ஓலைச் சுவடியியல் ஆய்வுகள் - வீடியோ செய்தி

130 views
Skip to first unread message

ksuba...@gmail.com

unread,
Dec 12, 2007, 4:37:05 AM12/12/07
to மின்தமிழ்
நண்பர்களே,

எனது தமிழக பயணத்தின் போது தமிழறிஞர்களைச் சந்தித்து ஒலிப்பதிவு செய்த பல
விஷயங்கள் ஒவ்வொன்றாக நமது வலைப்பக்கத்தில் சேர்க்க உள்ளேன். அதில்
இன்று, முன்னாள் தஞ்சை பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் ஔவை
நடராஜன் அவர்கள் ஓலை சுவடியைப்பற்றி வழங்கிய ஒரு பேட்டியை த.ம.அ
வலைப்பக்கத்தில் இணைத்திருக்கின்றேன். இது 16 நிமிட வீடியோ பதிவு.
தலைப்பை தேர்வு செய்து கொஞ்சம் நேரம் காத்திருந்தால் இந்த ஒளிப்படத்தைக்
காணலாம்.

இந்த பதிவைக் காண

http://www.tamilheritage.org/ அதில் thf_clasic வலைப்பக்கத்தைத்
தேர்ந்தெடுக்கவும். பின்னர். Manuscript/Suvadi பகுதியில் E-Suvadi
என்ற பக்கத்தைத் தேர்ந்தெடுத்தால் அங்கு 003. Critical opinion of
Prof.Dr.Avai Natarajan on current palm leaf research என்ற தலைப்பில்
இந்த பகுதி சேர்க்கப்பட்டிருக்கின்றது.

அல்லது நேரடியாக இந்தப் பகுதிக்குச் செல்ல...

http://www.tamilheritage.org/old/mss.html செல்லவும்.


**இனி பதிப்பிப்பதற்கு ஏடுகள் இல்லை எனும் இவரது கருத்துக்களைத்
தனிப்பட்ட முறையில் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. மின் தமிழ்
வாசகர்களும் இந்த பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து
கொள்ளுங்கள்.

அன்புடன்
சுபா
(தமிழ் மரபு அறக்கட்டளை)

நா.கண்ணன்

unread,
Dec 12, 2007, 7:09:09 AM12/12/07
to மின்தமிழ்
அன்புள்ள நண்பர்களே:

சமீபத்தில் மின் தமிழில் ஓடும் இழைகளில் இது மிக முக்கிய இழை என்று
தோன்றுகிறது. நீங்கள் எல்லோரும் உங்கள் கருத்துக்களை முன் வைக்க
வேண்டுகிறேன்.

பேரா.ஔவை நடராஜன் அவர்கள் பேச்சுக் கேட்டேன்.

1. தமிழ் நாட்டில் ஓலைச் சுவடி என்ற பெயரில் நடக்கும் போலி வியாபாரத்தைக்
கடுமையாகச் சாடுகிறார். அவர் பதிவியிலிருந்த காலத்தில் நடந்த மோசடிகளை
எடுத்துக் காட்டுகிறார்.

2. தமிழ் மருத்துவம் என்பது ஒரு போலிக்கலை. அதில் ஆழமான சரக்கு ஏதுமில்லை
என்று உரத்துச் சொல்கிறார்.

3. உ.வே.சா விற்குப் பிறகு தமிழில் இனி பதிப்பிக்க ஏதுமில்லை என்று
சொல்கிறார். உ.வே.சா வோடு தமிழ்ப் பதிப்பு நிறைவு கொள்கிறது என்று
சொல்கிறார்.

இவைதான் அந்த வீடியோவின் சாராம்சம்.

இப்பேட்டியை அவர் ஒரு கவன ஈர்ப்பு உத்தியாகச் செய்திருக்கிறாரா? என்று
கூட சந்தேகம் எழுகிறது. ஏனென்று பார்ப்போம்.

போலிகள் உண்டு என்பதற்காக ஆய்வு செய்யாமல் இருக்கமுடியுமா? உ.வே.சா
காலத்திலும் இப்போலிகள் இருந்ததுதானே? உமியை ஊதிவிட்டு, பதரை நீக்கி
விட்டு தானியத்தை எடுப்பதுதானே அறிவியல்! குழந்தை அழுகிறது என்பதற்காகக்
தொட்டிலுடன் யாராவது குழந்தையைத் தூர எறிவறோ? எக்காலத்திலும்,
எல்லாத்துறைகளிலும் போலிகள் உண்டு. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
மெய்பொருள் காண்பதல்லவோ சான்றோர் கடன். இவர் இதைப்பற்றி மேம்போக்கான ஒரு
பாமரக் கருத்தோட்டம் கொண்டிருக்கிறார் என்பதை அவரது சில உதாரணங்கள்
காட்டுகின்றன. யாரோ ஒருவர் 3000 ஆண்டுப் பழமையான ஓலைச் சுவடி என்று
சொன்னார்களாம். அமைச்சரை புரிய வைப்பதற்காக கார்பன் டேட்டிங் செய்து
நிரூபித்தார்களாம். இதை எப்படி ஒரு வல்லுநர் சொல்ல முடியும்? ஒன்று, 3000
ஆண்டுகளுக்கு முன் தமிழ் இப்படி எழுதப்படவே இல்லை! நமது பிராமி எழுத்துச்
பரீட்சியம் உள்ளவர்களுக்கு அது புரியும். வள்ளுவன் இன்று வந்தால் அவன்
குறளையே நாம் எழுதிக் காட்டினால் அவன் புரிந்து கொள்ளமுடியாது என்பதல்லவோ
உண்மை. இரண்டாவது ஓலை என்பது ஒரு மரத்து இலை. அதை எவ்வளவு பதப்படுத்தி
வைத்தாலும் 150 வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிப்பது கடினம். 500 வருட
ஓலைகள் எல்லாம் மிக, மிக அரிது. எனவே 3000 வருடத்து ஓலை எனும் போதே அது
ஒரு புரட்டல் என்பது சான்றோர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஓலையைக்
கார்பன் டேட்டிங்க்குக் அனுப்புவது இப்போதுதான் கேள்விப்படுகிறேன். தமிழ்
ஓலைப் பதிப்பிக்கும் முறை அறிந்தோர் இப்படிச் செய்யவே மாட்டார்கள்.
காலம், காலமாக ஓலைப் பதிப்பித்தல் ஒரு மரபு வழிமுறையாக இங்கு உள்ளது.
பதிப்பிக்கப்பட்ட பழைய ஓலையை ஆற்றில் விடுவர். அதுவே பின்னால் தப்பாகப்
புரிந்து கொள்ளப்பட்டு, ஓலையை ஆற்றில் விடுவது புண்ணியம் என்றளவிற்கு
போய் விட்டது என்பதை உ.வே.சா சுட்டுவார். எனவே போலிகள் உண்டு என்று
தெரிந்தால் ஓலைச் சுவடி ஆய்வகம் ஒன்றை இவர்கள் உருவாக்கியிருக்க
வேண்டும். சங்கத் தமிழனுக்கு இருந்த ஒரு தரக்கட்டுப்பாடு கூட 21ம்
நூற்றாண்டுத் தமிழனுக்கு இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது!

2. தமிழக ஓலைச் சுவடிகளில் 60 விழுக்காடு மருத்துவச் சுவடிகளே. நமக்கு
அது என்னவென்று புரியவில்லை என்பதற்காக அதைக் குப்பையில் போடு என்பது
சான்றோர் கடனாகாது. சாகன் பால்க் இங்கிருந்து ஜெர்மனிக்கு ஓலைகளைக்
கடத்திச் சென்றதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் 15ம் நூற்றாண்டிலிலேயே
நாய் கடிக்கு மருத்துவமிருந்தது. ஐரோப்பாவில் இல்லை என்பதுதான். இதிலும்
அவர் ஓர் ஆய்வாளர் போல் பேசவில்லை. பாமரன் போல் கருத்தைச் சொல்கிறார்.
ஒரு உயர் அதிகாரி என்ன செய்வார்? இதற்கென ஒரு துறை உருவாக்கி அதை
முழுமையாய் ஆய்வு செய்யச் சொல்வர். அப்படித்தானே வெளிநாடுகளில்
செய்கிறார்கள். இன்று யோகப் பயிற்சி நிலையங்கள் உலகெங்கும் உள்ளன.
தியானம் என்பது அவசர வாழ்விற்கு மாற்று என்று எல்லோரும் கண்டு
கொள்ளவில்லையா? மகேஷ் யோகியின் பல கோடி டாலர் பல்கலைக் கழகம் இதை முறையாக
ஆராய்ச்சி செய்யவில்லையா? பனை மரத்தில் பூசணி கொண்டு வருவேன் என்று ஒரு
போலி சொன்னால் அதை நிரூபிக்கச் சொல்வதுதான் அறிவியல் போக்கு. கேலி செய்து
ஒன்றும் செய்யாமல் இருப்பது பாமரன் போக்கு.

3. உ.வே.சா எல்லாம் பதிப்பித்துவிட்டார் என்பதற்கு என்ன சான்று? நம்
சோம்பேறித்தனத்தைத் தவிர. உ.வே.சா ஒரு மேரு மலை. அவரது அறிவியல் போக்கு,
அயராத உழைப்பு, இது எந்தப் பேராசிரியருக்கு அவருக்குப் பின்
வந்திருக்கிறது.?பல்கலைக் கழகங்கள் இதற்குள் ஆயிரம் உ.வே.சாக்களை
உருவாக்கியிருக்க வேண்டாமா? அதை விடுத்து அவர் எல்லாம் செய்துவிட்டார்
என்று சொல்லிவிட்டு நாம் போர்வைக்குள் முடங்குவது என்ன அழகு?

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஔவை நடராஜனின் கூற்றை ஏற்றுக் கொள்ள
முடியவில்லை. இதை அவர் இரண்டு காரணங்களுக்காச் செய்திருக்கலாம். ஒன்று
வேலை ஓய்வு பெற்ற அவருக்கு இதுவொரு கவன ஈர்ப்பாக அமையலாம். இரண்டாவது,
ஒரு எதிர் கதையாடலை வைப்பதன் மூலம் இத்துறைக்கு ஒரு விழிப்புணர்வைக்
கொண்டு வரலாம். பெரியார் சாமி இல்லை, சாமி இல்லை என்று சொல்லப் போக
எப்போதுமில்லாத அளவிற்கு இப்போது ஐய்யப்பன் கூட்டம் அதிகமாகிவிட்டது.

வாழ்க தமிழ்!

நா.கண்ணன்

இரவா

unread,
Dec 12, 2007, 11:20:24 AM12/12/07
to minT...@googlegroups.com
On 12/12/07, நா.கண்ணன் <nka...@gmail.com> wrote:

பேரா.ஔவை நடராஜன் அவர்கள் பேச்சுக் கேட்டேன்.

1. தமிழ் நாட்டில் ஓலைச் சுவடி என்ற பெயரில் நடக்கும் போலி வியாபாரத்தைக் கடுமையாகச் சாடுகிறார். அவர் பதிவியிலிருந்த காலத்தில் நடந்த மோசடிகளை எடுத்துக் காட்டுகிறார்.
 
மராட்டியர்  ஆட்சிக் காலத்தில், சரபோஜி ஓலைகளைத் திரட்ட  முயன்ற போது, அவர் அரண்மனைப் புலவர் சிவக்கொழுந்து தேசிகரால் திரட்டப் பட்ட  ஓலைகளில் பல, போலி, பெயர் மாற்றம் செய்யப்பட்டன.

2. தமிழ் மருத்துவம் என்பது ஒரு போலிக்கலை. அதில் ஆழமான சரக்கு ஏதுமில்லை  என்று உரத்துச் சொல்கிறார்.
 
இவர் தமிழ் மருத்துவதை ஆராய்ந்து கண்டாரா?  அல்லது, அவர் வீட்டில்  யாரேனும் தமிழ் மருத்துவம் பயின்றவர் இருக்கிறாரா?

3. உ.வே.சா விற்குப் பிறகு தமிழில் இனி பதிப்பிக்க ஏதுமில்லை என்று சொல்கிறார். உ.வே.சா வோடு தமிழ்ப் பதிப்பு நிறைவு கொள்கிறது என்று சொல்கிறார்.
 
ஔவை நடராஜன், பதவிக்காக, புகழுக்காக வாழ்ந்தவர். சங்க காலத்திலிருந்து  உ.வே.சா காலம் வரை எத்தனை தமிழ்  நூல்கள்  இருந்துள்ளன என்று கூறுவாரா?


 உ.வே.சா காலத்திலும் இப்போலிகள் இருந்ததுதானே?
 
உ.வே.சா பதிப்பிலும் உண்மை நூல் குறைவு என்ற குறையும்  உண்டு.
 

 யாரோ ஒருவர் 3000 ஆண்டுப் பழமையான ஓலைச் சுவடி என்று
சொன்னார்களாம். அமைச்சரை புரிய வைப்பதற்காக கார்பன் டேட்டிங் செய்து நிரூபித்தார்களாம். இதை எப்படி ஒரு வல்லுநர் சொல்ல முடியும்? ஒன்று, 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் இப்படி எழுதப்படவே இல்லை! நமது பிராமி எழுத்துச் பரீட்சியம் உள்ளவர்களுக்கு அது புரியும்.
 
துணை வேந்தராக இருந்தவர், உண்மையை ஆராய்ந்திருக்க  வேண்டாமா? நாட்டுப்புறம் பேசுவது போலப், பேச இவர் எதற்கு?

சங்கத் தமிழனுக்கு இருந்த ஒரு தரக்கட்டுப்பாடு கூட 21ம்
நூற்றாண்டுத் தமிழனுக்கு இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது!
 
உண்மை! உண்மை!

2. தமிழக ஓலைச் சுவடிகளில் 60 விழுக்காடு மருத்துவச் சுவடிகளே. நமக்கு அது என்னவென்று புரியவில்லை என்பதற்காக அதைக் குப்பையில் போடு என்பது சான்றோர் கடனாகாது. சாகன் பால்க் இங்கிருந்து ஜெர்மனிக்கு ஓலைகளைக் கடத்திச் சென்றதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் 15ம் நூற்றாண்டிலிலேயே நாய் கடிக்கு மருத்துவமிருந்தது. ஐரோப்பாவில் இல்லை என்பதுதான். இதிலும்
அவர் ஓர் ஆய்வாளர் போல் பேசவில்லை. பாமரன் போல் கருத்தைச் சொல்கிறார்.
 

ஐரோப்பாவில் நாய்க்கடிக்கு மருந்து தெரியவில்லை

. தமிழகத்தில் இருந்தும் தெரிந்திருக்கவில்லை.

மணத்தக்காளி கீரையை அறிந்த போதே

, நாய்க்கடிக்கான மருந்தும் அறியப்பட்டிருக்கிறது. என்பது , அந்த தமிழ் அறிஞர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அது மட்டுமல்ல

! காட்டுவழி இருட்டில் செல்லும் போது, பாம்பு கடித்துவிட்டால் , கடித்த பாம்பு எந்த பாம்பு என்று அறிந்து கொள்ளவும் வெள்ளருகு என்னும் மூலிகை இருக்கிறது என்பதை அந்த செவிட்டுக் காதுக்கு தெரிவிக்கலாம் .


எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஔவை நடராஜனின் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இவர் தலைமையில் மருத்துவ அகராதி தயாரிக்க குழு அமைத்திருக்கிறார்களே? அது என்னவாகும். உண்மையில்லாத ஒரு துறைக்குப் பணியாற்ற எப்படி ஒப்புக் கொண்டார்?

பெரியார் சாமி இல்லை, சாமி இல்லை என்று சொல்லப் போக
எப்போதுமில்லாத அளவிற்கு இப்போது ஐய்யப்பன் கூட்டம் அதிகமாகிவிட்டது.

ஔவை நடராஜன் சொன்னதற்கும் இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஐயப்பன் கூட்டம் ஒன்றும்  ஆராய்ந்து அறிந்த கூட்டமில்லை.

செம்மறி  ஆடுகள்



வாழ்க தமிழ்!

நா.கண்ணன்



   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          
                      இரவா

வலைப்பூ: http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

Subashini Kanagasundaram

unread,
Dec 12, 2007, 11:31:00 AM12/12/07
to minT...@googlegroups.com
அன்புள்ள கண்ணன்,
 
நான் பேட்டியைப் பதிவு செய்த போது நீங்கள் வைத்திருக்கும் இந்த 3 காரணங்களையும் விவாதித்தேன். ஆனால் கேள்விகளைக் கூட முழுமையாக நான் கேட்கவிடாமல் தனது கருத்துக்களை வலியுறுத்துவதில் அவர் தீவிரம் காட்டினார். இவரது பொறுப்பு காலத்திலும் பேராசிரியர் மாதவன் போன்றோர் தஞ்சை பல்கலைக் கழகத்தில் சுவடியியல் துறையில் ஆய்வு செய்து கொண்டிருந்தனர் என்பதும் உண்மை. இந்த கேள்வியை நான் முன் வைத்த போது  அந்தத் துறையே தேவையற்ற ஒன்று என்று கூறியது தான் வேதனை தருவதாக இருந்தது.
 
ஓலைச் சுவடிகளில் சித்த மருத்துவ ஓலைச் சுவடிகள் சிறப்பு வாய்ந்தவை என்பதை நாம் மறுக்க முடியாது. உ.வே.சா- காலத்திற்குப் பின்னர் பதிப்பிக்கப்பட்ட ஓலைச் சுவடிகளின் பட்டியலை நாம் உருவாக்க வேண்டும். இரவாவின் நூலும் prof.மா தவனின் நூலும் இதற்கு வழிகாட்டும்.
 
அன்புடன்
சுபா
 

இரவா

unread,
Dec 12, 2007, 7:16:20 PM12/12/07
to minT...@googlegroups.com
தமிழகத்தில், வெளி மாநிலங்களில், எந்தெந்த இடங்களில் எவ்வளவு ஓலைகள் என்னென்ன பெயரில் இருக்கின்றன என்று, நூல் வடிவில் இருக்கின்றன.
ஒரு பெயரில் உள்ள ஓலையே வேறு இடத்திலும் இருக்கும். ஒரு இடத்தில் இல்லாத ஓலை மற்றொரு இடத்திலிருக்கும்.
அவை, பெயர் பேதங்கள். ஆனால், ஒரே பெயரில் இருக்கும் பல ஓலைகள் எல்லாம் ஒரே நூல்  தான் என்று கூறவியலாது. காரணம், பெயர் ஒன்றாகவும் உள்ளே இருக்கும் பொருள் ஒன்றாகவும் இருக்கின்றன.
தமிழகத்தில், 1952க்கும் முன் கண்டறியப் பெற்ற ஓலைகளில் பெரும் பகுதி, சென்னை, கீழ்த்திசை  சுவடி நூலகத்தில் இருக்கின்றன. அவற்றின் பட்டியல், ஏடுகளின்  எண்ணிக்கை, நூலின்  நிலைமை, பாடுபொருள் போன்ற செய்திகளைக் கூறும் நூல்கள், பல  எண்ணிடம் உள்ளன.
 
அவற்றை  த.ம.அ வுக்கு அளிக்கட்டுமா?

 
--

நா.கண்ணன்

unread,
Dec 12, 2007, 8:27:22 PM12/12/07
to மின்தமிழ்
அன்பின் இரவா:

ஓலைச் சுவடிப் பட்டியல் எடுத்தல் என்பதே ஒரு பெரிய வேலை. தமிழக
நூலகங்களில் உள்ள சுவடிகள் பற்றிய முழு அட்டவணையும் உள்ளதா என்று
தெரியவில்லை. ஆனால், 80% சேதி உள்ளது என்று நம்புகிறேன். தனியார்
நூலகங்களில் உள்ள சுவடிகள் பற்றிய தகவல் இல்லை. நாம் கண்டறிந்தது ஆழ்கடல்
பனிமலையின் முகடு என்பதை சமீபத்தில் தமிழகம் தழுவிய ஓலைச்சுவடி
பட்டியலாக்கும் முயற்சி காட்டியிருக்கிறது. அரசாங்கம் எடுத்த
இந்தப்பட்டியலும் இன்னும் வெளிவரவில்லை.

வெளிநாட்டிலுள்ள ஓலைகள் பட்டியல் இன்னும் தெரியவில்லை. காரணம் தமிழ்
படிக்கத்தெரிந்தவர்கள் அங்கு இல்லாததே.

இந்நிலையில் உங்களைப் போன்ற ஆர்வமுள்ளோர் இதுவரை உள்ள சேதிகளையாவது
முறையாக வெளியிட்டு ஒரு கணக்கெடுப்பு செய்தால் நலம்.

நமது பல்கலைக் கழகங்கள் இப்பட்டியலிடும் முயற்சியில் இறங்க வேண்டும். இதை
எம்.பில் அல்லது முனைவர் பட்ட தலைப்பாக எடுத்துக்கொள்ளலாம்.

முதலில் சுவடி என்றால் அது "நாடி ஜோஸ்யம்" என்ற தவறான எண்ணத்தை தமிழர்
மனதிலிருந்து எடுக்க வேண்டும்!

கண்ணன்


On Dec 13, 9:16 am, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:
> தமிழகத்தில், வெளி மாநிலங்களில், எந்தெந்த இடங்களில் எவ்வளவு ஓலைகள் என்னென்ன
> பெயரில் இருக்கின்றன என்று, நூல் வடிவில் இருக்கின்றன.
> ஒரு பெயரில் உள்ள ஓலையே வேறு இடத்திலும் இருக்கும். ஒரு இடத்தில் இல்லாத ஓலை
> மற்றொரு இடத்திலிருக்கும்.
> அவை, பெயர் பேதங்கள். ஆனால், ஒரே பெயரில் இருக்கும் பல ஓலைகள் எல்லாம் ஒரே
> நூல்  தான் என்று கூறவியலாது. காரணம், பெயர் ஒன்றாகவும் உள்ளே இருக்கும் பொருள்
> ஒன்றாகவும் இருக்கின்றன.
> தமிழகத்தில், 1952க்கும் முன் கண்டறியப் பெற்ற ஓலைகளில் பெரும் பகுதி, சென்னை,
> கீழ்த்திசை  சுவடி நூலகத்தில் இருக்கின்றன. அவற்றின் பட்டியல், ஏடுகளின்
> எண்ணிக்கை, நூலின்  நிலைமை, பாடுபொருள் போன்ற செய்திகளைக் கூறும் நூல்கள், பல
> எண்ணிடம் உள்ளன.
>
> அவற்றை  த.ம.அ வுக்கு அளிக்கட்டுமா?
>
> On 12/12/07, Subashini Kanagasundaram <ksubash...@gmail.com> wrote:

venkatram dhivakar

unread,
Dec 13, 2007, 6:09:43 AM12/13/07
to minT...@googlegroups.com
 
மேற்கண்ட வலைப்பதிவை சொடுக்கவும். ஓலைச்சுவடிகளைப் பற்றிய ஒரு அரிய வலைப்பக்கம் -
 
அறிஞர் அவ்வை நடராசன் ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. பிராஜக்ட் மதுரையின் வலைப்பக்கம் சென்றாலே போதுமே.. மிகப் பெரிய உழைப்பின் அடையாளம் பிராஜக்ட் மதுரை.
 
தமிழ்த் தாத்தா போலவே எந்த ஒரு பலா பலனின்றி செயல்படும் ' இந்த பிராஜக்ட் மதுரை' க்கு ஏன் இதுவரை எந்தத் தமிழரும் சன்மானம் செய்யவில்லை?
 
கண்ணன் சொன்னபடி சுவடி என்றால் நாடி சோதிடச் சுவடி மட்டும் அல்ல  என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.
பொய்யான ஓலையா மெய்யான ஓலையா என்பது தமிழறிஞர் கண்டுபிடிக்க முடியாத கலையா?
 
 
ஆதினங்களில் இன்னமும் ஏகப்பட்ட ஓலைச்சுவடிகள் இருப்பதாக அறிகிறேன். ஆதினத்துத் தமிழறிஞர்கள் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாகவே தமிழில் இலக்கியம் படைத்தவர்கள். குமரகுருபரர், நெல்லைஅம்பலவாணர், குருஞானசம்பந்தரிலிருந்து இன்னும் எத்தனையோ புலவர்கள் அவர்கள் எழுதிய எத்தனையோ இலக்கியங்களும் சரித்திர குறிப்புகளும் மடத்து நூலகங்களில் இருப்பதாக அறிகிறேன். தமிழ்தாத்தா உ.வே.சா அவர்கள் திருவாவடுதுறை ஆதினத்துடன் அதிக சம்பந்தம் உடையவர்கள் எனினும் மற்ற ஆதினங்கள் தமிழ் தாத்தாவுக்கு அதிகம் உதவினவா என்று தெரிந்து கொள்ளவேண்டும். 
 
மைசூர் சொஸைடி ஒன்றில் இன்னமும் சீண்டப்படாமல் பல தமிழ் ஓலைகள் 'கிடப்பதாக' சமீபத்தில் ஒரு நண்பர் எழுதியுள்ளார். முழு விவரம் கேட்டுள்ளேன்.
 
சுபா இந்தியா வந்தாலும் வந்தார் - ஒரு மிகப் பெரும் பணிக்கான ஆற்றலை அனைவரிடமும் தூண்டியுள்ளார். வரவேற்கிறோம், வணங்குகிறோம்.
 
திவாகர்.
 

 



On 12/13/07, நா.கண்ணன் <nka...@gmail.com> wrote:
அன்பின் இரவா:

ஓலைச் சுவடிப் பட்டியல் எடுத்தல் என்பதே ஒரு பெரிய வேலை. தமிழக
நூலகங்களில் உள்ள சுவடிகள் பற்றிய முழு அட்டவணையும் உள்ளதா என்று
தெரியவில்லை. ஆனால், 80% சேதி உள்ளது என்று நம்புகிறேன். தனியார்
நூலகங்களில் உள்ள சுவடிகள் பற்றிய தகவல் இல்லை. நாம் கண்டறிந்தது ஆழ்கடல்
பனிமலையின் முகடு என்பதை சமீபத்தில் தமிழகம் தழுவிய ஓலைச்சுவடி
பட்டியலாக்கும் முயற்சி காட்டியிருக்கிறது. அரசாங்கம் எடுத்த
இந்தப்பட்டியலும் இன்னும் வெளிவரவில்லை.

வெளிநாட்டிலுள்ள ஓலைகள் பட்டியல் இன்னும் தெரியவில்லை. காரணம் தமிழ்
படிக்கத்தெரிந்தவர்கள் அங்கு இல்லாததே.

இந்நிலையில் உங்களைப் போன்ற ஆர்வமுள்ளோர் இதுவரை உள்ள சேதிகளையாவது
முறையாக வெளியிட்டு ஒரு கணக்கெடுப்பு செய்தால் நலம்.

நமது பல்கலைக் கழகங்கள் இப்பட்டியலிடும் முயற்சியில் இறங்க வேண்டும். இதை
எம்.பில் அல்லது முனைவர் பட்ட தலைப்பாக எடுத்துக்கொள்ளலாம்.

முதலில் சுவடி என்றால் அது "நாடி ஜோஸ்யம்" என்ற தவறான எண்ணத்தை தமிழர்
மனதிலிருந்து எடுக்க வேண்டும்!

கண்ணன்


Kannan Natarajan

unread,
Dec 18, 2007, 8:02:27 PM12/18/07
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
நல்ல விவாதம்,நாட்டிற்கும்,நமது மொழிக்கும் எந்த வகையிலேனும் நலம் உண்டாக்கவேண்டும். நாய்க்கடி,பாம்புக்கடி மருந்துச்சுவடிகளைப்போல, இறந்தவர்களை எழுப்புவதற்குக்கூட அரிய ஓலைச்சுவடிகள் இருப்பதாக சில முனிவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த அரிய சுவடிகளைத் தேடிப்பிடித்து உலகத்திற்கு நம்முடைய முன்னோர்களின் விஞ்ஞான விவேகத்தை வெளிப்படுத்தியாக வேண்டுமென்று ஒரு நண்பர் குறிப்பிட்டார்.
 
**கடந்த வருடம் (11/02/2006),ஓலைச்சுவடிகள் தேடும் படலத்தை,மத்திய மற்றும் தமிழக அரசும் ஒருங்கிணந்த திட்டம் வகுத்து மாணவத்தொண்டர்களின் உதவியோடு கலை,இலக்கியம்,பண்பாடு,மருத்துவம் பற்றிய 3 இலட்சம் சுவடிகளைச் சேகரித்திருக்கிறார்கள்.இதுபோல,6 முறை மாநில அரசாலும்,இந்த முயற்சி நடந்து பல இலட்சங்களை சேர்த்தனராம்.நல்லவேளை! முப்பத்துமுக்கோடி தேவர்கள் எழுதிய ஓலைச்சுவடிகள்,இன்னும் கிடைக்கவேண்டி இருக்கின்றன.கண் வைத்தியத்தைப் பற்றி கவிராயர் எழுதிய காவியச்சுவடிகள் பல உள்ளன,இதில் அதிக ஓலைச்சுவடிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் கிடைத்துள்ளன. அதென்ன,அந்தப்பகுதியில் ஓலையில் எழுதும் பழக்கம் இன்றும் உள்ளதா! வைத்தீஸ்வரன்கோயில் அருகில்தானே,அதிக நாடிச்சுவடிகள் படிக்கப்படுகின்றன!
கல்வி வளர்ந்த பகுதி என்றும்,கால்டுவெலும்,போப்பும் வாழ்ந்த பகுதி என்றும் அச்சகங்கள் பல அந்நாளிலிலேயே உருவாகி பல நூல்கள் வெளியிடப்பட்டன என்றும் கூறுகிறார்கள்.ஆகவே,பாடுபட்டு எழுதிவைத்த பண்டிதர் ஏடுகள்,மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கலாம்! பல்கலைக்கழகங்கள்,இந்த பெரும்பணியில் ஈடுபடவேண்டும். 2008ஆம் ஆண்டு - மண்ணின் மர்மங்களை கண்டறியும் ஆண்டு என்றும் ஐ.நா அறிவித்துள்ளது.
 
"கூத்தநூல்" என்றும் "ஐந்திறம்" என்றும் இரண்டு அரிய நூல்களை கண்டறிந்ததாக வெளியிட்டு,தமிழகரசு இகழ் சேர்த்ததை நினைவு கூர்வோமாக! வரும் ஆண்டு பிப்ரவரியில்,இதே முயற்சியில்,7 இலட்சம் ஏடுகள் கிடைக்கவும்,"சாவைத் தடுக்கும் சஞ்சீவி" என்ற மெய்யறியாச்சித்தர் எழுதிய ஓலைச்சுவடியும் அகப்படவேண்டும் என தமிழ்த்தாயைப் பணிவோமாக.
 
இதுவரை சேகரித்த,சென்ற ஆண்டு ஓலைச்சுவடுகளின் நிலையில் என்ன முன்னேற்றம் உள்ளது?
 
"பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை" - மாகவி பாரதியார்.
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்
 
**A clipping from Deccan Chronicle - Chennai - 12 Feb 2006,Sunday
 
Most Palm Manuscripts
received from Tirunetveli
 
By our correspondent
 
    Chennai, Feb.11: The Tamil Nadu Govt. has identified 22000 persons in the state who possess about 3 lakh palm leaf manuscripts. The authorities have found that most of the manuscript pertain to art , culture, literature, history, science and medicine.
 
    A review meeting of the manuscripts collected was held by Government officers from various districts held at the Local Library Authority Building in the city on Saturday. Tirunelveli has received about 1.7 lakh manuscripts , the maximum number in the state.
 
    About 1,500 National Service Scheme Volunteers from arts and science colleges across the state have been involved in this mega exercise of identifying persons who posses the manuscripts.
 
    A one week manuscript collection campaign was conducted in the state by the Union Ministry of Culture in collaboration with State Government from February 1 to 5. The Tamil Nadu Government has allocated Rs. 35 lakhs for the project and appointed district collectors as the district level coordinators. According to officials in the Union Ministry of culture the manuscripts were in poor condition and Union Government intended to preserve them by digitizing them.
 
    The officials said that the objective of the mission was to conduct a survey around the country and abroad to locate manuscripts in the care of variety of custodians.
 
    It was intended to carryout extensive cataloguing and create a national electronic database of manuscripts. "By networking with leading conservation agencies in the country we are conserving damaged manuscripts and setting standards for manuscript conservation" the officials said.

srirangammohanarangan v

unread,
Dec 18, 2007, 11:45:33 PM12/18/07
to minT...@googlegroups.com
வணக்கம்  திரு  கண்ணன்  நடராஜன்,    கூத்தநூல்  போலியா?    ச  து  சு  யோகியார்  கண்டெடுத்தது என்று  தமிழ்நாடு  இயல்  இசை  நாடக மன்றம்  உதவியோடு என்று  போட்டிருக்கிறார்களே !   அதைப்பற்றி  மேற்கொண்டு  தகவல்கள் என்ன என்று எவரும்   தீர்மானமாகச்  சொல்ல  மறுக்கிறார்கள்.

நா.கண்ணன்

unread,
Dec 19, 2007, 4:32:34 AM12/19/07
to மின்தமிழ்
On Dec 19, 10:02 am, "Kannan Natarajan" <thara...@gmail.com> wrote:
ஆகவே,பாடுபட்டு எழுதிவைத்த பண்டிதர் ஏடுகள்,மண்ணுக்குள்
> புதைக்கப்பட்டிருக்கலாம்! பல்கலைக்கழகங்கள்,இந்த பெரும்பணியில் ஈடுபடவேண்டும்.
> 2008ஆம் ஆண்டு - மண்ணின் மர்மங்களை கண்டறியும் ஆண்டு என்றும் ஐ.நாஅறிவித்துள்ளது.
>


மிக அழகான கருத்து!

கண்ணன்

Tthamizth Tthenee

unread,
Dec 19, 2007, 6:54:07 AM12/19/07
to minT...@googlegroups.com
அன்புள்ள நா கண்ணன் அவர்களே
2008 ம் ஆண்டு மண்ணின் மர்மங்களைக் கண்டறியும் ஆண்டு என்று  ஐ நா அறிவித்துள்ளது
தமிழ்மரபு அறக்கட்டளையின் பங்கு
அதில் அதிகமாக இருக்க வேண்டும்
என்பது என் ஆசை,அதற்கு ஆவன செய்யுங்கள்
நம்மால் முடியாதது யாராலும்  முடியாது
நாமும் பங்கெடுப்போம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
On Dec 19, 2007 3:02 PM, நா.கண்ணன் <nka...@gmail.com> wrote:

நா.கண்ணன்

unread,
Dec 19, 2007, 8:34:50 PM12/19/07
to மின்தமிழ்
தேனீயாரே!

உம்மைப் போன்ற தும்பிகள் இருக்கும் போது நமக்கென்ன குறை?

முதலில் சுவடிகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்த
வேண்டும். இதைச் சுபாவின் சமீபத்திய பயணம் கொஞ்சம் சாதித்து இருக்கிறது.
தமிழக அளவில் நடந்த கணக்கெடுப்பில் கண்டெடுக்கப்பட்ட சுவடிகள் பற்றிய
சேதிகள் பொதுப் பார்வைக்கு வர வேண்டும். வீட்டில் கேட்பாரற்றுக்
கிடக்கும் சுவடிகள் பற்றிய விவரங்களை பொது மக்கள் இனிமேலாவது தயங்காமல்
வெளியில் சொல்ல வேண்டும். அவைகளை மின்பதிப்பாக்குவதில் நாம் நிச்சயம்
உதவி செய்வோம்.

கண்ணன்

Ramakrishnan venkateswaran

unread,
Jan 16, 2008, 6:24:00 AM1/16/08
to venkdh...@gmail.com, minT...@googlegroups.com
i want Sri.Arulambalavanar photo.any one can help me.I am a Phd.Tamil student.I am doing research work in Thiruvasaga uraigal.In this i am taking studies in Sri Arulambalavanar's thiruvasaga urai.and also i want any related articals about thiruvasagam uraigal and Sri Arulambalavanar.Thanks.Manivenkat.


____________________________________________________________________________________
Be a better friend, newshound, and
know-it-all with Yahoo! Mobile. Try it now. http://mobile.yahoo.com/;_ylt=Ahu06i62sR8HDtDypao8Wcj9tAcJ

Reply all
Reply to author
Forward
0 new messages