தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆண்டு, 10ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் (பக்.56) "கம்பரது காலம் கி.பி. 12. சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர்" (ஒளவையாரையும் சேர்ப்பது வழக்கம், ஏனோ விட்டுவிட்டனர்) என்று உள்ளது.
கம்பர் காலம் கி.பி. 9 என அண்மைக்கால ஆராய்ச்சி அறிஞர் மு.அருணாசலம் முதலியோர் ஆய்ந்து கூறியுள்ளனர். வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவபண்டாரத்தார் எழுதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1974இல் வெளியிட்டுள்ள, "பிற்காலச் சோழர் வரலாறு" நூல் பக்.351இல் பின்வரும் செய்தி இடம் பெற்றுள்ளது.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கம்பருடைய காலம் குறித்து முனைவர் இரா.வ.கமலக்கண்ணன் முன்வைக்கும் இந்தத் தரவுகள் தொடர்பாக, தமிழறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து தக்க சான்றுகளுடன் கூடிய கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. ஐந்து நாள்களுக்குள் வரும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- தினமணி ஆசிரியர்
நன்றி:- தினமணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கம்பர் 12ஆம் நூற்றாண்டினர் என ஐயந்திரிபின்றித் தெளிவாகவும், உறுதியாகவும் தற்போதைய பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று அறிஞர்கள் ஐயத்திற்கிடமின்றி உறுதியாகக் கூறும்வரை, இருவேறு கருத்திற்கு இடமின்றிக் கம்பர் காலம் 12ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.
எ.முத்துக்கிருஷ்ணன்
நன்றி:- தினமணி
--
பரம வைஷ்ணவணான கம்பனுக்கு பட்டையடித்துப் பார்க்கும் தமிழகம், அவரை எங்கு
வேண்டுமானலும் வைக்கும். மேற்சொன்ன உசாத்துணைகளில் ஏதொன்றும் வைணவ
பாரம்பரியத்தையின் அருகில் கூட வாராததே இதற்கு சாட்சி. வைணவ உலகம் கம்பனை
எங்கு வைக்கிறது என்பது சுவாரசியமாக இருக்கலாம்!
க.>
பரம வைஷ்ணவணான கம்பனுக்கு பட்டையடித்துப் பார்க்கும் தமிழகம், அவரை எங்கு
வேண்டுமானலும் வைக்கும். மேற்சொன்ன உசாத்துணைகளில் ஏதொன்றும் வைணவ
பாரம்பரியத்தையின் அருகில் கூட வாராததே இதற்கு சாட்சி. வைணவ உலகம் கம்பனை
எங்கு வைக்கிறது என்பது சுவாரசியமாக இருக்கலாம்!
> வைணவம், சைவம் அல்லது வேறு எந்த வழியாயினும் சரி, கம்பனைப் பாராயண மரபில் >எங்கு >வைக்கிறது என்பது யாருக்காவது தெரிந்தால் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
>
ஆழ்வார்திருநகரி ஆட்களிடம் கேட்க வேண்டும். ஆழ்வார்திருநகரிக்கும்
கம்பனுக்கும் நெருக்கமான ஒரு தொடர்பு இருந்திருக்கிறது.
கம்பன் ஆழ்வார்களின் ஸ்ரீசூக்திகள் முன் செல்ல பெருமாள் தொடர வேதம்
பின்னால் வரும் இராமானுஜ மரபைச் சுட்டுவதால் அவர் இராமானுஜருக்கு
பிற்பட்டவராக இருக்க வாய்ப்புண்டு. (சடகோபரந்தாதி).
தமிழக வைணவ மரபில் காவியங்களைப் பாராயணமாக்கும் மரபு இருப்பதாகத்
தெரியவில்லை. சுத்த பக்திப் பனுவல்களை மட்டுமே இவர்கள் இங்கு
(தமிழகத்தில்) பாராயணம் செய்கின்றனர். காவியம் என்றால் பலதும் இருக்கும்.
அதுவொரு கதை. இல்லையா? கூத்து மரபில் கம்ப இராமாயணமுண்டு. சமீபத்தில் கூட
லண்டனில் கம்ப இராமாயணம் நடந்தேறியது. ஹரிகதாவிலுண்டு.
நா.கண்ணன்
அது கிடக்க. கம்பராமாயணத்தில் ஏதாவது ஒரு பகுதியாவது அன்றாட அல்லது வருடாந்திரப் பாராயண மரபில் இருக்கிறதா, எந்தப் பகுதியை, எந்தப் பகுதியினர் (ரீஜன்) பாராயணம் செய்கிறார்கள் என்பது தெரிந்தால் மகிழ்ச்சியடைவேன்.
--
அன்புடன்,
ஹரிகி.
> செட்டிநாட்டில் இப்படி ஒரு வழக்கம் இருக்கிறது என்று அப்போது சொல்ல நினைத்த,
> ஆனால் தகவலைப் பற்றிய உறுதியில்லாத, விடைக்கும் அடிப்படை இருக்கிறது என்பதை
> உறுதிப்படுத்திக் கொள்ள உதவிய திரு நா கண்ணன் அவர்களுக்கும், திருமதி கீதா
> அவர்களுக்கும் நன்றி.
>
பி.ஏ.கிருஷ்ணனின் ‘புலிநகக்கொன்றை’ நாவலில் ஓரு பாத்திரம் சிதம்பரனார்
அவர்களைச் சந்திக்கும் போது, ‘என்னப்பா! இப்படி ஐயங்கார்களெல்லாம்
கம்பனைக் கைவிட்டு விட்டீர்கள்?’ என்று சொல்வது போல் வரும். ஒரு
ஆழ்வார்திருநகரிக்காரர்தான் இப்படி அங்காலாய்க்க முடியும்.
பி.ஏ.கிருஷ்ணனின் தந்தை பக்ஷி ஐயங்கார் கம்பனில் தோய்ந்தவர். அவர் சரி
பார்த்த கம்பராமாயணம் த.ம.அயிடம் உள்ளது (ஆழ்வார்திருநகரி படி). யாராவது
முன் வந்தால் அதை அப்படியே மின் நகலெடுக்கலாம்!
இதுவும் இழைக்கு புறமானதுதான் :-)
நா.கண்ணன்
அவர் சரி
பார்த்த கம்பராமாயணம் த.ம.அயிடம் உள்ளது (ஆழ்வார்திருநகரி படி). யாராவது
முன் வந்தால் அதை அப்படியே மின் நகலெடுக்கலாம்!
சென்னை அண்ணா நகரில் குடியிருந்தபோது குறுந்தகடாகவே வாங்கினேன்.
இது திருத்திய (critical edition) பதிப்பாக இருக்க வாய்ப்புள்ளது,
எம்மிடம் உள்ளது பக்ஷிராஜ ஐயங்கார் பார்த்து திருஞானக்கோவையார்
பதிப்பித்த ஆழ்வார் திருநகரி படி. சென்னை நூலகம் எந்தப்படி (edition)
என்று சொல்லவில்லையே!
நா.கண்ணன்
செயங்கொண்டாருக்கு பேரன் போன்ற காலத்தவர் ஒட்டக்கூத்தர். இருவரும்
கவிச்சக்கரவர்த்திகள்
என்று சோழ அரசனால் பாராட்டப்பெற்றவர்கள். ஒட்டக்கூத்தர் செயங்கொண்டாரைப்
போற்றுகிற இடங்கள் உள்ளன. பின்னர் வந்தவர் சேக்கிழார். சேக்கிழாரின்
தாக்கம்
கம்பனில் இருக்கிறது.
ஒட்டக்கூத்தர் காலத்தில்தான் தமிழ் இலக்கணத்தைச் சிவனிடம் கற்று
அகத்தியர்
உலகத்தாருக்குக் கற்றுக்கொடுத்தார் என்ற கோட்பாடு படைத்து வளர்க்கிறார்.
சைவர்கள் சமண சமயத்தாரின் இலக்கணக் கொடையை மடைமாற்றும் சமயம் இது.
ஒட்டக்கூத்தர் தான் சம்பந்தராக சமணரைக் கழுவேற்ற முருகன் அவதாரம்
எடுத்தான்
என்று பாடுபவர். பின்னர் இது எல்லா பிரபந்தங்களிலும் பாடப்படுகிறது.
கூத்தர் காலத்துக்குப் பின்னர் வந்த கம்பர், நச்சினார்க்கினியர் போன்றோர்
அகத்தியன்
தமிழ்தந்தான் என்ற ஒட்டக்கூத்தர் கருத்தாக்கத்தை வளர்த்தனர். அகத்தியர்
ஆதி இலக்கணம் ஆகிய அகத்தியம் படைத்தார். அவருக்குப் 12 மாணவர்கள்,
ஒருவர் தொல்காப்பியர் என்ற கதைகள் உருவாயின. 12 மாணவர்கள் பெயரும்
யாரும் தரவில்லை. அவற்றைத் தந்தவர் ஆறுமுகநாவலர், நாவலர் பட்டியலை
ஆங்கிலப்படுத்தியவர் சைமன் காசிச்செட்டி.
தமிழை யார் சொல்லிக்கொடுத்தனர்? பௌத்த அவலோகிதனா? அகத்தியனா?
என்ற கேள்வி ஒட்டக்கூத்தர் காலம் வரை இருந்தது. பதுமக்கொத்தர் என்று
கூத்தர் பாடுவதைக் கொடுத்து, பதுமக்கொத்தர் யார்? என்பதற்கு விடையாகக்
கட்டுரை எழுதியுள்ளேன்.
மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த கம்பர் தனக்கு முன்வாழ்ந்த
கூத்தரின்
கருத்தாக்கத்தை ஏற்றுப் பாடுபவர்:
உழக்குமறை நாலினு முயர்ந்துலக மோதும்
வழக்கினு மதிக்கவி னினுமரபினாடி
நிழற்பொலி கணிச்சி மணிநெற்றியுமிழ் செங்கண்
தழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்
’தழற்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்’
’தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச்சங்கம்
சேர்கிற்பீரேல்
என்றும் அவண் உறைவிடமாம் ஆதலினால் அம்மலையை இரைஞ்சி ஏகி’
கூத்தருக்குப் பின்னர் கம்பர் வளர்த்ததால் அகத்தியர் தமிழ் தந்த கதை
பெருகியது:
வில்லிபாரதப் பாயிரம் ’அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆரணங்கு’
"ஆதியில் தமிழ் நூல் அகத்தியர்க் குணர்த்திய மாதொரு பாகன்" - சேனாவரையர்
தொல்.
உரைப் பாயிரம்.
இதன் வளர்ச்சியை, பாரதியாரின் தமிழ்த்தாய் அறிவுரை வாழ்த்தில் காணலாம்.
தன் மக்களைப் புதிய சாத்திரம் படைக்க வேண்டுதல்
(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்)
ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். 1
அகத்தியர் கட்டுக்கதைகளுக்கு எதிர்வினை பெரியார், பாரதிதாசன் 20-ஆம்
நூற்றாண்டில் எழுதலாயினர். அகத்தியர் தமிழ்தந்தார் என்ற கதைகளின்
ஒரு மூல ஊற்றாக ஒட்டக்கூத்தர் தமிழ்வரலாற்றில் திகழ்கிறார்.
அவர் கருத்தாக்கத்தை வளர்த்தவர் கவிச்சக்கிரவர்த்தி கம்பர்.
எனவே, 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் கம்பர்.
அவரைப் பற்றி முதலில் குறிப்பிடுபவர் வியாக்கியானச்
சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை. கம்பருக்கு சுமார் 400
ஆண்டு சென்றபின் கொங்கின் இசைராமாயணமாகிய
தக்கை ராமாயணம் பிறந்தது.
நா. கணேசன்
கூத்தருக்குப் பின்னர் கம்பர் வளர்த்ததால் அகத்தியர் தமிழ் தந்த கதை
பெருகியது:
"ஆவின் கொடைச்சகரர் ஆயிரத்து நூற்றொழித்துத்
(கம்பன் காவியம், பக்.96) என வையாபுரிப்பிள்ளை கூறுகிறார்.கம்பராமாயணத்தில் மருந்துமலைப் படலத்தில், "அனுமன் சோழநாட்டை ஒத்த வளமான மூன்று உலகங்களைக் கண்டான்" என்று கம்பர் ஒரு பாடலில் கூறுகிறார். "சென்னிநாள் தெரியல் வீரன் தியாகமா விநோதன்''இப்பாடல் வரியில், "தியாகமாவிநோதன்" யார் என்பதுதான் கம்பர் காலத்தைக் கணிக்க உதவும் அகச்சான்று. இங்கு குறிப்பிடப்பெறும் அரசன் மூன்றாம் குலோத்துங்கன் ஆவான். 9ஆம் நூற்றாண்டுக் கம்பர், முந்தைய அரசனை எவ்வாறு பாட இயலும்?
மூன்றாம் குலோத்துங்கனுடைய பல்வேறு பட்டப்பெயர்களில் "இவன் பெரிதும் விரும்பியது தியாகவிநோதன் என்பது. இதனை அவன் காலத்து மக்கள் வழங்கினர். தியாகவிநோதபட்டன், தியாகவிநோத மூவேந்த வேளாண், தியாகவிநோதன் என்ற பெயர்களைக் கல்வெட்டுகளில் காணலாம். ஊர்களுக்கும் இப்பெயர் இடப்பெற்றிருந்தது. "தியாகமேகம்" என்று இராஜராஜன் வழங்கப்பெற்றான். "தியாகசமுத்திரம்" என்று விக்கிரமசோழன் குறிக்கப்பெற்றான். இச்சோழனோ "தியாகவிநோதன்" எனக் கூறப்பெற்றான். இவ்வரிய - முற்சோழர்க்கு இல்லாத - இவனுக்கே சிறப்பாக அமைந்த பெயரைத்தானே கம்பர் பெருமான் "சென்னி நாள் தெரியல் வீரன் தியாகமாவிநோதன்" என்று தமது இராமாயணத்துள் கூறி மகிழ்ந்தனர்'' (மா.இராசமாணிக்கனார், சோழர் வரலாறு, பக்.25).
அவர் மற்றொரு சான்றும் காட்டுகிறார். "கம்பர் பெருமான் இக் குலோத்துங்கசோழன் அவைப்புலவர் என்பது அறிஞர் ஒப்புக்கொண்டதேயாகும். அவர் இச்சோழனிடம் மனம் வேறுபட்டவராய் ஓரங்கல்லைக் கோநகராகக்கொண்டு பெருநாட்டை ஆண்ட காகதீய அரசன், முதற் பிரதாப ருத்திரன் (கி.பி.1162 - 1197) என்பவனிடம் சென்று தங்கியிருந்தார் என்பது உண்மையாயின், "கம்பர் சோழர்க்குப் பகைவனான காகதீய அரசனிடம் சென்றிருந்தார் எனக்கோடலே பொருத்தமாகும்'' (பக்.242) எனக் குறிப்பிடுகிறார். ஓரங்கல் என்பது இன்றைய "வாரங்கல்" என்ற ஊராகும். இங்கு சிலகாலம் வாழ்ந்ததால்தான் கம்பர் மசரதம் (கானல் நீர்), அக்கட போன்ற தெலுங்குச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.
"அவனி முழுதுண்டும் அயிராபத த்துள்பவனி தொழுவார் படுத்தும் - புவனிஉருத்திரா உன்னுடைய ஓரங்கல் நாட்டில்குருத்திரா வாழைக் குழாம்''.எனக் கம்பர் அம்மன்னனைப் பாடியதாகத் "தமிழ் நாவலர் சரிதை" கூறுகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்து, அவனோடு போரிட்டவனே பிரதாபருத்திரன் ஆவான்.
கம்பர் பாடிய பாடல் அகச்சான்றாலும், சோழர் வரலாற்றை ஆராய்ந்த கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், மா.இராசமாணிக்கனார், வையாபுரிப்பிள்ளை,இரா.இராகவையங்கார் ஆய்வு முடிவுகளாலும் கம்பர் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டே எனத் துணியலாம்.
--
"... .... அவிநவகவிநாதன் விழுந்த ஞாயிறு எழுவதன்முன் மறை வேதியருடன் ஆராய்ந்து எழுந்த ஞாயிறு விழுவதன் முன் கவிபாடினது எழுநூறே!" என்று தன் தந்தையின் சிறப்பைக் கூறி, 700 பாடல் வீதம் 15 நாள்களில் 8,200 பாடல்கள் எழுதியதாகக் கூறுவான்!கம்பர் தாம் இயற்றிய இராமகாதையில் சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து (விரிகடல் உலகம்...) பாடியுள்ளார். திருமங்கையாழ்வார் பாடிய பாசுரத்தில்,
"எண்ணிய சகாப்தம் எழுநூற்று ஏழின்மேற் சடையன் வாழ்வு நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்பநாடன் பண்ணிய ராமகாதை பங்குனி அத்தநாளில் கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கேற்றினானே''. என்பதுவாம்.
கவிச்சக்கரவர்த்தி என்று "நாதமுனிகளால்" (கி.பி 9) கம்பர் சிறப்பிக்கப்பட்டதாலும், திருவரங்கத்தில் கம்பர் தம் இராமகாதையை அரங்கேற்றம் செய்ததாலும், வயிரமேகன் எனும் நந்திவர்மன் பெயரை திருமங்கையாழ்வார் குறிப்பிட்டுக் கூறியுள்ளதாலும் (நந்திவர்மன் காலம் கி.பி.9) கம்பரது காலம் கிபி. 9ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.
"ஆவின்கொடைச் சகரர் ஆயிரத்துநூறு ஒழித்து'' "எண்ணிய சகாப்தம் எண்ணூற்று ஏழின்மேல் சடையன் வாழ்வு''என்னும் இரு செய்யுள்களில் (தனிப்பாடல்கள்) முதல் செய்யுளுக்கு சாதவாகன சகாப்தம் ஆயிரத்து நூறு (கி.பி.1178) என்றும், இரண்டாவது செய்யுளுக்கு சாதவாகன சகாப்தம் எண்ணூற்று ஏழு (கி.பி.885) என்றும் பொருள் கொள்ளலாம்.
"க்ஷத்திர சூடாமணி" என்னும் நூலைப் பின்பற்றி எழுதப்பட்டது சீவகசிந்தாமணி. க்ஷத்திர சூடாமணி கி.பி. 898இல் இயற்றப்பட்டது. ஒரு நூலில் உள்ள கருத்துகள் இன்னொரு நூலில் இடம்பெற வேண்டும் என்றால், அந்நூல் குறைந்தது இரு நூற்றாண்டுகள் மக்களிடையே பரவி, பாராட்டப்பட்டிருக்க வேண்டும். திருத்தக்கதேவரை விட விருத்தப்பாவை சிறப்பாகக் கையாண்டவர் கம்பர். அதனால் கம்பராமாயணம் 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். சேக்கிழாரின் பெரியபுராணத்தில் அவர் கையாண்ட ஓர் உத்தியை கம்பர் தமது இராமாயணத்திலும் கையாண்டுள்ளார். இதனால் கம்பராமாயணம் பெரியபுராணத்திற்குப் பின்னையது என்பது தெளிவாகிறது.
தமிழ் இலக்கிய வரலாற்றில் பல சடையப்ப வள்ளல்கள் காணப்படுகின்றனர். கம்பவர்மனுக்கு உதவிய சடையப்ப முதலியார், ஒட்டக்கூத்தரை ஆதரித்த சடையப்ப சங்கரன், கம்பரை ஆதரித்த சடையப்ப சரராமன் என்பவர்கள் மூவரும் வேறு வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள். சடையப்பன் என்னும் பெயரை வைத்து கம்பர் வாழ்ந்த காலத்தை நிறுவ முடியாது.
சி.கே.சுப்பிரமணிய முதலியார், "ஆசிரியர் (சேக்கிழார்) வாழ்ந்த காலம் குலோத்துங்கன் (இரண்டாம்) - (அநபாயன்) காலம் என்பது இப்போது ஆராய்ச்சியாளர் பலரும் கொள்ளும் கொள்கை. அஃது இப்போதைக்கு (கி.பி.1950) எண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்டதாகும். கலிங்கத்துப்பரணி பாடிய ஜெயங்கொண்டார் ஆசிரியர் காலத்துக்கு முன்பும், ஒட்டக்கூத்தர் அவர் காலத்து உடனாகவும், கம்பர் அவர் காலத்துக்குப் பின்னரும் வாழ்ந்திருந்தனர் என்னலாம்'' என்று கூறியுள்ளார். இம் மன்னனின் காலம் கி.பி.1133 - 1150.
இவை தவிர, கம்பர் தமது இராமாயணத்தில் கையாண்டுள்ள பல சொற்களும், அணிகளும், கி.பி.12ஆம் நூற்றாண்டையும் அதற்குப் பின் ஆன காலத்தையும் சார்ந்தவை என்பதை நிரூபிக்கின்றன. ஆகவே, கம்பர் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பது தெளிவு.
--
1.கம்பன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டு என்று நிறுவுவதால் கிடைக்கின்ற பலன்களை அறியத்தருமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
2.ஆய்வுகள் கம்பனை பௌத்ததம் தழுவியவர் என்றும் பௌத்தக்கொள்கையை விடாமல் ஆசைபற்றி அறையலுற்றேன் என்கிறார் என்றெல்லாம் இட்டுச் செல்கிறது.ஐயத்திற்கு இடமளிக்கும் இதனையெல்லாம் விட்டுவிட்டு
கம்பனில் இரண்டு பாடல் எடுத்து இரசிக்க, எண்ணிப்பார்க்கத் தந்தால் பயனடையலாம் என்பது என் எளிய கருத்து.
2012/7/8 Kannan Natarajan <thar...@gmail.com>
> மூன்று சடையப்ப வள்ளல்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
> அவ்வாறு அன்று. ஒரு சடையப்ப வள்ளல்தான் இருந்துள்ளார். சடையப்பவள்ளல் பெளத்த
> சமயத்தைச் சார்ந்தவர். கம்பர் உவச்சர் குலத்தில் பிறந்து, சடையப்ப வள்ளலால்
> ஆதரிக்கப்பெற்று, பெளத்த சமயத்தில் சேர்ந்து, "அவிநவகவிநாதன்" என்ற பெயரில்
> பெளத்த சமயக் கருத்துகளை ஏற்றுக்கொண்டு நாடெங்கிலும் கவிபாடி வலம் வந்தவர்.
> கம்பர் தன் மகனுக்கு பெளத்த சமய சிறுதெய்வமாகிய "அம்பாபதி" தெய்வத்தின் பெயரை
> இட்டுள்ளார். அம்பாபதி (அம்பிகாபதி) தான் இயற்றிய கோவையில்,
>
கம்பன் முதலில் பௌத்தனாக இருந்தான் எனும் சேதி. இதுவரை கேள்விப்படாதது!
> பெளத்தரான சடையப்பவள்ளல் பின்னாளில் வைணவராகி, "சடகோபர்" எனத் தம் பெயரை
> மாற்றிக்கொண்டு வைணவத்தை ஆதரித்தார். அப்போது கம்பர் "சடகோபர் அந்தாதி" எனும்
> நூலைப் பாடினார்.
இங்கு இடிக்கிற! சடகோபரந்தாதியை பேராசிரியர் வாசித்தது இல்லையோ? ;-)
கொடை கொடுப்பவன் மதம் மாறினவுடன் கம்பன் மதம் மாறி ஆழ்வார்களில் தோய்ந்து
கம்ப காவியம் பாடியிருக்க முடியுமா? எனும் கேள்வி ஒன்று எழுகிறது.
அதே சமயம், வைணவர்கள் ‘கம்பராமாயணத்தை’ தலையில் வைத்துக் கொண்டாடாமல்
இருப்பதற்கு ஏதாவதொரு காரணம் இருக்க வேண்டும். கம்பன் ஒரு கன்வெர்ட்
என்பது காரணமாகலாம் (சரித்திரம் எவ்வளவு ரகசியங்களை உள்ளடக்கி
வைத்திருக்கிறது)
> கவிச்சக்கரவர்த்தி என்று "நாதமுனிகளால்" (கி.பி 9) கம்பர்
> சிறப்பிக்கப்பட்டதாலும், திருவரங்கத்தில் கம்பர் தம் இராமகாதையை அரங்கேற்றம்
> செய்ததாலும், வயிரமேகன் எனும் நந்திவர்மன் பெயரை திருமங்கையாழ்வார்
> குறிப்பிட்டுக் கூறியுள்ளதாலும் (நந்திவர்மன் காலம் கி.பி.9) கம்பரது காலம்
> கிபி. 9ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.
>
ஆழ்வார்களின் காலக்கணக்கில் நிறையச் சிக்கல் இருப்பது புலனாகிறது. இவர்
நாதமுனிகளும் 9ம் நூற்றாண்டு என்கிறார், திருமங்கையாழ்வாரும் 9ம்
நூற்றாண்டு என்கிறார். அது எப்படி?
நா.கண்ணன்
> "க்ஷத்திர சூடாமணி" என்னும் நூலைப் பின்பற்றி எழுதப்பட்டது சீவகசிந்தாமணி.
> க்ஷத்திர சூடாமணி கி.பி. 898இல் இயற்றப்பட்டது. ஒரு நூலில் உள்ள கருத்துகள்
> இன்னொரு நூலில் இடம்பெற வேண்டும் என்றால், அந்நூல் குறைந்தது இரு நூற்றாண்டுகள்
> மக்களிடையே பரவி, பாராட்டப்பட்டிருக்க வேண்டும்.
அப்படி யூகிக்க வேண்டிய காரணமென்ன? பாரதி காலத்தில் பிரபலமாக இருந்த
தாகூரை மொழிபெயர்க்கவில்லையா? இல்லை பாரதியை அவன் வாழ்ந்த காலத்திலும்,
அவன் மறைந்தவுடனேயும் தமிழகம் தலையில் வைத்துக் கொண்டாடவில்லையா? இருநூறு
ஆண்டுகள் ஏன் பொறுக்க வேண்டும்? நம்மாழ்வார் மறைந்த சில ஆண்டுகளுக்குள்
அவர் பாடலை மதுரைச் சங்கத்தில் இட்டு பெருமை சேர்த்தாகக் கதைகள் கூறும்.
இக்கட்டுரையின் கணிப்பே சரியாக இருக்க வாய்ப்புள்ளது. கம்பன் ஆழ்வார்கள்
காலமல்ல. பின்னால் வந்தவர் என்று கருதுவதே பொருந்தும்.
நா.கண்ணன்
பேராசிரியர் கா.காளிதாஸ்நன்றி:- தினமணி
--
ஐயம் என்பதே அறிவின் விதை.
கம்பனில் இரண்டு பாடல் எடுத்து இரசிக்க, எண்ணிப்பார்க்கத் தந்தால் பயனடையலாம் என்பது என் எளிய கருத்து.கம்பன் பாடலை ரசிக்க இரண்டென்ன கணக்கு?
1.கம்பன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டு என்று நிறுவுவதால் கிடைக்கின்ற பலன்களை அறியத்தருமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
2.ஆய்வுகள் கம்பனை பௌத்ததம் தழுவியவர் என்றும் பௌத்தக்கொள்கையை விடாமல் ஆசைபற்றி அறையலுற்றேன் என்கிறார் என்றெல்லாம் இட்டுச் செல்கிறது.
ஐயத்திற்கு இடமளிக்கும் இதனையெல்லாம் விட்டுவிட்டு கம்பனில் இரண்டு பாடல் எடுத்து இரசிக்க, எண்ணிப்பார்க்கத் தந்தால் பயனடையலாம் என்பது என் எளிய கருத்து.
On Sunday, 8 July 2012 00:19:42 UTC-7, NaKa wrote:
>>> அதே சமயம், வைணவர்கள் ‘கம்பராமாயணத்தை’ தலையில் வைத்துக் கொண்டாடாமல்
இருப்பதற்கு ஏதாவதொரு காரணம் இருக்க வேண்டும். கம்பன் ஒரு கன்வெர்ட்
என்பது காரணமாகலாம் (சரித்திரம் எவ்வளவு ரகசியங்களை உள்ளடக்கி
வைத்திருக்கிறது) <<<
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கம்பராமாயணம் பழைய காலத்தில் வைணவ ஆச்சாரியர்கள் எழுத்துக்களில் காணப்படுவதில்லை என்பது உண்மைதான்
19, 20 ஆம் நூற்றாண்டில்தான் கம்பராமாயணம் மிக அதிகமாக படிக்கப்பட்டதாக என்னிடம் சில தகவல்கள் உள்ளன. அதற்கு முன்னால் கம்பராமாயணம் எந்த அளவில் பிரபலமாக இருந்தது என்பது பற்றி ஆராயவேண்டும்.
இந்த ‘சரித்திர ரஹசியம்’ பெரிய விஷயம் இல்லை. ஸ்ரீவைஷ்ணவத்தில்
ஆழ்வார்கள் பாசுரங்கள் "canonical text" என ஆக்கியபிறகு, மரபு அங்கே
இறுகலாகி விடுகிறது. அதனால் அதற்கு பின் வரும் இலக்கியங்கள் எவ்வளவு
மதிப்பு இருந்தாலும், அதை orthodox "canonical text" இல் ஏற்றுவது
கடினம். அல்லது மரபே எப்படி மேலும் வரும் இலக்கியங்களை "canonical text"
ஆக்குவதற்க்கு ஒரு வழி வைத்தால் , "canonical text" இன் தொகை அதிகமாகும்,
அப்போது கம்பரும், கம்பராமாயணமும் அதில் சேர்த்திருக்கலாம். ஆனால்
சரித்திரம் அப்படி இல்லை, தமிழ் வைணவத்தின் “ஆதி புத்தகங்கள்”
ஆழ்வார்களுடன் நின்றுபோய் விடுகிரது.
வகொவி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நான் பழைய காலத்தில் எனச் சொன்னது 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹரிகி. என்னிடம் ஆச்சாரிய வைபவ மஞ்சரி (வடகலை) உள்ளது. எங்கும் கம்பனைக் காணோம்.
ஹரிகி,இந்த தியாக விநோதன் யார்.. கொஞ்சம் எழுதுங்களேன்..
--
நல்ல அலசல். பலரும் பயனுற பங்களித்துள்ளனர்.
இன்னொன்றும் தோன்றுகிறது. நாதமுனிகளைத் தொடர்ந்து, இராமானுஜர் காலத்தில்
அவர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால். ஆழ்வார் தமிழ்ப்பனுவல்களை
ஸ்ரீசூக்தம் என்று முன்மொழிவது. அது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதுவரை
religious orthodoxy என்பது வடமொழியில் இயங்கி வந்தது. அதன் முன் ‘மாத்ரு
பாஷாவும் தேவபாஷாவும் ஒன்று என்று கணக்குச் சொல்வது எளிதல்ல. எனவேதான்
வடி கட்டி, வடிகட்டி, ‘பகவத் விஷயம்’ மட்டும் பேச் பனுவல்களை "canonical
text" என்று அறிவித்தனர். கம்பனையும் இணைத்துக் கொண்டால் இன்னும் பல
பிரச்சிகளை சமாளிக்க வேண்டி வந்திருக்கும். அது அப்படியே நிலை பெற்று
விட்டது. [பின்னால் ஆழ்வார்களை ரிஷிகள் என்று பேசும் அளவிற்கு நெஞ்சங்களை
மாற்றியிருக்கின்றனர்)
அகவழியில் வரும் ஸ்ரீவைஷ்ணவம் அகத்துறைப்பாடல்களைக்கூட அதிகம்
கையாளுவதில்லை - வியாக்கியானத்தில். பின்னால் உரைக்கு, உரை எழுதும்
புருஷோத்தம நாயுடு நிறைய சங்கப்பாடல்களை மேற்கோள் காட்டுவார்.
பாரதி காலத்தில் கூட வடமொழி உயர்வு பெரிதாகவே இருந்திருக்கிறது, என்பதை
அவனது கட்டுரை ஒன்று பேசும். ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாவிற்கு
‘’மகாமகோபாத்யாய’ எனும் பட்டம் கொடுக்கப்பட்டபோது, ‘அது எப்படி? ஒரு
தமிழாசிரியருக்கு இத்தகைய உயர்ந்த பட்டத்தை அளிக்கலாம்?’ எனும் கேள்வி
எழுந்திருக்கிறது. பாரதி உ.வே.சாவைப் பெரிதும் போற்றி பாட்டு
எழுதுகிறான்.
இவ்விழையில் சுட்டியபடி, வேளுக்குடி போன்ற சமகால ஹரிகதா வித்வான்கள்
கம்பனை விடவில்லை என்பது மகிழ்வான விஷயமே. ஆழ்வார் திருநகரிக்கும்
கம்பனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
நா.கண்ணன்
தாங்கள் சடகோபர் அந்தாதியையும் உங்கள் கணக்கில் சேர்த்துக் கொண்டால்
கூடுதல் பலனளிக்கும். கம்பன், ‘தமிழ் பின்னால் போகும் பெருமாள்’ பற்றிச்
சொல்கிறான். இது போல் நிறைய எடுக்கலாம்.
http://www.chennailibrary.com/kambar/sadagoparanthathi.html
பிரபந்த இலக்கியம் பற்றிப்பேசும் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் இப்படிக்
கூறுகிறது...
// 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பிரபந்த
இலக்கியங்கள் என்ற நிலையில் கண்டனலங்காரம்,
கண்டன்கோவை, சரசுவதி அந்தாதி, சடகோபரந்தாதி,
ஏரெழுபது, திருக்கை வழக்கம் முதலியவற்றைக் கூறலாம்//
நா.கண்ணன்
பிகு: நாசாவின் பார்வையில் கம்பன் சடகோபர் அந்தாதி பாடவில்லை என்பது ;-)
2012/7/9 OAGAI NATARAJAN <enge...@gmail.com>:
கம்பநாட்டாழ்வான் என்ற சொல்வழக்குண்டு! :-)
> கம்பராமாயயணம் வைணவ canoninal text ஆக்காமல் இருப்பதால், அதை மற்ற தமிழர்கள்
> (95%???) தங்கு தடையின்றி, சங்கோஜமின்றி, மத சம்பந்த ப்ரெஜுடிஸ்கள் இல்லாமல்
> ஒரு மகா இலக்கியமாக அணுகலாம், அணுகிகின்ரனர், அதை மத்தியகால தமிழின்
> மிகச்சிறந்த தமிழிலக்கியமாக பருகுகின்றனர். வைணவர்கள் மட்டுமின்றி, சைவர்கள்,
> ஜைனர்கள், நாத்திகர்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள் (மு.மு.இஸ்மயில்) அதை
> தங்கள் இலக்கியமாகவே கருதுகின்ரனர். இதுவே கம்பரை ஒரு ஆழ்வாராக
> ஆக்கியிருந்தால், தமிழ்நாட்டு மத, ஜாதி சாய்வுகள் ஒரு மாபெரும் இலக்கியத்தை
> கைக்கெட்டாத தூரத்திலேயே வைத்திருக்கும்.
100% ஒத்துக்கிறேன் ;-)
க.>
கம்பரின் காலம் 13ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு மேற்பட்டது என்பதற்கான சான்றுகள்:
அ. ஒட்டக்கூத்தரின் காலம் 12ஆம் நூற்றாண்டு என்பது எவ்வித ஐயத்துக்கும் இடமில்லாமல் கல்வெட்டு சான்றுகளாலும் இலக்கிய சான்றுகளாலும் நிறுவப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து வந்த மூன்று சோழ அரசர்களின் காலத்தில் அவர் இருந்திருக்கிறார். இவர் உத்தரகாண்டத்தை எழுதினார் என்பது கம்பன் இவர் காலத்துக்கு முற்பட்டவன் என்பதற்கு சான்றாகக் கொடுக்கப் படுகிறது. ஆனால் அதை ஏற்க முடியாதபடிக்கு பல வரலாற்று அம்சங்கள் தென்படுகின்றன.
ஒட்டக்கூத்தர் ஒரு வீர சைவர். இவர் ஒரு வைணவ காவியத்தின் இறுதிப் பகுதியை உளமாற எழுதுவாரா என்பது முதல் கேள்வி. மறந்தும் புறந்தொழாக் கோட்பாடு சில வைணவர்களுக்கு மட்டுமே உரியதாயினும் வீர சைவர்கள் சைவ வழிபாட்டு மேன்மையில் தீவிரமானவர்கள். வீர சைவ மடத்தை ஏற்படுத்தியவர் ஒட்டக்கூத்தரே. ஒட்டக்கூத்தர் தீவிர சைவர் என்பது மட்டுமல்லாமல் ஒரு வைணவ வெறுப்பாளராகவும் இருந்திருக்கிறார். இதற்குச் சான்றாக அவரது இரண்டு பாடல்களைத் தர முடியும்.
க.தில்லைத் திருமன்றின் முன்றில் சிறுதெய்வத் தொல்லைக் குரும்பு.......
(குலோத்துங்கன் உலா பாடல் 77-78)
கா. பொன்னில் குயிற்றிப் புறம்பின் குரும்பு அனைத்தும்
முன்னர் கடல் அகழில் மூழ்கிவைத்த சென்னி........
(ராராஜன் உலா - பாடல் 65-66)
அ. ஒட்டக்கூத்தரின் காலம் 12ஆம் நூற்றாண்டு என்பது எவ்வித ஐயத்துக்கும் இடமில்லாமல் கல்வெட்டு சான்றுகளாலும் இலக்கிய சான்றுகளாலும் நிறுவப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து வந்த மூன்று சோழ அரசர்களின் காலத்தில் அவர் இருந்திருக்கிறார். இவர் உத்தரகாண்டத்தை எழுதினார் என்பது கம்பன் இவர் காலத்துக்கு முற்பட்டவன் என்பதற்கு சான்றாகக் கொடுக்கப் படுகிறது. ஆனால் அதை ஏற்க முடியாதபடிக்கு பல வரலாற்று அம்சங்கள் தென்படுகின்றன.
குலோத்துங்க சோழன் I எப்படி இதற்குள் வருகிறான் என்றால், ‘இன்னார் பெயரனே’ என்று ஓரிடத்தில் (இடம் நினைவில்லை. படித்த நினைவிருக்கிறது. நினைவுக்கு வந்ததும் அல்லது தேடிக் கிடைத்ததும் சொல்கிறேன்) குறிப்பிடுவதால் இந்த வம்சாவளியில் கூடுதலாக ஒரு மன்னன் பெயர் தென்படுகிறது. விக்கிரம சோழன் பட்டத்துக்கு வந்தது (கிறிஸ்துவ நாள்காட்டிப்படி) கி. பி. 1118 ஜூன் மாதம் 29ம் தேதி என்று விக்கிரம சோழனைப் பற்றிய குறிப்பில் இந்த நூல் சொல்கிறது. (மூவருலா--கலாக்ஷேத்திரா வெளியீடு, பக்கம் xxiii, 1952ம் ஆண்டு பதிப்பு). இப்போது காலக்குறிப்பில் ஒரு notch கிடைத்தது என்று கொண்டால், கம்பனை எங்கே நிறுத்துவது என்ற கேள்விக்கு இப்போதைக்கு என்னிடம் விடை இல்லை. உத்தரகாண்டத்தை ஒட்டக்கூத்தர் இயற்றவில்லை என்று நீங்கள் நிறுவி முடித்ததன்பின் மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம்.
ஒட்டக்கூத்தர் ஒரு வீர சைவர். இவர் ஒரு வைணவ காவியத்தின் இறுதிப் பகுதியை உளமாற எழுதுவாரா என்பது முதல் கேள்வி. மறந்தும் புறந்தொழாக் கோட்பாடு சில வைணவர்களுக்கு மட்டுமே உரியதாயினும் வீர சைவர்கள் சைவ வழிபாட்டு மேன்மையில் தீவிரமானவர்கள். வீர சைவ மடத்தை ஏற்படுத்தியவர் ஒட்டக்கூத்தரே. ஒட்டக்கூத்தர் தீவிர சைவர் என்பது மட்டுமல்லாமல் ஒரு வைணவ வெறுப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
இவர் ஒரு வைணவ வெறுப்பாளர் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் அல்லது சொல்லப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாமா? வைணவ வெறுப்பின் காரணமாகத்தான் இவர் உத்தரகாண்டத்தை இயற்றியிருக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுவதால், இந்த முடிபின் அடிப்படை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
சரி. வைணவ வெறுப்பாளர் என்றே வைத்துக் கொள்ளலாம். ராமனைப் பற்றிப் பாட இவருக்கு உள்ளத் தடை இருந்திருக்கும் என்று இந்த அனுமானத்தின் அடிப்படையில் கட்டியிருப்பது மணற்கோட்டை. சீட்டுக்கட்டுக் கோட்டை. மூவருலாவுக்குள்ளேயே, ராமனைப் பற்றி இவர் சொல்லியிருக்கும் பகுதிகளில் சிலவற்றை மாதிரிக்காகக் காட்டுகிறேன். இவையெல்லாம் சோழ மன்னனைப் பெருமைப்படுத்துவதற்காக, ஈடு சொல்லிப் புகழ்ந்திருக்கும் மொழிகள்:
பேராப் பெரும்பகை தீரப் பிறவேந்தர்
ஊராக் குலிச விடையூர்ந்தோன்
குலோத்துங்க சோழனுலா, கண்ணி 3 (முன்னோர் பெருமை)
தேவர்களுக்கு ஏற்பட்ட தீராத பகையைத் தீர்ப்பதற்காக, மற்ற மன்னர்கள் யாருமே ஊர்ந்திராத எருதை வாகனமாகக் கொண்டு போர்புரிந்தவன். (இக்ஷ்வாகுவின் மகனான புரஞ்சயன் இந்திரனுக்காக யுத்தம் செய்தபோது, இந்திரனே எருதாக வந்து அவனுக்கு வாகனம் ஆனான். எருதின் கழுத்தில் (ககுஸ்த்தம்) அமர்ந்து போர்புரிந்ததனால் புரஞ்சயனுக்கு ககுஸ்தன் என்ற பெயரும் உண்டு. இதுவே தமிழில் காகுத்தன் என்றறியப்படுகிறது. பின்னால் பரம்பரை பரம்பரையாக, இராமன் உள்ளிட்ட அனைவருமே காகுத்தன் என்ற பெயரால் அறியப்பட்டவர்கள்.
பொருதோர்கள் ஈரைந்தின் ஈரைவர் போர்பண்(டு)
ஒருதேரால் வென்ற உரவோன்
(மேற்படி, கண்ணி 9)
ஈரைந்து தேர்களில் அமர்ந்து வந்த ஈரைந்து பகைவர்களை ஒரே தேராலே எதிர்கொண்டவன். ஈரைந்து=பத்து. தசரதனைக் குறிக்கிறது என்பது வெளிப்படை.
மலைபத்தும் வெட்டும் உருமின் மறவோன்
தலைபத்தும் வெட்டும் சரத்தோன்
(மேற்படி, கண்ணி 10)
இராவணனின் மலைபோன்ற பத்துத் தலைகளையும் இடிபோன்ற சரங்களால் வெட்டித் தள்ளிய ராமன். (அல்லது, வஜ்ராயுதத்தால் இந்திரன் மலைகளின் சிறகை அறுத்ததுபோல், சரங்களால் ராவணனின் மலைபோன்ற தலை பத்தும் கத்தரித்தவன் என்றும் சொல்லலாம்.)
ஒருதேரால் ஐயிரண்டு தேரோட்டி உம்பர்
வருதேரால் வான்பகையை மாய்த்தோன்
(இராசராச சோழனுலா, கண்ணி 11)
சிலையால், வழிபடு தெண்டிரையைப் பண்டு
மலையால் வழிபட வைத்தோன்
(மேற்படி, கண்ணி 12)
வில்லின் ஆற்றலால், (அம்புதொடுத்ததுமே தன்னை வந்து) வணங்கி வழிபட்ட கடலை, மலையால் (நிரப்பி அணைகட்ட ஏதுவுவாகுமாறு) தனக்கான வழியை ஏற்பட வைத்தவன். ராமன்.
வட்ட மகோததி வேவ ஒருவாளி
விட்ட திருக்கொற்ற விற்காணீர்
(மேற்படி, கண்ணி 84)
ஹரிகி
இந்த இடத்தில் கைக்கோளர் என்று சொல்லப்படுவது கொஞ்சம் சரியாயில்லை. ஏன் என சொல்லிவிடுகிறேன், சாதியை கொண்டு ஆராயப்போனால் பெரும் சிக்கல் வரும். அப்புறம் கம்பன் எந்த சாதி, இளங்கோ அடிகள் எந்த சாதி என்றெல்லாம் ஆராயப்புகவேண்டி நேரிடும். ஏனென்றால் கம்பர் ஏரெழுபது பாடியிருக்கிறார் அதைக்கொண்டு மட்டுமே அவர் இந்த சாதி என சொல்லிவிட முடியுமா?
இங்கு ”கூறப்பெறும்” நூல் சொல்கிறதே தவிர அறுதியிடவில்லை. இதை இயற்றியது வேறு ஏதாவது ஒட்டக்கூத்தராக கூட இருக்கலாம். கம்பனின் மேலும் இப்படி பல தனிப்பாடல்களை ஏற்றும் பழக்கமுண்டே.
அதனால் ஈட்டியெழுபதை ஒட்டக்கூத்தர் இயற்றவில்லை என்று பொருளாகாது.
நன்கு சொன்னீர்கள் தேவ்.. இரண்டே வரியில் அப்பர் ராமாயணத்தை
சொல்லியிருக்கிறார் தெரியுமா
"செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடும்
சேதுபந் தனம்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ"(தி. 6 ப. 58 பா. 10)
தேவாரத்தில் இல்லாத ராமனா...
2012/7/10 DEV RAJ <rde...@gmail.com>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
> வ கொ வி அவர்களின் இக்கருத்தை ஏற்க முடியவில்லை.
> வால்மீகி ராமாயணமும் வைஷ்ணவ canonical textன்
> ஒரு முக்கியமான பகுதிதான். ராமாநுஜர் இதற்காகவே பெரிய திருமலை நம்பிகளிடம்
> தனியாகக் காலக்ஷேபம் கேட்டுள்ளார். இராமாயணமும், அருளிச்செயலும்
> வைணவத்தின் இரு பெரும் அரண்கள் என்று ஒரு சோழ மன்னன் கூறியுள்ளான்.
> வைணவத் துறை சார்ந்தது என்று பிறர் வால்மீகி ராமாயணத்தைப் படிக்காமல்
> இருப்பதில்லையே.
இது இன்னொருவகையில் சிந்திக்கத்தூண்டுகிறது. ஓகையாரின் காலக்கணக்கிற்கு
இது உதவலாம். கம்பன் ஆழ்வார் காலத்தில் அல்லது அதை ஒட்டிய காலம்
என்றால்தான் இந்த canonical முக்கியத்துவம் பெருகிறது. கம்பன் 13ம்
நூற்றாண்டோ இல்லை பிற்பாடோ என்றால் இந்த canonical எல்லாம் முடிந்த பின்
வந்து சேர்கிறான் என்றாகிறது. அதாவது கடைசி ஆச்சார்ய சீலரான மணவாள
மாமுனிகளுக்குப் பிறகு (1370-1443).
ஓகையார் யோசிக்க இன்னும் சில கருத்துக்கள் இவை!
நா.கண்ணன்
தேவ அவர்களே
வைணவம் சமஸ்கிருதத்தில் ஒரு கால், தமிழில் ஒரு கால் வைத்துள்ளது. நாம்
இங்கு தமிழ்காலைப் பத்திதான் அலசுகிறோம். சமஸ்கிருத பக்கத்தில் பல
canonical text உம் , அதன் உரைகளும் உள்ளன.
வகொவி
திருவரங்கம் கோயிலொழுகு சொல்லும் இராமாயண அரங்கேற்ற காலம்
இந்த ஆய்வுக்கு எவ்வளவு தூரம் உதவும் என்று தெரியவில்லை.
நன்றி ஹரிகி சார்.
>This is the ONE AND ONLY DOCUMENTED EVIDENCE ON KAMBAN<
இணையத் தேடலில் கிடைத்த இரு சான்றுகள் -
5.கவிச்சக்கரவர்த்தியான கம்பர் சோழப் பேரரசர்களால் ஆதரிக்கப்படாத நிலையில், நாதமுனிகள் தம் தலைமையில் கம்ப ராமாயணத்தை அரங்கேற்றம் செய்தார்.
திருமகன் சீராசராசன் கதிரோன்
மருமகனாகி மறித்தும் திருநெடுமால்
ஆதிப் பிறவி அனைத்தினும் உம்பர்க்குப்
பாதிப் பகை கடிந்து பாதிக்கு மேதினியில்
செந்தாமரையாள் திருமார்பில் வீற்றிருக்க
வந்தான் மனு வம்ச மாமேரு.(இராச.உலா.கண்ணி. 67-72)
(மங்கலமான இராசராசன் என்ற பெயரை உடையவன். சூரிய குலத்தில் தோன்றியவன். திருமால் பத்து அவதாரங்களைச் செய்தார். என்றாலும் தேவர் பகை முழுவதையும் தொலைக்க முடியவில்லை. எனவே எஞ்சிய தேவர் பகையைத் தொலைக்கச் சூரிய குலத்தில் இராசராசனாகப் பிறந்துள்ளான் என்பர்.)
ஒட்டக்கூத்தர் காலத்தில்தான், இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில்தான் இராமனுஜர் விவகாரம் நடந்தது. தில்லைக் கோவிலில் கோவிந்தராஜபெருமாள் அகற்றபட்டதும் நடந்தது. இந்த அவையில்தான் ஒட்டக்கூத்தர் அவைப் புலவராகவும் அரசனுக்கு ஆசிரியனாகவும் இருந்தார்.
ஆகையால் உங்கள் சான்றுகள் அவர் வைண ஆதரவாளர் என்றோ அல்லது சைவ வைணவ நடுநிலையாளர் என்றோ நிரூபிக்கவில்லை.
சோழகுல (சூரிய குல) முன்னோரில் ஒருவன் என்ற முறையில் இராமனை உத்தரகாண்டத்தில் பாடியிருக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். ஒட்டக்கூத்தர் அன்றைய நிலையில் ஒரு மிகப்பெரிய ஆளுமை. இலக்கியங்கள் கல்வெட்டுகள் என்று அவருக்கான பதிவுகள் வரலாற்றில் ஏராளம். ஒட்டக்கூத்தரின் ஆளுமைக்கு இன்னொரு புலவரின் காப்பியத்துக்கு பிற்சேர்க்கை எழுதுவாரா என்ற கேள்வி பெரிதாக எழுந்து அதற்குப் பதில் சொல்கிறது.
(இதை நான் கம்பனைக் குறைத்துச் சொல்வதாக தயவுசெய்து எண்ணிவிட வேண்டாம்.)
--
http://www.badriseshadri.in/2012/07/blog-post_16.html#comment-form
மத அடிப்படைவாதம்
வகொவி
On Sunday, July 8, 2012 1:26:03 AM UTC-7, S.Vinaitheerthan wrote:
2012/7/8 OAGAI NATARAJAN <enge...@gmail.com>
ஐயம் என்பதே அறிவின் விதை.நன்மொழி!கம்பனில் இரண்டு பாடல் எடுத்து இரசிக்க, எண்ணிப்பார்க்கத் தந்தால் பயனடையலாம் என்பது என் எளிய கருத்து.கம்பன் பாடலை ரசிக்க இரண்டென்ன கணக்கு?ஒரு பேச்சுக்கு இரண்டு என்று சொன்னேன். ”ரெண்டு சோறு போடு” என்பதுபோல.எத்தனை வேண்டுமானாலும் இரசிக்க, எண்ணிப்பார்க்கத் தாருங்கள்.அன்புடன்,
சொ.வினைதீர்த்தான்.
விரிவாக, ஆய்வாளர்களையும், அவர்கள் நூல்களையும் பெயர்கள் கொடுத்துதினமணி பத்திரிகை கம்பர் காலம் 12-ஆம் நூற்றாண்டு என நிறுவியுள்ளதுதமிழ் இலக்கிய ஆய்வை இளந்தலைமுறையினருக்கு பரந்துபட்ட அளவில்எடுத்துச் செல்லும். அவ்வகையில் தினமணி பல மூத்த புலவர்களை எழுத வைப்பதுபாராட்டுக்குரியதாகும்.தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒட்டக்கூத்தரும், வாணியன் தாதனும்சமுகத்தாலும், காலத்தாலும் வேறுபட்டவர்கள். கூத்த முதலியார் கைக்கோளர்.வாணியன் தாதன் என்னும் புலவர் செக்காரச்செட்டியார்.வாணியன் பாடிட வண்ணான் சுமக்க என்னும் புகழ்பெற்ற காளமேகத்தின்விருத்தம் தொடங்குவது தாதனின் ஜாதிபற்றியே தொடங்குகிறது.இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவர் ஒட்டக்கூத்தர்.கவிச்சக்கரவர்த்தி கம்பரோ மூன்றாம் குலோத்துங்கன் காலம்.அக் காலத்தவர் புலவர் வாணியன் தாதன். கம்பரும், வாணியன் தாதனும்ஒருவருக்கொருவர் ஏசியும், வாழ்த்தியும் பாடிய பாடல்களை17-ஆம் நூற்றாண்டில் கவிஞர்கள் சரித்திரத் தொகைநூல்கள் கொண்டுள்ளன.இராமாயணம் ஒரு நாட்டார்கதைப்பாடலாய் இந்தோ-ஐரோப்பிய மக்கள்வாழும் நாடுகள் எல்லாவற்றிலும் இருக்கிறது. உ-ம்: ருஷியா நாட்டுப்புறப் பாடல்கள்.இராமாயணத்தின் ஏழாம் காண்டத்தை எழுதிப் பூர்த்திசெய்ய, கம்பன் 6 காண்டங்களோடுமுடித்ததைச் சோழ சக்கரவர்த்தி (குலோத்துங்கன் III) ஆதரவால் பின்னர் எழுதியவர்வாணியன் தாதன். வாணியன் தாதன் கம்பரை உவச்சர் குலத்தவர்என்ற செய்தி தருபவர்.தமிழின் புகழ்மிக்க இரங்கற்பாக்களில் ஒன்றுவாணியன் தாதன் கம்பர் இறந்தபோது பாடிய வெண்பா:இன்றோநம் கம்பன் இறந்தநாள்! இப்புவியில்
இன்றோஅப் புன்கவிகட்கு ஏற்றநாள்! - இன்றோதான்
பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருப்ப
நாமடந்தை நூல் வாங்கும் நாள்!e.g:உவேசா அவர்கள் ஒட்டக்கூத்தர் காலத்தவராக கம்பர் வாழ்ந்தவர்என்பதற்குச் சான்றுகள் இல்லை என்று எழுதியுள்ளார்கள்.
மேலும், ஒட்டக்கூத்தர் நூல்களில் உத்தர ராமாயணத்தைஏற்காதவர். கூத்தரின் நூல்களுக்கும், பிற்காலத்தவர்வாணியன் தாதன் செய்த உத்தர காண்டத்துக்கும் நடையில்உள்ள வித்தியாசங்கள் பற்பல என்று புலவர்கள் காட்டியுள்ளனர்.ஒட்டக்கூத்தர் புதிய அணுகுமுறைகளைத் தமிழில் கொணர்ந்தவர்.அவர் குறிப்பிடும் பதுமக் கொத்தன் யார்? என்று ஒருவரும்இணையகாலம் வரை உரை சொல்லவில்லை. Poetry in Stoneவிஜயகுமார் தளத்தில் விரிவாக எழுதிய என் கட்டுரையில்கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் பாடும் தமிழ் தரும்பதுமக்கொத்தன் யார்? என விளக்கியுள்ளேன். அது பௌத்தபோதிசத்துவர் - அவலோகிதன். கூத்தர் தம் கவிதைகளில்அகத்தியன் தமிழைப் போதித்தவர்களில் நடுநாயகமானவர்என்ற கருத்தைப் பலமுறை விரிவாகப் பேசுபவர் ஒட்டக்கூத்தரே.அதற்குமுன்னர், சின்னமனூர் செப்பேடு போன்றவற்றில்வடமொழியில் பாணியர்களின் புரோகிதர் அகத்தியர்என்ற அளவில்தான் உள்ளது.இறையனார் களவியல் உரையிலும் தமிழிலக்கணம் தந்தவர் அகத்தியர்தான்என்று விரிவாகக் காணோம்.இடைக்கால இலக்கியங்களில் தமிழ் இலக்கணம் அகத்தியத்துடன்ஆரம்பிக்கிறது என்ற கருத்தை நச்சினார்க்கினியர் எழுதுகிறார்.இந்தக் கருத்தாக்கங்களுக்கு விதை ஊன்றியவர் கூத்தர்.அவர் இரண்டாம் குலோத்துங்கனைப் பாடியவர். பின்னர்மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவரான கம்பர் அகத்தியர்இலக்கணம் தந்து தமிழை உலகத்துக்கு அளித்தான் என்றகதையை வளர்த்தெடுக்கிறார். நச்சினார்க்கினியர் அகத்தியர்சிஷ்யர் தொல்காப்பியர் என்ற கதையை விரிவாக நமக்குத்தருகிறார்.நமக்கு முதலில் கம்பனை மேற்கோள் காட்டுபவர்வியாக்கியான சக்ரவர்த்தி பெரிவாச்சான் பிள்ளை.அவர் கம்பனை மேற்கோள் காட்டும் 13-ஆம் நூற்றாண்டின்முதற்பகுதிக்கு சுமார் 100 ஆண்டு முன்னிருந்தவர் கம்பர்.
2 கவிச்சக்ரவர்த்திகள் கூத்தரும், பின்னர் கம்பரும்அகத்தியர் தமிழ் இலக்கணம் தரும் கதைகளை எப்படிவிரிவுபடுத்துகிறார்கள் என்று பின்னர் ஆராய்வோம்.அகத்தியம் என்னும் இலக்கணம் தமிழுக்கு இருந்ததாய்சொல்லப்படும் புராணக் கதைகளை வளர்த்ததில்கூத்தரும் அவருக்குப் பின்னர் கம்பரும் முக்கிய இடம் வகிக்கிறார்கள்.நா. கணேசன்
On Jul 18, 3:10 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> 2012/7/18 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
> > On Sunday, July 8, 2012 1:26:03 AM UTC-7, S.Vinaitheerthan wrote:
>
> >> 2012/7/8 OAGAI NATARAJAN <engee...@gmail.com>
>
> >>> ஐயம் என்பதே அறிவின் விதை.
>
> >> நன்மொழி!
>
> >>>> கம்பனில் இரண்டு பாடல் எடுத்து இரசிக்க, எண்ணிப்பார்க்கத் தந்தால் பயனடை**யலாம்
> சுபா-
Dear Subha,
I'm writing an essay - 3 stages of the Agastya myth development in
Tamil, and implications
for Kampan's century (= late 12th century). will give detailes there.
3 stages of Agastya's myth in Tamil.
I. As a vedic Rsi Agastya is the southern star, Canopus.
Pl. read my college professor Abhaynkar's article on Agastya
(Canopus):
http://www.iisc.ernet.in/currsci/dec252005/2174.pdf
Because of his southern connection, he gets associated with Mt.
Pothiyil
(Manimekalai. Tevaram - Thennan/Dakshinamurti's disciple there in
Tevaram
(e.g., Cuntarar, etc.,). In this First stage, no association of
Agastya rsi
with Tamil or as the first Tamil grammarian etc., yet
This is the stage where we find numerous Agastya statues in South East
Asia,
and vedic & Sanskrit rsi only. Most South East Asian inscriptions are
in Sanskrit.
II stage. Agastya becomes the family priest of Pandya kings
- kula purohitar. He teaches mantras as well as sweet Tamil to Pandya
kings.
Not yet a grammarian for the Tamil masses. In Pandikkovai and
Chinnamnur
Velvikkudi grant (10th cenntury) Agastya is the family priest of
Pandyas
and sings Tamil (of course, Sanskrit as well) to the Royalty.
This is the time, first in wood, and then in bronze, Nataraja image
was
created by Tamil sculptors, theologians (e.g., Manickavacakar).
In the Chola country, Haradatta Sivacaharya (10th century?) writes
about Nataraja's drum
sounds are Siva sutras and Siva teaching Sanskrit to Panini, the
grmmarian.
This Sanskrit stories eventually make Tamil pulavar-s to find an
equivalent story
for Tamil grammar.
||| stage. Like Siva teaching Sanskrit to Panini, OTTakkuuttar, the
staunch saivaite makes
Agastya the first Tamil grammarian. He sings in important places about
Agastya as the first grammarian of Tamil (takkayaakap paraNi)
And oTTakkuuttar in his songs where he gets awarded the title, Poet
Laureate,
by the Chola emperor, mentions Agastya the Tamil teacher being taught
in Tamil by Gnanasambandhar whom he calls (for the first time in
Tamil)
as an avatar of Murukan, and also by Avalokita Padmapani (whom he says
is
an avatar of Dakshinamurti). And then we see this myth of Agastya as
grmmarian
in PuRapporuL veNpaamaalai. BTW, oTTakkuuttar mentions akattiyam
grammar
in relation with wearing tumpai flowers of puRapporuL themes.
Hence, oTTakkuuttar is the first poet in Tamil who assigns grammar
work
to Agastya, and creates a mythical akattiyam grammar for Tamil.
This myth of Agastya as the author of first grammar for Tamil
was followed by Kampar in his Ramayana in Kulottunga III times more
elaborately foll. oTTakkuuttar's lead.
By 12th century's end, Kampar completely disposes of shramana
reliogions'
contribution to Tamil grammars which earlier oTTakkuutar did not
forget to
mention. Also, the Choza poets, kUttar & later kampar competely leave
out
Pandya royal household's connection to Agastya, as Pandyas were
subdued
by Chozhas, and Pandya realm gets annexed to Chozha country.
A study of Agastya myth development as the grammarian of Tamil leaves
no doubt that Kampar cannot be from 9th century, but belongs to 12th
century.
Dinamani articles, I'm glad, are also pointing to the same date.
The three stages of Agastya myth (1) as a Vedic rsi living in Pothiyil
as disciple of Dakshinamurti (2) Pothiyil Malaya being symbol of
Pandyas becoming the family priest of Pandya royalty and (3) when
Pandyas were subdued by Chozhas, the Chozha country poets
Ottakkuuttar and Kampar developing the story of Agastya as the
Tamil grammarian needs to be taken into account when discussing the
date of Kampar.
Kavichakravartis
(a) JeyamkoNDar - Kulottunga I
(b) Ottakkuutar - Kulottunga II
(c) Kampar - Kulottunga III
N. Ganesan
On Sunday, July 8, 2012 1:26:03 AM UTC-7, S.Vinaitheerthan wrote:
2012/7/8 OAGAI NATARAJAN <enge...@gmail.com>
ஐயம் என்பதே அறிவின் விதை.நன்மொழி!
கம்பனில் இரண்டு பாடல் எடுத்து இரசிக்க, எண்ணிப்பார்க்கத் தந்தால் பயனடையலாம் என்பது என் எளிய கருத்து.
தகவலுக்கு நன்றி, அ. ரா. ஐயா. மறைந்த எஸ். ராமகிருஷ்ணன் (மதுரை) நூலைப்
பார்க்கிறேன்.
(1) ஹளெபீடு (= பழவீடு) 12-ஆம் நூற்றாண்டு அன்றோ?
http://en.wikipedia.org/wiki/Halebid
(2) மும்மூர்த்தித் தத்துவம் பிரம்மா-விஷ்ணு-சிவனா?
கஜபுரி (எலிபெண்டா) சிற்பம் மகேசமூர்த்தி உடையது அல்லவா?
கஜபுரி சிற்பத்தையா கம்பன் பாடுகிறார்? அறிந்துகொள்ள ஆவல்.
--------------------------------
கம்பன் 9-ஆம் நூற்றாண்டு என்று இன்றும் இருப்பதன்
காரணம் ரஸிகமணி டிகேசி அவர்களின் தாக்கம்.
அவரது பிரதம சிஷ்யர் ஜஸ்டிஸ் எஸ். மகராஜன்
நூற்றாண்டுவிழா அண்மையில் நடந்தது. அம்மலரிலும்
என் வாழ்த்துச்செய்தி இடம்பெற்றுள்ளது. இவர்கள் எல்லோரும்
இலக்கியத்தில் பெரியவர்கள். ஆனால், கால ஆராய்ச்சியில்
என்று பார்த்தால், தமிழ்ப் பேராசிரியர்களுக்கே முதலிடம்
கொடுக்கவேண்டியுள்ளது. ரா. ராகவையங்கார், மு. ரா. ஸ்வாமி,
எஸ். வையாபுரிப்பிள்ளை, க. அ. நீலகண்ட சாஸ்திரி (முதலில்
அபிதான சிந்தாமணி பேரா. ஆ. சிங்காரவேலு முதலியார் போல
12-ஆம் நூற்றாண்டின் மத்தியில் என்று எழுதியவர்,
பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலம் என்று மாறினார் க.அ.நீ.)
மரியாதைக்குரிய டிகேசி அவர்களின் பாடல் வர்ணனைககள் அழகானவை.
ஆனால் அவரது முத்தொள்ளாயிரம் 2000 வருஷமாச்சு,
கம்பன் 9-ஆம் நூற்றாண்டு, ... கொள்கைகளை அவரது சிஷ்யர்கள்
பரப்பியதை விட்டுவிடலாம். இவை, மறைமலை அடிகள், அவரது
மாணவர் நாவலர் சோமசுந்தரபாரதி போன்றோரின்
திருவள்ளுவர் பிறப்பு கி.மு. 31, மாணிக்கவாசகர் தேவார முதலிகளுக்கு
முன்னர் 3-ஆம் நூற்றாண்டு போன்றவற்றுடன் ஒப்பிடத் தக்கவை.
நா. கணேசன்
> Visit arajagopalan.blogspot.com
>
>
>
>
>
>
>
> On Wednesday, 18 July 2012 19:24:07 UTC+5:30, N. Ganesan wrote:
> > On Sunday, July 8, 2012 1:26:03 AM UTC-7, S.Vinaitheerthan wrote:
>
> >> 2012/7/8 OAGAI NATARAJAN <engee...@gmail.com>
> >http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/vol...
> > இறையனார் களவியல் உரையிலும் தமிழிலக்கணம் தந்தவர் அகத்தியர்தான்
> > என்று விரிவாகக் காணோம்.
>
> > இடைக்கால இலக்கியங்களில்
>
> ...
>
> read more »
சேக்கிழாரும், கம்பரும் சம காலத்தவர்களா ?
சேக்கிழாருக்குக் கவிச்சக்கரவர்த்தி பட்டம் கிடையாதா ?
Minds are stuck in eternal time warp and defy every attempt to deny light. One prefers to remain in a state of unchanging parachronism and imagine that every other view could be rhino-ed down. Of what use is the sun, if the eyelids refuse to open!