஆட்டத்துக்கு வரமாட்டேன். :)) )

--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Feb 25, 2011, 12:58:58 AM2/25/11
to mint...@googlegroups.com


2011/2/25 Nagarethinam <nataraj...@gmail.com>

அந்த பாடல் முழுவதும் தெரிந்தவர் / கிடைக்குமிடம் தெரிந்தவர் உதவலாமே!

முழு வடிவத்தை அனுப்புகிறேன்.  படத்தில் கடைசி இரண்டு (அல்லது சில) அடிகளை விட்டுவிட்டார்கள்.  மணி 11,30.  இன்னமும் சரைக்கவில்லை; குளிக்கவில்லை; காலை உணவு அருந்தவில்லை.  முடிச்சப்புறம் அனுப்புகிறேன்.

கிருஷ்ணமூர்த்தி

unread,
Feb 25, 2011, 1:50:43 AM2/25/11
to மின்தமிழ்
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம்
காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.

திரைப்படப்பாடலில், இந்தக் கடைசி நான்கடியை விட்டு விட்டார்கள்!

திரு.ஹரிகி! காலை உணவை, இனிமேலாவது காலந்தாழ்த்தாமல் காலையிலேயே உண்ணப்
பழகுங்கள்! இப்போது உச்சி நேரம் வந்துவிட்டது.
--------------------------
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

On Feb 25, 10:58 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:

Jana Iyengar

unread,
Feb 25, 2011, 1:50:59 AM2/25/11
to mint...@googlegroups.com
இது பாரதிக்கு அநீதி இழைத்த பாடல். என்றன் நினைப்பில் இதை எழுதியவர் வைரமுத்து. ஏன் இப்படி ஒரு பாடல் படத்துக்கு அவசியப்பட்டது மேலும் இதை எழுத கவிஞ்ஞர் எவ்வாறு இசைந்தார் என்றெல்லாம் தெரியவில்லை. இந்தப்பாடல் பாரதியுடையதே என்று என் நண்பன் ஒருவன் என்னோடு சண்டை செய்யவே வந்துவிட்டான். யாரும் இனிமேல் மயங்கதீர்கள் 
அடியேன் ஜனா ராமானுஜதாசன். 
 2011/2/25 Hari Krishnan hari.har...@gmail.com
அந்த பாடல் முழுவதும் தெரிந்தவர் / கிடைக்குமிடம் தெரிந்தவர் உதவலாமே!

முழு வடிவத்தை அனுப்புகிறேன்.  படத்தில் கடைசி இரண்டு (அல்லது சில) அடிகளை விட்டுவிட்டார்கள்.  மணி 11,30.  இன்னமும் சரைக்கவில்லை; குளிக்கவில்லை; காலை உணவு அருந்தவில்லை.  முடிச்சப்புறம் அனுப்புகிறேன்.


--
அன்புடன்,
ஹரிகி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Jana

Hari Krishnan

unread,
Feb 25, 2011, 2:04:44 AM2/25/11
to mint...@googlegroups.com


2011/2/25 Jana Iyengar <iyenga...@gmail.com>

இது பாரதிக்கு அநீதி இழைத்த பாடல். என்றன் நினைப்பில் இதை எழுதியவர் வைரமுத்து. ஏன் இப்படி ஒரு பாடல் படத்துக்கு அவசியப்பட்டது மேலும் இதை எழுத கவிஞ்ஞர் எவ்வாறு இசைந்தார் என்றெல்லாம் தெரியவில்லை. இந்தப்பாடல் பாரதியுடையதே என்று என் நண்பன் ஒருவன் என்னோடு சண்டை செய்யவே வந்துவிட்டான். யாரும் இனிமேல் மயங்கதீர்கள் 
அடியேன் ஜனா ராமானுஜதாசன். 


ஐயையோ ஜனா ஸ்வாமி!  சீனி விஸ்வநாதன் காதில் விழுந்துடப் போகிறது.... விழுந்தா கொன்னே போட்டுடுவார்.  இது பாரதி எழுதிய பாட்டேதான்.  பாரதி கவிதைத் தொகுப்புகள் எல்லாவற்றிலும் இருக்கிறது.  பொய்யோ மெய்யோ என்ற தலைப்பில் இருக்கும்--பாரதி பாடல்களை எடுத்துப் புரட்டி, இந்தத் தலைப்பில் பாருங்கள்.

இந்தப் பாடலுக்கு ஒரு அற்புதமான முன்னுரையும் எழுதியிருக்கிறான் பாரதி.  உலகே மாயம் என்பதை (மாயாமயமிதம் அகிலம்கித்வா) வேறுவிதமாகப் புரிந்துகொள்கிறார்களல்லவா?  இங்கே சொல்லப்படும் மாயை வேறு; பாரதி கண்டிக்கும் மாயை வேறு.  அது புத்தமதத்து மாயை.  அத்வைத மாயைக் கொள்கையையன்று.  

இதற்குத்தான் பாரதி பாடல்களை கன்கார்டன்ஸோடு பதிப்பிக்க வேண்டும் என்று என் ஆசிரியர் முட்டிக்கொண்டார்.  அப்படி ஒரு 80சதம் வேலையைச் செய்தும் முடித்தார்.  அதற்குள் காலனுக்கு அவசரம் வந்துவிட்டது.  

Hari Krishnan

unread,
Feb 25, 2011, 2:46:59 AM2/25/11
to mint...@googlegroups.com


2011/2/25 Jana Iyengar <iyenga...@gmail.com>

இது பாரதிக்கு அநீதி இழைத்த பாடல். என்றன் நினைப்பில் இதை எழுதியவர் வைரமுத்து. ஏன் இப்படி ஒரு பாடல் படத்துக்கு அவசியப்பட்டது மேலும் இதை எழுத கவிஞ்ஞர் எவ்வாறு இசைந்தார் என்றெல்லாம் தெரியவில்லை.


நீங்கள் சொல்வதுபோல் வேறொருவர் எழுதிய பாடல் பாரதி படத்தில் உள்ளது.  ஆனால் அது இது இல்லை.  ‘எதிலும் இங்கு இருப்பவன் அவன் யாரோ...’ என்பதுபோலத் தொடங்கும்.  பாரதி, காசியிலிருந்தபோது பாடியதுபோல பாடப்பட்ட பாடல்.  பாடல் மிக அழகாக இருக்கும்.  ஆனாலும் பாரதி பாடலைப் பயன்படுத்தி இன்னமும் அழகாக்கியிருந்திருக்கலாம்; ஒரு மிகச் சிறந்த கவிஞனுடைய வாழ்க்கை வரலாற்றில் அவனுடைய சொந்தக் கவிதைகளை மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்றெல்லாம் பாரதியை உண்மையிலேயே போற்றி மதிப்பவர்கள் நினைப்பார்கள்.  இந்தப் படம்தான் நிறைய பொய்யும் புளுகும் கலந்து எடுக்கப்பட்ட படமாயிற்றே!  (பாடலை இயற்றியவர் புலமைப்பித்தன்.  வைரமுத்து இல்லை.)

பாரதி திரைப்படத்திலுள்ள வரலாற்றுப் பிழைகளையும் அபத்தங்களையும் சீனி விசுவநாதன் பட்டியலி்ட்டிருக்கிறார்.  ‘பாரதி ஆய்வுகள்: சிக்கல்களும் தீர்வுகளும்’ என்ற அவருடைய புத்தகத்தில் 504ம் பக்கத்தில் பாரதி - திரைப்படம் ஒரு கண்ணோட்டம் என்ற தலைப்பிலுள்ள கட்டுரையைப் பாருங்கள்.  33 அச்சுப் பக்கங்கள் நீளக் கட்டுரை.  

பாரதிக்கு திரைப்படமே போதுமானதற்கும் அதிக அளவில் அநீதி இழைத்துவிட்டது.  நீங்கள் சொல்ல நினைத்த அந்தப் பாடல் (இங்கே குறிப்பிட்டிருக்கிறேனே, அது) ஒரு லாரி குப்பையில் ஒரேயொரு குப்பத்தொட்டி அளவுதானே!  போவுது வுடுங்க.  

(படம் வெளிவந்த புதிதில் உணர்ச்சிக் கொந்தளிப்பில் என்னை மறந்து நானே இந்தப் படத்தைப் பாராட்டிப் பல குழுமங்களில் எழுதியிருக்கிறேன்.  உணர்ச்சி அடங்கிய பிறகு, படத்தைச் சுமார் 20-25 முறை பார்த்த பிறகுதான் தப்பு கண்ணில் படத் தொடங்கியது.  சீனி விசுவநாதன் கட்டுரையாகவே தொகுத்துவிட்டார்.)

Tthamizth Tthenee

unread,
Feb 25, 2011, 3:14:34 AM2/25/11
to mint...@googlegroups.com
கப்பலோட்டிய தமிழன் படத்தில் திரு சுப்பையா பாரதியராக நடித்திருப்பார்

சுப்பையா பாரதியாராகவே வாழ்ந்தார் அந்தப் படத்தில்

இந்தப் படத்தில் சாயாஜி ஷிண்டே என்னைப் பொறுத்த வரையில் பாரதியாராக தோன்றவில்லை

 நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை யைக் காணமுடியவில்லை

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/2/25 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

karthi

unread,
Feb 25, 2011, 5:24:47 AM2/25/11
to mint...@googlegroups.com
ஆம் ஹரிகி.
 
அது சிறப்பான பதில். பலருக்குத் தெளிவையும் தந்தது.
 
ரெ.கா.
--

Hari Krishnan

unread,
Feb 25, 2011, 5:52:44 AM2/25/11
to mint...@googlegroups.com


2011/2/25 karthi <karth...@gmail.com>

ஆம் ஹரிகி.
 
அது சிறப்பான பதில். பலருக்குத் தெளிவையும் தந்தது.
 
ரெ.கா.

மிக்க நன்றி ரெகா.  (அடுத்த மாதம்--அதான் நாலஞ்சு நாள் கழிச்சு--தென்றல் இதழில் என் பத்தியைப் பாருங்கள்.  உங்களைப் பற்றி ஒருவரி குறிப்பிட்டிருக்கிறேன்.)

உங்களுடைய பதிலைக் கண்டதும், எனக்கு நீங்கள் அனுப்பியிருந்த கடிதத்தையும், பத்திரிகையில் வெளிவந்திருந்த என் விடையின் வடிவத்தையும் தேடி எடுத்து மீண்டும் படித்தேன்.  எனக்கே கொஞ்சம் பிடிச்சுதான் இருக்கிறது.  (இதுல வெக்கம் எதுக்கு?)  ஆகவே, கண்ணன் திட்டினாலும் சரி.  இது உங்களுக்கான மறுபதிப்பு. மின்தமிழின் பாரதி அன்பர்களுக்கான முதல் பதிப்பு.  மீண்டும் இங்கே அரங்கேறுகிறது.

முன்பு நீங்களும் நானும் எழுதியதன் தொடக்கம்

<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>

பாரதியும் அத்வைதமும் பற்றிய ஒரு விளக்கம்

(ரெ.கார்த்திகேசு)

 

நண்பர் சை.பீர் முகம்மதுவின் "மலேசிய இலக்கியத்தில் உரத்த சிந்தனை" கட்டுரையில் (நேசன், ஜூன் 15) பாரதியைப் பற்றி ஒரு குறிப்பு எழுதியுள்ளார். "நிற்பதுவே நடப்பதுவே" என்னும் பாடலில் அவனுடைய இறுதி வரிகளை விட்டு விட்டே படத்தில் காட்டியுள்ளார்கள். 'மாயா வாதம்' என்ற கருத்தை பாரதி தனது பாடலின் இறுதி வரியில் மறுத்துள்ளான். படத்தில் பாரதி மாயா வாதத்தை ஏற்றுக் கொள்வதுபோல பாடலை எடுத்துள்ளார்கள்."

 

இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் எனக்கும் இந்த ஐயப்பாடே என்றும் எழுவதுண்டு. பாடல் முழுவதும் மாயா வாதத்தைச் சந்தேகிப்பது போலவே தொனிக்கிறது. படத்தில் தோன்றாத அதன் இறுதி வரிகள் அவர் மாயா வாதத்தை தீர்க்கமாக மறுப்பதாகவே உள்ளன.

 

சைபீரின் கூற்று பெரும்பாலும் சரியென்றாலும், பாரதி மாயா வாதத்தை முற்றாக மறுத்தான் என்பதை அறுதியான முடிவாக ஏற்றுக் கொள்ள முடியாது. பாரதி வேதாந்தி. சைவ சமயத்தில் கூட பாரதிக்கு அவ்வளவு ஒட்டு இல்லை. ஆகவே வேதாந்தத்தின் அடிப்படைகளில் முக்கியமான மாயா வாதத்தை அவன் ஒதுக்கித் தள்ளியிருக்க முடியாது.

 

இந்தச் சந்தேகம் பற்றி என் இணைய நண்பரும், கம்பனையும் பாரதியையும் தன் இருகண்களாகக் கருதிப் பயின்று புரிந்திருப்பவருமான சென்னை ஹரிகிருஷ்ணனிடம் மின்னஞ்சலில் கேட்டிருந்தேன். என் கேள்வியையும் அவர் (மின்னஞ்சல்) பதிலையும் அவருடைய அனுமதி பெற்றே இலேசாகச் சுருக்கிக் கீழே தருகிறேன். வாசகர்களுக்குப் பயனாக இருக்கும்.

 

 

அன்பு ஹரி,

 

பாரதி "நிற்பதுவே நடப்பதுவே" பாடலை:

"காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை

காண்பது சக்தியாம், இந்தக் காட்சி நித்தியமாம்"

என்று முடிக்கிறார். அப்படியானால் இவருக்கு அத்வைதம் சம்மதமில்லை என்று பொருளா? இயற்கையை இத்தனை கோடி இன்பம் என்று எண்ணி எண்ணி ரசித்தவருக்கு மாயை பிடிக்காது எனக் கொள்ளுவதில் ஆச்சரியமில்லை. இருந்தாலும் வேதாந்தம் அறிந்தவர் ஆயிற்றே! விளக்குங்கள்.

 

ரெ.கா.

 

 

அன்புள்ள ரெ.கா.,

 

பாரதி அத்வைதச் சிந்தனையை மறுத்தவன் என்பதற்கு ஆதாரம் இல்லை. 

 

பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்

    பொருளினை நாம் இங்கு எடுத்துப் புகலக் கேளாய்

சாமிநீ சாமிநீ கடவுள் நீயே

    தத்வமசி தத்வமசி நீயே அஃதாம்

பூமியிலே நீகடவுள் இல்லை என்று

    புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை

சாமிநீ அம்மாயை தன்னை நீக்கி

    சதாகாலம் சிவோஹம் என்று சாதிப்பாயே

 

என்று பாரதி அறுபத்தாறு முடிகிறது.  பாரதி, ஆறாயிரம் பாடல்கள் பாட எண்ணியிருந்தான்.  அறுபத்தாறிலேயே நிற்கிறது என்று அறிகிறோம்.  இந்தப் பகுதியைத் தன்வரலாற்றோடு சேர்த்துப் பதிப்பிக்கிறார்கள்.  அவனுடைய வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களை, அவனுக்குக் குருவாக வாய்த்தவர்களைப் பற்றி ஆங்காங்கே சொல்வதனால், அப்படிச் சேர்ப்பதற்கு இடமிருக்கிறது.  இருந்த போதிலும், அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையைக் காட்டிலும், அவனுடைய இறைச் சிந்தனையே நெடுகிலும் காணப்படுகிறது.  முதற்காண்டம் என்று தலைப்பு தந்திருக்கிறான்.  பெரிய நூலாகச் செய்யத் திட்டமிருந்திருக்கிறது என்பது தெளிவு.  அவனுடைய சிந்தனைகள் முற்றாக வெளிப்படவில்லை.  எனவே தன் வரலாறு என்பது வெறும் மேம்போக்கான பார்வை மட்டும்தான்.  பாரதியின் இறைமைக் கருத்துகளை அறிவதற்கான களம் இது. 

 

சங்கரரின் அத்வைதத்தை ஏற்ற போதிலும் மாயையைப் பற்றிய அவன் சிந்தனை மாற்றம் பெற்றிருக்கிறது.  அவனுடைய எழுத்தைக் காலவாரியாகப் பார்த்தால்தான் இதைப் பற்றி விரிவாகப் பேச முடியும்.  அதற்கு முன்னால், மாயை குறித்த தெளிவு வேண்டும்.  அதாவது எனக்கு.  நான் இன்னும் இதைப் பற்றி அறிய வேண்டியதிருக்கிறது.  அதனால் இதைப் பற்றி அதிகம் பேசுவதை இப்போதைக்குத் தவிர்க்கிறேன்.

 

1908ல் எழுதிய 'மாயையைப் பழித்தல்' பாடலில் இப்படிச் சொல்கிறான்:

இருமை அழிந்தபின் எங்கிருப்பாய் அற்ப மாயையே - தெளிந்து

ஒருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ - மாயையே

 

இதை இன்னும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. 

 

வாழ்வு முற்றும் கனவு எனக் கூறிய

    மறை வலோர் தம் உரை பிழை அன்று காண்.

தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள்

    சரதம் அன்றெனல் யானும் அறிகுவேன்

 

'எனக்கும் அதெல்லாம் தெரியும்' என்று ஒரு 'ம்' போடும் போதே, 'ஏய், அதெல்லாம் இருக்கட்டுமையா, அதிலே நமக்குக் கொஞ்சம் மாறுபாடு உண்டு' என்ற தொனி கேட்கிறது. 

 

பாழ் கடந்த பரநிலை என்றுஅவர்

    பகரும் அந்நிலை பார்த்திலென்.  பார்மிசை

ஊழ் கடந்து வருவதும் ஒன்று உண்டோ?

    உண்மை தன்னில் ஓர் பாதி உணர்ந்திட்டேன்

 

என்று தொடரும் போது 'இதைப் பற்றி இன்னும் நான் ஒரு தீர்மானத்துக்கு வரவில்லை' என்று ஆழ்ந்திருக்கும் கவிமனம் வெளிப்படையாகவே சொல்கிறது.

 

அப்புறம் சொல்கிறான்.  'மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்.' சரி.  நல்லாத் தெரிஞ்சிடுச்சு.  அப்புறம் வேற என்ன?  'மற்றும் இந்தப் பிரமத்து இயல்பினை ஆய நல் அருள் பெற்றிலன்.'  'இது வரைக்கும் பிரமத்தின் இயல்பு எனக்குச் சிக்கவில்லை. 'ஒமக்குத் தெளிவில்லாட்டி என்னய்யா?  தெளிஞ்சவங்க சொல்லியிருக்காங்க இல்ல, அத எடுத்துக்கறது? 'தன்னுடை அறிவினுக்குப் புலப்படல் இன்றியே, தேய மீது எவரோ சொலும் சொல்லினைச் செம்மை என்று மனத்திடைக் கொள்வதாம் தீய பக்தி இயற்கையையும் வாய்ந்திலேன்.'  சொல்றவங்க சொல்றதை எல்லாம் எடுத்துக்க என்னால முடியாது.  எனக்கு, என் அறிவுக்குத் தெளிவாக வேண்டும்.  அது வரைக்கும் அவங்க சொல்றதை அப்படியே எடுத்துக்க முடியாது. 

 

(இந்த 'தீய பக்தி இயற்கை' என்பது ஒரு நிலை.  நம்பிக்கை என்பது இன்னொரு நிலை. 'நம்புவதே வழி என்ற மறைதனை நாமின்று நம்பிவிட்டோம்.  கும்பிட்டு என்னேரமும் சக்தியென்றால், உன்னைக் கும்பிடுவேன் மனமே' என்று சொல்லும் போது குறிப்பிடும் நம்பிக்கையும், இந்த 'இயற்கையும்' ஒன்றில்லை.)

 

அதாவது, ஒரு பகுதியை ஏற்க முடிகிறது.  அத்வைதச் சிந்தனையில் எந்தச் சிக்கலுமில்லை.  அப்படியே ஏற்கிறேன். இருமை அழியும்.  அப்போது மாயையும் செயலிறும்.  இன்னொரு பகுதியை ஏற்கச் சிரமமாயிருக்கிறது.  உலகம் பொய் என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.  எனக்குப் புலப்படாத வரையில் நான் அறிவு நிலையில் இருந்து அதை ஏற்க மாட்டேன்.  சரிதான் வேய்.  என்னதான் பண்ணப் போறீரு?  'சிறிது காலம் பொறுத்து இனும் காண்பமே.'  கொஞ்சம் பொறுத்திருந்தால் தெளிவு கிடைக்கும்.  பாக்கலாம்.  1910ல் இந்த நிலை.  அவனுடைய சிந்தனை இந்த வடிவத்திற்கு வந்திருக்கிறது.

 

அப்ப என்னதான் சொல்றீரு?  கனவா, கனவில்லையா?  'அட அப்படித்தான் இருந்துட்டுப் போகுது போ.'  'உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும்.' அப்ப உலகம் அநித்யம், ஒப்புக்கறீரு? 

 

'அட போடா வைதீகம்!  வேடிக்கை தானே பார்த்துக் கொண்டிருக்கிறாய்.  இவளிடத்திலே இன்னும் சில வ்யவஹாரங்கள் தீர்த்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது.'  'சில தினங்கள் உயிர்க்கு அமுதாகியே செப்புதற்கு அரியதாகுமால் திலத வாள்நுதலார் தரு மையலாம் தெய்விகக் கனவு, அன்னது வாழ்கவே!'

 

உலகம் கனவுதான்.  கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை கனவுதான்.  அந்தக் கனவுக்குள்ளே சில தினங்கள் காதல் ஏற்படுகிறதில்லையா, அது உண்மை.  அது சத்தியம்.  என் பெண்டாட்டி மேல் எனக்கிருக்கும் காதல் சத்தியம். அவளுக்கு என் மேல் இருக்கும் காதல் சத்தியம்.  இருவரின் காதலையும் சத்தியமாக்கும் காமமும் சத்தியம்.  ஒனக்கு வேணும்னா கனவுன்னு சொல்லிக்கோ.  ஆனா அது தெய்விகக் கனவு.  அதை ஒன்னால கூட மறுக்க முடியாது.' 

 

மனைவியும் காதலும் சத்தியமா?  அப்பனே கொஞ்சம் யோசி.  'காதே காந்தா கஸ்தே புத்ரா ஸம்ஸாரோயம தீவ விசித்ர:'  யார் உன் மனைவி?  யார் உன் மகன்?  உண்மையில் இந்த சம்சாரம் மிகவும் விசித்திரமானதே.' 

 

ஓய்! காஷாயம் கட்டின நீர் வேண்ணா அப்படிச் சொல்லிக் கொள்ளும்.  வீட்டுக்குள்ளே அந்த வார்த்தை வரக் கூடாது. "ஸந்யாசிகள் இதை ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கட்டும்.  அதைப் பற்றி இந்த நிமிஷம் எனக்கு வருத்தமில்லை. குடும்பத்தி லிருப்போருக்கு அந்த வார்த்தை பொருந்துமா?  நடு வீட்டில் உச்சரிக்கலாமா?  அவச்சொல்லன்றோ? தங்கச் சிலை போலே நிற்கின்றாள் மனைவி... அவள் பொய்யா?  .... பெற்றவரிடம் கேட்கின்றேன், குழந்தைகளும் பொய்யா?  நமது வீட்டில் வைத்து வழிபடும் குலதெய்வம் பொய்யாகுமா?"

 

இது பாண்டிச்சேரி வாசத்தின் கடைசியில் எழுந்த ஆக்ரோஷமான சிந்தனை.

 

அதே காலகட்டத்தில் எழுதிய பதஞ்சலி யோக சூத்திர விளக்கத்தைப் பார்ப்போம். 

 

இருபத்து மூன்றாவது சூத்திரத்துக்கு விளக்கம் எழுதும் போது, இப்படிச் சொல்கிறான்.

 

"மாயையாவது யாதெனில், ஸர்வ மங்களமாகிய ஜகத்தில் ஜீவன் தன் கற்பனா சக்தியால் ஏற்படுத்திக் கொள்ளும் தீமை." இது மிகச் சுருக்கமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கருத்து.  மிக மிக இளக்கினால் ஒழிய புரிந்துகொள்வது கடினம்.

 

தொடர்கிறான்.  "இது பூர்வத்தில் சங்கராச்சார்யர் சொன்ன லக்ஷணத்துக்குப் பேதப்பட்டது.  மாயையைத் தவிர ஜகத்தேயில்லை யென்று சங்கராச்சாரியர் சொன்னார்.  ஸர்வ மங்களகரமான ஜகத்தில் ஜீவன் கற்பனையால் செய்துகொள்ளும் தீமையே மாயை என்று "நாம்" சொல்கிறோம்."

 

அதாவது, ஆதி சங்கரர் மாயை என்று சொன்னது வேற.  நான் மாயை என்று சொல்வது வேற.  இங்கே, பாரதியின் சிந்தனைக்கு ஒரு வடிவம் கிடைக்கிறது.  ஆனால் அதை முழுமையாகப் பார்க்க இன்னும் உழைக்க வேண்டியிருக்கிறது. 

 

அன்புடன்

ஹரிகிருஷ்ணன்.

<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>

முன்பு எழுதியதன் முடிவு

முன்பு எழுதியதைக் காட்டிலும் அத்வைதம் பேசும் மாயையை ரமணர், ராமகிருஷ்ணர் போன்றோரின் உதவியுடன் இன்னும் சற்று அதிகம் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது.  இதையே இப்போது எழுதினால் எப்படியிருக்கும் என்று யோசிக்கிறேன்.  ம்ம்ம்?  பார்க்கலாம்.  இறையருள்.  

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Feb 25, 2011, 7:06:04 AM2/25/11
to mint...@googlegroups.com
சத்தியமாக அது பாரதியின் வரிகள்தான்..
பாரதியின் வேதாந்த பாடல்களில் பொய்யோ? மெய்யோ? என்ற பிரிவில் இந்த பாடல்
தென்படுகின்றது.. முழுமையான பாடலுக்கே உங்களுக்கு சந்தேகம்...
அப்படியானால் பல பாடல்களிலிருந்து எடுக்கப் பட்டு ஒரே பாடலாக
வெளியிடப்பட்ட மற்ற திரைப்படப் பாடல்களைப்(பாரதியின் பாடல்களை)
பாடும்போது உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம் வரவில்லை.?
உ-ம்.
1. கேளடா மானிடா (பாரதி)
2. சிந்து நதியின் மிசை நிலவினிலே (கப்பலோட்டிய தமிழன்)
இது போன்று சொல்லிக் கொண்டே போகலாம்...

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil


--
என்றும் அன்புடன்
அன்னை அபிராமியின் அருள்
அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அடியேன்
மு. கந்தசாமி நாகராஜன்,
சுப்பிரமணியபுரம்.
--------------------------------
சலுகை போனால் போகட்டும் - என்
அலுவல் போனால் போகட்டும்.
தலைமுறை ஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலை ஆகட்டும்.
--------------------------------
www.chithiram.blogspot.com
www.subramanyapuram.blogspot.com

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Feb 25, 2011, 7:07:15 AM2/25/11
to mint...@googlegroups.com
இந்த பாடலில் கூட பாரதியின் வரிகளை சற்றே குழப்பித்தான்
பயன்படுத்தியிருக்கின்றார் இளையராசா..

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Feb 25, 2011, 7:10:35 AM2/25/11
to mint...@googlegroups.com
பாரதிக்கு மயங்காத தமிழர் பாரினில் உண்டோ? (இருந்தார்களாம் முன்னர்
திராவிடம் வளர்த்த பெரியோர்)

On 2/25/11, Jana Iyengar <iyenga...@gmail.com> wrote:
> இது பாரதிக்கு அநீதி இழைத்த பாடல். என்றன் நினைப்பில் இதை எழுதியவர் வைரமுத்து.
> ஏன் இப்படி ஒரு பாடல் படத்துக்கு அவசியப்பட்டது மேலும் இதை எழுத கவிஞ்ஞர்
> எவ்வாறு இசைந்தார் என்றெல்லாம் தெரியவில்லை. இந்தப்பாடல் பாரதியுடையதே என்று
> என் நண்பன் ஒருவன் என்னோடு சண்டை செய்யவே வந்துவிட்டான். யாரும் இனிமேல்
> மயங்கதீர்கள்
> அடியேன் ஜனா ராமானுஜதாசன்.
> 2011/2/25 Hari Krishnan hari.har...@gmail.com
>
>> 2011/2/25 Nagarethinam

>> <nataraj...@gmail.com>harathஇயுடயதே<nataraj...@gmail.com%3Eharathiyudayathe>


--

Nagarethinam

unread,
Feb 26, 2011, 12:46:29 PM2/26/11
to மின்தமிழ்
திருப்பம் என்பதை ஆங்கிலத்தில் Turning point என்ற பொருளில்
குறிப்பிட்டிருந்தேன்.

ஒவ்வொரு ஆன்மிகரின் வாழ்க்கையும் மேலோட்டமாக அலசினால் அதில் ஒரு
நிகழ்ச்சி சாதாரண் மனித வாழ்க்கையிலிருந்து ஒரு திருப்பம்
காணப்படும்.சித்தர்களாகட்டும் சேஷாத்ரி ஸ்வாமிகளாகட்டும். ரமணர் புத்தர்
என்று எந்த ஒரு மகானின் வாழ்வாகட்டும். ராமலிங்கவள்ளலார் மாத்திரம் ஒரு
சிறிய விதிவிலக்காக தெரிகிறார்.

பாரதி ஒரு ஆசிரிய்ர் பத்திரிக்கையாளராக தொடங்கி, பசியின் கொடுமை
உணர்ந்து, மனிதனை மட்டுமல்லாது எல்லா உயிர்களின்
பசிக் கொடுமையையும் உணர்ந்து, ஸ்மூகக் கொடுமை பெண் விடுதலை என்று ஒரு
சிறந்த சமூக சிந்தனையாளராக உருவெடுத்தார். பின் விடுதலைக் கவியாக
வளர்ந்தது நாடறியும்.

ஆன்மிகம் என்றால் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ எனக்குத் தெரியவில்லை.

மனிதரில் பெரும்பாலோர், சாதாரணராக பிறந்து கண்கள் கண்டதை மநால் பிடித்து,
அதைக் கையில் பிடிக்க முயன்று சில வெற்றிகளும் பல தோல்விகளும் துரத்த,
வாழ்னாளின் இறுதியை அடைந்து
சாதாரண வாழ்க்கை.

ஏதோ ஒரு காரணம் (மேலோட்டமான ஜகணிப்பு) உந்த, காயமே இது பொய்யடா இது
காற்றடைத்த பையடா என்று சாதாரண வாழ்க்கையிலிருந்து வழிமாறி - உண்மை,
கடவுள் என்று தேடி, தாடிவைத்து, காட்டில் சிலர் புகுந்து .. இது கட்டம்
இரண்டு.
இங்கே, வேதங்கள், ஜென் சித்தந்தங்கள், யோகா, குரு என்று தேடி
இல்லறத்தை துறந்து திரிவது இந்த கட்டத்தை நான் திருப்பம் என்கிறேன்.

இதில் முற்றி காயமே இது நிஜன் தான். கடவுளை அறிய தாடியைவிட இந்த காயமே
அவசியம் என்று உணர்ந்து
காய கல்பம் சாப்பிட்டு உடலை பேணி பாதுகாத்து, தியானத்தில் லயித்து,
படிப்படியாக பிரமன் விஷ்ணு ஆகியோருடன் கைகுலுக்குவது ஆன்மிகராக
பரிமாணமாற்றம் அடைந்ததன் அறிகுறி.

இதில் பாரதி பராசக்தியிடன் ஒரு பட்டியல் போட்டு அதைத்தா, இதைத்தா என்று
எழுதிய காலத்தில் அவர் ஆன்மிக சிந்தனையை தொடவில்லை. ஒருவருக்கு உணவில்லை
என்றால் ஜகத்தினை அழிக்க சூளுரைப்பது ஆன்மிகப் பாதையில் கால் வைக்காத
நேரம்.

இப்போ நான் சொல்ல வந்த திருப்பம் என்ன என்று தெரிகிறதா.?

இந்த பரிணாம மாற்றங்க்களை குறிக்கும் அழகிய ஜென் கவிதை என்றை என்
பிளாகில் எழுதுகிறேன்.
உங்கள் குழப்பம் எனக்குப் புரிகிறது கோவிலுக்கு போனாலே சாமியை
கும்பிட்டாலேயே ஆன்மிகம் என்ற பொதுவான கருத்து
உங்க்ளையும் பாதித்திருக்கிறது.

னன் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என்று, அடம் பிடிக்காமல் மாற்று
சிந்தனையை / கருத்தை அறிய விரும்பினால் காணுங்கள்,
எழுதுங்கள்.
நன்றி


http://shake-hands-with-bramma.blogspot.com/


On Feb 25, 10:57 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2011/2/25 Nagarethinam <natarajan.n...@gmail.com>

Nagarethinam

unread,
Feb 26, 2011, 12:53:00 PM2/26/11
to மின்தமிழ்
மிக மிக மிக மிக நன்றி, கிருஷ்மஊர்த்தி சார்.

இது எங்கே கிடைத்தது?

இதே போல வேறு ஒரு பாடலைத்தேடிவருகிறேன். பாரதி பாட்டில்லை. ஆசிரியர்
தெரியாது.

அணுவுக்குள் நுழைந்தேன் ஏழேழு உலகம் கண்டேன்

என்ற வரி அதில் உண்டு.

மீண்டும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி

நட்புடன்
நடராஜன்

Nagarethinam

unread,
Feb 26, 2011, 1:04:44 PM2/26/11
to மின்தமிழ்
என் வாழ்வில் இதைவிட ஒரு அற்புதமான பாடலை நான் கேட்டதில்லை.

பாரதி ஆன்மிகத்தை முதல் முறை தொடடதற்கு இந்த பாடல் ஒரு திருப்பு முனை.
சாட்சி.

முதன் முதலில் பொருள் உலகின் மாயையிலிருந்து விடுட்டதற்கு இது அறிகுறி

பாரதியார் பாடல்கள் என்று பார்த்த புத்தகண்க்களிலெல்லாம் வாங்கி தேடி
கிடைக்காமல், திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அனுப்பித்தந்தார்கள்.
அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.

நட்புட்ன்
நடராஜன்

On Feb 25, 11:50 am, Jana Iyengar <iyengar.j...@gmail.com> wrote:
> இது பாரதிக்கு அநீதி இழைத்த பாடல். என்றன் நினைப்பில் இதை எழுதியவர் வைரமுத்து.
> ஏன் இப்படி ஒரு பாடல் படத்துக்கு அவசியப்பட்டது மேலும் இதை எழுத கவிஞ்ஞர்
> எவ்வாறு இசைந்தார் என்றெல்லாம் தெரியவில்லை. இந்தப்பாடல் பாரதியுடையதே என்று
> என் நண்பன் ஒருவன் என்னோடு சண்டை செய்யவே வந்துவிட்டான். யாரும் இனிமேல்
> மயங்கதீர்கள்
> அடியேன் ஜனா ராமானுஜதாசன்.

>  2011/2/25 Hari Krishnan hari.harikrish...@gmail.com
>
>
>
>
>
>
>
>
>
> >  2011/2/25 Nagarethinam <natarajan.n...@gmail.com>harathஇயுடயதே<natarajan.n...@gmail.com%3Eharathiyudayathe>


>
> >> அந்த பாடல் முழுவதும் தெரிந்தவர் / கிடைக்குமிடம் தெரிந்தவர் உதவலாமே!
>
> > முழு வடிவத்தை அனுப்புகிறேன்.  படத்தில் கடைசி இரண்டு (அல்லது சில) அடிகளை
> > விட்டுவிட்டார்கள்.  மணி 11,30.  இன்னமும் சரைக்கவில்லை; குளிக்கவில்லை; காலை
> > உணவு அருந்தவில்லை.  முடிச்சப்புறம் அனுப்புகிறேன்.
>
> > --
> > அன்புடன்,
> > ஹரிகி.
>
> > --
> >  "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Nagarethinam

unread,
Feb 26, 2011, 1:20:18 PM2/26/11
to மின்தமிழ்
னாம் ஒப்ப வேண்டிய உண்மை, பாரதி பிறந்த போது, அவர் வயது 38 இல்லை.

எல்லோருக்கும் தனது எண்ணங்ககளிலும் கருத்துகளிலும் பிறந்த்திலிருந்து
இறக்கும் வரை மாறுபடாமல் இருந்ததில்லை.

வள்ளலார் காலத்தில் அவரை அவரது இளமைகால அறிவுறையிலிருந்து பிற்காலத்தில்
மாறுபட்ட கருத்து தெரிவித்ததை சாடியிருக்கிறார்கள்.

நம்மைப்போல பலருக்கு அறிவு வளாராவிட்டால் அதே கருத்தைக் கொண்டிருப்போம்.
அவர் முன்னல் நாம் என்ன? அவர் ஞானி ஐய்யா! அந்த சிறிய காலத்தில் அவர்
சாதனைதான் என்ன? நாம் எல்லாம் அற்ப பதருகளே!

மாயா - கர்மா எல்லாமே ஞானிகள் பரிசோதனைக்கு பயன் படுத்திய
மாடல்களில் வெளிப்பாடு. அதை நிஜம் என்றோ தவறு என்றாலும்
அண்டத்தில் மாற்றம் வ்ருவதில்லை. மாற்றம் நமது மனதில் தான்.

மாயை கர்மா தியரியை எனது 62 ம வயதில் மறுத்து - Science of Spirituality
என்ற புத்தகத்தை எழுதி முடித்துள்ளேன்.
படிச்சு பாகரிங்க்களா?


அவ்ளோதான்

நன்றி

நட்புடன்

நடராஜன்

On Feb 25, 3:52 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/2/25 karthi <karthige...@gmail.com>

> ...
>
> read more »

Hari Krishnan

unread,
Feb 27, 2011, 12:21:36 AM2/27/11
to mint...@googlegroups.com


2011/2/26 Nagarethinam <nataraj...@gmail.com>

னன் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என்று, அடம் பிடிக்காமல் மாற்று
சிந்தனையை / கருத்தை அறிய விரும்பினால் காணுங்கள்,
எழுதுங்கள்.
நன்றி

ஆன்மிகம் என்றால் என்ன என்பதன் வரையறை முதலில் தெளிவாக வேண்டும்.  எல்லாப் பற்றையும் விட்ட நிலையன்று ஆன்மிகம்.  இன்னொன்று, ஆன்மிகமும் ஆன்மிக நாட்டமும் வேறு வேறு.  (சென்னையிலிருந்து மதுரைக்குப் போகும் சாலையை அடைந்தால், சாலையைத்தான் அடைந்திருக்கிறோம்; மதுரையை அடையவில்லை என்பதைப்போல்.)

முதல் மூன்று பாடல்களுக்கும், ‘உலகத்தை நோக்கி வினவுதல்’ என்றும், நான்காவது பாடலுக்கு ‘இயற்கை சொல்லும் விடை’ என்றும் உள்தலைப்பாக பாரதியே கொடுத்திருக்கிறான் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த முதல் மூன்று பாடல்களும் ‘அறிவினா’ என்ற வகையில் அடங்கும்; ஐயவினா என்ற கணக்கில் சேராது என்பது புலனாகும்.  ‘மாயை மாயைங்கறாங்களே.... அப்ப இதெல்லாம் மாயைதானா’ என்று (யாரோ ஒரு தேடுபவன் சார்பாக) கவிஞன் கேட்டிருப்பதையும், கவிஞனுடைய இறுதிக் கருத்து என்ன என்பது, இயற்கையின் விடை மூலமாக வெளிப்படுகிறது என்பதையும் இந்த உள்தலைப்புகளையும் கருததில் கொண்டால்தான் தெளிய முடியும்.

அடுத்ததாக இன்னொன்று.  பாரதியின் பிற்காலப் பாடல்களில் ஒன்று இது.  எழுதப்பட்டது இன்ன வருஷம் என்று தீர்மானமாகச் சொல்லமுடியாத, ஆனால் சர்வ நிச்சயமாக 1917க்குப் பிறகு எழுதப்பட்ட பாடல்களில் ஒன்று என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.  

இந்தப் பாடல்தான் பாரதியின் ஆன்மிகத் தேடலுக்குத் திருப்புமுனை என்றால், ‘மாயையைப் பழித்தல்’ என்ற தலைப்பில் ‘உண்மையறிந்தவர் உன்னைக் கணிப்பரோ மாயையே’ என்று தொடங்கும் பாடலையும் படியுங்கள்.  பொய்யோ மெய்யோவோடு ஒப்பிடுங்கள்.  

இருமை அழிந்தபின் எங்கிருப்பாய் மாயையே, நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ மாயையே, என்னிச்சை கொண்டுன்னை எற்றிவிட வல்லேன் மாயையே என்றெல்லாம் சொல்லியிருக்கும் ‘மாயையைப் பழித்தல்’ மாயையின் இயற்கையை மிகத் தெளிவாகவே வெளிப்படுத்துகிறது.  இது இயற்றப்பட்ட ஆண்டு 1908.

ரெகா கேட்டதற்கிணங்க நான் எழுதிய கட்டுரையையும் இங்கே இட்டிருக்கிறேன்.  காலவாரியாக பாரதியின் மாயைச் சிந்தனையைத் தொகுத்தளித்திருக்கிறேன்.  1908லேயே மாயையைப் பற்றிய தெளிவு தென்படுகிறது.  ‘மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனம்’ என்று சொல்லி பத்து வருஷம் கழித்து பாரதியின் ஆன்மிகத் தேடலின் திருப்புமுனையாக இந்தப் பாடல் வெளிப்படுகிறது என்று அடையாளம் காண்பது ஆய்வு நோக்கில் சரிவராது.  

என் நோக்கைத் தெரிந்துகொள்ளும் முன்பாகவே ‘நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான்’ என்ற நிலைப்பாட்டில் நான் நிற்பேன் என்று சான்றளித்துவிட்டீர்கள்.  என் கையில் உள்ள முயலுக்கு நான்கு கால்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.  காலவரிசைப்படுத்தப்பட்ட சிந்தனையோட்டத்தை, தெளிவான சான்றுகளோடு கொடுத்திருக்கிறேன்.

இனி, அவரவர் கைகளில் உள்ள முயல்களுக்கு எத்தனை கால்கள் என்பதை எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Feb 27, 2011, 1:40:35 AM2/27/11
to mint...@googlegroups.com
naan enni paarthen...
en kaila muyale illa...

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our

> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post


> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil


--

Hari Krishnan

unread,
Feb 27, 2011, 2:15:08 AM2/27/11
to mint...@googlegroups.com


2011/2/27 மு. கந்தசாமி நாகராஜன் <m.kant...@gmail.com>

naan enni paarthen...
en kaila muyale illa..

ஆகா!  நீங்க உண்மையிலேயே ‘எண்ணி’ப் (யோசிச்சுப்) பாத்திருக்கீங்க!  

எண்ணிப்பாத்தா எத்தனை கால்னு புரியும்.  இலக்கிய ஆய்வில் காலவரிசை என்பது ஒரு முக்கியமான அங்கம்.  ஒரு கவிஞனுடைய எண்ணப் போக்கை கணிக்க அந்தந்தப் படைப்பு எந்தெந்த வரிசையில் ஆண்டில் எழுதப்பட்டது என்று அறிந்துகொள்வதும் மிகமிக முக்கியம்.  
Reply all
Reply to author
Forward
0 new messages