ஒரே மடலில் சர்க்கரை மழை!
என்ன சொல்லுங்கள் ரங்கன். மனது இம்மாதிரி சத் விஷயங்களில் நிலைக்கவும்
கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் ஆழ்வார்கள், வியாக்கியானம்,
பக்தி என்றெல்லாம் சொற்களைப் போட்டவுடன் எப்போதும் பிளவுகளின் விரிசலில்
நர்த்தனம் புரியும் மனது மீண்டும் பிளவுகளை நோக்கியே ஓடத்தொடங்கிவிடும்.
ஆழ்வார் சொன்னால் என்ன? வாதவூரார் சொன்னால் என்ன? ரங்கன் சொன்னால் என்ன?
இல்லை வீட்டில் வளைய வரும் தன் மகளே சொன்னால் என்ன? `காதலாகிக் கண்ணீர்
மல்கி` என்பது மிக ஆழமான உளப்புரிதல் அல்லவா. மழை பெய்து விட்ட வானம்
போல் பின் தெளியும் அனுபவம் வந்தால் அன்றோ இது புரியும்.
அவன் அருளால் அவன் தாள் வணங்க, அவன் அருளுக்குக் காத்திருக்கும் சாதகப்பறவையாய்...
2009/8/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> சரி அப்படியே ஒரு நடை ஆண்டாளிடம் போனால் 'எற்றைக்கும் ஏழ் ஏழ்
> பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆள்
> செய்வோம்.--- மற்றை நம் காமங்கள் மாற்று' 'உன்தன்னோடு உறவேல்
> நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது' அது என்ன மற்றை நம் காமங்கள்?
ஆம், மரு பூமியில் மழை பெய்தாற்போல்தான்
இருக்கிறது. இந்த மழை நின்று விடக் கூடாது.
ஒழிவி்ல் காலமெல்லாம் ஓய்வின்றித் தொடர வேண்டும்.
திண்ணையின் ஓரத்தில் ஒண்டிக் கொள்கிறேன்.
தேவ்
மெய்சிலிர்க்கிறது!
அது என்ன நிலை?
காக்கும் தெய்வம் கண்ணன் எனில் அத்தெய்வத்தைக் காக்கும் இத்தெய்வங்களை
பற்றி எப்படி எழுத முடியும்?
நரகங்களைப் பற்றி நமக்கு நிறையவே தெரிகிறது. இழை, இழையாய் எழுதுவோம்.
ஆனால் இந்நிலை பற்றி..பேசக்கூட துணிவில்லை என்பதுதானே நம் நிலை?
திருவரங்கன் உலா என்றொருவர் (வேணுகோபாலன்) நாவல் எழுதினார். அதற்குப்பின்
இது பற்றிப் பேசக்கூட திராணி அற்று அல்லவோ எழுத்துலகம் நிற்கிறது.
”எழுத்தை தவம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்” எனும் ரெ.காவின் கூற்று இங்கு
சரியாகப் பொறுந்துகிறது. எத்தவம் பெற்றால் இதை உய்த்துணர முடியும்?
“சிறுவன் என்ன செய்வான் பாவம்! 'நாயன்! உடல் நோகிறதே!
தாங்கமுடியவில்லையே' என்றானாம். அரையர், 'குழந்தாய், சற்றுப்
பொறுத்துக் கொள்ளடா! இதோ விரஜா நதிக்கு சமீபத்தில்
வந்துவிட்டோம். ஆற்றைத் தாண்டினால் வைகுந்தம்”
கொஞ்சம் கிட்ட வருகிறார் வெள்ளிவிழா (தங்க?) நாயகர் கமல், தம் தசாவதாரம் படத்தில்!
பாரதி கூட கிட்டத்தான் வருகிறான்..
நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்.
ஆனால் அது தேசியம் குறித்தது. தேசியம் பற்றிய கருத்தாக்கம் சுதந்திர
இந்தியாவில் இழுபடுகிறது. ஆனால், நம்பற்குரிய அரையர்கள்
இருந்திருக்கின்றனர்! தம் நல்லுயிர் ஈந்து அரங்கனைக் காத்திருக்கின்றனர்.
அரங்கனைக் காத்தால் அவன் நம்மைக் காப்பான் எனும் திடபக்தியில்.
ஜோசப் கேம்பல் பேசுவார், `விட்டில் தீபத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது.
ஒரு நொடி! சட்டச்சடசட! விட்டில் எரிபட்டுப் பொசுங்கும் காட்சி. விட்டில்
தீபமாகிவிடுகிறது!` என்று.
ஏதோ ஒருவகையில் பென்னேஸ்வரனின் தேடலுக்கும் இம்மடலில் பதில் இருப்பதாகப்
படுகிறது. எங்கென்று துழாவினால் வேதாந்த விசாரம் தொடங்கும்!
தேவ் சொல்வது போல் `ஒழிவி்ல் காலமெல்லாம் ஓய்வின்றித் தொடர வேண்டும்`.
தேவர்' கட்டளை கடத்தற் கரிதே!!
க.>
>
> ( ' தேவர்' கட்டளை கடத்தற் கரிதே )
> >
>
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
6. பக்தி
பாமாவுக்கும் ருக்மணிக்கும் போட்டியொன்று
முளைத்தது -பக்தியில் சிறந்தவள் யாரென்று
தலைகேறிய கர்வம் தடுமாறும் மனது
கண்ணன் முன் நின்றார் இருவருமே-
யார் என்று
நமுட்டுச் சிரிப்புடனே மாயக் கண்ணனவன்
கனமான கர்வத்தை எளிதாக்க எண்ணம் கொண்டு, கற்பனைத் தலைவலியால் துடி துடித்தான்,தாளமுடியதது போல் நடித்தான்
மறையோதும் முனிவரவர் கண்டுகொண்டார்
மறை பொருளின் மனப் பொருளை
தானும் கண்ணனுக்குத் துணையாக
நடிக்கத்தான் திட்டமிட்டார்
தலைவன் கண்ணனவன் தலவலி தீரவேண்டி
தாரம் இருவருமே கலங்கி நின்றார்
கண்ணனுக்காய் -வலி தீர வழி கேட்டு
மயங்கி நின்றார் மன்னனுக்காய்
தீராத் தலைவலி தீரவேண்டி தரமான
மருந்தொன்று சொல்லிவைத்தார்-முனிவருமே
தருக்கில்லா மாந்தரவர் தன் தாள் கொண்ட
பாத தூளி கண்னன் தலை மேலே
பற்றாய்ப் போட்டால் தாங்கவொண்ணாத்
தலைவலி தானே மறையும் என்றார்
தாரமவர் மனவலியும் தானே குறையும்
என்றார்- யார் தயார் ?
பதறிப் போனார் அனைவருமே அபசாரம்
அபசாரம் க்ருஷ்னனவன் தலைமேலே
பாத தூளி அபசாரமென்ரெண்ணி
தர மறுத்தார் தாரமவர்
அபசாரம் செய்வதனால் அன்பனவன்
தலைவலி தீருமென்றால் -உபசாரம்
தேவை இல்லை -தான் தருவேன்
தன் பாத தூளி என்று சொல்லி
தன் பாவம் சேர்ந்தாலும் பரவாயில்லை
கண்ணனின் தலைவலி இனி இல்லை
அது போதும் என்று சொல்லி
அன்பாய்த் தடவி விட்டாள் தன் பாத தூளி
அன்போடு பரவி விட்டாள் கண்ணனின்
தலை மேலே ருக்குமணி
கண்ணன் திரும்பிப் பார்த்தான்
தலை குனிந்தார் தேவியர் இருவருமே
அன்புடன்
தமிழ்த்தேனீ
அன்போடு பரவி விட்டாள் கண்ணனின்
>அரங்கனைக் காத்தால் அவன் நம்மைக் காப்பான் எனும் திடபக்தியில். <
அரங்கனைக் காப்பதா? ... இல்லை ..இல்லை கண்ணன் நமக்கு பக்தி புரியாது. வியாபாரம் லவலேசம் இருந்தாலும் பக்தி புதிர்தான். ஏதோ படித்தரங்கள் எல்லாம் சொல்கிறார்கள். சும்மா ஏமாற்று. எனக்குக் கூட கத்த வேண்டும் போல் தோன்றுகிறது. அரையரைப் பார்த்து, ஏனய்யா? அறிவிருக்கிறதா? நீதான் ஏதோ பைத்தியமா நடந்துக்கறன்னா அது சின்ன குழந்தையா? அதை ஏன்யா போயி...?ஒரு சமயம் கண்முன் தெரியாத கோபம் பொங்குகிறது. அடுத்த கணம் அழுகிறேன்......... என்ன உத்திரவாதம் கண்ணன்? ஆற்றைத் தாண்டினால் வைகுந்தமாம். சற்றுப் பொறுத்துக் கொள்.மடையர்கள் என்று திட்டுகிறீர்களா இவர்களை? ஐயோ எனக்கு ஒரே குஷி. இது எல்லாம் மூடநம்பிக்கைன்னு ஜட்ஜ்மண்ட் பாஸ் பண்றேங்களா? குஷி. ஆனா ஒன்றை மாத்திரம் எனக்குச் சொல்லி விடுங்கள். அவர்கள் அந்தக் கணத்தில், அழிவு சிறுகச் சிறுக அவர்களைத் தின்ற அந்தக் கணத்தில் அப்பனும் பிள்ளையுமாக என்னத்தையா பார்த்துத் தொலைத்தார்கள்? அரங்கன் காப்பத்துவான்னா? அட போய்யா! ஆத்துல உட்கார்ந்துண்டு தச்சி மம்மு சாட்டுண்டு பேசிண்ட்ருக்காங்கன்னு நினைச்சீங்களா? சுற்றிலும் தீ விக்ரகத்தை எட்டும் நாக்குகள் இவர்களின் உடல் கவசத்தைப் பற்றுகிறது. இந்த விபத்து உங்களுக்கு கோரமாகப் படலாம். ஆனால் அதைத் தாண்டி அவர்கள் பார்த்தது என்னைப் படுகுலையாக உலுக்குகிறது. ஒருவருடைய மரணத்தின் கோரத்தை வைத்து நம்பிக்கையை வளர்க்க முயலாது சநாதனம். எனவேதான் இந்த நிகழ்வுகளைப் பதிந்ததற்கு மேல் இதைப் பற்றி எதுவும் தத்துவ ரீதியாகப் பெரிது பெரிதுபடுத்துவதில்லை ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம். காரணம் அவர்கள் பக்தியின் உலகில் வாழ்ந்தார்கள். ஆனால் நாம் பக்தி என்ற பெயரில் மிஞ்சிப் போனால் நம்பிக்கையை வளர்ப்போம். அது யாராவது ஏதாவது கேள்வி கேட்டால் உடனே சொத்தென்று உட்கார்ந்துவிடும். உடனே அடுத்த கேள்விக்கும் கேள்வி கேட்பவரைக் கண்டும் பயப்பட ஆரம்பித்து விடுவோம். கேள்வி கேட்காத ஒத்துப் போகின்ற சமத்தான ஆட்களாகப் பார்த்து சத்சங்கம் என்ற பெயரில் குதுகுதுன்னு நமக்குள் பேசிக் கொள்வோம். இதுதான் நாம் முக்கி முக்கி அடையும் பக்தி, நம்மைப் பொறுத்தவரை.அறிவைப் பூரணமாக உள்வாங்கியது பக்தி என்பது என்று நமக்குப் புரியத் தொடங்குகிறதோ அன்று நமக்குக் கிழக்கு வெளுத்தது என்று பொருள்.அவர்கள் பக்தியின் உலகில் வாழ்ந்தார்கள் என்று சொன்னேனே எப்படி என்று கேட்கிறீர்களா? திருமலையில் ஸ்ரீராமானுஜரின் சீடர் அநந்தாழ்வான் நந்தவனம் கைங்கரியம் செய்துகொண்டு இருந்தார். அவர் பாட்டுக்குப் போகிறவரை ஒரு சர்ப்பம் தீண்டிவிட்டது. அனைவரும் அலறுகிறார்கள். ஸ்வாமி ஸ்வாமி என்று அவரோ நிச்சிந்தையாக பகவத் ஸ்மரணத்தில் போகிறார். அலறல் உரைத்ததும் நின்று என்ன என்று கேட்கிறார். அய்யோ அங்கு பாரும் உம்மை அரவம் தீண்டிவிட்டது. உடனே வைத்தியம் பார்க்கவேண்டும். வாரும். சீக்கிரம். கிளம்புங்கள்.அதற்கு நேரமில்லை. திருவேங்கடமுடையான் கைங்கரியமாகச் செல்கிறேன். கடித்த பாம்பு விஷம் மிக்கதாகில் விரஜா நதியில் தீர்த்தமாடி வைகுந்த நாதனை ஸேவிக்கிறேன். கடியுண்ட பாம்பு விஷம் மிக்கதாகில் திருக்கோனேரி தீர்த்தத்தில் தீர்த்தமாடி திருவேங்கடமுடையானை ஸேவிக்கிறேன். என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார். நமது அளவுகோல்கள், கட்சிகட்டல்கள், பூஜை புனஸ்காரம், அறிவுத் தீவிரம், படிப்பு, உளவியலைப் பற்றிய ஆழ் ஆய்வு எல்லாம் அப்படி ஓரமாக விக்கித்துப் போய் பார்த்தபடி இருக்கின்றன, மிதியுண்ட பாம்பு போல் நினைவிழந்து!!! தயவு செய்து சொல்லுங்கள் எது பக்தி? ஏதாவது உங்களுக்குப் புரிகிறதா? என்னைக் கேட்காதீர்கள் எனக்குத் தெரியாது.ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
2009/8/25 N. Kannan <navan...@gmail.com>
ஆனால் அது தேசியம் குறித்தது. தேசியம் பற்றிய கருத்தாக்கம் சுதந்திர
இந்தியாவில் இழுபடுகிறது. ஆனால், நம்பற்குரிய அரையர்கள்
இருந்திருக்கின்றனர்! தம் நல்லுயிர் ஈந்து அரங்கனைக் காத்திருக்கின்றனர்.
அரங்கனைக் காத்தால் அவன் நம்மைக் காப்பான் எனும் திடபக்தியில்.
ஜோசப் கேம்பல் பேசுவார், `விட்டில் தீபத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது.
ஒரு நொடி! சட்டச்சடசட! விட்டில் எரிபட்டுப் பொசுங்கும் காட்சி. விட்டில்
தீபமாகிவிடுகிறது!` என்று.
அரங்கன்:
நீங்கள் அறியாதது அல்ல. மனித ஜீவிதம் அறிவு, உணர்வு இரண்டும் கலந்தது.
நீங்கள் சொல்லும் காட்சியில் உணர்ச்சி அதிகம். அறிவை உள்வாங்கி பக்தி
நிற்பது என்பதற்குப் பதில் அறிவு நிற்கிறது என்றே சொல்லிவிடலாம். அறிவு
பக்தியைப் புரிந்து கொண்டது போல் காட்டுகிறது என்று பாசாங்கு
வேண்டுமானால் செய்யலாம். ஆனால் உண்மையில் முடியாது. இரண்டில் ஒன்றுதான்
நிற்க முடியும். இதுவொரு Quantum state. As the electrons exist either
as wave or particle. ஏதாவது ஒன்று இருக்கும் போது ஒன்றிருப்பதில்லை.
நீங்கள் சொல்லும் காட்சி எல்லா சமயங்களிலும் உண்டு. Holy Grail கதைகள்
வாசித்தால் புரியும். உயிர் ஒரு பொருட்டே இல்லை ரங்கன். இல்லையெனில்
ஜிகாத் எப்படி செயல்படுகிறது. ஈழம் சமரில் சுயக்கொலை எப்படி
சாத்தியப்பட்டது? கொள்கை! கொண்ட கொள்கை! ஒருவகையில் அறிவு வென்றுவிட்டது
என்று உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் ஆனந்தப்படலாம். ஏனெனில் கொள்கைகளை
உருவாக்குவது அறிவுதான். அதை உணர்வின் மீது எட்டுக்கட்டி ஏவி விடுகிறது
;-)
அறிவியலாருக்கு இன்னும் புரியாத புதிர் என்னவெனில், தெருவில் ஓடும்
குழந்தையைக் காக்க எந்த உறவும் இல்லாத ஒரு நடைப்பயணி தன் உயிரைப் பணயம்
வைத்துப் பாய்வதேன்? என்பதே! ஒருபுறம் ஜீவிதத்தை நடத்துவது selfish gene
என்று சொல்லுவார்கள். இன்னொருபுறம் இப்படியான தயாளகுணம் மனிதனுக்குள்
ஒளிந்து கொண்டு தன்னுயிர் ஈந்தும் கொடியினைக் காக்கும்
மாண்பு...இருக்கிறது. நீங்கள் புரியவில்லை என்று சொன்னதே சரி.
அங்கு அரையருக்கு என்ன காட்சி என்று யார் கண்டது? அவர் கொண்ட கொள்கைதான்
நின்றதா? இல்லை வேறேதும் கண்டாரா? மரணம் துச்சம் ரங்கன். வீரபாண்டிய
கட்டபொம்மன் வசனத்தில் வருவது போல், `மரணத்திற்குப் பயந்தவரே
உட்காருங்கள்!` என்று உட்கார வைத்து பக்தி பற்றி லெக்சர் அடிக்கலாம்.
சத்சங்கம் போயிருக்கிறீர்களா? அங்கு அவர்கள் காணும் காட்சியை அறிவு
முழுதாய் உள்வாங்கிக்கொள்ளுமா?
ஜோசப் கேம்பல்தான் மீண்டும் நினைவிற்கு வருகிறார். விட்டிலும், தீபமும்!
அத்வைதம் என்பதே நிறை காட்சி.
க.>
ஹ.ஹ்.ஹா! சொன்னால் புரிந்துவிடுமா? என்ன!!
க.>
”மத் ஸேவாயாம் து நிர்குணா..” இது கண்ணனே கூறுவது.
அவனுக்குச் செய்யும் கைங்கர்யம் புதிய பரிமாணம் பெறுகிறது.
அது ஆரம்ப நிலையில் ஒரு சடங்குபோல் தோன்றும்; மூடநம்பிக்கை என்றும்
பொருள் கொள்வர்.பாதிப்புரிதல் ப்ரமிப்பை ஏற்படுத்தும்.மற்று
இருப்பவர்களுக்கு அறியலாகாது.அவனை மட்டுமே உணர்ந்து கொண்டால்
ஸாத்யம்தான்.கூப்பிடு தூரம்.
இல்லையெனில் ஸ்ரீபேரத்தைக் கட்டிக்கொண்டு மடுவில் குதிக்கத் தோன்றுமா ?
தேவ்
இதுஒரு நாட்டுப்புறச் சொற்றொடர். முக்கியமான பணியாகிய எண்ணெயின்
தேவைக்காக எள் வெயிலில் காயும்போது அத்துடன் சேர்ந்து எலிப்பிழுக்கையும்
வெயிலில் உலரும்.
’எது பக்தி’ என அன்புடையோர், வல்லோர், நல்லோர் அனுபவத்துடன்
உரையாடிக்கொண்டிருக்கையில் திருவில்லிப் புத்தூரின் அன்னை ஆண்டாளின்
தகைமையில் ஆட்பட்டேன்.
(*) ஆண்டாள் திருவருள்புரியும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலின் முன்புறம்
உள்ளது ஒரு தீர்த்தம். கடுமையான பஞ்ச காலத்தில் கூட நீர் வற்றுவதில்லை.
இந்த நீர் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது இன்றும் புரியாத புதிர்.
(*) ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயத்தில் ஆண்டாள் கருவறையிலேயே பெரியதிருவடி
(கருடன் விக்ரஹம்) இருப்பதைக் காணலாம். தன் திருமணத்திற்காகத் திருமாலை
விரைவாகச் சுமந்து வந்த கருடாழ்வாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரை
மாப்பிள்ளைத் தோழனாக வீற்றிருக்கச் செய்துள்ளார் ஆண்டாள்.
(*) அன்னையின் கரத்தினில் ஒரு கிளியினைக் காணலாம். இது தினமும்
புதுப்பிக்கப்படும் கிளி.. ஆமாம! தினந்தோறும் இந்தக் கிளி
மாற்றப்படுகிறது. இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் ஆகிறது.
தினமும் இது பக்தர் யாருக்காவது பிரசாதமாக வாங்கப்படுகிறது.
அரங்கமன்னாருக்கும் தனக்கும் இடையில் தூது சென்ற, கிளிமுகம் கொண்ட
சுகப்பிரும்ம மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று, இவ்வாறு, ஆண்டாள் தினமும்
கிளியைத் தரிக்கிறார்.
(*) தான் சூடிக்கொண்ட மாலையுடன் ஆண்டாள் தினமும் அங்குள்ள கிணற்று நீரில்
தன் பிம்பத்தைப் பார்த்துக் கொள்வது வழக்கம். அதனால் அக்கிணறு கண்ணாடிக்
கிணறு என்று வழங்கப்படுகிறது.
(*) உற்சவ காலங்களில் ஆண்டாளுக்குச் சாற்றுவதற்கென அபூர்வமான தைலம்
தயாரிக்கப்படுகிறது. நல்லெண்ணெய், நெல்லிக்காய் உட்பட அறுபது மூலிகைகளைக்
கொண்டு தயாரிக்கப்படும் இந்தத் தைலம் அன்னைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு
பக்தர்களுக்கும் வினியோகிக்கப்பட்டு அனைத்து நோய்களையும் தீர்க்கும்
அருமருந்தாய் போற்றப்படுகிறது.
(*) தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராகத் திகழ்கிறது ஆண்டாள் அன்னையின்
திருத்தேர். நுணுக்கமான வேலைப் பாடுகள் கொண்ட இத்தேரில் இராமாயண, மஹா
பாரதக் காட்சிகளும், பல்வேறு தேவதைகளின் திருவுருவங்களும் இடம்
பெற்றிருக்கின்றன.
ஆடிப்பூரத் திருவிழாவில் அரங்கமன்னாரோடு தேரில் உலாவரும் ஸ்ரீ ஆண்டாள்,
தேர் நிலையை அடைந்ததும் கோயில் முகப்பில் உள்ள சிங்கம்மாள்
குறட்டுக்கும், பின்னர் திருப்பூர் மண்டபத்துக்கும் தன் நாதனோடு
எழுந்தருளி திருமஞ்சனம், திருவாராதனம் ஏற்கிறார்.
(*) பங்குனி உத்திரத் திருவிழாவின் ஐந்தாம் நாள் ஸ்ரீவில்லிப்புத்தூரில்
பஞ்ச கருட சேவை நடைபெறுகிறது. ஆண்டாளை மணம்கொள்ள வடபத்ரசயனர்,
திருத்தங்கல் அப்பன், சுந்தரராஜர், ஸ்ரீநிவாசன் மற்றும் அரங்க மன்னார்
ஐவரும் தனித்தனியே கருடன் மீது ஆரோகணித்து வந்ததாக ஐதீகம்.
ஆனால், முதலில் வரும் அரங்கமன்னார் என்னும் அரங்கநாதனையே அன்ன வாகனத்தில்
வரும் ஆண்டாள் மணமுடிக்கிறார். ஆண்டாளை மணம் முடிக்கவருபவர்களை
பெரியாழ்வார் உபசாரம் செய்யும் விழாவே பஞ்ச கருட சேவை. ஏழாம் நாளன்று
ஸ்ரீ ஆண்டாளின் மடியில் தலைவைத்து அரங்கமன்னார் கொள்ளும் சயனத்
திருக்கோலம் தரிசிக்கப்படவேண்டிய கண்கொளாக் காட்சியாகும்.
(*) பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் தினமும் இரவில் வடை, தேன்குழல்,
அப்பம்,புட்டு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பால் என்று ஏழுவிதமான
நிவேதனங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இவற்றை அரவணைப் பிரசாதம் என்று
அழைக்கிறார்கள்.
(*) ஸ்ரீ கள்ளழகர் வைகையில் இறங்கும் சித்திரா பௌர்ணமி விழாவுக்கு ஸ்ரீ
ஆண்டாள் திருக்கோயிலிலிருந்து திருக்குடையும், வைஜயந்திமாலையும்
வருடந்தோறும் அளிக்கப்படுகின்றன.
-=-=-=
ஓம். வெ.சுப்பிரமணியன்
2009/8/26 devoo <rde...@gmail.com>:
2009/8/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
நிறையச் சொல்லுங்கள்.
பக்தி என்பது மனப்பக்குவமே!
மனம் கனியும் போது கல்லும் பேசும்.
அதுவரை அதுவும் கல்! இவனும் கல்!
க.>
2009/8/27 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>:
அரங்கன் நலம்தானே?
சபையில் இன்னும் சில பேர் உட்கார்ந்து இருக்கின்றனர். ஆண்டவன் கட்டளையைக் கேட்க ;-)
அடியேன் கூறுவதில் பிழையுண்டோ ?
தேவ்
இந்த வேங்கடேஷ் திருவாய்மொழிக்காக நெடும் காலம் நிற்க வைத்துவிட்டாரே!
அவன் நிற்கிறான் என்றான், அவனுக்கு பலமிருக்கு!
நமக்கேது ஸ்வாமி பலம்? ஆலாய் பாயும் மனதிற்கு அமுதன்ன சொற்களன்றோ மாமருந்து!
அரங்கரும், வேங்கடவரும் விரைவில் பிரசன்னமாக!
க.>
2009/8/29 devoo <rde...@gmail.com>:
ரெ.கா.
On Aug 26, 1:57 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> ஆனால் நாம் பக்தி என்ற பெயரில் மிஞ்சிப் போனால்
> நம்பிக்கையை வளர்ப்போம். அது யாராவது ஏதாவது கேள்வி கேட்டால் உடனே
> சொத்தென்று உட்கார்ந்துவிடும். உடனே அடுத்த கேள்விக்கும் கேள்வி
> கேட்பவரைக் கண்டும் பயப்பட ஆரம்பித்து விடுவோம். கேள்வி கேட்காத
> ஒத்துப் போகின்ற சமத்தான ஆட்களாகப் பார்த்து சத்சங்கம் என்ற
> பெயரில் குதுகுதுன்னு நமக்குள் பேசிக் கொள்வோம். இதுதான் நாம்
> முக்கி முக்கி அடையும் பக்தி, நம்மைப் பொறுத்தவரை.
>
எனக்குப் புரியவில்லை. புரிந்தவர் சொல்லுங்கள் என்று ஒதுங்கினால் கண்ணனும் தேவும் விடுவதாக இல்லை. கண்ணன் ஏதோ சொல்லப் போகிறார் என்று பார்த்தால் நீ ஏன் நிறுத்திவிட்டாய் என்று நம்மைச் சாடுகிறார். அதெல்லாம் இல்லை. தொடர்வதற்கான திருக்குறிப்பு இப்பொழுதான் தென்பட்டது. செல்லும்வரை செல்க.ரெ கா வேறு வந்துவிட்டாரா? பின் அனைவரின் உற்சாகத்திற்கும் குறை இருக்காது.பக்தி என்பது என்ன என்று என்னால் சொல்ல முடியுமா தெரியவில்லை. ஆனால் அது என்ன இல்லை என்பது எனக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்த ஒன்று. நிச்சயம் அது உணர்ச்சிகள் அன்று. பக்திக்கான அத்தனை புற சேஷ்டைகளும் உணர்ச்சிகளுக்கும் ஏற்படலாம். ஆனால் எத்தனைதான் உணர்ச்சிகளைக் கொட்டிக் கவிழ்த்தாலும் அந்தப் பெருக்கம் உள்ளே அந்தர்முகத்தில் பக்தி என்ற நிலையாகப் பரிணமிக்காது.நாம் சொல்லிக்கொண்டிருந்த விஷயத்தையே எடுத்துக் கொண்டால் ஆத்மஹத்தி, அதன் முகாந்தரமாக எழும் உணர்ச்சிகள் பக்திக்கு எந்த விதத்திலும் சம்பந்தமற்றது. தீக்குளிப்பவர்கள் கூட அல்ப காரணங்களுக்கு பொசுக்கென்று எரிந்து விடும் போது இந்த மாதிரி புற நிகழ்குலைவுகள் பக்திக்குப் பதிலாக நம் கவனத்தில் இடம் பெற்றுவிடும் அபாயம் உண்டு. எனவேதான் பூர்வாசாரியர்கள் மிகக் கவனமாக இந்த மாதிரி நிகழ்வுகளை வைத்து எந்தக் கருத்தமைப்பும் உருவாக்குவதில்லை. அதனால்தான் நான் கூறியது, 'அறிவைப் பூரணமாக உள்வாங்கியது பக்தி என்று புரியாதவரை நாம் அரிச்சுவடியைக் கூட அறியாதவர்களே' என்று. அறிவுக்கும் பக்திக்கும் எட்டாம் பொருத்தம் ஆயிற்றே எப்படி அறிவை பக்தி உள்வாங்கும், அதுவும் முழுக்க உள்வாங்கும் என்றெல்லாம் எண்ணங்கள் எழும். நீங்களும் தியானம் செய்யுங்கள் அந்த எண்ணங்கள் மீது. நானும் சற்று கடந்த பின்னர் பதில் அளிக்கின்றேன். ஆனால் இங்கும் ஒன்று அறிவுக்குச் சம்பந்தப் படாதது, எதிரானது பக்தி என்று சொல்வது சுத்த அபத்தம் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் நேர்முகமாக அது என்ன என்று சொல்வதில்தான் அதன் பரப்பையெல்லாம் உள்வாங்கி உரைக்க சட்டென்று முடிவதில்லை. அவ்வாறு அறிவுக்கு எதிராக பக்தி என்று கூறிக்கொள்வதெல்லாம் மக்கள் தாமே வளர்த்துக்கொண்ட ஏதோ நம்பிக்கைகள், உணர்ச்சிகள் இவைகளைத்தாம். நம்பிக்கைகள் உணர்ச்சிகள் இவைகளுக்கும் பக்திக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை. இது எனக்குக் கையிலங்கு நெல்லிக்கனி. சரி அதுதான் என்ன என்று கேட்டால் ப ப ப என்று தடவ வேண்டியிருக்கிறது. பரமஹம்ஸராகவோ, பராங்குசராகவோ, பூர்வாசாரியராகவோ இருந்து தொலைத்திருந்தால் பரவாயில்லை. பாமரனாய் இருந்துகொண்டு பாதி புரிந்து பாதி புரியாத அவஸ்தை. அமைதியாக இருந்து கௌரவத்தைக் காப்பாத்திக் கொள்ளலாம் என்று பார்த்தால் அது பொறுக்கவில்லை சில புண்ணியவான்களுக்கு.இந்த பக்திதான் எப்பொழுது ஏற்படும்? நாம் நமக்குக் கைகண்ட 'நிகழ்வுகளை ஊடுருவிப் புரிந்து கொள்ள முயலுதல்' என்ற அரைகுறை வழியிலேயே செல்வோம்.ஒரு பல்லக்கு. ஸ்ரீமான் ஒருவர் அமர்ந்து செல்கிறார். தெருவில் ஒரு காட்சி. ஒருவன் வீட்டு வாசலில் கிடந்து காக்கும் நாயை மற்றொருவன் கொன்றுவிட்டான். நாய்க்கு உரியவன் அவனைக் கொன்றான். பின்பு கொலையில் முடிந்த தன் செய்கை தனக்கு தண்டனை வாங்கித்தராமல் போகாது என்ற உணர்வு வர தானும் தன்னைக் கொன்று உயிர் முடிந்தான். ஒரு அரைமணி நேரம் நிகழ்ச்சி நடந்திருக்கலாம். பார்த்துவிட்டு 'ச்சொ ச்சொ' என்று சொல்லியபடி போயிருக்கலாம். ஆனால் பல்லக்கு ஸ்ரீமான் தன்னுணர்த்தியில் வேறு எங்கோ போய்விட்டார்.ஒரு க்ஷுத்ர ஜந்து. அது தன் வாசலைப் பற்றிக் கிடந்தது என்ற ஒரே காரணம் பற்றி அதன் மரணத்துக் பொறாத எசமானன், ஒரு தேகாத்ம அபிமானி, அவன் செய்த செய்கை, தன் உயிரையும் குடித்த அவன் செய்கை, உடலே பிரதானம் என்று வேறு சிந்தையற்ற ஒருவன் அவ்வாறு தன்னை அண்டிய ஒரே காரணத்திற்காக ஒரு அல்பப் பிராணிக்கு இப்படிப் பரிந்து வருவானேயானால்...............என்ன தவறு செய்தோம் இதுநாள்?.........நம்மைக் காப்பாற்றிக்கொள்ள நாமா? ....... தூங்கும் போது நிலை குலைந்து மறந்து யார் கல்லைத் தூக்கிப் போட்டாலும் கேள்வி கேட்பாரற்றுத் தூங்குகிறோமே நாமா நமக்கு ரட்சகன்?............வயிற்றில் நாம் நிர்மூடமாக கைகால் விரிக்க வழியிலாதே கிடந்தோமே அதுகால் நமக்கு உணவும் உயிரும் வைத்துப் பந்தல் பரிமாறியது யார்? நாமா ரட்சித்துக் கொண்டோம்?.......இப்பொழுது நன்றாய் இழுத்து இழுத்து மூச்சு விடுகிறோமே இது நம் யத்தனம்தானோ?.......தூக்கம் வந்து நம்மை அழுத்தும் போது சோர்ந்து விழுகிறோமே ( ஓடுகிற வண்டி என்றும் பார்க்காமல் அடுத்தவன் தோளில் பத்துக்கு இருபது தடவை விழுந்து மன்னிப்பு கேட்டு கேட்டு பின் மீண்டும் விழுகிறோமே) அதுவும் நம் சங்கல்பம் தானோ? உயிர்நிலை, உயிர்ப்புநிலை, தூக்க நிலை, உணவுநிலை என்ற அடிப்படையான எதுவுமே நம் ரட்சகத்தில் இல்லாமல் நம்மை நாம் காக்க புறப்பட்டோமே ...... இந்தப் பேதைமை...... தேகாத்ம அபிமானியான ஒரு சேதனன் வாசலைப் பற்றிக்கிடந்த ஒரு நாய் அந்த அறிவிலியின் இந்த ரட்சகத்துக்கு இடமாகும் என்றால் .......அந்தப் பரம சேதனனின் வாசலைப் பற்றிக் கிடந்தால் இந்த சைதன்ய வஸ்துவைக் காப்பாற்ற அவன் ரட்சகம் தப்பும் வழி எதுவுமே இல்லையே! ஈதுணராது போக்கினேன் வாழ்நாள்!.......இல்லை வாழா நாள்....என்னுடைய வியாபாரம், இயக்கம் என்பது என்ன தேருகிறது?.....இன்னும் அந்தப் பெரியவர் ஆழ்ந்து சிந்தனையில் சிந்தை இறந்த நிலையில்தான் இருக்கிறார். எனக்குத்தான் கொஞ்சம் மூச்சு முட்டுகிறது. வந்துவிட்டேன். என்ன ஆயிற்று? ஸ்வ வியாபாரம் விட்டார். தானாக இயங்கும் இயக்கெல்லாம் கழண்டது. கைகால் அசைக்கவும் தன் சங்கல்பம் எதுவும் அற்ற நிலை. எல்லாம் ஒரு சில நொடிகளில். பல்லக்கிலிருந்து இறங்கவும் பெரும் பாடு. யார் இறங்குவது? யாருக்கு அதிகாரம்? ஏதோ ஆய்விட்டது என்று மற்றவர்கள் எடுத்துவைத்திருப்பார்கள் போல. அப்படியே தேய்த்து தேய்த்து நகர்ந்து திருக்கண்ணமங்கை கோயில் மரத்தடியை அண்டியவர்தான்.......இப்பொழுதும் அங்குதான் இருப்பார். பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் பார்க்கிறோம் என்ற ஸ்வவியாபாரத்தை விட்டுக் காட்டவே கண்டால் தென்படுவார் போலும்.என்ன பக்தி என்பது புரிகிறதா ? புரியவில்லையென்றால் கவலைப் படாதீர்கள். நீங்க நம்ம ஸெட்டு.
புரியாதவர் பேசுவது போலவா இருக்கிறது !
ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்தியே பக்தி; ஞானத்தின் முற்றிய நிலையே
ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்தி என்பதைத் தெற்றென விளக்கி விட்டீர்கள்
அனைவருக்கும் புரியும்படியான நடையில்.
தேவ்
ஏதோ பேசவாவது முடிகிறதே! அதற்கே முதிர்ச்சி வேண்டும் போலுள்ளதே! ;-)
”உயிர்நிலை, உயிர்ப்புநிலை, தூக்க நிலை, உணவுநிலை என்ற
அடிப்படையான எதுவுமே நம் ரட்சகத்தில் இல்லாமல் நம்மை நாம்
காக்க புறப்பட்டோமே ...... ”
நம்மை, நாம் எனும் செயற்பாடுகளும் அவனுக்கு புறப்பாற்பட்டதோ? உண்பது,
களிப்பது, உறங்குவதுமாகிய செயல்களையும் செய்து சம்சார வியாபாரத்தை
நடத்துவது யார் எனும் கேள்வி எழுகிறது.
அரங்கன் சந்நியில் தீயிற்கு தன்னை இரையாக்கிய பெருமகனாருக்கும்
இவருக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவிலை. ஒன்றில் உடனே உயிர் போனது,
மற்றதில் “மற்றோர்” கவனிப்பில் கிடந்ததால் நாள் கழித்து போனது.
இவையெல்லாம் நமக்கொரு பாடம். பேசுபொருள் அவ்வளவே.
”தெரியவில்லை” எனத்தாங்கள் சொல்வதை நிராகரிப்பு என எடுத்துக்
கொள்ளக்கூடாது என்று புலப்படுகிறது. அதுவொருவகையான ஏக்கம். அவ்வேக்கமே
உயர்நிலை உந்துதல். ஹரி!
க.>
2009/8/30 devoo <rde...@gmail.com>:
Apperception என்ற ஒன்றை இலக்கிய விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள்.
ஒரே இலக்கியப் படைப்பை வாசிக்கும்போது ஒவ்வொரு வாசகனுக்கும்
ஏற்படுகின்ற உணர்வு.
பக்திக்கும் இதைச் சொல்லலாம். காதலுக்கும் இதைச் சொல்லலாம்.
புணர்ச்சிக்கும் சொல்லலாம். குழந்தையைக் கொஞ்சுவதற்கும் சொல்லலாம்.
இப்படிப் பார்க்கும்போது பக்தியை மட்டும் ஏன் விஷேசமாகக் கருதவேண்டும்
என்ற கேள்வியும் ஏற்படுகிறது.
அவரவர் உணர்வதை அவரவர் அவரவருக்குள் வைத்துக் கொள்ளவேண்டும் போல.
"அந்தர்முகம்" மிக முக்கியம்.
ரெ.கா.
On Aug 29, 9:58 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
>>
> பக்தி என்பது என்ன என்று என்னால் சொல்ல முடியுமா தெரியவில்லை. ஆனால்
> அது என்ன இல்லை என்பது எனக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்த
> ஒன்று. நிச்சயம் அது உணர்ச்சிகள் அன்று. பக்திக்கான அத்தனை
> புற சேஷ்டைகளும் உணர்ச்சிகளுக்கும் ஏற்படலாம். ஆனால் எத்தனைதான்
> உணர்ச்சிகளைக் கொட்டிக் கவிழ்த்தாலும் அந்தப் பெருக்கம் உள்ளே
இப்படிப் பார்க்கும்போது பக்தியை மட்டும் ஏன் விஷேசமாகக் கருதவேண்டும் //
ஏனெனில் பக்தி அழிவில்லாமல் எல்லையின்றி வளர்வதால்;அதைத்தானே நாரத பக்தி
ஸூத்ரம் உள்ளிட்ட பக்தி இலக்கியம் பன்னிப் பன்னிக் கூறிவருகிறது.
உலகியல் சார்ந்த காதல் ஒரு புள்ளியில் முடிவுற்று விடுகிறது.
தேவ்
சரி ஒருவர் உணர்ச்சிகளின் விளிம்பில் நின்று தீவிர செயலில் போகிறார் என்றால் மற்றொருவரோ எந்தச் செயலும் அற்று இயக்கற்று மயக்கற்று அமர்ந்துவிடுகிறார். செயலின் உச்சத்தையோ செயலின் ஒழிவையோ பக்தி என்று சொல்லிவிட முடியாது என்பது புரிகிறது வேறு எது புரிகிறதோ இல்லையோ.ஆனால் நம் மனமோ உள்ளத்தின் ஆர்பாட்டங்களில் நன்கு பழகிய காரணத்தால் எதையுமே அந்தக் கணக்கில்தான் போட்டு வாங்குகிறது. எனவேதான் இன்பம் என்றே சொல்லத்தகாத ஒரு யந்திர நிரல் கோவையை இன்பம் என்று சொல்லாடி, அதின் அடிப்படையில் ஒன்று பேரின்பம், நாம் அறிந்தது சிற்றின்பம் என்றெல்லாம் மாற்றுச் சொல்லாடி மலைகிறோம். இன்பம் ஒன்றுதான் அதை இதுவரையில் நாம் அறிந்ததேயில்லை என்பதுதான் ஈறுதேரும் உண்மை. ஐயோ அதை உணரும் வரையில் என்ன போராட்டம், என்ன பேதைமை! என்ன மயக்கம்! செயல் சிறந்தார் வாழ்வும் செயல் இறந்தார் வாழ்வும் நமக்குப் புதிர் என்றால், இன்பம் ஒன்றையே நாடி ஓடுகின்ற வாழ்வு என்று நினைத்துக் கொண்டிருந்த நமக்கு இன்பம் என்பதே இதுவரை அறியாப் புதிர் என்பது உணர வரும் கணத்தில் என்ன வெட்கம் பிடுங்கித் தின்னுகிறது! பின் என்னதான் அறிந்தோம் புரிந்தோம் துய்த்தோம் தொடர்ந்தோம் துணையாகித் தொல்லைப் பேய்த்தேர்க்குப் பரியாகித் தவித்தோமடா!இதில் பக்தி என்பதைப் பற்றி நா கூசாமல் பேச நாணம் எழவில்லையே. ஐயன் பரமஹம்ஸரின் கதையில் வரும் கிணற்றுத்தவளையாய் மற்றவரைக் கோணப் பார்வை பார்க்கிறோம்! கடல் தவளை வந்து கடலில் இருந்து வருகிறேன் என்றால் அதைப் புரிந்து கொள்ள நாம் கடல் என்பதைப் பார்த்திருந்தால்தானே? கிணற்றை விட்டு வெளியேறிஅறியாத பவுசுக்கு 'உன் கடல் என்ன இங்கிருந்து இதுவரை இருக்குமா?' என்று குதித்துக் காட்டிய கூபஜோதியை விட நாம் என்ன சிறந்துவிட்டோம்? ஒன்றுமில்லை அறிவு பூர்வமாக ஒருவர் பேசினால் நம் கிணற்று பக்திக்கு என்ன ஆங்காரம் வருகிறது? ஆனால் செயல் இறந்தார் வாழ்வில் இப்படியும் ஒரு நிகழ்வு:--செயலற்று மரத்தடியே கிடந்த திருக்கண்ணமங்கை ஆண்டானுக்குக் கூடப்படித்த தோழர் ஒருவர். அவர் நாஸ்திகர். அவர் இந்த நிலையில் இவரோடு வந்து பேசிக்கொண்டிருப்பதாக வருகிறது. ஆண்டானுக்கு நம்மைப் போல் உண்மையான பக்தி இருந்தால் என்ன செய்து இருக்க வேண்டும்? 'அப்பா நீ என்னதான் கூடப்படித்திருந்தாலும் நாஸ்திகன். போ போ என் பக்தி கெட்டுவிடும். உன் முகத்தில் கூட முழிக்கக் கூடாது' என்று இருந்திருக்க வேண்டுமே? ம் ம் அது எல்லாம் இல்லை. ஆழ்ந்து ஈடுபட்டுச் சொற்கள் பரிமாறப் படுகின்றன. சரி நாஸ்திகரையாவது மாற்ற முயல்கிறாரா? அதுவும் இல்லை. அவர் அவராகவே இருக்கிறார். இவர் இவராகவே இருக்கிறார். ஆனால் இருவருக்கும் இடையில் பரிமாற்றம் நடக்கிறது. இப்பொழுது சொல்லுங்கள். ஆண்டானிடம் நம்மைப் போல் உண்மையான பக்தி இருந்திருக்குமா என்ன? நமக்குக் காதல் தெரியும், ஐம்புலனுக்குப் பின் குறையோ முறையோ என்றோடி அதை இன்பக் கணக்கில் எழுதத் தெரியும். அங்கும் இங்கும் குதித்துக் கடலையே கிணற்றுக்குள் அடக்கத் தெரிந்த தவளை நம்மிடம் பிச்சை வாங்க வேண்டும். நமக்குத் தெரியாத பக்தியா? இது என்னவோ புதுசாக இருக்கிறது. சரி விடுங்கள் நம் பெருமை யாருக்குத் தெரிகிறது?நாஸ்திகத் தோழர் கேட்கிறார் ஆண்டானிடம், ஆண்டான் கோயில் வளாகத்தில் சுத்தம் செய்வதைப் பார்த்து, அதாவது திருவலகிடுதலைப் பார்த்து. 'செயல் ஒழிந்த நிலையில் இது என்ன பயனை உத்தேசித்துச் செய்யப் படுகிறது? திருவலகிடுவதால் மட்டும் போந்த பயன் என்ன?'எது நாஸ்திகம் எது பக்தி? இவருக்கு ஏன் மனம் அங்கு ஓடுகிறது? அவர் ஏன் இவரோடு பேசுகிறார்?ஆண்டானின் பதில்: 'இங்கு இடம் தூயமையாக இருக்கிறது. திருவலகிடாத அந்த இடத்தில் இடம் தூய்மையற்று இருக்கிறது. கண்ணுக்கு நேர் தெரியும் இந்தப் பயனைக் கண்டுமா இந்தக் கேள்வி?'கொஞ்சம் நாம் பிள்ளைக் கதவு வழியாக இருவரின் மனோபாவத்துக்குள் புகுந்து கொண்டால்தான் புரியும். தோழர் ஆண்டானைப் பற்றி சிந்தித்து சிந்தித்து அவருடைய உலகத்தினுள் புகுந்து கேள்வி கேட்கிறார்.நமது கடைத்தேற்றத்திற்கு என்று நாம் எதுவும் கைகால் முடக்க வழியில்லை என்று செயல் ஒழிந்தீரே ஐயா! இப்பொழுது இப்படிக் கோவில் அலகிடுதல் முதலிய அனுஷ்டானங்களைக் கையாளுகிறீரே இதனால் போந்த பயன் என்ன? நீரோ தான் தனக்காக முனைவது என்ற தன்முனைப்பை விட்டவர். பின் தான் முனைந்து தனக்காக அனுஷ்டிப்பதாகிய இந்த ஸ்வப்ரவ்ருத்திக்கு என்ன பயன்?சரியான கேள்வி! இந்த அளவு நெடுக உள்போந்து இந்த நிலையில் கேள்வி கேட்பதானால் நான் பேசாமல் நாஸ்திகனாய் இருந்து விடுகிறேன் ஸ்வாமி! இது என்ன மனத்தின் அனுசாரம்.ஆண்டானின் பதில் தோழரின் சித்தாந்தத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு வருகிறது. பிரத்யக்ஷமாகத் தெரிகின்றதற்கு மேல் பரோக்ஷமாக எதைப்பற்றியும் பேசுவது எதற்காக என்பதுதானே நாஸ்திகத்தின் கடைப்பிடி. அந்த நிலையில் இருந்து பார்த்தால் கண்ணுக்குத் தெரிந்த ஓரிடம் சுத்தமாக ஆகிவிட்டது. மற்றோரிடம் அசுத்தமாகவே காண்கிறது. இதுதானே திருவலகு இட்டதின் பிரத்யக்ஷ பலன். அதற்கு மேல் அதற்குப் பலனாக நாஸ்திகனான நீ எதை எதிர்பார்க்கிறாய்? நானோ இதை எதை உத்தேசித்தும் கர்மமாக அனுஷ்டிக்கவில்லையே! அவனுடையது இந்த உடல் அவனுடையது இந்த மனம் அவனுடையது இந்த அஹம் என்று ஸ்வபிரவ்ருத்திக்கான அடிப்படைகள் எல்லாம் தீர்ந்து நிகழும் செய்கைகள் கைங்கர்யத்தில் அன்றோ புகுரும். கர்மக் கணக்கில் ஏறாதே!சரி நீங்கள் ஏற்கனவே புருவத்தை நெரிப்பது தெரிகிறது. என்னடா இவன் உண்மையாக வியாக்யனங்களில் இருக்கும் செய்தியைக் கூறுகிறானா அல்லது சுயக் கச்சேரியா என்று பார்க்கிறீர்கள். இதோ வியாக்யானத்தில் வரும் வண்ணமே தந்துவிடுகிறேன் :-" திருக்கண்ணமங்கையாண்டான் அங்கே ஒரு திருமகிழடியிலே இருந்து சருகைத் திருவலகிடா நிற்க, கூட வாசித்து நாஸ்திகனாயிருப்பான் ஒருவன், "பகவான் உபாயம்; நாம் அநந்யப்ரயோஜனர்; இப்போது இந்த க்லேசத்துக்குப் பலமென்?" என்ன, திருவலகிட்ட இடத்தையும் இடாதவிடத்தையும் காட்டி, "இவ்விடமும் அவ்விடமும் இருந்தபடி கண்டாய்க்கு ஒரு பலமும் இல்லையென்று தோற்றியிருந்ததோ?" என்றான்.(திருவாய்மொழி 9-2-1 ஈடு வியாக்கியானம்; வைணவ ஆசார்யர்களின் வாழ்வும் வாக்கும், Dr M A வெங்கடகிருஷ்ணன், கீதாசார்யன், திருவல்லிக்கேணி, எண் 765)சும்மா முரண்டு பிடிக்கக் கூடாது. நாம் இதுவரை பக்தி என்பதை அறிந்ததே இல்லை. நாம் சொல்லிக் கொள்வதெல்லாம் வெறும் க்ளிஸரின் வேலை.
`அது` என்னவென்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டு `இது` `அது`
இல்லையென்று எப்படித்தெரிகிறது? அறிவு உணர்வைச் சாப்பிட்டு விழுங்கும்
போது இது. கவனம் ;-)
க.>
On Aug 30, 6:56 pm, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> >
> என்னைக் கேட்டால் பாமரத்தனமான பக்திதான் உண்மையான பக்தி என்று நான் சொல்லுவேன்
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
இந்த அறிவு கிறிவு எல்லாம் எதற்கு என்கிறீர்களா?
ரெ.கா.
பக்தி என்பது பெரும் ஆறாக இருக்கலாம். ஆனால் குடிக்கும்
வாயும் வயிறும் சிறுத்தேதானே இருக்கின்றன. அது நிறையும்வரை
குடித்தால் போதாதா?
ஆறு பெரிது என்னும் அறிவும் (உணர்வும்?) நாம் குடிக்க முடிந்தது
இவ்வளவே என்னும் அறிவும் (உணர்வும்?) போதாதா?
இதற்கு மேல் ஏங்குவதில் பலனுண்டா?
பக்திக்கு மட்டுமல்ல. அறிவுக்கும் இதுதான் விதி. ஆனால் வயிறு போல்
அல்லாமல் அறிவின் கொள்கலன் ஏற்பதற்கு ஏற்ப விரிந்து கொடுக்கிறது.
ரெ.கா.
On Aug 30, 6:08 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> சரி ஒருவர் உணர்ச்சிகளின் விளிம்பில் நின்று தீவிர செயலில்
> போகிறார் என்றால் மற்றொருவரோ எந்தச் செயலும் அற்று இயக்கற்று
> மயக்கற்று அமர்ந்துவிடுகிறார். செயலின் உச்சத்தையோ செயலின்
> ஒழிவையோ பக்தி என்று சொல்லிவிட முடியாது என்பது புரிகிறது
கமலம்மே! ஒரு சின்ன க்ளூ! சிற்பிகள் விக்ரகம் உருவாகும் போது எல்லாம் முடித்துக் கடைசியில் கண்ணைத் திறப்பார்கள். கண்ணைத் திறக்காத விக்ரகங்கள் பூசைக்கு வாரா.
2009/8/31 Kamala Devi <saahi...@yahoo.com.sg>
பாரதி வாக்குப்படி `பக்தி என்றொரு நிலை` (a status! remember my earlier
quote on Quantum State).
மற்றது ரெ.கா புரிதல் படி, `கொள்கலன்` (capacity).
அதுவொரு நிலை. அந்நிலையின் போது பூரண அமையில் இருக்கலாம், அழலாம்,
தொழலாம், ஆடிக்களிக்கலாம், நம் வினை நினைந்து நாணிக் கவிழலாம். இப்படியான
10 வகையான நிலைகள் பற்றி பாகவதம் பேசுகிறது.
நம் கொள்கலனுக்கு ஏற்றவாறு இந்நிலைகள் அமைகின்றன. சிலருக்கு ஒன்று
பிடிபடலாம், சிலருக்கு இரண்டு, சிலருக்கு மூன்று. எம் சடகோபனுக்கு 10ம்
ஒரே நேரத்தில் பிடிபடுகிறது. அவனைப் போன்ற ஞானதேசிகன் யாரும் இல்லை.
இல்லையேனில் மெத்தப்படித்த ஆச்சார்யர்கள் அவனைத் தம் குலகுருவாகக் கொள்ள
வேண்டியதில்லை. ஆனால், அதே ஆழ்வாரே பிரேம பக்தியில் அழுது தவிக்கிறார்.
`கார்முகில் வண்ணனே கதறுகிறேன்` என்பது ஆழ்வார் வசனம். சாதாரணப் புலம்பல்
இல்லை. வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறுவார்களே அம்மாதிரியான
நிலை!
எனவே நமது பக்குவம் என்னவோ அதற்கேற்றவாறே பக்தியும் நமக்குக்
கைகூடுகிறது. கொள்கலன் சிறிதென்றால் உடனே நிரம்பிவிடுகிறது. சும்மாக்
கோயிலுக்குப் போய் வருவது ஒரு பக்தி. கொள்கலன் கூடும் போது பக்தியும்
கூடுகிறது. ஒருவருக்கு பக்தியில் செயல் இழந்துவிடுகிறது. கல்லினுள்
தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் காப்பளிக்கும் இறை என்னைக் காக்காதா?
எனும் நிலை. ஒருவருக்கு பக்தியில் மதியிழந்து விடுகிறது. காக்கும்
தெய்வம் கண்ணன் இருக்கும் போது கண்ணனைக் காக்க இவர் உயிர் விடுகின்றார்.
ஆனால் அது சும்மா நிகழ்ந்துவிடவில்லை. பல நூற்றாண்டுப் புரிதலின் உச்ச
வெளிப்பாடாக அது அமைகிறது. இல்லையெனில் கண்ணனுக்கு திருக்காப்பிட வேண்டிய
அவசியம் ஆழ்வாருக்கு ஏன் வருகிறது? (பல்லாண்டு, பல்லாண்டு). ஆனால்
சிலருக்கு அவனைக் கல்யாணம் செய்தால்தான் பக்தி பூரணமாகிறது. ஆண்டாள்,
மீரா இவர்கள் இருந்த நிலையை நம்மால் எண்ணிக்கூடப் பார்க்கமுடியுமோ?
வெறும் பயித்தியங்கள்! என்று சொல்லலாம். அவர்களே தங்களைப் பேயேன்
என்றுதான் அழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் பயித்திய நிலைக்கும் பக்தி
நிலைக்கும் நிறைய வேறுபாடுண்டு. பக்தி உள்ளோரிடம் அண்டி அருள் பெற
முடிகிறது. பயித்தியத்திடம் அது முடியாது. ஒன்று அருள் மழை பொழிகிறது.
மற்றது பினாத்துகிறது. பயித்தியமாக இருந்தால் திருவாய்மொழி எனும்
அமரத்துவத்தை அருளமுடியுமோ?
ஏதோ அவன் அருள் வேண்டி நிற்கும் சாதகப் பறவை போல் நிற்க முயற்சிக்கலாம்.
நம் கொள்கலன் கூடுமா? என வேண்டி நிற்கலாம். `குலம் தரும், செல்வம்
தந்திடும், அடியார் படுதுயர்` யாவும் களைந்திடும் என்று ஆழ்வார்
சொல்வதால் நம் கொள்கலன் கூட வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.
வாழ்க மனமே கைவிடேல். உயிரும் உடலும் மங்கவொட்டேல்.
க.>
2009/9/1 K R A Narasiah <naras...@gmail.com>:
*நம் கொள்கலன் கூட வாய்ப்புள்ளது*
கோலோகத்திலும், வைகுந்தத்திலும் கட்டாயம் கூடுகிறது.
இவ்வளவு துரம் பேசிவிட்டு மேலும் அவநம்பிக்கைக்கு யாரும்
இடம் தரக்கூடாது.
தேவ்
பக்தி வேறு, அறிவு வேறு. அறிவு ஓரிடத்தில் இருந்தால் அது கேள்விகள்
கேட்டுக் கொண்டேயிருக்கும், அதற்கு அறிவது முதன்மை; ஆனால் பக்தியோ
அனுபவம். இதை அறிவுப்பூர்வமாக ஆராயக்கூடாது.
பக்தனுக்கும், பயித்திற்குமுள்ள வேறுபாடு என்று 10 அடுக்குவார் பரனூர் பெரியவர்.
உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?
அதுவொரு சுவையான அலசல்!
க.>
2009/9/1 devoo <rde...@gmail.com>:
சுவாமி சிவானந்தர் சொல்வார்:
மூட நம்பிக்கையை விட மோசமானது மூட அவநம்பிக்கை!
நரசய்யா |
--- On Mon, 8/31/09, devoo <rde...@gmail.com> wrote: |
தன் உணர்வு அற்றுப் போகும் சமயங்கள் பல. நீங்கள் சொல்லும் ஒரு காட்சி.
மலையருவியைக் கண்டு மலைக்கும் போது `நான்` இல்லாமல் போய்விடுகிறது. மிக
அழகிய நடனத்தை, ஓவியத்தை, கவிதையைக் கண்ணுறும் போது `நான்`
அழிந்துவிடுகிறது. பெரிய மலையிலிருந்து ஒரே தாவலாகக் கீழிறங்கும் ஐஸ்
ஸ்கேட், பங்கிஜம்ப், கிளைடிங் போன்ற செயல்களின் போதும் `நான்` அற்றுப்
போகிறது. குழந்தை ஆழ்ந்து படிக்கும் போது ஆள் அரவமே இருப்பதில்லை. `நான்`
இல்லாமல் போகிறது.
உங்களுக்கு அப்போது தோன்றிய உணர்வை தியானம் என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி.
எப்போதெல்லம் இரைச்சல் இல்லையோ. அப்போது தியானம் வந்து அமர்கிறது. நமது
இரைச்சல் எது என்று விளங்கியிருக்கும் ;-)
க.>
2009/9/1 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
ரெ.கா.
இந்த மண்ணின் மரபு இது. இவர்களை விட நமக்கு வேறு என்ன authority வேண்டும்?
ஆயினும் பக்தி எனும் உணர்வு தமிழனுக்கு மட்டும் சொந்தமில்லை. அது
மானுடத்திற்குச் சொந்தம். சென்றமுறை நான் மலேசியா வந்த போது எனது
பேச்சுக்களுக்கு நடுவில் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் (ஆண்/பெண்)
என்னிடம் சமயம் பற்றிப் பேசினர். அவர்கள் எல்லாம் பக்தியுள்ள
முசல்மான்கள். எனக்கு அது சத் சங்கமாகவே பட்டது. கம்போடியாவில் கண்ணாடியை
அருவியில் தொலைத்து விட்டு மாற்றுக் கண்ணாடிக்காக காத்திருந்த போது ஒரு
பிலிபினோ கிறிஸ்தவப் பெண் எனக்கு துணை கொடுத்தாள். அவளது கிறிஸ்தவம்
பக்தி பூர்வமான கிறிஸ்தவம். அதுவும் எனக்கு சத் சங்கமே.
க.>
2009/9/1 karth...@gmail.com <karth...@gmail.com>:
தேவ்
அக்காலத்தில் ஆண் வேட்டையாடினான். வெளியே திரிந்தான். பின்னால் சமூக
அமைப்பு தோன்றியபோது போர்த் திட்டமிட்டான். ஒருவரையொருவ்ர் கொன்று
குவித்தான். இவையெல்லாம் ஆணுக்கேயுள்ள குணங்கள். அதே ஆளுமை உள்கிடந்து
ஊறும் இறைமையைப் பற்றிப் பேசும் போதும் முன்னின்று புகல்வது
வேடிக்கையாகக்கூட உள்ளது.
பெண் என்பவள் அடிப்படையில் உறவு சார்ந்து இய்ங்கிறாள். ஒரு கருவை
பத்துமாதம் சுமக்கிறாள். அக்கரு படும் வேதனையை உள்ளுணர்வாக அறிகிறாள்.
பிறந்து மண்ணில் விழுந்தவுடன் அழும் முதல் குரலுக்கு தாய்ப்பால் எனும்
மருந்தை தன்னுடலிலேயே தயாராக வைத்திருக்கிறாள். குழந்தை சிரித்தால்,
சிணுங்கினால் அவளுக்கு அதன் பொருள் புரிகிறது. ஒருமுறை நேஷனல்
ஜியோகிராபிக் எழுதியது. ஆப்பிரிக்காவில் முதுகில் பிள்ளையைச் சுமந்து
கொண்டு ஒரு ஆப்பிரிக்கப் பெண். நடந்து கொண்டே இருந்தவள், சட்டென நின்று
பிள்ளையை இறக்கிவிடுகிறாள். அது ஒண்ணுக்குப் போகிறது. குழந்தைக்கு
இன்னும் பேச்சு வரவில்லை. அதன் உடல் அசௌகர்யம் இவளுக்குப் புரிகிறது.
அதன் உடல்மொழி புரிகிறது. எப்படிக் கண்டுபிடித்தாய்? என்று இவர்கள்
கேட்கிறார்கள். உள்ளுணர்வுதான் காரணம் என்கிறாள் தாய்.
இந்த உள்ளுணர்வு. தன்னுள்ளே இருந்து இயங்கும் ஒன்றை அறியும் உணர்வு
அவளுக்கு இயற்கையாகவே உள்ளது. எனவே பக்தி என்பதை உணர்வு பூர்வமாக
அறிந்தவள் பெண்தான்.
ஆனால் ஆண் சக்தி படைத்தவனாக இருக்கிறான். எல்லாவற்றையும் இயக்குகிறான்.
முடிவுகள் எடுக்கிறான். வழி நடத்துகிறான். சாஸ்திரங்கள் எழுதுகிறான்.
தர்மபரிபாலணம் செய்கிறான். பெண் இதை உவப்புடன் ஏற்றுக் கொள்கிறாள். தர்ம
பரிபாலணம் செய்யும் அச்சக்தியிடம் பிஞ்சு பிள்ளைகளை பரிவுடன் அணுக
வைக்கிறாள். குழந்தைக்காக பரிந்து பேசுகிறாள். இதைப் புருஷாகாரம்
என்கின்றனர் பெரியோர்.
பெண்ணின் வழி நடத்தல் இன்றி பக்தியைப் பூரணமாகப் புரிந்து கொள்ளுதல் கடினம்.
கண்ணன்
கடந்த நாலு நாட்களாக பிஸியில் ஆபரேடிங் சிஸ்டம் ஔட். பூட் ஆகவில்லை. போகட்டும் தானாக எப்பொழுது கூடி அமைகிறதோ அப்பொழுது மீண்டும் வந்து எழுதலாம் என்று இருந்துவிட்டேன். என்ன மிஞ்சிப் போனால் தேவ் வருத்தப்பட்டிருப்பார். கண்ணன் ஒழிந்தானய்யா ஒருவழியாக என்று மற்ற இழைகளில் கவனம் செலுத்தியிருப்பார். இதுவும் ஒருவித மரணம்தானோ? புனரபி ஜனனம் புனரபி மரணம் என்றதின் ஒருவேர் இந்த வழியாகவும் ஓடுகிறதோ? ஆபரேடிங் சிஸ்டம் அவுட்டு என்றால் உள்ளே நுழைய முடியாது. வெளியிலிருந்து நான் என்ன கத்தினாலும் உங்கள் காதில் விழப்போவதில்லை. இங்கு உங்களோடு தொடர்பு கொள்ளும் அமைப்பில், வடிவில், முறையில் தொடர்பு கொண்டால்தான் மகிழ்வோர் மகிழவும், மற்றோர் காணவும் முடிகிறது. மின்தமிழைப் பொருத்தவரையில் இப்பொழுதுதான் நான் உளனானேன். ஆனால் முன்னாலும் நான் இருந்தேன். 'அர்ஜுனா! நீயும் நானும் அக்காலத்தும் இருந்தோம். இவர்களும் இருந்தார்கள். இனியும் எக்காலத்தும் நீயும் நானும் இவர்களும் இல்லாமல் இருக்கப்போவதில்லை.' 'இந்த ஜீவன் கர்மங்கள் தீர்ந்த இந்த உடலை பழஞ்சட்டையைக் கழட்டி எறிவதுபோல் எறிந்துவிட்டு, புத்துடல் தேடி புறப்படும் மரணத்தில்.' 'வருவதற்கோ போவதற்கோ கலங்கான் பண்டிதன்'. கூட்டிக்கழித்துப் பார்த்தால் எல்லாம் சரியாகத்தான் வருகிறது. ஜீவனுக்கான ஆபரேடிங் சிஸ்டம்தான் கரண களேபரம் என்னும் சதுர்விம்சதி தத்துவங்களால் ஆன உலகு - உடல் - உயிர் போலும். கர்மமும், காலமும் வினை மடுப்பானும், மடுக்கும் வாயும் போலும். சரி இதில் ஆத்மா என்ன செய்கிறது? சாட்சி என்கிறது வேதாந்தம்.'பொய்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை' வேண்டுகிறது குருகூர் நம்பியின் குறுகாத பக்தி.சரி வேண்டுவது யார்? அவர் இருபத்தி நான்கு தத்துவக் கட்டில் சேர்ந்தவரா? அல்லது தனியா? இல்லை கணக்குப் பாடத்தில் போல அப்படி என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா? கடைசியில் கழித்துக்கட்ட.பூர்வாசாரியர்களிடத்தில் மிக ஜாக்கிரதையாக கேள்வி கேட்க வேண்டும். ஒருவர் பாவம் என்னைப் போன்றவர். மோட்சம் பெற வழி என்ன என்று கேட்டுவிட்டார். மோட்சம் என்றால் என்ன? 'இந்த ஆத்மா கடைத்தேற' எதிலிருந்து இது கடைத்தேற வேண்டும்? 'என்னது. இந்த ஸம்ஸாரத்தில், உடல் தளையில் மாட்டிக்கொண்டு பாடாய்ப் படுகிறது'. அவரவர் பொருளுக்கு அவரவர் கவலைப் படும் பொழுது நீ ஏன் நடுவில் கிடந்து அல்லாடுகிறாய்? 'என்னது மோட்சம் எனக்குன்னா?'இந்த ஆத்மா பகவத் அதீனம். எனவே அதில் உனக்கு அதிகாரம் இல்லை. பேசாமல் இரு. இந்த உடல் கர்ம அதீனம். அதிலும் உனக்கு அதிகாரம் இல்லை. இதில் நடுவில் கிடந்து அல்லாடுகிறாயே நீ யார்? 'என்னது நான் நான் நான் ' இதைத்தான் ஊழிதோறூழி சொல்லிக் கொண்டே இருக்கிறாய். என்ன திக்குவாயோ! யாரென்று சொல்லி முடித்தபாடில்லை.யானாய் என்னில் நிறைந்தானை என்கிறது ஆழ்வாரின் பக்திக்குள் நிறைந்த ஞானம். 'அஹம் பிரம்மாஸ்மி' என்கிறது உபநிஷத ஞானத்திற்குள் நிரம்பி வெளிப்பொசியும் பக்தி.இப்படி ஆளுக்கு ஆள் அஞ்ஞானத்தையும், அரைகுறை ஞானத்தையும் விரட்டினால் அது எங்கே போகும், பாவம்! எனக்குள் வந்து ஒண்டிக்கொண்டு 'தயவு செய்து என்னைக் காட்டிக் கொடுத்து விடாதே' என்று கெஞ்சுகிறது.
இப்படி ஆளுக்கு ஆள் அஞ்ஞானத்தையும், அரைகுறை ஞானத்தையும் விரட்டினால் அது எங்கே போகும், பாவம்! எனக்குள் வந்து ஒண்டிக்கொண்டு 'தயவு செய்து என்னைக் காட்டிக் கொடுத்து விடாதே' என்று கெஞ்சுகிறது.
ரங்கன் அண்ணா இன் full form. நடக்கட்டும் ராஜ பாட்டை!
ஒரு குழுச் சார்பு,கொஞ்சம் பிடிபடாத நடை இவை காரணமாக ஈட்டின்
ப்ரேமையும்,ஞானமும் தோய்ந்த அருமையான பகுதிகளைத் தமிழர் காலம் காலமாகப்
புரிந்துகொள்ளாமல் போனது எனக்கு மிக வருத்தமே.அரங்கனார் மனம் வைத்தால்
அவற்றை அரங்கில் பகிர்ந்து கொள்ளமுடியும் என்று கோரியதும் உண்மை.
இடையூறு நேரக் கூடாது என்று விஷ்வக்ஸேனரையும் அழைத்தேன் மற்றோர் இழையில்.
வருத்தமும் தீர்ந்து மகிழ அரங்கனும், அரங்கனாரும் திரு உள்ளம் பற்ற
வேணும். ஐயங்கள் இருப்பின் அன்பர்கள் தயங்காமல் தெரிவித்துப் பங்கு பெற
வேண்டும். இது ஓர் அழகிய துறை.
தேவ்
ஈடு உலாவரப்போகிறது எனில் என் போன்ற ஈக்களுக்கு அங்கென்ன வேலை?
கப்சிப் காராவடை! அரங்கனார் ராஜபாட்டை அவருடையது. வழிக்கடை இளனிக்கடை நான்!
க.>
2009/9/6 devoo <rde...@gmail.com>:
" ஞானோதயம் "
ஈக்களோடு ஈக்களாய் குப்பைத்
ஒரு திடீர் ஞானோதயம்
தேனீயாய் மாறி பூக்களோடு நேசம்
தமிழ்ப் பூக்களோடு வாசம்
தமிழ்தான் என் ஸ்வாசம்
வர் கட்டளை என்பதை நான் ஆண்டவன் கட்டளை என்று எண்ணிவிட்டேன் ;-)
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
க.>
2009/9/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
> " ஞானோதயம் "
திருவிளக்குப் பிச்சனைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
ஏதோ என இழுப்பதற்கு அவர் செய்த கைங்கர்யம் என்ன சாமானியமானதா?
ஈடு விரிவுரை கேட்க எழுந்த அரங்கனை அதட்டி மீண்டும்
அரவணைமேல் கிடத்த வேண்டும் என்றால் அவர் எத்தனை தகுதி வாய்க்கப்
பெற்றவராய் இருந்திருக்க வேண்டும்?
ஈடு பல அரிய விஷயங்களை விரைந்து சொல்லிக்கொண்டு போகும்.உட்பொருள்
புரியும்போது வியப்பும், ஆனந்தமும் ஏற்படும்.
ஓர் உத்தம அதிகாரி நம்மில் இருக்கும்போது அடியேன் பேசத்துணிவது பொருந்தாத
செயல்.
தேவ்
திருவிளக்குப் பிச்சன் கதையை உங்கள் நடையில் சொல்லுங்களேன்.
சுவாரசியமாக இருக்கும். பிரவச்சன சம்பிரதாயத்தின் பெருமையைச்
சொன்னதாகவும் இருக்கும்.
பாட்டிற்குத்தான் தெய்வம் இற(ர)ங்கும் என்றில்லை என்பதைச் சுட்டும்
நிகழ்வுகள் அறியப்பட வேண்டியவையே!
எதிர்பார்ப்புடன்,
க.>
2009/9/6 devoo <rde...@gmail.com>:
ஏனு ஸ்வாமி? மோஹன ரங்கா! ஆசி. இதுயாருக்கு விடுத்த கோபப் பதில். சொன்னால் புரியும்.. இன்னும் தெளிவாக ‘பக்தி’ பற்றி எழுதக் கோருகிறேன்...இந்தச் சின்ன மர மண்டையில் ஏற மாட்டேன் என்கிறதே!, யோகியார் --- On Tue, 9/8/09, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote: |
|
To: mint...@googlegroups.com |
கிளைக் கேள்வி.
பக்தி ஞானத்துக்கான ஒரு படிதானே! கடைசிப் படி?
ஞானம் அடைந்த பின்னும் பக்தி தேவையா? இருக்குமா?
ரெ.கா.
On Sep 9, 2:18 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> நாங்கள் எல்லாம் இதுநாள் வரையில் பக்தி, வழிபாடு, நம்பிக்கை,
> பிரார்த்தனை என்று தோய்ந்துகொண்டுதான் இருக்கிறோம். நீயாகப் புதிதாக
> வந்து பக்தி புரியாது என்று சொல்லி, இது வரையில் நாம் பக்தி
> என்பதையே அறிந்ததே இல்லை என்று கதை விடுகிறாய். நீ வேண்டுமானால்
> தறிகெட்டு அலைந்திருக்கலாம். போனது போக இப்பொழுதாவது புரிந்துகொள்.
> அதை விட்டுவிட்டு உனக்குப் புரியவில்லையென்றால் ஊருக்கே புரியவில்லை
*விடிய விடிய பகவத் விஷய அரட்டையிலேயே போது போக்கிய பட்டர்,
ஆழ்வார்களின் ஈரச்சொல் கொண்டு வந்தார் உள்ளம் நனைத்து வரம்
தந்த வாழ்வினராய்ப் போது போக்கி.....*
*பெருமாளுக்கு இரண்டு துளசி, பிரசாதம், ஜலம், சமர்ப்பித்து
ஆழ்வார்களின் பாசுரம் கொண்டு இரண்டு பாடி 'அழகியமணவாளா' என்று
கண்ணீரும் கம்பலையுமாக வணங்கியவர் உடனே போனகம் செய்ய
அமர்ந்துவிட்டார்.*
அவனுடனேயே , அவனிலேயே வாழ்வது பக்தி.இது சரியா ?
அதனால்தான் முகம் மாறாமல் வேற்றூர் செல்வதுபோல் அவரால்
அரங்கத்தைப் பிரிந்து பரமபதம் செல்ல முடிந்தது.
தேவ்
Sep 8, 11:18 pm, srirangammohanarangan v
கேட்டவர் சகல சாஸ்திர பண்டிதர். வேள்வி வல்லவர். ஸோம யாஜி. அவருக்குப் பூஜை என்றால் இப்படியாம். இவருடைய இயல்பை வைத்து நன்கு நிரூபித்துப் பார்க்கும் போது இதுதான் சரியாம்.
அடியேனும் கொடுத்து வைத்த கோஷ்டியில்...
தேவ்
> இவையெல்லாம் சொல்லின் பல்லூழியும் பல்லாங்குழியாய்ப் போம் படி
> பரந்துவிடும். அப்புறம் கண்ணன் பாவம் கடு கடு என்று இது
> மின்னாக்கத்துக்காக இருக்கிற குழுமமாக்கும், இப்படி கச்சேரி
> பண்ணினால் என்ன செய்வது என்று சலித்துக் கொள்வார். நமக்கேன்
> வம்பு?
பரமாத்துமாவும் ரங்கனும் ஒண்ணு. இரண்டும் புரியாது!
இவ்வளவு பரமார்த்தமான விஷயம் பேசிக்கொண்டு இருக்கும் போது கூடவே இந்த
கொணஷ்டை எதற்கு?
இரண்டையும் ஒரே நேரத்தில் எப்படிக் கலந்து கொடுக்கமுடிகிறது?
இதற்கும் ஈடு ஏதாவது உதாகரணம் கொடுக்கிறதோ;-) ?
க.>’
பிகு: நான் என்றாவது உம்மைத்திட்டி மின்தமிழில் எழுதியதுண்டா. புகழ்தலில்
குறைவா என்று கேட்டதுண்டு. அது தப்பா ;-)
> முக்கோல் பகவர் தாயாகி விடுகிறார். வலுவான ரட்சையாக இட்டவாறே
> கொண்டுசென்று ஸ்ரீராமானுஜரிடம் காட்டுகிறார். அவரோ குழந்தைமையைப்
> பார்க்கத் தெரிவதில் பரிபூரணர். அகவிதழைப் புறவிதழ் ஏந்துமாப்போலே
> அழகுற ஏந்தி உச்சி முகர்கிறார். விந்தை! என்ன இது த்வயம்
> கழ்கிறது! என்று வியந்து கூறுகிறார்.
ரங்கன்! கண்கள் பனிக்கின்றன.
இந்த திவ்ய சரிதங்களை இந்தப்பரந்த மின்வெளியிலும் கூறும்படி நியமித்தான்
பாரும் உம்மை!
நாங்கள் பாக்கியவான்கள். உமக்கு ரக்ஷை கட்ட வேண்டும்.
கண்ணன்
2009/9/13 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> மாட்டிக்கிட்டாரு ஐயா மாட்டிக்கிட்டாரு! காசுமி கண்ணன் என்று
> கையெழுத்து போட்டுவிட்டாரே!
என்னைப் போன்ற வெறும் கண்ணன்களுண்டு.
அண்ணாகண்ணன்களுமுண்டு
பிறகு நினா கண்ணன்
கோகுலகண்ணன்
கண்ணபிரான்
தாமரைக்கண்ணன் இப்படி.
அவரும் ஒரு கண்ணன் போலும்!
எல்லோரும் இருக்கட்டும்.
வெறும் கண்ணன்
On Sep 13, 10:54 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> மாட்டிக்கிட்டாரு ஐயா மாட்டிக்கிட்டாரு! காசுமி கண்ணன் என்று
> கையெழுத்து போட்டுவிட்டாரே!
>
> On 9/13/09, காசுமி <kasume.c...@gmail.com> wrote:
வாசித்ததுமுதல் ஜீர்ணமாகாமல் மூளைக்குள் சுற்றிக்கொண்டிருக்கும்
இவ்வரிகள் !! பரமனுக்கு அந்தர்வ்யாப்தியும் இல்லை; பஹிர்வ்யாப்தியுமில்லை
என வரம்பு கட்டும் ஒரு பத்ததி.
இதோடு ஒப்பு நோக்கிய வண்ணம் நேரம் கழிகிறது.அகடித கடனா சக்தியை
மறுத்ததாகுமே எனவும் ஒரு பதற்றம்.இது பற்றிப் பேசினால் அன்பர்களுக்குச்
சுவைக்குமா என்றும் ஒரு தயக்கம்.
தேவ்
ரங்கன், முன்னமே சொன்னது போல் எம்பெருமானார் சபையிலும் சரி, இந்த
அரங்கனார் சபையிலும் சரி, விசாரத்திற்குத்தடை ஏது?
இன்னும் கூட கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன். அதன் நுட்பொருள்
நுகர்வோம்!
க.>
வ்யாப்தி - எங்கும் பரந்து நிறைதல் : இது எம்பெருமானுக்கு இயல்பாக அமைந்த
எல்லையற்ற தன்மைகளுள் ஒன்று. ’உடனிருந்தறிதி’, ’கரந்தெங்கும் பரந்துளன்’
என்றெல்லாம் இத்தன்மை ஆழ்வார்களால் அனுபவிக்கப்படுகிறது.
அவன் தன் ஸ்வரூபத்தோடு ஒரு பொருளில் உறைந்து விட்டால் மற்றொரு பொருளில்
தங்குவதற்கு என்ன எஞ்சும் ? இது ஒரு கேள்வி.
உள்ளீடற்ற ஒன்றை அணு என்கிறோம்; அதனுள் அவனுக்கு உறைதல் (அந்தர்வ்யாப்தி)
உண்டா ?
எங்கும் பரந்ததை ‘விபு’என்கிறோம்;அதற்கு வெளியேயும் பரந்து உறைவதற்கு
இயலுமா (பஹிர்வ்யாப்தி)?
இவை துணைக் கேள்விகள்.
விடை:
இத்தன்மைகளை நிலை நிறுத்துவதற்கான அளவற்ற ஆற்றல் வாய்க்கப் பெற்றவன்
ஸர்வேச்வரன். இயலாத ஒன்றையும் முடிக்கும் ஆற்றலும் அவனுக்கு இயல்பாக
அமைந்த தன்மை ஆகும்; அதை ‘அகடிதகடநா ஸாமர்த்யம்’என்பர்.இத்தன்மை கொண்டு
அவன் அனைத்திலும் உள்ளும்,புறமும் நிறைந்து
விளங்குகிறான் என முடிவு கட்டுவர்.
’அணோ: அணீயாந்,மஹத: மஹீயாந்’, ’பராஸ்ய சக்தி: விவிதைவ ச்ரூயதே
ஸ்வாபாவிகீ .....’ போன்ற மறைமொழிகள் இதற்குத் துணை செய்வன.நம்பிள்ளைகள்
முதல் கேள்விக்குச் சொன்ன விடை மிக அருமையானது.
புரிந்து கொண்ட அளவு பொருள் சொன்னேன்.
அரங்கனார் இன்னும் சீரிய முறையில் விளக்கம்தர வல்லவர்.
தேவ்
அதனாலதான் அவன் அவனா இருக்கான். நாம் நாமா இருக்கோம். செய்ய முடியும்ன்னு
தோணாததைக்கூட செய்ய முடியுமில்லையா அவ்னாலே?
என் 2 பைசா
:-)
திவா
Nonlocality பற்றிப் பேசும் போது 'எல்லாம்', எச்சமயத்திலும் தொடர்புடன்
இருக்கின்றன என்பது சித்தாந்தம். அது எப்படி சாத்தியமாகும்? நான், என்
உடல் தனியாக, நிற்கிறது. நீ, உன் உடல் தனியாக நிற்கிறது. என்று நாம்
நடைமுறையில் காண்கிறோம். எல்லாம் பாத்தி கட்டிய அமைப்பாகவேதான் உள்ளன.
அதாவது ஒவ்வொரு செல்லும் தன்னை சவ்வு (membrane) மூலம் பிரித்தாள்கிறது.
அதே போல்தான் அணுவும்.
ஆனால் கூர்ந்து கவனித்தால், இப்பாத்தி நீர்புகாத்தன்மையுடன்
இருப்பதில்லை. செல்லுக்கு உள்ளும் புறமும் சதா போக்குவரத்து இருந்து
கொண்டே இருக்கிறது. உடலுக்கு ஒன்பது வாசல் தொடர்புண்டு. அணு என்று
பார்த்தாலும், புரோட்டான், எலெக்றான் (இலத்திரன்) இவைக்கு நடுவே வெளி
இருக்கிறது. வெளியே எல்லாவற்றையும் இணைக்கிறது. அப்பரவெளியாக சர்வேஸ்வரன்
அமைந்துள்ளான்.
இதனால்தான் நாராயணன் என்ற சொல் என்னை அப்படியே ஸ்தம்பிக்க வைக்கிறது.
எவ்வளவு பொருள் உள்ள சொல் அது.
அவன் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக உள்ளான். அவைகளை இயக்குபவனாகவும் உள்ளான்.
கற்றையியல் பார்வையில் இது தெளிவாகவே உள்ளது. அவன் பரந்து விரிந்த
விபுவாக இருக்கும் போதே அந்தர்யாமியாக செல்லின் கருவாகவும் உள்ளான். மிக
எளிய அமைப்பின் மூலம்.
கண்ணன்
இதை அடிக்கடி இங்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருங்கள். மறந்துவிடுகிறது ;-)
க.>
ஆதி சங்கரர் அனைத்துக்குமான தொடர்பை ‘ப்ரோதா’ என்றும், எக்காலத்திலும்
விளங்கும் தன்மையை ’ஜகத் ஸாக்ஷி’ என்றும் கூறுவார் - ’யா ப்ரஹ்மாதி
பிபீலிகாந்த தநுஷு ப்ரோதா ஜகத் ஸாக்ஷிணீ’ ..' ( நான்முகன் முதல் எறும்பு
ஈறாக ஒரே தொடராக விளங்கும்.....)
அறிவியலும்,மெய்யியலும் கருத்தளவில் ஒத்திசைந்து செல்கின்றன; அவை
சொல்லும் மொழி வெவ்வேறு.
தேவ்
அப்பாடி! எதையெடுத்தாலும்
> அகவுலகின் பிரதிபலிப்புதானா? இப்பொழுதுதான் புரிகிறது 'அஹங்காரம்
> என்ற ஆர்ப்பைத்துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாதபேர் அடியான்
> என்பதிறே'
ரெண்டுமே சரிதான்!
திவா
மோனை பொருந்திய உரைநடை அமைப்புக்கும் பூருவர்கள் முன்னோடிகளாயிருந்தனர்
போலும்.
ஈடு பற்றிய இந்த உரையாடல் பல அரிய செய்திகளைத் தரும் என்று
எதிர்பார்க்கிறேன்.
தேவ்
எது பக்தி என்று திரு ரங்கன் அவர்கள் எழுதியதைப் படித்தேன்
எப்போதுமே பெரியவர்கள் தெளிவாக சொல்வார்கள்
தெளிவாக ,மிகத்தெளிவாக சொல்லிக்கொடுத்து நம்மைக் குழப்புவதில் வல்லவர்கள் பெரியவர்கள்
பக்தி என்றால் என்ன என்று யோசித்து யோசித்து ஏற்கெனெவே குழம்பியிருக்கும் மனதை
திரு ரங்கன் அவர்கள் தன்னுடைய ஆழமான, அழுத்தமான, பொருட்செறிவு நிறைந்த, வியாக்யானங்களால்
இன்னமும் அதிகமாகக் குழப்பி விட்டார்
அவருக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்கிறது
தெளிவாக இருப்பவர்களைத்தான் குழப்ப முடியும் என்கிற உண்மை
அதனால் குழம்பியிருந்த நம்மைத் தெளியவைத்து
மிக நுணுக்கமாக நம்மைக் குழப்பி விட்டார்
ஒரு புறம் அலகு குத்திக்கொண்டு சாமியாடி வருகிறார்கள்
மறு புறம் காவடி சுமந்து ஆட்டமாடி வருகிறார்கள்
ஒருவர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து தன் உடலையே உருளையாக்கி உருண்டு கொண்டிருக்கிறார்
ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு எதிரே இருக்கும் விக்ரகத்துக்கு செய்யப்படும் அபிஷேக, அலங்காரங்களையும்,
நைவேத்யங்களையும், கற்பூர தீபாராதனைகளையும் காணாமல்
தனக்குள்ளே ஆழ்ந்து கொண்டிருக்கிறார்
இன்னொருவர் கண்ணை அகலமாக வைத்துக்கொண்டு இறைவனையே பார்த்துக்கொண்டு மனமுருக வேண்டி கொண்டிருக்கிறார்
ஒரு பெண் தன் மெல்லடியால் மூவடி அளந்த மாயனைப் போல மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து கை கூப்பி நடந்துகொண்டிருக்கிறாள்
அடிப் ப்ரதக்ஷணம் என்று சொல்லுகிறார்கள்
ஒருவர் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தபடி
கன்னத்தில் தன் கைகளாலேயே தப்படி போட்டுக்கொண்டு நிற்கிறார்
இறைவனுக்கு நீராட்டம், அலங்காரம் ,செய்து கற்பூர தீபாராதனை செய்யும் அர்ச்சகர் வெறித்த பார்வையாய் இருக்கிறார்
அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித:
என்று மறை கூறும் முடிவும் இஃதே.
அனைத்தையும் பார்த்து விட்டு திரு ரங்கன் அவர்கள் எழுதிய எது பக்தியும் படித்துவிட்டு
நாம் இது அந்தர் இது பஹிர் என்று வ்யவஹாரம் செய்கிறோம். இது அன்று தத்துவப் பார்வை. ஏனெனில் நடுவில் அமர்ந்து பட்டுவாடா செய்கிறோமே இந்த நாம் எங்கு இருக்கிறது? அந்தரிலா? பஹிரிலா? இரண்டுக்கும் மீறி நடுவாந்தரத்திலா?
ஓ அதனால்தான் கத்திமேல் நடப்பது போல் வாழ்வு என்கிறார்களோ
வாயிற்படியை மிதிக்காதே என்கிறார்களோ
பக்தி என்னும் இறை நம்பிக்கையே
மனிதர்களுக்கு ஒரு பற்றுக்கோல்
நாம் பற்றிக் கொள்ள ஒரு பிடிமானம் இருக்கிறது என்னும் நினைவே பக்தி
குழந்தைக்கு தாயின் கையைப் போல, அல்லது தகப்பனின் கையைப் போல
அந்த பக்தி என்னும் இறை நம்பிக்கை மட்டும் இல்லையென்றால்
வாழ்வில் விரக்தி ஒன்றுதான் மிஞ்சும்
கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு கையில் கிடைக்கும் ஒரு சிறு மரக்கட்டையைப் போல,
பக்தி இல்லாதவனுக்கு அந்த நேரத்தில் அந்த மரக்கட்டை கண்ணிலும் படாது, கண்ணில் பட்டாலும் உதவாது
பதட்டம்தான் மிஞ்சும்
எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலுமே பக்தி செய்ய முடியவில்லை
ஒன்று அவன் திருவடி, அல்லது மீண்டும் பிறவாத ஒரு நிலை
இரண்டில் ஏதோ ஒன்றை எதிர் பார்த்துதானே அவர்களும் பக்தி செய்தார்கள்
ஆண்டாளும் அரங்கன் தன் மணாளனாக வேண்டும் என்னும் நினைப்போடுதானே சூடிக் கொடுத்தாள்..?
ஆகவே
" பக்தி பக்தி வரைத்தன்று
செயப்பட்டார் சால்பின் வரைத்து "
இறைவனைப் பார்த்து எது பக்தி என்று கேட்டேன்
" போயி வேலையைப் பாரு "
என்று ஒரு இதமான அசரீரி கேட்டது
அன்புடன்
தமிழ்த்தேனீ
இந்தத் தமிழ்த் தேனி ஒரு ரௌஸு பிடித்த பேர்வழி. குறுக்க மறுக்க ஓடி எதிலேயோ கையை வைத்துவிடுகிறார் !!
On 9/19/09, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:
எது பக்தி என்று திரு ரங்கன் அவர்கள் எழுதியதைப் படித்தேன்
எப்போதுமே பெரியவர்கள் தெளிவாக சொல்வார்கள்
தெளிவாக ,மிகத்தெளிவாக சொல்லிக்கொடுத்து நம்மைக் குழப்புவதில் வல்லவர்கள் பெரியவர்கள்
பக்தி என்றால் என்ன என்று யோசித்து யோசித்து ஏற்கெனெவே குழம்பியிருக்கும் மனதை
திரு ரங்கன் அவர்கள் தன்னுடைய ஆழமான, அழுத்தமான, பொருட்செறிவு நிறைந்த, வியாக்யானங்களால்
இன்னமும் அதிகமாகக் குழப்பி விட்டார்அவருக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்கிறது
தெளிவாக இருப்பவர்களைத்தான் குழப்ப முடியும் என்கிற உண்மை
அதனால் குழம்பியிருந்த நம்மைத் தெளியவைத்து
மிக நுணுக்கமாக நம்மைக் குழப்பி விட்டார்
ஆகவே
" பக்தி பக்தி வரைத்தன்று
செயப்பட்டார் சால்பின் வரைத்து "
இறைவனைப் பார்த்து எது பக்தி என்று கேட்டேன்
" போயி வேலையைப் பாரு "
என்று ஒரு இதமான அசரீரி கேட்டது
அன்புடன்
தமிழ்த்தேனீ
தமிழ்த்
தேனிகண்ணதாசனுக்கு
அனுபவமே நான்தான் எனச்சொன்ன இறைவன் தங்களுக்கு நம் பணி தொடரலே சேவையே தொண்டே தான் என்று சொல்லியிருக்கிறான். பக்திக்கு அருமையான விளக்கம் . மிக அருமைமிக்க
அன்புடன் சொ.வினைதீர்த்தான்
ஆகவே
" பக்தி பக்தி வரைத்தன்று
செயப்பட்டார் சால்பின் வரைத்து "இறைவனைப் பார்த்து எது பக்தி என்று கேட்டேன்
" போயி வேலையைப் பாரு "
என்று ஒரு இதமான அசரீரி கேட்டது
அன்புடன்
தமிழ்த்தேனீ
நானும் ரவுசு (இதன் மூலம் செங்கிருதமா?) பிடித்தவன்தான்!
தெரிந்த விஷயம்தானே!
பக்தி பற்றிப் பேசும் உங்கள் திறந்த மனப்பன்மை எனக்குப்
பிடிக்கிறது. பக்தி என்பதை விரல் சுட்டிச் சொல்லிவிட முடியாது
என்பது போல்தான் தொனிக்கிறீர்கள். அதுதான் யதார்த்தம் எனப்
படுகிறது.
ஆனால் இப்படியே பேசிக்கொண்டே போய், ஒரு கட்டத்தில்,
இப்ப்டியெல்லாம் பேசுவதில் பிரயோஜனமில்லை. "பகவத்
கீதையில் கண்ணன் ஏற்கனவே சொல்லியிருக்கிறான்"
அல்லது "ஆழ்வார்கள் அப்போதே சொல்லிவிட்டார்கள்" என்று
சிவப்பு நாடா கட்டி இந்தக் கோப்பை மூடிவிடுவீர்கள் என்ற
அச்சம் எனக்கு இருக்கிறது.
ஏற்கனவே நமது ஆன்மீகப் பாரம்பரியத்துக்குள் எல்லாம் சொல்லப்
பட்டுவிட்டது; வேறு இடத்தில் தேடுவானேன் என வாய்
அடைக்கப் பட்டிருக்கிறேன்.
எனினும் இந்த விசாரணைப் பாட்டை, அதில் காணுகின்ற தத்துவ
நுணுக்கங்கள், மேற்கோள்கள், மனம், மூளை (அந்தர், பஹிர்) பற்றிய அலசல்கள்
அனைத்தும் எனக்குப் பிடிக்கின்றன. நீங்கள் சொல்லும் விதம் மிக
அழகு. ஆகவேதான் விடாமல் படிக்கிறேன்.
நான் பயணி. பயண்த்தின் இறுதி அடைவு பற்றி எனக்கு அவ்வளவாக
அக்கறையில்லை (நம்பிக்கையும் இல்லை). ஆனால் உங்களோடு
பயணம் செய்வது சுகானுபவம்,. அறிவைக் கிளறும் அனுபவமும் கூட.
என்னுடைய இரண்டு தமபிடி ரவுசு இதோடு முடிகிறது.
ரெ.கா.
On Sep 19, 9:14 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> இந்தத் தமிழ்த் தேனி ஒரு ரௌஸு பிடித்த பேர்வழி. குறுக்க மறுக்க
> ஓடி எதிலேயோ கையை வைத்துவிடுகிறார் !!
>
> On 9/19/09, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
>
*கதவைத் திறந்தால் ஒரு குருவி வினோதமான முறையில்
பாரபோலா,டம்பல்ஸ் போன்ற பல வடிவங்களில் தன் இறக்கைகளை
அதிர்வுற
வீசிய படியே கிழே தரையில் என் கால்கள் நகர வொட்டாமல்
சுற்றிச்சுற்றி வருகிறது.*
*பார்த்தா தாய்முசலு அந்த எரிக்கிற பொட்டை வெளின்னு கூட
பார்க்காம என் முன்னாடி நெடுஞ்சாண்கிடயா விழுந்து அடம் பண்ணுது*
புரிகிறது - சரணாகதி வெகு இயல்பானது; நூல்களால் வலிந்து
திணிக்கப்படாதது.
நீங்கள் பழைய பார்வைகளால் புத்துலகுக்கு ஒரு விடியலைக் காட்டுகிறீர்களோ !
தேவ்
க.>
2009/9/22 devoo <rde...@gmail.com>:
On Sep 22, 1:16 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> ஏற்கனவே எனக்கு கணந்தோறும் பழக்கத்தில்
> இருக்கும் படித்த, புரிந்துகொண்ட உலகும் ஒன்றையொன்று
> முறைத்துக்கொண்டு பேச்சு இல்லாமல் நின்றன. பழைய உலகம். இந்தப்
> புதிய பார்வையை எந்தத் தட்டில் கொண்டு போய் சொருகி வைப்பது.?
> எல்லாமே அறிவுதான். இல்லை. எதுவுமே என் சொல் பேச்சைக் கேட்க
> மாட்டேன் என்கிறது. இது இன்னதுதான் என்று நான் படித்துப்
> படித்துச் சொல்லியிருந்தும் இது என்ன? இதை நான் திடுதிப்பென்று
> எந்தக் கணக்கில் கொண்டுபோய் வைப்பது? நான் குருவியோடு பேசினேன்
> என்றால் நம்பிக்கையாகிவிடும். அல்லது குழந்தைக் கதையில் வரும்
> கற்பனையாகிவிடும்.
மனம், மூளை (மனிதருக்கும் மிருகங்களுக்கும் பொதுவாகத்தான்)
செயல் படும் விதம் இன்னும் முழுதாக அறியப்படவில்லை
என்பது தெரிந்ததுதான். உங்கள் அனுபவங்கள் உண்மையானவை.
ஆனால் அவற்றைப் பிறருக்குச் சொல்லி நீங்கள் நம்பவைக்க
முடியாது. அது உங்களுக்கே உரியது. உங்களின் உண்மை.
ஆனால் இது "பொது" உண்மை ஆகிவிடாது. இதன் மூலம் நீங்கள்
எந்த ஒரு ஸ்திரமான பொது கொள்கையை/ முடிவை (deduction)
உருவாக்க முடியாது.
> 'ரொம்ப படிக்காதீர்கள். அவ்வளவாக
> உடம்புக்கு நல்லது இல்லை' என்று அக்கறையாக நல்லது சொல்வீர்கள்.
Touche!
>> சொல்லுகிறான்: --
> 'சாமி! ஒரு முசல் குட்டியைப் பிடிச்சேனுங்க. பிடிச்சிக்கிட்டு
> பொட்டைவெளியில வாரேன். பார்த்தா தாய்முசலு அந்த எரிக்கிற
> பொட்டை வெளின்னு கூட பார்க்காம என் முன்னாடி நெடுஞ்சாண்கிடயா
> விழுந்து அடம் பண்ணுது. எனக்கு என்னமோ பண்ணிடிச்சி சாமி!
> பேசாம அந்தக் குட்டிய உட்டுட்டு வந்துட்டன்' என்றான்.
முதலில் குட்டிக்கு ஒரு மருட்டல் எற்படும் தருணத்தில் ஒரு தாய் மிருகம்
போரிடத்தான் செய்யும். போரிட்டு மாயவும் கூடும். இதுதான் instinct. பொது
உண்மை.
ஆனால் வேடனின் கதை உண்மை இல்லை என்று யார் சொல்ல முடியும்?
இது வேடனுக்கே உரிய உண்மை. அவன் அனுபவித்து உணர்ந்தது. இதனைக்
கேட்பவர் எவரும் மறுக்க முடியாது.
> அறிவு, மனத்தொடர்பு, உள்ள அதிர்வு, உயிர், உயிருக்கு உயிர்
> உண்டாகும் உள்ளப் பரிமாற்றம், பக்தி இவையெல்லாம் என்ன? பழைய
> உலகினில் புதிய பார்வைகளின் விடியல் என்று கவிதை போல் ஏதோ
> எழுதிப் பார்க்கிறது என் அந்தரங்கம்.
இந்தச் சுயவிசாரணை மிகச் சரி. இதுவே இந்தச் சிந்தனைகளுக்கான தற்காலிக
முடிவு. முற்றுப் புள்ளியல்ல; அரைப்புள்ளி.
தொடரும் அல்லவா? தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
ரெ.கா.
>
சில வருஷங்களுக்கு முன்னர் ஒரு தனி வீட்டில் குடியிருந்தேன். சுற்றிலும் மரங்கள். வாசலில் கிராதிக்கு உட்பக்கம் மேடைபோல் குறடு. சைக்கிள் அங்குதான் நிறுத்துவோம். மேலே ஊஞ்சல் கட்டித் தொங்க விட கொக்கிகள். ஊஞ்சல் கட்டவில்லை பல வருஷங்களாக. எனவே குருவிகள் தங்கள் குடும்ப வாழ்க்கையை அங்கே தொடங்கி குஞ்சு பொறித்து பறக்குமட்டும் பயன் படுத்த கூட்டைக் கட்டின. கூடு இருந்துகொண்டே இருக்கும். குருவிகள் பேறுகாலத்தில் வரும் முட்டையிட்டு அடைகாக்கும். நாங்கள் எங்கள் வேலையுண்டு நாங்களுண்டு என்று போகின்றவர்கள் என்று அதற்கு யார் சொன்னார்கள்? குருவிக்கூட்டைக் கலைப்பது பாவம் என்று இளகிய மனத்தர் என்று அதன் பாஷையில் யாராவது தெரிவித்தார்களா? அது தெரியாமல் அந்தக் குருவிகள் குருட்டாம் போக்கில் கூடு கட்டிக் குடும்பம் நடத்துகின்றன என்று கூறாதீர்கள். பிரத்யக்ஷம் எனக்கு அதைச் சுத்தப் பொய் என்று நிரூபித்துவிட்டது. எனவே நான் ஒருபோதும் அதற்கு மயங்க மாட்டேன். நிச்சயம் பறவை, விலங்கு, பூச்சி, ஏன் எறும்பு எல்லாமே அறிவில்தான் இயங்குகின்றன என்ற நிச்சயம் சிறிது இயற்கையில் வாழ்ந்தாலே தெரிந்துவிடும். ஆனால் வகுப்பறை மேடைக்கு மட்டும் சில கொள்கைகள், சில வாசகங்கள், சில கோட்பாடுகள். இந்த அபத்தத்திற்கு 'ஒப்புக் கொள்ளப்பட்ட நெறிமுறைகளின் படி' என்று பெயர். இதிலும் ஒரு காரணம் இருக்கலாம். இல்லையென்றால் பொய் மலிந்து எங்கும் பூனைக்குறும்பு ஆகிவிடும். சரிதான் ஆனாலும் ஓரறிவுயிரே ஈரறிவுயிரே என்று தொல்காப்பியர் ஒண்ணாம் வாய்ப்பாடு சொல்லிப் பார்த்தாலும் உயிர் எங்கும் அறிவு இருக்கத்தான் செய்கிறது. விவேகாநந்தர் சொல்வார், ' அதோ வருகிறது கனவேகத்தில் புகைவண்டி. தண்டவாளத்தில் விரைவில் சுழலும் அதன் சக்கரங்கள். இன்னும் சற்று இருந்தால் சக்கரம் ஏறி அந்த எறும்பு நசுங்கியிருக்கும். ஆனால் லாகவமாக எறும்பு பக்கவாட்டில் நகர்ந்து எங்கு இடைவெளி ஏற்படுமோ அங்கு ஒதுங்கி தப்பித்து மீண்டும் தன் வழியைத் தொடர்கிறது. அதனிடம் சுதந்திரம் இருக்கிறது' என்று கூறுவார். உயிர், விடுதலை, அறிவு -- ஒரு வைரத்தையே திருப்பித் திருப்பிப் பல பட்டைகளில் தெரியும் ஒளி மாலைகளைக் காண்கிறோம்.நமது குருவிக்கு வருவோம். குஞ்சு பொறித்து நாட்கள் ஆகிப் பறக்கப் போகிறது என்றால் எங்களுக்கு முதல்நாளே தெரிந்துவிடும். கலகல கல என்று கூட்டில் ஓயாத பயணக் கலகலப்பு இருக்கும். send off போலும் என்று பேசிக்கொள்வோம். அப்படி ஒரு சமயம் ஏதோ அவசரம் காலை கிளம்பி சைக்கிளை எடுக்கச் சென்றேன். கூடத்திலிருந்து பக்கத்து சன்னலுக்கு வெளியே சைக்கிள் நிற்கும். கதவைத் திறந்தால் ஒரு குருவி வினோதமான முறையில் பாரபோலா, டம்பல்ஸ் போன்ற பல வடிவங்களில் தன் இறக்கைகளை அதிர்வுற வீசிய படியே கிழே தரையில் என் கால்கள் நகர வொட்டாமல் சுற்றிச் சுற்றி வருகிறது. வினோதமாக இருக்கிறது. சத்தம் கேட்டாலே ஓடிவிடும் பறவை என் எதிரில் கால்களுக்கு அருகில் என்னைத் தடுப்பதுபோல் வியூகம் போடுகிறது. ஒரு கணம் பொறி தட்டினாற் போல் உறைத்தது. அடடா பிள்ளையைப் பள்ளிக் கூடம் சேர்க்கும் 'வித்யாரம்பம்' சடங்கு நடக்கிறது போலும். இப்பொழுது வராதே என்கிறது என்று. அப்படியே ரிவர்ஸ்ஸில் பின்னால் வந்து கதவைச் சாத்திவிட்டேன். பக்கத்து சன்னலில் நின்று என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்தேன். சைக்கிள் ஹாண்டில் பார் மேல், பறக்க முயன்று புது அனுபவத்தில் நெட்டுக் குத்த விழுந்த குஞ்சு கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அழுந்த உட்கார்ந்திருக்கிறது. அப்பன் பறவை, ஆத்தாள் பறவை இரண்டும், அவற்றின் குடும்பத்தில் எந்த உறவு முறை இந்தச் சடங்கிற்கு முன் நின்று நடத்த வேண்டும் தெரியாது. இரண்டும் மாறி மாறி குரல் கொடுத்து ஊக்கம் தருகிறது. அல்லது செய்முறை குறிப்புகள் தருகின்றன. நமக்கு எல்லாமே ஒரே கிலுகிலுகிலுகிலுதான். ஒரு அரை மணி நேரம் நான் மனித உலகிற்கும் பறவை உலகிற்கும் இடைப்பட்ட உலகில் இருந்தேன். நான் ஏற்கனவே அறிந்து வைத்திருந்த co-ordinates எல்லாம் அந்த நேரத்தில் தூரவே நின்றன. பிரத்யக்ஷம், படித்த அறிவைப் புறந்தள்ளி விட்டு வேறு எங்கோ கொள்முதல் அள்ளச் சென்றுவிட்டது. குருவியோடு நான் மனத்தொடர்பு கொண்டதும், அந்தக் குஞ்சின் உபநயனச் சடங்கில் நான் கலந்துகொண்டதும், ஏற்கனவே எனக்கு கணந்தோறும் பழக்கத்தில் இருக்கும் படித்த, புரிந்துகொண்ட உலகும் ஒன்றையொன்று முறைத்துக்கொண்டு பேச்சு இல்லாமல் நின்றன. பழைய உலகம். இந்தப் புதிய பார்வையை எந்தத் தட்டில் கொண்டு போய் சொருகி வைப்பது.? எல்லாமே அறிவுதான். இல்லை. எதுவுமே என் சொல் பேச்சைக் கேட்க மாட்டேன் என்கிறது. இது இன்னதுதான் என்று நான் படித்துப் படித்துச் சொல்லியிருந்தும் இது என்ன? இதை நான் திடுதிப்பென்று எந்தக் கணக்கில் கொண்டுபோய் வைப்பது? நான் குருவியோடு பேசினேன் என்றால் நம்பிக்கையாகிவிடும். அல்லது குழந்தைக் கதையில் வரும் கற்பனையாகிவிடும். அதன் வீட்டுக் குஞ்சு பெரிசான நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் என்றால் நீங்களே என்னைத் தனியாக பார்த்து 'ரொம்ப படிக்காதீர்கள். அவ்வளவாக உடம்புக்கு நல்லது இல்லை' என்று அக்கறையாக நல்லது சொல்வீர்கள். இல்லை நம் பழைய உலகில் கொள்ளாத ப்ரத்யக்ஷமானாலும் அது நம்பக் கூடியது அன்று. என் புரையுள் சொருகிவைக்க இடம் இல்லையென்றால் அது உண்மையில் இருந்தும் இல்லாதது போல்தான். மனித உயிர் மனித உடல் மனித வாழ்க்கை இந்த ரீதியில்தான் தொடக்கமுதல் நான் மூளையில் தகவல் கவாண்களைச் சட்டம் கட்டி வைத்திருக்கிறேன். அதில் கொள்ளாதது ஏதோ ஃப்ரீக் என்று புறம் தள்ளப்படுகிறது. இங்குதான் எனக்கு ஒரு ஐயம் வருகிறது. பக்தி என்பது பழைய உலகில் புதிய பார்வையோ? ஏனெனில் இந்தச் சம்பவத்தைப் பாருங்கள். எனக்கு ஏற்பட்ட ப்ரத்யக்ஷ அனுபவம் இல்லையேல் இதற்கு பெரிதும் மதிப்பு அளித்திருக்க மாட்டேன். ஆனால் இப்பொழுது இந்த சம்பவத்தில் மனம் தோய்ந்து சுழல்கிறது. ----சேது ஸ்நாநம் செய்ய பராசர பட்டர் போனார். மீளும் போது பாதிரிக்கொடி அருகில் பொழுது சாய்ந்துவிட்டது. அக்கம் பக்கம் தங்கிச் செல்ல வீடுகள் இல்லை. ஒரு வேடன் குடிசையில் சென்று சிறிது அமர இடம் பார்த்தார்.வேடன் தான் அமர்ந்திருந்த ஆஸநத்தையும் தந்துகட்டிலைத் தட்டிப் போட்டு அமரச் சொல்லி உபசரித்தான். பட்டர் யோசித்தார். இவனுக்கு நம்மைப் பற்றித் தெரியாது. நாம் ஏதோ இவனுக்குச் செய்தோம் என்று பதிலுக்கு இவன் இதைச் செய்யவில்லை. தன்னை அண்டி வந்தான் ஒருவன் என்ற ஒரே காரணத்திற்காக இதைச் செய்தான் ஆனான். அப்படியென்றால் பகவானுடைய வீடு இந்த உலகம். இங்கு ஒண்ட நாம் வந்துவிட்டோம். நம்மை முன்பின் தெரிந்தவன், உறவு, பிடித்ததைச் செய்தவன் என்ற எந்த காரணத்தையும் முன்னிடாமல் தன் வீட்டை அண்டி வந்தான் என்ற ஒரே காரணத்திற்காக அந்த பரமசேதனனும் நம் நன்மை செய்யத்தானே வேண்டும். என்ன நினைத்திருக்கின்றானோ? என்று கூறிக்கொண்டார்.சரி போதுபோக்காக இருக்கட்டும் என்று அவனிடம் இன்று வேட்டையாடப் போனியாப்பா? ஏதாவது விசேஷம் உண்டா? என்று வினவினார். வேடன் சொல்லுகிறான்: --'சாமி! ஒரு முசல் குட்டியைப் பிடிச்சேனுங்க. பிடிச்சிக்கிட்டு பொட்டைவெளியில வாரேன். பார்த்தா தாய்முசலு அந்த எரிக்கிற பொட்டை வெளின்னு கூட பார்க்காம என் முன்னாடி நெடுஞ்சாண்கிடயா விழுந்து அடம் பண்ணுது. எனக்கு என்னமோ பண்ணிடிச்சி சாமி! பேசாம அந்தக் குட்டிய உட்டுட்டு வந்துட்டன்' என்றான். பட்டர் முகத்தில் ஈயாடவில்லை. அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தவர் நெடுநேரம் கழித்துக் கூறுகிறார்:-- இந்தச் சம்பவத்தில் பொதிந்திருக்கும் குணாதிசயங்கள் ஒரு முசல் தன் குட்டியைக் காப்பாற்ற சரணாகதியை அனுஷ்டிக்கிறது. கொடூரமே வாழ்க்கையாக உடைய வேடன் சரணமடைந்த ஓருயிரைத் தன் உணவை விட்டுக்கொடுத்தும் காப்பாற்றுகிறான். இந்த இரண்டு குணநலன்களுமே பரம சேதனனாகிய பகவான் விஷயத்தில் சம்பந்தப் பட்ட குணங்கள். அவ்வாறுதான் பிரமாணங்கள் தெரிவிக்கின்றன. கீதையில் கண்ணன் 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என் ஒருவனையே சரணமாகப் பற்று. என்று பிரபத்தியாகிய சரணாகதியை உபதேசித்தான். அவ்வாறு சரணாகதி செய் என்று இந்த முசலுக்கு யார் உபதேசித்தார்? ஸ்ரீராமாயணத்தில் 'அரி ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா' சரணமடைந்த விரோதியைக்கூட ஒருவன் தன் பிராணனை விட்டும் காப்பாற்ற வேண்டும் என்று சரணாகதி அடைந்தவனைக் காக்க வேண்டிய பொறுப்பு பற்றிக் கூறியிருக்கிறது. சர்வசக்திமானாகிய பகவான் அன்றோ அனைத்து உயிர்களையும் காக்கவல்லவன். அவ்வாறு சரணாகதி அடைந்தவர்களைக் காப்பது கடமை என்று இந்த வேடனுக்கு யார் உபதேசித்தார்கள்? எங்கோ ஒரு காட்டில் யாரோ ஒரு வேடனுக்கும் முசலுக்கும் இடையில் தன்னியல்பாக பிரபத்தி பலித்ததே இந்த விசேஷம்தான் என்ன? இயற்கையே சரணாகதிக்குத் தன் போக்கில் பிரமாணம் சொல்லுகிறதோ?---- என்று நெடு நேரம் சிந்தை வயத்தவர் ஆனார் என்று வார்த்தாமாலை அந்தத் திருக்கணத்தை ஏடுபடுத்தியிருக்கிறது.அறிவு, மனத்தொடர்பு, உள்ள அதிர்வு, உயிர், உயிருக்கு உயிர் உண்டாகும் உள்ளப் பரிமாற்றம், பக்தி இவையெல்லாம் என்ன? பழைய உலகினில் புதிய பார்வைகளின் விடியல் என்று கவிதை போல் ஏதோ எழுதிப் பார்க்கிறது என் அந்தரங்கம்.ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
எக்காலத்தில் நடந்தது இது? 70களில்?
ஹிப்பி எனும் பதம் இப்போது வழக்கில் இல்லை.
அமெரிக்கர்களை நாம் 'ஹிப்பியர்' என்று அழைத்தால் அது தவறு.
அரசியல் நடுவு நிலமை தவறிவிடுகிறது.
எந்த நாடு என்று தெரியவில்லையெனில், வெள்ளையர் என்று கூறலாம்.
க.>
நாம் நிறப்பிரிகை.
இந்தியாவில் ஊறிப்போயிருக்கும் குணமிது. குறவன் எனும் போது ஒரு இளக்காரம்
இருக்கிறது. அந்த இரு வெளி நாட்டு மனிதர்கள் இந்திய மண்ணில் வந்து உயர்
செய்கை செய்த போதும், நிறப்பிரிகை உள்ளம் அவர்களை ஹிப்பி என்று காண்கிறது
(முன்பு போலிருந்தால் மிலேச்சன் ;-).
ஏன் ஒருவரை ஒருவராக நம்மால் காண முடியவில்லை.
இந்த உள்வட்டம் வெளிவட்டம்
எனும் கண்ணோட்டம்
இல்லாமல் களித்திருப்பது
என்று காண் பராமரமே!
க.>
2009/9/22 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
எது பக்தி - பாகம் 2 ஆரம்பிக்கலாமா?
ஓல்டெரிலிருந்து நியூவர் போகச் சொடுக்கிச்
சொடுக்கி அலுத்து விடுகிறது. ஹரிகி சொன்ன
எதையாவது போட்டுக் கொண்டால்தான் உற்சாகம்
வரும்போல.
ரெ.கா.
அரங்கன்தான் ஆரம்பித்து வைக்க வேண்டும்.
ரெ.கா.
On Sep 22, 6:18 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> ஆகா! இதுதான்!
>
> நாம் நிறப்பிரிகை.
>
> இந்தியாவில் ஊறிப்போயிருக்கும் குணமிது. குறவன் எனும் போது ஒரு இளக்காரம்
> இருக்கிறது. அந்த இரு வெளி நாட்டு மனிதர்கள் இந்திய மண்ணில் வந்து உயர்
> செய்கை செய்த போதும், நிறப்பிரிகை உள்ளம் அவர்களை ஹிப்பி என்று காண்கிறது
> (முன்பு போலிருந்தால் மிலேச்சன் ;-).
>
> ஏன் ஒருவரை ஒருவராக நம்மால் காண முடியவில்லை.
>
> இந்த உள்வட்டம் வெளிவட்டம்
> எனும் கண்ணோட்டம்
> இல்லாமல் களித்திருப்பது
> என்று காண் பராமரமே!
>
> க.>
>
> 2009/9/22 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>:
>
>
>
> > அமெரிக்க குறவர்கள் என்று சொல்லலாமா..?
>
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ- Hide quoted text -
>
> - Show quoted text -
தாங்கள் கூகுள் தளத்திற்கு சென்று மின்தமிழைக் காண்கிறீர்கள் என்று
தோன்றுகிறது. நாங்கள் எல்லாம் இதற்கென்றே பிரத்யேக மின்னஞ்சல் முகவரி
வைத்துக் கொண்டு கவலை இல்லாமல் ஜாலியாக இருக்கிறோம். கூகுளார்
கேட்டவருக்கெல்லாம் சும்மா கிகா, கிகாவாகத்தருகிறார். கொள்வதில் என்ன
தடை? தங்களுக்குப் பிடித்த பெயரில் ஒரு கூகுள் கணக்கு ஆரம்பித்து
அங்கிருந்து மின்தமிழுக்கு எழுதுங்களேன்? யாருக்காக சேமிக்கிறீர்கள்?
எல்லாம் கூகுள் சேவியில்தான் நடைபெறுகிறது. அனைத்தும் அவர் அரங்கம் ;-)
ஒரு யோசனைதான்.
க.>
2009/9/22 karth...@gmail.com <karth...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
க.>
2009/9/22 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
> குறவன் என்று சொன்னாலே இளக்காரம் என்று ஏன் நினைக்கவேண்டும்