தேமொழி
unread,Dec 21, 2025, 9:22:07 PM (4 days ago) Dec 21Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to மின்தமிழ்
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை. (குறள் - 1151)
பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.
— மு. வரதராசன் உரை
எம் மொழியில் சொல்வதானால்:
‘வே! நீரு பிரிஞ்சு போகாம இங்கிணயே கெடப்பேருண்ணு உண்டுமானா அதை எனக்கு இப்ப சொல்லும். ஆனா, பிரிஞ்சுபோயி சட்டுண்ணு வந்திருவேன் சொல்லப்பட்ட காரியம் இருக்குல்லா, அதை நீரு வருவேர்ய் வருவேருண்ணு எவளும் காத்துக் கெடப்பா பாரும், அவளுக்குச் சொல்லும், கேட்டேரா? ‘
— நாஞ்சில்நாடன்
https://nanjilnadan.wordpress.com/2015/01/05/வல்வரவு/