எங்கள் பயணத்தில் பல கோயில்களைச் சென்று பார்த்தோம். இறைவனின்
அருளாட்சியைப் பற்றி எழுதுவது சிரமம் என்று முன்பே சொல்லிவிட்டேன். எனவெ
அது தவிரப் பிற விஷயங்கள் பேசுவோம்.
முற்றும் வழிபாடற்ற சமண/இந்துக் கோயில்களைக் கண்ணுற்றோம். மிகவும்
வழிபாடுள்ள ஆலயங்களையும் தரிசித்தோம். முன்னதன் பிரச்சனை வேறு, பின்னதன்
பிரச்சனை வேறு. வேலியற்ற நிலத்தில் எதுவும் விளையும், யாரும் வருவர்,
போவர். பெரும்பாலான சமணக்கோயில்களில் வழிபாடு இல்லை. இருக்கின்ற
தீர்த்தங்கரருக்கும் பட்டை அடித்து விபூதி பூசிவிட்டனர். சமணப்படுக்கைகள்
கள்ளக் காதலர்கள் படுக்கையாகி புனிதம் கெட்டு, கற்கால பாறை ஓவியங்களின்
மேல் காதலர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன!
புனிதமான இடமென்றாலும் தமிழன் மரபு காக்கிறான் என்று பொருள் இல்லை.
தர்மபுரி மல்லிகார்ஜுனா கோயில் அழகான கோயில். அங்குதான் நான் முதன்
முறையாக மண்ணில் கால் பாவாத தூண்களைக் கண்டேன். இது என்னவகையான பொறியியல்
என்று ஈரோடு பேச்சிமுத்து-ஜெகந்நாதன் பொறியிய் கல்லூரியில் விவாதித்தோம்.
அம்பாள் சந்நிதி அமையும் கோயில் அடிச்சுற்றில் நிறைய இராமாயணச்
சிற்பங்கள் உள்ளன. அவை முழுவதுமாக ஆவணமாக வேண்டும். இராமாயணப்படி என்பது
பல்வேறு வகையானது. இது கம்போடிய இராமாயணம் என்கிறார் பூசாரி.
ஆவணப்படுத்து முன் அருகிலுள்ள சந்நிதியின் அபிஷேகப்பாலும், நீரும் சேறாக
அம்பாள் கோயிலைச் சுற்றி ஒடுவதை முறைப்படுத்த வேண்டும். ஒரு கோயிலைப்
பற்றிய தெளிவான சரித்திர, கலை, ஆகம விவரங்கள் தெரிந்த ஒருவர்
வழிகாட்டியாக அமர்த்தப்பட வேண்டும். நம் கோயில் என்பது வெறும்
வழிபாட்டுத்தலம் என்று அடாவடித்தனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை.
கோயில் நம் முதுசொம். அதன் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்து கொண்டு
பாராட்ட வழி செய்தல் வேண்டும்.
கோயில் சிற்பங்களை நாயைக் கூண்டுக்குள் அடைப்பது போல் அடைத்து
வைத்திருக்கிறார்கள். இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் வர வழியில்லை.
எனவே உள்ளே இருக்கும் சிற்பத்தை ஒரு இந்து உடைப்பான் என்ற பயத்தில் சிறை
வைத்திருப்பது நம்மை நாமே சிறுமைப் படுத்துவது ஆகும். ஒரு சிலையை
கையாளும் மன முதிர்ச்சி கூட இல்லாதவன் கோயிலுக்குள் ஏன் நுழைய வேண்டும்?
இது சிக்கலான கேள்விதான். மெய்நிகர் குழுமத்திலும் இது போன்ற கேள்விகள்
கேட்கப்படுகின்றன. ஒரு கோயிலை பவித்திரமாகக் காணும் பயிற்சி நமக்கு
வேண்டுமென்று தோன்றுகிறது. பூசாரிக்குப் பயிற்சி கொடுப்பது போல்
கோயிலுக்குள் போவோருக்கும் பயிற்சி தர வேண்டும். தற்போது அணுமின் நிலையம்
பற்றி ’உண்மை பரப்பும் ஆவணங்கள்’ வருகின்றன. அது போல் கோயிலுக்குள்
போனால் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக்கூடாது என்று
சொல்லிக்கொடுக்க வேண்டும்.
கோயிலுக்குள் படமெடுக்கக் கூடாது என்கிறார்கள். ஏன் என்று இதுவரை யாரும்
விளக்கவில்லை. சரி பிளாஷ் போட்டால் தப்பு. அருங்காட்சியக மோடில் எடுக்க
அனுமதிக்க வேண்டும். முதுசொம் என்றால் எல்லோருக்கும் சொந்தமானது என்று
பொருள். ஆள், ஆளுக்குக் கார்வார் பண்ணும் பழக்கம் ஒழிய வேண்டும்.
இன்னும் வரும்...
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
அன்புடன்..........
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajend...@yahoo.co.in / kavi.sen...@gmail.com
வலைப்பூ : http://pumskottukarampatti.blogspot.com.
http://kaviyinkural.blogspot.com
http://mazalaiootru.blogspot.com
http://kaviugi.blogspot.com/
http://crcmittapalli.blogspot.com/
கோயில் சிற்பங்களை நாயைக் கூண்டுக்குள் அடைப்பது போல் அடைத்து
வைத்திருக்கிறார்கள்.
எனவே உள்ளே இருக்கும் சிற்பத்தை ஒரு இந்து உடைப்பான் என்ற பயத்தில் சிறை
வைத்திருப்பது நம்மை நாமே சிறுமைப் படுத்துவது ஆகும்.
> எது எப்படியோ, கண்ணனின் உவமையை நான் ரசிக்கவில்ல்லை.
> இன்னம்பூரான்
>
அது தமிழனுக்கு உறைக்க வேண்டுமென்று சொன்னது ஐயா!
3000 வருடங்கள் தாக்குபிடித்த பெருங்கற்கால கல்லறைகளும், ஓவியங்களும்
21ம் நூற்றாண்டுத் தமிழனால் சூறையாடப்படுகின்றன. நமது கோயில்களிலேயே நம்
சிலைகளுக்கு விலங்கு பூட்ட வேண்டியுள்ளது. மதுரை மீனாட்சி கோயிலில்
வெண்ணெய் சாத்தி காளியை அசிங்கப்படுத்துகின்றனர். கோயிலைச் சுற்றி மனிதக்
கழிவு. இவனெல்லாம் ஆத்திகன் என்று சொல்லுவான். இந்து மதம் பற்றி வாய்
கிழியப்பேசுவான். நாம் அந்த பக்தியை நம்ப வேண்டும்? கடவுள்கள் விலை
பேசப்படும் ஒரு அநாகரீகமான மண்ணில் இருக்கிறோம் ஐயா! ‘தண்ணீர் விட்டா
வளர்த்தோம்! சர்வேசா! இப்பண்பாட்டை! அழியத்திருவுளமோ?
நா.கண்ணன்
--
சரிதான்! அவ, உங்களையும் கைவிட்டாளா? என்னை மட்டும்தான் என்று எண்ணியிருந்தேன்.
நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் நல்ல தரிசனம் தந்தாள். என் தந்தைக்கு
அருள்தந்த அன்னை (படங்கள் சுபாவுடன் போய்விட்டன. அங்கு சந்நிதிக்கு
அருகில் பொதுமக்கள் கொட்டும் விபூதி, குங்குமத்தைச் சுத்தம் செய்யும்
‘உழவாரப்பணியாளர்களைப் படமெடுத்தேன். அவர்கள் தூண், தூணாகச் சுத்தம்
செய்யும் அழகே அழகு! அது சரி நம்ம மதுரை ஜனங்களுக்கு என்ன ஆகிவிட்டது?)
பரசாரபட்டர் எனும் பெரியவர் ரங்கநாயகி-திருவரங்கனை அம்மா, அப்பாவைப் போல்
பார்த்துக் கொள்வாராம். அந்த பாவம் நமக்கு வந்தால் ‘அம்மா முகத்தில்
வெண்ணெயை ஓங்கு, ஓங்கி அடிப்போமா?’ நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது!
நா.கண்ணன்
தேவ்



பெரிய கோவில்களுக்கு செல்வதில்லை என்ற முடிவை எடுத்து ரொம்ப நாளாச்சு.
கீதாம்மா , இப்ப சிதம்பரம் நிலை என்ன ? கண்டிப்பா மாத்தி இருப்பாங்க
--
கோயில்கள் என்றவுடன் எத்தனையோ நினைவுகள்.
அப்படித்தான் முன்னொரு பயணத்தில் திருப்பூவணம் சௌந்தர்யநாயகி காட்டப்பட்டாள். கூட்டம் நெருக்குகிறது என்றால் நாமே நாசுக்காக விலகி, விளக்கு வைக்கக்கூட ஆளில்லாத கோயில்களுக்குப் போய் அவைகளைப் பிரபலப்படுத்த வேண்டும். அப்படி எத்தனை கோயில்கள்!!
விஜயமங்கலம் ஜீந ஆலயம் அப்படியொரு உணர்வை என்னுள் எழுப்பியது.
பிகு: உடன் வந்த பேரா.புலவர் இராசு, “கண்ணன் இங்கு 5 சிலைகள் இருந்தன, காணவில்லை! என்றார். பகீர் என்றது. இறங்கியவுடன் ஒரு பெரிசு எங்கள் கார் அருகில் வந்து, ‘உள்ளே மாடு மேய்க்க வ்டுறானுக’ என்று புகார் செய்தார். ஏன் நம் மரபுப் பேணுதல் என்பது ஒரு அவசர கால நடவடிக்கை போல் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டுமென்பது இப்போது புரிந்திருக்கும்!
--
இதற்கு சமணர்கள்தான் பதில் சொல்ல வேண்டும் :-)
> படமெடுக்கக் கூடாது என்கிறார்கள். ஏன் என்று இதுவரை யாரும்
> விளக்கவில்லை.
> கோவில்கள் அருங்காட்சியகங்கள் இல்லை. சில விஷயங்கள் புரியாமல் இருப்பதே அனைவருக்கும் நல்லது. நாத்திகர்கள் என்பவர்கள் ஆத்திகர்களை விட கடவுள், கோவில், வழிபாடு போன்ற சமாசாரங்களை நன்கு புரிந்தவர்கள்.
> ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள மிகவும் பயன்படுகிறது//
> இதை விட பயனுள்ள, புண்ணியமான ஒரு இடம் வேறு எங்கு உள்ளது ?
>
உற்றுக் கவனித்தால் நீங்களே இங்கு உங்களுடன் முரண்படுவது தெரிகிறது.
ஒரு மடலின் தொணி அதன் முழுமையில் உள்ளது. வெட்டி/ஒட்டிப் போட்டு
மறுக்கும் போது ஜீவன் போய்விடுகிறது :-) (நான் என்ன சொல்ல வருகிறேன்
என்பது உங்களுக்குப் புரியாமல் இல்லை!)
> சராசரி ஹிந்து பக்தன் விக்ரஹ ஆராதனையில் நம்பிக்கை இல்லாதவன். பாவ்லா காட்டுவதுடன் சரி//
> நம்ப முடியாத உண்மையை சாதாரணமாக தெரிவித்து உள்ளீர்கள்.
>
இது நான் சொன்னது அல்ல. வெட்டி/ஒட்டும் வினை இது :-(
நா.கண்ணன்
ஊரார் சிரிக்கச் சொல்வர் உற்றார் உறைக்கச் சொல்வர் என்பது பழமொழி.
I'm talking about general civic responsibilities. அதை வெளிநாடு
போய்விட்டு வந்துதான் சொல்ல வேண்டுமென்றில்லை. பெரியாரும்
சொல்லியிருக்கிறார். நானும் சொன்னேன்.
உங்கள் அரிய பணி வாழ்க!
நா.கண்ணன்
2012/1/30 Chandrasekaran <plastic...@gmail.com>:
*பித்ரார்ஜிதம் - சரியான வடிவம்
முனைவர் கண்ணன் அவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானதுதான்;
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆர்வலர்கள்
முழு மனத்துடன் விளம்பரமில்லாமல் ஆலயத் தொண்டு புரிந்து வருகின்றனர்.
மறைந்த திரை இயக்குநர் கே.பி.நாகராஜன் அவர்களின் புதல்வர்
திரு நல்லசிவம் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து வருகிறார்.
இதுபோல் வேறு சில குழாங்கள் உள்ளன.
ஆலயங்கள் ISO தரச் சான்றிதழ் பெற்று வருகின்றன.
இன்னும் பெரிய அளவில் பரவலாக வேண்டும்.
’குமுதம் ஜோதிடம்’ ஆலயப் பணிகளின் தேவையை
விடாமல் எழுதி வருகிறது. அன்பர் காளைராசன் அவர்கள்
நன்கு அறிவார்.
>>>>> கோயில் சிற்பங்களை நாயைக் கூண்டுக்குள் அடைப்பது போல் அடைத்து
வைத்திருக்கிறார்கள். <<<<
பெரிய கற்சிலைகளையும் கிராதிக்குள் காக்க வேண்டிய
கட்டாயம். கோவைக்கருகில் பேரூர்ச் சிற்பங்கள்
மிக நுணுக்கமானவை. அவை போன்றவற்றை அருமை தெரியாமல்
பாழ் படுத்த நேரலாம்.ஆலயம் சார்ந்த கல்வியையும்
கட்டாயமாக்க வேண்டும்
MADURAI, March 11, 2011
The Meenakshi Sundareswarar Temple here has been accorded ISO
9001:2008 certification
becoming only the fourth temple in the State to gain this
accreditation.
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article1526794.ece
Jul 6, 2010, 03.15am ISTChennai: The Kapaleeswarar temple in Mylapore
was
on Monday awarded ISO 9001:2008 certification.
Chennai, 17 August, (Asiantribune.com):
Three famous temples in Tamil Nadu will soon get the coveted ISO
9001:2008 certification.
"The Tiruchendur Subramanya Swamy temple, Madurai Meenakshi Amman
temple and
Palani Dhandayuthapani temples in Tamil Nadu are next in line to get
the ISO certification.
http://www.asiantribune.com/news/2010/08/17/three-temples-tamil-nadu-gets-iso-certification
தேவ்
ஆலயங்கள் ISO தரச் சான்றிதழ் பெற்று வருகின்றன.
இன்னும் பெரிய அளவில் பரவலாக வேண்டும்.
’குமுதம் ஜோதிடம்’ ஆலயப் பணிகளின் தேவையை
விடாமல் எழுதி வருகிறது. அன்பர் காளைராசன் அவர்கள்
நன்கு அறிவார்.
இடிந்த கோயிலைச் சீர் செய்வது என்பது வேறு. அது பற்றி நான் பேசவில்லை.
நான் பேசுவது ஆலயம் என்பது தொழுதளம் மட்டுமன்று என்பதே. இறைவன் மீது
நம்பிக்கை இல்லாதவன் கூட வந்து ரசிக்கும் பல அம்சங்கள் நம் கோயிலில்
உண்டு. அதன் பன்முகத்தன்மை அப்படியே போற்றி காக்கப்பட வேண்டும்.
கோயில் என்பது பற்றி பள்ளிப்பருவத்திலிருந்து பாடங்கள் எடுக்கப்பட
வேண்டும். ஒரு 500 வருடங்கள் முன் கோயிலுக்குள் போய் கோயில் சிலையைச்
சிதிலப்படுத்தும் அநாகரீகம் இருந்ததில்லை. இன்று ஏன் நாம் பயப்படுகிறோம்
என்று யோசிக்க வேண்டும்.
கோயிலுக்கு சர்டிபிகேட் கொடுப்பது என்பது வேறு. அவனவன் ஊர் கோயில்
அவனவனுக்குப் பெரிசு. அப்படித்தான், ‘கோயில் இல்லா ஊரில் குடிருக்க
வேண்டாம்’ எனும் முதுமொழி வந்திருக்க வேண்டும். கோயில் பற்றிய தெளிந்த
அறிவு சமகாலத்தேவை. அது பற்றியே என் மடல் பேசுகிறது.
நா.கண்ணன்

கோயில் என்பது ஒரு வரலாற்றுக்காப்பகம்.
இவ்வகைக்கல்வெட்டுக்களின் மூலம் ஒரு கோயிலின் தொன்மை, அதற்குண்டான அறக்கட்டளைகள், திருப்பணி செய்யப்பட்ட காலம், செய்தவர்கள் போன்ற பல சேதிகள் கிடைக்கும்.
நம் கோயில்களில் ஐதீகம் சார்ந்த ஓவியங்கள் (புதிதாய் வரையப்பட்டவை) அல்லது நாயன்மார்/ஆழ்வார் பாடிய பாடல்கள் மட்டுமே வைக்கப்படுவதிலிருந்து நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கியுள்ளோம் என்பது தெளிவு. ஒரு காலத்தில் கோயில் சரிதம் என்பது கோயிலின் பன்முகத்தன்மையின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது என்பது கண்கூடு.
2012/2/1 N. Kannan <navan...@gmail.com>கோயில் என்பது ஒரு வரலாற்றுக்காப்பகம்.இவ்வகைக்கல்வெட்டுக்களின் மூலம் ஒரு கோயிலின் தொன்மை, அதற்குண்டான அறக்கட்டளைகள், திருப்பணி செய்யப்பட்ட காலம், செய்தவர்கள் போன்ற பல சேதிகள் கிடைக்கும்.நம் கோயில்களில் ஐதீகம் சார்ந்த ஓவியங்கள் (புதிதாய் வரையப்பட்டவை) அல்லது நாயன்மார்/ஆழ்வார் பாடிய பாடல்கள் மட்டுமே வைக்கப்படுவதிலிருந்து நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கியுள்ளோம் என்பது தெளிவு. ஒரு காலத்தில் கோயில் சரிதம் என்பது கோயிலின் பன்முகத்தன்மையின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது என்பது கண்கூடு.மிகவும் சரியான கருத்து. நாயன்மார்/ஆழ்வார்கள் பாடல்கள் கூட அண்மைக்காலங்களில் கற்பலகைகளில் பதியப்படவில்லை. 1960, 70 களில் வைக்கப்பட்டவை/சுவரில் எழுதப்பபட்டவை. நான் விரும்பிப்படிப்பதுண்டு. எனக்கு முதல் நாயன்மார்/ஆழ்வார் பாடல்கள் அறிமுகம் இவையே.அண்மைக்காலங்களில் குடமுழுக்கு விழாவுக்கு வருகை தந்த ச்ன்னிதானங்கள், அரசு அதிகாரிகள், கோவில் ஆணையர், திருப்பணியாளர் பெயர்கள் தான் கற்பலகைகளில் பதியப்படுகின்றன,
மேலும் எழுதுங்கள் திரு கண்ணன்.அன்புடன்சொ.வினைதீர்த்தான்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Jan 31, 7:52 pm, K R A Narasiah <narasiah...@gmail.com> wrote:
> In Telugu Sommu is wealth and mudhu is old. Therefore Muhusom is old wealth
> Pithurarajitham or heritage treasure.
>
Muthusom is also used in Jaffna, in old colonial documents.
I think Telugu sommu has to do with Sanskrit svaya-
N. Ganesan
> Yesterday I was on NDTV HINDU saying about teh heritage act that has not
> happened in Tamiulnadu whiole many other states have already have acts in
> place.
>
> I highlighted this point plus what Justice Padmnabhan committee has
> identified as heritaf=ge buildings and what action should be taken; in
> addition how senselessly the Banquet hall was demolished to build teh new
> Secretarait. How the heritage buildings must be LIVED IN nad just not
> locked; what is teh strategy for maintenance.
>
> As I didnot kbow the time of telecast I couldnt tell teh members about it.
> Similarly 4 days back I was live broadcast on Radio mirchi on heritage
> points. I dont know if anyone has heard it.
> Narasiah
>
> 2012/2/1 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > 2012/1/31 கி.காளைராசன் <kalairaja...@gmail.com>:
> > > இன்னும் சிலர் இருந்துவிட்டால், இந்தியாவில் இடிந்த ஆலயங்களே இல்லை
> > யென்றாகும்.
>
> > இடிந்த கோயிலைச் சீர் செய்வது என்பது வேறு. அது பற்றி நான் பேசவில்லை.
> > நான் பேசுவது ஆலயம் என்பது தொழுதளம் மட்டுமன்று என்பதே. இறைவன் மீது
> > நம்பிக்கை இல்லாதவன் கூட வந்து ரசிக்கும் பல அம்சங்கள் நம் கோயிலில்
> > உண்டு. அதன் பன்முகத்தன்மை அப்படியே போற்றி காக்கப்பட வேண்டும்.
>
> > கோயில் என்பது பற்றி பள்ளிப்பருவத்திலிருந்து பாடங்கள் எடுக்கப்பட
> > வேண்டும். ஒரு 500 வருடங்கள் முன் கோயிலுக்குள் போய் கோயில் சிலையைச்
> > சிதிலப்படுத்தும் அநாகரீகம் இருந்ததில்லை. இன்று ஏன் நாம் பயப்படுகிறோம்
> > என்று யோசிக்க வேண்டும்.
>
> > கோயிலுக்கு சர்டிபிகேட் கொடுப்பது என்பது வேறு. அவனவன் ஊர் கோயில்
> > அவனவனுக்குப் பெரிசு. அப்படித்தான், ‘கோயில் இல்லா ஊரில் குடிருக்க
> > வேண்டாம்’ எனும் முதுமொழி வந்திருக்க வேண்டும். கோயில் பற்றிய தெளிந்த
> > அறிவு சமகாலத்தேவை. அது பற்றியே என் மடல் பேசுகிறது.
>
> > நா.கண்ணன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
>>மேலும் இதுவரை ஒரு பூசகரும் கோவிலின் சரித்திரச் சான்று பற்றியோ ஆண்ட அரசர், ஆவணங்கள், சிற்பச் சிறப்புக்கள் பற்றியோ எடுத்துச் சொல்லிக் கேட்டதில்லை. பல யுகங்கள் முன்பு நடந்தவை தவிர<<பூசகர்கள் என்றால் அர்ச்சகர்கள், சரிதானா.. ஆனால் இவர்கள் வேலையே பூசை செய்வதும் அந்த ஸ்தலத்தின் மகிமையை புராணகாலத்தில் எப்படிப்பட்டதாக இருந்திருக்கிறது என்பதை அவர்கள் பெரியோர்கள் சொல்லக்கேட்டதை விவரிப்பது மட்டும்தானே.. மேலும் அவர்களிடம் ஏன் கோயில் கல்வெட்டுகள் பற்றி எதிர்பார்க்கவேண்டும்.. அரசாங்கம் எல்லா வருமானம் வரும் கோயில்களையெல்லாம் எடுத்துக்கொண்டு அதன் பலனை மட்டும் அனுபவிக்கும்போது அந்த அரசாங்கத்தார்தான் இப்படிப்பட்ட கல்வெட்டுகள் பற்றிய செய்தியை எடுத்துச் சொல்லவேண்டும். பூசகர்களைக் குறை சொல்வதிலோ, அவர்களிடம் விஷயம் எதிர்ப்பார்ப்பதிலோ என்ன பலன்?
அன்பின் திவாகர்:
இம்முறை எனக்குத்தோன்றியது என்னவெனில் கோயில் பற்றிய நமது மதிப்பீடு
முற்றும் மாற வேண்டும் என்பதே. கோயிலின் முழுமையைப் புரிந்து கொள்ளும்
ஒரு holistic view நமக்குத்தேவை. இதைப் பூசகர் தன் மதிப்பினால் செய்வாரா?
இல்லை நல்லி செட்டி போன்ற நல்லோர் செய்வாரா? இல்லை அரசாங்கம் செய்யுமா?
என்று தெரியாது. இந்த விழிப்புணர்வு காலத்தின் தேவை. இப்போது நாம்
விழித்துக் கொள்ளாவிடில் நம்மாலேயே நம் பழமை அமுங்கிப்போகும். முழுமை
உணரப்படாமல் போகும். ஒரு பெரிய தேசிய எழுச்சி இது. இது வெறும் கனவாய்
போகலாம்! இறைவன் இன்னருள் வேண்டுவோம்.
நா.கண்ணன்
இம்மன்றத்தில் இச்சொல்லை புழக்கத்திற்கு கொண்டு வந்தவர் என் நெடுந்தீவு
நண்பர் சுசீந்திரன். அவர் முதுசெம் என்றார். யாழ் வழ்க்கப்படி. இரா.ம.கி
‘முதுசொம்’ என்று பின்னால் விளக்கினார்.
நா.கண்ணன்

தமிழக முதுசொம் பயணம் என்பது ஸ்ரீரங்கம் மோகன ரங்கனைக் காணாமல் முடிவதில்லை, ஏனெனில் அவரது திருப்பாற்கடல் என்பது பழைய புத்தகங்கள். அதில் அவர் சயனித்து இருப்பவர்.
<Rangan_Sridhar.jpg>அவருடன் இருப்பவர் மின்தமிழ் அன்பர் ஸ்ரீதரன் ராகவன். என்ன? மோகன் எழுதுவதே இல்லை? என்று இவர் கேட்க அவரையும் அழைத்துக்கொண்டு நேரே நங்கநல்லூர் போய் விசாரித்துவிட்டோம். No news is good news! என்பது ஜெர்மன் வழக்கு. இவரது கணினி படுத்துவிட்டது. சரிதான்! நல்லதாய் போய்விட்டது என்று கிருஷ்ணசைதன்யரில் இறங்கிவிட்டார் மனிதர். விடுவோமா? அவருக்கு ஒரு மடிக்கணினி கொடுத்து உள்ளே இழுக்க ஆயத்தமாகி வருகிறோம்!இன்னும் வரும்..
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இப்போது அடுத்த நிலைக்கு நகர்வு. புத்தகங்களையெல்லாம் கழித்துக் கட்டப்
போகிறாராம். இன்னம்பூரானோ இங்கிலாந்தில்!!
‘வந்ததடி! காளைக்கு ஆபத்து! எனும் வீரபாண்டியக்கட்டபொம்மன் வசனம் போல்
இருக்கிறேன் நான் இப்போது! இதற்கு ஒரு காப்பகம் தேட வேண்டுமே?
சரஸ்வதிக்கு இருப்பிடம் அளிக்க இங்கு முன் வருவோர் யார்?
நா.கண்ணன்
2012/2/3 Dhivakar <venkdh...@gmail.com>
>
> ரங்கன் வீடா இது? இல்லை போல இருக்கிறது.. நான் ஒருமுறை சென்றபோது அறைகள் பூராவும் புத்தகங்கள், மத்தியிலிருந்து ஒரு தாடி முகம் எழுந்து எட்டிப் பார்த்தது. கொஞ்சம் ப்யந்துதான் போனோம் ((
>
தமிழகத்தின் அழகியல் குறித்தும், குமுகாயப் பொறுப்புணர்வு குறித்தும் நாம் இங்கு பேசியுள்ளோம். கடலோடி நரசய்யா அவர்கள் சென்னையிலுள்ள இராஜாஜி ஹாலின் பாதுகாப்புப் பற்றி ஹிந்துவில் பேசி இருக்கிறார்.
http://www.thehindu.com/news/cities/chennai/article2851475.ece
1753-ல் உருவாக்கப்பட்ட சரித்திரபூர்வமான இக்கட்டிடம் இடிக்கப்படலாமோ? எனும் சூழல் உருவாவது குறித்து கவலை தெரிவிக்கிறார். நாகரீகமடைந்த எல்லா சமூகங்களும் தங்கள் பழமையைத் தக்க வைத்துக் கொள்வதில் கவனம் கொள்கின்றன. அதுவே ஒரு பெரிய பீடு என்ற அளவில் ஐரோப்பாவில் பார்க்கப்படுகிறது. அங்கு நகரின் நடுவில் முன்பு (18/19ம் நூற்றாண்டில்) கட்டப்பட்ட தனியார் வீடுகளைக் கூட அழித்து புதிப்பித்துவிடமுடியாது. ஊரின் அழகாக, பீடாக அது பார்க்கப்படுவதால்!
முதலாம் உலகில் காலடி எடுத்து வைக்கும் இந்தியா எவ்வளவு கவனமாக தன் முதுசொம்மைக் கண்காணிக்க வேண்டும்?
--
ரங்கனைப்பார்த்துவிட்டு வரும் போது ரங்கநாதன் தெருவழியாக வர வேண்டிய
நிர்பந்தம். கரும்புச் சாறு பிழிந்துவிட்டு சக்கை குவியலாய் நடுவீதியில்.
எல்லாக்கடை குப்பையும் நடு ரோட்டில். நடுவே நெல்லிக்கய் விற்கும் கிழவி,
பாய் டீக்கடை, ரசித்துக் குடிக்கும் குடும்பம், இரவுச் சாப்பாட்டுக்கடை.
எல்லோரும் கழிவின் கழிவாய் நுகரும் காட்சியைக் கண்டபோது ‘தமிழ் அழகியல்’
என்று ஏதாவது ஒன்றுண்டா? என்ற கேள்வி எழுந்தது! மாட்டுத்தொழுவம்,
பன்றிக்கொட்டில், ஆட்டுக்கிடை, ரஙநாதன் தெரு. வித்தியாசமே இல்லை. சே!
ஈதென்ன வாழ்வு? கோடி புரளுகிறது சரவணா பவனில், அருகிலுள்ள கடைகளில். ஒரு
காலத்தில் கசங்கிய அழுக்குப்பிடித்த, பாக்டிரியாக்கள் நிரம்பிய
காசைத்தின்ன வேண்டிய காலம் வரலாம். இங்குள்ளோர் தின்று வாழ்வார்கள்!!
நா.கண்ணன்
2012/2/3 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>
> சூரிய ஒளி போல நம் நாட்டில் பல resources வீணாக போவது தெரிந்த விஷயம் தானே.. கரும்பு சக்கையை கட்டடம் கட்ட உபயோகப்படுத்த முடியும். நாம் ஏன் கவலை பட போகிறோம்...
நான் போகும் இடமெல்லாம் இது பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறேன் 1985 லிருந்து....
தீதற்ற வளர்ச்சி என்பதே காலத்தின் தேவை. திட்டமிடுதல் என்பதே இல்லாமல்
வளர்ச்சி இருக்கக்கூடாது.
இத்தனை புத்திஜீவிகள் உள்ள ஒரு நாடு இப்படி இருப்பது என்னை
ஆச்சர்யப்படுத்துகிறது. எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறது இந்தியா?
இன்னொரு எமெர்ஜென்சி? இன்னொரு அவதாரம்?
ரங்கராஜன் தெரு இருக்கும் அதே சென்னையில் பிரம்மஞான சபை வளாகம் (அல்லது
கலாக்ஷேத்ரா).
சென்னைக்கு அருகில்தான் பாண்டிச்சேரியும்.
பரபிரம்மங்கள் உலவும் அதே பூமியில்தான் இத்தனை அழுக்கும், அசிங்கமும்.
ஏனிப்படியொரு நாடு? ஏன் இதில் என் பிறப்பு? ஏனிந்தப் புலம்பல்?
கேள்விகள்தான் எஞ்சி நிற்கின்றன.
கும்பகர்ணன் தூக்கம் = இந்தியா!
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
J. chandrasekaran
To save culture & heritage visit:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ரங்கன் வீடா இது? இல்லை போல இருக்கிறது.. நான் ஒருமுறை சென்றபோது அறைகள் பூராவும் புத்தகங்கள், மத்தியிலிருந்து ஒரு தாடி முகம் எழுந்து எட்டிப் பார்த்தது. கொஞ்சம் ப்யந்துதான் போனோம் ((
மனிதர்கள் மனதிலேயே அழுக்கு படிந்திருக்கிறதுஅதனால்தான் அழுக்கு ,குப்பை இவைகளுக்கு நடுவே வாழப் பழகிவிட்டார்கள்அழுக்கையும் ,குப்பையைும் அகற்றாத அரசை தட்டிக் கேட்க மறந்து வி்ட்டார்கள்மக்களுக்கு தன்னம்பிக்கையும், சுய கௌரவமும், சுற்றுப்புற சுகாதாரமும் மறந்து போய் வெகு நாட்களாகிவிட்டன
கோயில் என்பது ஒரு வரலாற்றுக்காப்பகம்.
இவ்வகைக்கல்வெட்டுக்களின் மூலம் ஒரு கோயிலின் தொன்மை, அதற்குண்டான அறக்கட்டளைகள், திருப்பணி செய்யப்பட்ட காலம், செய்தவர்கள் போன்ற பல சேதிகள் கிடைக்கும்.
நம் கோயில்களில் ஐதீகம் சார்ந்த ஓவியங்கள் (புதிதாய் வரையப்பட்டவை) அல்லது நாயன்மார்/ஆழ்வார் பாடிய பாடல்கள் மட்டுமே வைக்கப்படுவதிலிருந்து நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கியுள்ளோம் என்பது தெளிவு. ஒரு காலத்தில் கோயில் சரிதம் என்பது கோயிலின் பன்முகத்தன்மையின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது என்பது கண்கூடு.
மிகவும் சரியான கருத்து. நாயன்மார்/ஆழ்வார்கள் பாடல்கள் கூட அண்மைக்காலங்களில் கற்பலகைகளில் பதியப்படவில்லை. 1960, 70 களில் வைக்கப்பட்டவை/சுவரில் எழுதப்பபட்டவை. நான் விரும்பிப்படிப்பதுண்டு. எனக்கு முதல் நாயன்மார்/ஆழ்வார் பாடல்கள் அறிமுகம் இவையே.அண்மைக்காலங்களில் குடமுழுக்கு விழாவுக்கு வருகை தந்த ச்ன்னிதானங்கள், அரசு அதிகாரிகள், கோவில் ஆணையர், திருப்பணியாளர் பெயர்கள் தான் கற்பலகைகளில் பதியப்படுகின்றன,மேலும் இதுவரை ஒரு பூசகரும் கோவிலின் சரித்திரச் சான்று பற்றியோ ஆண்ட அரசர், ஆவணங்கள், சிற்பச் சிறப்புக்கள் பற்றியோ எடுத்துச் சொல்லிக் கேட்டதில்லை. பல யுகங்கள் முன்பு நடந்தவை தவிர.மேலும் எழுதுங்கள் திரு கண்ணன்.அன்புடன்சொ.வினைதீர்த்தான்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
காஞ்சி வரதராஜர் கோயிலில் வெறும் தீர்த்தக்கைங்கர்யம் (இறைமுழுக்கிற்கு நீர் இறைத்து சந்நிதிக்கு எடுத்துச் செல்லுதல்) செய்து கொண்டிருந்த ஓர் இளைஞர் இந்தியா முழுவதும் இன்புரும் வண்ணம் வைணவ தரிசனம் அளித்தது இறையருள்! நம் பாக்கியம். இவரைப் பற்றி அறிய, அறிய வியப்பே மேலிடுகிறது. என்ன ஒரு ஆளுமை! நான்கு வேத பண்டிதத்திலா? நாலாயிரம் திவ்யப்பாசுரங்களிலா? பக்தியிலா, கோயில் மேலாண்மையிலா? குமுகாய சமநீதி குறித்த சீரிய சிந்தனைகளிலா? இவரொரு political revolutionary, religious reformer, world teacher, manager, trend setter இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த யுக புருஷர் எப்படி இருந்தாரோ அப்படியே சிலை வார்க்க அதைக் கண்டு “தான் உகந்த திருமேனி” என இவர் பாராட்ட அது ஆயிரம் வருஷமாக ஆராதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது எனில், அதைக் காண்பது முதுசொம் கிளைமாக்ஸ் இல்லையா? எவ்வளவோ ஏக்கத்திற்குப் பிறகு, இப்பயணத்தில் நல்லதொரு வாய்ப்பாக அது அமைந்தது. நாங்கள் போன நாள் எம்பெருமானாரின் ஜென்ம நட்சத்திரம் - திருவாதிரை! எனவே உற்சவ மூர்த்தியாக உலாவில் அருள் பாலித்துக் கொண்டிருந்தார். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்று வைஷ்ணவ கோஷ்டி நாலாயிரம் சேவித்துக் கொண்டு முன் வந்தது. நடு நாயமாக திரிதண்டியுடன் ஜீயர் நின்றிருந்தார். 



உடையவர் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளியவுடன் நடை சார்த்தப்பட்டது. கொஞ்ச நேரம் கழித்து மெல்லக்கதவு திறந்தது. எங்களுடன் பேசிக்கொண்டிருந்த வைணவர் எங்களை உள்ளே அழைத்தார். அப்போதுதான் அந்த ஏகாந்த சேவை!! கைக்கெட்டும் தூரத்தில், ‘தானுகந்த திருமேனி’. என்ன பாக்யம், என்ன பாக்யம். எனக்கு இராமானுஜர் நூற்றந்தாதி தெரிந்திருந்தால் சேவித்து அனுபவித்து இருந்திருப்பேன். ஒன்றுமே அறியாத என்னைப் போன்றோருக்கும் தயை செய்யும் வள்ளல் அந்த இராமானுஜன் என்று அறிந்து கொண்டேன்! வாழ் நாள் முழுவதும் கண்ணை விட்டு அகலாத காட்சி. ஒரு தமிழனுக்கு எத்தனை பெருமையை இம்மாநிலம் வழங்கி கௌரவிக்கிறது என்று எண்ணி எண்ணி இறுமாப்படைந்தேன். இவன் தமிழன் என்பதாலேயே இம்மண்ணில் தமிழ் ’கோயில் மொழி’ ஆகியது.
Ramanuja is certainly a person to be admired, revered and followed.
உங்கள் தொடர்ந்த ஆசீர்வாதம் எங்களைத் தளிர்பிக்கிறது.
மிக்க மன மகிழ்வுடன்.
நா.கண்ணன்
பிகு: அன்று பாதிக்கூட்டம் தெலுங்கு தேசத்திலிருந்து. எவ்வளவு பக்தி! அடடா!
2012/2/8 Innamburan Innamburan <innam...@gmail.com>
உலகுக்கே தர்சநம் தந்தருளிய உடையவரை முனைவர் கண்ணன்
தர்சித்த விதம் நெகிழச் செய்கிறது.
‘ஸ்ரீ பவிஷ்யதார்ய விக்ரஹம்’ ஆழ்வார் திருநகரியில் இருப்பது
இதைக்காட்டிலும் தொன்மையானது; நாதமுனிகள் காலம்.
முதுசொம் க்ளைமாக்ஸ் என்று இதைச் சொல்லலாம்
தேவ்
> பகவர் அடியாராய் இறைத்தொண்டில் ஈடுபட்டு மகிழ்கின்றனர். ...
>
> read more »
>
> entrance.jpg
> 77KViewDownload
>
> Jeeyar.jpg
> 85KViewDownload
>
> Ramanuja.jpg
> 96KViewDownload
>
> charitam.jpg
> 95KViewDownload
நெஞ்சிற்கும், வயிற்றிற்கும், இற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் நோய் தீரும் மருந்து தரும் ஓர் வள்ளலை என்னென்பது?என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி * மருள் சுரந்தமுன்னைப் பழைவினை வேரறுத்து * ஊழி முதல்வனையேபன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்சென்னித் தரிக்க வைத்தான் * எனக்கு ஏதும் சிதைவு இல்லையே.காளை தாங்கள் அவசியம் போக வேண்டிய திருக்கோயில் ஸ்ரீபெரும்புதூர். உடையவரின் பூரண அனுக்கிரகம் கிடைக்கும்.
நன்றி ஸ்வர்ணா!
இதுவொரு நீண்ட நாள் கனவு. நேர்த்திக்கடன்.
என்னைப் பொறுத்தவரை த.ம.அ என்பது திருமழிசைப்பிரானின் ஆக்ஞை. அடியேனை ஏன்
இசைவித்து அப்படிச் செய்தார் என்று எனக்குத் தெரியாது. அவர் சந்நிதியில்
”அம்மா முன் நிற்கும் குழந்தை” போல் நெடுமே நின்றுவிட்டு வந்தேன். அவர்
சுதர்சன அம்சம். தகிக்கிறது! அங்கு தனியாக சக்கிரத்தாழ்வார் சந்நிதி
கிடையாது. குழந்தையை உச்சி முகர்வது போன்றதொரு சேவை. அவரே
ஸ்ரீபெரும்புதூர் சேவையையும் செய்வித்தான் என்பதற்கு சாட்சி ‘முதல்
தீர்த்தக்காரர் நாராயண அய்யங்கார்’ என்று எங்களுக்கு செவை செய்வ்ஹ்தவர்
திருமழிசைக்காரர்!! இவையெல்லாம் தற்செயல் என்று காண்பது அவரவர் இஷ்டம்.
பிரத்யக்ஷம் என்பது அவரவர் நோக்கு இல்லையா?
பாருங்கள்! எப்படி இன்னம்பூரான் வாயிலிருந்து ஆசிகள் வருகின்றன என்று.
இவையெல்லாம் அவன் செயல் என்று காண்கிறேன்.
நம்பினார் கெடுவதில்லை ஸ்வர்ணா! நமக்குத்துணை நாரண நாமம். மற்றவை அவன் பொறுப்பு.
நா.கண்ணன்

தமிழ் மறைகள் ஆயிரம் ஈன்ற முதல் தாய் சடகோபன் எனும் நம்மாழ்வார்.
அம்மறைகளை இதமாக நமக்களித்த இதத்தாய் இராமானுசன் என்கின்றனர் பெரியோர்.
இது சாதாரணவிஷயமே அல்ல! இன்று தமிழைக் கோயில் மொழியாக்க சைவக்கோயில்களில்
படும் அவஸ்தையைக் கண்ணுறும் போது, மிக்க தொலை நோக்குடன் மாறன் செய்த
தமிழ்மறையைக் கோயில் ஒழுங்காக்கி, தமிழைக் கருவறைக்கு இட்டுச் சென்று ஓத
வைத்து தமிழின் பெருமையை ஆந்திரரும், கன்னடரும், மலையாளிகளும், பிறரும்
உணரும் வண்ணம் செய்தவன் இந்த இராமானுசன்.
பொதுவாக இறைத்தூதுவர்கள் தேவை கருதித்தோன்றுகின்றனர்.
புத்தர் தோன்றிய சூழலில் யாகமென்றும், யக்ஞமென்றும் உயிர்ப்பலிகள்
கூடியிருந்த காலம். இற்றைத் தேவைகளை (existential living) மறந்து மக்கள்
இறப்பின் பின் உள்ள வாழ்வை (metaphysical living) பிரதானப்படுத்தி
வாழ்ந்து வந்தனர். எனவே புத்தர் இற்றைத் தேவைகளை வலியுறுத்தி தர்மங்களைப்
போதித்தார். இன்று 500 மில்லியன் மக்கள் இத்தர்மத்தில் உள்ளனர்.
பகவான் யேசுவைப் பார்ப்போம். அவர் தோன்றிய காலத்தில் விவிலியம் தன்
பொருள் இழந்து யூதர்கள் வெறும் பொருளீட்டும் சமூகமாக மாறிப்போன பொழுதில்
விவிலியத்தை இற்றைப்படுத்த (update) வேண்டியிருந்தது. யேசு
எவ்வளவுக்கெவ்வளவு சமயச் சீர்த்திருத்த வாதியொ அதே அளவிற்கு சமூக
சீர்திருத்தவாதியும் கூட. அவரும் சமதர்மம் பேசியிருக்கிறார். அவரை அன்றைய
அரசு ஒரு புரட்சியாளராகவே கண்டது. அதற்கொரு தண்டனையும் கொடுத்தது. 630
கோடி உலக ஜனத்தொகையில் இன்று கிறிஸ்துவின் வழியில் 33% (ஏறக்குறைய 210
கோடிகள்) இருக்கிறார்கள். எனவே இயேசுவின் வாழ்வு வீண் போகவில்லை.
அடுத்து முகம்மது நபி வருகிறார். இவர் வாழ்ந்த காலத்தில் கள்ள மதங்கள்
பெருகிப்போய் இறை வழி என்னவென்றே தெரியாமல் மக்கள் தடுமாறி இருந்தனர்.
இவர் வந்து அவர்களை நெறிப்படுத்தி இறை வழியில் வாழ்வதற்கான தர்மங்களை
போதிக்கிறார். இவர் வழியில் இன்று 170 கோடி மக்கள் உள்ளனர்.
இந்திய சரிதத்தில் இராமானுசர் வாழ்ந்த காலத்தில் அத்வைதம் சரியாகப்
புரிந்து கொள்ளப்படவில்லை. வேத நாயகன் யார் என்பதில் தெளிவில்லை. பக்தி
என்பதன் பொருள் தெரியவில்லை. இராமானுசர் தோன்றுவதற்கு முன்னுள்ள நிலையை
இரு சமயப்பெரியவர்களுக்கு இடையில் நடந்த உரையாடல் சரியாக விளக்குகிறது.
யோகத்தில் சிறந்த ஓர் பெரியவர். சமூகப் பிரக்ஞை உள்ள இன்னொரு பெரியவர்.
ஒருவர் கேட்கிறார், ‘இன்றைய தேவை என்ன? யோக வழியில் இந்திரியங்களை
கட்டுப்படுத்தி அகத்தில் இறைவனை தரிசிப்பதா? இல்லை ‘எங்கும் நிறை
பரம்பொருளை இழிதல் கோட்பாடு கொண்டு நிலை நிறுத்துவதா?.
சமூக அக்கறை உள்ளவர் சொல்கிறார், “வீட்டில் பிணம் கிடக்க, மணம் புணரலாமோ?”
எவ்வள பெரிய வார்த்தை பாருங்கள்! இதுதான் இராமானுசருக்கு முன்னிருந்த
தமிழகம். எவ்வளவு சீர்கெட்ட நிலையில் இருந்திருக்க வேண்டுமென்று
யூகிக்கலாம்.
எனவே சமயத்தில் ‘இற்றைப்படுத்தல்’ அவசியம் என்று தெரிகிறது. அதை இவர்
வேதாந்த நெறிமுறையில் செய்வித்தார்.
அத்வைதம் என்பதன் சரியான பொருளை தமிழ் மறைகள் கொண்டு விளங்க வைத்தார்
(சிறப்பு அத்வைதம்=விசிட்டாத்வைதம்). மாயை என்பதை எப்படிப் புரிந்து
கொள்ள வேண்டுமென்று விளக்கினார். ஆதி சங்கரரின் உளக்கிடக்கை எதுவென்று
உலகிற்குக்காட்டினார்.
ஆதி சங்கரர் செய்ய விட்டுப் போன ஒரு சமூக மாற்றத்தை முன்னிருந்து
நடத்தினார். அதுதான் பாகவத தர்மத்தில் ஜாதிக்கு இடமில்லை என்பது. இதில்
முழு வெற்றி கண்டார் என்று சொல்ல முடியாது. ஆனால், அவர் காலத்து
பிராமணர்களையும், உயர் ஜாதி இந்துக்களையும் இதன் தேவை குறித்து சிந்திக்க
வைத்தார். இவரும் ஏசு போல் சமதர்மம் பேசியவர்தான் அதனால் அரசியல்
புரட்சியாளர் என்ற பட்டம் பெற்றவர்தான்.
முகம்மது நபி சமுகம் சீராக நடக்க சில விதிமுறைகளை முன்வைத்தார். இவரும்
ஒரு பக்தன் என்னென்ன குணங்கள் கொண்டிருக்க வேண்டுமென்று நிறுவினார்.
கோயில் என்பது சீர்கேடு அற்று நடக்க என்னென்ன செய்ய வேண்டுமென்று வழி
வகுத்தார். கள்ள மதங்கள் பெருகியிருந்த காலத்தில் ஆழ்வார்கள், வேத
வியாசர் வழியில் எது சத்யவழி என்று காட்டினார். உள்ளங்கை நெல்லிக்கனியாக
இருக்க வேண்டிய விஷயத்தை, கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்யிற்கு
அலையும் தமிழர்களுக்குக் காட்டினார்.
இன்று இந்துமதம் எனும் குடையின் கீழ் 900 மில்லியன் மக்கள் உள்ளனர்.
அதில் எல்லோரும் நாரண வழிபாடு செய்தாலும் விசிட்டாத்வைதம் எனும் வழியில்
உள்ளோர் எத்தனை கோடி என்று தெரியவில்லை. சுவாமி பிரபுபாதாவின்
உலகப்பரப்பலுக்குப் பின் இராமானுஜர் வழியில் உள்ளோர் அதிகம் என்று
துணிந்து கூறலாம்.
மன்னிய பேரிருள் மாண்டபின், கோவலுள்மாமலராள்
தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும், தமிழ்த்தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கன் புபூண்டவர்தாள்
சென்னியிற்சூடும், திருவுடையாரென்றும் சீரியரே.
”தமிழ்த் தலைவன்”, தென்பாண்டி நாட்டான், சீர்மிகு காரி மாறன் அடி
போற்றும் இராமானுஜனும் தமிழ்த் தலைவன்தானே!
வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு அந்
நாழற்றது நம் இராமானுசன் தந்த ஞானத்திலே.
விளக்கவுரை – எங்களது எஜமானராக உள்ள எம்பெருமானார், எங்களிடம் எந்தவிதமான
கைம்மாறும் எதிர்பார்க்காமல், தனது அளவற்ற கருணை காரணமாக, மிகவும்
உயர்ந்த ஞானத்தை எங்களுக்கு அளித்தார். இந்த ஞானம் காரணமாக வேதங்களை
அடியுடன் தள்ள முயன்ற பௌத்தர் போன்றவர்களும், வேதவரிகளுக்குத் தவறான
பொருள் கற்பிக்க முயன்ற யாதவப்ரகாசர் போன்றவர்களும் தங்கள் வாழ்வை
இழந்தனர். இவ்விதம் களைகள் நீக்கப்பட்ட பின்னர், பயிர்கள் தடையின்றி
வளர்வது போன்று, நீண்ட காலமாக இருந்து வரும் பரமவைதிகர்கள் தாங்கள் இழந்த
வாழ்வை மீண்டும் பெற்று, தங்களது தாழ்வு நீங்கப் பெற்றனர். இதன் மூலம்
இந்தப் பூமியானது மிகவும் உயர்ந்த புண்ணியம் பெற்றது. எம்பெருமானாரின்
ஸ்ரீபாஷ்யம் போன்ற நூல்கள் மூலமாக வேதங்களில் கூறப்பட்ட பரம்பொருள்
குறித்த ஐயம் அனைத்தும் நீங்கிவிட்டன. (நன்றி:
http://namperumal.wordpress.com)
2012/2/9 Innamburan Innamburan <innam...@gmail.com>:
பெயருக்கு ஏற்ற படியே மிகவும் அழகான பிரதேசம். மிகவும் தொன்மையான பிரதேசம்.
தகவல் தொடர்பு நிபுணராக இருந்தாலும் செல்வ முரளிக்கு நம் பாரம்பரியத்தின்
மீது அன்பு வந்தது நம் நல்லூழ்!
மிக அற்புதமான வகையில் ஏற்பாடு செய்திருந்தார். ஒரே இளைஞர் பட்டாளம்.
இந்தப் பட்டாளத்தின் இளைய உருப்பினராக ‘ஹிரண்மயி’ எனும் கைக்குழந்தையை
ஸ்வர்ண லக்ஷ்மி அறிமுகப்படுத்தினார். திடீரென நான் அங்கு’தாத்தா’
ஆகிவிட்டேன் :-)
அன்றைய கிருஷ்ணகிரி மக்கள் ‘உயிரைத் துச்சமென’ நினைத்து இருக்கின்றனர்.
இல்லையெனில் இத்தனை நவகண்ட சிற்பங்கள் அங்கு இருக்காது! முகத்தில்
புன்னகையோடு கழுத்தில் கத்தியை வைக்கும் இளைஞனை என்ன சொல்வது? இதுதான்
ஜப்பானிய ஹிரகரி முறைமைக்கு வழி காட்டியதா? என்று ஆராய வேண்டும்.
ஒரு சமுதாயமே நினைத்தால் நவ கண்டம், தீக்குளிப்பு, நரபலி என்று இருந்தால்
அங்கு வாழும் சமயமும் அதை அங்கீகரித்துத்தானே ஆக வேண்டும்?
அதுதான் அங்கு நடந்து இருக்கிறது தர்மபுரியின் மல்லிகார்ஜுனர் ஆலயத்தில்
உயிர்கொலைக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அம்பாள் கோயிலில் ஒருவர்
சூலாயுதத்தை நட்டக்குத்தாக நட்டு வைத்து, தலைகீழாக குதித்து
இருக்கிறார். அம்பாள் கைத்தாங்கலாக அவனைக் காத்ததாக ஒரு கதை. இது
காலப்போக்கில் ‘நடுகல்’ கோயிலுக்குள் வந்துவிட்டதால் ஏற்பட்ட கதையா?
இல்லை, அங்கு நடக்கும் உயிர்கொலைகளுக்கு வேறுவழியில்லாமல் அங்கீகாரம்
கொடுக்க வேண்டிய நிலையா? என்று தெரியவில்லை. சிவனுக்கு பிள்ளைக்கறி
சமைத்துக் கொடுத்த கதை எங்கு நடந்தது என்பதை ஆராய வேண்டும்.
தமிழக சமூகம் பெருங்கற்கால மன நிலையிலிருந்து அதிகம் மாறிவிட்டதாகச்
சொல்ல முடியாது. தமிழகம் தொழிபுரட்சிக்குப் பின் உண்டாகிய நவீன வாழ்வை
ஏற்றுக்கொள்வதில் உள்ள தயக்கம் இத்தகைய இரட்டை மனோநிலை என்று
தோன்றுகிறது. இம்மாதிரி பண்டைத் தொன்மங்கள் நம் மனதில் ஆழமாகப்
பதிந்துள்ளன. கோயிலுக்குள் போனாலும் இதே படிமங்கள்!! திரும்பத்திரும்ப
காணும் ஒன்று, கேட்கும் ஒன்று, செய்யும் ஒன்று நிலைத்துவிடுகிறது.
சிங்கப்பூர் போல் ஏன் சிங்காரச் சென்னை மாற முடியவில்லை? எனும் கேள்வி
இன்னும் என்னைக் குடைகிறது. நான் வந்த குறைந்த காலக் கட்டத்தில் கண்ட
சாலை விபத்துக்கள். உயிர்ப்பலிகள் என்னைப் பாதிக்கின்றன. இந்த தேசத்தின்
எதிர்காலம் என்ன என்ற கேள்வி நிற்கிறது!
நா.கண்ணன்
We need to probe this question rather deeply. It is not important
whether you accept my theory or not. But ask yourself the question?
What is the difficulty in urban living in India? Why is it so hard to
keep order in a city? Why do we keep our nation dirty and be happy
about it.
Probably you never lived abroad long enough to see the significance of
this question. Keeping myself clean is good for me and good for the
person who meets me. Right? Same applies to your home, street,
country. It is about caring. Probably we don't care about anything?
Puzzling!
Korea was poorer than us in 60s. Visit the modern Korea! How do they
urbanize their people. Why do they keep themselves clean?
Germany was in ruins in 50s. Look at modern Germany. What is the
difference between Germans and Indians as human beings?
I'm asking a basic moral question? If God lives in you & outside why
can't we respect God. We may easily dissect the question, fragment it
and escape out. The loss is only ours.
Kannan
2012/2/12 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>:
அதை நீங்கள் சொல்வது போல்
> ‘காட்டுமிராண்டித்தனம்” என்று என்னால் பார்க்க முடியவில்லை.
I don't say that but I see it as a residue of a primitive living.
> Individuals can only do so much Kannan!! If Govt. initiates some thing, you
> can see people following it. it is more effective and practical that way...
Hello Swarna
It is a democratic fix :-) Theoretically the power lies in people's
hand. When there is a will there is a way!
On the other hand look at Singapore and China. They are not truly
democratic countries. Things works alright there (in environmental
perspective).
Since India is a true democracy every citizen should realize this.
What I see in India is a terribly myopic public which is reflected in
the politics. Imagine if there is no givers there is no takers!!
Kannan
ps. My concern is about the population burst. We have stolen the
future of our children. We need to act urgently on this issue before
the system collapses.
தமிழ் குமுகம் பற்றிய புனைவுகள் உயர்வு நவிற்சியில் அமைந்திருப்பது சிந்தனையைத் திசை திருப்ப வல்லது...காலச் சக்கரம் என்று சுற்றிச் சுற்றி வந்தால் மற்ற நாட்டின் வரலாற்று நிகழ்வுகளுடன் ஒப்பு நோக்க முடியாது. இந்தக் காலச்சக்கரம்தான் நம்மை கருத்துப்பிழைக்கு இடம்கொடுக்க வைக்கிறது. ஆங்கிலத்தில் லேட்ட்ரல் திங்கிங் என்று சொல்லப்படும் பல நேர்கோடுகளில் சிந்திக்காமல் நாம் ஒரே பாதையில் எதிரும் புதிருமாக சிந்தித்து அதனால்கருத்துமொதல்களுக்கு இடம்கொடுத்துவிடுகிறோம். சங்க இலக்கியங்கள் ஒரு பாதையிலும் சமஸ்கிரித வளங்கள் இன்னொரு பாதையிலும் கிரந்த மணிப்பிரவாளச் சிந்தனைகள் இன்னொரு பாதையிலும் பயணித்தால் மேலைநாட்டு அறிஞர் குழுமம் ஏற்றுக்கொள்ள வகையில் நம் வரலாற்றுச் சிறப்பை உலக அரங்கில் வெளியிட முடியும்











//சுருங்கச்சொல்லின், தெளிவாக பேசுக//
வம்பை விலை குடுத்து வங்கனும்னு எழுதியிருக்குமோ
11. இரு கருத்துக்களொன்றோடொன்று மோதுவதும் வெற்றிபெற்ற கருத்தை அரசும் குமுகமுகம் ஏற்றுக்கொள்வதும் தோல்வியுற்ற கருத்தை அடிச்சுவடில்லாமல் அழிப்பதும் காலம் காலமாக தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள். அதையே இப்போது மீன்டும் பயன்படுத்துவது தேவையா?
நம் கருத்துக்களை நாமே ஏற்றுக்கொள்ளாது விவாதிப்பது நமக்கு இயல்பிலேயே அமைந்துவிட்டது
நாகராசன்
சுபா ஜெர்மனி திரும்பிய பின்னும் முதுசொம் பயணம் என்னளவில் இன்னும் தொடர்கிறது. இன்று சேர்வராயன் மலைக்குப் போயிருந்தேன். சேர்வராயன் என்ற பெயர் கேட்டதுதான் என்றாலும் அது ஆயிரம் பேருடையானுக்குச் சொந்தமானது என்று இன்று அறிந்தேன்!
அறியப்படாத என் தமிழகம் நீண்டு கொண்டே போகிறது....நா.கண்ணன்
--
சுபா ஜெர்மனி திரும்பிய பின்னும் முதுசொம் பயணம் என்னளவில் இன்னும் தொடர்கிறது. இன்று சேர்வராயன் மலைக்குப் போயிருந்தேன். சேர்வராயன் என்ற பெயர் கேட்டதுதான் என்றாலும் அது ஆயிரம் பேருடையானுக்குச் சொந்தமானது என்று இன்று அறிந்தேன்!
..