[MinTamil] வள்ளலார்

400 views
Skip to first unread message

Innamburan Innamburan

unread,
May 1, 2010, 1:27:44 AM5/1/10
to mintamil, Innamburan Innamburan
This article is copyright of Vikatan. Thanks and Acknpwledgment.
Innamburan
வள்ளலாருக்கு ஒரு வெற்றி மாலை!



'அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை...' என்று கருணைக் கடலாக அறியப்பட்டவர் வடலூர் ராமலிங்க வள்ளலார். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று சொன்ன வள்ளலாரை எதிர்த்து, கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் கழித்து, சென்னை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு!

150 ஆண்டுகளுக்கு முன்பும் வள்ளலாருக்கு எதிராக பிரிட்டிஷ் காலத்திலேயே பிரபலமான ஒரு வழக்கு வாதாடப்பட்டது. அந்த ஃபிளாஷ்பேக் முதலில்...

ஜீவகாருண்யம், பசியாற்றுவித்தல், சாதிமத வேறு பாடின்மை, ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகிய நான்கையும் வலியுறுத்திய வள்ள லார், சன்மார்க்க சங்கத்தை உருவாக்கி சத்திய தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் ஆகியவற்றை வடலூரில் நிறுவினார். 'கடவுளை உண்மையான அன்புடன் ஒளி வடிவில் வழிபட வேண்டும்' என்பது வள்ளலாரின் எண்ணம். அப்படி அவர் உருவ வழிபாட்டை மறுத்ததால், வள்ளலார் வாழ்ந்த காலத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

''அவர் எழுதியதை அருட்பாவாக ஏற்க முடியாது. தேவாரம், திருவாசகம்தான் அருட்பாக்கள். இவை வெறும் மருட் பாக்கள்!'' என்று யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் தலைமையிலான தீவிர சைவர்கள் கடுமையாக எதிர்த் தார்கள். ''தன்னை உணர்ந்தோர் பாட்டெல்லாம் அருட்பா. மற்றதெல்லாம் மருட்பா!'' என்று இதற்கு வள்ளலார் விளக்கம் அளித்தார். 'ஆறுமுக நாவலரின் பெயரைச் சொல்லி ஒரு

கூட்டத்தில் வள்ளலார் கிண்ட லடித்ததாக' கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது. அன்றைய தினம் வள்ளலாரே நீதிமன்றத்துக்கு நேரில் வர... அப்போது வழக்குப் போட்ட ஆறுமுக நாவலரே, வள்ளலாரை எழுந்து நின்று வணங்கினார். இதைப் பார்த்த நீதிபதி, ''எதிரிகளாலும் வணங்கத்தக்க வள்ளலார் தவறாகப் பேசியிருக்க மாட்டார்!'' என்று ஆங்கிலேய ஆட்சியிலேயே வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில்தான், தற்போது சபானந்த ஒளி சிவாச் சாரியார் என்பவர் வடலூர் கருவறையில் லிங்க உருவத்தைப் பிரதிஷ்டை செய்தார். இதை இந்து சமய அறநிலையத் துறை ஏற்கவில்லை. 'வள்ளலார் உருவ வழிபாட்டை ஏற்காமல்... ஜோதி வழிபாட்டையே ஏற்றார்!' என்பதைச் சொல்லி, 'உருவம் எதையும் வைக்கக் கூடாது' என்றது. இந்த உத்தரவுகளுக்குத் தடை விதிக்கக் கேட்டுதான் சிவாச்சாரியார் சென்னை உயர் நீதிமன் றத்தை அணுகினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் சந்துரு ஒரு மகத்தான தீர்ப்பை அளித்திருக் கிறார்.

''சாதிமத வேறுபாடுகளைக் கண்டித்த மாபெரும் மனிதாபிமானி வள்ளலார். 'சாதியும் மதமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி' என்று அவர் பாடியதுதான் 1872-ம் ஆண்டும் பிரிட்டிஷ் அரசு, சாதிக்கு எதிரான சட்டம் கொண்டுவரத் தூண்டுகோலாக அமைந்தது. அப்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, கடலூருக்கு அருகில் அணையாத அடுப்புகளை உருவாக்கி அன்னசாலை அமைத்தார். அன்று இருந்த அந்நிய ஆட்சியை எதிர்த்து, 'கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக... அருள் நியந்த நன்மார்க்கர் ஆள்க' என்று பயமில்லாமல் பாடிய வள்ளலார், சிறந்த மனிதாபிமானியாகவும் சாதி மதத்துக்கு எதிரானவராகவும் இருந்தார்.

அவரது ஆன்மிக எண்ணங்கள் ஜோதியை அடிப்படையாகக்கொண்டே இருக்கின்றன. 'ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி என் உளத்தே' என்று பாடி இருக்கிறார். 'சமயம் குலம் முதல் சால்பு எலாம் விடுத்த அமயம் தோன்றிய அருட்பெருஞ்சோதி' என்கிறார். இந்த ஜோதி வழிபாட்டை முன்னெடுக்கும் நோக்கத்துடன்தான், சத்திய ஞான சபை தொடங்கப்பட்டது. அதில் எப்படிப்பட்ட வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று 18.7.1872-ம் நாள் நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. ஜோதி வழிபாட்டைத் தவிர, வேறு எதற்கும் வழி கிடையாது என்று அதில் திட்ட வட்டமாகக் கூறப்பட்டுள்ளது. 'தகரப் பெட்டியில் வைத்து ஜோதியைஏற்ற வேண்டும். அது கண்ணாடியில் பிரதிபலிக்க வேண்டும். எண்ணெய் பயன்படுத்தி ஜோதியை ஏற்ற வேண்டும். ஜோதி காட்டப்படும்போது அனைவரும் மௌனமாக இருக்க வேண்டும். 'அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி' என்ற மந்திரத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும். இதில் பங்கேற்பவர்களுக்கு, வேதங்களிலோ, ஆகமங்களிலோ, புராணங்களிலோ, இதிகாசங்களிலோ, நம்பிக்கை இருக்கக் கூடாது. இதில் பங்கேற்பவர்களுக்கு, சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம் ஆகிய பிற மதங்களின் மீது நம்பிக்கை இருக்கக் கூடாது' என்று வள்ளலார் தனது நெறிமுறைகளைத் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே, லிங்கப் பிரதிஷ்டை செய்வது வள்ளலாருக்கு எதிரானதாகும்!'' என பல்வேறு ஆதாரங்களை தனது தீர்ப்பில் நீதியரசர் சந்துரு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ''வள்ளலார் மார்க்கம் விஞ்ஞான அடிப் படையில் ஆனது. புத்தருக்குப் பிறகு புதிய நன்மார்க்கத்தை அவர் உருவாக்கியவர். வள்ளலார் ஆறு திருமுறைகளை எழுதியிருக்கிறார். முதல் ஐந்து திருமுறைகளில் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொண்டாலும்... கடைசியாக ஆறாம் திருமுறையில், ஜோதி வழிபாட்டை மட்டுமே வலியுறுத்தி இருக்கிறார். இறுதிக் காலத்தில் சொன்னதையே அவரது உறுதியான வாக்காக எடுத்துக்கொள்ள வேண்டும்!'' என்று சொன்ன நீதிபதி சந்துரு, ''சைவத்தின் மீது அளப்பரிய ஈடுபாடுகொண்டு இருந்தேன். ஆனால், முழு உண்மை என்ன என்பதை உணர்ந்த பிறகு அதை விட்டுவிட்டேன். நீங்களும் அதை விட்டுவிடுங்கள். அப்போதுதான் நீங்கள் ஆன்மிகரீதியாக முன்னேறலாம். வெற்று வார்த்தைகளாலும் சடங்குகளாலும் பயன் இல்லை. அன்பு, உண்மை, கருணை ஆகியவற்றால் மட்டுமே உயர்வை அடைய முடியும்!'' என்று வள்ளலார் சுட்டிக்காட்டியதையும் குறிப்பிட்டார்.

மேலும் அவர், ''சத்திய ஞான சபையில் உருவ வழிபாட்டை நடத்துவது வள்ளலாரை அவமதிப்பதாகும். வள்ளலாரை அவரது எதிரிகள் எதற்காக எதிர்த்தார்களோ, அந்தக் காரணத்தின் மூலமாகத்தான் அவரை முழுமையாக உணர முடியும். உருவ வழிபாட்டை எதிர்ப்பதையும், சாதி மத வேற்றுமைகளை நிராகரிப்பதையும் பார்த்துத்தான் வள்ளலாருக்கு எதிர்ப்பு கிளம்பியது. எனவே, உருவங்களை வடலூரில் வைத்து வழிபடக் கூடாது!'' என்று தீர்ப்பு அளித்துள்ளார்.

வள்ளலாரின் சமாதியில் மீண்டும் ஒரு வெற்றி மாலை!

- ப.திருமாவேலன்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nakinam sivam

unread,
May 1, 2010, 2:07:15 AM5/1/10
to mint...@googlegroups.com
அன்புள்ள இன்னம்புரன் அவர்களுக்கு,

மிக்க நன்றி. இப்பதிவை வெளியிட்டதற்கு.
ஒரு தவறு - அது விகடன் செய்ததா ?
முடிக்கும் போது ஒரு குசும்பு வேலை செய்யப்பட்டுள்ளது.
வள்ளலார் எப்போது சமாதி ஆனார் ?
ஞான சபையினை வள்ளலார் சமாதி என்று காட்டுவது எதற்காக ?
ஞான சபை என்பது அகத்தில் உள்ளதை புறத்தில் காட்டுவதற்காக
வள்ளல் பெருமானாரால் ஏற்படுத்தப் பட்டது.
இது கோவில் போன்ற வழிபாட்டு தளம் அல்ல.
இது உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 
அக அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக
வள்ளல் பெருமானால் ஏற்படுத்தப் பட்டது.
நாம் எப்பொழுதும் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பழக்கப் பட்டுள்ளோம். அது போன்ற சடங்குகளை விட்டு விலகியதே
சன்மார்க்கம். 
இதன் முடிந்த முடிபு கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் ஒன்றே.
இங்கே ஞான சபை என்பதே நம்முள்ளே 
சிற்சபை என்பது எது? 
பொற்சபை என்பது எது ? 
ஞான சபை என்பது எது ?
ஜோதி தரிசனம் என்பது எதற்காக ?
திரைகள் ஏன் விளக்கப் படுகின்றன ?
திரை விலகுவதற்கு முன்பு ஜோதியின் நிறம் என்ன ?
திரை விலகிய பின்னர் ஜோதியின் நிறம் என்ன ?
இது போன்ற சத் விசார கேள்விகளுக்கு 
விளக்கம் தருவதற்காக ஏற்படுத்தப் பட்டது.
ஆகவே ஞான சபை என்பது ஞானத்தை தெரிவிப்பதற்காக 
ஏற்பட்டதே தவிர வள்ளலாரின்  சமாதி என்று தவறானதை தெரிவிக்க வேண்டாம்.
அன்புடன்
நக்கினம் சிவம்
 

2010/5/1 Innamburan Innamburan <innam...@googlemail.com>



--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

srirangammohanarangan v

unread,
May 1, 2010, 2:49:54 AM5/1/10
to mint...@googlegroups.com
அன்பரே!
 
சில விஷயங்கள் மீள்சிந்தனைக்கு உரியனவாய் இருக்கின்றன.
 
1)வள்ளலாரின் பெருமை ஜீவகாருண்யத்தை மிகச்சிறந்த ஆன்மிக நெறியாக வலியுறுத்தியதில் இருக்கிறது.
 
2)முதல் ஐந்து திருமுறைகள் சைவ சித்தாந்த ரீதியாகப் பாடிய வள்ளலார் ஏன் ஆறாம் திருமுறையை மட்டும் நேர் எதிர்கருத்துடன் பாடவேண்டும்?
 
3)தனக்கு சிவபெருமானும், முருகனும் அருள் செய்ததாகப் பாடும் ஒருவர் சிவ வழிபாடான சைவத்தை உதறிவிட்டு வெளியே வந்துவிடுங்கள் என்று கூறுவாரா?
அருட்பா மருட்பா எதிர்ப்பால் இந்தப் பின்விளைவான போக்கு தோன்றியிருக்குமா? அப்படி நாம் அந்த அருளாளர் விஷயத்தில் நினைப்பதைவிட, அவருடைய அனுதாபிகள் தங்களுக்குப் பிடித்த மகானுக்கு நேர்ந்த இடர்பாடுகளைக்கண்டு எதிர்போக்கு கொண்டு ஆற்றிய செயல்களின் வெளிப்பாடாய் அவை இருக்கலாம் அல்லவா? வள்ளலாரே எவ்வளவு தடுத்திருந்தாலும் சீறிய அன்பு கேட்காதே! 
 
4)அடுத்து வள்ளலாரின் நூல்களில் இடைச்செருகல் என்பவை இல்லையா? ஆரம்பகால பிரதிகள், கைப்பிரதிகள் அனைத்தையும் கண்டு ஆய்வுப்பதிப்பு வந்துள்ளதா? 
 
5)வாழ்வின் ஆரம்பத்தில் ஸ்ரீதர நாயக்கர் என்னும் பிரம்ம ஸமாஜி ஒருவருடன் பொது மேடையில் வேத உபநிஷதங்களைப் போற்றி, பிரம்மசமாஜக் கொள்கைகளை எதிர்த்துப் பேசினார் வள்ளலார் என்று படித்த நினைவு.  வாழ்வின் கடைசி கட்டத்தில் தாமே பிரம்மசமாஜம் போன்ற ஒரு நிலைப்பாட்டை எடுப்பாரா? 
 
--- இவை போன்ற பல விஷயங்கள் மீள் சிந்தனையின் போது தோன்றுகின்றன. விளக்கம் தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றி. நீர்விளக்கும், நீர்மையுடன் விளக்கமும் நமக்கு தெளிவு தரட்டும். 

 

devoo

unread,
May 1, 2010, 3:40:43 AM5/1/10
to மின்தமிழ்
”தண்ணமர் மதிபோற்சாந்தந்தழைத்தசத்துவனே போற்றி
வண்ணமாமணியே போற்றி மணிவண்ணத்தேவா போற்றி
அண்ணலே யெவ்வுளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
விண்ணவர் முதல்வா போற்றி வீர ராகவனே போற்றி.”

ஒருமுறை அருட்பிரகாச வள்ளலார் திருத்தணிக்குச் சென்றார். அடிக்கடி அவர்
அந்த முருகனைக் காணச் செல்வது வழக்கம். ஆனால் போகும் வழியில் இருக்கும்
திருவள்ளூருக்குச் செல்லமாட்டார். அந்தத் தடவை திருவள்ளூரை
நெருங்கியவுடன் தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டது. திருவள்ளூரில்
இருக்கும் அருள்மிகு வீரராகவப் பெருமாளைத் தரிசிக்காமல் போகிறோமே என்று
அப்போதுதான் அவர் மனதில் பட்டது.

பின் அவர் அங்கு போய்ப் பிரார்த்திக்க, வயிற்றுவலி அறவே நீங்கியது. அவர்
இந்தப் பெருமாள்மேல் "வீரராகவ பஞ்சகம்'' இயற்றியிருக்கிறார். இந்தக்
கோயில் வாயிலில் இந்த வீரராகவ பஞ்சகம் பளிங்குப் பலகையில்
செதுக்கப்பட்டிருக்கிறது

http://www.nilacharal.com/ocms/log/01181009.asp


தேவ்

N. Kannan

unread,
May 1, 2010, 5:14:38 AM5/1/10
to mint...@googlegroups.com
2010/5/1 devoo <rde...@gmail.com>:

> ”தண்ணமர் மதிபோற்சாந்தந்தழைத்தசத்துவனே போற்றி
> வண்ணமாமணியே போற்றி மணிவண்ணத்தேவா போற்றி
> அண்ணலே யெவ்வுளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
> விண்ணவர் முதல்வா போற்றி வீர ராகவனே போற்றி.”


வள்ளலாரின் வாழ்வு பல திருப்பு முனைகள் கொண்டது.
அதே போல் அவர் தனி அறைக்குள் சென்று மறைந்ததும் பேரதிசயம்.

இது போன்ற சித்து பற்றி ஆர்தர் கிளார் தனது நூலின் முன்னுரையில்
பேசுகிறார் (The mysterious world என்று நினைக்கிறேன்). எப்படிச்
சித்தர்களால் பூத உடலைக் காற்றில் கலக்க முடிகிறது என்று. வேதியியல்
பாடத்தில் வரும், transmutation என்று. அதாவது ஒரு தனிமனிலிருந்து
மற்றொன்றிற்கு மாறுவது. இரசவாதம் என்பது அடிப்படையில் வேதியியல்தான்.
இப்பிரபஞ்சம் இத்தகைய தனிம மாற்றங்களிதான் இன்று காணும் இத்தனை
தனிமங்களாக உருப்பெற்றிருக்கிறது. நமது உடலும் ஐம்பூதச் சேர்க்கையில்
உருவானதே. எனவே இங்கும் அம்மாறங்களை நிகழ்த்த முடியும் என்று நம்
சித்தர்கள் காட்டியுள்ளனர். இங்கு நிகழ்வதை sublimation என்று கூடச்
சொல்லலாம். விறகு எரிந்தால் கரிக்கட்டையாகும். கற்பூரம் எரிந்தால் ஏதும்
மிஞ்சாது. இதை sublimation என்போம். எரியாமலே வைத்திருந்தாலும் கற்பூரம்
காற்றில் கரைந்துவிடும்!

பரஹம்ச யோகாநந்தர் அமெரிக்கா போன பிறகு அவரது குரு பூதவுடலை
நீக்கிவிடுவார். குருவைக் கடைசி முறையாகக் காணவில்லையே என்று வருத்தம்
யோகாநந்தருக்கு. அவர் மும்பாய் வந்திறங்கி லாட்ஜில் தங்கியிருக்கும் போது
யுக்தேஷ்வர் தோன்றுவார். அத்தோற்றம் எப்படி இருந்தது என்று graphically
ஆக வர்ணிப்பார் யோகாநந்தர். அவை பொன்னுருவாக, அணுக்கூட்டங்களின்
திகள்களாக இருக்கும். யோகாநந்தர் அவ்வுடலை இறுக்கிக் கட்டிப் பிடித்துக்
கொண்டு நீங்கள் என்னை விட்டுப் போகக்கூடாது என்பார். இப்படி அப்போது
யுக்தேஷவர் இவருக்கு பல யோக ரகசியங்களைச் சொல்வார் (இதை சினிமாத்தனமாக
”பாபா” படத்தில் காணலாம்).

வள்ளலார் வாழ்வில் நிகழ்ந்த இம்மாதிரி இரசாயன மாற்றத்தைப் பற்றி
யோகாநந்தர் எழுதி வைத்தது போல் (எப்பூடகமும் இல்லாமல், எளிய தெளிவான
மொழியில்) யாராவது எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

வள்ளலார் வாழ்வு ஆய்விற்குரியது (பல்வேறு நோக்கில்).

க.>

Nakinam sivam

unread,
May 1, 2010, 7:40:36 AM5/1/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் ஸ்ரீரங்கம் மோகன ரங்கன் அவர்களுக்கு,

1)வள்ளலாரின் பெருமை ஜீவகாருண்யத்தை மிகச்சிறந்த ஆன்மிக நெறியாக வலியுறுத்தியதில் இருக்கிறது.

ஜீவகாருண்யம் என்பது இறைவனை அடைவதற்கான பாதையாக வள்ளலார் மட்டும் கூறவில்லை. இறை நிலை அனுபவம் வாய்த்த அனைத்து ஞானிகளுமே கூறி இருக்கிறார்கள். திருவள்ளுவர் கூட கொல்லாமை, புலால் மறுத்தல் போன்ற தலைப்புகளில்  ஜீவ காருண்யத்தை வலியுறுத்தி உள்ளார்.
சரி ஜீவ காருன்யதிற்கும் இறை நிலையை அடைவதற்கும் என்ன தொடர்பு ?
ஜீவ காருண்யம் என்பதே பிற உயிர்களுக்கு எந்த துன்பமும் செய்யாமல் இருப்பதுதான்.
ஏன் பிற உயிர்களுக்கு துன்பம் செய்யக் கூடாது என்றால்
பிற உயிர்களுக்கு செய்யும் துன்பம் நமக்கு நாமே செய்து கொள்ளும் துன்பமாகும் என்கின்ற நீதி நெறியின் அடிப்படையிலாகும்.
இது எப்படி என்றால்
இறை அனுபவம் என்பதே எல்லா உயிர்களையும் தானாக காண்பதும்.
அடுத்து தன்னை தவிர வேறு ஒன்று இல்லை என்கின்ற நிலையினை அடைவதுதான்.
இப்படி பட்ட அனுபவம் வைத்தவர்கள் மட்டுமே இறை நிலையை அடைய முடியும்.
ஆகவேதான் பிற உயிர்கள் படுகின்ற துன்பம் அனைத்தும் தான் படுவதாக ஏற்படும் அனுபவம் இறை நிலையினை அடைவதற்கு முன்னர் ஏற்படும் அனுபவமாகும்.
மேலும் இந்த உயிர்கள் அனைத்தும் வினையின் காரணமாக அது நல் வினை, தீ வினை பிறப்பெடுத்து இருக்கின்றன. ஆனால் ஆதியில் இவை அனைத்தும் ஒன்றிலிருந்து பிரிந்து உடல் எடுத்து இருக்கின்றன. 
ஆக நாம் அனைவரும் ஒன்றான  சிவத்திலிருந்து (இங்கு சிவம் என்பது சிவன் அல்ல)
பிரிந்து வந்து இந்த உடலை வினையின் காரணமாக எடுத்து இருக்கிறோம்.
சரி வினை எப்படி தோற்றியது என்றால்
முதலில் சிவம் என்பது இயக்கமற்ற (Static) நிலையில் இருந்தது.
இயக்கமற்ற நிலையில் இருந்து சலனம் தோன்றியது. 
அதுவே இயக்கமாக (Dynamic) மாறியது.
அந்த இயக்கத்தின் காரணமாக சுத்த மாயை தோன்றியது 
அடுத்து அசுத்த மாயை தோன்றியது.
அதன் காரணமாய் பிறப்பு தோன்றியது.
பிறப்பின் காரணமாய் வினை தோன்றியது.
அது நல் வினை என்றும் தீ வினை என்றும்
மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு காரணமாய் ஆனது.
இங்கே பிறப்பறுக்க வேண்டும் என்றால்
நாம் நல் வினை மற்றும் தீ வினையில் இருந்து விடு பட வேண்டும்.
அதற்கு பெயர்தான் நிர்மல நிலை அதாவது அசுத்த மாயையில் இருந்து
சுத்த மாயை நிலைக்கு உயர்தல்.
அந்த நிலையினை அடைய நமக்கு துணை செய்வதுதான் 
ஜீவகாருண்யம். 
 

 
2)முதல் ஐந்து திருமுறைகள் சைவ சித்தாந்த ரீதியாகப் பாடிய வள்ளலார் ஏன் ஆறாம் திருமுறையை மட்டும் நேர் எதிர்கருத்துடன் பாடவேண்டும்?

துவைதம் கரைந்தால் அத்வைதம். இங்கே அ + துவைதம் = அத்வைதம் எனப்படும்.
துவைதம் கடவுளை நம்மை விட்டு வெளியில் காண்பது.
அத்வைதம் என்பது கடவுளை நம்முள்ளே நாமாக காண்பது.
வள்ளல் பெருமான் 
தியானிக்கும் போது நிஷ்கலமாக தியானிக்க கூடாது என்று கூறி இருக்கிறார்கள்.
எதாவது பொருளை வைத்து தியானிக்கும் போது 
உருவம் கரைந்து அருவமாக மாறும்.
இது எல்லா ஞானிகளுக்கும் ஏற்பட்ட அனுபவம்.
இந்த அருவ நிலை வாய்க்கும் வரை உருவ வழிபாடு தேவைபடுகிறது.
உருவ  நிலை மாறி அருவ நிலை வாய்க்க இது 12 ஆண்டுகள். 
கூடுமானவரை இந்த கால கட்டம் எல்லா ஞானிகளுக்கும் பொதுவானதாகவே இருக்கிறது.
வள்ளல் பெருமானும் அருவ நிலை வைத்த உடன் உருவ வழிபாட்டிற்கு 
முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்.
இருப்பினும் நிஷ்கலமாக தியானிக்க கூடாது என்பதனால் 
விளக்கினை வைத்து அதன் தீபத்தை உற்று நோக்கி 
நமது புருவ மத்தியத்தில் ஜோதி ஒளிர்வதாக பழக்கப் படுத்த சொன்னார்கள்.
காரணம் 
உருவம் கரைந்து அருவம் வாய்க்கும் போது ஜோதி தரிசனமே வாய்க்கும்.
ஆக உருவம் கரைவதற்கான காலம் குறைவாகும்.
இந்த ஜோதி தரிசனம் அனைத்து க்ன்னநிகளுக்கும் பொதுவான அனுபவமாகத்தான் இருக்கிறது.
அடுத்த மூன்றுக்கும் அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன்.

 
3)தனக்கு சிவபெருமானும், முருகனும் அருள் செய்ததாகப் பாடும் ஒருவர் சிவ வழிபாடான சைவத்தை உதறிவிட்டு வெளியே வந்துவிடுங்கள் என்று கூறுவாரா?
அருட்பா மருட்பா எதிர்ப்பால் இந்தப் பின்விளைவான போக்கு தோன்றியிருக்குமா? அப்படி நாம் அந்த அருளாளர் விஷயத்தில் நினைப்பதைவிட, அவருடைய அனுதாபிகள் தங்களுக்குப் பிடித்த மகானுக்கு நேர்ந்த இடர்பாடுகளைக்கண்டு எதிர்போக்கு கொண்டு ஆற்றிய செயல்களின் வெளிப்பாடாய் அவை இருக்கலாம் அல்லவா? வள்ளலாரே எவ்வளவு தடுத்திருந்தாலும் சீறிய அன்பு கேட்காதே! 
 
4)அடுத்து வள்ளலாரின் நூல்களில் இடைச்செருகல் என்பவை இல்லையா? ஆரம்பகால பிரதிகள், கைப்பிரதிகள் அனைத்தையும் கண்டு ஆய்வுப்பதிப்பு வந்துள்ளதா? 
 
5)வாழ்வின் ஆரம்பத்தில் ஸ்ரீதர நாயக்கர் என்னும் பிரம்ம ஸமாஜி ஒருவருடன் பொது மேடையில் வேத உபநிஷதங்களைப் போற்றி, பிரம்மசமாஜக் கொள்கைகளை எதிர்த்துப் பேசினார் வள்ளலார் என்று படித்த நினைவு.  வாழ்வின் கடைசி கட்டத்தில் தாமே பிரம்மசமாஜம் போன்ற ஒரு நிலைப்பாட்டை எடுப்பாரா? 

அன்புடன் 

நக்கினம் சிவம்



2010/5/1 N. Kannan <navan...@gmail.com>

--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

Subashini Tremmel

unread,
May 2, 2010, 2:50:55 AM5/2/10
to mint...@googlegroups.com


2010/5/1 Nakinam sivam nak...@gmail.com

 
சரி ஜீவ காருன்யதிற்கும் இறை நிலையை அடைவதற்கும் என்ன தொடர்பு ?
ஜீவ காருண்யம் என்பதே பிற உயிர்களுக்கு எந்த துன்பமும் செய்யாமல் இருப்பதுதான்.
ஏன் பிற உயிர்களுக்கு துன்பம் செய்யக் கூடாது என்றால்
பிற உயிர்களுக்கு செய்யும் துன்பம் நமக்கு நாமே செய்து கொள்ளும் துன்பமாகும் என்கின்ற நீதி நெறியின் அடிப்படையிலாகும்.
 
அருமை.
-சுபா

Nakinam sivam

unread,
May 2, 2010, 4:07:30 AM5/2/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் ஸ்ரீரங்கம் மோகன ரங்கன் அவர்களுக்கு

அடுத்த மூன்றிற்கு கீழே விளக்கம் அளித்துள்ளேன்.

3)தனக்கு சிவபெருமானும், முருகனும் அருள் செய்ததாகப் பாடும் ஒருவர் சிவ வழிபாடான சைவத்தை உதறிவிட்டு வெளியே வந்துவிடுங்கள் என்று கூறுவாரா?
அருட்பா மருட்பா எதிர்ப்பால் இந்தப் பின்விளைவான போக்கு தோன்றியிருக்குமா? அப்படி நாம் அந்த அருளாளர் விஷயத்தில் நினைப்பதைவிட, அவருடைய அனுதாபிகள் தங்களுக்குப் பிடித்த மகானுக்கு நேர்ந்த இடர்பாடுகளைக்கண்டு எதிர்போக்கு கொண்டு ஆற்றிய செயல்களின் வெளிப்பாடாய் அவை இருக்கலாம் அல்லவா? வள்ளலாரே எவ்வளவு தடுத்திருந்தாலும் சீறிய அன்பு கேட்காதே! 

சைவ சமயத்தின் உச்சமே உருவத்தை விட்டு விலகி அருவத்தில் கரைவதுதான். இதை நீங்கள் நாயன்மார்கள் பாடல்கள் அனைத்திலும் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக திருவாசகத்தில் உருவம் கரிந்து அருவ நிலை சிறப்பாக விளக்கப் பட்டுள்ளது.

இது புரிய வேண்டும் என்றால்
மார்க்கங்கள் நான்கும் புரிய வேண்டும்.
நான்கு மார்க்கங்கள் ஆவன
சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் 
ஆக நான்கு உள்ளன.

சற்புத்திர மார்க்கம் என்றால் இறைவனை தந்தையாகவும் 
நம்மை அவரது பிள்ளையாகவும் பாவித்து இறைவனை தொழுவது.
இது ஒரு விதத்தில் ஏசு பெருமான் திரு ஞான சம்பந்தர், அப்பர் போன்றவர்கள் 
தொழுத முறை.

தாச மார்க்கம் என்பது இறைவனை ஆசிரியராகவும் நம்மை 
அவரது சீடனாகவும் பாவித்து இறைவனிடம் கேள்வி கேட்டு பதிலை பெருகின்றதும் அதன் மூலம் கனத்தை அடைய முயற்சிப்பதும் ஆகும்.
மாணிக்க வாசக பெருமான் இந்த முறையிலேயே இறைவனை கண்டார்.

சக மார்க்கம் என்பது இறைவனை நமது தோழனாக காண்பது.
இறைவனிடம் அதிக உரிமை எடுத்துகொண்டு இறை அறிவை பெறுவது.
இதை ஓரளவு மகா பாரதத்தில் அர்ஜுனன் கண்ணனிடம் கொண்ட நட்பை போல என்று சொல்லலாம்.

அடுத்து சன்மார்க்கம் என்பது இறைவனை தானாக காண்பது.
இங்குதான் ஒருமை என்பது தோன்றுகிறது.
இங்கு ஒன்றை தவிர வேறு இல்லை என்று உணர்படுகிறது.
இதற்கு தான் ஜீவ ஐக்கியம் என்று பெயர்.

சன்மார்க்கம் தவிர்த்த மூன்றும் இறைவனை வேறாக காண்பதனால் இதை துவைதம் என்று அழைக்கலாம்.
சன்மார்க்கம் ஒன்றில் மட்டுமே இறைவனும் தானும் ஒன்றாகும் தன்மை ஏற்படுவதனால் இதை அத்வைதம் என்று அழைக்கலாம்.

அடுத்து வள்ளல் பெருமானார் அனைத்து உயிர்களையும் தானாக காணும் பக்குவம் பெற்ற காரணத்தால் இந்த அருட்பா, மருட்பா விவகாரத்தை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
ஏனென்றால் ஒருமை பெற்ற ஒருவருக்கு 
எதிர்பவரும், எதிர்க்கப் பட்ட நபரும் ஒன்றாகவே தெரியும்.
இங்கே எதிர்ப்பவர் யார் ? எதிர்க்கப் படும் நபர் யார் ? 
அனைத்தும் ஒன்று தானே ?

இங்கே அருட்பா, மருத்பாவை பற்றி எழுத வேண்டும் என்றால் அது மிக பெரிய கட்டுரையாக மாறி விடும். ஆகவே சுருக்கமாக கூறுகிறேன்.
சைவ சமயத்தின் மீதும் சைவ சித்தாந்தங்களின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இலங்கையை சேர்ந்த கொழும்பு ஆறுமுக நாவலர்.
இவர் மிகுந்த சைவ மத பற்றாளர். ( இவர்தான் பைபிளை தமிழில் மொழி பெயர்த்தார்). இவர் சைவ சமத்திற்கு தொண்டு செய்ய வேண்டும் என்று சிதம்பரத்தில் தங்கி பல நூல்களை எழுதி வந்தார். 
இந்த கால கட்டத்தில் வள்ளலார் எழுதிய திரு அருட்பா பாடல்கள் சைவ சமயம் சார்ந்தவர்களால் ஏற்றுகொள்ளபட்டு பாடல்களாக பாடப்பட்டு வந்தன.
சைவ திரு முறைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ஆறுமுக நாவலரிடம் 
வள்ளலாரை பற்றி தவறான கருத்துக்களை கூறி அவரை வள்ளலாருக்கு எதிராக ஒரு சிலர் தூண்டி விட்டனர். உண்மையை உணராத ஆறுமுக நாவலர் ஒரு சிலரின் தூண்டுதலால் வழக்காடு மன்றம் வரை சென்று பின்னர் தோற்று 
அவரின் புகழை இழந்தார்.

ஆக வள்ளல் பெருமானும் முதல் மூன்று மார்க்கங்களான  
சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம், சக மார்க்கம்
என மூன்று நிலைகளில் இருக்கும் வரை முருகன், சிவன் என வழிபாடு முறையினை வைத்திருந்தார். 

அடுத்த நிலையான சன்மார்க்கம் நிலை வரும்போது அனைத்தையும் விட்டு விலகி ஜோதி நிலையினை உணர்ந்த காரனத்தால் இறைவன் உருவம் அற்றவன் என்று ஜோதி வடிவானவன் என்று அனைவருக்கும் எடுத்து கூறினார்.
இது அவரது ஆறாம் திருமுறை பாடல்கள் அனைத்திலும் ஜோதி வழிபாடே 
அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் நிலையினை விளக்கி உள்ளார். (முதல் ஐந்து திருமுறையிலும் உருவ வழிபாடே உள்ளது)

அவர் உயர்ந்த அருளாளர் என்பதனால் அவரது கருத்துக்கள் என்ன என்பது அவர் கைப்பட எழுதிய பாடல்களில் உள்ளதனால் வேறு யாரும் அவர் கருத்தினை மாற்ற முடியாது. அவரது கைப்படவே வாழ்வியல் முதல் கண்ணன் நிலை வரை அனைத்து நிலைகளையும் எழுதி வைத்துள்ளார்.
  


4)அடுத்து வள்ளலாரின் நூல்களில் இடைச்செருகல் என்பவை இல்லையா? ஆரம்பகால பிரதிகள், கைப்பிரதிகள் அனைத்தையும் கண்டு ஆய்வுப்பதிப்பு வந்துள்ளதா? 

இன்றைக்கும் அவரது கைப்பிரதி தரும சாலையில் உள்ளது.
இந்த தரும சாலை என்பது வடலூர் ஞான சபை அருகில் உள்ளது.
ஆகவே யாரும் இடை செருகல் செய்ய முடியாது.
மேலும் அவர் இதற்கு அடுத்த நிலையினையும் எழுதியதாகவும்.
பக்குவப்பட்டவர்கள் இல்லாத காரணத்தால் அவை வெளிப்பட வில்லை என்றும் தெரிகிறது. 
 
5)வாழ்வின் ஆரம்பத்தில் ஸ்ரீதர நாயக்கர் என்னும் பிரம்ம ஸமாஜி ஒருவருடன் பொது மேடையில் வேத உபநிஷதங்களைப் போற்றி, பிரம்மசமாஜக் கொள்கைகளை எதிர்த்துப் பேசினார் வள்ளலார் என்று படித்த நினைவு.  வாழ்வின் கடைசி கட்டத்தில் தாமே பிரம்மசமாஜம் போன்ற ஒரு நிலைப்பாட்டை எடுப்பாரா? 

இந்த நிகழ்ச்சி கடலூரில் நடந்தது. இது அவரது ஆரம்ப காலத்தில் நடந்தது அல்ல.
முதலில் பிரம்மம சமாசத்தின் கொள்கை என்ன என்றால் நான் பிரம்மம் என்னை தவிர வேறு இல்லை என்பதுதான்.
ஆனால் இந்த நிலையினை அடைவதற்கு வழி என்ன.
வெறும் வாயால் நான் பிரம்மம் என்று சொன்னால் அந்த நிலையினை அடைந்ததாக ஆகி விடுமா ?
இந்த விவாதத்தில்  வள்ளல் பெருமானை ஏற்றி விட்டவர்கள் ஒரு சில தீட்சிதர்கள். அவர்களுக்கு ஆதரவாகவே உருவ வழுபாட்டை பற்றி வள்ளல் பெருமான் கூறினார்கள்.
அதாவது நான் பிரம்மம் என்ற நிலை வர வேண்டும் என்றால் நான்  என்கின்ற நிலை போய் நிஷ்கலமாக மாற வேண்டும்.
இந்த நிஷ்கல நிலை என்பது வாயால் சொல்வது அல்ல. இது அனுபவம்.
(ஒரு சிலர் ரமண  மகரிஷியின் அனுபவத்தை படித்து விட்டு உலகியலில் அனைத்து காரியத்தையும் செய்து கொண்டு அந்த நிலையினை அடைந்து விட்டதை போன்று  பேசுவது போல் அல்ல).
நான் பிரம்மம் என்னும் இந்த அனுபவம் வைக்க வேண்டும் என்றால் 
உருவம் கரைந்து  அருவமாக மாற வேண்டும். 
இங்கே நான் என்கின்ற உணர்வு அற்றால் தான் இந்த நிலை வாய்க்கும்.
இங்கே நான் பிரம்ம்மம் என்று சொலதேல்லாம் வெறும் பேச்சளவில்தான்.
எப்படி என்றால்
நான் பிரம்மம் என்று சொல்லக் கூடிய உணர்வு மீதம் இருப்பதனால் 
இங்கே ஜீவ ஐக்கியம் என்பது ஏற்படவில்லை 
ஜீவ ஐக்கியம் ஏறபடவில்லை என்றால் அது ஜீவன் வேறாகவும் 
இறைவன் வேறாகவும் காண்கின்ற நிலை உள்ளது.
இரவினை வேராக காண்கின்ற நிலை இருக்கும் வரை நான் பிரம்மம் என்று சொல்வது வெறும் பேச்சளவாக தான் இருக்கும்.
ஆகவேதான் இந்த அனுபவம் வைக்க வேண்டும் என்றால்
முதலில் உருவ வழிபாட்டை உணர்ந்து அது கரைந்து அருவ நிலையினை அடைய வேண்டும் என்று வாதிட்டார்கள்.
இந்த வாதத்திற்கு எதிர் வாதம் செய்ய முடியாத ஸ்ரீதர நாயக்கர் 
விவாதத்தை விட்டு வெளியேறினார்.
வள்ளல் பெருமான் பிரம்மம சமாஜ கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தார் என்பதை விட பிரம்மத்தை எப்படி உணரலாம் என்று கருத்தை தெரிவித்தார் என்பதே உண்மை. அதற்கான படியாக உருவ வழிபாடு இருக்கும் என்றே கூறினார். அதற்காக உருவ வழ்பாட்டின் மூலம் இறை நிலையை அடைய முடியும் எட்று கூற வில்லை.

அன்புடன்
நக்கினம் சிவம்
 
 

 

2010/5/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

சிவ அறிவொளியன்

unread,
May 2, 2010, 3:06:50 PM5/2/10
to மின்தமிழ்

அன்பின் நக்கினம் சிவம்,
மிகவும் சரியாகச் சொன்னீர்கள்!
நல்ல இடுகை. நன்றி!!
.


> அடுத்த மூன்றிற்கு கீழே விளக்கம் அளித்துள்ளேன்.

> சைவ சமயத்தின் உச்சமே உருவத்தை விட்டு விலகி அருவத்தில் கரைவதுதான். இதை
> நீங்கள் நாயன்மார்கள் பாடல்கள் அனைத்திலும் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக
> திருவாசகத்தில் உருவம் கரிந்து அருவ நிலை சிறப்பாக விளக்கப் பட்டுள்ளது.
>

25 தத்துவங்களோடு நின்று விட்டவர்களுக்கு, எங்கே 36 தத்துவங்களும், 96
தத்துவங்களும் புரியப் போகிறது?!

சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிசூழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய் பங்கயத் தயனுமா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந்துறையில் நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என் றரு ளாயே. - திருவாசகம்

திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருநாமம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
*ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்* காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. - திருவாசகம்

> அடுத்து சன்மார்க்கம் என்பது இறைவனை தானாக காண்பது.
> இங்குதான் ஒருமை என்பது தோன்றுகிறது.
> இங்கு ஒன்றை தவிர வேறு இல்லை என்று உணர்படுகிறது.
> இதற்கு தான் ஜீவ ஐக்கியம் என்று பெயர்.
>


*ஒருமையுடன்* நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை பேசா திருக்க்வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய் பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.


> ஆக வள்ளல் பெருமானும் முதல் மூன்று மார்க்கங்களான
> சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம், சக மார்க்கம்
> என மூன்று நிலைகளில் இருக்கும் வரை முருகன், சிவன் என வழிபாடு முறையினை
> வைத்திருந்தார்.

எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும் ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை இகழ்விற கெடுக்கும்தலை
கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண் கலநீர் சொரிந்தஅழுகண்
கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி கைத்திழவு கேட்கும்செவி
பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம் பகீர்என நடுங்கும்நெஞ்சம்
பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை பலிஏற்க நீள்கொடுங்கை
சந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே. -திருஅருட்பா,
முதல் திருமுறை, தெய்வமணி மாலை

>
> அடுத்த நிலையான சன்மார்க்கம் நிலை வரும்போது அனைத்தையும் விட்டு விலகி ஜோதி
> நிலையினை உணர்ந்த காரனத்தால் இறைவன் உருவம் அற்றவன் என்று ஜோதி வடிவானவன் என்று
> அனைவருக்கும் எடுத்து கூறினார்.
> இது அவரது ஆறாம் திருமுறை பாடல்கள் அனைத்திலும் ஜோதி வழிபாடே
> அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் நிலையினை விளக்கி உள்ளார். (முதல் ஐந்து
> திருமுறையிலும் உருவ வழிபாடே உள்ளது)
>

சிவன் - சிவம் இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாதவர்களுக்கு எங்கே ஐயா
இதெல்லாம் புரியப் போகிறது!

திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே. - திருஅருட்பா,


ஆறாம் திருமுறை

அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்
அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்
பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்
பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்
இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்
எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்
சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர். - திருஅருட்பா,


ஆறாம் திருமுறை

> 5)வாழ்வின் ஆரம்பத்தில் ஸ்ரீதர நாயக்கர் என்னும் பிரம்ம ஸமாஜி ஒருவருடன் பொது

சொல்லிக் கொடுக்க யாருமில்லை.
“ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்”

நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை நன்மைதீ மைகளும் இல்லை
நவில்கின்ற வாகிஆந் தரம்இரண்டினும்ஒன்ற நடுநின்ற தென்றுவீணாள்
போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே போதிப்பர் சாதிப்பர்தாம்
புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று போந்திடில் போகவிடுவார்
சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு தாம்புபாம் பெனும்அறிவுகாண்
சத்துவ அகண்டபரிபூரண காரஉப சாந்தசிவ சிற்பிரம நீ
தாம்பிரிவில் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே. - திருஅருட்பா,
முதல் திருமுறை, தெய்வமணி மாலை

ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு

V, Dhivakar

unread,
May 3, 2010, 1:50:38 AM5/3/10
to mint...@googlegroups.com
அன்பின் சிவம்!

உங்கள் விளக்கம் மிக நன்றாக உள்ளது. வள்ளலாரின் முதல் ஐந்து திருமுறைகள் அத்தனையும் படித்து பொருள் புரிந்து விளங்கிக் கொண்டால்தான் ஆறாம் திருமுறையே சரியான முறையில் தெளியப்படும் என்ற உங்களின் கருத்து பல பெரியவர்கள் மூலமும் கேள்விப்பட்டுள்ளேன். படிப்படியான வழியைக் காட்டி நம்மைக் கடையேற்றும் பாடல்கள். 

ஒருமையுடன் உனை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும், உண்மை பேச வேண்டும், பொய்மை பேசாதிருக்கவேண்டும் என்பனவைகளை முதலிலேயேப் பாடிவிட்டதை ஏன் ஒதுக்கவேண்டும்? முருகனும் சிவனும் வள்ளலாரை வழிநடத்திச் சென்ற பாடல்கள் அல்லவா அவை?

ஆறுமுக நாவலர் பற்றிய பல தெளிவான புத்தகங்கள் தற்சமயம் வந்துள்ளன. நாவலர் கோர்ட்டுக்கு சென்றதும் உண்மை, கோர்ட்டில் வள்ளலாரின் பிரகாசம் பார்த்து ஏதும் வாதாடாமல் திரும்பிவந்ததும் உண்மைதான். நாவலரின் இந்த அரிய பண்பை வள்ளலார் சிலாகித்ததாக ஊரன் அடிகளின் புத்தகம் கூறுகிறது.

பெரியோர்கள் என்றும் பெரியோர்களே என்ற விதத்தில் மட்டுமே இந்த விவகாரம் பார்க்கக்கூடியதே தவிர வேறெந்த நோக்கிலும் பார்ப்பதற்கு இதில் ஒன்றுமில்லை என்ற கருத்தை மட்டுமே இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

மற்றபடி அரிய கருத்துகளை எளியவகையில் சொல்லி வ்ருகிறீர்கள்!

அன்புடன்
திவாகர்

2010/5/2 Nakinam sivam <nak...@gmail.com>

srirangammohanarangan v

unread,
May 3, 2010, 2:46:14 AM5/3/10
to mint...@googlegroups.com
அன்பருக்கு,
 
என்னுடைய மீள் சிந்தனைகளை முகாந்திரமாக வைத்து நீங்கள் செய்த பிரசங்கமும், பின்னணியாக சிவ அறிவொளியின் திட்டல்களும் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
 
ஆனால் நீங்கள் கூறியிருப்பன சைவ சித்தாந்த சாஸ்திரங்களுக்குச் சற்றும் பொருந்தாதனவாக இருக்கின்றன -- சாத்திரக் கருத்துக்களைப் பொறுத்தவரையில்.
 
வள்ளலார் சம்பந்தப்பட்ட வரையில் ஒன்றிரண்டு கூடுதல் தகவல்கள் என்பதற்கு மேல் உங்கள் எழுத்தில் வேறு பயன் இல்லை.
 
எனவே தாங்கள் மிகவும் சிரமப் பட வேண்டாம். அறிந்தவர்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
 
முயற்சிக்கு மிகவும் நன்றி.
 
***

Hari Krishnan

unread,
May 3, 2010, 2:53:43 AM5/3/10
to mint...@googlegroups.com


2010/5/3 srirangammohanarangan v <ranga...@gmail.com>
அன்பருக்கு,
 

எனவே தாங்கள் மிகவும் சிரமப் பட வேண்டாம். அறிந்தவர்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

தத்வ நாற்பத் தெட்டு நாற்பத் தெட்டு மேவி திடமேவும்
தர்க்க சாத்ர தக்க மார்க்க சத்ய வாக்யப் பெருமாளே

என்பது என்னுடைய அன்றாட வழிபாட்டுக்குப் பயன்படும் திருப்புகழ்.  48ம் 48ம் கூட்டினா 96 என்பது கூடவா தெரியாம போயிடும் எங்களுக்கு?  96 தத்துவங்களை கிருபாநந்த வாரியார் உரை போதுமான அளவுக்கு விளக்கியிருக்கிறது.  

ரொம்ப கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு விளக்க முயல்வதற்கு நன்றி என்று நானும் தெரிவித்துக்கொள்கிறேன்.  கஷ்டப் படாதீங்க.  மத்தவங்க நிறைய பேர் இருக்காங்க.  மடையர்களிடம் போய் உங்களுடைய பொன்னான நேரத்தை வீணடிப்பானேன்....

வாழ்க.  


--
அன்புடன்,
ஹரிகி.

Madhurabharathi

unread,
May 3, 2010, 2:57:02 AM5/3/10
to mint...@googlegroups.com

2010/5/3 Hari Krishnan <hari.har...@gmail.com>



2010/5/3 srirangammohanarangan v <ranga...@gmail.com>
அன்பருக்கு,
 

எனவே தாங்கள் மிகவும் சிரமப் பட வேண்டாம். அறிந்தவர்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

தத்வ நாற்பத் தெட்டு நாற்பத் தெட்டு மேவி திடமேவும்
தர்க்க சாத்ர தக்க மார்க்க சத்ய வாக்யப் பெருமாளே

என்பது என்னுடைய அன்றாட வழிபாட்டுக்குப் பயன்படும் திருப்புகழ்.  48ம் 48ம் கூட்டினா 96 என்பது கூடவா தெரியாம போயிடும் எங்களுக்கு?  96 தத்துவங்களை கிருபாநந்த வாரியார் உரை போதுமான அளவுக்கு விளக்கியிருக்கிறது.
 
ரொம்பத்தான் புரிஞ்சுது போங்க. ரெண்டுதடவை சொன்னப்புறம்தான் உங்களால் கவனிக்கவே முடிஞ்சிருக்குது. அப்படியிருக்க புரியுதாமே, புரியுது. ம்க்கூம் :-)
 
அன்புடன்
மதுரபாரதி
 
 

Nakinam sivam

unread,
May 3, 2010, 3:47:22 AM5/3/10
to mint...@googlegroups.com
அன்பு சிவ அறிவொளியன் அவர்களுக்கு,

சைவ சமயத்தின் அனைத்து பாடல்களும் அத்துபடியாக  வைத்திருக்கிறீர்கள். மேலும் அருட்பாவின் பாடல்களை பொருளுடன் அறிந்திருக்கிறீர்கள். 
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
பாவம் ஒரு சிலருக்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்று 
புரிந்து கொள்ள முடியா விட்டாலும் 
எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக காட்டிக் கொள்வதற்கு தயங்குவது கிடையாது.
தத்தக்கா பித்தக்கா என்று நான்கு வரி எழுதி விட்டு 
அதை புகழ 
அருளி செயல் - புரளி வயல்
என்று ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு 
என்ன பிழைப்பு.
சேற்றை தண்ணீர் என நினைப்பவர்களிடம் 
தண்ணீரில்  நீந்த கற்று கொடுப்பது தவறுதான்.
நமது இந்து சமயத்தை மீள் சிந்தனைக்கு ஆட்படுத்தினால்
அதன் ஆழ் கருத்துக்கள் மட்டுமே நிலைத்து நிற்கும்.
மற்ற மேலோட்டமான கருத்துக்கள் அனைத்தும் 
அசூசையாகவே  முடியும்.
ஆனால் நம்மவர்கள் ஆழ் கருத்துக்களுக்கு போக தயாரில்லை.
உண்மை  எப்போதும் சுடும்.
அன்புடன்
நக்கினம் சிவம்
 



2010/5/3 சிவ அறிவொளியன் <ariv...@gmail.com>

--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

Nakinam sivam

unread,
May 3, 2010, 7:15:52 AM5/3/10
to mint...@googlegroups.com
அன்புள்ள சீரங்கம் மோகன் மற்றும் ஹரிகி அவர்களுக்கு,

நீங்கள் எதிர்பார்த்த பதில் வரவில்லையோ ?
ஆதலினால்தான் இது பிரசங்கமாக மாறி போனதோ ?
தத்துவம் 96 ஐயும் உங்களுக்கு தெரிந்த வரை விளக்குங்களேன்
நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.
அல்லது சைவ சித்தாந்தத்தயாவது விளக்குங்களேன் 
நாங்கள் கை மூடி வாய் பொதி கேட்டுக் கொள்கிறோம்.
நீங்கள் வள்ளலாரை மீள் சிந்தனைக்கு உடபடுத்தியது போல
நமது இந்து சமயத்தில் உள்ள ராமாயணம், மகாபாரதம் 
தசாவதாரம் போன்றவற்றை கொண்டு வர முடியுமா ?
நமது சடங்குகளை மீள் சிந்தனைக்கு உட்படுத்த முடியுமா ?

நாம் ஒன்றில் நின்று கொண்டு
அதுதான் உண்மை என்று நினைத்துக் கொண்டு
அந்த உண்மை ? தான் எல்லா இடத்திலிருந்தும் வர வேண்டும் 
என்று நினைத்தால் அது ஏமாற்றத்தையே தரும்.

அன்புடன்
நக்கினம் சிவம்
 

2010/5/3 Nakinam sivam <nak...@gmail.com>

srirangammohanarangan v

unread,
May 3, 2010, 7:23:32 AM5/3/10
to mint...@googlegroups.com
ஐயா!  நான் வல்லையா விளையாட்டுக்கு:--)))) 
பிரமாதமா சொல்ரீங்க  ஆளைவிடுங்க :--)))

 
On 5/3/10, Nakinam sivam <nak...@gmail.com> wrote:
அன்புள்ள சீரங்கம் மோகன் மற்றும் ஹரிகி அவர்களுக்கு,

 

--

N. Kannan

unread,
May 3, 2010, 8:04:35 AM5/3/10
to mint...@googlegroups.com
அன்பின் நக்கினம் சிவன்:

அமைதி காக்க!

தாங்கள் வள்ளலார் பற்றியும், சைவ சித்தாந்தம் பற்றியும் மிக அழகாக எளிய
முறையில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் விளக்கி வருகிறீர்கள்.

ஒரு விளக்கமோ, கருத்தோ முன் வைக்கும் போது, சங்க கால பழக்கமாக அதை உரசிப்
பார்ப்பது புலவர் செயல்தானே? யாரை விட்டார்கள் சங்கப் புலவர்கள்?
நம்மாழ்வார் திருநாடு எய்த பின்னும் அவரது திருவாய்மொழியை உடனே
ஏற்றுக்கொள்ளவில்லையே? புனல்வாதம் வைத்தார்களே?

எனவே நாம் இங்கு கருத்து விளக்கம், தெளிவு, மீண்டும் கேள்விகள்,
விளக்கம், புரிதல் என்று கூட்டாகச் சேர்ந்து இயங்குவோம். நமக்குள்
பிரிவினை எதற்கு?

இங்கு யாரும் வாய் பொத்தி, கை கட்டி கேட்க வேண்டிய தேவை இல்லை, இல்லையா?
நாமென்ன மடமா நடத்துகிறோம்? :-))

மேலும் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ? என்ற நிலையில் இங்கு
உள்ளோரின் பட்ட அறிவின் ஆழம் எவ்வளவு என்று எப்படிக் கணக்கிட முடியும்?

அரங்கனார் ஏதோ சொல்ல வருகிறார் என்று தோன்றுகிறது. அவர் கொஞ்ச காலமாக
சிவஞான முனிவர் அருளிய மாபாடிகத்தைக் குடைந்து கொண்டிருப்பதாக கேள்வி ;-)
உங்களை சாக்காக வைத்து ஏதாவது சொல்ல வரலாம். அது உங்களை தாழ்த்தவோ இல்லை
வள்ளலாரை மீள்பார்வை செய்யவோ இல்லாமலும் இருக்கலாம். வள்ளலாரின்
வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்ள எவ்வளவு உள்ளது? சமீபத்தில் ஒரு
நண்பர் சொன்னது போல் அவர் வழக்கில் இருந்து கூட அவர் பெருமையே
புலனாகிறது. எனவே அரங்கனாரின் பார்வையில் வள்ளலார் ஏன் சைவத்தைக்
கைவிட்டார் என்பதற்கு ஏதாவது துப்புக் கிடைக்கலாம்?

ஹரிகி அருணகிரியை உருட்டிப்புரட்டுபவர். அருணகிரியின் வாயிலாக சைவ
சித்தாந்தம் எப்படி ஊற்றெடுக்கிறது எனக்காணலாம்.

நாமெல்லாம் எதிர், எதிர் அணிகளே அல்ல. இவ்வளவு ஆர்வத்துடன் ஆன்மீக
விஷயங்களில் பங்கேற்பதிலிருந்தே தெரியவில்லையா நமது ஆர்வம்?

அரங்கனாரும், ஹரிகியும் இன்னும் மென்மையாக சொல்லிப் பாருங்களேன். இனிய
உளவாக இன்னாது ஏன் கூற வேண்டும். நமக்குத்தேவை ஆன்மீகக்கனிதானே!!

நன்றியுடன்
நா.கண்ணன்

2010/5/3 Nakinam sivam <nak...@gmail.com>:
> அன்புள்ள சீரங்கம் மோகன் மற்றும் ஹரிகி அவர்களுக்கு,
> நீங்கள் எதிர்பார்த்த பதில் வரவில்லையோ ?
> ஆதலினால்தான் இது பிரசங்கமாக மாறி போனதோ ?
> தத்துவம் 96 ஐயும் உங்களுக்கு தெரிந்த வரை விளக்குங்களேன்
> நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.
> அல்லது சைவ சித்தாந்தத்தயாவது விளக்குங்களேன்
> நாங்கள் கை மூடி வாய் பொதி கேட்டுக் கொள்கிறோம்.
> நீங்கள் வள்ளலாரை மீள் சிந்தனைக்கு உடபடுத்தியது போல
> நமது இந்து சமயத்தில் உள்ள ராமாயணம், மகாபாரதம்
> தசாவதாரம் போன்றவற்றை கொண்டு வர முடியுமா ?
> நமது சடங்குகளை மீள் சிந்தனைக்கு உட்படுத்த முடியுமா ?
> நாம் ஒன்றில் நின்று கொண்டு
> அதுதான் உண்மை என்று நினைத்துக் கொண்டு
> அந்த உண்மை ? தான் எல்லா இடத்திலிருந்தும் வர வேண்டும்
> என்று நினைத்தால் அது ஏமாற்றத்தையே தரும்.
> அன்புடன்
> நக்கினம் சிவம்

srirangammohanarangan v

unread,
May 3, 2010, 8:12:47 AM5/3/10
to mint...@googlegroups.com
>> நமக்குத்தேவை ஆன்மீகக்கனிதானே!!<<
 
ஆன்மீகக் கனியா?   ஆளை விட்டா போதும்:--))))
 
இதெல்லாம் உங்களுக்குத்தான் சரிப்படும் கண்ணன்.
எனக்குச் சாமர்த்தியம் பத்தாது:--)))
நீங்க பேசாம இருங்க. ஏதாவது கோபத்துல
இங்க போட்டுக் குடுத்துடாதீஙக :--)))


 

devoo

unread,
May 3, 2010, 9:09:47 AM5/3/10
to மின்தமிழ்
May 2, 3:07 am, Nakinam sivam

>>> ஏனென்றால் ஒருமை பெற்ற ஒருவருக்கு எதிர்பவரும், எதிர்க்கப் பட்ட நபரும் ஒன்றாகவே தெரியும். இங்கே எதிர்ப்பவர் யார் ? எதிர்க்கப் படும் நபர் யார் ?
அனைத்தும் ஒன்று தானே ? <<<<

ஆன்மிகக் கனி என்ன ? ஐயாதான் கனியிலிருந்து சாறே பிழிந்து கொடுத்து
விட்டாரே.
விவாதத்துக்கு இனி ஏது இடம் ?

நன்றி நக்கினம் ஐயா


தேவ்

சிவ அறிவொளியன்

unread,
May 3, 2010, 10:21:20 AM5/3/10
to மின்தமிழ்
> நாம் ஒன்றில் நின்று கொண்டு
> அதுதான் உண்மை என்று நினைத்துக் கொண்டு
> அந்த உண்மை ? தான் எல்லா இடத்திலிருந்தும் வர வேண்டும்
> என்று நினைத்தால் அது ஏமாற்றத்தையே தரும்.

அன்பின் சிவம்,

மிகவும் சரியாகச் சொன்னீர்கள்!

நல்லத் தெளிவான கருத்து. நன்றி!!

ஐன்ஸ்டினின் விதி தெரியாமல்!!!?,
நியூட்டனின் விதியை வைத்துக் கொண்டு ஒளியின் வேகத்தில் செல்லும் ஒரு
பொருளை ஆய்வு செய்வது போல்!!!!

சிவ அறிவொளியன்

unread,
May 3, 2010, 10:39:53 AM5/3/10
to மின்தமிழ்
> பின்னணியாக சிவ அறிவொளியின் திட்டல்களும் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

ஐயா,

அடியேன் தாங்களைத் திட்டவில்லை.
தாங்கள் அடியேனது எழுத்துக்களுக்கு "திட்டுதல்" எனப் பொருள் கொண்டால்
அதற்கு அடியேன் பொறுப்பு அல்ல.

அன்பின் சிவம் ஐயா கூறியது போல்


"நாம் ஒன்றில் நின்று கொண்டு
அதுதான் உண்மை என்று நினைத்துக் கொண்டு

அந்த உண்மை ? தான் எல்லா இடத்திலிருந்தும் வர வேண்டும்
என்று நினைத்தால் அது ஏமாற்றத்தையே தரும்."

மேலும் நாங்கள் இசை மாறி பொழிந்தாலும் அது
தங்களுக்கு வசையாகவேப் படும். (May be your frame of reference is just
25 principles?!)


ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு

PENNESWARAN KRISHNA RAO

unread,
May 3, 2010, 12:17:12 PM5/3/10
to mint...@googlegroups.com

நான் சொன்னால் கண்ணன் கோபித்துக் கொள்கிறார்.

நாகையா இல்லாமல் அவர் வேறு என்ன?  என்ன பொறுமையாக விளக்குகிறார்?

சிவம் நீங்கள் அவசரப்பட்டு சினப்படுகிறீர்கள் என்று எனக்கும் படுகிறது.  உண்மையிலேயே காரணமே இல்லாமல் கோபித்துக் கொள்கிறவன்  நான்.  நீங்கள் என்னையே தோற்கடித்து விடுவீர்கள் போல இருக்கிறதே. 

அறிவொளி ஐயா, உங்ளுடைய பஞ்சாயத்தும் சற்று ஆபத்தில் தான் முடியும் போலத் தோன்றுகிறது. 

வள்ளலார் பற்றிய இந்த இழையில் எதற்குப் பொறுமை இழக்க வேண்டும்?  சில விஷயங்களை மீள்பார்வைக்கு உட்படுத்தினால் அது மேலும் துலங்கி மெருகேறும் அல்லவா?

உங்கள் விஷயங்கள் உண்மையிலேயே சுவாரசிமாகவும் நிறைய தெரிந்து கொள்ளும் வகையிலும் அமைந்திருக்கின்றன.  அதில் சில விவாதங்கள் கிளம்பும்போது அதனைத் தெளிவுபடுத்தி விட்டுச் செல்வது மேலும் விளக்கங்கள் கூட்டும் அல்லவா?

(எனக்கு ஒன்றும் ஆகவில்லை.    சகவாச தோஷம்.  கொரியாக்காரர்களிடம் இருந்து சற்று விலகி இருக்க வேண்டும்)

அன்புடன்

பென்னேஸ்வரன்

2010/5/3 சிவ அறிவொளியன் <ariv...@gmail.com>



--
http://www.vadakkuvaasal.com/

Hari Krishnan

unread,
May 3, 2010, 12:41:33 PM5/3/10
to mint...@googlegroups.com


2010/5/3 N. Kannan <navan...@gmail.com>



ஹரிகி அருணகிரியை உருட்டிப்புரட்டுபவர். அருணகிரியின் வாயிலாக சைவ
சித்தாந்தம் எப்படி ஊற்றெடுக்கிறது எனக்காணலாம்.

நாமெல்லாம் எதிர், எதிர் அணிகளே அல்ல. இவ்வளவு ஆர்வத்துடன் ஆன்மீக
விஷயங்களில் பங்கேற்பதிலிருந்தே தெரியவில்லையா நமது ஆர்வம்?

அரங்கனாரும், ஹரிகியும் இன்னும் மென்மையாக சொல்லிப் பாருங்களேன். இனிய
உளவாக இன்னாது ஏன் கூற வேண்டும். நமக்குத்தேவை ஆன்மீகக்கனிதானே!!

ஹரிகி இன்னும் எவ்வளவு மென்மையாகச் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் கண்ணன்.... அவர் என்னையும் ரங்கனையும் ஒருவழி பண்ணாமல் விடப்போவதில்லை என்று இழை இழையாகப் பகடி பேசிக்கொண்டிருக்கிறார்.  அவருக்கும் கொஞ்சம் சொல்லி வையுங்கள்.

சந்தேகங்கள் இருப்பவர்களிடம் அவர்களுடைய ஐயங்களோடு என் ஐயங்களையும் சேர்த்து, திரட்டி எடுப்பதுதான் என் வழக்கம்.  சவால்களை நான் பொருட்படுத்துவதில்லை.  சவால் விடுபவர்கள் provoke செய்பவர்கள் குத்திப் பார்ப்பவர்கள் எல்லோரும் என்னிடம் ஏமாந்துதான் போகவேண்டிவரும்.  நான் இந்த ஆட்டத்தில் இல்லை.  நான் மடையன், முட்டாள் என்று பிரகடனப்படுத்திக்கொண்டாயிற்று.  முட்டாளிடம்தான் மோதுவேன், சவால் விடுவேன் என்று நின்றால், ஆமாமுங்கோ நீங்கதானுக்கோ வித்தவத்ஜன கோலாகலன், வெகுராஜ விதூஷிக பூஷண, சைவ சாம்ப்ரதாய, கங்கை பிலிற்றும் செஞ்சடையோனின் திருவருள் பெற்ற பெரியவர் என்று காலைத் தொட்டுக்கும்பிட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்வதில் எனக்குப் பிரச்சினையே இல்லை.

ரங்கனுடைய கவிதையை ஜாடையாக மற்றொரு இழையில் இழுத்தாயிற்று.  இங்கே என்னை இரண்டு மூன்று முறை உசுப்பிவிட்டுப் பார்த்தாயிற்று.  மின்தமிழுக்கு மட்டுறுத்துநர் என்றொருவர் இன்னும் இருக்கிறார்தானே?  

நீங்களே பெரியவர் என்று ஒப்புக்கொண்ட பிறகும் நெற்றிக்கண்ணை மூடமுடியாவிட்டால் ஐயன்மீர்!  அங்க வேற எங்கியாவது வச்சுக்குங்க.  தப்பான இடத்தில் வந்து சவால் விடறீங்க.  பதில் சவாலோ, வெறும் பதிலோகூட இனிமேல் வராது.  I am putting you on ignore mode.  
--
அன்புடன்,
ஹரிகி.

srirangammohanarangan v

unread,
May 3, 2010, 1:02:30 PM5/3/10
to mint...@googlegroups.com
மற்றவர்கள் காலில் குத்த வேண்டும் என்று முள்மரம் வளர்ப்பவன்
அந்த முள்மரத்திற்கே பலியாவான் --- ஆப்பிரிக்கக் கானகப் பழமொழி. 
 
கொஞ்சம் பொறுமையாக இருங்கள் ஹரியண்ணா!
இப்பொழுதுதான் பதப்படுத்தல் நடக்கிறது.
அது பதம் பார்க்கத் தொடங்கிய பின்னர்தான் தெரியும்.
:--)))

 

srirangammohanarangan v

unread,
May 3, 2010, 1:43:28 PM5/3/10
to mint...@googlegroups.com
பென்ஸ் சார்! ஏன் நீங்கள் வீணாக வந்து வம்பில் மாட்டிக்கொள்கிறீர்கள்?
அப்பறம் உங்களை விரட்ட ஆரம்பிக்கும். :--)))

 

PENNESWARAN KRISHNA RAO

unread,
May 3, 2010, 1:55:11 PM5/3/10
to mint...@googlegroups.com

என்ன இது அநியாயமாக இருக்கிறதே ரங்கன்.

நானும் கொஞ்சம் நாகையா வேலை பார்க்கலாம் என்று பார்த்தால் விடமாட்டீர்கள் போலிருக்கிறதே.

சரி.  நீங்கள் சொல்வதால் விடுகிறேன்.

(அப்பாடி.  தெரியாமல் நுழைந்து விட்டோமே எப்படி தப்பிக்கிறது என்று நினைத்தேன்.  வழி காட்டி விட்டீர்கள்).

அன்புடன்

பென்னேஸ்வரன்

2010/5/3 srirangammohanarangan v <ranga...@gmail.com>

Nakinam sivam

unread,
May 3, 2010, 11:50:37 PM5/3/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் பென்னேஸ்வரன் அவர்களுக்கு,

நான் யாரையும் காயப் படுத்த வேண்டும் என்று விரும்புகின்றவன் அல்ல. இருப்பினும் ஒருவரின் எழுத்தை குறை சொல்லி அவரை முட்டாளாக்க பார்கின்ற மனோபாவத்தை நீக்க வேண்டும் என்றும்.
ஒருவரின் எழுத்தை கேவலமாக விமரிசித்தால் என்ன வலி ஏற்படும் என்பதனை உணர வைப்பதற்காகத்தான் இப்படி எழுதினேன்.
ஐந்து கேள்விகள் கேட்டு விட்டு அதற்கான பதிலை பெற்றுக் கொண்டு
அந்த பதில் அவர்களுக்கு போதுமானதாக இல்லை என்றால் வேறு கேள்வி கேட்டிருக்கலாம் அல்லது எப்படி பதில் தேவை என்றாவது கேட்டிருக்கலாம் 
அதை விடுத்து
என்னுடைய மீள் சிந்தனைகளை முகாந்திரமாக வைத்து நீங்கள் செய்த பிரசங்கமும், பின்னணியாக சிவ அறிவொளியின் திட்டல்களும் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
 
ஆனால் நீங்கள் கூறியிருப்பன சைவ சித்தாந்த சாஸ்திரங்களுக்குச் சற்றும் பொருந்தாதனவாக இருக்கின்றன -- சாத்திரக் கருத்துக்களைப் பொறுத்தவரையில்.
 
வள்ளலார் சம்பந்தப்பட்ட வரையில் ஒன்றிரண்டு கூடுதல் தகவல்கள் என்பதற்கு மேல் உங்கள் எழுத்தில் வேறு பயன் இல்லை.
 
எனவே தாங்கள் மிகவும் சிரமப் பட வேண்டாம். அறிந்தவர்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த குசும்பு வேலை எனக்கு மட்டும் அல்ல 
எந்த ஒரு எழுத்தாளனுக்குமே பிடிக்காது.
ஆகவேதான் ஒருவருடைய எழுத்தை வேண்டும் என்றே குறை கூறினால் எப்படி வலிக்கும் என்பதனை காட்டவே எழுதினேன்.
நான் முள் மரம் அல்ல மென்மையான ரோஜா செடிதான்
முள்ளை பார்த்தால் முள் மட்டுமே தெரியும்.
அன்புடன்

2010/5/3 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

N. Kannan

unread,
May 4, 2010, 2:01:55 AM5/4/10
to mint...@googlegroups.com
2010/5/4 Nakinam sivam <nak...@gmail.com>:

> நான் முள் மரம் அல்ல மென்மையான ரோஜா செடிதான்
> முள்ளை பார்த்தால் முள் மட்டுமே தெரியும்.


வாடிய பயிரைக் கண்டாலும் வாடும் மனமுடைய ஒரு தமிழனைப் பற்றிப் பேசவரும்
இழையில் இவ்வளவு வாட்டம் ஏன்?
It is important to be sensitive to other's feeling.

நாமெல்லாம் எவ்வளவுதான் செம்மொழிகளில் ஆன்மீகம் பற்றி அடுக்கடுக்கடாய்
காட்டினாலும், நடைமுறை என்று வரும் போது அவரவர் கூடு அவரருடையது என்று
பதுங்கிவிடுகிறோம். நெருங்கினால் பாயத்தொடங்குகிறோம்.

சகல காரணனாய் அவனொருவன்தானே நம்மையெல்லாம் இப்படி ஆட்டுவித்துக்
கொண்டிருக்கிறான். அந்த ஒருமையில் நம்மைக் குவித்தால் கோபத்திற்குப்
பதில் இரக்கம் வரும். [என்ன நாகையா என்ற பட்டமும் கூட வரும் :-))]

நான் அடிக்கடி சொல்வது. இது ஏதோ விளையாட்டாக எழுதும் ஒரு களமல்ல இது!
கூரறிவு படைத்தவர்க்கு இதுவொரு பொற்கொல்லன் உலை. ஆண்டாள் சொல்வது போல்
நம் மலங்களை தூசாக்கும் உலை இது. ஆனால் எதுவுமே மேலே படாமல் இலை மேல்
நீர் போல் வந்து போவோர்க்கு ஒரு ஆதாயமும் இங்கில்லை. சும்மா பொழுது
போவதைத் தவிர.

மின்தமிழ் ஒரு ஆன்மீகக் கண்ணாடி. வள்ளலாருக்கு முருகனையும், ஆண்டாளுக்கு
ரங்கனையும் காட்டிய கண்ணாடி...இப்போது இந்த வடிவில் வந்து நிற்கிறது.
‘என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்’ என்று தன்னை இக்கண்ணாடியில்
பார்க்கத்தெரிந்தவர் நிர்மலனாகிறார். கொஞ்சம் எட்டப்பார்வை,
கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கு கொஞ்சம் நாள் எடுக்கலாம். ஆனாலும் ஒரு நாள்
ஆத்ம தரிசனம் கிட்டும்!!

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற


உத்தமர் தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்

மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழவேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

தலமோங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.


இந்த அற்புதமான பாடலைக் கேட்க!
http://www.youtube.com/watch?v=k-IF_VhbiSE&feature=player_embedded

http://www.thamizhisai.com/video/video-002_tamil-cinema/tamil-001_orumaiyudan.php

நா.கண்ணன்

Gomathy Sankaranarayanan

unread,
May 4, 2010, 2:19:11 AM5/4/10
to மின்தமிழ்
On May 3, 2:57 am, Madhurabharathi <madhurabhar...@gmail.com> wrote:
> 2010/5/3 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>

> ரொம்பத்தான் புரிஞ்சுது போங்க. ரெண்டுதடவை சொன்னப்புறம்தான் உங்களால் கவனிக்கவே
> முடிஞ்சிருக்குது. அப்படியிருக்க புரியுதாமே, புரியுது. ம்க்கூம் :-)
>
> அன்புடன்
> மதுரபாரதி

I don't think he understand what is the significance of 96 nor the
meaning of it.
If he does, can he tell how to arrive another divine number that is
related to 96?

Gomathy

RK.SATHISH KUMAR

unread,
May 4, 2010, 2:07:56 AM5/4/10
to mint...@googlegroups.com
அசைவம் உண்ன வேண்டாம்.பூஜை புணஸ்காரம்,உருவ வழிபாடு பலன் தராது.அப்படி எதையேனும் வணங்க விரும்பினால் ஜோதியை வழிபடு.அன்பு,இரக்கம்,மனிதாபிமானத்தோடு நடந்துகொள்.உணவு பழக்கத்தை முறையாக கடைபிடி.இதுவே அறிவு.-வள்ளலார் வாக்கு.

2010/5/4 N. Kannan <navan...@gmail.com>

Nakinam sivam

unread,
May 4, 2010, 3:51:07 AM5/4/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் கண்ணன் அவர்களுக்கு,

மிக்க நன்றி.
நான் சன்மார்க்கம் பயிலும் மாணவனாக தான் இருக்கிறேனே தவிர 
எல்லாம் தெரிந்தவன் என்று எப்போதும் நினைத்தது கிடையாது.
கற்க வேண்டியது இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவோ உள்ளது என்று நினைப்பவன்.
நான் இன்னமும் ஒருமை நிலையினை முழுமையாக அடையவில்லை.
இருப்பினும் அந்த பாதையில்  பயணித்து வருகிறேன்.
சைவ சித்தாந்தத்தின்படி தற்போதம் என்னும் உணர்வு நீங்கினால் மட்டுமே ஒருமை வரும். ஆனால் அந்த ஒருமை நிலை வரும்போது 
இதுபோன்ற எதையும் எழுத முடியுமா என்று தெரியவில்லை.
இந்த உடலையும் உயிரையும் பற்றிய 96 தத்துவங்களும் ஒடுங்கிய நிலையில் மட்டுமே ஒருமை வாய்க்கும்.
அது வரை தான் வேறு மற்றவர் வேறு என்பதுதான் உணர்வாக இருக்கும்.
இல்லை நான் ஒருமை நிலை அடைந்து விட்டேன் என்பது வெறும் பேச்சளவாகவே இருக்கும்.
இருப்பினும் உடனுக்குடன் மற்றவர்கள் படுகின்ற துன்பத்தை உணர முடிவதனால் நமது நிலையை மாற்றிக்கொள்கிறோம்.
ஆகவே யாரையும் நோகடிக்க வேண்டும் என்று என்னவில்லை.
இருப்பினும் மற்றவர்களின் வலி என்ன என்று உணர்த்த வேண்டியே செய்தேன்.
அவர் அதை உணர்ந்து இருப்பின் அவர் பட்ட வலிக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்.
அன்புடன்
நக்கினம் சிவம்  

2010/5/4 N. Kannan <navan...@gmail.com>

--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

N. Kannan

unread,
May 4, 2010, 4:30:32 AM5/4/10
to mint...@googlegroups.com
2010/5/4 RK.SATHISH KUMAR <sathis...@gmail.com>:

> அசைவம் உண்ன வேண்டாம்.பூஜை புணஸ்காரம்,உருவ வழிபாடு பலன் தராது.அப்படி
> எதையேனும் வணங்க விரும்பினால் ஜோதியை வழிபடு.அன்பு,இரக்கம்,மனிதாபிமானத்தோடு
> நடந்துகொள்.உணவு பழக்கத்தை முறையாக கடைபிடி.இதுவே அறிவு.-வள்ளலார் வாக்கு.
>

அருமையாக உள்ளது.

நாசா வேற்று கிரகங்களுக்கு விண்கலம் மூலம் மனிதர்களை அனுப்பும்
ஆய்வுகளைப் பல காலமாக மேற்கொண்டு வருகிறது. விண்கலங்களில் ஆடு, மாடு,
கோழி வளர்க்க முடியாது (பயணம் சில வருடங்களாவது ஆகும்). பயிர்களைத்தான்
வளர்க்க முடியும். எனவே சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களே முதலில் வேற்று
கிரகங்களில் குடியேறுவர்!!

க.>

Kamala Devi

unread,
May 4, 2010, 7:03:43 AM5/4/10
to mint...@googlegroups.com
”அவர் பட்ட வலிக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்”

சிவம்,
இந்த, வரிகளுக்காக, இந்த  பண்புக்காகவே ,ஞான் நிங்ஙளை வணங்குகிறேன்.
அன்பு கமலம்


 
http://www.kamalagaanam.blogspot.com



From: Nakinam sivam <nak...@gmail.com>
Subject: Re: [MinTamil] Re: வள்ளலார்

Nakinam sivam

unread,
May 4, 2010, 7:55:04 AM5/4/10
to mint...@googlegroups.com
அன்பு சகோதரி கமலம் அவர்களுக்கு,

நன்றி - புரிந்து கொண்டமைக்கு.

அன்பு சகோதரன்
நக்கினம் சிவம்


2010/5/4 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

Gomathy Sankaranarayanan

unread,
May 4, 2010, 8:11:55 AM5/4/10
to mint...@googlegroups.com

இருப்பினும் மற்றவர்களின் வலி என்ன என்று உணர்த்த வேண்டியே செய்தேன்.
அவர் அதை உணர்ந்து இருப்பின் அவர் பட்ட வலிக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்.
அன்புடன்
நக்கினம் சிவம்  



சிவம் கலக்கிட்டீங்க!.
கோமதி

Nakinam sivam

unread,
May 4, 2010, 10:49:57 AM5/4/10
to mint...@googlegroups.com

ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிதல்


ஒருமுறை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.அதில் வசித்த தவளை ஒன்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு
ஒரு கிணற்றில் விழுந்தது. அந்த கிணற்றிலே வசித்து வந்த தவளை ஒன்று அந்த தவளையை பார்த்து நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டது.அதற்க்கு கடல் தவளை நான் கடலில் இருந்து வருகிறேன் என்று
பதில் கூறியது.

அதற்க்கு கிணற்று தவளை உன்னுடைய கடல் இவ்வளவு தூரம் இருக்குமா என்று கூறி கொண்டு ஒரு முறை எம்பி குதித்து தாண்டியது. அதற்கு கடல் தவளை இல்லை இதை விட பெரியது என்று பதில் கூறியது.அடுத்ததாக கிணற்று தவளை இரண்டு முறை எம்பி தாண்டி குதித்து இவ்வளவு தூரம் இருக்குமா என்று கேட்டது.அதற்கும் கடல் தவளை இதைவிட பெரியது என்று பதில் கூறியது.சரி இந்த கிணற்றில் பாதி தூரம் இருக்குமா உனது கடல் என்று கிணற்று தவளை கூறியது.அதற்கு கடல் தவளை இந்த முழு கிணற்றை விட பல மடங்கு பெரியது கடல்என்று பதில் கூறியது.உடனே கிணற்று தவளைக்கு மிகுந்த கோபம் உண்டாகியதுகடல் தவளையை பார்த்து மூடனே இந்த கிணற்றை விடபெரிய இடம் இந்த உலகத்திலேயே கிடையாது.நீ மிக பெரிய பொய்யன் உடனடியாக இந்த இடத்தை விட்டு ஓடிப் போ 
என்று கடல் தவளையை விரட்டி விட்டது.

அது போல்தான் ஞான மார்க்கத்தில்  சிறிது கற்ற உடன் நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று  அந்த கிணற்று தவளையை போல் நமக்கு ஆணவம் வந்து விடுகிறது. ஆனால் கடல் போல் ஞானத்தை தெரிந்து கொள்ள பல விஷயங்கள்  உள்ளன என்றும் கற்க வேண்டிய ஞானம் மிக அதிகம் நாம் கற்றவை 
மிகவும் குறைவு என்பதும் நாம் உணர வேண்டும்.

ஆகவே நாம் ஒன்றை மட்டும் தெரிந்து  கொண்டு அதையே பிடித்து கொண்டு  அதுதான் ஞானம் என்று அதற்குள்ளேயே உழன்று கொண்டிருந்தால்ஞானத்தை முழுமையாக அடைய முடியாது.

நாம் அனைவரும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும். நல்ல கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி அறிவின் துணை கொண்டு ஆராய்ந்து கற்க வேண்டும்.

நல்ல ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிந்தால் நாம் தூய்மை அடைவதில் எந்த தடையும்  இருக்காது.
இறை அருள் நம்மை வந்து அடையும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு.


2010/5/4 Gomathy Sankaranarayanan <goma...@gmail.com>

--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

Innamburan Innamburan

unread,
May 4, 2010, 7:10:43 PM5/4/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
     இந்த இழையை தொடங்கியபோதும், இது விசனம் தரும் வகையில் பயணிக்கலாம்; மத/சமய/ஆன்மீகக் கோட்பாடுகள், தங்கள், தங்கள் உன்னத நிலைகளிலிருந்து உதறி வீசப்படலாம்; முரணும், மருளும் முருங்கை மரம் ஏறிக்கொள்ளக்கூடும் என்றெல்லாம், நான் கனவிலும் நினைக்கவில்லை. மும்மலங்களின் ஆளுமை ஆட்டிப்படைக்கிறதே என்ற வ்யாஹூலத்தில் தள்ளப்பட்டுள்ளேன். எனவே, நான் தவறு இழைத்தேனோ,இல்லையோ, மின் தமிழ் வாசகர்களிடம், மன்னிப்பு கேட்டுக்கொண்டு, ஹைக்கோர்ட் ஜட்ஜமெண்டை இணைக்கிறேன். மனித இனம் சன்மார்க்கம் நோக்கி 'இரட்க்ஷ்ண்ய யாத்ரீகம்' செய்யமாட்டேன் என்று முரண்டு பிடிப்பதற்கு மூன்று வழக்குகள் சான்று. முதல் வழக்கு ஆறாம் திருமுறை வரும் முன். இரண்டாவது வள்ளலாரின் காலத்திற்கு பிறகு, திரு. நா.கதிர்வேற்பிள்ளை அவர்களால் எழுந்தது. அது இல்லாதிருந்தால், திரு.வி.க. அவர்கள் தமிழ்த்தாத்தாவிற்கு பிறகு, சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியார் ஆகி இருந்திருக்கலாம். விதி யாரை விட்டது? சிவப்பழமாக இருந்த அவர் சன்மார்க்கம் நோக்கிப் பயணித்தற்கு சான்றாக, பல ஆதாரங்கள், திருமதி.சுபாஷிணியின் ஆர்வத்தினால், தமிழ் மரபு அறக்கட்டளையின் சேமிப்புகளில் உள்ளன. அதையெல்லாம் கண்ணெடுத்துப் பார்க்கமாட்டோம். இருக்கும் விடையை புறக்கணித்து, வினா எழுப்பிவிட்டு விலகிடுவோம் என்றால், இந்த தீர்ப்பை இணைத்தும் பயனில்லை. ஒரே ஒரு உரிமை எடுத்துக்கொள்கிறேன். திரு. நக்கினம் சிவன் அவர்களின் 'கிணற்றுத்தவளை' கேலியை நான் ரசிக்கவில்லை.
     
    இருந்தும், நீதியரசர் சந்துரு அவர்கள் தனது நேர்மைக்கும், வாய்மைக்கும், நடுநிலைமைக்கும், ஆழ்ந்த சிந்தனைக்கும், பன்முக படிப்பறிவுக்கும் புகழ் பெற்றவர், வழக்கறிஞராக இருந்த போதே. மின் தமிழர் ஒருவருக்காவது அந்த தீர்ப்பை படிக்கவேண்டும் தோன்றவில்லை என்பது எனக்கு வருத்தம் அளித்தது. அது 31 பக்கம் இருப்பதால், எனக்கு தோன்றிய படி, சில வாக்கியங்களை ஹைலைட் செய்து இணைத்துள்ளேன். பொறுப்பு எனது.

நன்றி, வணக்கம்,

இன்னம்பூரான்

2010/5/4 Nakinam sivam <nak...@gmail.com>
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS.doc

Hari Krishnan

unread,
May 4, 2010, 10:18:55 PM5/4/10
to mint...@googlegroups.com


2010/5/5 Innamburan Innamburan <innam...@googlemail.com>

 ஹைக்கோர்ட் ஜட்ஜமெண்டை இணைக்கிறேன்.

இந்த ஆவணத்தை அளித்ததற்காக நன்றி.  இதிலுள்ள தமிழ்ப்பாடல்கள் எல்லாம் TAM/TAB அல்லது வேறு என்கோடிங்காக (ஒருவேளை பாமினியாக) இருக்கலாம் என்று தோன்றுகிறது.  பாடல்களின் மூலத்தையும் அறிய விரும்புகிறேன்.  யுனிகோடில் இந்தப் பாடல்களைப் படிக்க இயலுமா?  முடிந்தால், தயார் நிலையில் இருந்தால், உதவவும்.  இல்லாவிட்டால், இருப்பதை வைத்து யுனிகோடாக மாற்றி, அடையாளம் காண முயல்கிறேன்.

திரு. நக்கினம் சிவன் அவர்களின் 'கிணற்றுத்தவளை' கேலியை நான் ரசிக்கவில்லை.

அது அவருடைய கதை என்று நினைத்துக்கொண்டால் அல்லவா ரசிப்பதற்கும் ரசிக்காமல போவதற்கும்!  அதைத்தான் ரெண்டாங் கிளாசிலேயே படித்துவிட்டோமே....புதுசாக ரசிக்க என்ன இருக்கிறது... கடல் தவளை, ஏதோ ஒரு காரணத்தால் கிணற்றில் வந்து விழுந்துவிட்டால், அது மறுபடியும் கடல் தவளை ஆகமுடியுமோ?  அதுவும் கிணற்றுத் தவளைதான்.  இருக்கும் இடத்தை வைத்துதான் அடையாளம்.   கடலை அறிந்திருந்தால் என்ன, இருக்கும் இடம் கிணறு என்றால் இதுவும் கிணற்றுத் தவளைதான்.  கடலைக் கண்டறிந்த ஞாபகத் துணுக்குகள், இப்போது வந்து விழுந்திருக்கும் கிணற்றைக் கடலாக மாற்றிவிடுமா என்ன!  சேரிடம் அறிந்து சேரச்சொன்னா, சேறிடம் அறிந்தா சேருவது... போகட்டும்.  நாமதான் சேறு.  கடல் தவளைகள் சேற்றில் விழுந்து புரள்வானேன்!  அட உடுங்கணா... 

ஆவணத்தை அனுப்பியதற்கு மறுபடியும் நன்றி.  


--
அன்புடன்,
ஹரிகி.

srirangammohanarangan v

unread,
May 4, 2010, 10:31:04 PM5/4/10
to mint...@googlegroups.com
திரு இன்னம்பூரர்க்கு,
 
ஜட்ஜ்மெண்ட் காப்பியின் வாசகங்களை இணைத்துப் படிக்கக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.
 
தங்களுடைய இழையில் என்னுடைய ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாக்’  கருத்துரைகளால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் விளைந்திருப்பின் மன்னித்தருள்க.
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
 
***

Hari Krishnan

unread,
May 4, 2010, 10:43:41 PM5/4/10
to mint...@googlegroups.com


2010/5/5 srirangammohanarangan v <ranga...@gmail.com>

திரு இன்னம்பூரர்க்கு,
 
ஜட்ஜ்மெண்ட் காப்பியின் வாசகங்களை இணைத்துப் படிக்கக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.
 
தங்களுடைய இழையில் என்னுடைய ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாக்’  கருத்துரைகளால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் விளைந்திருப்பின் மன்னித்தருள்க.
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

அட! அசத்தீட்டங்க...கலக்கிட்டீங்க ரங்கன்!  அடக்கம்னா இது அடக்கம்...பாருங்கையா...இந்த அளவுக்கு அடக்கம் வேற எவனுக்காவது இருக்கா?  எங்க வந்து நிரூபிச்சுக் காட்டுங்க பாப்பம்....ஐயா அடக்கத்துக்கு இணை ஐயா அடக்கம் மட்டும்தான். When I bask in his reflected glory, methinks I am an epitome of modesty and modesty nonpareil   I throw an open challenge! If you think you are modest come and prove that you are made of a better stock!  But I know I am the most humblest and the bestest of all modest beings.  Do I not have the humility to accept that I am a human being after all!  

--
அன்புடன்,
ஹரிகி.

tirumalainumbakkam

unread,
May 4, 2010, 10:48:54 PM5/4/10
to மின்தமிழ்

-- வள்ளலார்

திரு. நகினம் சிவம் கூறிய சிலபல கருத்துக்களுக்கு நான் உடன்பாடு
இல்லாவிடிலும் இன்று அவர் கூறிய ,,''தவளை '' உபமா னத்திற்கு

எனக்கும் உடன்பாடு உண்டு; அவர் கூறிய சான்று ''அக்ஷ்ரலக்ஷம் பெறும்எனவே
நாம் அனைவரும் திறந்த புத்தகமாக இருப்பதிலும் .நல்ல கருத்துஉக்களை
விருப்பு வெறுப்பின்றி அறிவின் துணை கொண்டு ஆராய்ந்து கற்ப்போம்
என்பதில் எந்த மாற்று கருத்தும் இலலை ;''மாற்றான் தோட்டத்து பூவும்
மணக்கும் ; நன்றி . உவமை கதை சான்றுடன் விடை கூறிய நகினம் சிவா விற்கு
வாழ்த்துக்கள் ;
--

> 2010/5/4 Gomathy Sankaranarayanan <gomath...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > இருப்பினும் மற்றவர்களின் வலி என்ன என்று உணர்த்த வேண்டியே செய்தேன்.
> >> அவர் அதை உணர்ந்து இருப்பின் அவர் பட்ட வலிக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்.
> >> அன்புடன்
> >> நக்கினம் சிவம்
>
> > சிவம் கலக்கிட்டீங்க!.
> > கோமதி
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> Brotherly Athman
> Nakinam Sivam
>
> http://nakinam.blogspot.com
>
> --

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

Kamala Devi

unread,
May 4, 2010, 10:51:20 PM5/4/10
to mint...@googlegroups.com
ஹரி, ஹரி,
இப்படியெல்லாம் கூட சிரிக்க வைக்கணுமா?
[ரசித்துப்படித்தேன்]
http://www.kamalagaanam.blogspot.com



From: Hari Krishnan <hari.har...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wednesday, 5 May 2010 10:43:41

Subject: Re: [MinTamil] Re: வள்ளலார்

Nakinam sivam

unread,
May 5, 2010, 12:07:43 AM5/5/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் அரிக்கி அவர்களுக்கு,

அட! அசத்தீட்டங்க...கலக்கிட்டீங்க ரங்கன்!  அடக்கம்னா இது அடக்கம்...பாருங்கையா...இந்த அளவுக்கு அடக்கம் வேற எவனுக்காவது இருக்கா?  எங்க வந்து நிரூபிச்சுக் காட்டுங்க பாப்பம்....ஐயா அடக்கத்துக்கு இணை ஐயா அடக்கம் மட்டும்தான். 

மிக சிறப்பான பண்பு - உங்களுக்கு,
வயது ஏற ஏற உங்கள் பண்பு மெருகு ஏறுகிறது.

நான் இன்னமும் அடக்கம் ஆகவில்லை.
ஒருவேளை நான் அடக்கம் ஆகும்போது 
நான் இல்லாமல் போகலாம்.
நான் இருக்கும் போது எப்படி அடக்கம் ஆக முடியும்.
ஆகவே நான் இன்னமும் அடக்கம் ஆகவில்லை என்று தெரிவித்து கொள்கிறேன்.
நான் அடக்கத்தை தான் சொல்கிறேன்.

அன்புடன்
நக்கினம் சிவம்


2010/5/5 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

சிவ அறிவொளியன்

unread,
May 6, 2010, 8:26:04 PM5/6/10
to மின்தமிழ்

On May 5, 12:07 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> அன்பு நண்பர் அரிக்கி அவர்களுக்கு,
>
> அட! அசத்தீட்டங்க...கலக்கிட்டீங்க ரங்கன்!  அடக்கம்னா இது
> அடக்கம்...பாருங்கையா...*இந்த அளவுக்கு அடக்கம் வேற எவனுக்காவது
> இருக்கா?* எங்க வந்து நிரூபிச்சுக் காட்டுங்க பாப்பம்....ஐயா

> அடக்கத்துக்கு இணை ஐயா
> அடக்கம் மட்டும்தான்.

> மிக சிறப்பான பண்பு - உங்களுக்கு,
> வயது ஏற ஏற உங்கள் பண்பு மெருகு ஏறுகிறது.
>
> நான் இன்னமும் அடக்கம் ஆகவில்லை.
> ஒருவேளை நான் அடக்கம் ஆகும்போது
> நான் இல்லாமல் போகலாம்.
> நான் இருக்கும் போது எப்படி அடக்கம் ஆக முடியும்.
> ஆகவே நான் இன்னமும் அடக்கம் ஆகவில்லை என்று தெரிவித்து கொள்கிறேன்.
> நான் அடக்கத்தை தான் சொல்கிறேன்.


சிவம் ஐயா,

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

"அடக்கம்" ஆகும்போது அடியேனிடனிடம் சொல்லி அனுப்புங்கள்!
அடியேனும் "அடக்கத்தைத்" தான் சொல்கிறேன்!!

ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு

--

Nakinam sivam

unread,
May 7, 2010, 4:17:01 AM5/7/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் சிவ அறிவொளியன் அவர்களுக்கு,

"அடக்கம்" ஆகும்போது அடியேனிடனிடம் சொல்லி அனுப்புங்கள்!
அடியேனும் "அடக்கத்தைத்" தான் சொல்கிறேன்!!

ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு


நான் மட்டுமல்ல யார் அடக்கம் ஆனாலும் உங்களுக்கு தெரியாமலா ?
ஊர் சுடுகாடே உங்களிடம் தானே இருக்கிறது.
ஆகவே நான் அடக்கம் ஆவது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ 
உங்களுக்கு நிச்சயம் தெரியும்.

அடக்கம் முதல் ஒடுக்கம் வரை 
உங்களது பெயரிலேயே வைத்திருக்கும் போது 
அடக்கம் பற்றி நீங்கள் கவலை பட போவதில்லை.
அடக்கமும் ஒடுக்கமும் பற்றி அனைவரும் 
பயப்படும் வேளையில் உங்களது பெயரிலேயே
அனைத்தையும்  கொண்டுள்ளதனால்
நீங்கள்
மிகவும் அடக்கமானவர்தான்.
இந்த அடக்கம் அதுவல்ல.
தன் அடக்கம் மட்டுமே.
அன்புடன்
நக்கினம் சிவம்


2010/5/7 சிவ அறிவொளியன் <ariv...@gmail.com>

--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

Innamburan Innamburan

unread,
May 7, 2010, 7:34:32 AM5/7/10
to mint...@googlegroups.com
" கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து." [திருக்குறள்]

2010/5/7 Nakinam sivam <nak...@gmail.com>

சிவ அறிவொளியன்

unread,
May 7, 2010, 11:17:47 PM5/7/10
to மின்தமிழ், Nakinam sivam, ariv...@gmail.com
On May 7, 4:17 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> அன்பு நண்பர் சிவ அறிவொளியன் அவர்களுக்கு,
>

> நான் மட்டுமல்ல யார் அடக்கம் ஆனாலும் உங்களுக்கு தெரியாமலா ?


> ஊர் சுடுகாடே உங்களிடம் தானே இருக்கிறது.
> ஆகவே நான் அடக்கம் ஆவது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ
> உங்களுக்கு நிச்சயம் தெரியும்.


அன்புள்ள சிவம் அரசு ஐயா அவர்களுக்கு,

25 தத்துவங்களேடு நின்று விட்டு, பிரகிருதி மாயை மற்றும் அசுத்த மாயையில்
உள்ள உருவமுள்ள கடவுள்களை வணங்குபவர்களுக்கு மட்டும்தான் இறப்பும்
ஊர்ச்சுடுகாடும்! அடியேனுக்குத் தெரியும் அவர்கள் இறப்பு.
36 தத்துவங்களைக் கடந்து 96 தத்துவங்களை நோக்கி வெற்றி நடை போட்டுக்
கொண்டு, சுத்த மாயையில் உள்ள அருவத்தை, "பராபரத்தை" வணங்கும் தங்கள்
போன்ற அருளாளர்களுக்கு அப் பராபரத்தில்தான் "அடக்கமும்" "மரணமில்லாப்
பெருவாழ்வும்"!!. அதனை அடியேன் அறிய இயலாது. தாங்கள் நிச்சயம்
அடியேனுக்குச் சொல்லி அனுப்புங்கள்!!!
தன்னைப் போல அந்த அருவமும் 9 வாயில்களை உடையது என்று எண்ணி ஏதோ ஒரு
அரைவேக்காட்டு அன்பர், மரணமில்லாப் பெருவாழ்வு அருளும் உருவமில்லா
பராபரத்தை மூடிக் கொள்ளச் சொல்வாராம். பாவம் அந்தப் பராபரம்!!!?

PENNESWARAN KRISHNA RAO

unread,
May 8, 2010, 5:26:52 AM5/8/10
to mint...@googlegroups.com
ஒரு சம்பவம் இப்போது நினைவுக்கு வருகிறது.
 
எனக்கு ஒன்றுமே தெரியாத விஷயங்கள் என்று மனசாட்சியுடன் ஒரு பட்டியல் எழுதத் தொடங்கினால் - உதாரணத்துக்கு - ஏரோப்ளேன் ஓட்டத் தெரியாது - ரயில் ஓட்டத் தெரியாது - மொபைல் ரிப்பேர் பண்ணத் தெரியாது - இப்படி ஒவ்வொன்றாக நேர்மையாக ஒரு பட்டியல் தயாரித்தால் ஒரு முப்பது குப்பை லாரி அளவுக்கு காகிதங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும்.  அல்லது ஒரு ஃபாக்ஸ் ரோல் மாதிரி உருளை காகிதத்தில் எழுதி அதை விரித்தால் ஏறத்தாழ டெல்லியில் துவங்கி கிருஷ்ணகிரி தாண்டி பெங்களூர் வரை போய் நிற்க வாய்ப்பு உண்டு.
 
அதே மாதிரி முழுக்க தெரிந்த விஷயங்கள் என்று யாராவது மனசுக்குள் புகுந்து கேட்டால் ஏறத்தாழ ஒரு கை விரல்களின் பாதியில் மீதி நிற்குமா என்று தெரியாது.  அதுவும் முழுக்கத் தெரிந்த விஷயத்தைப் பட்டியல் இடச் சொன்னால் காது கேட்காத மாதிரி ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்க்கத் துவங்கி விடுவேன்
 
சரி. விஷயத்துக்கு வருகிறேன்.  இந்தத் தெரியாதுகளின்  பட்டியலில் அடங்கும் ஒரு முக்கியமான விஷயம் கிரிக்கெட்.  எனக்குக் கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது.  அதன் ஆட்ட விதிகள் அல்லது விளையாட்டு வீரர்கள், அவர்கள் பெயர் இப்படி எதுவும் தெரியாது. 
 
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மாட்ச் நடக்கும்போது நான் மட்டும் அலுவலகத்தில் விடுப்பில் போனது இல்லை.   உனக்கு தேசப்பற்றே கிடையாது என்று என் பஞ்சாபி நண்பர்கள் என்னை வழக்கமாகத் திட்டுவார்கள்.
 
1983 என்று நினைக்கிறேன். ஷார்ஜாவில் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டி ஒன்று நடந்தது.  நள்ளிரவு வரை அந்தப் போ்ட்டி சென்றது.  
 
அப்போது நான்  நண்பன் வீட்டுக்குத் தூங்கச் சென்றிருந்தேன்.  எல்லோரும் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  எல்லோரும் ரொம்பப் பதட்டமாக இருந்தார்கள் 
 
டிவி பெட்டிக்கு முன்பு நடுக்கூடத்தில நான் பாய் விரித்து போர்வையை இழுத்துப் போட்டுத் தூங்கிக் கொண்டிருந்தேன்.  ராத்திரி ஒரு மணி இருக்கலாம்.  ஆட்டத்தின் உச்ச கட்டம்.
 
என் நண்பன் ஒருவனுக்கு என்னைப் பார்த்து கொலைவெறி வந்திருக்க வேண்டும்.  “உலகமே பதட்டத்துலே இருக்கறப்போ இந்தக் கம்மனாட்டி நடுக்கூடத்துலே எப்படித் தூங்கறான் பாரு” என்று என் இடுப்பில் எட்டி ஒரு உதை விட்டான்.  தூக்கக் கலக்கத்தில எழுந்து என்னா ஆச்சுடா உனக்கு?  என்று கேட்டுவிட்டு மீண்டும் போர்வை போர்த்திக் கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தேன். 
 
இரண்டு மணிக்குப் பிறகு ஒரு நண்பன் என்னை உலுக்கி எழுப்பி “மாமா நாம ஜெயிச்சிட்டோம்டா” என்று என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.
 
அப்படியா என்று கேட்டுவிட்டு மீண்டும் தூங்கிப் போய்விட்டேன்.
 
இப்போது ஆளுக்கு ஆள் சைவ சித்தாந்தம் பற்றியும் அடக்கம் பற்றியும் மாறி மாறிப் பேசுகிறீர்கள்.
 
அன்று என் நண்பர்கள் அறையில் பார்த்த கிரிக்கெட் மேட்ச் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

2010/5/8 சிவ அறிவொளியன் <ariv...@gmail.com>



--
http://www.vadakkuvaasal.com/

Tthamizth Tthenee

unread,
May 8, 2010, 6:01:28 AM5/8/10
to mint...@googlegroups.com
அதெப்படி  நீங்கள்  என்னை மாதிரியே  இருக்கிறீர்கள்
 
கிரிக்கெட் பற்றி தெரியாத  , கிரிக்கெட் பிடிக்காத  என்னை 
 
வேறொன்றுமே தெரியாமல்  கிரிக்கெட் மட்டுமே அதுவும்   வர்ணனை மட்டுமே  கேட்டு கிரிக்கெட் வீரர்களின் பெயரை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ளத் தெரிந்த பல நண்பர்கள்  அவர்களின் நட்பு வட்டத்துக்கே  நான் லாயக்கிலாதவன் போல் ,ஒரு அற்பப் புழுவைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்த  பல நண்பர்கள் இன்று வேறு எதுவும்  தெரியாமல் மோட்டு வளையைப் பார்த்துக்கொண்டு  காலம் தள்ளும்  அவல நிலையைக்  கண்டு
 
 
மனம் தெளிந்து
 
”எல்லாம் கற்றவர்   என்று யாருமில்லை
 எதுவுமே  தெரியாதவர்  என்று யாருமில்லை “
 
என்னும் உண்மையை  அனுபவ பாடமாக  அறிந்தேன்
 
இறைவனுக்கு தெரியாதா
 
இதனை இதனால் இவண் முடிக்குமென்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் 
 
 என்பது
 
ஒரு மிகப் பெரிய  இயந்திரத்தின் உதிரி பாகங்கள் தானே  நாமெல்லோரும்
நாமெல்லோரும் இணைந்தாலன்றி  இயந்திரம் சரியாக வேலை செய்யாது என்பது மட்டும்  உண்மை
 
 
எனக்குத் தெரிந்து 
 
சுடுகாட்டில்  வேலை செய்யும் வெட்டியானுக்குத் தெரிந்த  ஞானம் கூட நமக்குத் தெரியாது என்பதில்  ஐயமில்லை
 
”கணந்தோறும் வியப்புகள் பல தோன்றும்
கணந்தோறும்  வெவ்வேறு கனவு  தோன்றும்
கணந்தோறும் நவ நவமாம்  களிப்பு தோன்றும்
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? ஆங்கே “
 
என்னும் மஹா கவி பாரதியின் பாடல்  நினைவுக்கு வருகிறது
 
 
சர்வம் சிவமயம்
 
அன்பே சிவம்
 
அன்புடன்
 
தமிழ்த்தேனீ
 


 
8-5-10 அன்று, PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Innamburan Innamburan

unread,
May 8, 2010, 7:05:16 AM5/8/10
to mint...@googlegroups.com
கிரிக்கெட்டாதவர்கள் குழுவில், அடியேனும் அடக்கம்.


2010/5/8 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Nakinam sivam

unread,
May 8, 2010, 7:05:46 AM5/8/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் பென்னேஸ்வரன் அவர்களுக்கு,

தூங்கி விழித்து விட்டீர்களா  ?
அல்லது
இன்னமும் தூக்கம்தானா ?

எனக்கும் கிரிக்கெட் என்றால் சுத்தமாக ஆகாது.
அதற்காக மற்ற விளையாட்டு பிடிக்குமா என்றால் ?
ஐயோ ஆளை விடுங்கள் தான் என்னுடைய பதில்.
ஒரு விதத்தில் நானும் உங்களை போல்தான்.

இருந்தாலும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றில் இன்பம்
உங்களுக்கு மற்றவர்களை கலாய்ப்பதில் இன்பம்
ஒரு சிலருக்கு சமையல் செய்வதில் இன்பம்
ஒரு சிலருக்கு சமைத்ததை சாப்பிடுவதில்  இன்பம்
ஒரு சிலருக்கு தாங்களே சமையல்  செய்து 
அதை மற்றவர்களுக்கு  சாப்பிட கொடுத்து 
அவர்கள் படும் அவதியை காண்பதில் இன்பம் .
ஒரு சிலருக்கு தூங்குவதில்  இன்பம்
ஒரு சிலருக்கு சிலர் தூக்கத்தை கெடுப்பதில்  இன்பம்.
ஒரு சிலருக்கு பாடுவதில் இன்பம்
ஒரு சிலருக்கு பாட்டை கேட்பதில் இன்பம் 
ஒரு சிலருக்கு பாடி அனைவரையும் ஓட வைப்பதில் இன்பம்
எனக்கு தெரிந்ததை உளறுவதில் இன்பம்.
எப்படியோ 
நான் உளறுகிறேன் என்பதை கேட்க  பலருக்கு இன்பம்.

இப்படி எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா.
அன்புடன்
நக்கினம் சிவம்




2010/5/8 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

PENNESWARAN KRISHNA RAO

unread,
May 8, 2010, 8:17:01 AM5/8/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் சிவம் அவர்களுக்கு
 
நான் சொல்ல முயற்சித்ததை எல்லோரும் விட்டு் விட்டு வேறு எதையோ பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
 
சுப்புடு சார் சொல்வது போல ஏதோ ஒன்றை எடுத்துக் கல்லைக் கட்டிக் கிணற்றில் வீசி விட்டேன்.
 
வழக்கமாகக் குழுக்களில் இப்படிததான் ஆகிப்போகிறது.  அதற்கு மின்தமிழும் விலக்கல்ல என்றுதான் நினைக்கிறேன்.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

2010/5/8 Nakinam sivam <nak...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 8, 2010, 8:37:06 AM5/8/10
to mint...@googlegroups.com
வாய் விட்டுச் சிரித்தேன், நன்றி.

2010/5/8 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
May 8, 2010, 8:40:25 AM5/8/10
to mint...@googlegroups.com
இரு நிலைகள் உள்ளன
 
ஒன்று நாம் நினைத்ததை  நினைத்த படி  சொல்லத் தெரியாத  நிலை
 
புரிந்துகொள்பவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை  என்னும் நிலை
 
ஐயா பென்னேஸ்வரரே  நீங்கள் சொல்ல வந்ததை சொல்லுங்கள்

PENNESWARAN KRISHNA RAO

unread,
May 8, 2010, 8:48:29 AM5/8/10
to mint...@googlegroups.com
ஒருவேளை நீங்கள் முன்னர் சொன்னதுதான் என் விஷயத்தில் நடந்து இருக்கிறது என்று நினைக்கிறேன் தேனீ சார்.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

2010/5/8 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

சிவ அறிவொளியன்

unread,
May 8, 2010, 7:04:15 AM5/8/10
to மின்தமிழ், innam...@googlemail.com, Nakinam sivam, geetha...@gmail.com, goma...@gmail.com, nka...@gmail.com, shyl...@gmail.com, rkc...@gmail.com, penne...@gmail.com, hari.har...@gmail.com

On May 7, 7:34 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:


> " கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து."
> [திருக்குறள்]
> இ

(கீழேயுள்ள கருத்தில் என்ன தவறுகள் உள்ளன என்பது தெரியவில்லை.
மட்டுறுத்தப்பட்டுள்ளது! மீண்டும் பதிய முயற்சிக்கிறேன். with cced to
limited people)

அடியேன் காமமொடு *கடுஞ்சினம்* கடிந்த காட்சியர்

கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்

ஈசன்எதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த
நேசர்எதிர் நிற்பது அரிதாமே - தேசுவளர்
செங்கதிர்முன் நின்றாலும் செங்கதிர வன்கிரணம்
தங்குமணல் நிற்கரிதே தான்

சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்

ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு


>
> 2010/5/7 Nakinam sivam <naki...@gmail.com>


>
>
>
> > அன்பு நண்பர் சிவ அறிவொளியன் அவர்களுக்கு,
>
> > "அடக்கம்" ஆகும்போது அடியேனிடனிடம் சொல்லி அனுப்புங்கள்!
> > அடியேனும் "அடக்கத்தைத்" தான் சொல்கிறேன்!!
>
> > ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
> > சிவ அறிவொளியன்
> > தனித்திரு, விழித்திரு, பசித்திரு
>
> > நான் மட்டுமல்ல யார் அடக்கம் ஆனாலும் உங்களுக்கு தெரியாமலா ?
> > ஊர் சுடுகாடே உங்களிடம் தானே இருக்கிறது.
> > ஆகவே நான் அடக்கம் ஆவது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ
> > உங்களுக்கு நிச்சயம் தெரியும்.
>
> > அடக்கம் முதல் ஒடுக்கம் வரை
> > உங்களது பெயரிலேயே வைத்திருக்கும் போது
> > அடக்கம் பற்றி நீங்கள் கவலை பட போவதில்லை.
> > அடக்கமும் ஒடுக்கமும் பற்றி அனைவரும்
> > பயப்படும் வேளையில் உங்களது பெயரிலேயே
> > அனைத்தையும்  கொண்டுள்ளதனால்
> > நீங்கள்
> > மிகவும் அடக்கமானவர்தான்.
> > இந்த அடக்கம் அதுவல்ல.
> > தன் அடக்கம் மட்டுமே.
> > அன்புடன்
> > நக்கினம் சிவம்
>

> > 2010/5/7 சிவ அறிவொளியன் <arivo...@gmail.com>

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > Brotherly Athman
> > Nakinam Sivam
>
> >http://nakinam.blogspot.com
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com


> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil

Gomathy Sankaranarayanan

unread,
May 8, 2010, 9:19:16 AM5/8/10
to mint...@googlegroups.com
ஐயா பென்னேஸ்வரரே  நீங்கள் சொல்ல வந்தததுதான் என்ன?

2010/5/8 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
ஒருவேளை நீங்கள் முன்னர் சொன்னதுதான் என் விஷயத்தில் நடந்து இருக்கிறது என்று நினைக்கிறேன் தேனீ சார்.

PENNESWARAN KRISHNA RAO

unread,
May 9, 2010, 12:51:03 AM5/9/10
to mint...@googlegroups.com

நான் சொல்ல வந்தது இதுதான்.

1.  இந்த இழையில் நகைச்சுவை உணர்வு கூடிக் கொண்டே போகிறது.

2.  புரிதல் கூடிக் கொண்டே போகிறது.

3.  திருவிழாவில் தொலைந்து போன குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அன்புடன்

பென்னேஸ்வரன்

2010/5/8 Gomathy Sankaranarayanan <goma...@gmail.com>

Subashini Tremmel

unread,
May 9, 2010, 3:23:13 AM5/9/10
to mint...@googlegroups.com


2010/5/9 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

நான் சொல்ல வந்தது இதுதான்.

1.  இந்த இழையில் நகைச்சுவை உணர்வு கூடிக் கொண்டே போகிறது.

2.  புரிதல் கூடிக் கொண்டே போகிறது.

3.  திருவிழாவில் தொலைந்து போன குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

:-)

Gomathy Sankaranarayanan

unread,
May 11, 2010, 2:26:13 PM5/11/10
to mint...@googlegroups.com

3.  திருவிழாவில் தொலைந்து போன குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 
 
ஐயா பென்னேஸ்வரரே, என்ன தூக்கம் கலையாமல் திருவிழாவிற்கு போனீர்களா? அல்லது  திருவிழாவிற்கு போய் தூங்கிவிட்டீர்களா?
 

PENNESWARAN KRISHNA RAO

unread,
May 12, 2010, 6:11:40 AM5/12/10
to mint...@googlegroups.com
எனக்கு என்ன தெரியும்?
 
தொலைந்து போனவர்களைத் தான் கேட்க வேண்டும்.
 
பொதுவாக   தூங்குவதற்கு திருவிழா எல்லாம் போகவேண்டிய தேவை எனக்கு  ஏற்பட்டது இல்லை.  சும்மாவே தூங்கி வழிந்து கொண்டிருக்கும் ஜென்மம் நான்.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன் 
 
 


 
2010/5/11 Gomathy Sankaranarayanan <goma...@gmail.com>



--
http://www.vadakkuvaasal.com/

pamara jeevan

unread,
May 12, 2010, 6:21:59 AM5/12/10
to mint...@googlegroups.com
எனக்கு என்ன தெரியும்?
 
தொலைந்து போனவர்களைத் தான் கேட்க வேண்டும்.
 
ஆஹா சரியான ஜோக்.
அவர்கள்தான் தொலைந்து போய் விட்டார்களே.
அவர்களை முதலில் தேட வேண்டும்
பிறகல்லவா அவர்களிடம் கேட்க முடியும்.

பாமர ஜீவன்



2010/5/12 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
May 12, 2010, 8:24:29 AM5/12/10
to mint...@googlegroups.com
ஆமாம். 
 
கோமதி அம்மையாருக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு கிடைத்து விட்டது.  தாராளமாகத் தேடலாம்.
 
எப்போதாவது என் தூக்கம் கலைந்தால் நானும் என் பங்குக்குத் தேடிவிட்டு மீண்டும் உறக்கத்தைத் தொடர்கிறேன்.  எனக்கும் சற்றுத் தெம்பாக இருக்கும்.
 
பென்னேஸ்வரன்

2010/5/12 pamara jeevan <pamara...@gmail.com>
330.gif

Innamburan Innamburan

unread,
May 19, 2010, 8:22:05 AM5/19/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
இன்றைய ஜூனியர் விகடனிலிருந்து. நாம் சொன்னால் கேட்பார்களா? அன்றே சொன்னேன்.
இன்னம்பூரான்

வள்ளலாருக்குச் சமாதி இல்லை..

ஜூனியர் விகடன் மே 5-ம் தேதி இதழில் வெளியான 'வள்ளலாருக்கு ஒரு வெற்றி மாலை' என்ற கட்டு ரையில், நீதியரசர் சந்துரு வழங்கியுள்ள மகத்தான தீர்ப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.

வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் விஞ்ஞான அடிப்படையில் உருவானது என்று அத்தீர்ப்பு வள்ளலாரின் லட்சியத்துக்கு மகுடம் சூட்டி யுள்ளது.

இந்த அடிப்படையில், அத்தீர்ப்பை வரவேற்ற என்போன்ற சன்மார்க்கிகள் அகம் மகிழ்கின்றோம்.

அதேசமயம், ஒரு நெருடலையும் சுட்டிக் காட்ட வேண்டும். அக்கட்டுரையின் கடைசி வரி இந்தத் தீர்ப்பு ஒரு வெற்றி மாலையாக 'வள்ளலாரின் சமாதியில்' அமைந்துள்ளது என்கிறது. சாகாதவரே சன்மார்க்கி! வள்ளலார் முத்தேகச் சித்தி பெற்றவர். சுத்த

தேகம், பிரணவ தேகம் பெற்ற பின்னர் ஞான தேகமான ஒளிஉடம்பு பெற்றவர் அவர். இறப்பொழிந்த சன்மார்க்கவாதி. இன்னும் இயங்குகிறார் - நம்மை இயக்குகிறார்.

அவர் உடம்பு ஒளி உடம்பு. அதனால் அவருக்குச் சமாதி இல்லை.

அடுத்து, அக்கட்டுரையில் வெளியாகியுள்ள வள்ளலாரின் திருவுருவப் படத்தில், வள்ளலாரின் நெற்றியில் திருநீறு துலங்குகிறது.

சிதம்பரத்திலிருந்து வெளியேறி கருங்குழியில் இருந்த காலம் வரை வள்ளலார் திருநீறு அணிந்திருந்தார். கருங்குழியிலிருந்து சித்தி வளாகம் சென்ற பிறகு, திருநீறு அணியவில்லை. பரிபக்குவ நிலையை அடைந்த பிறகு அவர் வாழ்ந்த வாழ்க்கைதான் நாம் கவனிக்கத் தக்கது. மேலும், வள்ளலார் சமயம் கடந்த சமயம் கண்டவர்.

அதனால் வள்ளலார் திருநீறு அணிந்துள்ள காட்சிப் படத்தைத் தவிர்த்திருக்கலாம். மற்றொரு கருத்தும் இத்தருணத்தில் தெரிவிக்க விரும்பு கிறேன்.

வள்ளலாரின் சன்மார்க்க இயக்கம், நாடு கடந்து உலக அளவில் பரந்து செயல்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வள்ளலார் தெய்வ நிலையங்கள் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றை இந்து அறநிலையத் துறையிலிருந்து விடுவித்து, முதல்வரின் கண்காணிப்பில் உள்ள பொது இலாக்காவில் (Public Department)வள்ளலார் நிறுவிய தெய்வ நிலையங்கள் செயல்படுமாறு அமைக்கலாம்.

அவற்றின் நிர்வாகக் குழுவில் சன்மார்க்க சங்கங்கள் செயல்படும் நாடுகளிலிருந்தும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் கௌரவப் பிரநிதிகளை (Honorary Delegates) நியமிக்கலாம்.

இவ்வாறு செய்தால், வள்ளற் பெருமான் எண்ணிய 'ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை'யினால் மலர்ச்சி பெறும் மனிதர்கள் அனைவரும், மற்ற மற்ற ஜீவராசிகளையும் நேசிப்பவர்களாக வளர்வார்கள். இந்தப் பூமிக் கோளம் முழுவதிலும் ஆருயிர்களுக்குத் தேவையான 'அன்புச்செயல்' பல்கிப் பெருகும்.

- நா.மகாலிங்கம்,

தலைவர்,
சக்தி குரூப் நிறுவனங்கள்.

330.gif

Nakinam sivam

unread,
May 19, 2010, 8:59:17 AM5/19/10
to mint...@googlegroups.com
அன்புள்ள அய்யா இன்னம்புரன் அவர்களுக்கு,

மீண்டும் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இடுகையை வெளியிட்டமைக்கு.

அன்பு மகன்
நக்கினம் சிவம்


2010/5/19 Innamburan Innamburan <innam...@googlemail.com>

--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com
330.gif

Nakinam sivam

unread,
May 19, 2010, 9:18:24 AM5/19/10
to mint...@googlegroups.com
அன்புள்ள அய்யா,

அடுத்து, அக்கட்டுரையில் வெளியாகியுள்ள வள்ளலாரின் திருவுருவப் படத்தில், வள்ளலாரின் நெற்றியில் திருநீறு துலங்குகிறது.

சிதம்பரத்திலிருந்து வெளியேறி கருங்குழியில் இருந்த காலம் வரை வள்ளலார் திருநீறு அணிந்திருந்தார். கருங்குழியிலிருந்து சித்தி வளாகம் சென்ற பிறகு, திருநீறு அணியவில்லை. பரிபக்குவ நிலையை அடைந்த பிறகு அவர் வாழ்ந்த வாழ்க்கைதான் நாம் கவனிக்கத் தக்கது. மேலும், வள்ளலார் சமயம் கடந்த சமயம் கண்டவர்.

அதனால் வள்ளலார் திருநீறு அணிந்துள்ள காட்சிப் படத்தைத் தவிர்த்திருக்கலாம்.


இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

இப்போது உள்ள எந்த படமும் வள்ளலாருடைய படம் இல்லை.

அவரை புகைப்படம் எடுக்க பல முறை முயற்சித்து அவர் உருவம் புகைப்படத்தில் விழவில்லை. ஆக இந்த படங்கள் அனைத்துமே வள்ளலார் போல் உள்ளனவே அன்றி இப்படிதான் இருந்தார் என்பதற்கானது அல்ல.

மேலும் வள்ளலார் எதோ இந்து சமயத்திற்கு எதிரானவர் என்பது போல் ஒரு சிலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் அவர் இந்து  சமயத்தை சேர்ந்த சித்தாந்தம், வேதாந்தம், நாதாந்தம், கலாந்தம் போதாந்தம் போன்றவற்றின் சாரத்தின் முழுமையையும் சுத்த சன்மார்க்கமாக அளித்திருக்கிறார்.

அதே போல் இவை அனைத்தும் ஆனந்யமே அன்றி அன்னியம் அல்ல என்று கூறி இருக்கிறார். (ஆனந்யம் - அதை உள்ளடக்கியது)

சைவ சமய சித்தாந்தமும், வைணவ சமயத்தின் வேதாந்தமும் புரியாமல் ஒருவர் சுத்த சன்மார்க்கத்தை புரிந்து கொள்ள முடியாது என்பது எனது கருத்து.

அன்புடன்

நக்கினம் சிவம்



2010/5/19 Nakinam sivam <nak...@gmail.com>
330.gif

Nakinam sivam

unread,
May 19, 2010, 10:13:20 AM5/19/10
to mint...@googlegroups.com
அன்புள்ள அன்பர்களே,

இத்துடன் ஜீவ காருண்யம் பற்றிய 
இ புத்தகம் இணைத்துள்ளேன்.
பிடித்திருந்தால் படிக்கவும்.
330.gif
Sanmark-8-2.pdf

tirumalainumbakkam

unread,
May 21, 2010, 2:07:21 AM5/21/10
to மின்தமிழ்
"வாடிய பயிரை கண்டபோதல்லாம் வாடினேன்" என்று மிகவும் எளிய வரிகளில் அதே
சமயம் அழுத்தமான மனித நேய கருத்துக்களால் நம் மனதில் நீங்கா இடம்
பிடித்து இருக்கும் வடலூர் இராமலிங்க அடிகளாரை பற்றியது.

"அருட்பெரும் ஜோதி..தனிப்பெரும் கருணை" என்று ஜோதி வழிப்பாட்டை பரப்பிய
இராமலிங்க அடிகள் அவர்களுக்கு, சிவலிங்கத்தை வழிபடும் சைவர்கள் ஆறுமுக
நாவலர் தலைமையில் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். "தேவாரம்,திருவாசகம்
ஆகியவையே அருட்பாக்கள். மற்றது எல்லாம் வெறும் மருட்பாக்கள் " என்ற
அவர்களின் பிரச்சாரத்திற்கு, "தன்னை உணர்ந்தோர் பாட்டு எல்லாம் அருட்பா.
மற்றது எல்லாம் மருட்பா " என்று பதில் தந்தார் வள்ளலார். அப்போதே,கடலூர்
நீதி மன்றத்தில், அடிகளாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதில் ஆஜராக வள்ளலார் நீதிமன்றம் வந்த போது, வழக்கு தொடர்ந்த ஆறுமுக
நாவலரே அவரை பார்த்து எழுந்து வணங்கி நிற்க, அதை பார்த்த
நீதிபதி,"எதிரிகளே வணங்கும் வள்ளலார்,தவறாக பேசி இருக்க மாட்டார்" என
வழக்கை தள்ளுபடி செய்ததாக படித்தேன்.

அதை போன்ற ஒரு சம்பவம்..வடலூர் கருவறையில் லிங்க உருவத்தை சமிபத்தில்
பிரிதிஷ்டை செய்தார் சபானந்த சிவாச்சாரியார் என்பவர். இதை ஏற்காமல் இந்து
சமய அறநிலைய துறை தொடர்ந்த வழக்கில் ஒரு அழகான தீர்ப்பை தந்து
இருக்கிறார் உயர் நீதி மன்ற நீதிபதி சந்துரு அவர்கள்.

அதன் சாரம் இதோ..

" அவரது ஆன்மிக எண்ணங்கள் யாவும் ஜோதியை அடிப்படையாய் வைத்தே
இருக்கின்றன. 'ஆதியும்,நடுவும், அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி என்
உளத்தே' என்கிற ஜோதி வழிபாட்டை முன் எடுக்கும் நோக்கத்துடன்தான் சத்திய
ஞானசபை தொடங்கப்பட்டு, 1872 இல் ஜோதி வழிபாட்டு முறைகள் பின் வருமாறு
வகுக்கப்பட்டு உள்ளன.

'தகர பெட்டியில் வைத்து, ஜோதியை ஏற்ற வேண்டும்.அது கண்ணாடியில் பிரதி
பலிக்க வேண்டும்.எண்ணெய் பயன்படுத்தி ஜோதியை ஏற்ற வேண்டும். ஜோதி எரியும்
போது, அனைவரும் மௌனமாக இருக்க வேண்டும்' என்கிறது அவை. மேலும், இதில்
பங்கேர்ப்பவர்களுக்கு, இதிகாசங்கள், புராணங்கள்,வேதங்கள்,
சைவம்,வைணவம்,வேதாந்தம்,சித்தாந்தம் போன்ற நம்பிக்கைகள் கூடாது என்றும்
விதி முறை கூறுகிறது. எனவே, லிங்க பிரதிஷ்டை செய்வது வள்ளலாருக்கு
எதிரானது" என்று தீர்ப்பு வெளி வந்து இருக்கிறது.

இதை போன்று, முஸ்லிம் மக்களிடையே சமிப காலமாக "தர்கா வழிபாடு" காரணமாக
கருத்து மோதல்கள் நிலவி வருகின்றன. தர்கா என்பது இஸ்லாமிய பெரியவர்களின்
சமாதி. ஒரு பிரிவு அங்கு சென்று வழிபடுவதுதான் சர்ச்சைக்கு காரணம்.

"தர்கா வழிபாடு இஸ்லாத்துக்கு விரோதமானது. ஆண்டவனுக்கு மத்தியில்
மனிதர்களுக்கு இடம் இல்லை " என்று ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தவ்ஹீத்
ஜமாஅத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.

"மார்க்க முறைகள் வழி வாழ்ந்து மறைந்த பெரியவர்களின் சமாதிக்கும்,
ஆண்டவனுக்கும் இடையே சூட்சும தொடர்பு உள்ளது. அதனால், தர்காவுக்கு சென்று
வழிபடுவதும், தொழுகை செய்வதும் தவறு இல்லை " என்கிறது இன்னொரு தரப்பு.
(எல்லா மதத்தினரும் செல்லும் நாகூரில் உள்ளது தர்கா).

இதை பற்றி நன்கு அறிந்த இஸ்லாமிய நண்பர்கள் விளக்கினால் நமக்கு
இவ்விவகாரம் பற்றி மேலும் புரிந்து கொள்ள இயலும்.

ஜோதி வழிபாடு, தர்கா வழிபாடு போன்று 'சிலைகள்' பற்றி நீண்ட நாட்களாக ஒரு
கேள்வி என்னை உறுத்தி வருகிறது. திராவிட கழக அபிமானிகளிடம் இருந்து,
தர்க்க ரீதியான பதிலை நான் இந்த கேள்விக்கு எதிர்பார்க்கிறேன்.

ஊருக்கு ஊர், தந்தை பெரியாருக்கு சிலைகள் திறப்பது ஏன்? முற்போக்கு
கோணத்தில் பார்த்தால் அது வெறும் 'கல்' தானே? அதில் எப்படி 'பெரியார்'
தெரிகிறார்??

உடனே பார்ப்பன பதிவு என்று எழுதாமல், கொள்கைப்பூர்வமாக இந்த கேள்விக்கு
பதிலை வரவேற்கிறோம்.

On May 1, 11:07 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> அன்புள்ள இன்னம்புரன் அவர்களுக்கு,
>
> மிக்க நன்றி. இப்பதிவை வெளியிட்டதற்கு.
> ஒரு தவறு - அது விகடன் செய்ததா ?
> முடிக்கும் போது ஒரு குசும்பு வேலை செய்யப்பட்டுள்ளது.
> வள்ளலார் எப்போது சமாதி ஆனார் ?
> ஞான சபையினை வள்ளலார் சமாதி என்று காட்டுவது எதற்காக ?
> ஞான சபை என்பது அகத்தில் உள்ளதை புறத்தில் காட்டுவதற்காக
> வள்ளல் பெருமானாரால் ஏற்படுத்தப் பட்டது.
> இது கோவில் போன்ற வழிபாட்டு தளம் அல்ல.
> இது உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக
> அக அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக
> வள்ளல் பெருமானால் ஏற்படுத்தப் பட்டது.
> நாம் எப்பொழுதும் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பழக்கப்
> பட்டுள்ளோம். அது போன்ற சடங்குகளை விட்டு விலகியதே
> சன்மார்க்கம்.
> இதன் முடிந்த முடிபு கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் ஒன்றே.
> இங்கே ஞான சபை என்பதே நம்முள்ளே
> சிற்சபை என்பது எது?
> பொற்சபை என்பது எது ?
> ஞான சபை என்பது எது ?
> ஜோதி தரிசனம் என்பது எதற்காக ?
> திரைகள் ஏன் விளக்கப் படுகின்றன ?
> திரை விலகுவதற்கு முன்பு ஜோதியின் நிறம் என்ன ?
> திரை விலகிய பின்னர் ஜோதியின் நிறம் என்ன ?
> இது போன்ற சத் விசார கேள்விகளுக்கு
> விளக்கம் தருவதற்காக ஏற்படுத்தப் பட்டது.
> ஆகவே ஞான சபை என்பது ஞானத்தை தெரிவிப்பதற்காக
> ஏற்பட்டதே தவிர வள்ளலாரின்  சமாதி என்று தவறானதை தெரிவிக்க வேண்டாம்.


> அன்புடன்
> நக்கினம் சிவம்
>

> 2010/5/1 Innamburan Innamburan <innambu...@googlemail.com>
>
>
>
> > This article is copyright of Vikatan. Thanks and Acknpwledgment.
> > Innamburan
> > வள்ளலாருக்கு ஒரு வெற்றி மாலை!
>
> >   *'அ*ருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை...' என்று கருணைக் கடலாக
> > அறியப்பட்டவர் வடலூர் ராமலிங்க வள்ளலார். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
> > வாடினேன்' என்று சொன்ன வள்ளலாரை எதிர்த்து, கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் கழித்து,
> > சென்னை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு!
>
> > 150 ஆண்டுகளுக்கு முன்பும் வள்ளலாருக்கு எதிராக பிரிட்டிஷ் காலத்திலேயே
> > பிரபலமான ஒரு வழக்கு வாதாடப்பட்டது. அந்த ஃபிளாஷ்பேக் முதலில்...
>
> > ஜீவகாருண்யம், பசியாற்றுவித்தல், சாதிமத வேறு பாடின்மை, ஆன்மநேய ஒருமைப்பாடு
> > ஆகிய நான்கையும் வலியுறுத்திய வள்ள லார், சன்மார்க்க சங்கத்தை உருவாக்கி சத்திய
> > தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் ஆகியவற்றை வடலூரில் நிறுவினார்.
> > 'கடவுளை உண்மையான அன்புடன் ஒளி வடிவில் வழிபட வேண்டும்' என்பது வள்ளலாரின்
> > எண்ணம். அப்படி அவர் உருவ வழிபாட்டை மறுத்ததால், வள்ளலார் வாழ்ந்த காலத்திலேயே
> > கடும் எதிர்ப்பு கிளம்பியது.
>
> > ''அவர் எழுதியதை அருட்பாவாக ஏற்க முடியாது. தேவாரம், திருவாசகம்தான்
> > அருட்பாக்கள். இவை வெறும் மருட் பாக்கள்!'' என்று யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்
> > தலைமையிலான தீவிர சைவர்கள் கடுமையாக எதிர்த் தார்கள். ''தன்னை உணர்ந்தோர்
> > பாட்டெல்லாம் அருட்பா. மற்றதெல்லாம் மருட்பா!'' என்று இதற்கு வள்ளலார் விளக்கம்
> > அளித்தார். 'ஆறுமுக நாவலரின் பெயரைச் சொல்லி ஒரு
>
> > கூட்டத்தில் வள்ளலார் கிண்ட லடித்ததாக' கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில்
> > வழக்கு தாக்கலானது. அன்றைய தினம் வள்ளலாரே நீதிமன்றத்துக்கு நேரில் வர...
> > அப்போது வழக்குப் போட்ட ஆறுமுக நாவலரே, வள்ளலாரை எழுந்து நின்று வணங்கினார்.
> > இதைப் பார்த்த நீதிபதி, ''எதிரிகளாலும் வணங்கத்தக்க வள்ளலார் தவறாகப்
> > பேசியிருக்க மாட்டார்!'' என்று ஆங்கிலேய ஆட்சியிலேயே வழக்கைத் தள்ளுபடி
> > செய்தார்.
>
> > இந்நிலையில்தான், தற்போது சபானந்த ஒளி சிவாச் சாரியார் என்பவர் வடலூர்
> > கருவறையில் லிங்க உருவத்தைப் பிரதிஷ்டை செய்தார். இதை இந்து சமய அறநிலையத் துறை
> > ஏற்கவில்லை. 'வள்ளலார் உருவ வழிபாட்டை ஏற்காமல்... ஜோதி வழிபாட்டையே ஏற்றார்!'
> > என்பதைச் சொல்லி, 'உருவம் எதையும் வைக்கக் கூடாது' என்றது. இந்த
> > உத்தரவுகளுக்குத் தடை விதிக்கக் கேட்டுதான் சிவாச்சாரியார் சென்னை உயர் நீதிமன்
> > றத்தை அணுகினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் சந்துரு ஒரு மகத்தான
> > தீர்ப்பை அளித்திருக் கிறார்.
>
> > ''சாதிமத வேறுபாடுகளைக் கண்டித்த மாபெரும் மனிதாபிமானி வள்ளலார். 'சாதியும்
> > மதமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி' என்று அவர் பாடியதுதான்
> > 1872-ம் ஆண்டும் பிரிட்டிஷ் அரசு, சாதிக்கு எதிரான சட்டம் கொண்டுவரத்
> > தூண்டுகோலாக அமைந்தது. அப்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பஞ்சம்
> > தலைவிரித்தாடியபோது, கடலூருக்கு அருகில் அணையாத அடுப்புகளை உருவாக்கி அன்னசாலை
> > அமைத்தார். அன்று இருந்த அந்நிய ஆட்சியை எதிர்த்து, 'கருணை இலா ஆட்சி கடுகி
> > ஒழிக... அருள் நியந்த நன்மார்க்கர் ஆள்க' என்று பயமில்லாமல் பாடிய வள்ளலார்,
> > சிறந்த
>
> ...
>
> read more »

tirumalainumbakkam

unread,
May 21, 2010, 2:10:08 AM5/21/10
to மின்தமிழ்

On May 1, 12:40 pm, devoo <rde...@gmail.com> wrote:
> ”தண்ணமர் மதிபோற்சாந்தந்தழைத்தசத்துவனே போற்றி
> வண்ணமாமணியே போற்றி மணிவண்ணத்தேவா போற்றி
> அண்ணலே யெவ்வுளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
> விண்ணவர் முதல்வா போற்றி வீர ராகவனே போற்றி.”
>
> ஒருமுறை அருட்பிரகாச வள்ளலார் திருத்தணிக்குச் சென்றார். அடிக்கடி அவர்
> அந்த முருகனைக் காணச் செல்வது வழக்கம். ஆனால் போகும் வழியில் இருக்கும்
> திருவள்ளூருக்குச் செல்லமாட்டார். அந்தத் தடவை திருவள்ளூரை
> நெருங்கியவுடன் தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டது. திருவள்ளூரில்
> இருக்கும் அருள்மிகு வீரராகவப் பெருமாளைத் தரிசிக்காமல் போகிறோமே என்று
> அப்போதுதான் அவர் மனதில் பட்டது.
>
> பின் அவர் அங்கு போய்ப் பிரார்த்திக்க, வயிற்றுவலி அறவே நீங்கியது. அவர்
> இந்தப் பெருமாள்மேல் "வீரராகவ பஞ்சகம்'' இயற்றியிருக்கிறார். இந்தக்
> கோயில் வாயிலில் இந்த வீரராகவ பஞ்சகம் பளிங்குப் பலகையில்
> செதுக்கப்பட்டிருக்கிறது
>
> http://www.nilacharal.com/ocms/log/01181009.asp
>
> தேவ்
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

tirumalainumbakkam

unread,
May 21, 2010, 2:10:45 AM5/21/10
to மின்தமிழ்

On May 1, 2:14 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2010/5/1 devoo <rde...@gmail.com>:


>
> > ”தண்ணமர் மதிபோற்சாந்தந்தழைத்தசத்துவனே போற்றி
> > வண்ணமாமணியே போற்றி மணிவண்ணத்தேவா போற்றி
> > அண்ணலே யெவ்வுளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
> > விண்ணவர் முதல்வா போற்றி வீர ராகவனே போற்றி.”
>

> வள்ளலாரின் வாழ்வு பல திருப்பு முனைகள் கொண்டது.
> அதே போல் அவர் தனி அறைக்குள் சென்று மறைந்ததும் பேரதிசயம்.
>
> இது போன்ற சித்து பற்றி ஆர்தர் கிளார் தனது நூலின் முன்னுரையில்
> பேசுகிறார் (The mysterious world என்று நினைக்கிறேன்). எப்படிச்
> சித்தர்களால் பூத உடலைக் காற்றில் கலக்க முடிகிறது என்று. வேதியியல்
> பாடத்தில் வரும், transmutation என்று. அதாவது ஒரு தனிமனிலிருந்து
> மற்றொன்றிற்கு மாறுவது. இரசவாதம் என்பது அடிப்படையில் வேதியியல்தான்.
> இப்பிரபஞ்சம் இத்தகைய தனிம மாற்றங்களிதான் இன்று காணும் இத்தனை
> தனிமங்களாக உருப்பெற்றிருக்கிறது. நமது உடலும் ஐம்பூதச் சேர்க்கையில்
> உருவானதே. எனவே இங்கும் அம்மாறங்களை நிகழ்த்த முடியும் என்று நம்
> சித்தர்கள் காட்டியுள்ளனர். இங்கு நிகழ்வதை sublimation என்று கூடச்
> சொல்லலாம். விறகு எரிந்தால் கரிக்கட்டையாகும். கற்பூரம் எரிந்தால் ஏதும்
> மிஞ்சாது. இதை sublimation என்போம். எரியாமலே வைத்திருந்தாலும் கற்பூரம்
> காற்றில் கரைந்துவிடும்!
>
> பரஹம்ச யோகாநந்தர் அமெரிக்கா போன பிறகு அவரது குரு பூதவுடலை
> நீக்கிவிடுவார். குருவைக் கடைசி முறையாகக் காணவில்லையே என்று வருத்தம்
> யோகாநந்தருக்கு. அவர் மும்பாய் வந்திறங்கி லாட்ஜில் தங்கியிருக்கும் போது
> யுக்தேஷ்வர் தோன்றுவார். அத்தோற்றம் எப்படி இருந்தது என்று graphically
> ஆக வர்ணிப்பார் யோகாநந்தர். அவை பொன்னுருவாக, அணுக்கூட்டங்களின்
> திகள்களாக இருக்கும். யோகாநந்தர் அவ்வுடலை இறுக்கிக் கட்டிப் பிடித்துக்
> கொண்டு நீங்கள் என்னை விட்டுப் போகக்கூடாது என்பார். இப்படி அப்போது
> யுக்தேஷவர் இவருக்கு பல யோக ரகசியங்களைச் சொல்வார் (இதை சினிமாத்தனமாக
> ”பாபா” படத்தில் காணலாம்).
>
> வள்ளலார் வாழ்வில் நிகழ்ந்த இம்மாதிரி இரசாயன மாற்றத்தைப் பற்றி
> யோகாநந்தர் எழுதி வைத்தது போல் (எப்பூடகமும் இல்லாமல், எளிய தெளிவான
> மொழியில்) யாராவது எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.
>
> வள்ளலார் வாழ்வு ஆய்விற்குரியது (பல்வேறு நோக்கில்).
>
> க.>

devoo

unread,
May 21, 2010, 10:47:14 AM5/21/10
to மின்தமிழ்
May 21, 1:10 am, tirumalainumbakkam
///// "தர்கா வழிபாடு இஸ்லாத்துக்கு விரோதமானது. ஆண்டவனுக்கு மத்தியில்

மனிதர்களுக்கு இடம் இல்லை " என்று ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தவ்ஹீத்
ஜமாஅத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.
"மார்க்க முறைகள் வழி வாழ்ந்து மறைந்த பெரியவர்களின் சமாதிக்கும்,
ஆண்டவனுக்கும் இடையே சூட்சும தொடர்பு உள்ளது. அதனால், தர்காவுக்கு சென்று
வழிபடுவதும், தொழுகை செய்வதும் தவறு இல்லை " என்கிறது இன்னொரு தரப்பு////


அல்லாவைத் தவிர ஏனைய அனைத்தும் அவரால் படைக்கப்பட்டவை; ஆகவே அவரிலும்
தாழ்ந்தவை. அவரைத் தவிர வேறு எதை / எவரை வணங்கினாலும் அவருக்கு இணையான
ஒன்றைக் கற்பித்த பாவம் நேரும்.
இஸ்லாமிய மதத்தில் இணை வைப்பது தடுக்கப்பட்டுள்ளது; அதன் பெயர் ‘ஷிர்க்’;
இணை வைப்பவன் நரகில் தள்ளப்படுவான்

Within Islam, shirk is the most heinous and unforgivable crime. Allah
forgives any sin except for committing shirk.

தமிழ்நாட்டின் சுன்னத் ஜாமாஅத் தர்கா வழிபாட்டை ஏற்கிறது; ஆனால் தற்போது
தவ்ஹீத் ஜமாஅத்தின் கை ஓங்கி இருப்பதுபோல் தெரிகிறது

தேவ்

Innamburan Innamburan

unread,
May 21, 2010, 12:32:23 PM5/21/10
to mint...@googlegroups.com
திரு. திருமலைநும்பாக்காத்தின் வினாக்களுக்கு இது உரிய இழை இல்லை என்பதால், அவரது இடுகையும், திரு.தேவ்வின் பதிலும், அடுத்து வரும் இடுகைகளும் தனி இழையில் வந்தால் நலம்.
இன்னம்பூரான்

2010/5/21 devoo <rde...@gmail.com>

devoo

unread,
May 21, 2010, 2:35:33 PM5/21/10
to மின்தமிழ்
ஆமா அதான் சரி,
யாராவது பயோ டேடா போட முன்னாடி இழய மாத்தறதுதான் நல்லது;
நிர்வாஹம்னா ’இ’ சார்தான்

Tthamizth Tthenee

unread,
May 22, 2010, 1:55:59 AM5/22/10
to mint...@googlegroups.com
இன்னம்   நிர்வாகம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
2010/5/22, devoo <rde...@gmail.com>:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Nakinam sivam

unread,
May 22, 2010, 7:57:47 AM5/22/10
to mint...@googlegroups.com
திரு அருட்பா

சொல்லுகின்றேன் பற்பல் நான் சொல்லுகின்றவேல்லாம் 
           துரிசலவே சூதலவே தூய்மை உடையனவே 
வெல்லுகின்ற வார்த்தையன்றி வெறும் வார்த்தை என்வாய்
           விளம்பாது என் ஐயர் நின்று விளம்புகின்ற படியால் 
செல்லுகின்ற படியே நீ காண்பாய் இத்தினத்தே
            தேமொழி அப்போது எனை நீ தெளிந்து கொள்வாய் கண்டாய்
ஒல்லுகின்ற வகையெல்லாம் சொல்லுகிறேனடி நான்
           உண்மை இது உண்மை இது உண்மை இது தானே.

                                                                      -     வள்ளல் பெருமான்.


2010/5/22 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

செல்வன்

unread,
May 22, 2010, 1:48:35 PM5/22/10
to mint...@googlegroups.com
சைவம், வைணவம், கிறிஸ்தவம், சனாதன இந்துமதம் எல்லாமே ஓரிறை கொள்கையை கொண்டவையே.

பலதெய்வ வழிபாடு பாகன் இந்துமதத்தில் மட்டுமே உள்ளது.பாகன் இந்துமதத்தை சனாதன மதத்துக்குள் உள்வாங்கும் முயற்சி இன்றுவரை வெற்றி அடையவில்லை.மாறாக சனாதன மதம், சைவம், வைணவம் எல்லாமே பாகன் இந்துமதத்துக்குள் உள்வாங்கப்பட்டு விட்டன.இன்றைய இந்துக்கள் பெரும்பாலும் அனைத்து கடவுள்களையும் வணங்குபவர்களாகவே உள்ளனர்.முத்திரை வைத்துகொண்டு சிவனை திட்டி தீர்க்கும் வீரவைணவர்களும், அவர்களின் கார்பன் காப்பியான வீர சைவர்களும்,வள்ளலார், சாய்பாபா, இஸ்கான், பங்காரு அடிகளார் கல்ட்டுகளும் இன்று மைனாரிட்டியே.

மதம் மாறும்போதுதான் இந்த சின்னம்,முத்திரை,பெயர் மாற்றம் அனைத்தும் நடக்கும்.பாகன் இந்துக்கள் இயற்கையாக பிறந்த மதத்தில் இருப்பதால் அப்பன் அம்மா வைத்த பெயருடன், உடம்பில் சூடு கிடு எதுவும் போட்டுகொள்ளாமல், மதம் மாறும் எந்த சடங்கையும் செய்யாமல் கடைசிவரை இயற்கையாக இருக்கின்றனர்.சைவம், வைணவம், திராவிட மதங்களுக்கு மாறுபவர்கள் தான் பெயர் மாற்றம், மன மாற்றம் அனைத்தும் அடைகின்றனர்.மதமாற்றம் செய்பவர்கள் செய்துகொள்ளுவது போல சடங்குகள் அனைத்தையும் நடத்தி மதம் மாறிவிடுகின்றனர்.குலதெய்வத்தை கூட அதன்பின் கும்பிடுவதில்லை.இப்படி மதம் மாறினாலும் பாகன் இந்துமதத்தை விட்டு அவர்களால் முழுமையாக விலக முடிவதில்லை.பாகன் இந்துக்களிடையே தான் கொள்வினை, கொடுப்பினை நடத்திகொள்ளவேண்டியவர்களாக உள்ளனர்.பாகன்களை இவர்கள் திட்டிதீர்த்தாலும் பாகன்கள் இவர்களை வெறுப்பதில்லை.


--
செல்வன்

www.holyox.tk

"They who can give up essential liberty to obtain a little temporary safety deserve neither liberty nor safety"
- Benjamin Franklin
Reply all
Reply to author
Forward
0 new messages