தமிழ்மணி - மணிக்கொடியை உயர்த்திய பி.எஸ்.இராமையா

104 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Sep 4, 2010, 6:40:04 PM9/4/10
to Min Thamizh

த்தலகுண்டு தமிழ்நாட்டில் உள்ள சிறு கிராமம்.

அந்த மண்ணுக்குத் தனி மகிமை உண்டு.

படைப்பிலக்கிய எழுத்தாளர்களால்தான் இலக்கியத்தில் அந்தப் பெயர் பதிக்கப்பட்டது.

வத்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய ஐயர் - மீனாட்சியம்மாள்  தம்பதிக்கு கடைக்குட்டிமகனாக, 1905ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி பி.எஸ்.
ராமையா பிறந்தார்.

படிக்க வசதியில்லை.

ஆனால், படிப்பில் ஆர்வம் கொண்ட
ராமையா, வாரச் சாப்பாடு சாப்பிட்டும், உபகாரச் சம்பளம் பெற்றும் நான்காவது படிவம் வரையில் படித்தார்.

வேலை தேடி சென்னைக்குப் புறப்பட்டார்.

படித்த படிப்பு நாலாவது பாரத்துக்கு (ஒன்பதாம் வகுப்பு) மதிப்பு இருந்தாலும், அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.

ஊருக்குத் திரும்பலாம் என்று நினைத்தபோது, திருச்சியில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை கிடைத்தது.

ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை.

பிறகு கடலூரில் சிறு சிறு பணிகள் செய்தார். அதுவும் ஒத்துவரவில்லை.

மீண்டும் சென்னைக்குத் திரும்பி பற்பல இடங்களில் பணியாற்றி, ஆர்ய பவன் உணவுச்சாலையில் சர்வர் வேலையில் சேர்ந்தார்.

18 வயது வாலிபரான
ராமையா, செய்யாத தொழிலில்லை. பார்க்காத வேலையில்லை.

முன்பே நெஞ்சில் கனலை வளர்த்துக்கொண்டிருந்த தேசிய இயக்கம்,
ராமையாவைச் சிலிர்த்து எழச் செய்தது.

காந்தி தொடங்கிய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டதால், கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்றார்.

அப்போதுதான் அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.சிறையில், வ.
ரா., ஏ.என்.சிவராமன், சங்கு சுப்பிரமணியம் முதலியவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது.

சிறைத் தண்டனை முடிந்தவுடன் கதர் விற்பனை நிலையத்தில் வேலை கிடைத்தது.

கதர் ஆடைகளைத் தோளில் சுமந்தபடி விற்பனை செய்தார்.

மனதில் புதுத் தெம்பு ஏற்பட்டது.

காந்திஜியின் நிர்மாணத் திட்டங்களில் ஈடுபாடு ஏற்பட்டது.

தொண்டர் படை முகாமிலிருந்து தொண்டாற்றினார்.

ஓரணா விலையுள்ள சுதந்திர இயக்கப் புத்தகங்களை விற்பனை செய்தார்.

தூத்துக்குடி,
ராஜபாளையம், திருநெல்வேலி, மதுரை, ஈரோடு முதலிய ஊர்களுக்குச் சென்று தொண்டர் படை முகாம்கள் அமைத்தார்.

1932இல் மீண்டும் சென்னைக்கு வந்த
ராமையாவுக்கு அடுத்து என்ன செய்வதென்ற  குழப்பம் ஏற்பட்டது.

காங்கிரஸ் இயக்கத்து ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டார்.

முன்பே ஜே.ஆர்.ரங்கராஜு நாவல்கள்,
ராஜம் ஐயர், கமலாம்பாள் சரித்திரம் முதலியவற்றைப் படித்திருந்ததால், படைப்பிலக்கிய ஆர்வமும் சேர்ந்திருந்தது.

"ஆனந்த விகடன்" சிறுகதைப் போட்டி அறிவிப்பைப் பார்த்தார்.

அதற்குக் கதை எழுதத் தூண்டியவர் சங்கு சுப்பிரமணியம்தான்.

அவர் தீவிர தேசிய இயக்கக் கொள்கை உடையவர்.

பாரதி பக்தர். ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டிக்குக் கதை அனுப்பினார்
ராமையா.

முதலிடம் பெற்ற கதைக்கு நூறு ரூபாய் பரிசு கிடைத்தது.


ராமையா எழுதிய "மலரும் மணமும்" கதைக்கு ஆனந்த விகடனின் ஊக்கப்பரிசாக பத்து ரூபாய் சன்மானம் கிடைத்தது.கதையை அனுப்பிய அவசரத்தில் எழுதியவர் பெயரை எழுத மறந்துவிட்டார் ராமையா.

கதையை வெளியிட்டு, எழுதியவர் பெயரைத் தெரிவிக்கவும் என்று பத்திரிகையில் எழுதிய பிறகே, எழுதியது தான்தான் என்று தெரிவித்து அந்தப் பத்து ரூபாயைப் பெற்றார்.

அதன்பிறகு, பத்திரிகை உலகப் பணி அவரைக் கவர்ந்தது.

"ஜயபாரதி" இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

எழுத்தாளர்களின்
லட்சியத்தை வெளியிடும் ஜயபாரதி, சுதந்திரச் சங்கு, காந்தி ஆகிய இதழ்களைப் பற்றி இந்தத் தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ளவேண்டும்.

1933ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டதுதான் மணிக்கொடி.

ஸ்டாலின் சீனிவாசனின் ஆர்வமும்,
லட்சியமும்தான் மணிக்கொடி பிறக்கக் காரணம்.

"மணிக்கொடி" இதழ் பி.எஸ்.
ராமையாவை மிகவும் கவர்ந்தது.

"மணிக்கொடி"க்குத் தொடர்ந்து எழுதினார்.

மணிக்கொடிக்கு விளம்பரம் சேகரித்துக் கொடுக்கும் பணியிலும் இறங்கினார்.

"மணிக்கொடி காலத்துக்குப் பின் தமிழ்நடையில் படிப்பவர், கேட்பவர் உள்ளங்களில் கனல் மூட்டும் விசையும் வேகமும் திராவிட முன்னேற்றக் கழக எழுத்தாளர் சிலரிடம் இருக்கின்றன. இந்த வகையில், அறிஞர் அண்ணாதுரை மற்றவர்களுக்கு ஒருபடி மேலே நிற்கிறார். ப.ஜீவானந்தத்துக்கு எழுத்திலும், பேச்சிலும் விசையும் வேகமும் கொண்ட தமிழ்நடை கூடியிருக்கிறது; கனல் இருக்கிறது''

என்ற தம் தூய கணிப்பை தாம் எழுதிய "மணிக்கொடி காலம்" என்ற தொடரில் எழுதி, தமிழுக்குப் பெரும் தொண்டு செய்திருக்கிறார் பி.எஸ்.
ராமையா.

"மலரும் மணமும்" வெளிவந்தபோது அவருக்குச் சிறுகதை எழுதும் நுணுக்கங்கள் தெரியாது.

"மலரும் மணமும்" பிரசுரமான பிறகு அவருக்குப் புதிய உற்சாகம் ஏற்பட்டது.

"மணிக்கொடி"யின் வளர்ச்சியில் நகமும், சதையுமாக இருந்த
ராமையா, பல சிறுகதைகள் எழுதிக் குவித்தார்.

ராஜாஜியிடமிருந்து கட்டுரை வாங்கி "மணிக்கொடி"யில் வெளியிட்டார் ராமையா.

பலருக்கு அதில் அதிருப்தி.

"கல்கி"யைத் தவிர வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதாத
ராஜாஜி, "மணிக்கொடி"யில் தொடர்ந்து எழுதுவதாக வாக்களித்தார்.

ஆனால், அதை வெளியிடும் பேறு "மணிக்கொடி"க்கு இல்லை.

சிறுகதை இலக்கியத்தைப் பற்றி பி.எஸ்.
ராமையா அழுத்தமான கொள்கை உடையவர்.

"இலக்கியம் என்ற ஆலமரத்தின் ஒரு கிளையாக சிறுகதையைச் சொல்லலாம்" என்றார்.சி.சு.செல்லப்பா, பி.எஸ்.
ராமையாவின் பண்பு, எழுத்து, வாழ்க்கை மூன்றையும் அறிந்தவர். தன் புதினம் வெளிவருவதற்கு முன்பே தன் சொந்தச் செலவில், "ராமையாவின் சிறுகதைப் பாணி" என்ற நூலை வெளியிட்டார்.

சிறுகதை இலக்கியத்தைப் பெரிதும் விரும்புபவர்கள் அந்த நூலைக் கட்டாயம் படிக்க வேண்டும்.
ராமையாவின் வாழ்க்கைச் சரிதத்தை விவரமாக அறிய, சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற "மணிக்கொடி காலம்" என்ற நூலைப் படிக்க வேண்டும்.

அவர் வளர்த்த, தியாகம் செய்த, சிறிது காலத்துக்குக் (மணி) கொடியைத் தாங்கிப்பிடித்த "மணிக்கொடி" என்று வாசகர்களும், எழுத்தாளர்களும், விமர்சகர்களும் மார்தட்டிக் கொள்பவர்களும் பேசும்படியாகச் செய்த "மணிக்கொடி"யிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

பின்னர்,
ராமையா தன் புது வாழ்க்கையை முடிவு செய்துவிட்டார்.

திரைப்படத் துறையில் கவனம் செலுத்தினார்; நாடகம் எழுதினார்; திரைப்படத் தயாரிப்புக்கு உதவினார்.

ஆனால், அவர் வாழ்க்கையை நடத்தியது, சிறுகதைக் கலைக்குத் தொண்டு செய்வதன் மூலமாக ஆனந்த விகடன், தினமணி கதிர் (முதல் ஜன்மம்), குமுதம் பத்திரிகைகளில் வாராவாரம் கதைகள் எழுதி, சன்மானத் தொகையைப் பெற்றார்.

சி.சு.செல்லப்பாவின் பட்டியல்படி அவர் 304 சிறுகதைகள், மூன்று நாவல்கள், ஆறு நாடகங்கள் எழுதியுள்ளார்.

1957இல் "பிரசிடென்ட் பஞ்சாட்சரம்" என்ற நாடகம் எழுதியுள்ளார். அந்த நாடகம், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு பெரும் வெற்றிகண்டது.

"போலீஸ்காரன் மகள்" என்ற நாடகம், மேடையில் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்த நாடகமும் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

பி.எஸ்.
ராமையா, வெற்றிலை, சீவலுடன் புகையிலை போடும் பழக்கத்தால், அவரது தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டது.

பி.எஸ்.
ராமையா, 1983ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி (78வது வயதில்) காலமானார் என்ற செய்தியைக் கேட்டு எழுத்துலகமும், வாசகர் உலகமும் கண்ணீர் விட்டது.

சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டதையும் மணிக்கொடிக்காக அவர் செய்த தியாகத்தையும் எழுத்தில் அடக்கிவிட முடியாது.

கலைமாமணி விக்கிரமன்

நன்றி:- தினமணி

Dhivakar

unread,
Sep 5, 2010, 2:20:02 AM9/5/10
to mint...@googlegroups.com
கண்ணனார், ஒரு நல்ல பதிவு.

எனக்கு மிகவும் பிடித்த சினிமா இயக்குநர் பாசு சாட்டர்ஜி. யதார்த்தமான நகைச்சுவை படங்களை இவர் எடுப்பது போல யாருமே எடுத்ததில்லை என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். அவர் எடுத்த சில நல்ல படங்களுல் ஒன்று, சிட்சோர். ஒரு பத்து முறை தேவி பாலா திரையரங்கில் பார்த்திருப்பேனோ என்னவோ, எண்ணிக்கை மறந்துவிட்டது.

பின்னால் தெரிந்தது. இந்த ’சிட்சோர்’ படம், பி.எஸ்.ராமையாவின் ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’ கதையின் இந்தி வடிவம் என்பது, பி.எஸ். ராமையா சினிமா உலகில் இருப்பதால் இது சாத்தியம் என்று நினைத்திருந்தேன். இருந்தாலும் அந்தப் படம் எடுத்தவர்கள் ஒரு வரி, ஒரிஜினல் கதை பி.எஸ்.ராமையா என்று போட்டிருக்கலம் என்று தோன்றியது. போட்டிருந்தால் ஒருவேளை ஆர்.கே நாராயண் அளவில் அல்லாமல் பி.எஸ். ராமய்யா குறைந்தபட்சம் இந்தியா முழுவதும் பேசப்பட்டிருப்பார்.

இதே போல இன்னொரு தமிழரின் நாடகமும் இந்தி புத்திசாலிகளால் கோல்மால் அதாவது தில்லுமுல்லு செய்து ‘கொள்ளையடிக்கப்பட்டது’.

ஆசிரியர் தினமான இன்று அவரைப் பற்றி எழுதுவதும் சிறப்புதான். என்னுடைய ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியர் பாலு 1970 களில் போட்ட நாடகம்தான் பின்னாளில் ‘கோல்மால்’ திரைப்படமாக வந்தது. அப்படியே அட்டகாபி என்றே சொல்லலாம். கோல்மால் கதைவசனம் - குல்சார் என்ற பெயர் வேறு. அதையே தமிழில் ‘தில்லுமுல்லு’ என எடுத்து பாலசந்தரும் ரஜினியும் பேர் வாங்கினர். பாலுசார் மனதளவில் அந்தக் காலகட்டத்தில் பாதிக்கப்பட்டது எனக்குத் தெரியும்.

திவாகர்

2010/9/5 Kannan Natarajan <thar...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Swaminathan Venkat

unread,
Sep 5, 2010, 2:34:30 AM9/5/10
to mint...@googlegroups.com
Dear Dhivakar,
 
These things happen in Tamil, Hindi productions. It is common knowledge, many tamil films are adaptions, acknowledged or othewise. mostly it is the latter. our Iyakkunar Sikaram is a plagiarist par excellence.
 
Now coming to B.S. Ramiah, he is a self taught man in many areas. And in everyone of those areas, he made an impact and name.Let us acknowledge that ungrudgingly.
 
Having said that, the fact is, President Panchatcharam is again an unacknowledged adaptation of Nicolai Gogol's Inspector. This I have read from Ka.Naa.Subramaniam's writings  somewhere. Personally there is nothing much to commend in the play President Panchatcharam. Though I have not searched for Gogol to confirm it, I take Ka.Naa.Subramaniam's word for it.
 
Seva Stage was hunting for plays and playwrights. Janakiraman, Ramiah etc. were asked to write plays and they oblidged. There is nothing more to be said about it.
 
yours, swaminathan

Geetha Sambasivam

unread,
Sep 5, 2010, 2:34:22 AM9/5/10
to mint...@googlegroups.com
பி.எஸ்.ராமையாவின் நாவல்களும் நன்றாய் இருக்கும், என் மனதில் பதிந்திருக்கும் ஒரு கதை, இரு காதலர்கள், காதலன் சுதந்திரப் போராட்டத்தில் புரட்சி வீரன் என நம்புகிறேன். போலீஸுக்குப் பயந்து ஒளிந்து, மறைந்து கொண்டு வந்து மனைவியாகிவிட்ட காதலியைப் பார்த்துக் குடும்பம் நடத்திவிட்டுப் போயிருப்பான்.  அந்தக் காதலியைக் காதலித்த வேறொருவர் அவர் தான் தியாகம் செய்திருப்பார், காதலர்கள் ஒன்று சேர, அவர் தான் இந்தப் பெண்ணைப் பார்த்துக்கொண்டிருந்திருப்பார் அவன் இல்லாத காலங்களில். பின்னர் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்து குழந்தையும் பிறக்கும், சிறையிலிருந்து வெளிவந்த காதலனுக்கு இருவர் மீதும் சந்தேகம் வரும்.  அந்தப் பெண் மனம் உடைந்துவிடுவாள், ஆனாலும் ஒப்புக்குக் குடும்பம் நடத்துவாள் என்று முடிந்திருக்கும். கதையின் பெயர் மறந்துவிட்டது. 

இந்தக் கதைதான் முடிவு மாற்றப் பட்டு சிவாஜி, கே.ஆர்.விஜயா, முத்துராமன் நடித்த ஒரு படமாக நெஞ்சிருக்கும் வரை?? எடுக்கப் பட்டு வெற்றி கண்டது.  முடிவில் கணவன், மனைவி ஒன்று சேருவதாய்த் திரைப்படத்தில் வரும்.  பி.எஸ்.ராமையா கதையில் அந்தப் பெண் சந்தேகப் பட்டுக் கணவன் கேட்ட கேள்வியிலேயே மனம் உடைந்துவிட்டதாய் எழுதி இருப்பார். பல கதைகள் பி.எஸ்.ராமையாவின் கதைகள் திரைப்படமாய் எடுக்கப் பட்டதாய் என் அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

மணிக்கொடி காலம் புத்தகமும் ஹூஸ்டன் மீனாக்ஷி கோவில் நூலகத்தில் இருந்து வாங்கிப் படிச்சிருக்கேன். அருமையான தொகுப்பு.  மணிக்கொடி நினைவுகள் போல் என் நினைவுகளும் அதைச் சுற்றி...................

2010/9/5 Kannan Natarajan <thar...@gmail.com>

--

srirangammohanarangan v

unread,
Sep 5, 2010, 2:50:09 AM9/5/10
to mint...@googlegroups.com
President Panchatcharam was staged by my father, Mr R Venugopal, in Trichy thru amateur players. My father did the role of Panchatcharam in the drama.
:--))

 

Dhivakar

unread,
Sep 5, 2010, 2:54:09 AM9/5/10
to mint...@googlegroups.com
Thank you Sir,


>>>our Iyakkunar Sikaram is a plagiarist par excellence.<<<

I asked him once when he came to Vizag that why your films has got confused climaxes every time.

He agreed with me (Aammaampa.. but most of them success, so not to worry).

Coming back to President Panchatcharam, what you have commented is absolutely right. Though that was an incidental type story, the picturisation was  very good. The director took every effort to make it an absolute with the combination of classical hindustani and Jusudas. I think this one and half an hour picture ran for some 6 months.

Dhivakar

2010/9/5 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>
Dear Dhivakar,
 
These things happen in Tamil, Hindi productions. It is common knowledge, many tamil films are adaptions, acknowledged or othewise. mostly it is the latter. 
 



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

devoo

unread,
Sep 5, 2010, 4:46:59 AM9/5/10
to மின்தமிழ்
*சிட்சோர்*

சித் சோர் - சித்த சோரன்

கதை சோரம் செய்யப்பட்டதால் பாடல்கள் சித்தத்தைச் சோரம் செய்கின்றனவோ
தெரியவில்லை; மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள்.
ஜேஸுதாஸ் ஏனோ ஹிந்தி திரை உலகில் நிலைக்கவில்லை

http://www.youtube.com/watch?v=sGoERx8-x1o


தேவ்


On Sep 5, 1:20 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> கண்ணனார், ஒரு நல்ல பதிவு.
>
> எனக்கு மிகவும் பிடித்த சினிமா இயக்குநர் பாசு சாட்டர்ஜி. யதார்த்தமான
> நகைச்சுவை படங்களை இவர் எடுப்பது போல யாருமே எடுத்ததில்லை என்பது என் தனிப்பட்ட
> அபிப்ராயம். அவர் எடுத்த சில நல்ல படங்களுல் ஒன்று, சிட்சோர். ஒரு பத்து முறை
> தேவி பாலா திரையரங்கில் பார்த்திருப்பேனோ என்னவோ, எண்ணிக்கை மறந்துவிட்டது.
>
> பின்னால் தெரிந்தது. இந்த ’சிட்சோர்’ படம், பி.எஸ்.ராமையாவின் ‘பிரசிடெண்ட்
> பஞ்சாட்சரம்’ கதையின் இந்தி வடிவம் என்பது, பி.எஸ். ராமையா சினிமா உலகில்
> இருப்பதால் இது சாத்தியம் என்று நினைத்திருந்தேன். இருந்தாலும் அந்தப் படம்
> எடுத்தவர்கள் ஒரு வரி, ஒரிஜினல் கதை பி.எஸ்.ராமையா என்று போட்டிருக்கலம் என்று
> தோன்றியது. போட்டிருந்தால் ஒருவேளை ஆர்.கே நாராயண் அளவில் அல்லாமல் பி.எஸ்.
> ராமய்யா குறைந்தபட்சம் இந்தியா முழுவதும் பேசப்பட்டிருப்பார்.
>
> இதே போல இன்னொரு தமிழரின் நாடகமும் இந்தி புத்திசாலிகளால் கோல்மால் அதாவது
> தில்லுமுல்லு செய்து ‘கொள்ளையடிக்கப்பட்டது’.
>
> ஆசிரியர் தினமான இன்று அவரைப் பற்றி எழுதுவதும் சிறப்புதான். என்னுடைய
> ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியர் பாலு 1970 களில் போட்ட நாடகம்தான் பின்னாளில்
> ‘கோல்மால்’ திரைப்படமாக வந்தது. அப்படியே அட்டகாபி என்றே சொல்லலாம். கோல்மால்
> கதைவசனம் - குல்சார் என்ற பெயர் வேறு. அதையே தமிழில் ‘தில்லுமுல்லு’ என எடுத்து
> பாலசந்தரும் ரஜினியும் பேர் வாங்கினர். பாலுசார் மனதளவில் அந்தக் காலகட்டத்தில்
> பாதிக்கப்பட்டது எனக்குத் தெரியும்.
>
> திவாகர்
>

> 2010/9/5 Kannan Natarajan <thara...@gmail.com>
>
>
>
> >   *வ*த்தலகுண்டு தமிழ்நாட்டில் உள்ள சிறு கிராமம்.

> ...
>
> read more »

Sri Sritharan

unread,
Sep 5, 2010, 6:08:02 AM9/5/10
to மின்தமிழ்


பி.எஸ்.இராமையா 1943 இல் குபேர குசேலா என்ற திரைப்படத்தை ஆர். எஸ். மணியுடன் இணைந்து தயாரித்தார்.

விக்கியில் குபேர குசேலா:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE

அன்புடன்
சிறீதரன்


________________________________
> Date: Sun, 5 Sep 2010 12:24:09 +0530
> Subject: Re: [MinTamil] தமிழ்மணி - மணிக்கொடியை உயர்த்திய பி.எஸ்.இராமையா
> From: venkdh...@gmail.com
> To: mint...@googlegroups.com

geeyes

unread,
Sep 5, 2010, 6:20:24 AM9/5/10
to மின்தமிழ்

On Sep 5, 1:46 pm, devoo <rde...@gmail.com> wrote:
>        *சிட்சோர்*
>
> சித் சோர் - சித்த சோரன்
>

> தேவ்

'உள்ளம் கவர் கள்வன்' பிறந்து சில நாட்களே ஆகின்றன !!!

மறக்க இயலாத பாடல்கள் அவை தேவ் சார்.

K R A Narasiah

unread,
Sep 5, 2010, 10:29:13 AM9/5/10
to mint...@googlegroups.com
இது பலருக்குத் தெரியாத விஷயமாக இருக்கலாம்.
சி சு செல்லப்பா, சிறுகதை தமிழில் வளரவில்லை என்று குறிப்பிட்டு, 1947 க்குப் பிறகு, தமிழ் சிறுகதிஅகள் ஒரு தேக்க நிலையை அடைந்து விட்டதாகக் குறிப்பிட்டார். (சுதேசமித்திரன் தீபாவளி மலர் 1950)
 அர்தற்கு அவர் சொன்ன காரணம் இலக்கிய விமர்சனம் வளரவில்லை என்பதுதான்! இத எதிர்த்து அகிலன், ரா. பாலகிருஷ்ணன் ஜடாதரன் முதலானோர் சுதேசமித்திரனிலேயே எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்த சர்ச்சையைப் பற்றி பி. எஸ் ராமையா ரா. பாலகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அது சுதேசமித்த்ரனில் வெளியிடப்பட்டது. அதில் பி. எஸ் ராமையா இவ்வாறு குறிப்பிட்டார். “காலச்சக்கரம் சுழலும் போது இலக்கியப் படைப்புகளின் வடிவம், கனம், ஆழம் எல்லாம் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். ஆகவே அவற்றை எடை போட, உரைத்துப் பார்க்க, படிக்கல், உரைகற்களை மாற்றிக் கொள்ள வேண்டி இருக்கும் என்ற உண்மையை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. செல்லப்பாவும், அவருக்கு ஆதர்ச உண்மைகாட்டிய க. நா. சு வும் இந்த நிலமையை அடைந்து விட்டதைக் கண்டு எனக்குச் சிறிது வருத்தம் தான்”
 
இன்னும் எழுதியிருந்தார். ஆனால் இது போதும் ச்ரெல்லப்பவைக் குறித்த அவரது கருத்து தெரிந்து கொள்ள. க. நா. சு வைப் பற்றிய எனது சொந்த அபிப்ராயம் பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவரது கருத்துகளில் பல எனக்குப் பிடிக்காதவை.
 
பிளாஜியாரிசம் தமிழுக்குப் புதிதல்ல!
 
நரசய்யா
2010/9/5 geeyes <gmsan...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages