தினம் ஒரு பாடல்

89 views
Skip to first unread message

AKR

unread,
Oct 15, 2009, 2:31:03 PM10/15/09
to minT...@googlegroups.com
தேசபக்தியும் தெய்வபக்தியுமே தன் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் மஹாகவி பாரதியார். அனைத்து தெய்வங்களிலும் மேலாக அவர் கண்ணனை பூஜித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது பாடல்களுள் பல திரைப்படங்களில் இடம் பெற்றன. குறிப்பாக பாரதம் சுதந்திரமடைந்த பின்னர் தமிழ்த் திரையுலகில் தேச பக்தியையும் தெய்வபக்தியையும் வலியுறுத்தும் கதையம்சத்துடன் கூடிய பல திரைப் படங்கள் தயாரிக்கப் பட்டன. அவற்றுள் பலவற்றில் பாரதியாரின் பாடல்கள் பல இடம் பெற்றன.
 
இறைவன் அன்புக்கு அடிமை என்பது இறை நம்பிக்கையுள்ளவர் அனைவரது ஒத்த கருத்தாகும், அத்தகைய உன்னத அன்பை இறைவனிடத்தில் பொழிய பக்தர்கள் இறைவனைத் தமது தாயாகவும், தந்தையாகவும் காண்பது பொதுவான இயல்பு.
 
இத்தகைய பக்தர்கள் அனைவரிலும் உயர்ந்த நிலையி்ல் தன்னை நிறுத்திக் கொண்டு, கண்ணனை தாயாகவும், தந்தையாகவும், ஆசானாகவும், சற்குருவாகவும், தோழனாகவும், சேவகனாகவும் கண்டு மகிழ்ந்து பாடித் துதித்த பாரதியார், அத்துடன் திருப்திப் படாமல், கண்ணனைப் பெண்ணாகக் கொண்டு கண்ணம்மா என் காதலி, கண்ணம்மா என் குழந்தை என்றெல்லாம் தனக்கு இவ்வுலகில் உள்ள உறவுகள் அனைத்தையும் கண்ணன் வடிவிலே கண்டார்.
 
தனது குழந்தையின் மேல் செலுத்தும் அன்புக்கு ஈடானதோர் அன்பை வேறொரு உறவினரிடமும் ஒருவர் செலுத்துவதில்லை. ஏனெனில் நம் குழந்தை நம்மில் ஒரு பாகமன்றோ?
 
 
படம்: மணமகள்
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: சி.ஆர். சுப்பராமன்
பாடியோர்: எம்.எஸ். வசந்தகுமாரி, வி.என். சுந்தரம்
ஆண்டு: 1951
 
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில்
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
 
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா சின்னஞ்சிறு கிளியே
 
பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே
பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே
 
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா சின்னஞ்சிறு கிளியே
 
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய்
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவதடி
 
உச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
உச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி
 
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்னுயில் நின்னதன்றோ?

 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/
Reply all
Reply to author
Forward
0 new messages