///சங்ககாலத்தில் கடலுள் மாய்ந்த கப்பல் பற்றிய செய்தி அருமை. உள்ளே கிடைத்திருக்கும் பானைகளில் பிராமியும், தமிழ் பிராமி எழுத்துக்களும் கிடைத்தால் சிறப்பாயிருக்கும். நாணயங்கள் கிடைக்கலாம். பார்ப்போம்.///
நாம் எதிர்நோக்கியுள்ள இவ்வகழ்வாய்வு மேற்கொண்டு இலங்கை அரசின் தொல்லியல் துறையால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழக தொல்லியல் இடங்களில் கிடைத்த தரவுகளே முழுமையாக வெளிப்படுத்தப்படாமல் உள்நோக்கத்துடன் மத்திய மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில் நாம் இங்கு நடைபெறும் ஆய்வுகளின் முடிவுகளை சிங்கள அரசு எவ்வாறு வெளியிடும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
"But discoveries at the sunken ship might at least help illustrate that Sri Lanka was a "linchpin" in this trade, as so many of the goods that passed through the island reached the Mediterranean, Carlson said."
இதில் வெளிப்படும் நோக்கம் முழுக்க இலங்கையின் ஒரு சார்பை "சிங்களம்" என்று நிறுவுவதில் மட்டுமே உள்ளது எனத் தெரிகிறது. ஆய்வாளர்கள் இதே கி. மு.1-ஆம் நூற்றாண்டுகளில் இருந்து கி. பி.2-ஆம் நூற்றாண்டு வரை குறிப்பிட்ட இதே தமிழக கடற்கரைகள் தாம் உலகின் மேற்கையும் கிழக்கையும் இணைத்தன என்கிறார்கள். இவர்களின் நோக்கமோ அதனை இலங்கைக்கு [சிங்கள பௌத்தம்] திருப்புவதில் இருப்பது தெரிகிறது என்பதுதாம் கொடுமை. வரலாற்றின் உண்மை பக்கங்களை மை வைத்து அழிப்பதுபோல் இருக்கிறது இவர்களின் ஆய்வுகள். அதற்கு உலக மய ஏகாதிபத்தியம் துணை போகிறது.
Periplus of the Red Sea [Periplus of the Erythraean Sea]-இந்த ரோமானிய வணிகக் கையேட்டு படத்தில் தென்பகுதிகளில் தமிழக [இன்றைய கேரளத்தையும் சேர்த்து] கடற்கரைப் பகுதிகளே முக்கியத்துவம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
------------------------------------------------------------------------------------------------------------
@ அய்யா கண்ணன் அவர்களே,
தங்களின் தகவல்கள் மேலும் பல மேலதிக தகவல்களைத் தருகின்றன. மிக்க நன்றி.
--------------------------------------------------------------------------------------------------------------