சங்கத்தமிழ் நாள்காட்டி:சங்க இலக்கியப்பாடல்கள் — விளக்கங்கள் ஓவியங்களுடன்

172 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 31, 2025, 7:53:14 PMAug 31
to மின்தமிழ்

Screenshot 2025-09-01.jpg

ஆநிரைகளோடு வரும் யானைக் கன்றுகள்

நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
வேனில் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்
நிலம்செல, செல்லாக் கயந்தலைக் குழவி
சேரிஅம் பெண்டிர் நெஞ்சத்து எறிய
ஊர் ஆன்கன்றொடு புகுதும்! (நற். 171:1-5)
        பெயர் அறியப்படாத புலவர்

பொருள்:
நீர் வேட்கை கொண்ட யானைகள்,
வெயில் காலத்தில் மலையடிவாரத்தை நோக்கி  
நெடுந்தொலைவு செல்லும். அவற்றோடு செல்ல முடியாத
மெல்லிய தலையையுடைய யானைக்கன்றுகள், நின்று விடும்.
அவை, பசுவின் கன்றுகளோடு சேர்ந்து ஊருக்குள் புகும்.
இதனைக் கண்டு, சேரியில் வாழும் அழகிய பெண்கள் அஞ்சுவர்.

The elephant herd that grieves of acute thirst,
Walks into the foothills seeking water,
While its soft-headed calves
Enter a hamlet along with the calves of the cows,
To the fright of the village women.

தேமொழி

unread,
Sep 1, 2025, 11:42:53 PMSep 1
to மின்தமிழ்
Screenshot 2025-09-02.jpg

என் உடன்பிறந்தவள் இந்தப் புன்னை

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம்! துறந்த காழ் முளை அகைய,
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப,
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும், என்று
அன்னை கூறினள், புன்னையது நலனே!
அம்ம, நாணுதும் நும்மொடு நகையே! (நற். 172:1-6)

        பெயர் அறியப்படாத புலவர்

பொருள்:
நண்பர்களுடன் விளையாடிய போது, நாங்கள் மணலில் அழுத்தி
வைத்த புன்னை விதை முளைத்து வந்தது. அதற்கு
நெய்யும் பாலும் ஊற்றி வளர்த்தோம். அது எங்களால்
வளர்க்கப்பட்டதால் 'உங்கள் தங்கை போல் ஆகும்' என்று
தாய் கூறினார். தங்கை போன்ற இந்தப் புன்னை மரத்தின்
நிழலில் உன்னுடன் நகைத்து மகிழ்வதற்குத் தலைவி வெட்கப்படுகிறாள்.

While playing, we pressed a mature punnai seed
Into the white sand and forgot all about it.
The seed sprouted forth and we nourished it into a tree.
Our mother said, "This tree is your younger sister";
And so, she (Heroine) feels shy to laugh and play with you
Under this tree.

தேமொழி

unread,
Sep 2, 2025, 9:01:37 PMSep 2
to மின்தமிழ்
Screenshot 2025-09-03.jpg
மடல் ஏறுதல்

சிறுமணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ,
குறுமுகிழ் எருக்கங் கண்ணி சூடி,
உண்ணா நல்மாப் பண்ணி, எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்! (நற். 220:1-4)
        குண்டுகட் பாலியாதனார்

பொருள்:
பனை மடலால் குதிரை செய்து, அதற்கு மேலாடை அணிவித்து,
சிறிய மணிகளைக் கழுத்தில் கட்டினார்கள். அதன்மேல்
எருக்கம்பூ மாலையைச் சூடிய தலைவன்,
உணவு உண்ணாத அக்குதிரையின் மேல் ஏறி உட்கார்ந்தான்.
அக்குதிரையைச் சிறுவர்கள், தெருவில் இழுத்துக்கொண்டு வருகின்றனர்.

I am now mounted on a horse
Wrought of palmyra stems, and decked with a wreath
Of small bells and a piece of cloth.
I am wearing a garland of the tiny blooms of the erukkam.
The young boys follow me through the streets.

தேமொழி

unread,
Sep 3, 2025, 9:34:42 PMSep 3
to மின்தமிழ்
Screenshot 2025-09-04.jpg

என்ன வியப்பு!

ஓங்கு மலை நாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின் உள்நோய் மல்கும்!
புல்லின் மாய்வது எவன்கொல்? அன்னாய்! (குறுந். 150:3-5)
          மாடலூர் கிழார்

பொருள்:
தோழியே! மலைநாட்டைச் சேர்ந்த தலைவனின் சந்தனம் பூசிய
மார்பினை நினைத்தால், காதல் நோய் பெருகுகிறது.
அம்மார்பை அணைத்தால், அந்நோய் தீருகிறது. என்ன வியப்பு!

If I think of the sandal painted chest
Of my Lord of the rising hills, my love sickness grows;
On embracing that chest it vanishes; What sorcery is this?

தேமொழி

unread,
Sep 4, 2025, 8:30:24 PMSep 4
to மின்தமிழ்
Screenshot 2025-09-05.jpg
அவனோடு இருப்பதே இன்பம்

தண்கடல் படுதிரை பெயர்த்தலின், வெண்பறை
நாரை, நிரை பெயர்ந்து அயிரை ஆரும்,
ஊரோ நன்றுமன், மரந்தை
ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே! (குறுந். 166)
                கூடலூர் கிழார்

பொருள்:
மரந்தை என்னும் ஊருக்கு அருகில்,
குளிர்ந்த கடலில் உண்டான அலைகள் மீன்களை நகர்த்தின.
அயிரைமீன்களுக்காக அங்குத் திரிந்துகொண்டிருந்த
நாரைகள், மீன்கள் நகரும் திசையை நோக்கி நகர்ந்தன. அதைப் போல்,
தலைவனுடன் சென்று அவனுடன் இருப்பதே இன்பம் தருகிறது.
அவனைப் பிரிந்து இருப்பது மிகவும் வருந்தச் செய்கிறது.

As cool waves of the sea displace fish in backwaters
Flocks of stork too move where the fish moved;
Such pleasant town is Marandhai when I'm with him,
But when I'm alone it causes me anguish.

தேமொழி

unread,
Sep 6, 2025, 12:13:30 AMSep 6
to மின்தமிழ்
Screenshot 2025-09-06.jpg

இனிது! இனிது!

தான் துழந்து அட்ட தீம் புளிப்பாகர்,
இனிது எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒள்நுதல் முகனே!
(குறுந். 167:4-6)

        கூடலூர் கிழார்

பொருள்:
தலைவி தான் செய்த இனிய புளிக் குழம்பைத் தலைவனுக்குப் பரிமாறினாள்.
அதனை மிக இனிது என்று சொல்லி அவன் உண்டான். அதனால் அவளது
ஒளி பொருந்திய நெற்றியைக் கொண்ட முகத்தில் மென்மையான மகிழ்ச்சி தோன்றியது.

As her husband appreciated and ate
The sweet and sour gravy cooked by her,
Her bright face lit up demurely!

தேமொழி

unread,
Sep 6, 2025, 7:46:06 PMSep 6
to மின்தமிழ்
Screenshot 2025-09-07.jpg

பிரிந்தால் உயிர் வாழ்வது உறுதியில்லை

புனல் புணை அன்ன சாய் இறைப் பணைத் தோள்
மணத்தலும் தணத்தலும் இலமே!
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே! (குறுந். 168:5-7)
        சிறைக்குடி ஆந்தையார்

பொருள்:
புனல் விளையாட்டில் பயன்படும் தெப்பத்து வளைந்த மூங்கில் போன்ற
தோளைக்கொண்ட தலைவியைச்  சேர்ந்தால் பிரிய இயலாது;
பிரிந்தால் உயிருடன் வாழ்வது அதைவிடவும் இயலாதது.

Her curved, thick shoulders seem like rafts
That glide on water.
To hug her shoulders and let go would be impossible;
If I were to leave her, living would become even more impossible.

தேமொழி

unread,
Sep 7, 2025, 7:36:02 PMSep 7
to மின்தமிழ்
Screenshot 2025-09-08.jpg

கலம்செய் கோவே!  கலம்செய் கோவே!

கொடி நுடங்கு யானை நெடுமா வளவன்-
தேவர் உலகம் எய்தினன் ஆதலின்,
அன்னோன் கவிக்கும் கண்ணகன் தாழி,
வனைதல் வேட்டனை ஆயின், எனையதூஉம்
இருநிலம் திகிரியா, பெருமலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ, நினக்கே? (புறம். 228:10-15)
        ஐயூர் முடவனார்

பொருள்:
கொடிகள் அசைகின்ற பெரிய யானைகளையுடையவன் சோழன்  
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். அவன் வான் உலகத்தை அடைந்தான்.
அவனுக்காகப் பெரிய தாழியை வனைய நினைத்தால்,
பூமியைச் சக்கரமாகவும் பெரிய மலையை மண்ணாகவும்
கொண்டு வனைய உன்னால் முடியுமோ?

Our King Neduma Valavan has left for the celestial world;
If I ask you to make a burial urn for him,
You'd have to make this earth a potter's wheel
And break down the lofty Mountain for clay;
Is that possible for you?

தேமொழி

unread,
Sep 8, 2025, 10:46:57 PMSep 8
to மின்தமிழ்
Screenshot 2025-09-09.jpg
சேரமான் வானுலகம் அடைந்தான்

அஞ்சினம்! எழுநாள் வந்தன்று இன்றே!
மைந்துடை யானை கைவைத்து உறங்கவும்,
திண்பிணி முரசம் கண்கிழிந்து உருளவும்,
காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்,
கால்இயல் கலிமாக் கதிஇல வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன்! (புறம். 229:17-22)

        கூடலூர் கிழார்

பொருள்:
நாங்கள் அஞ்சியபடியே விண்மீன் விழுந்த ஏழாம் நாள் வந்தது.
வலிமையான யானை கையை நிலத்தில் நீட்டி வைத்து உறங்கவும்,
திண்மையான முரசு கிழிந்து உருளவும்,
வெண்கொற்றக்குடையின் காம்பு சரிந்து சிதையவும்,
குதிரைகள் கதியில்லாமல் கிடக்கவும்,
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வானவர் உலகம் அடைந்தான்.

Just as we feared, the seventh day came
Since we saw the shooting star;
Elephants rest their trunks on ground,
War drums torn, Royal parasol broken,
Horses lie listlessly as our King ascended to heaven.

தேமொழி

unread,
Sep 9, 2025, 9:31:18 PMSep 9
to மின்தமிழ்
Screenshot 2025-09-10.jpg

மயிலிறகு சூட்டப்பெற்ற அதியமானின் நடுகல்

இல்லாகியரோ, காலை மாலை!
அல்லாகியர், யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி, நார்அரி
சிறுகலத்து உகுப்பவும், கொள்வன் கொல்லோ!
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய,
நாடுடன் கொடுப்பவும் கொள்ளாதோனே! (புறம். 232)
        ஒளவையார்

பொருள்:
அதியமான் இல்லாது போன காலையும் மாலையும்,
நான் வாழும் நாளும் எனக்கு இல்லாது போகட்டும்.
உயர்ந்த மலையுடன் கூடிய நாடு முழுவதும் கொடுத்தபோதும்
பெற்றுக்கொள்ளாதவன் அதியமான். அத்தகையவன், இன்று
நடப்பட்ட கல்லாக மயில் இறகு சூட்டப்பட்டுக் காணப்படுகிறான்.
தெளிந்த கள்ளை இந்தக் கலத்தில் கொடுக்கவும் அவன் ஏற்றுக் கொள்வானோ?

Let there be no mornings or evenings!
Let it be meaningless, the days that I will live!
His memorial stone is adorned with peacock feathers
And filtered liquor is offered to it.
Will he accept them?
The man who would not
Accept a mountain country with soaring peaks!

தேமொழி

unread,
Sep 10, 2025, 8:08:12 PMSep 10
to மின்தமிழ்
Screenshot 2025-09-11.jpg
அறுவை மருத்துவம்

மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்ன நெடுவள் ஊசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் ... (பதிற்று. 42: 2-4)
        பரணர்

பொருள்:
மீனைக் கொத்துவதற்காக நீர்நிலையில் வட்டமடிக்கும் மீன்கொத்திப் பறவை,
நீரில் பாய்ந்து மீனைக் கொத்திப்பிடித்துவிட்டு, உடனே மேல் எழும்பிப் பறப்பதைப் போல்
புண்பட்ட வீரர்களின் மார்பில் நீண்ட ஊசியை உள்ளே செலுத்தி வெளியே எடுத்துத் தைப்பர்.

Like the movement of the sharp-beaked kingfishers
That constantly dive in and out of the cold ponds in search of fish,
The wounds on the chests of your mighty warriors are sewed repeatedly
Using long, bright needles.

தேமொழி

unread,
Sep 11, 2025, 8:37:27 PMSep 11
to மின்தமிழ்
Screenshot 2025-09-12.jpg

முதுமை இரங்கத்தக்கது

நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே! யாண்டு உண்டு கொல்லோ?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இரும் இடை மிடைந்த சிலசொல்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே! (புறம். 243:9-14)
        தொடித்தலை விழுத்தண்டினார்

பொருள்:
ஆழமான நீரையுடைய மடுவில், துடும் என்று ஒலியெழும்படி குதித்து,
முழுகி, கீழே தரைக்குச் சென்று அங்கிருந்த மணலைக் கொண்டுவந்து
காட்டும் இயல்புடையது அந்த இளமைக்காலம்.
குனிந்த தலையுடன், பருத்த கோலை ஊன்றித் தளர்ந்து,
பேசும்போது இடையிடையே இருமல் வந்து சில சொற்கள்
மட்டுமே பேசி வாழும் எம்மைப் போன்றோரின்
இந்த முதுமைக்காலம் இரங்கத்தக்கது!

Where went our youth when we dived into the deep lake
And brought back sand from the lake bed?
Now we tremble as we walk with a walking stick
And hardly can speak a few words without coughing
Pitiable are we!

தேமொழி

unread,
Sep 12, 2025, 9:25:14 PMSep 12
to மின்தமிழ்
Screenshot 2025-09-13.jpg

எயினர் குடில்கள்

நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளை அம் பசுங்காய் புடை விரிந்து அன்ன
வரிப் புற அணிலொடு, கருப்பை ஆடாது,
யாற்று அறல் புரையும் வெரிந் உடைக் கொழு மடல்,
வேல் தலை அன்ன வைந்நுதி, நெடுந்தகர்
ஈத்து இலை வேய்ந்த எய்ப் புறக் குரம்பை!
(பெரும்பாண். 83-88)
        கடியலூர் உருத்திரங்கண்ணனார்

பொருள்:
ஆற்று மணலில் தோன்றும் கோடுகளைப் போன்ற
முதுகினைக் கொண்ட ஈந்தின் ஓலையால் வேயப்பட்ட கூரையையும்
முள்ளம்பன்றியின் முதுகு போன்றபின் பகுதியையும்  உடையது எயினர் குடில்கள்.
நீண்ட அடிப்பகுதியை உடைய இலவ மரத்தின் காய் முதிர்ந்து,
வெடித்து உள்ளிருக்கும் பஞ்சு வெளிப்படுவது போல்
முதுகில் வரிகளை உடைய அணிலும் எலியும் நுழையாதபடி
அந்தக் குடில்கள் அமைந்திருக்கும்.

The huts, that resemble the backs of porcupines,
Are woven with thick fronds of date palms-
Their back sides like the river sand
And the sharp ends like the tips of spears-
Into these huts, squirrels with striped backs
That look like the open cotton pods of ilavam trees,
And rats, are unable to get in.

தேமொழி

unread,
Sep 13, 2025, 10:09:35 PMSep 13
to மின்தமிழ்
Screenshot 2025-09-14.jpg

தாமரை மலர் போன்ற காஞ்சிமாநகரம்

... பல் இதழ்த்
தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி,
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின்! (பெரும்பாண். 403-405)

        கடியலூர் உருத்திரங் கண்ணனார்

பொருள்:
பல இதழ்களைக் கொண்ட தாமரைப் பூ விரிந்திருப்பதைப் போன்றது காஞ்சி மாநகர்.
அதன் நடுவில் தாமரைப் பூவின் நடுவிலிருக்கும் காய்போல் அமைந்திருப்பது
இளந்திரையனின் அரண்மனை. அதனைச் சுற்றி, சுட்ட
செங்கலால் கட்டப்பெற்ற பெரிய மதில் அமைந்துள்ளது.

The town of Kaanchi is like the many-petaled lotus flower.
In it's center, like a receptacle, is the fortress of llanthiraiyan,
Surrounded by large walls made with baked bricks.

Priya Jey

unread,
Sep 14, 2025, 2:11:25 AMSep 14
to mint...@googlegroups.com
 சங்க இலக்கியங்களில் காணப்படும் ஒவ்வொரு காட்சிகளும் அதனை எடுத்து உரைப்பது அருமையாக உள்ளது

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/d687d974-ef00-4076-a165-3d2fce052799n%40googlegroups.com.

தேமொழி

unread,
Sep 14, 2025, 9:03:51 PMSep 14
to மின்தமிழ்
Screenshot 2025-09-15.jpg

யானை உண்ட மிச்சில்

பல் மணம் மன்னு பின் இருங்கூந்தலர்,
கன்னிமை கனிந்த காலத்தார், நின்
கொடி ஏற்று வாரணம் கொள்கவழ மிச்சில்
மறுஅற்ற மைந்தர் தோள் எய்தார்! மணந்தார்
முறுவல் தலையளி எய்தார், நின் குன்றம்
குறுகிச் சிறப்பு உணாக்கால்! (பரி. 19:89-94)
          நப்பண்ணனார்

பொருள்:
திருப்பரங்குன்றத்தில் கொடியேற்றும் நாளில்,  யானை உண்டு எஞ்சிய
கவளத்தைச் சிறப்புடையதாக எண்ணி மகளிர் உண்பர்.
அவ்வாறு உண்ணாவிட்டால், மகளிர் தம்மை மணந்துகொண்ட
கணவரின் புன்முறுவலுடன் கூடிய அன்பைப் பெறமாட்டார்;
கன்னித் தன்மை முதிர்ந்த மகளிர், நல்ல காதலரைப் பெறமாட்டார்.
அந்த எஞ்சிய கவளத்தை உண்ட மகளிர் அந்த
நன்மைகளைப் பெறுவது உறுதி.

Women wearing fragrant flowers in their hair
Will not receive the affection of their lovers
Unless they come to your hillock and partake
The leftovers of food fed to your Royal Elephant.
(Denotes a prayer ritual)

தேமொழி

unread,
Sep 16, 2025, 12:33:29 AMSep 16
to மின்தமிழ்
Screenshot 2025-09-16.jpg

வல்லவன் சேரமான்

சுடர்நுதல், மடநோக்கின்,
வாள்நகை, இலங்குஎயிற்று,
அமிழ்து பொதி துவர்வாய் அசை நடை விறலியர்
பாடல்சான்று நீடினை உறைதலின்,
வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்ம்என,
உள்ளுவர் கொல்லோ, நின் உணராதோரே? (பதிற்று. 51:19-24)
        காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்

பொருள்:
ஒளி பொருந்திய நெற்றியையும் கள்ளமில்லாப் பார்வையையும் மிக்க
ஒளியையுடைய பற்களையும், அமிழ்தம் போன்ற வாய்நீர் உடைய
சிவந்த வாயையும், மெல்லிய நடையையும் உடைய விறலியர் பாடினர்.
அப்பாடல்களைக் கேட்டு நீ, நீண்ட நேரம் தங்கினாய்! அதனால்
வேல் தாங்கிய சேரன், ஐம்புல இன்பங்களுக்கு ஆட்படுபவன் என்று,
உன்னுடைய இயல்பை உணராதார் எண்ணுவார்களோ?

As you spend time listening to songs sung
By graceful songstresses with bright forehead,
Innocent eyes, red lips, and shiny teeth,
Those unaware of your valor may think you as weak.

தேமொழி

unread,
Sep 16, 2025, 8:07:19 PMSep 16
to மின்தமிழ்
Screenshot 2025-09-17.jpg

சேரமான் ஆடிய துணங்கை

சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து,
முழாஇமிழ் துணங்கைக்குத் தழூஉப் புணை ஆக,
சிலைப்பு வல்லேற்றின் தலைக்கை தந்து, நீ
நளிந்தனை வருதல், உடன்றனள் ஆகி,
உயலும் கோதை ஊரல் அம் தித்தி! (பதிற்று. 52:13-17)

          காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்

பொருள்:
பாண்டில் விளக்கின் ஒளியிலே
முழவு முழங்கியது. துணங்கைக் கூத்தாடும் மங்கையர்
கைக்கோத்துக் கொள்ளும்போது, முழங்கும் வலிய எருதைப் போல
முதற்கை தந்து, நீ அம்மகளிருடன் நெருங்கி ஆடினாய்.
அதனால் அசையும் மாலையையும் பரவிய தேமலையும்
குளிர்ந்த கண்களையும் கொண்ட உன் மனைவி
உன்னிடம் ஊடல் கொண்டாள்.

In the soft light of oil lamps, girls hold hands
And dance to the Goddess;
You, like a strong bull,
Step in to hold hands with them and dance closely
Upsetting your garland wearing moist eyed wife.

தேமொழி

unread,
Sep 18, 2025, 2:11:08 AMSep 18
to மின்தமிழ்
Screenshot 2025-09-18.jpg

தழையுடைக்கு விலை

எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர்
ஒண்தழை அயரும் துறைவன்,
தண்தழை விலை என நல்கினன் நாடே! (ஐங்.147)
        அம்மூவனார்

பொருள்:
மணல் குன்றில் வளர்ந்துள்ள ஞாழல் மரத்தில் மலர் இல்லாததைக் கண்ட மகளிர்,
அதன் ஒளி பொருந்திய தளிரைப் பறித்துத் தொடுத்து அணிந்தனர்.  இத்தகைய துறைக்குத் தலைவன்,
நீ அணியும் தழையுடைக்காகத் தனது நாட்டையே விலையாகக் கொடுத்தான்.

The man from the shore,
Where women who are unable
To find gnaalal flowers in the sand dunes,
Wear garments made with its bright leaves,
Gave his country as bride price.

தேமொழி

unread,
Sep 18, 2025, 8:14:04 PM (13 days ago) Sep 18
to மின்தமிழ்
Screenshot 2025-09-19.jpg

கண்கள் மலர்ந்தன

புன்னை நுண்தாது உறைத்தரு நெய்தல்
பொன்படு மணியின் பொற்பத் தோன்றும்
மெல்லம் புலம்பன் வந்தென,
நல்ல ஆயின தோழி, என் கண்ணே! (ஐங். 189)

        அம்மூவனார்

பொருள்:
தோழி! புன்னை மலரின் நுண்ணிய மஞ்சள் நிறத் துகள் நீல நிற நெய்தல் மலரில் படியும்.
அது பார்ப்பதற்குப் பொன்னுடன் நீலமணி கலந்த தன்மை போல் தோன்றும்.
இத்தகைய கடற்கரையின் தலைவன், என்னை மணந்துகொள்வதற்காக வந்துள்ளான்.
அதனால் என் கண்கள் மலர்ந்தன.

Since the lord of the delicate shores,
Where punnai trees drop their fine pollen on Neythal blooms,
Making them appear lovely like sapphires set in gold,
Has arrived, my eyes have become beautiful, oh friend.

தேமொழி

unread,
Sep 19, 2025, 8:22:38 PM (12 days ago) Sep 19
to மின்தமிழ்
Screenshot 2025-09-20.jpg

கரந்தை வீரர்களின் நடுகற்கள் நிறைந்த பாதை

வீளை அம்பின் விழுத் தொடை மழவர்,
நாள் ஆ உய்த்த நாம வெஞ்சுரத்து,
நடைமெலிந்து ஒழிந்த சேண்படர் கன்றின்
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்,
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்,
வேல்ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்! (அகம். 131:6-12)
        மதுரை மருதன் இளநாகனார்

பொருள்:
விரைந்து செல்லும் அம்பினை மிகுதியாகக் கொண்ட வெட்சி மறவர்,
விடியற்காலையில் பசுக்களைக் கவர்ந்துகொண்டுபோன அச்சம் பொருந்திய காட்டுவழியில்,
நீண்ட தொலைவு நடந்து வந்ததால், நடை ஓய்ந்துவிட்ட கன்றின்
கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. அந்தக் கண்ணீரைத் துடைக்கும்
பொருட்டு ஆநிரையை மீட்கப் போரிட்ட கரந்தை மறவர் உயிர் துறந்தனர்.
அவர்களது பெயரும் பெருமையும் எழுதி, பீலி சூட்டப்பெற்ற
நடுகற்கள் அருகில் வேலும் கேடயமும் சார்த்தப்பெற்றுள்ளன.
அவை பார்ப்பதற்குப் பகைவர், போர் முனையில் நிற்பது போல் தோன்றும்.

The vetci warriors lead away at early dawn the kine of their foes;
Their calves stay behind, weary of walking with their mothers.
Then, the karantai warriors restore them to their mothers
And thus wipe off their tears though some fall dead in that attempt;
For them are installed hero-stones with their names and deeds;
Beside them are planted their spears and shields.

தேமொழி

unread,
Sep 20, 2025, 8:16:33 PM (11 days ago) Sep 20
to மின்தமிழ்
Screenshot 2025-09-21.jpg
கூந்தல் போர்வையில் மறைத்தாள்

பெரும்புழுக்குற்ற நின் பிறைநுதல் பொறி வியர்
உறுவளி ஆற்ற, சிறுவரை திற என,
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறைகழி வாளின் உருவுபெயர்ந்து இமைப்ப,
மறைதிறன் அறியாள் ஆகி, ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே, பேணி
இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே! (அகம் 136: 21-26,29)
        விற்றூத்து மூதெயினனார்

பொருள்:
முதல் நாள் இரவில், தலைவி தன் உடல் முழுவதும் போர்த்தியிருந்ததால்,
மிக்க புழுக்கம் அடைந்தாள். அதனால் அவளது நெற்றியில் வியர்வை அரும்பியது.
காற்றுக்காக அவளது ஆடையைத் திற எனச் சொல்லி,
அவள் முகத்தைப் பார்க்கும் ஆவலுடன் அந்த ஆடையைப் பற்றி இழுத்தேன்.
உறையிலிருந்து உருவிய வாள் போன்று அவளது வடிவம் மின்னி வெளிப்பட்டது.
அதனை மறைக்கும் வகையை அறியாமல் வெட்கம் கொண்ட அவள்,
தன்னுடைய கூந்தலை விரித்து அதனையே போர்வையாகக்
கொண்டு தன் மேனியை மறைத்துக்கொண்டாள்.

My beloved concealed her body with an unrumpled garment:
I approached her and removed the garment with great eagerness.
At that, her body dazzled like a sword unsheathed!
She, knew not to conceal herself, covered her parts
With the help of her long tresses.

தேமொழி

unread,
Sep 21, 2025, 9:18:46 PM (10 days ago) Sep 21
to மின்தமிழ்
Screenshot 2025-09-22.jpg

நெல்லுக்கு உப்பு

வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி,
என்றூழ் விடர குன்றம் போகும்
கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி,
நெல்லின் நேரே வெண்கல் உப்புஎனச்
சேரி விலைமாறு கூறலின் மனைய! (அகம். 140:3-8)

      அம்மூவனார்

பொருள்:
உப்பினை வண்டியில் நிறைய ஏற்றி அதனை விற்பதற்காக,
வறண்ட மலைப்பிளவுகள் கொண்ட குன்றுகளைக் கடந்து உப்பு
வணிகர் சென்றனர். அவ்வாறு போகும்போது எருதினை
விரைவாக ஓட்டுவதற்காகக் கையில் கோலை வைத்திருந்தனர்.
அந்த உப்பு வாணிகரின் மகள், தன் வளையல் அணிந்த கைகளை வீசி,
'நெல்லுக்கு ஒத்த அளவினதே வெண்மையான உப்பு'
என்று ஊரில் விலை கூறி விற்கிறாள்.

My object of love is a clanswoman dear to the salt vendors.
As she moved into the street swinging her hands, adorned with bangles,
She announced thus:
"We barter the white crystals of salt for paddy,
The measure of exchange being the same."

தேமொழி

unread,
Sep 22, 2025, 8:22:00 PM (9 days ago) Sep 22
to மின்தமிழ்
Screenshot 2025-09-23.jpg

கார்த்திகைத் திருநாள்

மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர, மதிநிறைந்து,
அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்,
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகதில் அம்ம! (அகம். 141: 6-11)
          மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

பொருள்:
மழை பெய்து ஓய்ந்த வானத்தில்
சிறிய முயலைப்போல் களங்கத்துடன் சந்திரன் விளங்கியது.
ஆறு விண்மீன்கள் சேர்ந்து தோன்றும் இருள் சேர் நள்ளிரவில்
தெருக்களில் எல்லாம் விளக்குகளை வரிசையாய் ஏற்றி, மாலைகளைத் தொங்கவிட்டுள்ள
பழமையான வெற்றியையுடைய ஊர்களில், பலரும் ஒன்றாகச் சேர்ந்து
கார்த்திகை விழாவைக் கொண்டாடினர். அவ்விழாவைக் கொண்டாடுவதற்காகத்
தலைவர் வரவேண்டும் என்று விரும்பினாள் தலைவி.

May he come back soon to celebrate with us
The kaarthigai festival observed by all folks,
Who gather to light the streets with lamps
And hang garlands everywhere in our village.
That is a festival observed at midnight
When the full moon glows in the unclouded skies.

தேமொழி

unread,
Sep 23, 2025, 8:57:15 PM (8 days ago) Sep 23
to மின்தமிழ்
Screenshot 2025-09-24.jpg

வடுக்கொள முயங்கினாள்

கடல்மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து,
உருவுகிளர் ஓவினைப் பொலிந்த பாவை
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து,
பெயல்அலைக் கலங்கிய மலைப்பூங் கோதை
இயல்எறி பொன்னின் கொங்குசோர்பு உறைப்ப,
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்,
வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே! (அகம். 142: 20-26)
          பரணர்

பொருள்:
கடல் மீன்கள் உறங்கும் நள்ளிரவில்
அழகாக வரையப்பட்ட ஓவியப் பாவை
நடந்து வருவது போல, தலைவி மெல்ல நடந்து தனது குறியிடத்திற்கு வந்தாள்.
அவள், மழையால் அலைக்கப்பட்ட மலைப் பூக்களால் ஆகிய மாலையணிந்திருந்தாள்.
அந்த மாலையில், கொல்லரது உலைக்களத்தில் அடிக்கும்போது
தெறித்து விழும் பொன்னைப் போல் தேன்துளி சிதறியது.
யாழிசை போல் இனிய மொழி பேசி, மார்பில் அணிந்த வளையம் என்
மார்பில் வடு ஏற்படுத்தும்படியாக என்னைத் தழுவினாள்.

In this dark midnight, came here our sweetheart
And embraced us so passionately
That her bosom left on our body their impress;
Her words sweet like the strumming of a yaal,
And her wreaths with blooms dripping with honey.

தேமொழி

unread,
Sep 24, 2025, 8:08:29 PM (7 days ago) Sep 24
to மின்தமிழ்
Screenshot 2025-09-25.jpg

ஆயர் திருமணம்

தருமணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையொடு, எமர் ஈங்கு அயரும்
பெருமணம் எல்லாம்! (கலி. 114:12-14)
        சோழன் நல்லுருத்திரன்

பொருள்:
கொண்டுவந்து குவித்த மணலைப் பரப்பி, இல்லத்தினைச் செம்மண் பூசி அலங்கரித்து,
தெய்வமாய்ப் பெண் எருமையின் கொம்பை வைத்து, எம் உறவினர்
திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.

Fetching sands and spreading them out,
Painting the house with red-earth
Placing the horns of female buffaloes for worship-
With these, the preparations for the marriage
Are being made by my kin.

தேமொழி

unread,
Sep 26, 2025, 12:58:57 AM (6 days ago) Sep 26
to மின்தமிழ்
Screenshot 2025-09-26.jpg

அங்கு வந்தால் கூடுவேன்

யாய் வருக ஒன்றோ! பிறர் வருக! மற்றுநின்
கோ வரினும் இங்கே வருக! தளரேன் யான்,
நீ அருளி நல்கப் பெறின்!
நின்னை யான் சொல்லினவும் பேணாய்! நினைஇ,
கனைபெயல் ஏற்றின் தலை சாய்த்து, எனையதூஉம்
மாறுஎதிர் கூறி, மயக்குப்படுகுவாய்!
கலத்தொடு யாம் செல்வுழி நாடி, புலத்தும்
வருவையால் நாண்இலி நீ! (கலி. 116:10-17)

            சோழன் நல்லுருத்திரன்

பொருள்:
தலைவன்: நீ, என்மீது அருள்கொண்டு என்னைக் கூடுவதற்கு உடன்பட்டால்,
உன் தாய் வந்தாலும் வரட்டும், அல்லது வேறு யார் வந்தாலும் வரட்டும்,
அவர்கள் அல்லாமல் உன்னுடைய தந்தையே வந்தாலும் வரட்டும். நான் அஞ்சமாட்டேன்.

தலைவி: நான் கூறியவற்றைப் பற்றிக் கவலைகொள்ளாமல் கூடலையே நினைத்து,
பெருமழையின்போதும் தலையைச் சாய்த்து நிற்கும் எருது போல நிற்கிறாய்.
என்ன சொன்னாலும் அதனை மறுத்துப் பேசி என்னை மயக்குகிறாய்.
வெட்கம் இல்லாத நீ, நாளைக்கு நான் பால்
கொண்டுபோகும்போது மாடு மேய்க்கும் இடத்திற்கு வா !.

Hero: "Were you to bless me with your love,
wouldn't halt whoever comes our way,
Be it mother or an stranger, or be it even your father".
Heroine: "Unmindful of all I've told, you go obsessed with passion,
Should you come pursuing me, to the field too,
As I go carrying the pitcher of milk?"


தேமொழி

unread,
Sep 26, 2025, 10:30:46 PM (5 days ago) Sep 26
to மின்தமிழ்
Screenshot 2025-09-27.jpg

மணந்துவிடு சேர்ப்பனே

இறைவளை நெகிழ்ந்த எவ்வநோய் இவள் தீர,
உரவுக் கதிர் தெறும் என ஓங்கு திரை விரைபு, தன்
கரை அமல் அடும்பு அளித்தாஅங்கு
உரவுநீர்ச் சேர்ப்ப! அருளினை அளிமே! (கலி. 127:19-22)
        நல்லந்துவனார்

பொருள்:
தலைவனே! கடற்கரையில் படர்ந்துள்ள அடும்புக் கொடியைச் சூரியன் சுடும்
என்று, அதன் மேல் அலையானது நீர்த்துளிகளைத் தெளிக்கும்.
அதைப்போல் உன்னைப் பிரிந்ததால் தன் வளைந்த தோள்வளை விழும்படி
வருந்தும் தலைவியின் துன்பத்தைப் போக்கும் வகையில் மணம் செய்ய வேண்டும்.

Like the waves rushing forth to shelter
The atumpu vine from the sun's scorching rays,
Do extend the grace of your love
For her to end her passion's torment
Which saw her bangles slip off.

தேமொழி

unread,
Sep 27, 2025, 9:04:47 PM (4 days ago) Sep 27
to மின்தமிழ்
Screenshot 2025-09-28.jpg
மதங்கொண்ட யானை

இருதலைப் பணிலம் ஆர்ப்ப, சினம் சிறந்து,
கோலோர்க் கொன்று, மேலோர் வீசி,
மென்பிணி வன்தொடர் பேணாது காழ் சாய்த்து,
கந்து நீத்து உழிதரும் கடாஅ யானை! (மதுரை. 380-383)
        மாங்குடி மருதனார்

பொருள்:
முன்னும் பின்னும் சங்குகள் ஒலிக்க, சினம் மிகுந்து
குத்துக்கோல்காரரைக் கொன்று, மேலிருக்கும் பாகரை வீசி,
கால்சங்கிலியை மதிக்காமல், கட்டுத்தறியை முறித்து,
கம்பத்தை விட்டுச் சென்று, மதுரை நகரில் சுழன்று திரியும் மதங்கொண்ட யானை.

The elephant that is in heat,
Kills those who use the prods enraged,
Flings down its keepers, breaks its pegs
Regarding not the chains with which it is tied,
And moves about beyond its post.

தேமொழி

unread,
Sep 29, 2025, 2:08:47 AM (3 days ago) Sep 29
to மின்தமிழ்
Screenshot 2025-09-29.jpg

பழுது பார்க்கப்படும் மரக்கலம்

பெருங்கடல் நீந்திய மரம்வலி உறுக்கும்
பண்ணிய விலைஞர்! (பதிற்று. 76:4-5)
        அரிசில் கிழார்

பொருள்:
கடலில் காற்றும் மழையும் மோதியதால் மரக்கலத்தின் உறுதி தளர்ந்தது.
அதைக் கரைக்குக் கொண்டு வந்த கடல் வணிகர் அதன் பழுதினைப் போக்கினர்.

The trade ships that ply in the oceans
Are fixed by merchants after its return,
As they are battered by strong winds and waves.

தேமொழி

unread,
Sep 29, 2025, 8:49:25 PM (2 days ago) Sep 29
to மின்தமிழ்
Screenshot 2025-09-30.jpg

மதுரை அறம்கூறு அவையம்

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி,
செற்றமும் உவகையும் செய்யாது காத்து,
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி,
சிறந்த கொள்கை அறம் கூறு அவையம்! (மதுரை. 489-492)
        மாங்குடி மருதனார்

பொருள்:
அறம் நாடி வந்தோரின் அச்சத்தையும் வருத்தத்தையும் நீக்கி,
சினமும் மகிழ்ச்சியும் கொள்ளாமல் சமநிலையில் காத்து,
துலாக்கோலைப் போன்ற நடுவுநிலைமையுடன் அறத்தைக்
கொள்கையாகக் கொண்டோர் விளங்கும் அறம் கூறும் அவையம்.

In the courts of Madurai, there are just judges who expound the law
And from the suitors' minds remove all fear and greed.
With fair impartial minds they ponder things
As though they weighed them in a pair of scales.
Reply all
Reply to author
Forward
0 new messages