தவறாமல் உங்கள் இணையத்தளத்தை விக்கிக் கட்டுரையில் இணைத்து விடுங்கள்.
அன்புடன்
சிறீதரன்
ஒரு பக்கம் தமிழ் தமிழ் என மாரடித்துவிட்டு, தன் வலைதளைங்களை
ஆங்கிலத்தில் எழுதுவதுதான் ’இயக்கத்தின்’ மரபு போலுள்ளது. இதைப்போல்தான்
மற்ற மாவட்ட தளங்களும் எ.கா. http://www.thanjavur.tn.nic.in/
100 வருட தமிழ் ‘மறுமலர்ச்சி’க்கு பின்பு தமிழில் எழுத அரசாங்கத்திற்க்கே
சுய நம்பிக்கை இல்லை. இது என்ன போலி மறுமலர்ச்சி ?
விஜயராகவன்
On 28 Nov, 05:04, Selva Murali <murali1...@gmail.com> wrote:
> திரு சிறீரதன்
> இவைகளில் பலதகவல்கள் அவர்களின் மாவட்ட அரசு இணைய தளத்தில் இருந்து அடியேன்
> உள்ளிட்டது
> நன்றி!
>
> 2009/11/28 Sri Sritharan <kstha...@bigpond.com>
>
>
>
>
>
>
>
> > இதனைப் பாருங்கள்:
>
> >http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%...
>
> > தவறாமல் உங்கள் இணையத்தளத்தை விக்கிக் கட்டுரையில் இணைத்து விடுங்கள்.
>
> > அன்புடன்
> > சிறீதரன்
> > ----- Original Message -----
> > From: "Selva Murali" <murali1...@gmail.com>
> > | விரைவில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்க்கான ப்ரத்யோக இணைய தளம் வெளியிட
> > ஏற்பாடு
> > | செய்து வருகிறேன்...
> > | எனக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வரலாறு மற்றும் சங்ககாலங்களில் கிருஷ்ணகிரி
> > | சம்பந்தப்பட்டிருக்கிறதா போன்ற தகவல்கள் தேவை.
>
> --
> M.S.Murali (B+ve)
> 99430-94945
> ----------------------------www.visualmediaa.com- Hide quoted text -
>
> - Show quoted text -
அன்புள்ள செல்வமுரளி
உங்கள் அஞ்சல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
கிருஷ்ணகிரி ஒரு வரலாற்றுச் சுரங்கம். பல கல்வெட்டுக்களும் நடுகற்களும் அங்கே கிடைத்து வருகின்றன. மிகச் சமீபத்தில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையத்தைத் துவங்கியிருக்கிறார்கள்.
திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நூல் தகடூர் வரலாறு. அதில் கி்ருஷ்ணகிரி பற்றி நிறைய தகவல்கள் இருக்கின்றன. அந்த நூலை நான் மதிப்பீடு செய்து இருக்கிறேன். என்னுடைய வலைப்பூ
http://www.sanimoolai.blogspot.com
இந்த வலைப்பூவில் புத்தக மதிப்புரைகள் என்னும் தலைப்பில் அந்தக் கட்டுரை கிடைக்கும். ஏதாவது பிரச்னை என்றால் சொல்லுங்கள். நாளை தனியே அஞ்சலில் அனுப்புகிறேன். உங்களுக்கு வேண்டும் என்றால் என்னிடம் இருக்கும் நூலை அனுப்பி வைக்கிறேன்.
சங்க காலத்தில் கிருஷ்ணகிரிக்கு நிறைய தொடர்பு இருந்திருக்கிறது. அது குறித்த ஆதாரம் ராமகிருஷ்ணன் நூலில் உள்ளது. இந்த நூலை மறுப்பவர்களும் இருக்கிறார்கள்.
புது எழுத்து ஆசிரியர் மனோன்மணி (முருகன்) உங்களுக்குத் தெரியுமா? அவருடைய தொலைபேசி எண் 09842647101 அவர் ராமகிருஷ்ணன் நூலை விமர்சித்து என்னிடம் பேசியதாக நினைவு. அவரிடம் நிறைய தகவல்கள் இருக்கின்றன.
ஜெயச்சந்திரன் என்று ஒரு பெரியவர் காவேரிப்பட்டணத்தில் இருக்கிறார். அவரிடம் நிறைய தகவல்கள் உள்ளன. சமீபத்தில் அவர் என்னிடம் பேசினார். கிருஷ்ணகிரியில் ஜெகதேவி அருகில் சிவாஜி மகாராஜா பொறித்து வைத்த மராட்டியக் கல்வெட்டுக்கள் கிடைத்ததாக சொன்னார். அவற்றின் புகைப்படங்களை எனக்கு அனுப்பியதாக சொன்னார். இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்தால் உங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்.
அவருடைய எண் 098427779664
கிருஷ்ணகிரியை சுற்றி சமணப்பள்ளிகள் நிறைய இருந்திருக்கின்றன. பென்னேஸ்வர மடம் அருகில் ஜைநூர் என்றே ஒரு ஊர் இருக்கிறது. பென்னேஸ்வர மடம் சிவன் கோவில் பராந்தக சோழன் சமணர்களுக்கு எதிராகப் போர் புரிந்து அவர்களை வென்றதற்கு நன்றிக் கடனாகக் கட்டிய கோவில் என்று சொல்வார்கள். அந்தக் கோவிலில் ஒரு வலம்புரி விநாயகர் இருக்கிறார். அவர் வடக்கு நோக்கி இருக்கிறார்- அவரை அந்தக் காலத்தில் எங்கிருந்தோ தள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்கள். சிற்ப வேலைப்பாடுகளைப் பார்க்கும்போது அது நம்முடைய ஊரின் சிற்பம் போலத் தெரியவில்லை. மகா சக்தி வாய்ந்தவர் அந்தப் பிள்ளையார் என்று கேள்விப்பட்டேன். சமீபத்தி்ல் நேரடியாகவும் அனுபவம் கிட்டியது. (வேதநாயகி சமேத ஸ்ரீபென்னேஸ்வரர் எங்கள் குலதெய்வம். அவருடைய பெயர்தான் எனக்கு என் பெற்றோர் வைத்திருக்கிறார்கள்.)
கிருஷ்ணகிரி பகுதியில் அங்கங்கே உள்ள திரௌபதி அம்மன் ஆலயங்கள் தவிர குந்திக்கும் சகுனிக்கும் அங்கே தனியாக கோயில்கள் உள்ளன என்று சொல்கிறார்கள். அதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். இரண்டாம் மைசூர் போரில் எங்கள் அரசன் ஹைதர் அலி கிருஷ்ணகிரிக்கு அருகே காவேரிப்பட்டணத்தில் வெள்ளையர்களைத் தோற்கடித்து இருக்கிறான்.
கண்ணகி மதுரையை எரித்த பிறகு கோவலன் வழி வாணிகர்கள் காவிரிப்பூம்பட்டினத்தை விட்டு வெளியேறி கிருஷ்ணகிரி அருகே உள்ள காவேரிப்பட்டணத்தில் குடியேறினார்கள். இன்றும் அந்த ஊர் செல்வாக்கு மிகுந்த வாணிக செட்டியார்களால் மிகவும் வளமாக விளங்குகிறது.
ஒசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.மனோகரன். இவரும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையத்தில் ஆர்வமாக இருக்கிறார். அவரிடம் நிறைய தகவல்கள் இருக்கின்றன. அவருடைய எண் ஜெயச்சந்திரனிடம் கிடைக்கும்.
இவர்களை எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தாலும் இருக்கலாம். இருந்தாலும் உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் இவர்கள் உதவுவார்கள் என நினைவுபடுத்தவே இவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரிவி்த்து இருக்கிறேன்.
உங்கள் இணையதளத்துக்கு என்னால் ஏதாவது செய்ய முடியும் என்று நினைத்தாலும் தெரிவியுங்கள். மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
நான் மிகவும் அதிகமாக நேசிக்கும் ஊர் கிருஷ்ணகிரி. 1981ல் டெல்லிக்கு வந்த போது என் பெற்றோர்களைப் பிரிந்ததை விட அந்த அழகிய ஊரை விட்டு வெளியேறுவதை நினைத்து வழியெல்லாம் அழுது கொண்டே வந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. இப்போதும் ஊருக்குப் போனால் மனது குழந்தை போல உற்சாகம் கொள்கிறது. இன்றும் டெல்லிக்குத் திரும்பும்போது மனது கனத்துப் போகிறது.
இறந்தாலும் நான் ஆவியாக எங்கள் கிருஷ்ணகிரியின் மாமரங்களில்தான் அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
எந்த உதவியும் தயங்காமல் கேளுங்கள். என்னால் இயன்றதை எவ்விதத் தயக்கமும் இன்றி செய்து தருகிறேன்.
உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்
பென்னேஸ்வரன்
சந்தேகமாக இருக்கா??
விஜயராகவன்
திப்பு சுல்தான் காலத்திய கோட்டைகளும் எங்கள் ஊரில்(மத்துர்) பெரிய
அளவில் இருந்துது. அங்கே தோண்ட தோண்ட பல ஐம்பொன் சிலைகள் கிடைத்தன..
ஆனால் சிலவருடங்களுக்கு பிறகு அரசியல் வாதிகள் தங்கள் கைவரிசைய காட்டி
கோட்டைகளையும், கோயில்களையும் இடித்துவிட்டு தற்சமயம்
பள்ளியாக்கிவி்ட்டனர் :)
நிச்சயம் உங்கள் உதவி தேவைப்படும்.
நன்றி!
அன்பு செல்வமுரளி
உங்கள் ஊர் மத்தூரில் மத்தூர் வடை என்று ஒரு சாப்பிடும் பதார்த்தம் மிகவும் பிரசித்தம். இது திப்புசுல்தான் காலத்தில் படை வீரர்களுக்கு விருந்தில் பரிமாறப்பட்ட பதார்த்தம். ஒவ்வொரு போரின் போதும் திப்புசுல்தான் போருக்கு ஒரு நாள் முன்னர் மிகவும் பிரம்மாண்டமான விருந்துக்கு ஏற்பாடு செய்வார். அந்த விருந்தில் இந்த மத்தூர் வடையும் குஷ்கா பிரியாணியும் பரிமாறப்பட்டதாம்.
பிரியாணியை கிருஷ்ணகிரி வட்டாரத்தில் மட்டும் குஸ்கா என்று சொல்வார்கள். திப்புசுல்தான் விருந்தில் பரிமாறப்பட்ட பதார்த்தங்கள் பற்றி என்னுடைய நண்பர் சுல்தான் ஆய்வு செய்திருக்கிறார். அவர் பல ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் உலகெங்கம் பணியாற்றியவர். ஒருமுறை டெல்லி ஓபராய் ஓட்டலில் திப்பு கா தாவத் (திப்புவின் விருந்து) என்று ஒரு உணவு விழா ஏற்பாடு செய்தார்.
உங்கள் மத்தூரில் சந்தூரா என்னும் மாம்பழ வகை மிகவும் பிரசித்தம். அதுதான் சேலத்து மாம்பழம் என்று நம் ஊரில் விளைந்து சேலத்துக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்த மாம்பழம் குலாம் அலி என்பவரால் திப்புவுக்கு கான்ஸ்டான்டிநோப்பிள் நகரத்தில் இருந்து வாங்கி வரப்பட்டது. தன்னுடைய காதலிக்காக சந்தூர் என்னும் ஊரில் இந்தப் பழத்தின் முதல் கொட்டையை திப்பு நட்டான். அதுவே கிருஷ்ணகிரி மாவட்டம் அனைத்தும் மாமரங்களாகப் பல்கிப் பெருக உதவிய முதல் மாங்கனி மரம். இது குறித்தும் உங்கள் ஆய்வினை விரிவு படுத்துங்கள்.
கிருஷ்ணகிரி மத்தூர் போன்ற ஊர்களில் திப்புசுல்தான் Watch Tower என்று சொல்லக்கூடிய கண்காணிப்பு மதில்களை குன்றுகளின் மீது கட்டினார். அந்த மதில்கள் மீதிருந்து வீரர்கள் சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூர் போன்ற பல்வேறு திசைகளில் இருந்து வரும் படைகளைக் கண்காணிக்க உதவியது. அந்த மதில்களின் மீது பீரங்கிள் இருந்தன. நான் சிறுவனாக அந்தக் குன்றுகளின் மீது விளையாடிய போது இந்தத் துருப்பிடித்த சில பீரங்கிகளை பார்த்து இருக்கிறேன்.
(நான் சிறு வயதில் திருட்டுத்தனமாக சிகரெட் பிடிக்கக் கற்றுக் கொண்டது அந்த சையத் பாட்சா குன்றின் உச்சியில்தான். ஊரில் யாரும் பார்க்கக் கூடாது என்று குன்றின் உச்சியில் ஏறி ஒரு குகையில் ஒளிந்து சிகரெட் பிடிக்கக் கற்றுக்கொண்டேன். அப்போது எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்)
அந்தக் குன்றின் அடிவாரத்தில் டச்சு வியாபாரிகள் கழுதைகள் மீது உப்பு ஏற்றி வந்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். அது குறித்த ஓவியம் ஒன்று லண்டன் அரும்பொருட்காட்சியகம் ஒன்றில் கிடைக்கிறது. அந்த ஓவியத்தின் புகைப்படத்தை நான் இணையத்தில் பார்த்தேன். உங்களுக்குப் பிறகு இணைப்பை அனுப்பி வைக்கிறேன். அந்த ஓவியம் இன்றும் அங்கே விற்பனைக்கு உள்ளது. மொத்தம் மூன்று ஓவியங்கள். பல்வேறு குறுக்குவெட்டு்த் தோற்றங்களில்.
இணையத்தில் திப்பு காலத்தில் மைசூருக்கு அனுப்ப்பட்டு திப்புவால் சிறை பிடிக்கப்பட்டு கிருஷ்ணகிரியில் வைக்கப்பட்டு இருந்த ஆங்கிலேயப் படைத்தலைவன் ஒருவனுடைய நாட்குறிப்பை இணையத்தில் கண்டுபிடித்தேன். அந்த இணைப்பை சேமிக்க மறந்து விட்டேன். மீண்டும் நோண்டித் தேடிக் கண்டு பிடித்து உங்களுக்கு அனுப்புகிறேன்.
நுளம்பர்கள் மத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் படையெடுத்து இருக்கிறார்கள். அது ராமகிருஷ்ணன் நூலில் உங்களுக்குக் கிடைக்கும். கிருஷ்ணதேவராயர் கி்ருஷ்ணகிரி ராஜூ வீதி அருகே (இப்போது அது பாரதி தெரு) ராயர் குளம் என்று வெட்டிக் கொடுத்து இருக்கிறார்.
ஹைதர் தாயாரின் சமாதி கிருஷ்ணகிரி பழையபேட்டை மசூதியில் உள்ளது என்று ஒரு நண்பர் சொன்னார். அது எத்தனை தூரம் உண்மை என்று தெரியாது. அதையும் உங்கள் ஆய்வின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
கிருஷ்ணகிரியில் வீர சைவர்கள் இருக்கிறார்கள். பசவராஜ் என்ற வீர சைவர் தான் திப்புவின் நம்பிக்கைக்கு உரிய படைத்தலைவராக இருந்திருக்கிறார். அவர் திப்புவின் சார்பாக பாண்டிச்சேரிக்கு ஒரு சேதியை எடுத்துச்செல்லும்போது கிருஷ்ணகிரி அருகே தான் வஞ்சகமாகக் கொல்லப்பட்டார். இது Sword of Thipu Sultan என்கிற சரித்திர ஆதாரங்களுடன் எழுதப்பட்ட புதினத்தில் உள்ளது. சில வீர சைவர்களிடம் அந்த பசவராஜ் குடும்பத்தின் வாள், கேடயம் போன்ற பொருட்கள் உள்ளன என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
ஜெயச்சந்திரனை தொடர்பு கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்.
டெல்லியில் இருந்து ஏதாவது உதவி என்றால் எழுதுங்கள். தயாராக இருக்கிறேன்.
அன்புடன்
பென்னேஸ்வரன்
இறந்த பின்பு என்று எழுத வேண்டியது. இறந்தாலும் என்று எழுதிவிட்டேன்.
சந்தேகம் எல்லாம் எனக்குக் கிடையாது விஜயராகவன். சொதப்பல் உண்டு.
பென்னேஸ்வரன்
On 28 Nov, 16:22, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
தேவ்
On Nov 29, 10:02 pm, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:
> ...
>
> read more »
விஜயராகவன்
On 29 Nov, 17:05, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:
> இறந்த பின்பு என்று எழுத வேண்டியது. இறந்தாலும் என்று எழுதிவிட்டேன்.
>
> சந்தேகம் எல்லாம் எனக்குக் கிடையாது விஜயராகவன். சொதப்பல் உண்டு.
>
> பென்னேஸ்வரன்
>
> 2009/11/29 விஜயராகவன் <viji...@gmail.com>
>
> > On 28 Nov, 16:22, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
> > wrote:
>
> > > இறந்தாலும் நான் ஆவியாக எங்கள் கிருஷ்ணகிரியின்
>
> > சந்தேகமாக இருக்கா??
>
> > விஜயராகவன்
>
On Nov 27, 9:46 pm, Selva Murali <murali1...@gmail.com> wrote:
> வணக்கம்,
> விரைவில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்க்கான ப்ரத்யோக இணைய தளம் வெளியிட ஏற்பாடு
> செய்து வருகிறேன்...
> எனக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வரலாறு மற்றும் சங்ககாலங்களில் கிருஷ்ணகிரி
> சம்பந்தப்பட்டிருக்கிறதா போன்ற தகவல்கள் தேவை.
>
செல்வமுரளி,
இந்த வாரம் சில ஆராய்ச்சி நூல்கள் பற்றிய தகவல்கள் அளிக்கிறேன்.
பிறகு நீங்களோ உங்கள் நண்பர்களோ நூல் நிலையங்களை நாட வேண்டியிருக்கும்.
நா. கணேசன்
'திருட்டு மாங்காய் தான் தித்திக்கும்.'
எதற்கும், உப்புக்கல் இரண்டு, அரைட்ராயர் பாஒக்கெட்டில்.இ
//தேவ்வுக்கு ஹிந்திப்பாடமும், ரங்கனாருக்கு,தோளுக்கினியானாக இருந்ததும்,
ஜாஸ்தியாப்போனா ஹரிகிக்கு,கோணங்கியாட்டம், இதெல்லாம் தான் ஞ்யாபகம்
வரும்//
ஆம்,இன்னம்பூரான் சார், மற்றவர் விஷயம் எப்படியோ,
என் விஷயத்தில் நீங்கள் கூறுவது முற்றிலும் சரி;
ஆலய வழிபாடு,வடமொழி/ஹிந்தி வகுப்புகள்,பள்ளிப்பாடம் என்று கழிந்த
நாள்கள்தான் நினைவுக்கு வருகின்றன.அதுதான் இந்த அனுபவங்களைப்
படிக்கும் ஆர்வத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும்.
தேவ்
ஆகா! எங்க தாத்தாகிட்டேயும் இப்படியொரு வாக்கிங் ஸ்டிக் கத்தியுண்டு.
குடைக்குள் இருக்கும் கத்தியுமுண்டு.
ஆனா அதற்கு இப்படியொரு உபயோகமுண்டு என்று இது நாள் வரை தெரியாதே!
ஆத்தங்கரைக்கு அப்பால, மடப்புரம் காளியம்மன் கோயிலுக்கருகில்தான் மாங்காத்தோப்பு.
போய் களவாடுவதுண்டு. அது ஒட்டுமாங்கனி. மிகத்தாழ்வாக இருக்கும். எனவே
பிரச்சனை இருக்காது.
ஆனால் பெரும்பாலும் தொரட்டி கட்டி கொடுக்காப்புளிதான் பறிப்போம். அதற்கு
அவ்வளவு எதிர்ப்பு இருக்காது, மனிதர்களிடமிருந்து. ஆனால் முள் வைத்து
மரம் எதிர்க்கும்!
எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு பாங்காக் (தாய்லாந்து) மார்க்கெட்டில்
கொடுக்காபுளி பார்த்தவுடன் ஒரு நொடி, ஒரு துள்ளல்.
க.>
> பாடம் 2:
> கேட்டா சொல்லபடும்.
சொல்லுங்க, சொல்லுங்க!
க.>
சொல்லுங்க, சொல்லுங்க!//
இப்படிக் கேட்டால் உடனே சொல்லமாட்டார்;
“ஜடிதி ! சொல்லுங்கள் , தத்க்ஷணம்,”
என்று கேட்க வேண்டும்.
தேவ்
> அதனால் நிறைய விஷயங்கள் நேர்ப்பேச்சில் மட்டும.
>
ஆக அடுத்தமுறை டெல்லி வந்தா பாணிபூரி, சமோசா, சாய் இவைகளோட கதை கேட்கலாம்
என்கிறீர்கள். அதுவும் சரிதான் ;-)
க>
கண்டிப்பாக.
நான் டெல்லியில் பிரம்மச்சாரியாக தனியாக வாசம் செய்து கொண்டிருந்தபோது என்னுடைய கதை சொல்லும் ஆற்றலைத் தாங்க முடியாமல் பல நண்பர்கள் ஓரிரு மாதங்கள் என்னுடன் அறையைப் பகிர்ந்து விட்டு தலைதெறிக்க ஓடி இருக்கிறார்கள்.
அந்த அனுபவம் உங்களுக்கும் வேண்டும் என்கிறீர்கள்.
பெருமாள் சித்தம் அப்படி இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?
அன்புடன்
பென்னேஸ்வரன்
நன்கு பழுத்திருந்தால் இனிப்பாக இருக்கும்;அதன் வாசனை அலாதியானது.
காய்வெட்டாக இருந்தால் சற்றுத் துவர்ப்பாக இருக்கும்.
நீண்ட விடுமுறையின்போது நடக்கும் பம்பர விளையாட்டின்போது மகாதேவன்
என்ற மாது பறித்துத் தருவான். திருட்டெல்லாம் கிடையாது, தெரிந்தே
செய்வோம்; மாங்காய் என்றால் ஒருவேளை அனுமதிக்க மாட்டார்கள் போல.
முள்மரம் என்பதால் வேலிக்காக வளர்ப்பார்கள்.
இன்னம்பூரார் செருகு கத்தியைக் கூர் தீட்டியதுபோல் பம்பர ஆணியைக் கூர்
தீட்டுவோம்,
ஆக்கர் வைப்பதற்காக.
தேவ்
தேவ் நம்பள்கி மாட்றாரு. நான் குறி வைத்த பென்/செல்வம்/தேனி 'கம்'னு இருக்காஹகளே என்று சோகத்தில் ஆழ்ந்திருக்கிறேன், தேவ் பாயி.
தத்க்ஷணம் வந்துடுத்து.
2009/12/1 Innamburan Innamburan <innam...@googlemail.com>
அன்புள்ள
தமிழ்த்தேனீ
2009/12/1 Innamburan Innamburan <innam...@googlemail.com>
தத்க்ஷணம் வந்துடுத்து.
சூப்பர் தலைவா!
இந்தக் கழுகளும் இப்படித்தான் பண்ணும். அடித்த இரையை சிறுத்தை தின்னும்
முன் இவை பரக்க, பரக்க வந்து நின்று போடும் கூச்சலில், சிறுத்தை பயந்து
ஓடிவிடும். அது போல்தான் இதுவும் ;-)
இவர்கள் முட்டுகிற முட்டலைப் பார்த்து தேங்காய் உடைக்க வந்தவன், எங்கே
இவர்கள் தலையை உடைத்துவிடுவோமோவென்று பயந்து மெல்லப் போட அரைத்தேங்காய்
கிடைக்க வாய்ப்புண்டு.
பொண்டுகள் இருப்பதன் சௌகர்யம் புரிகிறது.
ஆனால் கிராமத்தில் சில அசுர வீரர்கள் உடைக்கும் போது தேங்காய் முந்நூறு
சிதறலாகி தெருமூலையில் கிடக்கும் நாய் முன்னால் போய் விழ அது தூக்கி
கொண்டு ஓடிவிடும். அதைத் துரத்திப்பிடித்து பிடுங்கித்தின்னும் கூட்டமும்
உண்டு.
சதிர் தேங்காய் தின்றே நெத்திப்பல்லான பேர்களைச் சொல்ல விட்டுப்போச்சே ;-)
நல்ல தொடர் இது.
Swami and Friends போல.
க.>
சூப்பர் தலைவா!
இப்போ தேவ் சாரும் ஆட்டத்திலே!
பம்பரத்தில் 'ஆக்கர்' வைப்பது எப்படி என்று அவர் சமிஸ்கிருதத்தில்
விளக்குவார் :-)))
ஆமாம், இந்த 'ஆக்கர்' என்ற சொல்? தமிழா? ஆங்கிலமா? பிராகிருதமா?
(அப்பதான் வினோத் உள்ளே வருவாரு ;-)
க.>
பம்பரத்தில் ஆக்கர் - எதிராளியின் பம்பரத்தின் மீது சரியாக குறி பார்த்து குத்தவேண்டும் -நமது பம்பரத்தின் ஆணி அவனது பம்பரத்தின் மேல் பாயவேண்டும். குத்திய மார்க் தெரிய வேண்டும். அது தான் ஆக்கர்.
நாங்களெல்லாம் கடையில் வாங்கும் பம்பரம் கொண்டு விளையாடும் போது, கருவேலி
மரத்தில் செய்த பம்பரங்களுடன் வருவர் பழையூர், புதூர் பசங்கள். ஆக்கர்
வைக்கவே வேண்டாம். வட்டத்துள் இருக்கும் பம்பரத்தைக் கிளப்பும் போதே பாதி
உடைந்துவிடும். நமக்கு சான்சு வந்து அவன் பம்ப்ரத்தில் ஆக்கர் வைத்தால்
ஆணி இறங்கவே இறங்காது. அது வஜ்ரம் பாய்ந்த கட்டை! அவன் திரும்பி நமக்கு
ஆக்கர் வைக்கும் போது நம் கடைப் பம்பரம் உடைந்துவிடும்! ஓ! என்று அழுது
கொண்டு ஓடும் சிறுவர்களைக் கண்டால் பாவமாக இருக்கும்!
அது சரி, ஆக்கர் தமிழ்ச் சொல்லா? வேர் மூலமென்ன? ;-)
க.>
சில நேரங்களில் இந்த ஆக்கர் ஆப்பாகக் கூட மாறிவிடும், ஆம் எதிராளியின் பம்பரத்தை இரண்டாக பிளந்து விடும். ஆக்கருக்காக பம்பரத்தின் ஆணியை விதவிதமாக கூர்தீட்டுவர், சிலரது ஆக்கர் பம்பரங்கள் சுழலும் போது அருமையாக விசிலடிக்கும்.
ஆம், அதுபோல் அரைவேக்காட்டில் எடுத்த முறுக்கும்
சுடச்சுடச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்;
தேவ்
ஆம்! அதற்கு பெயர் `கிழவி முருக்கு` ;-)
(கிழவிகள் கோபித்துக் கொள்ள வேண்டாம்!)
க.>
pile-க்கு தமிழ் வார்த்தை - ஆப்பு
தேவ்
ஆக்கர் என்பது பசும்பச்சை தமிழ்ச்சொல்ல்லாக்கும். பார்த்தீர்களா..
இங்கேயே ஆக்கும் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளேன்.. ஆக்கும் ஆக்கர்
இவ்விரண்டுக்கும் திராவிட வேர்ச்சொல் பொதுவாக உள்ளது என்பதை
கண்டுகொள்ளலாம்.
சரி.. நம் ஆக்கருக்கே வருவோம்.
ஆக்கர் என்பது..
(சின்ன பசங்க சொல்ற மாதிரி சொல்லி சொல்லி பார்க்கனும்.. )
அக்கு >> அக்கர் >> ஆக்கர் என்று வைத்துக்கொள்வோம் (கொஞ்சம் நம்புற
மாதிரி இருக்கு)
இது மாதிரி அடி, முடி, வேர் எல்லாம் கண்டு பிடிக்க இருக்கவே இருக்கிறது
தமிழ் லெக்ஸிகான்.. அதை கொஞ்சம் புரட்டுவோம்..
அக்கு என்று தேடினால் 9 முடிவுகள் வருகிறது. நமது ரொம்ப வசதியாக
போயிற்று.. அந்த ஒன்பதில் ஒன்று துளுமொழியில் இருந்து வந்ததாக வேறு
காட்டித்தொலைத்துவிட்டனர்.
இது துளு மொழி ஆதிக்க மன்பான்னையும் துளு மொழி சார்புடையவர்கள் இந்த
லெக்ஸிகனை தொகுத்தால் நேர்ந்தது என்பது தெள்ளத்தெளிவு ( இருந்தாலும்
நமக்கு எதெல்லாம் ஒத்து வருகிறதோ அதுக்கு எல்லாத்துக்கும் இதுல இருந்தது
தான் மேற்கோள் காட்டுவோம் என்பது வேறு விஷயம்.. நமக்கு ஒத்து வராதது
எல்லாம் கூட்டுச்சதி செய்து மாற்றியதாக இருக்கும். )
சரி.. நம்ம வேர்ச்சொல் ஆராய்ச்சிக்கு திரும்புவோம்..
துளு மொழி சார்புடையவர்கள் தொகுத்த ஒன்றையும், வடமொழி சார்புடையவர்கள்,
உருது மொழிச்சார்புடையவர்கள் தொகுத்ததை எல்லாம் விட்டு விட்டால்.. இரண்டு
மூணு தேறுகிறது..
இவற்றில், எந்தச்சொல் நம் இஷ்டத்துக்கு இழுத்த இழுப்பு வரும் என்று ஆராய
வேண்டும்.. (இது வேர்ச்சொல் ஆராய்ச்சிக்கு ரொம்ப முக்கியம்). நம்
இஷ்டத்துக்கு இழுக்கக்கூடிய ஒரு சொல்லை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது,
அதில் இருந்து சுற்றி வளைத்து எப்படியாவது நாம சொல்ல வருவதை அது
குறிக்கிறது என்ற ரீதியில் சொல்லக்கூடிய ஒரு சொல்லை தேட வேண்டும்..
3. அக்கு akku : (page 7)
(திவ். பெரியதி. 9, 6, 1). 3. Strychnine tree. See எட்டி. (மலை.) 4.
Eagle-wood. See அகில். (மலை.) 5. Sand-paper tree. See உகா. (L.
இது நல்லா இருக்குற மாதிரி இருக்கு.. சரி இதையே வச்சிப்போம்..
சங்க காலத்தில்..ச ச ..வேணாம் வேணாம்.. சிந்து சமவெளி காலத்தில் இந்த
மரத்தை வைத்தே பம்பரங்களை செய்துள்ளனர். (சிந்து சமவெளிச்சின்னமான
"பம்பரத்துடன் சிறுவன்" என்பது "அக்கு" என்று ஒலிக்குறிப்பையே
குறிக்கிறது என்பதை சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.. )
அக்கு என்ற மரத்தால் செய்த பம்பரத்துக்கு ஆகுபெயராக அந்த மரத்தின் பெயரே
அமைந்தது.
அக்கின் கீழ் இருப்பது அக்கர் என்று ஆனது. (குக் செய்வது குக்கர், பிக்
அப் செய்வது பிகர் என்ற ரீதியில்"அர்" சேர்ப்பது தொல் தமிழ் பழக்கம்
என்பதை ஈண்டு நாம் நினைவு கூறுதல் வேண்டும்)
அக்கர் என்பதில் இருந்து "அடி அகரம் ஆகாரம் ஆதல்" என்று அகத்திய சூத்திர
விதிப்படி அது ஆக்கர் என்று ஆனது.
இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால்.. ஆக்கர் என்பது
தொல்தமிழ்ச்சொல்லே.. சிந்து சமவெளி காலத்தில் இருந்து தொல்தமிழன இதை
பயன்படுத்தி வருகிறான்..
இதற்கு மாற்றுக்கருத்துடையவ்ர்கள்... எல்லாம்... தமிழை .... ... ...
வேண்டாம்.. உங்களுக்கே புரிந்திருக்கும். (வீர வசனமாக உணர்ச்சி
கொந்தளிக்க நாலு வரியை அங்கு நிரப்பி விடவும்.. )
ட்(நானும் வேர்ச்சொல் ஆராய்ச்சி பன்றன்.. நானும் வேர்ச்சொல் ஆராய்ச்சி
பன்றேன்.......
http://www.youtube.com/watch?v=i9R10RXCvc0 )
V
வினோத் ஆஜர் ஆயாச்சு..
வினோத்துக்கு அப்பிடி இப்ப்டி ஏதேச்சும் தெரிஞ்ச எந்த விஷயம் பேசினாலும்
வினோத் வருவார். வினோத்துக்கு தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது
கிடையாது :-)
தெரிஞ்ச அப்புறம் வேணா கண்ணு காது மூக்கு இப்படி எல்லாத்தையும்
நுழைக்கலாம்.. :D
V
On Dec 2, 1:34 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/12/2 PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>:
பாருங்கள் வேடிக்கையை!
Auger என்பதை 'ஆகர்' என்றுதான் பலுக்க வேண்டும். ஆனால், ஒற்று மிகுதியாகி
தமிழர்கள் அதை 'ஆக்கர்' ஆக்கிவிட்டனர்.
மீண்டும் திசைச் சொல் எனில் அதைத் திரிப்பது தமிழர் வழக்கம் என்று காண்கிறோம்.
ஆச்சர்யம் என்னவெனில் இச்சொல் எப்படி சிறுவர்கள் vocabulary க்குள்
புகுந்தது? எக்காலத்தில் புகுந்தது?
தமிழகமெங்கும் பரவ ஒரு சொல்லுக்கு எவ்வளவு நாள் பிடிக்கும்?
அன்றொரு நேஷனல் ஜியோகிரபிக் ஆவணப்படத்தில் இரண்டு நாகர்கள் பாம்பு
பற்றிப் பேசிக்கொண்டு போகிறார்கள். மலைவாழ் மக்கள். ஆனால்
பேச்சுத்தமிழில் ஆங்கிலச் சொற்கள் பரவலாக உள்ளன.
நாம் எழுத்துத்தமிழை மட்டும் கொம்பு சீவி விட்டுத் திருத்துகிறோமே?
பரிணாமமுறும் பேச்சுத்தமிழுக்கு அணை கட்டப்போகின்றவர் யார்?
க>
முதலில் ஆங்கிலேயரிடம் தச்சு வேலை செய்தவரிடம் இச்சொல் புழக்கத்தில்
வந்திருக்க வேண்டும்;
பின்னர் அவர்கள் மூலம் பரவியிருக்கும்.
தேவ்
பம்பர விளையாட்டில் அபீட் என்ற ஒரு வார்த்தை அடிபடுமே ! இது எந்த மொழி சொல்அதுவும் வட்டார வழக்கா அல்லது எங்கும் விளையாட்டில் உண்டாபெரியவர் தான் விளக்கவேண்டும் .
எங்க ஊரில் அபேஸ் பண்ணிட்டியா என்றால் திருடிவிட்டாயா என்ற பொருளில்
வரும்
சென்னை செந்தமிழ் :-))
V
On Dec 3, 5:43 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> விஜய்,
>
> மலாய் மொழியில் habes என்ற ஒரு வார்த்தை உண்டே. கேட்டிருக்கின்றீர்களா.
> முடித்தல் என்பதன் பொருளில் வரும் சாதாரனமாக ம
>
> அன்புடன்
> சுபா
>
> 2009/12/3 vj kumar <vj.epist...@gmail.com>
>
>
>
> > சென்னை துறைமுகத்தில் சரக்கு கப்பல் வேலை நடக்கும் பொது இந்த இரு
> > வார்த்தைகள் கேட்கலாம். அறியஉடு ( while lifting cargo with manual crane -
> > to leave slack in the rope) , அபேஸ் ( to tighten and pull up)
>
> >http://www.poetryinstone.in
> > Here the language of stone surpasses the language of man
>
> > 2009/12/3 annamalai sugumaran <amirthami...@gmail.com>
>
> > பம்பர விளையாட்டில் அபீட் என்ற ஒரு வார்த்தை அடிபடுமே ! இது எந்த மொழி சொல்
> >> அதுவும் வட்டார வழக்கா அல்லது எங்கும் விளையாட்டில் உண்டா
> >> பெரியவர் தான் விளக்கவேண்டும் .
>
> >> இப்போதெல்லாம் பம்பரக்கண்ணாலே என்ற சந்திரபாபு பாடல் பாடினால் பெண்களுக்கு
> >> புரியுமா இப்போ பசங்க அஜண்டாவில் பம்பரம் உண்டா
>
> >> அன்புடன்
> >> சுகுமாரன்
>
> >> 2009/12/3 N. Kannan <navannak...@gmail.com>
கிருஷ்ணகிரி பற்றி இழையில் இது எப்படி அடிபடாமல் போனது.
"கிழிஞ்சது கிருஷ்ணகிரி" என்ற வழக்கு எப்படி தோன்றியது ?
V
On Dec 3, 8:24 pm, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> கிழிஞ்சுது கிருஷ்ணகிரி
>
> அன்புடன்'
> தமிழ்த்தேனீ
>
> 3-12-09 அன்று, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> எழுதினார்:
> --
> மனிதமும்,உலகமும் காப்போம்,
>
> மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> அன்புள்ள
> தமிழ்த்தேனீ
>
> http://www.peopleofindia.net
> rkc1...@gmail.comhttp://thamizthenee.blogspot.com
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவார். வசனம் எழுதியது கோபு என்று நினைக்கிறேன். அவர் கி யன்னாவுக்கு கி யன்னா வேண்டும் என்று எழுதியிருக்கலாம்.
அந்த உரிமையில் கோபு அப்படி எழுதியிருக்கலாம். அதற்கு முன்பு அப்படி யாரும் சொல்லியிருக்கிறார்களா என்று கொஞ்ச காலம் கிருஷ்ணகிரி பகுதி முழுக்க கேட்டு அலைந்து இருக்கிறேன். அப்படி எல்லாம் யாரும் சொல்லவில்லை. மேலும் எங்கள் ஊர் தெருக்கூத்து பாடல்களிலும் எங்கும் இந்த கிழிஞ்சது கிருஷ்ணகிரி இல்லை.
எது எப்படியோ அந்தக் காலத்திலேயே டைப்பிஸ்டு கோபு எங்கள் ஊரைப் பிரபலப்படுத்தினார்.
அன்புடன்
பென்னேஸ்வரன்
ஒரு வேளை கிருஷ்ணன் மலையை அதாவது கிரியை தூக்கியபோது உடைந்து விட்டதோ, அதைத்தான் கிழிந்தது என்று கூறுகின்றனரோ...?