எனக்கு மிகவும் பிடித்த பாட்டு இது.
மனிதன் படைத்த உலகில் பொதுவுடமை என்றும் வாராது.
இதற்கென தனியே ஒரு உலகம் வைத்திருக்கிறானாம் இறைவன்.
அங்குதான் பொதுவுடமை முழுவதுமாம்.
அதுதான் உண்மையான நம் வீடாம்!
வைகுந்தப் பிராப்தரஸ்து!
க.>
இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுத்தி சேர்ந்திடநாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்.
என்ற மஹாகவியின் வாக்கு பொய்யாகாது. இவ்வுலகிலேயே சமத்துவம் நிலைக்க
வழியுண்டு. அதைக்காண மனமின்றி, புலன்கள் வழியே காணும் இன்பத்தில் பற்று
வைத்து பொய், கொலை, களவு, காமம், கட்குடி எனும் பஞ்சமாபாதங்களைப்
புரிந்து வாழும் மனிதரை உத்தமரென்றேயெண்ணி அவர் கைச்சாட்டையில் சுழலும்
பம்பரமாய் அறியாமையால் உழன்று மக்கள் ஆடுவதே இத்தகைய எதிர்மறை எண்ணங்களை
விளைவிக்கிறது.
மதுகோடா
On Dec 1, 10:20 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/12/1 AKR <akrconsulta...@gmail.com>:
க.>
2009/12/1 akr <akrcons...@gmail.com>:
On Dec 1, 1:51 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> மகாகவி என்றில்லையே வள்ளுவன், நம்மாழ்வார், வள்ளலார், கண்ணதாசன் என்று
> எல்லோரும் பாடியிருக்கிறார்கள்.
> இவ்விஷயத்தில் சமயங்கள் பொய்த்திருக்கின்றன, அரசியல் சித்தாந்தங்கள்
> பொய்த்திருக்கின்றன.
> மனிதனின் பொது நலன் என்பது சுயநலத்திற்கு அப்பால்தான் என்பது யதார்த்தம்.
> நான் யோசிப்பதுண்டு, இப்போது சரி, 100 கோடிக்கும் மேலே, ஆனால் வள்ளுவர் காலத்தில்?
> அப்போது இருந்திருக்கும் சிறிய மக்கள் கூட்டமே பசித்தவனுக்கு சோறு
> போடவில்லை என்பது சங்கப்பாடல்களில் பரவலாய் ஒலிக்கிறது. அப்போதே
> பொதுவுடமை வரவில்லையெனில் இப்போது எப்படி?
> எல்லோரும் ஆளுக்கொரு கவிதை செய்யலாம்.
> அது அடுத்தவனுக்கு சோறுபோடுவதைவிட எளிது ;-)
>
> க.>
>
> 2009/12/1 akr <akrconsulta...@gmail.com>:
ஜெயமுண்டு பயமில்லை மனமே! என்பதையும்
நம்பினார் கெடுவதில்லை, நான்குமறை தீர்ப்பு என்பதையும்,
தெய்வம் நமக்கு துணை பாப்பா!
ஒரு தீங்கு வரமாட்டாது பாப்பா! என்பதையும் முழுவதும் நம்புகிறேன்.
கவிஞர் கண்ணதாசன் வரிகள் மெய்யாகட்டும்.
நான் சுட்டியது நம்பிக்கையின்மையால் அல்ல.
மக்களை ருசுப்படுத்தவே அவ்வாறு எழுதினேன்.
க.>
2009/12/6 akr <akrcons...@gmail.com>: