இப்பொழுதுதான் கணிணிக்கு வந்தேன். முதல் கடிதமே/----
நேர்ச்சை என்றால் ஈஷ்வரனுக்கு நேர்ந்து[வேண்டிக்] கொள்வது,.
பிறகு அந்த நேர்த்திக் கடனைக்கழிக்க, கிராமத்திலுள்ள குலதெய்வம் க்ஷேத்திரத்துக்கு போய்
கடனை நிவர்த்தி செய்வோமில்லையா? அதுதான்.,
அதனால் இது மலையாள பதமோ என்று
முத்திரை குத்திவிட வேண்டாம்.
வட்டார வழக்குத்தொடரில் நாஞ்சில் நாடன், பொன்னீலன் போன்றோரின் எழுத்தில் இப்பதம்
ரொம்ப அழகாக விளி இடுகையில், மொழிலயமாக ,கதையோட்டத்தில், இரண்டறக் கலந்திருக்கும்.
அடுத்த சான்று------தமிழ்க் கலவை---எழுதியவர் --Dr.ஸ்ரீனிவாசன்
நூல் வெளியீடு கண்ட ஆண்டு 1898ல், அந்நூலில் இப்படி எழுதுகிறார்.
” தமிழை எப்படியெல்லாம் அழகு படுத்தலாம் என்பதை
இலக்கியவாதிகள்
கண்டறிந்த .வழியை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்.ஒவ்வொரு வட்டார வழக்கும்
ஒவ்வொரு பொருளில் நம்மை கவர்வது பெரிய விஷயமல்ல. தமிழில் எப்படி இவர்கள் இரண்டறக் கலந்து
நம்மை ஆட்கொள்கிறார்கள் என்பது தான் இக்கட்டுரையின் சாரம் , எனத் தொடர்கிறார்,”
கமலம்