
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்தே ஆணாதிக்கம்தான் போலிருக்கிறது
பெண்ணை அடிமையாகவே வைத்திருக்கிறாரே
அருமையான புகைப்படம் தந்த Dr.சுபாஷினி அவர்களுக்கு நன்றி,,கலைப்படைப்புகளின் காட்சிகள் ஓவ்வொன்றும் புராண மற்றும்தத்துவ பின்புலங்களை பெற்றவையாகும்,பெண் உருவம் கிழ் இருந்தால் அது ஆணாதிக்கத்தின் அடையாளம் என்ற நவீனத்துவ கோட்பாடுகளை அதில் உட்பொருளாக பார்த்திடும் பார்வை சற்று மாற்றப்படவேண்டும் என்பது அன்பான கருத்தாகும்.
தேவியினை பிரேதாசினி, பஞ்ச பிரேதாசினி, என்று தேவிமஹத்மியத்தில் புராணபின்னணியில் அழைக்க படுகிறது,
தாந்தரிக இந்துமத்தில் சிவனின்மேல் தேவி நிற்கும் கோலங்களும் உண்டு!!!
k.கந்தன்


சின்ன வயதில் பார்த்து இருக்கிறேன். இப்ப இப்படி தான் பார்க்கணும் .:):)!
http://www.youtube.com/watch?v=B97apRB7Bpw&feature=youtube_gdata_player
sent from iphone.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com
--

அம்மாபேட்டை கணேசன் வழங்கும் தோல்பாவை கூத்து
தமிழகத்தின் தொன்மையான கலை வடிவங்களில் ஒன்று தோல்பாவை கூத்து. இதற்கான பொம்மை மிருகங்களின் தோலைக் கொண்டு வடிவமைக்கப் படுகின்றன.பின்புலத்தில் இருந்து ஒளி பாய்ச்சப்பட்டு அதன் பிரதிபலிப்பு முன்னே உள்ள வெள்ளை திரையில் விழுமாறு செய்யப்படுகிறது.
இராமாயணத்தில் உள்ள அனுமன் தூது படலம், சூர்பனகை படலம் அல்லது நாயன்மார்களின் வரலாறு என கருவாக எடுத்துக்கொள்ளப்பட்டு மிக சிறப்பாக காட்சிபடுத்தபடுகிறது .இதை இயக்கும் கலைஞர்களின் குரலும் , குரல் மூலமாய் வெளிப்படும் பாவனைகளும் எள்ளல் மிகுந்த நகைச்சுவையும் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத அனுபவத்தை தருகின்றன.
அம்மாபேட்டை கணேசனுக்கு வயது ஐம்பத்தியேழு. ஏழு வயதில் தந்தையார் மொட்டயனுக்கு உதவியாக தோற்பாவைக்கூத்தில் பொம்மைப் பிடித்தாட்டத் துவங்கியவர், பதினைந்து வயதிற்கெல்லாம் அதன் நுட்பதிட்பங்கள், நுணுக்கங்கள் கைவந்த சூத்தரதாரியாகி தனி நிகழ்வுகள் நடத்தியிருக்கிறார். பதினாறாம் வயதில் தாய்வழிப் பாட்டனார் சடையன் அவர்களின் ஆசீர்வாதத்தில் கட்டியங்காரன் வேடங்கட்டவாரம்பித்தவர், அதன் பிறகான நாட்களில் சிச்சிறு வேடங்கள், தரித்து தேறியபின் ஓர் பத்தாண்டு காலங்கள் பெண் வேடங்களிட்டு ஆடியிருக்கிறார்.
கோரிய வாலிபத்தில் ராவணன், மயில் ராவணன், இரண்யன், கீசகன், துரியன், சைந்தவன் உள்ளிட்ட பெரும் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியவர், இன்றுவரை அத்தொல்கலையின் உயிரோட்டம் மாறாது நிகழ்த்தி வருவதோடு, அதன் செயல்முறையில் கொள்ளுவன கொண்டு, தள்ளுவன தள்ளி, புதிய அழகியலை, புதிய உடல் மொழியை, புதிய ஆட்ட வகைகளை, தொன்மக் கூறுகளை அதன் தன்மைகளின்று அடிபிறழாத வண்ணம் பிணைத்து தனது கூத்துக்களை நிகழ்த்தி வருகிறார்.
இராமாயண இலங்கேஸ்வரனோ, மகாபாரத துரியனோ இதுகாறும் நம் ஐம்புலனுக்கெட்டாத பாத்திரம் எந்த பாத்திரமாகயிருந்தாலும் தொகை நகைகள் மாட்டி சபைக்கு தர்பாராகி வந்து இதுதானய்யா, அந்த பாத்திரம் என்று அவர் தன் விருத்தாந்தங்களை சொல்லும்போது, ஐயம் என்பது தோன்றாதபடி அந்த வேடம் அத்தனை பொருத்தமாக முழுமை பெற்று அமைந்திருப்பதோடு காட்சி வனப்பு மிக்கதாகவுமிருக்கும்.
உருவம் மட்டுமல்லாது, ஒரு பாத்திரத்தின் உளப்பாங்கு, மனவோட்டம், எண்ணம், செயல்பாடு, நடத்தை என்று எதை எடுத்துக்கொண்டாலும் கணேசனின் பிரதிபலிப்பு, வார்ப்பு, மாற்றும் குறைந்திருக்காது. வேடங்கள் தரிப்பதோடு பக்க மேளமான மத்தளம் வாசிப்பது, பெட்டி வாசிப்பது, பாவைக்கூத்துக்கு வேண்டிய தோற்பாவைகள் செய்தல், கூத்தில் ஆண் வேடத்திற்குரிய தொழிற்கருவிகள், ஆடையணி வடிவமைத்தல் என்று கணேசனின் கலையாளுமை பன்முகத்தன்மை கொண்டது.
இப்படங்கள் சிறகின் கட்டுரையில் இருந்து: http://siragu.com/?p=14483
..... தேமொழி
ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்தே ஆணாதிக்கம்தான் போலிருக்கிறதுபெண்ணை அடிமையாகவே வைத்திருக்கிறாரே

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
A South Indian inscription describes ritual sacrifices of sheep to Chamunda.[20] In Bhavabhuti's eighth century Sanskrit play,Malatimadhva describes a devotee of the goddess trying to sacrifice the heroine to Chamunda's temple, near a cremation ground, where the goddess temple is situated.[21] A stone inscription at Gangadhar, Rajasthan, deals with a construction to a shrine to Chamunda and the other Matrikas, "who are attended by Dakinis (female demons)" and rituals of daily Tantric worship (Tantrobhuta) like the ritual of Bali (offering of grain).[22]



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
உடைந்த தந்தத்துடன் ஆனைமுகன் ஆறாம் நூற்றாண்டிலேயே கம்போடியாவில் காட்சி தந்திருந்தால், அப்போது அங்கு ஆனைமுகன் வழிபாடு இருந்திருக்கலாமோ?
உடைந்த தந்தத்துடன்தானே ஆனைமுகன் எங்கும் காட்சி அளிக்கிறான்! அந்தக் காரணமும் அங்கு அறியப்பட்டு இருக்கலாமோ?
இந்த கற்சிலையில் நான் கவனித்தது(1)இரு கைகள் மட்டும் உள்ளமை(2)ஏந்தும் ஆயுதங்கள் ஏதும் இல்லாமைஓர் குடைவரைக் குகையில் அமைந்த இரு கை பிள்ளையார் பட்டிப் பிள்ளையார் போல் பழமை வாய்ந்தது
பழமைக் கருத்து ஒன்றனுக்கு ஒன்று சான்றகும்4 கைகளும் அதற்கும் மேல் 8, 10, 16 என எண்ணிறந்த கைகள் கொண்ட உருவங்ககள் பின்னாளில் தான் வந்துள்ளனகாலண்டர்கள் அசிடுபவர் களும் பலவித ஆயுதங்களை கைகளில் கொடுத்து தனித்தனி கதைகலைப் பரப்ப துணை செய்கின்றனர்இந்த வாணிபமாகி விட்ட தெய்வீக உலகத்தில்

--
இது ஒரு நல்ல இழை. நீங்கள் இவ்விதம் பழஞ்சிலைகளாகப் போட்டு குறிப்புகளும் தருவது மிகவும் அருமை.


சிறிதே நிறங்களை மாற்றி வைத்துள்ளென் இப்போது என்ன புதிதாகத் தெரிகின்ரது எனப் பார்க்க முயலலாம்அன்புடன்நூ த லோ சுமயிலை
On Sun, Nov 23, 2014 at 9:39 PM, பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com> wrote:
குபேரனின் இருகரங்களிலும் வைத்திருப்பது என்னவென்று தெரியவில்லை சுபா!. மலர்களா?!..
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Kubera holds a mace, a pomegranate or a money bag in his hand.[1] He may also carry a sheaf of jewels or a mongoose with him. (wiki)சுபா இதில் வடதிசையின் அதிபதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
சிறிதே நிறங்களை மாற்றி வைத்துள்ளென் இப்போது என்ன புதிதாகத் தெரிகின்ரது எனப் பார்க்க முயலலாம்அன்புடன்நூ த லோ சுமயிலை
குபேரனின் இருகரங்களிலும் வைத்திருப்பது என்னவென்று தெரியவில்லை சுபா!. மலர்களா?!..


--
மகாவிஷ்ணுவின் முகச்சாயல் தென்னிந்திய வடிவத்திலிருந்து மாறுபட்டு இருப்பதைக் காணலாம். இந்த அரிய சிற்பத்தில் நின்ற நிலையில் மகாவிஷ்ணு வடிவம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

--







மாரி _அம்மன் படமும் தகவலும் சிறப்பு.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Suba! It is nice to know that info. . I have witnessed rain after the celeberation. This celeberstion is from the contribution from everyvillage household. Regardless of social lable. It is infact 3 days in our village. Still going on. The diety's name ujjani maa kaali, who's called maariamna . A small temple in the midst of paddy fields. There is no bramin pujari .Thanks.
தெற்கிலந்தைக் குளம் மாரியம்மன் கோயில்
எங்களது சிற்றூரில் உறையும் தேவி
எழிலார்ந்த மாரியம்மன் கோயில் பற்றி
உங்களுக்குச் சொல்லுகின்றேன், முகமும் ஒன்றாய்
ஓருருவாய் ஒப்பற்ற அழகு சேரச்
சிங்கமதன் மேலமர்ந்து திகழும் காட்சி
செப்புதற்கு முடியாது, அம்மன் கண்கள்
பொங்குகிற கருணையினை என்ன சொல்ல?
புத்தழகுக் கருங்கல்லின் புனிதம் தேவி!
பூசாரி பண்டாரம் அலங்கா ரத்தில்
புன்னகைக்கும் தேவியவள் அமரும் கோயில்
ஆசார வாசலிலே புகுந்து விட்டால்
அங்கங்கே பரிவார தேவ தைகள்
வீசாத வெட்டரிவாள், சலங்கை, தண்டு,
விளங்குகிற பலிபீடம், பிரம்பு, யாவும்
தாசாதி தசர்களாய் ஊரார் எல்லாம்
தரிசிக்க வைத்திருக்கும் உபச்சாரங்கள்.
இடப்பக்கப் பீடத்தில் சுடலை மாடன்,
இன்னுமங்கே காந்தாரி, வீற்றி ருக்கத்
தொடக்கத்தில் கணபதியும் உட்பக்கத்தில்
தொங்குகிற நாக்குடைய நாயின் மேலே
எடுப்புடனே பைரவரும் கோயில் கொள்ள
இடையினிலே பலிபீடம் அமைந்திருக்க
அடுத்துள்ள வெளியினிலே வேம்பு நிற்க
அமைந்துள்ள கோயிலொரு அழகுக் கொள்ளை!
வருடத்திற் கிரண்டு முறை கொடைநடக்கும்
மண்விட்டு வெளியூரில் வாழ்வோர் கூட
கருத்துடனே அங்குவந்து கலந்து கொள்வார்
கண்கொள்ளாக் காட்சியது, முதல்நாள் மாலை
நிருத்தங்கள் செய்கின்ற கணியான் ஆட்டம்
நிகழ்த்தியபின் மாரியம்மன் சரிதை சொல்வார்
சரித்திரத்தில் அம்மனது பிறப்புச் சொல்லும்
சமயத்தில் மருளாடி துள்ளிப் பாய்வார்
சாமிவந்து பாய்கிறவர் மேலும் கீழும்
தாவிவந்தே ஆடுவதைப் பார்க்கும் போது
தாமுதலாய்ப் பார்ப்பவர்கள் பயந்துபோவார்
தடியெடுத்தே ஆடுவதும், அரிவாள் தூக்கி
பூமியது அதிரும்வகை துள்ளி வீழ்ந்து
புரளுவதும் , ஓலமிட்டுக் குறிகள் அங்கே
தாமுரைத்தே ஆடுவதும், சத்தம் போட்டே
சாடுவதும் பார்ப்பதற்குத் துணிவு வேண்டும்.
ஆடுபவர் உறவினர்கள் அங்க வஸ்த்ரம்
அவர்களது மார்புக்குக் குறுக்காய்ச் சுற்றிப்
போடுவதும், கணியான்கள் சுற்றிச் சுற்றிப்
புகழ்ந்தபடி பாடுவதும் பக்கம் அங்கே
கூடுவதும், கட்குடித்த சிலபேர் அங்கே
குதிப்பதுவும் , மாதரெலாம் குரவை போட்டே
பாடுவதும், நையாண்டி மேளம் பம்பை
பரவசமாய் அடிப்பதுவும் அமர்க்களந்தான்!
இரவெல்லாம் தெருக்கூத்து, வில்லுப் பாட்டு
இளைஞர்களின் சிலம்பாட்டம், உடுக்குப் பாட்டு
கரகாட்டம், ஒயிலாட்டம், உருமி மேளம்
காதுகட்கும் கண்களுக்கும் தீனி போட
மருளாட்டம் நம்முள்ளும் வருமோ என்னும்
வகையினிலே துடிப்புகளை ஏற்படுத்தும்.
இருளோட்டும் அலங்கார விளக்குக் கூட்டம்
எழிலாக அங்கங்கே ஜொலிஜொலிக்கும்~
துடுக்கான சாமிகளின் ஆட்ட பாட்டம்
தொடர்ந்துவர மறுநாளில் சுடலை மாடன்
சுடுகாட்டு வேட்டைக்குச் செல்லும் காட்சி
சொப்பனத்திலும் பயத்தை வரவழைக்கும்
எடுப்பான சல்லடங்கள் சலங்கை குல்லாய்
இன்னுமங்கே தும்புவார்ச் செருப்புப் போட்டு
நடுச்சாமம் சுடுகாடு சென்று மீளும்
நடப்பதனைக் காணுதற்குத் திரளும் கூட்டம்.
காலையிலே பொங்கல் வைப்பர், அதற்குப் பின்னே
கடாவெட்டு , வெட்டுவதும் ஓர்கலைதான்
மாலையினைப் போட்டிருக்கும் ஆட்டை வெட்ட
மறுநொடியில் அதன் உடலம் துடிதுடித்துக்
காலுதைக்கும் அக்காட்சி காணுகின்ற
கண்களிலும் ரத்தம்வரும், அதற்கும் மேலே
கோலமுடன் அம்மன்முன் படையலிட்டே
கொண்டாடி மகிழ்ந்திருக்கும் அடியார் கூட்டம்.
அதற்குப் பின் சாமிகளின் ஊர்வலங்கள்
அம்மன்மருள் ஆடுபவர் கரகம் வைத்தும்
கொதிக்கின்ற தீச்சட்டி ஏந்தி ,நீறு
கொட்டிவைத்த கப்பரையை கையில் வைத்துக்
குதித்தாடி வருகின்ற ஊர்வ லத்தில்
கூடுகிற சந்திகளில் காவு தந்து
துதிபாடி வீதியினில் செல்லும் காட்சி
தொடர்ந்துமறு கொடைவரைக்கும் நினைவிருக்கும்
ஊரிலுள்ள எல்லைகளிம் தெய்வங் கட்கு
ஊர்வலத்தில் செல்கையிலே முட்டைக் காவும்
வீரியத்தைக் காட்டுகின்ற சாமி கட்கு
மேல்கொண்டை சேவலினைத் திருகிக் கொய்து
சோரியெனப் பொங்குகிற இரத்தம் மாந்தி
துடிதுடிக்க எறிவதுவும் , அப்பப்பப்பா
யாரிதனை வகுத்தார்கள் தெரியவில்லை
அச்சமதா அவசியமா புரிய வில்லை
இங்கேதான் மாரியம்மன் கோயில் பக்கம்
இளவட்டக் கல்லொன்று கண்ட துண்டு
அங்கேயார் அதைத் தூக்கிப் போடு வாரோ
அவருக்குத் திருமணம்செய் தகுதி கிட்டும்
எங்கேநாம் இருந்தாலும் அற்றை நாளில்
இருந்ததெலாம் எண்ணுகையில் மனம்களிக்கும்
சிங்கத்தின் மேலமரும் மாரி யம்மா
சிறப்பெல்லாம் அளித்திடுக வாழ்க, வாழ்க!

சுபா
2016-08-24 12:41 GMT-07:00 Suba <ksuba...@gmail.com>:
2016-08-14 16:18 GMT+02:00 Subbaier Ramasami <elan...@gmail.com>:தலையிலே பாம்பு அஇந்திருப்பவள் கருமாரி. மாரியம்மந்தான். பாம்பின் உருவில் பாரினைக்காக்கவே சாம்பல் தருகின்றாள் தாய் என்று சொல்லுவதுண்டு. இதோ எங்களூர் மாரியம்மன் பற்றி ஒரு கவிதைதெற்கிலந்தைக் குளம் மாரியம்மன் கோயில்
எங்களது சிற்றூரில் உறையும் தேவி
எழிலார்ந்த மாரியம்மன் கோயில் பற்றி
உங்களுக்குச் சொல்லுகின்றேன், முகமும் ஒன்றாய்
ஓருருவாய் ஒப்பற்ற அழகு சேரச்
சிங்கமதன் மேலமர்ந்து திகழும் காட்சி
செப்புதற்கு முடியாது, அம்மன் கண்கள்
பொங்குகிற கருணையினை என்ன சொல்ல?
புத்தழகுக் கருங்கல்லின் புனிதம் தேவி!
மிக அருமை.இந்தக் கவிதையை நாம் மின் தமிழ் மேடையில் இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.
மீசையோடு இருக்கும் புத்தரை போலவே, வாளோடு இருக்கும் புத்தரின் இதே காலகட்டத்தில் படைக்கப் பட்டுள்ளன. அவையும் இத்தளத்தை அலங்கரித்தால் நன்று..
சன்னா
யாவரும் கேளீர்
--
மீசையோடு இருக்கும் புத்தரை போலவே, வாளோடு இருக்கும் புத்தரின் இதே காலகட்டத்தில் படைக்கப் பட்டுள்ளன. அவையும் இத்தளத்தை அலங்கரித்தால் நன்று..
சன்னா
யாவரும் கேளீர்

