பஞ்சபூத ஸ்தலங்கள்

125 views
Skip to first unread message

Krishnan S

unread,
Mar 2, 2015, 9:34:17 AM3/2/15
to mint...@googlegroups.com, tamil_ulagam, thami...@googlegroups.com
இணைய நண்பர் ஒருவர் காசி - இராமேஸ்வரம் ஸ்தலங்களை படித்து விட்டு..., 
தனிமடலில் பஞ்சபூத ஸ்தலங்கள் பற்றிய விபரத்தினை என்னிடம் கேட்டு இருந்தார்.
தனி மடலில் கேட்டிருந்த இணைய நண்பருக்கும் , மற்ற இணைய அன்பர்களுக்கும்,
நண்பர்களுக்கும் பயனுள்ள செய்தி இது அமைந்திருந்தால் தமியேனுக்கும் மகிழ்ச்சியே,
*****************************************************************************************************************
      இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான்
ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்பது முறையே  இவர்களுடைய
 பொறுப்பாகும்.
    நிலம், நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் என பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது.
    இந்த பிரபஞ்சம்  இதில் ஓர் அங்கமாக விளங்கும் நமது உடலும் இந்தப் பஞ்ச
    பூதங்களால் ஆனதே.
    ஐம்புலன்களாகிய நமது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றால் உணர
   முடிவதை அல்லது ஸ்தூலப் பொருள் ( Material) என்றும், ஆறாவது புலனாகிய
  மனம் மட்டும் உணர முடிவதை நுட்ப வஸ்து அல்லது சூட்சுமப் பொருள் (  Abstract)
  என்றும் அழைக்கிறார்கள். இந்த உடலும் உலகிலுள்ள அத்துணை பொருட்களின்
  கூட்டுகளால் ஆனவை. 
     நமது உடலும்..., நீர் 1.  (Water)   2. நிலம் ( Earth )  நெருப்பு  3.(Fire ) , 4.காற்று (Air ),
    5. ஆகாயம் (Space ) mஐந்து பொருட்களால் (Five Elements) அமைந்த ஸ்தூலப் பொருள்.
    இதனை அடிப்படையாகக் கொண்டு, சைவ வழிபாட்டில் இந்த ஐந்து பூதங்களையும்
முன்னிறுத்தி, ஐந்து வெவ்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான
வழிபாடு நடக்கிறது. இந்த ஐந்து சிவஸ்தலங்களும் பஞ்ச பூத தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

   இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே பஞ்ச பூதங்கள் ஒளி பெற்று சிறப்படைய வேண்டும்
என்பதற்காக ஐந்து பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்காக முக ஐந்து
விளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகின்றன.

1. நிலம் =        காஞ்சிபுரம்.
2, நீர்       =        திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்
3. காற்று =      காளஹஸ்தி - காளஹஸ்தீஸ்வரர் கோவில்
4. ஆகாயம் =  சிதம்பரம்
5. நெருப்பு =   திருவண்ணமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்.
                                                                   ----  தொடரும் ------
 
-- அன்பொடு
கிருஷ்ணன்,
சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

annamalai sugumaran

unread,
Mar 2, 2015, 12:40:50 PM3/2/15
to mint...@googlegroups.com
ன்பின் திரு கிருஷ்ணன் அவர்களுக்கு ,
சிறந்த ஒரு கட்டுரைத் தொடரை ஆரம்பித்து இருக்கிறீர்கள் .
மிகவும்  உள்ளது .
ஒரு சிறிய விளக்கம் கூடுதலாகத் தந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் 
உங்கள் கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறீர்கள் 

 //ஐம்புலன்களாகிய நமது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றால் உணர
   முடிவதை அல்லது ஸ்தூலப் பொருள் ( Material) என்றும்,  //

ஆனால் மனம் எனும் பிரகாசம், இந்த புலன்களின் மேல் குவியாவிட்டால் புலன்களால் தனியே எதையும் உணர இயலாது .
மனம் எங்கோ இருந்தால் கண்கள் திறந்திருந்தாலும் எதிரில் நிற்பவர் தெரிவதில்லை .
மனம் எங்கோ இருந்தால் எத்தனை  இரைந்தாலும் பின்னே ஒலிக்கும் ஹாரன்ஒழி காதில் கேட்பதில்லை .
கேட்பதில்லை 
 இருக்கும் சமஸ்க்காரம் முந்தய பதிவுகளைக்கொண்டே ,அவற்றை ஒப்பிட்டே ,நமது புலன்கள் செய்திகளை உணர்கின்றன .உணரப்படுவதற்கு மனதின் முந்தய பதிவுகள் அவசியம் 
இன்னம் சொல்லப்போனால் மனம் வேலை செய்ய ஆன்மா அவசியம் .
"எது  கண்களால் பார்க்கப்படுவதில்லையோ ,எதனால் கண்கள் பார்க்கின்றதுவோ அதுவே ஆன்மா "
"எது வாக்கினால் விலக்கப்பட முடியாதோ ,எதனால் வாக்கு விளக்கம் பெறுகிறதோ , அதூவெ ஆன்மா "
"எது காதுகளால் கேட்கப்படுவதில்லையோ ,எதனால் காதுகள் கேட்கின்றதுவோ ,அதுவே ஆன்மா 
எது மூச்சினால் முகரப்படுவதில்லையோ ,எதனால் மூச்சி முகர்கிறதோ ,அதுவே ஆன்மா "
"எது மனத்தால் அறியப்பட முடியாதோ ,எதனால் மனம் அறியப்படுகிறதோ அதுவே ஆன்மா "
 வரிசையாக கூறுகிறது கேன உபநிஷதம் .

எனவே புலன்கள் அறிய மனம்ஆன்மா என இரண்டும் தேவை   
 மனம் அறிய .ஆன்மா தேவை 

இது தங்கள் கூறியதற்கு இன்னம் கொஞ்சம் விளக்கம் தர  எழுதியதேத்தவிர ,கட்டுரையில் தவறு சுட்டிக்காட்ட எழுதவில்லை .
அருமையாகவே எழுதி இருக்கிறீர்கள் 
அன்புடன் 
அண்ணாமலை சுகுமாரன் 


2 மார்ச், 2015 ’அன்று’ 8:04 பிற்பகல் அன்று, Krishnan S <krishna...@gmail.com> எழுதியது:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
 It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !
Reply all
Reply to author
Forward
0 new messages