புத்தாண்டு சிறப்பு வெளியீடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்

2,113 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Apr 14, 2012, 7:08:27 PM4/14/12
to மின்தமிழ், Subashini Tremmel

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்

கட்டுரையும் படங்களும்: சுபாஷினி ட்ரெம்மல்

 

 


நான் இந்த வருடம் (ஜனவரி 2012ல்) தமிழகம் சென்றிருந்த போது ஈரோட்டில் சில நாட்கள் இருந்ததைத் பற்றி வேறு சில பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். ஈரோட்டில் எனது திட்டப்படி ஒரு சில இடங்களைச் சென்று பார்த்து வர வேண்டும் என்ற ஒரு பட்டியல் இருந்தது. ஈரோட்டில் இருந்த சமயம் திரு.திவாகருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது ஈரோட்டில் இருந்தால் நிச்சம் திருச்செங்கோடு கோவிலைச் சென்று பார்த்து வாருங்கள் என்று குறிப்பிட்டார். திருமதி பவளா, திரு.ஆரூரன் இவர்கள் இருவருக்கும் இதனைத் தெரிவித்தபோது பயணத்தின் இறுதி நாள் காலையில் இக்கோவில் சென்று வரலாம் என்று ஏற்பாடு செய்தனர்.

 

 
 
 
அடிப்படையில் எந்த ஏற்பாடும் செய்யாமலேயே இந்தக் கோவிலுக்குச் செல்வோம் என்பது முடிவானது. அதிலும் திரு.திவாகர் வேறு சொல்கின்றார். நிச்சயம் மனதிற்கு நிறைவளிக்கும் ஒரு பயணமாக இது அமையும் என்ற நம்பிக்கை மனதில் இருந்தது.
 
இக்கோவில் மூலஸ்தானத்தில் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் அமைந்திருக்கின்றதெனவும் திருச்செங்கோட்டு முருகன் பிரசித்தி பெற்றவர் என்பதும் இத்தலம் தமிழகத்தின் முக்கிய ஸ்தலங்களின் பட்டியலில் இடம் பெரும் ஒன்று என்றும் கொஞ்சம் விபரங்கள் தெரிந்து கொண்டேன். காலை உணவு முடித்து என்னுடன் கண்ணன், ஆரூரன், பவளா நால்வரும் திருச்செங்கோடு புறப்பட்டோம்.
 
 
 
மலைமேல் அமைந்திருக்கும் கோயில். படிகளில் ஏறி கோயிலை அடையலாம். அல்லது வாகனங்கள் செல்ல அமைக்கபப்ட்டிருக்கும் சாலையில் சென்றும் இறைவனை தரிசிக்கலாம். நேரம் குறைவாக இருந்தபடியால் வாகனத்தில் மேலே கோயில் வரைக்கும் செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பாதையிலேயே சென்று கோயிலை அடைந்தோம். கீழிருந்து படிகளில் நடந்தே வருவதற்கும் படிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
 
ஈரோடு நகரிலிருந்து இந்தக் கோயில் ஏறக்குறைய 18 கி.மீ தொலைவில் உள்ளது. இம்மலையின் உச்சியில் இருப்பது செங்கோட்டு முருகன் ஆலயமும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலும் ஆகும். மலை அடிவாரத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இத்தலத்தில் இறைவி தவம் செய்து இறைவனது திருமேனியில் ஒரு பகுதியைத் தம்முடையதாகப் பெற்றார் என்று புராணம் கூறுவதாகவும் திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களில் இக்கோவில் பாடப்பட்டுள்ளதாகவும் அருணகிரிநாதர் செங்கோட்டு வேலவனிடம் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார் எனவும் V.கந்தசாமி அவர்கள் தமிழ் நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
 
இக்கோவிலில் இன்னாள் காணப்படும் கட்டடப்பணி கி.பி 16ஆம் நூற்றாண்டில் திரியம்பக உடையாரால் தொடங்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. மகா மண்டபம் சம்போஜி என்ற சங்கரிதுர்க் ஆளுநரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, சீயாலகட்டி முதலியால் நிறைவு செய்யப்பட்டது. திருச்செங்கோட்டிற்கு அருகிலுள்ள மோரைத் தலநகராக்கிக் கொண்டு சிற்றரசர்கள் ஆட்சி புரிந்தனர். மோரைச் சேர்ந்த ஆத்தப்ப நல்லத்தம்பி காங்கேயன் என்பவரால் கிபி. 1599இல் அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் நிருத்த மண்டபம் கட்டப்பட்டது. இக்கோவிலின் மூலவர் வலப்பாதி ஆண் உருவத்தையும் இடப்பாதி பெண் உருவத்தையும் கொண்ட அர்த்த நாரீஸ்வரர் ஆவார் என்று இந்த நூல் மேலும் விளக்குகின்றது. 
 
தெய்வங்கள்
 
இக்கோயிலின் ப்ரதான தெய்வம் அர்த்தநாரீஸ்வரர் வடிவம். கோவிலுக்குள் செல்லும் போது உடனே இப்பகுதிக்கு வர முடியாது. கோயிலின் வாசல் புறத்திலிருந்து சுற்றி வந்து முதலில் முருகன் சன்னிதியைப் பார்த்து கடந்து இந்த அர்த்தநாரீஸ்வரர் இருக்கின்ற கோவில் பகுதிக்கு வரலாம். 
 
அர்த்தநாரீஸ்வரரைப் போல திருச்செங்கோட்டு வேலவனும் முக்கிய தெய்வமாக இக்கோயிலில் அமைந்திருக்கின்றார். முருகனுக்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.
 
அடுத்ததாக இக்கோவிலின் மற்றொரு முக்கிய தெய்வமாக நாகேஸ்வரர் அமைந்திருக்கின்றார். தனிச் சன்னிதியாக மற்ற ஆலயங்களில் இல்லாத புதுமையாக ஐந்தலை நாகங்கள் பின்னிப் பிணைந்தது போன்ற வடிவத்தில் அமைந்த ஒரு பகுதி உள்ளது.
 
 
இதைத் தவிர சிவலிங்கம், நடராஜர், அம்மன், பிள்ளையார் சன்னிதிகளும் உள்ளன. ஒரு பகுதியில் 63 நாயன்மார்களின் சிலைகளும் வரிசையாக வைக்கப்பட்டு வழிபாடு செய்யபப்டுகிறது.
 
தல விருட்சம்
 
இக்கோவிலின் தல விருட்சம் இலுப்பை மரம். இம்மரம் கோவிலின் வடக்குப் பகுதியில் நடராஜர் சன்னிதிக்கும், சிவலிங்க சன்னிதிக்கும் இடையில் அமைந்துள்ளது.
 
 
சிற்பக்கலை
 
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், தமிழக சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த உறைவிடமாகும். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது யாளிமீது உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார் 30 சிற்ப வேலைப்பாடு மிக்க ஒற்றைக் கற்றூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
 
செங்கோட்டு வேலவர் சந்திதி முன்னுள்ள மண்டபத்தில் வீரபத்திரர், மன்மதன், ரதி, காளி முதலிய ஒற்றைக் கல்லிலாலான சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபத்தில் கூரைப் பகுதியில் கல்லிலானா தாமரை மலர்கள், மலை, கிளிகள், கற்சங்கிலிகள் பறவைகள், முனிவர்கள் போன்ற சிற்ப விநோதங்கள் செய்யப்பட்டுள்ளன.
 
நாகேஸ்வரரின் கருவறை சிற்ப வேலைப்பாடு மிக்கது. கருவறை முன்மண்டபத்தில் குதிரை அல்லது யாழி மீதுள்ள வீரர்களில் கற்றூண் சிற்பங்கள் உள்ளன. கூரைப்பகுதியில் கவிழ்ந்த தாமரை மலர் செதுக்கப்பட்டுள்ளது.
 
 
எல்லா தூண்களையும் கவின்மிகு சிற்ப வடிவங்கள் அலங்கரிக்கின்றன. சுவாமி சன்னிதிகளின் சுவர்களில் மிக நுணுக்கமான கலைவேலைப்பாட்டுடன் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. ஓரளவு சிற்ப வடிவங்கள் தாரமங்கலம் கோயில் அமைப்பை ஒத்ததாகவும் அமைந்திருக்கின்றது என்றே எனக்குத் தோன்றியது.
 
 
செங்கோட்டு வேலவர் சன்னிதி முன்னுள்ள மண்டபத்தில் ஒரு தேர் போன்ற வடிவம் உள்ளது. அதன் கீழ் ஆமை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டு அந்தத் தேரினை ஆமை எடுத்துச் செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது வேறு கோவில்களில் நான் இதுவரை பார்த்திராத ஒரு வியக்க வைக்கும் கலைப்படைப்பு.
 
 
அர்த்தநாரீஸ்வரர்
 
கொங்கு நாட்டில் காவிரி நதியின் வடகரையில் அமைந்திருக்கும் இந்தச் சிவத்தலம் கொங்கேழ் சிவத்தலங்களில் ஒன்று என்று சிறப்பித்துக் கூறப்படுவது. இக்கோயிலின் சிறப்புக்கள் பலவற்றில் முதன்மையானதும் பக்தர்கள் வியக்கும் தனமையுடையதுமாக அமைந்திருப்பது இக்கோவிலின் மூலஸ்தான தெய்வமாக வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் உருவம். 
 
சிவனை மாதொருபாகன், மங்கைபங்கன் என்றும் அழைப்போம். அதனை இங்கே உருவமாகப் படைத்து வழிபாட்டிற்கு வைக்கப்பட்டிருப்பது இக்கோவிலின் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
 
திருஞானசம்பந்தர் இறைவனை மாதொரு பாகன் என்று குறிப்பிட்டு பல பாடல்கள் பாடியுள்ளார். அது இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் தெய்வத்திற்கும் சிறப்பாகப் பொருந்துவதாக உள்ளது.
 
வெந்தவெண்ணீறணிந்து விரிதூறிகழ் மார்மினல்ல
கந்தணவும் விரளொரு பாகம் மமர்ந்தளு
கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
வந்தணனைத் தொழுவா ரவல மறுப்பரே 
-தேவாரம்
 
 
தலம், பெயர்க்காரணம்
 
திருச்செங்கோட்டு ஆலயம் ஒரு தெய்வத்தை மட்டும் சிறப்பிக்கும் நிலையில்லாது சிவஸ்தலம், செங்கோட்டு முருகனின் தலம், நாகதேவர் ஸ்தலம் என மூன்று வகையில் இக்கோயில் மக்களால் அறியப்படுகின்றது. மலைமேல் எழுந்தருளியிருக்கும் கோயில்கள் தமிழகத்தில் பல உள்ளன.  அவற்றில் வித்தியாசமாக அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் அம்மையும் அப்பனும் ஒருங்கே அமையப்பெற்ற மலைமேல் அமைக்கப்பட்ட ஒரு தெய்வீகத்தலமாக இதனைக் குறிப்பிடலாம்.
 
பிற பெயர்கள்
 
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர ஆலயம் என்பது மட்டுமல்லாது இப்புண்ணியத் ஸ்தலத்திற்கு மேலும் பல பெயர்கள் அமைந்திருக்கின்றன.
  • கொடிமாடச் செங்குன்றம்
  • தெய்வத்திருமலை
  • நாககிரி
  • அரவாகிரி
  • உரகவெற்பு
  • கட்செவிக் குன்றூர்
  • பணிமலை
  • தந்தகிரி
  • நகபூதரம்
  • புசகபூதரம்
  • நாகாசலம்
  • நாகமலை
  • முருகாசலம்
  • தாருகாசலம்
  • திருவேரகம்
என்ற பெயர்களும் வழங்கப்பெற்றுள்ளன என்று திருச்செங்கோட்டு ஸ்தல புராண நூல் கூறுகின்றது.
 
திருச்செங்கோடு என்பதன் பொருளை அழகுமிக்க சிவந்த நிறம் வாய்ந்த குன்று என்று பொருள் காணலாம்.
 
நாகதேவருக்கு இங்கு ப்ரத்தியேகமான சன்னிதானம் அமைந்திருப்பதால் நாகத்தின் பெயரை உள்ளடக்கிய வகையில் நாககிரி, அரவகிரி, உரகவெற்பு போன்ற பெயர்களும் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்று.
 
இக்கோயில் அமைந்திருக்கும் மலை
  • கோதமலை
  • முத்தலை
  • கடகமலை
  • துர்க்கைமலை
  • முத்திமலை
  • வாயுமலை
  • பொறுதுமலை
  • வந்திமலை
  • அழகுமலை
  • தாருமலை
  • சூதமலை
  • தவமலை
  • அனந்தன்மலை
  • தங்கமலை
  • யோமலை
  • மேருமலை
  • கொங்குமலை
  • கத்தகிரி
  • ஞானகிரி
  • இரத்தகிரி
  • கோணகிரி
  • பிரம்மகிரி
  • தீர்த்தகிரி
  • தர்மகிரி
  • கந்தகிரி
  • பதுமகிரி
  • தேதுகிரி
என்று தமிழ் இலக்கியங்களிலும் நூல்களிலும் குறிப்பிடப்படுகின்றது என்று திருச்செங்கோட்டு ஸ்தல புராண நூல் கூறுகின்றது.
 
மலையும் அதன் வடிவமுமும்
 
இம்மலையின் தோற்றம் குறிப்பாக மலையின் சிகரத்தின் தோற்றம் தூரத்திலிருந்து காண்பவர்களுக்குச் சிவலிங்கத்தின் அமைப்பைப் போன்று காட்சியளிக்கின்றது. கீழ்ப்பகுதி ஒரு பெரும்பாம்பு கீழ்த்திசையில் தனது பெரும்படத்தை அகல விரித்து இரு கூறாக உயர்ந்தும் ஒரு புறத்தில் பாம்பின் உடல் போலச் சிறுத்திருப்பது போலவும் காட்சியளிக்கின்றது. இம்மலை சிவப்பு மஞ்சள் கலந்த நிறமாகவும் தோன்றுகின்றது. காலை சூரியனின் எழில் கிரணங்கள் மலையின் மீது படும் போது இவ்வர்ணக்கலவை எழில் மிகு காட்சியாக கண்களுக்கு விருந்தளிப்பதை நேரில் பார்த்து ரசித்தோம்.
 
ஆலய ஐதீகம்
 
அதீசேடனும் வாயுவும் தங்கள் தங்கள் பலத்தைக் காட்ட நேர்ந்த சொற்போரில் இங்கு வந்து வீழ்ந்த ஆண் நாகச்சிகரமும்,காமதேனு பரமேஸ்வரன் அருள் பெற்று கொண்டு வந்த பெண் நாகச் சிகரமும் சிவனும் உமையும் போலக் கூடிப்பிரியாதிருக்கின்றன என்பது இங்கு ஒரு ஐதீகமாகும்.
 
நாககிரி பால் வண்ணமும் மற்றொரு பாகம் பச்சை வண்ணமுமாக ஓர் பாகம் விளங்குவது உமை சிவன் இவர்களின் நிறங்களைப் போல் பிரகாசிக்கின்றன என்பதும் மற்றோர் ஐதீகம் (திருச்செங்கோட்டு ஸ்தல புராணம்)
 
தெய்வ வடிவங்களின் அமைப்பு
 
இக்கோவிலின் அர்த்தநாரீஸ்வர வடிவம் மேற்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்திலும், முருகப் பெருமான் கிழக்கு முகமாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றது. இத்திருவுருவங்கள் கற்சிலையோ செம்பு வெண்கலம் பித்தளை போன்ற உலோகங்களோ அல்லாமல் மகத்தான யோகம் வாய்ந்த சித்தர் மூர்த்திகளால் ஆக்கப்பட்ட ஒரு வகை அமைப்பு என்று இக்கோயில் தலபுராணம் குறிப்பிடுகின்றது.
 
கல்வெட்டு
 
அர்த்தநாரீஸ்வரர் சிலை அருகில் மரகதலிங்கம் ஒரு பேழையுள் வைத்து பூஜிக்கப்படுகின்றது. மேற்கு திசை நோக்கிய திருமுகம் அமைக்கப்பட்டிருப்பதால் மகாமண்டபத்துக்கு மேற்கு வாயில் அமைக்கப்படவில்லை. மேற்கு மண்டபத்தின் கற்சுவற்றில் ஒன்பது துளைகளுள்ள சித்திரப் பலகணியொன்று செதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு வருவதற்கு தெற்குப் பகுதி வாயிலிலிருந்து உள்ளே வந்து இறைவனை தரிசிக்க வேண்டும். இப்பலகணியின் முன்னே விமானம், சபா மண்டபம், நந்தி மண்டபம், கொடிக் கம்பம் உயர்ந்த பலி பீடம், மேற்கு திருவாயில், திருக்கதவு முதலியன அமைக்கப்பட்டுள்ளன. இப்படி அடைப்புக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்களில் இந்த ஒன்பது துளைகளினுள்ளாகச் சென்று அர்த்தநாரீஸ்வரக் கடவுளின் திருப்பாதங்களைத் தொட்டு திருமுடியுங் கண்டு மறைகின்றது என்று தல புராணம் குறிப்பிடுகின்றது.
 
ஆலயத்தின் அடிவாரம்
 
ஆலயத்திற்கு மலைமேல் வாகனம் செல்ல சிறந்த சாலை அமைக்கப்படிருந்த போதிலும் பக்தர்கள் நடந்து செல்ல நினைத்தால் அவர்களின் பயணம் சிறப்பாக அமையும் வகையில் கைப்பிடிச் சுவர்களும் பாதைகளும் சீர்செய்யப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே அமர்ந்து இளைப்பாறிச் செல்ல சிறிய பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளன.
 
அடிவாரத்திலேயே கஜமுகப்பட்டி விநாயகர் ஆலயம் மலையின் முதற்படியைச் சார்ந்து ஒரு கிழுவை மரத்தின் நிழலில் அமைக்கப்பட்டிருக்கின்றார். விநாயகர் சிலையின் இரு புறங்களிலும் இரும்பினால் ஆன வேல்களும் நாகர் கற்சிலைகளும் இருக்கின்றன. இங்கிருந்துதான் மலை மீது செல்வதற்குக் கற்படிகள் தொடங்குவதால் இது கஜமுகப்படி என அழைக்கப்படுகின்றது.
 
இங்கிருந்து மலை மேல் உள்ள இராய கோபுரம் மண்டபம் வரை செல்ல 1206 படிகளை கடக்க வேண்டும். கடக்கும் வழியில் உள்ள மண்டபங்களை இனி காண்போம்.
 
1. காளத்தி சுவாமிகள் திருமடம் - அளவில் மிகப் பெரிய மண்டபம் இது. இங்கே பக்தர்கள் அருந்த தண்ணீர் தொட்டியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
 
2.திருமுடியார் மண்டபம் - திருமுடியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கட்டிய மண்டபம். இக்குலத்து ஆண்கள் திருமுடிக்கவுண்டர் என்றும் பெண்கள் திருமுடித்தாசிகள் என்றும் பெயர் வைத்துக் கொண்டு ஆலயத் திருப்பணி செய்வதும் திருச்செங்கோட்டு திருப்பணிமாலையில் குறிப்பிடப்படுகின்றது. (பக் 87) இம்மண்டபம் திருமுடித்தரசி சேனாபதி வேலாள் என்பவரால் கட்டப்பட்டது (திருச்செங்கோட்டு திருப்பணிமாலை -வெண்பா 341 )
 
3.தயிலி மண்டபம்- இம்மண்டம் தயிலி எனும் ஒரு அறச்செல்வியால் கட்டப்பட்டது (திருச்செங்கோட்டு திருப்பணிமாலை - செய்யுள் 432). இம்மண்டபத்தின் கிழக்குப் புறத்தில் ஒரு வீரபத்திரர் கோயில் உள்ளது. சற்று அருகாமையில் படுத்திருக்கும் ஒரு நந்தி உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கு இறைவனை தரிசிக்க வருவோர் அம்மாவாசை நாளில் நந்தியின் முகம், கொம்பு, திமிழ், முதுகு ஆகிய இடங்களில் வெண்ணெய் வைத்து வழிபடுகின்றனர். இந்த நந்தி மண்டபத்திலிருந்து 28 படிகளைக் கட்ந்து சென்றால் கற்பாறையின் மீது 60அடி நீளத்தில் பெரியதோர் உருவத்தில் ஐந்து தலை பாம்பு வடிக்கப்பட்டுள்ளது. பாம்பின் நடுவில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
 
 
4.செங்குந்த சின்ன முதலியார் மண்டபம் - இது திருவாளர் சின்ன முதலியார் என்பவரால் கட்டப்பட்டது. இம்மண்டபத்தில் யானைமுகப் பிள்ளயார் சிலையும் வீரம்மிக்க நவவீரர்கள் ஒன்பதினர் திருவுருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
 
5. சிங்கத்தூண் மண்டபம் - செங்குந்தர் மண்டபத்திலிருந்து 157 படிகளைக் கடந்து சென்றால் இந்த மண்டபத்தை அடையலாம். 
 
மிக அழகிய வேலைப்பாடுகள் அமைந்த சிற்பங்கள் இந்த மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இங்கிருந்து 62 படிகள் ஏறிச் சென்றால் அடுத்து வருவது அறுபதாம் படி. இவை சத்தியப் படிகள் என்றும் வழங்கப்படுகின்றன.மக்களில் பண கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏற்பட்டால் இங்கு வந்து இப்படிகளில் சத்தியம் செய்யும் வழக்கம் உள்ளது. இந்த 60 கற்படிகளையும் வெட்டுவித்தவர்கள் திருச்செங்கோடு மோழைக் கவுண்டன்பாளையம் காட்டு வேட்டுவர்கள். இந்த சத்தியச் செய்தியை இங்கு வருகை புரிந்த அருணகிரினாதர் திருப்புகழில் 
 
 
தத்த தாத்தத் தத்த தாத்தத்
தத்த தாத்தத் ...... தனதான


அத்த வேட்கைப் பற்றி நோக்கத்
தத்தை மார்க்குத் ...... தமராயன் 

பற்ற கூட்டத் திற்ப ராக்குற்
றச்சு தோட்பற் ...... றியவோடும் 

சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச்
சிக்கை நீக்கித் ...... திணிதாய 

சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச்
செச்சை சாத்தப் ...... பெறுவேனோ 

கொத்து நூற்றுப் பத்து நாட்டக்
கொற்ற வேத்துக் ...... கரசாய 

குக்கு டாத்தச் சர்ப்ப கோத்ரப்
பொற்ப வேற்கைக் ...... குமரேசா 

தத்வ நாற்பத் தெட்டு நாற்பத்
தெட்டு மேற்றுத் ...... திடமேவும் 

தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச்
சத்ய வாக்யப் ...... பெருமாளே.
 
எனக் குறிப்பிடுகின்றார்.
 
இச்சத்தியப்படிக்குக் கீழே சோழமன்னன் பரகேசரிவர்மன் ஒருவனின் 20ம் ஆட்சி ஆண்டில் ஒரு நந்தா விளக்கு வைக்க பொன் 
தானம் கொடுத்த செய்தி கல்வெட்டாக உள்ளது.
 
6. அறுபதாம்படி மண்டபம் - இது மோரூர் கொங்கு வேளாளர்களில் கண்ணகுலம் என்னும் ஒரு பிரிவினரால் கட்டப்பட்ட மண்டபம். பிற்காலத்தில் இவர்கள் இம்மணடபத்தைச் சாணார் (நாடார்) என்னும் சமூகத்தினருக்கு உரிமையாகும்படி விட்டுவிட்டதாக தலபுராணம் விவர்க்கின்றது. 
 
இம்மண்டபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் அமர்ந்த நிலையிருக்கும் முருகன் கற்சிலைகள் உள்ளன. இந்த மண்டபத்திலிருந்து மேலே சென்றால் 10ம் படியிலிருந்து 21ம் படிவரைக்கும் இடையிலுள்ள சதுரமான பாறை மீது வட்டெழுத்து கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றில் ஜடவர்ம சுந்தர பாண்டிய தேவர் பத்தாம் ஆண்டில் பூமிதானம் செய்யப்பட்ட செய்தி காணப்படுவதோடு செங்கோட்டு வேலவரை "சுப்பிரமயிப் பிள்ளையார்" என்றும் குறிப்பிட்டுள்ளது. இக்கல்வெட்டு சிதைந்த நிலையில் இருக்கின்றது.
 
7.செட்டிக்கவுண்டன் மண்டபம் - இம்மண்டபம் குமாரபாளையம் என்கின்ற மண்டபப்பாளையம்கொங்குவேளாளர் தூரகுலத்து மசவேலகவுண்டன் மனைவி வள்ளியம்மாள் என்பவர் கட்டத்தொடங்கினார். இப்பணி முற்றுப்பெறாத நிலையில் குமரமங்கலத்தைச் சார்ந்த சிவநேசர் குமரபூபதி செட்டிகவுண்டன் என்பவர் இம்மணடபத் திருப்பணியை நிறைவேற்றினார். (திருப்பணிமாலை 338ம் செய்யுள்). இதே சிவபக்தர் மலைமேலுள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் பகுதிகளிலும் சில திருப்பணிகளைச் செய்துள்ளார்.
 
8.தேவரடியாள் மண்டபம் -செட்டிக்கவுண்டன் மண்டபத்திலிருந்து 78 படிகள் ஏறிச் சென்றால் அடுத்து வருவது தேவரடியார் மண்டபம். இவர்கள் தம்மை உருத்திரக் கணிகையர் என்று கூறிக் கொள்கின்றனர் என்று தலபுராணம் விவரிக்கின்றது. இம்மண்டபத்தைக் கட்டிய கணிகையின் பெயர் குருவம்ம மாணிக்கம் என்பதாகும். இவர் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர். தரும சிந்தனையுடைய இக்கணிகையே இம்மண்டபத்தைக் கட்டினார். (திருப்பணிமாலை 345ம் செய்யுள்).  
 
9. இளைப்பாறு மண்டபம் - இது இதுவரை குறிப்பிடப்பட்ட 7 மண்டபங்களையும் விட பெரியது. இம்மண்டபத்தின் தெற்குப் பகுதியில் விநாயகருக்கு ஒரு சிறு ஆலயம் அமைந்துள்ளது.
 
10. கோபுரவாசல் மண்டபம் - இளைப்பாறு மண்டபத்திலிருந்து தொண்ணூற்றொன்பது படிகள் மேலே ஏறிச் சென்றால் இந்த மண்டபததை அடையலாம். இம்மண்டபம் கி.பி.1654ஆம் ஆண்டில் சீயால கட்டி முதலியாரால் திருப்பணி தொடங்கப்பட்டு சேலம், இராசிபுரம், விழியகுலத்தாரால் பூர்த்தி செய்யப்பட்டது. இம்மண்டபத்தின் மேற்குப் பகுதியில் பெரிய சிறிய இரண்டு விநாயகர் கற்சிலைகளை எழுந்தருளச் செய்திருக்கின்றனர். இம்மண்டபத்தில் மலைமேல் நிகழும் பூஜா காலங்களை அறிவிக்கும் ஓசை மிகுந்த வெங்கல சேகண்டி ஒன்றும் தொங்கவிடப்பட்டிருக்கின்றது.
 
 
இந்த 10 மண்டபங்களையும் கடந்து கோபுர வாசலைக் கடந்து கோயிலுக்குள் செல்லும் போது மிகப்பெரிய கலைநுணுக்கம் வாய்ந்த கோபுரக்கதவுகளைக் கடந்து கோயிலுக்குள் செல்லலாம்.
 
கோயில் அமைப்பில் மிகவும் வித்தியாசமான அமைப்பைக் கொண்ட கோயில் இது. சிறந்த கைதேர்ந்த சிற்ப வேலைப்பாடுகள் இக்கோயிலின் எல்லா பகுதிகளிலும் நிறைந்திருக்கின்றன.
 
 
இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இக்கோயில் தனித்துவத்துடன் விளங்குகின்றது என்பதை இங்கு வந்து செல்வோர் நிச்சயம் உணர முடியும்.
 
 
திருமதி.பவளசங்கரி, சுபா

 
டாக்டர். நா.கண்ணன், ஆரூரன்


உசாத்துணை:

  1. தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பன்பாட்டுச் சின்னங்களும், V.கந்தசாமி
  2. ஸ்தல புராணம் - ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் உற்சவர் திருச்செங்கோடு
அன்புடன்
சுபா

Innamburan Innamburan

unread,
Apr 14, 2012, 7:38:56 PM4/14/12
to mint...@googlegroups.com
இந்தமாதிரி எழுதிச் சித்தரிக்க, சித்தரித்து எழுத, நமக்கு எப்போது வரும்?
இன்னம்பூரான்

2012/4/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>
800.gif

Santhanam Swaminathan

unread,
Apr 15, 2012, 12:51:33 AM4/15/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
உங்கள் கட்டுரை படிப்பதற்கும் பார்ப்பதற்கும் சுவையாக இருக்கிறது. இப்படிப் படங்களுடன் கட்டுரைகள் வந்தால்  இறை நம்பிக்கை இல்லாதோரும் ,கோவில் என்றால் வேகமாகப் பக்கங்களைப் புரட்டுவோரும் கூட படிப்பார்கள். படங்களும் அருமை.கொடுத்த விஷயங்களும் அருமை.
 
Swami
020 8904 2879
07951 370 697



From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Cc: Subashini Tremmel <ksuba...@gmail.com>
Sent: Sunday, April 15, 2012 12:08 AM
Subject: [MinTamil] புத்தாண்டு சிறப்பு வெளியீடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


கி.காளைராசன்

unread,
Apr 15, 2012, 2:45:21 AM4/15/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
வணக்கம்.


இப்படிப் படங்களுடன் கட்டுரைகள் வந்தால்  இறை நம்பிக்கை இல்லாதோரும் ,கோவில் என்றால் வேகமாகப் பக்கங்களைப் புரட்டுவோரும் கூட படிப்பார்கள். படங்களும் அருமை.கொடுத்த விஷயங்களும் அருமை.
ஒருமுறை திருச்செங்கோடு சென்று வணங்கி வரவேண்டும்.

karuannam annam

unread,
Apr 15, 2012, 3:53:33 AM4/15/12
to mint...@googlegroups.com
On Sun, Apr 15, 2012 at 10:21 AM, Santhanam Swaminathan <swam...@yahoo.com> wrote:
உங்கள் கட்டுரை படிப்பதற்கும் பார்ப்பதற்கும் சுவையாக இருக்கிறது. இப்படிப் படங்களுடன் கட்டுரைகள் வந்தால்  இறை நம்பிக்கை இல்லாதோரும் ,கோவில் என்றால் வேகமாகப் பக்கங்களைப் புரட்டுவோரும் கூட படிப்பார்கள். படங்களும் அருமை.கொடுத்த விஷயங்களும் அருமை.
 
வழிமொழிகிறேன் அம்மா.
சொ.வினைதீர்த்தான் 

கவி.செங்குட்டுவன்

unread,
Apr 15, 2012, 4:09:47 AM4/15/12
to mint...@googlegroups.com
கட்டுரையும், படங்களும் வெகு அருமை, தொகுத்தளித்த தங்களுக்கும், பயண ஏற்பாடுகளைச் செய்திட்ட திருமதி பவளசங்கரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

2012/4/15 karuannam annam <karu...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்..........
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajend...@yahoo.co.in / kavi.sen...@gmail.com
வலைப்பூ : http://pumskottukarampatti.blogspot.com.
                     http://kaviyinkural.blogspot.com
                     http://mazalaiootru.blogspot.com
                     http://kaviugi.blogspot.com/
                     http://crcmittapalli.blogspot.com/




S.Krishnamoorthy

unread,
Apr 14, 2012, 11:15:31 PM4/14/12
to mint...@googlegroups.com
ஒரு கொசுறுச் செய்தி:
அன்று ராஜாஜிக்கும் காமராஜருக்கும் நடந்த பனிபோரில், காமராஜ் வென்றதை, முந்நாள் முதலமைச்சர் திரு சி.என். அண்ணாத்துரை அவர்கள்
“குன்றம் உயர்ந்தது கோடு தாழ்ந்தது” என்று குறிப்பிட்டார்.  குன்றம் - திருப்பரங்குன்றம் (காமராஜ்), கோடு - திருச்செங்கோடு (ராஜாஜி).

2012/4/15 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S. Krishnamoorthy

800.gif

seshadri sridharan

unread,
Apr 14, 2012, 10:19:01 PM4/14/12
to mint...@googlegroups.com
அம்மணி, 

அருமையான படப்பதிவுகள்.மிக்க நன்றி !

சேசாத்திரி

2012/4/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--

Innamburan Innamburan

unread,
Apr 15, 2012, 8:39:22 AM4/15/12
to mint...@googlegroups.com
தக்கதொரு கொசுறுச் செய்தி, திரு.கிருஷ்ணமூர்த்தி. 'அன்றொரு நாள்' இழைக்கு இந்த நிகழ்வையும் குறித்து வைத்திருந்தேன். அன்றைய காலெண்டர் தினம், நிகழ்வுகளுக்குள் பலத்த போட்டி. ஒன்று கவனித்தீர்களா? திரு சி.என். அண்ணாத்துரையின் சொல்லாட்சி அருமை. ஆனால் பொருளாழமில்லை.
நன்றி,
இன்னம்பூரான்

2012/4/14 S.Krishnamoorthy <sundara.kri...@gmail.com>
800.gif

Subashini Tremmel

unread,
Apr 15, 2012, 11:33:32 AM4/15/12
to மின்தமிழ், Subashini Tremmel
கருத்துக்கள் பதிந்த அனைவருக்கும் என் நன்றி. 
கோயில்கள் என்பவை ஒரு வழிபாட்டுத் தலம் என்பது மட்டுமல்லாமல் ஒரு கலைப்பொஷம் என்ற சிந்தனையை மக்கள் சிந்தனையில் கொண்டு வர ஆலயங்களைப் பற்றி அவற்றை அறிமுகப்படுத்தி பேச வேண்டியது அவசியமாகின்றது. அன்றாடம் செல்பவர்கள் கண்களில் இவ்வகை கோயில்களில் உருவாக்கப்பட்டுள்ள சிற்ப வினோதங்களோ, கோயிலின் பழமையோ, இக்கோயில் தொடர்பான வரலாற்று நிகழ்வுகளோ தெரிவதில்லை. தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற என்று மட்டும் செல்பவர்கள் தான் அதிகம். அவ்வகையானோர் கோயிலைப் பற்றியும் அதன் வரலாற்று சிறப்புக்கள் என்று மேலும் அறிந்து கொண்டு சென்று பார்க்கும் போது ஏற்படும் அனுபவமே தனி தான்.

என்னை இக்கோயிலுக்குச் சிரமாம் பாராமல் அழைத்துச் சென்ற ஆரூரனையும் அதற்கு ஏற்பாடு செய்த பவளாவிற்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன். 

இப்பதிவினை நமது வலைப்பக்கத்தில் இணைத்திருக்கின்றேன். இக்கோயிலின் சிற்பங்களின் படங்கள் நிறைய பதிவு செய்திருக்கின்றேன். வீடியோ ஒலிப்பதிவும் உள்ளது.அவற்றை தயார் செய்தவுடன் பகிர்ந்து கொள்கின்றேன். 

சுபா
2012/4/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

coral shree

unread,
Apr 15, 2012, 8:12:36 PM4/15/12
to mint...@googlegroups.com
அன்பின் சுபா,

வணக்கம். நன்றிகள் பல.

2012/4/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>

கருத்துக்கள் பதிந்த அனைவருக்கும் என் நன்றி. 
கோயில்கள் என்பவை ஒரு வழிபாட்டுத் தலம் என்பது மட்டுமல்லாமல் ஒரு கலைப்பொஷம் என்ற சிந்தனையை மக்கள் சிந்தனையில் கொண்டு வர ஆலயங்களைப் பற்றி அவற்றை அறிமுகப்படுத்தி பேச வேண்டியது அவசியமாகின்றது. அன்றாடம் செல்பவர்கள் கண்களில் இவ்வகை கோயில்களில் உருவாக்கப்பட்டுள்ள சிற்ப வினோதங்களோ, கோயிலின் பழமையோ, இக்கோயில் தொடர்பான வரலாற்று நிகழ்வுகளோ தெரிவதில்லை. தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற என்று மட்டும் செல்பவர்கள் தான் அதிகம். அவ்வகையானோர் கோயிலைப் பற்றியும் அதன் வரலாற்று சிறப்புக்கள் என்று மேலும் அறிந்து கொண்டு சென்று பார்க்கும் போது ஏற்படும் அனுபவமே தனி தான்.

உண்மைதான் சுபா. கோவிலுக்குள் சென்றவுடன், பக்தி என்ற ஒன்று மட்டும்தான் நம் மனங்களிலும், கண்களிலும் நிறைந்து விடுகிறது. சிற்பக்க்லை, அதன் தொன்மை சிறப்பு, என்பதெல்லாம் சிந்திக்கவே தோன்றுவதில்லை. ஏற்கனவே பலமுறை பல ஆண்டுகளாக தரிசித்துக் கொண்டிருக்கும், திருச்செங்கோட்டு அர்த்தநாரீசுவரர் அன்று, உங்களுடனும், திரு கண்ணன் அவர்களுடனும் வந்திருந்த போது மிக வித்தியாசமாக இருந்தது. உங்கள் இருவரின் அந்த ஆய்விலான நோக்கும், புகைப்படமும், காணொலியும் எடுக்கும் உற்சாகமும் , மிகப் புதுமையாக காட்சியளிக்கச் செய்தது அந்தக் கோவிலை.. மிக ஆச்சரியம்தான். ஆனால் உண்மையைச் சொன்னால் அந்த இடத்தில் பக்தி மறைந்து கலையழகு கண்ணை நிறைத்தது... நம் கோவில்களின் சிறப்பு அல்லவா இது.. 

“யாதொரு தெய்வங்கண்டீர் ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்” 

அன்புடன்

பவளா. 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Aruran Visu

unread,
Apr 15, 2012, 10:13:02 PM4/15/12
to mint...@googlegroups.com
மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

திருஞான சம்பந்தர் மக்களிடையே பரவியிருந்த சுரம் தனிய இங்கே வந்து பதிகம்
பாடி சுரம் தீர்த்ததாக வரலாறு. மலைக்கு கீழே நில மட்டத்தில் இருக்கும்
ஒரு பெரிய சிவாலயம் ”நிலத்தம்பிரான் கோவில்” இதுவும் பார்க்க வேண்டிய
ஒன்று. காலம் கருதி அன்று பார்க்கவில்லை. நிலத்து அமர்ந்தான் கோவில்,
நிலத்தம்பிரான் கோவில் என்று காலப்போக்கில் மாறிவிட்டதாக கூறுகின்றனர்.

மதுரையை எரித்த கண்ணகி இங்கிருந்துதான் வானுலகம் சென்றதாக ஒரு கதையும்
இங்கே உண்டு. ஒவ்வொரு ஆண்டும் கண்ணகிக்கு விழா நடத்துகின்றனர்
இவ்வூர்க்காரர்கள்.


கந்தர் அலங்காரம்

23. தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவனே மறவேன் உனை நான்
ஐவர்க்கு இடம் பெறக் கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு
கைவைத்த வீடு குலையும் முன்னே வந்து காத்தருளே.


நன்றி

அன்புடன்
ஆரூரன்

>>> *திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்*
>>>
>>> *கட்டுரையும் படங்களும்: **சுபாஷினி ட்ரெம்மல்*


>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>> நான் இந்த வருடம் (ஜனவரி 2012ல்) தமிழகம் சென்றிருந்த போது ஈரோட்டில் சில
>>> நாட்கள் இருந்ததைத் பற்றி வேறு சில பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்.
>>> ஈரோட்டில் எனது திட்டப்படி ஒரு சில இடங்களைச் சென்று பார்த்து வர வேண்டும்
>>> என்ற ஒரு பட்டியல் இருந்தது. ஈரோட்டில் இருந்த சமயம் திரு.திவாகருடன்
>>> தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது ஈரோட்டில் இருந்தால் நிச்சம்
>>> திருச்செங்கோடு கோவிலைச் சென்று பார்த்து வாருங்கள் என்று குறிப்பிட்டார்.
>>> திருமதி பவளா, திரு.ஆரூரன் இவர்கள் இருவருக்கும் இதனைத் தெரிவித்தபோது
>>> பயணத்தின் இறுதி நாள் காலையில் இக்கோவில் சென்று வரலாம் என்று ஏற்பாடு
>>> செய்தனர்.
>>>
>>>
>>>
>>>
>>>

>>> அடிப்படையில் எந்த ஏற்பாடும் செய்யாமலேயே இந்தக் கோவிலுக்குச் செல்வோம்
>>> என்பது முடிவானது. அதிலும் திரு.திவாகர் வேறு சொல்கின்றார். நிச்சயம்
>>> மனதிற்கு
>>> நிறைவளிக்கும் ஒரு பயணமாக இது அமையும் என்ற நம்பிக்கை மனதில் இருந்தது.
>>>
>>> இக்கோவில் மூலஸ்தானத்தில் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் அமைந்திருக்கின்றதெனவும்
>>> திருச்செங்கோட்டு முருகன் பிரசித்தி பெற்றவர் என்பதும் இத்தலம் தமிழகத்தின்
>>> முக்கிய ஸ்தலங்களின் பட்டியலில் இடம் பெரும் ஒன்று என்றும் கொஞ்சம்
>>> விபரங்கள்
>>> தெரிந்து கொண்டேன். காலை உணவு முடித்து என்னுடன் கண்ணன், ஆரூரன், பவளா
>>> நால்வரும் திருச்செங்கோடு புறப்பட்டோம்.
>>>
>>>
>>>

>>> *தெய்வங்கள்*


>>>
>>> இக்கோயிலின் ப்ரதான தெய்வம் அர்த்தநாரீஸ்வரர் வடிவம். கோவிலுக்குள் செல்லும்
>>> போது உடனே இப்பகுதிக்கு வர முடியாது. கோயிலின் வாசல் புறத்திலிருந்து சுற்றி
>>> வந்து முதலில் முருகன் சன்னிதியைப் பார்த்து கடந்து இந்த அர்த்தநாரீஸ்வரர்
>>> இருக்கின்ற கோவில் பகுதிக்கு வரலாம்.
>>>
>>> அர்த்தநாரீஸ்வரரைப் போல திருச்செங்கோட்டு வேலவனும் முக்கிய தெய்வமாக
>>> இக்கோயிலில் அமைந்திருக்கின்றார். முருகனுக்கு தனிச் சன்னிதி
>>> அமைக்கப்பட்டுள்ளது.
>>>
>>> அடுத்ததாக இக்கோவிலின் மற்றொரு முக்கிய
>>> தெய்வமாக நாகேஸ்வரர் அமைந்திருக்கின்றார். தனிச் சன்னிதியாக மற்ற ஆலயங்களில்
>>> இல்லாத புதுமையாக ஐந்தலை நாகங்கள் பின்னிப் பிணைந்தது போன்ற வடிவத்தில்
>>> அமைந்த
>>> ஒரு பகுதி உள்ளது.
>>>
>>>

>>> இதைத் தவிர சிவலிங்கம், நடராஜர், அம்மன், பிள்ளையார் சன்னிதிகளும் உள்ளன.
>>> ஒரு பகுதியில் 63 நாயன்மார்களின் சிலைகளும் வரிசையாக வைக்கப்பட்டு வழிபாடு
>>> செய்யபப்டுகிறது.
>>>

>>> *தல விருட்சம்*


>>>
>>> இக்கோவிலின் தல விருட்சம் இலுப்பை மரம். இம்மரம் கோவிலின் வடக்குப்
>>> பகுதியில் நடராஜர் சன்னிதிக்கும், சிவலிங்க சன்னிதிக்கும் இடையில்
>>> அமைந்துள்ளது.
>>>
>>>

>>> *சிற்பக்கலை*


>>>
>>> திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், தமிழக சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு
>>> சிறந்த உறைவிடமாகும். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது யாளிமீது
>>> உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார் 30 சிற்ப வேலைப்பாடு மிக்க ஒற்றைக்
>>> கற்றூண்கள்
>>> அமைக்கப்பட்டுள்ளன.
>>>
>>>

>>> செங்கோட்டு வேலவர் சந்திதி முன்னுள்ள மண்டபத்தில் வீரபத்திரர், மன்மதன்,
>>> ரதி, காளி முதலிய ஒற்றைக் கல்லிலாலான சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபத்தில்
>>> கூரைப்
>>> பகுதியில் கல்லிலானா தாமரை மலர்கள், மலை, கிளிகள், கற்சங்கிலிகள் பறவைகள்,
>>> முனிவர்கள் போன்ற சிற்ப விநோதங்கள் செய்யப்பட்டுள்ளன.
>>>
>>> நாகேஸ்வரரின் கருவறை சிற்ப வேலைப்பாடு மிக்கது. கருவறை முன்மண்டபத்தில்
>>> குதிரை அல்லது யாழி மீதுள்ள வீரர்களில் கற்றூண் சிற்பங்கள் உள்ளன.
>>> கூரைப்பகுதியில் கவிழ்ந்த தாமரை மலர் செதுக்கப்பட்டுள்ளது.
>>>
>>>

>>> எல்லா தூண்களையும் கவின்மிகு சிற்ப வடிவங்கள் அலங்கரிக்கின்றன. சுவாமி
>>> சன்னிதிகளின் சுவர்களில் மிக நுணுக்கமான கலைவேலைப்பாட்டுடன் வடிவமைக்கப்பட்ட
>>> சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. ஓரளவு சிற்ப வடிவங்கள் தாரமங்கலம் கோயில்
>>> அமைப்பை ஒத்ததாகவும் அமைந்திருக்கின்றது என்றே எனக்குத் தோன்றியது.
>>>
>>>

>>> செங்கோட்டு வேலவர் சன்னிதி முன்னுள்ள மண்டபத்தில் ஒரு தேர் போன்ற வடிவம்
>>> உள்ளது. அதன் கீழ் ஆமை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டு அந்தத் தேரினை ஆமை
>>> எடுத்துச் செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது வேறு கோவில்களில் நான்
>>> இதுவரை
>>> பார்த்திராத ஒரு வியக்க வைக்கும் கலைப்படைப்பு.
>>>
>>>

>>> *அர்த்தநாரீஸ்வரர்*


>>>
>>> கொங்கு நாட்டில் காவிரி நதியின் வடகரையில் அமைந்திருக்கும் இந்தச் சிவத்தலம்
>>> கொங்கேழ் சிவத்தலங்களில் ஒன்று என்று சிறப்பித்துக் கூறப்படுவது.
>>> இக்கோயிலின்
>>> சிறப்புக்கள் பலவற்றில் முதன்மையானதும் பக்தர்கள் வியக்கும் தனமையுடையதுமாக
>>> அமைந்திருப்பது இக்கோவிலின் மூலஸ்தான தெய்வமாக வீற்றிருக்கும்
>>> அர்த்தநாரீஸ்வரர் உருவம்.
>>>
>>> சிவனை மாதொருபாகன், மங்கைபங்கன் என்றும் அழைப்போம். அதனை இங்கே உருவமாகப்
>>> படைத்து வழிபாட்டிற்கு வைக்கப்பட்டிருப்பது இக்கோவிலின் சிறப்புக்குச்
>>> சிறப்பு
>>> சேர்ப்பதாக அமைந்துள்ளது.
>>>
>>> திருஞானசம்பந்தர் இறைவனை மாதொரு பாகன் என்று குறிப்பிட்டு பல பாடல்கள்
>>> பாடியுள்ளார். அது இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் தெய்வத்திற்கும்
>>> சிறப்பாகப் பொருந்துவதாக உள்ளது.
>>>
>>> வெந்தவெண்ணீறணிந்து விரிதூறிகழ் மார்மினல்ல
>>> கந்தணவும் விரளொரு பாகம் மமர்ந்தளு
>>> கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
>>> வந்தணனைத் தொழுவா ரவல மறுப்பரே
>>> -தேவாரம்
>>>
>>>

>>> *தலம், பெயர்க்காரணம்*


>>>
>>> திருச்செங்கோட்டு ஆலயம் ஒரு தெய்வத்தை மட்டும் சிறப்பிக்கும் நிலையில்லாது
>>> சிவஸ்தலம், செங்கோட்டு முருகனின் தலம், நாகதேவர் ஸ்தலம் என மூன்று வகையில்
>>> இக்கோயில் மக்களால் அறியப்படுகின்றது. மலைமேல் எழுந்தருளியிருக்கும்
>>> கோயில்கள்
>>> தமிழகத்தில் பல உள்ளன. அவற்றில் வித்தியாசமாக அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில்
>>> அம்மையும் அப்பனும் ஒருங்கே அமையப்பெற்ற மலைமேல் அமைக்கப்பட்ட ஒரு
>>> தெய்வீகத்தலமாக இதனைக் குறிப்பிடலாம்.
>>>

>>> *பிற பெயர்கள்*


>>>
>>> திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர ஆலயம் என்பது மட்டுமல்லாது இப்புண்ணியத்
>>> ஸ்தலத்திற்கு மேலும் பல பெயர்கள் அமைந்திருக்கின்றன.
>>>

>>> - கொடிமாடச் செங்குன்றம்
>>> - தெய்வத்திருமலை
>>> - நாககிரி
>>> - அரவாகிரி
>>> - உரகவெற்பு
>>> - கட்செவிக் குன்றூர்
>>> - பணிமலை
>>> - தந்தகிரி
>>> - நகபூதரம்
>>> - புசகபூதரம்
>>> - நாகாசலம்
>>> - நாகமலை
>>> - முருகாசலம்
>>> - தாருகாசலம்
>>> - திருவேரகம்


>>>
>>> என்ற பெயர்களும் வழங்கப்பெற்றுள்ளன என்று திருச்செங்கோட்டு ஸ்தல புராண நூல்
>>> கூறுகின்றது.
>>>
>>> திருச்செங்கோடு என்பதன் பொருளை அழகுமிக்க சிவந்த நிறம் வாய்ந்த குன்று என்று
>>> பொருள் காணலாம்.
>>>
>>> நாகதேவருக்கு இங்கு ப்ரத்தியேகமான சன்னிதானம் அமைந்திருப்பதால் நாகத்தின்
>>> பெயரை உள்ளடக்கிய வகையில் நாககிரி, அரவகிரி, உரகவெற்பு போன்ற பெயர்களும்
>>> இக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்று.
>>>
>>> இக்கோயில் அமைந்திருக்கும் மலை
>>>

>>> - கோதமலை
>>> - முத்தலை
>>> - கடகமலை
>>> - துர்க்கைமலை
>>> - முத்திமலை
>>> - வாயுமலை
>>> - பொறுதுமலை
>>> - வந்திமலை
>>> - அழகுமலை
>>> - தாருமலை
>>> - சூதமலை
>>> - தவமலை
>>> - அனந்தன்மலை
>>> - தங்கமலை
>>> - யோமலை
>>> - மேருமலை
>>> - கொங்குமலை
>>> - கத்தகிரி
>>> - ஞானகிரி
>>> - இரத்தகிரி
>>> - கோணகிரி
>>> - பிரம்மகிரி
>>> - தீர்த்தகிரி
>>> - தர்மகிரி
>>> - கந்தகிரி
>>> - பதுமகிரி
>>> - தேதுகிரி


>>>
>>> என்று தமிழ் இலக்கியங்களிலும் நூல்களிலும் குறிப்பிடப்படுகின்றது என்று
>>> திருச்செங்கோட்டு ஸ்தல புராண நூல் கூறுகின்றது.
>>>

>>> *மலையும் அதன் வடிவமுமும்*


>>>
>>> இம்மலையின் தோற்றம் குறிப்பாக மலையின் சிகரத்தின் தோற்றம் தூரத்திலிருந்து
>>> காண்பவர்களுக்குச் சிவலிங்கத்தின் அமைப்பைப் போன்று காட்சியளிக்கின்றது.
>>> கீழ்ப்பகுதி ஒரு பெரும்பாம்பு கீழ்த்திசையில் தனது பெரும்படத்தை அகல
>>> விரித்து
>>> இரு கூறாக உயர்ந்தும் ஒரு புறத்தில் பாம்பின் உடல் போலச் சிறுத்திருப்பது
>>> போலவும் காட்சியளிக்கின்றது. இம்மலை சிவப்பு மஞ்சள் கலந்த நிறமாகவும்
>>> தோன்றுகின்றது. காலை சூரியனின் எழில் கிரணங்கள் மலையின் மீது படும் போது
>>> இவ்வர்ணக்கலவை எழில் மிகு காட்சியாக கண்களுக்கு விருந்தளிப்பதை நேரில்
>>> பார்த்து ரசித்தோம்.
>>>

>>> *ஆலய ஐதீகம்*


>>>
>>> அதீசேடனும் வாயுவும் தங்கள் தங்கள் பலத்தைக் காட்ட நேர்ந்த சொற்போரில் இங்கு
>>> வந்து வீழ்ந்த ஆண் நாகச்சிகரமும்,காமதேனு பரமேஸ்வரன் அருள் பெற்று கொண்டு
>>> வந்த
>>> பெண் நாகச் சிகரமும் சிவனும் உமையும் போலக் கூடிப்பிரியாதிருக்கின்றன என்பது
>>> இங்கு ஒரு ஐதீகமாகும்.
>>>
>>> நாககிரி பால் வண்ணமும் மற்றொரு பாகம் பச்சை வண்ணமுமாக ஓர் பாகம் விளங்குவது
>>> உமை சிவன் இவர்களின் நிறங்களைப் போல் பிரகாசிக்கின்றன என்பதும் மற்றோர்
>>> ஐதீகம்
>>> (திருச்செங்கோட்டு ஸ்தல புராணம்)
>>>

>>> *தெய்வ வடிவங்களின் அமைப்பு*


>>>
>>> இக்கோவிலின் அர்த்தநாரீஸ்வர வடிவம் மேற்கு திசை நோக்கி நின்ற
>>> திருக்கோலத்திலும், முருகப் பெருமான் கிழக்கு முகமாகவும்
>>> அமைக்கப்பட்டிருக்கின்றது. இத்திருவுருவங்கள் கற்சிலையோ செம்பு வெண்கலம்
>>> பித்தளை போன்ற உலோகங்களோ அல்லாமல் மகத்தான யோகம் வாய்ந்த சித்தர்
>>> மூர்த்திகளால் ஆக்கப்பட்ட ஒரு வகை அமைப்பு என்று இக்கோயில் தலபுராணம்
>>> குறிப்பிடுகின்றது.
>>>

>>> கல்வெட்டு
>>>
>>> அர்த்தநாரீஸ்வரர் சிலை அருகில் மரகதலிங்கம் ஒரு பேழையுள் வைத்து
>>> பூஜிக்கப்படுகின்றது. மேற்கு திசை நோக்கிய திருமுகம் அமைக்கப்பட்டிருப்பதால்
>>> மகாமண்டபத்துக்கு மேற்கு வாயில் அமைக்கப்படவில்லை. மேற்கு மண்டபத்தின்
>>> கற்சுவற்றில் ஒன்பது துளைகளுள்ள சித்திரப் பலகணியொன்று செதுக்கப்பட்டுள்ளது.
>>> இப்பகுதிக்கு வருவதற்கு தெற்குப் பகுதி வாயிலிலிருந்து உள்ளே வந்து இறைவனை
>>> தரிசிக்க வேண்டும். இப்பலகணியின் முன்னே விமானம், சபா மண்டபம், நந்தி
>>> மண்டபம்,
>>> கொடிக் கம்பம் உயர்ந்த பலி பீடம், மேற்கு திருவாயில், திருக்கதவு முதலியன
>>> அமைக்கப்பட்டுள்ளன. இப்படி அடைப்புக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு
>>> ஆண்டும் மூன்று நாட்களில் இந்த ஒன்பது துளைகளினுள்ளாகச் சென்று
>>> அர்த்தநாரீஸ்வரக் கடவுளின் திருப்பாதங்களைத் தொட்டு திருமுடியுங் கண்டு
>>> மறைகின்றது என்று தல புராணம் குறிப்பிடுகின்றது.
>>>

>>> *ஆலயத்தின் அடிவாரம்*


>>>
>>> ஆலயத்திற்கு மலைமேல் வாகனம் செல்ல சிறந்த சாலை அமைக்கப்படிருந்த போதிலும்
>>> பக்தர்கள் நடந்து செல்ல நினைத்தால் அவர்களின் பயணம் சிறப்பாக அமையும்
>>> வகையில்
>>> கைப்பிடிச் சுவர்களும் பாதைகளும் சீர்செய்யப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன.
>>> ஆங்காங்கே அமர்ந்து இளைப்பாறிச் செல்ல சிறிய பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளன.
>>>
>>> அடிவாரத்திலேயே கஜமுகப்பட்டி விநாயகர் ஆலயம் மலையின் முதற்படியைச் சார்ந்து
>>> ஒரு கிழுவை மரத்தின் நிழலில் அமைக்கப்பட்டிருக்கின்றார். விநாயகர் சிலையின்
>>> இரு புறங்களிலும் இரும்பினால் ஆன வேல்களும் நாகர் கற்சிலைகளும் இருக்கின்றன.
>>> இங்கிருந்துதான் மலை மீது செல்வதற்குக் கற்படிகள் தொடங்குவதால் இது
>>> கஜமுகப்படி
>>> என அழைக்கப்படுகின்றது.
>>>
>>> இங்கிருந்து மலை மேல் உள்ள இராய கோபுரம் மண்டபம் வரை செல்ல 1206 படிகளை
>>> கடக்க வேண்டும். கடக்கும் வழியில் உள்ள மண்டபங்களை இனி காண்போம்.
>>>

>>> *1. காளத்தி சுவாமிகள் திருமடம்* - அளவில் மிகப் பெரிய மண்டபம் இது. இங்கே


>>> பக்தர்கள் அருந்த தண்ணீர் தொட்டியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
>>>

>>> *2.திருமுடியார் மண்டபம்* - திருமுடியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கட்டிய


>>> மண்டபம். இக்குலத்து ஆண்கள் திருமுடிக்கவுண்டர் என்றும் பெண்கள்
>>> திருமுடித்தாசிகள் என்றும் பெயர் வைத்துக் கொண்டு ஆலயத் திருப்பணி செய்வதும்
>>> திருச்செங்கோட்டு திருப்பணிமாலையில் குறிப்பிடப்படுகின்றது. (பக் 87)
>>> இம்மண்டபம் திருமுடித்தரசி சேனாபதி வேலாள் என்பவரால் கட்டப்பட்டது
>>> (திருச்செங்கோட்டு திருப்பணிமாலை -வெண்பா 341 )
>>>

>>> *3.தயிலி மண்டபம்*- இம்மண்டம் தயிலி எனும் ஒரு அறச்செல்வியால் கட்டப்பட்டது


>>> (திருச்செங்கோட்டு திருப்பணிமாலை - செய்யுள் 432). இம்மண்டபத்தின் கிழக்குப்
>>> புறத்தில் ஒரு வீரபத்திரர் கோயில் உள்ளது. சற்று அருகாமையில்
>>> படுத்திருக்கும்
>>> ஒரு நந்தி உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கு இறைவனை தரிசிக்க வருவோர்
>>> அம்மாவாசை நாளில் நந்தியின் முகம், கொம்பு, திமிழ், முதுகு ஆகிய இடங்களில்
>>> வெண்ணெய் வைத்து வழிபடுகின்றனர். இந்த நந்தி மண்டபத்திலிருந்து 28 படிகளைக்
>>> கட்ந்து சென்றால் கற்பாறையின் மீது 60அடி நீளத்தில் பெரியதோர் உருவத்தில்
>>> ஐந்து தலை பாம்பு வடிக்கப்பட்டுள்ளது. பாம்பின் நடுவில் சிவலிங்கம்
>>> அமைக்கப்பட்டுள்ளது.
>>>
>>>

>>> *4.செங்குந்த சின்ன முதலியார் மண்டபம்* - இது திருவாளர் சின்ன முதலியார்


>>> என்பவரால் கட்டப்பட்டது. இம்மண்டபத்தில் யானைமுகப் பிள்ளயார் சிலையும்
>>> வீரம்மிக்க நவவீரர்கள் ஒன்பதினர் திருவுருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
>>>

>>> *5. சிங்கத்தூண் மண்டபம்* - செங்குந்தர் மண்டபத்திலிருந்து 157 படிகளைக்

>>> *6. அறுபதாம்படி மண்டபம் *- இது மோரூர் கொங்கு வேளாளர்களில் கண்ணகுலம்


>>> என்னும் ஒரு பிரிவினரால் கட்டப்பட்ட மண்டபம். பிற்காலத்தில்
>>> இவர்கள் இம்மணடபத்தைச் சாணார் (நாடார்) என்னும் சமூகத்தினருக்கு
>>> உரிமையாகும்படி விட்டுவிட்டதாக தலபுராணம் விவர்க்கின்றது.
>>>
>>> இம்மண்டபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் அமர்ந்த
>>> நிலையிருக்கும் முருகன் கற்சிலைகள் உள்ளன. இந்த மண்டபத்திலிருந்து மேலே
>>> சென்றால் 10ம் படியிலிருந்து 21ம் படிவரைக்கும் இடையிலுள்ள சதுரமான பாறை
>>> மீது
>>> வட்டெழுத்து கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றில் ஜடவர்ம சுந்தர பாண்டிய தேவர்
>>> பத்தாம் ஆண்டில் பூமிதானம் செய்யப்பட்ட செய்தி காணப்படுவதோடு செங்கோட்டு
>>> வேலவரை "சுப்பிரமயிப் பிள்ளையார்" என்றும் குறிப்பிட்டுள்ளது. இக்கல்வெட்டு
>>> சிதைந்த நிலையில் இருக்கின்றது.
>>>

>>> *7.செட்டிக்கவுண்டன் மண்டபம் *- இம்மண்டபம் குமாரபாளையம் என்கின்ற


>>> மண்டபப்பாளையம்கொங்குவேளாளர் தூரகுலத்து மசவேலகவுண்டன் மனைவி வள்ளியம்மாள்
>>> என்பவர் கட்டத்தொடங்கினார். இப்பணி முற்றுப்பெறாத நிலையில் குமரமங்கலத்தைச்
>>> சார்ந்த சிவநேசர் குமரபூபதி செட்டிகவுண்டன் என்பவர் இம்மணடபத் திருப்பணியை
>>> நிறைவேற்றினார். (திருப்பணிமாலை 338ம் செய்யுள்). இதே சிவபக்தர் மலைமேலுள்ள
>>> அர்த்தநாரீஸ்வரர் கோயில் பகுதிகளிலும் சில திருப்பணிகளைச் செய்துள்ளார்.
>>>

>>> *8.தேவரடியாள் மண்டபம்* -செட்டிக்கவுண்டன் மண்டபத்திலிருந்து 78 படிகள்


>>> ஏறிச் சென்றால் அடுத்து வருவது தேவரடியார் மண்டபம். இவர்கள் தம்மை
>>> உருத்திரக்
>>> கணிகையர் என்று கூறிக் கொள்கின்றனர் என்று தலபுராணம் விவரிக்கின்றது.
>>> இம்மண்டபத்தைக் கட்டிய கணிகையின் பெயர் குருவம்ம மாணிக்கம் என்பதாகும். இவர்
>>> திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர். தரும சிந்தனையுடைய இக்கணிகையே
>>> இம்மண்டபத்தைக்
>>> கட்டினார். (திருப்பணிமாலை 345ம் செய்யுள்).
>>>

>>> *9. இளைப்பாறு மண்டபம் *- இது இதுவரை குறிப்பிடப்பட்ட 7 மண்டபங்களையும் விட


>>> பெரியது. இம்மண்டபத்தின் தெற்குப் பகுதியில் விநாயகருக்கு ஒரு சிறு ஆலயம்
>>> அமைந்துள்ளது.
>>>

>>> *10. கோபுரவாசல் மண்டபம் *- இளைப்பாறு மண்டபத்திலிருந்து தொண்ணூற்றொன்பது


>>> படிகள் மேலே ஏறிச் சென்றால் இந்த மண்டபததை அடையலாம். இம்மண்டபம்
>>> கி.பி.1654ஆம்
>>> ஆண்டில் சீயால கட்டி முதலியாரால் திருப்பணி தொடங்கப்பட்டு சேலம்,
>>> இராசிபுரம்,
>>> விழியகுலத்தாரால் பூர்த்தி செய்யப்பட்டது. இம்மண்டபத்தின் மேற்குப்
>>> பகுதியில்
>>> பெரிய சிறிய இரண்டு விநாயகர் கற்சிலைகளை எழுந்தருளச் செய்திருக்கின்றனர்.
>>> இம்மண்டபத்தில் மலைமேல் நிகழும் பூஜா காலங்களை அறிவிக்கும் ஓசை மிகுந்த
>>> வெங்கல
>>> சேகண்டி ஒன்றும் தொங்கவிடப்பட்டிருக்கின்றது.
>>>
>>>

>>> இந்த 10 மண்டபங்களையும் கடந்து கோபுர வாசலைக் கடந்து கோயிலுக்குள் செல்லும்
>>> போது மிகப்பெரிய கலைநுணுக்கம் வாய்ந்த கோபுரக்கதவுகளைக் கடந்து கோயிலுக்குள்
>>> செல்லலாம்.
>>>
>>> கோயில் அமைப்பில் மிகவும் வித்தியாசமான அமைப்பைக் கொண்ட கோயில் இது. சிறந்த
>>> கைதேர்ந்த சிற்ப வேலைப்பாடுகள் இக்கோயிலின் எல்லா பகுதிகளிலும்
>>> நிறைந்திருக்கின்றன.
>>>
>>>

>>> இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இக்கோயில் தனித்துவத்துடன் விளங்குகின்றது
>>> என்பதை இங்கு வந்து செல்வோர் நிச்சயம் உணர முடியும்.
>>>
>>>

>>> திருமதி.பவளசங்கரி, சுபா
>>>
>>>

>>> டாக்டர். நா.கண்ணன், ஆரூரன்
>>>
>>>

>>> *உசாத்துணை:*
>>>
>>>
>>> 1. தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பன்பாட்டுச் சின்னங்களும், V.கந்தசாமி
>>> 2. ஸ்தல புராணம் - ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் உற்சவர் திருச்செங்கோடு

kra narasiah

unread,
Apr 16, 2012, 7:17:50 AM4/16/12
to mint...@googlegroups.com

நீங்கள் பதிப்பித்துள்ள எல்லாமே சிறந்தவை; அதிலும் இது மிகச் சிறப்பாகவே உள்ளது!

அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் சொல்கிறார்:

  விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா
  மொழிக்குத்துணை முருகாவெனும் நாமங்கள் முன்புசெய்த  பழிக்குத்துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
 வழிக்குத்துணை வ டிவேலும் செங்கோடன் மயூரமுமே!

இதைத் தவிர திருப்புகழில் ஐந்து பாடல்கள் அவர் திருச்செங்கோடு குறித்துப் பாடியுள்ளார்.

அன்பாக வந்து உன்றாள் பணிந்து
     ஐம்பூத மொன்ற ...... நினையாமல் 

அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
     ளம்போரு கங்கள் ...... முலைதானும் 

கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
     கொண்டாடு கின்ற ...... குழலாரைக் 

கொண்டே நினைந்து மன்பேது மண்டி
     குன்றா மலைந்து ...... அலைவேனோ 

மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
     வம்பார் கடம்பை ...... யணிவோனே 

வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
     வம்பே தொலைந்த ...... வடிவேலா 

சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
     செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும் 


செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
     செங்கோ டமர்ந்த ...... பெருமாளே.
2
காலனிடத் ...... தணுகாதே 

காசினியிற் ...... பிறவாதே 

சீலஅகத் ...... தியஞான 

தேனமுதைத் ...... தருவாயே 

மாலயனுக் ...... கரியானே 

மாதவரைப் ...... பிரியானே 

நாலுமறைப் ...... பொருளானே 

நாககிரிப் ...... பெருமாளே.
3
கொடிய மறலியு மவனது கடகமு
     மடிய வொருதின மிருபதம் வழிபடு
          குதலை யடியவ னினதருள் கொடுபொரு ...... மமர்காண 

குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு
     மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ்
          கொடியு மகிலமும் வெளிபட இருதிசை ...... யிருநாலும் 

படியு நெடியன எழுபுண ரியுமுது
     திகிரி திகிரியும் வருகென வருதகு
          பவுரி வருமொரு மரகத துரகத ...... மிசையேறிப் 

பழய அடியவ ருடனிமை யவர்கண
     மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு
          பரவ வருமதி லருணையி லொருவிசை ...... வரவேணும் 

சடில தரவிட தரபணி தரதர
     பரசு தரசசி தரசுசி தரவித
          தமரு கமிருக தரவனி தரசிர ...... தரபாரத் 

தரணி தரதநு தரவெகு முககுல
     தடினி தரசிவ சுதகுண தரபணி
          சயில விதரண தருபுர சசிதரு ...... மயில்வாழ்வே 

நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ
     எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி
          நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ ...... நெடுவானும் 

நிலனும் வெருவர வருநிசி சரர்தள
     நிகில சகலமு மடியவொர் படைதொடு
          நிருப குருபர சுரபதி பரவிய ...... பெருமாளே.

4
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
     பட்சிந டத்திய ...... குகபூர்வ 

பச்சிம தட்சிண வுத்தர திக்குள
     பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ் 

சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
     ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ் 

செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
     சித்தவ நுக்ரக ...... மறவேனே 

கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
     கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல் 

கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
     கட்டிய ணைத்தப ...... னிருதோளா 

சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
     கப்பனு மெச்சிட ...... மறைநூலின் 

தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
     சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.
5
புற்புதமெ னாம அற்பநிலை யாத
     பொய்க்குடில்கு லாவு ...... மனையாளும் 

புத்திரரும் வீடு மித்திரரு மான
     புத்திசலி யாத ...... பெருவாழ்வு 

நிற்பதொரு கோடி கற்பமென மாய
     நிட்டையுடன் வாழு ...... மடியேன்யான் 

நித்தநின தாளில் வைத்ததொரு காதல்
     நிற்கும்வகை யோத ...... நினைவாயே 

சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத
     சக்ரகதை பாணி ...... மருகோனே 

தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற
     வைத்தவொரு காழி ...... மறையோனே 

கற்புவழு வாது வெற்படியின் மேவு
     கற்றைமற வாணர் ...... கொடிகோவே 

கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால
     கற்பதரு நாடர் ...... பெருமாளே.


(ந்ன்றி திரு கோபாலசுந்தரம்; கெள்மாரம்)

ச்ர்ப்பகிரி = திருச்ச்ங்கோடு

உங்கள் தொண்டு சிறந்தது. எல்ல ஸ்தலபுராணங்களையும் தொகுத்து [படஙக்ளுடன்] நூலாகப் பதிப்பித்தால் பலருக்கு உதவும். நீங்கள் அடுத்த முறை இந்தியா வருகையில் சில பதிப்பாளர்களைச் சந்தித்து இந்த முற்சியில் இறங்கலாம்.

நரசய்யா


--- On Sun, 4/15/12, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:

From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
Subject: [MinTamil] Re: புத்தாண்டு சிறப்பு வெளியீடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்
To: "மின்தமிழ்" <minT...@googlegroups.com>
Cc: "Subashini Tremmel" <ksuba...@gmail.com>

meena muthu

unread,
Apr 16, 2012, 8:00:36 AM4/16/12
to mint...@googlegroups.com
\\செங்கோட்டு வேலவர் சன்னிதி முன்னுள்ள மண்டபத்தில் ஒரு தேர் போன்ற வடிவம் உள்ளது. அதன் கீழ் ஆமை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டு அந்தத் தேரினை ஆமை எடுத்துச் செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது வேறு கோவில்களில் நான் இதுவரை பார்த்திராத ஒரு வியக்க வைக்கும் கலைப்படைப்பு. \\

சுபா..!
அதிசயமான கலைப்படைப்புகள் நிறைந்த புகைப்படங்களுடன்,
அவசியம் காணவேண்டும் என்ற ஆர்வத்தையும் உண்டாக்கும்
(பவளா எழுதுவது போன்ற )விரிவான அருமையான பதிவு! நன்றி.

2012/4/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>

N. Kannan

unread,
Apr 16, 2012, 8:20:30 AM4/16/12
to mint...@googlegroups.com
012/4/16 coral shree <cor...@gmail.com>

கண்ணன் அவர்களுடனும் வந்திருந்த போது மிக வித்தியாசமாக இருந்தது. உங்கள்
இருவரின் அந்த ஆய்விலான நோக்கும், புகைப்படமும், காணொலியும் எடுக்கும்
உற்சாகமும் , மிகப் புதுமையாக காட்சியளிக்கச் செய்தது அந்தக் கோவிலை..
மிக ஆச்சரியம்தான். ஆனால் உண்மையைச் சொன்னால் அந்த இடத்தில் பக்தி
மறைந்து கலையழகு கண்ணை நிறைத்தது... நம் கோவில்களின் சிறப்பு அல்லவா
இது..
>

அன்பின் பவளா

இக்கருத்தை முதன் முதல் குன்றக்குடி மடாதிபதியிடம் சொன்னேன்.

நேற்று இங்கு வேதாகம சபை கூட்டத்தில் பல சைவாச்சார்யர்களை சந்திக்கும்
வாய்ப்புக் கிடைத்தது. இந்துக் கோயில்களின் இருப்பே ஒரு தலைமுறையை நம்பி
இருக்கும் சூழலில் எவ்வகை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டால் தமிழ்க்
கோயில்களை நிலை நிறுத்தலாம் எனும் யோசனைகள் வழங்கினேன்!

கோயில்கள் பற்றிய ஒரு விரிவான அலசல் இங்கு தேவைப்படுகிறது!

நா.கண்ணன்

coral shree

unread,
Apr 16, 2012, 8:30:27 AM4/16/12
to mint...@googlegroups.com
உண்மைதான் சார். 

2012/4/16 N. Kannan <navan...@gmail.com>
தேவையான விசயம். நம் கோவில்களின், புராதன சக்தியும், மிக வித்தியாசமான அந்த கலையழகும், முதலில் நம்மவர்கள் ரசிக்கக் கற்றுக் கொண்டால்தான் அதன் பெருமை புரிய ஆரம்பித்து , பாதுகாக்கவும் தோன்றும். இல்லையென்றால் சந்திரா சொலவ்து போல கோவிலின் ஓவியங்களின் மீதும், சிலைகளின் மீதும் பல்வேறு வ்ண்ணங்களை அடித்து அதன் தொன்மையையே நாசமாக்கி விடுகிறார்கள். விரிவான அலசல் கட்டாயம் தேவைதான்....

அன்புடன்

பவளா. 
கோயில்கள் பற்றிய ஒரு விரிவான அலசல் இங்கு தேவைப்படுகிறது!

நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Apr 16, 2012, 8:44:36 AM4/16/12
to mint...@googlegroups.com
2012/4/16 Aruran Visu <visua...@gmail.com>:

> மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
>

ஆரூரான் நாம் படம் எடுத்த கதையையும் சொல்லிவிட வேண்டும் :-) ஆளாளுக்கு
கோயிலில் கார்வார் செய்வது, படமெடுத்தால் ஏதோ சிலையைத் திருடிக்கொண்டு
போவது போன்ற மிரட்டல்...ஈதெல்லாம் குறைய வேண்டும். அழகான சிலைகளை
கம்பிக்கிராதிக்குள் சிறை வைக்க வேண்டிய அவல நிலையில் 21ம் நூற்றாண்டுத்
தமிழனின் கலைப்புரிதல் உள்ளது! இத்தனை நூற்றாண்டுகளாக இக்கோயிற்சிலைகள்
வலை அடைப்பு இல்லாமல்தானே இன்று நம் கைக்கு வந்திருக்கிறது. ஒரு இந்து,
தன் கோயில் சிலையை உடைப்பான், எனவே கம்பிக்கிராதி போட வேண்டும் என்று
எண்ணுவதே எவ்வளவு கேவலமாக உள்ளது. இம்முறை என்னை மிகவும் பாதித்த விஷயம்
தமிழனிடம் அற்றுப் போன அழகியல் உணர்வு! இல்லையெனில் வாழும் இடத்தை
குப்பைக்காடாக்கி, கோழிகள் உணவு உண்பது போல் ரங்கநாதன் தெருவில்
குப்பைகளின் நடுவில் எவ்விதக் கூச்சமும் இன்று விலங்குகள் போல் சுகித்து
வாழ்வானா? எங்கே போனது தமிழ் அழகியல்? தமிழன் கவிதை பற்றிப் பேசாமல் வாயை
மூட வேண்டும் என்று சட்டம் போடுவேன்! (வாய்ப்புக் கிடைத்தால் :-)

நா.கண்ணன்

Tthamizth Tthenee

unread,
Apr 16, 2012, 8:56:19 AM4/16/12
to mint...@googlegroups.com
திருநெல்வேலியில் கிருஷ்ணாபுரம் என்னும் இடத்தில் வெங்கடேச பெருமான் ஆலயத்தில்   அருமையான சிற்பங்கள்  . புகைப்படம் எடுக்க நான் பட்ட அவதி அந்தப் பெருமானுக்கே தெரியும்

 

ஆனாலும் விடவில்லை மொத்தமும் புகைப்படமாக்கினேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/4/16 N. Kannan <navan...@gmail.com>
Message has been deleted
Message has been deleted

Innamburan Innamburan

unread,
Apr 16, 2012, 9:27:11 AM4/16/12
to mint...@googlegroups.com

நிழலதிபர்களே, நிழலதிபைகளே!

ஆலயம் செல்வது சாலவும் நன்று. திருமயிலையில் அருள்மிகு கற்பகாம்பாள் சமேத அருள்மிகு கபாலீஸ்வரர் வாசம் செய்து அருள் பாலிக்கும் ஆலயம் தனில், முதலில் ஒரு மணற்பரப்பு. அது ஒரு சமுதாயக்கூடம். கல்யாணம் பேசலாம்; வம்படிக்கலாம். வைரத்தோடும், காஞ்சிப்பட்டுமாக பள பளக்கலாம். ஆலயத்தின் பிரகாரங்கள் காதல் சுற்றுக்கு உகந்தவை என்பாரும் உண்டு. சிற்பங்களின் கலையழகைக் கண்டு களிப்படையலாம். பேரூர். கருவறையை அணுகும் முன்னரே, பக்தி அலைவரிசை தொடங்கும். மீனாக்ஷி. ஆனாலும், பக்தியுடன் ஆலயம் செல்வது அதிசாலவும் நன்று.

Nagarajan Vadivel

unread,
Apr 16, 2012, 9:31:34 AM4/16/12
to mint...@googlegroups.com
'இ’ ஐயா
இதென்ன புதுக் கண்டுபிடிப்பு
அரூவத்துக்கு நிழல் உண்டா?
நாகராசன்

2012/4/16 Innamburan Innamburan <innam...@gmail.com>

நிழலதிபர்களே, நிழலதிபைகளே!

ஆலயம் செல்வது சாலவும் நன்று. திருமயிலையில் அருள்மிகு கற்பகாம்பாள் சமேத அருள்மிகு கபாலீஸ்வரர் வாசம் செய்து அருள் பாலிக்கும் ஆலயம் தனில், முதலில் ஒரு மணற்பரப்பு. அது ஒரு சமுதாயக்கூடம். கல்யாணம் பேசலாம்; வம்படிக்கலாம். வைரத்தோடும், காஞ்சிப்பட்டுமாக பள பளக்கலாம். ஆலயத்தின் பிரகாரங்கள் காதல் சுற்றுக்கு உகந்தவை என்பாரும் உண்டு. சிற்பங்களின் கலையழகைக் கண்டு களிப்படையலாம். பேரூர். கருவறையை அணுகும் முன்னரே, பக்தி அலைவரிசை தொடங்கும். மீனாக்ஷி. ஆனாலும், பக்தியுடன் ஆலயம் செல்வது அதிசாலவும் நன்று.

இன்னம்பூரான்

--

Aruran Visu

unread,
Apr 16, 2012, 10:06:30 AM4/16/12
to mint...@googlegroups.com


உம்மைதானுங்ணா,  அதும் நாம போட்டா புடிக்கறதப் பாத்து, பலபேரு வெசனப்பட்டாலும் சிலபேரு வயிறெரிஞ்சதையும் சொல்லித்தானுங்களே ஆகோணும்.  சரி தென்ன செய்யறதுங்க..........ஆனாலும் பாருங்க, மாதொரு பாகனைப் புடிக்கமுடியலைன்னாலும், ரதிமதனை புடிச்சிபுட்டோமில்ல.....போட்டோ புடிச்சதென்னவோ நாமாருந்தாலும், போறவன் வாரவனெல்லாம் வெக்கப் பட்டதுதான் இன்னிக்கு வரைக்கும் புரியலைங்ணா!!!!!!!!!!!



2012/4/16 N. Kannan <navan...@gmail.com>

Aruran Visu

unread,
Apr 16, 2012, 10:16:00 AM4/16/12
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய எழுத்தாளர், பெருமாள் முருகன், திருச்செங்கோட்டு மலையையும், கடந்த நூற்றாண்டில் அங்குவாழ்ந்த மனிதர்களின் வாழ்வியல், மற்றும் சமூகச் சூழலோடு இயைந்த ஒரு கதையை “ மாதொரு பாகன்” என்ற பெயரில் எழுதியிருக்கிறார்.   கொங்கு வட்டாரவழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் என்னை மிகவும் பாதித்தது.

நண்பர் ஈரோடு கதிரின் மாதொருபாகன் நூல்  அறிமுகம்:

மாதொருபாகன்




2012/4/16 Aruran Visu <visua...@gmail.com>

N. Kannan

unread,
Apr 16, 2012, 6:36:07 PM4/16/12
to mint...@googlegroups.com
2012/4/16 Aruran Visu <visua...@gmail.com>:

> ரதிமதனை புடிச்சிபுட்டோமில்ல.....போட்டோ புடிச்சதென்னவோ நாமாருந்தாலும், போறவன்
> வாரவனெல்லாம் வெக்கப் பட்டதுதான் இன்னிக்கு வரைக்கும் புரியலைங்ணா!!!!!!!!!!!
>

உங்களோட பயணப்பட்ட பின் இப்போது வட்டார வழக்கை தமிழர்கள் விடக்கூடாது என்று சொல்லி வருகிறேன். திலகபாமாவோட இருந்தா மருதைபாச அப்படியே ஒட்டிக்கும் :-)

நம்ம கோயில். நம்ம சிலைகள். போட்டோ எடுக்கக்கூடாதுண்ணு எவனோ சட்டம் போடறான். எடுக்க வெட்கப்பட வச்சுடறானுங்க :-) சிங்கப்பூரில் எல்லாக் கோயில்களுக்குள்ளும் எல்லோரும் போய் வர அனுமதி. மாணவர்களுக்கு (மூன்று இனம்) ஆசிரியை இந்துக் கோயிலைப் பற்றி விளக்குவதை நானும், ழானும் பார்த்துக் கொண்டு இருந்தோம். பிறகு ஒரு பையனைப் பார்த்து அவரோடு தமிழ் பேசு, பதில் சொல்லுவார் என்றேன். அவன் தயக்கத்துடன் கேட்க இவர் தமிழில் பதில் சொல்ல ஒரே ஆச்சர்யம்! :-)

சில கோயில்கள் தவிர மற்ற கோயில்களில் உள்ளதை ஒழுங்காய் பராமரிப்பது இல்லை. ஆனால் கார்வாருக்குக் குறைச்சல் இருக்காது! ஆக்ஸ்போர்டுக்கு அருகிலுள்ள ஒரு மாளிகையில் உதரவிதானத்தில் ஒளியிழந்த கண்களுக்கு ஒளிபாய்ச்சி இருப்பதைப் பெரிய புரோஜெக்ட் என்று காட்டி பெருமை படுகிறார்கள்.

Inline image 1

சரியா! இப்போ நம்ம ஆண்டாள் கோயில் விதான ஓவியத்தைப் பாருங்கள்!

Inline image 2

கேள்வி: இந்தக் கோயில் நிர்வாகங்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு கார்வார் செய்கிறார்கள்?

எவ்வளவ் பெரிய பொக்கிஷத்தை இழந்து கொண்டிருக்கிறோம் எனும் பிரக்ஞைகூட இல்லாமல்!!

நா.கண்ணன்
srivilli.jpg
eyes.jpg

Tthamizth Tthenee

unread,
Apr 17, 2012, 6:46:22 AM4/17/12
to mint...@googlegroups.com
போட்டோ புடிச்சதென்னவோ நாமாருந்தாலும், போறவன் வாரவனெல்லாம் வெக்கப் பட்டதுதான் இன்னிக்கு வரைக்கும் புரியலைங்ணா!!!!!!!!!!!

 

 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/4/16 Aruran Visu <visua...@gmail.com>
35D.gif

Dhivakar

unread,
Apr 17, 2012, 7:03:49 AM4/17/12
to mint...@googlegroups.com
சுபா,
அருமையான கட்டுரை. தாமதமாக படிக்க நேர்ந்தாலும் அனுபவித்துப் படித்தேன். அர்த்த நாரீஸ்வரர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். என் வலைப்பதிவில் அவருடைய ரூபம்தான் சிம்பல். நமக்கு நிறைய சேதி தருகிறார். ஆணும் பெண்ணுமாய் காட்சி தந்து மனிதனின் ஆதித் தத்துவத்தை திருச்செங்கோட்டை விட்டால் வேறு எங்கு போய் கண்டு கொள்ள முடியும்?

இந்தப் பயணம் உங்கள் மனதுக்கு நிறைவு தந்தது என்பதில் எனக்கும் மகிழ்ச்சி.. இந்தக் கட்டுரையும் பலருக்கு இதமாக இருக்கும்.. 

அஹம் ஹிதம் புளகாங்கிதம்

அன்புடன்
திவாகர்



2012/4/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>
செங்கோட்டு வேலவர் சன்னிதி முன்னுள்ள மண்டபத்தில் ஒரு தேர் போன்ற வடிவம் உள்ளது. அதன் கீழ் ஆமை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டு அந்தத் தேரினை ஆமை எடுத்துச் செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது வேறு கோவில்களில் நான் இதுவரை பார்த்திராத ஒரு வியக்க வைக்கும் கலைப்படைப்பு.
 
 
3.தயிலி மண்டபம்- இம்மண்டம் தயிலி எனும் ஒரு அறச்செல்வியால் கட்டப்பட்டது (திருச்செங்கோட்டு திருப்பணிமாலை - செய்யுள் 432). இம்மண்டபத்தின் கிழக்குப் புறத்தில் ஒரு வீரபத்திரர் கோயில் உள்ளது. சற்று அருகாமையில் படுத்திருக்கும் ஒரு நந்தி உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கு இறைவனை தரிசிக்க வருவோர் அம்மாவாசை நாளில் நந்தியின் முகம், கொம்பு, திமிழ், முதுகு ஆகிய இடங்களில் வெண்ணெய் வைத்து வழிபடுகின்றனர். இந்த நந்தி மண்டபத்திலிருந்து 28 படிகளைக் கட்ந்து சென்றால் கற்பாறையின் மீது 60அடி நீளத்தில் பெரியதோர் உருவத்தில் ஐந்து தலை பாம்பு வடிக்கப்பட்டுள்ளது. பாம்பின் நடுவில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Raja sankar

unread,
Apr 17, 2012, 12:16:32 PM4/17/12
to mint...@googlegroups.com
அன்பின் சுபா,

சன்னிதானம் விட்டு வெளியே வந்தால் அருகிலே சித்தர் குகை என ஒரு சிறிய அறை இருக்குமே? பாத்தீர்களா? கொஞ்சம் முள்புதராக கூட இருந்திருக்கலாம்.

கடைசியாக போனது பள்ளியில் படிக்கும் போது. அப்போதெல்லாம் இவ்வளவு வசதிகள் செய்யப்படவில்லை. ஏறுவதே கடினம். ஏதேனும் தோஷம் இருந்தால் இங்கு போய் மொட்டையடித்துக்கொள்வது, நாகருக்கு மஞ்சள் போடுதல், விளக்கேற்றுதல் எனும் வேண்டுதல் செய்வது இங்கே வழக்கம். நானும் ஒரு முறை மொட்டையடித்துக்கொண்டிருக்கிறேன்.

ராஜசங்கர்
(Rajasankar)


2012/4/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>

seshadri sridharan

unread,
Apr 17, 2012, 6:11:16 AM4/17/12
to mint...@googlegroups.com

கண்ணைப் பறிக்கும் ஓவியங்கள்!! நன்றி!


சேசாத்திரி


2012/4/17 N. Kannan <navan...@gmail.com>

--
eyes.jpg
srivilli.jpg

DEV RAJ

unread,
Apr 17, 2012, 2:55:18 PM4/17/12
to மின்தமிழ்
On Apr 17, 3:11 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>>> கண்ணைப் பறிக்கும் ஓவியங்கள்!! நன்றி! <<<

சேச்சா ஐயா ,

பரகேசரி வர்மன் முதலாம் இராஜராஜன், மதுரை கொண்ட முதற் பரகேசரி வர்மன்,
சுந்தரபாண்டிய தேவன், சொக்கப்ப நாயக்கன், சொக்கலிங்க நாயக்கன்,
மைசூர் கிருஷ்ணராஜ உடையார் முதலான உமக்கு மிகவும் பிடித்தமான
மன்னர்கள்
கல்வெட்டுகள் சுமார் ஐம்பதை இங்கு அமைத்துள்ளனர்.
அவை கருத்தைக் கவருமா தெரியவில்லை:))

செங்கோடு ஆலயத்தில் ’பஞ்ச மஹா சப்தம்’ எனும் வாத்யகோஷம் முழங்கியதாகவும்
செப்பேடு கூறுகிறது


தேவ்

seshadri sridharan

unread,
Apr 17, 2012, 10:15:25 PM4/17/12
to mint...@googlegroups.com
கல்வெட்டுகள் பொதுவாக ஏதோ ஒரு செய்தியை தெரிவிப்பவை என்ற வகையில் கருத்தைக் கவர்கிறதோ இல்லையோ? பாதுகாக்கப்பட வேண்டியவை. பழம் பொருள்கள் எல்லாமே அவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டியவை. இதில் இருந்து மாறுபட்டவர் மதபித்து உடையவராகவே இருப்பர். நான் எந்த மதப்பித்தும் உடையன் அல்லன்.

சேசாத்திரி

2012/4/18 DEV RAJ <rde...@gmail.com>

Thiruvengada Mani T.K.

unread,
Apr 18, 2012, 9:51:13 PM4/18/12
to mint...@googlegroups.com
கட்டுரையை மிகத் தாமதமாகப் படிக்க நேர்ந்தது. என்ன ஒரு நேர்த்தியான கட்டுரை. அப்படியே திருச்செங்கோடு சென்று வழிபட்டு இறையருளைப் பெற்றது போன்ற ஒரு உணர்வு. இது சுபாவுக்கே இயல்பாக வந்த ஒரு கலை போலும்.
காசுச் செலவில்லாமல் .. கால் வலிக்க மலையேறாமல்... பேச்சுத் துணையும் தேடாமல்.. மின்தமிழன்பர்களைத்  திருச்செங்கோடு அழைத்துச் ்சென்று சிறப்பு வழிபாடும் காட்டியருளியமைக்கு அனைவர் சார்பிலும் எம் நன்றி உரித்தாகுக.
இப்படியெல்லாம் தமிழ் மரபுத் தொண்டாற்றுவோருக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் உரித்தாகுக.
தொண்டர்தம் பெருமையைச் சொல்வதும் பெரிதே
மணி

2012/4/18 seshadri sridharan <ssesh...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dr.T.K.Thiruvengada Mani

Subashini Tremmel

unread,
Apr 20, 2012, 9:44:25 AM4/20/12
to mint...@googlegroups.com
மிக்க நன்றி திரு.நரசய்யா. இந்தப் பாடல்களையும் வலைப்பக்கத்தில் இணைத்து வைக்கின்றேன். இன்று மாலை சிற்பங்களின் படங்களை தொகுத்து சிற்பக்கூடத்தை வெளியிட முயற்சிக்கின்றேன். அனைவரும் கண்டு மகிழலாம்.



2012/4/16 kra narasiah <nara...@yahoo.com>

நீங்கள் பதிப்பித்துள்ள எல்லாமே சிறந்தவை; அதிலும் இது மிகச் சிறப்பாகவே உள்ளது!

அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் சொல்கிறார்:

  ..
உங்கள் தொண்டு சிறந்தது. எல்ல ஸ்தலபுராணங்களையும் தொகுத்து [படஙக்ளுடன்] நூலாகப் பதிப்பித்தால் பலருக்கு உதவும். நீங்கள் அடுத்த முறை இந்தியா வருகையில் சில பதிப்பாளர்களைச் சந்தித்து இந்த முற்சியில் இறங்கலாம்.

என்னால் முடிந்த வரை செய்கின்றேன். இது எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று. உங்கள் உதவியுடன் பதிப்பிப்போம்.

சுபா
 
நரசய்யா


--- On Sun, 4/15/12, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:

Subashini Tremmel

unread,
Apr 20, 2012, 9:45:31 AM4/20/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
நன்றி ஆரூரன், பவளா.

சுபா

2012/4/16 Aruran Visu <visua...@gmail.com>

Subashini Tremmel

unread,
Apr 20, 2012, 9:46:34 AM4/20/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அன்பு மீனா,

இதுவரை பார்த்திராவிட்டால், நீங்கள் கட்டாயம் சென்ரு பார்த்து வரவேண்டிய ஒரு தலம் இது. அடுத்த முறை தமிழகம் செல்லும் போது பார்த்து வழிபட்டு வாருங்கள்.

சுபா

2012/4/16 meena muthu <ranga...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Apr 20, 2012, 9:49:03 AM4/20/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அன்பு ஆரூரன்,
மாதொரு பாகனை போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லையென்றாலும் நானும் பவளாவும் வெளியே சுற்றிக் கொண்டிருந்தபோது வாசலில் இருந்த கடையில் ஒரு புகைப்படத்தை வாங்கியிருக்கின்றேன். அதனை ஸ்கேன் செய்து பதிகின்றேன்.

சுபா

2012/4/16 Aruran Visu <visua...@gmail.com>



உம்மைதானுங்ணா,  அதும் நாம போட்டா புடிக்கறதப் பாத்து, பலபேரு வெசனப்பட்டாலும் சிலபேரு வயிறெரிஞ்சதையும் சொல்லித்தானுங்களே ஆகோணும்.  சரி தென்ன செய்யறதுங்க..........ஆனாலும் பாருங்க, மாதொரு பாகனைப் புடிக்கமுடியலைன்னாலும், ரதிமதனை புடிச்சிபுட்டோமில்ல.....போட்டோ புடிச்சதென்னவோ நாமாருந்தாலும், போறவன் வாரவனெல்லாம் வெக்கப் பட்டதுதான் இன்னிக்கு வரைக்கும் புரியலைங்ணா!!!!!!!!!!!


Subashini Tremmel

unread,
Apr 20, 2012, 9:55:16 AM4/20/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
ம்ம்ம்ம் விமர்சனத்தை வாசித்தேன். ஏற்கனவே இந்தக் கதையை வாசித்த ஞாபகம். ஆனால் இப்போது திருச்செங்கோட்டோடு சேர்ந்து வரும்போது வித்தியாசமக உள்ளது. 

இந்த இழையில் இல்லை.. நிச்சயம் வேரொறு இழையில் இதனைப் பற்றி உரையாடலாம்.

சுபா

2012/4/16 Aruran Visu <visua...@gmail.com>
மதிப்பிற்குரிய எழுத்தாளர், பெருமாள் முருகன், திருச்செங்கோட்டு மலையையும், கடந்த நூற்றாண்டில் அங்குவாழ்ந்த மனிதர்களின் வாழ்வியல், மற்றும் சமூகச் சூழலோடு இயைந்த ஒரு கதையை “ மாதொரு பாகன்” என்ற பெயரில் எழுதியிருக்கிறார்.   கொங்கு வட்டாரவழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் என்னை மிகவும் பாதித்தது.

Subashini Tremmel

unread,
Apr 20, 2012, 5:27:01 PM4/20/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
நண்பர்களே,

திருச்செங்கோடு ஆலய வளாகப் படங்கள் நமது வலைப்பகக்த்தில் இடம்பெறுகின்றன. 

கோயிலை வலம் வருவோமா....

கோபுரவாசல் மண்டப நுழை வாயில்




சுபா

rajam

unread,
Apr 20, 2012, 6:39:20 PM4/20/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
எவ்வளவு அழகான கோயில்! தூய்மையான இடம்! என்றாவது ஒருநாள் அங்கே போகக் கிடைக்கவேண்டும். படங்களுக்கும் கட்டுரைக்கும் மிக்க நன்றி, சுபா!
பி. கு: இதன் தொடர்பாக ஒரு கேள்வி. இந்தப் பிள்ளையார் இருக்காரே ... இவருடைய துதிக்கை சில இடங்களில் இடஞ்சுழியாக இருக்கு; சில இடங்களில் வலஞ்சுழியாக இருக்கு. அதன் விளக்கம் என்ன? 

Tthamizth Tthenee

unread,
Apr 20, 2012, 10:35:44 PM4/20/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
பல வருடங்களுக்கு முன்னர் நான் சென்றிருந்தேன் இந்த ஆலயத்துக்கு

 

இப்போது நிறைய  மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன
 
ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்க்கப் பார்க்க பரவசமாய் இருக்கிறது
 
சுபா அவர்களுக்கு நன்றி
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


2012/4/21 rajam <ra...@earthlink.net>

Subashini Tremmel

unread,
Apr 21, 2012, 7:17:46 AM4/21/12
to மின்தமிழ், Subashini Tremmel
ஆலயத்தின் உள்ளே நுழைந்தாயிற்றா.. சரி வாருங்கள்..

சிற்பக்கூடத்தைப் பார்ப்போம்..

Inline image 3


உள்ளே நுழைக - சிற்பக் கூடம் 1

அன்புடன்
சுபா

2012/4/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Kamala Devi

unread,
Apr 21, 2012, 10:03:50 AM4/21/12
to mint...@googlegroups.com
சுபாஷினி
மிகவும் அழகான மனதை சங்கல்பிக்கவைக்கும் சிற்பங்கள்.
கமலம்
http://www.kamalagaanam.blogspot.com

--- On Sat, 21/4/12, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:

கி.காளைராசன்

unread,
Apr 21, 2012, 5:47:28 PM4/21/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
வணக்கம்.

2012/4/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>

ஆலயத்தின் உள்ளே நுழைந்தாயிற்றா.. சரி வாருங்கள்..

சிற்பக்கூடத்தைப் பார்ப்போம்..
சிற்பக்கூடத்தில் உள்ள சிற்பங்கள் சிறியனவாக இருந்தாலும் அத்தனையும் மிகவும் நுணுக்கமானவையாக உள்ளன.  புராணக் கதையை மையக்கருத்தாகக் கொண்டுள்ளன என நினைக்கிறேன்.  படங்கள் அனைத்தும் அற்புதம்.
 
Inline image 3


ராம் ராம்

அன்பன்
கி.காளைராசன்

Subashini Tremmel

unread,
Apr 22, 2012, 5:04:52 AM4/22/12
to மின்தமிழ், Subashini Tremmel
இந்தச் சிற்பக்க் கூடத்தில் நான் இணைத்திருந்த  படங்களில் சில வித்தியாசமான வடிவங்களும் இணைந்திருக்கின்றன.. குறிப்பாக




Inline image 2

இந்தப் படத்தில் உள்ள சிலைகள்.. இதில் இரண்டு ஐரோப்பியர் வடிவத்தில் உள்ளதைக் காணலாம். நடுவில் உள்ள படத்தில் ஒரு பெண்ணுக்கு மாலையோ அல்லது அணிகலனோ வழங்குவது போன்ற படம்.. இது தெய்வ வடிவமாக இருக்க முடியாது என்றே நினைக்கின்றேன்... பெண் அமர்ந்திருக்கும் முறை.. கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கின்றார்.. அரசியாகவும் கூட இருக்கலாம்.. மூன்றாவது படம்.. கையில் குடையை(??) வைத்துக் கொண்டு நின்று பார்த்து சிரிப்பது போன்ற வடிவம்.. ஐரோப்பியர் ஒருவரின் வடிவம் என்றே நினைக்கின்றேன்.. உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே...

சுபா

2012/4/21 கி.காளைராசன் <kalair...@gmail.com>

Subashini Tremmel

unread,
Apr 22, 2012, 5:10:45 AM4/22/12
to மின்தமிழ், Subashini Tremmel
நண்பர்களே,

திருச்செங்கோட்டு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் சிற்பக் கலைக்கு ஒரு எடுத்துக் காட்டு என்று சொல்லியிருந்தேன் அல்லவா. இக்கோயிலின் சிற்பங்களைப் பதிவாக்கி மேலும் ஒரு சிற்பக் கூடம் தயாரித்திருக்கின்றேன்.

இதில் சிறப்பாக 
  1. இந்த ஆலயத்தை அலங்கரிக்கும் பற்பல யாழிகளும் அதில் பதிக்கப்பட்டிருக்கும் சிற்பங்களும்
  2. தூண்களில் வடிக்கபப்ட்டுள்ள பல பொதுவான சிற்பங்களும் மன்னர்கள் அவர் தேவியர் சிற்பங்களும் இடம் பெறுகின்றன.

சிற்பக்கூடம் 2 க்குச் செல்வோமா...?

Inline image 1


சுபா

2012/4/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

N. Kannan

unread,
Apr 22, 2012, 11:39:41 AM4/22/12
to mint...@googlegroups.com
2012/4/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>

>
> ஆலயத்தின் உள்ளே நுழைந்தாயிற்றா.. சரி வாருங்கள்..
>

நீங்கள் அங்கு எடுத்துக் கொண்டிருக்கும் போது நானும் ஆரூரானும் வேறு புறத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தோம். அப்போது இந்தத் தொப்பிக்காரன் அம்புட்டான்:

Inline image 1

இவன் நிச்சயம் தமிழனல்ல. அரபுக்காரனோ? ஆங்கிலேயனோ? கொரியனோ இல்லைச் சீனனோ! கீழேயுள்ள படத்தைக் காண்க:

Inline image 2

ஒரு கொரியாக்காரனின் அந்தக் காலத்தொப்பி!

கோயில் என்பதுதான் எத்துணை சுகம்! ஞானிக்கு கடவுள் உறையும் இடம். பூஜாரிக்கு வருமானம் தரும் இடம். பக்தனுக்கு நிம்மதி அளிக்கும் இடம். குழந்தைகளுக்கோ குதூகலிக்க ஓர் இடம். நிஜ யான பயமுறுத்தும், கல்யானை இதமளிக்கும்! தர்மபுரி கோயில்.

Inline image 3

Inline image 4

சிறைக்குள் யாழி. யாழி வாய் சிறைக்குள் கற்பந்து!


நா.கண்ணன்



 
Korean_Hat.jpg
boys-on-elephant.jpg
Korean.jpg
yazhiBall.jpg

கவி.செங்குட்டுவன்

unread,
Apr 22, 2012, 11:52:28 AM4/22/12
to mint...@googlegroups.com
ஆகா, என்ன துள்ளியமான படங்கள் தொழிற்முறைப் நிழற்படக் கலைஞர் கூட இவ்வளவு சிறப்பாக படம் பிடிக்க இயலுமா என்பது கேள்விக்குறியே? வாழ்த்துக்கள்.

2012/4/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்..........
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajend...@yahoo.co.in / kavi.sen...@gmail.com
வலைப்பூ : http://pumskottukarampatti.blogspot.com.
                     http://kaviyinkural.blogspot.com
                     http://mazalaiootru.blogspot.com
                     http://kaviugi.blogspot.com/
                     http://crcmittapalli.blogspot.com/




meena muthu

unread,
Apr 22, 2012, 11:59:24 AM4/22/12
to mint...@googlegroups.com
பரிவுடன் சுபா நம்மை உள்ளழைத்துச்செல்வது அழகு!


2012/4/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Apr 22, 2012, 12:08:24 PM4/22/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அம்மையார் சுபாஷினி அவர்களுக்கு வணக்கம்.

2012/4/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>
இந்தச் சிற்பக்க் கூடத்தில் நான் இணைத்திருந்த  படங்களில் சில வித்தியாசமான வடிவங்களும் இணைந்திருக்கின்றன.. குறிப்பாக

இந்தச் சிற்பங்களையும் கவனித்தேன்.  தாங்கள் இதுபற்றிக் கூறுவீர்கள் என எதிர்பார்த்தேன். 

Inline image 2

இந்தப் படத்தில் உள்ள சிலைகள்..
வலமிருந்து இடமாக.
1) அயல்நாட்டு வியாபாரி தனது வாளைக் கீழே தாழ்த்தி வணக்கத்தைத் தெரிவிக்கிறார்.
2) வியாபாரி அற்புதமான அரியவகை (நவரெத்தின?)மாலையை அரசியிடம் காண்பித்து விற்கிறார் (அல்லது) பரிசளிக்கிறார்.
3) அரசி அந்த மாலையை அணிந்து கொண்டு வீணை மீட்டிப் பாடுகிறாள்.
இது எனது கற்பனையே,
உண்மை வரலாற்றை ஊரார்களிடம் தான் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

Subashini Tremmel

unread,
Apr 22, 2012, 12:13:48 PM4/22/12
to கி.காளைராசன், mint...@googlegroups.com
இனிய நண்பர்களே,

திருச்செங்கொகோடு கோயில் படங்கள், சிற்பக்கூடத்தின் படங்கள் ... எனது கட்டுரை ஆகிய அனைத்தும் இப்போது தமிழ் மரபு அறக்கட்டளையின் ப்ரதான வலைப்பக்கத்தில் ஈரோடு தொகுப்பில் இடம்பெறுகின்றன. அவற்றை முழுமையாக இங்கிருந்து வாசித்து, பார்த்து மகிழலாம்.

நாளை மேலும் இரண்டு ப்டங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கின்றேன். அதுவரை இந்த மேல் குறிப்பிட்ட பகுதியை பார்த்து ஆலய தரிசனம் செய்து, சிற்பக்கூடம் சென்று கலைப்பயணமும் செய்து மனமகிழுங்கள் :-)

அன்புடன்
சுபா

2012/4/22 கி.காளைராசன் <kalair...@gmail.com>

rajam

unread,
Apr 22, 2012, 12:19:34 PM4/22/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
ஒவ்வொரு பதிவையும் பார்த்துப் படித்து மகிழ்கிறேன், சுபா! இந்தக் கோயிலின் தூண்களும் சிற்பங்களும் மிக மிக அருமையானவை. பள பள என்று இருக்கும் தூண்களும் சிற்பங்களும் அற்புதமானவை.
பிறகு தகுந்த நேரம் கிடைக்கும்போது என் மனதிற்குப் புலப்பட்ட கருத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
மிக்க நன்றியுடன்,
ராஜம் 

கி.காளைராசன்

unread,
Apr 22, 2012, 12:21:12 PM4/22/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அம்மையார் சுபாஷினி அவர்களுக்கு வணக்கம்.

2012/4/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

இதில் சிறப்பாக 
  1. இந்த ஆலயத்தை அலங்கரிக்கும் பற்பல யாழிகளும் அதில் பதிக்கப்பட்டிருக்கும் சிற்பங்களும்
இந்தக் கோயிலில் யாழிகள் மீது மனிதர்கள் அமர்ந்துள்ளனர்.
இதுபோன்ற சிற்பங்கள் வேறு கோயில்களில் உள்ளனவா?

யாழிகள் வாழ்ந்த காலகட்டத்தில் மனிதர்கள் வாழவில்லை என்பது எனது கருத்தாக இருந்து வந்தது,  இப்போது இந்தச் சிற்பங்களைப் பார்த்தவுடன் சற்று குழப்பமாக உள்ளது.
 
  1. தூண்களில் வடிக்கபப்ட்டுள்ள பல பொதுவான சிற்பங்களும் மன்னர்கள் அவர் தேவியர் சிற்பங்களும் இடம் பெறுகின்றன.
அடேங்கப்பா..... எத்தனை மனைவியர்!
இந்த மன்னர் எப்படி வீட்டையும் பார்த்துக் கொண்டு நாட்டையும் பார்த்துக் கொண்டார்?
 
இந்த அளவிற்கு ஆண்பெண் விகிதாச்சாரம் இருக்கும் அளவிற்குப் போர் நடந்திருக்க வேண்டும்.  அல்லது இந்த மன்னர் பெண்பித்தனாக இருந்திருக்க வேண்டும்?

சிற்பக்கூடம் 2 க்குச் செல்வோமா...?
சென்று பார்த்தேன்.  அனைத்துச் சிற்பங்களும் அவற்றின் படங்களும் அருமையாக உள்ளன.

கி.காளைராசன்

unread,
Apr 22, 2012, 12:26:26 PM4/22/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2012/4/22 N. Kannan <navan...@gmail.com>
2012/4/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>
>
> ஆலயத்தின் உள்ளே நுழைந்தாயிற்றா.. சரி வாருங்கள்..
>


Inline image 1

இவன் நிச்சயம் தமிழனல்ல. அரபுக்காரனோ? ஆங்கிலேயனோ? கொரியனோ இல்லைச் சீனனோ! கீழேயுள்ள படத்தைக் காண்க:
இந்தக் காலத்தில் இந்திய அறிஞர்கள் கொரியா சென்றுள்ளது போல், அந்தக் காலத்தில் கொரியர்கள் இந்தியா வந்திருக்க வேண்டும்.
இப்ப காலம் மாறிப்போச்சு,
 

Inline image 4

சிறைக்குள் யாழி. யாழி வாய் சிறைக்குள் கற்பந்து!
இந்தக் கல்லை யாழியின் வாயில் இருந்து எடுக்க முடியாது.   ஒருகல்லைக் குடைந்து யாழியின் வாய்க்குள் கற்பந்தை சிற்பி செய்துள்ளார்.
இதுபோன்ற சிற்பங்கள், காளையார் கோயில், பிரான்மலை ஆகிய கோயில்களில் இருந்தன. காளையார் கோயில் சிற்பத்தைச் சிதைத்துவிட்டனர்.  பிரான்மலையில் நல்லநிலையில் உள்ளது என்று நினைக்கிறேன்.

படங்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளன ஐயா,
வாழ்த்துகள்.
Korean.jpg
yazhiBall.jpg

rajam

unread,
Apr 22, 2012, 12:43:47 PM4/22/12
to மின்தமிழ், Subashini Tremmel, "கி.காளைராசன் krishnan"
யாழி வாயின் கல் உருண்டை பல கோயில்களில் உள்ளதுபோல! அது நம் சிற்பிகளின் அற்புதப் படைப்பு! மதுரை மீனாட்சி கோயிலில் உள்ள அந்த யாழிவாய் உருண்டைக் கல்லை எடுத்துவிட நான் எவ்வளவு முயன்றிருக்கிறேன்! 4~5 வயதில் ஒவ்வொரு நாளும் விடியலுக்குமுன் தாத்தாவின் கையைப் பிடித்துக்கொண்டு போய், கோயிலைச் சுற்றி வந்தபோது செய்த ஒரு முயற்சி இது -- தாத்தா என்னைத் தூக்கிப் பிடித்து வைத்துக்கொள்வார். நான் அந்தக் கல் உருண்டையை யாழியின் வாயிலிருந்து எடுத்துவிட முயல்வேன். முடியாதா. தாத்தா சொல்வார், "நாளைக்கு முடியும்" என்று. இப்படியே ஒவ்வொரு நாளும் "நாளைக்கு முடியும்" என்று கழியும். தூங்கப் போகும்போது ... நாளைக்கு அந்த யாழிக் கல்லை வெளியே எடுத்துவிடலாம் என்ற நினைவுடன்! முடிந்ததேயில்லை! 

Begin forwarded message:

From: கி.காளைராசன் <kalair...@gmail.com>
Date: April 22, 2012 9:26:26 AM PDT
Subject: Re: [MinTamil] Re: புத்தாண்டு சிறப்பு வெளியீடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்

வணக்கம் ஐயா,

2012/4/22 N. Kannan <navan...@gmail.com>
2012/4/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>
>
> ஆலயத்தின் உள்ளே நுழைந்தாயிற்றா.. சரி வாருங்கள்..
>




இவன் நிச்சயம் தமிழனல்ல. அரபுக்காரனோ? ஆங்கிலேயனோ? கொரியனோ இல்லைச் சீனனோ! கீழேயுள்ள படத்தைக் காண்க:
இந்தக் காலத்தில் இந்திய அறிஞர்கள் கொரியா சென்றுள்ளது போல், அந்தக் காலத்தில் கொரியர்கள் இந்தியா வந்திருக்க வேண்டும்.
இப்ப காலம் மாறிப்போச்சு,
 



சிறைக்குள் யாழி. யாழி வாய் சிறைக்குள் கற்பந்து!
இந்தக் கல்லை யாழியின் வாயில் இருந்து எடுக்க முடியாது.   ஒருகல்லைக் குடைந்து யாழியின் வாய்க்குள் கற்பந்தை சிற்பி செய்துள்ளார்.
இதுபோன்ற சிற்பங்கள், காளையார் கோயில், பிரான்மலை ஆகிய கோயில்களில் இருந்தன. காளையார் கோயில் சிற்பத்தைச் சிதைத்துவிட்டனர்.  பிரான்மலையில் நல்லநிலையில் உள்ளது என்று நினைக்கிறேன்.

படங்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளன ஐயா,
வாழ்த்துகள்.

அன்பன்
கி.காளைராசன்

Subashini Tremmel

unread,
Apr 22, 2012, 1:30:53 PM4/22/12
to மின்தமிழ், Subashini Tremmel


2012/4/22 கி.காளைராசன் <kalair...@gmail.com>

அம்மையார் சுபாஷினி அவர்களுக்கு வணக்கம்.

2012/4/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>
இந்தச் சிற்பக்க் கூடத்தில் நான் இணைத்திருந்த  படங்களில் சில வித்தியாசமான வடிவங்களும் இணைந்திருக்கின்றன.. குறிப்பாக

இந்தச் சிற்பங்களையும் கவனித்தேன்.  தாங்கள் இதுபற்றிக் கூறுவீர்கள் என எதிர்பார்த்தேன். 

Inline image 2

இந்தப் படத்தில் உள்ள சிலைகள்..
வலமிருந்து இடமாக.
1) அயல்நாட்டு வியாபாரி தனது வாளைக் கீழே தாழ்த்தி வணக்கத்தைத் தெரிவிக்கிறார்.

எனக்கு அது வாள் போலத் தெரியவில்லை. குடை போலத்தெரிகின்றது .

ஆனாலும் உங்கள் கற்பனையும் ஏற்றுக் கொள்ளும் விதமாகத்தான் உள்ளது. வரிசையான சிலைகளோடு ஒத்து வருகின்றது.

சுபா
2) வியாபாரி அற்புதமான அரியவகை (நவரெத்தின?)மாலையை அரசியிடம் காண்பித்து விற்கிறார் (அல்லது) பரிசளிக்கிறார்.
3) அரசி அந்த மாலையை அணிந்து கொண்டு வீணை மீட்டிப் பாடுகிறாள்.
இது எனது கற்பனையே,
உண்மை வரலாற்றை ஊரார்களிடம் தான் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

அன்பன்
கி.காளைராசன்

கி.காளைராசன்

unread,
Apr 22, 2012, 5:25:44 PM4/22/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
வணக்கம்.

சுபா
3) அரசி அந்த மாலையை அணிந்து கொண்டு வீணை மீட்டிப் பாடுகிறாள்.
வெண்கொற்றக்குடையும், சிம்மாசனமும், செங்கோலும் காட்டப் படாததால்
இப் பெண் அரசியன்று என்பது தெளிவு.

இவள் இசையில் புலமை பெற்றவளாக இருக்க வேண்டும்.

மாலையைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு பாடியிருக்க வேண்டும்.

கி.காளைராசன்

unread,
Apr 22, 2012, 5:29:21 PM4/22/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
வணக்கம்.

2012/4/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Inline image 2

இந்தப் படத்தில் உள்ள சிலைகள்..
வலமிருந்து இடமாக.
1) அயல்நாட்டு வியாபாரி தனது வாளைக் கீழே தாழ்த்தி வணக்கத்தைத் தெரிவிக்கிறார்.
எனக்கு அது வாள் போலத் தெரியவில்லை. குடை போலத்தெரிகின்றது .

முன்பு,
குடைகளை மடக்க முடியாது. விரித்த நிலையிலேயே குடைகள் இருக்கும்.
எனவே இது குடையல்ல என்றே நினைக்கிறேன்.

கி.காளைராசன்

unread,
Apr 22, 2012, 5:32:09 PM4/22/12
to rajam, மின்தமிழ், Subashini Tremmel
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அக்கா அவர்களுக்கு வணக்கம்.

2012/4/22 rajam <ra...@earthlink.net>

யாழி வாயின் கல் உருண்டை பல கோயில்களில் உள்ளதுபோல! அது நம் சிற்பிகளின் அற்புதப் படைப்பு! மதுரை மீனாட்சி கோயிலில் உள்ள அந்த யாழிவாய் உருண்டைக் கல்லை எடுத்துவிட நான் எவ்வளவு முயன்றிருக்கிறேன்!

தம்பியும் முயன்று பார்க்கிறேன்.
அந்த யாழி எந்த இடத்தில் உள்ளது?

rajam

unread,
Apr 22, 2012, 6:59:15 PM4/22/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel, "கி.காளைராசன் krishnan", coral shree, Tthamizth Tthenee, Dhivakar V
அன்பு வணக்கம், தம்பி.
அம்மையின் சந்நிதிக்குள் நுழையுமிடத்தில் ... இடப்புறம் கிளிமண்டபம் இருந்தது. வலப்புறம் அந்த யாளி, வாயில் கல் உருண்டையுடன். தம்பியின் பேரனை அங்கே கூட்டிச் செல்லவும். சிறு பிள்ளைகளுக்கு அது ஒரு பெரிய விந்தையான விளையாட்டு. இப்போதெல்லாம் கூட்டம் காரணமாக அனுமதிக்கிறார்களோ என்னவோ. அந்தச் சிறுபிள்ளைக் காலத்தில் "நாளைக்கு எப்படியும் செய்துவிடலாம்" என்ற நம்பிக்கையைத் தந்தவர்கள் அந்த யாளியும் என் தாத்தாவும்! பொல்லாத ஏமாற்று ஆசாமிகள்! :-) :-) :-) 
"யாளிவாய்க் கல்லுருண்டை/பந்து" என்ற தலைப்பில் இங்கேயுள்ள மி.த. எழுத்தாளர்கள் -- பவளஸ்ரீ, திவாகர், தேனீயார் -- இன்ன பிறர் ஒரு கதை எழுதலாம்! 


கி.காளைராசன்

unread,
Apr 22, 2012, 10:17:24 PM4/22/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel, coral shree, Tthamizth Tthenee, Dhivakar V
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அக்கா அவர்களுக்கு வணக்கம்.

2012/4/23 rajam <ra...@earthlink.net>


அம்மையின் சந்நிதிக்குள் நுழையுமிடத்தில் ... இடப்புறம் கிளிமண்டபம் இருந்தது. வலப்புறம் அந்த யாளி, வாயில் கல் உருண்டையுடன். தம்பியின் பேரனை அங்கே கூட்டிச் செல்லவும்.
பேரனையும் கூட்டிச் சென்று யாளியைக் கண்டு களிப்பூட்டிவிட்டு, அன்னையையும் அப்பனையும் வணங்கி வருகிறோம் அக்கா.

சிறு பிள்ளைகளுக்கு அது ஒரு பெரிய விந்தையான விளையாட்டு. இப்போதெல்லாம் கூட்டம் காரணமாக அனுமதிக்கிறார்களோ என்னவோ. அந்தச் சிறுபிள்ளைக் காலத்தில் "நாளைக்கு எப்படியும் செய்துவிடலாம்" என்ற நம்பிக்கையைத் தந்தவர்கள் அந்த யாளியும் என் தாத்தாவும்! பொல்லாத ஏமாற்று ஆசாமிகள்! :-) :-) :-) 
 உங்களுக்கும் உங்க தாத்தாவிற்கும் கொடுத்து வைத்துள்ளது.
எனக்கும் எனது பேரனுக்கும் கொடுத்து வைக்க வேண்டும்.

முடிந்தால் படமும் எடுத்துவிடுகிறேன்.

அன்புடன்
தம்பி
காளை

Subashini Tremmel

unread,
Apr 23, 2012, 3:50:15 AM4/23/12
to மின்தமிழ், Subashini Tremmel
நண்பர்களே,

கோயிலைப் பார்த்தோம். 
இறைவனை தரிசித்தோம். 
கோயில் வளாகம் முழுமையும் சுற்றி வந்தோம். 
கோயிலின் கவின் மிகு சிற்பங்களை ரசித்தோம். 

இவை அனைத்தையும் உருவாக்க ஏற்பட்ட செலவு, நேரம், உழைப்பு, சிந்தனை, ஈடுபாடு, கட்டுமானத் தொழில் திறமை, பக்தி.. இவற்றை யோசித்துப் பார்க்கும் போது பெரும் மலைப்பாகத் தானே உள்ளது. இதனைச் செய்ய எத்தனை நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் எடுத்திருக்கலாம் என்று நம்மை யோசிக்க வைக்கின்றதல்லவா..?


சிறப்பு மிக்க இந்தப் புனித ஸ்தலத்திற்குச் சென்று வரும் போது (இந்தக் கோயில் மட்டுமல்ல.. அனைத்து இடங்களுமே ) நாம் பக்தி செலுத்தி வருவதோடு முடிந்தால் ஏதாவது ஒரு வகையில் நம்மால் ஆன வகையில் நன்மை செய்து வரவேண்டும். அதை விட்டு இவ்வகை புனிதத் திருத்தலங்களில் குப்பைகளை.. உணவுப் பொட்டலங்களை தூக்கி வீசி அசிங்கப் படுத்தலாமா...

இங்கே பாருங்கள்.....


Inline image 1


கோயில் மதில் சுவறுக்குப் பின்னால் குவிந்து கிடக்கும் உணவுப் பொட்டலங்களின் மீதங்கள்.....

Inline image 2

எங்கே சென்றது நமது அழகுணர்ச்சி..? கோயிலைப் பராமரிப்பவர்களுக்கு ப்ரத்தியேகமான வகையில் உதவி செய்யாவிட்டாலும் கூட இவ்வகையில் உணவுப் பண்டங்களை வீசி மலையை அசிங்கப்படுத்தாமல் இருக்கலாம் அல்லவா.. 

நமது சமூகம் உணவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தூய்மைக்குக் கொடுக்க விரும்புவதில்லையா..?

இதனை கேட்டுக் கொண்டே தான் மலைத்துப் போய் நாங்கள் எங்கள் பயணம் முடிந்து திரும்பினோம்.

ஆலயங்களில் ப்ரசாதம் வழங்கப்பட்டதும் அதன் மீதத்தை.. இலைகளை.. காகித தட்டுக்களை.. ப்ளாஸ்டிக் பைகளை ஒரு குப்பைத் தொட்டியில் போடக் கூட நமக்கு நேரம் இல்லையா.. ?

இந்தப் போக்கு வேதனை அளிப்பது.. ! உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சுபா

2012/4/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>
இனிய நண்பர்களே,
tchec.jpg
tchec1.jpg

கி.காளைராசன்

unread,
Jun 1, 2012, 1:02:56 PM6/1/12
to mint...@googlegroups.com
வணக்கம்.

2012/4/23 Subashini Tremmel <ksuba...@gmail.com>


சிறப்பு மிக்க இந்தப் புனித ஸ்தலத்திற்குச் சென்று வரும் போது (இந்தக் கோயில் மட்டுமல்ல.. அனைத்து இடங்களுமே ) நாம் பக்தி செலுத்தி வருவதோடு முடிந்தால் ஏதாவது ஒரு வகையில் நம்மால் ஆன வகையில் நன்மை செய்து வரவேண்டும். அதை விட்டு இவ்வகை புனிதத் திருத்தலங்களில் குப்பைகளை..
உணவுப் பொட்டலங்களை தூக்கி வீசி அசிங்கப் படுத்தலாமா...
பிரசாதம் கொடுத்தார்கள். வாங்கியாச்சு, சாப்பிட்டாச்சு,
எச்சில் தொன்னையை என்ன செய்வது? எங்கே போடுவது?
எச்சில் கையை எப்படிக் கழுவுவது? எங்கே கழுவுவது?

எனக்கென்னமோ இதற்குப் பக்தர்களைக் குறைசொல்ல விருப்பமில்லை.
பிரசாதம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்வது போல்,
எச்சில் தொன்னைகளைப் போடுவதற்கும் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்திருந்தால் நிச்சயம் இவ்வளவு கூப்பை சேர்ந்திருக்க வாய்ப்பே இல்லை.

கோயில் நிருவாகமே இதற்குப் பொறுப்பு.

திருப்பூவணம் திருக்கோயிலைச் சுத்தம் செய்யும் பெண்ணிற்குத் தனியார் ஒருவர் ஊதியம் வழங்குகிறார்.
பிரதோச நாளன்று, பிரதோசக் கமிட்டியினர் சுத்தம் செய்கின்றனர்.
மற்றநாட்களில் தெய்வீகப்பேரவையினர் செய்கின்றனர்.
இதுபோன்ற ஆர்வலர்களைப் பணியில் கோயில் நிருவாகம் இணைத்துக் கொள்ள வேண்டும்.

பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம்.  ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளை வைத்து, குப்பைகளைத் தொட்டியில் போடுங்கள் என்று எழுதி வைத்தால்கூடப் போதும்.

Subashini Tremmel

unread,
Jun 11, 2012, 4:05:40 PM6/11/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/6/1 கி.காளைராசன் <kalair...@gmail.com>
நானும் இக்கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஆலய நிர்வாகம் நிச்சயம் யோசித்து தக்க வகையில் குப்பை தொட்டிகளை நிர்மானித்து வைக்க வேண்டுவது அவசியம். 

அதே வேளை பக்தர்களைக் குறை சொல்லாமல் இருக்க முடியவில்லை. இதுவே தங்கள் வீடு என்றால் இந்த மாதிரி குப்பைகளைக் கொட்டி வைக்க மனம் வருமா? சாப்பிட்ட இலையை தூக்கி வீசி விட்டுப் போகிறோமே என்ற வருத்தம் யாருக்கேனும் இருந்தால் உடன் ஆலய நிர்வாகத்திடம் சென்று முறையிட வேண்டும். ஒன்றுக்கு 10 பேர் இப்படி கேள்வி கேட்டால் அசையாத மனமும் அசையும் இல்லையா..? ஏன் இந்தப் பொறுப்பு பக்தர்களுக்கு வருவதில்லை? யோசிக்க வேண்டிய கேள்வி தானே!

சுபா


அன்பன்
கி.காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
Jun 12, 2012, 12:20:40 AM6/12/12
to mint...@googlegroups.com
பல வீடுகளும் குப்பைத் தொட்டியை விட மோசமாகவே இருக்கின்றன.  அமர்வதற்குக் கூட ஒரு நாற்காலி இருக்காது. அதிலே, உணவு உண்ணும் மேஜை என எல்லா இடங்களிலும் வேண்டாத சாமான்கள் ஆக்கிரமித்திருக்கும். பலரும் ஜன்னல் கதவு என்பது திறப்பதற்கு எனவும் நினைப்பதில்லை. குளியலறை, கழிவறை தினசரி சுத்தம் செய்வதும் இல்லை. :(((

சில பிரபலமான கோயில்களில் எழுதியே வைத்திருக்கின்றனர்.  உணவு உண்ட குப்பையைச் சரியான இடத்தில் போடும்படியும், கை கழுவ நீர் தனியாக இருப்பதாகவும், குடிநீரில் கை கழுவி வீணாக்கவேண்டாம் எனவும் எழுதி வைத்தும் மக்கள் மாறுவதில்லை.

2012/6/12 Subashini Tremmel <ksuba...@gmail.com>





நானும் இக்கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஆலய நிர்வாகம் நிச்சயம் யோசித்து தக்க வகையில் குப்பை தொட்டிகளை நிர்மானித்து வைக்க வேண்டுவது அவசியம். 

அதே வேளை பக்தர்களைக் குறை சொல்லாமல் இருக்க முடியவில்லை. இதுவே தங்கள் வீடு என்றால் இந்த மாதிரி குப்பைகளைக் கொட்டி வைக்க மனம் வருமா? சாப்பிட்ட இலையை தூக்கி வீசி விட்டுப் போகிறோமே என்ற வருத்தம் யாருக்கேனும் இருந்தால் உடன் ஆலய நிர்வாகத்திடம் சென்று முறையிட வேண்டும். ஒன்றுக்கு 10 பேர் இப்படி கேள்வி கேட்டால் அசையாத மனமும் அசையும் இல்லையா..? ஏன் இந்தப் பொறுப்பு பக்தர்களுக்கு வருவதில்லை? யோசிக்க வேண்டிய கேள்வி தானே!

சுபா


Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Subashini Tremmel

unread,
Jun 12, 2012, 1:23:33 PM6/12/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
நீங்கள் சொல்வது புரிகிறது கீதா. இந்தப் போக்கிற்கு வருமையும் காரணம் அல்ல. 

ஏன் சொல்கின்றேன் என்றால் மலேசிய சூழலில் மிகவும் வருமையில் இருக்கும் மலாய் இனத்தோரின் மரப்பலகை வீடுகளுக்குச் சென்று பார்த்தால் கூட அங்கே மக்கள் எவ்வளவு தூய்மையாக எளிமையான அந்தச் சிறு வீட்டிற்குள்ளும் தங்கள் பொருட்களை வைத்திருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். பள்ளிக் காலத்தில் என்னோடு படித்த ஆதிவாசி மக்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்குச் சென்ற ஞாபகம்.  அங்கும் கூட தரையில் அமர்ந்து சாப்பிடும் நிலை என்றாலும் அந்த சிறிய வரவேற்பறை தூய்மையாக காட்யளித்ததை இன்னும் ஞாபகத்தில் உள்ளது. அடிப்படையில் தூய்மை பற்றிய ப்ரக்ஞை எல்லா ரீதியிலும் இல்லை என்பதன் வெளிப்பாடு தான் இது.

சுபா


2012/6/12 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
Reply all
Reply to author
Forward
0 new messages