|
150 ஆண்டுகளுக்கு முன்பும் வள்ளலாருக்கு எதிராக பிரிட்டிஷ் காலத்திலேயே பிரபலமான ஒரு வழக்கு வாதாடப்பட்டது. அந்த ஃபிளாஷ்பேக் முதலில்... ஜீவகாருண்யம், பசியாற்றுவித்தல், சாதிமத வேறு பாடின்மை, ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகிய நான்கையும் வலியுறுத்திய வள்ள லார், சன்மார்க்க சங்கத்தை உருவாக்கி சத்திய தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் ஆகியவற்றை வடலூரில் நிறுவினார். 'கடவுளை உண்மையான அன்புடன் ஒளி வடிவில் வழிபட வேண்டும்' என்பது வள்ளலாரின் எண்ணம். அப்படி அவர் உருவ வழிபாட்டை மறுத்ததால், வள்ளலார் வாழ்ந்த காலத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ''அவர் எழுதியதை அருட்பாவாக ஏற்க முடியாது. தேவாரம், திருவாசகம்தான் அருட்பாக்கள். இவை வெறும் மருட் பாக்கள்!'' என்று யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் தலைமையிலான தீவிர சைவர்கள் கடுமையாக எதிர்த் தார்கள். ''தன்னை உணர்ந்தோர் பாட்டெல்லாம் அருட்பா. மற்றதெல்லாம் மருட்பா!'' என்று இதற்கு வள்ளலார் விளக்கம் அளித்தார். 'ஆறுமுக நாவலரின் பெயரைச் சொல்லி ஒரு கூட்டத்தில் வள்ளலார் கிண்ட லடித்ததாக' கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது. அன்றைய தினம் வள்ளலாரே நீதிமன்றத்துக்கு நேரில் வர... அப்போது வழக்குப் போட்ட ஆறுமுக நாவலரே, வள்ளலாரை எழுந்து நின்று வணங்கினார். இதைப் பார்த்த நீதிபதி, ''எதிரிகளாலும் வணங்கத்தக்க வள்ளலார் தவறாகப் பேசியிருக்க மாட்டார்!'' என்று ஆங்கிலேய ஆட்சியிலேயே வழக்கைத் தள்ளுபடி செய்தார். இந்நிலையில்தான், தற்போது சபானந்த ஒளி சிவாச் சாரியார் என்பவர் வடலூர் கருவறையில் லிங்க உருவத்தைப் பிரதிஷ்டை செய்தார். இதை இந்து சமய அறநிலையத் துறை ஏற்கவில்லை. 'வள்ளலார் உருவ வழிபாட்டை ஏற்காமல்... ஜோதி வழிபாட்டையே ஏற்றார்!' என்பதைச் சொல்லி, 'உருவம் எதையும் வைக்கக் கூடாது' என்றது. இந்த உத்தரவுகளுக்குத் தடை விதிக்கக் கேட்டுதான் சிவாச்சாரியார் சென்னை உயர் நீதிமன் றத்தை அணுகினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் சந்துரு ஒரு மகத்தான தீர்ப்பை அளித்திருக் கிறார். ''சாதிமத வேறுபாடுகளைக் கண்டித்த மாபெரும் மனிதாபிமானி வள்ளலார். 'சாதியும் மதமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி' என்று அவர் பாடியதுதான் 1872-ம் ஆண்டும் பிரிட்டிஷ் அரசு, சாதிக்கு எதிரான சட்டம் கொண்டுவரத் தூண்டுகோலாக அமைந்தது. அப்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, கடலூருக்கு அருகில் அணையாத அடுப்புகளை உருவாக்கி அன்னசாலை அமைத்தார். அன்று இருந்த அந்நிய ஆட்சியை எதிர்த்து, 'கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக... அருள் நியந்த நன்மார்க்கர் ஆள்க' என்று பயமில்லாமல் பாடிய வள்ளலார், சிறந்த மனிதாபிமானியாகவும் சாதி மதத்துக்கு எதிரானவராகவும் இருந்தார். அவரது ஆன்மிக எண்ணங்கள் ஜோதியை அடிப்படையாகக்கொண்டே இருக்கின்றன. 'ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி என் மேலும், ''வள்ளலார் மார்க்கம் விஞ்ஞான அடிப் படையில் ஆனது. புத்தருக்குப் பிறகு புதிய நன்மார்க்கத்தை அவர் உருவாக்கியவர். வள்ளலார் ஆறு திருமுறைகளை எழுதியிருக்கிறார். முதல் ஐந்து திருமுறைகளில் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொண்டாலும்... கடைசியாக ஆறாம் திருமுறையில், ஜோதி வழிபாட்டை மட்டுமே வலியுறுத்தி இருக்கிறார். இறுதிக் காலத்தில் சொன்னதையே அவரது உறுதியான வாக்காக எடுத்துக்கொள்ள வேண்டும்!'' என்று சொன்ன நீதிபதி சந்துரு, ''சைவத்தின் மீது அளப்பரிய ஈடுபாடுகொண்டு இருந்தேன். ஆனால், முழு உண்மை என்ன என்பதை உணர்ந்த பிறகு அதை விட்டுவிட்டேன். நீங்களும் அதை விட்டுவிடுங்கள். அப்போதுதான் நீங்கள் ஆன்மிகரீதியாக முன்னேறலாம். வெற்று வார்த்தைகளாலும் சடங்குகளாலும் பயன் இல்லை. அன்பு, உண்மை, கருணை ஆகியவற்றால் மட்டுமே உயர்வை அடைய முடியும்!'' என்று வள்ளலார் சுட்டிக்காட்டியதையும் குறிப்பிட்டார். மேலும் அவர், ''சத்திய ஞான சபையில் உருவ வழிபாட்டை நடத்துவது வள்ளலாரை அவமதிப்பதாகும். வள்ளலாரை அவரது எதிரிகள் எதற்காக எதிர்த்தார்களோ, அந்தக் காரணத்தின் மூலமாகத்தான் அவரை முழுமையாக உணர முடியும். உருவ வழிபாட்டை எதிர்ப்பதையும், சாதி மத வேற்றுமைகளை நிராகரிப்பதையும் பார்த்துத்தான் வள்ளலாருக்கு எதிர்ப்பு கிளம்பியது. எனவே, உருவங்களை வடலூரில் வைத்து வழிபடக் கூடாது!'' என்று தீர்ப்பு அளித்துள்ளார். வள்ளலாரின் சமாதியில் மீண்டும் ஒரு வெற்றி மாலை! |
|
|
ஒருமுறை அருட்பிரகாச வள்ளலார் திருத்தணிக்குச் சென்றார். அடிக்கடி அவர்
அந்த முருகனைக் காணச் செல்வது வழக்கம். ஆனால் போகும் வழியில் இருக்கும்
திருவள்ளூருக்குச் செல்லமாட்டார். அந்தத் தடவை திருவள்ளூரை
நெருங்கியவுடன் தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டது. திருவள்ளூரில்
இருக்கும் அருள்மிகு வீரராகவப் பெருமாளைத் தரிசிக்காமல் போகிறோமே என்று
அப்போதுதான் அவர் மனதில் பட்டது.
பின் அவர் அங்கு போய்ப் பிரார்த்திக்க, வயிற்றுவலி அறவே நீங்கியது. அவர்
இந்தப் பெருமாள்மேல் "வீரராகவ பஞ்சகம்'' இயற்றியிருக்கிறார். இந்தக்
கோயில் வாயிலில் இந்த வீரராகவ பஞ்சகம் பளிங்குப் பலகையில்
செதுக்கப்பட்டிருக்கிறது
http://www.nilacharal.com/ocms/log/01181009.asp
தேவ்
வள்ளலாரின் வாழ்வு பல திருப்பு முனைகள் கொண்டது.
அதே போல் அவர் தனி அறைக்குள் சென்று மறைந்ததும் பேரதிசயம்.
இது போன்ற சித்து பற்றி ஆர்தர் கிளார் தனது நூலின் முன்னுரையில்
பேசுகிறார் (The mysterious world என்று நினைக்கிறேன்). எப்படிச்
சித்தர்களால் பூத உடலைக் காற்றில் கலக்க முடிகிறது என்று. வேதியியல்
பாடத்தில் வரும், transmutation என்று. அதாவது ஒரு தனிமனிலிருந்து
மற்றொன்றிற்கு மாறுவது. இரசவாதம் என்பது அடிப்படையில் வேதியியல்தான்.
இப்பிரபஞ்சம் இத்தகைய தனிம மாற்றங்களிதான் இன்று காணும் இத்தனை
தனிமங்களாக உருப்பெற்றிருக்கிறது. நமது உடலும் ஐம்பூதச் சேர்க்கையில்
உருவானதே. எனவே இங்கும் அம்மாறங்களை நிகழ்த்த முடியும் என்று நம்
சித்தர்கள் காட்டியுள்ளனர். இங்கு நிகழ்வதை sublimation என்று கூடச்
சொல்லலாம். விறகு எரிந்தால் கரிக்கட்டையாகும். கற்பூரம் எரிந்தால் ஏதும்
மிஞ்சாது. இதை sublimation என்போம். எரியாமலே வைத்திருந்தாலும் கற்பூரம்
காற்றில் கரைந்துவிடும்!
பரஹம்ச யோகாநந்தர் அமெரிக்கா போன பிறகு அவரது குரு பூதவுடலை
நீக்கிவிடுவார். குருவைக் கடைசி முறையாகக் காணவில்லையே என்று வருத்தம்
யோகாநந்தருக்கு. அவர் மும்பாய் வந்திறங்கி லாட்ஜில் தங்கியிருக்கும் போது
யுக்தேஷ்வர் தோன்றுவார். அத்தோற்றம் எப்படி இருந்தது என்று graphically
ஆக வர்ணிப்பார் யோகாநந்தர். அவை பொன்னுருவாக, அணுக்கூட்டங்களின்
திகள்களாக இருக்கும். யோகாநந்தர் அவ்வுடலை இறுக்கிக் கட்டிப் பிடித்துக்
கொண்டு நீங்கள் என்னை விட்டுப் போகக்கூடாது என்பார். இப்படி அப்போது
யுக்தேஷவர் இவருக்கு பல யோக ரகசியங்களைச் சொல்வார் (இதை சினிமாத்தனமாக
”பாபா” படத்தில் காணலாம்).
வள்ளலார் வாழ்வில் நிகழ்ந்த இம்மாதிரி இரசாயன மாற்றத்தைப் பற்றி
யோகாநந்தர் எழுதி வைத்தது போல் (எப்பூடகமும் இல்லாமல், எளிய தெளிவான
மொழியில்) யாராவது எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.
வள்ளலார் வாழ்வு ஆய்விற்குரியது (பல்வேறு நோக்கில்).
க.>
சரி ஜீவ காருன்யதிற்கும் இறை நிலையை அடைவதற்கும் என்ன தொடர்பு ?ஜீவ காருண்யம் என்பதே பிற உயிர்களுக்கு எந்த துன்பமும் செய்யாமல் இருப்பதுதான்.ஏன் பிற உயிர்களுக்கு துன்பம் செய்யக் கூடாது என்றால்பிற உயிர்களுக்கு செய்யும் துன்பம் நமக்கு நாமே செய்து கொள்ளும் துன்பமாகும் என்கின்ற நீதி நெறியின் அடிப்படையிலாகும்.
> அடுத்த மூன்றிற்கு கீழே விளக்கம் அளித்துள்ளேன்.
> சைவ சமயத்தின் உச்சமே உருவத்தை விட்டு விலகி அருவத்தில் கரைவதுதான். இதை
> நீங்கள் நாயன்மார்கள் பாடல்கள் அனைத்திலும் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக
> திருவாசகத்தில் உருவம் கரிந்து அருவ நிலை சிறப்பாக விளக்கப் பட்டுள்ளது.
>
25 தத்துவங்களோடு நின்று விட்டவர்களுக்கு, எங்கே 36 தத்துவங்களும், 96
தத்துவங்களும் புரியப் போகிறது?!
சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிசூழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய் பங்கயத் தயனுமா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந்துறையில் நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என் றரு ளாயே. - திருவாசகம்
திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருநாமம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
*ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்* காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. - திருவாசகம்
> அடுத்து சன்மார்க்கம் என்பது இறைவனை தானாக காண்பது.
> இங்குதான் ஒருமை என்பது தோன்றுகிறது.
> இங்கு ஒன்றை தவிர வேறு இல்லை என்று உணர்படுகிறது.
> இதற்கு தான் ஜீவ ஐக்கியம் என்று பெயர்.
>
*ஒருமையுடன்* நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை பேசா திருக்க்வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய் பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.
> ஆக வள்ளல் பெருமானும் முதல் மூன்று மார்க்கங்களான
> சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம், சக மார்க்கம்
> என மூன்று நிலைகளில் இருக்கும் வரை முருகன், சிவன் என வழிபாடு முறையினை
> வைத்திருந்தார்.
எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும் ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை இகழ்விற கெடுக்கும்தலை
கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண் கலநீர் சொரிந்தஅழுகண்
கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி கைத்திழவு கேட்கும்செவி
பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம் பகீர்என நடுங்கும்நெஞ்சம்
பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை பலிஏற்க நீள்கொடுங்கை
சந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே. -திருஅருட்பா,
முதல் திருமுறை, தெய்வமணி மாலை
>
> அடுத்த நிலையான சன்மார்க்கம் நிலை வரும்போது அனைத்தையும் விட்டு விலகி ஜோதி
> நிலையினை உணர்ந்த காரனத்தால் இறைவன் உருவம் அற்றவன் என்று ஜோதி வடிவானவன் என்று
> அனைவருக்கும் எடுத்து கூறினார்.
> இது அவரது ஆறாம் திருமுறை பாடல்கள் அனைத்திலும் ஜோதி வழிபாடே
> அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் நிலையினை விளக்கி உள்ளார். (முதல் ஐந்து
> திருமுறையிலும் உருவ வழிபாடே உள்ளது)
>
சிவன் - சிவம் இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாதவர்களுக்கு எங்கே ஐயா
இதெல்லாம் புரியப் போகிறது!
திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே. - திருஅருட்பா,
ஆறாம் திருமுறை
அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்
அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்
பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்
பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்
இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்
எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்
சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர். - திருஅருட்பா,
ஆறாம் திருமுறை
> 5)வாழ்வின் ஆரம்பத்தில் ஸ்ரீதர நாயக்கர் என்னும் பிரம்ம ஸமாஜி ஒருவருடன் பொது
சொல்லிக் கொடுக்க யாருமில்லை.
“ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்”
நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை நன்மைதீ மைகளும் இல்லை
நவில்கின்ற வாகிஆந் தரம்இரண்டினும்ஒன்ற நடுநின்ற தென்றுவீணாள்
போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே போதிப்பர் சாதிப்பர்தாம்
புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று போந்திடில் போகவிடுவார்
சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு தாம்புபாம் பெனும்அறிவுகாண்
சத்துவ அகண்டபரிபூரண காரஉப சாந்தசிவ சிற்பிரம நீ
தாம்பிரிவில் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே. - திருஅருட்பா,
முதல் திருமுறை, தெய்வமணி மாலை
ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு
அன்பருக்கு,
எனவே தாங்கள் மிகவும் சிரமப் பட வேண்டாம். அறிந்தவர்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
2010/5/3 srirangammohanarangan v <ranga...@gmail.com>
அன்பருக்கு,எனவே தாங்கள் மிகவும் சிரமப் பட வேண்டாம். அறிந்தவர்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.தத்வ நாற்பத் தெட்டு நாற்பத் தெட்டு மேவி திடமேவும்தர்க்க சாத்ர தக்க மார்க்க சத்ய வாக்யப் பெருமாளேஎன்பது என்னுடைய அன்றாட வழிபாட்டுக்குப் பயன்படும் திருப்புகழ். 48ம் 48ம் கூட்டினா 96 என்பது கூடவா தெரியாம போயிடும் எங்களுக்கு? 96 தத்துவங்களை கிருபாநந்த வாரியார் உரை போதுமான அளவுக்கு விளக்கியிருக்கிறது.
அன்புள்ள சீரங்கம் மோகன் மற்றும் ஹரிகி அவர்களுக்கு,
அமைதி காக்க!
தாங்கள் வள்ளலார் பற்றியும், சைவ சித்தாந்தம் பற்றியும் மிக அழகாக எளிய
முறையில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் விளக்கி வருகிறீர்கள்.
ஒரு விளக்கமோ, கருத்தோ முன் வைக்கும் போது, சங்க கால பழக்கமாக அதை உரசிப்
பார்ப்பது புலவர் செயல்தானே? யாரை விட்டார்கள் சங்கப் புலவர்கள்?
நம்மாழ்வார் திருநாடு எய்த பின்னும் அவரது திருவாய்மொழியை உடனே
ஏற்றுக்கொள்ளவில்லையே? புனல்வாதம் வைத்தார்களே?
எனவே நாம் இங்கு கருத்து விளக்கம், தெளிவு, மீண்டும் கேள்விகள்,
விளக்கம், புரிதல் என்று கூட்டாகச் சேர்ந்து இயங்குவோம். நமக்குள்
பிரிவினை எதற்கு?
இங்கு யாரும் வாய் பொத்தி, கை கட்டி கேட்க வேண்டிய தேவை இல்லை, இல்லையா?
நாமென்ன மடமா நடத்துகிறோம்? :-))
மேலும் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ? என்ற நிலையில் இங்கு
உள்ளோரின் பட்ட அறிவின் ஆழம் எவ்வளவு என்று எப்படிக் கணக்கிட முடியும்?
அரங்கனார் ஏதோ சொல்ல வருகிறார் என்று தோன்றுகிறது. அவர் கொஞ்ச காலமாக
சிவஞான முனிவர் அருளிய மாபாடிகத்தைக் குடைந்து கொண்டிருப்பதாக கேள்வி ;-)
உங்களை சாக்காக வைத்து ஏதாவது சொல்ல வரலாம். அது உங்களை தாழ்த்தவோ இல்லை
வள்ளலாரை மீள்பார்வை செய்யவோ இல்லாமலும் இருக்கலாம். வள்ளலாரின்
வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்ள எவ்வளவு உள்ளது? சமீபத்தில் ஒரு
நண்பர் சொன்னது போல் அவர் வழக்கில் இருந்து கூட அவர் பெருமையே
புலனாகிறது. எனவே அரங்கனாரின் பார்வையில் வள்ளலார் ஏன் சைவத்தைக்
கைவிட்டார் என்பதற்கு ஏதாவது துப்புக் கிடைக்கலாம்?
ஹரிகி அருணகிரியை உருட்டிப்புரட்டுபவர். அருணகிரியின் வாயிலாக சைவ
சித்தாந்தம் எப்படி ஊற்றெடுக்கிறது எனக்காணலாம்.
நாமெல்லாம் எதிர், எதிர் அணிகளே அல்ல. இவ்வளவு ஆர்வத்துடன் ஆன்மீக
விஷயங்களில் பங்கேற்பதிலிருந்தே தெரியவில்லையா நமது ஆர்வம்?
அரங்கனாரும், ஹரிகியும் இன்னும் மென்மையாக சொல்லிப் பாருங்களேன். இனிய
உளவாக இன்னாது ஏன் கூற வேண்டும். நமக்குத்தேவை ஆன்மீகக்கனிதானே!!
நன்றியுடன்
நா.கண்ணன்
2010/5/3 Nakinam sivam <nak...@gmail.com>:
> அன்புள்ள சீரங்கம் மோகன் மற்றும் ஹரிகி அவர்களுக்கு,
> நீங்கள் எதிர்பார்த்த பதில் வரவில்லையோ ?
> ஆதலினால்தான் இது பிரசங்கமாக மாறி போனதோ ?
> தத்துவம் 96 ஐயும் உங்களுக்கு தெரிந்த வரை விளக்குங்களேன்
> நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.
> அல்லது சைவ சித்தாந்தத்தயாவது விளக்குங்களேன்
> நாங்கள் கை மூடி வாய் பொதி கேட்டுக் கொள்கிறோம்.
> நீங்கள் வள்ளலாரை மீள் சிந்தனைக்கு உடபடுத்தியது போல
> நமது இந்து சமயத்தில் உள்ள ராமாயணம், மகாபாரதம்
> தசாவதாரம் போன்றவற்றை கொண்டு வர முடியுமா ?
> நமது சடங்குகளை மீள் சிந்தனைக்கு உட்படுத்த முடியுமா ?
> நாம் ஒன்றில் நின்று கொண்டு
> அதுதான் உண்மை என்று நினைத்துக் கொண்டு
> அந்த உண்மை ? தான் எல்லா இடத்திலிருந்தும் வர வேண்டும்
> என்று நினைத்தால் அது ஏமாற்றத்தையே தரும்.
> அன்புடன்
> நக்கினம் சிவம்
ஆன்மிகக் கனி என்ன ? ஐயாதான் கனியிலிருந்து சாறே பிழிந்து கொடுத்து
விட்டாரே.
விவாதத்துக்கு இனி ஏது இடம் ?
நன்றி நக்கினம் ஐயா
தேவ்
அன்பின் சிவம்,
மிகவும் சரியாகச் சொன்னீர்கள்!
நல்லத் தெளிவான கருத்து. நன்றி!!
ஐன்ஸ்டினின் விதி தெரியாமல்!!!?,
நியூட்டனின் விதியை வைத்துக் கொண்டு ஒளியின் வேகத்தில் செல்லும் ஒரு
பொருளை ஆய்வு செய்வது போல்!!!!
ஐயா,
அடியேன் தாங்களைத் திட்டவில்லை.
தாங்கள் அடியேனது எழுத்துக்களுக்கு "திட்டுதல்" எனப் பொருள் கொண்டால்
அதற்கு அடியேன் பொறுப்பு அல்ல.
அன்பின் சிவம் ஐயா கூறியது போல்
"நாம் ஒன்றில் நின்று கொண்டு
அதுதான் உண்மை என்று நினைத்துக் கொண்டு
அந்த உண்மை ? தான் எல்லா இடத்திலிருந்தும் வர வேண்டும்
என்று நினைத்தால் அது ஏமாற்றத்தையே தரும்."
மேலும் நாங்கள் இசை மாறி பொழிந்தாலும் அது
தங்களுக்கு வசையாகவேப் படும். (May be your frame of reference is just
25 principles?!)
ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு
நான் சொன்னால் கண்ணன் கோபித்துக் கொள்கிறார்.
நாகையா இல்லாமல் அவர் வேறு என்ன? என்ன பொறுமையாக விளக்குகிறார்?
சிவம் நீங்கள் அவசரப்பட்டு சினப்படுகிறீர்கள் என்று எனக்கும் படுகிறது. உண்மையிலேயே காரணமே இல்லாமல் கோபித்துக் கொள்கிறவன் நான். நீங்கள் என்னையே தோற்கடித்து விடுவீர்கள் போல இருக்கிறதே.
அறிவொளி ஐயா, உங்ளுடைய பஞ்சாயத்தும் சற்று ஆபத்தில் தான் முடியும் போலத் தோன்றுகிறது.
வள்ளலார் பற்றிய இந்த இழையில் எதற்குப் பொறுமை இழக்க வேண்டும்? சில விஷயங்களை மீள்பார்வைக்கு உட்படுத்தினால் அது மேலும் துலங்கி மெருகேறும் அல்லவா?
உங்கள் விஷயங்கள் உண்மையிலேயே சுவாரசிமாகவும் நிறைய தெரிந்து கொள்ளும் வகையிலும் அமைந்திருக்கின்றன. அதில் சில விவாதங்கள் கிளம்பும்போது அதனைத் தெளிவுபடுத்தி விட்டுச் செல்வது மேலும் விளக்கங்கள் கூட்டும் அல்லவா?
(எனக்கு ஒன்றும் ஆகவில்லை. சகவாச தோஷம். கொரியாக்காரர்களிடம் இருந்து சற்று விலகி இருக்க வேண்டும்)
அன்புடன்
பென்னேஸ்வரன்
ஹரிகி அருணகிரியை உருட்டிப்புரட்டுபவர். அருணகிரியின் வாயிலாக சைவ
சித்தாந்தம் எப்படி ஊற்றெடுக்கிறது எனக்காணலாம்.
நாமெல்லாம் எதிர், எதிர் அணிகளே அல்ல. இவ்வளவு ஆர்வத்துடன் ஆன்மீக
விஷயங்களில் பங்கேற்பதிலிருந்தே தெரியவில்லையா நமது ஆர்வம்?
அரங்கனாரும், ஹரிகியும் இன்னும் மென்மையாக சொல்லிப் பாருங்களேன். இனிய
உளவாக இன்னாது ஏன் கூற வேண்டும். நமக்குத்தேவை ஆன்மீகக்கனிதானே!!
என்ன இது அநியாயமாக இருக்கிறதே ரங்கன்.
நானும் கொஞ்சம் நாகையா வேலை பார்க்கலாம் என்று பார்த்தால் விடமாட்டீர்கள் போலிருக்கிறதே.
சரி. நீங்கள் சொல்வதால் விடுகிறேன்.
(அப்பாடி. தெரியாமல் நுழைந்து விட்டோமே எப்படி தப்பிக்கிறது என்று நினைத்தேன். வழி காட்டி விட்டீர்கள்).
அன்புடன்
பென்னேஸ்வரன்
வாடிய பயிரைக் கண்டாலும் வாடும் மனமுடைய ஒரு தமிழனைப் பற்றிப் பேசவரும்
இழையில் இவ்வளவு வாட்டம் ஏன்?
It is important to be sensitive to other's feeling.
நாமெல்லாம் எவ்வளவுதான் செம்மொழிகளில் ஆன்மீகம் பற்றி அடுக்கடுக்கடாய்
காட்டினாலும், நடைமுறை என்று வரும் போது அவரவர் கூடு அவரருடையது என்று
பதுங்கிவிடுகிறோம். நெருங்கினால் பாயத்தொடங்குகிறோம்.
சகல காரணனாய் அவனொருவன்தானே நம்மையெல்லாம் இப்படி ஆட்டுவித்துக்
கொண்டிருக்கிறான். அந்த ஒருமையில் நம்மைக் குவித்தால் கோபத்திற்குப்
பதில் இரக்கம் வரும். [என்ன நாகையா என்ற பட்டமும் கூட வரும் :-))]
நான் அடிக்கடி சொல்வது. இது ஏதோ விளையாட்டாக எழுதும் ஒரு களமல்ல இது!
கூரறிவு படைத்தவர்க்கு இதுவொரு பொற்கொல்லன் உலை. ஆண்டாள் சொல்வது போல்
நம் மலங்களை தூசாக்கும் உலை இது. ஆனால் எதுவுமே மேலே படாமல் இலை மேல்
நீர் போல் வந்து போவோர்க்கு ஒரு ஆதாயமும் இங்கில்லை. சும்மா பொழுது
போவதைத் தவிர.
மின்தமிழ் ஒரு ஆன்மீகக் கண்ணாடி. வள்ளலாருக்கு முருகனையும், ஆண்டாளுக்கு
ரங்கனையும் காட்டிய கண்ணாடி...இப்போது இந்த வடிவில் வந்து நிற்கிறது.
‘என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்’ என்று தன்னை இக்கண்ணாடியில்
பார்க்கத்தெரிந்தவர் நிர்மலனாகிறார். கொஞ்சம் எட்டப்பார்வை,
கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கு கொஞ்சம் நாள் எடுக்கலாம். ஆனாலும் ஒரு நாள்
ஆத்ம தரிசனம் கிட்டும்!!
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
இந்த அற்புதமான பாடலைக் கேட்க!
http://www.youtube.com/watch?v=k-IF_VhbiSE&feature=player_embedded
http://www.thamizhisai.com/video/video-002_tamil-cinema/tamil-001_orumaiyudan.php
நா.கண்ணன்
> ரொம்பத்தான் புரிஞ்சுது போங்க. ரெண்டுதடவை சொன்னப்புறம்தான் உங்களால் கவனிக்கவே
> முடிஞ்சிருக்குது. அப்படியிருக்க புரியுதாமே, புரியுது. ம்க்கூம் :-)
>
> அன்புடன்
> மதுரபாரதி
I don't think he understand what is the significance of 96 nor the
meaning of it.
If he does, can he tell how to arrive another divine number that is
related to 96?
Gomathy
அருமையாக உள்ளது.
நாசா வேற்று கிரகங்களுக்கு விண்கலம் மூலம் மனிதர்களை அனுப்பும்
ஆய்வுகளைப் பல காலமாக மேற்கொண்டு வருகிறது. விண்கலங்களில் ஆடு, மாடு,
கோழி வளர்க்க முடியாது (பயணம் சில வருடங்களாவது ஆகும்). பயிர்களைத்தான்
வளர்க்க முடியும். எனவே சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களே முதலில் வேற்று
கிரகங்களில் குடியேறுவர்!!
க.>
இருப்பினும் மற்றவர்களின் வலி என்ன என்று உணர்த்த வேண்டியே செய்தேன்.அவர் அதை உணர்ந்து இருப்பின் அவர் பட்ட வலிக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்.அன்புடன்நக்கினம் சிவம்
ஒருமுறை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.அதில் வசித்த தவளை ஒன்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு
ஒரு கிணற்றில் விழுந்தது. அந்த கிணற்றிலே வசித்து வந்த தவளை ஒன்று அந்த தவளையை பார்த்து நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டது.அதற்க்கு கடல் தவளை நான் கடலில் இருந்து வருகிறேன் என்று
பதில் கூறியது.
அதற்க்கு கிணற்று தவளை உன்னுடைய கடல் இவ்வளவு தூரம் இருக்குமா என்று கூறி கொண்டு ஒரு முறை எம்பி குதித்து தாண்டியது. அதற்கு கடல் தவளை இல்லை இதை விட பெரியது என்று பதில் கூறியது.அடுத்ததாக கிணற்று தவளை இரண்டு முறை எம்பி தாண்டி குதித்து இவ்வளவு தூரம் இருக்குமா என்று கேட்டது.அதற்கும் கடல் தவளை இதைவிட பெரியது என்று பதில் கூறியது.சரி இந்த கிணற்றில் பாதி தூரம் இருக்குமா உனது கடல் என்று கிணற்று தவளை கூறியது.அதற்கு கடல் தவளை இந்த முழு கிணற்றை விட பல மடங்கு பெரியது கடல்என்று பதில் கூறியது.உடனே கிணற்று தவளைக்கு மிகுந்த கோபம் உண்டாகியதுகடல் தவளையை பார்த்து மூடனே இந்த கிணற்றை விடபெரிய இடம் இந்த உலகத்திலேயே கிடையாது.நீ மிக பெரிய பொய்யன் உடனடியாக இந்த இடத்தை விட்டு ஓடிப் போ
என்று கடல் தவளையை விரட்டி விட்டது.
அது போல்தான் ஞான மார்க்கத்தில் சிறிது கற்ற உடன் நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று அந்த கிணற்று தவளையை போல் நமக்கு ஆணவம் வந்து விடுகிறது. ஆனால் கடல் போல் ஞானத்தை தெரிந்து கொள்ள பல விஷயங்கள் உள்ளன என்றும் கற்க வேண்டிய ஞானம் மிக அதிகம் நாம் கற்றவை
மிகவும் குறைவு என்பதும் நாம் உணர வேண்டும்.
ஆகவே நாம் ஒன்றை மட்டும் தெரிந்து கொண்டு அதையே பிடித்து கொண்டு அதுதான் ஞானம் என்று அதற்குள்ளேயே உழன்று கொண்டிருந்தால்ஞானத்தை முழுமையாக அடைய முடியாது.
நாம் அனைவரும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும். நல்ல கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி அறிவின் துணை கொண்டு ஆராய்ந்து கற்க வேண்டும்.
நல்ல ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிந்தால் நாம் தூய்மை அடைவதில் எந்த தடையும் இருக்காது.
இறை அருள் நம்மை வந்து அடையும்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு.
ஹைக்கோர்ட் ஜட்ஜமெண்டை இணைக்கிறேன்.
திரு. நக்கினம் சிவன் அவர்களின் 'கிணற்றுத்தவளை' கேலியை நான் ரசிக்கவில்லை.
திரு இன்னம்பூரர்க்கு,ஜட்ஜ்மெண்ட் காப்பியின் வாசகங்களை இணைத்துப் படிக்கக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.தங்களுடைய இழையில் என்னுடைய ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாக்’ கருத்துரைகளால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் விளைந்திருப்பின் மன்னித்தருள்க.ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
-- வள்ளலார்
திரு. நகினம் சிவம் கூறிய சிலபல கருத்துக்களுக்கு நான் உடன்பாடு
இல்லாவிடிலும் இன்று அவர் கூறிய ,,''தவளை '' உபமா னத்திற்கு
எனக்கும் உடன்பாடு உண்டு; அவர் கூறிய சான்று ''அக்ஷ்ரலக்ஷம் பெறும்எனவே
நாம் அனைவரும் திறந்த புத்தகமாக இருப்பதிலும் .நல்ல கருத்துஉக்களை
விருப்பு வெறுப்பின்றி அறிவின் துணை கொண்டு ஆராய்ந்து கற்ப்போம்
என்பதில் எந்த மாற்று கருத்தும் இலலை ;''மாற்றான் தோட்டத்து பூவும்
மணக்கும் ; நன்றி . உவமை கதை சான்றுடன் விடை கூறிய நகினம் சிவா விற்கு
வாழ்த்துக்கள் ;
--
> 2010/5/4 Gomathy Sankaranarayanan <gomath...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > இருப்பினும் மற்றவர்களின் வலி என்ன என்று உணர்த்த வேண்டியே செய்தேன்.
> >> அவர் அதை உணர்ந்து இருப்பின் அவர் பட்ட வலிக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்.
> >> அன்புடன்
> >> நக்கினம் சிவம்
>
> > சிவம் கலக்கிட்டீங்க!.
> > கோமதி
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> Brotherly Athman
> Nakinam Sivam
>
> http://nakinam.blogspot.com
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
> மிக சிறப்பான பண்பு - உங்களுக்கு,
> வயது ஏற ஏற உங்கள் பண்பு மெருகு ஏறுகிறது.
>
> நான் இன்னமும் அடக்கம் ஆகவில்லை.
> ஒருவேளை நான் அடக்கம் ஆகும்போது
> நான் இல்லாமல் போகலாம்.
> நான் இருக்கும் போது எப்படி அடக்கம் ஆக முடியும்.
> ஆகவே நான் இன்னமும் அடக்கம் ஆகவில்லை என்று தெரிவித்து கொள்கிறேன்.
> நான் அடக்கத்தை தான் சொல்கிறேன்.
சிவம் ஐயா,
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
"அடக்கம்" ஆகும்போது அடியேனிடனிடம் சொல்லி அனுப்புங்கள்!
அடியேனும் "அடக்கத்தைத்" தான் சொல்கிறேன்!!
ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு
--
> நான் மட்டுமல்ல யார் அடக்கம் ஆனாலும் உங்களுக்கு தெரியாமலா ?
> ஊர் சுடுகாடே உங்களிடம் தானே இருக்கிறது.
> ஆகவே நான் அடக்கம் ஆவது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ
> உங்களுக்கு நிச்சயம் தெரியும்.
அன்புள்ள சிவம் அரசு ஐயா அவர்களுக்கு,
25 தத்துவங்களேடு நின்று விட்டு, பிரகிருதி மாயை மற்றும் அசுத்த மாயையில்
உள்ள உருவமுள்ள கடவுள்களை வணங்குபவர்களுக்கு மட்டும்தான் இறப்பும்
ஊர்ச்சுடுகாடும்! அடியேனுக்குத் தெரியும் அவர்கள் இறப்பு.
36 தத்துவங்களைக் கடந்து 96 தத்துவங்களை நோக்கி வெற்றி நடை போட்டுக்
கொண்டு, சுத்த மாயையில் உள்ள அருவத்தை, "பராபரத்தை" வணங்கும் தங்கள்
போன்ற அருளாளர்களுக்கு அப் பராபரத்தில்தான் "அடக்கமும்" "மரணமில்லாப்
பெருவாழ்வும்"!!. அதனை அடியேன் அறிய இயலாது. தாங்கள் நிச்சயம்
அடியேனுக்குச் சொல்லி அனுப்புங்கள்!!!
தன்னைப் போல அந்த அருவமும் 9 வாயில்களை உடையது என்று எண்ணி ஏதோ ஒரு
அரைவேக்காட்டு அன்பர், மரணமில்லாப் பெருவாழ்வு அருளும் உருவமில்லா
பராபரத்தை மூடிக் கொள்ளச் சொல்வாராம். பாவம் அந்தப் பராபரம்!!!?
On May 7, 7:34 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> " கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து."
> [திருக்குறள்]
> இ
(கீழேயுள்ள கருத்தில் என்ன தவறுகள் உள்ளன என்பது தெரியவில்லை.
மட்டுறுத்தப்பட்டுள்ளது! மீண்டும் பதிய முயற்சிக்கிறேன். with cced to
limited people)
அடியேன் காமமொடு *கடுஞ்சினம்* கடிந்த காட்சியர்
கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்
ஈசன்எதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த
நேசர்எதிர் நிற்பது அரிதாமே - தேசுவளர்
செங்கதிர்முன் நின்றாலும் செங்கதிர வன்கிரணம்
தங்குமணல் நிற்கரிதே தான்
சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்
ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு
>
> 2010/5/7 Nakinam sivam <naki...@gmail.com>
>
>
>
> > அன்பு நண்பர் சிவ அறிவொளியன் அவர்களுக்கு,
>
> > "அடக்கம்" ஆகும்போது அடியேனிடனிடம் சொல்லி அனுப்புங்கள்!
> > அடியேனும் "அடக்கத்தைத்" தான் சொல்கிறேன்!!
>
> > ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
> > சிவ அறிவொளியன்
> > தனித்திரு, விழித்திரு, பசித்திரு
>
> > நான் மட்டுமல்ல யார் அடக்கம் ஆனாலும் உங்களுக்கு தெரியாமலா ?
> > ஊர் சுடுகாடே உங்களிடம் தானே இருக்கிறது.
> > ஆகவே நான் அடக்கம் ஆவது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ
> > உங்களுக்கு நிச்சயம் தெரியும்.
>
> > அடக்கம் முதல் ஒடுக்கம் வரை
> > உங்களது பெயரிலேயே வைத்திருக்கும் போது
> > அடக்கம் பற்றி நீங்கள் கவலை பட போவதில்லை.
> > அடக்கமும் ஒடுக்கமும் பற்றி அனைவரும்
> > பயப்படும் வேளையில் உங்களது பெயரிலேயே
> > அனைத்தையும் கொண்டுள்ளதனால்
> > நீங்கள்
> > மிகவும் அடக்கமானவர்தான்.
> > இந்த அடக்கம் அதுவல்ல.
> > தன் அடக்கம் மட்டுமே.
> > அன்புடன்
> > நக்கினம் சிவம்
>
> > 2010/5/7 சிவ அறிவொளியன் <arivo...@gmail.com>
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > Brotherly Athman
> > Nakinam Sivam
>
> >http://nakinam.blogspot.com
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil
ஒருவேளை நீங்கள் முன்னர் சொன்னதுதான் என் விஷயத்தில் நடந்து இருக்கிறது என்று நினைக்கிறேன் தேனீ சார்.
நான் சொல்ல வந்தது இதுதான்.
1. இந்த இழையில் நகைச்சுவை உணர்வு கூடிக் கொண்டே போகிறது.
2. புரிதல் கூடிக் கொண்டே போகிறது.
3. திருவிழாவில் தொலைந்து போன குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அன்புடன்
பென்னேஸ்வரன்
நான் சொல்ல வந்தது இதுதான்.
1. இந்த இழையில் நகைச்சுவை உணர்வு கூடிக் கொண்டே போகிறது.
2. புரிதல் கூடிக் கொண்டே போகிறது.
3. திருவிழாவில் தொலைந்து போன குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
3. திருவிழாவில் தொலைந்து போன குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
| வள்ளலாருக்குச் சமாதி இல்லை.. |
|
வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் விஞ்ஞான அடிப்படையில் உருவானது என்று அத்தீர்ப்பு வள்ளலாரின் லட்சியத்துக்கு மகுடம் சூட்டி யுள்ளது. இந்த அடிப்படையில், அத்தீர்ப்பை வரவேற்ற என்போன்ற சன்மார்க்கிகள் அகம் மகிழ்கின்றோம். அதேசமயம், ஒரு நெருடலையும் சுட்டிக் காட்ட வேண்டும். அக்கட்டுரையின் கடைசி வரி இந்தத் தீர்ப்பு ஒரு வெற்றி மாலையாக 'வள்ளலாரின் சமாதியில்' அமைந்துள்ளது என்கிறது. சாகாதவரே சன்மார்க்கி! வள்ளலார் முத்தேகச் சித்தி பெற்றவர். சுத்த தேகம், பிரணவ தேகம் பெற்ற பின்னர் ஞான தேகமான ஒளிஉடம்பு பெற்றவர் அவர். இறப்பொழிந்த சன்மார்க்கவாதி. இன்னும் இயங்குகிறார் - நம்மை இயக்குகிறார். அவர் உடம்பு ஒளி உடம்பு. அதனால் அவருக்குச் சமாதி இல்லை. அடுத்து, அக்கட்டுரையில் வெளியாகியுள்ள வள்ளலாரின் திருவுருவப் படத்தில், வள்ளலாரின் நெற்றியில் திருநீறு துலங்குகிறது. சிதம்பரத்திலிருந்து வெளியேறி கருங்குழியில் இருந்த காலம் வரை வள்ளலார் திருநீறு அணிந்திருந்தார். கருங்குழியிலிருந்து சித்தி வளாகம் சென்ற பிறகு, திருநீறு அணியவில்லை. பரிபக்குவ நிலையை அடைந்த பிறகு அவர் வாழ்ந்த வாழ்க்கைதான் நாம் கவனிக்கத் தக்கது. மேலும், வள்ளலார் சமயம் கடந்த சமயம் கண்டவர். அதனால் வள்ளலார் திருநீறு அணிந்துள்ள காட்சிப் படத்தைத் தவிர்த்திருக்கலாம். மற்றொரு கருத்தும் இத்தருணத்தில் தெரிவிக்க விரும்பு கிறேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வள்ளலார் தெய்வ நிலையங்கள் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை இந்து அறநிலையத் துறையிலிருந்து விடுவித்து, முதல்வரின் கண்காணிப்பில் உள்ள பொது இலாக்காவில் (Public Department)வள்ளலார் நிறுவிய தெய்வ நிலையங்கள் செயல்படுமாறு அமைக்கலாம். அவற்றின் நிர்வாகக் குழுவில் சன்மார்க்க சங்கங்கள் செயல்படும் நாடுகளிலிருந்தும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் கௌரவப் பிரநிதிகளை (Honorary Delegates) நியமிக்கலாம். இவ்வாறு செய்தால், வள்ளற் பெருமான் எண்ணிய 'ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை'யினால் மலர்ச்சி பெறும் மனிதர்கள் அனைவரும், மற்ற மற்ற ஜீவராசிகளையும் நேசிப்பவர்களாக வளர்வார்கள். இந்தப் பூமிக் கோளம் முழுவதிலும் ஆருயிர்களுக்குத் தேவையான 'அன்புச்செயல்' பல்கிப் பெருகும். - நா.மகாலிங்கம்,
தலைவர், |
அடுத்து, அக்கட்டுரையில் வெளியாகியுள்ள வள்ளலாரின் திருவுருவப் படத்தில், வள்ளலாரின் நெற்றியில் திருநீறு துலங்குகிறது.
சிதம்பரத்திலிருந்து வெளியேறி கருங்குழியில் இருந்த காலம் வரை வள்ளலார் திருநீறு அணிந்திருந்தார். கருங்குழியிலிருந்து சித்தி வளாகம் சென்ற பிறகு, திருநீறு அணியவில்லை. பரிபக்குவ நிலையை அடைந்த பிறகு அவர் வாழ்ந்த வாழ்க்கைதான் நாம் கவனிக்கத் தக்கது. மேலும், வள்ளலார் சமயம் கடந்த சமயம் கண்டவர்.
அதனால் வள்ளலார் திருநீறு அணிந்துள்ள காட்சிப் படத்தைத் தவிர்த்திருக்கலாம்.
இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
இப்போது உள்ள எந்த படமும் வள்ளலாருடைய படம் இல்லை.
அவரை புகைப்படம் எடுக்க பல முறை முயற்சித்து அவர் உருவம் புகைப்படத்தில் விழவில்லை. ஆக இந்த படங்கள் அனைத்துமே வள்ளலார் போல் உள்ளனவே அன்றி இப்படிதான் இருந்தார் என்பதற்கானது அல்ல.
மேலும் வள்ளலார் எதோ இந்து சமயத்திற்கு எதிரானவர் என்பது போல் ஒரு சிலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் அவர் இந்து சமயத்தை சேர்ந்த சித்தாந்தம், வேதாந்தம், நாதாந்தம், கலாந்தம் போதாந்தம் போன்றவற்றின் சாரத்தின் முழுமையையும் சுத்த சன்மார்க்கமாக அளித்திருக்கிறார்.
அதே போல் இவை அனைத்தும் ஆனந்யமே அன்றி அன்னியம் அல்ல என்று கூறி இருக்கிறார். (ஆனந்யம் - அதை உள்ளடக்கியது)
சைவ சமய சித்தாந்தமும், வைணவ சமயத்தின் வேதாந்தமும் புரியாமல் ஒருவர் சுத்த சன்மார்க்கத்தை புரிந்து கொள்ள முடியாது என்பது எனது கருத்து.
அன்புடன்
நக்கினம் சிவம்
"அருட்பெரும் ஜோதி..தனிப்பெரும் கருணை" என்று ஜோதி வழிப்பாட்டை பரப்பிய
இராமலிங்க அடிகள் அவர்களுக்கு, சிவலிங்கத்தை வழிபடும் சைவர்கள் ஆறுமுக
நாவலர் தலைமையில் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். "தேவாரம்,திருவாசகம்
ஆகியவையே அருட்பாக்கள். மற்றது எல்லாம் வெறும் மருட்பாக்கள் " என்ற
அவர்களின் பிரச்சாரத்திற்கு, "தன்னை உணர்ந்தோர் பாட்டு எல்லாம் அருட்பா.
மற்றது எல்லாம் மருட்பா " என்று பதில் தந்தார் வள்ளலார். அப்போதே,கடலூர்
நீதி மன்றத்தில், அடிகளாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதில் ஆஜராக வள்ளலார் நீதிமன்றம் வந்த போது, வழக்கு தொடர்ந்த ஆறுமுக
நாவலரே அவரை பார்த்து எழுந்து வணங்கி நிற்க, அதை பார்த்த
நீதிபதி,"எதிரிகளே வணங்கும் வள்ளலார்,தவறாக பேசி இருக்க மாட்டார்" என
வழக்கை தள்ளுபடி செய்ததாக படித்தேன்.
அதை போன்ற ஒரு சம்பவம்..வடலூர் கருவறையில் லிங்க உருவத்தை சமிபத்தில்
பிரிதிஷ்டை செய்தார் சபானந்த சிவாச்சாரியார் என்பவர். இதை ஏற்காமல் இந்து
சமய அறநிலைய துறை தொடர்ந்த வழக்கில் ஒரு அழகான தீர்ப்பை தந்து
இருக்கிறார் உயர் நீதி மன்ற நீதிபதி சந்துரு அவர்கள்.
அதன் சாரம் இதோ..
" அவரது ஆன்மிக எண்ணங்கள் யாவும் ஜோதியை அடிப்படையாய் வைத்தே
இருக்கின்றன. 'ஆதியும்,நடுவும், அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி என்
உளத்தே' என்கிற ஜோதி வழிபாட்டை முன் எடுக்கும் நோக்கத்துடன்தான் சத்திய
ஞானசபை தொடங்கப்பட்டு, 1872 இல் ஜோதி வழிபாட்டு முறைகள் பின் வருமாறு
வகுக்கப்பட்டு உள்ளன.
'தகர பெட்டியில் வைத்து, ஜோதியை ஏற்ற வேண்டும்.அது கண்ணாடியில் பிரதி
பலிக்க வேண்டும்.எண்ணெய் பயன்படுத்தி ஜோதியை ஏற்ற வேண்டும். ஜோதி எரியும்
போது, அனைவரும் மௌனமாக இருக்க வேண்டும்' என்கிறது அவை. மேலும், இதில்
பங்கேர்ப்பவர்களுக்கு, இதிகாசங்கள், புராணங்கள்,வேதங்கள்,
சைவம்,வைணவம்,வேதாந்தம்,சித்தாந்தம் போன்ற நம்பிக்கைகள் கூடாது என்றும்
விதி முறை கூறுகிறது. எனவே, லிங்க பிரதிஷ்டை செய்வது வள்ளலாருக்கு
எதிரானது" என்று தீர்ப்பு வெளி வந்து இருக்கிறது.
இதை போன்று, முஸ்லிம் மக்களிடையே சமிப காலமாக "தர்கா வழிபாடு" காரணமாக
கருத்து மோதல்கள் நிலவி வருகின்றன. தர்கா என்பது இஸ்லாமிய பெரியவர்களின்
சமாதி. ஒரு பிரிவு அங்கு சென்று வழிபடுவதுதான் சர்ச்சைக்கு காரணம்.
"தர்கா வழிபாடு இஸ்லாத்துக்கு விரோதமானது. ஆண்டவனுக்கு மத்தியில்
மனிதர்களுக்கு இடம் இல்லை " என்று ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தவ்ஹீத்
ஜமாஅத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.
"மார்க்க முறைகள் வழி வாழ்ந்து மறைந்த பெரியவர்களின் சமாதிக்கும்,
ஆண்டவனுக்கும் இடையே சூட்சும தொடர்பு உள்ளது. அதனால், தர்காவுக்கு சென்று
வழிபடுவதும், தொழுகை செய்வதும் தவறு இல்லை " என்கிறது இன்னொரு தரப்பு.
(எல்லா மதத்தினரும் செல்லும் நாகூரில் உள்ளது தர்கா).
இதை பற்றி நன்கு அறிந்த இஸ்லாமிய நண்பர்கள் விளக்கினால் நமக்கு
இவ்விவகாரம் பற்றி மேலும் புரிந்து கொள்ள இயலும்.
ஜோதி வழிபாடு, தர்கா வழிபாடு போன்று 'சிலைகள்' பற்றி நீண்ட நாட்களாக ஒரு
கேள்வி என்னை உறுத்தி வருகிறது. திராவிட கழக அபிமானிகளிடம் இருந்து,
தர்க்க ரீதியான பதிலை நான் இந்த கேள்விக்கு எதிர்பார்க்கிறேன்.
ஊருக்கு ஊர், தந்தை பெரியாருக்கு சிலைகள் திறப்பது ஏன்? முற்போக்கு
கோணத்தில் பார்த்தால் அது வெறும் 'கல்' தானே? அதில் எப்படி 'பெரியார்'
தெரிகிறார்??
உடனே பார்ப்பன பதிவு என்று எழுதாமல், கொள்கைப்பூர்வமாக இந்த கேள்விக்கு
பதிலை வரவேற்கிறோம்.
On May 1, 11:07 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> அன்புள்ள இன்னம்புரன் அவர்களுக்கு,
>
> மிக்க நன்றி. இப்பதிவை வெளியிட்டதற்கு.
> ஒரு தவறு - அது விகடன் செய்ததா ?
> முடிக்கும் போது ஒரு குசும்பு வேலை செய்யப்பட்டுள்ளது.
> வள்ளலார் எப்போது சமாதி ஆனார் ?
> ஞான சபையினை வள்ளலார் சமாதி என்று காட்டுவது எதற்காக ?
> ஞான சபை என்பது அகத்தில் உள்ளதை புறத்தில் காட்டுவதற்காக
> வள்ளல் பெருமானாரால் ஏற்படுத்தப் பட்டது.
> இது கோவில் போன்ற வழிபாட்டு தளம் அல்ல.
> இது உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக
> அக அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக
> வள்ளல் பெருமானால் ஏற்படுத்தப் பட்டது.
> நாம் எப்பொழுதும் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பழக்கப்
> பட்டுள்ளோம். அது போன்ற சடங்குகளை விட்டு விலகியதே
> சன்மார்க்கம்.
> இதன் முடிந்த முடிபு கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் ஒன்றே.
> இங்கே ஞான சபை என்பதே நம்முள்ளே
> சிற்சபை என்பது எது?
> பொற்சபை என்பது எது ?
> ஞான சபை என்பது எது ?
> ஜோதி தரிசனம் என்பது எதற்காக ?
> திரைகள் ஏன் விளக்கப் படுகின்றன ?
> திரை விலகுவதற்கு முன்பு ஜோதியின் நிறம் என்ன ?
> திரை விலகிய பின்னர் ஜோதியின் நிறம் என்ன ?
> இது போன்ற சத் விசார கேள்விகளுக்கு
> விளக்கம் தருவதற்காக ஏற்படுத்தப் பட்டது.
> ஆகவே ஞான சபை என்பது ஞானத்தை தெரிவிப்பதற்காக
> ஏற்பட்டதே தவிர வள்ளலாரின் சமாதி என்று தவறானதை தெரிவிக்க வேண்டாம்.
> அன்புடன்
> நக்கினம் சிவம்
>
> 2010/5/1 Innamburan Innamburan <innambu...@googlemail.com>
>
>
>
> > This article is copyright of Vikatan. Thanks and Acknpwledgment.
> > Innamburan
> > வள்ளலாருக்கு ஒரு வெற்றி மாலை!
>
> > *'அ*ருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை...' என்று கருணைக் கடலாக
> > அறியப்பட்டவர் வடலூர் ராமலிங்க வள்ளலார். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
> > வாடினேன்' என்று சொன்ன வள்ளலாரை எதிர்த்து, கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் கழித்து,
> > சென்னை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு!
>
> > 150 ஆண்டுகளுக்கு முன்பும் வள்ளலாருக்கு எதிராக பிரிட்டிஷ் காலத்திலேயே
> > பிரபலமான ஒரு வழக்கு வாதாடப்பட்டது. அந்த ஃபிளாஷ்பேக் முதலில்...
>
> > ஜீவகாருண்யம், பசியாற்றுவித்தல், சாதிமத வேறு பாடின்மை, ஆன்மநேய ஒருமைப்பாடு
> > ஆகிய நான்கையும் வலியுறுத்திய வள்ள லார், சன்மார்க்க சங்கத்தை உருவாக்கி சத்திய
> > தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் ஆகியவற்றை வடலூரில் நிறுவினார்.
> > 'கடவுளை உண்மையான அன்புடன் ஒளி வடிவில் வழிபட வேண்டும்' என்பது வள்ளலாரின்
> > எண்ணம். அப்படி அவர் உருவ வழிபாட்டை மறுத்ததால், வள்ளலார் வாழ்ந்த காலத்திலேயே
> > கடும் எதிர்ப்பு கிளம்பியது.
>
> > ''அவர் எழுதியதை அருட்பாவாக ஏற்க முடியாது. தேவாரம், திருவாசகம்தான்
> > அருட்பாக்கள். இவை வெறும் மருட் பாக்கள்!'' என்று யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்
> > தலைமையிலான தீவிர சைவர்கள் கடுமையாக எதிர்த் தார்கள். ''தன்னை உணர்ந்தோர்
> > பாட்டெல்லாம் அருட்பா. மற்றதெல்லாம் மருட்பா!'' என்று இதற்கு வள்ளலார் விளக்கம்
> > அளித்தார். 'ஆறுமுக நாவலரின் பெயரைச் சொல்லி ஒரு
>
> > கூட்டத்தில் வள்ளலார் கிண்ட லடித்ததாக' கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில்
> > வழக்கு தாக்கலானது. அன்றைய தினம் வள்ளலாரே நீதிமன்றத்துக்கு நேரில் வர...
> > அப்போது வழக்குப் போட்ட ஆறுமுக நாவலரே, வள்ளலாரை எழுந்து நின்று வணங்கினார்.
> > இதைப் பார்த்த நீதிபதி, ''எதிரிகளாலும் வணங்கத்தக்க வள்ளலார் தவறாகப்
> > பேசியிருக்க மாட்டார்!'' என்று ஆங்கிலேய ஆட்சியிலேயே வழக்கைத் தள்ளுபடி
> > செய்தார்.
>
> > இந்நிலையில்தான், தற்போது சபானந்த ஒளி சிவாச் சாரியார் என்பவர் வடலூர்
> > கருவறையில் லிங்க உருவத்தைப் பிரதிஷ்டை செய்தார். இதை இந்து சமய அறநிலையத் துறை
> > ஏற்கவில்லை. 'வள்ளலார் உருவ வழிபாட்டை ஏற்காமல்... ஜோதி வழிபாட்டையே ஏற்றார்!'
> > என்பதைச் சொல்லி, 'உருவம் எதையும் வைக்கக் கூடாது' என்றது. இந்த
> > உத்தரவுகளுக்குத் தடை விதிக்கக் கேட்டுதான் சிவாச்சாரியார் சென்னை உயர் நீதிமன்
> > றத்தை அணுகினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் சந்துரு ஒரு மகத்தான
> > தீர்ப்பை அளித்திருக் கிறார்.
>
> > ''சாதிமத வேறுபாடுகளைக் கண்டித்த மாபெரும் மனிதாபிமானி வள்ளலார். 'சாதியும்
> > மதமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி' என்று அவர் பாடியதுதான்
> > 1872-ம் ஆண்டும் பிரிட்டிஷ் அரசு, சாதிக்கு எதிரான சட்டம் கொண்டுவரத்
> > தூண்டுகோலாக அமைந்தது. அப்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பஞ்சம்
> > தலைவிரித்தாடியபோது, கடலூருக்கு அருகில் அணையாத அடுப்புகளை உருவாக்கி அன்னசாலை
> > அமைத்தார். அன்று இருந்த அந்நிய ஆட்சியை எதிர்த்து, 'கருணை இலா ஆட்சி கடுகி
> > ஒழிக... அருள் நியந்த நன்மார்க்கர் ஆள்க' என்று பயமில்லாமல் பாடிய வள்ளலார்,
> > சிறந்த
>
> ...
>
> read more »
On May 1, 12:40 pm, devoo <rde...@gmail.com> wrote:
> ”தண்ணமர் மதிபோற்சாந்தந்தழைத்தசத்துவனே போற்றி
> வண்ணமாமணியே போற்றி மணிவண்ணத்தேவா போற்றி
> அண்ணலே யெவ்வுளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
> விண்ணவர் முதல்வா போற்றி வீர ராகவனே போற்றி.”
>
> ஒருமுறை அருட்பிரகாச வள்ளலார் திருத்தணிக்குச் சென்றார். அடிக்கடி அவர்
> அந்த முருகனைக் காணச் செல்வது வழக்கம். ஆனால் போகும் வழியில் இருக்கும்
> திருவள்ளூருக்குச் செல்லமாட்டார். அந்தத் தடவை திருவள்ளூரை
> நெருங்கியவுடன் தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டது. திருவள்ளூரில்
> இருக்கும் அருள்மிகு வீரராகவப் பெருமாளைத் தரிசிக்காமல் போகிறோமே என்று
> அப்போதுதான் அவர் மனதில் பட்டது.
>
> பின் அவர் அங்கு போய்ப் பிரார்த்திக்க, வயிற்றுவலி அறவே நீங்கியது. அவர்
> இந்தப் பெருமாள்மேல் "வீரராகவ பஞ்சகம்'' இயற்றியிருக்கிறார். இந்தக்
> கோயில் வாயிலில் இந்த வீரராகவ பஞ்சகம் பளிங்குப் பலகையில்
> செதுக்கப்பட்டிருக்கிறது
>
> http://www.nilacharal.com/ocms/log/01181009.asp
>
> தேவ்
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
On May 1, 2:14 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2010/5/1 devoo <rde...@gmail.com>:
>
> > ”தண்ணமர் மதிபோற்சாந்தந்தழைத்தசத்துவனே போற்றி
> > வண்ணமாமணியே போற்றி மணிவண்ணத்தேவா போற்றி
> > அண்ணலே யெவ்வுளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
> > விண்ணவர் முதல்வா போற்றி வீர ராகவனே போற்றி.”
>
> வள்ளலாரின் வாழ்வு பல திருப்பு முனைகள் கொண்டது.
> அதே போல் அவர் தனி அறைக்குள் சென்று மறைந்ததும் பேரதிசயம்.
>
> இது போன்ற சித்து பற்றி ஆர்தர் கிளார் தனது நூலின் முன்னுரையில்
> பேசுகிறார் (The mysterious world என்று நினைக்கிறேன்). எப்படிச்
> சித்தர்களால் பூத உடலைக் காற்றில் கலக்க முடிகிறது என்று. வேதியியல்
> பாடத்தில் வரும், transmutation என்று. அதாவது ஒரு தனிமனிலிருந்து
> மற்றொன்றிற்கு மாறுவது. இரசவாதம் என்பது அடிப்படையில் வேதியியல்தான்.
> இப்பிரபஞ்சம் இத்தகைய தனிம மாற்றங்களிதான் இன்று காணும் இத்தனை
> தனிமங்களாக உருப்பெற்றிருக்கிறது. நமது உடலும் ஐம்பூதச் சேர்க்கையில்
> உருவானதே. எனவே இங்கும் அம்மாறங்களை நிகழ்த்த முடியும் என்று நம்
> சித்தர்கள் காட்டியுள்ளனர். இங்கு நிகழ்வதை sublimation என்று கூடச்
> சொல்லலாம். விறகு எரிந்தால் கரிக்கட்டையாகும். கற்பூரம் எரிந்தால் ஏதும்
> மிஞ்சாது. இதை sublimation என்போம். எரியாமலே வைத்திருந்தாலும் கற்பூரம்
> காற்றில் கரைந்துவிடும்!
>
> பரஹம்ச யோகாநந்தர் அமெரிக்கா போன பிறகு அவரது குரு பூதவுடலை
> நீக்கிவிடுவார். குருவைக் கடைசி முறையாகக் காணவில்லையே என்று வருத்தம்
> யோகாநந்தருக்கு. அவர் மும்பாய் வந்திறங்கி லாட்ஜில் தங்கியிருக்கும் போது
> யுக்தேஷ்வர் தோன்றுவார். அத்தோற்றம் எப்படி இருந்தது என்று graphically
> ஆக வர்ணிப்பார் யோகாநந்தர். அவை பொன்னுருவாக, அணுக்கூட்டங்களின்
> திகள்களாக இருக்கும். யோகாநந்தர் அவ்வுடலை இறுக்கிக் கட்டிப் பிடித்துக்
> கொண்டு நீங்கள் என்னை விட்டுப் போகக்கூடாது என்பார். இப்படி அப்போது
> யுக்தேஷவர் இவருக்கு பல யோக ரகசியங்களைச் சொல்வார் (இதை சினிமாத்தனமாக
> ”பாபா” படத்தில் காணலாம்).
>
> வள்ளலார் வாழ்வில் நிகழ்ந்த இம்மாதிரி இரசாயன மாற்றத்தைப் பற்றி
> யோகாநந்தர் எழுதி வைத்தது போல் (எப்பூடகமும் இல்லாமல், எளிய தெளிவான
> மொழியில்) யாராவது எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.
>
> வள்ளலார் வாழ்வு ஆய்விற்குரியது (பல்வேறு நோக்கில்).
>
> க.>
அல்லாவைத் தவிர ஏனைய அனைத்தும் அவரால் படைக்கப்பட்டவை; ஆகவே அவரிலும்
தாழ்ந்தவை. அவரைத் தவிர வேறு எதை / எவரை வணங்கினாலும் அவருக்கு இணையான
ஒன்றைக் கற்பித்த பாவம் நேரும்.
இஸ்லாமிய மதத்தில் இணை வைப்பது தடுக்கப்பட்டுள்ளது; அதன் பெயர் ‘ஷிர்க்’;
இணை வைப்பவன் நரகில் தள்ளப்படுவான்
Within Islam, shirk is the most heinous and unforgivable crime. Allah
forgives any sin except for committing shirk.
தமிழ்நாட்டின் சுன்னத் ஜாமாஅத் தர்கா வழிபாட்டை ஏற்கிறது; ஆனால் தற்போது
தவ்ஹீத் ஜமாஅத்தின் கை ஓங்கி இருப்பதுபோல் தெரிகிறது
தேவ்