பரல் நானூறு 3

35 views
Skip to first unread message

Eskki Paramasivan

unread,
Nov 5, 2025, 6:12:50 AM (9 days ago) Nov 5
to மின்தமிழ்

பரல் நானூறு 3

______________________________________

சொற்கீரன்


அம்பி ஊரும் மணிநீர்ப் பரவை

அலைபடு அலைபடுப் படலம் போன்ம்.

தும்பி நுண்சிறை நுழைபடுத்தாங்கு

துன்புறல் இன்பம் தீண்டத் தீண்ட‌

அழல்பெரிது ஊழி இன் தீ பெருக்கும்.

பெரும, எந்தன் அமளி பரலிய அனிச்சம்

வேகும் வெந்து தணிப்பெருங்காடு.

கழை வளர் அடுக்கம் ஆடுமழை நீங்கி

சிமைய வாங்கும் ஓங்கு மணல் முன்றில்

கல்லாப்பெருங்கல் புல்லென புலவு மன்.

பொல்லாப் பொய்வான் கொல்பகை தீர்க்கும்.

கலிபரி விசைமான் கடுகியே விரைக.

பாசுவல் பெய்த புன்காற் பந்தர்

வாயில் படுக்கும் இளமணல் விரவி

ஈரம் பிழியக் கிடந்தமை அறிதி.அஃதென்

விழிநீர் தகைத்தே நோன்றல் காட்டும்.

_________________________________________


சிலம்புத்தமிழை 

சீந்துவார் இலையோ என‌

சீற்றம் கொண்டு

தமிழ்ப்பரல் சிலிர்த்ததில்

தெறிதவையே இவை.

_________________________________

சொற்கீரன்

Pandiyaraja Paramasivam

unread,
Nov 5, 2025, 1:52:53 PM (9 days ago) Nov 5
to mint...@googlegroups.com
பாசுவல் பெய்த புன்காற் பந்தர்

பாசுவல்
 இட்ட புன் கால் பந்தர் – புறம் 262/2

---------------------------------------------------------------------------------
கழை வளர் அடுக்கம் ஆடுமழை நீங்கி

கழை வளர் சாரல் களிற்று இனம் நடுங்க - மது 242
கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும் - நற் 233/3
அருமை அருமை - அருமை நண்பரே



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/7dfa6368-f34e-4bab-be1c-4a2638d37c23n%40googlegroups.com.

Eskki Paramasivan

unread,
Nov 8, 2025, 2:25:13 PM (6 days ago) Nov 8
to மின்தமிழ்


அன்புள்ள பெருமதிப்பிற்குரிய
திரு பாண்டிய ராஜா பரமசிவம் அவர்களே

உங்கள் வரிகளைப்படித்ததும் எனக்கு மிக மிக மகிழ்ச்சி.
நாம் முகத்தை கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து கொள்வதுபோல்
நினைப்பது எது என்றால் நம் சங்க இலக்கியங்களைப்
படிக்கும் போது தான்.அப்படி நான் படித்த சங்க நூல்கள்
என்னை எப்போதும் அங்கே கட்டிப்போட்டுக்கொண்டு தான்
இருக்கும். அவை என் மனத்தால் வருடப்பட்டு பொங்கிப்
பெருகிய மகிழ்ச்சியில் நான் கற்பனையின் "கழை வளர்
அடுக்கங்களில் உலவு வேன்.அவற்றில் என்னை மிகவும்
கவர்ந்த சொற்றொடர்களை நான் பதியம் போட்டுக்கொள்வேன்.
இங்கு "ஆடு மழை நீங்கி" என்ற சொற்களுக்கு குறிக்கப்பட்ட‌
பொருளைக்கண்டு நாம் மிகவும் மெய்சிலிர்த்து விட்டேன்.
மலைச்சிகரங்களில் உலா போகும்போது (ஊட்டி) நம்மோடு
மேகங்களும் கூடவே வந்து அசைந்து அப்புறம் நீங்கி விடுகிறது.
இதை நான் ஊட்டியில் உணர்ந்திருக்கிறேன்.இதே உணர்வு
நம் புலவர்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே எற்பட்டிருப்பது கண்டு நான் வியந்தே தான் போனேன்.
"ஆடு மழை" என்ற அந்த சொற்றொடர் பல் சங்கப்பாடல்களில்
படித்திருக்கிறேன்.
இப்படித்தான் நான் அக நானூறு வரிகளில் வலம் போனேன்.
ஒவ்வொரு செய்யுளிலும் ஒவ்வொரு சொல்லும் ஒரு "மைல் கல்" தான்.
அதில் அமர்ந்து சிந்தனையில் "ஆழ்ந்து அந்த சொற்களை அகழ்ந்து"
எடுத்து மனத்திரையில் ஓட விட்டு அப்படி அகமகிழ்ந்து எழுதிய
என் செய்யுட் கவிதைகளே என் "அகழ்நானூறு" என்பது.இது வரை
ஆகழ் நானூறு பாடல்கள் நூற்றுக்கும் மேல் எழுதியிருக்கிறேன்.
இன்று நீங்கள் காட்டிய வரிகளும் சொற்களும் எப்போதும்
அந்த "நுண்சிறைத்தும்பிகள்"போல் அல்லது அந்த அஞ்சிறைத்தும்பிகள்
போல எனக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும்.அவை என் செய்யுட்களில்
வலம் வந்தவை தான்.
உங்கள் எடுத்துக்காட்டுகள்  எனக்கு "ஒப்பற்ற விருதுகள்" கிடைத்தவை
போலவே பெரு மகிழ்ச்சி ஊட்டுகின்றன.இப்படி என் எல்லா செய்யுட்களுக்கும்
பொழிப்புரைகள் எழுத விரும்புகிறேன்.ஆனால் அது இன்னும் முற்றுப்பெற வில்லை.
உங்கள் "பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.
அன்புடன்
சொற்கீரன் எனும்
ருத்ரா இ பரமசிவன்.







வியாழன், 6 நவம்பர், 2025அன்று 12:22:53 AM UTC+5:30 மணிக்கு Pandiyaraja Paramasivam எழுதியது:

Eskki Paramasivan

unread,
Nov 8, 2025, 8:08:37 PM (6 days ago) Nov 8
to மின்தமிழ்

ஆறு திரள்வீர்

_______________________________________________


வடநாட்டார் தூங்கார் என‌

முக்குடை வேந்தர் முது வீரம்

காத்தார் மூசு தணல் முற்றி.

வில் புலி மீன் எனும் 

வேறு திறம் மறந்து ஓர் திறம் 

ஒன்றே நெஞ்சில் வைத்தார்.

வடபுலப்புகையின் பகைதனை

வெல்லுதல் அன்றி தமிழா

வேறு புலம் காண்கும் புல்லர்

அல்ல அல்ல யாம் என்றே

புலிகள் ஆகினார் கரிகள் ஆகினார்.

கலிமா துள்ளும் களிப்படை ஆகினார்.

முக்கொடியும் ஓர் கொடியாய்

முத்து சுடர்ந்த வெல் திறம் காட்டினார்.

அஃதே தான் அறிதி!ஒண்தமிழ்ச் செல்வா!

குறு குறு சாதி மத வெறித்தீயில்

கருகிடவோ அந்த கோவூரான்

இத்தீவரி தந்தான்!கேண்மின்.கேண்மின்.

வேல் மறம் உண்டு வேள் மறம் உண்டு.

மீன் மறம் கொண்டு கடலும் வென்றான்.

வல்வில் சாலும் பனிமலை மீதும்

கொடியினை நிறுத்தி கோலம் கண்டான்.

தமிழ் மறம் மூன்றும் ஒரு திறம் கொண்டு

வேர்ப்பகைக் கொன்று முக்குடை காக்க‌

வடபுலம் தென்புலம் யாவும் ஒருபுலம்

என்ன எழுந்து செந்திசை காட்டி

செயல் மறம் கிளர்ந்து ஒரூஉ ஓர்ந்து

வென்றி கோள்மீன் உறுமீன் அன்ன‌

கனல் விழி நோக்குமின்.காலம் மறையுமுன்

இமயமும் நகர்ந்தே தென் மின் ஆர்க்கும்

ஆறு திரள்வீர் அடுபகை கொல்வீர்.

_____________________________________________________

செவ்வூர் கிழான்


தங்கள் புறநானூறு 31 "ஒளிப்படம்"கண்டேன்.

தங்கள் பணி ஒப்புயர்வற்றது.

அதைக்கண்ட மறுகணமே

இந்த புதிய புறநானூற்றுப்பாடல் ஒன்றை

யாத்து அளிக்கின்றேன்.

நன்றி.

"செவ்வூர்க் கிழான்"

(இ பரமசிவன்)

___________________________________________________________________________________________________________________________________

பின்குறிப்பு:‍‍‍
இம்மடலும் என் சங்கக்கவிதைச்செய்யுளும் அன்று அந்த ஒளிப்படம் பார்த்த சில நொடிகளில் இயற்றப்பட்டது.




ஞாயிறு, 9 நவம்பர், 2025அன்று 12:55:13 AM UTC+5:30 மணிக்கு Eskki Paramasivan எழுதியது:
Reply all
Reply to author
Forward
0 new messages