
என் உடன்பிறந்தவள் இந்தப் புன்னை
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம்! துறந்த காழ் முளை அகைய,
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப,
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும், என்று
அன்னை கூறினள், புன்னையது நலனே!
அம்ம, நாணுதும் நும்மொடு நகையே! (நற். 172:1-6)
பெயர் அறியப்படாத புலவர்
பொருள்:
நண்பர்களுடன் விளையாடிய போது, நாங்கள் மணலில் அழுத்தி
வைத்த புன்னை விதை முளைத்து வந்தது. அதற்கு
நெய்யும் பாலும் ஊற்றி வளர்த்தோம். அது எங்களால்
வளர்க்கப்பட்டதால் 'உங்கள் தங்கை போல் ஆகும்' என்று
தாய் கூறினார். தங்கை போன்ற இந்தப் புன்னை மரத்தின்
நிழலில் உன்னுடன் நகைத்து மகிழ்வதற்குத் தலைவி வெட்கப்படுகிறாள்.
While playing, we pressed a mature punnai seed
Into the white sand and forgot all about it.
The seed sprouted forth and we nourished it into a tree.
Our mother said, "This tree is your younger sister";
And so, she (Heroine) feels shy to laugh and play with you
Under this tree.