வினோத் - ஒரு சின்ன அறிமுகம்

92 views
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
Jun 11, 2010, 11:39:20 AM6/11/10
to minT...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம்

இவன் வினோத், பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வேலை பார்ப்பது எல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில்.

கணினி மென்பொருளாளராக வேலை.

அமைதி, தனிமை, இசை, தியானம் பிடிக்கும்.

வயது : இன்றுடன் 29

கனவுகள்: நல்லவனாக வேண்டும் :(
பலம்: அமைதியாக இருப்பது :)
பலவீனம்: அமைதியாக இருப்பது :(

சாதனை: முயற்சி செய்கிறேன், முடியல :)
தோல்விகள்: பல,
திருமணம்: இன்னும் ஆகலை

விரும்பும் செயல்கள்:  இசை கேட்பது, கணினியுடன் சண்டை போடுவது, கணினியில் டாம் & ஜெர்ரி போட்டுக்கோண்டே சாப்பாட்டை கொறிப்பது :)
பாடல்கள்: ரஹ்மான் மெல்லிசைகள் , மலயாள மெல்லிசைகள், இந்திய பாரம்பரிய கருவி இசைகள் (கேட்டதும் தூக்கம் வருமே அது, கேட்டுக்கிட்டே இருப்பேன்)
நூல்கள்: சித்தர் பாடல்கள், திருமந்திரம், கீதை, உளவியல் நூல்கள் மற்றும் பல

இணையதளம் : http://tamil2friends.com (தமிழ் நண்பர்களுக்காக உருவாக்கப்பட்டது. தமி்ழ் நண்பர்களை தவிர எல்லோரும் வாராங்க :-) )
வலைதளம் : ஒண்ணு இருக்கு, நானே அதுக்கு போறதில்லை (http://niyabagam.blogspot.com/)

இக்குழுமத்தில் பலரை ஏற்கெனவே அறிமுகமாகி இருக்கிறேன். குறிப்பாக
தமிழ் தேனி - தமிழ் நண்பர்களில் முன்பு இருந்தார், நாங்க போடுற அரட்டை தாங்காம இப்போ வாரதில்லை :)
செல்வன் : முத்தமிழ்?/நம்பிக்கை?
கீதாசாம்பசிவம் : முத்தமிழ்?/நம்பிக்கை?
விசாலம் : முத்தமிழ்?/நம்பிக்கை?,
வேந்தன் : முத்தமிழ்?/நம்பிக்கை?,
அகிரா: தமிழ் நண்பர்கள்,
கந்தவேல் இராஜன்: : தமிழ் நண்பர்கள்
மீசைக்கார துரை: தமிழ் நண்பர்கள்
எஸ்கே : தமிழ் நண்பர்கள்,
சரவண இராஜேந்திரன் : தமிழ் நண்பர்கள்

இவர்களுடன் வேறு பலரும் இருக்கலாம். விடுபட்டிருப்பின் மன்னிக்க.

பல காலமாக வேறெந்த குழுமங்களிலும் இல்லாமல் இருந்தேன்.

அறிமுகம் தற்போதைக்கு போதும்.

--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth

karuannam annam

unread,
Jun 11, 2010, 12:00:41 PM6/11/10
to mint...@googlegroups.com
முயற்சிகள் திருவினையாக வாழ்த்துகிறேன் இனிய நண்பரே. தமிழ் நூல்களை
படிக்கும் இளைஞரைப் பார்ப்பதே அரிதான இக்காலத்தில் தங்களைப் போன்ற
திருமந்திரம் போன்ற நூல்கள் படிக்கும் நண்பரைப் பற்றி அறிவது மகிழ்ச்சி .
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

On 6/11/10, வினோத்-VINOTH <vino...@gmail.com> wrote:
> அனைவருக்கும் வணக்கம்
>
> இவன் வினோத், பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வேலை பார்ப்பது எல்லாம்
> கன்னியாகுமரி மாவட்டத்தில்.
>
> கணினி மென்பொருளாளராக வேலை.
>
> அமைதி, தனிமை, இசை, தியானம் பிடிக்கும்.

> *வயது* : இன்றுடன் 29
>
> *கனவுகள்:* நல்லவனாக வேண்டும் :(
> *பலம்: *அமைதியாக இருப்பது :)
> *பலவீனம்: *அமைதியாக இருப்பது :(
>
> *சாதனை*: முயற்சி செய்கிறேன், முடியல :)
> *தோல்விகள்*: பல,
> *திருமணம்*: இன்னும் ஆகலை
>
> *விரும்பும் செயல்கள்: *இசை கேட்பது, கணினியுடன் சண்டை போடுவது, கணினியில்


> டாம் & ஜெர்ரி போட்டுக்கோண்டே சாப்பாட்டை கொறிப்பது :)

> *பாடல்கள்:* ரஹ்மான் மெல்லிசைகள் , மலயாள மெல்லிசைகள், இந்திய பாரம்பரிய


> கருவி இசைகள் (கேட்டதும் தூக்கம் வருமே அது, கேட்டுக்கிட்டே இருப்பேன்)

> *நூல்கள்:* சித்தர் பாடல்கள், திருமந்திரம், கீதை, உளவியல் நூல்கள் மற்றும்
> பல
>
> *இணையதளம்* : *http://tamil2friends.com* (தமிழ் நண்பர்களுக்காக


> உருவாக்கப்பட்டது. தமி்ழ் நண்பர்களை தவிர எல்லோரும் வாராங்க :-) )
> வலைதளம் : ஒண்ணு இருக்கு, நானே அதுக்கு போறதில்லை (
> http://niyabagam.blogspot.com/)
>
> இக்குழுமத்தில் பலரை ஏற்கெனவே அறிமுகமாகி இருக்கிறேன். குறிப்பாக
> தமிழ் தேனி - தமிழ் நண்பர்களில் முன்பு இருந்தார், நாங்க போடுற அரட்டை தாங்காம
> இப்போ வாரதில்லை :)
> செல்வன் : முத்தமிழ்?/நம்பிக்கை?
> கீதாசாம்பசிவம் : முத்தமிழ்?/நம்பிக்கை?
> விசாலம் : முத்தமிழ்?/நம்பிக்கை?,
> வேந்தன் : முத்தமிழ்?/நம்பிக்கை?,
> அகிரா: தமிழ் நண்பர்கள்,
> கந்தவேல் இராஜன்: : தமிழ் நண்பர்கள்
> மீசைக்கார துரை: தமிழ் நண்பர்கள்
> எஸ்கே : தமிழ் நண்பர்கள்,
> சரவண இராஜேந்திரன் : தமிழ் நண்பர்கள்
>
> இவர்களுடன் வேறு பலரும் இருக்கலாம். விடுபட்டிருப்பின் மன்னிக்க.
>
> பல காலமாக வேறெந்த குழுமங்களிலும் இல்லாமல் இருந்தேன்.
>
> அறிமுகம் தற்போதைக்கு போதும்.
>
> --
> சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக
> வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
> வினோத்
> http://tamil2friends.com/friends/vinoth
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

வினோத்-VINOTH

unread,
Jun 11, 2010, 12:06:15 PM6/11/10
to mint...@googlegroups.com


2010/6/11 karuannam annam <karu...@gmail.com>

முயற்சிகள் திருவினையாக வாழ்த்துகிறேன் இனிய நண்பரே.  


நன்றிங்க

தமிழ் நூல்களை படிக்கும் இளைஞரைப் பார்ப்பதே அரிதான இக்காலத்தில் தங்களைப் போன்ற
திருமந்திரம் போன்ற நூல்கள் படிக்கும் நண்பரைப் பற்றி அறிவது மகிழ்ச்சி .

ஏதோ படிக்கிறேன். 8 ம் இரண்டும் 10 என்கிற மாதிரி எழுதி வைத்துவிட்டு போய்விட்டார், ஒண்ணும் புரியவில்லை :)

கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம் அவ்வளவாக எனக்கு பிடிக்கவில்லை :(

 
அன்புடன்
 சொ.வினைதீர்த்தான்

நிஜப்பெயரே இதுதானா? நல்ல தமிழ் பெயர்

Tthamizth Tthenee

unread,
Jun 11, 2010, 12:10:18 PM6/11/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு  வணக்கம்
ஏற்கெனவே அறிமுகமானவர்கள் நாம்
 
உங்களை இங்கே மின் தமிழுக்கு வரவேற்று மகிழ்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
11-6-10 அன்று, வினோத்-VINOTH <vino...@gmail.com> எழுதினார்:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

வினோத்-VINOTH

unread,
Jun 11, 2010, 12:16:43 PM6/11/10
to mint...@googlegroups.com


2010/6/11 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு  வணக்கம்
ஏற்கெனவே அறிமுகமானவர்கள் நாம்
 

ஐயா நலமாக  இருக்கிறீர்களா?

உங்களை இங்கே மின் தமிழுக்கு வரவேற்று மகிழ்கிறேன்

நன்றி


--

PENNESWARAN KRISHNA RAO

unread,
Jun 11, 2010, 1:55:33 PM6/11/10
to mint...@googlegroups.com

வாருங்கள் வினோத்.

உங்கள் வரவு நல்வரவாகுக.

அருமையான வகையில் அறிமுகம் தந்து இருக்கிறீர்கள்.  கவிதை எதையும் எழுதி மற்றவர்களை இம்சிக்காமல் அறிமுகமான உங்கள் நல்லதனம் இங்கே எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.

அன்புடன்

பென்னேஸ்வரன்

2010/6/11 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
http://www.vadakkuvaasal.com/

வினோத்-VINOTH

unread,
Jun 11, 2010, 2:54:23 PM6/11/10
to mint...@googlegroups.com


2010/6/11 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

வாருங்கள் வினோத்.

உங்கள் வரவு நல்வரவாகுக.


வரவேற்பிற்கு நன்றி
 

கவிதை எதையும் எழுதி மற்றவர்களை இம்சிக்காமல் அறிமுகமான உங்கள் நல்லதனம் இங்கே எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.

ஹாஹா
உள்குத்து வெளிகுத்து இருக்குதே :)

sk natarajan

unread,
Jun 11, 2010, 10:11:12 PM6/11/10
to mint...@googlegroups.com
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் வினோத்

இக்குழுமத்தில் எங்களுடன் இணைவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்



என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/


2010/6/11 வினோத்-VINOTH <vino...@gmail.com>
அனைவருக்கும் வணக்கம்
--

sk natarajan

unread,
Jun 11, 2010, 10:12:37 PM6/11/10
to mint...@googlegroups.com
பென்னேஸ்வரன் ஐயாவிற்கு வணக்கம்



என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/


2010/6/11 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

வினோத்-VINOTH

unread,
Jun 11, 2010, 10:21:57 PM6/11/10
to mint...@googlegroups.com


2010/6/12 sk natarajan <sknatar...@gmail.com>

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் வினோத்


நன்றி
 
இக்குழுமத்தில் எங்களுடன் இணைவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்

நன்றிங்க

செல்வன்

unread,
Jun 11, 2010, 10:23:44 PM6/11/10
to mint...@googlegroups.com
Welcome Vinoth

2010/6/11 sk natarajan <sknatar...@gmail.com>



--
செல்வன்

www.holyox.tk

"கட்டிபிடிக்கும் போது ஆம்பளையும் பொம்பளையும் சேர்ந்துதான் கட்டிப்புடிகிறாங்க. ஆனா கற்புன்னு வரும் போது ஆம்பள காணாம போயிடறான். என்னைக்கு கற்புக்குள்ள ரெண்டு பேருமே வராங்களோ அப்பத்தான் பாலியல் குற்றங்கள் குறையும்" - K. பாக்யராஜ்

வினோத்-VINOTH

unread,
Jun 11, 2010, 10:27:41 PM6/11/10
to mint...@googlegroups.com


2010/6/12 செல்வன் <hol...@gmail.com>
Welcome Vinoth


நன்றி
(பாருங்க நான் எவ்வளவு அழகா தமிழில் நன்றி சொல்லியிருக்கிறேன் :) )

Kandavel Rajan

unread,
Jun 11, 2010, 11:40:41 PM6/11/10
to mint...@googlegroups.com
நல்வரவு வினோத்.....



--
மறதி தான் மனிதனை இலேசாக்குகிறது. எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருப்பின் மனிதன் சோகம் தாங்காது வாழ்க்கை ஆரம்பத்திலேயே சரிந்து விடுவான் என்பதாலேயே மறதி இயல்பாயிற்று. ஆனால் மறுபடி மறுபடி அடி வாங்கவே மறதி உபயோகமாகிறது.


நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

வினோத்-VINOTH

unread,
Jun 11, 2010, 11:45:15 PM6/11/10
to mint...@googlegroups.com


2010/6/12 Kandavel Rajan <kandav...@gmail.com>

நல்வரவு வினோத்.....

நன்றி ஜி

செல்வன்

unread,
Jun 12, 2010, 12:07:54 AM6/12/10
to mint...@googlegroups.com
2010/6/11 வினோத்-VINOTH <vino...@gmail.com>
நன்றி
(பாருங்க நான் எவ்வளவு அழகா தமிழில் நன்றி சொல்லியிருக்கிறேன் :) )


மைன்ட்ல இருக்குற குட் விஷசை தான் பார்க்கணுமே ஒழிய லாங்குவேஜை வெச்சுகிட்டு கும்மி அடிக்க கூடாது.:-))))

வினோத்-VINOTH

unread,
Jun 12, 2010, 12:10:50 AM6/12/10
to mint...@googlegroups.com
2010/6/12 செல்வன் <hol...@gmail.com>
2010/6/11 வினோத்-VINOTH <vino...@gmail.com>

நன்றி
(பாருங்க நான் எவ்வளவு அழகா தமிழில் நன்றி சொல்லியிருக்கிறேன் :) )


மைன்ட்ல இருக்குற குட் விஷசை தான் பார்க்கணுமே ஒழிய லாங்குவேஜை வெச்சுகிட்டு கும்மி அடிக்க கூடாது.:-))))

ஹிஹி
ஒருவர் சிந்தி்க்கிறது அவரவர் தாய்மொழியில் இருக்கும் என்று படித்திருக்கிறேன்

K R A Narasiah

unread,
Jun 12, 2010, 12:36:18 AM6/12/10
to mint...@googlegroups.com
வினோதமான் மனிதன் வினோத்! நல்ல தமிழ் நூல்களைப் படிக்கும் இளைஞர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழுக்கும் இந்து வழிமுறைக்கும் ஆபத்தில்லை! வாழ்க
நரசய்யா

2010/6/12 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--

செல்வன்

unread,
Jun 12, 2010, 12:41:26 AM6/12/10
to mint...@googlegroups.com
2010/6/11 வினோத்-VINOTH <vino...@gmail.com>
ஹிஹி
ஒருவர் சிந்தி்க்கிறது அவரவர் தாய்மொழியில் இருக்கும் என்று படித்திருக்கிறேன்

அதை ஏன் படிச்சு தெரிஞ்சுக்கணும்?சிந்திப்பது என்ன மொழியில் என சிந்தித்து பார்த்தாலே போதாதா?:-))

--

வினோத்-VINOTH

unread,
Jun 12, 2010, 12:43:11 AM6/12/10
to mint...@googlegroups.com


2010/6/12 K R A Narasiah <naras...@gmail.com>

வினோதமான் மனிதன் வினோத்!

நிஜம்தான், நல்லவனாக நடிக்கும் கெட்டவன். (இப்படிச்சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க :( உண்மைக்கு காலம் இல்ல, நீங்களாச்சும் நம்புங்க)
 
நல்ல தமிழ் நூல்களைப் படிக்கும் இளைஞர்கள் இன்னும் இருக்கிறார்கள்

இங்கே ஒரு உண்மையை சொல்லியே ஆகணும்.
நான் அதிகமாக நூல்களை படிப்பதில்லை. படித்த மொத்த நூல்கள் எண்ணிக்கையே ஒரு 10 க்குள் தான் இருக்கும்.

 
என்பது தெளிவாகிறது. உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழுக்கும் இந்து வழிமுறைக்கும் ஆபத்தில்லை!

இது பெரிய அபத்தம்.
 
வாழ்க

தங்கள் ஆசிக்கு நன்றிகள் ஐயா

வினோத்-VINOTH

unread,
Jun 12, 2010, 12:44:15 AM6/12/10
to mint...@googlegroups.com
2010/6/12 செல்வன் <hol...@gmail.com>
2010/6/11 வினோத்-VINOTH <vino...@gmail.com>



ஹிஹி
ஒருவர் சிந்தி்க்கிறது அவரவர் தாய்மொழியில் இருக்கும் என்று படித்திருக்கிறேன்

அதை ஏன் படிச்சு தெரிஞ்சுக்கணும்?சிந்திப்பது என்ன மொழியில் என சிந்தித்து பார்த்தாலே போதாதா?:-))

கரெக்ட், இதுக்குப்பேருதான் கும்மிடிக்கிறது ஹிஹி


செல்வன்

unread,
Jun 12, 2010, 12:47:12 AM6/12/10
to mint...@googlegroups.com
2010/6/11 வினோத்-VINOTH <vino...@gmail.com>
கரெக்ட், இதுக்குப்பேருதான் கும்மிடிக்கிறது ஹிஹி

கும்மியடித்து,குலவை இட்டு தானே வரவேற்கணும்?அதான் அறிமுக இழையில் கும்மி அடிக்கிறேன்.

Nakinam sivam

unread,
Jun 12, 2010, 1:41:45 AM6/12/10
to mint...@googlegroups.com
அன்பு சகோதரர் வினோத் அவர்களை

அன்புடன் வரவேற்கிறேன்.

எதோ கதை கிதை எழுதி மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் 
அதுல வந்துது இதுல வந்துதுன்னு 
பேஜார் பண்ணாம 
சிறந்த முறையில் உங்கள் அறிமுகம் அமைந்ததற்கு
வாழ்த்துக்கள்.

அன்புடன்
நக்கினம் சிவம்

* சித்தர் பாடல்களில் எனக்கும் ஆர்வம் உண்டு.

2010/6/12 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

வினோத்-VINOTH

unread,
Jun 12, 2010, 1:53:35 AM6/12/10
to mint...@googlegroups.com


2010/6/12 Nakinam sivam <nak...@gmail.com>

அன்பு சகோதரர் வினோத் அவர்களை

அன்புடன் வரவேற்கிறேன்.


ரொம்ப நன்றிங்க

எதோ கதை கிதை எழுதி மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் 
அதுல வந்துது இதுல வந்துதுன்னு 
பேஜார் பண்ணாம சிறந்த முறையில் உங்கள் அறிமுகம் அமைந்ததற்குவாழ்த்துக்கள்.

எல்லோரும் உள்குத்து வச்சே பேசறாங்களே....ஹிஹி


கவிதை, கதை எழுதுபவர்கள் கவனிக்கவும்
:))


ஒரு சந்தேகம், நக்கினம் என்பது இடப்பெயரா? நிஜமாவே தெரியாதுங்க அதான்,
இல்லை இலங்கை பாஷையா?

Nakinam sivam

unread,
Jun 12, 2010, 2:01:34 AM6/12/10
to mint...@googlegroups.com
அன்பு சகோதரர் வினோத் அவர்களுக்கு, 


ஒரு சந்தேகம், நக்கினம் என்பது இடப்பெயரா? நிஜமாவே தெரியாதுங்க அதான், 
இல்லை இலங்கை பாஷையா?

லோக்கல் தமிழ் பாழைதான்.

நக்கினம் என்றால் நிர்வாணம் என்று பொருள்.
இந்த நிர்வாணம் அந்த நிர்வாணம் அல்ல.
சிவ நிலை அடைதலின் போது ஏற்படும் 
ஒன்றும் அற்ற நிலை என்று பொருள் படும்.

மற்றபடி
இலங்கைக்கும் எனக்கும் தமிழன் என்பதை தவிர எந்த தொடர்பும் இல்லை.

அன்புடன்
நக்கினம் சிவம்

2010/6/12 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

வினோத்-VINOTH

unread,
Jun 12, 2010, 2:09:25 AM6/12/10
to mint...@googlegroups.com
2010/6/12 செல்வன் <hol...@gmail.com>
2010/6/11 வினோத்-VINOTH <vino...@gmail.com>
கரெக்ட், இதுக்குப்பேருதான் கும்மிடிக்கிறது ஹிஹி

கும்மியடித்து,குலவை இட்டு தானே வரவேற்கணும்?அதான் அறிமுக இழையில் கும்மி அடிக்கிறேன்.


வரவேற்பிற்கு நன்றி

நல்ல வேளை, பேண்ட் (Band) தான் வைக்கணும்னு சொல்லலை :)

வினோத்-VINOTH

unread,
Jun 12, 2010, 2:10:55 AM6/12/10
to mint...@googlegroups.com


2010/6/12 Nakinam sivam <nak...@gmail.com>

* சித்தர் பாடல்களில் எனக்கும் ஆர்வம் உண்டு.

இப்பாடல்களின் முழு விளக்கம் தெளிவாக கிடைக்க வாய்ப்பிருக்கிறதா

Subashini Tremmel

unread,
Jun 12, 2010, 2:11:38 AM6/12/10
to mint...@googlegroups.com
வினோத்-Vinoth - வணக்கம், இந்த குழுமத்தில் உங்களை வரவேற்கின்றேன்.
 
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வந்திருக்கின்றீர்கள். தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளைப் பற்றி  இந்த குழுமத்தில் நடைபெறும் உரையாடல்களிலிருந்து அறிந்திருப்பீர்கள்.
கணினி பொறியியலாளர்கள் மரபு சார்ந்த நடவடிக்கைகளுக்குப் பல வகையில் உதவலாம்.  உங்களுக்குத் தெரிந்த பல தகவல்களை, கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புக்களை இந்த மின்னரங்கத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
 
அன்புடன்
சுபா
2010/6/11 வினோத்-VINOTH <vino...@gmail.com>
அனைவருக்கும் வணக்கம்
--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth

வினோத்-VINOTH

unread,
Jun 12, 2010, 2:13:43 AM6/12/10
to mint...@googlegroups.com


2010/6/12 Nakinam sivam <nak...@gmail.com>

அன்பு சகோதரர் வினோத் அவர்களுக்கு, 

லோக்கல் தமிழ் பாழைதான்.

நக்கினம் என்றால் நிர்வாணம் என்று பொருள்.

ஓ நிஜமாகவா
ஒரு புதிய சொல் கற்றுக்கொண்டேன்

இந்த நிர்வாணம் அந்த நிர்வாணம் அல்ல.
சிவ நிலை அடைதலின் போது ஏற்படும் 
ஒன்றும் அற்ற நிலை என்று பொருள் படும்.

ம்ம்ம், இப்பொருள் அறிந்திருக்கிறேன், ஆனால் அந்த வார்த்தை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்

மிக்க நன்றி



Nakinam sivam

unread,
Jun 12, 2010, 2:20:47 AM6/12/10
to mint...@googlegroups.com
அன்பு சகோதரர் வினோத் அவர்களுக்கு,

சித்தர் பாடலை பொறுத்த வரை யாருடைய பொருளுரையையும் படிக்காதீர்கள். அவரவரின் அனுபவத்திற்கு தகுந்தாற்போல்தான் 
பொருளுரை எழுதி இருப்பார்கள்.
பாடலை தொடர்ந்து படித்தால் ஒன்றுக்கான பதில் வேறு பாடலில் கிடைக்கும்.

மேலும் ஏதாவது குறிப்பிட்ட பாடலுக்கு விளக்கம் தேவை எனில் அந்த பாடலை குறிப்பிட்டால் எனக்கு தெரிந்த வரையில் விளக்குகிறேன்.

அன்புடன்
நக்கினம் சிவம்




2010/6/12 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

seethaalakshmi subramanian

unread,
Jun 12, 2010, 2:22:09 AM6/12/10
to mint...@googlegroups.com
அருமையான அறிமுகம்
குமரியிலிருந்து குரல்
விவேகமாய் உள்ளது
வருக வருக என்று வரவேற்கின்றேன்
சீதாம்மா

2010/6/12 வினோத்-VINOTH <vino...@gmail.com>

வினோத்-VINOTH

unread,
Jun 12, 2010, 2:24:50 AM6/12/10
to mint...@googlegroups.com


2010/6/12 Subashini Tremmel <ksuba...@gmail.com>

வினோத்-Vinoth - வணக்கம், இந்த குழுமத்தில் உங்களை வரவேற்கின்றேன்.
 

வரவேற்பிற்கு மிக்க நன்றி
 
தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளைப் பற்றி  இந்த குழுமத்தில் நடைபெறும் உரையாடல்களிலிருந்து அறிந்திருப்பீர்கள்.
கணினி பொறியியலாளர்கள் மரபு சார்ந்த நடவடிக்கைகளுக்குப் பல வகையில் உதவலாம்.  உங்களுக்குத் தெரிந்த பல தகவல்களை, கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புக்களை இந்த மின்னரங்கத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
 

கண்டிப்பாக, எனக்கும் இதில் மிகுந்த ஆர்வமுண்டு. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. :(

தமிழிற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆர்வமும் உண்டு

இப்போது இருக்கும் தமிழ் நண்பர்கள் (http://tamil2friends.com) இணையதளத்தில் தமிழ் பற்றிய அனைத்து தகவல்களையும் பதியவேண்டும் என யோசித்துக் கொண்டுள்ளேன். நிறைய தகவல்கள் தேவைப்படுகிறது.

இணைய வடிவமைப்பு என் வேலை ஆதலால் அந்த வகையி்ல உதவிகளை செய்ய முடியும்

தகடூர் தமிழ் தட்டச்சியை ஹாய் கோபி அவர்களின் அனுமதியுடன்  ட்ரூபால் தமிழ் இணையதளத்தில் இணைத்துக்கொள்ளுமாறு அதை மாட்யூலாக வெளியிட்டுள்ளேன். அதன் முகவரி http://drupal.org/project/indic_script

மேலும் ட்ரூபாலுக்கான தமிழாக்கத்தை என்னால் இயன்றவரை செய்து வருகிறேன்

களப்பணியில் இதுவரை அனுபவமில்லை. முயற்சிக்கிறேன்


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நன்றிங்க

வினோத்-VINOTH

unread,
Jun 12, 2010, 2:27:02 AM6/12/10
to mint...@googlegroups.com


2010/6/12 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

அருமையான அறிமுகம்
குமரியிலிருந்து குரல்
விவேகமாய் உள்ளது
வருக வருக என்று வரவேற்கின்றேன்
சீதாம்மா


வரவேற்பிற்கு மிக்க நன்றிங்க

வினோத்-VINOTH

unread,
Jun 12, 2010, 2:34:18 AM6/12/10
to mint...@googlegroups.com


2010/6/12 Nakinam sivam <nak...@gmail.com>
அன்பு சகோதரர் வினோத் அவர்களுக்கு,


மேலும் ஏதாவது குறிப்பிட்ட பாடலுக்கு விளக்கம் தேவை எனில் அந்த பாடலை குறிப்பிட்டால் எனக்கு தெரிந்த வரையில் விளக்குகிறேன்.

குறிப்பாக  குண்டலினியோகா குறித்த தெளிவான விளக்கம் கிடைத்தால் மிக உபயோகமாக இருக்கும். (ஒற்றைத்தலைவலி  வரை வந்தாச்சு :) )

மேலும் இராமதேவரின் பூஜா விதி http://tamil2friends.com/node/21546
திருவள்ளுவர் ஞானம் http://tamil2friends.com/node/21551

இவைகளும்,

சிலவரிகைகள் புரிகிறது, பலது புரியவி்ல்லை.

Nakinam sivam

unread,
Jun 12, 2010, 3:01:16 AM6/12/10
to mint...@googlegroups.com

ஆதியென்ற மணிவிளக்கை அறி வேணும்
அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்
சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்
சுகம்பெறவெ மனோன்மணி யென்னாத்தாள் தன்னை
நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்
நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்
வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று
விளங்கவும் பூசையிது வீண் போகாதே. 1



ஆதியென்ற மணி விளக்கு - ஆன்மா
அகண்ட பரிபூரணம் - அண்டம்
சொதிஎன்ற துய்யவெளி - ஜோதிதரிசனம்
சுகம் பெறவே மனோன்மணி - பரை தரிசனம்
பரஞ்சோதி ஆயி பாதம் - புருவ மத்தி
நிற்குணத்தி நின்ற நிலை - தான் அற்ற நிலை
வேதியென்ற வேதந்ததுள்ளே - நான் பிரம்மமாய் நின்ற நிலை
விளங்கவும்  பூசையிது - யோக முறை


இது புரிகிறதா என்று கூறவும்.

அன்புடன்
நக்கினம் சிவம்


2010/6/12 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

வினோத்-VINOTH

unread,
Jun 12, 2010, 3:05:38 AM6/12/10
to mint...@googlegroups.com


2010/6/12 Nakinam sivam <nak...@gmail.com>

ஆதியென்ற மணிவிளக்கை அறி வேணும்
அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்
சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்
சுகம்பெறவெ மனோன்மணி யென்னாத்தாள் தன்னை
நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்
நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்
வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று
விளங்கவும் பூசையிது வீண் போகாதே. 1



ஆதியென்ற மணி விளக்கு - ஆன்மா
அகண்ட பரிபூரணம் - அண்டம்
சொதிஎன்ற துய்யவெளி - ஜோதிதரிசனம்
சுகம் பெறவே மனோன்மணி - பரை தரிசனம்
பரஞ்சோதி ஆயி பாதம் - புருவ மத்தி
நிற்குணத்தி நின்ற நிலை - தான் அற்ற நிலை
வேதியென்ற வேதந்ததுள்ளே - நான் பிரம்மமாய் நின்ற நிலை
விளங்கவும்  பூசையிது - யோக முறை


இது புரிகிறதா என்று கூறவும்.


இவ்வாறு ஒவ்வொன்றாக விளக்கினால்தான் புரிகிறது. :(
நன்றிங்க

devoo

unread,
Jun 12, 2010, 4:03:53 AM6/12/10
to மின்தமிழ்
தாணுமாலயன் துணை


எல்லாம் இருக்கட்டும் வினோத்,
அனைவரும் வரவேற்க ஆரவாரமாய் மின் தமிழகத்தின் வரவேற்பறைக்குள் வந்து
விட்டீர்கள் ; வாழ்க.

வேண்டுகோள் -

நாஞ்சில் தமிழை உங்கள் வட்டார வழக்குடன் சேர்த்து ஒரு சுவைமிக்க உரையாடல்
(அ) உரையாக ஒலிப்பதிவு செய்து தமிழ் மரபு அறக்கட்டளைப் பகுதியில்
இணையுங்கள், பார்ப்போம்.

இங்கு மற்றொரு வினோத் இருக்கிறார்; மறுப்பு இல்லையெனில் உங்கள் பெயரை
நாஞ்சில் வினோத் என்று வைத்துக்கொள்ளலாம், குழப்பம் ஏற்படாமல் இருக்க


தேவ்

N. Kannan

unread,
Jun 12, 2010, 4:17:00 AM6/12/10
to mint...@googlegroups.com
நன்றி. தேவ் மாதிரி எப்போதும் குவிப்புடன் இருப்பவரைக் காணுதல் அரிது.
 
 
இங்கு வாருங்கள். நம்ம, மீனா ஆச்சியின் செட்டிநாட்டு வட்டாரவழக்கும், தமிழ்மணம் காசி ஆறுமுகத்தின் கோவை வழக்கும்... இப்படி நல்ல சரக்கு இருக்கு!
 
அவங்கவங்க அவங்க ஊர் பாஷை பேசினா என்ன ஐயா?
 
க.>

2010/6/12 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

வினோத்-VINOTH

unread,
Jun 12, 2010, 4:17:55 AM6/12/10
to mint...@googlegroups.com


2010/6/12 devoo <rde...@gmail.com>

                     தாணுமாலயன் துணை


எல்லாம் இருக்கட்டும் வினோத்,
அனைவரும் வரவேற்க ஆரவாரமாய் மின் தமிழகத்தின் வரவேற்பறைக்குள் வந்து
விட்டீர்கள் ; வாழ்க.


சிங்கத்து கோட்டையில வந்தது போல பயப்படுத்துறீங்களே
 
வேண்டுகோள் -

நாஞ்சில் தமிழை உங்கள் வட்டார வழக்குடன் சேர்த்து ஒரு சுவைமிக்க உரையாடல்
(அ) உரையாக ஒலிப்பதிவு செய்து தமிழ் மரபு அறக்கட்டளைப் பகுதியில்
இணையுங்கள், பார்ப்போம்.

இதை மட்டுமல்ல. குமரி பற்றிய அனைத்து தகவல்கலையும் தொகுக்க முடியும். தற்போது கணினி முன்னாடியே இருப்பதால் களப்பணியில் இன்னும் இறங்கவில்லை

குமரியின் அனைத்து சிறப்புகளும் ஏற்கெனவே இணைத்தில் கிடைத்தாலும் நானும் செய்தேன் என்ன மன நிறைவுக்காகவாவது இதை செய்தாக வேண்டும்.

இங்கு மற்றொரு வினோத் இருக்கிறார்; மறுப்பு  இல்லையெனில்  உங்கள் பெயரை
நாஞ்சில் வினோத் என்று வைத்துக்கொள்ளலாம், குழப்பம் ஏற்படாமல் இருக்க

வினோத் கன்னியாகுமரி என்பதே இருக்கட்டும் :))
 
தேவ்

தாணுமாலயன் துணை

devoo

unread,
Jun 12, 2010, 5:29:43 AM6/12/10
to மின்தமிழ்
Jun 12, 3:17 am, வினோத்-VINOTH

>> குமரியின் அனைத்து சிறப்புகளும் ஏற்கெனவே இணைத்தில் கிடைத்தாலும் நானும் செய்தேன் என்ன மன நிறைவுக்காகவாவது இதை செய்தாக வேண்டும். <<

பாராட்டுக்கள்

நாஞ்சில் –
பசுமை போர்த்திக்கொண்ட நிலப்பகுதி; பல அறிஞர்கள், கலைஞர்கள் பிறந்த மண்.
திருவாட்டாற்றையும், திப்பரப்பு அருவியையும், மணமிக்க செவ்வாழையையும்
மறக்க முடியுமா ?


தேவ்

s.bala subramani B+ve

unread,
Jun 12, 2010, 6:44:31 AM6/12/10
to mint...@googlegroups.com
குமரி கடலில் 
புதைந்து கிடக்கும் அதிசயங்கள்
தமிழரின் தொன்மையை வெளிபடுத்தும் நாள் அதிக தொலைவில் இல்லை
 
வருடம் இரண்டு பருவங்களையும்
சந்திக்கும் ஒரே மாவட்டம்
 
 68 கிலோ மீட்டர்
மலைகளையும் அதே அளவு கடல் கரையும் கொண்ட
ஒரே மாவட்டம்
பல வகையான மீன் பிடி தொழில்களை
கொண்ட ஒரே மாவட்டம்
தமிழரின் தொன்மையான கலாச்சாரங்களை
இன்றளவும் வைத்திருக்கும்
மாவட்டம்
மற்றவை
வரபோகும் என் பனுவலில்
அன்புடன்
சிவ. பாலசுப்ரமணி B+ve
 
 
 
  
 
 
 
 
 
 
 


 
2010/6/12 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve

Geetha Sambasivam

unread,
Jun 12, 2010, 7:35:01 AM6/12/10
to mint...@googlegroups.com
கீதாசாம்பசிவம் : முத்தமிழ்?/நம்பிக்கை?//

இப்போவும், நன்றி நினைவு கூர்ந்ததுக்கு. உங்களுக்கு மறந்திருக்குமோ என நினைத்தேன். நல்வரவு மீண்டும்.

--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth

--

Subashini Tremmel

unread,
Jun 12, 2010, 8:18:23 AM6/12/10
to mint...@googlegroups.com
கன்னியாகுமரி வினோத்,
 
தெற்கு தமிழகத்தில் பல சிறு தெய்வ ஆலயங்கள் உண்டு. நான் இருந்த 3 நாட்களிலேயே எத்தனையோ கோயில்களைப் பார்த்தேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கன்னியாகுமரி வட்டாரத்தில் உள்ள சிறு தெய்வ ஆலயங்கள், கிராம தேவதைகள் ஆலயங்களுக்குச் சென்று புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பி வைத்தால் அது ஒரு சிறந்த திட்டமாக அமையும்.  உதாரணத்திற்கு இந்தப் பக்கத்தைப் பாருங்கள்.
 
எனக்கு தேவைப்படுபவை:
  • ஒரு ஆலயத்தின் சில படங்கள்
  • தெய்வத்தின் பெயர்
  • எங்கே உள்ளது (வட்டாரம் தெரு..)
  • தெய்வத்தின் சிறப்பு என்ன
  • ஏதேனும் கதைகள் இருந்தால் அவை ..
  • அதோடு மேலும் நீங்கள் விரும்பு தகவல்..
 
இவற்றை நீங்கள் செய்யலாம். நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை  எனக்கு FTP செய்து விடலாம்.  கட்டுரை, படங்கள் முழுதும் உங்கள் பெயரிலேயே வெளியிடப்படும். முயற்சி செய்து பாருங்கள். ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் எழுதுங்கள்.
 
-சுபா
 
  
2010/6/12 வினோத்-VINOTH <vino...@gmail.com>
 
--

வினோத்-VINOTH

unread,
Jun 12, 2010, 8:46:26 AM6/12/10
to mint...@googlegroups.com


2010/6/12 Geetha Sambasivam <geetha...@gmail.com>

கீதாசாம்பசிவம் : முத்தமிழ்?/நம்பிக்கை?//

இப்போவும், நன்றி நினைவு கூர்ந்ததுக்கு. உங்களுக்கு மறந்திருக்குமோ என நினைத்தேன். நல்வரவு மீண்டும்.

என்னங்க நீங்க
பேரை மறந்தாலும் சமையல் வாசத்தை மறக்க முடியுமோ
:)

வினோத்-VINOTH

unread,
Jun 12, 2010, 8:47:08 AM6/12/10
to mint...@googlegroups.com
2010/6/12 Geetha Sambasivam <geetha...@gmail.com>

கீதாசாம்பசிவம் : முத்தமிழ்?/நம்பிக்கை?//

இப்போவும், நன்றி நினைவு கூர்ந்ததுக்கு. உங்களுக்கு மறந்திருக்குமோ என நினைத்தேன். நல்வரவு மீண்டும்.
 
வரவேற்பிற்கு நன்றி
 
என்னங்க நீங்க
பேரை மறந்தாலும் சமையல் வாசத்தை மறக்க முடியுமோ
:)
 
--

வினோத்-VINOTH

unread,
Jun 12, 2010, 8:57:01 AM6/12/10
to mint...@googlegroups.com


2010/6/12 Subashini Tremmel <ksuba...@gmail.com>

கன்னியாகுமரி வினோத்,
 
தெற்கு தமிழகத்தில் பல சிறு தெய்வ ஆலயங்கள் உண்டு. நான் இருந்த 3 நாட்களிலேயே எத்தனையோ கோயில்களைப் பார்த்தேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கன்னியாகுமரி வட்டாரத்தில் உள்ள சிறு தெய்வ ஆலயங்கள், கிராம தேவதைகள் ஆலயங்களுக்குச் சென்று புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பி வைத்தால் அது ஒரு சிறந்த திட்டமாக அமையும்.  உதாரணத்திற்கு இந்தப் பக்கத்தைப் பாருங்கள்.
 
எனக்கு தேவைப்படுபவை:
  • ஒரு ஆலயத்தின் சில படங்கள்
  • தெய்வத்தின் பெயர்
  • எங்கே உள்ளது (வட்டாரம் தெரு..)
  • தெய்வத்தின் சிறப்பு என்ன
  • ஏதேனும் கதைகள் இருந்தால் அவை ..
  • அதோடு மேலும் நீங்கள் விரும்பு தகவல்..
 
இவற்றை நீங்கள் செய்யலாம். நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை  எனக்கு FTP செய்து விடலாம்.  கட்டுரை, படங்கள் முழுதும் உங்கள் பெயரிலேயே வெளியிடப்படும். முயற்சி செய்து பாருங்கள். ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் எழுதுங்கள்.
 

இதே போல பலதகவல்களை இணையத்தில் பதிய ஆர்வமுண்டு. பிரச்சனை என்றால் இப்போது தற்போது கைவசம் படக்கருவி இல்லை. கூடிய விரைவில் வாங்க உத்தேசித்துள்ளேன். அதன் பிறகு மூலை முடுக்கெல்லாம் சுத்துவேன்.

அதிகமாக இங்கே சிறு தெய்வங்களாவன
இசக்கியம்மன், முத்தாரம்மன். மாடன், பூதத்தான்(தர்ம சாஸ்தா). பேச்சியம்மன்(பேச்சிப்பாறை), நாக தெய்வங்கள்(நாகர்கோவில்).

மேலும் ஐயா வழி சமயம். இது சிறுதெய்வ வழிபாடு அல்ல.

நேரம் கிடைக்கும் போது மேலும் தகவல்களை அனுப்புகிறேன்

கொஞ்சம் பொறுத்தருள்க

Subashini Tremmel

unread,
Jun 12, 2010, 9:20:22 AM6/12/10
to mint...@googlegroups.com

சென்னையில் த.ம.அறக்கட்டளை பணிகளுக்கென்று ஒரு காமெரா வைத்திருக்கின்றோம். நீங்கள் அடுத்த முறை சென்னை வரும் போது இதனைப் பெற்றுச் சென்று படங்கள் எடுத்து திட்டம் முடிந்ததும் எங்களிடம் ஒப்படைக்கலாம்.  விருப்பமிருந்தால் சொல்லுங்கள். நான் ஏற்பாடு செய்கின்றேன்.
-சுபா
2010/6/12 வினோத்-VINOTH <vino...@gmail.com>

வினோத்-VINOTH

unread,
Jun 12, 2010, 9:23:31 AM6/12/10
to mint...@googlegroups.com

2010/6/12 Subashini Tremmel <ksuba...@gmail.com>


நீங்கள் அடுத்த முறை சென்னை வரும் போது
இதனைப் பெற்றுச் சென்று படங்கள் எடுத்து திட்டம் முடிந்ததும் எங்களிடம் ஒப்படைக்கலாம்.  விருப்பமிருந்தால் சொல்லுங்கள். நான் ஏற்பாடு செய்கின்றேன்.

இல்லைங்க, கூடி விரைவில் நான் வாங்க முயற்சிக்கிறேன். உதவிக்கு மிக்க நன்றி

சிவ அறிவொளியன்

unread,
Jun 12, 2010, 2:17:59 PM6/12/10
to மின்தமிழ்
On Jun 11, 11:39 am, வினோத்-VINOTH <vinoth...@gmail.com> wrote:
>    *நூல்கள்:* சித்தர் பாடல்கள், திருமந்திரம், கீதை, உளவியல் நூல்கள் மற்றும்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!

எல்லோரும் இன்புற்றிருப்பது மட்டுமே அன்றி
யாமொன்றும் அறியோம் பராபரமே!

அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா
அற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா!


குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே. - திருமந்திரம்

மனம் பழுத்தால் பிறவி தங்கம் -
மனம் பழுக்காவிட்டால் பிறவி பங்கம் -
தங்கத்தை எண்ணி பங்கம் போதாதே - தங்க இடம் பாரப்பா....

இதுவே சித்தர்களின் கொள்கை.
நலம் சிறக்க , நல்லன விளைக

திருஅருட்பா படியுங்கள். அதில் திருக்குறள், திருமந்திரம், திருவாசகம்,
பல சித்தர் பாடல்களின் பிழிவு உள்ளது

ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு

விஜயராகவன்

unread,
Jun 12, 2010, 3:15:57 PM6/12/10
to மின்தமிழ்
On Jun 12, 7:01 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> அன்பு சகோதரர் வினோத் அவர்களுக்கு,
>
> ஒரு சந்தேகம், நக்கினம் என்பது இடப்பெயரா? நிஜமாவே தெரியாதுங்க அதான்,
> இல்லை இலங்கை பாஷையா?
>
> லோக்கல் தமிழ் பாழைதான்.
>
> நக்கினம் என்றால் நிர்வாணம் என்று பொருள்.
> இந்த நிர்வாணம் அந்த நிர்வாணம் அல்ல.
> சிவ நிலை அடைதலின் போது ஏற்படும்
> ஒன்றும் அற்ற நிலை என்று பொருள் படும்.

லெக்சிகானில் நக்கினம் இல்லை. தமிழ் கூகிளில் போட்டால் எல்லா நக்கினம்
பக்கங்களும் `நக்கினம் சிவன்` ஐ காட்டுகிறன.

நக்கினம் என்பதன் சொல் வேர் என்ன?

விஜயராகவன்

devoo

unread,
Jun 12, 2010, 11:52:50 PM6/12/10
to மின்தமிழ்
Jun 12, 2:15 pm, விஜயராகவன்

> நக்கினம் என்பதன் சொல் வேர் என்ன?


Nagnah –> நக்ந: - திசைகளை ஆடையாக உடுத்தியவர்
நக்நம் தமிழில் நக்கினம் ஆகிறது;
ஹிந்தியில் நங்கா

நாகா ஸாதுக்கள் ஆடை அணியார்
சிவபெருமானை ‘ நக்க பிரான்’ என்பர்.


தேவ்

வினோத் ராஜன்

unread,
Jun 13, 2010, 12:26:17 AM6/13/10
to மின்தமிழ்
நக்கினம் < Skt, nagnam

So Actually, it must be pronounced "nagginam" rather than
"nakkinam" :)

V

On Jun 12, 11:01 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> அன்பு சகோதரர் வினோத் அவர்களுக்கு,
>
> ஒரு சந்தேகம், நக்கினம் என்பது இடப்பெயரா? நிஜமாவே தெரியாதுங்க அதான்,
> இல்லை இலங்கை பாஷையா?
>
> லோக்கல் தமிழ் பாழைதான்.
>
> நக்கினம் என்றால் நிர்வாணம் என்று பொருள்.
> இந்த நிர்வாணம் அந்த நிர்வாணம் அல்ல.
> சிவ நிலை அடைதலின் போது ஏற்படும்
> ஒன்றும் அற்ற நிலை என்று பொருள் படும்.
>

> மற்றபடி
> இலங்கைக்கும் எனக்கும் தமிழன் என்பதை தவிர எந்த தொடர்பும் இல்லை.


>
> அன்புடன்
> நக்கினம் சிவம்
>

> 2010/6/12 வினோத்-VINOTH <vinoth...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > 2010/6/12 Nakinam sivam <naki...@gmail.com>
>
> > அன்பு சகோதரர் வினோத் அவர்களை
>
> >> அன்புடன் வரவேற்கிறேன்.
>
> > ரொம்ப நன்றிங்க
>
> > எதோ கதை கிதை எழுதி மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல்
> >> அதுல வந்துது இதுல வந்துதுன்னு
> >> பேஜார் பண்ணாம சிறந்த முறையில் உங்கள் அறிமுகம் அமைந்ததற்குவாழ்த்துக்கள்.
>
> >  எல்லோரும் உள்குத்து வச்சே பேசறாங்களே....ஹிஹி
>
> > கவிதை, கதை எழுதுபவர்கள் கவனிக்கவும்
> > :))


>
> > ஒரு சந்தேகம், நக்கினம் என்பது இடப்பெயரா? நிஜமாவே தெரியாதுங்க அதான்,
> > இல்லை இலங்கை பாஷையா?
>

> > --
> > சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக
> > வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
> > வினோத்
> >http://tamil2friends.com/friends/vinoth
>

> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>

தாரகை

unread,
Jun 13, 2010, 12:56:01 AM6/13/10
to மின்தமிழ்
> So Actually, it must be pronounced "nagginam" rather than
> "nakkinam" :)


Vinoth,

The prevalent word in verses were 'Nakkan" - not Nakkinam.

Neela Nakkan

Nakkan potRi

Thiru Iravatham Mahadevan's word research on Nakkan -
www.varalaaru.com/Default.asp?articleid=458

வினோத் ராஜன்

unread,
Jun 13, 2010, 1:04:41 AM6/13/10
to மின்தமிழ்
Probably..

It is..

nakkan < nagnan

Since, complex clusters such as 'gn" usually don't occur in Tamil, may
be it was simplified to geminated "k".

Anyways, A Sanskrit word can be Tamilized in several ways. Hari. Ki
can give more examples.

V

தாரகை

unread,
Jun 13, 2010, 1:39:23 AM6/13/10
to மின்தமிழ்
> Anyways, A Sanskrit word can be Tamilized in several ways.

Even though, its probable - one notes the use of Nakkan in Thamizh
prevalently in the verses of ThirumuRai's

The other way round is also possible.

A Thamizh word can be Sanskritised in several ways too:-)

http://www.varalaaru.com/Default.asp?articleid=458

devoo

unread,
Jun 13, 2010, 1:46:49 AM6/13/10
to மின்தமிழ்
வடமொழியின் ‘விக்நம்’ (தடை) தமிழில் விக்கினம் ஆவதுபோல்
‘நக்நம்’ நக்கினம் ஆவதில் தடையேதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

‘மக்நம்’ (மூழ்குதல்) தமிழில் ‘மக்கினம்’ ஆகிறது


தேவ்

தாரகை

unread,
Jun 13, 2010, 2:15:55 AM6/13/10
to மின்தமிழ்
> ‘நக்நம்’ நக்கினம் ஆவதில் தடையேதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

தடையேதுமில்லை, இருப்பினும் - வேர்ச்சொல் தமிழிலிருக்குமா என்று ஆராயும்
நடை ஒரு தடையில்லையே:-)

devoo

unread,
Jun 13, 2010, 2:49:14 AM6/13/10
to மின்தமிழ்

கூடவே விக்நம், மக்நம் இவற்றின் தமிழ் வேர்களையும் ஆராய்ந்து விடலாம்;
தனியாக நேரம் ஒதுக்க வேண்டாம்

தேவ்

devoo

unread,
Jun 13, 2010, 5:17:46 AM6/13/10
to மின்தமிழ்
சந்தேகம் விபரீதம் போக்குவாயே !

அக்கினி கட்டுப்பட்டா லற்பமுஞ் சுடமா ட்டாது
*மக்கின ஞானத்தாலே வந்தபந்த மும்வேவாது
சிக்கெனப் பழகிக்கேட்டல் சிந்தித்த றெளிதலாலே
*விக்கின மடஞ்சந்தேகம் விபரீதம் போக்குவாயே


தேவ்

துரை.ந.உ

unread,
Jun 13, 2010, 5:40:19 AM6/13/10
to mint...@googlegroups.com
வாங்க வினோத் ஜீ



2010/6/13 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

விஜயராகவன்

unread,
Jun 13, 2010, 6:00:43 AM6/13/10
to மின்தமிழ்

தேவ் சார்

”திசைகளை ஆடையாக உடுத்தியவர்” என்பது பொருத்தம் போல் உள்ளது. ஹிந்தி
`நங்கா`வும் Nagnah– நக்ந வேர் கொண்டது என்றால் சரியாக உள்ளது.

ஆனால் நக்கினம் சிவன் ”நக்கினம் என்றால் நிர்வாணம் என்று பொருள். இந்த


நிர்வாணம் அந்த நிர்வாணம் அல்ல. சிவ நிலை அடைதலின் போது ஏற்படும்

ஒன்றும் அற்ற நிலை என்று பொருள் படும்” என்றார். அதனால்தான் சந்தேகமாக
இருந்தது.

விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Jun 13, 2010, 6:06:41 AM6/13/10
to மின்தமிழ்
தாரகை

மகாதேவனின் கட்டுரை சுட்டியதற்க்கு நன்றி.

ஐ.மா. ஆண்பால் நக்கன் சமஸ்கிருதத்திலிருந்து, பெண்பால் நக்கன்
தமிழிலிருந்தும் படிக்கிறார்.

நக்கினம் தேவின் படிப்புக்கு பொருதுகிறது.

விஜயராகவன்

devoo

unread,
Jun 13, 2010, 7:34:51 AM6/13/10
to மின்தமிழ்
Jun 13, 5:00 am, விஜயராகவன்

>>> இந்த நிர்வாணம் அந்த நிர்வாணம் அல்ல. சிவ நிலை அடைதலின் போது ஏற்படும் ஒன்றும் அற்ற நிலை என்று பொருள் படும் <<<

நக்கினம் – கோசமற்ற , சட்டைகள் கழன்ற தூய ஆன்ம வடிவைக் குறிப்பது;
ஆன்மிகத் தளத்தில் பொருள் கொள்வதானால் நக்கினம் ஐயா கூறுவது சரியே. மதக்
கோட்பாடுகளின் இறுதி நிலை இது.

சிவனாரின் ’த்ரிபுரதஹந லீலை’ எல்லாம் எரிந்துபோய் ஒன்றுமே எஞ்சாத
நிலையைக் குறிப்பது


தேவ்

devoo

unread,
Jun 13, 2010, 6:23:30 AM6/13/10
to மின்தமிழ்
Jun 13, 5:00 am, விஜயராகவன்

> ஆனால் நக்கினம் சிவன் ”நக்கினம் என்றால் நிர்வாணம் என்று பொருள். இந்த


> நிர்வாணம் அந்த நிர்வாணம் அல்ல. சிவ நிலை அடைதலின் போது ஏற்படும்
> ஒன்றும் அற்ற நிலை என்று பொருள் படும்” என்றார்.

ஆன்மிகத்தில் வெளிப்படையான பொருளை மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடாது; பரி
நிர்வாண தசையை நக்கினம் எனும் சொல் உணர்த்துவதாகிறது.

வெளிச்சட்டைகள் கழன்ற தூய ஆன்ம வடிவு நக்கினம்; நக்கினம் ஐயா கூறுவது
சரியே.

சிவனாரின் த்ரிபுரதஹந லீலை ஒன்றும் எஞ்சாமல் சுட்டெரிந்த நிலையைச்
சுட்டுவது.

நான் கூறியது இலக்கண ரீதியான பொருள்


தேவ்

வினோத்-VINOTH

unread,
Jun 13, 2010, 8:39:05 AM6/13/10
to mint...@googlegroups.com


2010/6/13 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

வாங்க வினோத் ஜீ



வந்தோம் ஜி
நன்றி

--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.

வினோத்-VINOTH

unread,
Jun 13, 2010, 8:42:29 AM6/13/10
to mint...@googlegroups.com


2010/6/13 தாரகை <thar...@gmail.com>

> So Actually, it must be pronounced "nagginam" rather than
> "nakkinam" :)


Vinoth,

The prevalent word in verses were 'Nakkan" - not Nakkinam.

டூ யூ மீன் நாக்கன்?
ஆர்...?? நக்கன் ??
 

Neela Nakkan

பிகாஸ் ஐ நோ ஒன்லி நீல கண்டன், நாட் நீல நாக்கன்
:)

வினோத்-VINOTH

unread,
Jun 13, 2010, 8:45:43 AM6/13/10
to mint...@googlegroups.com


2010/6/12 சிவ அறிவொளியன் <ariv...@gmail.com>



இதுவே சித்தர்களின் கொள்கை.
நலம் சிறக்க , நல்லன விளைக

திருஅருட்பா படியுங்கள். அதில் திருக்குறள், திருமந்திரம், திருவாசகம்,
பல சித்தர் பாடல்களின் பிழிவு உள்ளது


வழிகாட்டலுக்கு மிக்க நன்றி

Nakinam sivam

unread,
Jun 13, 2010, 9:17:04 AM6/13/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர்கள் அனைவருக்கும்,

நிர்வாணத்தை மேலும் நிர்வாண படுத்தி
பிரித்து மேய்ந்ததற்கு
நன்றி கடமை  பட்டுள்ளேன்.

அன்புடன்
நக்கினம் சிவம்


நண்பர் வினோத் பொறுத்தருள்க.
உங்கள் இழையை நிர்வாணம் ஆக்கியதற்கு.
 

2010/6/13 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

வினோத்-VINOTH

unread,
Jun 13, 2010, 9:31:26 AM6/13/10
to mint...@googlegroups.com


2010/6/13 Nakinam sivam <nak...@gmail.com>


நண்பர் வினோத் பொறுத்தருள்க.
உங்கள் இழையை நிர்வாணம் ஆக்கியதற்கு.
 

என் இழை என்று எதையும் சொந்தம் கொண்டாடுவது இல்லையே

நிஜம் என்னவென்றால் நானே ஒண்ணுமில்லாமல் போக வேண்டுமென் எண்ணிக்கொண்டுள்ளேன்

அப்படியிருக்க ஒரு இழை ஒண்ணுமில்லாமல் போவதற்கா கவலைப்படுவேன்

உலகத்தில் முதல் நிஜம் என்பது நிர்வாணமே.

Nakinam sivam

unread,
Jun 13, 2010, 9:43:04 AM6/13/10
to mint...@googlegroups.com
நிஜம் என்னவென்றால் நானே ஒண்ணுமில்லாமல் போக வேண்டுமென் எண்ணிக்கொண்டுள்ளேன்

இதுதான் வாழ்வின் நிதர்சனமான உண்மை.
உயர் ஞானம் என்பது ஒன்றும் அற்ற இடத்திற்கு செல்வதை தான் கூறுகிறது.



உலகத்தில் முதல் நிஜம் என்பது நிர்வாணமே. 

உலகின் கடைசி நிஜமும் நிர்வாணம் தான்.

நக்கினம் சிவம்
2010/6/13 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nakinam sivam

unread,
Jun 13, 2010, 9:52:52 AM6/13/10
to mint...@googlegroups.com
நன்றி நண்பர் தேவ் அவர்களுக்கு,

நக்கினம் – கோசமற்ற , சட்டைகள் கழன்ற தூய ஆன்ம வடிவைக் குறிப்பது;
ஆன்மிகத் தளத்தில் பொருள் கொள்வதானால் நக்கினம் ஐயா கூறுவது சரியே. மதக்
கோட்பாடுகளின் இறுதி நிலை இது.


நீங்கள் சொன்னதுதான் உண்மை பொருள்.

நக்கினம் சிவம்


2010/6/13 Nakinam sivam <nak...@gmail.com>

வினோத்-VINOTH

unread,
Jun 13, 2010, 10:05:27 AM6/13/10
to mint...@googlegroups.com


2010/6/13 Nakinam sivam <nak...@gmail.com>

நிஜம் என்னவென்றால் நானே ஒண்ணுமில்லாமல் போக வேண்டுமென் எண்ணிக்கொண்டுள்ளேன்

இதுதான் வாழ்வின் நிதர்சனமான உண்மை.
உயர் ஞானம் என்பது ஒன்றும் அற்ற இடத்திற்கு செல்வதை தான் கூறுகிறது.


ஆனால் ஆன்மாவிற்கு அழிவில்லையாமே :(





நிதர்சனமான உண்மை:

இந்த சொல்லாடலை பலர் கூறக் கேள்விப்பட்டுள்ளேன்

நிதர்சனம்,  உண்மை இரண்டும் ஒரே பொருள் தானே, அல்லது வேறு பொருள் உள்ளதா?



( கேள்வியா கேட்கிறேன் என பார்க்காதீர்கள், எல்லாம் ஒரு ஆர்வம் தான். :) )

 

உலகத்தில் முதல் நிஜம் என்பது நிர்வாணமே. 

உலகின் கடைசி நிஜமும் நிர்வாணம் தான்.


:))))


Nakinam sivam

unread,
Jun 13, 2010, 10:20:57 AM6/13/10
to mint...@googlegroups.com
நிஜம் என்னவென்றால் நானே ஒண்ணுமில்லாமல் போக வேண்டுமென் எண்ணிக்கொண்டுள்ளேன்


இதுதான் வாழ்வின் நிதர்சனமான உண்மை.
உயர் ஞானம் என்பது ஒன்றும் அற்ற இடத்திற்கு செல்வதை தான் கூறுகிறது.


ஆனால் ஆன்மாவிற்கு அழிவில்லையாமே :(


நான் என்னும் உணர்வு போன பின்னர் எஞ்சி நிற்பது ஆன்மா மட்டும்.
நான் என்னும் உணர்வு இருக்கும் வரை இந்த உடலுடன் கூடிய 
ஆன்மா இந்த உடலே நான் என்னும் மாயை வயப் பட்டு இருக்கும்.
ஆக ஆன்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை.

நிதர்சனமான உண்மை:

இந்த சொல்லாடலை பலர் கூறக் கேள்விப்பட்டுள்ளேன்

நிதர்சனம்,  உண்மை இரண்டும் ஒரே பொருள் தானே, அல்லது வேறு பொருள் உள்ளதா?

ஆமாம் இது வரை நானும் யோசிக்கவில்லை.
நிச்சயமான உண்மை (மிகச் சரியான உணமை) என்ற பொருள் படும்படி எழுதினேன்.

இதுபற்றி நமது நண்பர்  தேவ்  அவர்கள் விளக்கம் அளித்தால் நன்றாக 
இருக்கும்.


அன்புடன்
நக்கினம் சிவம்

2010/6/13 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

வினோத்-VINOTH

unread,
Jun 13, 2010, 10:23:51 AM6/13/10
to mint...@googlegroups.com


2010/6/13 Nakinam sivam <nak...@gmail.com>




ஆக ஆன்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை.

அதுதான் கவலை
அப்புறம் எப்படி இல்லாமல் போவது :(

Nakinam sivam

unread,
Jun 13, 2010, 10:26:49 AM6/13/10
to mint...@googlegroups.com
ஆக ஆன்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை.

அதுதான் கவலை
அப்புறம் எப்படி இல்லாமல் போவது :(

இல்லாமல்  போவது  நான்  என்னும்  உணர்வு  மட்டுமே 
ஆன்மா தன்னை  உணர்ந்தால் 
நான் காணாமல்போய் விடும்.


2010/6/13 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

வினோத்-VINOTH

unread,
Jun 13, 2010, 10:36:30 AM6/13/10
to mint...@googlegroups.com


2010/6/13 Nakinam sivam <nak...@gmail.com>
ஆக ஆன்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை.

அதுதான் கவலை
அப்புறம் எப்படி இல்லாமல் போவது :(

இல்லாமல்  போவது  நான்  என்னும்  உணர்வு  மட்டுமே 
ஆன்மா தன்னை  உணர்ந்தால் 
நான் காணாமல்போய் விடும்.

எனக்கு  நான் + ஆன்மா இரண்டுமே இருக்ககூடாது.


--

devoo

unread,
Jun 13, 2010, 1:35:33 PM6/13/10
to மின்தமிழ்
Jun 13, 9:20 am, Nakinam sivam

>>> நிதர்சனம், உண்மை இரண்டும் ஒரே பொருள் தானே <<<

நிதர்சநம் – உட்பொருள் ஆய்வு, ப்ரமாணம், எடுத்துக்காட்டு, நிமித்தம்,
சின்னம், வழிமுறை, விதி என்று பல பொருளில் கையாளப்படுகிறது வடமொழியில்.

தமிழில் இவற்றை நாம் சட்டை செய்வதில்லை. கண்கூடான, மிக வெளிப்படையான
உண்மை என்னும் பொருளில் இதைக் கூறுகிறோம்; அதுவே நிலைத்து விட்டது.
கல்யாணத்தைத் திருமணத்தோடும், நிஜத்தை உண்மையோடும் தொடர்புபடுத்திப்
பொருள்கொள்வது போல


தேவ்


On Jun 13, 9:20 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> > நிஜம் என்னவென்றால் நானே ஒண்ணுமில்லாமல் போக வேண்டுமென் எண்ணிக்கொண்டுள்ளேன்
>
> > இதுதான் வாழ்வின் நிதர்சனமான உண்மை.
> > உயர் ஞானம் என்பது ஒன்றும் அற்ற இடத்திற்கு செல்வதை தான் கூறுகிறது.
>
> ஆனால் ஆன்மாவிற்கு அழிவில்லையாமே :(
>
> நான் என்னும் உணர்வு போன பின்னர் எஞ்சி நிற்பது ஆன்மா மட்டும்.
> நான் என்னும் உணர்வு இருக்கும் வரை இந்த உடலுடன் கூடிய
> ஆன்மா இந்த உடலே நான் என்னும் மாயை வயப் பட்டு இருக்கும்.
> ஆக ஆன்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை.
>
> நிதர்சனமான உண்மை:
>
> இந்த சொல்லாடலை பலர் கூறக் கேள்விப்பட்டுள்ளேன்
>
> நிதர்சனம்,  உண்மை இரண்டும் ஒரே பொருள் தானே, அல்லது வேறு பொருள் உள்ளதா?
>
> ஆமாம் இது வரை நானும் யோசிக்கவில்லை.
> நிச்சயமான உண்மை (மிகச் சரியான உணமை) என்ற பொருள் படும்படி எழுதினேன்.
>
> இதுபற்றி நமது நண்பர்  தேவ்  அவர்கள் விளக்கம் அளித்தால் நன்றாக
> இருக்கும்.
>
> அன்புடன்
> நக்கினம் சிவம்
>

> 2010/6/13 வினோத்-VINOTH <vinoth...@gmail.com>
>
>
>
>
>
> > 2010/6/13 Nakinam sivam <naki...@gmail.com>

வினோத்-VINOTH

unread,
Jun 13, 2010, 2:44:29 PM6/13/10
to mint...@googlegroups.com


2010/6/13 devoo <rde...@gmail.com>


நிதர்சநம் – உட்பொருள் ஆய்வு, ப்ரமாணம், எடுத்துக்காட்டு, நிமித்தம்,
சின்னம், வழிமுறை, விதி என்று பல பொருளில் கையாளப்படுகிறது வடமொழியில்.

விளக்கத்திற்கு நன்றி
 

தமிழில் இவற்றை நாம் சட்டை செய்வதில்லை. கண்கூடான, மிக வெளிப்படையான
உண்மை என்னும் பொருளில் இதைக் கூறுகிறோம்; அதுவே நிலைத்து விட்டது.
கல்யாணத்தைத் திருமணத்தோடும், நிஜத்தை உண்மையோடும் தொடர்புபடுத்திப்
பொருள்கொள்வது போல

இவற்றிற்குள்ள வேறுபாட்டையும் அறிய விரும்புகிறேன்

devoo

unread,
Jun 13, 2010, 2:53:58 PM6/13/10
to மின்தமிழ்
நக்கன்

கயிலை பாதி காளத்திபாதி அந்தாதியை மட்டும் எடுத்துக் கொண்டால்,
…………………………………………………… பரமன்(49,99), பசுபதி(50), காயம்(56),
தியானிப்பார்(60), பத்தர்(71,83,86), ஆதரித்த(72), பாவம்(76),
பாதாளம்(88),
சங்கரன்(89), பாதாரவிந்தம்(99) முதலிய வடசொற்களும்,
விண்ணப்பம் (75,77), *நக்கன்* (88) முதலிய பாகதச்சொற்களும் வந்துள்ளன.

(வையாபுரிப் பிள்ளை அவர்கள் ’நக்கன்’ பாகதச் சொல் என்று கூறுவார்)

http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0326.html


தேவ்

வினோத்-VINOTH

unread,
Jun 13, 2010, 3:19:53 PM6/13/10
to mint...@googlegroups.com
திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களின் கட்டுரையிலிருந்து...


தமிழ்க் கல்வெட்டுகளில் நக்கன் என்ற சொல் ஆண்பாலரையும் பெண்பாலரையும் பொதுவில் குறிக்கும் பெயர்ச்சொல்லாக வழங்கியுள்ளது.


சிவபெருமானுக்கு 'நிர்வாணி' என்ற பொருளில் நக்கன் என்ற வடமொழியிலிருந்து பெறப்பட்ட பெயர் வழங்கியது என்பது உண்மையே. ஆயினும் மக்கள் சூட்டிக்கொண்ட நக்கன் என்ற பெயர் மேற்கண்ட சொல்லிலிருந்து வேறான ஒரு தமிழ்ச்சொல் என்றே தோன்றுகிறது. நகு : நகைத்தல் [> நக்கல் 'சிரிப்பு'] என்ற வேர்ச்சொல்லுடன் நக்கன் [நகு + அன்] தொடர்புடையது என்று கொண்டால் இச்சொல்லுக்கு 'நகைமுகன் அல்லது இன்முகத்தினன்' என்ற பொருள் காண இயலும். தம் மக்களுக்குப் பெற்றோர் இப்பெயரை ஏன் சூட்டினர் என்பதற்கு இயல்பான, பொருத்தமான விளக்கமும் கிடைத்து விடுகிறது.

நக்கன் என்ற சொல் பெண்பாலாக வரும்பொழுது அதற்கு வேறுவிதமாகப் பொருள் காணவேண்டும். நக்கன் என்ற சொல் பெரிதும் வழங்கும் தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகளிலேயே அக்கன் என்ற சொல்லும் 'தமக்கை' என்ற பொருளில் வந்திருப்பதை இங்குச் சிறப்பாகக் கருத்தில் கொள்ளவேண்டும் [தெ.இ.க. 2 : 2]. ஏனெனில் இதுவே நக்கன் ஓர் உறவுமுறைச் சொல் என்பதை விளக்கும் தடயமாக அமைந்துள்ளது.

தமிழிலும் வேறு சில திராவிட மொழிகளிலும் உறவுமுறைச் சொற்கள் [Kinship terms] எவ்வாறு முன்னொட்டுகளுடன் [Prefixes] அமைக்கப்பட்டுள்ளன என்பதற்குக் கீழ்க்கண்ட எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.







அந்தைதந்தைநந்தை
அம்பிதம்பிநம்பி
அங்கைதங்கைநங்கை
அக்கைதமக்கை-
அக்கன்-நக்கன்
ஆய்தாய்ஞாய், யாய்

அந்தை என்ற வேர்ச்சொல் பழந்தமிழில் 'தந்தை முறையிலுள்ள பெரியோன்' என்ற பொருளில் வழங்கியது என்பதற்குத் தமிழ் - பிராமிக் கல்வெட்டுகள் சான்றாக உள்ளன [ஐ.ம. 2003. பக். 104, 550]. அந்தை என்ற வேர்ச்சொல்லுடன் உறவுமுறையைச் சுட்டும் தம், நம் என்ற முன்னொட்டுக்களை இணைத்தால் முறையே தந்தை, நந்தை என்ற சொற்கள் உருவாகின்றன. அதேபோல, அம்பி என்ற சொல்லிலிருந்து முறையே தம்பி, நம்பி என்ற சொற்களும், அங்கை என்ற சொல்லிலிருந்து முறையே தங்கை, நங்கை என்ற சொற்களும் பெறப்படுகின்றன. அங்கை என்ற சொல் வலிந்து ஒலிக்கும்பொழுது அக்கை என்ற மாற்றுருவைப் பெறுகிறது. அங்கை என்ற சொல்லிலிருந்து அங்கச்சி, அங்கைச்சி, தங்கை, தங்கச்சி, தங்கைச்சி என்ற தங்கை முறையைக் குறிக்கும் சொற்கள் அமைந்துள்ளன. அதே போன்று அக்கை என்ற சொல்லிலிருந்து அக்கன், அக்கா, அக்காள், அக்கச்சி, அக்கைச்சி, தமக்கை, நக்கன் ஆகிய தமக்கை முறையைக் குறிக்கும் சொற்கள் உருவாகின்றன. மேலும் ஆய் என்ற வேர்ச்சொல்லிலிருந்து ஆய்ச்சி, ஆச்சி, தாய், தாய்ச்சி, ஞாய், யாய் போன்ற உறவுமுறைச் சொற்கள் முன்னொட்டுகளை இணைத்துப் பெறப்படுகின்றன.

இப்பின்னணியில் நோக்கும்பொழுது நக்கன் என்ற பெண்பால் பெயர்ச்சொல்லின் பொருள் தெளிவாகக் கிடைக்கிறது. கூடப் பிறந்த பெண்டிரை வயதுக்கேற்ப தமக்கை என்றோ அல்லது தங்கை என்றோ அழைத்தனர்; அதைப் போன்று உடன் பிறவாப் பெண்டிரை நக்கன் என்றோ அல்லது நங்கை என்றோ அழைத்தனர். உலக வழக்கில் நங்கை என்ற சொல் பொதுவில் இளம்பெண்டிரைக் குறிப்பதாகவும், நக்கன் என்ற சொல் கோயில்களில் பணியாற்றிய தேவரடியார்களைக் குறிப்பதாகவும் சிறப்புப் பொருள்களைப் [Honorifics] பெற்றுவிட்டன எனலாம்.


நன்றி - வரலாறு.காம்

devoo

unread,
Jun 13, 2010, 3:30:32 PM6/13/10
to மின்தமிழ்
நிஜம் – தனதேயான
‘நிஜ கர்மோபாத்தம் வித்தம் தேந விநோதய சித்தம்’ (தன் முயற்சியால்
கிடைக்கும் பொருளில் மனத்தைச் செலுத்துவாய்! பிறர் பொருளில் கண்
வையாதே)

– ஆதி சங்கரர்

‘ந திசதி முகுந்தோ நிஜபதம்’
(முகுந்தன் தன் பரமபதத்தை உருக்காட்ட மாட்டான்)
– ஸ்வாமி
தேசிகன்
நிஜ ரூபம், நிஜ தாமம், நிஜ வாக்யம், நிஜ க்ருஹம் போன்ற சொற்களை
ஸம்ஸ்க்ருத துதி நூல்களில் காணலாம்.
நாம் ‘உண்மை’ எனும் பொருளில் பயன்படுத்துகிறோம் – ‘நெஜமாவா!’


கல்யாணம் – ஆன்மிக மேன்மை, உய்வு
‘கல்யாணமாவஹது மே கமலாலயா:’ – தாமரையில் உறையும் அன்னை எனக்கு உய்வை
நல்கட்டும் ! (ஆதி சங்கரர்)
நாம் திருமணம் என்று பொருள் கொள்கிறோம். மணவினைக்கான வடசொல் ‘விவாஹம்’
என்பதே.


யோகம் – இணைப்பு, சேர்க்கை
நம் அவல குணங்களை நீக்கி ‘கர்ம யோகம்’, ‘ஞான யோகம்’, ‘பக்தி யோகம்’ இவை
வாயிலாக நம்மைப் பரம்பொருளுடன் இணைக்க முயல்கிறான் கண்ணன் எம்பெருமான்.
மன ஓட்டத்தைத் தடுப்பதே ‘யோகம்’ என்பார் பதஞ்ஜலி முனிவர்;
யுஜ் - சேர்க்கை (யுஜிர் யோகே, யுஜ் ஸமாதௌ என்பன வ்யுத்பத்திகள்)
‘நல்ல யோக ஜாதகம்!’ யோகம் – luck என்னும் பொருளில் கையாள்கிறோம்.


’புருஷன்’ ‘சம்சாரம்’ எனும் சொற்கள் தமிழில் கணவன், மனைவி என்னும்
பொருளில் பயனா வதைக் காண்கிறோம்.‘ஸம்ஸார:’ என்பது வடமொழியில் பெண்பாலே
அன்று.
’புருஷன்’ பொதுவில் ஆண் மகனையும், உடல் என்னும் நகரினுள் உறையும்
கடவுளையும் குறிப்பது.

இதைப்போன்றே ‘பத்ரம்’, ‘சுத்தம்’ ’ப்ரமாதம்’ ‘கேவலம்’, ‘ஆபாஸம்’, ‘கவநம்‘
போன்ற சொற்களும். வடமொழி சுட்டும் பொருள் வேறு; நாம் புழங்குவது வேறு
பொருளில்.

பத்ரம் - சுபம், மங்கலம்
பெரியோர் சிறியோரிடம் உரையாடி முடிக்கும் தறுவாயில் ‘பத்ரம் தே’ (உனக்கு
மங்கலம் உண்டாகுக!) என்று கூறி முடிப்பர். வால்மீகி ராமாயணத்தில்
இவ்வழக்கைக் காணலாம்.
‘பத்ர காளி’, ‘வீர பத்ரர்’ - மங்கலம் தரும் கடவுளர்.
நாம் பத்திரம் என்பதைப் ’பாதுகாப்பு’ என்னும் பொருளில்
பயன்படுத்துகிறோம்.


சுத்தம் - தூய்மை
இது தெரிந்தாலும் ‘அடியோடு’, ‘முற்றிலும்’ எனும் பொருளிலேயே
கையாள்கிறோம். (நான் சுத்தமா இதை எதிர்பார்க்கவில்லை)


ப்ரமாதம் - குழப்பம்,தவறு, விபத்து
நாம் கையாள்வதோ உயர்தரத்தைக் குறிப்பதற்கு. (விருந்து ப்ரமாதம்!)


கேவலம் - ஒன்றேயான (கைவல்யம்)
நாம் இகழத்தக்கது எனும் பொருளில் கையாள்கிறோம்.


ஆபாஸம் - தோற்றம் (எ-கா) கானல் நீர்
ரஸாபாஸம் - ரசம்,சுவை இருப்பது போன்ற தோற்றம்
ஹேத்வாபாஸம் - காரணம் போன்றதான தோற்றம் (உண்மைக் காரணம் வேறு)
நாம் ‘vulgar’ என்று பொருள் கொள்கிறோம்.

கவநம் - பாடல் புனைதல்
எச்சரிக்கையாக இருப்பதற்கு கவனம் என்கிறோம்.

பர்வதம் என்றால் மலை; திருவண்ணாமலைக்கருகில் ‘பர்வத மலை’ என்னும் பெயரில்
ஒரு மலை இருக்கிறது

தேவ்


On Jun 13, 1:44 pm, வினோத்-VINOTH <vinoth...@gmail.com> wrote:
> 2010/6/13 devoo <rde...@gmail.com>
>
>
>
> > நிதர்சநம் – உட்பொருள் ஆய்வு, ப்ரமாணம், எடுத்துக்காட்டு, நிமித்தம்,
> > சின்னம், வழிமுறை, விதி என்று பல பொருளில் கையாளப்படுகிறது வடமொழியில்.
>
> விளக்கத்திற்கு நன்றி
>
>
>
> > தமிழில் இவற்றை நாம் சட்டை செய்வதில்லை. கண்கூடான, மிக வெளிப்படையான
> > உண்மை என்னும் பொருளில் இதைக் கூறுகிறோம்; அதுவே நிலைத்து விட்டது.

> > *கல்யாணத்தைத் திருமணத்தோடும், நிஜத்தை உண்மையோடும் *தொடர்புபடுத்திப்

வினோத்-VINOTH

unread,
Jun 13, 2010, 4:00:26 PM6/13/10
to mint...@googlegroups.com
விரிவான விளக்கத்திற்கு நன்றி

இதில் அதிக சொற்கள் மலயாளத்தில் அதே பொருளில் கையாளப்படுகிறது

உதாரணமாக
புருஷன் - ஆண்
விவாஹம் - திருமணம்
பர்வதம் - மலை

ஆனால்
பத்ரம் பத்திரிகை என்ற பொருளில் அடிக்கடி வருகிறது (இருபொருள் இருக்கலாம்)


கேவலம் என்பதற்கு வெறும் என்ற பொருளிலேயே கையாளப்படுகிறது

இப்பொருள் கடையில் கேவலம் 5 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றவாறு பயன்படுத்தப்படும்


இதனாலேயே மலயாளம் தமிழின் குழந்தை என்பது சந்தேகத்திற்குரியதாகவே எனக்குப்படுகிறது..

எழுத்துகள், உச்சரிப்புகள் எல்லாமே வடமொழி சார்ந்தவை..

தமிழின் அருகாமையால் தமிழின் சாயல் வந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன். சமஸ்கிருதத்திற்கும் தமிழிற்குமான இணைப்புப்பாலம் போல..

ஆனால் வேறு பல சொற்கள் தூயதமிழ் அகராதி சொற்களை பயன்படுத்துகிறார்கள் அல்லது இலங்கை சாயல் இருக்கிறது.

வினோத்-VINOTH

unread,
Jun 13, 2010, 4:01:10 PM6/13/10
to mint...@googlegroups.com
அப்படியே வினோத் என்பதற்கும் விளக்கம் ப்ளீஸ்.. :)

தாரகை

unread,
Jun 13, 2010, 6:50:37 PM6/13/10
to மின்தமிழ்
> கூடவே விக்நம், மக்நம் இவற்றின் தமிழ் வேர்களையும் ஆராய்ந்து விடலாம்;
> தனியாக நேரம் ஒதுக்க வேண்டாம்.

திரு தேவ் அவர்களின் பெருந்தன்மைக்கு பாராட்டுக்கள்:-)

தாரகை

unread,
Jun 13, 2010, 6:55:20 PM6/13/10
to மின்தமிழ்
> டூ யூ மீன் நாக்கன்? ஆர்...?? நக்கன் ??

> Neela Nakkan - பிகாஸ் ஐ நோ ஒன்லி நீல கண்டன், நாட் நீல நாக்கன்:)

நக்கனே சரி.

திருமுறைகள், திருவாய்மொழிப் பாசுரங்களைப் படித்தோமானால் தெரிய வரும்:-)

வினோத்-VINOTH

unread,
Jun 13, 2010, 10:21:44 PM6/13/10
to mint...@googlegroups.com


2010/6/14 தாரகை <thar...@gmail.com>

> டூ யூ மீன் நாக்கன்? ஆர்...?? நக்கன் ??

> Neela Nakkan - பிகாஸ் ஐ நோ ஒன்லி நீல கண்டன், நாட் நீல நாக்கன்:)

நக்கனே சரி.

ம். தெரியும்ங்க. சும்மாதான் கேட்டேன், nakkan என்பதை நாக்கன் என்றும் படித்துவிட வாய்ப்பு இருக்கிறதல்லவா? அதான்.


திருமுறைகள், திருவாய்மொழிப் பாசுரங்களைப் படித்தோமானால் தெரிய வரும்:-)

அப்போ உங்களுக்கு தமிழ் தட்டச்ச வரும் :)

Nakinam sivam

unread,
Jun 14, 2010, 12:28:59 AM6/14/10
to mint...@googlegroups.com
எனக்கு  நான் + ஆன்மா இரண்டுமே இருக்ககூடாது. 


நான்  மட்டுமே  உங்கள்  கட்டுப்பாட்டில்  இருப்பது 
ஆன்மா  அதன்  கட்டுப்பாட்டில்  அதுவே 
ஆக அது அதுவாகவே இருக்கும்
அதை இழக்க முடியாது.
ஏனெனில்
அது நான் ஐ சார்ந்தது அல்ல.
நான் போகும்போது இந்த உடல்மட்டுமே இழப்பு.

அன்புடன்
நக்கினம் சிவம்




2010/6/14 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Reply all
Reply to author
Forward
0 new messages