Fwd: செஞ்சுருள் சங்கம் - இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி - சிறப்புரை.

163 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 27, 2014, 2:36:06 AM3/27/14
to mintamil, vallamai, தமிழ் மன்றம், muththamiz, maza...@googlegroups.com, housto...@googlegroups.com

வணக்கம்.

24.03.2014 அன்று பாராம்பரிய மிக்க காரைக்குடி, இராமசாமி தமிழ்க் கல்லூரியில் செஞ்சுருள் சங்கக் கருத்தரங்கில் “வாழ்வைக் கொண்டாடுவோம்” என்ற பொருளில் மாணவ மாணவியரிடையே சிறப்புரையாற்றும் வாய்ப்பு அமைந்தது.
திட்ட இயக்குநர் அன்பிற்கினிய நண்பர் முனைவர் திரு செ.நாகநாதன் வரவேற்புரையாற்றிச் செஞ்சுருள் சங்கத்தின் நோக்கங்களான எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு, நோயாளிகள் அரவணைப்பு, குருதிக் கொடையின் சிறப்பு ஆகியவற்றை எடுத்துரைத்தார். முதல்வர் முனைவர் திருமிகு புவனேஸ்வரி பொன்னாடை போர்த்திக் கௌரவித்து நினைவுப் பரிசு அளித்துச் சிறப்புச் செய்தார்.
கருத்தரங்கில் பி.லிட். பட்டப்படிப்பு முதலாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு படிக்கும் 45 மாணவிகளும்,10 மாணவர்களும், நான்கு பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

என்னுடைய சிறப்புரையில் இருத்தல், பிழைத்தல், வாழ்தல் ஆகியவற்றிற்கு விளக்கமளித்துப் பேச்சைத் தொடங்கினேன். இருத்தல் பிறர் கட்டுப்பாட்டில் அல்லது ஏதோ ஒன்றின் பிடியில் சிறையில் இருப்பது போன்றது. சிலர் பிழைத்துக் கிடக்கேன் என்று கூறும்போது நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்ற பாரதியின் சொல்லை நினைவு கூர வேண்டும். மூச்சுவிட்டுக் கொண்டிருப்பவன் மனிதனில்லை. முயற்சிசெய்து கொண்டிருப்பவனே மனிதன்! “ஒவ்வொரு நொடியும் வாழுங்கள்” என்றார்கள். நாம் நேற்றைய மனதிற்கு ஒவ்வாத அனுபத்தை எண்ணி உழல்வதிலும் நாளையைப் பற்றிய பயத்திலும் இந்த நொடியைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம் என்று அறிவுறுத்தினேன்.

அடுத்து மாஸ்லோவின் தேவைக் கோட்பாடுச் சட்டகத்தின் துணையோடு அடிப்படைத் தேவைகள், பாதுகாப்பு உணர்வு, தோழமை உணர்வு தேவைகள், அடுத்து அங்கீகாரத்திற்கும், பாராட்டுக்கும் ஏங்கும் தீராத ஏக்கம் உடைய மனிதர்களின் Esteem need, மேலாகக் குறிக்கோளை அடைதல் எனும் உச்சத் தேவை ஆகியவற்றை உரைத்தேன். “குறிக்கோள் இலாது கெட்டேன்” என்ற அப்பரடிகளின் சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்துளானை அடையும் குறிக்கோளையும், காந்தியடிகளின் நாட்டின் சுதந்திர வேட்கையையும் கூறிச் S M A R T வழி குறிக்கோள் பற்றி விவரித்தேன்.

பாலுணர்வு அடிப்படைத் தேவையாக மாஸ்லோவால் சேர்க்கப்பட்டிருந்தாலும், சீராட்டும் தாய்மடியாக பெண் ஆணுக்கும் தொத்திக்கொள்ளும் தோளாகப் பெண்ணுக்கும் பாதுகாப்பு உணர்வு தருகிறது. அதற்கு மேலே “என்ன இன்பம் எனக்கு நல்கும்? இருக்கின்றாள் என்பதொன்றே!” என்று பாரதிதாசன் வயோதிகக் காதலை வர்ணிப்பது போல தோழமை உணர்வாக இருக்கிறது. மேலும் “ஆகாயம் சுருங்குமா? சூரியன் கருக்குமா?” “ கவலை கொள்ளாதே! நீ ஆதவன்” என்று ஊக்கமளிப்பவளாக இருக்கிறாள். “கண்ணின் கடைப்பார்வை” மாமலை என்ற குறிக்கோளையும் கடுகாக்கி எளிதாக்கிறது. இவ்வாறு எல்லாத் தேவையையும் பூர்த்தி செய்வதால் மானிடத்தை ஆட்சி செய்கிறது. ஆனால் அதே பாலுணர்வு முறை தவறும் பொழுது எய்ட்ஸ் தருகிறது. வாழ்வை அழித்துவிடுகிறது. கம்பனின் “ஆசலம் புரி ஐபொறி வாளியும் நெறியின் புறம் செலாக் கோசலம்” என்று சொற்களை அடிக்கோடிட்டுப் புலன்கள் நெறியில் நின்று கட்டுப்படுத்தப்படும்போது அணைக்கட்டில்  கட்டுப்படுத்தப்பட்டுப் பயன்படும் ஆறாகவும், கட்டுப்படுத்தப்படாதபோது எல்லை கடந்து காட்டாறாக அழிப்பதையும் பற்றி எடுத்துக் கூறினேன்.
 
அடுத்து வாழ்தல் என்பது மனித உறவுகள் சார்ந்தது. மனித உறவு மேம்பட 4 “T" வேண்டுமென்பார்கள். "Touch,Talk, Trust,Time". நேரமெடுத்துக்கொண்டு சொல்லாலும், செயலாலும் நம்பிக்கை வளர்க்கிறபோது மனித உறவு மேம்படுகிறது.

வாழ்வை நரகம் ஆக்குவதும் சொர்க்கம் ஆக்குவதும் நம்முடைய சொற்களே.
கணவர் எழுதிக்கொண்டிருந்தாராம். மனைவி காப்பியைக் கொண்டு வந்து மேசையின் மீது வைத்தார். பையன் ஓடி வந்தவன் தட்டிவிட்டுக் காப்பி கீழே கொட்டிவிட்டது. கணவர் கத்தினார், “உள்ளே என்ன பண்ணிக் கிழிக்கிறாய். கையில் கொடுத்திருக்கலாம்ல”. மனைவி பதிலளித்தார்,” நீங்க என்ன எழுதிக் கிழிக்கிறீர்கள்? குடிச்சுட்டு எழுதியிருக்கல்லம்ல.” பையன் சொன்னான், “ஓரத்தில வைக்காமல் காப்பியை மேசை நடுவுலே வைச்சிருக்கலாம்ல”. அங்கே நரகம் உருவானது. இச்சம்பவத்தை வேறு சொற்களில் விவரித்துப் பார்க்கலாம். கணவர், “காப்பி கெட்டியாக மணமாக இருந்ததே. நான் குடித்துவிட்டு எழுதியிருந்திருக்க வேண்டும்”. மனைவி, “நான் உள்ளே என்ன செய்கிறேன். உங்கள் கையிலே தந்திருக்க வேண்டும்.”
பையன், “நான் கவனமாக வந்திருக்க வேண்டும்.” தவறுகளை ஒத்துக்கொள்ளும்போது சொர்க்க்கம் உருவாகிறது.
சிறந்த ஆறு சொற்கள்:- “ நான் தவறு ஒரு செய்துவிட்டேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன்” “I admit I made a mistake"

ஐந்து சிறந்த சொற்கள்:- “You did a good job" பாராட்டுங்கள். பாராட்டினால் என்ன நிகழும்?. இன்சொல் இனிது ஈன்றலைக் காணுங்கள். பிறகு கடுஞ்சொல் பயன்படுத்த மாட்டீர்கள்.
நான்கு சிறந்த சொற்கள்:- ”What is your opinion" கருத்துக் கேட்கிறபோது அதனுடன் உதவியும் வருகிற வாய்ப்பு உண்டு. ஒருவரை மத்தித்துக் கருத்துக் கேட்கிறபோது அவர் பெருமைகொள்கிறார்.
மூன்று சிறந்த சொற்கள்:- “If you please" நெஞ்சக் கதவைத் திறக்கும் இரண்டு சாவிகள் "Keys" "Thank you and please"
சிறந்த இரண்டு வார்த்தைகள்:- “Thank you" நன்றி சொல்லுங்கள். வணங்குங்கள். வாழ்த்துங்கள்.
தவிர்க்க வேண்டிய சொல்:- “நான்” தன்னலத்தை முன்னிறுத்தும் போது உறவுப் பாலம் உடையும்.
 
சிறந்த சொல்:- “You" முன் நிற்பவர் தேவையைப் பூர்த்தி செய்யும்போது, அடுத்தவர் நலத்தைப் பாராட்டும்போது உறவு மேம்படுகிறது. சுற்றியிருப்பவர் தேவைகளை நாம் பூர்த்திசெய்ய முயலும்போது நம் மகிழ்ச்சி பாதுகாக்கப் படுகிறது. ஊரார் பிள்ளையை ஊட்டி வளத்தால் நம் பிள்ளை தானே வளரும் என்பார்கள். மனைவி அடுத்தவர் மகள். அவரைப் பொற்றினால் நம் பிள்ளையை அவர் வளர்க்க அவருக்குத் தெம்பிருக்கும். அடுத்தவர் பெண்ணான மருமகளைப் போற்றினால் நம் பிள்ளையையும், பேரனையும் அவர் பார்த்துக்கொள்வார். வாழ்க்கை சொர்க்கம் தான்.
நகைச்சுவை துணுக்குகள், சிறு கதைகள், திருக்குறள், இலக்கியச் சொற்கள் வழி என் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டேன்.
சிறிது நேரமளித்து மாணவச் செல்வங்களை அவர்கள் குறிக்கோள் குறித்தும், பயிற்சியில் உணர்ந்தது குறித்தும் Feed back எழுதக் கேட்டுக்கொண்டேன். அவர்களின் அற்புத எண்ணங்களும், மகிழ்ச்சி அலையும் எனக்கு உற்சாகம் அள்ளித்தருவனவாக அமைந்தன.
பேராசிரியர் முனைவர் கீதா நன்றியுரையாற்றினார்.

முனைவர் செ.நாகநாதன், முதல்வர் முனைவர் புவனேஸ்வரி, முனைவர் கீதா, பேராசிரியர் திரு கணேசன் மற்ற ஆசிரியர் படங்களும் மாணவமாணவியர் கருத்தக்களை எழுதும் ஒளிப்படமும் இணைத்துள்ளேன்.

பதிவு சற்று நீண்டுவிட்டது! பொறுத்துக்கொண்டு நண்பர்கள் கருத்து எழுத வேண்டுகிறேன்.
நன்றி.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்






IMG_6072.JPG
IMG_6056.JPG
IMG_6066.JPG
IMG_6060.JPG
IMG_6071.JPG
IMG_0920.JPG
IMG_0923.JPG
IMG_0925.JPG
IMG_0926.JPG
IMG_0928.JPG
IMG_6055.JPG

Suba.T.

unread,
Mar 27, 2014, 3:25:17 AM3/27/14
to சொ. வினைதீர்த்தான், மின்தமிழ், Subashini Tremmel
2014-03-27 7:36 GMT+01:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:

வணக்கம்.

24.03.2014 அன்று பாராம்பரிய மிக்க காரைக்குடி, இராமசாமி தமிழ்க் கல்லூரியில் செஞ்சுருள் சங்கக் கருத்தரங்கில் “வாழ்வைக் கொண்டாடுவோம்” என்ற பொருளில் மாணவ மாணவியரிடையே சிறப்புரையாற்றும் வாய்ப்பு அமைந்தது.

என்னுடைய சிறப்புரையில் இருத்தல், பிழைத்தல், வாழ்தல் ஆகியவற்றிற்கு விளக்கமளித்துப் பேச்சைத் தொடங்கினேன். இருத்தல் பிறர் கட்டுப்பாட்டில் அல்லது ஏதோ ஒன்றின் பிடியில் சிறையில் இருப்பது போன்றது. சிலர் பிழைத்துக் கிடக்கேன் என்று கூறும்போது நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்ற பாரதியின் சொல்லை நினைவு கூர வேண்டும். மூச்சுவிட்டுக் கொண்டிருப்பவன் மனிதனில்லை. முயற்சிசெய்து கொண்டிருப்பவனே மனிதன்! “ஒவ்வொரு நொடியும் வாழுங்கள்” என்றார்கள்.

​அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். மாணவியர்களுக்கு இவ்வகை ஊக்கச் சொற்கள் தன்னம்பிக்கை கொடுக்கும்​.

நாம் நேற்றைய மனதிற்கு ஒவ்வாத அனுபத்தை எண்ணி உழல்வதிலும் நாளையைப் பற்றிய பயத்திலும் இந்த நொடியைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம் என்று அறிவுறுத்தினேன்.

அடுத்து மாஸ்லோவின் தேவைக் கோட்பாடுச் சட்டகத்தின் துணையோடு அடிப்படைத் தேவைகள், பாதுகாப்பு உணர்வு, தோழமை உணர்வு தேவைகள், அடுத்து அங்கீகாரத்திற்கும், பாராட்டுக்கும் ஏங்கும் தீராத ஏக்கம் உடைய மனிதர்களின் Esteem need, மேலாகக் குறிக்கோளை அடைதல் எனும் உச்சத் தேவை ஆகியவற்றை உரைத்தேன். “குறிக்கோள் இலாது கெட்டேன்” என்ற அப்பரடிகளின் சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்துளானை அடையும் குறிக்கோளையும், காந்தியடிகளின் நாட்டின் சுதந்திர வேட்கையையும் கூறிச் S M A R T வழி குறிக்கோள் பற்றி விவரித்தேன்.

​மிக நன்று


ஐந்து சிறந்த சொற்கள்:- “You did a good job" பாராட்டுங்கள். பாராட்டினால் என்ன நிகழும்?. இன்சொல் இனிது ஈன்றலைக் காணுங்கள். பிறகு கடுஞ்சொல் பயன்படுத்த மாட்டீர்கள்.
நான்கு சிறந்த சொற்கள்:- ”What is your opinion" கருத்துக் கேட்கிறபோது அதனுடன் உதவியும் வருகிற வாய்ப்பு உண்டு. ஒருவரை மத்தித்துக் கருத்துக் கேட்கிறபோது அவர் பெருமைகொள்கிறார்.
மூன்று சிறந்த சொற்கள்:- “If you please" நெஞ்சக் கதவைத் திறக்கும் இரண்டு சாவிகள் "Keys" "Thank you and please"
சிறந்த இரண்டு வார்த்தைகள்:- “Thank you" நன்றி சொல்லுங்கள். வணங்குங்கள். வாழ்த்துங்கள்.
தவிர்க்க வேண்டிய சொல்:- “நான்” தன்னலத்தை முன்னிறுத்தும் போது உறவுப் பாலம் உடையும்.
 
சிறந்த சொல்:- “You" முன் நிற்பவர் தேவையைப் பூர்த்தி செய்யும்போது, அடுத்தவர் நலத்தைப் பாராட்டும்போது உறவு மேம்படுகிறது. சுற்றியிருப்பவர் தேவைகளை நாம் பூர்த்திசெய்ய முயலும்போது நம் மகிழ்ச்சி பாதுகாக்கப் படுகிறது. ஊரார் பிள்ளையை ஊட்டி வளத்தால் நம் பிள்ளை தானே வளரும் என்பார்கள். மனைவி அடுத்தவர் மகள். அவரைப் பொற்றினால் நம் பிள்ளையை அவர் வளர்க்க அவருக்குத் தெம்பிருக்கும். அடுத்தவர் பெண்ணான மருமகளைப் போற்றினால் நம் பிள்ளையையும், பேரனையும் அவர் பார்த்துக்கொள்வார். வாழ்க்கை சொர்க்கம் தான்.
நகைச்சுவை துணுக்குகள், சிறு கதைகள், திருக்குறள், இலக்கியச் சொற்கள் வழி என் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டேன்.
சிறிது நேரமளித்து மாணவச் செல்வங்களை அவர்கள் குறிக்கோள் குறித்தும், பயிற்சியில் உணர்ந்தது குறித்தும் Feed back எழுதக் கேட்டுக்கொண்டேன். அவர்களின் அற்புத எண்ணங்களும், மகிழ்ச்சி அலையும் எனக்கு உற்சாகம் அள்ளித்தருவனவாக அமைந்தன.
பேராசிரியர் முனைவர் கீதா நன்றியுரையாற்றினார்.
​​


​நடைமுறைப் படுத்த எளிமையான வி​ஷயங்கள் தாம் இவை. ஆனால் மனம் நினைத்தாலும் பலருக்கு வாய் அதனைச் சொல்வதில்லை. எதற்கு பாராட்ட வேண்டும். என் அன்பை இப்படி சொல்லி தான் காட்ட வேண்டுமா? கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என நினைப்போர் பலர். 

மிக நன்றாக விளக்கியிருக்கின்றீர்கள்.


முனைவர் செ.நாகநாதன், முதல்வர் முனைவர் புவனேஸ்வரி, முனைவர் கீதா, பேராசிரியர் திரு கணேசன் மற்ற ஆசிரியர் படங்களும் மாணவமாணவியர் கருத்தக்களை எழுதும் ஒளிப்படமும் இணைத்துள்ளேன்.

​ஏற்பாட்டாளர்களுக்கு என் சார்பிலும் நன்றி.

சுபா​
பதிவு சற்று நீண்டுவிட்டது! பொறுத்துக்கொண்டு நண்பர்கள் கருத்து எழுத வேண்டுகிறேன்.
நன்றி.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்









--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Megala Ramamourty

unread,
Mar 27, 2014, 8:59:44 AM3/27/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
வாழ்வில் குறிக்கோளின் அவசியத்தை வலியுறுத்த ‘குறிக்கோளின்றிக் கெட்டேனே’ என்ற அப்பர் பெருமானின் வாக்கைப் பயன்படுத்தியிருப்பது மிகவும் சிறப்பு.

மூச்சுவிட்டுக்கொண்டிருத்தல் வாழ்க்கையில்லை..முயற்சி செய்வதே வாழ்க்கை என்பது அனைவருமே கைக்கொள்ளவேண்டிய அற்புத வரிகள்!

பாலுணர்வு தேவைதான் எனினும் அது எல்லை மீறும்போது தொல்காப்பியம் காட்டும் ‘பெருந்திணை’ ஆகிவிடுகின்றது; இதனை “..நெறியின் புறம்செலாக் கோசலம்” எனும் கம்பனின் ’ஆற்றுப் படல’ வரிகள் கொண்டு முத்தாய்ப்பாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!

பாரதிதாசனின் குடும்பவிளக்கில் எனக்குப் பிடித்த பகுதி ’முதியோர் காதல்’. கவிஞர்கள் பலரும் இளையோர் காதலையே விடாது பாடிக்கொண்டிருக்க புரட்சிக்கவியோ அதிலும் ஓர் புரட்சியாய் முதியோர் காதலைப் பாடியிருப்பார்.

”புதுமலர் அல்ல; காய்ந்த
     புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
     தள்ளாடி விழும் மூதாட்டி!
மதியல்ல முகம் அவட்கு
    
வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எது எனக்கின்பம் நல்கும்?
     ‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே!

என்ற அற்புத வரிகளைக் காதலுக்குச் சான்றாக நீங்கள் சுட்டியிருப்பது மிக அருமை ஐயா!


தன்னலம் துறந்து பொதுநலத்தைச் சற்றேனும் நினைந்து பிறரிடம் குறைகாணும் போக்கைக் குறைத்து நம் குறைகளைக் களைய முற்படுவோமேயானால் வாழ்வை மகிழ்வோடு கொண்டாடத் தடையேதுமில்லை என்பதை மிக அழகாக உங்கள் சொற்பொழிவில் விளக்கியுள்ளீர்கள்.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.” என்பது தெய்வப்புலவர் வாக்காயிற்றே!

அருமையான தங்கள் உரையைக் கேட்ட இராமசாமி தமிழ்க்கல்லூரி மாணவர்கள் பேறுபெற்றோரே. உரையை எங்களோடு பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி. தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஐயா!

அன்புடன்,
மேகலா
 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

coral shree

unread,
Mar 27, 2014, 9:10:46 AM3/27/14
to vallamai, mintamil
அருமையான பேச்சு. நல்ல தகவல்களைத் தெளிவான விளக்கங்களுடன் அளித்துள்ளீர்கள். ஆக்கப்பூர்வமான சிந்தைகளை ஊக்குவிக்கும் இனிமையான பொழுதாக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள் ஐயா. 

அன்புடன்
பவளா


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 27, 2014, 1:07:21 PM3/27/14
to vallamai, mintamil, தமிழ் மன்றம், muththamiz
இனிய சொற்களுக்கு மிக்க நன்றி திருமிகு சுபா, திருமிகு பவளா, திரு அண்ணா சுந்தரம், திருமிகு மேகலா.

மாணவ மாணவியர் தமிழறிவு மேம்பட இணைத்தைப் பயன்படுத்த வேண்டியது மிக அவசியம் என்பதை வலியுறுத்தினேன். மதுரைத் திட்டத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட 281 நூல்கள், பாரதி பாடல்கள், விரல் நுனியில் குறள், நான் பதிப்பித்த ஏழு நீதிநூல்கள் (ஔவையார், நன்னெறி, வெற்றிவேற்கை,உலகநீதி) Scan copy  அடங்கிய குறுந்தட்டுகள் நான்கினை முதல்வரிடம் தந்து மேலும் நகலெடுத்துக் மாணவர்களுக்கு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன்.
மின்தமிழ், வல்லமை, மற்ற இணையக் குழுமங்கள் பற்றியும் அவற்றில் பல்வேறு துறைசார்ந்த அறிஞர்கள் எழுதுவது பற்றியும், மாணவர்கள் எழுதுவது உடனே பலர் கவனத்திற்கு வரக் கூடுமென்பதையும் எடுத்துரைத்தேன்.
வல்லமை போன்ற மின் இதழ்கள், வலைப் பக்கங்கள் பற்றிக் கூட்டம் முடிந்ததும் குழுமிய மாணவர்கள், பேராசிரியர்களிடம் எடுத்துச் சொன்னேன்.

மின்தமிழ் மின்னாக்கச் செயல்பாடுகள், முகநூலில் மின்தமிழ் பற்றி அறிமுகம் செய்தேன்.

கிராமப்புறத்திலிருந்து வருவதாலும், அரசு விடுதியிலிருப்பதாலும் கணினி வசதி, இணைய வசதி அவர்களுக்கு எட்டவில்லை. 
எண்ணம் விதைக்கப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் மலரும் என்ற நம்பிக்கையுள்ளது.  

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


coral shree

unread,
Mar 27, 2014, 1:18:20 PM3/27/14
to சொ. வினைதீர்த்தான், vallamai, mintamil, தமிழ் மன்றம், muththamiz
மிக்க நன்றி ஐயா. தங்களுடைய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் என்றேனும் ஒரு நாள், அதுவும் மிக விரைவில் பயனளிக்கும் என்ற நம்பிக்கை வருகிறது. சரியான பாதையில், சென்று சரியான நிலத்தில் விதை ஊனியிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். தங்களுடைய மேன்மையான சிந்தைகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். நன்றி.

அன்புடன்
பவளா

shylaja

unread,
Mar 27, 2014, 1:30:11 PM3/27/14
to vallamai, சொ. வினைதீர்த்தான், mintamil, தமிழ் மன்றம், muththamiz
ஆமாம்  பவழா   திருவினைதீர்த்தான் ஐயா  நேரில்பார்க்க  ரொம்ப எளிமையாக  இருக்கிறார் மிக அற்புதமான  பணிகள் பலசெய்கிறார். அதுவும்  மாணவர்களுக்கான இவர் பங்கு  உன்னதமானது. 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்
ஷைலஜா


/Heard melodies are sweet, but those unheard
    Are sweeter../

Keats

தேமொழி

unread,
Mar 27, 2014, 3:44:23 PM3/27/14
to vall...@googlegroups.com, mintamil


 “வாழ்வைக் கொண்டாடுவோம்”  என்ற தலைப்பே அருமை சொ.வி. ஐயா. நேர்மறை கண்ணோட்டத்தில் வாழ்க்கையை அணுகும் விதத்தை இளைஞர்களுடம்  நீங்கள் தொடர்ந்து பரப்பி வருவது மகிழ்ச்சியைத் தருகிறது.  உங்கள் தன்னார்வப் பணி சிறப்புமிக்கது.  பாராட்டுகளும் வாழ்த்துகளும்.  மாணவர்களும் கவனமுடன் குறிப்பெடுத்துக் கொள்வதைக் காணும் பொழுது மகிழ்ச்சி அதிகரிக்கிறது. 

அன்புடன்
..... தேமொழி



பி.கு.  ஏன் மாணவிகளுக்கு மட்டும் டெஸ்க் இல்லை என்ற கேள்வி எண்ணைக் குடைகிறது :)))

தேமொழி

unread,
Mar 27, 2014, 3:49:20 PM3/27/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, mintamil

[...] என்ற கேள்வி என்னைக் குடைகிறது :)))

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 28, 2014, 12:28:26 AM3/28/14
to vallamai, மின்தமிழ்

2014-03-27 18:29 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
வாழ்வில் குறிக்கோளின் அவசியத்தை வலியுறுத்த ‘குறிக்கோளின்றிக் கெட்டேனே’ என்ற அப்பர் பெருமானின் வாக்கைப் பயன்படுத்தியிருப்பது மிகவும் சிறப்பு.

மூச்சுவிட்டுக்கொண்டிருத்தல் வாழ்க்கையில்லை..முயற்சி செய்வதே வாழ்க்கை என்பது அனைவருமே கைக்கொள்ளவேண்டிய அற்புத வரிகள்!

பாலுணர்வு தேவைதான் எனினும் அது எல்லை மீறும்போது தொல்காப்பியம் காட்டும் ‘பெருந்திணை’ ஆகிவிடுகின்றது; இதனை “..நெறியின் புறம்செலாக் கோசலம்” எனும் கம்பனின் ’ஆற்றுப் படல’ வரிகள் கொண்டு முத்தாய்ப்பாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!

பாரதிதாசனின் குடும்பவிளக்கில் எனக்குப் பிடித்த பகுதி ’முதியோர் காதல்’. கவிஞர்கள் பலரும் இளையோர் காதலையே விடாது பாடிக்கொண்டிருக்க புரட்சிக்கவியோ அதிலும் ஓர் புரட்சியாய் முதியோர் காதலைப் பாடியிருப்பார்.

”புதுமலர் அல்ல; காய்ந்த
     புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
     தள்ளாடி விழும் மூதாட்டி!
மதியல்ல முகம் அவட்கு
    
வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எது எனக்கின்பம் நல்கும்?
     ‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே!

என்ற அற்புத வரிகளைக் காதலுக்குச் சான்றாக நீங்கள் சுட்டியிருப்பது மிக அருமை ஐயா!


பாரதிதாசனின் குறிப்பிட்ட பாடல் வரிகளை முழுமையாகத் தந்தமைக்கும் நன்றி திருமிகு தேமொழி. 
 
“கவிஞர்கள் பலரும் இளையோர் காதலையே விடாது பாடிக்கொண்டிருக்க புரட்சிக்கவியோ அதிலும் ஓர் புரட்சியாய் முதியோர் காதலைப் பாடியிருப்பார்” என்று தாங்கள் சொல்லியிருப்பது அருமை.
நன்றி.
சொ.வினைதீர்த்தான். 




Suba.T.

unread,
Mar 28, 2014, 3:14:56 AM3/28/14
to மின்தமிழ், Subashini Tremmel
நேற்றே கேட்க வேண்டும் என நினைத்தேன் திரு. சொ.வி அவர்களே.
செஞ்சுருள் என இந்த சங்கத்திற்கு பெயர் வந்தக் காரணம் என்ன? செஞ்சுருள் என்பதன் பொருள் என்ன.. வித்தியாசமான பெயராக இருக்கின்றது.

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 28, 2014, 9:42:02 AM3/28/14
to vallamai, mintamil
2014-03-28 1:14 GMT+05:30 தேமொழி <them...@yahoo.com>:
 
 “வாழ்வைக் கொண்டாடுவோம்”  என்ற தலைப்பே அருமை சொ.வி. ஐயா. நேர்மறை கண்ணோட்டத்தில் வாழ்க்கையை அணுகும் விதத்தை இளைஞர்களுடம்  நீங்கள் தொடர்ந்து பரப்பி வருவது மகிழ்ச்சியைத் தருகிறது.  உங்கள் தன்னார்வப் பணி சிறப்புமிக்கது.  பாராட்டுகளும் வாழ்த்துகளும்.  மாணவர்களும் கவனமுடன் குறிப்பெடுத்துக் கொள்வதைக் காணும் பொழுது மகிழ்ச்சி அதிகரிக்கிறது.
 
 
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி திருமிகு தேமொழி. குறிப்பு எடுக்க ஊக்குவித்தும், கற்றது அறியக் கருத்து எழுதவும் பயிலரங்கம் நடத்தும்போது கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்க் கல்லூரி மாணவச் செல்வங்கள் என்பதை அவர்கள் எழுதித் தந்துள்ள கருத்துக்கள் சாட்சியளித்துள்ளன என்பதில் எனக்கு மகிழ்ச்சி! 



பி.கு.  ஏன் மாணவிகளுக்கு மட்டும் டெஸ்க் இல்லை என்ற கேள்வி என்னைக் குடைகிறது.
 
:))).
1.ஆண்கள் சிறுபான்மையினர்.
2.டெஸ்க் இருந்தால் தான் எழுதுவார்கள் என எண்ணியிருக்கலாம்.
3.பெண்கள் எந்தச் சூழ்நிலைக்கும் அனுசரித்து வெற்றியடைவார்கள் என்றும் எண்ணியிருக்கலாம்!
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 
 
 
 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 28, 2014, 9:57:19 AM3/28/14
to mintamil, தமிழ் மன்றம், vallamai, housto...@googlegroups.com, muththamiz
2014-03-28 12:44 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
நேற்றே கேட்க வேண்டும் என நினைத்தேன் திரு. சொ.வி அவர்களே.
செஞ்சுருள் என இந்த சங்கத்திற்கு பெயர் வந்தக் காரணம் என்ன? செஞ்சுருள் என்பதன் பொருள் என்ன.. வித்தியாசமான பெயராக இருக்கின்றது.

கேட்டதற்கு நன்றி திருமிகு சுபா.
 
Red ribbon club என்பதற்குத் தமிழாக்கம் செஞ்சுருள் சங்கம். எய்ட்ஸ் நோய் தொற்று, பாதுகாப்பு,சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு, எய்ட்ஸ் நோயாளிகள் அரவணைப்பு, குருதிக் கொடை ஊக்குவிப்பு முதலியவற்றைக் கல்லூரி மாணவ மாணவியர் வழி சமுதாயத்திற்குத் தர வேண்டுமென்பது அரசால் ஊக்குவிக்கப்படும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இணையத்தில் எடுத்தது:- 
Red ribbon club is a movement by the Govrnment of India in educational Institutions through which students will be making awareness of AIDS.Through RRC youth are encouraged to learn about safe and healthy lifestyles. The RRC promotes access to information on voluntary blood donation as well as enable them to become change agents in HIV & AIDS programme. - See more at: http://www.care.ac.in/engineering/red-ribbon-club/#sthash.PeruSqE4.dpuf

நண்பர்களுக்கு நன்றி.
சொ.வினைதீர்த்தான்.

2014-03-27 18:29 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 30, 2014, 7:05:40 PM3/30/14
to சொ. வினைதீர்த்தான், mintamil, vallamai, தமிழ் மன்றம், muththamiz, maza...@googlegroups.com, housto...@googlegroups.com
வணக்கம் ஐயா.

2014-03-27 12:06 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
நான்கு சிறந்த சொற்கள்:- ”What is your opinion" கருத்துக் கேட்கிறபோது அதனுடன் உதவியும் வருகிற வாய்ப்பு உண்டு. ஒருவரை மத்தித்துக் கருத்துக் கேட்கிறபோது அவர் பெருமைகொள்கிறார்.
மூன்று சிறந்த சொற்கள்:- “If you please" நெஞ்சக் கதவைத் திறக்கும் இரண்டு சாவிகள் "Keys" "Thank you and please"
சிறந்த இரண்டு வார்த்தைகள்:- “Thank you" நன்றி சொல்லுங்கள். வணங்குங்கள். வாழ்த்துங்கள்.
தவிர்க்க வேண்டிய சொல்:- “நான்” தன்னலத்தை முன்னிறுத்தும் போது உறவுப் பாலம் உடையும்.
 
சிறந்த சொல்:- “You" முன் நிற்பவர் தேவையைப் பூர்த்தி செய்யும்போது, அடுத்தவர் நலத்தைப் பாராட்டும்போது உறவு மேம்படுகிறது
மாணவருக்கு மட்டுமல்ல படித்த எங்களுக்கும் பயன்படும் இனிய சொற்கள்.  நல்லதொரு வழிகாட்டுதல்.   
“Thank you" நன்றி

அன்பன்
கி.காளைராசன் 

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 31, 2014, 6:05:20 AM3/31/14
to Kalairajan Krishnan, mintamil, vallamai, தமிழ் மன்றம், muththamiz, maza...@googlegroups.com, housto...@googlegroups.com
2014-03-31 4:35 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

நான்கு சிறந்த சொற்கள்:- ”What is your opinion" கருத்துக் கேட்கிறபோது அதனுடன் உதவியும் வருகிற வாய்ப்பு உண்டு. ஒருவரை மத்தித்துக் கருத்துக் கேட்கிறபோது அவர் பெருமைகொள்கிறார்.
மூன்று சிறந்த சொற்கள்:- “If you please" நெஞ்சக் கதவைத் திறக்கும் இரண்டு சாவிகள் "Keys" "Thank you and please"
சிறந்த இரண்டு வார்த்தைகள்:- “Thank you" நன்றி சொல்லுங்கள். வணங்குங்கள். வாழ்த்துங்கள்.
தவிர்க்க வேண்டிய சொல்:- “நான்” தன்னலத்தை முன்னிறுத்தும் போது உறவுப் பாலம் உடையும்.
 
சிறந்த சொல்:- “You" முன் நிற்பவர் தேவையைப் பூர்த்தி செய்யும்போது, அடுத்தவர் நலத்தைப் பாராட்டும்போது உறவு மேம்படுகிறது
மாணவருக்கு மட்டுமல்ல படித்த எங்களுக்கும் பயன்படும் இனிய சொற்கள்.  நல்லதொரு வழிகாட்டுதல்.   
“Thank you" நன்றி

மிக்க நன்றி திரு காளைராசன். ஒரு மாணவி பயிற்சி பற்றிக் கருத்துரைக்கையில் “You did a good job" என்று எழுதித்தந்துள்ளார். “தம்மில் தம் மக்கள் அறிவுடைமை” இனித்தது.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 31, 2014, 6:17:55 AM3/31/14
to தமிழ் மன்றம், mintamil, vallamai, housto...@googlegroups.com, muththamiz



2014-03-29 8:38 GMT+05:30 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>:
அகரமுதல இணைய இதழில் வெளியிட,  இணைப்புப் படங்களின் குறிப்புகளை அனுப்ப வேண்டுகின்றேன்.

இத்தகைய செ ய்திகளை விரிவாக அகரமுதல இணைய இதழுக்கு அனுப்பி விட்டு அதில் வெ ளிவந்த பின் பகிரலாமே!
நன்றி ஐயா.
ஒளிப்படங்கள் பற்ரிய குறிப்புகள்.
1.இராமச்சமி தமிழ்க் கல்லூரி கட்டிட வளாகம்.
2.முதல்வர் முனைவர் சு.புவனேசுவரி, பேரா முனைவர் செ.நாகந்நதனுடன்.
3.பேராசிரியப் பெருமக்களுடன்
4.வரவேற்புரை முனைவர் செ,நாகந்ந்தன்
5.முதல்வர் உரை.
6.7.என் உரை.
8.முனைவர் இரா.கீதா நன்றியுரை
9, 10,11. கருத்தரங்கில் மாணவியர், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்.
அன்புடன்
சொ,வினைதீர்த்தான்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 31, 2014, 8:59:24 AM3/31/14
to vallamai, tamilmanram kuzhu, mintamil, housto...@googlegroups.com, muththamiz
மிகச் சிறப்பாக வெளியிட்டுள்ளீர்கள் திருமிகு திருவள்ளுவன் ஐயா.
நான் இட்டிருந்த ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்கள் தந்து பொருத்தமற்றவற்றை நீக்கி இதழுக்கேற்றவாறு வெளியிட்டுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.
நெஞ்சார்ந்த நன்றி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2014-03-31 18:08 GMT+05:30 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>:

வாழ்வைக் கொண்டாடுவோம்” – சொ.வினைதீர்த்தான்


படித்தீர்களா?  நே ற்று அனுப்பி இருந்தேனே

Reply all
Reply to author
Forward
0 new messages