இது ஆயர் குல வழக்கம் என்று தெரிகிறது. நப்பின்னையைக் கை பிடிக்க கண்ணன்
கோகுலத்தில் 7 முரட்டு மாடுகளைத் தழுவிய சேதி பாகவதத்தில் உள்ளது.
அப்போதுதான் நப்பின்னையின் தந்தை இவனை ஆயன் என்று ஏற்றுக் கொண்டாராம்.
கண்ணன் பிறந்தது வேறொரு குலத்தில், ஆனால் வளர்ந்தது இன்னொரு குலத்தில்.
ஆயின், தானொரு சத்திரியன் என்பதை மறந்து ஆயர்களுடன் சங்கமித்துவிட்ட
கண்ணன், ஆயர்கள் போல் இயற்கை வாசனை எய்தி (மாட்டுக் கொட்டில் நாற்றம்)
'கோவிந்த பட்டாபிஷேகம்' செய்து கொண்டானாம். அதுவே அவன் வாழ்வில் மகிழ்வான
நாட்கள். "ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து
வளர" - ஆண்டாள்.
கண்ணன்
தமிழகத்தின் வீர விளையாட்டு என்று செய்யும் ஜல்லிக்கட்டு கேலிக்கூத்து.
ஒரு ஆயிரம் பேர் மிரண்டு போன ஒரு மாட்டை தாவித்தாவிக் கவ்வுவது என்ன
வீரம்? வீரத்தைக் காட்ட வேண்டுமெனில் இவர்கள் ஸ்பானிஸ் மட்டாடர் போலோ
அல்லது அமெரிக்க கௌவ்பாய் போலோ வலுவான மாட்டுடன் ஒத்தைக்கு ஒத்தை நிற்க
வேண்டும். இவர்கள் செய்வது கண்டிக்க வேண்டிய விலங்கு வன்முறை!!
இதே கதைதான் யானைகளுக்கும்! அதன் குடும்பத்திலிருந்து பிரித்து அவைகளைக்
கோயிலில் பிள்ளையார் என்று கட்டி வைத்திருப்பது.
இதைக் கேட்பார் யாருமில்லையா?
கண்ணன்
கண்ணன்
ஆஹா! யாரும் இதை கேட்கவில்லையே என்று நினைத்தேன்!
நீதிமன்றத்தில் தடை விதித்ததன் காரணமே இதுவோ?
ஒண்டிக்கு ஒண்டி சரி, ஒத்துக்கலாம். அது வீரம்.
மாட்டுக்கு சாராயம் கொடுப்பது, கொம்பு சீவி விடுவது மிரட்டி ஒரு
கூட்டத்தில் ஒடவிட்டு அதை ஒரு பெரும் கூட்டமே துரத்துவது... கூடவே
ஏகப்பட்ட சத்தம். பாவம் மாடு!
இதை ஸ்பானிஷ் நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டு பாருங்கள்.
ஜல்லி கட்டை முறைப்படுத்தினால் தடை நீங்கலாமோ என்னவோ?
திவா
--
My blogs: http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
நரம்பு எழுந்து உலறிய நிரம்பர் மென்தோள்
முளரி முருங்கின், முதியோள் சிறுவன்
படை அழிந்து மாறினன் என்று பலர் கூற
மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்
முலை அறுத் திடுவேன், யான். எனச் சினைஈக்
கொண்ட வாளோடு படுபிணம் பெயராச்
செங்களம் தழாவுவோல், சிதைந்து வேரகிய
படுமகன் கிடக்கை கண்ணு ஊ
ஈன்ற ஞன்ரிநிலும் பெரிது உவந்தனலே
Women's Wisdom Through Ages
Translated by R. Parthasarathy
On the weak, shriveled arms of the old woman,
the veins stand out; her stomach is gnarled
as a blade of lotus. Unnerved by the fighting,
her son had turned his back on it. So folks whispered.
If he had fled in the heat of battle,
she thundered in a rage, these breasts that nursed him
I'll tear to pieces. Sword in hand,
she groped around in the bloodstained field,
turning over one lifeless body
after another. When she found her son
lying prostrate, hacked to death,
she rejoiced more than on the day he was born.
Kakkaipatiniyar Naccellaiyar,
Tamil / Purananuru 278உழவு நடைபெறுவது மருதத்தில், அதற்கு முந்தையது முல்லை. "காடு கொன்று நாடாக்கி"(Coverting the pastoral into ploughing fields). எனவே,முல்லை நிலத்து, ஆன்யினம் அவற்றின் இனமாகிய எருது,ஏருக்குப் பயன்பட்டது. எனவே, குறிஞ்சிக்கும், எறுதுகளுக்கும்,வீர விளையாட்டிற்கும் தொடர்பு இல்லை.வேலேந்திய வீரர்கள் தான் குறிஞ்சி,பாலை நில மறவர்கள்.
உச்சநீதி மன்றத்திற்கு, இந்தப் புறநானூற்றுப் பாடலையா காட்டுகிறார்கள்!!! கலித்தொகை காட்சிகள் போதாதா!
வாய் திறந்தால் வடமொழியோடு ஒப்பிடுகிறவர்களுக்கு,மேலை நாடுகள் பகை நாடா! "வெளிநாட்டார் அதை வணக்கஞ்செய்தல் வேண்டும்", என்று இரவாவிற்கு பகைவராப் பாடினார்!! (பொங்கலில் நல்ல வேடிக்கை.)
தமிழன்பகலா,கண்ணன் நடராசன்
(பொங்கலில் நல்ல வேடிக்கை.)
தமிழன்பகலா,கண்ணன் நடராசன்
நாமும் தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவிக்கொண்டு இந்த தமிழ் மரபை அழிக்க ஆசைபடுகிறோம்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
நண்பரே! அதே பாண்டி நாட்டில், முக்குலத்தோருடன் பழகிப் பிறந்து
வளர்ந்தவன்தான் நான். தேவர் பூமியில் எடுத்தால் வெட்டு, நினைத்தால்
குத்துதான். அது சங்க மரபின் வழிமுறையாக இருக்கலாம். ஆனால், 21ம்
நூற்றாண்டிற்கு அது ஒத்து வருமா? என்று பார்க்க வேண்டும். இது பற்றி
அதிகம் பேசினால் வன்முறையாளன் என்று தடா சட்டத்தில் உள்ளே போட்டுவிடுவர்.
கமல் தேவர் படத்தில் சொல்வதுபோல், "டேய் போங்கடா, கத்தி, அருவாளைத்
தூறப்போட்டுட்டு, பள்ளிக்கூடத்துக்கு படிக்கப் போங்கடா!" என்று
சொல்வதுதான் புத்திசாலித்தனம். வன்முறையால் எந்த நாடு உருப்பட்டுள்ளது?
நா.கணேசன் சொல்லுவார், 600 ஆண்டுகள் பாண்டியரும், சோழரும் போர் புரிந்து
கொண்டே இருந்ததால் "சேர நாடு" திரிந்து போய் "கேரளா"வாக மாறிவிட்டது
என்று. அவர்கள் தங்களைத் தமிழர் என்று சொல்லிக் கொள்வதில்லை.
மலையாளத்தில் 'பாண்டி' என்றால் காட்டுமிராண்டி என்று பொருள்!
மேலும் ஜல்லிக்கட்டில் ஒத்தைக்கு ஒத்தை நிற்கின்ற அளவிற்கு தமிழ் நாட்டு
வாலிபர்களுக்கு ஊட்ட உணவு கிடையாது. ஒரு எருதின் பலம் என்னவென்று அறிய
வேண்டுமெனில் தனி மனிதன் ஏர் உழுது (இழுத்து) பார்க்க வேண்டும் -
மாட்டிற்குப் பதில்! வெள்ளைக்காரர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகின்றனர்,
தனியாக மோதும் பலம் வருகிறது. சமகாலத்தமிழன் அசைவம் என்று சொல்வது வெறும்
முட்டையும், கோழியும்தான். அதை வைத்துக் கொண்டு மாட்டுடன் மோத முடியாது.
அடுத்து நமது ஜல்லிக்கட்டு விகிதம் 1000:1 என்று இருக்கிறது. இது மாட்டை
humiliate செய்வதாகும்.
சென்றமுறை தமிழகம் வந்திருந்த போது ஒரு கோயிலில் புசாரி ஆட்டின்
மென்னையைக் கடித்தே பலி கொடுப்பார் என்றும் அக்கோயிலுக்கு தமிழக அரசே ஆடு
அனுப்புவதாகவும் செய்தி படித்தேன்.
இதில் எதுவுமே ஆரோக்கியமாகத் தெரியவில்லை. I see anachronism here!
சங்கத்தமிழன் மாடு ஏவினான் என்றால் அவன் சூழல் என்ன, நம் 21ம் நூற்றாண்டு
சூழல் என்ன? என்று சான்றோர் பார்க்க வேண்டாமா? ஏதோ வீம்பு செய்வதற்காக
புறப்பட்டால் எப்படி? முதலில் பள்ளியிலிருந்து மாணவர்களை திடகாத்திரமான
தமிழர்களாக மாற்றிவிட்டு, ஜல்லிக்கட்டு பற்றிப் பேசுவோம். இன்னும்
கிராமங்களுக்குக் கல்வியே போகவில்லை, இதற்குள் ஜல்லிக்கட்டா முக்கியம்?
கண்ணன்
On 1/15/08, இரவா <vasude...@gmail.com> wrote:
--
"Be the change you wish to see in the world." -Gandhi
Be paid for surfing the internet. http://www.agloco.com/r/BBCP7818
மத்த நாட்டுல ஒண்டிக்கு ஒண்டி நிக்கறான் பாருயா,இவனுக்கு தமிழன்
குறைந்தவனா? என்றால் கோபம் மட்டும் பொத்துக்கொண்டு வருகிறது!
;-)
திவா
2008/1/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
> கைபந்து கால் பந்து போல் காளை விரட்டு விளையாட்டுக்கும் ஒரு கழகம் அமைத்து
> நெறிகளை வகுத்து விளையாட அனுமதிக்கலாம் ......
வர வர சுப்ரீம் கோர்ட் சுப்பிரமணி சாமி கோர்ட் ஆகிவருகிரது. திராவிர பண்பாடு என்பது மனிதர்களின் வாழ்க்கை நன்னேறியை மட்டும் கொண்டு வளர்ந்து வந்தது. எ கா திருக்குறள். எத்தனை யுகங்கள் ஆனாலும் அது மனிதர்களுக்கு தேவையான ஒழுக்க நெறியுடன் வாழ ஒரு வேதப்புத்தகமாகும்.
அது போல் தான் மரபு வழி கலைகளும், அதில் ஜல்லிகட்டையும் சேர்த்துக்கொள்ளலாம் நம் முன்னோர்கள் கொண்டதை அப்படியே எற்றுக்கொள் என்று சொல்லவரவில்லை ஆனால் காலத்திற்க்கேற்ப சில மாற்றங்கள் கொண்டு அதை மெருகூட்டி உலகிற்க்கி எடுத்து வைப்பது நம் தமிழரின் கடமை அதைவிட்டு விட்டு ஜல்லிகட்டு வேண்டாம் என்று நாமே சொல்வது அதற்க்கு சாதகமாக பல வற்றை சொல்வது இதற்க்காகவா நாம் தமிழ் மண்ணில் பிறந்தோம்.
ஒட்டு மொத்த தமிழினமே இதை இந்த தீர்ப்பை எதிர்த்தன் விளைவு தான் சுப்ரீம் கோர்ட் சுப்பிரமணி கோர்ட்டாகி போனது.
மும்பையிலிருந்து
Tamils fail in marketing. சுற்றுலா வளர்ச்சி என்று பார்த்தால் கேரளமும்,
ராஜஸ்தானும் உச்சத்தில் நிற்கின்றன. காரணம்?
1. தமிழகத்தின் சிறப்பு கோயில்கள். நாம் எப்படி நம் கோயில்களை
வைத்திருக்கிறோம். குப்பையும் கூளமும். மதிற்புரம் முழுவதும் மனிதக்
கழிவுகள். தஞ்சைக் கோயில் மட்டும் மத்தியப் பராமரிப்பால் பிழைத்தது.
இப்படி இருந்தால் யார் மதிப்பர்?
2. மஞ்சு விரட்டு என்று சொல்லிவிட்டு நம் வீரத்தை நாமே கேலிக்கூத்து
ஆக்குகிறோம்! மேலை நாடுகளிலிருந்து கற்றுக் கொள்ள நிறைய உள்ளது!
சங்கத்தில் எப்படி மஞ்சு விரட்டு நடந்தது என்று ஆய்து அதுபோல் செய்யச்
சொல்லுங்கள். யார் வேண்டாம் என்கின்றனர். வந்து பார்ப்பவர் சிரிக்கும்படி
ஒன்றைப் பண்பாடு என்ற பேரில் செய்வதற்குப் பதில் சும்மா இருக்கலாம். அது
நம் பண்பாட்டுச் சீரழிவை வெளிச்சம் போட்டுக் காட்டுவது போலாகும்.
இவை சில உதாரணங்களே. இப்போது வளர்ந்துவரும் "சங்கமம்" நல்ல முயற்சி.
அதில் ஒரு sophistication இருக்கிறது. முதலில் தமிழ் வரலாறு முறையாக
எழுதப்பட வேண்டும். அது முறையாகச் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும். தமிழ்
நாட்டில் வாழும் அனைவருக்கும் தமிழ் கல்வி போதிக்கப்பட வேண்டும். எளிய
முறையில் தமிழ் சொல்லித்தரும் "தமிழ் பிரச்சார சபாக்களை" இந்தியாவெங்கும்
நிருவ வேண்டும். முதலில் இந்தியர்களுக்கு தமிழர் பற்றி இருக்கிற தப்பு
அபிப்பிராயத்தைப் போக்க வேண்டும். நம் சிறப்புகளை முறையாய் சொல்லத்தெரிய
வேண்டும். எல்லாவற்றிற்கும் வெறும் வீராப்புதான் இருக்கிறது. Marketing
இல்லை!
கண்ணன்
இதுவும் நான் சொல்ல வந்த விஷயங்களில் ஒன்று. மக்கள் பெருக்கம், சூழல்
அபகரிப்பு (habitat destruction and occupation), பொதுவான இரக்கமின்மை
(apathy towards animals) போன்றவை இந்தியாவின் காட்டு + நாட்டு
விலங்குகளை மீளா அழிவிற்கு இட்டுச் செல்கின்றன. சிங்கம் கடவுள் அளவிற்கு
உயர்த்திக் காட்டப்பட்டாலும் (நரசிம்மர், தேவியின் வாகனம்) தற்போது
கையால் எண்ணக்கூடிய அளவிலேயே அவை உள்ளன. இதே கதைதான் புலிகளுக்கும்.
யானையை நாம் வணங்குகிறோம். ஆனால் இரக்கமில்லாமல் அவைகளை அவற்றின்
குடும்பதிலிருந்து பிரித்து வைத்து வாட்டுகிறோம். இனிமேல் காட்டில் போய்
பிடிக்க யானைகள் இருக்காது. அவ்வினம் நம் கண்முன்னே அழிந்து வருகிறது.
நாட்டு விலங்குகளை நாம் நடத்துகிற பாடு அதைவிட! பெரும்பாலான பசுமாடுகளை
போஸ்டர் திங்க விட்டு விடுகிறோம். போஸ்டர்களில் உள்ள நச்சுப் பொருள்கள்
பாலில் கலந்து நமக்கு வந்துவிடுகின்றன. கழுதைக்கு யாராவது தீவனம்
போட்டுப் பார்த்ததுண்டோ? பாவம்! தெரு நாய்கள் பாடு அந்தோ பரிதாபம்!
மஞ்சு விரட்டு என்று சொல்லி, மாடுகளை மிரட்டி, கழிய வைத்து, பயமுறுத்திப்
பார்க்கிறோம். அதை வீர விளையாட்டு என்று பறை சாற்றுகிறோம்.
கோயிலில் வைத்து ஆடுகளின் மென்னியைக் கடிக்கிறான் ஒருவன். அதை ஈஸ்வரம்
என்று புகழ்ந்து கொண்டாடுகிறோம்.
இதையெல்லாம் உலகிற்கு அகிம்சை எனும் தத்துவத்தை தந்த இந்தியாவில்
நடக்கிறது. கொடுமை! கொடுமை!!
காங்கேயம் மாடுகள் கம்பீரமானவை. உலகிலேயே மிகவும் அழகான இனம் ஆசிய இனமே.
சமீபத்தில் கம்போடியாவில் எடுத்த படத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
வீரத்தைக் காட்ட வேண்டுமெனில், மாட்டை இம்சிக்காமல் காட்ட முடியும்.
Extreme Sports எனும் சானலைப் பார்க்கவும்.
ஏன்! காந்தி சொன்னார், சத்தியாகிரகம் வீரனுக்குரிய செயலென்று! அவனும்
மரணத்தை துச்சமென நினைப்பவனே. ஆனால், இது எந்த துன்புறுத்தலும் இன்றி
நடக்கிறது (நாம் படும் அவஸ்தை தவிர).
கண்ணன்
2008/1/16 Kannan Natarajan <thar...@gmail.com>:
" நிழல் துரத்தும் நிஜங்கள் "
பூக்கடையில் கால் வைத்தேன்
சாக்கடை வாசம்
சாக்கடை ஓரம் பூக்கடை உபயத்தால்
சாக்கடை மீறிய பூக்கடை வாசம்
சுயநலம் ஒரு நாறும் மலம்
நாற்றமென்றால் மணம்
மணம் என்றால் நாற்றமா ?
நல் நாற்றமா..? துர் நாற்றமா..?
நாரோடு கூடி பூக்களும் மாலையாகும்,
இறையின் தோளுக்கு சேலையாகும்
பொதுநலத்தோடு கூடினால்
மனிதற்க்கு விடிவுகாலம்
ஒவ்வொரு ஜனனமும் மலம் தானே
தன் மலத்தை தானே அள்ளும்- த்யாகம்
என்றால் அது தாய்மை ஒன்றுதானே
தன்னலமில்லாத தாய்மைக்கு மட்டும்
தானது கிட்டுமென்றால் நாமும்
ஏன் விடக்கூடாது தன்னலத்தை…?
மலம் உண்ணும் பன்றியதை.
குளிர்சாதன அறையில் வைத்து
பக்குவமாய் பரிந்தூட்டி
கொழுக்க வைத்து தாமுண்ணும்
சாகசங்கள் புறிகின்ற மானுடரே
நமக்காய் வேண்டுமென்றால்
வராக அவதாரமென்போம்
தானெடுத்த வாந்தியை தானே உண்ணுகின்ற
நாயினையும் பைரவர் என்போம்
பரிமேலமர்ந்து பயணிக்கும் மனிதர்
பக்தி வந்தால் ஹயக்ரீவரென்பார்
வளைஎலி, கடும் புலி,கொடுஞ் சிங்கம்,
அத்தனையும் கடவுள்களின் வாகனமென்போம்
கடலிலே வாழுகின்ற கொழுத்த
கொழுமீன் கொடு மீனை நாமுண்போம்
வலை போட்டு வளைத்தெடுத்து
வற்றவைத்து பொறிய வைத்து
வகை வகையாய் நாமுண்போம்
மச்சாவதாரமும் அது தானென்போம்,
மனிதரையே குரங்குகளின்
மாறு கால வளர்ச்சியென்போம்
பால் கொடுக்கும் பசுவினையும்
கொடுக்கும் வரை லக்ஷ்மியென்போம்
குலம் காக்க வந்த கோமாதா
குலமாதா வென்போம்
மடி பால் வற்றிப் போனால் அடிமாடென்போம்
நடப்பன ,ஊர்வன ,பறப்பன
அத்தனையும் நாமுண்போம்
நம்பிக்கை எனும் விதையை
நயமாய் நாம் தூவி நாடகமாய்
தெய்வமென்போம், வாகனமென்போம்
இனி இல்லை உபயோகம் என்றுணர்ந்தால்
அன்னையென்ன ,தந்தையென்ன,அண்ணனென்ன
தம்பியென்ன, மனைவியென்ன,கணவனென்ன
மக்களென்ன ,பாசமென்ன ,நேசமென்ன
அன்பு என்ன பண்பு என்ன
அத்தனையும் பட்டுப் போகும்
அடிமாடாய் ஆகிப் போகும்
> http://www.pbase.com/oochappan/jallikattu
>
அருமையான படங்கள். நன்றாகப் பாருங்கள் சில காட்சிகளை!
1. ஒரு காட்சியில் எருதின் திமிள் பிடித்துத் தொங்கும் மனிதர். அவர்
வேட்டி கட்டியிருக்கவில்லை. பேண்ட் போட்டிருக்கிறார் :-)
2. ஒரு மாட்டை நாலு பேர் பிடித்து அமுக்க "மாடு நாக்கு தள்ளிப் போகிறது"
:-) நாலில் ஒருவரும் நாக்கு தள்ளிப் போகிறார் :-)
3. இவ்வளவு வீர விளையாட்டு நடக்கும் போது தொப்பையும் தொந்தியுமாக
காவல்காரர் கட்டையை வைத்து கொண்டு கம்பீரமாக நிற்கிறார் :-)
4. பல ஆயிரம் பேர் சூழ்ந்து நிற்க ஒரு மாடு ஒண்ணுக்கு அடித்து கழிக்கப்
போகிறது (வால் தூக்கி தயாராக இருக்கும் போது போட்டோ கிளிக்)
இதுதான் தமிழர்தம் "வீர விளையாட்டு"
சபாஷ் !!!
> http://www.hindu.com/2008/01/13/stories/2008011355961800.htm
>
ஹிந்து விவரமாகத்தான் செய்தி போட்டிருக்கிறது!
"CHENNAI: "Jallikattu," which is bull-baiting or bull fighting, is an
ancient Dravidian tradition that was practised about 4,000 years ago
during the Indus Valley civilisation. "
என்ன சொல்கிறது? நாம் ஏன் சங்கப்பாடல்களை மேற்கோள் காட்ட வேண்டும்,
சிந்து சமவெளி நாகரீகமே திராவிட நாகரீகம்தான் என்று சொல்கிறதே!!
அப்படியானால், நம்ம வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது அரசியல் என்னாவது? :-))
"Bull-baiting figures in the Mahabharatha, which describes Krishna
controlling a ferocious bull in the forecourt of Kamsa's palace."
நான் முன்பு எழுதிய பாகவத மேற்கோளை ஹிந்துவும் சுட்டுகிறது! அப்ப
மகாபாரதம் திராவிட இதிகாசம்தானோ? சங்கப்பாடல் ஒன்றில் பாண்டிய மன்னன்
ஒருவன் பாண்டவர்களுக்கு களச்சோறு போட்டதாக ஒரு வருணனை வருகிறதே! அப்ப
எல்லாம் ஒண்ணு மண்ணுதான்னு சொல்லுங்க :-))
"Outside India, bull-baiting is practised in Spain and Portugal."
அப்படின்னா, திராவிட கலாச்சாரம் சிந்து தாண்டி துருக்கி போய்,
அங்கிருந்து ஸ்பெயின், போர்ச்சுகல் போயிருக்குமோ? ஏனெனில் அவர்கள்தான்
இந்த விளையாட்டை ஒழுங்காக விளையாடுகிறார்கள். ஒத்தைக்கு ஒத்தை.
நம்ம ஆளு கன்னுக்குட்டியை கட்டி அணைக்கிறாரு (உண்மை, படத்தைப் பாருங்கள்) :-))
சங்கத்திற்கே வெளிச்சம்!!
ஜல்லிக்கட்டு - பாரம்பரியம் மிக்க, வீரம் செறிந்த விளையாட்டுதான். சந்தேகமில்லை; மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்தக் காலத்துக்கு அது வீரம் செறிந்ததா?
சிலரைக் கொன்று, பலரைக் காயப்படுத்தும் அப்படிப்பட்ட பாரம்பரியம் தேவைதானா? என்பது மட்டுமே கேள்வி.
ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின் போதும் ஏக சர்ச்சைகளை எழுப்பி, ஏராளமானோரைக் குற்றுயிரும் குலையுயிருமாக தூக்கிச் செல்லும் காட்சிகளைக் கொண்டதாக இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டும் உயர் நீதிமன்றத் தடை உத்தரவை, மாநில அரசே முன்முயற்சி எடுத்து உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றதால், தாற்காலிகமாகத் தடை விலகி - மீண்டும் மார்ச் மாதத்தில் முழுமையாக விசாரிப்பதற்கான உத்தரவும் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, பலத்த பாதுகாப்புக்கிடையே குறைந்தபட்சம் வருவாய்க் கோட்டாட்சியர் முகாமிட்டு, காயம்பட்டவர்களைக் கணக்கெடுத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இந்த ஆண்டு காயம்பட்டவர்களின் எண்ணிக்கையும், வீரமரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. வரும் ஆண்டுகளில் இதுபோன்றே நீதிமன்றம் தடை கொடுக்கலாம், உச்ச நீதிமன்றம் தாற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தடையை விலக்கலாம். காயம்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கங்களைப் போல ஏறி இறங்கலாம்.
ஆனால், ஜல்லிக்கட்டு வேண்டுமா, வேண்டாமா என்பதைப் பற்றிய தெளிவான விவாதம் நடைபெறப் போவதில்லை. தெளிவாகக் கூற வேண்டுமானால், தமிழகத்தில் அது நிறுத்தப்படப் போவதுமில்லை.
வில்லை வளைத்து, கல்லைத் தூக்கி, மாட்டை அடக்கி பெண் பார்த்துக் கட்டிய காலம் மலையேறிவிட்டது.
இப்போதைய வீரம் சரியாகவோ, தவறாகவோ வேறாகிவிட்டது. மனித வாழ்க்கையின் இன்பம், துன்பம், வீரம், வெட்கம், சோகம், வாழ்வியல் எல்லாமும் வேறாகிவிட்டது. கீழே விழுந்த நாணயத்தை சிரமப்பட்டு குனிந்து எடுப்பதா? என்ற கேள்வி எழும் காலம் இது.
எதற்காகவெல்லாம் "ரிஸ்க்" எடுக்க வேண்டும் என்பதுதான் வெற்றியாளர்களின் ரகசியமாகக்கூட கற்பிக்கப்பட்டு வருகிறது.
வீர விளையாட்டு இன்னமும் இப்படியே இருக்க வேண்டுமா? என்பதுதான் கேள்வி.
வீரம் என்பதென்ன?
ஓடி வரும் மாட்டை வளைத்துப் பிடிக்க பலரும் முயற்சித்து, குத்துப்பட்டு, ஒரு வழியாக அந்த மாடு சோர்ந்த பிறகு வேறொருவர் பரிசைத் தட்டிச் செல்வதா?
உண்மையில் வீரம் என்றால், ஒரு மாட்டை யாருமில்லாத களத்தில் அவிழ்த்துவிட்டு ஒருவர் அடக்க வேண்டும்.
விவசாயமே பிரதானமாக இருந்த காலத்தில், அதற்கு மிகவும் அவசியமான காளைகளைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆண்களே, அந்தத் தொழிலைச் சரியாக - சிறப்பாகச் செய்து குடும்பத்தை நடத்த முடியும் என்பதால் இந்த விளையாட்டைத் தொடங்கியிருக்கலாம்.
அப்போதைய உணவுப் பழக்கங்கள் மனிதனை இப்போதுள்ள மனிதனைக் காட்டிலும் பல மடங்கு பலம் பொருந்தியவனாகவும் வைத்திருந்திருக்கிறது.
கல்வி நிறுவனங்களுக்கு பாடப் புத்தகங்களைச் சுமந்து செல்லாமல், ஒரே ஒரு கிலோ எடையுள்ள மடிக் கணினிகளை கையில் எடுத்துச் சென்று படிக்க வேண்டிய காலத்தில் வீரம் என்பது என்ன? என்பதற்கான விவாதத்தை பகிரங்கமாகவும், விரிவாகவும் நடத்த வேண்டிய அவசியத்தில் தமிழ்ச் சமூகம் இருக்கிறது.
அன்றாடம் நம்மை வந்து சேரும் அறிவியல் கண்டுபிடிப்புகள் தமிழ்ச் சமூக வாழ்வியலைச் சீரழித்துவிடாமல் பாதுகாக்கும் வகையிலாவது மாற்றங்களைச் செய்து ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறோம்.
அந்தப் பணியில் வெற்றிடத்தை ஏற்படுத்திக் கொண்டு, உள் நுழையும் புதுமைகளைத் தெரிந்தோ, தெரியாமலோ அனுமதித்துக் கொண்டு, அவசியமில்லாத பழமைகளையும் விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டும் இருந்தால்?... ஆழமாக யோசிக்க வேண்டும்.
கடைசியாகப் பொருளியல் தத்துவத்தின்படி தேவையின் அடிப்படையில்தான் எல்லாவற்றையும் இறுதி விவாதத்துக்கு உள்படுத்துவது அவசியமாகிறது.
ஜல்லிக்கட்டின் இப்போதைய தேவை என்ன? அவசியம் என்ன? அப்படிப்பட்ட வீரம் வாழ்க்கையில் எவற்றையெல்லாம் தருகிறது?
மாடுகளுக்கு எந்தத் தொந்தரவும் இல்லை; அவை மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்வரும் இளைஞர்களைக் குத்தப் பாய்ந்துதான் வருகிறது என்ற கூற்றை ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமா? வீரத்தைக் காட்டி வெல்வதற்கு வேறு எந்த வழியும் இல்லையா?
இந்தக் கேள்விகளை மக்கள் மத்தியில் உலவவிட்டு, அவர்களது சிந்தனையைக் கிளற வேண்டும்- முடிந்தவரை. கருத்தே கூறாமல் இருக்கும் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் வெளிப்படையாகக் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். வாக்கு வங்கியை மட்டுமே குறியாகக் கொள்ளக்கூடாது.
சா. ஜெயப்பிரகாஷ்
நன்றி: தினமணி தலையங்கம் - http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20080118124809&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&dName=No+Title&Dist =நியூயார்க் டைம்ஸில் ஜல்லிக்கட்டு!
"ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை...பின்னர் நிபந்தனைகளுடன் அந்த விளையாட்டை நடத்த அனுமதி" என்று தைப் பொங்கலையொட்டி வாடிவாசலில் இருந்து புயலெனக் களமிறங்கிய அந்தப் பிரச்சினை தமிழ்நாட்டின் பல பகுதிகளையும் உலுக்கி, வாதப்பிரதிவாதங்களை உண்டாக்கியது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு இல்லாமல் போய்விடுமோ என்ற பயங்கலந்த கலக்கத்தை அதன் ரசிகர்களுக்கு ஏற்படுத்திவிட்டது.
சென்ற ஆண்டு இதே ஜனவரி மாதம் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் உலகப் புகழ்பெற்ற "நியூயார்க் டைம்ஸ்"(http://www.nytimes.com/) நாளிதழில் நமது ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை ஒன்று பிரசுரமானது. அந்தக் கட்டுரை இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. கூடவே ஜல்லிக்கட்டு நடக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ படங்களும் அதனுடன் இணைக்கப்பட்டன.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் அந்த வீர விளையாட்டைப் பார்த்து ரசிக்க முடிந்தது. அந்த ஜல்லிக்கட்டு நிகழ்வை வீடியோ படம் பிடித்தவர் எம்.வெங்கடேசன். கோவையைச் சேர்ந்த இளைஞர். டைரக்ஷன் துறையில் படித்தவர். நிறைய குறும்படங்களும் ஆவணப்படங்களும் இயக்கியிருப்பவர். எடிட்டிங்கும் அவருக்குக் கை வந்த கலை.
எம்.வெங்கடேசனைச் சந்தித்துப் பேசினோம்.
நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்வைப் படம்பிடித்து அனுப்பியது எப்படி?
அமெரிக்காவில் உள்ள புரூக்லீன் காலேஜிலிருந்து இங்கு டான் குரூஸ்கின் என்கிற ரஷ்யன்-அமெரிக்கன் வந்திருந்தார். அவர் இப்போது அமெரிக்க பிரஜை. அவர் இங்குள்ள சிவானந்த ஆஸ்ரமம் பற்றி டாக்குமென்டரி பிலிம் எடுத்தார். அவருக்கு உதவியாக நான் அப்போது வேலை செய்தேன். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் அவர் ஜல்லிக்கட்டு பற்றி கட்டுரையை நியூயார்க் டைம்ஸுக்காக எழுத, நான் அதற்கான வீடியோ படங்களை எடுத்துக் கொடுத்தேன். மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டைப் படம் பிடித்தேன்.
இதை வெளிநாட்டில் பார்த்துவிட்டு நிறைய பாராட்டுகள் குவிந்தன. இங்கிலாந்து, பிரான்ஸ், கியூபா, பிரேசில், ஸ்வீடன் போன்ற 12 - 13 நாடுகளில் இருந்து இதற்காக நிறையத் தொலைபேசி அழைப்புகள் வந்தன. இ-மெயில் மூலமாகவும் நிறையக் கடிதங்கள் வந்தன. வீடியோ சாட்டிங் மூலமாகவும் பாராட்டுகள் குவிந்தன.
ஜல்லிக்கட்டை நான் அதில் கவர்ச்சியான விளையாட்டுப் போலக் காட்டவில்லை. என்ன நடக்கிறதோ அதை அப்படியே படம் எடுத்து அனுப்பினேன்.
நியூயார்க் டைம்ஸில் ஜல்லிக்கட்டு!