சங்ககாலம் - மணலினும் பலவே

252 views
Skip to first unread message

Mukunthan Pathmanesan

unread,
Aug 20, 2016, 2:42:43 AM8/20/16
to mint...@googlegroups.com
சங்ககாலம் - மணலினும் பலவே


சங்ககாலப் பாடல்களில் மணலுடன் ஒப்பிட்டு நீண்டநாள் வாழவேண்டும் என்னும் வாழ்த்து மற்றும் நிறைய எனப் பொருள்படும் வகையில் சில பாடல்களில் காணப்படுகின்றது.  அப்பாடல்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.


புறநானூறு  -  9 

முந்நீர் விழவி னெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே

இங்கே பஃறுளி ஆற்று மணல் குறிப்பிடப்படுகின்றது. இங்கே முந்நீர் விழா கொண்டாடப்பட்டிருக்கலாம்.

 

பதிற்றுப் பத்து-  ஐந்தாம் பத்து

காஞ்சிஅம் பெருந் துறை மணலினும் பலவே!

காஞ்சி ஆற்று மணல் குறிப்பிடப்படுகின்றது. இங்கே தீம் நீர் விழா கொண்டாடப்பட்டிருக்கிறது.

 

சிலப்பதிகாரம் - நடுகல் காதை

நின் வாழ்நாட்கள்

தண் ஆன்பொருநை மணலினும் சிறக்க!

 

அகநானூறு 93

தண் ஆன்பொருநை மணலினும் பலவே

 

புறநானூறு   387

கல்லென் பொருநை மணலினும், ஆங்கண்   

பல் ஊர் சுற்றிய கழனி   

எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.

 

ஆன்பொருநை ஆற்று மணல் குறிப்பிடப்படுகின்றது

 

 

புறநானூறு   55

செந்தில் நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை,   

கடு வளி தொகுப்ப ஈண்டிய   

வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!   

இங்கே கடற்கரை மணல் குறிப்பிடப்படுகின்றது.

 

 

புறநானூறு  43

சிறக்க நின் ஆயுள்   

மிக்கு வரும் இன் நீர்க் காவிரி   

எக்கர் இட்ட மணலினும் பலவே!

காவிரி ஆற்று மணல் குறிப்பிடப்படுகின்றது.

 

 

புறநானூறு  136 

தண் புனல் வாயில் துறையூர் முன்துறை   

நுண் பல மணலினும் ஏத்தி,   

உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே.

துறையூர் ஆற்று மணல் குறிப்பிடப்படுகின்றது. (காவிரியுடன் கலக்கும் சிற்றாறுகளில் ஒன்றாக இருந்திருக்கலாம்.)



 

இங்கே குறிப்பிடப்பட்ட பாடல்கள் முழுமையாக்க் கீழே தரப்பட்டுள்ளது.

 


புறநானூறு  -  9 - பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை  நெட்டிமையார் பாடியது

ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவி னெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே

ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்

தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென

இத்தொடரும்

சிலப்பதிகாரம் - வஞ்சின மாலையில் வரும்

பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,

மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு,

தீத் திறத்தார் பக்கமே சேர்க

எனும் தொடரும் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.



 
பதிற்றுப் பத்து-  ஐந்தாம் பத்து -  கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை பரணர் பாடியது
பைம் பொன் தாமரை பாணர்ச் சூட்டி,
ஒள் நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி,
கெடல் அரும் பல் புகழ் நிலைஇ, நீர் புக்கு,
கடலொடு உழந்த பனித் துறைப் பரதவ!
'
ஆண்டு நீர்ப் பெற்ற தாரம், ஈண்டு, இவர்
கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும்
கல்லா வாய்மையன் இவன், எனத் தத்தம்
கை வல் இளையர் நேர் கை நிரைப்ப,
வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை,
முனை சுடு கனை எரி எரித்தலின், பெரிதும்
இதழ் கவின் அழிந்த மாலையொடு, சாந்து புலர்
பல் பொறி மார்ப! நின் பெயர் வாழியரோ
நின் மலைப் பிறந்து, நின் கடல் மண்டும்
மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின்,
பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை,
மேவரு சுற்றமோடு உண்டு, இனிது நுகரும்,
தீம் புனல், ஆயம் ஆடும்,
காஞ்சிஅம் பெருந் துறை மணலினும் பலவே!



சிலப்பதிகாரம் - நடுகல் காதை

செங்குட்டுவனை மாடலன் வாழ்த்தியது
புரையோர்-தம்மொடு பொருந்த உணர்ந்த
அரைசர் ஏறே! அமைக, நின் சீற்றம்!
மண் ஆள் வேந்தே! நின் வாழ்நாட்கள்
தண் ஆன்பொருநை மணலினும் சிறக்க!



அகநானூறு 93 - வினை முற்றி மீளலுறும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கணக்காயனார் மகனார் நக்கீரனார்
 
கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,   
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,   
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து;   
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்   
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன   
பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும்   
செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்;   
அரண் பல கடந்த, முரண் கொள் தானை,   
வாடா வேம்பின், வழுதி கூடல்   
நாள் அங்காடி நாறும் நறு நுதல்   
நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு,   
வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர்,   
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை   
நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து,   
நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப,   
முயங்குகம் சென்மோ நெஞ்சே! வரி நுதல்   
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து,   
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி,   
ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை,   
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை   
திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை   
தெண் நீர் உயர் கரைக் குவைஇய   
தண் ஆன்பொருநை மணலினும் பலவே.
   
(
இங்கே கோதை எனும் அரசன் குறிப்பிடப்படுகின்றான். கருவூர் குறிப்பிடப்படுகின்றது . இங்கே பொருநை ஆறு ஓடுவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய மற்றைய அரசர்களை வைத்து கோதை பற்றிப் பார்க்கவேண்டும்)


புறநானூறு   55 - பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடியது.

ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ,   
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி,   
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த   
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்   
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல,   
வேந்து மேம்பட்ட பூந் தார் மாற!   
கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும்,   
நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும், என   
நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட   
அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்;   
அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது,   
'
பிறர்' எனக் குணம் கொல்லாது,   
ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும்,   
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்,   
வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,   
உடையை ஆகி, இல்லோர் கையற,   
நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர்   
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்   
நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை,   
கடு வளி தொகுப்ப ஈண்டிய   
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!   
 
   

(ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ,    

ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி,   

பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த   

கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்   

பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல,   

இங்கே பாற்கடல் கடந்த செயலையும்

சிலப்பதிகாரம் - ஆய்ச்சியர் குரவை

பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்

....................................

வடவரையை மத்து ஆக்கி, வாசுகியை நாண் ஆக்கி,

கடல் வண்ணன்! பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே

சிலப்பதிகாரம் கூறுவதையும் ஒப்பிடலாம்.

 

சிலப்பதிகாரம்  குன்றக் குரவை

சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்

ஏரகமு நீங்கா இறைவன்கை வேலன்றே

பாரிரும் பௌவத்தி னுள்புக்குப் பண்டொருநாள்

சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே)




 
புறநானூறு   387 -  சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட் பாலியாதன் பாடியது.  
வள் உகிர வயல் ஆமை   
வெள் அகடு கண்டன்ன,   
வீங்கு விசிப் புதுப் போர்வைத்   
தெண் கண் மாக் கிணை இயக்கி, 'என்றும்   
மாறு கொண்டோர் மதில் இடறி,   
நீறு ஆடிய நறுங் கவுள,   
பூம் பொறிப் பணை எருத்தின,   
வேறு வேறு பரந்து இயங்கி,   
வேந்துடை மிளை அயல் பரக்கும்   
ஏந்து கோட்டு இரும் பிணர்த் தடக் கை,   
திருந்து தொழில் பல பகடு   
பகைப் புல மன்னர் பணிதிறை தந்து, நின்   
நகைப் புலவாணர் நல்குரவு அகற்றி,   
மிகப் பொலியர், தன் சேவடி அத்தை!' என்று,   
யான் இசைப்பின், நனி நன்று எனா,   
பல பிற வாழ்த்த இருந்தோர் என்கோ?.........   
மருவ இன் நகர் அகன்.................................   
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி,   
வென்று இரங்கும் விறல் முரசினோன்,   
என் சிறுமையின், இழித்து நோக்கான்,   
தன் பெருமையின் தகவு நோக்கி,   
குன்று உறழ்ந்த களிறு என்கோ?   
கொய் உளைய மா என்கோ?   
மன்று நிறையும் நிரை என்கோ?   
மனைக் களமரொடு களம் என்கோ?   
ஆங்கு அவை, கனவு என மருள, வல்லே, நனவின்   
நல்கியோனே, நசைசால் தோன்றல்,   
ஊழி வாழி, பூழியர் பெரு மகன்!   
பிணர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள்
செல்வக் கடுங்கோ வாழியாதன்   
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணித்து, இவண்   
விடுவர் மாதோ நெடிதே நி   
புல் இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும்   
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண்   
பல் ஊர் சுற்றிய கழனி   
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.

(இங்கே செல்வக் கடுங்கோ வாழியாதன் குறிப்பிடப்படுகின்றான். புல் இலை வஞ்சி எனக் குறிப்பிடப்படுவதால் வஞ்சி மரமே குறிப்பிடப்பட்டிருக்கலாம்… வஞ்சி ஊர் எனக் கொள்ளலாமா தெரியவில்லை. இங்கே பொருநை ஆறு ஓடுவதாக்க் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

 

பூவா வஞ்சி - ஊர்

புல்லிலை வஞ்சி – மரம்??

பூத்த வஞ்சி - பூ  

 )



புறநானூறு  43 -   சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமப்பல் கண்ணணும் வட்டுப் பொருவுழி, கை கரப்ப, வெகுண்டு வட்டுக் கொண்டு எறிந்தானை, 'சோழன் மகன் அல்லை, என, நாணியிருந்தானைத் தாமப்பல் கண்ணனார் பாடியது.
 
நிலமிசை வாழ்நர் அலமரல் தீர,   
தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி,   
கால் உணவு ஆக, சுடரொடு கொட்கும்   
அவிர்சடை முனிவரும் மருள, கொடுந்சிறைக்   
கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து, ஒரீஇ,   
தன் அகம் புக்க குறு நடைப் புறவின்   
தபுதி அஞ்சிச் சீரை புக்க   
வரையா ஈகை உரவோன் மருக!   
நேரார்க் கடந்த முரண் மிகு திருவின்   
தேர் வண் கிள்ளி தம்பி! வார் கோல்,   
கொடுமர மறவர் பெரும! கடு மான்   
கை வண் தோன்றல்! ஐயம் உடையேன்:   
'
ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்   
பார்ப்பார் நோவன செய்யலர்; மற்று இது   
நீர்த்தோ நினக்கு?' என வெறுப்பக் கூறி,  
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்,   
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே;   
'
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்   
இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும்' என,   
காண்தகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்,   
யானே பிழைத்தனென்; சிறக்க நின் ஆயுள்   
மிக்கு வரும் இன் நீர்க் காவிரி   
எக்கர் இட்ட மணலினும் பலவே!
   


புறநானூறு  136  அவனைத் (ஆய் அண்டிரன்) துறையூர் ஓடைகிழார் பாடியது.
 
யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப   
இழை வலந்த பல் துன்னத்து   
இடைப் புரை பற்றி, பிணி விடாஅ   
ஈர்க் குழாத்தோடு இறை கூர்ந்த   
பேஎன் பகை என ஒன்று என்கோ?   
உண்ணாமையின் ஊன் வாடி,   
தெண் நீரின் கண் மல்கி,   
கசிவுற்ற என் பல் கிளையொடு   
பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ?   
அன்ன தன்மையும் அறிந்து ஈயார்,   
'
நின்னது தா' என, நிலை தளர,   
மரம் பிறங்கிய நளிச் சிலம்பில்,   
குரங்கு அன்ன புன் குறுங் கூளியர்   
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ?   
'
ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்'   
எனக் கருதி, பெயர் ஏத்தி,   
வாய் ஆர நின் இசை நம்பி,   
சுடர் சுட்ட சுரத்து ஏறி,   
இவண் வந்த பெரு நசையேம்;   
'
எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்;   
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப' என,   
அனைத்து உரைத்தனன் யான் ஆக,   
நினக்கு ஒத்தது நீ நாடி,  
நல்கினை விடுமதி, பரிசில்! அல்கலும்,   
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை   
நுண் பல மணலினும் ஏத்தி,   
உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே.
   

(குரங்கு அன்ன புன் குறுங் கூளியர்   - இங்கே குரங்கு போன்ற கூளியர் என்று கூறப்படுபவர்களுக்கும் புறநானூறு 378 கூறும் குரங்கு மற்றும் இராமாயணத்தில் வரும் வானரர்களுக்கும் தொடர்புண்டா எனப் பார்க்கவேண்டும்.
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை, 

நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்   

செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,)

 

 

நன்றி,

முகுந்தன்



 

iraamaki

unread,
Aug 20, 2016, 3:27:52 AM8/20/16
to mint...@googlegroups.com
அன்பிற்குரிய முகுந்தன்,
 
தூங்குபவரை எழுப்பலாம். தூங்குவதாய்ப் பாசாங்கு செயபவரை ஒருநாளும் எழுப்ப முடியாது.  நீங்கள் யாருக்காக இத்தனை எடுகோள்களை எடுத்துக் கொடுக்கிறீர்களோ, அவர் மூலநூல்களை அவற்றின் பொருளறிந்து ஒருநாளும் படித்தவரில்லை.  ”அதுசொன்னார், இதுசொன்னார்” என்று வழிநிலை மேலையாசிரியர் சொல்லும் எடுகோள்களை இங்கு எடுத்துக் கொடுத்துக்கொண்டேயிருப்பார். பட்டகை, இயலுமை, ஏரணம், ஒத்திசைவு  என்று எதையும் பாரார். தமிழனுக்கு ”ஆயிரம் தெரியாது, நூறிற்கு அப்புறம் எண்ணத் தெரியாதவன்; கடன் வாங்கினான்” என்று சொல்லுவதில் அவருக்கு அவ்வளவு விருப்பம்.  அவருக்குப் போய் “மணலிலும் பலவே” என்பதைப் புரிவிக்க முயல்கிறீர்கள். உங்கள் பொறுமையை எண்ணி வியக்கிறேன்.
 
அன்புடன்,
இராம.கி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 20, 2016, 10:17:14 AM8/20/16
to மின்தமிழ், vallamai, panb...@googlegroups.com, pira...@googlegroups.com


On Friday, August 19, 2016 at 11:42:43 PM UTC-7, mukunthan wrote:
சங்ககாலம் - மணலினும் பலவே


சங்ககாலப் பாடல்களில் மணலுடன் ஒப்பிட்டு நீண்டநாள் வாழவேண்டும் என்னும் வாழ்த்து மற்றும் நிறைய எனப் பொருள்படும் வகையில் சில பாடல்களில் காணப்படுகின்றது.  அப்பாடல்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.


இப்பாடல்களைப் பல காலமாக தமிழர்கள் அறிவர். இந்தோ-ஈரானியச் சொல் ஸஹஸ்ரம் சாயிரம்/ஆயிரம் என்று தென்திராவிட பாஷைகளில் ஆவதற்கும்
இப் பாடல்களுக்கும் ஒரு தொடர்புமில்லை. உதாரணமாக, செங்குட்டுவன் என்ற சிலம்பின் மன்னன் சங்க இலக்கியப் பாடல்களில் ஒன்றிலிலுமில்லை.
எனவே தான் தமிழ்ப் பேராசிரியர்கள் சிலப்பதிகாரச் செங்குடுட்டுவன் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என்பர். அதுபோல, ஆயிரம் என்பதற்கும், இந்த மணல்
பாட்டுகளுக்கும் ஒரு தொடர்புமில்லை. காரணங்கள் பல, முக்கியமானவை இரண்டு:

(1) நீங்கள் கொடுத்துள்ள ஒரு பாட்டிலும் அயிர், அயிரை, அயிர என்று மணலைக் குறிப்பிடும் வார்த்தைகள் இல்லை. 
உபசார வழக்காய் ட்ரில்லியன் கணக்கில் உள்ள மணலைப் பாடியுள்ளனர். 
மேலும், இந்த அயிர் “நுண் மணல்” இதிலிருந்து ஆயிரம் என்பவர்கள் கூறும் கூற்று ச்+ ஆயிரம் சாவிரம், சகஸ்ரம் என்றாயிற்று என்பர்.
இதுவும் தவறே. திடீர் என்று ஏன் ச் என்னும் மெய்யெழுத்து ஆயிரத்தோடு சேர்கிறது? சாயிரம் > ஆயிரம், சமணர் > அமணர் என்பதுபோல.
நீர் > ஈரம், நுண்ணி > உண்ணி, மலர் > அலர், மாசு > ஆசு, விடங்கர் > இடங்கர் “முதலை, இலிங்கம்”, யாமை > ஆமை, யானை > ஆனை ....
ச், ந், ம், வ், ய் என்னும் சொன்முதல் எழுத்துக்கள் மறைவது தமிழில் இயங்கும் பண்டை விதி.

(2) தென்திராவிட பாஷைகளில் பழமையான கன்னடம் - தமிழ் ஒப்பீட்டில் புதிய சான்று அளித்துள்ளேன்.
தற்கால கன்னடத்தில் ஸாவிரம் (அ) ஸாசிரம். ஆனால் பழங்கன்னடத்தில் (ஹளகன்னடம் என்பர்)
ஸஹஸ்ரம் ஸாயிரம் என்றிருப்பதை பழங்கன்னடச் சிலாலிகிதங்கள் காட்டுகின்றன. பழைய இலக்கியங்களிலுமுண்டு.
எப்பிகிராபிக்கா கர்னாட்டிக்கா போன்ற வால்யூஸில் தொகுத்தால் புரியும். சிலப்பதிகாரத்தில் நாடுகாண் காதையில்
மதுரைக்கு வடக்கே 30 காவதத்தில் (= ~ 350+ மைல்) கன்னாடகத்தில் கவுந்தி அடிகளைச் சந்திக்கிறார்கள் கோவலன் தம்பதியர்.
மதுரைக்கு வருகையிலே சீரங்க பட்டினத்தில் “அந்த சரணர்” என்னும் அந்நாட்டுச் சமயம் ஆகிய ஜைந வானவரைச்
சந்தித்து வணங்குகின்றனர். காவிரி பாயும் தெய்வத் திருநாட்டின் மருதத்திணை வளம் இக்காதை.
அதன்பின், மதுரையில் மரணம் அடைதலால், காடு காண் காதை திருச்சியில் இருந்து தொடங்குகிறது. நாடு  vs. காடு
- இளங்கோ அடிகள் பெயரைத் தேர்ந்த அழகைச் சிந்திக்க. தெய்வச் சிலையாரின் தொல்காப்பிய உரையில்
சிலப்பதிகாரத்தைச் சுருக்கமாய்க் குறிக்கும் வெண்பா உண்டு. “ஏதம் உறுதல் வினை” என மதுரையில், மதுரைக் காண்டத்தில்
கோவலனுக்கு  நடக்கும் நிகழ்வைச் சுட்டுகிறது. 

ஸமணர் > அமணர் என்பது கன்னடம் : தமிழ் மொழிகளில் மாறுவது போல,
ஸாயிரம் (கன்னடம்) > ஆயிரம் எனத் தமிழ் ஆகிறது. 
இதன் துணைத்தேற்றம் ( http://www.merriam-webster.com/dictionary/corollary ) என்னவெனில்
ஆயிரம் < ஸாயிரம் எண்ணுப்பெயர் தென்த்ராவிட பாஷைகளில் ஆர்ய ஸம்பந்தம் உடையது.
மணல் என்ற சொல் அன்று.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Aug 20, 2016, 1:35:43 PM8/20/16
to vallamai, மின்தமிழ், panbudan, தமிழ் பிரவாகம்
சாகாரம் ஆகாரமான இடம் வேறு உண்டா?

20 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 10:17 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

mukunthan

unread,
Aug 22, 2016, 4:23:42 AM8/22/16
to மின்தமிழ்
அனைவருக்கும் வணக்கம்.
கணேசன் ஐயாவின் “அஷ்டசாசிரம் = எண்ணாயிரம் ~ காளமேகத்தின் ஊர்” இழைக்கும் இவ்விழைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அதற்கு மறுமொழியாக இவ்விழை எழுதவில்லை...(இன்றுதான் அவ்விழையைப் படித்தேன்) சில சங்கப் பாடல்களைப் படிக்கும்போது மணலிலும் பலவே எனத் தொடர்பு கிடைத்தது. அதனால் தான் இங்கே தொகுத்தேன்...

மற்றும்படி வேர்ச்சொல் அறிவு எனக்கு இல்லை. ஆயிரம் - சாயிரம் - சகஸ்ரம் எங்கிருந்து எங்கே சென்றது என எனக்குத் தெரியாது..

மற்றொரு இழையில்
காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டில் :
सतसहसानि   , सतसहसेहि  -  ஸதஸஹஸேஹி - நூறாயிரம்
(http://www.jatland.com/home/Hathigumpha_inscription)
ஸஹ - சக - ஆயிரம் - சகர்கள் எனக் கூறப்படுபவர்களாக இருக்கலாமா?
எனக் கேட்டிருந்தேன்..

அதற்குக் கணேசன் ஐயா
ஸஹஸ்ரம். இது சாசிரம்/சாயிரம் என்றாகி தமிழில் ஆயிரம் என வந்த வடசொல் ஆகும்.  
ஸபை > அவை போல, ஸஹஸ்ர- > ஸாயிரம் > ஆயிரம்.

ஸஹஸ்ரம் என்னும் எண்ணுப்பெயருக்கும் சகர்கள் (உ-ம்: சாக்கிய நாயனார். போதிதருமரும் சாக்கியர் தான்.
சீன ஆவணங்கள் Aryan demon with blue eyes என போதிதருமரை வர்ணிக்கின்றன.) என்னும் இனத்தாருக்கும் தொடர்பில்லை.

சகர்கள் < ஶக-    சாக்கிய நாயனார் <  ஶாக்ய நாயனார்.

ஸஹஸ்ரம் வேறு, ஶக-, ஶாக்ய  வேறு.

ஶகர்கள் (சகர்கள்): பற்றி அறிமுகம்: https://en.wikipedia.org/wiki/Saka

எனக் கூறியிருந்தார்.

முகுந்தன் கூறியது
சகர் (சாகர்) வேறு சாக்கியர் வேறு
​..
புத்தர் சாக்கிய குலத்தைச் சேர்ந்தவர். நான் கூறவருவது இராம.கி ஐயா குறிப்பிட்ட இந்தோ-சித்திய  சகர் எனும் நாடோடி இனத்தவரை.

https://en.wikipedia.org/wiki/Saka
https://en.wikipedia.org/wiki/Shakya​

கணேசன் ஐயா கூறியது
I've given the entry on 'Saka tribes in my earlier mail.

ஶக- என்னும் குலத்தைத் சார்ந்ததால் ஶாக்யமுனி எனப்படுகிறார் புத்தர். அதனைத்தான்  குறிப்பிட்டேன்: சளுக்கர் என்னும் குலம் சம்ஸ்கிருதத்தில் சாளுக்ய என்றாகும். அதுபோல், ஶக என்னும் குலப்பெயர் ஶாக்ய- என்றாகிறது.

நா. கணேசன் 


 கணேசன் ஐயா சகர் எனும் இனத்தவரையும் சாக்ய இனத்தவரையும் ஒன்றுபோலக் கூறியிருந்தார்.. அதனுடன் அவ்விவாதத்தை விட்டுவிட்டேன்..
சகர் : https://en.wikipedia.org/wiki/Saka
சாக்கியர் (புத்தரின் குலம்) : https://en.wikipedia.org/wiki/Shakya​





நன்றி..


N. Ganesan

unread,
Aug 22, 2016, 7:31:35 AM8/22/16
to மின்தமிழ்

 > கணேசன் ஐயா சகர் எனும் இனத்தவரையும் சாக்ய இனத்தவரையும் ஒன்றுபோலக் கூறியிருந்தார்.. அதனுடன் அவ்விவாதத்தை விட்டுவிட்டேன்.. 
> சகர் : https://en.wikipedia.org/wiki/Saka
>சாக்கியர் (புத்தரின் குலம்) : https://en.wikipedia.org/wiki/Shakya

திரு. முகுந்தன்,

சம்ஸ்கிருத பேராசிரியர்கள் கூறும் செய்தி இது. சளுக்கர் என்னும் குலம் சம்ஸ்கிருதத்தில் சாளுக்ய என்றாகும். அதுபோல், ஶக என்னும் குலப்பெயர் ஶாக்ய- என்றாகிறது.

நா. கணேசன்

Mukunthan Pathmanesan

unread,
Aug 22, 2016, 8:23:28 AM8/22/16
to mint...@googlegroups.com
​அன்பின் கணேசன் ஐயா,
உங்கள் கருத்துப்படி சகர், சாக்யர் இருவரும் ஒன்று எனக் கூறுகின்றீர்களா?

N. Ganesan

unread,
Aug 22, 2016, 8:44:05 AM8/22/16
to மின்தமிழ்


On Monday, August 22, 2016 at 5:23:28 AM UTC-7, mukunthan wrote:
​அன்பின் கணேசன் ஐயா,
உங்கள் கருத்துப்படி சகர், சாக்யர் இருவரும் ஒன்று எனக் கூறுகின்றீர்களா?

ஒரே குலத்தவர். சளுகர் = சாளுக்யர்,  ஶக வமிசத்தவர் ஶாக்ய.

ஶாக்ய, ஶக- இவ்வார்த்தைகளுக்கும் நீங்கள் சொல்லிய ஸஹஸ்ர (> சாயிரம் > ஆயிரம்) எண்ணுப்பெயருக்கும் தொடர்பில்லை.

வாழ்க வளமுடன், வளர்க தமிழுடன்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 22, 2016, 9:06:03 AM8/22/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Monday, August 22, 2016 at 1:23:42 AM UTC-7, mukunthan wrote:

மற்றும்படி வேர்ச்சொல் அறிவு எனக்கு இல்லை. ஆயிரம் - சாயிரம் - சகஸ்ரம் எங்கிருந்து எங்கே சென்றது என எனக்குத் தெரியாது..


அன்பின் முகுந்தன்,

உங்களுக்குப் பழைய இலக்கியங்களை துழாவுவதில் ஆர்வம் இருப்பதைப் பார்க்கிறேன். அவ்வாறுள்ள இளைஞர்கள் குறைவு.
அதுவும் கணினி இணைப்புக் கொண்டோர் இந்தப் பக்கம் வருவதில்லை. 

த்ராவிட மொழியியல் விற்பன்னர்கள் அறுதியிட்டுத் தருவது ஆயிரம் < சாயிரம் (cf. சாசிரம், சாவிரம்) < சகசிரம் (இந்தோ-இரானியச் சொல்).

CTamil லிஸ்ட்டில் அதன் ஆரம்ப நாளிலிருந்து சில ஆயிரம் மடல்கள் எழுதியுள்ளேன்.

சாயிரம் என்ற கன்னடச் சொல்லின் முக்கியத்துவம் - தமிழில் ஆயிரம் என மருவுதற்கு - ஒரு மடல் பார்க்கவும்:
[ctamil] sāyira in old Kannada & āyiram in Tamil

நீங்களும் தமிழ் இலக்கியம், அதன் இலங்கை வரலாற்றுத் தொடர்புகள், ஒப்பீட்டு பனுவலியல், மொழியியல், இலக்கிய நுட்பங்கள் தரும் செய்திகள், ....
என *ஆங்கிலத்தில்* செந்தமிழ் (Classical Tamil) குழுவில் எழுதலாமே. https://listes.services.cnrs.fr/wws/info/ctamil வரவேற்பர். யானும் பின்னூட்டங்கள் தர முயல்வேன்.

அன்புடன்,
நா. கணேசன் 
PS: In my view, the Old Kannada data from Epigraphy and Texts - the evidence of saayira as numeral 1000 - is the final nail in the coffin for "aayiram" explanation that it is of Tamil origin.
aayiram is ultimately coming from Sahasra of Sanskrit, as all Dravidian linguists agree. 

Mukunthan Pathmanesan

unread,
Aug 22, 2016, 9:09:47 AM8/22/16
to mint...@googlegroups.com

ஶாக்ய, ஶக- இவ்வார்த்தைகளுக்கும் நீங்கள் சொல்லிய ஸஹஸ்ர (> சாயிரம் > ஆயிரம்) எண்ணுப்பெயருக்கும் தொடர்பில்லை.


सतसहसानि   , सतसहसेहि  -  ஸதஸஹஸேஹி - நூறாயிரம்
(http://www.jatland.com/home/Hathigumpha_inscription)
இதில் வரும் ஸஹ (பாகதம்) என்பது ஆயிரம் என்று வருமாயின் சகர் - ஆயிரவர் என வரலாம் தானே?.  ஏன் தொடர்பில்லை எனக் கூறுகின்றீர்கள்?

 
சத -   நூறு - நூற்றுவர்
சக - ஆயிரம்
சகர்- ஆயிரவர்


----------------------------------
ஏன் ஒரே குலத்தவர் எனக் கூறுகின்றீர்கள்?
சகர், சாக்யர்  விக்கியிலிருந்து

https://en.wikipedia.org/wiki/Shakya
The Shakya were a clan of the Vedic period (1750–500 BCE). The name Śākya is derived from the Sanskrit word śakya, which means "the one who is capable".

The Shakyas formed an independent republican state known as the Śākya Gaṇarājya. The Shakya capital was Kapilavastu, which may have been located either in Tilaurakot, Nepal or Piprahwa, India.[1][2][3]

The best-known Shakya was the prince Siddhartha (5th century BCE), who was the founder of Buddhism and came to be known as Gautama Buddha. Siddhartha was the son of Śuddhodana. Suddodhana was the elected leader of Shakya Republic. Because Gautama Buddha founded a new religion and abdicated the throne, the lineage continued with his son Rāhula.


---------------------------
https://en.wikipedia.org/wiki/Saka
The Saka or Saca (Persian: old Sakā, mod. ساکا; Sanskrit: Śaka; Greek: Σάκαι, Sákai; Latin: Sacae; Chinese: 塞, old *Sək, mod. Sāi)[a] was the term used in Persian and Sanskrit sources for the Scythians, a large group of Eastern Iranian nomadic tribes on the Eurasian Steppe.[2][3][4]
he regions of Tashkent, Fergana, and Kashgar were inhabited by the people known to the Chinese under the name Sse (ancient pronunciation, Ssek), to the Persians and Indians as Saka, or Shaka, and to the Greeks as Sakai: our Sakas. They were in fact the 'Scythians of Asia.' They formed a branch of the great Scytho-Sarmatian family; that is, they were nomadic Iranians from the northwestern steppes



நன்றி


N. Ganesan

unread,
Aug 22, 2016, 9:17:00 AM8/22/16
to மின்தமிழ்


On Monday, August 22, 2016 at 6:09:47 AM UTC-7, mukunthan wrote:

ஶாக்ய, ஶக- இவ்வார்த்தைகளுக்கும் நீங்கள் சொல்லிய ஸஹஸ்ர (> சாயிரம் > ஆயிரம்) எண்ணுப்பெயருக்கும் தொடர்பில்லை.



सतसहसानि   , सतसहसेहि  -  ஸதஸஹஸேஹி - நூறாயிரம்
(http://www.jatland.com/home/Hathigumpha_inscription)
இதில் வரும் ஸஹ (பாகதம்) என்பது ஆயிரம் என்று வருமாயின் சகர் - ஆயிரவர் என வரலாம் தானே?.  ஏன் தொடர்பில்லை எனக் கூறுகின்றீர்கள்?


Note this is not saha, but more letter is needed for 1000 which is there. 

N. Ganesan

unread,
Aug 22, 2016, 9:21:27 AM8/22/16
to மின்தமிழ்
நாகரத்தில் எழுதியிருப்பதில் இருந்து சக என்றால் 1000 என்று எடுக்கலாமா????

Mukunthan Pathmanesan

unread,
Aug 22, 2016, 3:51:03 PM8/22/16
to mint...@googlegroups.com
நீங்களும் தமிழ் இலக்கியம், அதன் இலங்கை வரலாற்றுத் தொடர்புகள், ஒப்பீட்டு பனுவலியல், மொழியியல், இலக்கிய நுட்பங்கள் தரும் செய்திகள், ....
என *ஆங்கிலத்தில்* செந்தமிழ் (Classical Tamil) குழுவில் எழுதலாமே. https://listes.services.cnrs.fr/wws/info/ctamil வரவேற்பர். யானும் பின்னூட்டங்கள் தர முயல்வேன்.

நன்றி கணேசன் ஐயா, முயல்கின்றேன்..

Note this is not saha, but more letter is needed for 1000 which is there.
நாகரத்தில் எழுதியிருப்பதில் இருந்து சக என்றால் 1000 என்று எடுக்கலாமா????


அத்திகும்பா கல்வெட்டில் ஆயிரம் என்று வருவதை (நூறாயிரம் - நூறு + ஆயிரம்)  சக என்று எடுக்க முடியாதா? எனக்கு பாகதமும் தெரியாது சங்கதமும் தெரியாது நாகரம் என்று நீங்கள் கூறியதும் தெரியாது.. சிறிது விளக்கமுடியுமா?

ஸஹஸ்ர என்பதை விட்டுவிடுங்களேன். ஸஹ என்பது அதில் வருகின்றதா அதன் கருத்து என்ன என்பதை விளக்கமுடியுமா?

நன்றி

N. Ganesan

unread,
Aug 23, 2016, 10:10:44 AM8/23/16
to மின்தமிழ்
ஸஹ என வருவதில்லை. ஸஹஸ்ர என்பதின் ப்ராகிருதச் சொல் வருகிறது. பார்க்கவும். ஸஹஸ்ர திரிபாகிய அதற்கும் சகர்களுக்கும் ஒரு தொடர்புமில்லை.

நா. கணேசன்
 

நன்றி

Mukunthan Pathmanesan

unread,
Aug 23, 2016, 10:54:42 AM8/23/16
to mint...@googlegroups.com
​அன்பின் கணேசன் ஐயா,
1. ஸஹஸ்ர என்பதின் ப்ராகிருதச் சொல் என்ன?



2. சகர், சாக்யர் ஏன் ஒரே குலத்தவர் எனக் கூறுகின்றீர்கள்?

Mukunthan Pathmanesan

unread,
Sep 19, 2016, 8:37:34 AM9/19/16
to mint...@googlegroups.com
அன்பின் கணேசன் ஐயா,
1. ஸஹஸ்ர என்பதின் ப்ராகிருதச் சொல் என்ன?



2. சகர், சாக்யர் ஏன் ஒரே குலத்தவர் எனக் கூறுகின்றீர்கள்?
Reply all
Reply to author
Forward
0 new messages