Re: [தமிழ் வாசல்] கிருத யுகம் எழுக மாதோ?

358 views
Skip to first unread message

shylaja

unread,
Nov 9, 2014, 1:26:23 AM11/9/14
to தமிழ் வாசல், min tamil, vallamai
மொய்க்கும் கவலைப் பகை போக்கி 
முன்னோன் அருளைத் துணையாக்கி
 எய்க்கு நெஞ்சை வலியுறுத்தி
 யுடலை யிருப்புக் கிணையாக்கிப் 
பொய்க்கும் கலியை நான் கொன்று 
பூலோகத்தார் கண்முன்னே
 மெய்க்குங் கிருத யுகத்தினையே
 கொணர்வேன் தெய்வ விதியிஃதே

பாரதியின் இந்தப்பாடலையும் உங்கள் இடுகை நினைவுக்குக்கொண்டுவருகிறது. மிச்சீரிய சிந்தனை. அருமையான  எண்ணங்கள். 

//உண்மையில் மனித சமுதாயத்தில் அடிமைத் தனமும், பிரிவினை உணர்ச்சிகளும் நீங்கி, அறிவும் கலைகளும், விஞ்ஞானம், தொழில்நுட்பம், உலக சமுதாயம் என்ற மெய்மைகள் நடைமுறையில் வந்திருக்கும் நம் காலமன்றோ உண்மையில் பொற்காலம்! பொற்காலம்தான் கிருத யுகம் என்றால் நம் காலம் அல்லவோ உண்மையில் கிருத யுகம்? //

உண்மைதான்  .

2014-11-08 22:01 GMT-08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
படைப்பு காலம் தொட்டு உலகம் நான்கு விதமான கால நிலைகளை மீண்டும் மீண்டும் அடைந்தபடியே வந்து கொண்டிருக்கிறது. இது போல் பிரளய காலம் வரையில் நடக்கும். பின்னர் பிரளயம் அதன் பின்னர் மீண்டும் படைப்பு, முன்னர் போலவே நான்கு கால நிலைகள் என்று இவ்வாறு கல்பம் தோறும் வட்டச் சுழற்சியாக நடந்துகொண்டிருக்கும் என்பது சநாதன தர்மத்தின் கருதுகோள். அந்த நான்கு கால நிலைகள் ஆவன, கிருத யுகம், திரேதை யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்பன. இதில் கிருத யுகத்தில் தர்மமானது நிறைந்து காணப்பட்டது, பின்னர் தர்மம் ஒவ்வொரு கால் பங்கு அடுத்த அடுத்த யுகத்தில் குறைந்து கலியில் கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்த நிலைக்கு வந்துவிடும். மீண்டும் கிருத யுகம் ஆரம்பித்து இப்படியே வட்டச் சுழற்சி போகும் என்று சொல்லப் படுகிறது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது குறைந்து வளர்ந்து கொண்டு வரும் என்று சொல்லப்பட்ட தர்மம் என்பது யாதெனில் வர்ண தர்மத்தை முக்கியமாக முன்னிறுத்தி அதன் நிழலாக வரையப்பட்ட சமுதாய வாழ்வு நெறிகளைத்தான் என்பது சநாதன தர்மத்தின் நூல்களில் தெரிய வருகிறது.

நான்கு வர்ணங்கள் ஆவன பிராம்மண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணங்கள் என்பனவாம். இதன்படி, நான்கு வர்ணங்களின் தர்மங்களும் சற்றும் கெடாமல் குறையாமல் நடந்த காலம் கிருத யுகம் என்றும், விகிதமாகக் குறைந்து கொண்டே வந்து அநேகமாக இல்லை என்று ஆனது கலி யுகம் என்றும் தர்ம சாத்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் படிக்கிறோம். இதில் நான்கு வர்ணங்களும், ஒரு வர்ணத்தின் தர்மத்தை மற்ற வர்ணத்துக்காரர்கள் கைக்கொள்வதும் தவறு. சில ஆபத்துக் காலங்களில் தர்மங்கள் மாறலாம் என்றாலும் அப்பொழுதும் சூத்திர வர்ணத்தார் பிராம்மண தர்மத்தைக் கைக்கொள்ளுதல் அனுமதிக்கப்படவில்லை என்பது தர்ம நூல்களைப் படித்தால் தெரியவரும் விஷயம். பிராம்மணர்களும் தங்கள் தர்மங்களை கிருத யுகத்தில்தான் முழுமையாகக் கடைப்பிடிப்பார்கள், பிறகு அவர்களின் தர்ம அனுட்டானங்களும் குறைந்துகொண்டே வந்து கலி யுகத்தில் அநேகமாக இல்லை என்று ஆகிவிடும் என்றும் சொல்லப் படுகிறது.

ஆக, கிருத யுகம் என்றால் என்ன என்று யோசிக்கும் போது என்ன தெரியவருகிறது எனில், நான்கு வர்ணங்களின் தர்ம ஆசாரங்களும் ஒழுங்காக கெடாமல் கடைப்பிடிக்கப்படும் காலம் என்றும், பிராம்மண தர்மம் கெடாமல், தங்களாலோ, பிறராலோ அல்லது ஏதேனும் புறக் காரணங்களாலோ அவர்களது தர்மம் கெடாமல் நடைபெறும் காலம் கிருத யுகம் என்றும் அறிய முடிகிறது.

இன்னதுதான் கிருத யுகம் என்று அறிந்தோ அறியாமலோ (பலசமயம் அறியாமலேயே என்றுதான் நினைக்கிறேன்) பின் வந்த ஆசிரியர்களும், எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் கிருத யுகம் என்றால் ஏதோ பெரும் பொற்காலமான யுகம் என்று கற்பனைச் சித்திரம் எழும் வகையில் அதைப் பற்றி ஓர் ஏக்கத்துடன் தங்கள் அபிப்ராயங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். கிருத யுகம் என்றால் பொற்காலம் என்று இத்தகைய அபிப்ராயத்தை ஒட்டியே மக்களும் தங்கள் எண்ணங்களை வளர்த்து வந்துள்ளனர். பிராம்மணர்களில் பலரும் இத்தகைய நம்பிகையைச் சார்ந்துதான் தங்கள் எண்ணங்களைக் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி, பிராம்மணர்கள் மீது கூடுதலாக ஒரு குற்றமும் சுமத்தப்பட்டு வந்திருக்கிறது, சநாதன தர்மத்து ரீதியாகவே. என்னவெனில் அவர்கள் தங்களுடைய தர்மத்தை முழுவதும் கைக்கொள்ளாமல் விட்டதனால்தான் ஹிந்து சமுதாயம் இழிநிலை அடைந்து விட்டது என்றும், இதெல்லாம் கலி யுகத்துக் கேடுகள் என்றும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. பல ஆசிரியர்களும், சிந்தனையாளர்களும் ஹிந்து மதத்தில் கிருத யுகம் மீண்டும் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையைப் பிரதிபலிப்பவர்களாய் இருப்பதையும் காண்கிறோம்.

அப்படியென்றால் கிருத யுகம் உண்மையில் பொற்காலமா? அதை நோக்கியே நமது ஏக்கங்களை வளர்த்து விட்டிருக்கிறார்களே இது சரிதானா?

கிருத யுகம் என்று சொல்லப் பட்டிருப்பதைப் பார்த்தால் மனித சமுதாயத்தை வர்ணப் பிரிவினைகள் ஆக்கி, உயர்வு தாழ்வு என்று மனிதரிடையே எற்படுத்தி வைத்து அது முழுமையாக நடைபெற்ற காலம்தான் பொற்காலம், அதுவே கிருத யுகம், அது மீண்டும் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றால் அதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இன்று பிரிவினை உணர்ச்சிகள், வர்ண தர்ம அபிமானங்கள் ஆகியவற்றை தூர ஒதுக்கி மனித சமுதாயம் அனைத்தும் ஒன்று என்ற எண்ணத்துடன், அறிவிலும், தொழிலிலும், நம் நாட்டிலும் சரி, உலகெங்கிலும் சரி தங்களை வியக்கத்தக்க முறையில் முன்னேற்றிக்கொண்டு வந்திருக்கும் பிராம்மணர்களைப் பார்த்து நீங்கள் உங்கள் பிராம்மண தர்மத்தை முழுமையாகக் கடைப்பிடிக்காததால்தான் ஹிந்து சமுதாயம் துர்நிலை அடைந்து விட்டது என்று இந்த கிருத யுகமே பொற்காலம் என்ற அபிப்ராயத்தை வைத்துக்கொண்டு சொன்னால் அதில் என்ன பொருள் இருக்கிறது?

உண்மையில் மனித சமுதாயத்தில் அடிமைத் தனமும், பிரிவினை உணர்ச்சிகளும் நீங்கி, அறிவும் கலைகளும், விஞ்ஞானம், தொழில்நுட்பம், உலக சமுதாயம் என்ற மெய்மைகள் நடைமுறையில் வந்திருக்கும் நம் காலமன்றோ உண்மையில் பொற்காலம்! பொற்காலம்தான் கிருத யுகம் என்றால் நம் காலம் அல்லவோ உண்மையில் கிருத யுகம்?

சாத்திரங்களில் கிருத யுகம் போல் காட்டப்பட்டிருக்கும் காலம் உண்மையில் மிகவும் பிற்போக்கான காலமாக அல்லவோ தெரிகிறது.!

பிராம்மணத்துவம் என்பது உண்மையில் அறிவில் மேம்படுவதும், ஞானம் விஞ்ஞானம் என்பனவற்றில் சிறந்து விளங்குவதும், உலகனைத்தும் ஒருங்கு கூடிய ஒற்றுமை உணர்ச்சி ஓங்கப்பெற்ற நிலையும்தான் என்று சொன்னால் அது நம் காலத்திலன்றோ உண்மையாகி இருக்கிறது. அது மட்டுமில்லை அத்தகைய உண்மையான பிராம்மணத்துவம் மனிதர் அடையக் கூடிய தன்மை நிலையைக் குறிக்கிறது, பிறப்பைக் குறிக்கவில்லை என்று சொன்னால் உலகெங்கணும் அத்தகைய பிராம்மணத்துவமாகிய அறிவின் விழிப்பு ஏற்பட்டு மனித குலம் ஒன்று என்ற உலக நேயம் ஏற்பட்டிருப்பது நம்முடைய இந்தக் காலத்திலன்றோ?

பிறவியின் அடிப்படையில் பிராம்மணத்துவம் என்பதைக் கூறி அந்த பிராம்மண தர்மம் முழுமையாக இருந்த காலம் கிருத யுகம் என்று சாத்திரங்கள் சொல்லும் அந்தக் காலம் மிகவும் பிற்போக்கான காலமும். எந்த வித சிறப்பும் நன்மையும் அற்ற காலமும் என்றுதானே சொல்ல வேண்டும்?

எனவேதான் பாரதி பாடும் போது மிகக்கவனமாக இந்தக் கிருத யுகம் என்ற கருத்தைப் பாடுகிறான். தாம் எந்த விதமன சமுதாய நிலையை, மானிட நிலைப்பாட்டை கிருத யுகம் என்று அடையாளம் காண்கிறோம் என்று நமக்குத் துல்லியமாகக் காட்டுகிறார் இந்த வரிகளில், புதிய ருஷியா என்னும் பாடலில் --

“ சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி
அறங்கொன்று சதிகள் செய்த
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்,
புயற்காற்றுச் சூறைதன்னில்
திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்
விறகான செய்தி போலே.

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்தது பார்;
குடியரசு என்று உலகறியக் கூறிவிட்டார்;
அடிமைக்குத் தளையில்லை;
யாரும் இப்போது அடிமையில்லை அறிக என்றார்;
இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான்,
கிருத யுகம் எழுக மாதோ!

கிருத யுகம் என்றால் என்ன என்று, சாத்திரங்களை ஒதுக்கித் தள்ளி, பழமை வாதங்களைக் கடியும் வண்ணம் பாரதி காட்டுகின்ற புதிய வரையறை இதுவாகும்.

கிருத யுகம் என்றால் பிற்போக்குத் தனத்திற்குக் குறியீடாய்ப் பழமை வாதிகள் ஆக்கி வைத்த சொல்லாடலை, பாரதி எடுத்து புதிய வட்டில் அடித்துத் தருகிறான். புதிய பாரதத்தின் உருவாக்கத்திற்கும், முன்னேற்றப் பாதையில் புத்தொளி கண்டு உலக சமுதாயம் என்ற ஒற்றுமையில் மனித குலம் தழைப்பதற்கும் பாரதி செய்த மீட்புப் பணிகளில் இதுவும் ஒன்றாகும்.

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா



 
அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா!- 
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு
மணியே மணி மாணிக்கமே மதுசூதா!-
பணியாய் எனக்கு உய்யும் வகை-பரஞ்சோதீ             

(பெரிய திருமொழி)

Suba.T.

unread,
Nov 9, 2014, 2:47:15 AM11/9/14
to மின்தமிழ், Subashini Tremmel
இத்தகைய ஐயம் நீக்கும், தெளிவு தரும் பதிவுகள் சிந்தனைக்கு விருந்து.


2014-11-09 7:01 GMT+01:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
படைப்பு காலம் தொட்டு உலகம் நான்கு விதமான கால நிலைகளை மீண்டும் மீண்டும் அடைந்தபடியே வந்து கொண்டிருக்கிறது. இது போல் பிரளய காலம் வரையில் நடக்கும். பின்னர் பிரளயம் அதன் பின்னர் மீண்டும் படைப்பு, முன்னர் போலவே நான்கு கால நிலைகள் என்று இவ்வாறு கல்பம் தோறும் வட்டச் சுழற்சியாக நடந்துகொண்டிருக்கும் என்பது சநாதன தர்மத்தின் கருதுகோள். அந்த நான்கு கால நிலைகள் ஆவன, கிருத யுகம், திரேதை யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்பன. இதில் கிருத யுகத்தில் தர்மமானது நிறைந்து காணப்பட்டது, பின்னர் தர்மம் ஒவ்வொரு கால் பங்கு அடுத்த அடுத்த யுகத்தில் குறைந்து கலியில் கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்த நிலைக்கு வந்துவிடும். மீண்டும் கிருத யுகம் ஆரம்பித்து இப்படியே வட்டச் சுழற்சி போகும் என்று சொல்லப் படுகிறது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது குறைந்து வளர்ந்து கொண்டு வரும் என்று சொல்லப்பட்ட தர்மம் என்பது யாதெனில் வர்ண தர்மத்தை முக்கியமாக முன்னிறுத்தி அதன் நிழலாக வரையப்பட்ட சமுதாய வாழ்வு நெறிகளைத்தான் என்பது சநாதன தர்மத்தின் நூல்களில் தெரிய வருகிறது.

​இங்கு சநாதன தர்மத்தின் நூல்கள் எனக் குறிப்பிடப்படும் நூல்கள் யாவை என பெயர் குறிப்பிட்டால் என்னைப் போன்றோருக்கு மேலும் புரிந்து கொள்ள உதவும்.


எனவேதான் பாரதி பாடும் போது மிகக்கவனமாக இந்தக் கிருத யுகம் என்ற கருத்தைப் பாடுகிறான். தாம் எந்த விதமன சமுதாய நிலையை, மானிட நிலைப்பாட்டை கிருத யுகம் என்று அடையாளம் காண்கிறோம் என்று நமக்குத் துல்லியமாகக் காட்டுகிறார் இந்த வரிகளில், புதிய ருஷியா என்னும் பாடலில் --

“ சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி
அறங்கொன்று சதிகள் செய்த
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்,
புயற்காற்றுச் சூறைதன்னில்
திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்
விறகான செய்தி போலே.

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்தது பார்;
குடியரசு என்று உலகறியக் கூறிவிட்டார்;
அடிமைக்குத் தளையில்லை;
யாரும் இப்போது அடிமையில்லை அறிக என்றார்;
இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான்,
கிருத யுகம் எழுக மாதோ!

கிருத யுகம் என்றால் என்ன என்று, சாத்திரங்களை ஒதுக்கித் தள்ளி, பழமை வாதங்களைக் கடியும் வண்ணம் பாரதி காட்டுகின்ற புதிய வரையறை இதுவாகும்.

கிருத யுகம் என்றால் பிற்போக்குத் தனத்திற்குக் குறியீடாய்ப் பழமை வாதிகள் ஆக்கி வைத்த சொல்லாடலை, பாரதி எடுத்து புதிய வட்டில் அடித்துத் தருகிறான். புதிய பாரதத்தின் உருவாக்கத்திற்கும், முன்னேற்றப் பாதையில் புத்தொளி கண்டு உலக சமுதாயம் என்ற ஒற்றுமையில் மனித குலம் தழைப்பதற்கும் பாரதி செய்த மீட்புப் பணிகளில் இதுவும் ஒன்றாகும்.

​ஏன் இப்படி ஒரு புதிய டெஃபினிஷன் என, பாடலை வாசித்த  போதே  கேள்வி எழுந்தது. மேலுள்ள பத்தி காரணத்தை விளக்கு​வதாக இருக்கின்றது. 

சுபா

N. Kannan

unread,
Nov 9, 2014, 2:59:58 AM11/9/14
to mint...@googlegroups.com

On Nov 9, 2014 3:47 PM, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
>
> இத்தகைய ஐயம் நீக்கும், தெளிவு தரும் பதிவுகள் சிந்தனைக்கு விருந்து.
>
>

தெய்வமெனும் கருவே உருவகமாக இருக்கும் போது இவையெல்லாம் எந்த மாத்திரம்? காலத்திற்குக் காலம் புத்தாக்கம் அவசியம். வாழ்க அரங்கனார்!

க.

Sundaramurthy Murthy

unread,
Nov 9, 2014, 5:57:52 AM11/9/14
to mint...@googlegroups.com
The world drama is eternal. 1. Golden age ( Porkalam) or  sathyugam ,2 . silver age ( velli kalam)  or Theretha yugam, 3. Copper age ( seppu kalam  or ) Duvaparayugam , 4. Iron age ( Karkalam ) or Kaliyugam, Ethayum thandi oru yugam ulladu adu confluance age or diamond age or sangamayugam.. Now we are in end of the sangamayugam. It may finish at any monment./ This is   one full cycle or full sutru.or kalachakaram. Duration is 5000 years... It is  called one kalpa. It means one full cycle.
There  is difference between kalpa and  yuga.
one yugam = 1250 years i.e.,

Golden age = 1250 years
silver age = 1250 years
copper age = 1250 years
Iron age and diamond age 1250 years ( Iron age is 1150 years + Diamong age is 100 years In this Diamong age of 100 yeras world transformation will take place.

World transformation is already strated.
we are end of of this kalpa, 
Next very soon we will be in Golden age. For that we have to  follow Godly directions and we have to become pure.
we means  ATMA (souls). Not this physical baody, Everybody cant understand the secret of this. We need luck.
This is a great eternal drama.
secret of the DIVINE.
THE SUPREME GOD FATHER SHIVA.

Thanks fot the opportinuty brother God bless you.
Always remember  our Great Father Supreme SHIVA you will be selected soon by our Father Shivs Paramatma..

2014-11-09 11:31 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
படைப்பு காலம் தொட்டு உலகம் நான்கு விதமான கால நிலைகளை மீண்டும் மீண்டும் அடைந்தபடியே வந்து கொண்டிருக்கிறது. இது போல் பிரளய காலம் வரையில் நடக்கும். பின்னர் பிரளயம் அதன் பின்னர் மீண்டும் படைப்பு, முன்னர் போலவே நான்கு கால நிலைகள் என்று இவ்வாறு கல்பம் தோறும் வட்டச் சுழற்சியாக நடந்துகொண்டிருக்கும் என்பது சநாதன தர்மத்தின் கருதுகோள். அந்த நான்கு கால நிலைகள் ஆவன, கிருத யுகம், திரேதை யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்பன. இதில் கிருத யுகத்தில் தர்மமானது நிறைந்து காணப்பட்டது, பின்னர் தர்மம் ஒவ்வொரு கால் பங்கு அடுத்த அடுத்த யுகத்தில் குறைந்து கலியில் கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்த நிலைக்கு வந்துவிடும். மீண்டும் கிருத யுகம் ஆரம்பித்து இப்படியே வட்டச் சுழற்சி போகும் என்று சொல்லப் படுகிறது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது குறைந்து வளர்ந்து கொண்டு வரும் என்று சொல்லப்பட்ட தர்மம் என்பது யாதெனில் வர்ண தர்மத்தை முக்கியமாக முன்னிறுத்தி அதன் நிழலாக வரையப்பட்ட சமுதாய வாழ்வு நெறிகளைத்தான் என்பது சநாதன தர்மத்தின் நூல்களில் தெரிய வருகிறது.

நான்கு வர்ணங்கள் ஆவன பிராம்மண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணங்கள் என்பனவாம். இதன்படி, நான்கு வர்ணங்களின் தர்மங்களும் சற்றும் கெடாமல் குறையாமல் நடந்த காலம் கிருத யுகம் என்றும், விகிதமாகக் குறைந்து கொண்டே வந்து அநேகமாக இல்லை என்று ஆனது கலி யுகம் என்றும் தர்ம சாத்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் படிக்கிறோம். இதில் நான்கு வர்ணங்களும், ஒரு வர்ணத்தின் தர்மத்தை மற்ற வர்ணத்துக்காரர்கள் கைக்கொள்வதும் தவறு. சில ஆபத்துக் காலங்களில் தர்மங்கள் மாறலாம் என்றாலும் அப்பொழுதும் சூத்திர வர்ணத்தார் பிராம்மண தர்மத்தைக் கைக்கொள்ளுதல் அனுமதிக்கப்படவில்லை என்பது தர்ம நூல்களைப் படித்தால் தெரியவரும் விஷயம். பிராம்மணர்களும் தங்கள் தர்மங்களை கிருத யுகத்தில்தான் முழுமையாகக் கடைப்பிடிப்பார்கள், பிறகு அவர்களின் தர்ம அனுட்டானங்களும் குறைந்துகொண்டே வந்து கலி யுகத்தில் அநேகமாக இல்லை என்று ஆகிவிடும் என்றும் சொல்லப் படுகிறது.

ஆக, கிருத யுகம் என்றால் என்ன என்று யோசிக்கும் போது என்ன தெரியவருகிறது எனில், நான்கு வர்ணங்களின் தர்ம ஆசாரங்களும் ஒழுங்காக கெடாமல் கடைப்பிடிக்கப்படும் காலம் என்றும், பிராம்மண தர்மம் கெடாமல், தங்களாலோ, பிறராலோ அல்லது ஏதேனும் புறக் காரணங்களாலோ அவர்களது தர்மம் கெடாமல் நடைபெறும் காலம் கிருத யுகம் என்றும் அறிய முடிகிறது.

இன்னதுதான் கிருத யுகம் என்று அறிந்தோ அறியாமலோ (பலசமயம் அறியாமலேயே என்றுதான் நினைக்கிறேன்) பின் வந்த ஆசிரியர்களும், எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் கிருத யுகம் என்றால் ஏதோ பெரும் பொற்காலமான யுகம் என்று கற்பனைச் சித்திரம் எழும் வகையில் அதைப் பற்றி ஓர் ஏக்கத்துடன் தங்கள் அபிப்ராயங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். கிருத யுகம் என்றால் பொற்காலம் என்று இத்தகைய அபிப்ராயத்தை ஒட்டியே மக்களும் தங்கள் எண்ணங்களை வளர்த்து வந்துள்ளனர். பிராம்மணர்களில் பலரும் இத்தகைய நம்பிகையைச் சார்ந்துதான் தங்கள் எண்ணங்களைக் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி, பிராம்மணர்கள் மீது கூடுதலாக ஒரு குற்றமும் சுமத்தப்பட்டு வந்திருக்கிறது, சநாதன தர்மத்து ரீதியாகவே. என்னவெனில் அவர்கள் தங்களுடைய தர்மத்தை முழுவதும் கைக்கொள்ளாமல் விட்டதனால்தான் ஹிந்து சமுதாயம் இழிநிலை அடைந்து விட்டது என்றும், இதெல்லாம் கலி யுகத்துக் கேடுகள் என்றும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. பல ஆசிரியர்களும், சிந்தனையாளர்களும் ஹிந்து மதத்தில் கிருத யுகம் மீண்டும் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையைப் பிரதிபலிப்பவர்களாய் இருப்பதையும் காண்கிறோம்.

அப்படியென்றால் கிருத யுகம் உண்மையில் பொற்காலமா? அதை நோக்கியே நமது ஏக்கங்களை வளர்த்து விட்டிருக்கிறார்களே இது சரிதானா?

கிருத யுகம் என்று சொல்லப் பட்டிருப்பதைப் பார்த்தால் மனித சமுதாயத்தை வர்ணப் பிரிவினைகள் ஆக்கி, உயர்வு தாழ்வு என்று மனிதரிடையே எற்படுத்தி வைத்து அது முழுமையாக நடைபெற்ற காலம்தான் பொற்காலம், அதுவே கிருத யுகம், அது மீண்டும் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றால் அதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இன்று பிரிவினை உணர்ச்சிகள், வர்ண தர்ம அபிமானங்கள் ஆகியவற்றை தூர ஒதுக்கி மனித சமுதாயம் அனைத்தும் ஒன்று என்ற எண்ணத்துடன், அறிவிலும், தொழிலிலும், நம் நாட்டிலும் சரி, உலகெங்கிலும் சரி தங்களை வியக்கத்தக்க முறையில் முன்னேற்றிக்கொண்டு வந்திருக்கும் பிராம்மணர்களைப் பார்த்து நீங்கள் உங்கள் பிராம்மண தர்மத்தை முழுமையாகக் கடைப்பிடிக்காததால்தான் ஹிந்து சமுதாயம் துர்நிலை அடைந்து விட்டது என்று இந்த கிருத யுகமே பொற்காலம் என்ற அபிப்ராயத்தை வைத்துக்கொண்டு சொன்னால் அதில் என்ன பொருள் இருக்கிறது?

உண்மையில் மனித சமுதாயத்தில் அடிமைத் தனமும், பிரிவினை உணர்ச்சிகளும் நீங்கி, அறிவும் கலைகளும், விஞ்ஞானம், தொழில்நுட்பம், உலக சமுதாயம் என்ற மெய்மைகள் நடைமுறையில் வந்திருக்கும் நம் காலமன்றோ உண்மையில் பொற்காலம்! பொற்காலம்தான் கிருத யுகம் என்றால் நம் காலம் அல்லவோ உண்மையில் கிருத யுகம்?

சாத்திரங்களில் கிருத யுகம் போல் காட்டப்பட்டிருக்கும் காலம் உண்மையில் மிகவும் பிற்போக்கான காலமாக அல்லவோ தெரிகிறது.!

பிராம்மணத்துவம் என்பது உண்மையில் அறிவில் மேம்படுவதும், ஞானம் விஞ்ஞானம் என்பனவற்றில் சிறந்து விளங்குவதும், உலகனைத்தும் ஒருங்கு கூடிய ஒற்றுமை உணர்ச்சி ஓங்கப்பெற்ற நிலையும்தான் என்று சொன்னால் அது நம் காலத்திலன்றோ உண்மையாகி இருக்கிறது. அது மட்டுமில்லை அத்தகைய உண்மையான பிராம்மணத்துவம் மனிதர் அடையக் கூடிய தன்மை நிலையைக் குறிக்கிறது, பிறப்பைக் குறிக்கவில்லை என்று சொன்னால் உலகெங்கணும் அத்தகைய பிராம்மணத்துவமாகிய அறிவின் விழிப்பு ஏற்பட்டு மனித குலம் ஒன்று என்ற உலக நேயம் ஏற்பட்டிருப்பது நம்முடைய இந்தக் காலத்திலன்றோ?

பிறவியின் அடிப்படையில் பிராம்மணத்துவம் என்பதைக் கூறி அந்த பிராம்மண தர்மம் முழுமையாக இருந்த காலம் கிருத யுகம் என்று சாத்திரங்கள் சொல்லும் அந்தக் காலம் மிகவும் பிற்போக்கான காலமும். எந்த வித சிறப்பும் நன்மையும் அற்ற காலமும் என்றுதானே சொல்ல வேண்டும்?

எனவேதான் பாரதி பாடும் போது மிகக்கவனமாக இந்தக் கிருத யுகம் என்ற கருத்தைப் பாடுகிறான். தாம் எந்த விதமன சமுதாய நிலையை, மானிட நிலைப்பாட்டை கிருத யுகம் என்று அடையாளம் காண்கிறோம் என்று நமக்குத் துல்லியமாகக் காட்டுகிறார் இந்த வரிகளில், புதிய ருஷியா என்னும் பாடலில் --

“ சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி
அறங்கொன்று சதிகள் செய்த
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்,
புயற்காற்றுச் சூறைதன்னில்
திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்
விறகான செய்தி போலே.

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்தது பார்;
குடியரசு என்று உலகறியக் கூறிவிட்டார்;
அடிமைக்குத் தளையில்லை;
யாரும் இப்போது அடிமையில்லை அறிக என்றார்;
இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான்,
கிருத யுகம் எழுக மாதோ!

கிருத யுகம் என்றால் என்ன என்று, சாத்திரங்களை ஒதுக்கித் தள்ளி, பழமை வாதங்களைக் கடியும் வண்ணம் பாரதி காட்டுகின்ற புதிய வரையறை இதுவாகும்.

கிருத யுகம் என்றால் பிற்போக்குத் தனத்திற்குக் குறியீடாய்ப் பழமை வாதிகள் ஆக்கி வைத்த சொல்லாடலை, பாரதி எடுத்து புதிய வட்டில் அடித்துத் தருகிறான். புதிய பாரதத்தின் உருவாக்கத்திற்கும், முன்னேற்றப் பாதையில் புத்தொளி கண்டு உலக சமுதாயம் என்ற ஒற்றுமையில் மனித குலம் தழைப்பதற்கும் பாரதி செய்த மீட்புப் பணிகளில் இதுவும் ஒன்றாகும்.

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Kannan

unread,
Nov 9, 2014, 6:06:09 AM11/9/14
to மின்தமிழ்
சூப்பரோ சூப்பர்!
ரிஷிகளெல்லாம் கலிகாலத்தில் மலியப் புகுந்து உழி தந்து கொண்டு இருக்கிறார்கள்.
இராமகிருஷ்ணர், விவேகாநந்தர், அரவிந்தர், ரமணர், ஜே.கிருஷ்ணமூர்த்தி, வள்ளலார் என்ற ரிஷிகள் கூட்டத்தில்...
.
.
நீரும் ரிஷிதான் போம்!

நா.கண்ணன்

2014-11-09 16:24 GMT+08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:


ஆனால் இங்கு புரட்சி செய்பவர்கள் கையாளும் முறை முற்றிலும் வேறாக இருக்கிறது. பெரும் இரைச்சலும், வலுக்கட்டாயமும் இன்றி மிக அமைதியாகத் தங்கள் புரட்சியை நிலவ விட்டுப் போய்விடுகிறார்கள். 

அத்தகைய வைணவ தர்மத்தின் ரீதியாக கலிகாலம் என்றால் என்ன, கிருதயுகம் என்றால் என்ன என்று மாற்றுப் பொருள் தருகிறது வைணவ தர்மம்.

என்னும் இதுவே நம் காலத்தில் பாரதி காட்டித்தந்த கிருதயுகம் என்பதற்கான பொருள் என்பதைப் புரிந்து கொள்ளும் போது பாரதியின் மேதைமையைக் கண்டு நாம் வியக்காமல் இருக்க முடியாது.

***

தேமொழி

unread,
Nov 9, 2014, 6:23:11 AM11/9/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
கிருத யுகம் பற்றிய மீள்பார்வை மாற்றுக் கோணத்தை முன்வைக்கிறது.  அவ்வாறே கலியுகம் பற்றிய அலசலும்.

கலியுகம் என்றால் குற்றங்கள் மலிந்து அநீதி தலைவிரித்தாடிடும்  அழிவுப் பாதை (http://youtu.be/U72LMDwtKsY?t=2h54m13s) என்றே பொதுவில் அச்சுறுத்தப்பட்டுக் கேள்விப்பட்டுள்ளேன்.  

இக்கால மாறுதலில் உள்ள  நன்மைகளை நாம் தீயவைகளாகப் பார்க்கிறோமா என்ற கோணம் சிந்திக்க வைக்கிறது...நன்றி அரங்கனாரே.

நன்மை என்பதும் நன்மையல்ல, தீமை என்பதும் தீமையல்லதான்.  வரையறுத்தலின் அடிப்படை மாறினால் பாரதி சொல்வதே சரி. 



..... தேமொழி



On Sunday, November 9, 2014 12:24:33 AM UTC-8, Mohanarangan V Srirangam wrote:
கிருத யுகத்திற்கு பாரதியார் அளித்த பொருள் புரட்சிகரமானதாகத் தோன்றுகிறது. மக்களிடையே புழங்கிப் போன ஒரு சொல்லை, சாத்திரங்களில் வேறு ஒரு பொருளில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லை அவர் தாமாக இப்படி மாற்றுப் பொருள் தந்து பயன்படுத்தியிருப்பது முன் எவரும் செய்திராத ஒரு செயலா? இதைக் கொஞ்சம் ஆழ்ந்து நோக்குவோம்.

ஹிந்து மத பாரம்பரியத்திலேயே ஒரு விஷயம் நாம் கவனிக்க முடியும். என்னவெனில் அது பழமைகளின் மரபாக மட்டும் இல்லாமல் புரட்சிகளின் மரபாகவும் இருந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இங்கு புரட்சி செய்பவர்கள் கையாளும் முறை முற்றிலும் வேறாக இருக்கிறது. பெரும் இரைச்சலும், வலுக்கட்டாயமும் இன்றி மிக அமைதியாகத் தங்கள் புரட்சியை நிலவ விட்டுப் போய்விடுகிறார்கள்.

உதாரணத்திற்கு தர்ம சாத்திரங்களில் அம்ருதம் என்றால் என்ன என்று அர்த்தம் கூறும் போது அறுபடாத பிரஜைகளின் சந்ததிதான் உண்மையில் அம்ருதம் என்பது அதாவது இறவாமை என்பது என்று அர்த்தம் கூறுகிறார்கள். தம்தம் தர்மங்களைச் செவ்வனே இயற்றி அதனால் வரும் புண்ணியத்தால் நற்பேறு அடைவதுதான் மோக்ஷம் என்பது பழங் காலத்தில் தர்ம சாத்திரங்களின் கருத்து.

அடுத்து எழுச்சி பெறுகின்ற வேதாந்தப் பிரிவினர் இந்த அம்ருதம் என்றால் என்ன என்ற கருத்தை முற்றிலும் புதிய முறையில் மாற்றிச் சொல்லிவிட்டுப் போகின்றனர். ஒரே சொல் மக்களிடையே புழக்கத்தில் இருந்தது நாளடைவில் காலத்திற்குக் காலம் பொருள் மாற்றம் தரப்பட்டு அன்றைய நிலவரத்தில் எழுச்சி பெற்றிருக்கும் கருத்துலக ஆட்சியின் பார்வையைப் பிரதிபலிப்பதுவாகப் பயன்படுகிறது.

இந்தக் கலியுகம் என்னும் சொல்லையே எடுத்துக் கொள்வோம்: தர்ம சாத்திரங்களில் இதன் பொருள் என்ன என்று பார்த்தோம். வேதாந்தக் கருத்துலகம் எழுச்சி பெற்று விளங்கிய காலத்து வேதாந்த அளவுகோல்களுக்கு ஒத்துவராத வழிபாட்டு முறைகளான ஆகம நெறிகளை வேதங்களுக்கும், வேதாந்தத்திற்கும் முரணானவை என்று மறுக்கும் போக்கை நாம் வேதாந்திகளின் கருத்துலகத்தில் காண முடிகிறது. அப்படி மறுக்கப்படும் ஆகம நெறிகளும் பின்னர் தம்முடைய கருத்துலகத்தின் எழுச்சி மிகும் காலத்து, முன்னர் புழங்கிய சொற்களுக்கு முற்றிலும் தம் கருத்துலகத்திற்கு ஒவ்வியதான பொருளைத் தந்து பயன்படுத்தும் போக்கை நாம் ஒரு உதாரணத்தால் பார்க்கலாம்.

இந்தக் கலியுகம் கிருத யுகம் என்னும் சொல்லே தர்ம சாத்திரங்களில் வர்ண தர்மம் சார்ந்த பொருள் கொண்டது என்று பார்த்தோம். தர்ம சாத்திரங்களும், வேதாந்தக் கருத்துலகமும் வைணவ தர்மம் ஆகிய ஆகம ரீதியான கருத்து நெறியை மறுக்கவும் விமரிசிக்கவும் செய்யும் போக்கை உடையன.

கேவலம் உடல் சார்ந்த பிறவியின் அடிப்படையில் எழுந்த தர்ம சாத்திரக் கோட்பாடுகளுக்கும், ஆத்மாவின் இயல்பு, தன்மை என்னும் அடிப்படையில் அமைந்த தம் வைணவ தர்ம ஆசாரம் என்பதற்கும் இடையே உள்ள பார வித்யாசத்தை வைணவ தர்மமும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, ’சாதாரண வர்ண தர்ம நெறியைவிட வைணவ தர்மம் மிகச்சிறந்தது. பக்தியின் அடிப்படையில் அமைந்தது. எங்கு வைணவ தர்மம் செல்லுபடியாகுமோ அங்கு சாதாரணமான வைதிக தர்மம் செல்லுபடியாகாது’ என்றெல்லாம் மிக விளக்கமாகப் பதிந்து வைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் தமக்கான பக்த குழாத்தையும் ஒருங்கு திரட்டவும் செய்திருக்கிறது.

அத்தகைய வைணவ தர்மத்தின் ரீதியாக கலிகாலம் என்றால் என்ன, கிருதயுகம் என்றால் என்ன என்று மாற்றுப் பொருள் தருகிறது வைணவ தர்மம்.

அதாவது வைணவ நெறி தழைத்தோங்கும் காலமே, வைணவர்கள் மலிந்து காணப்படும் காலமே கிருதயுகம் என்றும், அதற்கு மாறான தர்மங்கள் ஓங்கி நிற்கும் காலம், வைண நெறி மங்கி இருக்கும் காலம் கலிகாலம் என்றும் புதிய பொருளை கலிகாலம் என்பதற்கும், கிருதயுகம் என்பதற்கும் வைணவ தர்மம் முன்வைத்திருக்கிறது.

இப்படித்தான் சைவம் சாக்தம் முதலிய ஆகம நெறிகள் என்றாலும் இங்கு உதாரணத்திற்கு நாம் வைணவ நெறியைக் காட்டுகின்றோம்.

நம்மாழ்வாரின் பாசுரம் ஒன்றான ‘கலியும் கெடும் கண்டு கொண்மின். கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல் இசை பாடி ஆடி உழிதரக் கண்டோம்’ என்று வரும் வரியில் கலியும் கெடுதல் என்றால் கலிகாலம் கெட்டு கிருதயுகம் வரும் நிலையைக் கூறும் ஆழ்வார் என்ன கூற வருகிறார்?, பழையபடி வர்ண தர்ம ஆசாரம் முழுமையாக நிலவும் காலம், அத்தகைய வர்ண தர்மம் கெட்ட காலத்தை கலிகாலம் என்று சொல்கிறரா என்று பார்த்தால், கலி என்பதைப் புதிய பொருளில் பயன்படுத்துகிறார்.

அதாவது வைணவ தர்மம் எழுச்சி பெறாமல் மர்ற தர்மங்கள் நிலவும் கலிகாலம் கெட்டு, வைணவ தர்மமே நிலவும் கிருதயுகம் வரும் என்று பாடுகிறார். இவ்வாறுதான் உரைகளும் கூறுகின்றன. ஆக அமைதியாகப் புரட்சிகளை நிலவ விட்டுவிட்டுப் போய்விடுகின்றனர் முந்தைய சான்றோர்கள். பழைய பிற்போக்கான சொற்களுக்குப் புதிய எழுச்சி மிகுந்த பொருளைக் காட்டிவிட்டுப் பாதையைத் திறந்து விடுகின்றனர். பழமையைக் கண்டித்தல் என்பதில் பெரிதும் ஈடுபடாமல், புதிய கருத்துகள் பழைய சொற்களுக்கு நிலவுவதே தன்னைப் போல் பழைய கருத்துகளுக்கான அமைதியான கண்டனமாக அமைத்து விடுகின்றனர். இதனால் தேவையற்ற எதிர்ப்புகள், முறியடிக்கும் முயற்சிகள் சக்தி விரயங்கள் தவிர்க்கப்பட்டு ஆக்க பூர்வமான ஈடுபாடுகளில் மக்கட் சமுதாயம் செலுத்தப்படும் என்பது அவர்களின் மார்க்கமாகத் தெரிகிறது.

நம் காலத்தில் அனைத்துலக மனித ஒற்றுமை, உலக நேயம் புதிய மனித குல மேம்பாட்டின் எழுச்சி என்று பெரும் கருத்துலகங்களின் விடியல் பேரொளி பாய்ச்சும் நம் காலத்தில் வந்த பாரதியார் சான்றோர்கள் கையாண்ட வழியையே நம் காலத்திற்கும் கையாண்டு பழைய சொற்களுக்குப் புதிய பொருள் காட்டுகிறார் என்பதை உணருங்கால் எத்தனை உவகை பயக்கிறது!

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்தது பார்;
குடியரசு என்று உலகறியக் கூறிவிட்டார்;
அடிமைக்குத் தளையில்லை;
யாரும் இப்போது அடிமையில்லை அறிக

N. Kannan

unread,
Nov 9, 2014, 7:36:33 AM11/9/14
to மின்தமிழ்
அன்பின் ரங்கன்:

சமகாலப் பிராமணர்களின் நிலை பரிதாபத்திற்குரியது.

உண்மையில் இந்திய சுதந்திர கால விழிப்புணர்வு, ஆங்கிலக் கல்வி, பொதுமைக் கல்வி, தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இவைகளை காலம், காலமாக கற்றலில் தேர்ந்த இந்த சமூகத்தை முழுமையாக மாற்றிவிட்டது. ஆனால் தான் மாறிவிட்டதை நினைத்து பெருமைப்படாமல் எதிர்வாதம் செய்து கொண்டு, பழமைக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு பழமைவாதிகள் சொல்வது உண்மையோ என்ற பழைய விசுவாசத்தில் இழுபட்டுக்கொண்டு இருக்கிறது. சமபந்தி போஜனம், வெகுஜனக் கோயில் திறப்பு, பின் தத்துவங்களுக்கான சரியான விளக்கம் தருதல், கடல் தாண்டிப் போதல், போன இடத்தின் கலாச்சாரத்தை உள்வாங்கி முன்னேறுதல், கலாச்சாரத்தாக்கம் தந்த பாடத்தை சுய முன்னேற்ரத்திற்கு பயன்படுத்துதல் என்று பல வழிகளில் முன்னேறி எங்கோ போய்விட்டது இச்சமூகம்! அதனால்தான் நான் தொடர்ந்து இப்போக்கை ஆதரித்து வருவது. அது வேர் பற்றால் அல்ல. உண்மையில் நான் வளர்ந்த காலத்திலேயே எங்கள் இரட்டை அக்கிரகாரத்தில் நான் நிறப்பிரிகை (discrimination) கண்டதில்லை. இது பின் சுதந்திரப் போக்கு என்றே சொல்ல வேண்டும். பிராமணர்களைப் பொறுத்தவரை இதுவே கிருத யுகம். இதில் நாடார் குலத்தையும் சேர்த்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால் ஜாதீயத்தை உயர்த்திப் பிடித்துக்கொண்டு மற்ற ஜாதிகள் இன்னும் ஏன் இழுபட்டுக்கொண்டு இருக்கின்றன எனத்தெரியவில்லை. 

தாங்கள், ‘யார் பிராமணன்?’ என்ற கேள்வியைத் தலைகீழாகப் போட்டுவிட்டீர்கள். தோற்றார் சோ!

நா.கண்ணன்

2014-11-09 19:49 GMT+08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
அடுத்து பல திசைகளிலிருந்தும் ஏச்சுகளையும், சொல்லெறிகளையும் தாங்கி வந்திருப்பவர்கள் இன்றைய பிராம்மணர்கள். இவர்கள் தாங்கள் காரணமற்ற விஷயங்களுக்கெல்லாம் தாங்கள் ஏச்சுக்கு இலக்காக ஆக்கப்படுவது ஒரு புறம் இருக்க, சநாதனத்தைச் சேர்ந்த பெரியோர்களிடமிருந்தே நவீன காலங்களில் மிகுந்த ஏச்சையும், கிண்டலையும் சந்தித்திருக்கின்றனர். காரணம் அறிவைப் பயன்படுத்தி, குறுகிய மனப்பான்மைகளை ஒதுக்கி உலகெங்கணும் பலவிதப்பட்ட மக்களூடும் இவர்கள் மனித ஒற்றுமை உணர்வோடு பழக ஆரம்பித்ததும், புதிய ஒளிகளை நாடிப் பயணம் செய்ததும், புதிய வாழ்முறைகளைத் தயங்காது ஏற்று, புதுப்புது திசைகளில் பயணம் செய்யத் தொடங்கியதும் ஆகும்.

பழமைவாதிகளுக்கு இது மிகுந்த கடுப்பை ஏற்படுத்தும் விஷயம் - நம்முடைய சநாதனமான பாரம்பரிய கட்டுப்பாடுகளை கைவிட்டு இப்படி நீங்கள் எல்லாம் பிராம்மணியத்திலிருந்து நழுவிய காரணம்தான் பல சீர்கேடுகளுக்கும் காரணம் - என்று இவர்கள் குர்றம் சாட்டும் வழக்கமான சொல். இதை நான் வெகு மூத்த தலைமுறைகள் பலரும் பலரிடமும் சொல்லக் கேட்டிருக்கிறேன். பல மடாதிபதிகளும் பீடாதிபதிகளும் கூறியதுண்டு. ஒரு காலத்தில் இதில் எல்லாம் ஓரளவு உண்மை இருக்குமோ என்றும் மயங்கியதுண்டு. ‘அந்தக் காலத்தில் ரிஷிகள் எல்லாம் எப்படி இருந்தார்கள். நாம்தான் ஞானம் ஆசாரம் முதலியவை கெட்டு இப்படி வேலைக்கு அலையும் ஜனங்களாக ஆகிவிட்டோமோ என்று நொந்ததும் உண்டு. சமுதாயத்தில் பழகினால் பண்டைய நாட்களில் செய்தவர்கள் காரணமாக இன்று தேவையர்ற சம்பந்தமர்ற பழிச்சொல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை, சநாதனத்தில் பழகினால் ஆசாரியர்கள், முன்னோர்கள் ஆகியோரிடமிருந்து ஆசாரங்களையெல்லாம் கைவிட்டு, தன் தர்மங்களையெல்லாம் விட்டுவிட்டு கீழ்நிலை அடைந்து விட்டதாய் குர்றம் சாட்டப்படுதல், மாறிவரும் உலக வாழ்க்கைக்கு ஏற்ப அன்றாட வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், அறிவு பூர்வமான உலக வாழ்வின் முன்னேர்றத்திற்கும் கடுமையாக உழைக்க வேண்டிய சூழல்கள், இதில் நமது பண்டைய மரபுகளாயிற்றே என்று சம்ப்ரதாயங்களில் ஈடுபட்டால் தேவையற்ற குர்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக்கப்படுதல் - இவையெல்லாம் சேர்ந்து இன்றைய பிராம்மணர்களை நலிகின்றன.

’உண்மையென்ன? ஏன் நான் சம்பந்தமே அர்ற ஏச்சுகள், குர்ற உணர்ச்சிகள் இவைகளுக்கு ஆட்படுத்தப்பட வேண்டும்? அப்படியென்ன பண்டைய சாத்திரங்களில் சொன்னவற்றுக்கு விரோதமாக நான் கீழ்நிலை அடைந்து விட்டேன்? பண்டை மறைகளில் எல்லாம் சொல்லியிருக்கும் தத்துவங்கள் ஆன ஞானம், விரிந்த உலகளாவிய அறிவு, அனைத்து உயிர்கள் பாலும் அன்பு, அனைவரையும் வேறுபாடு கருதாது சிநேகத்துடன் பழகுவது,தன்னுயிர் போல் மன்னுயிர்களைக் கருதுவது, வேறுபாடு கருதாத நட்பு, மனித குலத்தின் பால் அன்பான அக்கறை, இவையெல்லாம் பண்டைய மறைநூல்கள் கூறுவது உண்மையெனில் மர்ற எந்தக் காலத்தையும் விட இந்தக் காலத்தில்தானே, அவர்கள் யாரையும் விட இன்றைய பிராம்மணர்கள்தானே இவற்றை உயர்ந்த பட்சம் எய்தியிருப்பது. அன்றைக்கு இருந்தவர்கள் நூல்களில் எழுதியிருக்கலாம். ஆனால் நடைமுறை என்று வந்தால் பிரிவினை உணர்ச்சிகள்தாமே ஓங்கியிருந்திருக்கும்? எல்லைகளர்ற அன்பும், பழகுதலும் இன்றுதானே நடைமுறையில் காணமுடிகிறது? தங்கு தடையற்ற விரிந்த அறிவு, உலகம் தழுவிய பரந்த ஊக்கம் என்றால் இன்றைய பிராம்மணர்கள் பழைய நாட்களைச் சேர்ந்தவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சாதித்து விட்டனர். இத்தனைக்கும் அன்று இருந்த ’மக்கள் விரோதமான’ அம்சங்கள் எதுவும் இல்லாமல்! உலகெலாம் பரந்து பழகும் விசுவமனுஷ்யன் என்ற கருத்து பழம் நூல்களில்மட்டும்தான் இருந்தன. ஆனால் இன்றோ அதை இன்றைய பிராம்மணர்கள் நடைமுறையில் சாதிக்க முடிந்திருக்கிறதே!. இத்தனை முன்னேர்றமும் இன்றைய பிராம்மணர்களால் எல்லாவிதமான ஏச்சுகளுக்கும் நடுவில் அமைதியாகத் தங்கள் வாழ்க்கையில் இயற்றித் தங்களை உலகில் வெகுவான முன்னேர்றப் பாதையில் கொண்டு செல்ல முடிந்திருக்கிறது என்றால் உண்மையான ரிஷிகள் இவர்கள்தாமே! பிராம்மணத்துவம் என்றால் பிரம்மத்தைத் தொடருதல், பிரம்மம் என்றால் பெரிதினும் பெரிதான உலகளாவிய தத்துவம் எனில், இன்றைக்கு இருப்பவ்ரகள்தாம் உண்மையில் பிராம்மணர்கள். பண்டையோர்க்குக் கற்பனையாய் இருந்த உன்னத இலட்சியங்கள், உலக மானிடம் என்ற கருத்துருகள் இன்றுதானே நடைமுறையில் வருகின்றன?’ -- இவ்வாறெல்லாம் நானும் பலகால் கருதியதுண்டு. பலரும் நினைத்திருக்கக் கூடும்.

எனவே கிருதயுகம் என்பது, பிராம்மணர்கள் என்றவிதத்தில் பார்த்தாலும் உண்மையான அனைத்து மனித குல மேம்பாட்டிற்குப் பாடுபடும் உண்மையான பிராம்மணத்துவம், அதாவது திருக்குறள், புத்தர் கூறியது போல் அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் என்பதுதான் இலட்சியம் என்றால் நம் காலத்தில் நம்மால்தான் அது சாத்தியப்படுகிறதே அன்றி நம்மை நிலை தவறி கீழ்மைப்பட்டதாய்க் குறை கூறும் பழமைகளில் இது வெறும் பேச்சளவிலும் ஏட்டளவிலும் இருந்த விஷயமே. அன்று நடைமுறையில் கட்டாயமாக்கப்பட்ட பல பிரிவினை உணர்ச்சிகளை இன்று புறந்தள்ளிப் போக முடிகிறது.

எனவே பாரதியார் காட்டிய கிருதயுகம் என்பது நம் காலத்திலும் எதிர்காலத்திலும் நம்மால், அனைத்து மனித குலத்தாலும் சாதிக்கப்பட்டிருக்கும், சாதிக்கப்பட வேண்டிய பொற்காலமே அன்றி, பழங்காலங்களில் சாத்திரங்களில் சொல்லப்படும் கிருதயுகம் என்பது வெறும் பொருந்தாக் கூற்றேயாகும் என்று தோன்றுகிறது.

***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

வேந்தன் அரசு

unread,
Nov 9, 2014, 8:12:29 AM11/9/14
to vallamai, min tamil, தமிழ் வாசல்
மரபணு அறிவியல் சிறக்கும் போது  கொடியவர்கள்,  ஒழிந்து போவார்கள். நோய் நொடிகள் குறைந்து போகும். மேலைநாடுகளில் போல் இல்லாமை இல்லாமல் போகும்.  அதனால் கலியுகமே சிறந்த யுகமாக மாறும்.

9 நவம்பர், 2014 6:49 முற்பகல் அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:
அடுத்து பல திசைகளிலிருந்தும் ஏச்சுகளையும், சொல்லெறிகளையும் தாங்கி வந்திருப்பவர்கள் இன்றைய பிராம்மணர்கள். இவர்கள் தாங்கள் காரணமற்ற விஷயங்களுக்கெல்லாம் தாங்கள் ஏச்சுக்கு இலக்காக ஆக்கப்படுவது ஒரு புறம் இருக்க, சநாதனத்தைச் சேர்ந்த பெரியோர்களிடமிருந்தே நவீன காலங்களில் மிகுந்த ஏச்சையும், கிண்டலையும் சந்தித்திருக்கின்றனர். காரணம் அறிவைப் பயன்படுத்தி, குறுகிய மனப்பான்மைகளை ஒதுக்கி உலகெங்கணும் பலவிதப்பட்ட மக்களூடும் இவர்கள் மனித ஒற்றுமை உணர்வோடு பழக ஆரம்பித்ததும், புதிய ஒளிகளை நாடிப் பயணம் செய்ததும், புதிய வாழ்முறைகளைத் தயங்காது ஏற்று, புதுப்புது திசைகளில் பயணம் செய்யத் தொடங்கியதும் ஆகும்.

பழமைவாதிகளுக்கு இது மிகுந்த கடுப்பை ஏற்படுத்தும் விஷயம் - நம்முடைய சநாதனமான பாரம்பரிய கட்டுப்பாடுகளை கைவிட்டு இப்படி நீங்கள் எல்லாம் பிராம்மணியத்திலிருந்து நழுவிய காரணம்தான் பல சீர்கேடுகளுக்கும் காரணம் - என்று இவர்கள் குர்றம் சாட்டும் வழக்கமான சொல். இதை நான் வெகு மூத்த தலைமுறைகள் பலரும் பலரிடமும் சொல்லக் கேட்டிருக்கிறேன். பல மடாதிபதிகளும் பீடாதிபதிகளும் கூறியதுண்டு. ஒரு காலத்தில் இதில் எல்லாம் ஓரளவு உண்மை இருக்குமோ என்றும் மயங்கியதுண்டு. ‘அந்தக் காலத்தில் ரிஷிகள் எல்லாம் எப்படி இருந்தார்கள். நாம்தான் ஞானம் ஆசாரம் முதலியவை கெட்டு இப்படி வேலைக்கு அலையும் ஜனங்களாக ஆகிவிட்டோமோ என்று நொந்ததும் உண்டு. சமுதாயத்தில் பழகினால் பண்டைய நாட்களில் செய்தவர்கள் காரணமாக இன்று தேவையர்ற சம்பந்தமர்ற பழிச்சொல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை, சநாதனத்தில் பழகினால் ஆசாரியர்கள், முன்னோர்கள் ஆகியோரிடமிருந்து ஆசாரங்களையெல்லாம் கைவிட்டு, தன் தர்மங்களையெல்லாம் விட்டுவிட்டு கீழ்நிலை அடைந்து விட்டதாய் குர்றம் சாட்டப்படுதல், மாறிவரும் உலக வாழ்க்கைக்கு ஏற்ப அன்றாட வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், அறிவு பூர்வமான உலக வாழ்வின் முன்னேர்றத்திற்கும் கடுமையாக உழைக்க வேண்டிய சூழல்கள், இதில் நமது பண்டைய மரபுகளாயிற்றே என்று சம்ப்ரதாயங்களில் ஈடுபட்டால் தேவையற்ற குர்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக்கப்படுதல் - இவையெல்லாம் சேர்ந்து இன்றைய பிராம்மணர்களை நலிகின்றன.

’உண்மையென்ன? ஏன் நான் சம்பந்தமே அர்ற ஏச்சுகள், குர்ற உணர்ச்சிகள் இவைகளுக்கு ஆட்படுத்தப்பட வேண்டும்? அப்படியென்ன பண்டைய சாத்திரங்களில் சொன்னவற்றுக்கு விரோதமாக நான் கீழ்நிலை அடைந்து விட்டேன்? பண்டை மறைகளில் எல்லாம் சொல்லியிருக்கும் தத்துவங்கள் ஆன ஞானம், விரிந்த உலகளாவிய அறிவு, அனைத்து உயிர்கள் பாலும் அன்பு, அனைவரையும் வேறுபாடு கருதாது சிநேகத்துடன் பழகுவது,தன்னுயிர் போல் மன்னுயிர்களைக் கருதுவது, வேறுபாடு கருதாத நட்பு, மனித குலத்தின் பால் அன்பான அக்கறை, இவையெல்லாம் பண்டைய மறைநூல்கள் கூறுவது உண்மையெனில் மர்ற எந்தக் காலத்தையும் விட இந்தக் காலத்தில்தானே, அவர்கள் யாரையும் விட இன்றைய பிராம்மணர்கள்தானே இவற்றை உயர்ந்த பட்சம் எய்தியிருப்பது. அன்றைக்கு இருந்தவர்கள் நூல்களில் எழுதியிருக்கலாம். ஆனால் நடைமுறை என்று வந்தால் பிரிவினை உணர்ச்சிகள்தாமே ஓங்கியிருந்திருக்கும்? எல்லைகளர்ற அன்பும், பழகுதலும் இன்றுதானே நடைமுறையில் காணமுடிகிறது? தங்கு தடையற்ற விரிந்த அறிவு, உலகம் தழுவிய பரந்த ஊக்கம் என்றால் இன்றைய பிராம்மணர்கள் பழைய நாட்களைச் சேர்ந்தவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சாதித்து விட்டனர். இத்தனைக்கும் அன்று இருந்த ’மக்கள் விரோதமான’ அம்சங்கள் எதுவும் இல்லாமல்! உலகெலாம் பரந்து பழகும் விசுவமனுஷ்யன் என்ற கருத்து பழம் நூல்களில்மட்டும்தான் இருந்தன. ஆனால் இன்றோ அதை இன்றைய பிராம்மணர்கள் நடைமுறையில் சாதிக்க முடிந்திருக்கிறதே!. இத்தனை முன்னேர்றமும் இன்றைய பிராம்மணர்களால் எல்லாவிதமான ஏச்சுகளுக்கும் நடுவில் அமைதியாகத் தங்கள் வாழ்க்கையில் இயற்றித் தங்களை உலகில் வெகுவான முன்னேர்றப் பாதையில் கொண்டு செல்ல முடிந்திருக்கிறது என்றால் உண்மையான ரிஷிகள் இவர்கள்தாமே! பிராம்மணத்துவம் என்றால் பிரம்மத்தைத் தொடருதல், பிரம்மம் என்றால் பெரிதினும் பெரிதான உலகளாவிய தத்துவம் எனில், இன்றைக்கு இருப்பவ்ரகள்தாம் உண்மையில் பிராம்மணர்கள். பண்டையோர்க்குக் கற்பனையாய் இருந்த உன்னத இலட்சியங்கள், உலக மானிடம் என்ற கருத்துருகள் இன்றுதானே நடைமுறையில் வருகின்றன?’ -- இவ்வாறெல்லாம் நானும் பலகால் கருதியதுண்டு. பலரும் நினைத்திருக்கக் கூடும்.

எனவே கிருதயுகம் என்பது, பிராம்மணர்கள் என்றவிதத்தில் பார்த்தாலும் உண்மையான அனைத்து மனித குல மேம்பாட்டிற்குப் பாடுபடும் உண்மையான பிராம்மணத்துவம், அதாவது திருக்குறள், புத்தர் கூறியது போல் அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் என்பதுதான் இலட்சியம் என்றால் நம் காலத்தில் நம்மால்தான் அது சாத்தியப்படுகிறதே அன்றி நம்மை நிலை தவறி கீழ்மைப்பட்டதாய்க் குறை கூறும் பழமைகளில் இது வெறும் பேச்சளவிலும் ஏட்டளவிலும் இருந்த விஷயமே. அன்று நடைமுறையில் கட்டாயமாக்கப்பட்ட பல பிரிவினை உணர்ச்சிகளை இன்று புறந்தள்ளிப் போக முடிகிறது.

எனவே பாரதியார் காட்டிய கிருதயுகம் என்பது நம் காலத்திலும் எதிர்காலத்திலும் நம்மால், அனைத்து மனித குலத்தாலும் சாதிக்கப்பட்டிருக்கும், சாதிக்கப்பட வேண்டிய பொற்காலமே அன்றி, பழங்காலங்களில் சாத்திரங்களில் சொல்லப்படும் கிருதயுகம் என்பது வெறும் பொருந்தாக் கூற்றேயாகும் என்று தோன்றுகிறது.

***

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Dev Raj

unread,
Nov 9, 2014, 9:33:56 AM11/9/14
to mint...@googlegroups.com
On Sunday, 9 November 2014 05:12:29 UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
மரபணு அறிவியல் சிறக்கும் போது  கொடியவர்கள்,  ஒழிந்து போவார்கள். நோய் நொடிகள் குறைந்து போகும். மேலைநாடுகளில் போல் இல்லாமை இல்லாமல் போகும்.  அதனால் கலியுகமே சிறந்த யுகமாக மாறும்.


ராஜுகாரு,
அறிவியல் அற்புதம் நிகழ்த்தும்; புத்துலகம் பொன்னுலகமாகும் . அதை வரவேற்போம். 

மனத்தில் அமைதி பிறவாமல் புற  நிகழ்வுகளில் இன்பம் இல்லை என்று ஒரு சாராரின் வாதம்.
“சாந்தமுலேக ஸௌக்யமு லேது”

அறிவியல் முதிராத, சுக சாதனங்கள் இல்லாத 150
ஆண்டுக்கு முற்பட்ட தம் ஊரக வாழ்க்கை நிம்மதி
நிறைந்தது என்கிறார் டாக்டர் உ வே சா -

 .................எங்கள் ஊர். இப்போது உள்ள உத்தமதான புரத்துக்கும் ‘எங்கள் ஊர்’ என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும்
எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பலசௌகரியமான அமைப்புக்கள் அந்தக் காலத்தில் இல்லை; ரோடுகள் இல்லை;கடைகள் இல்லை; உத்தியோகஸ்தர்கள் இல்லை; ரெயிலின் சப்தம் இல்லை.ஆனாலும், அழகு இருந்தது; அமைதி இருந்தது; ஜனங்களிடத்தில் திருப்திஇருந்தது; பக்தி இருந்தது. அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது; வீடுகளில்லக்ஷ்மீகரம் விளங்கியது.  இவ்வளவு ரூபாயென்று கணக்கிட்டுச் சொல்லும் ஆஸ்தி அந்தக் காலத்து உத்தமதானபுர வாசிகளிடம் இல்லை; ஆயினும் நீரும் நிழலும் தானியங்களும் இருந்தன. அவர்களுடைய வாழ்க்கையில் வேகம் காணவில்லை;அதனால் ஒரு குறைவும் வந்து விடவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் சாந்தி இருந்தது.

இப்போதோ அந்தச் சாந்தியை எங்கேயோ போக்கிவிட்டு வெகு வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம்முடைய வேகம் அதிகரிக்க அதிகரிக்க அந்தச் சாந்திக்கும் நமக்கும் இடையிலுள்ள தூரம் அதிகமாகின்றதே யொழியக் குறையவில்லை.


தேவ்

தேமொழி

unread,
Nov 9, 2014, 4:08:37 PM11/9/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///
 உபநிஷத காலங்களில் பெண்களுக்கும் கல்வி இருந்தது. பெண்களும் வித்யைகளில் தேறி வாதம் புரிந்தனர். ரிக்வேதத்தில் பெண் கவிஞர்கள் பலரைப் பற்றிக் குறிப்புகள் உள்ளன என்றெல்லாம் சொல்வார்கள். 
///

ராஜம் கிர்ஷ்ணனின் 'காலந்தோறும் பெண்' என்ற நூலில் இருந்து 

*** அத்துடன் இதில் காணப்படும்  " iron prosthetic limb"  குறிப்பின் அடிப்படையில்  விஸ்பலா, அஸ்வினி தேவர்கள் ஆகியோரைக் குறிப்பிடும்  இவ்வேதகாலம் என்பது இரும்புக்காலம் என்றே  முடிவெடுக்க வேண்டி வருகிறது. கிடைத்துள்ள தடயங்கள் படி இந்தியாவில் இரும்பு காலம்  (1200 BC – 200 BC). கி.மு. 2000 முந்தியதாக   வேதகாலத்தை நாம் கொள்ள முடியாது என்பதன் அடிப்படையில் .... 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் (சற்றொப்ப 1000 + 2014 ) தெற்காசியாவில் பெண்கள் கல்வியிலும் வீரத்திலும் மிகச் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.  பசித்தவர் பழங்கணக்கு பார்க்க வேண்டியிருக்கிறது  :((

..... தேமொழி 



On Sunday, November 9, 2014 11:51:58 AM UTC-8, Mohanarangan V Srirangam wrote:
ஒரே ஒரு காரணம் போதும் பழைய கிருத யுகம் பொற்காலமன்று. இன்று இருக்கும் காலம்தான், இனிவரும் காலம்தான் உண்மையில் பொற்காலம் என்று முடிவுகட்ட. பெண்களுக்கான முன்னேற்றம், கல்வி, தன்னம்பிக்கை, சுதந்திரம் என்பது நம் காலத்தில் விளைந்ததுதானே அன்றி பழங்காலத்தில் அதற்கு இடம் கிடையாது. சாக்தம் இந்தப் பிரச்சனையை சொல்ல முயற்சி செய்தது. ஆனால் அது எடுத்துக்கொண்ட அணுகுமுறை வழிபாட்டு நெறி. அதனால் முக்கியமான பிரச்சனையில் அதனால் வெற்றி காண முடியவில்லை. உபநிஷத காலங்களில் பெண்களுக்கும் கல்வி இருந்தது. பெண்களும் வித்யைகளில் தேறி வாதம் புரிந்தனர். ரிக்வேதத்தில் பெண் கவிஞர்கள் பலரைப் பற்றிக் குறிப்புகள் உள்ளன என்றெல்லாம் சொல்வார்கள். தமிழ்ப் பண்பாட்டிலும் ஔவையார் போன்றவர்களைச் சொல்வார்கள். ஆனால் நிரந்தர நிலைமையாக, பெண்களின் வாழ்க்கை முறையை உயர்த்தும் முறையில் முன் எப்பொழுதும் நேர்ந்திராத வண்ணம் நடந்திருப்பது நம் காலத்தில்தான், பார்க்கப்போனால் பெண்களுக்கு எதிராகவும், அவர்களின் அடிப்படை உரிமைகளையே முற்றிலும் கவனத்திலிருந்து நீக்கி, அவர்களும் அதையெல்லாம் இழந்து வாழ்வதுதான் உத்தம தியாக வாழ்வு என்று மயக்கம் ஊட்டப்பட்டுதான் பண்டைய காலத்தில் நிலைமைகள் இருந்தன. எனவே அப்படிப்பட்ட நிலைமையின் முழுமை எப்படி பொற்காலம் என்று விவரிக்கத்தக்க முறையில் கிருத யுகம் என்று ஆகும்?

இன்றுதான் பொற்காலத்தின் ஆரம்பங்கள் என்று சொல்லத்தக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. உண்மையில் கிருதயுகம் என்று சிறந்த காலம் என்ற அர்த்தத்தில் சொல்வதென்றால் இன்றும் இனியும்தான் சொல்ல வேண்டுமே அன்றி பழங்காலங்களில் அன்று. இந்த விதத்தில் பார்த்தால் திருக்குறளில் கூட பெண்ணின் நிலைமை முன்னேற்றப் பார்வையில் கூறப்படவில்லை என்பது வருந்தத்தக்க ஒன்றுதான்.

***

செல்வன்

unread,
Nov 9, 2014, 4:21:20 PM11/9/14
to vallamai, mintamil
பாரதி கூறும் புதிய ரஷ்யா பின்னாளில் எப்பேர்ப்பட்ட மானுட விரோதமான சித்தாந்தம் ஆனது என்பதையும் அறிவோம். ஆனால் பாரதி காலத்தில் அதுவே புதிய எதிர்காலத்துக்கு ஆன வழிமுறையாக கருதபட்டு இருக்கலாம். முதலாளித்துவம் பிற்போக்கானதாக - அரங்கர் கூறும் கிருதயுகத்துக்கு ஒப்பானதாக- கருதபட்டு இருக்கலாம்.

கிருத யுகம் என்பது கிமு 500 வாக்கில் வாழ்ந்த மனிதர்களின் கற்பனை யுகம். காளண்டர் கண்டுபிடிக்கப்டாத காலகட்டத்தில் அது ஒரு காலகணிப்பு முறையாகவும் இருந்து இருக்கலாம். எப்படி பார்த்தாலும் கிருதயுகம், திரேதாயுகத்துக்கு இன்று செல்ல முயல்வதுக்கும் ஐசிஸ் தீவிரவாதிகள் காலிபேட்டை அமைக்க முயல்வதுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

மற்றபடி ஆண்/பெண் இருபாலினத்திலும் வலிமையானவர்கள் பெண்களே. எந்த காலகட்டத்திலும் அவர்கள் ஆண்களை விட நன்றாக தான் இருப்பார்கள். பெண்களின் வலிமை கத்தி எடுத்து போரிடுவதில் கிடையாது. அது ஆண்கள் செய்யும் வன்முறை. அத்தகைய வன்முறையாளர்களை தன் கட்டுபாட்டில் வைத்திருந்து தனக்கு காவலாக மாற்றியதே பெண் இனத்தின் வெற்றிக்கு அன்றும் வழிவகுத்தது, இன்றும் வழிவகுக்கிறது.



Oru Arizonan

unread,
Nov 9, 2014, 4:30:43 PM11/9/14
to mint...@googlegroups.com
;அன்பின் தேமொழி,

தாங்கள் குறிப்பு தந்திருப்பதுபோல பல நிகழ்ச்சிகள் புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.   

1.  நரகாசுரனை அழிக்க கிருஷ்ணனுக்கு உதவியது அவரது மனைவி சத்தியபாமா.
2.  பேரரசர் தயரதனின் தேர் அச்சு கழண்டபோது, தனது கையையே அச்சகப் பிடித்து, தயரதர் போரில் வெற்றி பெற உதவி, வரங்கள் வாங்கியவள் கைகேயி.
3.  மதுரை மலையத்வஜ பாண்டியனின் மகளாய் அவதரித்து, இமயம் வரை அரசர்களை வீழ்த்தியவள் மதுரை மீனாட்சி.
4.  ஆண் கடவுளர் எவராலும் கொல்லப்படமுடியாத வரம் பெற்ற மகிஷாசுசரனை வதைத்ததும் பெண் கடவுள்ர்களான மலைமகள், திருமகள், கலைமகள்தான்.

மேலும் யாக்ஞவல்க்யரை வேதத்தில் சிறந்தவர் என்று ஒரு மன்னர் அறிவித்தபோது, அவரைச் சோதனை செய்ய விழைந்தது இரு பெண்களே!  எந்த ஆணுமே துணியாத அச் செயலைச் செய்து, யக்ஞவல்க்யரை வேத அறிவில் சிறந்தவர் என்று அங்கீகரித்தவரும் அப்பெண்கள்தாம்.

ஒரு அரிசோனன் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Nov 9, 2014, 4:42:31 PM11/9/14
to mint...@googlegroups.com
உயர்திரு செல்வன்,

//எப்படி பார்த்தாலும் கிருதயுகம், திரேதாயுகத்துக்கு இன்று செல்ல முயல்வதுக்கும் ஐசிஸ் தீவிரவாதிகள் காலிபேட்டை அமைக்க முயல்வதுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.//

உற்சாகப் பெருக்கில் இந்து சமயத்தினரை -- அவர்கள் எவ்வளவு பழமை விரும்பிகளாக இருந்தாலும்சரி -- ஐ சி எஸ் தீவிரவாதிகளுடன் ஒப்பிடுவதை மிக, மிக அழுத்தம்திருத்தமாகக் கண்டிக்கிறேன்.  

  பழமை விரும்பிகள் ஐ சி எஸ் தீவிரவாதிகள் மாதிரி நடந்து கொண்டார்கள் என்று தகுந்த சான்றுடன் தங்களால் நிருபிக்க இயலுமா?

தாங்கள் இந்து சமயத்தையே ஒப்புக்கொள்ளவேண்டாம்.  அதில் உள்ள எந்த நற்கருத்துகளையும் ஒதுக்கலாம்.  ஆனால், பேச்சுரிமை இருக்கிறது என்று வன்முறையே வரலாறைக் கொண்டிருக்கும்,  மனிதநேயமே  சிறிதும் இல்லாத --  மாற்றான் மனைவியைத் தனது  அடிமையாக, பாலியல் பொம்மையாகக் கொள்ளும் ஒரு அமைப்புடன் ஒப்பிடுவது  எந்தவிதத்தில் நியாயம் என்றுதான் எனக்குப் புரியவில்லை.  

இழையைத் துவங்கிய --  ஆழ்வார் அமுதத்தை வாரி வழங்கிய, மதிப்பிற்குரிய மோகனரங்கன் அவர்களே!  தாங்கள் இப்படிப்பட்ட ஒரு வன்கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?  

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Nov 9, 2014, 5:18:25 PM11/9/14
to mint...@googlegroups.com

////
வன்முறையே வரலாறைக் கொண்டிருக்கும்,  மனிதநேயமே  சிறிதும் இல்லாத --  மாற்றான் மனைவியைத் தனது  அடிமையாக, பாலியல் பொம்மையாகக் கொள்ளும் ஒரு அமைப்பு
///

"மனித நேயம்" இந்துமதத்தில் "கடைபிடிக்கப்பட்டது"  என்பதை சதியால் உயிர்விட்ட பெண்களும், கோயிலில் நுழையவிடாமல் தடுக்கப்பட்டவர்களும் மீண்டெழுந்து வந்தால் ஒப்புக் கொள்வார்களா திரு. அரிசோனன்.

அடிப்படை வாழ்வுரிமைகளை மறுத்து கைமை வாழ்வு, மறுமணம் மறுப்பு போன்றவற்றை திணித்து  பெண்கள் வாழ்வில் பல அடிப்படை உரிமை மீறல்களை செய்ததும், சமூகத்தின் ஒரு பிரிவினரை ஒடுக்கி வைத்ததும் இந்துமதம் கற்பித்த மனித நேயமற்ற செயல்களே.  

இந்து மதம் என்பது ஒப்பற்ற உயர் நெறியாக இருந்தால் கொடுஞ்செயல்கள் அற்றதாக அல்லவா இருந்திருக்க வேண்டும். அயல்நாட்டில் இருந்து வந்து சட்டம் போட்டு பெண்களின் உயிர்களை மீட்டவர்களும்  இதே போலத்தான் முதலில் அதிர்ந்து போயிருப்பார்கள் அன்று என நினைத்தால் எனக்குக் கேவலமாக இருக்கிறது.  


..... தேமொழி 



On Sunday, November 9, 2014 1:42:31 PM UTC-8, oruarizonan wrote:
உயர்திரு செல்வன்,

//எப்படி பார்த்தாலும் கிருதயுகம், திரேதாயுகத்துக்கு இன்று செல்ல முயல்வதுக்கும் ஐசிஸ் தீவிரவாதிகள் காலிபேட்டை அமைக்க முயல்வதுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.//

உற்சாகப் பெருக்கில் இந்து சமயத்தினரை -- அவர்கள் எவ்வளவு பழமை விரும்பிகளாக இருந்தாலும்சரி -- ஐ சி எஸ் தீவிரவாதிகளுடன் ஒப்பிடுவதை மிக, மிக அழுத்தம்திருத்தமாகக் கண்டிக்கிறேன்.  

  பழமை விரும்பிகள் ஐ சி எஸ் தீவிரவாதிகள் மாதிரி நடந்து கொண்டார்கள் என்று தகுந்த சான்றுடன் தங்களால் நிருபிக்க இயலுமா?

தாங்கள் இந்து சமயத்தையே ஒப்புக்கொள்ளவேண்டாம்.  அதில் உள்ள எந்த நற்கருத்துகளையும் ஒதுக்கலாம்.  ஆனால், பேச்சுரிமை இருக்கிறது என்று வன்முறையே வரலாறைக் கொண்டிருக்கும்,  மனிதநேயமே  சிறிதும் இல்லாத --  மாற்றான் மனைவியைத் தனது  அடிமையாக, பாலியல் பொம்மையாகக் கொள்ளும் ஒரு அமைப்புடன் ஒப்பிடுவது  எந்தவிதத்தில் நியாயம் என்றுதான் எனக்குப் புரியவில்லை.  

இழையைத் துவங்கிய --  ஆழ்வார் அமுதத்தை வாரி வழங்கிய, மதிப்பிற்குரிய மோகனரங்கன் அவர்களே!  தாங்கள் இப்படிப்பட்ட ஒரு வன்கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?  

ஒரு அரிசோனன் 
2014-11-09 14:20 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:
பாரதி கூறும் புதிய ரஷ்யா பின்னாளில் எப்பேர்ப்பட்ட மானுட விரோதமான சித்தாந்தம் ஆனது என்பதையும் அறிவோம். ஆனால் பாரதி காலத்தில் அதுவே புதிய எதிர்காலத்துக்கு ஆன வழிமுறையாக கருதபட்டு இருக்கலாம். முதலாளித்துவம் பிற்போக்கானதாக - அரங்கர் கூறும் கிருதயுகத்துக்கு ஒப்பானதாக- கருதபட்டு இருக்கலாம்.

கிருத யுகம் என்பது கிமு 500 வாக்கில் வாழ்ந்த மனிதர்களின் கற்பனை யுகம். காளண்டர் கண்டுபிடிக்கப்டாத காலகட்டத்தில் அது ஒரு காலகணிப்பு முறையாகவும் இருந்து இருக்கலாம். எப்படி பார்த்தாலும் கிருதயுகம், திரேதாயுகத்துக்கு இன்று செல்ல முயல்வதுக்கும் ஐசிஸ் தீவிரவாதிகள் காலிபேட்டை அமைக்க முயல்வதுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

மற்றபடி ஆண்/பெண் இருபாலினத்திலும் வலிமையானவர்கள் பெண்களே. எந்த காலகட்டத்திலும் அவர்கள் ஆண்களை விட நன்றாக தான் இருப்பார்கள். பெண்களின் வலிமை கத்தி எடுத்து போரிடுவதில் கிடையாது. அது ஆண்கள் செய்யும் வன்முறை. அத்தகைய வன்முறையாளர்களை தன் கட்டுபாட்டில் வைத்திருந்து தனக்கு காவலாக மாற்றியதே பெண் இனத்தின் வெற்றிக்கு அன்றும் வழிவகுத்தது, இன்றும் வழிவகுக்கிறது.



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Nov 9, 2014, 5:27:54 PM11/9/14
to mint...@googlegroups.com
விஷயத்திற்கு வருவோம் தேமொழி!  உங்களைப் பொருத்தவரை இந்துசமயம் = ஐ எஸ் ஐ எஸ்.  அவ்வளவுதானே!

 உடன்கட்டை ஏறுவதை நீங்களும் ஒப்புக்கொள்ள வில்லை, நானும் ஒப்புக்கொள்ளவில்லை.  கோவிலில் தொழுவதற்கு வரும் அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும்.  இதில் நம் இருவரின் கருத்தும் ஒன்றுதான்.  You are barking (removing the bark) at the wrong tree!  Preaching to the choir!

எச்சமயத்திலும் மோசமானவர்கள் உண்டு.  கலியுகத்தில் அது அதிகமாகவே உண்டு.  என் கேள்வி அதைப் பற்றி அல்ல.

கிருத யுகம் = ஐ எஸ் ஐ எஸ்(?) என்பதுதான் கேள்வி. இந்து சமயம் ஐ எஸ் ஐ எஸ் மாதிரி ஆயிரக்கணக்கானவர்களை அடிமை செய்ததா, மாற்றான் மனைவியை அடிமையாகி வன்புணர்ச்சி செய்ததா (wholesale) என்பதே கேள்வி!

ஒரு அரிசோனன் 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Nov 9, 2014, 5:50:23 PM11/9/14
to mint...@googlegroups.com
மத அடிப்படையில், எந்த ஒரு மதத்தையும் ஒன்று உயர்வு என்றும் ஒன்று தாழ்வு என்றும் கருதுவது வீண்... வெட்டி வேலை....

எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

என் கணிப்பில் மதம் மனித குலத்திற்கு உதவியது மிகச் சொற்பம், மாறாக மத நம்பிக்கையால்  விளைந்த  தீமைகளே அதிகம். 


வரலாற்றில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மதத்திலும் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன.


இந்தியாவில் ஒரு அரசர் வெற்றி பெற்றதும் தோல்வியடைந்த அரசரின் அந்தப்புர பெண்களின் கதி என்ன? எதை எதிர்பார்த்து அவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள்?  

அவ்வாறு உயிர் விடாதவர்கள் கதி என்னவாயிற்று? இது விளக்கும் இந்துமதப் பின்னணி உள்ளவர்கள் எப்படி நடந்து கொண்டிருப்பார்கள் என்று. 

இந்திய அரசர்கள் பெரும்பாலோர் எந்த மதத்தைத் தழுவியவர்கள்?  போர்காலங்களில் என்னென்ன வன்முறைகள் நிகழ்ந்தன ...


இன்று நமக்கு சிங்களவர் செய்வது தெரிய வருகிறது.  தொலைக்காட்சி படம் பிடித்துப் போட்டு நாற அடிக்கிறது.

அவர்களும் அன்பு நெறி என்ற மதத்தைச் சார்ந்தவர்களே.

ஹிட்லரும் ஒரு மதத்தின் அடிபடையில் வன்முறை நிகழ்தியவரே. 


இதில் இந்து மதமென்ன?  புத்தமதமென்ன?  இஸ்லாமிய அல்லது கிறிஸ்துவ மதமென்ன? 


.... தேமொழி

Oru Arizonan

unread,
Nov 9, 2014, 6:03:03 PM11/9/14
to mint...@googlegroups.com
//இந்தியாவில் ஒரு அரசர் வெற்றி பெற்றதும் தோல்வியடைந்த அரசரின் அந்தப்புர பெண்களின் கதி என்ன? எதை எதிர்பார்த்து அவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள்?//

இது வேற்று சமயத்தார் இந்தியாவில் படையெடுத்து வந்துபோது நிகழ்ந்தது.  பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், சிறுமைப்படுத்தப்படவில்லை.  தங்கள் கணவர் வீர மரணம் அடைந்தபோது சில வீரப் பெண்மணிகள் உடன்கட்டை ஏறியது உண்டு.  இராஜேந்திர சோழனின் மனைவி வீரமகாதேவியும் அப்படிப்பட்டவரே.  
எந்த ஒரு தமிழ்/இந்து அரசனும் மற்றவர் மனைவியை அடிமைகொண்டதில்லை.

//என் கணிப்பில் மதம் மனித குலத்திற்கு உதவியது மிகச் சொற்பம், மாறாக மத நம்பிக்கையால்  விளைந்த  தீமைகளே அதிகம். //

பல லட்சம் பேர்கள் சைபீரியாவுக்கு அனுப்பிக் கொலை செய்த ஸ்டாலின் ஒரு நாத்திகன்தானே!  அவன் எந்த மதநம்பிக்கையால் அதைச் செய்தான்?  

கொடியவர்கள் எந்த சமயத்திலும் உள்ளார்கள்.  மீண்டும் வாதத்தை ஏன் திசை திருப்புகிறீர்கள்?  என் கேள்விக்கென்ன பதில்?

கிருத யுக இந்து சமயம் = ஐ எஸ் ஐ எஸ் (?)  

இதற்கு உங்களிடம் இருந்து பதில் இல்லை.

ஒரு அரிசோனன்

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Nov 9, 2014, 8:01:21 PM11/9/14
to mint...@googlegroups.com
///
கிருத யுக இந்து சமயம் = ஐ எஸ் ஐ எஸ் (?)  

இதற்கு உங்களிடம் இருந்து பதில் இல்லை.
///



:)))

புரியவில்லையே !!! இது செல்வன் சொன்தல்லவா ?  என்னிடம் எதற்கு விளக்கம் எதிர்பார்க்கிறீர்கள் திரு. அரிசோனன் ?

என்னைப் பொறுத்தவரை எல்லா மதமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்.   

சொன்னதன் நோக்கம்... பிற மதம்  தரக்குறைவானது போன்ற நோக்கத்தில் இந்து மதத்துடன் ஒப்பிட நினைத்தால் அது உதவாது. 

இந்து மதத்தின் கடந்தகால  செயல்களையும் கருத்தில் கொண்டு ...

அதனை  அத்தனை மதங்களின் வரலாற்றுடனும், அவை  யாவும் மனித நேயத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும்  அவ்வப்பொழுது நிகழ்த்திய செயல்கள் யாவையும்  மனதில் கொண்டு பிறகு இந்து மதத்துடன் ஒப்பிட நினைவூட்டினேன்.

நல்லவற்றையும் தீயவற்றையும் அதனதனுடன் ஒப்பிடலாம்.  ஒன்றின் தீயதையும் மற்றதன் நல்லதையும் ஒப்பிட எடுத்துக் கொள்வது சரியாகாது. 


நீங்கள் உங்களுடைய கருத்து இந்துமதத்தின் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டது என்று கூறி (விஷயத்திற்கு வருவோம்... என்று கூறி) உங்களை இந்து மதத்தின் கடந்தகாலப் பின்னணியில் இருந்து விடுவித்துக் கொண்டீர்கள்.  

தனிப்பட்ட மனிதர்கள் தங்கள் மதத்தின் மீதோ பிற மதங்களின் மீதோ கொண்ட கருத்துக்களை ஒப்பிடாமல் (இந்த ஒப்பீடு சார்புடையாத மாறிவிடும்) 
வரலாறு மதங்களின் நடவடிக்கை பற்றி என்ன என பதிவு செய்திருக்கிறது என்று பார்ப்பதே  உதவும்.

பொதுவாக எந்த மதமும் ...இந்து மதம் உட்பட மக்களை நல்வழிபடுத்தும் எண்ணத்தினால்  "மனிதர்களால்" உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.  பின்னர் வந்தவர் சுயநலத்தினால் தடம் மாற்றி கொண்டு சென்றதுதான் வரலாறு.  



////பழமை விரும்பிகள் ஐ சி எஸ் தீவிரவாதிகள் மாதிரி நடந்து கொண்டார்கள் என்று தகுந்த சான்றுடன் தங்களால் நிருபிக்க இயலுமா?////

அத்துடன், குஜராத் கலவரம், பாப்ரி மஸ்ஜித் நிகழ்வுகளை நான் இன்னமும் மறக்கவில்லை.



///பல லட்சம் பேர்கள் சைபீரியாவுக்கு அனுப்பிக் கொலை செய்த ஸ்டாலின் ஒரு நாத்திகன்தானே!  அவன் எந்த மதநம்பிக்கையால் அதைச் செய்தான்?  ///


பிறகு ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் என்னதான் வேறுபாடு?  இதுவரை மதம் என்ன வேறுபாட்டைக் கொண்டு வந்திருகிறது? 
நீங்கள் நாத்திகர் எனத் தனிப்படுத்தப்படும் ஒரு மனிதரின் செயல் போல மனித நேயமற்ற செயலில் ஈடுபட மதம் என்ற பின்னணி எதற்கு?

ஒரு குற்றம் நிகழ்த்தப் பட்டால் அது மனிதர்களின் நாகரீகமற்ற பக்கத்தைக்  காட்டுகிறது.  

அடிப்படையில்....மத நம்பிக்கை உள்ளவர்களிலும், மத நம்பிக்கை அற்றவர்களிலும் நல்லவர்களும் கொடூரர்களும் இருக்கிறார்கள். இதுதான் உண்மை.

Dev Raj

unread,
Nov 9, 2014, 10:57:28 PM11/9/14
to mint...@googlegroups.com
சுலபா எனும் யோகம் தேர்ந்த பெண்மணி  ஒருத்தி
அவை நடுவில் ஜனக மன்னரைச் சோதித்துப் பார்த்துத் 
தெளிவு பெற்ற நிகழ்ச்சியை பாரதம் சாந்தி பர்வம் 
சொல்கிறது; யுகபுருஷர் ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் 
வாழ்விலும் பைரவி பிராம்மணி எனும் யோகினி 
இடைப்படுகிறார்.மகளிருக்குத் தடை 
இருந்ததாகத் தெரியவில்லை.

சதி [அ] ஸஹகமநம் கட்டாயச் சடங்கு என்றால் குந்திதேவியார்
ஏன் உடன்கட்டை ஏறவில்லை ? தயரதன் தேவியர் ஏன்
உயிர் வாழ முடிவு செய்தனர் ? 

தனியாக இது குறித்து எழுத விருப்பம்.பிற்காலத்தில் குழறுபடிகள்
நேர்ந்துள்ளன. மறுப்பில்லை
 

தேவ்

செல்வன்

unread,
Nov 9, 2014, 11:11:23 PM11/9/14
to mintamil
கிருத யுக இந்து சமயம் ஐசிஸுக்கு சமம் என நான் எழுதவில்லை.

பொதுவாக காலத்தால் பின்னோக்கி சென்று "பொற்கால ஆட்சி" ஒன்று பழங்ங்காலத்தில் நிலவியதாக கருதி தற்காலத்திலும் அதை நிறுவ முயலும் மனபான்மையையே நான் சுட்டி காட்டினேன். ஒரு மதமும் சமூகமும் காலத்தால் முன்னோக்கி செல்ல வேண்டுமே ஒழிய பின்னோக்கி செல்ல கூடாது. மற்றபடி எனக்கு தெரிந்து எந்த இந்துவும் இப்போது கிருதயுகத்தை நிறுவவேண்டும் என கூறுவது கிடையாது. அரங்கர் கூறியது போல் நாலு வர்ணத்தை மீண்டும் நிறுவவேண்டும் என யாராவது கூறினால் அவர்களுக்கு மாத்திரமே என் உதாரணம் பொருந்தும்.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Nov 10, 2014, 12:00:32 AM11/10/14
to mintamil

2014-11-09 22:32 GMT-06:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
எனவே பழங்காலத்தில் எவ்வளவோ நிலைகளைக் கடந்து, பல பாடங்களைக் கற்று, தன் தவறுகளைத் திருத்தி, அனுபவங்களைப் பயன்கொண்டு இன்றைய நிலையில் நாம் கண்டு வியக்கும் பரந்தமனப்பான்மை கொண்டதாக இருக்கிறது ஹிந்து மதம் என்றுதான் தோன்றுகிறது.


இதை மனதில் வைத்து தான் நானும் கிருதயுகம் குறித்து எழுதினேன்.

தற்போது உலகில் இருக்கும் சமயங்களில் அதிக அளவில் ஜனநாயகம் நிலவும் சமயம் எனில் இந்து சமயத்தை கூற இயலும். இதை கிருதயுகத்துக்கு கொண்டு சென்றால் எத்தனையோ ஆயிரம் ஆண்டு வளம் பொருந்திய இலக்கிய செல்வங்களை இழந்துவிடுவோம். கிருதயுகத்தில் பிள்ளையார் இல்லை, ஆழ்வார் பாடல்கள் இல்லை, வெண்ணெய் உண்ட கண்ணன் இல்லை. ஒளவையார் இல்லை. அத்தகைய உலகில் என்ன மகிழ்ச்சி இருந்துவிட போகிறது? :-)


--

செல்வன்

unread,
Nov 10, 2014, 12:08:49 AM11/10/14
to mintamil
உங்கள் கட்டுரைகளை படிப்பதே சர்க்கரை உண்பதுக்கு ஒப்பானதுதான் அரங்கரே!

அந்த சர்க்கரையையே தொடர்ந்து வழங்குங்கள். அதுவே போதும்

2014-11-09 23:03 GMT-06:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
கிருதயுகத்தில் பிள்ளையார் இல்லை, ஆழ்வார் பாடல்கள் இல்லை, வெண்ணெய் உண்ட கண்ணன் இல்லை. ஒளவையார் இல்லை. அத்தகைய உலகில் என்ன மகிழ்ச்சி இருந்துவிட போகிறது? :-)
>>>>>>>>>>>

யாரப்பா அது? திரு செல்வனின் வாய்க்குச் சர்க்கரை போடுங்கள்.

ஹாட்ஸ் ஆஃப் செல்வன் :-)



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Nov 10, 2014, 12:11:08 AM11/10/14
to mint...@googlegroups.com
//நிச்சயமாக இன்றைய மதத் தீவிர வாத இயக்கங்களுடன் இந்தியாவின் பழமை விரும்பிகளின் மனப்பாங்கை ஒப்பிட முடியாது.//

மதிப்பிற்குரிய மோகனரங்கன் தனது நிலைமையைத் தெளிவாக்கியமைக்கு நன்றி.  

//பண்டைய இதிகாசங்களில் வரும் சில இடங்களை வைத்துப் பார்த்தால் சில சமயம் இப்படியும் நடந்திருக்கிறதா என்று தோன்றுகிறது.//

எனக்கும் சிலசமயம் அப்படிப்பட்ட கேள்விகள் மனதில் எழுவதுண்டு.  இராமாயண உத்தரகாண்டத்தில் நிறைய இடைச்செருகல்கள் ஏற்பட்டிருப்பதாகப் பலரும் சொல்லுவர்.  எனவே, தங்கள் பதிவுக்கு எவ்வித மறுமொழியும் சொல்ல இயலாத நிலைதான் எனக்கு.

தாங்கள் குறிப்பிடுவதுபோல, காலத்திற்குத் தகுந்தவாறு சமயக் கோட்பாடுகளும் மாறுதல் அடைந்துகொண்டுதான் வருகின்றன.  அவ்வகையில், வேத காலத்திலிருந்து (உபநிஷத்துகள் எழுதப்பட்ட காலத்திலிருந்து) தர்க்க வாதங்கள் செய்தே, சமயக் கருத்துகள் நிலனாட்டப்பட்டுள்ளன.  (துவைதம், விசிஷ்டாத்த்வைதம், அத்வைதம், சைவ சித்தாந்தம் போன்றவை).  அவ்வகையில், இந்து சமயம் கேள்வியை என்றும் தடை செய்ததில்லை.  அப்படி மற்ற எந்த சமயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

உயர்திரு செல்வன் அவர்களே,

//எப்படி பார்த்தாலும் கிருதயுகம், திரேதாயுகத்துக்கு இன்று செல்ல முயல்வதுக்கும் ஐசிஸ் தீவிரவாதிகள் காலிபேட்டை அமைக்க முயல்வதுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.//

என்றுதான் தாங்கள் முதலில் எழுதினீர்கள்.  பின்னர் 

//கிருத யுக இந்து சமயம் ஐசிஸுக்கு சமம் என நான் எழுதவில்லை.//

என்று எழுதி உள்ளீர்கள். திரேதா, கிருத யுகங்களுக்குச் செல்வது ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் காலிபேட்டை அமைக்க முயல்வதற்கு ஒப்பானால்  திரேதா, கிருத யுக இந்து சமயம் ஐ இச் ஐ எஸ் அமைக்க முயலும் காலிபேட்  என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்?  

தாங்கள் அப்படி எழுதியது ஒரு வேகத்தினால் என்றும், இப்பொழுது அப்படி எண்ணவில்லை என்றால் அதற்குமேல் சொள்வதற்கு ஒன்றும் இல்லை.

//நாலு வர்ணத்தை மீண்டும் நிறுவவேண்டும் என யாராவது கூறினால் அவர்களுக்கு மாத்திரமே என் உதாரணம் பொருந்தும்.//

இதுவும் தவறான புரிதல் என்றே நான் கருதுகிறேன்.  பகவத் கீதை வர்ணம் என்பது ஒருவரின் உள்ளக்கிடக்கை என்றே கூறுகிறது.  அது பிறப்பு வழி வருவதில்லை.  பின்னர், அறியாமையினால் அப்படி ஆக்கப்பட்டது.  மதிப்பிற்கு உரிய மோகனரங்கன் கீதையிலே சில எடுத்துக்காட்டுகளைக் காட்டி நான் எழுதியதை முன்பு மறுத்துள்ளார்.  ஆயினும், நான் வர்ணம் என்று கீதை கூறுவது மனக்கிடக்கை என்றே கொள்கிறேன்.  எவரும் தனது மனப்பங்குக்கொத்த பணியை ஆற்றுவது அதில் அவரைச் சிறக்க வைக்கும் என்பதே எனது துணிவு.

என்று உயர்வு, தாழ்வு பேசப்பட்டதோ, அப்பொழுதுதான் குழப்பங்களும், தீமைகளும் விளைந்தன.  இவ்வகையில் நான் ஒருவர் ஆற்றும் பணியை வைத்து உயர்வு தாழ்வு காட்டுவதை வன்மையாக எதிர்க்கிறேன். 

 நாம் எதிலும் உள்ள தீமையைக் களையவேண்டுமே தவிர, "மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தக்கூடாது" என்றே நினைக்கிறேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

2014-11-09 21:32 GMT-07:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:


2014-11-10 3:12 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
,


  தாங்கள் இப்படிப்பட்ட ஒரு வன்கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?  

ஒரு அரிசோனன் 

ஹிந்து மதம் மத விஷயங்களில் கருத்து சுதந்திரம் உள்ளது. மாறுபட்ட கருத்துகள் இங்கு வன்முறை இல்லாமல் வாதங்கள் மூலம் தங்கள் நிலைப்பாட்டை நிறுவிக் கொண்டனர் என்னும் இந்தப் பொதுக் கருத்து இன்றைய தேதியில் வைத்துப் பார்த்தால் சரியெனப்படுகிறது. பல அறிஞர்களும் அவ்வாறே கருதியுள்ளனர்.

நிச்சயமாக இன்றைய மதத் தீவிர வாத இயக்கங்களுடன் இந்தியாவின் பழமை விரும்பிகளின் மனப்பாங்கை ஒப்பிட முடியாது. திரு செல்வனும் பிற்போக்குத்தன்மை கொண்டது என்னும் அமிசத்தில் ஒப்பிட விரும்புகிறாரோ என்று நினைக்கிறேன். அவரும் அதை அப்படியே கருதிச் சொல்கிறாரா என்பது சந்தேகமே. எப்படியாயினும் இன்றைய நிலையில் ஹிந்து மதத்தின் ஜனநாயகத் தன்மை என்பது உலக மதச் சமுதாயங்களுக்கு ஒரு முன் மாதிரி என்பதில் சந்தேகமில்லை. (அதைச் சில சக்திகள் மார்றிவிடாமல் இருக்க ஆண்டவன் அருள்வாராக)

ஆனால் பண்டைய இதிகாசங்களில் வரும் சில இடங்களை வைத்துப் பார்த்தால் சில சமயம் இப்படியும் நடந்திருக்கிறதா என்று தோன்றுகிறது. உதாரணம், யுதிஷ்டிரன் அவையில் சார்வாகனைப் பிராம்மணர்கள் எரித்த நிகழ்வு. சம்பூகன் தவ வாழ்க்கை மேற்கொண்டான் என்பதற்காக கேள்வி விசாரம் எதுவும் இன்றி ராமன் அவனைக் கத்தியால் தலையைக் கொய்ததாக உத்தர காண்டத்தில் வருகின்ற வர்ணனை. காரணம் சம்பூகன் தவ வாழ்க்கை மேற்கொண்டதால் ஒரு பிராம்மணனின் பிள்ளை இறந்து விட்டதாகக் குற்றச்சாட்டு. அப்பொழுது ராமராஜ்யம் என்பதே எத்தகைய தன்மை கொண்டது என்பது பெரும் கேள்விக் குறியாகிவிடுகிறது.

எனவே பழங்காலத்தில் எவ்வளவோ நிலைகளைக் கடந்து, பல பாடங்களைக் கற்று, தன் தவறுகளைத் திருத்தி, அனுபவங்களைப் பயன்கொண்டு இன்றைய நிலையில் நாம் கண்டு வியக்கும் பரந்தமனப்பான்மை கொண்டதாக இருக்கிறது ஹிந்து மதம் என்றுதான் தோன்றுகிறது.

***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Kannan

unread,
Nov 10, 2014, 12:16:13 AM11/10/14
to மின்தமிழ்
2014-11-10 13:03 GMT+08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
கிருதயுகத்தில் பிள்ளையார் இல்லை, ஆழ்வார் பாடல்கள் இல்லை, வெண்ணெய் உண்ட கண்ணன் இல்லை. ஒளவையார் இல்லை. அத்தகைய உலகில் என்ன மகிழ்ச்சி இருந்துவிட போகிறது? :-)
>>>>>>>>>>>

யாரப்பா அது? திரு செல்வனின் வாய்க்குச் சர்க்கரை போடுங்கள்.

ஹாட்ஸ் ஆஃப் செல்வன் :-)


செல்வன் செல்வப்பிள்ளையாச்சே! சொன்னது தப்புமா?
ஆண்டவனே அவதாரம் எடுப்பது போரடிச்சுப் போவதால் என்பது பிரம்ம ரகசியம் ;-)

க.> 

செல்வன்

unread,
Nov 10, 2014, 12:24:09 AM11/10/14
to mintamil

2014-11-09 23:10 GMT-06:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
திரேதா, கிருத யுகங்களுக்குச் செல்வது ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் காலிபேட்டை அமைக்க முயல்வதற்கு ஒப்பானால்  திரேதா, கிருத யுக இந்து சமயம் ஐ இச் ஐ எஸ் அமைக்க முயலும் காலிபேட்  என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்?  


இரண்டும் பழங்காலத்தில் நிலவிய "கோல்டன் ஏஜ்" எனும் வகையில் ஒன்றே.

ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு காலக்ட்டம் பொற்காலமாக கருதப்படும். முஸ்லிம்களுக்கு காலிபேட், நமக்கு கிருதயுகம், கிறிஸ்தவர்களுக்கு ஏசு பூமியில் வாழ்ந்த காலகட்டம்.

அந்தந்த மதத்தினர் அத்தகைய பொற்காலங்களுக்கு செல்ல முயல்வதை விடுத்து முன்னோக்கி செல்லவேண்டும் என்பதே என் கருத்து. மீண்டும் பூமியில் பொற்காலத்தை அமைக்கிறேன் என கிளம்புவது அனர்த்தத்தையே உருவாக்கும். ஐஸிஸ் ஒரு உதாரணம், கிருதயுகத்துக்கு போக முயல்வது இன்னொரு உதாரணம். 

--

செல்வன்

unread,
Nov 10, 2014, 12:27:40 AM11/10/14
to mintamil

2014-11-09 23:16 GMT-06:00 N. Kannan <navan...@gmail.com>:

செல்வன் செல்வப்பிள்ளையாச்சே! சொன்னது தப்புமா?
ஆண்டவனே அவதாரம் எடுப்பது போரடிச்சுப் போவதால் என்பது பிரம்ம ரகசியம் ;-)


:-) கலியில் ஆண்டவன் பக்தர்களாக பிறக்கிறான். கிருத, திரேதா யுகங்களில் நேரடியாக வந்தான். 

--

N. Kannan

unread,
Nov 10, 2014, 12:31:54 AM11/10/14
to மின்தமிழ்
செலவன் இது அசத்து என்று தெரிந்தாலும் இது உளறுவதைக் கேட்க இறைவன் வருகிறான். மழலைச் சொல் இன்பம் என்பதால். எனவே இறைவன் அதிகமாக உலாவும் காலம் கலியே :-) இதுவே பொற்காலம்!

க.> 

செல்வன்

unread,
Nov 10, 2014, 12:32:31 AM11/10/14
to mintamil
2014-11-09 23:10 GMT-06:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
பகவத் கீதை வர்ணம் என்பது ஒருவரின் உள்ளக்கிடக்கை என்றே கூறுகிறது.  அது பிறப்பு வழி வருவதில்லை.  பின்னர், அறியாமையினால் அப்படி ஆக்கப்பட்டது.  மதிப்பிற்கு உரிய மோகனரங்கன் கீதையிலே சில எடுத்துக்காட்டுகளைக் காட்டி நான் எழுதியதை முன்பு மறுத்துள்ளார்.  ஆயினும், நான் வர்ணம் என்று கீதை கூறுவது மனக்கிடக்கை என்றே கொள்கிறேன்.  எவரும் தனது மனப்பங்குக்கொத்த பணியை ஆற்றுவது அதில் அவரைச் சிறக்க வைக்கும் என்பதே எனது துணிவு.

என்று உயர்வு, தாழ்வு பேசப்பட்டதோ, அப்பொழுதுதான் குழப்பங்களும், தீமைகளும் விளைந்தன.  இவ்வகையில் நான் ஒருவர் ஆற்றும் பணியை வைத்து உயர்வு தாழ்வு காட்டுவதை வன்மையாக எதிர்க்கிறேன். 

 நாம் எதிலும் உள்ள தீமையைக் களையவேண்டுமே தவிர, "மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தக்கூடாது" என்றே நினைக்கிறேன்.


வர்ணம் பிறப்பால் வருவதா, இல்லையா என்பதை அறிய தெய்வத்தின் குரல் படித்தாலே போதுமே?

--

Oru Arizonan

unread,
Nov 10, 2014, 12:32:57 AM11/10/14
to mint...@googlegroups.com
//அந்தந்த மதத்தினர் அத்தகைய பொற்காலங்களுக்கு செல்ல முயல்வதை விடுத்து முன்னோக்கி செல்லவேண்டும் என்பதே என் கருத்து. மீண்டும் பூமியில் பொற்காலத்தை அமைக்கிறேன் என கிளம்புவது அனர்த்தத்தையே உருவாக்கும். ஐஸிஸ் ஒரு உதாரணம், கிருதயுகத்துக்கு போக முயல்வது இன்னொரு உதாரணம். //

இது வாதம் அல்ல, விதண்டாவாதம்.  இப்படிச் சொல்ல நேர்ந்ததற்கு வருந்துகிறேன்.  ஐ எஸ் ஐ எஸ்ஸையும் இந்து சமயத்தையும் ஒப்பிடுவது சரியாகாது.  இதற்கு மேல் உங்களுடன் வதம் செய்து இருவரின் நேரத்தையும் வீணடிக்க நான் விரும்பவில்லை.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Nov 10, 2014, 12:35:21 AM11/10/14
to mint...@googlegroups.com
''வதம் செய்து''  தட்டச்சுப்பிழை --  "வாதம் செய்து"  என்று படித்துக்கொள்ளவும்.
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Nov 10, 2014, 3:26:16 PM11/10/14
to mint...@googlegroups.com
அருமையான விளக்கம், மதிப்பிற்கு உரிய மோகனரங்கன் அவர்களே!  மிக்க நன்றி!
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

2014-11-10 6:42 GMT-07:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
சமுதாய நிலைமைகளில் சில எதிர்ப்பான அம்சங்கள் இருக்கலாம். ஆனால் பெரும் தத்துவ இறையியல்கள் என்று வந்தால் நிச்சயம் பண்டைய காலம்தானே மிகவும் சிறப்பான செறிவு மிகுந்த உண்மையான பாண்டித்யம் நிறைந்த காலம்? இந்தக் கேள்விக்கு ஓரளவிற்கு ஆம் என்றுதான் பதில் சொல்ல வேண்டும். ஓரளவிற்கு மட்டுமே! ஏன் என்பதைச் சொல்கிறேன்.

சமய நெறிகள் ஆகட்டும்; நுணுக்கமான நியாய தத்துவங்கள் ஆகட்டும், காவியத் திறனாய்வியல் துறை ஆகட்டும், பெரும் ஆன்மிக புதிய பாதைகள் ஆகட்டும் நாம் பண்டைய சான்றோர்களுக்கு மனம் மொழி மெய்யால் ஒப்பி நன்றியுடன் அன்பான வணக்கங்கள் செய்ய வேண்டியதுதான் என்பதில் எள்ளளவும் எனக்கு ஐயம் இல்லை. பண்டைய மரபுகளின் ஆக்க பூர்வமான, நம்மை பிரமிக்க வைக்கும் சாதனைகள் என்றால் நுண் கருத்தியல்களில் அவர்கள் நமக்கு ஈட்டித் தந்திருக்கும் பெரும் ஆக்கங்கள். இந்த விதத்தில்தான் ரிஷிகளுக்கான வணக்கம் என்பது பொருள் உடையதாக ஆகிறது. அதை நாம் இன்றைய நம் காலங்களிலாவது அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வாய்ப்பாக ஆர்வத்துடன் அள்ளி வழங்க வேண்டும். நம்புவதற்கான விஷயங்களாக அல்ல, மிகவும் பொறுப்புடன் ஆழ்ந்து சிந்தனை செய்து, வாதித்து, அலசி ஆய்ந்து புரிந்து கொள்வதற்கான பனுவல்களாய் ஆக்க வேண்டும். அவர்கள் நம் அறிவுடைமையின் இயக்கத்தைக் கேட்கிறார்கள். நம்முடைய கண்மூடித்தனமான நம்பிக்கையின் கும்பிடுகளைக் கேட்கவில்லை. அவர்களின் கருத்துகளில் நாம் நம் சிந்தனையின் மூலம் ஆழ்ந்து ஈடுபடுகிறோம் என்பதுதான் அவர்களுக்குப் பெருமகிழ்ச்சி தரும் விஷயமே அன்றி, அதை அத்தனையும் வைத்து பூஜை இட்டு வணங்கிவிட்டு கேள்வியினால் புரிந்து கொள்ளாமல் அப்படியே விழுங்குகிறோம் என்பது ஒரு நாளும் அவர்களுக்குக் குறைந்த பட்சமான மரியாதையாகவும் கூட ஆகாது என்பதை நாம் உணர வேண்டும். ஆனால் இது ஒரு புறம்.

மற்றபடி பொதுஜனக்கல்வி என்பது இல்லாமல் போனதினால், அறிவுத் துறைகள் சமுதாயத்தில் விழிப்பை ஏற்படுத்துவது என்பது நடவாமலே போயிருக்கிறது. வர்ண தர்ம சமுதாய நெறிகளின் தயவினால்.

இதையும் மீறி பொதுமக்கள் கல்வி, பொதுவான தத்துவ விசாரம் என்று இருந்த ஊக்கங்களும் சமய நெறிப் பிணக்கங்களோடு கட்டுண்டு போயின. எனவே அறிவின் பயன் மக்களுக்கு என்பது பெரிதும் இல்லாமலே போயிருக்கிறது. இத்தனைக்கும் பெரும் ஆய்வுகள், தத்துவ அலசல்கள் எல்லாம் ஒரு மிகச் சிறிய வட்டத்துள் ஒடுங்கிப் போய் இருந்திருக்கின்றன. அதற்கான பதிவுகளைக் கண்டு பிரமிக்கும் நாம் அவை ஏன் பொது மக்களின் அறிவுத் தரத்தை மேம்படச் செய்யவில்லை என்பதை மிகவும் யோசிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். பெரும் நுண் கருத்து ரீதியான இயல்களை யாத்த பெரும் அறிஞர் சமூகமும் ஏன் மனிதர் என்ற பொதுமையைப் பற்றிய கவலையே இன்றிப் போயிருக்கின்றனர் என்பது ஆச்சரியமே. இத்தகைய பொதுமையாக்க முனைவு இன்மையால் பெரும் சாத்யங்கள் நிறைந்த பேரறிவுகளும் கூட பொன்சாய் மரங்கள் போன்று சிறு குழு நடவடிக்கைகளாய் முடிந்திருக்கின்றன. இதில் குறுகிய காலத்திற்கேனும் ஒரு மாற்றம் நிகழ்த்திக் காட்டியிருப்பது தமிழ் நாட்டு வைணவம் மற்றும் சைவம் எனலாம்.

ஆக எப்படியாயினும் பெரும் வணக்கத்திற்குரிய அறிவுசார் முயற்சிகளும், அன்றைக்கு நடந்தவை உள்பட அனைத்து உலக மக்களுக்கும் பயன்பட வேண்டிய நிலைக்கு, அத்தகைய அதிகபட்ச பொதுமை செயல்பாட்டிற்கு வந்திருப்பது நம் காலத்தில்தான். ‘அறிவினை வளர்த்திட வேண்டும் மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய்’ என்ற பாரதியின் வரி நம் காலத்திய செயல்பாட்டை விளக்கும் வரி. இது கிருத யுகமா அல்லது வேறொன்றா?

ஆன்மிகத்திலும் பண்டைய முனிவரர் சென்ற உயரத்தையெல்லாம் கடந்து அனைத்துலக ஆன்மிக நேயத்தை இயலாக மட்டுமின்றி செயல் வடிவிலும் கண்டெடுத்தது நம் காலத்து அருளாளர்கள் அன்றோ! நான் முன்னர் நவீன அருளாளர்கள்பால் சற்று விமரிசன எண்ணம் கொண்டிருந்தேன். ஆனால் விமரிசனங்கள் ஒரு புறம் இருப்பினும் பண்டைய ரிஷிகள் வெறும் பாலர் பாடம் என்று சொல்ல வேண்டிய அளவிற்கு (அதுவும் சில ரிஷிகள்தாம், சில ரிஷிகளின் கதைகளே ஆன்மிகத்திற்கே ஏன் மனித இயல்பிற்கே முரணான  பதிவுகளாய் அருவருப்புக்கு மட்டுமே இலக்கானவையாய் இருக்கின்றன.) இன்றைய அருளாளர்களின் சாதனையின் உயரம் மிக வியக்கத் தக்கது.

உண்மையில் நம் காலத்தில் வந்த அருளாளர்களான ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகாநந்தர், அரவிந்தர், ஜே கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீரமண மஹரிஷி போன்றவர்கள்தாம் ரிஷிகள் என்று சொல்லக் கூடிய பேராளுமையைத் தமது அருட்கொடைகளின் மூலம் பொருள் பொதிந்ததாக ஆக்குகின்றனர். (தமிழ்நாட்டில் ஸ்ரீராமலிங்க வள்ளலார்).

விவேகாநந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிப் பாடிய ‘ஸ்தாபகாய ச தர்மச்ச ஸர்வ தர்ம ஸ்வரூபிணே அவதார வரிஷ்டாய ஸ்ரீராமகிருஷ்ணாய தே நம:’ என்னும் சுலோகத்தில், ‘தர்மத்தை நிலைநாட்டியவரும், அனைத்து தர்மங்களின் உருவானவரும், அவதாரங்களிலேயே மிகச் சிறந்தவரும் ஆன ஸ்ரீராமகிருஷ்ணரே உம்மை வணங்குவமே’ என்னும் சுலோகத்தைக் கேட்கும் போது, என்ன இவர் அவதாரங்களிலேயே மிக சிறந்தவர் என்கிறாரே என்று தோன்றியதுண்டு. ஆம் அவர் கூறியதுதான் எவ்வளவு உண்மை! நம் காலத்தில் தோன்றிய இந்த பெரும் தெய்விக மனிதரின் உலகம் தழுவிய மானிடப் பொதுவான ஆன்மிகம்தான் எத்துணை பெரியது!

பண்டைய மத உலகத்தில், உலகம் அனைத்திலும் சரி, ஸ்ரீகிருஷ்ணனின் மங்களமான சரிதத்தை விட்டால் உலகனைத்தும் ஈடுபடத்தக்க திவ்ய சரிதம் எது இருக்கிறது? அதையும் ஒரு குழுவிற்கு ஆக்க முயன்று தோற்ற முயற்சிகளையும் நாம் காண முடிகிறது.

எனவே நம் காலத்தை ஈனமாக நினைப்பது, பண்டைய ஏதேதோ ரிஷிகளையும், மனிதர்களையும் வானளாவப் பொருத்தமே இன்றிப் புகழ்வது, நம்மையே நாம் அவர்களின் அடித்தூசி பெற மாட்டோம் என்றபடி நைச்சியம் பேசுவது, இதையெல்லாம் வைத்துக்கொண்டு ஓ அந்தக் காலம் கிருத யுகம் மீண்டும் வரவேண்டும் என்று கூவுவது என்பதெல்லாம் பிற்போக்காளர்களின் மாய்மாலங்களே அன்றி, மனித குலத்தின்பால் உண்மையான அக்கறையுள்ளவர்கள் செய்யத் தக்கதல்ல.  

***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Nov 11, 2014, 6:12:13 PM11/11/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///
 விமரிசனம் மீள் பார்வை கணிப்பு எல்லாம் உடன்பாடு. ஏனென்றால் அதுதான் நம்மைத் தவறுகளிலிருந்து காப்பாற்றி முன்னேற்றப் பாதையில் கொண்டு செலுத்தும். ஆனால் பின்னாடித் திரும்பிப் பார்; பொற்காலத்திலிருந்து தவறி விழுந்த பூஞ்சை மனிதர்கள் நீங்கள்; அந்தக் காலத்து ரிஷிகள் எல்லாம் அப்படியே பெரிய ஞானம், பவித்ரம், அவர்கள் காலம்தான் கிருத யுகம், அது வந்தால் அனைத்தும் சரியாயிடும் - என்ற இந்தக் கதையைத் தயவு செய்து நிப்பாட்டிக் கொள்ளுங்கள். அடுத்த தலைமுறைகளுக்கு இந்த மாதிரியான ‘குற்ற உணர்ச்சி யந்திரங்களை’ கொண்டு போய்ச் சேர்க்க வேண்டாம். இன்னொன்று, ஒன்று கடந்த காலம் ஆகிவிட்டால் உடனே அதற்குத் தைலக்காப்பு செய்து, உருவாரம் ஆக்கி ஆஹா ஓஹோ என்று வழி பாட்டு உணர்ச்சிகளுக்கு வேட்டை என்று ஆக்கிவிடாதீர்கள். அன்று இருந்த ரிஷிகள் யாரும் உங்கள் வழிபாட்டு ஆடம்பரங்களைக் கேட்கவில்லை. தாங்கள் சொல்ல வந்ததை நன்கு சிந்தித்துப் புரிந்து கொண்டு பின்னர் இந்தக் காலத்திற்குத் தேவையானதை நம் அறிவைப் பயன்படுத்திச் சாதிப்போம் என்றுதான் அவர்கள் நம்பியிருப்பார்கள்.
////

அருமையான சிந்தனை....கருத்து  அரங்கனாரே....நன்றி.


..... தேமொழி




On Tuesday, November 11, 2014 11:42:18 AM UTC-8, Mohanarangan V Srirangam wrote:
அரவிந்தர் ஏற்படுத்திய இயக்கம் பற்றிய விமரிசனங்களும், அரவிந்தரின் சில எழுத்துகளின் மீதும் சில விமரிசனங்களும் எனக்கு உண்டு. ஆனால் ஒரு கருத்துலகத்தின் சில அம்சங்களில் நாம் கொள்ளும் விமரிசன எண்ணங்கள் ஒருகாலும் அந்தக் கருத்துலகத்தின் சிறந்த ஆக்கங்கள் மீது நம் மதிப்பை, அதற்குரிய பெருமையை நாம் ஒரு நாளும் மறுக்க இயலாது; மறுக்கவும் கூடாது. அரவிந்தரின் உண்மையான பெருமையும் தவிர்க்க முடியாத சில விமரிசனங்களுக்குரிய விஷயங்களில் எவ்விதத்திலும் இல்லையாகிவிடாது.

ரிக்வேதத்தையே எடுத்துக் கொள்வோம். அதன் பாக்களைப் பயின்றவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளலாம். ஒன்று அவை கூறும் உட்கருத்து புரியவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். அல்லது அவையெல்லாம் வெறும் ஆதிகால இயற்கைசார் மக்கள் இனங்களின் உணர்ச்சிகளையும், தேவைகளையும், பயங்களையும், வேட்கைகளையும் பிரதிபலிக்கும் பாக்களின் தொகுதி என்றபடி புரிந்து கொள்ளலாம். ஆனால் அவற்றில் மிக ஆழமான ஆன்மிக தத்துவங்களையும், யோக ரீதியான உள இயல் நுட்பங்களையும் மனித குலமே பயன்கொள்ளத்தக்க பெரும் மார்க்கங்களின் சாவிகளும் புதைந்திருக்கின்றன என்பதை யாருமே புரிந்து கொள்ள முடியாது. ஏன் வேதங்களுக்கெல்லாம் 14, 15 ஆம் நூற்.களில் பாஷ்யம் எழுதிய சாயனரே புரிந்து கொள்ளவில்லை என்னும் போது பிறரை என்ன சொல்ல? சாயனரால் வேள்விகளின் செயல் கட்டங்களில் பயன்படும் அர்த்தங்கள் நிறைந்த செய்யுள்களாகத்தான் அவற்றைப் பார்க்க முடிந்திருக்கிறது.

ஆனால் ரிக்வேதத்திலும், மற்ற வேதங்களிலும் பொதிந்துள்ள ஆன்மிக எழுச்சிக்கான ஒளி வாய்ந்த கருத்துகளையும், யோக ரீதியிலான உள இயல் நுட்பங்களையும் நம் காலத்தில் வந்த பரோடா கல்லூரி ஆங்கிலப் பேராசான் ஒருவரால்தான் கண்டுபிடிக்க முடிந்தது; அவற்றைத் திறமையாக விளக்கவும் முடிந்தது; அது மட்டுமின்றி அந்தக் கருத்துச் சுரங்கங்களை வைத்து ஒரு புதிய ஆன்மிகப் பாதையே ஏற்படுத்த முடிந்தது என்றால் அவர் ரிஷியா? அல்லது வழிவழியாகச் செவி வழிச் செய்தியாக மட்டும் நாம் நம்பி ஏற்றாக வேண்டிய பலரும் ரிஷிகளா?

ரிக்வேத ரிஷிகளைக் கேட்டால் நம் காலத்தைத்தான் கிருத யுகம் என்று சொல்வார்கள். காரணம் அவர்கள் சொல்ல வந்த விஷயம் சொல்லப்பட்டதே நம் காலத்தில்தானே!

ஸ்ரீ ஆதிசங்கரர் அத்வைதம் என்ற தத்துவக் கொடையைத் தந்து போனார். அவர் வழிவந்தவர்கள் அதை விரிவாக்கினர். பின்னர் காலக் கோளாறு பின் வந்தவர்கள் எதெல்லாம் அத்வைதம் இல்லையோ அதையெல்லாம் கைக்கொண்டு ஆதிசங்கரர் சொன்ன அத்வைத்தை அவருடனேயே வைத்து விட்டனர். ஆதி சங்கரர் சொன்னதே ஆரம்பம் என்று சொல்லத்தக்க விதத்தில் அந்த பிரபஞ்ச பொதுத் தத்துவத்தை அதன் மிகத் தொலைவுவரை சென்று இயலாக்கியது ஞானவாசிட்டம் என்னும் யோகவாசிட்ட ராமாயணம்.

அத்வைதத்தின் மிக முக்கியமான குருத்தான விஷயத்தை நேரடி மார்க்கமாக்கி மனிதகுலப் பொதுவாக்கி உலகிற்குத் தரமுடிந்தது நம் காலத்தில் நம் தமிழ் நாட்டின் மதுரையம்பதியைச் சேர்ந்த ஒரு பையனால்தான். பகவான் ஸ்ரீரமணரைத்தான் குறிப்பிடுகிறேன். அவரை எப்படியேனும் சங்கரரின் வழிவழி நெறிகளைச் சேர்ந்தவராக ஆக்கிவிட வேண்டும் என்று சங்கரரின் வழியைச் சேர்ந்த பல துறவிகளும் முயன்று பார்த்தனர். ஆனால் அவர் தாம் தனித்தே நின்றுவிட்டார். அவருடைய ஒற்றைக் கேள்வியின் ஒண் நெறி அத்வைத தத்துவ உலகில் மட்டுமின்றி, உலக தத்துவப் பள்ளிகளில் ஒரு பெரும் புரட்சி.

எதற்குச் சொல்கிறேன், வேதக் கல்விகள் ஆகட்டும், தத்துவப் பள்ளிகள் ஆகட்டும், ஆன்மிக நெறிகள் ஆகட்டும், உலக வாழ்க்கையை மேம்படச் செய்யும் விஞ்ஞான வழிகள் ஆகட்டும், மனித மனத்தை மட்டுமின்றி மற்ற உயிரினங்களின் மன இயக்கம், ஜீவிதம் என்பன பற்றிய ஆய்வுகள் என்று ஆகட்டும், உலகனைத்தும் ஒருங்கு கூடத்தக்க தொழில்நுட்ப, தொலைத் தொடர்பு இணைப்பியல்கள் ஆகட்டும், மருத்துவம், பிற கிரகங்களின் ஆய்வியல், காலம், தேசம் என்ற மீப்பெருச் சூழல்களின் அடிப்படைத் தத்துவ ஆய்வுகள் ஆகட்டும், பிரபஞ்சத்தின் இயக்கம் குறித்த அகண்டமான பெரு இயல்கள் ஆகட்டும் அனைத்தும் விளைந்திருப்பது நம் காலத்தில்தான்; அதுவும் பஞ்சைப் பனாதைகள் என்று இழித்துரைக்கப்பட்ட இன்றைய உலகின் மக்களாகிய நம்மால்தான். அதுவும் உலகப் பொதுவாக, அனைத்து மனித குலத்திற்கும் வெட்ட வெளிச்சமாக நம்மால் இயற்றப் பட்டிருக்கும் அருஞ்சாதனைகள். பண்டைய முனிவரர்களால் முடிந்த சாதனை நீ என்னைத் தொடாதே தீட்டு நான் வேறு நீ வேறு, அவர் யார் என்ன சாதி என்பன போன்ற பிரிவினை இயல்கள்தாம். அவர்கள் காலத்தையெல்லாம் பெரும் கிருத யுகம் என்று காட்டி, நம் காலத்தை இழிவான கலிகாலம் என்று சொல்வது நகைப்பிற்குரிய செயல்.

நம் காலத்தைப் பற்றி வேண்டிய விமரிசனங்களைச் சொல்லுங்கள் நான் இல்லையென்று சொல்லவில்லை. ஏகப்பட்ட கோளாறுகள் நம் காலத்தில் இருக்கின்றன. நாம் என்ன பெரும் உயர்ந்த நன்மையான மக்கள் நிலைக்கு எய்திவிட்டோமா? கேளுங்கள். நியாயம். விமரிசனம் மீள் பார்வை கணிப்பு எல்லாம் உடன்பாடு. ஏனென்றால் அதுதான் நம்மைத் தவறுகளிலிருந்து காப்பாற்றி முன்னேற்றப் பாதையில் கொண்டு செலுத்தும். ஆனால் பின்னாடித் திரும்பிப் பார்; பொற்காலத்திலிருந்து தவறி விழுந்த பூஞ்சை மனிதர்கள் நீங்கள்; அந்தக் காலத்து ரிஷிகள் எல்லாம் அப்படியே பெரிய ஞானம், பவித்ரம், அவர்கள் காலம்தான் கிருத யுகம், அது வந்தால் அனைத்தும் சரியாயிடும் - என்ற இந்தக் கதையைத் தயவு செய்து நிப்பாட்டிக் கொள்ளுங்கள். அடுத்த தலைமுறைகளுக்கு இந்த மாதிரியான ‘குற்ற உணர்ச்சி யந்திரங்களை’ கொண்டு போய்ச் சேர்க்க வேண்டாம். இன்னொன்று, ஒன்று கடந்த காலம் ஆகிவிட்டால் உடனே அதற்குத் தைலக்காப்பு செய்து, உருவாரம் ஆக்கி ஆஹா ஓஹோ என்று வழி பாட்டு உணர்ச்சிகளுக்கு வேட்டை என்று ஆக்கிவிடாதீர்கள். அன்று இருந்த ரிஷிகள் யாரும் உங்கள் வழிபாட்டு ஆடம்பரங்களைக் கேட்கவில்லை. தாங்கள் சொல்ல வந்ததை நன்கு சிந்தித்துப் புரிந்து கொண்டு பின்னர் இந்தக் காலத்திற்குத் தேவையானதை நம் அறிவைப் பயன்படுத்திச் சாதிப்போம் என்றுதான் அவர்கள் நம்பியிருப்பார்கள். நாம் இப்படி ஆவோம் என்று கனவிலும் அவர்களும் நினைத்திருக்க மாட்டார்கள்.

***

Suba.T.

unread,
Nov 12, 2014, 3:16:29 AM11/12/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-11-11 20:42 GMT+01:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
அரவிந்தர் ஏற்படுத்திய இயக்கம் பற்றிய விமரிசனங்களும், அரவிந்தரின் சில எழுத்துகளின் மீதும் சில விமரிசனங்களும் எனக்கு உண்டு. ஆனால் ஒரு கருத்துலகத்தின் சில அம்சங்களில் நாம் கொள்ளும் விமரிசன எண்ணங்கள் ஒருகாலும் அந்தக் கருத்துலகத்தின் சிறந்த ஆக்கங்கள் மீது நம் மதிப்பை, அதற்குரிய பெருமையை நாம் ஒரு நாளும் மறுக்க இயலாது; மறுக்கவும் கூடாது. அரவிந்தரின் உண்மையான பெருமையும் தவிர்க்க முடியாத சில விமரிசனங்களுக்குரிய விஷயங்களில் எவ்விதத்திலும் இல்லையாகிவிடாது.

ரிக்வேதத்தையே எடுத்துக் கொள்வோம். அதன் பாக்களைப் பயின்றவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளலாம். ஒன்று அவை கூறும் உட்கருத்து புரியவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். அல்லது அவையெல்லாம் வெறும் ஆதிகால இயற்கைசார் மக்கள் இனங்களின் உணர்ச்சிகளையும், தேவைகளையும், பயங்களையும், வேட்கைகளையும் பிரதிபலிக்கும் பாக்களின் தொகுதி என்றபடி புரிந்து கொள்ளலாம். ஆனால் அவற்றில் மிக ஆழமான ஆன்மிக தத்துவங்களையும், யோக ரீதியான உள இயல் நுட்பங்களையும் மனித குலமே பயன்கொள்ளத்தக்க பெரும் மார்க்கங்களின் சாவிகளும் புதைந்திருக்கின்றன என்பதை யாருமே புரிந்து கொள்ள முடியாது. ஏன் வேதங்களுக்கெல்லாம் 14, 15 ஆம் நூற்.களில் பாஷ்யம் எழுதிய சாயனரே புரிந்து கொள்ளவில்லை என்னும் போது பிறரை என்ன சொல்ல? சாயனரால் வேள்விகளின் செயல் கட்டங்களில் பயன்படும் அர்த்தங்கள் நிறைந்த செய்யுள்களாகத்தான் அவற்றைப் பார்க்க முடிந்திருக்கிறது.

ஆனால் ரிக்வேதத்திலும், மற்ற வேதங்களிலும் பொதிந்துள்ள ஆன்மிக எழுச்சிக்கான ஒளி வாய்ந்த கருத்துகளையும், யோக ரீதியிலான உள இயல் நுட்பங்களையும் நம் காலத்தில் வந்த பரோடா கல்லூரி ஆங்கிலப் பேராசான் ஒருவரால்தான் கண்டுபிடிக்க முடிந்தது; அவற்றைத் திறமையாக விளக்கவும் முடிந்தது; அது மட்டுமின்றி அந்தக் கருத்துச் சுரங்கங்களை வைத்து ஒரு புதிய ஆன்மிகப் பாதையே ஏற்படுத்த முடிந்தது என்றால் அவர் ரிஷியா? அல்லது வழிவழியாகச் செவி வழிச் செய்தியாக மட்டும் நாம் நம்பி ஏற்றாக வேண்டிய பலரும் ரிஷிகளா?

ரிக்வேத ரிஷிகளைக் கேட்டால் நம் காலத்தைத்தான் கிருத யுகம் என்று சொல்வார்கள். காரணம் அவர்கள் சொல்ல வந்த விஷயம் சொல்லப்பட்டதே நம் காலத்தில்தானே!

ஸ்ரீ ஆதிசங்கரர் அத்வைதம் என்ற தத்துவக் கொடையைத் தந்து போனார். அவர் வழிவந்தவர்கள் அதை விரிவாக்கினர். பின்னர் காலக் கோளாறு பின் வந்தவர்கள் எதெல்லாம் அத்வைதம் இல்லையோ அதையெல்லாம் கைக்கொண்டு ஆதிசங்கரர் சொன்ன அத்வைத்தை அவருடனேயே வைத்து விட்டனர். ஆதி சங்கரர் சொன்னதே ஆரம்பம் என்று சொல்லத்தக்க விதத்தில் அந்த பிரபஞ்ச பொதுத் தத்துவத்தை அதன் மிகத் தொலைவுவரை சென்று இயலாக்கியது ஞானவாசிட்டம் என்னும் யோகவாசிட்ட ராமாயணம்.

அத்வைதத்தின் மிக முக்கியமான குருத்தான விஷயத்தை நேரடி மார்க்கமாக்கி மனிதகுலப் பொதுவாக்கி உலகிற்குத் தரமுடிந்தது நம் காலத்தில் நம் தமிழ் நாட்டின் மதுரையம்பதியைச் சேர்ந்த ஒரு பையனால்தான். பகவான் ஸ்ரீரமணரைத்தான் குறிப்பிடுகிறேன். அவரை எப்படியேனும் சங்கரரின் வழிவழி நெறிகளைச் சேர்ந்தவராக ஆக்கிவிட வேண்டும் என்று சங்கரரின் வழியைச் சேர்ந்த பல துறவிகளும் முயன்று பார்த்தனர். ஆனால் அவர் தாம் தனித்தே நின்றுவிட்டார். அவருடைய ஒற்றைக் கேள்வியின் ஒண் நெறி அத்வைத தத்துவ உலகில் மட்டுமின்றி, உலக தத்துவப் பள்ளிகளில் ஒரு பெரும் புரட்சி.

எதற்குச் சொல்கிறேன், வேதக் கல்விகள் ஆகட்டும், தத்துவப் பள்ளிகள் ஆகட்டும், ஆன்மிக நெறிகள் ஆகட்டும், உலக வாழ்க்கையை மேம்படச் செய்யும் விஞ்ஞான வழிகள் ஆகட்டும், மனித மனத்தை மட்டுமின்றி மற்ற உயிரினங்களின் மன இயக்கம், ஜீவிதம் என்பன பற்றிய ஆய்வுகள் என்று ஆகட்டும், உலகனைத்தும் ஒருங்கு கூடத்தக்க தொழில்நுட்ப, தொலைத் தொடர்பு இணைப்பியல்கள் ஆகட்டும், மருத்துவம், பிற கிரகங்களின் ஆய்வியல், காலம், தேசம் என்ற மீப்பெருச் சூழல்களின் அடிப்படைத் தத்துவ ஆய்வுகள் ஆகட்டும், பிரபஞ்சத்தின் இயக்கம் குறித்த அகண்டமான பெரு இயல்கள் ஆகட்டும் அனைத்தும் விளைந்திருப்பது நம் காலத்தில்தான்; அதுவும் பஞ்சைப் பனாதைகள் என்று இழித்துரைக்கப்பட்ட இன்றைய உலகின் மக்களாகிய நம்மால்தான். அதுவும் உலகப் பொதுவாக, அனைத்து மனித குலத்திற்கும் வெட்ட வெளிச்சமாக நம்மால் இயற்றப் பட்டிருக்கும் அருஞ்சாதனைகள். பண்டைய முனிவரர்களால் முடிந்த சாதனை நீ என்னைத் தொடாதே தீட்டு நான் வேறு நீ வேறு, அவர் யார் என்ன சாதி என்பன போன்ற பிரிவினை இயல்கள்தாம். அவர்கள் காலத்தையெல்லாம் பெரும் கிருத யுகம் என்று காட்டி, நம் காலத்தை இழிவான கலிகாலம் என்று சொல்வது நகைப்பிற்குரிய செயல்.

​படிப்படியாக விரிவாக சொல்லிச் செல்கின்றது பதிவு. மறுக்க முடியாத கருத்துக்கள்.

சுபா

 
நம் காலத்தைப் பற்றி வேண்டிய விமரிசனங்களைச் சொல்லுங்கள் நான் இல்லையென்று சொல்லவில்லை. ஏகப்பட்ட கோளாறுகள் நம் காலத்தில் இருக்கின்றன. நாம் என்ன பெரும் உயர்ந்த நன்மையான மக்கள் நிலைக்கு எய்திவிட்டோமா? கேளுங்கள். நியாயம். விமரிசனம் மீள் பார்வை கணிப்பு எல்லாம் உடன்பாடு. ஏனென்றால் அதுதான் நம்மைத் தவறுகளிலிருந்து காப்பாற்றி முன்னேற்றப் பாதையில் கொண்டு செலுத்தும். ஆனால் பின்னாடித் திரும்பிப் பார்; பொற்காலத்திலிருந்து தவறி விழுந்த பூஞ்சை மனிதர்கள் நீங்கள்; அந்தக் காலத்து ரிஷிகள் எல்லாம் அப்படியே பெரிய ஞானம், பவித்ரம், அவர்கள் காலம்தான் கிருத யுகம், அது வந்தால் அனைத்தும் சரியாயிடும் - என்ற இந்தக் கதையைத் தயவு செய்து நிப்பாட்டிக் கொள்ளுங்கள். அடுத்த தலைமுறைகளுக்கு இந்த மாதிரியான ‘குற்ற உணர்ச்சி யந்திரங்களை’ கொண்டு போய்ச் சேர்க்க வேண்டாம். இன்னொன்று, ஒன்று கடந்த காலம் ஆகிவிட்டால் உடனே அதற்குத் தைலக்காப்பு செய்து, உருவாரம் ஆக்கி ஆஹா ஓஹோ என்று வழி பாட்டு உணர்ச்சிகளுக்கு வேட்டை என்று ஆக்கிவிடாதீர்கள். அன்று இருந்த ரிஷிகள் யாரும் உங்கள் வழிபாட்டு ஆடம்பரங்களைக் கேட்கவில்லை. தாங்கள் சொல்ல வந்ததை நன்கு சிந்தித்துப் புரிந்து கொண்டு பின்னர் இந்தக் காலத்திற்குத் தேவையானதை நம் அறிவைப் பயன்படுத்திச் சாதிப்போம் என்றுதான் அவர்கள் நம்பியிருப்பார்கள். நாம் இப்படி ஆவோம் என்று கனவிலும் அவர்களும் நினைத்திருக்க மாட்டார்கள்.

***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

N. Kannan

unread,
Nov 12, 2014, 7:38:15 AM11/12/14
to mint...@googlegroups.com

கொஞ்ச காலமாக நான் யோசித்த வகையில் இந்த கிருதா காலம் (சாரி, கிருத காலக்) கதையெல்லாம் ஒரு அதீத ஆசை, அபிலாஷை, கனவு, எதிர்பார்ப்பு என்று தோன்றுகிறது. மனிதனுக்கு தான் குறையுடையவன், தான் வாழும் உலகம் குறையுடையது, ஏன் பிரபஞ்சமே! குறைகள் நிறைந்த குழப்பமாகப் படுகிறது. இதற்கு ஒரே நிவர்த்தி? குறையில்லாத கடவுள், குறையற்ற மனிதன், குறையற்ற குமுகாயம் என்று ஆசைப்படுவது! ஆசை கூடக்கூட ரிஷிகளை உருவாக்குகிறோம், தொழத்தக்க மாந்தரைத் தேடுகிறோம். கிருத யுகம் நம் மனதில் எழும் சௌக்கியமான உலகம் ! ஒரு வகையில் இருப்பின் அவஸ்தை உருவாக்கும் அதீத கற்பனை! மருந்து எனக்கொள்ளலாம். இறுதியில் எப்படிப் பார்த்தாலும் இவன் குறை தெரிந்து கொண்டே இருக்கிறது. போடு பழியை! கலியின் மீது! இதுதான் நடப்பது. எல்லாமே மனம் செய்யும் மாயை!

இன்று நான் புதிதாய்ப் பிறந்தேன் கிருத யுகத்துப் பிரஜையாக! ஜாலி நன்றாக இருக்கிறது :)

க.>

Jayabalan Mavanna

unread,
Nov 12, 2014, 1:02:07 PM11/12/14
to mint...@googlegroups.com

நானும் சிறிது காலமாக தீபம் பத்திரிகை ஆசிரியர் நா. பார்த்தசாரதி அவர்கள் நாங்கள் 1970 ஆண்டு ஆரம்பித்த புது வெள்ளம் என்ற இலக்கிய மாத இதழில் பிரசுரத்திற்காக தொடர் கட்டுரையாக வெளியிடக் கூடிய முழு கையெழுத்து பிரதி அனுப்பிவைத்தார்.. அதன் தலைப்பு கவிதையில் ஒரு கிருத யுகம். முழுமையும்  பிரசுரமாகாமல் தடைப் பட்டுப்போனது. பதிவான பகுதிகள் வரை மிந்தமிழில் பதிவு செய்ய விரும்பினேன்.

தற்சமயம் கிருத யுகம் பற்றிய விவாதம் நடந்து வருவதால் அதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.பொர்த்தமாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

எம்.டி.ஜெ

Jayabalan Mavanna

unread,
Nov 13, 2014, 6:35:31 AM11/13/14
to mint...@googlegroups.com

தாங்கள் தரும் ஊக்கத்திற்கு நன்றி. விரைவில் பதிவேற்றம் செய்கிறேன். எம்.டி.ஜெ



On Thursday, November 13, 2014 2:07:24 AM UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
நிச்சயம் செய்யுங்கள் ஐயா, தனி இழையாக ஒரு தலைப்பு கொடுத்து திறந்து அதில் பதிவு செய்யுங்கள். எனக்கும் காண ஆசை. நன்றி.

--

satha sivam

unread,
Nov 14, 2014, 8:00:42 AM11/14/14
to mintamil

என்னிடம் கிருத யுகம்என்ற நூல் உள்ளது

Suba.T.

unread,
Nov 25, 2014, 4:44:33 AM11/25/14
to மின்தமிழ், Subashini Tremmel


2014-11-25 8:19 GMT+01:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:


இன்று நமக்கு எதிரிலா வலம் தர வேண்டிய மதக் கருத்துகள், ஆன்மிகச் சித்திரங்கள், பண்டைய முன்னோர்களின் நினைவுகள் ஏன் நமக்குக் குற்றக் கடன் இறுக்க வேண்டிய பீடங்களாக நாமே ஆக்கிக் கொண்டோம்? எவ்வளவு தலைமுறைகளாக இது? எத்தனையோ மகான்கள் இதை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லையா? ஏன் நேற்று வந்து போனாரே அந்த விவேகாநந்தர் எத்தனை முறை தலைக்குத் தலை முட்டிக்கொண்டு உரத்துக் கூறியிருப்பார்? ‘உங்களுக்கு உள்ளே அரித்துக்கொண்டிருக்கும் இந்த பலஹீனம் ஏன்?’ என்று உறங்கிய பாரதத்தைத் தட்டி எழுப்பியதும் அவர்தானே! மயக்க மருந்திலிருந்து ஒருவாறு சுதாரித்து எழுந்துகொண்டதும் மீண்டும் மயக்க மருந்திற்கு விழையுமாம் உயிரியல் அமைப்பு கெட்டுவிடின். அது போலவா நாம் மீண்டும் பலஹீனத்தைச் சுகம் கண்டு அதில் தோய்கிறோம்?

இன்று நமக்கு வேண்டியது துணிச்சல். நம்மிடம் நமக்கே அசாத்திய நம்பிக்கை. கடவுளிடம் அல்ல. குருமார்களிடம் அல்ல. முனிபுங்கவர்களிடம் அல்ல. மகாமகா வேதங்களில் அல்ல. நீ ஒரு அற்பப் புழு என்று வழிவழியாக அனைத்து மதங்களாலும் சொல்லப்பட்டு, நம்மை நாமே நொந்து துவண்டு, அன்றாடம் மூச்சு விடுவதற்கே ஆனான தெய்வங்களிடம் அபாலஜி வாங்கியபடி முக்கி முனகும் தொஞ்ச மாடுகளாய் நம்மையே நாம் பிரமித்துப் புதைந்து போயுள்ளோமே, அந்த அதே நம்மிடம்தான் நமக்கு நம்பிக்கை வேண்டும்.

​Simply superb!!

Suba.​

 
Reply all
Reply to author
Forward
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
0 new messages