பஞ்சாங்கம் பற்றிய விளக்கம் தேவை

1,407 views
Skip to first unread message

செங்கோல்

unread,
Jul 21, 2010, 8:54:31 AM7/21/10
to மின்தமிழ்
வணக்கம்.எனக்கு பஞ்சாங்கத்தில் பல சந்தேகம் உள்ளது.தெரிந்த அன்பர்கள்
எனக்கு உதவவும்.
1.பொதுவாக எல்லா பஞ்சாங்கமும் ஒரு குறிப்பிட்ட இடத்தின் சூரிய உதயத்தை
அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகிறது.உதாரணமாக அசல் 28 பாம்பு பஞ்சாங்கம்
தஞ்சாவூர் நகரின் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொன்டு
கணிக்கப்படுகிறது.ராகுகாலம்,யமகண்டம்,முகூர்த்த லக்னம்...போன்ற சில
விஷயங்கள் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படுவதாக
கூறுகின்றனர்.அப்படி இருக்க அசல் 28 பஞ்சாங்கப்படி தஞ்சையில் சூரிய உதயம்
காலை 5.50 என்றால் அது சென்னையில் வேறு,கோவையில் வேறு,கன்யாகுமரியில்
வேறு அப்படித்தானே!.அப்படி இருக்க தஞ்சாவூரின் ராகுகாலமும் சென்னையின்
ராகுகாலமும் வேறு வேறாகத்தானே இருக்கும்?அதே போல தஞ்சாவூரில் காலை 6
முதல் 7.30வரை கடக லக்னம் என்றால் அது மற்ற நகரங்களில் மாறுபடும் தானே?

2.அதாவது ஒவ்வொரு ஊரின் சூரிய உதயத்தை வைத்து அந்த ஊரின்
ராகுகாலம்,யமகண்டம்,முகூர்த்த லக்னம் முதலியவை மாறுபடும் தானே?

3.தமிழகத்திலுள்ள ஒவ்வொரு நகரத்திற்கும் துல்லியமாக அந்த நகரத்தின் சூரிய
உதயம்,அஸ்தமனம்,அந்த நகரத்தின் ராகுகாலம்,யமகண்டம்...இன்ன பிற பஞ்சாங்க
விஷயங்களை அந்தந்த நகரத்திற்கு துல்லியமாக காண முடியுமா?
அதற்கு ஏதேனும் இணையதளம் உள்ளதா?

மேற்படி எனது சந்தேகங்களுக்கு விடை தெரிந்த அறிஞர்கள் உதவவும்.

ஆகமக்கடல்

unread,
Jul 21, 2010, 10:09:56 AM7/21/10
to மின்தமிழ்
அறிஞர்களே,எனது ஐயங்களுக்கு தயை கூர்ந்து விளக்கம் அளியுங்கள்

R.TAMIL SELVAN

unread,
Jul 21, 2010, 10:27:06 AM7/21/10
to mint...@googlegroups.com
அன்பு நன்பரே வணக்கம்.
ஒவ்வொரு ஊரின் அட்சம்சம் ,ரேகம்சம் அடிப்படையாக வைத்துதான் ஜாதகம் கணிக்கப்படுகிறது.சூரிய உதயம் இடத்துக்கு இடம் மாறுபடும், இதைத்தான் LST என்கிறோம்.லோக்கல் மீன் டைம் என்கிறோம்.
அன்புடன் தமிழ்செல்வன்.

21 ஜூலை, 2010 7:39 pm அன்று, ஆகமக்கடல் <tve...@gmail.com> எழுதியது:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

ஆதிசைவர்

unread,
Jul 21, 2010, 10:37:19 AM7/21/10
to மின்தமிழ்
ஆஹா,நல்ல கேள்விகள்,ஆனால் எனக்கு ஜோதிடத்தில் அவ்வளவாக பரிச்சயம்
இல்லாததால் என்னால் உதவமுடியாது.தெரிந்தவர் கூறலாமே!

ஆகமக்கடல் wrote:
> அறிஞர்களே,என

ஆதிசைவர்

unread,
Jul 21, 2010, 10:56:35 AM7/21/10
to மின்தமிழ்
இந்த இழையை பின்னுக்கு தள்ளாமல் அறிஞர் பெருமக்கள் இதற்கு பதில் தர
முணையவும்

annamalai sugumaran

unread,
Jul 21, 2010, 12:40:12 PM7/21/10
to mint...@googlegroups.com
 
 
ஜாதகம் என்பது அந்தந்த ஊரில் வாழும் மக்களுக்குத்தானே பார்க்கப்படுகிறது .
அவர்களுக்குத்தானே ராகு காலம் எமகண்டம் பார்ப்பது .
எனவே அப்போது அங்கே அந்த பகுதியின் சூரிய உதயத்தைப் பார்ப்பது தானே சரியாக இருக்கும் .
அனைத்து ஜோதிடர்களும் ஜாதகம் கணிக்கும் போது சூரிய உதயத்தைப் பொறுத்தே ஜனனத்தைக் கணிப்பர் .
 
நாம் ராகு காலம்பார்க்கும் பொது நமது பகுதியின் அப்போதைய சூரியோதயத்தைப் பொறுத்து ,
துல்லியமாக பார்ப்பதே பொருந்தும் .
சில சிறிய திருத்தங்கள் நாமே செய்து கொள்ளவேண்டும் .சூரியோதயம் பஞ்சாங்கத்தில் இருக்கும் .அநேகமாக எல்லா தினசரிகளும் வெளியிடுகின்றன .
என்ன? அப்போதுவேளைகளில்  நமது உடலின்  bio rythem  சரியாக இருக்காது .
எனவே முக்கிய வேலைகளை அப்போது ஒதுக்குவது நல்லது .
இவை எல்லாம் நம்பிக்கையையும் பெரும்பாலும் பொறுத்தது .
நம்பாவிட்டால் இதைப் பற்றி கவலையேப் படவேண்டியதில்லை .
 
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

ஆதிசைவர்

unread,
Jul 21, 2010, 12:54:49 PM7/21/10
to மின்தமிழ்
ஐயா,அதைத்தான் அவர் கேட்கிறார்.சரியான தமிழகத்தின் ஒவ்வொரு நகரத்தின்
சரியான சூரிய உதய,அஸ்தமனத்தை கண்டுபிடிப்பது எப்படி?

annamalai sugumaran

unread,
Jul 21, 2010, 1:21:23 PM7/21/10
to mint...@googlegroups.com
//சூரியோதயம் பஞ்சாங்கத்தில்
> இருக்கும் .அநேகமாக எல்லா தினசரிகளும் வெளியிடுகின்றன //

ஆதிசைவர்

unread,
Jul 21, 2010, 9:48:24 PM7/21/10
to மின்தமிழ்
திரு அண்ணாமலை சுகுமாரன் அவர்களே,

அவரின் கேள்வியை தாங்கள் சரியாக படிக்கவில்லையா?தமிழகத்தின் ஒவ்வொரு
நகரத்திற்கும்
கேட்கிறார்.அதாவது.சென்னை,திருச்சி,சிதம்பரம்,நெய்வேலி,கரூர்,நாமக்கல்,கள்ளக்குறிச்சி,போளூர்,தர்மபுரி...இப்படியாக
ஒவ்வொரு நகரத்தின் சூரிய உதயத்தை கேட்கிறார்.இதை எந்த தினசரி
வெளியிடுகிறது.கொஞ்சம் சொல்லுங்களேன்.நாங்களும் தெரிஞ்சிபோம்ல

வி. சு.

unread,
Jul 22, 2010, 4:57:13 AM7/22/10
to மின்தமிழ்
...

எனக்கு ஜோதிடமோ / பஞ்சாங்க கணிதமோ தெரியாது.

வடக்கு தெற்காக நேர மாற்றமிருக்காது; அதாவது தென்னிந்தியாவிலும் அதற்கு
நேர் வடக்கே இரஷ்யாவில் இருக்கும் ஓரிடத்திற்கும் நேர வேறுபாடு
இருக்காது. கிழக்கு மேற்காகத்தான் நேரம் மாறுபடும். பூமியின் சுற்றளவு
25000 மைல் / 40000 கிமீ எனக் கொண்டால், கிழக்கு-மேற்க்காக ஒவ்வொரு 27
கிமீ-க்கும் ஒரு நிமிடம் வேறுபடும்.

40000 / (24 * 60) = ~27

ஓரிடத்திலிருந்து பஞ்சாங்கம் கணித்தால், பிற இடங்களுக்குத் தேவையானதை
இதிலிருந்து தருவித்துக் கொள்ள வேண்டியதுதான். GMT + XXX என நாட்டின்
நேரம் கொண்டு கணித்தாலும் அது தவறாகத்தான் இருக்கும். ஏனெனில் நாடு
முழுவதிற்கும் ஒரே நேரம்தான் பயன்படுத்தப் படும்.

http://www.caroun.com/Geography/General/Earth.html

ஆர்.கே.சதீஷ்குமார்

unread,
Jul 22, 2010, 8:14:13 AM7/22/10
to mint...@googlegroups.com
சபரி திருக்கணித பஞ்சாங்கத்தில் நிறைய ஊர்களுக்கு துல்லியமான உதய அஸ்தமன நேரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில் இது புகழ் பெற்ற பஞ்சாங்கமாகும்.மேலும் சென்னை க்கு கொடுக்கப்பட்டுள்ள சூரிய உதய நேரம் 100 கிலோமீட்டர் வரை உள்ள ஊர்களுக்கு பொருந்தி வரும் என குறிப்பிடபட்டுள்ளது.எனவே அருகில் உள்ள பெரிய நகர சூரிய உதய நேரத்தை கணக்கிட்டுக்கொள்ளவும்.ஒரு பக்க கம்யூட்டர் ஜாதகம் (10 ரூபாய் செலவாகும்)
எடுத்துப்பார்த்தால் (கலைமகள்சாப்ட்வேர்)முகூர்த்த நாளின் சூரிய உதய நேரம் தெரிந்து கொள்ளலாம்.அதில் உங்கள் ஊரின் சூர்ய உதய நேரம் கணக்கிடபட்டிருக்கும்.ஆனாலும் அவை பக்கத்து ஊர் நகரத்திற்க்கும் உங்கள் ஊருக்கும் உதய நேரம் 3 நிமிடங்கள் அளவே வித்தியாசம் காணப்படும்.முகூர்த்த ஏரம் தொடங்கி 5 நிமிடம் கழித்து நல்ல காரியம் செய்தால் போதும்.கோடைகாலங்களில் ராகுகாலம் ,ஓரை பார்க்க அரை மணி ஏரம் முன் பின் பார்த்து செய்து கொள்ள வேண்டியது.சில காலங்களில் ஆரு மணி ஆனாலும் சூரியன் உதிப்பதில்லை.அதை கவனித்து பார்த்துக்கொள்ளலாம்.மற்றபடி சரியாக முகூர்த்தகாலம் தொடங்கிய முதல் மணித்துளியிலேயே யாரும் முகூர்த்தம் நடத்துவதில்லையே

2010/7/22 வி. சு. <vijayakuma...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
என்னுடைய வலைப்பூ-நல்ல நேரம்

annamalai sugumaran

unread,
Jul 22, 2010, 10:31:40 PM7/22/10
to mint...@googlegroups.com
 திரு ஆதி சைவரே ,
 நீங்கள் சொன்னது சரியாகத்தான் இருக்கும்


இந்த மாதிரி சூரிய உதயாதி நேரத்தை சரியாகத்  தெரிந்து கொள்ளத்தான் அந்தந்த பகுதியில் தனித்தனி பஞ்சாங்கம் வழக்கில் இருக்கிறது .
உதாரணமாக பாம்பு பஞ்சாங்கம் என்பது தஞ்சையில் இருந்து சிதம்பரம் ,கடலூர் வரை பழக்கத்தில் இருக்கிறது .
சென்னை காஞ்சீபுரத்தில் ஆற்காடு பஞ்சாங்கம் பிரபலம் .
திருநெல் வெளியில் வேறுவகை பஞ்சாங்கம் புழக்கத்தில் இருக்கிறது .
நூறு கிலோ மீட்டர் சற்று அதிகம் பெரிய மாறுதலை நேரத்தில் உண்டாக்கிவிடாது .லக்னம் கணிப்பதில் தான் மிக துல்லியம் தேவை .

ராகு காலம் பார்ப்பதில் ,சுப லக்னம் கணிப்பதில் அருகில் இருக்கும் பெரிய நகரங்களின் சூரிய உதய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம் . அதுவே நடை முறை .


சூரிய உதயத்தை DECCAN   CHRONICLE  
முதல் பக்கத்திலேயே விண்டோஸ் என்ற பெயரில் தினமும் வெளியிடுகிறது .
சூரிய அஸ்த்தமனம் ,சந்திர அஸ்தமனம் சந்திர உதயம் இவைகளையும் வெளியிடுகிறது .
நாளைய சூரிய உதய நேரத்தை இன்றே வெளியிடுகிறது .வேறு சில ஆங்கில தமிழ் தினசரியிலும் நான் பார்த்திருக்கிறேன் .


மேலும் தினசரி காலண்டரில் கூட சிலவற்றில் போடுகிறார்கள் .எனது எதிரில் இருந்த காலண்டரில் நான் இப்போது பார்த்தேன் .சூரிய உதயம் 
6 .01   

என்று போட்டிருக்கிறார்கள் .

இன்னும் அவசியம் அந்தந்த ஊருக்கு தேவை எனில் கீழ கண்ட இணையங்களில் நீங்கள் பெறலாம் நான் சிதம்பரத்திற்கு முயற்சி செய்து பார்த்தேன் சரியாகவே  வந்தது .


நான் நேற்று வேறு வேலையாக இருந்ததால் கணினிக்கு வந்து உங்களுக்கு பதில் தர இயலவில்லை ,.
திரு சதீஷ் குமார் கூறியதும் பொருத்தமான பதில் தான் .

அன்புடன் 
சுகுமாரன் 



2010/7/22 ஆதிசைவர் <gvs...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செங்கோல்

unread,
Jul 23, 2010, 12:04:44 AM7/23/10
to மின்தமிழ்
இத்திரியை துவக்கியது நான் தான்.ஆனால் திரு ஆதிசைவர் அதில் ஆர்வம் காட்டி
கேள்விகளை கேட்டதால் நான் மேலும் கேள்வி கேட்கவில்லை.இருப்பினும் எனது
ஐயங்களுக்கு விடையளித்த அத்துனை சான்றோர்களுக்கும் நன்றி.என் நோக்கம்
என்ன என்றால்
1.தற்காலத்தில் பல்வேறு பஞ்சாங்கங்கள் பல கணித முறைகளால் மக்களை
குழப்புகின்றன.எனவே இணையம் வைத்துள்ள ஒருவர்,அவர் தமிழகத்தில்
எங்கிருந்தாலும் அன்றைய பொழுதின் கிரக விபரங்களை 99%துல்லியமாக கீழ் கண்ட
விபரங்களை காண முடியுமா?
1.அன்று அவர் நகரத்தில் சூரிய உதயம்,அஸ்தமனம்
2.அவர் காண்கின்ற அந்த நேரத்தில் எந்தெந்த கிரகங்கள் எந்த இடத்தில் உள்ளன?
இது அறிவியல் ரீதியாகவும் சரியாக இருக்கவேண்டும்.
3.அந்த சூரிய உதயத்தை வைத்து அவர் நகரத்தின் ராகுகால,யமகண்ட,அபிஜித்,லக்ன
ஆரம்ப,முடிவு நேரம்,அவர் இருக்கின்ற ஊரின் சரியான நட்சத்திர/திதியின்
ஆரம்ப,முடிவு நேரம்,

மேற்கண்ட அனைத்து விபரங்களையும் ஒருவர் இணையம் மூலம் 99% அக்யூரட்டாக
தெரிந்துகொள்ளமுடியுமா?என்பதே என் ஐயம்.


ஏன் எனில் இன்றைய காலகட்டத்தில் ஜோதிட பலன்கள் சரியாக பலிக்காததற்கு
காரணம் சரியான அளவீடுகளில் அந்த ஜாதகம் கணிக்கப்படாததாலோ என்ற ஐயத்தை
பரிசோதிக்கவே கேட்கிறேன்.
மேலும் நாத்திகர்கள் பலரும் கூறுவது என்ன என்றால் நாங்கள் ராகுகாலத்தில்
திருமணம் செய்தோம்,அஷ்டமி,நவமி,யமகண்டம்...இதுபோன்ற அசுப நேரங்களில்
திருமணம் செய்தோம்.நாங்கள் நன்றாகத்தானே உள்ளோம்,என்கிறார்கள்.இதை
நோக்கும்போது எனக்கு இரு சந்தேகம் தோன்றும்
1.உண்மையில் அவர்கள் சொல்வது போல அசுப நேரம் எல்லாம் பொய்யோ
2.பொதுவான கணக்குப்படி அந்த நேரம் அசுப நேரமாக இருந்தாலும் அவர்கள் ஊரின்
கணிதப்படி அவர்கள் திருமணம் செய்த முகூர்த்த லக்னம் சுப நேரமாக
இருந்திருக்கலாமோ!

இந்த ஐயங்களுக்கு விடை காணவே மேற்படி சந்தேகங்களை இத்திரியில்
எழுதியுள்ளேன்.அறிஞர் பெருமக்கள் சூழ்ந்துள்ள மின்தமிழ் குழுமத்தார்
இதைப்பற்றி நல்ல விவாதம் செய்து நாட்டு மக்களுக்கு உபயோகமான ஒரு தகவலை
கூறுவீர்கள் என நம்புகிறேன்.நன்றி

annamalai sugumaran

unread,
Jul 23, 2010, 3:53:59 AM7/23/10
to mint...@googlegroups.com
திரு செங்கோல் அவர்களுக்கு ,
சுமார் ஆறு மாதம் முன் நான் "ஜோதிடம் ஏன் பொய்த்துப்போகிறது"  என்று ஒருதொடர் மின்தமிழில்  எழுதினேன் .
அது இருநூறு  இழைகளுக்கு மேல் சென்றது பல விவாதங்களுடன் அறிஞர்கள் பங்குபெற்ற இழை அது .
சற்று தேடி அதைப்படித்தால் மீண்டும் அரைத்த மாவையே அரைக்கும் வேலை இராது .பலருக்கு இது சற்று அலுப்பாக இருக்கலாம் .
எனினும் இன்று இரவு உங்களுக்கு பதில் எனக்குதெரிந்ததை தருகிறேன் . 
அன்புடன் .
சுகுமாரன் 


2010/7/23 செங்கோல் <tsi...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

ஆர்.கே.சதீஷ்குமார்

unread,
Jul 23, 2010, 3:25:01 AM7/23/10
to mint...@googlegroups.com
http://psssrf.org.in/ இது ஆன்லைன் ஜாதகம் கணிக்கும் தளம்.இங்கு போய் நீங்கள் அன்றைய கிரக நிலைகளை நேரம் கொடுத்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.salem ics ஜாதக சாப்ட் வேர் உங்கள் கம்ப்யூட்டரில் போட்டுக்கொண்டால் அன்றைய பஞ்சாங்கம்,உங்கள் ஊர் சுரிய உதய நேரம்,அன்றைய கிரக நிலைகளை சுலபமாக அறியலாம்...நாத்திகர்களாக இருந்தாலும் பெரும்பலும் ராகு காலம் என தெரிந்து செய்வதில்லை..பிறப்பு ஜாதகம் வலுத்து இருந்தால் அவருக்கு எல்லாமே சுலபமாக கிடைத்து விடும்.மனக்குழப்பத்தில் இருப்பவர்களுக்கு ஜோதிடர் ஆலோசனை சொல்கிறார்.அறிவாளிகள்,தன்னம்பிக்கை உடையவர்கள்.,முரடர்கள்,நாத்திகர்கல் ஜோதிடர்களிடம் போக வேண்டியதில்லை.ஜோதிடர்களை பற்றி விமர்சிக்கவும் தேவையில்லை

2010/7/23 செங்கோல் <tsi...@gmail.com>
இத்திரியை துவக்கியது நான் தான்.ஆனால் திரு ஆதிசைவர் அதில் ஆர்வம் காட்டி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

Hari Krishnan

unread,
Jul 23, 2010, 4:15:59 AM7/23/10
to mint...@googlegroups.com
2010/7/23 செங்கோல் <tsi...@gmail.com>
1.தற்காலத்தில் பல்வேறு பஞ்சாங்கங்கள் பல கணித முறைகளால் மக்களை

குழப்புகின்றன.எனவே இணையம் வைத்துள்ள ஒருவர்,அவர் தமிழகத்தில்
எங்கிருந்தாலும் அன்றைய பொழுதின் கிரக விபரங்களை 99%துல்லியமாக கீழ் கண்ட
விபரங்களை காண முடியுமா?
1.அன்று அவர் நகரத்தில் சூரிய உதயம்,அஸ்தமனம்
2.அவர் காண்கின்ற அந்த நேரத்தில் எந்தெந்த கிரகங்கள் எந்த இடத்தில் உள்ளன?
இது அறிவியல் ரீதியாகவும் சரியாக இருக்கவேண்டும்.
3.அந்த சூரிய உதயத்தை வைத்து அவர் நகரத்தின் ராகுகால,யமகண்ட,அபிஜித்,லக்ன
ஆரம்ப,முடிவு நேரம்,அவர் இருக்கின்ற ஊரின் சரியான நட்சத்திர/திதியின்
ஆரம்ப,முடிவு நேரம்,

2002ம் வருடம் சென்னைஆன்லைன் துணையாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.  ஆங்கிலம் மட்டும்தான் என் பிரிவு என்றாலும் அவ்வப்போது தமிழிலும் எழுதியதுண்டு.  அப்போது பாம்பு பஞ்சாங்க நிறுவனத்துக்கு நிருபரை அனுப்பி, அவர்களிடமிருந்து திரட்டிய விவரங்களின் அடிப்படையில் எழுதி, அப்போது (2002 ஜனவரி என்று நினைவு) வெளிவந்த கட்டுரை இது.  இதில் உங்களுக்குத் தேவையான விவரங்கள் தென்படலாம்.

<><><><><>><<><><><><>><<><><><><>><<><><><><>><<><><><><>><<><><><><>><<><><><><>><


பஞ்சாங்க யுகத்துக் கணினி

'பழம் பஞ்சாங்கம்' என்று அடிக்கொரு தரம் அலுத்துக்கொள்வார் நண்பர்.  'கம்ப்யூட்டர் யுகம் சார் இது.  இப்ப போயி இந்தப் பழம் பஞ்சாங்கம் இப்படிச் சொல்கிறது' என்று யாரைப் பற்றியாவது சொல்வார்.  ஆனால் கணினி யுகத்தில் பஞ்சாங்கம் - பாம்புப் பஞ்சாங்கம் மட்டும் எவ்வளவு விற்கிறது தெரியுமா?  நம்புங்கள்.  இரண்டரை லட்சம் பிரதிகள்.  ஆமாம்.  அசல் 28 நெ. ஈஸ்வர சுத்த வாக்ய பஞ்சாங்கம்தான்.  

பலருக்குப் பஞ்சாங்கம் என்றால் பாம்புப் பஞ்சாங்கம்தான்.  'வேற பஞ்சாங்கம் கூட இருக்கிறதா என்ன' என்று கேட்பவர்களும் உண்டு.  மேலட்டையில் நீண்டு கிடக்கும் ஐந்து தலைப் பாம்புதான் இந்தப் பஞ்சாங்கத்தின் பெயர்க் காரணம் என்பது புரிகிறது.  ஆனால், அதென்ன அசல் 28 நெ.?

பாம்புப் பஞ்சாங்கம் முதன் முதலில் கொன்னூர் மாணிக்க முதலியாரால் 150 வருஷங்களுக்கு முன்னால் பதிப்பிக்கப் பட்டது.  அவருடைய அதிர்ஷ்ட எண் 28.  அவர் வீட்டுக் கதவிலக்கம் 28.  இந்த எண் ராசி அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.  பஞ்சாங்கம் 28 பக்கங்கள் கொண்டதாகப் பதிப்பிக்கப் பட்டது.  இந்த ஆண்டு வந்திருக்கும் பஞ்சாங்கத்தை வேண்டுமானால் புரட்டிப் பாருங்களேன்!

அப்படியாகத்தான் 28 நெ பஞ்சாங்கத்தின் பெயரோடு இணைந்தது.  ராசியைப் பற்றிய நம்பிக்கையைக் கொஞ்சம் தளர்த்தினால் பக்கங்களின் எண்ணிக்கையைக் கூட்டி, விளம்பரங்களும் பிரசுரிக்கலாம்.  அதிக வருவாய் கிட்டும்.  ஆனால் பதிப்பாளர்கள் இந்த விஷயத்தில் விட்டுக் கொடுப்பதாக இல்லை.  அப்புறம் சுத்த வாக்கியம் என்ற பெயர்.  பஞ்சாங்கம் வாக்கிய கரண அடிப்படையில் கணிக்கப்படுவதால் அந்தப் பெயர்.

வடசென்னையின் கொண்டித்தோப்புப் பகுதியிலிருந்து வெளிவரும் இந்தப் பஞ்சாங்கம் தமிழ்நாடெங்கும் பயன்படுத்தப்படுகிறது.  மட்டுமல்ல.  தமிழ் கூறும் நல்லுலகம் எங்கெங்கு உண்டோ அங்கங்கெல்லாம் பாம்புதான் நல்ல நேரத்தைக் கணிப்பதற்குப் பயன்படுகிறது.  'சிங்கப்பூர், மலேசியாவில் மட்டும் ஆயிரம் பிரதிகள் செலவாகின்றன' என்கிறார் பஞ்சாங்கத்தைத் தற்போது பதிப்பிப்பவர்களில் ஒருவரான திரு. சிவகுமார்.  'கனடாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தமிழர்கள் அவர்களுடைய நேர அமைப்பிற்கேற்றபடி தனிப்பஞ்சாங்கம் போடும்படி கேட்கிறார்கள்.  விரைவில் அவர்களின் தேவையையும் பூர்த்தி செய்வோம்' என்கிறார்.

ஆங்கில ஆண்டின் ஏப்ரல் மாதத்தில்தான் தமிழாண்டு தொடங்குகிறது.  எனினும் பஞ்சாங்க வேலைகள் எப்போது தொடங்குகின்றன தெரியுமா?  இந்த ஆண்டு மே மாதம், அடுத்த தமிழாண்டுக்கான பஞ்சாங்க வேலைகளைத் தொடங்குவார்கள்.  ஒவ்வோராண்டும் இப்படித்தான்.  கிட்டத்தட்ட ஓராண்டு முன்னதாகவே வேலை ஆரம்பித்துவிடும்.  வினாயக சதுர்த்தி வருவதற்குள் வேலை முடிந்து ஒரு திருத்தாப் படிவம் (rough copy) தயாராகிவிடும்.  அடுத்த ஆங்கில ஆண்டு ஜனவரி மாதம் பஞ்சாங்கம் விற்பனைக்கு வந்துவிடும்.  அதாவது தமிழ் ஆண்டு பிறப்பதற்குச் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னாலேயே!

அப்படி இருந்தாலும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இந்த கால அவகாசமும் போதவில்லை.  'இன்னும் முன்னால் கொண்டு வாருங்கள்' என்கிறார்களாம்.  ஆமாம்.  முகூர்த்தம் குறித்தால்தானே திருமணச் சத்திரங்களை முன்னதாகப் பதிவு செய்துகொள்ளலாம்?  முகூர்த்த நாளன்று அத்தனைச் சத்திரங்களுக்கும் கிராக்கி ஏறிவிடும்.  ஐந்தாறு மாதங்கள் முன்னதாகப் பதிவு செய்துவிட்டால் வசதியாக இருக்கும் என்பது அவர்களின் வேண்டுகோள்.  

இந்துக்கள் மட்டுமல்ல.  முஸ்லிம்களும் பாம்புப் பஞ்சாங்கத்தையே விரும்பிப் புரட்டுகிறார்கள்.  பிறை தோன்றும் நேரம் போன்ற அவர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்கிறது பாம்புப் பஞ்சாங்கம்.

இருபத்தோராம் நூற்றாண்டு வந்துவிட்டால் மட்டும் அடிப்படை நம்பிக்கைகள் மாறிவிடுமா, பஞ்சாங்கம்தான் தேவையற்றுப் போய்விடுமா?  'கணினி யுகத்துப் பழம் பஞ்சாங்கத்தைப் பற்றி முணுமுணுத்த நண்பருக்குத் தெரியாத ரகசியம் ஒன்றைச் சொல்லவா?  இப்போதெல்லாம், அதாவது கடந்த ஐந்தாண்டுகளாக, பாம்புப் பஞ்சாங்கத்தைக் கணிப்பதற்குக் கம்ப்யூட்டர் பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது.  இது கணினி யுகத்துப் பஞ்சாங்கமா அல்லது பயன்படுத்தப்படுவது பஞ்சாங்க யுகத்துக் கணினியா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

தமிழில் ஹரி கிருஷ்ணன்.

<><><><><>><<><><><><>><<><><><><>><<><><><><>><<><><><><>><<><><><><>><<><><><><>><

நிறுவனத்தினரே தந்த தகவல்கள் இவை.  எழுத்து மட்டும் என்னுடையது.  


--
அன்புடன்,
ஹரிகி.

ஆதிசைவர்

unread,
Jul 23, 2010, 5:03:11 AM7/23/10
to மின்தமிழ்
தகவலுக்கு நன்றி ஹரி அவர்களே

S.Partha sarathy

unread,
Jul 24, 2010, 11:14:51 PM7/24/10
to mint...@googlegroups.com
///அந்த சூரிய உதயத்தை வைத்து அவர் நகரத்தின் ராகுகால,யமகண்ட,அபிஜித்,லக்ன

ஆரம்ப,முடிவு நேரம்,அவர் இருக்கின்ற ஊரின் சரியான நட்சத்திர/திதியின்
ஆரம்ப,முடிவு நேரம்,//

சூரியோதயத்திற்கும் ”ராகுகால,யமகண்ட,அபிஜித்,லக்ன
ஆரம்ப,முடிவு நேரம்” ஆகியவற்றிற்கும் உள்ள தொடர்பை அறிய விரும்புகின்றேன்.

அன்புடன்
சே. பார்த்தசாரதி


2010/7/23 செங்கோல் <tsi...@gmail.com>
இத்திரியை துவக்கியது நான் தான்.ஆனால் திரு ஆதிசைவர் அதில் ஆர்வம் காட்டி
Reply all
Reply to author
Forward
0 new messages