காதல் விழாவை நிறுத்திய தமிழ்க்கடவுள்

788 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jan 20, 2016, 1:45:07 PM1/20/16
to Neander Selvan


சங்க இலக்கியங்களில் சிறப்பிக்கபடும் முக்கியமான திருவிழா இந்திர விழாவாகும். இந்திர விழா பண்டைய பூம்புகார் நகரில் கொண்டாடப்பட்டு வந்தது. இதன் வரலாறு என்னவெனில் 

முன்பு சோழநாட்டை ஆண்ட முசுகுந்த சோழன் - இவன் ராமாயணத்திலும் வருகிறான். இராமனின் குலமான இஷ்வாகு குலத்தை சேர்ந்தவர்கள் சோழர்கள். சூரிய வம்சம். சிபிச்சக்ரவர்த்தி, முசுகுந்தன் போன்றோர் சோழருக்கும் இஷ்வாகு குலத்தாருக்கும் பொதுவானவர்கள். சோழர்கள் பின்னாளில் சைவமானாலும், அவர்கள் பெயரில் திருமால் பெயரை சேர்க்காமல் விடமாட்டார்கள். விஜயாலய சோழனின் மகன் ஆதித்த கரிகாலனின் முழுப்பெயர் ஆதித்த கோதண்டராம சோழன்.

முசுகுந்த சோழன் இந்திரனுக்கும் தேவர்களுக்கும் இடையே நடந்த போரில் இந்திரனுக்கு உதவி புரிந்தான். அதனால் மகிழ்ச்சியடைந்த இந்திரன் பூம்புகார் நகரை காவல் புரிய நாளங்காடி பூதம் ஒன்றை பரிசாக முசுகுந்தனுக்கு அளீத்தான்.  அந்த நாளங்காடிபூதத்துக்கு பூஜை செய்யவும், இந்திரனுக்கு நன்றி செலுத்தவும் இந்திர விழா (தொல்காப்பிய காலத்துக்கு முற்பட்ட அகத்திய முனிவர் காலத்தில்) சோழர்களால் துவக்கபட்டது.

 பூம்புகாரை ஆண்டுவந்த சோழமன்னனான தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் என்பவன் அகத்தியர் ஆணைப்படி இந்திரனை வணங்கி தவமிருந்தான். அவன் தவத்துக்கு பலனளிக்க இந்திரன் பூம்புகார் நகருக்கு வருகை தந்தான். அதை கொண்டாட 28 நாட்கள் நகரெங்கும் திருவிழாகோலம் பூண்டது. இதுவே இந்திரவிழாவின் துவக்கமாகும்.



இந்திரன் மழையின் கடவுள். மாதம் மும்மாரி பெய்கிறதா என்பதை வைத்தே செங்கோல் வன்மை அளக்கபட்ட நாட்டில் இந்திரனுக்கு விழா எடுக்கவில்லையெனில் மழை பெய்யாது என மக்கள் நினைத்ததில் வியப்பில்லை.

மணிமேகலையில் இந்திரவிழாவின் முக்கியத்துவம் வலியுறுத்தபடுகிறது. இந்திரவிழா நடக்காவிடில் நாடே அழியும் என மக்கள் நம்பினார்கள். சோழமன்னன் ஒருவன் தன் மகன் இறந்த சோகத்தால் இந்திர விழாவை நடத்தாது இருந்தான். அதனால் பூம்புகார் நகரை கடல்கோள் கொண்டு அழித்தது என மணிமேகலை குறிப்பிடுகிறது.


இந்திரவிழா தமிழகத்தில் மட்டுமல்ல, பாரதகண்டமெங்கும் கொண்டாடப்பட்ட விழாவாகும். நேபாளத்திலும், ஈழத்திலும் இன்னமும் இந்திர விழா கொண்டாடப்படுகிறது. வடக்கே இந்திர விழா துவங்கியது எப்படி என்பதற்கான வரலாறு தெளிவாக உள்ளது. தமிழ்நாட்டில் அகத்தியமுனிவர் கட்டளைக்கிணங்க தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் இதை துவக்கினான். வடக்கே அகத்தியரின் காலத்துக்கு மிகவும் பிற்பட்ட மகாபாரத காலத்தில் இது துவங்கியிருக்கிறது. இதை துவக்கியவன் வடசேடியை ஆண்ட உபசீரர வஸு எனும் மன்னன். இந்த வடசேடி என்பது இமயமலை அருகே இருக்கும் வித்தியாதர நாடு என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுகிறார்

வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்
கள்ளவிழ் பூம்பொழிற் காமக் கடவுட்குக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு
விருந்தாட் டயருமோர் விஞ்சை வீரன்

பெரிய வெள்ளி மலையிலே, அகன்ற பெரிய வட சேடி நாட்டில், காம தேவனும் மயங்கும் கருங்கயல் கொண்ட காதலி தன்னொடு  விழாக் கொண்டாடும் ஓர் விச்சா தர வீரன் இந்திரவிழா கொண்டாட தமிழகம் வந்தான் என்கிறார் இளங்கோவடிகள்

ஆக இந்திரவிழா தமிழ்நாட்டில் துவங்கி வடக்கே சென்றது என்பதை அறியலாம். தமிழ்நாட்டில் நடந்த இந்திர விழாவில் நாட்டின் பல பகுதி மக்களும் கலந்துகொண்டார்கள் என்பதும் தெரிகிறது. இப்படி கலந்து கொண்ட மக்கள் மூலம் இந்திரவிழாவின் சிறப்பு பாரதமெங்கும் பரவி வடசேடி நாட்டில் உபசீரரச் வசு மன்னன் மூலம் வடக்கேயும் இது துவங்கபட்டது.

நீர்வளம் நிரம்பிய சோழநாட்டில் மருத நிலக்கடவுளான இந்திரன் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்திரன் பவுத்தம், சமணம், போன்ற மதங்களிலும் கொண்டாடபட்டவன் என்பதால் இந்திர விழா மதங்களை கடந்த பொதுவான பண்டிகையாக அமைந்ததாக பவுத்த காப்பியமான மணிமேகலை குறிப்பிடுகிறது.

சமயக் கணக்கரும்;தந்துறை போகிய
அமயக் கணக்கரும்; அகலா ராகிக்
கரந்துரு எய்திய கடவுளாளரும் - மணிமேகலை

(சமயவாதிகள், சோதிடர், யாருக்கும் தெரியாமல் மாயா உருவில் வந்து கலந்து கொண்ட கடவுளர் ஆகியோர் இந்திரவிழாவை சிறப்பிக்க கூடினார்கள்)

28 நாட்களும் நகரே விழாகோலம் பூண்டது. மணிமேகலையில் இந்த 28 நாட்களிலும்

நகரிலுள்ள சிவன், சதுக்கபூதம் பிற சமய கடவுளருக்கு பூஜைகள் நடைபெற்றன
அறிஞர்கள் உரையாற்றினார்கள். விவாதங்கள், உரையாடல்கள் நடைபெற்றன.
நகரெங்கும் தோரணங்கள், பூரணகும்பம் ஆகியவை வைக்கபட்டன

மக்கள் கூடும் மரத்தடி முதலான இடங்களில் அவர்கள் உட்கார மணல் பரப்பட்டிருந்தது. இந்திரவிழா சமயம் பழைய மணலை அகற்றி புதுமணலை பரப்பினார்கள்.

நகரின் வெண்மணர் குன்றங்களிலும், பூஞ்சாஒலைகளிலும், பூந்துறைகலிலும் தேவர்களும், மக்களும் ஒன்றாக கூடி, கலந்து பழகினார்கள்

வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையும்
தண்மணல் துருத்தியுங் தாழ்பூந் துறைகளும்
தேவரு மக்களும் ஒத்துடன் றிரிதரு
நாலேழ் நாளினும் நன்கறிந் தீரென

என்கிறது மணிமேகலை.

இங்கே தேவர்கள், வித்தியாதரர்கள் என்பவர் வெளிநாட்டு மக்கள் என யூகிக்கலாம். வித்தியாதரர்- வடசேடி நாட்டு மக்கள், கின்னரர்- ஆப்கானியர்

இந்த 28 நாட்களில் போர் இல்லை, பூசல் இல்லை என்கிறது மணிமேகலை

ஆக இப்படி பல சமுக, பல சமய, பல தேச மக்களும் ஒன்றுகூடிய விழா இப்படி வெண்மணர் குன்றம், பூஞ்சோலைகளில் "தேவர்களும், மக்களும்" நெருங்கி பழகியதால் நாளடைவில் காமன் விழா, காதல் விழாவாகவும் ஆகியிருக்கலாம்.


இப்படி கொண்டாடப்பட்ட முக்கியமான விழாவான இந்திர விழா பிற்காலத்தில் கொண்டாடப்படாமல் வழக்கழிந்தது ஏன்?

முன்னை மரபின் முதுமொழி முதல்வ என சங்க இலக்கியங்களில் போற்றபடும் தெய்வம் திருமால். திருமாலும், வாலியோனும் பாண்டியநாட்டு தெய்வங்கள் என உணர்த்தும் குறிப்புகள் இலக்கியங்களில் உள்ளன. பரிபாடல் திருமாலிருஞ்சோலை எனும் அழகர் கோயிலை பாடுகிறது. வாலியோனும், மாயோனுமாக இரட்டை கடவுளராக பாண்டிய நாட்டில் திருமால் வழிபடபட்டார். நாஞ்சில் நாடு வாலியோன் பெயரால் அமைந்த நாடு. மாயோயே, மாயன் என்பது போன்ற பரிபாடலில் வரும் திருமாலின் பெயர்கள் பாண்டிநாட்டில் இன்னும் வைக்கபடுகின்றன. ஆக சோழநாடு சைவர்களின் கோட்டையாக திகழ, பாண்டியநாடு வைணவர்கள் நாடாக இருந்தது. பின்னாளில் பாண்டியமன்னர் சமணராகி, சம்பந்தர் அருளால் சைவர் ஆகினர்.

சோழ மன்னன் முசுகுந்தனின் புகழ்பாடும் இந்திர விழா, பாண்டியமண்ணில் பிரபலமாக இருக்க சோழ-பாண்டிய பகையும், பாண்டியநாட்டில் நிலவிய திருமால் வழிபாடும் காரணம் என அறியலாம். இதற்கு ஆதாரமாக மகாபாரதமும் உள்ளது. பாரதத்தில் கண்ணன் இந்திரனுக்கு விழா எடுக்க வேண்டாம் என ஆயர்களிடையே கூறுகிறான். இதனால் ஆயர்களும் இந்திரனுக்கு பூசை செய்வதை நிறுத்துகிறார்கள். கோபமடைந்த இந்திரன் பெருமழையை அனுப்ப மாயக்கண்ணன் கோவர்த்தன மலையை தூக்கி மக்களை காக்கிறான். இந்திரன் அதிர்ச்சியடைந்து மன்னிப்பு வேண்ட, அதன்பின் இந்திரவிழா நின்று கண்ணனுக்கு பூஜை செய்யும் வழக்கம் துவங்குகிறது என மகாபாரதம் கூறுகிறது.

குன்று குடையாக எடுத்தாய் குணம் போற்றி- பிரபந்தம்

இப்படிப்பட்ட காலகட்டத்தில் இந்திர விழா தமிழகத்திலும் நின்று இந்திரவிழாவுக்கு பதில் ஆயர் குல மக்கள்- உழவரின் இரட்டை தெய்வங்களான பலராமன் - கண்ணன் வழிபாடான பொங்கல் பண்டிகை முன்நிலை பெற்றிருக்க வேண்டும். புகார் நகரம் புயலால் அழிந்த சூழலில் பாண்டியநாடு எழுச்சி பெற்றதும் இதற்கு காரணமாகலாம்.

ஆக இந்திர விழா, தமிழர் திருநாளான பொங்கலுக்கு வழிவிட்ட வியப்பூட்டும் வரலாற்றின் பிண்ணனி இதுவே. 

--

தேமொழி

unread,
Jan 20, 2016, 2:51:07 PM1/20/16
to மின்தமிழ், hol...@gmail.com
ஆக நீங்கள் சொல்ல வருவதன் சாரம்....

சோழர்கள் இந்திர விழா கொண்டாடுவது சோழர் புகழைப் பரப்புவதால்....

திருமாலின் மீது பற்று கொண்ட  பாண்டியர்கள் (?) 

கண்ணன்  பாரதக்கதை காலத்திலேயே  இந்திரவிழாவை நிறுத்தச் சொன்னதன் அடிப்படையில் சோழ நாட்டின் இந்திரவிழாவை மதிப்பிழக்கச் செய்து.... 
உழவர் குல பலராமன் ஆயர்குல கண்ணன் இவர்களைப் போற்றும் பொங்கல் கொண்டாடும்படி வழி வகுத்தார்கள்.

இந்திர விழா, தமிழர் திருநாளான பொங்கலுக்கு வழிவிட்ட வியப்பூட்டும் வரலாற்றின் பிண்ணனியான இதற்கு மேலும் சான்றுகள் கொடுக்க முடியுமா?

இது கொஞ்சம் அக்ஷய திருதியை கொண்டாடத் துவங்கிய இக்காலத்  தமிழகத்தின் பண்பினைக் காட்டுவதாகத் தெரிகிறது. 


..... தேமொழி

செல்வன்

unread,
Jan 20, 2016, 7:05:45 PM1/20/16
to தேமொழி, மின்தமிழ்
ஆம்....இது சங்க இலக்கிய அடிப்படையில் வரலாற்றின் சில புள்ளிகளை இணைத்து நான் வரைந்த கோலம் தான்..அதனால் தான் பல இடங்களில் "லாம்" இருக்கிறது. முழு ஆய்வு செய்யும் வண்ணம் ஆதாரங்களை வருங்கால ஆய்வாளர்கள் செய்யவேண்டும்.

இந்த சந்தேகத்தின் அடிப்படைகள்:

பாண்டிய நாட்டில் காணப்படும் வைணவத்தின் தாக்கம். மதுரையின் அரசி மீனாட்சி கூட திருமாலிஞ்சோலை அழகரின் தங்கை. சொக்கநாதர் மண உறவு மூலமே மதுரையின் மன்னன் ஆகிறார். ஆனால் மீனாட்சியின் தாய்வீடு மதுரை, அண்ணன் ஊர் 14 கிமி தள்ளியுள்ள திருமாலிருஞ்சோலை.

பலராமன் தென்பாண்டி நாடான நாஞ்சில் நாட்டின் தெய்வம். ஆக தென்பாண்டி நாடும், மதுரையும் இணைந்ததற்கான அறிகுறியாக வாலியோன் - மாயோன் இரட்டை தெய்வ வழிபாடு சுட்டுகிறது.,

இந்திரவிழாவின் அடிப்படை முழுக்க சோழதேசம், பூம்புகாரையும் மையப்படுத்தி அமைந்துள்ளது. பொங்கல் பண்டிகை சங்ககாலத்தில் கொண்டாடப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. ஆனால் இந்திரவிழாவின் முக்கியத்துவம் தீபாவளி, பொங்கலை எல்லாம் பின் தள்ளி முன்னே இருப்பதாக தெரிகிறது. காமன் விழா, காதல் விழா என அறியப்பட்ட இந்திர விழா சில நூறாண்டுகளில் மாறிய ஒழுக்க விதிமுறைகளாலும், புகார் வெள்ளத்தால் அழிந்ததாலும், பாண்டியர் செல்வாக்கு மேலோங்கியதாலும் பின்னுக்கு தள்ளப்பட்டு வைணவ பண்டிகைகளான தீபாவளியும். பொங்கலும் முன்னிலைபடுத்தபட்டிருக்கலாம். இல்லையெனில் அத்தனை கோலாகலமாக கொண்டாடப்பட்ட இந்திர விழா நின்றுபோயிருக்கும் காரணங்கள் இல்லை.

தேமொழி

unread,
Jan 20, 2016, 7:18:55 PM1/20/16
to மின்தமிழ்


On Wednesday, January 20, 2016 at 4:05:45 PM UTC-8, செல்வன் wrote:
ஆம்....இது சங்க இலக்கிய அடிப்படையில் வரலாற்றின் சில புள்ளிகளை இணைத்து நான் வரைந்த கோலம் தான்..அதனால் தான் பல இடங்களில் "லாம்" இருக்கிறது. முழு ஆய்வு செய்யும் வண்ணம் ஆதாரங்களை வருங்கால ஆய்வாளர்கள் செய்யவேண்டும்.


உங்கள் கோணம்.... அதாவது கோலம் போல மற்றொரு கோலம் அடுத்து பதிவிடுகிறேன்..... 

மற்றொரு கட்டுரை இந்திரவிழா பற்றியது...முன்னர் மின்தமிழில் வந்தது....தொல்லியியல் ஆய்வாளர் பத்மாவதி எழுதியதையும் பகிர்ந்து கொள்கிரியன் 

இந்த சந்தேகத்தின் அடிப்படைகள்:

பாண்டிய நாட்டில் காணப்படும் வைணவத்தின் தாக்கம். மதுரையின் அரசி மீனாட்சி கூட திருமாலிஞ்சோலை அழகரின் தங்கை. சொக்கநாதர் மண உறவு மூலமே மதுரையின் மன்னன் ஆகிறார். ஆனால் மீனாட்சியின் தாய்வீடு மதுரை, அண்ணன் ஊர் 14 கிமி தள்ளியுள்ள திருமாலிருஞ்சோலை.

பலராமன் தென்பாண்டி நாடான நாஞ்சில் நாட்டின் தெய்வம். ஆக தென்பாண்டி நாடும், மதுரையும் இணைந்ததற்கான அறிகுறியாக வாலியோன் - மாயோன் இரட்டை தெய்வ வழிபாடு சுட்டுகிறது.,

இந்திரவிழாவின் அடிப்படை முழுக்க சோழதேசம், பூம்புகாரையும் மையப்படுத்தி அமைந்துள்ளது. பொங்கல் பண்டிகை சங்ககாலத்தில் கொண்டாடப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. ஆனால் இந்திரவிழாவின் முக்கியத்துவம் தீபாவளி, பொங்கலை எல்லாம் பின் தள்ளி முன்னே இருப்பதாக தெரிகிறது. காமன் விழா, காதல் விழா என அறியப்பட்ட இந்திர விழா சில நூறாண்டுகளில் மாறிய ஒழுக்க விதிமுறைகளாலும், புகார் வெள்ளத்தால் அழிந்ததாலும், பாண்டியர் செல்வாக்கு மேலோங்கியதாலும் பின்னுக்கு தள்ளப்பட்டு வைணவ பண்டிகைகளான தீபாவளியும். பொங்கலும் முன்னிலைபடுத்தபட்டிருக்கலாம். இல்லையெனில் அத்தனை கோலாகலமாக கொண்டாடப்பட்ட இந்திர விழா நின்றுபோயிருக்கும் காரணங்கள் இல்லை.


பொங்கலை வைணவப் பண்டிகையாக ஆக்கும் உங்களின் முயற்சி மட்டுமே எனக்குப் புரிகிறது செல்வன்.




...... தேமொழி

தேமொழி

unread,
Jan 20, 2016, 7:19:52 PM1/20/16
to மின்தமிழ்
நன்றி:  தினகரன்: http://archives.thinakaran.lk/2011/01/14/_art.asp?fn=d1101141

இந்திர விழா பொங்கலுக்கு வழிசமைத்ததோ?

சாரதா மனோகரன்

தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது.

சென்னி வெண்குடை நீட நபாயன்
திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின்
மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு
வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப்
பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து
புணரி தன்னையும் புனிதமாக் 
குவதோர்
நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் 
னுடைய
நவஞ்சி றந்தது வளம்புகார் நகரம்
என்கிறது அந்தப் பாடல்.

அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு.


தைப்பொங்கல் திருநாள் நாளை

அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம் என்று குறிப்பிடுகிறது அந்தப் பாடல்.

காவிரிப்பூம் பட்டினத்திலே நிலைத்து நின்று வாழும் மக்களை ‘பதியெழு அறியாப் பழங்குடியினர்’ என இளங்கோவடிகள் கூறுகிறார். படைப்புக் காலந்தொட்டே வாழும் குடியினர் என அதற்கு உரை கூறுவர்.

சேர சோழ பாண்டியர் என மூவேந்தர் தென்னிந்தியப் பகுதியை ஆண்ட காலத்திலே சோழப் பேரரசின் தலைநகராக காவிரிப்பூம் பட்டினம் இருந்தது. கி.பி. 850 களின் பின்பு, பிற்காலச் சோழர்களின் ஆட்சி ஏற்பட்டபோது பூம்புகார் என்ற காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல் கொண்டதால், பேரரசின் தலைநகரம் தஞ்சாவூராகியது. காவிரிப்பூம்பட்டினத்தை மையமாகக் கொண்ட ஐம்பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்திர விழாவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

சங்க காலம் தொட்டு தட்சணாயன காலத்தின் ஆரம்பத்தை இந்திர விழாவாகக் கொண்டாடும் வழக்கம் இருந்து வந்தது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவறை காதையிலே ‘இந்திர விழா’ பற்றிக் கூறப்படுகிறது. அதன்படி, காவிரிப்பூம்பட்டினத்தில் ஏறத்தாழ 28 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது.

சோழகுல மன்னர்களுள் ஒருவனான தூங்கெயில் எறிந்த தொழத்தோள் செம்பியன் என்பவன் காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்புறச் செய்ய ஆசைப்பட்டான். அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இந்திரனை வணங்கித் தவமிருந்தான்.

இந்திர விழாவை ஆண்டு தோறும் காவிரிப்பூம்பட்டினத்தில் நடத்தவும் அதற்கு இந்திரன் வருகை தரவேண்டும் எனவும் வேண்டினான். இவ்விழா 28 நாட்கள் நடைபெற இந்திரன் ஆசியளித்தான்.

தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் தொடக்கிவைத்த விழா ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வந்தது. இந்திரனின் கரும்பு வில்லை நினைவுகூரும் வகையிலே இந்திர விழாவில் கரும்பு முக்கிய இடத்தைப் பெற்றது. வீதிகளிலும் கோயில் வாசல்களிலும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டன.

பொன்னாலான பாலிகைகளால் நகரம் அலங்கரிக்கப்பட்டது. பாக்கு, வாழை மரத் தோரணங்கள் கட்டப்பட்டன. கோயில்களிலெல்லாம் சிறப்பாகப் பூஜைகள் நடாத்தப்பட்டன.

இப்படிக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்திரவிழா கைவிடப்பட்டமையால் தான், காவிரிப்பூம்பட்டினத்தின் ஒரு பகுதியைக் கடல் கொண்டதாகவும் குறிப்பிடுவர்.

மழை, இடி, மின்னல்களின் கடவுளாக இருப்பவன் இந்திரன். அவனை வழிபட்டால் மாதம் மும்மாரி பொழிந்து பயிர் செழிக்குமென மக்கள் நம்பினர். மழைக்கடவுளான இந்திரனை வழிபட்டனர்.

சங்க காலத்திலேயே இந்திர வணக்கமும் அவனுக்கு விழா எடுக்கும் வழக்கமும் தமிழர்கள் மத்தியில் இந்திருக்கிறது. இதை சங்க இலக் கியமான ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை காலத்தில் இவ்வழக்கம் ஆழ வேரூன்றியிருந்தது.

இந்திரவிழா கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமே மழையாகும். மழைக்கடவுளான இந்திரனை விழா எடுத்து வணங்கி அவனது அருளாகிய மழையைப் பெறுவது என்பதே. மழை பெய்தால் விவசாயம் சிறக்கும். உணவு உற்பத்தி பெருகும். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வர் என்பதாகும்.

ஆயினும் காலப் போக்கில் வைணவ ஆதிக்கம் மேலோங்க இந்திர விழா எடுக்கும் வழக்கம் அருகி மறைந்துவிட்டது. கண்முன்னே தெரியும் சூரியனே காலநிலையை நிர்ணயிப்பவன் என்ற நம்பிக்கை வந்தது.

விவசாயம் சிறக்க வழிவகுக்கும் முதற்காரணி காலநிலை. அந்த வகையிலே சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தாம் அறுவடை செய்த புது நெல்லை தை முதல் நாளன்று சமைத்தனர். சூரியனுக்குப் படைத்து நன்றி செலுத்தினர். அது தைப் பொங்கலாகியது.

ஆகையால்தான் இந்திர விழா பொங்கலுக்கு வழி சமைத்தது என்பர். தமிழகத்திலே பொங்கல் 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் முதலாவது நாள் போகியாகும். போகிபோகம் துய்ப்பவனாகிய இந்திரனுக்காக இந்த நாள் ஒதுக்கப்பட்டது என்றும் கூறுவர். அன்றைய நாளை வீடு வாசல்களைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தமாக்கும் நாள் என்றும் கூறுவர். இந்திர விழா என்றும் அழைப்பர்.

அறுவடை கண்ட பூரிப்பால் அந்த மகிழ்வைக் கொண்டாடுவதே பொங்கலாகும்.

ஒரு காலத்தில் ஊரே திரண்டு பெருந்திரு விழாவாகக் கொண்டாடிய பண்டிகைகள் எல்லாம் இன்று வீட்டுக்குள்ளேயே கொண்டாடப்படுவனவாகச் சுருங்கிவிட்டன. உலகமயமாதலாலோ என்னவோ முழு உலகுமே கிராமமாகிவிட்டது. ஒவ்வொரு வீட்டையும் தனி உலகமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். எமது பாரம் பரியங்களும் கலாசார நெறிமுறைகளும் கூட மறக்கடிக்கப்பட ஆரம்பித்துவிட்டன.

புது மண்பானையில் மஞ்சள் கிழங்கு சுற்றி முற்றத்திலே பொங்கல பொங்கிய காலமொன்றும் இருந்தது. அது இன்று எரிவாயு அடுப்பிலே, கறையில் உருக்குப் பானையிலே பொங்கி உண்ணும் காலமாக மாறிவிட்டது. நகரப் பகுதிகளிலே, சூரியனுக்காகப் பொங்கிய பொங்கலை சூரியனுக்குப் படைக்கும் சாத்தியம் காணப்படுவது கூட அரிதாகிவிட்டது.

பொங்கல் திருநாளின் பாரம்பரியத்தையும் தொன்மையையும் முதலில் நாம் உணரத் தலைப்படவேண்டும். அத்திருநாளுக்கே உரித்தான விழுமியங்களைக் கைவிடாது தொடர்ந்து பேணவேண்டும். அன்றேல் எமது அடுத்த சந்ததி அந்திருநாளை அறியாமல் போவதற்கு நாமே காரணமாகிவிடுவோம் என்பது மட்டும் தான் நிதர்சனமான உண்மையாகும்.


--------------------------------------


On Wednesday, January 20, 2016 at 10:45:07 AM UTC-8, செல்வன் wrote:

தேமொழி

unread,
Jan 20, 2016, 7:21:20 PM1/20/16
to மின்தமிழ்
மறுபகிர்வு: 



வணக்கம்.

இன்று ஒரு கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தொல்லியல் துறை ஆய்வாளர். டாக்டர் பத்மாவதியின் கட்டுரை இது.  இக்கட்டுரையை நமது வாசிப்பிற்காக தட்டச்சு செய்து வழங்கியவர் கீதா சாம்பசிவம். அவர்களுக்கு நம் நன்றி.

ஆய்வுக்கருத்துக்களை முன் வைக்கும் இக்கட்டுரையை வாசித்து உங்கள்கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

சுபா

இந்திர விழா
டாக்டர்.பத்மாவதி

இந்திரவிழா சோழநாட்டுக்காவிரிப்பூம்பட்டினத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதை சிலப்பதிகாரமும் மணிமேகலையும் குறிப்பிடுகின்றன.  அவ்வாறு குறிப்பிடும்போது விழா கொண்டாடப்பட்ட முறையையும் மிக அழகாக எடுத்துக் கூறுகிறது சிலப்பதிகாரம்.

காவிரிப் பூம்பட்டினத்திலுள்ள ஐந்து வகை மன்றங்களிலும் வழிபாடு செய்துவிட்டுக் கோயிலில் வைக்கப்பட்டிருந்த முரசை எடுத்து அரசனுடைய யானையின் மேல் ஏற்றி, இந்திர விழா தொடங்கும் நாள், முடியும் நாள் ஆகியவற்றை முரசறைந்து நகர மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

விழாத் தொடங்கும்போது கற்பகத்தருக் கோட்டத்தில் உள்ள ஐராவதம் என்னும் யானையின் உருவம் வரையப்பட்ட கொடியை ஊர்வலமாக எடுத்து வந்து, தருநிலைக் கோட்டத்தில் வானுயர உயர்த்தி கால்கோள் விழா செய்தனர்.

இவ்விழாவின் (கால்கோள்) போது நகரங்களில் உள்ள நெடுநிலை மாளிகைகளின் வாயில்கள்,முத்துக்கள் நிறைந்த மகரவாசிகை, தோரணங்கள், பசும்பொற்பூரண கும்பம், பொலிந்த பாலிகை, (முளைப்பாரி) பாவை விளக்கு, பசும் பொற்படாகை (கொடி)  தூமயிர்க்கவரி, சுந்தரச் சுண்ணம் ஆகிய மங்கலப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இத்தகைய மாளிகைகள் நிறைந்த நெடுவிதிகளில் ஐம்பெருங்குழுவினராகிய --அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணம், எண்பேராயத்தினராகிய--கரணத்தியலவர், கருமகாரர், கனகச்சுற்றம், கடைக்காப்பாளர், நகர மாந்தர், நனிபடைத்தலைவர், யானை வீரர், இவுளி மறவர் ஆகியோர், அரசகுமாரர், பரத குமாரர்(வணிகர்) கவர் வரிப்புரவியராகிய விரைந்து செல்லும் குதிரைப்படை வீரர்கள், யானைப்படையினர், குதிரைகள் பூட்டிய தேர்ப்படையினர் ஆகியோர் ஒன்று சேர்ந்து அரசனின் கொற்றம் மேலும் மேலும் மேம்படுவதற்கு வாழ்த்திச் செல்வர். அவ்வாறு வாழ்த்திக் கொண்டே தண்ணறுங்காவிரி பெருந்துறையிலிருந்து புண்ணிய நன்னீர் பொற்குடத்தேந்தி வந்து மண்ணகம் மருள, விண்ணகம் வியப்ப விண்ணவர் தலைவனாகிய இந்திரனை விழுநீராட்டினர்.  பின்னர் பிற கோயில்களிலும் வழிபாடுகள் நிகழ்த்தினர்.

இதைப்போலவே காளிதாசரின் இரகுவம்சமும் (4 ஆவது சர்க்கம், 3ஆவது சுலோகம்) இந்திரவிழா பற்றியும் எவ்வாறு நடந்தது என்பது பற்றியும் கூறுகின்றது.  இந்திரனுடைய கொடியை உயர்த்தி இந்திரவிழா நடத்தும்போது நகரமக்கள் வந்து பார்த்து மகிழ்வதைப் போல, மன்னன் இரகுவின் முடிசூட்டுவிழாவைக்கண்டு நகரமக்கள் மகிழ்ந்தனர் என்று காளிதாசர் ஒரு சுலோகத்தில் கூறுகிறார்.1

இந்த சுலோகத்திற்கு உரை எழுதிய மல்லி நாதர் இந்திரவிழாவைப் பற்றி மூன்று சுலோகங்களை மேற்கோள் காட்டுகின்றார்.  நகர வாயிலில் நான்கு கம்பங்களில் யானை உருவம் வரையப்பட்ட கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன.  சதுர வடிவமான இந்திரனின் கொடி (சக்கர துவஜம்) அரசனுடைய அரண்மனைக்கு எதிரில் நாட்டப்பட்டிருந்தது.  அது நகர மக்களுக்கு மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க வல்லது என்கிறார்.  பாடலிபுத்திரத்தில் நடந்த ஒரு விழாவில் பெளத்த ஊர்வலம் சென்றதை பாஹியான் குறிப்பிடுகின்றார்.

இந்திரவிழாவை முதன்முதலில் தொடங்கி வைத்தவன் சேடிமன்னன் உபச்சரிகா என்ற வசு என மகாபாரதம் மூலம் தெரிகிறது.  வசு அரசனாக முடிசூடிய முதலாம் ஆண்டு ஒரு மூங்கிற்கழியில் கொடியைக் கட்டி உயர்த்தி இந்திரனை வழிபட்டானாம்.  அவனைப் பின்பற்றி அவன் தலைமுறையினரும் இந்திரனுக்கு விழா எடுத்து வழிபட்டனர்.

சேடிமன்னன் இந்திரனுக்கு விழா எடுத்தது அவன் அரசன் என்ற ஒரு அந்தஸ்தைப் பெற்ற தினத்தில் என்பதும், அந்நாளில் அரசருள் அரசனாக, வெற்றிக் கடவுளாகக் கருதப்பட்டு வந்த இந்திரனை வணங்குவதற்காக என்பதும்--
தெரிகிறது.2

சேடி மன்னர் இந்திரவிழா கொண்டாட ஆரம்பித்த பின்னர் தான் இந்திர விழா பிற நாடுகளிலும் பரவியிருக்கிறது.  வசு வாழ்ந்த காலம் கி.மு. 5,6 ஆம் நூற்றாண்டாகும்.  வசுவால் விழா எடுத்துக் கொன்டாடப்படுவதை அறிந்த இந்திரன், 'எனக்கு மகிழ்ச்சியுடன் விழா எடுக்கும் அரசர்களும் பிறரும் சிறந்த தகுதியை அடைவார்கள்'--என்று கூறினான் என்கிறது மகாபாரதம்.  சேடிமன்னன் வசு தொடர்ந்து இவ்விழா எடுத்து வந்ததால் தொடர்ந்து கடவுள்களுக்கெல்லாம் அரசனாக விலங்கினான் என்றும் மஹாபாரதம் கூறுகிறது.3

இரகு வம்ச உரையில், 'எந்த அரசன் இந்திரனுக்கு விழா எடுத்துக் கொடி நாட்டுகிறானோ அந்த அரசனுடைய நாட்டில் சந்தேகமேயில்லாமல் வேண்டிய அளவு மழை பெய்யும்'-- என மல்லிநாதர் கூறியிருப்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வசியும் வளமும் (மழையும் செல்வமும்) பெருக வேண்டி வாழ்த்தி விழா எடுக்கப்பட்டதைக் கூறுகிறது.  மணிமேகலையில் இந்திரவிழா எடுக்கத்தவறும் அரசர்களின் ஆநிரைகளையும் ஆடுகளையும் கடல் கொள்ளும் என்ற கருத்து நிலைநாட்டப்பட்டுள்ளதும் இங்கு கவனிக்கத் தக்கது.

சங்க கால பாண்டிய மன்னன் ஒருவன், 'அம்பொற் சித்திரம் உயர்' விழா கொண்டாடியதை சின்னமனூர் பெரிய செப்பேடு கூறுகிறது.  இதற்கு விளக்கம் எழுதிய எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள், இந்திரவிழாவின் போது இந்திரனுடைய கொடியை ஏற்றித் திருவிழா செய்ததை 'அம்பொற் சித்திர முயரி' என்ற வாசகம் குறிக்கிறது என்கிறார்...4 இது பற்றிக் கூறும் சின்னமனூர் பெரிய செப்பேடு,

"தடம் பூதம் பணி கொண்டும் தடாகங்கள் பல திருத்தியும்
அடும்பசி நோய் நாடகற்றி அம்பொற்சித்திர முயரியும்"

என்கிறது.  அம்பொற் சித்திரமாகிய இந்திரனுடைய கொடியை, உயர்த்தி இந்திர விழா எடுக்கப்பட்டதைக் கூறும்போது தடாகங்கள் பல திருத்தியது பற்றியும் அடும்பசி நோயாகிய வறுமையை ஒழித்ததையும் கூறிவிட்டு, இந்திர விழா எடுத்ததைக் குறிப்பிடுவது , மக்களின் பசியை அகற்றி செங்கோலாட்சி செய்யும் மன்னனே இந்திரவிழா எடுக்கும் தகுதியுடையவன் என்பதும் பெறப்படுகிறது.

இவ்வாறு அம்பொற் சித்திர முயரி விழா எடுத்தவனை சின்னமனூர் பெரிய செப்பேடு கூறும்போது,

'அம்பொற்சித்திர முயரியும் தனியாலங்கானத்திற் தன்னோக்குமிருவேந்தரைக் கொலை வானிற் தலை துமித்தும்'

எனக் கூறுவதால் இப்பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாக இருத்தல் வேண்டும்.

காளிதாசர் இந்திரனுடைய கொடியை உயர்த்தி இந்திர விழா நடத்தும்போது, நகர மக்கள் வந்து பார்த்து மகிழ்வதைப் போல நகர மக்கள் இரகுவின் முடிசூட்டு விழாவைக் கண்டு மகிழ்ந்தார்கள்5 எனக் கூறியது போல, சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இந்திர விழாவைக் கண்டு மகிழும் பூம்புகார் நகர மக்களைப் பற்றிக் கூறும்போது 'கரிகாற்வளத்தான் தன் பதங்கொள்ளும் நலைநாட்போல' மகிழ்ந்தார்கள் என்கிறார்.6

மன்னர்களின் முடிசூட்டுவிழா போன்றுதான் இந்திரவிழாவின் போதும் நகரம் அலஙகரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு அரச அதிகாரிகள் புடைசூழ இந்திரனுக்கு அபிஷேஹம் செய்யப் பட்டது.  எனவே அரசர்க்கெல்லாம் அரசனாகவும் தெய்வமாகவும் திகழும் இந்திரனுக்கு வருடந்தோறும் மன்னர்கள் தாங்கள் முடி சூட்டிய அன்றோ வேறோர்  நாளிலோ நடத்தப்படும் அபிஷேக விழாவாகிய முடிசூட்டு விழாதான் இந்திர விழா.  எனவே இந்திர விழாவும் மன்னர்கள் முடிசூட்டு விழாவும் ஒரே மாதிரியான விழா என்பது தெரிய வருகிறது.  அதனால் தான் சிலப்பதிகாரம், இந்திர விழா, கரிகால் சோழனின் தண்பதங்கொள்ளும் (முடி சூட்டு விழா) தலை நாள் போல இருந்தது எனக் கூறுகின்றது.  மகாபாரதமும் சேடி மன்னன் முடிசூடிய தினத்தில் தான் வருடந்தோறும் இந்திர விழா கொண்டாடப்பட்டது என்கிறார்.

இந்திர விழாவும் காமன் விழாவும்

இந்திரவிழாவுடன் காமனுக்கு மகரக் கொடியேற்றி எடுக்கப்படும் மகரத்வய புஜோத்சவம் பற்றி 'வசந்த திகல பான' என்ற நூலில் வரதாச்சாரியார் கூறுகிறார்.7  மதுரையிலும் வருடந்தோறும் நடக்கும் சித்திரைத் திருவிழாவுடன் காமன் பண்டிகையும் கொண்டாடப் படுகிறது.

சித்திரை விழா--சித்திரைமாதத்தில் சித்திரை தினத்தில் நடக்கும் இந்திர விழாவாகும்.  இவ்விழாவுடன் காமன் பண்டிகையும் கொண்டாடப் பட்டது பற்றிப் பின்னர் காண்போம்.

இந்திரவிழா--கலைவிழா--கல்வித் திறனுக்கும் விழா

இந்திரன் ஒரு வெற்றி வீரன் என்பதால் அரசர்கள் தங்கள் அபிஷேக நாளில் இந்திரனுக்கு அபிஷேகம் செய்து நிரந்தர வெற்றிகளைத் தங்களுக்கு அளிக்குமாறு வேண்டினர்.

இந்திரன் -ஒரு மழைக்கடவுள் என்பதால்--அரசர்கள் தங்கள் நாட்டில் வசியும் வளனும் சுரக்க வேண்டியும் விழா எடுத்தனர்.

இந்திரன் ஒரு கலைக்கடவுள் என்பதால் இந்திர விழாவன்று கலைகள் முக்கியத்துவம் பெற்றன.  இந்திரனின் அவையிலே நடந்த நடனம், இசைக்கலைகள் பற்றி சிலப்பதிகாரம் கூறுகின்றது.  இந்திரனின் சாபத்தில் நடன அரசி ஊர்வசி மாதவியாக பூமியில் பிறந்தாள் என்கிறது சிலப்பதிகாரம்.

வீரத்தைப் பாராட்டி இந்திரலோகமான அமராவதிக்கு அழைத்து வரப்பட்ட அர்ஜுனன் அனைத்து விதமான போர்ப் பயிற்சியையும், நடனம், இசை போன்ற கலைகளிலும், அரசியல், நிர்வாகம் போன்ற நூல்களையும் கற்றுத் தேர்ந்தான் என்கிறது மஹாபாரதம்.8

அரசர்கள் (இந்திரனைப் போன்று) போர்ப்பயிற்சி, அரசியல், நிர்வாகம், நீதி போன்ற நூற்பயிற்சிகள் மட்டுமின்றி கலை, கல்விப் பயிற்சியிலும் தகுதியுடையவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள்.  நாட்டை ஆட்சி புரிய அவர்களுக்கு இத்தனையும் நிறைந்த அறிவு வேண்டும் என நீதி நூல்களில் வரையறுக்கப்பட்டுள்ளன.

வீரத்திலும் நிர்வாகத்திலும் மேம்பட்டு பெரரசனாக ஆட்சி புரியும் மன்னர்கள் இந்திரவிழாக் கொண்டாடும்போது கல்விக்கும், கலைக்கும் அங்கு இடமளிக்கப்பட்டிருந்தது.  அறிவுக்கும் ஐம்புலன்களுக்கும் இந்திரவிழாவில் விருந்தளிக்கப்பட்டது.

இந்திர விழாவன்று அரசனது அவையில் மக்கள் பங்கு பெறும் பொதுவிடங்களிலும் அரசவைக் கணிகையரால் நாட்டியம் நிகழ்த்தப்பட்டது.  தரும உபதேசங்கள், பந்தல்களிலும் அம்பலங்களிலும் நடந்தன.  வித்யா மண்டபங்களில் சமய வாதங்கள் நடந்தன.  அது மட்டுமின்றி புதிதாக எழுதப்பட்ட நூல்கள் இந்திரவிழாவன்று அரங்கேற்றம் செய்யப்பட்டன.9  இந்நாளின்போதுதான் பரதரின் நாட்டிய சாஸ்திரம் அரங்கேற்றம் செய்யப்பட்டதாக சம்ஸ்கிருத மரபுச் செய்தி ஒன்றில் காணப்படுகின்றது.

இந்திரவிழாவன்று நடிப்பதற்கென்றே நாடகங்கள் எழுதப்பட்டன என்றும் தெரிய வருகிறது.10  அவற்றுள்

காளிதாசரின் -மாளவிகாக்னிமித்ரம்
ஹர்சரின் -ரத்னாவளி, பிரியதர்சிகா
சாதனியின் -வசந்திக பரினயம்

ஆகிய நூல்கள் அடங்கும்.

கடலாடு காதையில் அர்சகுமாரரும் பரதகுமாரரும், கணிகையரும் ஆடவரும் பெண்டிரும் எவ்வாறெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்று கூறியிருப்பதை நோக்க, மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கும் விழா என்று தெரிகிறது.  இந்திர விழாவுடன் காமன் விழாவும் கொண்டாடப்பட்டது என்ற செய்தி, இந்திர விழாமுடிந்தபின் அதாவது இந்திரனுக்கு நீராட்டும் நிகழ்ச்சி முடிந்த பின் மக்கள் கடலாடு காதையில் காமக்களிப்பில் மூழ்கி நீராடி மகிழ்ந்த செய்தி இந்திர விழா--காமன் விழா இணைந்து நடந்ததையே குறிப்பிடுகிறது.

இந்திரவிழாவும் அரசர்க்கரசர்களும்

சோழ மன்னன் கரிகாலன், சேடி மன்னன் வசு, ரகுவம்ச மன்னனாகிய ரகு ஆகியோர் வெற்றி வீரர்கள் என்றும், அவர்கள் இந்திரவிழாவைக் கொண்டாடினர் என்றும் அறிந்தோம்.

அதுபோலவே மணிமேகலையில் தூங்கெயில் எறிந்த தொடிதோட்செம்பியன் என்ற மன்னன் இந்திரனின் அனுமதி பெற்று விழா எடுத்தான் எனக் கூறப்பட்டுள்ளது. 11
தூங்கெயில் என்றால் ஆகாயத்தில் உள்ள கோட்டை எனப்பொருள் கூறப்பட்டுள்ளது.  இவ்வாறு பொருள் கூறுவதை விட, முகில்கள் தூங்குமளவு உயரமான மதில் என்றே பொருள் கொள்ளல் வேண்டும்.  பகைவனின் உயரமான மதிலை எறிந்து வெற்றி பெற்று சிறந்த வீரன் என்ற அந்தஸ்தை நிலை நாட்டிய வெற்றி வீரனாகிய தொடிதோட் செம்பியன், வெற்றி வீரனும் கடவுளுமாகிய இந்திரனுக்கு விழா எடுக்கும் சிறப்பைப் பெற்றிருக்கிறான். இத்தகைய பெருவீரர்கள் தோளில் தொடி அணியும் தகுதி படைத்தோர்.  அதனால் இச்செம்பியன், தொடிதோட் செம்பியன் எனப் புகழப்பட்டான்.  தொடி--என்பது தோளில் அணியும் அணியாகும்.  இதற்கு வீரவலை என்ற பெயரும் உண்டு.

முற்காலப் பாண்டியர்கள் தங்கள் செப்பேடுகளில் இந்திரனின் வளையை எறிந்ததையும் முடியை உடைத்ததையும் பெருமையாகக் கூறிக்கொள்கின்றனர்.12  வெற்றிக் கடவுளாகிய இந்திரன் அணிந்திருந்த வீர வளையாகிய தோள் வளையை எறிந்ததையும் முடியை உடைத்ததையும் கூறுவதன் மூலம், பல அரசர்களை வென்று, அரசர்க்கெல்லாம் அரசனாக விளங்கிய அரசனை வென்று தாங்கள் பேரரசர்களாக விளங்கியதையே அவ்வாறு கூறிக்கொள்கின்றனர்.  மேலும் இவ்வாறு கூறுவதன் மூலமாக இந்திரனைத் தங்கள் அரச தெய்வமாக கொண்டாடிய களப்பிரர்களையும் அவர்கள் சார்ந்திருந்த பெளத்த மதத்தையும் பெளத்த மதக்கடவுளின் செல்வாக்கையும் குறைத்ததை பாண்டியர்கள் அவ்வாறு கூறினர் என்ற செய்தி புதைந்து கிடக்கின்றது என்பதனை நாம் ஆய்வுக் கண்ணோட்டத்தின் மூலம் அறிந்து கொள்ள இயலும்.

சிலப்பதிகாரத்தில் இந்திரவிழா நடத்திய சோழன் கரிகாலன், இவன் இமயம் வரை படையெடுத்துச் சென்று புலிச்சினத்தைப் பொறித்தான்.   மகத நாட்டு, வஜ்ஜிர நாட்டு, அவந்தி நாட்டு மன்னர்களை வென்றான்.  அவர்களை வென்று அவர்கள் அளித்த பரிசுப் பொருட்களைக் கொணர்ந்து காவிரிப்பூம்பட்டினத்தில் வைத்தான்.  எனவே இந்திர விழா கொண்டாடும் தகுதியைப் பெற்றிருந்தான்.13

அரசனாக அந்தஸ்துப் பெற்ற வசு, தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன், வடபுலம் வரை வெற்றி கொண்டு இமயத்தில் வில் பொறித்த கரிகாலன் ஆகிய இவர்களைப் போலவே கானப்பேரெயில் எறிந்த உக்ரப் பெருவழுதி என்ற பாண்டியனும் இந்திர விழா கொண்டாடியிருத்தல் வேண்டும்.  இவ்விழாவே சித்திரை விழா என மருவி வழங்கி வருகிறது என்பதைப் பின்னர் காண்போம்.

இந்திர விழாவும் பெளத்தமும்

வட இந்தியாவில் மகதப் பேரரசு உருவானபோது அங்கு பெளத்தம் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தது.  இனக்குழுக்கள் உடைந்து நிலப்பரப்பின் அடிப்படையிலான ஒரு அரசு மகதத்தில் புத்தரின் கொள்கைப்படி தோன்றியது.  எனவே பெளத்தம் அதிக செல்வாக்குப் பெறத் தொடங்கியது.  அது வரையில் ஆரியர்களின் மாபெரும் வெற்றிக் கடவுளாகத் திகழ்ந்த இந்திரனும் பெளத்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டான்.  அதாவது பெளத்தம் மிகவும் செல்வாக்குள்ள பிறமத தெய்வங்களையும் தங்கள் மதத்தில் ஏற்றுக் கொண்டது. அவ்வாறு ஏற்றுக் கொண்டு மிக உயர்ந்த இடத்தில் வைத்து வணங்கப்பட்டவன் இந்திரன்.  வேதக் கடவுளாகிய இந்திரன் புத்தருக்கு வணக்கம் செலுத்துவதாகக் காணப்படும் சிற்பங்கள் மதுராவில் உள்ளன.  இதன் கருத்து என்னவென்றால் இந்திரன் புத்தரின் உயர்வை ஏற்றுக் கொண்டான் என்பதாகும்.  மதுராவில் இந்திரனின் உருவம் ஐந்து இடங்களில் உள்ளன.14 புத்தரின் உருவங்களைத் தவிர நாக வழிபாடும் இந்திர வழிபாடும் இருந்திருக்கிறது.  நாகம் வளத்தின் கடவுள்.  இந்திரன் வெற்றிக் கடவுளாகவும் மழைக்கடவுளாகவும் போற்றப் பட்டவன்.

இந்திர விழா--பெளத்த விழாவான பின் பெளத்தம் சார்ந்த மன்னர்கள் இந்திரனைச் சிறப்பாகக் கொண்டாடினர்.  இந்திரன் அசுரர்களுடன் போரிடச் சென்றபோது, அமராவதி நகரை முசுகுந்த சோழன் என்பவன் காத்தான் என்பதால் ஐந்து வகை மன்றத்து பூதங்களும் இந்திரனின் ஏவலால் மன்னர்களுக்கு வரும் தீங்கை நீக்க வேண்டி அனுப்பப் பட்டனர் எனச் சிலப்பதிகார உரையில் கூறப்பட்டிருக்கிறது.  அமராவதி ஒரு தலை சிறந்த பெளத்த நகரம்.  பெளத்த மையங்களுள் ஒன்று என்பதை அனைவரும் அறிவர்.

கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் பாடலிபுத்திரத்தில் பாஹியான் -- ஒரு விழாவில் நடந்த பெளத்த சமய ஊர்வலம் பற்றிக் கூறியது, சிலப்பதிகாரத்தில் நடந்த ஊர்வலம் போன்றதே... பூம்புகாரில் எடுக்கப்பட்ட இந்திரவிழாவிலும் பெளத்த சமயப் பிக்குகள் ஊர்வலம் சென்றனர் என்பதை முன்னர் குறிப்பிட்டோம்.

மணிமேகலை அனைவராலும் ஒப்புக் கொள்ளக் கூடியதொரு பெளத்த நூல்.  அநூலிலும் இந்திர விழாவின் முக்கியத்துவம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.  இந்திர விழா எடுக்காத அரசனின் நாட்டைக் கடல் கொள்ளும்படி இந்திரன் தனக்குக் கட்டளையிட்டிருப்பதாக மணிமேகலா தெய்வம் கூறுகிறது.  மணிமேகலா தெய்வம் பெளத்த சமய தாரா தேவியே என்பதும் அது கடல் தெய்வம் என்பதும் இந்நூலாசிரியரால் வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்திரவிழாவும் வைணவமும்

ஆரியரல்லாத இனக்குழுத் தலைவன் கிருஷ்ணனுடன் ஆரியக் கடவுள் இந்திரன் போரிட்டு அவனைத் தோற்கடித்ததை ரிக்வேதம் கூறுகிறது.  இந்திரன் தனது விருப்ப பாணமாகிய த்ரப்சபாணம் (drapsa--diluted sour milk) காரணமாகக் கிருஷ்ணனைத் தோற்கடித்தான் என்றும், இப்போரில் கிருஷ்ணன் பத்தாயிரம் வீரர்களுடன் அம்சுநதி ஆற்றங்கரையில் இந்திரனுடன் போரிட்டுத் தோற்றான் என்றும் கூறுகிறது.  இந்த அம்சுநதி ஆற்றை யமுனை ஆறென்றும், ஆரியரல்லாத இனத் தலைவனை அசுரன் என்றும் சாயனர் கூறுகின்றார். 15

ஆனால் விஷ்ணு தர்மோத்ர புராணமும் பிருகத்சம்ஹிதையும் தான் இந்திர விழா பற்றிக் கூறும்போது கிருஷ்ணனை முதன் முதலாகக் கடவுளாக உயர்த்திக் கூறியிருக்கிறது. 16

அசுரர்களின் தொல்லைக்குட்பட்ட தேவர்கள் இந்திரனின் தலைமையில் விஷ்ணுவை அணுக, விஷ்ணு தனது கொடியை இந்திரனிடம் கொடுத்தான்.  அதுவே அசுரர்களைத் தோற்கடித்து வெற்றி பெறும் மன்னர்கள் இந்திர விழாவைக் கொண்டாடும்படி இந்திரன் அக்கொடியை மன்னர்களுக்குக் கொடுத்தான் என்றும் மேற்கூறிய நூல்கள் கூறுகின்றன.  மேலும் இந்திர விழா கொண்டாடும் அரசர்கள், தங்கள் எதிரிகளை வென்று பேரரச்ர்களாக விளங்குவார்கள் என்றும் கூறுகின்றன.12

மேலும் அந்த நூல்கள் இந்திரனின் மூங்கிற்கொடி, இந்நூல்களில் விஷ்ணுவின் கொடியாகவும், விஷ்ணுவிடமிருந்து அக்கொடியைப் பெற்று இந்திரன் வெற்றியடைந்தான் என்றும் வெற்றி பெறும் மன்னர்களுக்குக் கொடுத்து இந்திரவிழா கொண்டாடச் செய்தான் என்றும் முற்றிலும் மாற்றப்பட்ட கதையாகச் சித்தரிக்கின்றன.

கிருஷ்ணனைப் பற்றிய கதைகள், இந்திரனின் பாரிஜாத மரத்தைக் கிருஷ்ணன் கைப்பற்றியதையும், இந்திரவிழாவை நிறுத்தியதையும் கூறுகின்றன.18  இக்கதை ஆரியரல்லாத மக்களின் வாசுதேவ கிருஷ்ண வழிபாட்டிற்கும் ஆரிய மக்களின் இந்திர வழிபாட்டிற்கும் இடையே நடந்த போராட்டமாகக் கருதப் படுகிறது.

ஆரிய இன மக்களின் கடவுளாகவும், பெருவீரனாகவும் வணங்கப்பட்ட ஒப்பற்ற வீரக்கடவுளான இந்திரன் இப்போராட்டத்தில் தோற்று, ஆரியரல்லாத இனத் தலைவர்களின் வெற்றியைத் தொடர்ந்து செல்வாக்கிழந்த வரலாறே மேற்கூறிய கதைகள் மூலம் வெளிப்பட்டிருக்கின்றது.

பெளத்த மதத்தினரால் பெளத்தத்திற்குள் கொண்டு வரப்பட்ட ஆரியக் கடவுள் இந்திரன், பெளத்தம் செல்வாக்குப் பெற்றபோது செல்வாக்குடன் திகழ்ந்தான்.  பெளத்தத்தை எதிர்த்து சைவமும் வைணவமும் வெற்றி பெற்று, பெளத்தம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டபோதும், செல்வாக்குக் குறைக்கப்பட்டபோதும் இந்திரன் கிருஷ்ணனிடம் தோற்றவனாகவும் கிருஷ்ணனின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டவனுமாகக் காட்டப் பட்டிருக்கிறான் எனலாம்.

கி.பி. 404 ஐச் சேர்ந்த மான்டசோர் கல்வெட்டு ஒன்று, கிருஷ்ணன் கோவர்த்தனகிரியை உயர்த்தி இந்திரனை வென்ற கதையைக் கூறிப் பின்னர் கிருஷ்ணன் இந்திரவிழாவைத் தொடர்ந்து நடத்த அனுமதியளித்ததைக் கூறுகிறது.  இவ்விழா மழைக்காலத்தில் தொடங்கும் என்றும் கூறுகிறது அக்கல்வெட்டு.

இவ்வாறு கிருஷ்ணனிடம் இந்திரன் தோற்றதாகக் கதைகள் எழுந்த பின்னரும் இந்திரவிழா கொண்டாடப் பட்டிருக்கிறது என்பதும் உண்மை.

சேடி நாட்டு (வட இந்திய) காமன் விழா பற்றி இளங்கோவடிகள்

கடலாடு காதையின் தொடக்கத்திலேயே,

வெள்ளிமால்வரை வியன் பெரு சேடி
கள்ளவிழ் பூம்பொழிற் காமக் கடவுட்கு
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னோடு'
விருந்தாட்டயருமோர் விஞ்சை வீரன்.

ஒருவனைப் பற்றிக் கூறுகிறார். 19

அதாவது வெள்ளிமால்வரையாகிய இமயமலை அருகிலுள்ள சேடி நாட்டில் காமக் கடவுளுக்கு விழா எடுத்து மகிழும் ஒரு வீரன் தன் காதலியுடன் வந்ததைக் கூறுகிறார்.

அவன் வந்தது,

தென்திசை மருங்கினோர் செழும்பதி தன்னுள்
இந்திர விழவு கொண்டு எடுக்கு நாள் இதுவென---

தென்னாட்டில் உள்ள ஒரு செழுமையான ஊரில் நடக்கும் இந்திர விழாவைக் காணுதற்கு --என்கிறார் இளங்கோவடிகள்.

சேடிமன்னன் வசு தான் முதன்முதலில் வெற்றிக் கடவுள் இந்திரனுக்கு விழா கொண்டாடினான் என்றும் தொடர்ந்து அவ்வாறு அவன் விழா கொண்டாடியதால் வெற்றி வீரனாக தொடர்ந்து வந்தான் என்றும் மகாபாரதம் கூறியதை முன்னர் கண்டோம்.

இத்தகைய ஒரு வரலாற்றுச் சம்பவத்தைத் தெரிந்திருந்த தமிழ்நாட்டு இளங்கோவடிகள், பூம்புகாரில் நடந்த இந்திர விழாவைக் காண சேடி நாட்டிலிருந்து ஒரு வீரன் வந்தான் என்றும் அவன் காமக் கடவுட்கு விழா எடுக்கும் வீரன் என்றும் ஒரு சிறந்த வரலாற்றுச் செய்தியைக் கூறியிருப்பது பிரமிக்கத் தக்கதாக உள்ளது.  சேடி நாட்டு விழாவை மகாபாரதம், விருந்து எனக் குறிப்பிடுவதைப்போலவே இளங்கோவும் சேடி வீரனைக் குறிப்பிடும்போது 'விருந்தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன்' என்று கூறியிருப்பது மேலும் மேலும் வியப்படையச் செய்கிறது.

சேடி நாட்டு விழாவிலும் பூம்புகாரில் நடந்த விழாவிலும் காமனுக்கும் சேர்த்தே விழா நடந்தது என்பது தெரிகிறது.  இந்திரவிழாவூரெடுத்த காதையின் மூலமாக--அமைச்சர், சேனாதிபதி, இளவரசர், வணிகர் போன்ற முக்கியப் பதவி வகித்தவர்களும் முக்கியமானவர்களும் இந்திரவிழாவில் பங்கு பெற்றிருந்தனர் என்பதையும், கடலாடு காதையின் மூலமாக--மக்கள் கடலில் நீராடி மகிழ்ந்த்தையும் நோக்க, இந்திர விழாவுடன் காமன் விழாவையும் இணைத்து நடத்தும் மரபு இருந்திருக்கிறது எனத் தெரிகிறது.

இந்திர விழா அறிவுக்கும் ஐம்புலன்களுக்கும் விருந்தாகவும் காம விழா காமநுகர்ச்சிக்கு விருந்தாகவும் இருந்திருக்கிறது.  இந்திரனும் அத்தகைய கதைகளோடு தொடர்புடையவன் என்பதை அகல்யை கதை மூலம்  அறிந்து கொள்ளலாம்.  எனவேதான் இந்திரனது வெற்றியும் கொண்டாடப் பட்டிருக்கிறது, இன்ப நாட்டமும் கொண்டாடப் பட்டிருக்கிறது.  வெற்றியில் திளைத்த மன்னர்களும் வீரர்களும் உல்லாசமான கேளிக்கைகளில் ஈடுபடுவது இயல்பு தானே.

அடிக்குறிப்புகள்

1. பாண்டியர் செப்பேடுகள் பத்து பக். அ 42

2. Megasthanese and Indian Religion. p. 135--Allen Dalurest

3. Ibid. p. 135

4. பாண்டியர் செப்பேடுகள் பத்து பக். அ 41

5. பாண்டியர் செப்பேடுகள் பத்து பக். அ. 42

6. சிலப்பதிகாரம், கடலாடு காதை வரி...159--160

7. Dr.R. Nagaswamy, Poompuhar p. 9 to 11

8. Mahabaratham

9. Dr. R.Nagaswamy, Poompuhar

10 Ibid

11. மணிமேகலை--விழாவறை காதை வரிகள் 5--10

12. பாண்டியர் செப்பேடுகள் பத்து ---சின்னமனூர் பெரிய செப்பேடு--சுலோகம்--8

13. சிலப்பதிகாரம்--ஆய்ச்சியர் குரவை பாடல் 38 திருவிளையாடற்புராணம்*

14. Megasthanese and his Indian Religion --P. 134--Allen Dalquest

15. Mahabaratham P. 91

16. Ibid

17. Ibid

18. Origin and Development of Vaishnavism P.66 Suvira Jayaswal

19. சிலப்பதிகாரம்--கடலாடு காதை வரிகள் 1--4

செல்வன்

unread,
Jan 20, 2016, 7:32:47 PM1/20/16
to mintamil
பொதுவாக நான் எழுதியதை ஒத்தே இக்கட்டுரை அமைந்துள்ளது. பகிர்வுக்கு நன்றி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Megala Ramamourty

unread,
Jan 20, 2016, 8:07:24 PM1/20/16
to மின்தமிழ்
நெடுமுடிக்கிள்ளி எனும் சோழமன்னன் தனக்கும் நாகநாட்டு இளவரசி பீலிவளைக்கும் பிறந்த மகனை வணிகர்கள் கடலில் தொலைத்துவிட்டனர் என்பதை அறிந்து அவனைத் தேடுவதிலேயே கவனம் செலுத்திக்கொண்டிருந்ததால் இந்திரவிழா எடுக்க மறந்தான். இந்திரவிழா எடுக்காவிட்டால் புகார் கடல்கோளால் அழியும் என்று ஏற்கனவே மணிமேகலா தெய்வம் எச்சரித்திருந்தபடி, மன்னன் விழா எடுக்க மறந்ததால் ஊர் அழிந்தது என்கிறது மணிமேகலை. இரட்டைக்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் இந்தக் கடல்கோள்பற்றி மூச்சேவிடவில்லை. அதன்பின்னர் தமிழகத்தில் இந்திரவிழா நடந்ததா?இல்லையா? என்பதற்கான சரியான விவரங்கள் நம்மிடம் இல்லை. 

ஆனால் செல்வன் சொல்கின்றபடி பாண்டியர்கள் இந்திரவிழாவை நிறுத்தினர் என்ற செய்தியை நான் இதுவரைக் கேள்விப்பட்டதில்லை. மழைக்கடவுளான இந்திரன் மக்கள் அனைவருக்கும் பொதுவானவன். அவனைச் சோழன் போற்றினான் என்பதற்காகக் கோபித்துக்கொண்டு பாண்டியன் இந்திரவிழாவையே நிறுத்தினான் என்பது நம்பும்படியாக இல்லை.   :-)


அதுபோல் கண்ணன் மற்றும் பலதேவனின் நினைவாகப் பொங்கல் விழா தமிழகத்தில் தொடங்கியது என்று கூறுவதும்பொருத்தமாக இல்லை. கண்ணனோ முல்லைநிலத் தெய்வம்; பலதேவன் அவன் அண்ணன். இவர்கள் இருவருக்கும் மருதநிலத்து உழவர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகையில் என்ன வேலை? பலதேவனின் ஆயுதம் கலப்பை என்பதற்காகவெல்லாம் அவனை உழவர்களின் தெய்வம் ஆக்கிவிட முடியாது.  அப்படிப்பார்த்தால்... உழவர்களின் உற்றதுணைவனான காளையையே வாகனமாகக்கொண்ட சிவபிரான்தான் பொங்கல்நாயகனாகச் சிறப்பிக்கப்படவேண்டியவர். அவரை ஏன் பொங்கல்விழாவோடு செல்வன் தொடர்புபடுத்தவில்லை? ஒருவேளை அவர் சைவர்களின் தெய்வம் என்பதால் இருக்குமோ?   :-)


அன்புடன்,
மேகலா













செல்வன்

unread,
Jan 20, 2016, 8:26:32 PM1/20/16
to mintamil
2016-01-20 19:07 GMT-06:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

ஆனால் செல்வன் சொல்கின்றபடி பாண்டியர்கள் இந்திரவிழாவை நிறுத்தினர் என்ற செய்தியை நான் இதுவரைக் கேள்விப்பட்டதில்லை. மழைக்கடவுளான இந்திரன் மக்கள் அனைவருக்கும் பொதுவானவன். அவனைச் சோழன் போற்றினான் என்பதற்காகக் கோபித்துக்கொண்டு பாண்டியன் இந்திரவிழாவையே நிறுத்தினான் என்பது நம்பும்படியாக இல்லை.   :-)


நம்பவேண்டாம். ஏனெனில் அது யூகம் தான் என சொல்லியே எழுதியுள்ளேன் :-)



 


அதுபோல் கண்ணன் மற்றும் பலதேவனின் நினைவாகப் பொங்கல் விழா தமிழகத்தில் தொடங்கியது என்று கூறுவதும்பொருத்தமாக இல்லை. கண்ணனோ முல்லைநிலத் தெய்வம்; பலதேவன் அவன் அண்ணன். இவர்கள் இருவருக்கும் மருதநிலத்து உழவர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகையில் என்ன வேலை? பலதேவனின் ஆயுதம் கலப்பை என்பதற்காகவெல்லாம் அவனை உழவர்களின் தெய்வம் ஆக்கிவிட முடியாது.  அப்படிப்பார்த்தால்... உழவர்களின் உற்றதுணைவனான காளையையே வாகனமாகக்கொண்ட சிவபிரான்தான் பொங்கல்நாயகனாகச் சிறப்பிக்கப்படவேண்டியவர். அவரை ஏன் பொங்கல்விழாவோடு செல்வன் தொடர்புபடுத்தவில்லை? ஒருவேளை அவர் சைவர்களின் தெய்வம் என்பதால் இருக்குமோ?   :-)


இது இராமசாமி தமிழ்கல்லூரி முதல்வர் பேரா. முருகசாமி அவர்களின் கருத்துமாகும். தினமலரில் வெளிவந்த கட்டுரையில் அவர் எழுதியது காண்க

எது பொங்கல்?

சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும், நோடையும், விழுக்குடை மடையும், பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து வழிபட்டதாக, குறிப்பிடப்படுகிறது. இதில் புழுக்கல் என்பதுதான் பொங்கல். மேலும், சிலப்பதிகாரத்திற்கு, உரை எழுதிய அடியார் நல்லாரும், அரும்பத உரைகாரரும், பொங்கல் என்ற சொல்லுக்கு கள் என, எழுதியுள்ளனர். இன்றும், அம்மன் கோவில்களில், மதுப்பொங்கல் பொங்கும் வழிபாடு உள்ளதை இதனுடன் இணைத்துக் காணலாம். சம்பந்தர், தன் மயிலாப்பூர் பதிகத்தில், 'நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்' என, சுட்டுகிறார். திருப்பாவை, அதை சற்றே வேறுபடுத்தி, 'பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவார' என்கிறது. ஆக, சங்ககாலத்திலும், பக்தி இயக்க காலத்திலும், புழுக்கல் என்பது தான், பொங்கலாக கருதப்பட்டு வந்திருக்கிறது.

மதுப்பொங்கல்:

அப்படியானால், மதுப்பொங்கல் எப்படி வந்தது? இன்று, பொங்கலுக்கு முதல் நாள், போகி கொண்டாடப்படுகிறது. உண்மையில் அது பலராமனுக்கு உரிய திருவிழா. அவனை போகி என்ற பெயரால், பாண்டியர் செப்புப்பட்டயம் குறிப்பிடுகிறது. அவனது ஆயுதம் கலப்பை. அவன் ஒரு விவசாய தெய்வம். மதுபானப் பிரியன். அவனுக்கு மதுப் பொங்கல் படைத்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்திலும், சங்க காலத்தில், பலராமன் வழிபாடு, விவசாயிகளின் வழிபாடாகவே இருந்திருக்கிறது. அதை, எந்தோவன் என்ற மானடவியல் அறிஞர், தன் பழங்குடிகள் பற்றிய நூல் ஒன்றில், 1927ல் குறிப்பிட்டுள்ளார். அப்போதைய பாம்பே மாகாணத்தில், காந்தேஷ் பகுதியில், பவ்ரா என்ற பழங்குடியினர், 'நாக தீபாவளி' கொண்டாடினர். நள்ளிரவில் மூங்கில் கழியில் தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு, ஆடவர் குழு ஊரை வலம் வருகிறது. குழுவை இரண்டு ஆடவர் வழிநடத்துவர். குழு ஒவ்வொரு வீட்டின் முன்பும் போய் நிற்கும். வீட்டின் பெண்கள், ஆடவரின் நெற்றியில், தீப்பந்தத்தின், முனையில் உள்ள கறுப்பு எண்ணெயை. வழித்து, திலகமிட்டு, மதுபானம் அளித்து அனுப்புவர். விடிந்த உடன், மாடுகளுக்கு அரிசி, தானியம் கலந்த பொங்கல் படைப்பர். இன்றும், இரவில் தான் போகி கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலையும் இதன் தொடர்ச்சியாக காணலாம்.

சேக்கிழாரின் குறிப்பு:

முதல் ராஜேந்திரனின், காளஹஸ்தி கல்வெட்டில், மகர சங்கராந்தி அன்று, பெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவலை, தொல்லியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்தி, வெளியிட்டுள்ளார். பெரியபுராணத்தில், மற்றொரு குறிப்பு காணப்படுகிறது. மள்ளர்கள், இந்திர தெய்வத்தை தொழுது நாற்று நட்டதாக, சேக்கிழார் தெரிவிக்கிறார். இதில் இருந்து, தை மாதப் பிறப்பு, சோழர் காலத்தில், பெரிய விழாவாக கொண்டாடப்படவில்லை என, தெரிகிறது. விஜயநகர பேரரசின் காலத்தில், அது பெரிய விழாவாக மாறியிருக்கலாம். தஞ்சை மராட்டியர் காலத்தில், மகர சங்கராந்தி அன்று, வாழை கட்டி, பொங்கல் விட்டு கொண்டாடியதாக, ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வலங்கை இடங்கை வரலாறு என்ற நூலில், மகர சங்கராந்தி அன்று, சுவாமி புறப்பாடும், தேவதாசியர் நடனமும் நடந்ததாக குறிப்பு உள்ளது. இருபதாம் நூற்றாண்டில், பெண்ணாகடத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், முதன் முதலாக, பொங்கல் வாழ்த்து அட்டை தயாரித்து அச்சிட்டார். அதன் பின், தைப் பொங்கலுக்கு, தமிழர் திருநாள் என்ற அடையாளம் மெல்ல மெல்ல வந்து சேர்ந்தது. ஐரோப்பியர் வருகையால், நமது அன்றாட நடவடிக்கைகள், ஆங்கில காலண்டர் கணக்கின்படி அமைய நேரிட்டது. அதனாலும், தைப் பொங்கலுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது.

 

Oru Arizonan

unread,
Jan 21, 2016, 12:43:52 PM1/21/16
to mintamil


2016-01-20 18:07 GMT-07:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
//உழவர்களின் உற்றதுணைவனான காளையையே வாகனமாகக்கொண்ட சிவபிரான்தான் பொங்கல்நாயகனாகச் சிறப்பிக்கப்படவேண்டியவர். அவரை ஏன் பொங்கல்விழாவோடு செல்வன் தொடர்புபடுத்தவில்லை? ஒருவேளை அவர் சைவர்களின் தெய்வம் என்பதால் இருக்குமோ?   :-)//

 செல்வரைப்பற்றி இன்று புதிதாக அறிகிறேன்!

ஒரு அரிசோனன்

This email has been sent from a virus-free computer protected by Avast.
www.avast.com

Oru Arizonan

unread,
Jan 21, 2016, 12:56:48 PM1/21/16
to mintamil
மதுரையில் சொக்கநாதர் என்றோ குடிகொண்டுவிட்டதாகவே நான் படித்திருக்கிறேன்.  எனவே, பாண்டியர்கள், "தென்னாடுடைய சிவனே போற்றி!"  என்று போற்றிப் பரவிவந்திருக்கிறார்கள். எனவே, பாண்டியர்கள் திருமாலை மட்டுமே வணங்கினார்கள் என்று செல்வன் செப்புவதுமேனோ என்று நினைத்தேன்.  மேகலா அவர்கள் கேட்ட கேள்வி என் நினைவை நெருடியது.

வேறொன்றுமில்லை, செல்வரே!

ஒரு அரிசோனன்

செல்வன்

unread,
Jan 21, 2016, 1:55:22 PM1/21/16
to mintamil
2016-01-21 11:43 GMT-06:00 Oru Arizonan <oruar...@gmail.com>:


2016-01-20 18:07 GMT-07:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
//உழவர்களின் உற்றதுணைவனான காளையையே வாகனமாகக்கொண்ட சிவபிரான்தான் பொங்கல்நாயகனாகச் சிறப்பிக்கப்படவேண்டியவர். அவரை ஏன் பொங்கல்விழாவோடு செல்வன் தொடர்புபடுத்தவில்லை? ஒருவேளை அவர் சைவர்களின் தெய்வம் என்பதால் இருக்குமோ?   :-)//

 செல்வரைப்பற்றி இன்று புதிதாக அறிகிறேன்!

ஒரு அரிசோனன்




வைணவனாக இருப்பதில்/ அடையாளபடுத்தபடுவதில் எனக்கு எந்த ஆட்சேபமுமில்லை. ஆனால் ஊர்வன, பறப்பன, நீந்துவன என ஒன்றுவிடாமல் சாப்பிடும் என்னை மாதிரியான குகைமனிதர்களை வைணவம் ஏற்க தயாரா என்பது தான் என் சந்தேகம் :-) பெருமாள் என்னை ஏற்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. அவர் என்னை மாதிரி மமைச பட்சிணீதான். சாமி வரம் கொடுத்தாச்சு, பூசாரிகள் என்ன சொல்வார்களோன்னு தான் தெரியலை :-)

 

Pasupathi Selvam

unread,
Jan 21, 2016, 5:47:58 PM1/21/16
to மின்தமிழ்
கடவுள் நிச்சயம் வருவார் இன்றோ நாளையோ, எல்லாம் இந்த  சச்சரவு தாங்காமல் தான். அப்போது பார்க்கலாம்  அவர் நெற்றியில் என்ன சின்னம் என்று?
அதுவரை அமைதியாய் இருக்கலாமே !

Oru Arizonan

unread,
Jan 21, 2016, 5:55:08 PM1/21/16
to mintamil


2016-01-21 11:54 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:
//ஊர்வன, பறப்பன, நீந்துவன என ஒன்றுவிடாமல் சாப்பிடும் என்னை மாதிரியான குகைமனிதர்களை வைணவம் ஏற்க தயாரா என்பது தான் என் சந்தேகம் :-)//

'கொல்லாமை'யை வலியுறுத்தி உண்ணப்படுவதை, சைவ உணவு என்றுதான் சொல்கிறார்கள், வைணவ உணவு என்று சொல்வதில்லை.  கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்குமுன்னர் ஒரு பிரஞ்சுப் பாதிரியாரால் எழுதப்பட்ட ஆங்கிலப்  புத்தகத்தில், "ஆண்கள் வைணவர்களாவும், பெண்கள் சைவர்கலாவும் இருப்பதுண்டு;  ஏனெனில், சைவர்களுக்கு இறைச்சி உண்ணக்கூடாது என்னும் கட்டுப்பாது உண்டு.  வைணவர்களுக்குக் கிடையாது." என்று எழுதியுள்ளார்.

ஆகவே, வைணவம் உங்களை ஏன் ஏற்காது?  நீங்கள் சிவனை வழிபட்டாலும், வீட்டில் லிங்கத்தைவைத்து சிவபூசை செய்யமுற்பட்டால்தான், ஊனுண்ணியிளிருந்து, ஊணுண்ணியாக மாறவேண்டும்.  

உடனே வேந்தர் கேட்பார்:  கண்ணப்பநாயனார் ஊனுண்ணிதானே!

என்பதில்:  அவர்மாதிரி, கண்ணைப்பிடுங்கிவைக்கும் மனப்பக்குவம் இருக்கும்பட்சத்தில்!

அவர் கேட்பார்:  சிவலிங்கம் கண்ணில் குருதி வரட்டும்!

என்பதில்:  வந்ததாக நினைத்துக்கொள்ளுங்க!

அவர் பதில்:  வைத்ததாக நினைத்துக்கொள்ளுங்க!

இப்போது தெரிகிறதா, ஏன் வேந்தரிடம் வாதாடி வெல்லமுடியாது என்று?

ஒரு அரிசோனன்

Disclaimer:  The above is written only in humor, and no malicious intention, however subtle, is intented.

செல்வன்

unread,
Jan 21, 2016, 6:44:31 PM1/21/16
to mint...@googlegroups.com

> 'கொல்லாமை'யை வலியுறுத்தி உண்ணப்படுவதை, சைவ உணவு என்றுதான் சொல்கிறார்கள், வைணவ உணவு என்று சொல்வதில்லை.  கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்குமுன்னர் ஒரு பிரஞ்சுப் பாதிரியாரால் எழுதப்பட்ட ஆங்கிலப்  புத்தகத்தில், "ஆண்கள் வைணவர்களாவும், பெண்கள் சைவர்கலாவும் இருப்பதுண்டு;  ஏனெனில், சைவர்களுக்கு இறைச்சி உண்ணக்கூடாது என்னும் கட்டுப்பாது உண்டு.  வைணவர்களுக்குக் கிடையாது." என்று எழுதியுள்ளார்.
>
> ஆகவே, வைணவம் உங்களை ஏன் ஏற்காது?  நீங்கள் சிவனை வழிபட்டாலும், வீட்டில் லிங்கத்தைவைத்து சிவபூசை செய்யமுற்பட்டால்தான், ஊனுண்ணியிளிருந்து, ஊணுண்ணியாக மாறவேண்டும்.

யப்பாடி...ஆக வைணவம் என்னை ஏற்றுகொண்டதில் மகிழ்ச்சி :-) சைவமாக மாற தான் கஸ்டபடணும் போல :-)

பாத்தீங்களா மேகலா......நான் சைவம் ஆகலாம்னு பார்த்தால் அதுக்கு பர்மிசன் கிடைக்க மாட்டேன் என்கிறது. :-)

>
> உடனே வேந்தர் கேட்பார்:  கண்ணப்பநாயனார் ஊனுண்ணிதானே!

அவர் எதுவாகவோ இருக்கட்டும்...அசைவம் சாப்பிடுபவர்களை சிவன் காப்பாற்ற மாட்டரா? வெஜிட்டேரியன்களுக்கு தான் அருள் புரிவாரா? பக்தி முக்கியமா, உணவு வழக்கம் முக்கியமா?

>
> என்பதில்:  அவர்மாதிரி, கண்ணைப்பிடுங்கிவைக்கும் மனப்பக்குவம் இருக்கும்பட்சத்தில்!
>
> அவர் கேட்பார்:  சிவலிங்கம் கண்ணில் குருதி வரட்டும்!
>
> என்பதில்:  வந்ததாக நினைத்துக்கொள்ளுங்க!
>
> அவர் பதில்:  வைத்ததாக நினைத்துக்கொள்ளுங்க!
>
> இப்போது தெரிகிறதா, ஏன் வேந்தரிடம் வாதாடி வெல்லமுடியாது என்று?

இதான் டாபிக் எனில் நானும் வேந்தர் கட்சிதான் :-)

Oru Arizonan

unread,
Jan 21, 2016, 9:10:56 PM1/21/16
to mintamil


2016-01-21 16:44 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:
 

//பாத்தீங்களா மேகலா......நான் சைவம் ஆகலாம்னு பார்த்தால் அதுக்கு பர்மிசன் கிடைக்க மாட்டேன் என்கிறது. :-) //

எப்பொழுது நீங்கள் சிவனை வழிபடுகிறீர்களோ, அப்பொழுதே சைவராகிவிடுகிறீர்கள்.  சிவபூசை செய்யத்தான் ஊனுண்ணியாகவேண்டும் என்று விதிமுறை இருக்கிறது என்று எழுதியதை உங்கள் விருப்பப்படி வளைக்கிறீர்களே, செல்வரே!  நான் எழுதியது இதுதான்: 
//நீங்கள் சிவனை வழிபட்டாலும், வீட்டில் லிங்கத்தைவைத்து சிவபூசை செய்யமுற்பட்டால்தான், ஊனுண்ணியிளிருந்து, ஊணுண்ணியாக மாறவேண்டும்.//


//அசைவம் சாப்பிடுபவர்களை சிவன் காப்பாற்ற மாட்டரா? வெஜிட்டேரியன்களுக்கு தான் அருள் புரிவாரா? பக்தி முக்கியமா, உணவு வழக்கம் முக்கியமா?//

யார் சொன்னார்கள்?  நான் சொல்லவில்லையே!

//இதான் டாபிக் எனில் நானும் வேந்தர் கட்சிதான் :-)//

வேந்தர்மாதிரி நீங்களோ அல்லது வேறுயாருமோ கருத்துப்பதிந்தால் என்னசெய்வது என்றுதான் நானே கலைஞர் மாதிரி கேள்வியும் கேட்டுக்கொண்டு, பதிலையும் எழுதினேன்  

வின்ஸ்டன் சர்ச்சில் triphibian என்று சொன்னால், அதை ஒரு சொல்லாக மத்தது ஏற்று, அகராதியில் போடுவார்கள்;  நீங்களும் நானும் சொன்னால், நம்மை 'அகராதி' என்றே அழைப்பார்கள்.

ஒற்றைவரிச் சொல்லாடலை வேந்தர்மட்டுமே இங்கு ஆடலாம்;  இது உண்மை, வெறும்புகழ்ச்சியில்லை.

ஒரு அரிசோனன்

செல்வன்

unread,
Jan 21, 2016, 9:18:59 PM1/21/16
to mintamil
2016-01-21 20:10 GMT-06:00 Oru Arizonan <oruar...@gmail.com>:


2016-01-21 16:44 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:
 

//பாத்தீங்களா மேகலா......நான் சைவம் ஆகலாம்னு பார்த்தால் அதுக்கு பர்மிசன் கிடைக்க மாட்டேன் என்கிறது. :-) //

எப்பொழுது நீங்கள் சிவனை வழிபடுகிறீர்களோ, அப்பொழுதே சைவராகிவிடுகிறீர்கள்.  சிவபூசை செய்யத்தான் ஊனுண்ணியாகவேண்டும் என்று விதிமுறை இருக்கிறது என்று எழுதியதை உங்கள் விருப்பப்படி வளைக்கிறீர்களே, செல்வரே!  நான் எழுதியது இதுதான்: 
//நீங்கள் சிவனை வழிபட்டாலும், வீட்டில் லிங்கத்தைவைத்து சிவபூசை செய்யமுற்பட்டால்தான், ஊனுண்ணியிளிருந்து, ஊணுண்ணியாக மாறவேண்டும்.//



இல்லை அரிசோனரே.....சைவன் ஆவதற்கும், சிவபூசை செய்வதற்கும் இடையே வேறுபாடு இருக்கிறது என நீங்கள் சொல்வீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. என்னளவில் இரண்டும் ஒன்றுதான்.

பீமன் மாமிசம் உண்டவன் தான். ஆனால் அருச்சுனன் கைலாயம் சென்றபோது கோடிக்கணக்கான கூடைகளில் சிவனுக்கு மலர்கள் அர்ச்சனை செய்யபட்டுகொண்டிருந்தது. "யார் இத்தனை கோடி மலர்களில் பூசை செய்தது" என அருச்சுனன் வினவ "பீமன் தான். ஒரே நொடியில் உலகிலுள்ள மலர்களை எல்லாம் சிவனுக்கு அர்ப்பணம் செய்து பூசை செய்கிறான்" என பூதகணங்கள் பதில் சொல்ல அதை கேட்டு அர்ச்சுனன் வியப்படைந்ததாக கதை உள்ளது.

மாமிசம் உண்ட ஸ்ரீ ராமரும் ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். சிறந்த சிவபக்தனான இராவணேஸ்வரனும் மாமிச பட்சிணியே.

ஆக சிவபூசை செய்ய புலால் உண்பது தடை என்பதும், சைவன் ஆகலாம் ஆனால் பூசை செய்யகூடாது என்பதும் எந்த அடிப்படையில் என்பது எனக்கு விளங்கவில்லை. நான் ஒன்றும் சிவனுக்கு பன்றிக்கறியை படைத்து வழிபடுவேன் என சொல்லவில்லை. மாமிசம் உண்பதாலேயே சிவ பக்தி உடைய ஒருவருக்கு சிவபூசை செய்யும் அருகதை போய்விடுகிறது என்பதன் லாஜிக் தான் பிடிபடவில்லை.

பக்தி முக்கியமா, இம்மாதிரி உணவு வழக்கங்கள் முக்கியமா?

சிவன் எதற்கு முக்கியத்துவம் அளிப்பார்?



Oru Arizonan

unread,
Jan 21, 2016, 9:54:05 PM1/21/16
to mintamil
செல்வரே,

//சைவன் ஆவதற்கும், சிவபூசை செய்வதற்கும் இடையே வேறுபாடு இருக்கிறது என நீங்கள் சொல்வீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.//

நான் உங்களுக்கு எழுதியது சைவசித்தாந்த மரபு.  நீங்கள் ஒரு குருவிடம் சிவபூசைசெய்ய தீட்சை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றால் -- சிவளிங்கத்தைவைத்து தமிழ் சைவசித்தாந்த மரபுப்படி பூசை செய்யவேண்டுமென்றால் என்னவிதி என்றே எழுதினேன்.

தமிழரான தங்களுக்குத் தமிழ்ச் சைவசித்தாந்த நெறிமுறையைப் பகர்ந்தெனேயொழிய, தங்கள் பக்தியைக் குறைகூறும் எண்ணம் எனக்குத் துளியுமில்லை

நான் டிஸ்கி போட்டு எழுதியதைகூட  நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்வீர்கள் என்றும் நான் நினைக்கவில்லை.  தங்கள் மனம் அதனால் புண்பட்திருந்தால், அதற்காக வருந்துகிறேன்.

தாங்கள் எழுதிய அத்தனை எடுத்துக்காட்டுகளையும் நானுமறிவேன்.  தன்னைக் கல்லாலடித்து வழிபட்டவருக்கும் முக்தியளித்தவர் சிவபெருமான் என்பதையும் நான் நன்கறிவேன். 

காசி விஸ்வநாதரை யார்வேண்டுமானாலும் கட்டித்தழுவி, மாலையிட்டு, கங்கைநீராட்டலாம்.  தடையில்லை. அது வட இந்திய வழிபாட்டுமுறை.

தாங்கள் மற்றவருக்கு அடிக்கடி எழுதுவதுபோல, விதிமுறை என்ன என்றே எழுதினேன். 

தங்கள் இல்லத்தில் தாங்கள் சிவனாருக்குப் பன்றிக்கறி உணவைப் படைத்தால் அவர் அதைக் கட்டாயம் ஏற்றுக்கொள்வார்.  அவருக்கு எவர் அனுமதியும் தேவையில்லை.

அன்புடன்,
ஒரு அரிசோனன்

செல்வன்

unread,
Jan 21, 2016, 10:22:33 PM1/21/16
to mintamil
தவறாக எண்ண எதுவும் இல்லை அரிசோனரே.அதனால் வருத்தம் எனும் சொல்லுக்கே இடமில்லை

விதிகளை கட்டாயம் பின்பற்றவேண்டும். அதில் மாற்றுகருத்தில்லை.

அதே சமயம் விதிகள் நியாயமாக இருப்பதும் அவசியம்.

தீட்சை பெறுவது, குருவிடம் போய் உபதேசம் பெறுவதில் எல்லாம் எனக்கு ஆர்வம் கிடையாது. என் குரு சிவன் மட்டுமே. மனிதர்கள் யாரையும் நான் குருவாக ஏற்பதில்லை.

என் வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வணங்கினால் அசைவம் உண்ணகூடாது, பொதுவான கோயில், மடம் போன்றவற்றில் உள்ள சிவலிங்கத்தை அசைவம் உண்பவர்கள் வணங்க போககூடாது என்பதில் தான் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் அது என் பர்சனல் சுதந்திரம்.

அதே மடத்துக்கு போனால் மடத்தில் தலைகீழாக நிற்க சொன்னாலும் நின்றுதான் ஆகவேண்டும். ஏனெனில் யாருக்கு தீட்சை கொடுப்பது என்பது அவர்கள் விருப்பம். அதே சமயம் சிவலிங்கம் அவர்களின் தனிசொத்தல்ல. அதை யார் வேண்டுமனாலும் வழிபட்டு பூசை செய்யலாம். கோயிலில் பூசாரி செய்தால் போதும். நான் கோயிலில் பூசை செய்ய அனுமதி கேட்கவில்லை :-)

Jana Iyengar

unread,
Jan 22, 2016, 12:01:57 AM1/22/16
to mintamil
திரு அரிசோனனார் அவர்களுக்கு 
வைணவ உணவு என்று வட இந்தியாவில் கேட்டால் வெங்காயம், பூண்டு இல்லாத பதார்த்தங்களைப் பரிமாறுவர். 
ஆகவே தங்கள் கூற்றான "வைணவ உணவு என்று சொல்வதில்லை" என்பதை அடியேன் ஏற்றுக்கொள்ளவில்லை. 
அ ஜ ரா தாசன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Jana

Oru Arizonan

unread,
Jan 22, 2016, 12:10:01 AM1/22/16
to mintamil


2016-01-21 20:22 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:
//பொதுவான கோயில், மடம் போன்றவற்றில் உள்ள சிவலிங்கத்தை அசைவம் உண்பவர்கள் வணங்க போககூடாது என்பதில் தான் எனக்கு உடன்பாடில்லை.//

அப்படி விதியும் இல்லை;  நான் அப்படி எழுதவும் இல்லை.

Oru Arizonan

unread,
Jan 22, 2016, 12:14:36 AM1/22/16
to mintamil


2016-01-21 22:01 GMT-07:00 Jana Iyengar <iyenga...@gmail.com>:
//வைணவ உணவு என்று வட இந்தியாவில் கேட்டால் வெங்காயம், பூண்டு இல்லாத பதார்த்தங்களைப் பரிமாறுவர். 
ஆகவே தங்கள் கூற்றான "வைணவ உணவு என்று சொல்வதில்லை" என்பதை அடியேன் ஏற்றுக்கொள்ளவில்லை. //

ஜனா அவர்களுக்கு

"சைவ உணவு" என்று பெயரிட்டு அழைப்பது தமிழகத்தில்தான்.  யாரும் "வைணவ உணவு" என்பதில்லை;  என்கூற்றைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

என்னை அருள்கூர்ந்து "னாரா"கக் கிழிக்கவேண்டாமென்று அடியேன் விண்ணப்பித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

Tthamizth Tthenee

unread,
Jan 22, 2016, 12:16:13 AM1/22/16
to mint...@googlegroups.com
இயற்கையாகவே​  அசைவம் உண்பவர்களும்  கோயிலுக்கு செல்ல வேண்டும் எனும்போது  அவர்களாகவே  கூடிய வரை  அசைவத்தை அன்று மட்டுமாவது ஒதுக்குகிறார்கள்

அசைவம் உணடாலும்   சைவம் உண்டாலும்  மனம் எச்சரிக்கும் போது  அதற்கு  மரியாதை  தருபவர்களே  பெரும்பான்மையினர்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

Nagarajan Vadivel

unread,
Jan 22, 2016, 12:45:57 AM1/22/16
to மின்தமிழ்
ஒ.அ. ஐயா 
உணவைச் சைவம் / அசைவம் என்று பிரித்து நோக்கும்போது சைவ சமயத்தை உள்ளே நுழைப்பது சரியா என்று நீங்கள்தான் விளக்க வேண்டும்
சைவ உணவு என்பது சைவர்களான தவசிப்பிள்ளைகள் திருநெல்வேலியில் வாழ்ந்த வேளாள பிராமணர்களுக்கு உணவு சமைத்தவர்கள்.  பின்னர் அவர்களே பல வீடுகளில் சமையல் வேலை பார்த்தார்கள்.  பொதுவாகத் தமிழகத்தில் சமைப்பவர்களின் சாதிப்பிரிவு உண்பவர்களின் சாதியை விட உயர்வாகவே இருக்கும்.  தமிழ்நாட்டுக் கோவில் திருவிழா திருமணம் போன்ற நிகழ்வுகளில் அந்தணர்கள் உணவு தயாரிக்கும் வேலையைச் செய்வார்கள்.  அவர்கள் சைவ வைணவ ஆச்சாரியங்களுக்கு ஏற்ற முறையில் சமைப்பார்கள்.  செட்டிநாட்டில் சைவர்கள் (பிள்ளைகள் சேர்வைகள்) அசைவ உணவைச் சமைப்பதுண்டு சைவம் வளர்த்த செட்டிநாடு அசைவ உணவுக்கும் பெயர்பெற்றதாகும்

எனவே கோவில் விழாக்களில் திருமண மற்ற குடும்பச் சடங்குகளில் உணவு சமைப்பவர்கள் அந்தணர்கள் திருநெல்வேலியில் மட்டும் அந்தணர்களைச் சைவ வேளாளர்கள் அவர்களின் திருவிழா திருமணங்களில் பங்குஒஎற வைப்பதில்லை

மின்னம்பலத்தான்

--

Tthamizth Tthenee

unread,
Jan 22, 2016, 2:47:53 AM1/22/16
to mint...@googlegroups.com
கல்கட்டா போன்ற  நகரங்களில்  மீன் உண்பவர்தாம்  பிராமணர்கள்

வாழுமிடத்தை ஒட்டியே  நாகரீகங்கள் வளர்கின்றன

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





Megala Ramamourty

unread,
Jan 22, 2016, 9:02:24 AM1/22/16
to மின்தமிழ்
//பாத்தீங்களா மேகலா......நான் சைவம் ஆகலாம்னு பார்த்தால் அதுக்கு பர்மிசன் கிடைக்க மாட்டேன் என்கிறது.//

செல்வன்,

’சைவம்’ என்றாலே அது ’சாப்பாட்டை மட்டும்’ குறிக்கும் சொல்லாகிவிட்டது இப்போது.  போகட்டும்!  

நீங்கள் அசைவ உணவைக் கைவிட்டுச் சைவமாவதற்கு யாருடைய பர்மிசனும் உங்களுக்குத் தேவையில்லை. உங்கள் மனந்தான் அதற்குப் பர்மிசன் தரவேண்டும்.   :-))

’சைவன்’ ஆகவேண்டுமென்றாலும் சிரமமொன்றுமில்லை. சிவனை வழிபடுகடவுளாக ஏற்றுக்கொள்ளவேண்டும் அவ்வளவே! கூடவே திருமாலையும் வணங்கலாம். சிவன் கோபிக்கமாட்டார்! He is very 'liberal' in nature! (அடடா... வேறு பொருள் வருகிறதோ!)  :-))

ஆனால், மாமிசத்தைவிட்டால்தான் சிவன் ஏற்றுக்கொள்வார் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவருடைய அடியார்கள் பலர் மாமிசபட்சிணிகள்தாம்; அவருக்கே மாமிசப்படையல் போட்டவர்கள்தாம்! அவர்களுக்கெல்லாம் தன் தண்ணளியை அளிக்க  அவர் தயங்கியதேயில்லை என்பதற்குத் திருத்தொண்டர் வரலாறு பெரும் சாட்சியாய் நிற்கிறது.

ஈசனை அடைய ஈஸியான வழி...

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.


அவ்வளவுதான்! ஆரவாரச் சடங்குகளை சம்பிரதாயங்களை வள்ளுவர் போலவே ஈசனும் விரும்புவதில்லை!   :-)


பாகுபலி படத்திலிருந்து ஈசனைப் போற்றும் அட்டகாசமான பாடல் ஒன்று!

சிவா சிவாய போற்றியே...

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 12, 2017, 6:28:00 AM1/12/17
to mintamil, thiruppuvanam, Kalai Email, thiruveni veni, senthamizh pavai, Palanichamy Shanmugam, naga rethinam

வணக்கம்.


On 21-Jan-2016 5:49 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> நன்றி:  தினகரன்: http://archives.thinakaran.lk/2011/01/14/_art.asp?fn=d1101141
>
> இந்திர விழா பொங்கலுக்கு வழிசமைத்ததோ?
>
> சாரதா மனோகரன்
>
> தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது.
>
> சென்னி வெண்குடை நீட நபாயன்
> திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின்
> மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு
> வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப்
> பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து
> புணரி தன்னையும் புனிதமாக் 
> குவதோர்
> நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் 
> னுடைய
> நவஞ்சி றந்தது வளம்புகார் நகரம்
> என்கிறது அந்தப் பாடல்.
>
> அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு.
>
>

> தைப்பொங்கல் திருநாள் நாளை
>
> அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம் என்று குறிப்பிடுகிறது அந்தப் பாடல்.
>
> காவிரிப்பூம் பட்டினத்திலே நிலைத்து நின்று வாழும் மக்களை ‘பதியெழு அறியாப் பழங்குடியினர்’ என இளங்கோவடிகள் கூறுகிறார். படைப்புக் காலந்தொட்டே வாழும் குடியினர் என அதற்கு உரை கூறுவர்.
>
> சேர சோழ பாண்டியர் என மூவேந்தர் தென்னிந்தியப் பகுதியை ஆண்ட காலத்திலே சோழப் பேரரசின் தலைநகராக காவிரிப்பூம் பட்டினம் இருந்தது. கி.பி. 850 களின் பின்பு, பிற்காலச் சோழர்களின் ஆட்சி ஏற்பட்டபோது பூம்புகார் என்ற காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல் கொண்டதால், பேரரசின் தலைநகரம் தஞ்சாவூராகியது. காவிரிப்பூம்பட்டினத்தை மையமாகக் கொண்ட ஐம்பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்திர விழாவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
>
> சங்க காலம் தொட்டு தட்சணாயன காலத்தின் ஆரம்பத்தை இந்திர விழாவாகக் கொண்டாடும் வழக்கம் இருந்து வந்தது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவறை காதையிலே ‘இந்திர விழா’ பற்றிக் கூறப்படுகிறது. அதன்படி, காவிரிப்பூம்பட்டினத்தில் ஏறத்தாழ 28 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது.
>
> சோழகுல மன்னர்களுள் ஒருவனான தூங்கெயில் எறிந்த தொழத்தோள் செம்பியன் என்பவன் காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்புறச் செய்ய ஆசைப்பட்டான். அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இந்திரனை வணங்கித் தவமிருந்தான்.
>
> இந்திர விழாவை ஆண்டு தோறும் காவிரிப்பூம்பட்டினத்தில் நடத்தவும் அதற்கு இந்திரன் வருகை தரவேண்டும் எனவும் வேண்டினான். இவ்விழா 28 நாட்கள் நடைபெற இந்திரன் ஆசியளித்தான்.
>
> தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் தொடக்கிவைத்த விழா ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வந்தது. இந்திரனின் கரும்பு வில்லை நினைவுகூரும் வகையிலே இந்திர விழாவில் கரும்பு முக்கிய இடத்தைப் பெற்றது. வீதிகளிலும் கோயில் வாசல்களிலும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டன.
>
> பொன்னாலான பாலிகைகளால் நகரம் அலங்கரிக்கப்பட்டது. பாக்கு, வாழை மரத் தோரணங்கள் கட்டப்பட்டன. கோயில்களிலெல்லாம் சிறப்பாகப் பூஜைகள் நடாத்தப்பட்டன.
>

> இப்படிக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்திரவிழா கைவிடப்பட்டமையால் தான், காவிரிப்பூம்பட்டினத்தின் ஒரு பகுதியைக் கடல் கொண்டதாகவும் குறிப்பிடுவர்.
>

விழா நின்ற காரணத்தால் கடல் கொண்டதா ?
கடல் கொண்டதால் விழா நின்றதா ?

தை முதல் நாளன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்திரவிழா அன்று காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொண்ட காரணத்தினால்,
வருடந்தோரும் தை முதல் நாளைக் கரிநாள் எனத் தமிழக பஞ்சாங்கங்கள் குறிப்பிடுகின்றன எனவும், இதன் காரணமாக இந்திரவிழா கொண்டாட்டங்கள் நின்றுபோய், பொங்கல் மட்டும் கொண்டாடப்படுகிறது எனவும் கருத வேண்டியுள்ளது.

அன்பன்
கி. காளைராசன்

nkantan r

unread,
Jan 13, 2017, 5:20:32 AM1/13/17
to மின்தமிழ்
quite an interesting and entertaining read, mixing parables, epics, history, legendary stories and what not!

the wishnu avataars is some how picturised as  evolutionary ladder where birds are missing! (fish-turtle-boar-lion-dwarf-humanoid-human-superman etc!); so dont worry he will accept omnivores also

regards
rnkantan

nkantan r

unread,
Jan 13, 2017, 5:45:44 AM1/13/17
to மின்தமிழ்
one of the posts mention that the vizha was in Chitrai month; another claims it was in Thai!
And remember the most informative about astrology as practiced in tamil (or as taught to me) is that it is based on Solar months; and names of these months are based on Fullmoon in the corresponding star clusters; to incorporate the 12 solar months (approximately 360 days) in 12 lunar-named months of 334-344 days, a thirteenth month is added! and again remembering the precession, the chitrai month in 100 bc would have been much different to the current hot chitrai!

now coming to karinaal: first we have to understand what is Thyajjyam; (that is days "unholy"  and have to be observed in personal prayers with no functions);  there are weekly thyajyams (tuesday and saturday); Fortnightly thyajyams based on lunar phases - ashtami, navami,etc; like that there are monthsly thyajyams; each month has certain days marked as thyajyams or karinaal; one such is thai-1;

regards
rnkantan
(The matt wanted one in our family to become an astrologer in the footsteps of my great great grandfather; i learnt astrology for a few months and then dumped when i asked my teacher to identify the sex of 100 jathagaas -- with natural probability of 50% success, i told them i expected at least 90%; he flunked; and i discarded astrology!

even today for all those believers: just ask any of those astrologists to answer three simple things: sex, whether the person is alive or dead, how many brothers and sisters are there-- caution dont use modern indian middle class family where we are conditioned to have one or two children only!-----;  once you get the results you will be converted!)

On Thursday, January 12, 2017 at 4:58:00 PM UTC+5:30, kalai wrote:

வணக்கம்.
On 21-Jan-2016 5:49 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> நன்றி:  தினகரன்: http://archives.thinakaran.lk/2011/01/14/_art.asp?fn=d1101141
>
> இந்திர விழா பொங்கலுக்கு வழிசமைத்ததோ?
>

விழா நின்ற காரணத்தால் கடல் கொண்டதா ?
கடல் கொண்டதால் விழா நின்றதா ?

Reply all
Reply to author
Forward
0 new messages