யோகா: யோகா (Yoga), உடற்பயிற்சி (Exercise) வேற்றுமைகளும் ஒற்றுமைகளும்

356 views
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
Jun 19, 2010, 12:52:22 AM6/19/10
to தமிழ்நண்பர்கள், thera...@googlegroups.com, தென்றல், mutht...@googlegroups.com, minT...@googlegroups.com, nallanampikkai, காதல்

உடற்பயிற்சி (Exercise) மற்றும் யோகா இரண்டுமே உடல் நலத்திற்காக அமைந்தது என்றாலும் இரண்டிற்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளது. முக்கிய வேறுபாடுகளை கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


உடற்பயிற்சி (Exercise)யோகா (Yoga)
உடல் சக்தி அதிக அளவு விரயமாகும் உடல் சக்தி விரயம் மிக மிக குறைவு. சக்தியை சேமிக்கும்
அதிக சக்தி விரயத்தால் அதிக உணவு சக்தி உடலுக்கு தேவை சாதாரண உணவு போதுமானது
செய்யும் போது தளர்ச்சியை கொடுக்கும் எப்போதும் உற்சாகத்தை கொடுக்கும்
அதிக நேரம் செய்ய வேண்டும் குறைந்தது 5 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை போதுமானது. அதிக நேரம் செய்தாலும் தவறில்லை
சில பயிற்சிகளை செய்ய அதற்கான கருவிகள் , அதற்கான இடம் தேவைப்படும் பிரத்யேகமாக எந்த கருவியும் தேவையில்லை
அதிகமாக வெளித்தசையை மட்டும் பலப்படுத்தும் உள் உறுப்புகளையும் பலப்படுத்தும்
உடல் கடினத்தன்மை பெறும் உடல் வளையும் தன்மையும் உறுதியும் பெறும்
செல்கள் வளர்வதை கூட்டி வயதை சீக்கிரம் அதிகமாக காட்டும் இளமையாக காட்டும்
முரட்டுத்தன்மை அதிகமாகி அது பழகிவிட்டதால் நாளாக நாளாக குறையத்துவங்கும். போட்டி குணம் பெருகும் உள்ளம் அமைதியாகி எந்நிலையையும் ஏற்கும் பக்குவம் பெறும். சாந்த குணம் வளரும்
அதிக வியர்வை வெளியாகும். வியர்வை வராது. அதனால் குளித்து விட்டும் செய்யலாம்.
உடல் உள் நோய்களை தடுக்கும் சக்தி அதிகமாக கிடையாது யோகா தேவையான எல்லா ஹார்மோன்களையும் தேவைக்கேற்ப சுரக்க வைப்பதால் நோய்தடுப்பு மருந்தாக விளங்குகிறது
இரத்த அழுத்தத்தை அதிகமாக்கும் இரத்த அழுத்தத்தை சமச்சீராக்கும்
கடினமாக செய்ய வேண்டும் எளிதாக செய்தே அதிக பலன் பெறலாம்
தொடர்ந்து செய்ய வேண்டும். இல்லையேல் கொழுப்பு அதிகரிக்கும். ஆண்களுக்கு தொந்தி வரும் எந்த கெடுதலும் இல்லை
வேறு கருவிகள் தேவைப்படுவதால் பணச்செலவு ஆகும் எவ்வாறு செய்வது என்பதை அறிந்து விட்டால் எந்த செலவும் இல்லை
உடல் திறன் மட்டும் பெருகும் உடல் திறனுடன் அறிவுத்திறன் மற்றும் ஞாபக சத்தி பெருகும்
மனதிற்கான பயிற்சி கிடையாது மனதிற்கான பயிற்சி உண்டு
வெளிநாட்டு வரவு இந்திய ஆதிகால பயிற்சி


ஒற்றுமைகள்

வேறுபாடுகளை பார்த்தது போல சில ஒற்றுமைகளையும் பார்ப்போம்

  • இரண்டு பயிற்சிகளுமே உடல் நலத்திற்கானது
  • சில குறிப்பிட்ட பயிற்சிகளை தக்க ஆசிரியரிடம் கற்காமல் செய்வது ஆபத்தானது
  • வெற்று வயிற்றுடன் செய்ய வேண்டும். சாப்பிட்ட உடன் செய்யக்கூடாது. அல்லது 4 மணி நேரம் கழித்தே செய்ய வேண்டும்
  • காலையும் மாலையும் இப்பயிற்சிகள் செய்ய உகந்த நேரம்
  • பயிற்சி செய்யும் போது எளிமையான உடை அவசியம்
  • நல்ல காற்றோட்டமான இடம் நல்லது
  • கர்ப்பிணி தாய்மார்கள் 3 மாதத்திற்கு பிறகு இப்பயிற்சிகளை செய்யக்கூடாது. அல்லது மிகமிக எளிமையானவற்றை மட்டும் மருத்துவர் ஆலோசனை படி செய்யவேண்டும்
--
வினோத்
http://tamil2friends.com/node/26354



--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth

Kandavel Rajan

unread,
Jun 19, 2010, 1:17:00 AM6/19/10
to thamizh...@googlegroups.com, தமிழ்நண்பர்கள், thera...@googlegroups.com, mutht...@googlegroups.com, minT...@googlegroups.com
அருமையான பகிர்வு....


நன்றி......




--
மறதி தான் மனிதனை இலேசாக்குகிறது. எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருப்பின் மனிதன் சோகம் தாங்காது வாழ்க்கை ஆரம்பத்திலேயே சரிந்து விடுவான் என்பதாலேயே மறதி இயல்பாயிற்று. ஆனால் மறுபடி மறுபடி அடி வாங்கவே மறதி உபயோகமாகிறது.


நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

வினோத்-VINOTH

unread,
Jun 19, 2010, 1:18:22 AM6/19/10
to தமிழ்நண்பர்கள், mint...@googlegroups.com, thamizh...@googlegroups.com, thera...@googlegroups.com, mutht...@googlegroups.com


2010/6/19 Kandavel Rajan <kandav...@gmail.com>

அருமையான பகிர்வு....


நன்றி......


--

Geetha Sambasivam

unread,
Jun 19, 2010, 2:20:34 AM6/19/10
to thamizh...@googlegroups.com, mutht...@googlegroups.com, minT...@googlegroups.com
யோகாவினால் விளையும் நன்மைகள் நூற்றுக்கு நூறு சரியே. பத்து வருஷத்துக்கும் மேலாக யோகாசனங்கள் செய்துவருவதால் என்னால் அதை நன்கு உணரமுடிகிறது. வெளியூர் எங்காவது போனால் கூட முடிந்த வரையிலும் யோகாசனங்களில் சிலவற்றையாவது செய்துவிடுவதை வழக்கமாய் வைத்திருக்கிறேன்.

2010/6/19 வினோத்-VINOTH <vino...@gmail.com>

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

Raja sankar

unread,
Jun 19, 2010, 2:23:22 AM6/19/10
to mint...@googlegroups.com
வினோத்,

யோகஆசனங்கள் என்பது உடல்வலிமையாக ஆரோக்கியமாக இருப்பவர்கள் மட்டும் செய்யமுடியும். எல்லோராலும் அல்ல. ஆயினும் எல்லோராலும் செய்யக்கூடிய ஒரு ஆசனம் உண்டு. அது சவாசனம் மட்டுமே :-)

சுமார் ஒரு நூறு வருடத்திற்கு முன் உடல் உழைப்பு தான் அதிகமாக இருந்தது. போக்குவரத்து எல்லாம் நடத்தல், குதிரை என. எனவே மக்கள் உடல் உறுதியாக இருந்தது அதனால் யோகாசனங்களை எளிதாக செய்யமுடிந்தது. இப்போது எவ்வளவு பேரால் பத்மாசனம்,வஜ்ராசனம் எல்லாம் செய்யமுடியும்?

உடற்பயிற்சி வெளிநாட்டு இறக்குமதி என்பது எல்லாம் கப்சா. களரிபயட்டு,சிலம்பம்,குஸ்தி போன்றவைகளில் முதலில் உடற்பயிற்சிதான் அப்புறம் தான் மற்றயவை. இன்றைக்கு இருக்கும் பாடிபில்டிங் எல்லாம் அந்த காலத்தில் இருந்தவை. என்ன அடிமையாக இருந்த காலகட்டத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம்.

இதுமட்டுமல்லாது ஓடுவதுமே ஒரு யோகாசனம் தான். விவேகானந்தர் கூட இதைப்பற்றி எழுதியுள்ளார்.

இந்த மாதிரியான ஒப்பீடுகள் யோகம் என்பதை பற்றி முழுவிவரம் இல்லாமல் எழுதப்படுபவை என்பதே என் கருத்து. இது நீங்கள் எழுதுவது மட்டுமல்ல நிறைய பேர் இதே கருத்தை கொண்டுள்ளனர்.

மேற்சொன்ன விளக்கத்திற்கு அப்புறம் இக்கருத்தை மாற்றிக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

ராஜசங்கர்



2010/6/19 வினோத்-VINOTH <vino...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
Jun 19, 2010, 2:30:44 AM6/19/10
to mint...@googlegroups.com
//யோகஆசனங்கள் என்பது உடல்வலிமையாக ஆரோக்கியமாக இருப்பவர்கள் மட்டும் செய்யமுடியும்//

ராஜாசங்கர்,

யோகாசனம் கற்க ஆரம்பித்தபோது என் உடல் நிலைமையைப் பார்த்திருந்தால் இப்படிச் சொல்லி இருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன். உடலின் நோய்க்குத் தகுந்தாற்போல் ஆசனங்கள் உண்டு. அதற்கேற்றாற்போல் சொல்லியும் தருவார் உண்மையான யோகக்கலை பற்றி அறிந்த யோகாசன குரு. நடக்கக் கூட முடியாமல், கீழே உட்கார முடியாமல் இருந்த என்னை நடக்க வைத்ததும், கீழே குறைந்தது அரை மணியாவது உட்கார வைத்ததும் யோகாசனமே.

யோகாசனம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பின்னரே என்னால் திருக்கைலை யாத்திரைக்குச் செல்ல முடிந்தது. நவ பிருந்தாவனம், அகோபிலம் போன்ற கஷ்டமான மலைப்பயணங்களுடன் கூடிய திருத்தல யாத்திரைகளும் செல்ல முடிந்தது. இது பற்றிக் குறிப்புகள் எடுத்துக் கொண்டு விளக்கமாய் எழுதுகிறேன்.  என்றாலும் உங்களுக்கு

"சுந்தர யோக சிகிச்சை" என்னும் புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படியுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.

2010/6/19 Raja sankar <errajasa...@gmail.com>

Raja sankar

unread,
Jun 19, 2010, 2:38:35 AM6/19/10
to mint...@googlegroups.com
அன்பின் கீதா சாம்பசிவம்

யோகாசனம் என்பது நோயை குணப்படுத்துவது மட்டும் அல்ல என்பதே எனது கருத்து. யோகாசனத்தால் உடல் நோயை குணப்படுத்த முடியும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவன். ஆயினும் அதனுடைய குறிக்கோள் உடலை வலிமைப்படுத்துவது, எல்லா அங்கங்களையும் நன்றாக இருக்கசெய்வது என்று எடுத்துகொண்டீர்களானால் என்னுடைய கருத்து புரியும் என நினைக்கிறேன்.

யோகம் என்பது இயல்பாக, எளிமையாக வரவேண்டும். அடுத்த படியாக தியானத்திற்கு போவதற்கு உதவியாக இருக்கவேண்டும். அப்படி இல்லாமல் செய்யப்படும் யோகாசனங்கள் உடற்பயிற்சியில் இருந்து எவ்வித மாறுபாடும் இல்லாதவை

ராஜசங்கர்

2010/6/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jun 19, 2010, 2:42:46 AM6/19/10
to mint...@googlegroups.com
உட்கருத்து விளங்கியது. முழுமையாக ஆமோதிக்கிறேன்.

2010/6/19 Raja sankar <errajasa...@gmail.com>
360.gif

Raja sankar

unread,
Jun 19, 2010, 2:50:00 AM6/19/10
to mint...@googlegroups.com
நன்றி
360.gif

வினோத்-VINOTH

unread,
Jun 19, 2010, 3:13:23 AM6/19/10
to தமிழ்நண்பர்கள், thamizh...@googlegroups.com, mutht...@googlegroups.com, mint...@googlegroups.com


2010/6/19 Geetha Sambasivam <>

யோகாவினால் விளையும் நன்மைகள் நூற்றுக்கு நூறு சரியே. பத்து வருஷத்துக்கும் மேலாக யோகாசனங்கள் செய்துவருவதால் என்னால் அதை நன்கு உணரமுடிகிறது. வெளியூர் எங்காவது போனால் கூட முடிந்த வரையிலும் யோகாசனங்களில் சிலவற்றையாவது செய்துவிடுவதை வழக்கமாய் வைத்திருக்கிறேன்.

நன்றிங்க

நண்பன்

unread,
Jun 19, 2010, 3:16:33 AM6/19/10
to mint...@googlegroups.com
யோகக்  காரர்தான்  நீங்கள்

2010/6/19 வினோத்-VINOTH <vino...@gmail.com>
2010/6/19 Geetha Sambasivam <>
யோகாவினால் விளையும் நன்மைகள் நூற்றுக்கு நூறு சரியே. பத்து வருஷத்துக்கும் மேலாக யோகாசனங்கள் செய்துவருவதால் என்னால் அதை நன்கு உணரமுடிகிறது. வெளியூர் எங்காவது போனால் கூட முடிந்த வரையிலும் யோகாசனங்களில் சிலவற்றையாவது செய்துவிடுவதை வழக்கமாய் வைத்திருக்கிறேன்.




--
குற்றம் சொல்லின்
சுற்றம் இல்லை

நன்றியுடன் நாசரு  

வினோத்-VINOTH

unread,
Jun 19, 2010, 3:26:13 AM6/19/10
to mint...@googlegroups.com, தமிழ்நண்பர்கள்


2010/6/19 Raja sankar <>

வினோத்,

யோகஆசனங்கள் என்பது உடல்வலிமையாக ஆரோக்கியமாக இருப்பவர்கள் மட்டும் செய்யமுடியும். எல்லோராலும் அல்ல.

இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து.
நீங்கள் கூறிவது உடற்பயிற்சி்க்கு சரியாக பொருந்தி வருகிறது.
படுக்கையில் கிடப்பவரால் எழுந்து ஓட முடியாது.

ஓடுவது யோகா என்றாலும் ஓடுவதால் கிடைக்கும் பலனை எளியமுறையில் யோகாவில் கிடைத்துவிடுவதால் எழுந்து ஓடவேண்டிய அவசியமில்லை. மேலும் நீங்கள் கூறியது போல அந்தக்காலத்தில் உடல் உழைப்பு அதிகமாக இருந்ததால் தனியாக ஓடவேண்டிய அவசியமில்லை.

ஆனால் உடல் வலிமை மட்டுமல்லாமல் நோயை குணப்படுத்தும் பலன் யோகாவில் உண்டு.

உடல் வலிமையாக இருந்தால் மட்டுமே யோகா செய்யமுடியும் என்பது தவறான கருத்து.

சாதாரணமாக உக்காரக்கூட முடியவில்லை என்பது இந்தக்கால பெருமைப்பட்டுக் கொள்ளும் விசயமாக இருக்கலாம். இதுவும் ஒரு யோகா தான்.

Raja sankar

unread,
Jun 19, 2010, 3:58:24 AM6/19/10
to mint...@googlegroups.com
ஓடும் பலன் எல்லாம் யோகாவில் கிடைக்காது.  :-))))
உடற்பயிற்சியிலும் பிஸியோதெரபியில் எழுந்து நடக்க முடியாதவருக்கு பயிற்சிகள் உண்டு.

உடற்பயிற்சியை யோகாவில் இருந்து பிரிப்பதால் எந்த பலனுமில்லை. பேருக்கு வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்

ராஜசங்கர்

2010/6/19 வினோத்-VINOTH <vino...@gmail.com>

வினோத்-VINOTH

unread,
Jun 19, 2010, 4:03:18 AM6/19/10
to mint...@googlegroups.com


2010/6/19 Raja sankar <errajasa...@gmail.com>

ஓடும் பலன் எல்லாம் யோகாவில் கிடைக்காது.  :-))))

இது எந்த ஓட்டத்தை சொல்றீங்க :)))

 


உடற்பயிற்சியை யோகாவில் இருந்து பிரிப்பதால் எந்த பலனுமில்லை. பேருக்கு வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்


உடற்பயிற்சியிலும் பிஸியோதெரபியில் எழுந்து நடக்க முடியாதவருக்கு பயிற்சிகள் உண்டு. 

சரிங்க, நான் பிரிக்கலை..
:)

Innamburan Innamburan

unread,
Jun 21, 2010, 11:59:39 PM6/21/10
to mint...@googlegroups.com
எதற்கும் ஒரு தகவல். யோகமந்திரம் என்ற உலகபுகழ் வாய்ந்த சென்னை அமைப்பு, யோகம் மூலமாக பிணி தீர்க்கும் வகைகளை தரமான முறையில், பொறுப்புடன் பல வருடங்களாக அளித்து வருகிறது. அதன் ஸ்தாபகர் வணக்கத்துக்கு உரிய கிருஷ்ணாமாச்சிரியார் அவர்களின் பிரதான சீடர், திரு.பி.கே.எஸ். அய்யங்கார்.
இன்னம்பூரான்

2010/6/19 வினோத்-VINOTH <vino...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages