1. நாலடி நல்கும் நன்னெறி 21: – கற்காத, ஈயாத, அறம் செய்யாத நாள் நாளில்லை: இலக்குவனார் திருவள்ளுவன்++ 2. வெருளி நோய்கள் 811-815: இலக்குவனார் திருவள்ளுவன்

8 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Dec 12, 2025, 4:25:00 PM (2 days ago) Dec 12
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore

நாலடி நல்கும் நன்னெறி 21: – கற்காத, ஈயாத, அறம் செய்யாத நாள் நாளில்லை: இலக்குவனார் திருவள்ளுவன்

 


ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்      13 December 2025      கரமுதல


(நாலடி நல்கும் நன்னெறி 20: – பிறன் மனைவியை விரும்பாதே: தொடர்ச்சி)

கற்காத, ஈயாத, அறம் செய்யாத நாள் நாளில்லை

கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும், – ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும், உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்  

நாலடியார் பாடல் 169

பண்புடையவ ர்கள் படிக்காமல் இருக்கும் நாள் இல்லை;
பெரியவர்களிடம் சென்று பழகாத நாள் இல்லை; 
தன்னால் முடிந்ததைப் பிறருக்குக் கொடுக்காத நாள் இல்லை. 

பதவுரை:

கல்லாது=கற்க வேண்டிய நூற்களைக் கற்காது; போகிய=போன; நாளும்=நாள்களும்; பெரியவர்கண்=பெரியோரிடத்து; செல்லாது= போகாது; வைகிய=இருந்த; வைகலும்= நாள்களும் ஒல்வ=முடியக் கூடியவற்றை; கொடாது=கொடுக்காது; ஒழிந்த=வீணே கழிந்த; பகலும்=நாள்களும்;உரைப்பில்=சொல்வதாயின்;படாஅவாம்=இருக்காவாம்; பண்புடையார் கண் = நற்குணம் உடையாரிடத்து.

கற்க வேண்டிய நூல்களைக் கற்காமல் வீணாகக் கழிக்கும் நாளும், பெரியவர்களிடம் சென்று பழகி அறிவு பெறாது வீணாய்க் கழிந்த நாளும், தன்னால் முடிந்த அளவு பொருளை இரப்பவர்களுக்குக் கொடுக்காமல் பயனின்றிப் போன நாளும் பண்புடையவர்களிடம் இல்லை. இத்தகைய சிறப்பு மிக்கப் பெரியாரைப் பிழையாது அவர்சொற்கேட்டலே சிறப்பு என்கிறது இப்பாடல்.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு  (திருக்குறள் ௩௱௯௰௭ – 397)

என்கிறார் திருவள்ளுவரும்.

கற்றவர்க்கு எந்த நாட்டிற்குச் சென்றாலும் எந்த ஊருக்குச் சென்றாலும் சிறப்பு கிட்டுகிறது. அவ்வாறிருக்க ஒருவன் சாகும் வரையிலும் கற்காமல் வீண் காலம் கழிப்பது ஏன் என வினவுகிறார். இதன் மூலம் கற்பதற்குக் கால வரம்பு இல்லை. சாகும் வரை நாளும் கற்க வேண்டும் என்கிறார். அதனையே நாலடியாரும் கற்காமல் வீண் காலம் கழிப்பது ஏன் என்கிறது.

பெரியாரைத் துணைக்கோடல், பெரியாரைப் பிழையாமை அதிகாரங்கள் மூலம் திருவள்ளுவர் பெரியாரைப் பேணி வாழ வேண்டும் என்கிறார்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.   (திருக்குறள், ௩௰௩ – 33)

என்று திருவள்ளுவரும்  கூறியுள்ளார்.

ஆற்றவும் கற்றார் அறிவுடையார்,அஃது உடையார்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை — அந்நாடு

வேற்று நாடு ஆகா, தமவே ஆம், ஆயினால்

ஆற்று உணா வேண்டுவது இல். 

என்று பழமொழி நானூறும் கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் தம் நாடே என்கிறது.

மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர்தூக்கின்,

மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் — மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை,கற்றோற்குச்

சென்ற இடம் எல்லாம் சிறப்பு.

என்று மூதுரையில் ஒளவையாரும் கற்றவர்க்குச் சென்றவிட மெல்லாம் சிறப்பு என்கிறார்.

அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்

புறங்கடை நல்இசையும் நாட்டும் – உறுங்கவல்ஒன்று

உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்குஇல்லை

சிற்றுயிர்க்கு உற்ற துணை.

என்று நீதிநெறி விளக்கத்தில் கல்வியே உயிருக்கு உற்ற துணையாக அமையும். வேறு துணை ஏதும் இல்லை என்கின்றார் குமரகுருபர அடிகள்

இவ்வாறு கல்வியின் சிறப்பைப் பலரும் கூறியுள்ளார்கள். அதுபோல்,

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதிய மில்லை உயிர்க்கு (திருக்குறள் ௨௱௩௰௧ – 231)

என்கிறார் திருவள்ளுவரும்.

ஆற்றும் துணையும் அறஞ்செய்க” என்று பழமொழியும் இயன்ற வகையில் எலலாம் அறம் செய்ய வலியுறுத்துகிறது. 

எனவே, கற்காத, ஈயாத, அறம் செய்யாத நாள் நாளில்லை என நாலடியார் கூறுவதன் மூலம் நாமும் அவ்வாறு இருக்க வேண்டும் என வலியுறுத்துவதை உணரலாம்.

இலக்குவனார் திருவள்ளுவன்

++

வெருளி நோய்கள் 811-815: இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ         இலக்குவனார் திருவள்ளுவன்      13 December 2025      கரமுதல



(வெருளி நோய்கள் 806-810:  தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 811-815

  1. குடிநீர் ஊற்று வெருளி – Yinshuijiphobia / Yinshui-phobia

குடிநீர் ஊற்று தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குடிநீர் ஊற்று வெருளி.
சீன மொழியில் shui என்றால் தண்ணீர் எனப் பொருள்.
“Yinshui” என்றால் தண்ணீர் குடிக்க என்று பொருளாகும்.
நீர் வெருளி உள்ளவர்களுக்குக் குடிநீர் ஊற்று வெருளி வரும் வாய்ப்புள்ளது.
00

  1. குடிப்பு வெருளி-Dipsophobia/Dipsomanophobia

போதைநீர்களைக் குடிப்பது தொடர்பான இயல்பு மீறிய பேரச்சம் குடிப்பு வெருளி.
குடிப்பு என்பது மதுவகைகளைக் குடிப்பதைக் குறிக்கிறது. மதுப் பழக்கத்தைக் கைவிடாமல் அதே நேரம், குடிப்பழக்கம் தொடர்பில் அளவுமீறிய பேரச்சம் கொள்வதே இது.
குடிப்பழக்கத்தின் தீமைகளை அறிந்தே குடித்துக்கொண்டு அதற்கு அஞ்சுவோரும் உள்ளனர். உடல் நலம் கேடடைந்தபின்னர், இவ்வாறு நலக்கேடுற்று மறைந்தவர்களை அறிந்து பேரச்சம் வருவதும் உண்டு. குடிகாரர்களைப் பார்த்து அவரின் குடும்பத்தினர் அல்லது அறிந்தவர்களிடம் தேவையற்ற பேரச்சம் எழுவதும் உண்டு.
dipso என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் வேட்கை. இங்கே இச்சொல் மதுவகை வேட்கையைக் குறிக்கிறது.
00

  1. குடிமயக்க வெருளி – Alcoholophobia

குடிமயக்கத்தில் இருப்பது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குடிமயக்க வெருளி.
சிலர் போதைப் பொருள் கலந்த மருந்துகளையும் உட்கொள்ள மாட்டார்கள்.
காண்க: குடிப்பு வெருளி(Dipsophobia)
00

  1. குடியரசுக் கட்சி வெருளி – Repoumplikanikokommaphobia
    குடியரசுக்கட்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குடியரசுக்கட்சி வெருளி.
    பொருளாதாரச் சிக்கல்களில் குடியரசுக் கட்சி அதன் தொடக்கத்திலிருந்தே மூலதனச் சார்பு அணுகுமுறையைப் பின்பற்றுகிறது; மரணத் தண்டனை போன்ற சில கடுமையான குற்றக் கொள்கைகளை ஆதரிக்கிறது; துப்பாக்கி உரிமையை ஊக்குவிக்கிறது; துப்பாக்கிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது; திருநங்கை உரிமைகளை எதிர்க்கிறது. இப்போதைய அமெரிக்க அதிபர் திரம்பின் கொள்கைகளாலும் நடவடிக்கைகளாலும் அவர் மீது ஏற்படும் வெறுப்பு அவர் கட்சி மீதும் வருகிறது. இவை போன்ற காரணங்களால் அமெரிக்கக் -குடியரசுக் கட்சி மீது எதிர்க்கட்சியினருக்கும் பொதுமக்களில் ஒரு சாராருக்கும் வெருளி ஏற்படுகிறது.
    00
  2. குடியிருப்பு வெருளி – Quarterphobia
    குடியிருப்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் குடியிருப்பு வெருளி.
    Quarters என்பது முதலில் படைத்துறையினருக்கான குடியிருப்பையே குறித்தது. பின்னர் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகத்தையும் குறித்தது. அடுத்து அரசு அமைத்துத் தரும் வீடமைப்புப் பகுதியைக் குறித்தது.
    குடியிருப்புப் பகுதிகளில் பொதுவான பயன்பாட்டுச் சிக்கல்களால் ஏற்படும் இடர்ப்பாடுகளால் பிறருடன் பழகவும் அஞ்சுவோர் உள்ளனர். சில வாடகைக் குடியிருப்புகள் பழுதுபார்க்கப்படாமல் சிதைந்த நிலையில் இருக்கும். இதனால் தொல்லைகள் ஏற்பட்டு வேறிடம் மாறவும் இயலாமல் இருக்கவும் முடியாமல் கவலைப்படுவர். இவ்வாறு குடியிருப்புப் பகுதிகளில் ஏற்படும் வசிப்புநிலைச் சிக்கல்களால் குடியிருப்பு வெருளிக்கு ஆளாகின்றனர்.
    00 (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன்  – வெருளி அறிவியல் 2/5
  3. ++



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages