'' நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
என்மையும் என்றிவை விளங்கத் தோன்றின்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப..''
நுட்பம்,சுருக்கம்,விளக்கம், எளிமை என்னும் நான்கினை இலக்கணமாகக்
கொண்டது. பழமொழிக்கு தொல்காப்பியர் வகுத்த இலக்கணம்.
ஏட்டு இலக்கியத்தை விட வாய்மொழி இலக்கியம் பழையானது, நாடோடி
இலக்கியத்தின் ஒரு பகுதியாக பழமொழி பேசப்படுகிறது.இவைகள் மனித
குலத்தின் பல்வேறு சமூக பரிணாம வளர்ச்சியாகவும். கால எல்லை தாண்டி
எல்லா காலத்திற்கும் பொருத்தமாக அமைகிறது பழமொழிகள்,
அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
1. அசைந்து தின்றது மாடு. அசையாமல் தின்கிறது வீடு.
2. அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும்.
3. அக்கினி குண்டத்தில் நெய் வார்த்தது மாதிரி
4. அதிர்ஷ்டம் உள்ளவன் அலை கடலிலும் அமிழான்
5. அகல இருந்தால் பகையும் உறவாகும்
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivamhttp://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/